| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 405 online users. » 0 Member(s) | 403 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,252
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,222
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,597
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,282
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,598
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,030
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,419
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,119
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,017
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,237
|
|
|
| Own Goal!!! |
|
Posted by: cannon - 02-13-2006, 01:22 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- Replies (1)
|
 |
Harvard experts too pro-Tiger, too liberal, says Govt. paper
[TamilNet, February 12, 2006 20:19 GMT]
"It [Sri Lanka Government Peace Team] learnt that two Harvard specialists who were coaching the peace team on some aspects of conflict resolution, for instance, were thought of as being too liberal and possibly too pro Tiger in their views," said Sri Lanka Government official paper Sunday Observer in its latest edition. The paper also quoted a source close to the consultation process as saying, "Harvard and other institutions of repute, may wittingly or otherwise place Sri Lankan strategy in channels that could be available to the Tigers."
The briefings were held early last week ahead of the sessions by the Harvard Negotiation Project team Thomas Schaub and Elizarbeth McClintock on Saturday and Sunday, at the Presidential Secretariat.
"We run the risk of the Tigers knowing what the Sri Lankan strategy is, even before we reach the negotiating table,'' the paper said.
The paper said the consultants, however, alerted the participants on "possible pitfalls when negotiating with the LTTE," and "mapped out some of the possible sharp practices of the LTTE that might be expected at the talks."
The paper was critical of the contents of the early sessions, saying that "The first few coaching sessions were not on the hard aspects of bargaining and negotiations, but an exercise in creating a peace sentiment."
UNP's Leader of negotiating team, Prof G.L.Peiris, and Secretary of Defence Austin Fernando were also invited to brief the participants.
Ministers Nimal Siripala De Silva, Jeyaraj Fernandopulle, Mangala Samaraweera, Rohitha Bogollagama and Douglas Devananda, Attorneys S.L. Gunasekera, Udaya Gammanpila, Plan Implementation Ministry Secretary Nivard Cabraal, Foreign Secretary H. Palihakkara, Defence Secretary Gothabaya Rajapakse, Intelligence Chief Kapila Hendavitharana, Director General, Peace Secretariat, John Gunaratne, IGP Chandra Fernando and the three service chiefs, Sarath Fonseka, Donald Perera and Wasantha Karannagoda attended the briefing sessions, said Sunday Leader.
Robert Fisher, Harvard Negotiation Projects director, is one of the authors of a highly acclaimed book "Getting to YES: Negotiating Agreement Without Giving In," which presents the development of the theory of "principled negotiation."
The Harvard Negotiation Project's mission is to improve the theory, teaching, and practice of negotiation and dispute resolution, so that people can deal more constructively with conflicts ranging from the interpersonal to the international, says the Project's official website.
The Project, or HNP as it is commonly known, was created in 1979 and was one of the founding organizations of the Program on Negotiation consortium. The work of faculty, staff, and students associated with HNP routinely moves back and forth between the worlds of theory and practice to develop ideas that practitioners find useful and scholars sound.
External Links:
US: Harvard Negotiation Project
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=17178
|
|
|
| காதலில் விழாமல் தப்பியது எப்படி? |
|
Posted by: SUNDHAL - 02-12-2006, 02:40 PM - Forum: நகைச்சுவை
- Replies (11)
|
 |
காதல் எப்படி எங்கே ஏன் வருதுன்னு யாராலயும் சொல்ல முடியாது. வரவேண்டிய நேரத்துல கண்டிப்பா வரும்னு சொல்ல முடியாது. கண்டதும் காதல் வரலாம். கண்டதைப் பார்த்தும் காதல் வரலாம். கண்ணடிச்சா காதல் வரலாம். கன்னத்துல அடிச்சா காதல் வரலாம். இப்படி தொறந்த வீட்டுல..ஸôரி, தொறந்த நெஞ்சுக்குள்ள காதல் படார்னு நுழைஞ்சு டூ மினிட்ஸ் நூடுல்ஸ் மாதிரி வேகமாக வெந்து நிக்கும்.
பசிக்கும். ஆனா சாப்பிட்டா ஏப்பம் வராது. தூக்கம் வரும். ஆனா கொட்டாவி வராது. நாய் கடிச்சாக் கூட கொசு கடிக்கிற மாதிரிதான் இருக்கும். ஆனா கொசு கடிச்சா நாய் கடிச்ச மாதிரி வலிக்கும். அழுக்கைப் பார்த்தாலும் அழகாத் தெரியும். எருமை கத்துனாக் கூட ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்கா கேட்கும். கூட்டத்துல இருக்கறப்ப மனசு தனியா இருக்குற மாதிரி மாஞ்சா தடவி பட்டம் விட்டுக்கிட்டிருக்கும். தனியா இருக்கிறப்ப சட்டசபையில இருக்கற மாதிரி மனசு கத்தும்.
காய்ஞ்சு கருவாடாப் போன ரோசாப்பூ, எப்பவோ எச்சில் பண்ணுன எட்டணா மிட்டாயைச் சுத்தியிருந்த பேப்பர், கிழிஞ்சு போன பஸ் டிக்கெட், லேசா செம்பட்டையான ஒரு முடி, குறைப் பிரசவத்தில் பிறந்த நிலா மாதிரி இருக்கிற நகத்துண்டுகள், காது போன குட்டிக் கரடி பொம்மை, ரெண்டு சென்டிமீட்டர் துண்டு பேப்பர்ல எழுதுன மூணு வரிக் கவிதை - இப்படித் தேடித் தேடிச் சேர்த்து வைச்சிருக்கிற பொக்கிஷங்களைப் பல்லை இளிச்சுப் பார்த்துட்டே இருந்தா பரலோகத்துல இருக்குற பீலிங் கிடைக்கும்.
இப்படி மருந்தே கண்டுபிடிக்க முடியாத உயிர்க்கொல்லி நோயான காதல்ல "ஸ்ஸரக்'குன்னு வழுக்கி விழுற இடங்கள் எதுன்னு ஒரு ஜொள்ளு+லொள்ளு ஆராய்ச்சிதான் இது.
* 23சி பஸ்ஸýக்காக 24 நிமிஷங்களாகக் காத்திருப்போம். 25 வயசுள்ள ஒரு பொண்ணு பஸ் வரலையேன்னு 26 வது தடவையா நகத்தைக் கடிப்பா. 27 வது நிமிஷம் பஸ் வர, 28 பேர் முந்தி அடிச்சு ஏறுவோம். நீங்க முன்வாசல். அவ பின்வாசல். நீங்க கொடுக்குற ரெண்டு ரூபா, 29 பேரைக் கடந்து முப்பதாவது ஆளா அவ கைக்குப் போகும். அப்புறம் அவ டிக்கெட் எடுத்துக் கொடுக்குறது தினமும் நடக்கும். அதுக்கு தாங்க்ஸ் சொல்லி ஒரு பார்வையால நன்றி சொல்லுவீங்க. அந்த டொக்கு விழுந்த லுக்கே அவளுக்கு ரொமாண்டிக் லுக்கா தெரியலாம். டிக்கெட்ல "டிக்' ஆகி காதல் விக்கெட் விழலாம். பி கேர் ஃபுல்!
*தொலைச்ச எதையோ தேடிக்கிட்டு வர்ற மாதிரியே ரெண்டு பேரும் எதிர் எதிர்த்தாப்ல வருவீங்க. ஒரு முட்டல், மோதல் நடக்கும். அடுத்த செகண்ட்ல நாலு உதடுகளும் துடிதுடிச்சு "ஸôரி'ன்னு சொல்லும். விலகி நடக்கறப்போ உசிரை எடுத்து வெளியே போட்டுட்டு நடக்குற மாதிரி தோணும். போறப்பவே ரெண்டு பேரும் ஒரே நேரத்துல திரும்பிப் பார்ப்பீங்க. வெட்கமெல்லாம் வேற வர்ற மாதிரி சிரிப்பு ஒண்ணு சிரிப்பீங்க. அடுத்த நாள், "இந்தாங்க, இது உங்க முடி. நேத்து என் சட்டைப் பொத்தான்ல சிக்கிடுச்சு'ன்னு அவன் கொடுக்க, "பரவாயில்ல, அதை நீங்களே வைச்சுக்கோங்க'ன்னு ஏதோ சொத்து எழுதிக் கொடுக்குற மாதிரி அவ சொல்லிட்டுப் போக, அதுக்கு மேல என்ன நடக்குமுன்னு நான் வேற சொல்லணுமாக்கும்.
*நீங்க கோயிலுக்குப் போறப்ப எல்லாம் பட்டை அடிச்சிட்டு, பக்தி மாம்பழமா ஒரு ஜந்து உங்க பின்னாலேயே வரும். சந்நிதி முன்னால நின்னுட்டு , கண்களை மூடி வேகவேகமாக ஏதோ சொல்லும். ஸ்லோகம்னு நினைக்கக் கூடாது. காதைக் கூர்மையா வைச்சுக் கேட்டாத்தான் தெரியும். அது ஸ்லோகமில்ல, ஏதோ சினிமாப் பாட்டுன்னு! திடீர்னு ஒரு நாள் யாரோ உடைச்ச தேங்காயைப் பொறுக்கிக்கிட்டு வந்து,"உன்னோட பூனைக் குட்டிக்கு இன்னிக்கு நட்சத்திரப்படி பிறந்தநாள். அதான் அர்ச்சனை பண்ணுனேன். ஆமா உன் பேரு என்ன?ன்னு கேக்கும் அந்த ஜந்து. இப்படி ஒரு வாசகமா ஆரம்பிக்கிறது திருவாசகமாப் பெருகி காதல் வெள்ளத்துல அடிச்சுட்டுப் போக அம்புட்டு சான்ஸ் இருக்கு. ஜாக்கிரதை.
*"எனக்கு கணக்குப் பாடத்துல ஒரு டெüட். அசோகர் எத்தனை மரங்களை நட்டாரு?' அப்படின்னு சின்னப்புள்ளத்தனமா ஆரம்பிப்பாங்க. "எனக்கு நேத்து சுண்டுவிரல் சுளுக்கிட்டதால கிளாஸ்ல நோட்úஸ எழுத முடியலடா. உன் நோட்ஸ் தாடா. ப்ளீஸ்டா'ன்னு உரிமை ஊஞ்சலாட கேப்பாங்க. நோட்ஸ் திரும்ப வர்றப்போ, ஏகப்பட்ட பின்குறிப்புகளோட லவ்வையும் அட்டாச்மெண்ட்டா அனுப்புவாங்க. கால்குலேட்டரைக் கடனாக் கேப்பாங்க. திருப்பித் தர்றப்போ"143' ன்னு அதுல நம்பர் சிரிக்கும். அடிஸ்கேலை அன்பா வாங்கிட்டுப் போவாங்க. திருப்பித் தர்றப்போ, ஸ்கேலோட அடிப்பாகத்துல ஹார்ட்ல அம்பு விட்டுத் தருவாங்க. ஸ்கூலுக்கு ஸ்கூல் மன்மதன்ஸ், ரதிஸ் காதல் மார்க்கோட அலைஞ்சுக்கிட்டே இருக்காங்க. எச்சரிக்கை.!
*"ஹலோ சுசீலா இருக்காங்களா? இல்லையா...ராங் நம்பரா..நீங்க யாரு? ஓ.. நீங்க சுப்புலட்சுமியா! பரவாயில்லை நீங்களே பேசுங்க. நீங்களும் நல்லாத்தான் பேசுறீங்க! ஸ்வீட் வாய்ஸ்!'ன்னு சில ராங் நம்பர்ஸ் கடலையைப் போட ஆரம்பிக்கும்."ஆக்சுவலி, யு.எஸ்.போறதுதான் என் கனவு'ன்னு எஸ்.எம்.எஸ்.ல கடலை காவடி தூக்கும். போகப் போக காதல் கரகாட்டம் ஆடும். மெúஸஜ் அனுப்பி அனுப்பியே கட்டை விரல் கரைஞ்சு போயிடும். முகம் பார்க்காம பண்ணுற இந்த லவ்வுல , என்னன்ன டேஞ்சர் இருக்குன்னு வெலாவாரியா சொல்லாமலே தெரியுமே உங்களுக்கு!
*"மூணு சுழி "ண' க்கு எத்தனை சுழி வரும்.' "ம்' - முக்கு புள்ளி வைக்கணுமா' இந்த ரேஞ்சுல தமிழ் தெரிஞ்ச பசங்க ,லவ்வை ஜிவ்வுன்னு சொல்லுறாப்ல. நாலு வார்த்தைகளைக் கவ்வி, கிரீட்டிங் கார்டுல தெளிச்சு ,"உன்னப் பத்தி ஒரு கவித எழுதுனேன். பாரு'ன்னு நீட்டுவாங்க .
"பூக்கலுக்கு பல்கள் உண்டா?
உன் - ஐப் பாத்ததும்
டெüட்டானது காட்று!'
- இந்த ரேஞ்சுல கவிதப் போக்குவரத்து டிராபிக் ஜாம் - ஆகி கிடக்கும். "நாம என்ன அவ்வளவு அழகாவா இருக்கோம்'னு வார்த்தைகளில் வழுக்கி விழுந்தோட்டோம்னா அவ்ளோதான். எழுந்திரிக்கவே முடியாது.
*"டேய் மச்சான் இன்னிக்கு என் ஆளு கூட மூவி போறேன்னு' பந்தாவா ஒருத்தன் முள்ளைத் தூவிட்டுப் போவான். "இந்த சுடி அவன் வாங்கித் தந்தான்டி. அவனுக்கு பஞ்சு முட்டாய்க் கலர்தான் பிடிக்கும். எப்படி இருக்குடி?'ன்னு தோழி ஒருத்தி தோரணம் கட்டி தூபம் போட்டுட்டுப் போவா. "அரியர்ஸ் பார்ட்டியே லவ் பண்ணுறான். நமக்கென்ன குறைச்சல்'ன்னு தோணும். "அவளை விட பேரழகி நான். லவ் பண்ணுனா என்ன'ன்னு கொஸ்டின் வந்து மூளையைக் குடையும். இந்தக் கேள்விக்குறிகளை ஆச்சரியக்குறிகள் ஆக்கணும்னு கங்கணம் கட்டிட்டு காதலிக்க ஆரம்பிக்கலாமேன்னு சபலம் வரலாம். ஜாக்கிரதை.
*அடுத்த டேஞ்சரான நாள் பிப்ரவரி மாசம் வந்து பல்லைக் காட்டும். காதலர்களுக்கிடையில கீரிட்டிங் கார்ட்ஸ் கிரிக்கெட் ஆடும். காந்தி ஜெயந்தி என்னிக்குன்னு தெரியாதவங்ககூட காதலர் தினத்தை கடமையுணர்வோட கொண்டாடுவாங்க. "அட, எல்லாரும் கையில ஹார்ட்டைத் தூக்கிட்டு அலையறாங்களே, ஏன் நமக்குன்னு ஒரு லவ் இல்ல'ன்னு ஏக்கம் சுனாமியா வந்து நம்மள மூழ்கடிக்கும். வேணாம் ராசா வேணாம். டப்பாசு வெடிச்சாத்தான் தீவாளி, கேக்குத் தின்னாத்தான் கிறித்துமஸ், பிரியாணி சாப்பிட்டாத்தான் ரம்ஜான், அதே மாதிரி காதலிச்சாத்தான் காதலர் தினம் கொண்டாட முடியும்னு தப்புத் தப்பா தத்துவம் பேசி எக்குத் தப்பா லவ்வுல சிக்கிச் சீரழிஞ்சிறாதீங்க!
(பின் குறிப்பு: இந்தக் கட்டுரை 100 %ஜாலி கற்பனையே. சிவசேனா கட்சியினர் எந்த விதத்திலும் என்னைத் தூண்டவில்லை. ஹிஹி..)
கற்பனை: முகில்
|
|
|
| வாசகர்கள் பெரிதும் விரும்புவது என்ன |
|
Posted by: ஊமை - 02-12-2006, 02:25 PM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (11)
|
 |
நானும் எனது நண்பர் ஒருவரும் கருத்துக்களத்தில் ஒரு கணிப்பீடு செய்தோம். வாசகர்கள் எந்த செய்திகளை மிகவும் விரும்புகிறார்கள் என்று. அதிலே பெண்கள் அல்லது பெண்களின் செய்திகளை பிரசுரிக்கும் போது அதற்கு பார்வையாளரும் கருத்து எழுதுவோரின் தொகையும் அதிகரித்தே காணப்படுகிறது. இதிலிருந்து ஒரு உண்மை மட்டும் தெளிவாக புலப்படுகிறது.
<img src='http://img145.imageshack.us/img145/9455/looks3su.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| பல் துலக்கினால்தான் அனுமதி... |
|
Posted by: SUNDHAL - 02-12-2006, 01:24 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (6)
|
 |
பல் துலக்கினால்தான் அனுமதி...
எத்தியோப்பிய பழங்குடி மக்களிடம் ஒரு வினோதமான பழக் கம் உள்ளது. ஒரு வீட்டில் புதுமணத்தம்பதிகளுக்கு முதன் முதலாக ஆண் குழந்தை பிறந்தால் அவர்கள் அந்தக் குழந் தைக்கு பெயர் சூட்டுவதற்காக கண்டிப்பாக ஒரு சிறிய குச்சு வீடு கட்டியாகவேண்டும். அந்த வீட்டில்தான் பெயர் சூட்டு விழாவை நடத்தியாகவேண்டும்.
இந்த விழாவிற்கு வருகிறவர்கள் அன்றைய நாளில் கட்டாயமாக பல் துலக்கியாக வேண் டும் என்பது இன்னொரு நிபந்தனை. இல்லையென்றால் விழாவிற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
Thanks:Thanthi...
|
|
|
| காதல் சினிமாப்பாடல்கள் எழுதுங்கள். |
|
Posted by: Selvamuthu - 02-12-2006, 01:16 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (47)
|
 |
அனைவருக்கும் ஒரு சிறு காதல் பாடல் போட்டி.
காதலர் தினம் நெருங்கிவிட்டது. இரசிக்கவும், மகிழ்ச்சியாக இருக்கவும் இங்கே "காதல்" என்ற சொல்லில் அல்லது காதலிக்க, காதலுடன் இப்படியான சொற்களில் ஆரம்பிக்கும் சினிமாப்பாடல்களை எழுதுங்கள்.
ஒருவர் ஒரு பாடலின் வரிகளில் குறைந்தது முதல் வரியையாவது உருப்படியாக எழுதவேண்டும். முழுவதும் எழுதமுடிந்தால் எழுதுங்கள்.
ஒருவர் ஒருநேரத்தில் ஒரு பாடலை மட்டும்தான் எழுதவேண்டும். அடுத்தவர் வந்து ஒரு பாடலை எழுதியபின்னர் முன்னர் வந்தவர்கள் திரும்பவும் வந்து இன்னொரு பாடலை எழுதலாம்.
சரி, எங்கே பார்ப்போம்..... நானே ஆரம்பித்துவைக்கிறேன்.
குறிப்பு:-ஆரம்பத்தை மட்டும் படித்துவிட்டு என்ன ஆசிரியரே! இது உங்கள் சொந்த அனுபவமா? என்று கேட்கவேண்டாம். முழுவதையும் படியுங்கள்.
படம்:- காதலிக்க நேரமில்லை
பாடல் வரிகள்:- கவியரசு கண்ணதாசன்
பாடியவர்:-சீர்காழி கோவிந்தராஜன்
காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை
வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை
பஞ்சணையும் கண்டதில்லை பால் பழம் குடித்ததில்லை
வஞ்சி உன்னைக் காணும்வரை மனதும் துடித்ததில்லை
பஞ்சுபோல நரைவிழுந்து பார்வையும் குழிவிழுந்து
இரண்டு கெட்ட வேளையிலே கண்டேனே உன்னையடி
காயிலே சுவைப்பதில்லை கனிந்ததும் கசப்பதில்லை
நோயில்லா உடலிருந்தால் நு}றுவரை காதல் வரும்
மாமியார் கொடுமையில்லை மாமனார் யாருமில்லை இந்த
சாமியை மணம் முடித்தால் சந்தோசம் குறைவதில்லை
(மாறுவேடம் கலைந்தபின்பு)
அவ்வுலகம் சென்று வந்தேன் அமுதம் குடித்துவந்தேன்
பொன்னுலகம் போவதற்கு புதுஉடல் வாங்கி வந்தேன்
இந்திரனைக் கண்டு வந்தேன் இதுபற்றிக் கேட்டுவந்தேன்
சந்திரனைக் கண்டுவந்தேன் சரசம் நடத்த வந்தேன்
காதலிக்க நேரமுண்டு கன்னியுண்டு காளையுண்டு!
வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமுண்டு!
|
|
|
| சிறிலங்கா - ஈரான் இராசதந்திர உறவு சிக்கலடைகிறது |
|
Posted by: மேகநாதன் - 02-12-2006, 06:19 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (2)
|
 |
<span style='color:brown'><b>சிறிலங்காவின் நிலைப்பாடு: ஈரான் கடும் அதிருப்தி </b>
[ஒஸ்ரிய தலைநகர் வியன்னாவில் நடைபெற்ற சர்வதேச அணுசக்தி சபையின் கூட்டத்தில் சிறிலங்காவுக்கு எதிராக வாக்களித்திருப்பதில் ஈரான் கடுமையாக அதிருப்தியடைந்துள்ளது.
தமது அதிருப்தியை கொழும்பில் உள்ள தூதரகத்தின் மூலம் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தெரியப்படுத்தியுள்ளது.
வியன்னா மாநாட்டில் இந்தியா, சிறிலங்கா உள்ளிட்ட 27 நாடுகள் அமெரிக்க அணியில் நின்று ஈரானுக்கு எதிராக வாக்களித்தன. கியூபா, சிரியா, வெனிசூலா ஆகிய நாடுகள் ஈரானை ஆதரித்தன. தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 5 ஆப்பிரிக்க நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளர், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் கவனத்துக்குத்தான் இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளதே தவிர ஈரான் மீதான தடைக்கான தீர்மானம் இது அல்ல என்று விளக்கம் அளித்தார்.
சிறிலங்காவுக்கு கடந்த ஆண்டு 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை ஈரான் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் பிரதிநிதி நிக்கலஸ் பேர்ன்சின் அண்மைய சிறிலங்கா பயணத்தின் போது அமெரிக்க ஆதரவு நிலைப்பாடு மேற்கொள்ள அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் இந்த நிலைப்பாட்டை மேற்கொள்வதற்காக பாரிய கடனுதவிகளை அளிக்க முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நிக்கலஸ் பேர்ன்சும் கொழும்பு ஊடகவியலாளர் மாநாட்டில் சிறிலங்காவுக்கான கடனுதவித் திட்டங்கள் மற்றும் இராணுவ உதவிகள் பற்றி அறிவித்ததையும் கொழும்பு அரசியல் நோக்கர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
அதற்கு முன்னதாக அமெரிக்கா சென்ற மங்கள சமரவீர, அந்நாட்டு அமைச்சர் கொண்டலீசா றைசுடனான சந்திப்பின் போதும் அமெரிக்கா தரப்பில் இத்தகைய அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ஈரானை விட அமெரிக்கா கூடுதலான கடனுதவி மற்றும் இராணுவ உதவி அளிக்க முன்வந்தமையால்தான் அமெரிக்க அணிக்கு சிறிலங்கா தாவியது என்றும் கொழும்பு கொள்கை வகுப்பாளர்கள் சிலர் கூறுகின்றனர்.</span>
<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
|
|
|
| பிளவுக்குக் காத்திருக்கும் ஜே.வி.பி. |
|
Posted by: மேகநாதன் - 02-12-2006, 06:11 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<span style='color:brown'><b>பிளவுக்குக் காத்திருக்கும் ஜே.வி.பி. </b>
சிறிலங்கா உள்ளுராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்று ஜே.வி.பி. முடிவெடுத்துள்ள நிலையில் அக்கட்சியில் பாரிய பிளவு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
உள்ளுராட்சித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடலாம் என்ற யோசனையை ஜே.வி.பி.யின் மத்திய குழுவின் சோமவன்ச அமரசிங்க, விமல் வீரவன்ச, நந்த குணதிலக்க மூவரும் முன்வைத்துள்ளனர்.
இம்மூவரும் முன்னதாக மகிந்தவுடன் நடத்திய ஆலோசனையில் கூட்டாக தேர்தலைச் சந்திக்க ஒப்புக்கொண்டதாகவும் அது தொடர்பில் மத்தியக் குழுவின் ஒப்புதலைப் பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தீர்மானத்தின் மீது பேசிய ஜே.வி.பி.யினர் கட்சியுடன் செய்து ஒப்பந்தத்துக்கு நேர் எதிராக மகிந்த அரசாங்கம் செயற்படுகிறது. அதனால் உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிட வேண்டுமானால் பெரும் எண்ணிக்கையிலான ஆசனங்களை கேட்டுப் பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து 26 உள்ளுராட்சி சபைகளில் ஜே.வி.பி.யின் சின்னத்தின் கீழ் சுதந்திரக் கட்சியினருடன் இணைந்தும் இதர பகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு ஜே.வி.பி. வேட்பாளர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சின்னத்திலும் போட்டியிடுவது என்றும் இறுதியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் ஜே.வி.பி.யின் இந்தத் தீர்மானத்தை மகிந்த ராஜபக்ச நிராகரித்தமையால் தனித்துப் போட்டியிட அக்கட்சி முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் மத்தியக் குழுவின் தீர்மானத்தை நிராகரித்து ஜே.வி.பி.யின் சில மூத்த தலைவர்கள் சுதந்திரக் கட்சியுடன் இணைய உள்ளதாகவும் இது தொடர்பான பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் சுதந்திரக் கட்சியினர் கூறுகின்றனர்.
இதனிடையே சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் தனது வலுவை உருவாக்கிக் கொள்ளும் வகையில் மேலும் சில மாதங்களுக்குத் தேர்தலை ஒத்திவைக்கும் யோசனையில் மகிந்த இருப்பதாகவும் கூறப்படுகிறது</span>
<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
|
|
|
| குமாரபுரம் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவு கூரல் |
|
Posted by: மேகநாதன் - 02-12-2006, 06:04 AM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல்
- Replies (1)
|
 |
[size=18]<b>குமாரபுரம் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவு கூரல் </b>
திருகோணமலை குமாரபுரம் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவு கூரல் நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
சிறிலங்கா இராணுவத்தினரால் 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 ஆம் நாளன்று குழந்தைகள், அப்பாவி பொதுமக்கள் உட்பட 26 பேர் கிளிவெட்டி பகுதியின் குமாரபுரத்தில் படுகொலை செய்யப்பட்டனர். இதில் 30 பேர் படுகாயமடைந்தனர். 2 தமிழ்ப் பெண்கள் படையினர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
குமாரபுரம் படுகொலை நினைவு கூரல் நிகழ்வு குமாரபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 26 பேரின் புகைப்படங்களும் நிகழ்வில் வைக்கப்பட்டு இருந்தது.
கிராம மக்கள் சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.
குமாரபுரம் கிருஸ்ணன் ஆலயத்தில் படுகொலை செய்யப்பட்டோர் நினைவாக சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. அதன்பின்னர் குமாரபுரம் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் எஸ். ஜேசுதாசன் தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
14 குழந்தைகளை சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்தது. 5 வயதுக்குக் குறைவான 3 குழந்தைகள்; 5 முதல் 10 வயதுக்குட்பட்ட 3 பேர், 11 முதல் 20 வயதுக்குட்பட்ட 8 பேர், 21 முதல் 30 வயதுக்குட்பட்ட 6 பேர், 31 முதல் 40 வயதுக்குட்பட்ட இருவர் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட இருவர் என்று இராணுவத்தினர் வெறியாடிக் கொன்றனர்.
இந்தப் படுகொலை தொடர்பாக 9 படையினர் கைது செய்யப்பட்டனர். 10 ஆண்டுகளாகியும் திருகோணமலை நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு காத்திருக்கிறது.
இந்தப் படுகொலை தொடர்பான சாட்சியங்களும் படுகொலைக்கான ஆயுதங்களும் கடந்த ஆண்டு கொழும்பு இரசாயன பகுப்பாய்வுக் கூடத்தில் நடந்த தீ விபத்தில் எரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
<i><b>தகவல் மூலம்- புதினம்.கொம்</b></i>
|
|
|
| அமெரிக்க கொங்கிறசின் தீர்மானம்?????? |
|
Posted by: Sukumaran - 02-11-2006, 11:53 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- Replies (1)
|
 |
Whilst calling up both the Government of Sri Lanka and the LTTE to take a positive approach at the forthcoming peace talks in Geneva the Congressmen has highlighted that
1) the LTTE has a history of engaging in a campaign of terror and violence;
2) the killing of Lakshman Kadirgamar has been attributed to the LTTE
3) the United States remains deeply concerned about the continued violations of the cease-fire agreement in Sri Lanka, as marked by a recent series of violent incidents involving Claymore mine and suicide attacks;
4) Velupillai Prabhakaran recently issued an ultimatum to the Government of Sri Lanka to come up with a political settlement within the next year or face an "intensified struggle for self-determination;” and
5) the use of unconventional weapons and suicide missions and other terrorist tactics by the Liberation Tigers of Tamil Eelam could cause even greater devastation to the country and have implementation on regional security;
Here is the full text of the resolution:
Whereas Sri Lanka is Asia's oldest democracy and remains a close friend of the United States;
Whereas more than 64,000 civilians have died and 350,000 persons have been internally displaced in Sri Lanka as a result of a 20-year armed conflict between the Government of Sri Lanka and the Liberation Tigers of Tamil Eelam, a group designated by the Department of State as a foreign terrorist organization;
Whereas in 2002 the Government of Sri Lanka and the Liberation Tigers of Tamil Eelam signed a cease-fire agreement;
Whereas peace talks between the Government of Sri Lanka and the Liberation Tigers of Tamil Eelam have been stalled since April 2003;
Whereas on August 12, 2005, the Sri Lankan Foreign Minister, Lakshman Kadirgamar, was assassinated in a terrorist act that has been attributed to the Liberation Tigers of Tamil Eelam;
Whereas December 2005 was the bloodiest month in Sri Lanka since the cease-fire agreement came into effect in 2002 due to a series of Claymore mine and suicide attacks against Security Forces of the Government of Sri Lanka by Liberation Tigers of Tamil Eelam;
Whereas the United States remains deeply concerned about the continued violations of the cease-fire agreement in Sri Lanka, as marked by a recent series of violent incidents involving Claymore mine and suicide attacks;
Whereas Velupillai Prabhakaran, the leader of the Liberation Tigers of Tamil Eelam, recently issued an ultimatum to the Government of Sri Lanka to come up with a political settlement within the next year or face an "intensified struggle for self-determination";
Whereas the Liberation Tigers of Tamil Eelam has a history of engaging in a campaign of terror and violence;
Whereas if hostilities resume in Sri Lanka, the use of unconventional weapons and suicide missions and other terrorist tactics by the Liberation Tigers of Tamil Eelam could cause even greater devastation to the country and have implementation on regional security;
Whereas to strengthen the implementation of the cease-fire agreement, the Government of Sri Lanka and the Liberation Tigers of Tamil Eelam have agreed to commence peace talks [at the] beginning of February 2006 in Geneva, Switzerland; and
Whereas despite the agreement to continue peace talks, a return to armed conflict in Sri Lanka is still a very real threat: Now, therefore, be it:
Resolved, That the House of Representatives urges, in the strongest possible terms, the Government of Sri Lanka and the Liberation Tigers of Tamil Eelam to
(1) engage positively in the forthcoming peace talks and to prevent a return to armed conflict in Sri Lanka
(2) renegotiate a cease-fire agreement and implement the agreement in a productive and successful manner; and
(3) focus on rebuilding a peaceful, secure, and prosperous future for Sri Lanka.
|
|
|
|