Aggregator

மாவீரர் துயிலும் இல்லத்தை தாவரவியல் பூங்காவாக அடையாளப்படுத்த திட்டம்! - இலங்கை தமிழ் அரசு கட்சியை சாடுகிறார் தீபன்

2 months 2 weeks ago
மாவீரர் துயிலும் இல்லத்தை தாவரவியல் பூங்காவாக அடையாளப்படுத்த திட்டம்! - இலங்கை தமிழ் அரசு கட்சியை சாடுகிறார் தீபன் 09 Oct, 2025 | 02:07 PM புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு முன்பாக உள்ள தேவிபுர மாவீரர் துயிலும் இல்லத்தினை தாவரவியல் பூங்காவாக அடையாளப்படுத்துவதற்கு எதிராக இன்று (9) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் கரிகாலன், மாவீரர் துயிலும் இல்லத்தை தாவரவியல் பூங்காவாக அடையாளப்படுத்துவது தொடர்பான தீர்மானத்தை மாற்றிக்கொள்வதாக தெரிவித்ததையடுத்து, ஆர்ப்பாட்டம் நடத்துவதாக எடுத்த முடிவு கைவிடப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடத்தப்படவிருந்த இடத்துக்குச் சென்ற போராளிகள் மாவீரர் குடும்ப நல காப்பகத்தின் தலைவர் தீபன் ஊடகங்களுக்கு இது தொடர்பாக தெரிவிக்கையில், மாவீரர்களின் துயிலும் இல்லங்களை தமது கட்சியின் ஆதிக்கத்தை பயன்படுத்தி இலங்கை தமிழ் அரசு கட்சியினர் நிர்வாகத்தினை தெரிவு செய்து வருகின்றனர். அந்த நிர்வாகத்தில் தமது கட்சியின் முக்கியஸ்தர்களை நியமிக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக இந்த தேவிபுர துயிலும் இல்லத்தினையும் தாவரவியல் பூங்கா எனும் கட்டமைப்புக்கு கொண்டுவர எண்ணுகின்றனர். அதற்கு ஒருபோதும் நாங்கள் சம்மதிக்கப் போவதில்லை. இதேபோல போலியான செயற்பாடுகளை இனிமேல் முன்னெடுத்ததால் நாங்கள் வீதிக்கிறங்கி, தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/227315

மாவீரர் துயிலும் இல்லத்தை தாவரவியல் பூங்காவாக அடையாளப்படுத்த திட்டம்! - இலங்கை தமிழ் அரசு கட்சியை சாடுகிறார் தீபன்

2 months 2 weeks ago

மாவீரர் துயிலும் இல்லத்தை தாவரவியல் பூங்காவாக அடையாளப்படுத்த திட்டம்! - இலங்கை தமிழ் அரசு கட்சியை சாடுகிறார் தீபன்

09 Oct, 2025 | 02:07 PM

image

புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு முன்பாக உள்ள தேவிபுர மாவீரர் துயிலும் இல்லத்தினை தாவரவியல் பூங்காவாக அடையாளப்படுத்துவதற்கு எதிராக இன்று (9) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் கரிகாலன், மாவீரர் துயிலும் இல்லத்தை தாவரவியல் பூங்காவாக அடையாளப்படுத்துவது தொடர்பான தீர்மானத்தை மாற்றிக்கொள்வதாக தெரிவித்ததையடுத்து, ஆர்ப்பாட்டம் நடத்துவதாக எடுத்த முடிவு கைவிடப்பட்டது. 

ஆர்ப்பாட்டம் நடத்தப்படவிருந்த இடத்துக்குச் சென்ற போராளிகள் மாவீரர் குடும்ப நல காப்பகத்தின் தலைவர் தீபன் ஊடகங்களுக்கு இது தொடர்பாக தெரிவிக்கையில்,

மாவீரர்களின் துயிலும் இல்லங்களை தமது கட்சியின் ஆதிக்கத்தை பயன்படுத்தி இலங்கை தமிழ் அரசு கட்சியினர் நிர்வாகத்தினை தெரிவு செய்து வருகின்றனர். அந்த நிர்வாகத்தில் தமது கட்சியின் முக்கியஸ்தர்களை நியமிக்கின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இந்த தேவிபுர துயிலும் இல்லத்தினையும் தாவரவியல் பூங்கா எனும் கட்டமைப்புக்கு கொண்டுவர எண்ணுகின்றனர். அதற்கு ஒருபோதும் நாங்கள் சம்மதிக்கப் போவதில்லை.

இதேபோல போலியான செயற்பாடுகளை இனிமேல் முன்னெடுத்ததால் நாங்கள் வீதிக்கிறங்கி, தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

https://www.virakesari.lk/article/227315

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

2 months 2 weeks ago
வணக்கம் வாத்தியார் . .........! பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் சுஜாதா மோகன் இசை அமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே மழையூரின் சாரலிலே என்னை மார்போடு சேர்த்தவளே ஆண் : உனை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்ப்பேன் உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன் பெண் : நீ உடுத்தி போட்ட உடை என் வயதை மேயுமடா ஆண் : நீ சுருட்டி போட்ட முடி மோதிரமாய் ஆகுமடி பெண் : இமையாலே நீ கிருக்க இதழாலே நான் அழிக்க கூச்சம் இங்கே கூச்சப்பட்டு போகிறதே ஆண் : சடையாலே நீ இழுக்க இடைமேலே நான் வழுக்க காய்ச்சலுக்கும் காய்ச்சல் வந்து வேகிறதே பெண் : என்னை திரியாக்கி உன்னில் விளக்கேற்றி எந்நாளும் காத்திருப்பேன் ஆண் : நீ முறிக்கும் சோம்பலிலே நான் ஒடிஞ்சு சாஞ்சிடுவேன் பெண் : நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே நான் இறங்கி தூங்கிடுவேன் ஆண் : குறிலாக நான் இருக்க நெடிலாக நீ வளர்க்க சென்னை தமிழ் சங்கத்தமிழ் ஆனதடி பெண் : அறியாமல் நான் இருக்க அழகாக நீ திறக்க காதல் மழை ஆயுள் வரை தூருமடா ஆண் : என்னை மறந்தாலும் உன்னை மறவாத நெஞ்சோடு நானிருப்பேன் பெண் : ஹோய் ஹோய் ஹோய் அன்பூரில் பூத்தவனே ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் என்னை அடியோடு சாய்த்தவளே பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் மழையூரின் சாரலிலே ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் என்னை மார்போடு சேர்த்தவளே பெண் : உனை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்ப்பேன் ஆண் : உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன் .......! --- அழகூரில் பூத்தவளே ---

தமிழகத்தை உலுக்கிய சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு - தஷ்வந்த் விடுவித்த உச்ச நீதிமன்றம்

2 months 2 weeks ago
இந்திய நீதி துறையின் இலட்சணம் - சந்தி சிரிக்கிறது. இரெட்டை கொலை. ஒருவர் அருகில் உள்ள குழந்தை, மற்றது தாய். வழக்காடிய நீதிமன்றம், உயர் நீதிமன்றம் அப்படி என்ன கண்மூடித்தனமாகவா இருந்திருப்பார்கள்? இவரை விடுதலை செய்த உச்ச நீதிமன்றம் மீள் விசாரணைக்கு கூட ஆணையிட்டதாக தெரியவில்லை. பாலியல் வன்கொடுமை புகாரை விசாரிக்காமல் தடுத்து, குற்றம் சுமத்தபட்டவரும், சுமத்தியவரும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆணையிட்ட “சாத்தப்பன் பஞ்சாயத்து” தானே இந்திய உச்ச நீதிமன்றம். கோமிய குடுக்கிகள் நீதிபதியானால், மைனர் குஞ்சுகளுக்கு கொண்டாட்டம்தான். அண்மையில் ஒரு சங்கி வக்கீல் தலைமை நீதிபதி மீது சப்பாத்தை வீசி தாக்கியுள்ளார். அந்தளவுக்கு சங்கிகளின் காலில் கிடக்கிறது இந்திய நீதித்துறை.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months 2 weeks ago
இண்டைக்கு இந்தியா தென் ஆபிரிக்காவுக்கு அடிக்கிற‌ அடியில் ர‌சோத‌ர‌ன் அண்ண‌க்கு இந்தியாவை கேலி செய்யும் என்ன‌ம் வாழ் நாளில் வ‌ர‌வே கூடாது லொள்..................

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!

2 months 2 weeks ago
தம்பி newbalance நான் இவ்வளவுநாள் இணைத்த பாடல்களை இந்த ஒரு பாடல் சுனாமிபோல் வந்து அடித்துக் கொண்டு போய் விட்டது ........நன்றி தம்பி . .....! காரணம் வல்லினமாய் வில்லனாகவே பார்த்த m .r . ராதா இந்த இடத்தில் மெல்லினமாய் மாறி அருமையாய் நடித்திருப்பார் . ...... சொல்லி வேல இல்ல .......! இதை சுசிலாவின் குரலில் அஞ்சலிதேவி அருமையாய் நடித்திருப்பார் .....படகாட்சிகளுடன் அருமையாய் இருக்கும் . .....! இந்தப்பாடலில் பெண் பாடுவதை நானும் இணைக்கிறேன் .....அதைவிட நீங்கள் இணைத்ததுதான் மாஸ்ட்டர்பீஸ் .....! கவி அருணாசலமும் நன்றாக ரசிப்பார் என்று நினைக்கிறேன் .......!

வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை!

2 months 2 weeks ago
முன்பு அசைவ கடைகள் தவிர்ந்த ஏனைய சாப்பாடுகடைகளில் வாழை இலை , வாழைத்தட்டு , தாமரை இலை போன்றவைதான் கடைகளில் இருந்தன ........! நான் அடிக்கடி வாகன உதிரிபாகங்கள் எடுக்க கொழும்பு செல்வது வழமை ........ அப்போதெல்லாம் வாழையிலையில் குண்டு தோசையை தேங்காய் சம்பலில் முக்கி வைத்து கட்டிக்கொண்டு செல்வதுண்டு ........பிரயாணத்துக்கு இது ஒரு நல்ல உணவு . ...... ஓரிரு மணித்தியாலத்தின் பின் நன்றாக ஊறி இருக்கும் சாப்பிட அந்தமாதிரி இருக்கும் . ......அருகில் இருப்பவர்களுக்கும் குடுத்து சாப்பிடலாம் . ....... கை கழுவ என்று தண்ணி செலவழிக்க தேவை வராது ....... இங்கும் அநேகமாய் தூரப்பயணங்களுக்கு செய்து கொண்டு போவதுண்டு .........! 😇

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

2 months 2 weeks ago
இன்றும் தமிழகத்தின் எதிர்கட்சி தலைவர் மேடையில் ஒப்பனாக விஜைக்கு தூதுவிடுவதை காணலாம். விஜை மீது விமர்சனம் எனக்கும் உண்டு ஆனால் அவரின் அரசியல் செல்வாக்கு ஆனானப்பட்டதுதான். குறிப்பாக செல்லாகாசு சீமானுடன் ஒப்பிடும் போது.

வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை!

2 months 2 weeks ago
உங்கள் விளக்கத்திற்கு நன்றி. சாப்பட்டு கோப்பைக்கு மேல் ஒரு பொலிதீன் போட்டு தான் சாப்பிடுவார்களா என்ன கூத்து இது 🙄 நீங்கள் சொன்னது முழுக்க சரி. நான் சாப்பாட்டு கோப்பை பிளேட்டுக்கு தடை என்று நினைத்துவிட்டேன்.

காசா அமைதி திட்டம் ; மசகு எண்ணெய் விலைகள் வீழ்ச்சி

2 months 2 weeks ago
காசா அமைதி திட்டம் ; மசகு எண்ணெய் விலைகள் வீழ்ச்சி Published By: Digital Desk 3 09 Oct, 2025 | 10:44 AM காசா அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இணக்கம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, இன்று வியாழக்கிழமை (09) மசகு எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. பிரித்தானிய பிரெண்ட் சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 0.77 சதவீதத்தால் குறைந்து 65.74 அமெரிக்க டொலராக பதிவாகியது. அமெரிக்க மேற்கு டெக்சாஸ் சந்தையில் 0.88 சதவீதத்தால் குறைந்து 62 அமெரிக்க டொலராக பதிவாகியது. பாலஸ்தீனப் பகுதியில் இரண்டு வருடங்களாக நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் திட்டத்தின் கீழ், காசா அமைதி திட்டம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான நீண்டகால ஒப்பந்தத்துக்கு இஸ்ரேலும் ஹமாஸும் இணங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை அரசாங்கத்தை கூட்டி போர் நிறுத்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதாக தெரிவித்தார். காசாவில் நடந்த போரினால் மசகு எண்ணெய் விலைகள் அதிகரித்து காணப்பட்டன. ஏனெனில் போர் பரந்த பிராந்திய மோதலாக வளர்ந்தால் உலகளாவிய மசகு எண்ணெய் விநியோகத்திற்கு ஏற்படக்கூடிய ஆபத்தை முதலீட்டாளர்கள் எடைபோட்டனர். உக்ரேன் சமாதான ஒப்பந்தத்தில் முன்னேற்றம் தடைப்பட்டதால் ரஷ்யாவுக்கு எதிரான தடை நடவடிக்கைகள் தொடரும் என முதலீட்டாளர்கள் கருதியதால, புதன்கிழமை மசகு எண்ணெய் விலைகள் சுமார் 1 சதவீதம் அதிகரித்து. ஒரு வாரத்திற்குப் பின்னர் அதிகபட்ச நிலையை எட்டியது. கடந்த வாரம் மொத்த அமெரிக்க பெட்ரோலிய பொருட்கள் வழங்கல் — அமெரிக்க எண்ணெய் நுகர்வின் ஒரு அளவுகோல் — ஒரு நாளுக்கு 21.990 மில்லியன் பீப்பாய்களாக அதிகரித்தன. இது 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குப் பின்னர் பாரியளவில் அதிகரித்துள்ளதாக புதன்கிழமை எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் அறிக்கை சுட்டிகாட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/227282

காசா அமைதி திட்டம் ; மசகு எண்ணெய் விலைகள் வீழ்ச்சி

2 months 2 weeks ago

காசா அமைதி திட்டம் ; மசகு எண்ணெய் விலைகள் வீழ்ச்சி

Published By: Digital Desk 3

09 Oct, 2025 | 10:44 AM

image

காசா அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இணக்கம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, இன்று வியாழக்கிழமை (09) மசகு எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

பிரித்தானிய பிரெண்ட் சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 0.77 சதவீதத்தால் குறைந்து  65.74 அமெரிக்க டொலராக பதிவாகியது.

அமெரிக்க மேற்கு டெக்சாஸ் சந்தையில் 0.88 சதவீதத்தால் குறைந்து 62 அமெரிக்க டொலராக பதிவாகியது.

பாலஸ்தீனப் பகுதியில் இரண்டு வருடங்களாக நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் திட்டத்தின் கீழ், காசா அமைதி திட்டம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான நீண்டகால ஒப்பந்தத்துக்கு இஸ்ரேலும் ஹமாஸும் இணங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை அரசாங்கத்தை கூட்டி போர் நிறுத்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதாக தெரிவித்தார்.

காசாவில் நடந்த போரினால் மசகு எண்ணெய் விலைகள் அதிகரித்து காணப்பட்டன. ஏனெனில் போர் பரந்த பிராந்திய மோதலாக வளர்ந்தால் உலகளாவிய மசகு எண்ணெய் விநியோகத்திற்கு ஏற்படக்கூடிய ஆபத்தை முதலீட்டாளர்கள் எடைபோட்டனர்.

உக்ரேன் சமாதான ஒப்பந்தத்தில் முன்னேற்றம் தடைப்பட்டதால் ரஷ்யாவுக்கு எதிரான தடை நடவடிக்கைகள் தொடரும்  என முதலீட்டாளர்கள் கருதியதால, புதன்கிழமை  மசகு எண்ணெய் விலைகள் சுமார் 1 சதவீதம் அதிகரித்து. ஒரு வாரத்திற்குப் பின்னர் அதிகபட்ச நிலையை எட்டியது.

கடந்த வாரம் மொத்த அமெரிக்க பெட்ரோலிய பொருட்கள் வழங்கல் — அமெரிக்க எண்ணெய் நுகர்வின் ஒரு அளவுகோல் — ஒரு நாளுக்கு 21.990 மில்லியன்  பீப்பாய்களாக அதிகரித்தன. இது 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குப் பின்னர் பாரியளவில் அதிகரித்துள்ளதாக புதன்கிழமை எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் அறிக்கை சுட்டிகாட்டியுள்ளது.

https://www.virakesari.lk/article/227282

இஸ்ரேல் - ஹமாஸ் அமைதித் திட்டத்தின் முதற்கட்டத்திற்கு கையெழுத்து: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

2 months 2 weeks ago
காசா அமைதி திட்டம் : இஸ்ரேல் - ஹமாஸ் இணக்கம் ; ஐ.நா பொதுச்செயலாளர் வரவேற்பு Published By: Digital Desk 3 09 Oct, 2025 | 09:53 AM காசா அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இணக்கம் தெரிவித்துள்ளமையை ஐ.நா. பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரெஸ் வரவேற்றுள்ளார். காசா அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். எகிப்தில் நடந்த அமைதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையின் மூன்றாவது நாளில், ஹமாஸ் குழுவினர் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கும், அதே நேரத்தில் இஸ்ரேல் தனது படைகளை திரும்பப் பெறும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐ.நா பொதுச்செயலாளர் எக்ஸ் தளத்தில், "அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த திட்டத்தின் அடிப்படையில், காசாவில் போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தின் அறிவிப்பை நான் வரவேற்கிறேன்," “இந்த மிகவும் தேவையான முன்னேற்றத்திற்கு மத்தியஸ்தம் செய்த அமெரிக்கா, கட்டார், எகிப்து மற்றும் துருக்கியின் இராஜதந்திர முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். “சம்பந்தப்பட்ட அனைவரும் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/227277#google_vignette

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

2 months 2 weeks ago
போக்கிரி பட வடிவேலு மாரி கண்மூடித்தனமாக தலையையே அண்ட குடுக்கும் முரட்டு முட்டு சிங்கங்கள் எப்படி கூட்டமாக சேர்ந்து சாயி பஜன் செய்வார்கள் என்பதை களமறியும்🤣. ஆனால் நான் இங்கே விஜி அண்ணிக்கு என்றும் வக்காளத்து வாங்கவில்லை. மாறாக பலவருடமாக நான் முன்வைத்த ஒரே கோரிக்கை, அறுதியும் இறுதியுமாக சீமான் மீதான பாலியல் வல்லுறவு குற்றசாட்டு நியாயமான நீதி விசாரணைக்கு உட்படுத்த பட வேண்டும் என்பது மட்டுமே. அதில் சீமான் விடுவிக்கபட்டிருந்தால் அவர் குற்றமற்றவர். ஆனால் இப்போ மொள்ளமாரித்தனம் பண்ணி, விசாரணையை அடித்து நூத்து உள்ளார். ஒரு மகனாக, ஒரு சகோதரனாக, ஒரு தந்தையாக ஒரு பாலியல்தொழிலாளியான பெண் வந்து நான் வல்லுறவுக்கு ஆளானேன் என சொன்னாலும் அதை தீரவிசாரிக்க வேண்டும் என்ற நிலை எடுப்பதே சரியாக இருக்கும். எங்கள் பக்கம் இதை மாண்பு என்பார்கள். சுண்ணாம்பைதான் பிடிக்காது, வெண்ணையை அல்ல. வன்மையாக கண்டிக்கிறேன். விஜயலட்சுமி மட்டும் அல்ல யாழ் போன்ற பொதுவெளியில் கூட கீழ்தரமான வார்த்தை பிரயோகம் செய்பவர்களை அவர்கள் முகத்துக்கு நேராக கண்டித்துள்ளேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதைத்தான் கெட்டித்தனமா கவிட்டு கொட்டி போட்டமே. அங்கே மகிழ என்ன இருக்கிறது.

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

2 months 2 weeks ago
எனக்கென்ன கவலை - ஒரே ஜாலிதான்🤣. என்ன இனி சீமான் மேடையேறி மானம் பற்றி பேசினால் - யாரும் வாயால் சிரிக்க மாட்டார்கள்.

அத்துமீறிய மீன்பிடி; 47 இந்திய மீனவர்கள் கைது!

2 months 2 weeks ago
அத்துமீறிய மீன்பிடி; 47 இந்திய மீனவர்கள் கைது! இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டக் குற்றச்சாட்டில் 47 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் போது மீன்பிடி நடவடிக்கைக்காக மீனவர்கள் பயன்படுத்திய 5 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மீன்வள அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. https://athavannews.com/2025/1449938

அத்துமீறிய மீன்பிடி; 47 இந்திய மீனவர்கள் கைது!

2 months 2 weeks ago

New-Project-111.jpg?resize=750%2C375&ssl

அத்துமீறிய மீன்பிடி; 47 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டக் குற்றச்சாட்டில் 47 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் போது மீன்பிடி நடவடிக்கைக்காக மீனவர்கள் பயன்படுத்திய 5 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மீன்வள அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

https://athavannews.com/2025/1449938