| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 119 online users. » 0 Member(s) | 116 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,284
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,227
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,287
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,619
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,045
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,455
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,469
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,021
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| மூளையைப் பாதிக்கும் செல்லிட தொலைபேசிகள்...! |
|
Posted by: kuruvikal - 02-17-2004, 10:42 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (3)
|
 |
செல்போனில் பேசினால் மூளை செல் பாதிப்பு?!
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40651000/jpg/_40651281_mobiletext203.jpg' border='0' alt='user posted image'>
செல்போனில் அதிக நேரம் பேசுவது ஆபத்து என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், 2 நிமிடத்திற்கு மேல் பேசுபவர்களின் மூளையின் செல்கள் பாதிக்கப்படுள்ளதாக டாக்டர் எம்.ஏ. அலீம் தெரிவித்துள்ளார்.
செல்போன்களுக்கான சிக்னல்களை அனுப்பும் பேஸ் ஸ்டேசன்களை பள்ளிக்கூட வளாகம் மற்றும் விளையாட்டு மைதனம் அருகே வைக்கக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரி மூளை நரம்பியல் துறை உதவிப் பேராசிரியராக வேலை பார்க்கும் டாக்டர் எம்.எ. அலீம் செல்போன் ஆபத்து பற்றி தெரிவித்ததாவது,
செல்போனை அதிக நேரம் உபயோகிப்பது ஆபத்தாகும். அதுவும் 2 நிமிடத்திற்கு மேல் பேசினாலே மூளை மற்றும் அதன் நரம்புகள் பாதிப்படைய வாய்ப்புகள் இருக்கின்றன.
செல்போனில் பேசும்போது, அதிலிருந்து வெளிப்படும் கதிரியக்க வீச்சுகளால் ஆபத்து காத்திருக்கிறது. இந்த கதிரியக்க வீச்சுக்கள் முதல் 60 சதவீதம் வரை தலைப்பகுதியில் உள்ள மூளை மற்றும் நரம்புகளை பாதிக்கும். இதனால் அப்பகுதிகளில் புற்றுநோய் கட்டிகள் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும் மூளையின் செல்களும் பாதிக்கப்படும். இதனால் அல்சீமர் எனும் ஞாபக மறதி நோய் ஏற்படலாம்.
மேலும் இந்த செல்போன் கதிரியக்கங்கள் குழந்தைகளைத்தான் வெகுவாக பாதிக்கும்.
இதற்கான தீர்வு, முதலில் செல்போனில் பேசும் நேரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். மேலும் ஹேண்ட் ஃப்ரி உபயோகித்து பேச வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
அதிக இரைச்சல் உள்ள இடத்தில் இருந்து கொண்டு பேசுவதும், ஒரு விதத்தில் மூளைக்கு ஆபத்து. சிறுவர்கள் செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர் எம்.ஏ. அலீம் தெரிவித்துள்ளார்.
:twisted: :roll: :twisted:
Thanks webulagam.com
|
|
|
| net உதவிகள் |
|
Posted by: vasisutha - 02-17-2004, 07:11 PM - Forum: இணையம்
- Replies (14)
|
 |
இன்டர்நெட் தொடர்பு வைத் திருப்பவர்களுக்கு அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு
தேவையற்ற மெயில்கள் வரும். இதற்குக் காரணம்
பல இணையத் தளங்களில் நாம் நம்மைப்
பற்றிய தகவல்களைக் கட்டாயமாகத் தர வேண்டியுள்ளது. அப்போது மின்னஞ்சல் முகவரியினை நிரப்புகிறோம். இந்த தகவல்கள் எளிதாகப் பலராலும் எடுக் கப்பட்டு பயன்படுத்தப்படுகின் றன. இதனை நம்மால்
கட்டுப் படுத்த முடியவில்லை. இதனை மொத்தமாக ஒழிக்க முடியாது என்றாலும் ஓரளவிற்கு இதனைக் கட்டுப்படுத்தலாம். இலவச மின்னஞ்சல் முகவரிகளைத் தரும் இணையத் தளங்களில் மேலும் ஒரு இலவச முகவரியை அமைத்து எடுத்துக் கொண்டு இது போன்ற படிவங்களில் அந்த முகவரியினை மட்டுமே தர வேண்டும்.
நம் உறவினர்கள் அல்லது நெருங்கிய
நண்பர்களுக்கு மட்டும் நமக்கே சொந்தமான
ஒரு முகவரியை மட்டும் தர வேண்டும்.
இதனால் நமக்கு வரும் தேவையற்ற மெயில்கள்
இந்த தளத்தின் மெயில் சேர்வருக்கு செல்லும். இவற்றை நாம் மொத்தமாக படிக்காமலேயே
அழித்து விடலாம்.
|
|
|
| றாயன். |
|
Posted by: sethu - 02-17-2004, 09:43 AM - Forum: புலம்
- Replies (20)
|
 |
றாயன் என்ற புதிய கள உறவு தடை செய்யப்பட்டுள்ளார். உன்மையில் அவர்கள் 8 போர் யாழ் களம் பாக்கவேன்டும் யாழ் களத்தில் கருத்து எளுத வேன்டும் என்பதற்காக இலன்டனில் 800 பவுன்டுக்கு கணனி வாங்கியவார்கள் ஆகவே தவர்களையும் அவர்களுடைய ஜ பியையும் தடை செய்யப்பட்டுள்ளது தயவு செய்து அவர்களை திறந்துவிடுங்கள் மனிதர்கள் உனர்ச்சி வசப்படுவதும் ஆத்திரப்படுவதும் அவசரத்தில் செய்தியை வெளி கொன்டு வரு அவதிப்படுவதும் மனித இயல்பு அந்த றாயன் என்ட பேர்வளிக்கு பெரிய வராளாறே இருக்கு அது ஒரு பெரிய வரளாறு
மிகவும் சருக்கமாக சொன்னால் ஆரம்பகால போராட்டவரலாற்றிலே இலங்கை நீதிச்சேவைக்கு சொந்த அறிவால் அறிவு புகட்டி நீதிமன்றத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய மிகப்பெரும் அறிவாளிகள். இலைமறைகாயாக மறைந்து இருக்கிறார்கள்.
உதாரனமாக அவரின் வீர வசனங்களை இங்கு தருகிறேன்.
சுhரியனைச்சுற்றும் ஒரு புhமி இந்த புhமியிலை அறிவுச்சுhனியத்தால் பல சாமிகள். இந்த வசனம் களுத்துறை சிநைச்சாலைக்குள் அரசியல் கைதியாக இருந்தபோது கன்டுபிடித்த வசனம்.
நாம் வன்முறைகள்மீது தாகம் கொன்ட மனநோயாளிகள் இல்லை என்று அந்த குட்டிமனி தங்கத்துரைக்கு வசனம் சொல்லிக்கொடுத்த அறிவுமேதைதான் இந்த றாயன் என்டபோர்வளி அவரை அனுமதித்தால் பல பளைய உன்மைகள் வெளிவரும் எனவே றாயன் என்ட பெயரில் ஒரு போராளி அறிவாளி கருத்து எளுத வந்திருக்கிறார் அவரை அனுமதியுங்கள் அது களத்துக்கும் நல்லது
தவறாக அவர்களை மாற்றுக்குளு என்டு நினைத்துவிடவேன்டாம் சிறை உடைத்து உயிர் தப்பிய தமிழ் செல்வங்களை அனுமதியுங்கள். மட்டக்களப்பு சிறை உடைத்து ஓடிவந்து கோளிக்கூட்டுக்குள் ஒளித்து இருந்து உயிர்தப்பிய உறவுகள் யாழ்களம் வருகிறார்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.
|
|
|
| கும்பிடிறன் வணக்கம் |
|
Posted by: Ramanan - 02-17-2004, 05:08 AM - Forum: அறிமுகம்
- Replies (6)
|
 |
கும்பிடிறன்
வணக்கம்
எண்ட பேர் ரமணன். நான் இந்த இடத்துக்கு புதிசு. நான் அந்தளவு விசயம் தெரிஞ்ச பெடியன் இல்லை. ஆனா கொஞ்சம் வாசிப்பன் எழுதுவன். நீங்கள் எல்லாரும் என்னை ஏற்றுக்கொள்ள வேணும்.(அவையடக்கம்) ஓமோ?
|
|
|
| வைத்தார் கதிர்காமர்... முதல் வேட்டு....! |
|
Posted by: kuruvikal - 02-16-2004, 12:58 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (40)
|
 |
சந்திரிக்காவின் வால்பிடியும் தற்போதைய தொடர்பாடல் தொலைத்தொடர்புகள் அமைச்சருமான லக்ஷ்மன் கதிர்காமர் கொழும்பில் இருந்து இயங்கி வரும் ABC நிறுவனத்திற்கு 1995 கார்த்திகையில் இருந்து வழங்கப்பட்டிருந்த தொலைக்காட்சி ஒளிபரப்புக்கான அனுமதியை ரத்துச் செய்துள்ளார்...!
ABC (Asian Broadcasting Corporation ) நிறுவனத்தின் வானொலிகளாக தமிழ் ஒலிபரப்பான சூரியன் FM (பண்பலை) மும் சிங்கள மொழி மூலமான கிரு FM ஷா FM மற்றும் ஆங்கில மொழி மூலமான சன் FM கோல்ட் FM இயங்கி வருகின்றன....!
சூரியன் FM பல தடைகளுக்கும் மத்தியில் கொழும்பு மற்றும் மலையகம் உட்பட்ட அனைத்து தென்னிலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு இயன்றவை நியாயமான செய்திகளையும் சேவைகளையும் தன்னலமற்று வழங்கி வரும் ஒரு பண்பலை வானொலியாகும்......! குறிப்பாக சந்திரிக்காவின் முந்தய ஆட்சிக்காலத்தில் கட்டுநாயக்கா விமான நிலையத் தாக்குதல் உட்பட பல நிகழ்வுகள் பற்றி உடனுக்குடன் களத்தில் இருந்து தமிழில் செய்தி தந்த ஒரே துணிகர வானொலியாகும்......!
இது தற்கால இளைஞர்களால் இயக்கப்பட்டு சிங்கள மண்ணிலிருந்து ஒலிக்கும் அரசியல் சார்ப்பு வெளிப்படுத்தாத ஒரே ஒரு வெற்றிகர வானொலியாகும்....!
:evil: :evil:
--------------------------------
Kadirgamar cancels private media group's TV license
[TamilNet, February 16, 2004 06:17 GMT]
Sri Lanka'a Ministry of Information and Daily Communication, which is controlled by President Chandrika Kumaratunga, Monday, cancelled the TV operating license of Asian Broadcasting Corporation (ABC), a successful private media group that runs five FM radio stations. No official reason was given for the sudden move to stop ABC from starting its TV channel. ABC will challenge the decision in courts, sources said.
Mr. Lakshman Kadirgamar, a close confidante of Sri Lanka's President Chandrika Kumaratunga, was appointed as Minister for Information and Daily Communication hours before Parliament was dissolved on 7 Februrary.
The ABC operates Hiru, the popular Sinhala radio station and Sooriyan, the widely listened to Tamil FM radio station. It also operates sha (Sinhala) and Sun, Gold (English) FM broadcasts.
ABC obtained license for starting a TV station in November 1995
|
|
|
| கலைந்த கவிதை |
|
Posted by: Paranee - 02-16-2004, 08:55 AM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல்
- Replies (2)
|
 |
கலைந்த கவிதை
தமிழ்க் கவிதையுலகில் மன்னவன்| கந்தப்பு என அழைக்கப்பட்ட இளைப்பாறிய ஆசிரியர் முருகேசு கந்தப்பு நேற்று கரவெட்டியில் உள்ள தனது இல்லத் தில் காலமானார்.
பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியரான இவர், பண்டித மணி சி.கணபதிப்பிள்ளையின் மாணவர்களுள் ஒரு வர். அத்துடன், பண்டிதமணியினால் ஷமன்னவன்| என அழைக்கப்பட்டிருந்தார்.
இலங்கை வானொலி மற்றும் பத்திரிகை நிறுவ னங்களினால் நடத்தப்பட்ட கவிதைப் போட்டிகளில் பங்குபற்றிப் பரிசில்கள் பெற்ற இவர், சிறந்த நகைச்சுவைப் பேச்சாளரும்கூட.
முற்போக்குச் சிந்தனையாளரான மன்னவன் கந்தப்பு அதிபராகக் கடமை யாற்றி ஓய்வுபெற்றவர். வடமராட்சியில் கம்பன் கழகம் நிறுவுவதற்குக் காரணமாக இருந்தவர்களுள் இவரும் ஒருவர்.
அன்னாரின் இறுதிக்கிரியை கரவெட்டியில் இன்று பிற்பகல் நடைபெறு கிறது.
தகவல்.உதயன்
|
|
|
|