Aggregator

இலங்கை - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்

2 months 3 weeks ago
கமிந்துவின் அரைச் சதத்தை ஷத்மான், ஷன்டோ அரைச் சதங்கள் விஞ்சின; இலங்கையை விட 187 ஓட்டங்களால் பங்களாதேஷ் முன்னிலை Published By: VISHNU 20 JUN, 2025 | 07:55 PM (நெவில் அன்தனி) காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது உலக டெஸ்ட் சம்பயின்ஷிப் மற்றும் இருதரப்பு டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் இலங்கையின் கமிந்து மெண்டிஸ் குவித்த அரைச் சதத்தை ஷத்மான் இஸ்லாம், நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ ஆகியோரின் அரைச் சதங்கள் விஞ்சியதுடன் பங்களாதேஷ் முன்னிலையில் இருக்கிறது. போட்டியின் நான்காம் நாளான இன்று வெள்ளிக்கிழமை (20) இலங்கையை முதலாவது இன்னிங்ஸில் 485 ஒட்டங்களுக்கு ஆட்டம் இழக்கச் செய்த பங்களாதேஷ் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதற்கு அமைய 2ஆவது இன்னிங்ஸில் மேலும் 7 விக்கெட்கள் மீதம் இருக்க இலங்கையை விட 187 ஓட்டங்களால் பங்களாதேஷ் முன்னிலையில் இருக்கிறது. இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (20) பாடாலை மாணவர்கள் காலி கோட்டைக்கு மேலே உள்ள புல்வெளியில் இருந்து போட்டியைக் கண்டு களித்தமை விசேட அம்சமாகும். போட்டியின் ஐந்தாவதும் கடைசியுமான நாளைய தினம் சனிக்கிழமை (21) அதிசயம் நிகழ்ந்தாலன்றி இந்தப் போட்டி சுவாரஸ்யமற்ற முடிவை நோக்கி நகர்வதை தவிர்க்க முடியாது. பங்களாதேஷின் இரண்டாவது இன்னிங்ஸில் அனாமுல் ஹக் (4), மொமினுள் ஹக் (14) ஆகிய இருவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர். ஆனால், ஷத்மான் இஸ்லாம் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 76 ஓட்டங்களைப் பெற்றதால் பங்களாதேஷ் நல்ல நிலையை அடைந்தது. ஷத்மான் இஸ்லாமும் அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோவும் 3ஆவது விக்கெட்டில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். தொடர்ந்து ஷன்டோ திறமையாகத் துடுப்பெடுத்தாடி இப் போட்டியில் இரண்டாவது தடவையாக 50 ஓட்டங்களுக்கு மேல் பெற்றதுடன் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் முஷ்பிக்குர் ரஹிமுடன் 49 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளார். ஷன்டோ 56 ஓட்டங்களுடனும் ரஹீம் 22 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்னனர். பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய, தரிந்து ரத்நாயக்க, மிலன் ரத்நாயக்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். முன்னதாக, நான்காம் நாள் காலை தனது முதல் இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 368 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை சகல விக்கெட்களையும் இழந்து 485 ஓட்டங்களைப் பெற்றது. அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா (19), குசல் மெண்டிஸ் (5) ஆகிய இருவரும் 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (386 - 6 விக்.) அதன் பின்னர் ஜோடி சேர்ந்த கமிந்து மெண்டிஸ், மிலன் ரத்நாயக்க ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் பெறுமதியான 84 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ஆனால் இருவரும் மொத்த எண்ணிக்கை 470 ஓட்டங்களாக இருந்தபோது ஆட்டம் இழந்தனர். கமிந்து மெண்டிஸ் தனது 13ஆவது டெஸ்டில் 5ஆவது அரைச் சதத்தைப் பூர்த்திசெய்து 87 ஓட்டங்களுடன் வெளியேறினார். மிலன் ரத்நாயக்க 39 ஓட்டங்களைப் பெற்றார். பின்வரிசையில் பிரபாத் ஜயசூரிய 11 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் நயீம் ஹசன் 121 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ஹசன் மஹ்முத் 74 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/218025 டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து உணர்ச்சிவசப்பட்டவராக விடைபெற்றார் மெத்யூஸ் : இலங்கை - பங்களாதேஷ் டெஸ்ட் வெற்றிதோல்வியின்றி முடிவு 22 JUN, 2025 | 04:44 AM (நெவில் அன்தனி) காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்ற இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும் இருதரப்பு டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியான ஏஞ்சலோ மெத்யூஸின் பிரியாவிடை டெஸ்ட் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது. இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் தனது கடைசி இன்னிங்ஸில் ஏஞ்சலோ மெத்யூஸ் 8 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டம் இழந்தார். போட்டி முடிவில் பேசிய அவர், 'நான் ஏற்கனவே எனது ஓய்வை அறிவித்ததிலிருந்து எனக்கு கிடைத்த பாசத்தை என்னால் நம்பமுடியவில்லை. நிச்சயமாக பாசத்தினால் நிரம்பியிருக்கிறேன். எனக்கு ஆதரவளித்த உங்கள் அனைவருக்கும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது ஒரு எளிதான பயணம் அல்ல. நிறைய மேடு பள்ளங்களை சந்தித்தேன். ஆனால், எனக்கு கிடைத்த ஆதரவின் காரணமாக அவற்றை எல்லாம் கடந்து என்னால் எனது டெஸ்ட் வாழக்கைப் பயணத்தை நிறைவு செய்ய முடிந்தது. வெளிப்படையாக (நான் உணர்ச்சிவசப்படுறேன்) கூறுவதென்றால், கிரிக்கெட்டில் மிகச் சிறந்த வடிவத்திலிருந்தும் நான் விளையாட விரும்பிய வடிவத்திலிருந்தும் ஓய்வு பெறுகிறேன். இங்கிருந்து இளையவர்கள் கிரிக்கெட்டில் தொடர வேண்டிய தருணம் இது. 'ஓர் அற்புதமான டெஸ்ட் போட்டியில் விளையாடியதற்காக பங்களாதேஷை வாழ்த்தவேண்டும். முஷி (முஷ்பிக்குர்), ஷன்டோ ஆகிய இருவரும் மிகச்சிறப்பாக துடுப்பெடுத்தாடினர். அதேபோன்று பெத்துமும் மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடினார்' என்றார் மெத்யூஸ். தனது சொந்த கிரிக்கெட் வாழ்க்கையில் ஈட்டிய மகத்தான வெற்றிகளைப் பற்றி மெத்யூஸ் கூறுகையில், 'இங்கிலாந்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஈட்டிய வெற்றி, அவுஸ்திரேலியாவிற்கு எதிராக எமது சொந்த மண்ணில் 3 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் ஈட்டிய முழுமையான வெற்றி என்பன முக்கியமானவையும் மகத்தானவையுமாகும். அது முழு அணிக்கும் கிடைத்த மிகப் பெரிய கௌரவமாகும். எனக்கு ஒத்துழைப்பு நல்கிய சகல வீரர்களுக்கும் பயிற்றுநர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் அறிமுகமானது முதல் என்னோடு இருந்த அனைத்து இரசிகர்களுக்கும் நன்றி. மிக்க நன்றி' என்றார். இது இவ்வாறிருக்க, இப் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் பங்களாதேஷ் அணித் தலைவர் சதங்கள் குவித்தது விசேட அம்சமாகும். பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 296 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஆட்டம் முடிவுக்குவந்த போது 4 விக்கெட்களை இழந்து 72 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பெத்தும் நிஸ்ஸன்க 24 ஓட்டங்களைப் பெற்றதுடன் கமிந்து மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா ஆகிய இருவரும் தலா 12 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீ;ச்சில் தய்ஜுல் இஸ்லாம் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். முன்னதாக போட்டியின் கடைசி நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பங்களாதேஷ் 6 விக்கெட்களை இழந்து 285 ஓட்டங்களைப் பெற்று துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது. நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ ஆட்டம் இழக்காமல் 125 ஓட்டங்களையும் ஷத்மான் இஸ்லாம் 76 ஓட்டங்களையும் முஷ்பிக்குர் ரஹிம் 45 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் தரிந்து ரத்நாயக்க 102 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். இப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பங்களாதேஷ் 495 ஓட்டங்களையும் இலங்கை 485 ஓட்டங்களையும் பெற்றன. https://www.virakesari.lk/article/218092

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 3 weeks ago
பெரும்பாலான‌ ஈரான் ம‌க்க‌ள் ayatollah ali khameneiயின் ஆட்சிய‌ விரும்புகின‌ம் , இல்லையெனில் ஈரானில் எப்பவோ க‌ல‌வ‌ர‌ம் வெடித்து இருக்கும் , 36வ‌ருட‌மாய் இந்த‌ ஆட்சிக்கு கீழ் தானே வாழ்ந்த‌வை பெண்க‌ளுக்கு சிறு அட‌க்குமுறை இருக்கு அது அவ‌ர்க‌ளின் க‌லாச்சார‌ம்........................த‌லைவ‌ர் ஈழ‌ ம‌ண்ணில் வாழ்ந்த‌ கால‌த்தில் பெண்க‌ள் இர‌வு நேர‌ம் சுத‌ந்திர‌மாய் ந‌ட‌மாட‌ முடியும் , இப்போது அந்த‌ நிலை இருக்கா , பெண் பிள்ளைக‌ளை பெத்த‌ பெற்றோர்க‌ள் ப‌ய‌ப்பிடுகின‌ம் இர‌வு நேர‌ங்க‌ளில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் வெளியில் விட‌ அப்ப‌டி ஈரானிலும் க‌லாச்சார‌ ச‌ட்ட‌ திட்ட‌ம் இருக்கு👍............................. அமெரிக்க‌ன் த‌லைகீழாக‌ நின்றாலும் ஈரானில் ஒரு போதும் ஆட்ச்சி மாற்ற‌ம் வ‌ராது...................அமெரிக்க‌ன் ஈராக்கில் செய்த‌ ச‌தி , அது ஈரானில் எடுப‌டாது.........................

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 3 weeks ago
வசியவர்களே, எப்படி எண்ணெய் சட்டியிலிருந்து அடுப்பினுள் வீழ்வது போன்றா? இது இன்னும் நிலைமையை மோசமாக்குவதோடு மேலும் கொதிநிலைக்கான வழியாக மாறாதா?

ஈழத்து நாட்டார் தெய்வங்கள் - தி. செல்வமனோகரன்

2 months 3 weeks ago
பெத்தப்பா என்னும் தெய்வம் தி. செல்வமனோகரன் December 13, 2024 | Ezhuna அறிமுகம் மனிதர் பேரியற்கை மீது கொண்டிருந்த வியப்பு, அச்சம் மற்றும் மரணம், பிறப்புப் பற்றிய சூக்குமமறியா மனோநிலைகள், துயரம் தந்த வாழ்வு போன்றன இயற்கைக்கதீதமான ஒன்றைப் பற்றிச் சிந்திக்கவும், அதை நம்பவும் வழிபடவும் செய்தது. அச்சந்தர்ப்பத்தில் குறித்த துயரத்தில் இருந்து விடுபடல் நிகழும் போது அதனை மேலும் மேலும் வழிபடச் செய்தது. அரூப இயற்கையை – வெறுவெளியை அல்லது நிலம், நீர், காற்று, தீ என்பவற்றை வழிபடுதல் பூரண பிடிப்பைத் தராத சூழலில் கல், மரம் முதலான இயற்கைப் பொருட்களைக் குறியீடாகப் பயன்படுத்தி தெய்வத்தை உருநிலைப்படுத்தி வழிபடத் தொடங்கினர். அது ஆவி, முன்னோர், உயிரியம், மனா எனப் பன்முகத்தளத்தில் அமைந்திருந்ததை மானிடவியலாளர்கள் அடையாளப்படுத்துகின்றனர். பிற்காலத்தில் ஏற்பட்ட நாகரிக வளர்ச்சி பல்வேறு படித்தரங்களை மானுட வாழ்விலும் சமய வாழ்விலும் ஏற்படுத்திற்று. பல்வேறு பெருந்தெய்வங்களும் அரச, அதிகார ஆதரவுடனுமான சமயங்கள், தத்துவங்களும் உருவாக்கம் பெற்றன. ஒன்றுடன் ஒன்று மோதித் தம்மையே மெய்மை என நிரூபணம் செய்ய அரும்பாடுபட்டன. வலியது வாழ மீதி மறைந்தன. மறைந்தவற்றுள் சில மீள வலிமை பெற்று எழுந்து நின்று நிலைத்தன. பெருங்கோயில்கள், கலையடையாளங்கள் என மனித குல வரலாற்றில் அவை தனித்துவமான சமூகப் பெறுமானத்தைப் பெற்றன. ஆனால் சாதாரண சனங்களின் வாழ்வில் இயற்கையோடு இயைந்த தெய்வ வழிபாடுகளே இன்றும் நின்று நிலவுகின்றன. தங்கள் வாழ்வில் ஏற்பட்ட நல்லவைகளுக்குத் துணை நின்ற தெய்வங்களைத் தாம் கவனியாது – ஆதரியாது விடும் போது தமது வாழ்வில் பல்வேறு துன்பங்கள் ஏற்படுவதாக அவர்கள் நம்புகின்றனர். தமது குறைகளை நீக்கவும், நன்மை நடக்கவும் இத்தெய்வங்களை வழிபடுகின்றனர். இவை நிலம், தொழில், சாதி என்ற பல்வேறு அடித்தளங்களில் இருந்து உருவான தெய்வங்களாகக் காணப்படுகின்றன. அந்த அடிப்படையில் ஈழத்துப் புலத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இன்றும் நின்று நிலவும் கிராமியத் தெய்வங்களுள் ஒன்றாக ‘பெத்தப்பா’ காணப்படுகின்றது. “சேர் உங்களுக்குப் பெத்தப்பா வழிபாடு பற்றி ஏதும் தெரியுமா?” என்ற வினாவோடு தனது ஆய்வேடு தொடர்பாக என்னுடன் 2019 இல் உரையாட வந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் துறையைச் சேர்ந்த செல்வி ப. கீதாஞ்சலிக்கு, “ஓம், தென்மராட்சியில் இருக்க வேண்டும்” என்று பதில் கூறினேன். “நான் கிட்டத்தான் இருக்கிறன். ஒரு கோயிலை வச்சுக் கொண்டு என்ன செய்கிறது?” என்று அவர் மீண்டும் வினாவினர். கச்சாயைப் பூர்வீகமாகக் கொண்ட, தற்பொழுது திறந்த பல்கலைக்கழகத்தின் யாழ் பிராந்தியத்திற்குப் பொறுப்பாக இருக்கும் திரு க. கந்தவேளுடன் அவரைத் தொடர்புபடுத்திவிட்டேன். நண்பரும் புவியியல் ஆசிரியருமான திரு மா. மோகனகிருஷ்ணன், புங்குடுதீவில் இவ்வழிபாடு இருப்பதை அறியத் தந்தார். இந்த முன்னறிவுடன் களஆய்வில் ஈடுபட்ட பின்னர் இக்கட்டுரை எழுதப்படுகிறது. பெத்தப்பா ஈழத்தின் கடலோடு ஒட்டிய வாழ்வியல் புலம் பல்வேறு வழிபாட்டு முறைகளை எமக்குத் தந்தது. பெத்தப்பா கடலை அண்மித்த யாழ்ப்பாணம், புங்குடுதீவு மற்றும் சாவகச்சேரி, கச்சாய் கடல்நீரேரியை அண்மித்த ஊர்களான பாலாவி, கெற்பேலி போன்ற இடங்களில் நின்று நிலவும் தெய்வமாகக் காணப்படுகின்றார். ‘பெத்தப்பா’ எனும் சொல் அகராதிகளில் இடம்பெறவில்லை. அது பேச்சு வழக்குச் சொல்லாகவே காணப்படுகின்றது. பெத்தப்பா என்பதை பெற்ற அப்பா என்று பொருள் கொள்ளலாம். சங்க இலக்கியத்தில் பெற்றதாய், வளர்ப்புத்தாய் என்போர் நற்றாய், செவிலித்தாய் என அழைக்கப்பட்டமை போல இது அமைகின்றதெனலாம். பெரியப்பா, சித்தப்பா – குஞ்சியப்பா எனும் வழக்காறுகள் தோன்றிய காலத்தில் பெத்தப்பா என்ற சொல் தோன்றி நிலைத்திருக்கலாம். புங்குடுதீவில், பெத்தப்பா தெய்வம் பெத்தப்பு, பெத்தப்பர் எனக்கூறி வழிபடப்படுகின்றார். தமிழில் “தாயை நல்லம்மா என்றும் பேயைப் பெத்தப்பா என்றும் பேச வேண்டிய காலம்” எனும் பழமொழி ஒன்றுண்டு. இது, பேய் – முன்னோர் வழிபாடாக பெத்தப்பா வழிபாடு உருவாகி இருக்கலாம் எனும் ஊகத்துக்கு இடமளிக்கின்றது. அதேவேளை பெத்தப்பா, பெத்தாச்சி என்பவைகளை தாத்தா, அப்பம்மாவை அல்லது பெரியப்பா, பெரியம்மாவைக் குறிப்பதாகப் பொருள் கொள்வோரும் உளர். ‘இச்சா’ நாவலில் க்ஷோபசக்தி எழுதிய “அம்பாலை மரக்காலைக்காரர் செய்த ஊழைச் சூனியம், அப்பாவை முடக்கி விசர்க் கோலமாக்கியது. பெத்தப்பா மீது யாரோ மூதேவி அழைப்பை ஏவி விட்டிருந்தனர். பெத்தப்பாவுடன் வீட்டுக்கு வந்த புலுடு என்ற பேய் பெத்தாச்சியின் தூசணத்துக்கு நாணி அகன்றது” எனும் வரிகள் இதனைச் சான்றுபடுத்துகின்றன. ‘மூனா கானா’ தினகரனில் (2013.2.10) எழுதிய ‘குஞ்சார் பெத்தப்பா கதையும் வேறு சில கதைகளும்’ இஸ்லாமிய தமிழ்ச் சமூகத்திடம் இச்சொல் இன்றுவரை பெருவழக்கில் இருப்பதை உறுதி செய்கின்றன. ஸ்ரீ பெத்தம்மா தாய் கோயில் (Sri Peddamma Thalli Temple) அல்லது பெத்தம்மா தல்லி குடி என்பது தெலுங்கானாவின் ஐதராபாத்தில் ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். பெத்தா மற்றும் அம்மா என்ற இரண்டு தனித்தனி சொற்களைக் கொண்ட ‘பெத்தம்மா’ என்ற வார்த்தையின் அர்த்தம் ‘பெரிய தாய்’ என்பதாகும். ‘பெத்தம்மா’ என்பதை ‘பெரிய அம்மன்’ என்றும் பொருள் கொள்ளலாம். கிராமியத் தெய்வங்களின் 11 வடிவங்களில் ஒன்றான இது, மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. தெலுங்கானா மக்களின் காவல் தெய்வம் என்ற சிறப்பைக் கொண்டதாகத் திகழ்கிறார். 200 ஆண்டுகளுக்கு முன்பு, மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக, இந்தத் துர்க்கை அம்மன் ஆலயம் கருதப்படுகிறது. இந்தக் கோவில் தோன்றியதற்கு பல்வேறு விதமான கதைகள் சொல்லப்படுகின்றன. தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மக்களுக்கும் துன்பத்தை விளைவித்து வந்த ஒரு அசுரனுடன் துர்க்கா தேவி போரிட்டாள். அந்த அசுரனை வதம் செய்தபிறகு, அந்தக் களைப்பு நீங்க ஒரு கிணற்றின் நீரை அருந்தி துர்க்கை அம்மன் தாகம் தணித்துக் கொண்டாள். அப்போது அந்த வழியாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் துர்க்கை அம்மனைக் கண்டார். அவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அன்னையின் திருவுருவம் மறைந்தது. தனக்கு தெய்வத்தின் அருட்காட்சி கிடைத்ததை நினைத்து அவர் மனம் மகிழ்ந்தார். அன்னை காட்சி தந்த அந்த இடத்திலே ஒரு சிலை இருப்பதையும் கண்டு அவ்விடத்தில் இந்த பெத்தம்மா ஆலயத்தைக் கட்டினார் என்று இதன் தல வரலாறு கூறப்படுகின்றது. இவ்வாறான தல வரலாறுகளோ கதையாடல்களோ பெத்தப்பா ஆலயங்களுக்கு இன்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கானாவில் பெத்தப்பா வழிபாடு இல்லை. ஈழத்தில் பெத்தம்மா வழிபாடு இருப்பதாக அறியமுடியவில்லை. ஆயினும் தெலுங்கு தேசத்துடன் மற்றும் தமிழகத்துடனான உறவு வழியே ஆண் தெய்வ வழிபாடாக பெத்தப்பா உருவாகி இருக்க வேண்டும். ஈழத்தில் பெத்தப்பா வழிபாடு ஈழத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் தென்மராட்சிப் பிரதேசத்தில் அமைந்துள்ள பாலாவி, கெற்பேலி முதலான ஊர்களில் பெத்தப்பா வழிபாடு காணப்படுகின்றது. பாலாவி தெற்கில் ஏழு கோயில்களையும்; பாலாவி வடக்கில் ஒரு கோயிலையும்; கெற்பேலி மேற்கில் நான்கு கோயில்களையும் எம்மால் அடையாளப்படுத்த முடிகின்றது. ஆக தென்மராட்சியில் பன்னிரண்டு கோயில்களையும் அதே போல யாழ்ப்பாணத்துத் தீவுகளில் ஒன்றான புங்குடுதீவில் மூன்று கோயில்களையும் அறிய முடிந்தது. ஈழத்தின் வேறு பிரதேசங்களிலோ தமிழகத்திலோ இவ்வழிபாடு இருப்பதாக அறிய முடியவில்லை. புங்குடுதீவு பிரதேசத்தில் உள்ள பெத்தப்பா ஆலயங்கள் சிவாலயங்களாகவே இன்று கருதப்பட்டு வருகின்றன. ஆனால் தென்மராட்சிப் பிரதேச ஆலயங்களில் பெத்தப்பா தனித் தெய்வமாக வழிபடப்பட்டு வருகின்றார். தென்மராட்சிப் பிரதேசத்தில் இத்தெய்வத்தை வழிபடுபவர்கள் சாண்டார் இன மக்களாக – எண்ணெய்ச் செக்கு வைத்துத் தொழில் புரிபவர்களாகக் – காணப்படுகின்றனர். ஆயினும் இவர்கள் தொன்று தொட்டு விவசாயத்திலும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. புங்குடுதீவில் வேளாளர், பறையர் சமூகத்தினரின் வழிபடு தெய்வமாகவே பெத்தப்பா விளங்குகின்றது. இதனை முன்னோரால் கையளிக்கப்பட்ட வழிபாடாகவும் நீண்ட பாரம்பரியமுடைய வழிபாடாகவும் இப்பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர். பெத்தப்பா தெய்வம் குறித்த தனிக் கதையாடல்கள் எதனையும் இம்மக்களால் எடுத்துரைக்க முடியவில்லை. ‘முன்பிருந்தே வழிபடுகின்றோம், எங்கள் தாத்தா காலத்துக்கு முன்பிருந்தே வழிபடுகின்றோம்’ போன்ற வரிகளையே அவர்கள் உதிர்க்கின்றனர். அதேவேளை இத்தெய்வத்தை ஆதரிக்காது விடுமிடத்து தமக்குப் பல்வேறு குறை குற்றங்களும், துன்பங்களும், நோய் நொடிகளும் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஒழுங்காக ஆதரித்துவரும் பட்சத்தில் தமக்கு எந்தவிதமான துன்பமும் ஏற்படுவதில்லை என்றும் கூறப்படுகின்றது. பெத்தப்பா பெரும்பாலும் சிவனாகவே கருதப்படுகின்றார். ஆதலால் திரிசூல வழிபாடு அதிகம் காணப்பட்டாலும் சங்கு, விளக்கு, கல், வேல் போன்றவற்றை வைத்து வழிபடும் வழக்கமும் காணப்படுகிறது. பெரும்பாலும் பெத்தப்பா ஆலயங்கள் ஓலைக்குடிசைகளாலும் மண்ணால் கட்டப்பட்டதாகவுமே காணப்படுகின்றன. பிற்காலத்தில் கற்களால் கட்டப்பட்டன. அதிலும் சில கோயில்கள் கருவறை, முன் மண்டபம், உடையனவாகவும் தனியாட்களின் கோயில்களாகவும் காணப்படுகின்றன. இவற்றுக்குப் பரிவார மூர்த்திகள் இல்லை. ஆயினும் பிற்காலத்தில் புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்த பெத்தப்பா ஆலயம் ஸ்ரீ முருக மூர்த்தி தேவஸ்தானமாக்கப்பட்டு 1982 இல் மஹா கும்பாபிக்ஷேகம் நிகழ்த்தப்பட்டு ஆகமக் கோயில் ஆக்கப்பட்டுள்ளது. தீவின் ஏனைய பெத்தப்பா ஆலயங்களும் இன்று ஆகமமயமாதலுக்கு உள்ளாகி விட்டன. தென்மராட்சிப் பிரதேசக் கோயில்கள் பல ஆகமம் சாராத கிராமிய வழிபாட்டினைக் கொண்டமைந்த மக்கள் தெய்வத்தின் ‘மெய்தீண்டி இன்புறத்தக்க’ வழிபாட்டு முறையுடனே காணப்படுகின்றன. ஆயினும் வசதி படைத்த சில ஆலய உரிமையாளர்கள் குறிப்பிட்ட சில சிறப்புத் தின வழிபாடுகளுக்கு பூசகரை அழைக்கும் வழக்கம் காணப்படுகிறது. இங்கு பெத்தப்பா மூர்க்கத் தெய்வமாக அமையவில்லை. அருட்தெய்வமாகவே மக்களால் நம்பப்படுகின்றார். இத்தெய்வ ஆதரிப்பு முறை தந்தை வழி, தாய் வழி என இரு மரபும் துய்ய நிகழ்வது குறிப்பிடத்தக்கது. பூசையும் வழிபாடும் இந்த ஆலயங்களில் தத்தம் வசதிக்கேற்ப விளக்கு வைத்தல் நடைபெறுகின்றது. வாரத்தில் ஒரு நாள், ஒவ்வொரு நாளும் வைத்தல் எனும் முறைகள் காணப்படுகின்றன. சில கோயில்களில் காலை, மாலை பூசையாக இது காணப்படுகின்றது. நாளாந்தப் பூசை முறையில், பூசாரி விளக்கு வைத்து கற்பூரம் ஏற்றுவார். வசதியான ஆலயங்களில் பால், பழம், பொங்கல் வைத்து வழிபடும் முறைமையும் காணப்படுகின்றது. இங்கு பூசாரி என்பவர் பரம்பரை பரம்பரையான உரிமையாளராகவே பெரிதும் காணப்படுகின்றார். ஏனைய கிராமியத் தெய்வங்களைப் போலவே வைகாசி மாதம் இத் தெய்வத்திற்குச் சிறப்பு வாய்ந்தது. வைகாசி விசாகப் பொங்கலை அடுத்து வரும் திதிகளில் ஆண்டுப் பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இது தவிர தைப்பூசம், தைப்பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு, ஆடிப்பிறப்பு, சிவராத்திரி, நவராத்திரி, திருவம்பா போன்ற தினங்களிலும் விசேட பூசை நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான விசேட தினங்களில் அவிசு, பொங்கல் மற்றும் அன்னதானம் வழங்கும் நடைமுறை எல்லா பெத்தப்பா ஆலயங்களிலும் காணப்படுகின்றது. ஆண்டுப் பொங்கலில் முதல் நிகழ்வாக அமைவது மடைப்பண்டம் எடுத்தல் ஆகும். இதில் பழங்கள், மரக்கறி வகைகள், வெற்றிலை, பாக்கு, பால், அபிஷேகத் திரவியங்கள், பட்டு, உத்தரியம், கற்பூரம், சாம்பிராணி, மஞ்சள், தேசிக்காய், சிலம்பு, கண்ணாடி, பிரம்பு போன்றவை எடுத்துச் செல்லப்படும். அத்தோடு இத்தெய்வத்திற்குப் பலியிடுவதற்காக ஆடு, கோழி என்பனவும், அவற்றை வெட்டுவதற்கான கத்தி அல்லது வாள் என்பனவும் மடைப்பண்டங்களாகக் கொண்டு செல்லப்படுகின்றன. புங்குடுதீவு பெத்தப்பா ஆலயங்களில் பலியிடல் ஆரம்ப காலம் தொட்டே நடைபெறுவதில்லை என எஸ்.கே. சண்முகலிங்கம் (முன்னாள் அதிபர்), ஆறுமுகம் யோகநாதன் (வர்த்தகர்) போன்றோர் குறிப்பிடுகின்றனர். மடைப்பண்டத்தை உரிமையாளர் வீட்டிலிருந்து அல்லது அருகில் உள்ள சந்தியில், மரத்தடியில் இருந்து எடுக்கும் வழக்கம் காணப்படுகிறது. பெரும்பாலும் பண்டத்தை நடைப்பயணமாகவே கொண்டு செல்லும் வழக்காறும் இருந்துள்ளது. இந்நடைப்பயணத்தின் போது கிராமிய வழிபாட்டின் வாத்தியங்களான பறை, உடுக்கு, மத்தளம், சங்கு, சேமக்கலம் சகிதம் ஊர்வலமாகச் செல்லுதலே வழக்கமாக உள்ளது. கொண்டு செல்லப்பட்ட மடைப்பண்டத்தில் பொங்கல் வளந்தை பூசாரி, வாத்தியங்களின் இசைகேற்ப மேலே எறிந்தெறிந்து ஏந்துவார். இது ‘தூளி பிடித்தல்’ எனப்படும். இது எல்லாத் திக்குகளையும் நோக்கி எறிந்து ஏந்தப்படும். இது பக்தியுணர்வைத் தரும் சடங்காகக் கூறப்படுகிறது. குறித்த பிரதேசத்தில் நடைபெறும் இப்பொங்கலுக்கு ஏனைய தெய்வங்களால் இடையூறு நிகழாமல் இருக்கும் வண்ணம் பூசாரியால் மேற்கொள்ளப்படும் சடங்கு ‘பரிகலம் அழைத்தல்’ ஆகும். மந்திர உச்சாடனத்துடன் கூடிய சடங்காக இது நிகழ்த்தப்படுகிறது. பூசாரி வளந்துப் பானை வைத்து பொங்கலிட, ஏனைய மக்களும் பொங்கலிட்டு பூசையில் மடை பரவுவர். இம்மடை பரவுதல் பெரும்பாலான கோயில்களில் உள்மடை, வெளிமடை எனப் பரவப்படுகிறது. உள்மடை பூசாரி மற்றும் கோயில் உரித்துடையவர்களாலும் வெளிமடை ஏனையவர்களாலும் வைக்கப்படும். உள்மடையில் காய்மடை, பூமடை, பழமடை என்பன அடுக்காக வைக்கப்பட்டிருக்கும். உள்மடை, பிரசாதத்துடன் கோயில் உரித்துடையவர்களுக்கு வழங்கப்படும். வெளிமடையில் பொங்கல், பலகாரங்கள், அவிசு, அன்னதானக் கறி, சோறு உள்ளிட்டவை படைக்கப்படும். இவை ஆலயத் தொண்டர்கள், அடியவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த உள்மடை, வெளிமடைச் செயற்பாட்டை வர்க்க வேறுபாடாகவே எண்ணத் தோன்றுகிறது. பூசாரி கலையாடி குறி சொல்லுகின்ற – கட்டுச் சொல்லுகின்ற நடைமுறையும் காணப்படுகிறது. அதேவேளை கோயில் உரித்தாளரும் கலையாடும் முறைமையும் சில ஆலயங்களில் காணப்படுகின்றது. குறித்த தாள கதியில் வாத்தியங்கள் இசைக்கப்பட அதற்கேற்ற கலையாடல் நிகழும். ஒருவர் மீது பல தெய்வங்கள் மாறி மாறி உருப்பெறுதலும் உண்டு. இது ‘கலை மாற்றி ஆடுதல்’ எனப்படுகிறது. கட்டுக்கேட்போருக்குக் கட்டுச்சொல்லி திருநீறு இடப்படும். கட்டுக்கேட்போர் அவர் உரைத்ததற்கு ஏற்ப பரிகாரங்களை தம் பெத்தப்பா தெய்வத்துக்குச் செய்துவரும் வழக்கமும் காணப்படுகிறது. காவடி, கற்பூரச்சட்டி, பாற்செம்பு முதலானவை எடுத்தல், விரதமிருந்து மடை பரவுதல், நேர்த்திப் பொருட்களை வாங்கி வழங்குதல் போன்றன அவற்றுட் சில. பெரும்பாலான தென்மராட்சிக் கோயில்களில் பலியிடும்முறை தொன்றுதொட்டுக் காணப்பட்டு வந்துள்ளதெனினும், இன்று அது அருகி வருகிறது. ஆடு, கோழி முதலானவற்றை வாங்கி காதறுத்து விடுதல், சிறு கீறு கீறி இரத்தம் காணல் அல்லது ஆலயத்துக்கு நேர்ந்துவிடுதல் முதலியனவே இன்று பெரிதும் காணப்படுகின்றன. இறுதியாக நடைபெறும் சடங்கு ‘வழிவெட்டுதல்’ ஆகும். பொங்கல் முடிந்தவுடன் மடைப்பண்டங்களான இளநீர், தேசிக்காய் போன்றவற்றோடு ஏனைய பொருட்களையும் எடுத்துக்கொண்டு பூசாரியும் ஆலய உரித்துடையோரும் சிறிது தூரம் சென்று அவற்றைப் படைப்பர். செல்லும் வழியில் இளநீர், தேசிக்காய் என்பவற்றை வெட்டிச் சென்று படையலிட்ட பின் தெய்வத்துக்கு நன்றி சொல்லி, ஆண்டுப் பொங்கலை நிறைவு செய்வதாகவும், அடுத்த ஆண்டுப் பொங்கல் எவ்வித தடங்கலுமின்றி நடைபெற வேண்டியும் தடை வெட்டி வருவார். தென்மராட்சிப் பாலாவி பிரதேச பெத்தப்பா கோயில் ஒன்றில் பெண் பூசாரி பூசை நிகழ்த்துவதைக் காணமுடிகிறது. பெரும்பாலும் வழக்கில் இருக்கும் கிராமியத் தெய்வக்கோயில்களில் விளக்கு வைத்தல் முதலியன பெண்களால் செய்யப்பட்டு வரும்போதும், பூசாரிகளாக ஆண்களே காணப்படும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. தனது கணவனின் பரம்பரைக் கோயிலில் பூசாரியாக இருக்கும் திருமதி அருந்தவமலர் தர்மலிங்கம், கணவன் இல்லாததால் தானே பூசை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார். சில அவதானிப்புகள் பெத்தப்பா என்னும் சொல் சமயத்துக்கு அப்பாலான நாட்டார் வழக்காற்றுச் சொல்லாக விளங்குகின்றது. பெத்தப்பா சுவாமி கோவில்கள் தென்மராட்சி பாலாவி, கெற்பேலி கிராமங்களிலும் புங்குடுதீவிலும் மட்டுமே காணப்படுகின்றன. இத் தெய்வம் பற்றிய தொல் மரபுக் கதைகள் எதையும் அறிய முடியவில்லை. பெத்தப்பா எனும் இத் தெய்வம் சிவனாகவே பெரிதும் சித்தரிக்கப்படுகின்றது. ஆயினும் புங்குடுதீவின் ஊரதீவில் உள்ள பெத்தப்பா, தொன்று தொட்டு முருகனாக வழிபடப்பட்டு வருகின்றது. முருகன் – தகப்பன்சுவாமி; ஆகவே பெத்தப்பா எனும் தெய்வம் முருகனாகவே இருக்கலாம் அல்லது இது சிவ – முருக இணைவு வழிபாடாகவும் உருவாகி இருக்கலாம். தென்மராட்சியில் சாண்டார் சமூகத்தின் குலதெய்வமாக காணப்படும் இத்தெய்வம் புங்குடுதீவில் வேளாளர், பறையர் சமூகத்தினரால் வழிபடப்படுவது குறிப்பிடத்தக்கது. இம்மூன்று சமூகத்தினரும் நிலத்தோடும் விவசாயத்தோடும் தொடர்புபட்டவர்களாக இருப்பது கவனத்தை கோரும் விடயமாகும். புங்குடுதீவு பெத்தப்பா கோயில்கள் ஆகமமயமாதலுக்கு உள்ளாகிவிட்டன. தம் அடையாளத்தைத் துறந்து வருகின்றன. தென்மராட்சி ஆலயங்களில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பினும் அவை முழுமையான ஆகமமயமாதலுக்கு இன்னும் உள்ளாகவில்லை. பெத்தம்மா வழிபாடும் சொல் வழக்கும் தெலுங்கில் முதன்மை பெற்றவை. அதன் வழி வந்த சொல்லாக பெத்தப்பா எனும் சொல் வழக்கும் தெய்வமும் ஈழத்தவர்களிடம் செல்வாக்குப்பெற்று இருக்கலாம். முகமது ரியாஸின் ‘சிகிரி மார்க்கம்’ சிறுகதைத் தொகுப்பில் வரும் பெத்தம்மா எனும் சொல் தெலுங்கு பரப்பில் இருந்து (வணிகம் மற்றும் குடியேற்றம் என்பனவற்றின் ஊடாக) வந்தமையை உறுதி செய்கின்றது. ஆக பெத்தப்பா, பண்பாட்டு ஆய்வை கோரி நிற்கும் ஒரு வழிபாடாக – சொல்லாகத் திகழ்கின்றது. முடிவுரை தமிழகம், தெலுங்கானா போன்ற பிரதேசங்களில் பெத்தம்மா வழிபாடு காணப்பட்ட போதும் ஈழத்தில் இவ்வழிபாடு இல்லை. ஆயினும் பெத்தப்பா வழிபாடு ஈழத்திலேயே காணப்படுகின்றது. ஆண் வழிச் சமூக அமைப்பின் தொடர்ச்சியாக இவ்வழிபாடு விளங்குகிறது எனலாம். தென்மராட்சி, புங்குடுதீவுப் பிரதேசங்களில் காணப்படும் இவ்வழிபாடு சாண்டார், பறையர், வேளாளர் சமூகங்களில் குலதெய்வ வழிபாடாக இருப்பது குறிப்பிடத்தக்கது. சாதியப் போராட்டம் நிகழ்ந்த புங்குடுதீவு கண்ணகி அம்மன் கோவில் சூழலில் பறையர் சமூகத்தவராலும் வேளாளராலும் குலதெய்வமாக பெத்தப்பா வழிபடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். கண்ணகி கோயில் திருவிழா பற்றிய அறிவித்தலில் பறையர் சமூகத்தை இக்கால நிர்வாகத்தினர், ‘காராம் பசு வாகனத் திருவிழா (மூன்றாம் திருவிழா) உபயகாரர்கள் பெத்தப்பா சிவாலயம்’ எனக் குறிப்பிடுதல் சாதியம் தாண்டிய குலவழிபாடாக பெத்தப்பா வழிபாடு இருத்தலை உணர்த்துகின்றது. அதற்கு தெய்வத்தின் மீது மக்கள் கொண்டிருந்த அதீத நம்பிக்கை காரணமாக இருந்திருக்கலாம். ஆயினும் இத்தெய்வம் பற்றிய கதைகள், அற்புதங்கள் பற்றிய உரையாடல்கள் பேணப்படாதது வருத்தத்துக்கும் ஆச்சரியத்துக்கும் உரியதாகும். இன்று கலையாடுதல், மடைப் பண்டம் எடுத்தல், உள்ளிட்ட பல பாரம்பரியங்கள் அருகிவருகின்றன. கற்கோயில்களாகப் பெரும்பாலான கோயில்கள் மாறி வருகின்றன. முன்மண்டபமுடையதான ஆலயங்கள் சிலவற்றில் சாதாரண தினங்களில் பூசாரியும்; விசேட தினங்களில் பிராமணர் அல்லது சைவக்குருக்களும் பூசை செய்யும் முறைமையை அவதானிக்க முடிகிறது. மேனிலையாக்கச் சிந்தனை வழி ஆகம மரபுக்கு உட்பட்டு வரும் இவ்வழிபாடு, அதன் கதைகள் போலவே சிறிது காலத்தில் காணாமல் போவதற்கும், இதனூடாக சமூக வரலாற்றின் ஒரு பகுதி இழக்கப்படுவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது. இது தமிழர் அல்லது தமிழ் பேசும் மக்களின் அடையாளச் சிதைவுக்கும் வழிவகுக்கும் எனலாம். https://www.ezhunaonline.com/goddess-bethappa/

ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் என்ன நன்மை? அதை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?

2 months 3 weeks ago
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆட்டுக்கால் சூப் குடிப்பது எலும்புகளுக்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான பல நன்மைகளை வழங்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர் கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் எதிர்பாராதவிதமாக எலும்பு முறிவு ஏற்பட்டால், குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் ஆட்டுக்கால் சூப் வைத்து தினசரி குடிக்குமாறு வலியுறுத்துவார்கள். காய்ச்சல், சளி போன்ற தொந்தரவுகளால் அவதிப்படும் போது, வீட்டில் ஆட்டுக்கால் சூப் வைத்துக் கொடுப்பார்கள். இப்படி, பல விஷயங்களுக்கு ஆட்டுக்காலை சூப் வைத்துக் குடிக்குமாறு வலியுறுத்தும் அளவுக்கு அதில் அப்படி என்ன இருக்கிறது? உண்மையாகவே ஆட்டுக்கால் சூப், நமது ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக எலும்பு மற்றும் மூட்டுகளுக்கு வலிமையை வழங்குகிறதா? இதைத் தெரிந்துகொள்ள ஊட்டச்சத்து நிபுணர்களிடம் பேசினோம். ஆட்டுக்கால் சூப் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? எலும்பின் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பாற்றலுக்குத் தேவையான, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துகள் ஆட்டுக்காலில் இருந்து கிடைப்பதாக ஹார்வர்ட் பொது சுகாதாரக் கல்லூரியில் வெளியான ஒரு கட்டுரை கூறுகிறது. ஆட்டு இறைச்சியில், குறிப்பாக அதன் கால் எலும்புகளில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நமது எலும்புகள், மூட்டுகள், முடி, சருமம், ஆற்றல், நோய் எதிர்ப்பாற்றல் என்று பல வகைகளில் நன்மை பயப்பதாகக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ். ஆட்டுக்காலில் கொலாஜென் மற்றும் ஜெலட்டின் நிறைந்துள்ளதாகக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா அஷோக். இந்தக் கூறுகள், மூட்டு ஆரோக்கியத்திற்கு உதவுவதாகவும், மூட்டு வலிக்கு நிவாரணமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார். அதுமட்டுமின்றி கொலாஜென் சரும ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் உதவுவதாகக் கூறுகிறார் ரம்யா. அவரது கூற்றை ஆமோதிக்கும் வகையில் பேசிய திவ்யா சத்யராஜ், ஆட்டுக்கால்களில் இருக்கும் கோலாஜென், மூட்டுகளில் உயவுப் பொருளாகச் (lubricant) செயல்படுவதாகக் குறிப்பிடுகிறார். அதோடு, அவை சருமத்தில் சுருக்கம் போன்ற முதிர்ச்சி அடைவதால் ஏற்படும் அறிகுறிகளைக் குறைப்பதாகவும், ஆட்டுக்கால் சூப்பை தொடர்ச்சியாகப் பருகுவது சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும் எனவும் தெரிவித்தார். படக்குறிப்பு,ஆட்டுக்காலில் இருக்கும் கோலாஜென் எலும்பு மற்றும் மூட்டுகளை வலுப்படுத்த உதவுவதாகக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா அஷோக் ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் எலும்புகள், சருமம் மட்டுமின்றி உடலின் பல செயல்பாடுகளைச் சீராக வைத்துக்கொள்ள உதவுவதாக விளக்கினார் ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா. அவரது கூற்றுப்படி, அதிலுள்ள கிளைசீன், ப்ரோலீன் போன்ற அமினோ அமிலங்கள், குடல் செயல்பாடுகளைச் சீராக்க உதவுவதோடு, கல்லீரல் செயல்பாட்டைச் சீரமைப்பதன் மூலமாக உடலின் நச்சு நீக்க செயல்முறையையும் பேணுகின்றன. "பாரம்பரியமாகவே, தமிழ்நாட்டில் காய்ச்சல், எலும்பு முறிவு போன்றவற்றை எதிர்கொள்ளும் நபர்களுக்கு, ஆட்டுக்கால் சூப் கொடுப்பது அறிவுறுத்தப்படுகிறது. அதற்குக் காரணம், வேகமாக குணமடைவதற்கான ஊட்டச்சத்து, வலிமை மற்றும் ஆற்றலை அவை வழங்குவதே" என்கிறார் ரம்யா. ஆட்டுக்கால் சூப் யாருக்கெல்லாம் நல்லதல்ல? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆட்டுக்காலில் அதிக கொழுப்புச் சத்து இருப்பதால், கொழுப்பு அதிகமாக இருப்பவர்கள் அதைத் தவிர்ப்பது நல்லது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர் ஆட்டுக்கால் சூப் உடல் ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளைச் செய்தாலும் அவற்றில் கொழுப்பு அளவு அதிகம் இருப்பதால் அவற்றை இதய நோய், அதீத கொழுப்பு, உடல் பருமன் போன்ற பிச்னைகள் உள்ளவர்களுக்கு அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது என்கிறார் ரம்யா. அவற்றைச் சமைக்கும் விதத்திலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று வலியுறுத்துகிறார் அவர். "முழுமையாகச் சுத்தப்படுத்தப்படாத எலும்புகளில் சால்மொனெல்லா அல்லது ஈ.கோலி போன்ற பாக்டீரிய தொற்றுகள் இருப்பதற்கான அபாயம் உள்ளது. ஆகவே, அவற்றைச் சுத்தப்படுத்துவதில் அதிக கவனம் தேவை" என வலியுறுத்தும் ரம்யா, நன்கு சமைக்கப்படாத ஆட்டுக்கால்களை உட்கொள்வதிலும் இத்தகைய ஆபத்துகள் இருக்க வாய்ப்புள்ளது என எச்சரிக்கிறார். உடலில் யூரிக் அமிலம் அதிகளவில் இருப்பவர்கள், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஏற்கெனவே சிறுநீரக பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் இதை எடுத்துக்கொள்வது சிறந்தது என்று அறிவுறுத்துகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா அஷோக். பொதுவாக, ஆட்டுக்கால்களில் இருக்கும் முழு பயன்களையும் பெற வேண்டுமெனில், அவற்றை 10 முதல் 12 மணிநேரம் வரை, மெல்லிய வெப்பத்தில் தொடர்ச்சியாக வேகவைக்க வேண்டும் என்கிறார் அவர். படக்குறிப்பு,மிகக் குறைந்த உடல் எடை கொண்டவர்களுக்கு, சைனஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் நல்ல பயன்கள் கிடைப்பதாகக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ் ஆனால், "இன்றைய வாழ்க்கை முறையில் அது சாத்தியமில்லை. வீட்டில் வழக்கமாகச் சமைக்கும் முறையில்கூட ஓரளவுக்கு அந்த ஊட்டச்சத்துகள் கிடைக்கும் என்பதால், வாரம் ஒருமுறை அல்லது மாதம் இருமுறை என்ற அளவில் சீராக எடுத்துக்கொண்டாலே அதன் பயன்கள் உடலுக்குக் கிடைக்கும்," என்று விளக்கினார். "சுமார் 10 மணிநேரம் தொடர்ந்து மிதமான சூட்டில் சமைப்பதன் மூலம் அவற்றில் இருக்கும் அனைத்து ஊட்டச்சத்துகளும் சுமார் 95% கிடைக்கும். ஆனால், அப்படித்தான் சமைத்துச் சாப்பிட வேண்டும் என்று இல்லை. வழக்கமான முறையில் சமைத்துச் சாப்பிட்டாலே ஆட்டுக்காலில் இருக்கும் சத்துகள் 50 முதல் 75 சதவிகிதம் வரை உடலுக்குக் கிடைக்கும். எனவே 10 மணிநேரம் சமைக்க வேண்டும் எனக் கருதி அவற்றைத் தவிர்ப்பதைவிட, வழக்கமான முறையில் சமைத்து தொடர்ந்து உட்கொள்வது சிறந்தது," என்கிறார் திவ்யா. ஆட்டுக்கால் சூப் யாருக்கெல்லாம் அவசியம்? ஆட்டுக்கால்களில் கொழுப்புச் சத்து அதிகம் இருப்பதால், கொழுப்பு அதிகமுள்ள நபர்களுக்கு அதைப் பரிந்துரைப்பதில்லை எனக் கூறும் திவ்யா சத்யராஜ், ஆட்டுக்கால் சூப் எலும்புகளை மட்டுமின்றி கிட்டத்தட்ட மொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுவதாகக் குறிப்பிட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கீமோதெரபி சிகிச்சையில் இருப்பவர்களுக்கான உணவுமுறையில் ஆட்டுக்கால் சூப்பையும் தான் பரிந்துரைப்பதாகக் கூறுகிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES "பொதுவாக கீமோதெரபி சிகிச்சையில் பல பக்கவிளைவுகள் உள்ளன. அதை மேற்கொள்வோரால் பெரிதாகச் சாப்பிட முடியாது. ஆனால் அவர்கள் நிச்சயமாக ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டாக வேண்டும். ஆட்டுக்கால் சூப்பில் அத்தகைய அனைத்து ஊட்டச்சத்துகளும் இருப்பதால் அதைப் பருகுவது ஆரோக்கியத்திற்கு உதவும்," என்றார். கீமோதெரபியால் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் குறையும் எனக் கூறிய திவ்யா, அதை மேம்படுத்த ஆட்டுக்கால் சூப் உதவும் என்பதும் தான் அதை அதிகம் பரிந்துரைக்க ஒரு காரணம் எனக் குறிப்பிட்டார். ஜிம் செல்பவர்கள் இதை உட்கொள்வது உடலை வலுப்படுத்துவதில் பெரிதும் உதவுவதாகக் கூறும் திவ்யா, புரோட்டீன் பவுடர் போன்றவற்றை உட்கொள்வதைவிட, இவற்றில் அதிக நன்மைகள் கிடைப்பதாகத் தெரிவித்தார். இவைபோக, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள், உடல் எடைக் குறைபாடு உடையவர்கள், சைனஸ் பாதிப்பு உள்ளவர்கள், பலவீனமான எலும்புகளைக் கொண்டவர்கள் இதைச் சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும் என்றும் விளக்கினார் திவ்யா. அதுமட்டுமின்றி, முடி உதிர்வு பிரச்னையைக் குறைப்பதிலும் இது பயனளிப்பதாகக் குறிப்பிடும் அவர், ஆட்டுக்கால்களில் இருக்கும் கோலாஜென் உள்படப் பல கூறுகள், பலவிதமான நன்மைகளை உடலுக்கு வழங்குவதாகக் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1ljg064e89o

ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் என்ன நன்மை? அதை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?

2 months 3 weeks ago

ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆட்டுக்கால் சூப் குடிப்பது எலும்புகளுக்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான பல நன்மைகளை வழங்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.சுபகுணம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

எதிர்பாராதவிதமாக எலும்பு முறிவு ஏற்பட்டால், குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் ஆட்டுக்கால் சூப் வைத்து தினசரி குடிக்குமாறு வலியுறுத்துவார்கள்.

காய்ச்சல், சளி போன்ற தொந்தரவுகளால் அவதிப்படும் போது, வீட்டில் ஆட்டுக்கால் சூப் வைத்துக் கொடுப்பார்கள்.

இப்படி, பல விஷயங்களுக்கு ஆட்டுக்காலை சூப் வைத்துக் குடிக்குமாறு வலியுறுத்தும் அளவுக்கு அதில் அப்படி என்ன இருக்கிறது?

உண்மையாகவே ஆட்டுக்கால் சூப், நமது ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக எலும்பு மற்றும் மூட்டுகளுக்கு வலிமையை வழங்குகிறதா? இதைத் தெரிந்துகொள்ள ஊட்டச்சத்து நிபுணர்களிடம் பேசினோம்.

ஆட்டுக்கால் சூப் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

எலும்பின் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பாற்றலுக்குத் தேவையான, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துகள் ஆட்டுக்காலில் இருந்து கிடைப்பதாக ஹார்வர்ட் பொது சுகாதாரக் கல்லூரியில் வெளியான ஒரு கட்டுரை கூறுகிறது.

ஆட்டு இறைச்சியில், குறிப்பாக அதன் கால் எலும்புகளில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நமது எலும்புகள், மூட்டுகள், முடி, சருமம், ஆற்றல், நோய் எதிர்ப்பாற்றல் என்று பல வகைகளில் நன்மை பயப்பதாகக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ்.

ஆட்டுக்காலில் கொலாஜென் மற்றும் ஜெலட்டின் நிறைந்துள்ளதாகக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா அஷோக். இந்தக் கூறுகள், மூட்டு ஆரோக்கியத்திற்கு உதவுவதாகவும், மூட்டு வலிக்கு நிவாரணமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

அதுமட்டுமின்றி கொலாஜென் சரும ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் உதவுவதாகக் கூறுகிறார் ரம்யா.

அவரது கூற்றை ஆமோதிக்கும் வகையில் பேசிய திவ்யா சத்யராஜ், ஆட்டுக்கால்களில் இருக்கும் கோலாஜென், மூட்டுகளில் உயவுப் பொருளாகச் (lubricant) செயல்படுவதாகக் குறிப்பிடுகிறார். அதோடு, அவை சருமத்தில் சுருக்கம் போன்ற முதிர்ச்சி அடைவதால் ஏற்படும் அறிகுறிகளைக் குறைப்பதாகவும், ஆட்டுக்கால் சூப்பை தொடர்ச்சியாகப் பருகுவது சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும் எனவும் தெரிவித்தார்.

ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

படக்குறிப்பு,ஆட்டுக்காலில் இருக்கும் கோலாஜென் எலும்பு மற்றும் மூட்டுகளை வலுப்படுத்த உதவுவதாகக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா அஷோக்

ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் எலும்புகள், சருமம் மட்டுமின்றி உடலின் பல செயல்பாடுகளைச் சீராக வைத்துக்கொள்ள உதவுவதாக விளக்கினார் ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா.

அவரது கூற்றுப்படி, அதிலுள்ள கிளைசீன், ப்ரோலீன் போன்ற அமினோ அமிலங்கள், குடல் செயல்பாடுகளைச் சீராக்க உதவுவதோடு, கல்லீரல் செயல்பாட்டைச் சீரமைப்பதன் மூலமாக உடலின் நச்சு நீக்க செயல்முறையையும் பேணுகின்றன.

"பாரம்பரியமாகவே, தமிழ்நாட்டில் காய்ச்சல், எலும்பு முறிவு போன்றவற்றை எதிர்கொள்ளும் நபர்களுக்கு, ஆட்டுக்கால் சூப் கொடுப்பது அறிவுறுத்தப்படுகிறது. அதற்குக் காரணம், வேகமாக குணமடைவதற்கான ஊட்டச்சத்து, வலிமை மற்றும் ஆற்றலை அவை வழங்குவதே" என்கிறார் ரம்யா.

ஆட்டுக்கால் சூப் யாருக்கெல்லாம் நல்லதல்ல?

ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆட்டுக்காலில் அதிக கொழுப்புச் சத்து இருப்பதால், கொழுப்பு அதிகமாக இருப்பவர்கள் அதைத் தவிர்ப்பது நல்லது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்

ஆட்டுக்கால் சூப் உடல் ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளைச் செய்தாலும் அவற்றில் கொழுப்பு அளவு அதிகம் இருப்பதால் அவற்றை இதய நோய், அதீத கொழுப்பு, உடல் பருமன் போன்ற பிச்னைகள் உள்ளவர்களுக்கு அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது என்கிறார் ரம்யா.

அவற்றைச் சமைக்கும் விதத்திலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று வலியுறுத்துகிறார் அவர்.

"முழுமையாகச் சுத்தப்படுத்தப்படாத எலும்புகளில் சால்மொனெல்லா அல்லது ஈ.கோலி போன்ற பாக்டீரிய தொற்றுகள் இருப்பதற்கான அபாயம் உள்ளது. ஆகவே, அவற்றைச் சுத்தப்படுத்துவதில் அதிக கவனம் தேவை" என வலியுறுத்தும் ரம்யா, நன்கு சமைக்கப்படாத ஆட்டுக்கால்களை உட்கொள்வதிலும் இத்தகைய ஆபத்துகள் இருக்க வாய்ப்புள்ளது என எச்சரிக்கிறார்.

உடலில் யூரிக் அமிலம் அதிகளவில் இருப்பவர்கள், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஏற்கெனவே சிறுநீரக பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் இதை எடுத்துக்கொள்வது சிறந்தது என்று அறிவுறுத்துகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா அஷோக்.

பொதுவாக, ஆட்டுக்கால்களில் இருக்கும் முழு பயன்களையும் பெற வேண்டுமெனில், அவற்றை 10 முதல் 12 மணிநேரம் வரை, மெல்லிய வெப்பத்தில் தொடர்ச்சியாக வேகவைக்க வேண்டும் என்கிறார் அவர்.

ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

படக்குறிப்பு,மிகக் குறைந்த உடல் எடை கொண்டவர்களுக்கு, சைனஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் நல்ல பயன்கள் கிடைப்பதாகக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ்

ஆனால், "இன்றைய வாழ்க்கை முறையில் அது சாத்தியமில்லை. வீட்டில் வழக்கமாகச் சமைக்கும் முறையில்கூட ஓரளவுக்கு அந்த ஊட்டச்சத்துகள் கிடைக்கும் என்பதால், வாரம் ஒருமுறை அல்லது மாதம் இருமுறை என்ற அளவில் சீராக எடுத்துக்கொண்டாலே அதன் பயன்கள் உடலுக்குக் கிடைக்கும்," என்று விளக்கினார்.

"சுமார் 10 மணிநேரம் தொடர்ந்து மிதமான சூட்டில் சமைப்பதன் மூலம் அவற்றில் இருக்கும் அனைத்து ஊட்டச்சத்துகளும் சுமார் 95% கிடைக்கும். ஆனால், அப்படித்தான் சமைத்துச் சாப்பிட வேண்டும் என்று இல்லை.

வழக்கமான முறையில் சமைத்துச் சாப்பிட்டாலே ஆட்டுக்காலில் இருக்கும் சத்துகள் 50 முதல் 75 சதவிகிதம் வரை உடலுக்குக் கிடைக்கும். எனவே 10 மணிநேரம் சமைக்க வேண்டும் எனக் கருதி அவற்றைத் தவிர்ப்பதைவிட, வழக்கமான முறையில் சமைத்து தொடர்ந்து உட்கொள்வது சிறந்தது," என்கிறார் திவ்யா.

ஆட்டுக்கால் சூப் யாருக்கெல்லாம் அவசியம்?

ஆட்டுக்கால்களில் கொழுப்புச் சத்து அதிகம் இருப்பதால், கொழுப்பு அதிகமுள்ள நபர்களுக்கு அதைப் பரிந்துரைப்பதில்லை எனக் கூறும் திவ்யா சத்யராஜ், ஆட்டுக்கால் சூப் எலும்புகளை மட்டுமின்றி கிட்டத்தட்ட மொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுவதாகக் குறிப்பிட்டார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கீமோதெரபி சிகிச்சையில் இருப்பவர்களுக்கான உணவுமுறையில் ஆட்டுக்கால் சூப்பையும் தான் பரிந்துரைப்பதாகக் கூறுகிறார் அவர்.

ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

"பொதுவாக கீமோதெரபி சிகிச்சையில் பல பக்கவிளைவுகள் உள்ளன. அதை மேற்கொள்வோரால் பெரிதாகச் சாப்பிட முடியாது. ஆனால் அவர்கள் நிச்சயமாக ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டாக வேண்டும். ஆட்டுக்கால் சூப்பில் அத்தகைய அனைத்து ஊட்டச்சத்துகளும் இருப்பதால் அதைப் பருகுவது ஆரோக்கியத்திற்கு உதவும்," என்றார்.

கீமோதெரபியால் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் குறையும் எனக் கூறிய திவ்யா, அதை மேம்படுத்த ஆட்டுக்கால் சூப் உதவும் என்பதும் தான் அதை அதிகம் பரிந்துரைக்க ஒரு காரணம் எனக் குறிப்பிட்டார்.

ஜிம் செல்பவர்கள் இதை உட்கொள்வது உடலை வலுப்படுத்துவதில் பெரிதும் உதவுவதாகக் கூறும் திவ்யா, புரோட்டீன் பவுடர் போன்றவற்றை உட்கொள்வதைவிட, இவற்றில் அதிக நன்மைகள் கிடைப்பதாகத் தெரிவித்தார்.

இவைபோக, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள், உடல் எடைக் குறைபாடு உடையவர்கள், சைனஸ் பாதிப்பு உள்ளவர்கள், பலவீனமான எலும்புகளைக் கொண்டவர்கள் இதைச் சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும் என்றும் விளக்கினார் திவ்யா.

அதுமட்டுமின்றி, முடி உதிர்வு பிரச்னையைக் குறைப்பதிலும் இது பயனளிப்பதாகக் குறிப்பிடும் அவர், ஆட்டுக்கால்களில் இருக்கும் கோலாஜென் உள்படப் பல கூறுகள், பலவிதமான நன்மைகளை உடலுக்கு வழங்குவதாகக் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1ljg064e89o

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்

2 months 3 weeks ago
மக்களை ‘லோகோ’ விசுவாசிகளாக்கும் கார்ப்பரேட் வலைவிரிப்பு Bookday15/04/2025 தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 9 | ‘நோ லோகோ’ (No Logo) மக்களை ‘லோகோ’ விசுவாசிகளாக்கும் கார்ப்பரேட் வலைவிரிப்பு அ. குமரேசன் “என்னை வாட்டிக்கொண்டிருப்பது உண்மையில் நேரடியாக இங்கே ஒரு வெளி இல்லை என்பதல்ல, மாறாக இவற்றை உருவகப்படுத்துவதற்கான வெளி இல்லையே என்ற ஏக்கம்தான்: விடுதலை, தப்பித்தல், ஒரு வகையான திறந்த சுதந்திரம்.” – இவ்வாறு பொருளாதார ஆய்வாளரும் களச்செயல்பாட்டாளருமான கனடா நாட்டு எழுத்தாளர் நாவோமி க்ளெய்ன் (Naomi Klein) தமது ‘நோ லோகோ’ (No Logo: Taking Aim at the Brand Bullies – வேண்டாம் இலச்சினை) என்ற நூலில் குறிப்பிடுகிறார். 1999இல் வெளியான அந்தப் புத்தகத்தைத் தடை செய்யப்பட்ட புத்தகங்களின் வரிசையில் சேர்க்க முடியாது முடியாது – ஏனெனில் நேரடியாக அது எந்த நாட்டின் அரசாங்கத்தாலும் தடை செய்யப்படவில்லை. ஆனால் தடை செய்ய வேண்டும் என்ற அழுத்தத்துடன் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகித் தப்பிப் பிழைத்தது. யார் அவ்வாறு தாக்கினார்கள் என்றால் உலகளாவிய கார்ப்பரேட் சக்திகளும் கார்ப்பரேட் ஆதரவு பொருளாதாரச் சிந்தனையாளர்களும். “வேண்டாம் இலச்சினை” என்று நூலாசிரியர் கூறுவது கார்ப்பரேட் நிறுவனங்களின் வணிக இலச்சினைகளைத்தான். மக்களுக்குத் தேவைப்படும் பொருள்கள் என்பதற்கு மாறாக, குறிப்பிட்ட நிறுவனங்களின் விற்பனைச் சரக்குகள் மீது ஒரு விசுவாசத்தனமான மோகத்தை ஏற்படுத்துவதற்கு அந்த இலச்சினைகள் மூளைக்குள் பதிய வைக்கப்படுவதை அவர் அம்பலப்படுத்துகிறார். தி ஷாக் டாக்ட்ரைன் (The Shock Doctrine – அதிர்ச்சிக் கோட்பாடு), திஸ் சேஞ்ஜஸ் எவ்ரிதிங் (This Changes Everything – இது எல்லாவற்றையும் மாற்றுகிறது) என்ற புத்தகங்களையும் எழுதியுள்ள நாவோமி க்ளெய்ன் (Naomi Klein) பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பருவநிலை நீதித்துறைப் பேராசிரியருமாவார். இந்த நூல் பற்றித் தெரியவந்தபோது செயற்கை நுண்ணறிவுச் செயலிகள் பகிர்ந்துகொண்ட தகவல்கள் அடிப்படையான புரிதலுக்கு உதவுகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்புகளை விற்பது என்பதைத் தாண்டி, மக்களுக்கான வாழ்க்கை முறைகளையே விற்பனை செய்கின்றன. நுகர்வோர் கலாச்சாரத்தில் ஊடுருவி, பல்வேறு தயாரிப்புகளை ஒப்பிட்டுப் பார்க்காமல் குறிப்பிட்ட வணிகப் பெயர்கள் (பிராண்டுகள்) மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதற்குத் தங்களை ஒப்படைத்துக்கொள்ள வைக்கின்றன. உலகமயமாக்கலில் கார்ப்பரேட் நிறுவனங்கள் பல நாடுகளில் கிளை பரப்பியிருந்தாலும், அவர்களின் லாபம் பெருகிய அளவுக்கு வேலைவாய்ப்புகள் பெருகிடவில்லை, மாறாக வேலையிழப்புகள்தான் அன்றாடச் செய்திகளாக வந்துகொண்டிருக்கின்றன. இதன் தாக்கங்கள் பலவகையான போராட்டங்களில் வெளிப்படுகின்றன. புத்தகம் எதைப்பேசுகிறது? இந்தச் செய்திகளைத்தான் புத்தகத்தில் எழுதியிருக்கிறார் நாவோமி க்ளெய்ன் (Naomi Klein). இது நாவலோ தனித்தனிக் கட்டுரைகளின் தொகுப்போ அல்ல. வணிக இலச்சினையை மையமாக வைத்து உலகளாவிய கார்ப்பரேட் சுரண்டலின் பரிமாணங்களை விளக்குகிற பொருளாதார–அரசியல்–சமூக ஆய்வு நூல் என்று கூறலாம். வெளி இல்லை (No Space), தேர்ந்தெடுக்கும் வாய்ப்பில்லை (No Choice), வேலைகள் இல்லை (No Jobs), இலச்சினை இல்லை (No Logo) என்ற நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. பொருள்களின் தரம் என்பதை இலச்சினைகளோடு தொடர்புபடுத்துவது முதல், நிறுவனங்களில் பல்வேறு வேலைகள் வெளி ஒப்பந்ததாரர்களிடம் விடப்படுவது (outsourcing), மலிவான கூலிக்குத் தொழிலாளர்கள் கிடைக்கக்கூடிய நாடுகளில் தயாரிப்பு ஆலைகளை நிறுவுவது வரையில் புத்தகம் அலசுகிறது. நமது நாட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என ஏற்படுத்தப்பட்டு, அவற்றில் பன்னாட்டு நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளோடு ஆலைகள் அமைக்க வழி செய்யப்பட்டதையும், மற்ற நாடுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்த ஊதியத்தில் இங்கே தொழிலாளர்களை நியமிக்க முடியும் என்பதால் பல நிறுவனங்கள் வந்ததையும் சாட்சியங்களாகக் கொண்டுவரலாம். சாம்சங் தொழிலாளர் போராட்டம் உள்பட எத்தனை சான்றுகள்! வணிகத்தோடும் வருமானத்தோடும் நின்றுவிடாமல் மக்களின் வாழ்க்கை முறை, நுகர்பொருள்களின் தேர்வு ஆகியவற்றில் கார்ப்பரேட் ஆதிக்கம் மேலோங்குவது பற்றியும் நாவோமி க்ளெய்ன் (Naomi Klein) விவாதிக்கிறார். வியர்வைக் கொட்டகைகளாக இருக்கும் இயந்திரக் கூடங்கள், கார்ப்பரேட் பாணி தணிக்கைகள், கருத்துகளை வெளியிடுவதற்கான பொதுவெளி அரிக்கப்படும் நிலைமைகள் ஆகியவை தொடர்பான அவதானிப்புகளையும் பகிர்ந்திருக்கிறார். உலக சமுதாயத்தின் வேர்மட்டத்தில் ஏற்பட்டுவரும் விழிப்புணர்வு, உழைப்பாளி வர்க்கத்தின் எழுச்சி, அதில் தொழிலாளர் சங்கங்களின் பங்களிப்பு ஆகியவற்றை விவரிக்கிறார். அந்தப் போராட்டங்களோடு சமூகநீதி, சமத்துவ இலட்சியங்களும் இணைந்திருப்பதைக் காட்டுகிறார். அந்த இலட்சியங்களை நோக்கிச் செல்கையில் இந்த இலச்சினைகள் இனி இல்லை என்ற நிலை ஏற்படும் என்ற தன் கனவைப் பகிர்ந்துகொள்கிறார். தகவல்களையும் கருத்துகளையும் சொல்வதோடு, இத்தகைய மாற்றங்களுக்காகச் செயல்படவும், அவ்வாறு செயல்படுவோருக்கு ஆதரவாக இருக்கவும் வாசகர்களைத் தூண்டுகிறது என்று புத்தகம் பற்றிய பதிவுகள் தெரிவிக்கின்றன. வெளிகள் ஆக்கிரமிப்பு சுதந்திரமான விவாதங்களுக்கான பொதுவெளிகள் விளம்பரங்களால் ஆக்கிரமிக்கப்படுவது, தங்களுடைய பிராண்டுகள் சந்தையில் முந்தியிருக்கச் செய்வதற்காக நிறுவனங்கள் கையாளும் மூர்க்கத்தனமான வழிமுறைகள், அதில் பலியிடப்படும் சுதந்திரமான கருத்து வெளிப்பாடுகள், அடிமைப்படுத்தப்படும் படைப்பாக்கத் திறன்கள், மறக்கடிக்கப்படும் வட்டாரப் பண்பாடுகள் ஆகியவற்றையும் புத்தகம் வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது. உலகமயமாக்கல் சூழலில் தன்னாளுமை உரிமைகளை மீட்பதற்கு ஒவ்வொரு தனிமனிதரும் முன்வர வேண்டுகோள் விடுக்கிறார் நூலாசிரியர். உலக மயமாக்கலின் ஆக்கப்பூர்வமான விளைவுகளை நாவோமி க்ளெய்ன் (Naomi Klein) பார்க்கத் தவறுகிறார், உலகப் பரப்பு இன்று எவரும் எளிதில் சென்றுவரக்கூடியதாக மாறியிருப்பதை, இதனால் தனிமனித வாழ்க்கையிலும் சமூகச் சூழல்களிலும் ஏற்பட்டிருக்கிற முன்னேற்றங்களை க்ளெய்ன் நிராகரிக்கிறார் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஏற்கெனவே கூறியது போல கார்ப்பரேட்டுகள் தரப்பிலிருந்தும் கார்ப்பரேட் ஆதரவுச் சிந்தனையாளர்களிடமிருந்தும் இப்படிப்பட்ட விமர்சனங்கள் வருகின்றன. சிலர், உலகமயமாக்கலால் நன்மைகளே ஏற்படவில்லையா என்று கேட்கிறார்கள். அந்தக் கேள்விக்குப் புத்தகத்தில் பதில் இருக்கிறதா என்று தெரியவில்லை. உலகமயமாக்கலின் பல்வேறு நன்மைகளை மறுப்பதற்கில்லைதான். உலகின் சில பகுதிகளில் பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. வறுமைக்கோடு அளவு உயர்ந்திருக்கிறது. வட்டாரத்திற்குள் சுருங்கியிருந்த வாழ்க்கை பரந்த எல்லைகளுக்கு விரிவடைந்திருக்கிறது. குடியிருப்பு வசதிகள், நவீன வாகனங்கள் என்ற விளைச்சல்களையும், பாலின சமத்துவச் சிந்தனைகள் முன்னுக்கு வந்திருப்பதையும் பார்க்க முடிகிறது. என்ன விளக்கம்? ஆனால், உலகப் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிலிருந்து பணியாளர்கள் பல்லாயிரக்கணக்கில் வெளியேற்றப்படுவதற்கும், அதனால் அவர்களது குடும்பங்களிலும் சமூகத்திலும் ஏற்படும் சிக்கல்களுக்கும் எப்படி விளக்கம் அளிப்பது? எடுத்துக்காட்டாக, தகவல் தொழில்நுட்பத்துறை (ஐடி செக்டார்) சார்ந்த ஊழியர்கள் நல்ல ஊதியம் பெறுகிறார்கள் என்ற தோற்றம் ஒரு புறமிருக்க, எல்லா ஐடி நிறுவனங்களிலும் அந்த நிலைமை இல்லை என்பது இன்னொருபுறமிருக்க, எந்த நேரத்திலும் வீட்டுக்கு அனுப்பப்படலாம் என்ற உறுதியற்ற நிலையில் தினமும் காலையில் கண்விழித்துக்கொண்டிருக்கிறார்களே – அதை எப்படி இல்லை என்று கூறுவது? அந்த நிறுவனங்களின் தேவைகளை ஏற்று, பல்வேறு நாடுகளின் அரசாங்கங்கள் செய்துகொள்கிற சமரசங்கள், சட்டத் திருத்தங்கள் போன்றவற்றை எப்படி நியாயப்படுத்துவது? வறுமையின் அளவு மாறியிருக்கிறதா என்று ஆய்வாளர்கள் சொல்லட்டும், ஆனால் வறுமையின் கொடுமைகளும் துயரங்களும் தற்கொலை உள்ளிட்ட அவலங்களும் மாறவில்லையே? பாலின சமத்துவத்தில் முன்னேற்றம் என்ற தோற்றத்திற்குப் பின்னால், பெண்களுக்கு எதிரான பாலின அடிப்படையிலான சுரண்டல்கள் அதிகரித்திருக்கின்றனவே? வேலையிழக்கும் ஆண்களால் அவர்களின் வீடுகளில் பெண்கள் தாக்கப்படுவது செய்தியாகிக்கொண்டிருக்கிறதே? முற்போக்கான மாற்றங்கள்தான் இனி நிகழும் என்ற மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, மதவாத. சாதியவாத வன்மங்கள் தாண்டவமாடுகின்றனவே? இயற்கை வளங்களும் பசுமைப் பரப்புகளும் சூறையாடப்படுகின்றனவே? கட்டுப்பாடற்ற கரிம வெளியேற்றத்தால் சுற்றுச் சூழலுக்குப் பேராபத்து ஏற்படுத்தப்படுகிறதே? சமுதாய வளர்ச்சியின் இறுதிக்கட்டம் முதலாளித்துவம் அல்ல, உலகமய கார்ப்பரேட் யுகம் அல்ல என்று மேலும் மேலும் தெளிவாகப் புலப்பட்டு வருகிறது. அதன் வளர்ச்சியின் பின்னால் இருப்பது மூலதனக்காரர்களின் “தொழில் திறமை” மட்டுமல்ல, அரசாங்கங்களின் பங்களிப்பு, வலதுசாரி அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு, மதம், இனம், சாதி சார்ந்த சமுதாயத் தலைவர்களின் கைகோர்ப்பு ஆகியவை இருக்கின்றன. பொருளாதார அடியாள் போல 2004ஆம் ஆண்டில் வந்த ‘கன்ஃபெஸ்ஸன்ஸ் ஆஃப் அன் எகனாமிக் ஹிட் மேன்’ (Confessions Of An Economic Hit Man) என்ற புத்தகம் வந்தது. அமெரிக்கரான ஜான் பெர்க்கின்ஸ் என்ற வணிக ஆலோசகர் எழுதிய அந்தப் புத்தகத்தை அதற்கடுத்த ஆண்டிலேயே, இரா. முருகவேல் மொழிபெயர்ப்பில் தமிழில் கொண்டுவந்தது பாரதி புத்தகாலயம். உலகளாவிய கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசாங்கங்களைக் கைக்குள் போட்டுக்கொள்வதற்காக ஊழல் உட்பட மோசமான குற்றங்கள் எதையும் செய்யத் தயாராக இருப்பதை அந்தப் புத்தகம் கூண்டில் நிறுத்தியது. அப்படிப்பட்ட “அடியாள்” வேலைகளில் ஈடுபட்டு, பின்னர் மனசாட்சியோடு அதிலேயிருந்து வெளியேறி, வேட்டையாடப்பட்ட, ஆயினும் துணிந்து நின்றவர் ஜான் பெர்க்கின்ஸ். அவரே தன் கதையைச் சொல்வதாக எழுதப்பட்ட அந்தப் புத்தகம் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. கார்ப்பரேட் சுரண்டல் எதிர்ப்பாளர்களுக்கு ஒரு கையேடாகியிருக்கிறது. அதே போல், உலகக் கார்ப்பரேட்டுகளின் வணிகச்சூது உலகத்தை சந்திக்குக் கொண்டுவரும் புத்தகம்தான் இது என புரிந்துகொள்ள முடிகிறது. “வேறுபட்ட கலாச்சாரங்கள் இருந்தபோதிலும், உலகம் முழுவதும் நடுத்தர வர்க்க இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை வேறு ஏதோவொரு நிகர்நிலை உலகத்தில் வாழ்வது போலத் தோன்றுகிறது. அவர்கள் காலையில் எழுகிறார்கள், தங்கள் லெவிஸ் ஆடைகளையும் நைக் காலணிகளையும் அணிகிறார்கள், தொப்பிகளையும் முதுகுப் பைகளையும் சோனி பெர்சனல் சிடி பிளேயர்களையும் எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் செல்கிறார்கள்.” –உலகமய கார்ப்பரேட் யுகம் எப்படி வளரும் தலைமுறைகளை ஒரு மாதிரியாக வார்த்து வைத்திருக்கிறது என்று தன் மனக்குமுறலை இப்படி வெளிப்படுத்தியிருக்கிறார் நாவோமி க்ளெய்ன் (Naomi Klein). தமிழிலும் உலகின் அனைத்து மொழிகளிலும் வரவேண்டிய புத்தகம் என்ற எண்ணமும் ஏற்படுகிறது. அந்த முயற்சியில் ஈடுபடக்கூடியவர்களை கைகுலுக்கி வரவேற்கலாம், வாழ்த்தலாம். https://bookday.in/naomi-klein-no-logo-taking-aim-at-the-brand-bullies-book-oriented-article-written-by-a-kumaresan/

குறைந்த செலவிலான தரமான வலுசக்தி உற்பத்திக்கு உலக வங்கி 150 மில்லியன் டொலர் நிதியுதவி

2 months 3 weeks ago
22 JUN, 2025 | 01:08 PM (நா.தனுஜா) இலங்கையில் தூய, தரமான, குறைந்த செலவிலான வலுசக்தி உற்பத்தி செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்காக 150 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்குவதற்கு உலக வங்கிக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது. இச்செயற்திட்டத்தின் ஊடாக இலங்கையினால் குறைந்த செலவில் பாதுகாப்பானதும், நிலைபேறானதுமான வலுசக்தியை உற்பத்தி செய்யமுடியும் எனவும், இது அதிக செலவில் இறக்குமதி செய்யப்படும் புதைபடிவ எரிபொருளில் நாடு தங்கியிருப்பதைக் குறைப்பதற்கும், சோலார் மற்றும் காற்று மூலமான வலுசக்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் உலக வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. 'இச்செயற்திட்டத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் உள்ள குடும்பங்களுக்கும் வணிகங்களுக்கும் குறைந்த விலையில், தீங்கற்ற மின்சாரத்தை விநியோகிக்க முடியும். இந்த இலக்கை யதார்த்தபூர்வமாக அடைந்துகொள்வதை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்துடனும் தனியார் துறையினருடனும் இணைந்து பணியாற்றுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்' என மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் டேவிட் சிஸ்லென் தெரிவித்துள்ளார். அதேவேளை வலுசக்தி உற்பத்தியில் இலங்கை அடையவிருக்கும் நிலைமாற்றமானது தூய வலுசக்தி உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கும், வலுசக்திக் கிடைப்பனவை மேம்படுத்துவதற்கும், நீண்டகால அடிப்படையிலான வலுசக்தி மீளெழுச்சியைக் கட்டியெழுப்புவதற்கும் வாய்ப்பாக அமையும் என சர்வதேச நிதிக்கூட்டுத்தாபனத்தின் தெற்காசியப்பிராந்தியப் பணிப்பாளர் இமாத் என் ஃபகோரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/218131

குறைந்த செலவிலான தரமான வலுசக்தி உற்பத்திக்கு உலக வங்கி 150 மில்லியன் டொலர் நிதியுதவி

2 months 3 weeks ago

22 JUN, 2025 | 01:08 PM

image

(நா.தனுஜா)

இலங்கையில் தூய, தரமான, குறைந்த செலவிலான வலுசக்தி உற்பத்தி செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்காக 150 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்குவதற்கு உலக வங்கிக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது.

இச்செயற்திட்டத்தின் ஊடாக இலங்கையினால் குறைந்த செலவில் பாதுகாப்பானதும், நிலைபேறானதுமான வலுசக்தியை உற்பத்தி செய்யமுடியும் எனவும், இது அதிக செலவில் இறக்குமதி செய்யப்படும் புதைபடிவ எரிபொருளில் நாடு தங்கியிருப்பதைக் குறைப்பதற்கும், சோலார் மற்றும் காற்று மூலமான வலுசக்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் உலக வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

'இச்செயற்திட்டத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் உள்ள குடும்பங்களுக்கும் வணிகங்களுக்கும் குறைந்த விலையில், தீங்கற்ற மின்சாரத்தை விநியோகிக்க முடியும்.

இந்த இலக்கை யதார்த்தபூர்வமாக அடைந்துகொள்வதை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்துடனும் தனியார் துறையினருடனும் இணைந்து பணியாற்றுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்' என மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் டேவிட் சிஸ்லென் தெரிவித்துள்ளார்.

அதேவேளை வலுசக்தி உற்பத்தியில் இலங்கை அடையவிருக்கும் நிலைமாற்றமானது தூய வலுசக்தி உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கும், வலுசக்திக் கிடைப்பனவை மேம்படுத்துவதற்கும், நீண்டகால அடிப்படையிலான வலுசக்தி மீளெழுச்சியைக் கட்டியெழுப்புவதற்கும் வாய்ப்பாக அமையும் என சர்வதேச நிதிக்கூட்டுத்தாபனத்தின் தெற்காசியப்பிராந்தியப் பணிப்பாளர் இமாத் என் ஃபகோரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/218131

சதிகாரச் சக்கரவர்த்திகளின் சன் குழும சாம்ராஜ்யம்!

2 months 3 weeks ago

சதிகாரச் சக்கரவர்த்திகளின் சன் குழும சாம்ராஜ்யம்!

-சாவித்திரி கண்ணன்

106.jpg

ஆருயிராய் நினைத்த அண்ணன் தன்னையே வேரறுப்பான் என தயாநிதிமாறன் நினைக்கவில்லை. ஆனால், இந்த இரு சகோதரர்களும் தமிழகம் மட்டுமின்றி, இந்திய காட்சி ஊடகத்துறையில் கருவறுத்தவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. அந்த சாம்ராஜ்யத்தின் அடித்தளத்தில் புதைந்திருக்கும் எலும்புக் கூடுகளும் எண்ணற்றவை;

எத்தனையெத்தனையோ நிறுவனங்கள், கலைஞர்கள், தொழில் முகவர்கள், ஊழியர்கள், அரசு அதிகாரிகளின் பேரழிவிலே கட்டி எழுப்பப்பட்ட சாம்ராஜ்யம் தான் சன் குழுமம்!

அரசியல் அதிகார பலத்துடன் ஒரு ஆக்டோபஸ் மிருகத்தைப் போல, அடங்காப் பசியுடன் போட்டியாளர்களை அழித்தொழித்து விழுங்கி ஏப்பம் விட்ட நிறுவனம் தான் சன் குழுமம். அண்ணனும், தம்பியும் கைக் கோர்த்து ஆடிய அதிகார ஆட்டங்களை பல வால்யூம்களாக எழுதலாம். இன்று அவர்களுக்குள்ளேயே மோதல் ஏற்பட்டுள்ளது. அண்ணனை தொழில் சாம்ராஜ்ய சக்கரவர்த்தியாக்க தம்பி செய்த தகிடுதத்தங்கள் ஏராளம். அதே போல தம்பியை அரசியலில் முன்னினைபடுத்த அண்ணன் செய்த ஊடக நரித்தங்கள் சொல்லில் அடங்காதவை. இதுவே கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரகள் குடும்பமும் பிரியக் காரணமானது. ஆனால், விரைவில் ஒன்று பட்டனர். இந்த காலகட்டத்தில் நான் எழுதிய நூல் தான் சன் குழுமச் சதிகளும், திமுகவின் திசை மாற்றமும்.

20250621_104132.jpg

இவர்கள் துளிர்விட ஆரம்பித்த காலம் தொடங்கி தொடர்ந்து அணுக்கமாக அவதானித்து வருகிறேன் நான்!

1989 ஆம் ஆண்டு வாக்கில் குங்குமம் வார இதழில் நான் ஒரு சுயாதீனப் பத்திரிகையாளனாக கட்டுரைகள், புகைப்படங்கள் தந்து கொண்டிருந்த காலகட்டத்தில் கலாநிதியும், தயாநிதியும் பூமாலை என்ற வீடியோ கேசட் கொண்டு வந்தனர். அதில் குங்குமம், வண்ணத்திரை, முத்தாரம் போன்றவற்றில் வேலை பார்த்த பத்திரிக்கையாளர்களையே ஊதியம் தராமல் பயன்படுத்திக் கொண்டனர். 1990-ல் கலைஞர் ஆட்சிக்கு வந்த போது வீடியோ கேசட் கடைகளை மிரட்டி விற்பனை செய்ய வைத்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன.

1989-ல் வி.பி.சிங் அமைச்சரவையில் முரசொலிமாறன் நகர்புற அமைச்சராகப் பதவி பெற்ற வாய்ப்பில் ஏற்பட்ட தொழில் அதிபர்கள் தொடர்புகளால் தன்னை வளப்படுத்திக் கொண்டார்.

12796007_291_12796007_1629183649107.png

1992- அக்டோபரில் இந்தியாவின் முதன்முதல் சேட்டிலைட் சேனலாக ZEE  தொலைகாட்சி வந்தது. உடனே தன் மகன்களுக்கு காட்சி ஊடகத்தில் இருக்கும் ஆர்வத்தை அறிந்திருந்த மாறன் ஏப்ரல் 14 1993-ல் சன் குழுமத்தை ஆரம்பித்தார்.

திமுக கழகத்தின் நிதியைத் தந்து, அதுவும் போதவில்லை என மந்தைவெளி சிட்டி யூனியன் வங்கியில் கட்சி சொத்தை அடமானம் வைத்து வாங்கப்பட்ட நிதியில் ஆரம்பிக்கப்பட்டது தான் சன் தொலைக்காட்சி.

அவர் தான் சேர்மன் தயாளு அம்மாள், மல்லிகா மாறன் இருவரும் பெயருக்கு இயக்குனர்கள். கலாநிதி, தயாநிதி, ஸ்டாலின் மூவரும் பங்குதாரர்கள். இது தான் தொடக்கம். ஆனால், இன்றைக்கு சுமார் 98 சதவிகித பங்குகளை தன் வசம் வைத்திருக்கிறார் கலாநிதி எனச் சொல்லப்படுகிறது. இதன் மதிப்பு லட்சம் கோடிக்கும் அதிகமாகும்.

முரசொலி அலுவலகத்தையே முதலில் பயன்படுத்தியதும், பிறகு அறிவாலயத்திற்கு எதிர் வாடையில் உள்ள சென்சூரி பிளாசாவில் 2000 சதுர அடிக்கு வாடகையில் இருந்து அதையும் தரமுடியாமல் அறிவாலயத்திற்கே வந்ததும், ஒவ்வொரு நிகழ்ச்சி தயாரிப்பாளர்களிடமும் ரூபாய் ஐயாயிரம் என்றாலும், பத்தாயிரம் என்றாலும் தொடர்ந்து பல முறை தானே போனில் நச்சரித்து பேசி வாங்கிய கலாநிதியின் பொருளாதார நெருக்கடிகளும் அவருக்கு மறந்து போயிருக்கலாம்.

2000 ஆம் ஆண்டு சுமங்கலி கேபிள் விஷனை தயாநிதி மாறன் தான் தொடங்கினார். அப்போது தமிழகம் முழுமையும் 30,000 கேபிள் ஆப்ரேட்டர்கள் இருந்தனர். இவர்களில் ஆயிரத்திற்கு  மேற்பட்டோர் லோக்கல் சேனல் நடத்தி வந்தனர். சுமார் 200 பேராவது எம்.எஸ்.ஓ நடத்திக் கொண்டிருந்தனர். இதில் பலர் தொழிலைவிட்டே விரட்டி அடிக்கப்பட்டனர். சிலர் நடுத்தெருவிற்கு வந்தனர்,. ஒரு சிலர் தற்கொலை செய்து கொண்டனர். அங்குமிங்கும் சில கொலைச் சம்பவங்களும் அரங்கேறின. சரண்டரானவர்கள் மட்டுமே தப்பித்தனர். மத்தியி பாஜகவுடன் கூட்டணி ஆட்சி, மாநிலத்தில் கலைஞர் ஆட்சி, மாநகராட்சியில் ஸ்டாலின் மேயர். கருணாநிதி குடும்ப அதிகாரம் கோலோச்சிய காலம் அது.

unnamed.jpg

 

சென்னையில் சிட்டி கேபிள், ஹாத்வே, ஏ.எம்.என் போன்றவர்கள் கேபிள் நெட்வொர்க்கில் இருந்தனர். இவர்கள் கேபிள் வயர்களை இரவோடு இரவாக மாநகராட்சி ஊழியர்களைக் கொண்டு அறுத்து எறிந்தவர் தயாநிதி. அவரே களத்தில் இறங்கி ஒரு பேட்டை ரவுடி போல செயல்பட்ட காலகட்டங்கள் அவை.

இதே போல 2004 ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி ஆட்சியிலே தயாநிதி தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது அப்போது தமிழில் சேனல் தொடங்க விண்ணப்பித்து இருந்த 60 நிறுவனங்களுக்கு அனுமதி மறுத்தார். 2007 ஆண்டு மாறன் சகோதர்களுக்கும், மு.க அழகிரிக்குமான மோதலில் மதுரை தினகரன் அலுவலகம் பற்றி எரிந்தது. மாறன் சகோதரர்களுக்கும், கருணாநிதி குடும்பத்திற்கும் ஏற்பட்ட பகையில் தயாநிதி மத்திய அமைச்சர் பதவி இழந்தார்.

அப்போது தான் சுமங்கலி கேபிள் விஷனின் கொட்டத்தை ஒடுக்க அரசு கேபிளை தொடங்குகிறார் கலைஞர்.  நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரி அஞ்சா நெஞ்சரான உமாசங்கர் அதன் இயக்குனராகிறார். அவர் மிக கடுமையாக உழைத்து அரசு கேபிளை நிலை நிறுத்தும் போது, சுமங்கிலியின் அட்ராசிட்டிகளை அடக்குகிறார். இதனால் பயந்து போன மாறன் சகோதர்கள் கலைஞரோடு சமாதானமாகிறார்கள். அத்துடன் அரசு கேபிளை அம்போவென விட்டுவிடுகிறார். உமா சங்கர் ஐ.ஏ.எஸ் பழிவாங்கப்படுகிறார். குடும்பம் ஒன்று சேர்ந்தவுடன் பொது நன்மைக்கு உழைத்த அதிகாரி அவமானப்படுத்தப்படுகிறார்.

20250621_120058.jpg

இந்த சன் குழும சதிக் கூட்டத்தின் அதிகார ஆட்டத்தை அடி முதல் நுனி வரை விவரித்து நான் இரண்டு நூல்கள் எழுதியுள்ளேன். முதலாவது 2007 ஆம் ஆண்டு எழுதிய சன் குழுமச் சதிகளும், திமுகவின் திசை மாற்றமும். அடுத்து 2013 –ல் கொண்டு வந்த கேபிள் தொழிலும், அரசியல் சதிகளும். இவற்றை மிக விரைவில் கிண்டிலில் வெளியிட உள்ளேன்.

இன்றைக்கு என்ன நிலைமை?  இந்தியாவின் பல மொழிகளில் 30 க்கு மேற்பட்ட சேனல்களுக்கு அதிபர். எம்.எம் வானொலிகள், ஐ.பி.எல் கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணியின் உரிமையாளர், இன்னும் பல பிசினஸ்கள்..எல்லாவற்றிலும் தம்பியைத் தவிர்த்துவிட்டு தன்னை மட்டுமே முன்னிறுத்திக் கொண்டார். சுமங்கலி கேபிள் விஷனையும் அவரே எடுத்துக் கொண்டார். நிறுவனங்களின் 98 சதவிகித பங்குகளை கலாநிதியே வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

29693246474_be67fc9929_b.jpg

தம்பியை அரசியலில் நீ சம்பாதித்துக் கொள். தொழில் சம்பாத்தியம் அனைத்தும் எனக்கே என முடிவு செய்துவிட்டார் போலும். அரசியலில் இருக்கும் போது கூட அண்ணனுக்கு அடியாள் வேலை மட்டுமே பார்த்தவர் தான் தயாநிதி. பல உயர் நிறுவனங்களில் அண்ணனை பங்குதாராக்க நிர்பந்தம் கொடுத்தார். ரத்தன் டாட்டா அவர்கள் இந்த மிரட்டல் எல்லாம் என்னிடம் வேண்டாம் என மூஞ்சிக்கு நேராக சொல்லி அனுப்பிவிட்டார். இல்லாவிட்டால் டாட்டாவையே மொட்டை அடித்து தெருவில் நிற்க வைத்திருப்பார்கள். ஆட்சி மாற்றங்களும், காட்சி மாற்றங்களும் நடந்தன.

திமுக குடும்பத்தில் இன்றைக்கு மிகவும் சக்தி வாய்ந்தவராக சபரீசன் வந்துவிட்டார். கலாநிதி மாறனே கதிகலங்கி போய் அவரோடு கைகுலுக்கி தன்னை தற்காத்துக் கொண்டார். தயாநிதியோ அரசியலில் புதிதாக உள்ளே நுழைந்த சோட்டா பாயான உதயநிதிக்கு கீழ் படிந்து நடக்க வேண்டிய நிலையில் உள்ளார். அரசியலில் தனக்கான எதிர்காலம் குறித்து அவருக்கு அச்சம் இருக்கிறது. எல்லாமே அண்ணன் என இருந்துவிட்டதால் அண்ணன் பார்த்து செய்வார் என தனக்கான சேனல் என்பதாக தன் மகனைக் கொண்டு கரண் தொலைகாட்சி தொடங்க முயன்றார்.

தன்னைத் தவிர யாருமே வளர்வதை அறவே விரும்பாத இயல்பு  கொண்டவரான கலாநிதி தம்பியை வளரவிடுவாரா? நான்கைந்து வருட காத்திருப்புக்கு பிறகும் தயாநிதியால் தனக்கென ஒரு சேனலை சாத்தியப்படுத்த முடியவில்லை. தன் மகனுக்கு சன் குழுமத்தில் ஒரு முக்கிய பொறுப்பையும் பெற்றுத் தர முடியவில்லை. கலாநிதியின் மனைவியும் மகளுமே அங்கு ஆதிக்கம் செலுத்த முடிகிறது.

இந்தச் சூழலில் தான் 22 வருடங்களாக மனதில் பொத்தி வைத்த கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் தயாநிதி. ஆனால், பாட்டி தயாளு அம்மாள், அம்மா மல்லிகா மாறன் ஆகியோரையே நிராகரித்து தன்னை மட்டுமே மையப்படுத்திக் கொண்ட கலாநிதி, தன் இயல்புக்கு ஏற்ப தம்பியை நிராகரித்துள்ளார். ஸ்டாலின் பேசியும் கலாநிதி ஒத்து வரவில்லை. தம்பிக்கு ஒரு நியாயமான பங்கை தர இசைவு தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் தயாநிதியின் வக்கில் நோட்டீஸ் அண்ணன் கலாநிதியை கலவரப்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தையடுத்து சன் குழுமத்தில் அமலாக்கத் துறை, வருமானவரித்துறை உள்ளிட்ட பல அரசு அமைப்புகள் மூக்கை நுழைக்கும் சந்தர்ப்பம் கனிந்துள்ளது.

அட்டூழியக்காரர்கள் தங்கள் அழிவை தாங்களே வலிந்து உருவாக்கி கொண்டு அழிவர் என்பது நம் முன்னோர்கள் வாக்கு. அந்த வகையில் பற்பலரின் பேரழிவுக்கு காரணமான சன் குழுமத்தினரின் சங்கதியும் ஒரு முடிவுக்கு வருமா? அல்லது சமாதானமாகிக் கொண்டு ஒன்றிணைந்துவிடுவார்களா/ என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சாவித்திரி கண்ணன்

https://aramonline.in/21935/kalanidhi-vs-thadhayanidhi/

சதிகாரச் சக்கரவர்த்திகளின் சன் குழும சாம்ராஜ்யம்!

2 months 3 weeks ago
சதிகாரச் சக்கரவர்த்திகளின் சன் குழும சாம்ராஜ்யம்! -சாவித்திரி கண்ணன் ஆருயிராய் நினைத்த அண்ணன் தன்னையே வேரறுப்பான் என தயாநிதிமாறன் நினைக்கவில்லை. ஆனால், இந்த இரு சகோதரர்களும் தமிழகம் மட்டுமின்றி, இந்திய காட்சி ஊடகத்துறையில் கருவறுத்தவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. அந்த சாம்ராஜ்யத்தின் அடித்தளத்தில் புதைந்திருக்கும் எலும்புக் கூடுகளும் எண்ணற்றவை; எத்தனையெத்தனையோ நிறுவனங்கள், கலைஞர்கள், தொழில் முகவர்கள், ஊழியர்கள், அரசு அதிகாரிகளின் பேரழிவிலே கட்டி எழுப்பப்பட்ட சாம்ராஜ்யம் தான் சன் குழுமம்! அரசியல் அதிகார பலத்துடன் ஒரு ஆக்டோபஸ் மிருகத்தைப் போல, அடங்காப் பசியுடன் போட்டியாளர்களை அழித்தொழித்து விழுங்கி ஏப்பம் விட்ட நிறுவனம் தான் சன் குழுமம். அண்ணனும், தம்பியும் கைக் கோர்த்து ஆடிய அதிகார ஆட்டங்களை பல வால்யூம்களாக எழுதலாம். இன்று அவர்களுக்குள்ளேயே மோதல் ஏற்பட்டுள்ளது. அண்ணனை தொழில் சாம்ராஜ்ய சக்கரவர்த்தியாக்க தம்பி செய்த தகிடுதத்தங்கள் ஏராளம். அதே போல தம்பியை அரசியலில் முன்னினைபடுத்த அண்ணன் செய்த ஊடக நரித்தங்கள் சொல்லில் அடங்காதவை. இதுவே கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரகள் குடும்பமும் பிரியக் காரணமானது. ஆனால், விரைவில் ஒன்று பட்டனர். இந்த காலகட்டத்தில் நான் எழுதிய நூல் தான் சன் குழுமச் சதிகளும், திமுகவின் திசை மாற்றமும். இவர்கள் துளிர்விட ஆரம்பித்த காலம் தொடங்கி தொடர்ந்து அணுக்கமாக அவதானித்து வருகிறேன் நான்! 1989 ஆம் ஆண்டு வாக்கில் குங்குமம் வார இதழில் நான் ஒரு சுயாதீனப் பத்திரிகையாளனாக கட்டுரைகள், புகைப்படங்கள் தந்து கொண்டிருந்த காலகட்டத்தில் கலாநிதியும், தயாநிதியும் பூமாலை என்ற வீடியோ கேசட் கொண்டு வந்தனர். அதில் குங்குமம், வண்ணத்திரை, முத்தாரம் போன்றவற்றில் வேலை பார்த்த பத்திரிக்கையாளர்களையே ஊதியம் தராமல் பயன்படுத்திக் கொண்டனர். 1990-ல் கலைஞர் ஆட்சிக்கு வந்த போது வீடியோ கேசட் கடைகளை மிரட்டி விற்பனை செய்ய வைத்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன. 1989-ல் வி.பி.சிங் அமைச்சரவையில் முரசொலிமாறன் நகர்புற அமைச்சராகப் பதவி பெற்ற வாய்ப்பில் ஏற்பட்ட தொழில் அதிபர்கள் தொடர்புகளால் தன்னை வளப்படுத்திக் கொண்டார். 1992- அக்டோபரில் இந்தியாவின் முதன்முதல் சேட்டிலைட் சேனலாக ZEE தொலைகாட்சி வந்தது. உடனே தன் மகன்களுக்கு காட்சி ஊடகத்தில் இருக்கும் ஆர்வத்தை அறிந்திருந்த மாறன் ஏப்ரல் 14 1993-ல் சன் குழுமத்தை ஆரம்பித்தார். திமுக கழகத்தின் நிதியைத் தந்து, அதுவும் போதவில்லை என மந்தைவெளி சிட்டி யூனியன் வங்கியில் கட்சி சொத்தை அடமானம் வைத்து வாங்கப்பட்ட நிதியில் ஆரம்பிக்கப்பட்டது தான் சன் தொலைக்காட்சி. அவர் தான் சேர்மன் தயாளு அம்மாள், மல்லிகா மாறன் இருவரும் பெயருக்கு இயக்குனர்கள். கலாநிதி, தயாநிதி, ஸ்டாலின் மூவரும் பங்குதாரர்கள். இது தான் தொடக்கம். ஆனால், இன்றைக்கு சுமார் 98 சதவிகித பங்குகளை தன் வசம் வைத்திருக்கிறார் கலாநிதி எனச் சொல்லப்படுகிறது. இதன் மதிப்பு லட்சம் கோடிக்கும் அதிகமாகும். முரசொலி அலுவலகத்தையே முதலில் பயன்படுத்தியதும், பிறகு அறிவாலயத்திற்கு எதிர் வாடையில் உள்ள சென்சூரி பிளாசாவில் 2000 சதுர அடிக்கு வாடகையில் இருந்து அதையும் தரமுடியாமல் அறிவாலயத்திற்கே வந்ததும், ஒவ்வொரு நிகழ்ச்சி தயாரிப்பாளர்களிடமும் ரூபாய் ஐயாயிரம் என்றாலும், பத்தாயிரம் என்றாலும் தொடர்ந்து பல முறை தானே போனில் நச்சரித்து பேசி வாங்கிய கலாநிதியின் பொருளாதார நெருக்கடிகளும் அவருக்கு மறந்து போயிருக்கலாம். 2000 ஆம் ஆண்டு சுமங்கலி கேபிள் விஷனை தயாநிதி மாறன் தான் தொடங்கினார். அப்போது தமிழகம் முழுமையும் 30,000 கேபிள் ஆப்ரேட்டர்கள் இருந்தனர். இவர்களில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் லோக்கல் சேனல் நடத்தி வந்தனர். சுமார் 200 பேராவது எம்.எஸ்.ஓ நடத்திக் கொண்டிருந்தனர். இதில் பலர் தொழிலைவிட்டே விரட்டி அடிக்கப்பட்டனர். சிலர் நடுத்தெருவிற்கு வந்தனர்,. ஒரு சிலர் தற்கொலை செய்து கொண்டனர். அங்குமிங்கும் சில கொலைச் சம்பவங்களும் அரங்கேறின. சரண்டரானவர்கள் மட்டுமே தப்பித்தனர். மத்தியி பாஜகவுடன் கூட்டணி ஆட்சி, மாநிலத்தில் கலைஞர் ஆட்சி, மாநகராட்சியில் ஸ்டாலின் மேயர். கருணாநிதி குடும்ப அதிகாரம் கோலோச்சிய காலம் அது. சென்னையில் சிட்டி கேபிள், ஹாத்வே, ஏ.எம்.என் போன்றவர்கள் கேபிள் நெட்வொர்க்கில் இருந்தனர். இவர்கள் கேபிள் வயர்களை இரவோடு இரவாக மாநகராட்சி ஊழியர்களைக் கொண்டு அறுத்து எறிந்தவர் தயாநிதி. அவரே களத்தில் இறங்கி ஒரு பேட்டை ரவுடி போல செயல்பட்ட காலகட்டங்கள் அவை. இதே போல 2004 ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி ஆட்சியிலே தயாநிதி தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது அப்போது தமிழில் சேனல் தொடங்க விண்ணப்பித்து இருந்த 60 நிறுவனங்களுக்கு அனுமதி மறுத்தார். 2007 ஆண்டு மாறன் சகோதர்களுக்கும், மு.க அழகிரிக்குமான மோதலில் மதுரை தினகரன் அலுவலகம் பற்றி எரிந்தது. மாறன் சகோதரர்களுக்கும், கருணாநிதி குடும்பத்திற்கும் ஏற்பட்ட பகையில் தயாநிதி மத்திய அமைச்சர் பதவி இழந்தார். அப்போது தான் சுமங்கலி கேபிள் விஷனின் கொட்டத்தை ஒடுக்க அரசு கேபிளை தொடங்குகிறார் கலைஞர். நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரி அஞ்சா நெஞ்சரான உமாசங்கர் அதன் இயக்குனராகிறார். அவர் மிக கடுமையாக உழைத்து அரசு கேபிளை நிலை நிறுத்தும் போது, சுமங்கிலியின் அட்ராசிட்டிகளை அடக்குகிறார். இதனால் பயந்து போன மாறன் சகோதர்கள் கலைஞரோடு சமாதானமாகிறார்கள். அத்துடன் அரசு கேபிளை அம்போவென விட்டுவிடுகிறார். உமா சங்கர் ஐ.ஏ.எஸ் பழிவாங்கப்படுகிறார். குடும்பம் ஒன்று சேர்ந்தவுடன் பொது நன்மைக்கு உழைத்த அதிகாரி அவமானப்படுத்தப்படுகிறார். இந்த சன் குழும சதிக் கூட்டத்தின் அதிகார ஆட்டத்தை அடி முதல் நுனி வரை விவரித்து நான் இரண்டு நூல்கள் எழுதியுள்ளேன். முதலாவது 2007 ஆம் ஆண்டு எழுதிய சன் குழுமச் சதிகளும், திமுகவின் திசை மாற்றமும். அடுத்து 2013 –ல் கொண்டு வந்த கேபிள் தொழிலும், அரசியல் சதிகளும். இவற்றை மிக விரைவில் கிண்டிலில் வெளியிட உள்ளேன். இன்றைக்கு என்ன நிலைமை? இந்தியாவின் பல மொழிகளில் 30 க்கு மேற்பட்ட சேனல்களுக்கு அதிபர். எம்.எம் வானொலிகள், ஐ.பி.எல் கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணியின் உரிமையாளர், இன்னும் பல பிசினஸ்கள்..எல்லாவற்றிலும் தம்பியைத் தவிர்த்துவிட்டு தன்னை மட்டுமே முன்னிறுத்திக் கொண்டார். சுமங்கலி கேபிள் விஷனையும் அவரே எடுத்துக் கொண்டார். நிறுவனங்களின் 98 சதவிகித பங்குகளை கலாநிதியே வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. தம்பியை அரசியலில் நீ சம்பாதித்துக் கொள். தொழில் சம்பாத்தியம் அனைத்தும் எனக்கே என முடிவு செய்துவிட்டார் போலும். அரசியலில் இருக்கும் போது கூட அண்ணனுக்கு அடியாள் வேலை மட்டுமே பார்த்தவர் தான் தயாநிதி. பல உயர் நிறுவனங்களில் அண்ணனை பங்குதாராக்க நிர்பந்தம் கொடுத்தார். ரத்தன் டாட்டா அவர்கள் இந்த மிரட்டல் எல்லாம் என்னிடம் வேண்டாம் என மூஞ்சிக்கு நேராக சொல்லி அனுப்பிவிட்டார். இல்லாவிட்டால் டாட்டாவையே மொட்டை அடித்து தெருவில் நிற்க வைத்திருப்பார்கள். ஆட்சி மாற்றங்களும், காட்சி மாற்றங்களும் நடந்தன. திமுக குடும்பத்தில் இன்றைக்கு மிகவும் சக்தி வாய்ந்தவராக சபரீசன் வந்துவிட்டார். கலாநிதி மாறனே கதிகலங்கி போய் அவரோடு கைகுலுக்கி தன்னை தற்காத்துக் கொண்டார். தயாநிதியோ அரசியலில் புதிதாக உள்ளே நுழைந்த சோட்டா பாயான உதயநிதிக்கு கீழ் படிந்து நடக்க வேண்டிய நிலையில் உள்ளார். அரசியலில் தனக்கான எதிர்காலம் குறித்து அவருக்கு அச்சம் இருக்கிறது. எல்லாமே அண்ணன் என இருந்துவிட்டதால் அண்ணன் பார்த்து செய்வார் என தனக்கான சேனல் என்பதாக தன் மகனைக் கொண்டு கரண் தொலைகாட்சி தொடங்க முயன்றார். தன்னைத் தவிர யாருமே வளர்வதை அறவே விரும்பாத இயல்பு கொண்டவரான கலாநிதி தம்பியை வளரவிடுவாரா? நான்கைந்து வருட காத்திருப்புக்கு பிறகும் தயாநிதியால் தனக்கென ஒரு சேனலை சாத்தியப்படுத்த முடியவில்லை. தன் மகனுக்கு சன் குழுமத்தில் ஒரு முக்கிய பொறுப்பையும் பெற்றுத் தர முடியவில்லை. கலாநிதியின் மனைவியும் மகளுமே அங்கு ஆதிக்கம் செலுத்த முடிகிறது. இந்தச் சூழலில் தான் 22 வருடங்களாக மனதில் பொத்தி வைத்த கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் தயாநிதி. ஆனால், பாட்டி தயாளு அம்மாள், அம்மா மல்லிகா மாறன் ஆகியோரையே நிராகரித்து தன்னை மட்டுமே மையப்படுத்திக் கொண்ட கலாநிதி, தன் இயல்புக்கு ஏற்ப தம்பியை நிராகரித்துள்ளார். ஸ்டாலின் பேசியும் கலாநிதி ஒத்து வரவில்லை. தம்பிக்கு ஒரு நியாயமான பங்கை தர இசைவு தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் தயாநிதியின் வக்கில் நோட்டீஸ் அண்ணன் கலாநிதியை கலவரப்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தையடுத்து சன் குழுமத்தில் அமலாக்கத் துறை, வருமானவரித்துறை உள்ளிட்ட பல அரசு அமைப்புகள் மூக்கை நுழைக்கும் சந்தர்ப்பம் கனிந்துள்ளது. அட்டூழியக்காரர்கள் தங்கள் அழிவை தாங்களே வலிந்து உருவாக்கி கொண்டு அழிவர் என்பது நம் முன்னோர்கள் வாக்கு. அந்த வகையில் பற்பலரின் பேரழிவுக்கு காரணமான சன் குழுமத்தினரின் சங்கதியும் ஒரு முடிவுக்கு வருமா? அல்லது சமாதானமாகிக் கொண்டு ஒன்றிணைந்துவிடுவார்களா/ என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். சாவித்திரி கண்ணன் https://aramonline.in/21935/kalanidhi-vs-thadhayanidhi/

இரான் மீது அமெரிக்கா தாக்குதல்

2 months 3 weeks ago
செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்க தாக்குதலிற்கு முன்னர் ஈரான் அகற்றிவிட்டது - ரொய்ட்டர் 22 JUN, 2025 | 01:59 PM அமெரிக்காவின் தாக்குதலிற்கு முன்னர் ஈரான் தனது போர்டோ அணுஉலையிலிருந்து மிகவும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அகற்றிவிட்டது என ஈரானிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் இரகசிய இடமொன்றிற்கு மாற்றிவிட்டது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். போர்டோ அணுஉலையில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். நேற்று எடுக்கப்பட்ட செய்மதி படங்கள் போர்டோ அணுஉலைக்கு அருகில் நீண்டவரிசையில் டிரக்குகள் காணப்படுவதை காண்பித்துள்ளன. https://www.virakesari.lk/article/218135

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த தமிழரசு கட்சி உறுப்பினர் நீக்கம்

2 months 3 weeks ago
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த தமிழரசு கட்சி உறுப்பினர் நீக்கம் சேருவில பிரதேச சபையின் தவிசாளர் தெரிவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முடிவுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினருக்கு வாக்களித்த, உறுப்பினரை கட்சியின் தலைமைப் பீடம் இடை நிறுத்தியுள்ளதாக கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரகசிய வாக்கெடுப்பில் கலந்து கொண்டு தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினருக்கு வாக்களித்த தங்கநகர் வட்டார உறுப்பினர் கந்தசாமி சுதேஸ்குமார் என்பவரையே, கட்சியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்தும், பிரதேச உறுப்பினர் பதவியில் இருந்தும் கட்சியின் தலைமைப் பீடம் இடை நிறுத்தியுள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கட்சி அறிவித்துள்ளது https://akkinikkunchu.com/?p=329829

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த தமிழரசு கட்சி உறுப்பினர் நீக்கம்

2 months 3 weeks ago

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த தமிழரசு கட்சி உறுப்பினர் நீக்கம்

tna-jvp.jpg

சேருவில பிரதேச சபையின் தவிசாளர் தெரிவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முடிவுக்கு எதிராக  தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினருக்கு வாக்களித்த, உறுப்பினரை  கட்சியின் தலைமைப் பீடம் இடை நிறுத்தியுள்ளதாக கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

17505767370.png

இரகசிய வாக்கெடுப்பில் கலந்து கொண்டு தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினருக்கு வாக்களித்த தங்கநகர் வட்டார உறுப்பினர் கந்தசாமி சுதேஸ்குமார் என்பவரையே, கட்சியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்தும், பிரதேச உறுப்பினர் பதவியில் இருந்தும் கட்சியின் தலைமைப் பீடம் இடை நிறுத்தியுள்ளது.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கட்சி அறிவித்துள்ளது

17505767371.png

https://akkinikkunchu.com/?p=329829

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 3 weeks ago
ஈரான் இந்த தீவிர மதவாத ஆட்சியில் இருந்து விடுதலை பெற ஒரு நல்ல சந்தர்ப்பம் அந்த மக்களுக்கு வந்துள்ளது, மன்னராட்சி தற்போதுள்ள ஆட்சியினை போல மிக மோசமாக இருக்காது என நம்புகிறேன், கெட்டதிலும் ஒரு நல்லது நடைபெறுகிரது.

வாகரை பிரதேச சபையை பிள்ளையான் கட்சி கைப்பற்ற உதவிய கறுப்பு ஆடு யார்?

2 months 3 weeks ago
வாகரை பிரதேச சபையை பிள்ளையான் கட்சி கைப்பற்ற உதவிய கறுப்பு ஆடு யார்? மட்டக்களப்பு, கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை தவிசாளராக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் தெரிவு செய்யப் பட்டு ஆட்சியை கைப்பற்றியதுடன் அதற்கு தேவையான ஒரு வாக்கை தமிழரசு கட்சி உறுப்பினரா? அல்லது சிறிலங்கா முஸ்லீம் காங்கரஸ் கட்சி உறுப்பினரா ? ஆதரவு வழங்கிய கறுப்பு ஆடு ? என அரசியல் கட்சிகளுக்குள்ளே கறுப்பாடு தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டுள்ளது. வாகரை பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர்களை தெரிவு செய்யும் அமர்வு வெள்ளிக்கிழமை (20) பிரதேச சபை மண்டபத்தில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்றது. இதன்போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இலங்கை தமிழரசு கட்சியைச் சேர்ந்த பல்கோஸ் மோகனராசா மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர். இதனையடுத்து தவிசாளர் தெரிவு செய்ய உள்ளூராட்சி ஆணையாளர் கோரியபோது திறந்த வாக்கெடுப்பு நடத்துவதற்கு தமிழரசு கட்சி 6 உறுப்பினர்களும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் 2 பேர் உட்பட 8 உறுப்பினர்கள் திறந்த வாக்கெடுப்புக்கு வாக்களித்ததுடன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 7 உறுப்பினர்களும் தேசிய மக்கள் கட்சி 3 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சத்தி ஒரு உறுப்பினர் உட்பட 11 உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்புக்கு வாக்களித்தனர். இதனை தொடர்ந்து தவிசாளரை தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது இதில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் 12 வாக்குகளை பெற்றதுடக் இலங்கை தமிழரசு கட்சி பல்கோஸ் மோகனராசா 7 வாக்குகளை பெற்றதையடுத்து கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். இதனையடுத்து பிரதித் தவிசாளருக்கு தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சண்முகநாதன் ரசிகரன் ஐக்கிய மக்கள் சத்திய சேர்ந்த கட்சியைச் சேர்ந்த மொஹமட் புகாரி மொஹமெட் ஹைதர் போட்டியிட்டனர் இதில் சன்முகநாதன் ரசிகரனுக்கு 10 வாக்குகளும். மொஹமெட் ஹைதருக்கு ஆதரவாக 8 வாக்குகளும் கிடைத்ததுடன் ஒரு உறுப்பினர் வாக்களிப்பதை நிராகரித்த நிலையில் தமிழரசு கட்சி சண்முகநாதன் ரசிகரன் பிரதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். இந்த நிலையில் தவிசாளராக போட்டியிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினருக்கு 7 பேருடன் தேசிய மக்கள் கட்சி 3 உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சத்தி உறுப்பினர் ஒருவர் உட்பட 11 பேர் ஆதரவு வழங்கியுள்ள நிலையில் அவர் 12 வாக்குகளை பெற்றுள்ளார். எனவே மேலதிகமாக அந்த ஒரு வாக்கை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஆதரவாக தமிழரசு கட்சி உறுப்பினரா? அல்லது சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி உறுப்பினரா? வாக்களித்தார். இதனால் யார் அந்த கறுப்பு ஆடு, எந்த கட்சி உறுப்பினர் ? என்பது அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் குழப்பகரமாக உள்ளது. https://akkinikkunchu.com/?p=329808

வாகரை பிரதேச சபையை பிள்ளையான் கட்சி கைப்பற்ற உதவிய கறுப்பு ஆடு யார்?

2 months 3 weeks ago

வாகரை பிரதேச சபையை பிள்ளையான் கட்சி கைப்பற்ற உதவிய கறுப்பு ஆடு யார்?

pillayan-2.jpg

மட்டக்களப்பு, கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை தவிசாளராக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் தெரிவு செய்யப் பட்டு ஆட்சியை கைப்பற்றியதுடன் அதற்கு தேவையான ஒரு வாக்கை தமிழரசு கட்சி உறுப்பினரா? அல்லது சிறிலங்கா முஸ்லீம் காங்கரஸ் கட்சி உறுப்பினரா ? ஆதரவு வழங்கிய கறுப்பு ஆடு ? என அரசியல் கட்சிகளுக்குள்ளே கறுப்பாடு தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

வாகரை பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர்களை தெரிவு செய்யும் அமர்வு வெள்ளிக்கிழமை (20) பிரதேச சபை மண்டபத்தில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இலங்கை தமிழரசு கட்சியைச் சேர்ந்த பல்கோஸ் மோகனராசா மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர்.

இதனையடுத்து தவிசாளர் தெரிவு செய்ய உள்ளூராட்சி ஆணையாளர் கோரியபோது திறந்த வாக்கெடுப்பு நடத்துவதற்கு தமிழரசு கட்சி 6 உறுப்பினர்களும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் 2 பேர் உட்பட 8 உறுப்பினர்கள் திறந்த வாக்கெடுப்புக்கு வாக்களித்ததுடன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 7 உறுப்பினர்களும் தேசிய மக்கள் கட்சி 3 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சத்தி ஒரு உறுப்பினர் உட்பட 11 உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்புக்கு வாக்களித்தனர்.

இதனை தொடர்ந்து தவிசாளரை தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது இதில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் 12 வாக்குகளை பெற்றதுடக் இலங்கை தமிழரசு கட்சி பல்கோஸ் மோகனராசா 7 வாக்குகளை பெற்றதையடுத்து கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

இதனையடுத்து பிரதித் தவிசாளருக்கு தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சண்முகநாதன் ரசிகரன் ஐக்கிய மக்கள் சத்திய சேர்ந்த கட்சியைச் சேர்ந்த மொஹமட் புகாரி மொஹமெட் ஹைதர் போட்டியிட்டனர் இதில் சன்முகநாதன் ரசிகரனுக்கு 10 வாக்குகளும். மொஹமெட் ஹைதருக்கு ஆதரவாக 8 வாக்குகளும் கிடைத்ததுடன் ஒரு உறுப்பினர் வாக்களிப்பதை நிராகரித்த நிலையில் தமிழரசு கட்சி சண்முகநாதன் ரசிகரன் பிரதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தவிசாளராக போட்டியிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினருக்கு 7 பேருடன் தேசிய மக்கள் கட்சி 3 உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சத்தி உறுப்பினர் ஒருவர் உட்பட 11 பேர் ஆதரவு வழங்கியுள்ள நிலையில் அவர் 12 வாக்குகளை பெற்றுள்ளார். எனவே மேலதிகமாக அந்த ஒரு வாக்கை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஆதரவாக தமிழரசு கட்சி உறுப்பினரா? அல்லது சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி உறுப்பினரா? வாக்களித்தார். இதனால் யார் அந்த கறுப்பு ஆடு, எந்த கட்சி உறுப்பினர் ? என்பது அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் குழப்பகரமாக உள்ளது.

https://akkinikkunchu.com/?p=329808

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 3 weeks ago
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் ; மத்திய கிழக்கு வான்வெளியைத் தொடர்ந்து தவிர்க்கும் விமான நிறுவனங்கள் Published By: DIGITAL DESK 3 22 JUN, 2025 | 03:13 PM ஈரானின் அணுசக்தித் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை அடுத்து விமான நிறுவனங்கள், மத்திய கிழக்கில் உள்ள பெரும்பகுதிகளைத் தவிர்க்க முற்படுகின்றன. அங்கு நடக்கும் இருபக்க ஏவுகணை தாக்குதல்களால் விமானச் சேவை நிறுவனங்கள் மத்திய கிழக்கின் பெரும்பகுதி வான்வெளியைத் தவிர்க்க முற்படுகின்றன. ஈரானின் அணுசக்தித் தளங்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து கடந்த வாரம் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு இணங்க அந்த வட்டாரத்திலுள்ள விமானச் சேவை நிறுவனங்கள் வான்வெளியைத் தவிர்த்து வருகின்றன என்று ‘ஃப்ளைட்ரேடார்24’ விமானப் போக்குவரத்துக் கண்காணிப்புத் தளம் தெரிவித்துள்ளது. ஈரான், ஈராக், சிரியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் வான்வெளியில் விமானப் போக்குவரத்து இல்லை என ‘ஃப்ளைட்ரேடார்24’ தளம் காண்பிக்கிறது. கேஸ்பியன் கடல் வழியே வடக்குமுகமாக அல்லது எகிப்து, சவூதி அரேபியா வழியே தெற்குமுகமாக விமானங்கள் செல்கின்றன. இதனால் பயண நேரம் கூடுதலாக நீள்வதுடன் எரிபொருள், பணியாளர் செலவும் அதிகரிக்கின்றன. பதற்றமிக்க வட்டாரங்களில் ஏவுகணைகளை, ஆளில்லா வானுர்தி ஆகியவற்றால் விமானப் போக்குவரத்திற்கு அபாயம் ஏற்படும் நிலை உள்ளது. ஜூன் 13ஆம் திகதி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அடுத்து பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விமான நிறுவனங்கள் தனது சேவைகளை நிறுத்தியுள்ளது. இருந்தபோதும் பக்கத்து நாடுகளிலிருந்து அவர்களது குடிமக்களை வெளியேற்றும் சேவைகள் இயங்கி வருகின்றன. வேறு சில சேவைகள், ஈரானில் சிக்கியுள்ள இஸ்ரேலியர்களை அவர்களது நாடுகளுக்குக் கொண்டுவரவுள்ளன. https://www.virakesari.lk/article/218142

பிரேசிலில் வெப்பக்காற்று பலூன் தீப்பற்றி விபத்து; 8 பேர் பலி

2 months 3 weeks ago
Published By: DIGITAL DESK 3 22 JUN, 2025 | 09:48 AM பிரேசிலின் சாண்டா கேடரினா மாநிலத்தில் பிரியா கிராண்டே நகரில் சனிக்கிழமை (21) காலை வெப்பக்காற்று பலூன் ஒன்று தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் அதில் வெப்பக்காற்று பலூனில் பயணம் செய்த 21 பேரில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதோடு, 13 பேர் காயமடைந்துள்ளனர். சாண்டா கேடரினா மாநில தீயணைப்புத் துறையின் தகவல்படி , சுற்றுலாவிற்குப் பயன்படுத்தப்பட்ட பலூன், காலை விமானப் பயணத்தின் போது திடீரென தீப்பிடித்தது. தீ விபத்துக்குப் பின்னர், பலூன் பிரியா கிராண்டே நகரில் தரையில் விழுந்தது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் உள்ளூர் மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்த 13 பேர் உடனடியாக சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சுற்றுலாப் பயணிகளிடையே வெப்பக்காற்று பலூன்களின் பாதுகாப்பு குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, சாவ் பாலோ மாநிலத்தில் வானத்திலிருந்து மற்றொரு பலூன் விழுந்ததில் 27 வயது பெண்ணெருவர் உயிழந்ததோடு, 11 பேர் காயமடைந்ததாக உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. https://www.virakesari.lk/article/218104