Yarl Forum
கலைந்த கவிதை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=17)
+--- Thread: கலைந்த கவிதை (/showthread.php?tid=7470)



கலைந்த கவிதை - Paranee - 02-16-2004

கலைந்த கவிதை


தமிழ்க் கவிதையுலகில் மன்னவன்| கந்தப்பு என அழைக்கப்பட்ட இளைப்பாறிய ஆசிரியர் முருகேசு கந்தப்பு நேற்று கரவெட்டியில் உள்ள தனது இல்லத் தில் காலமானார்.
பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியரான இவர், பண்டித மணி சி.கணபதிப்பிள்ளையின் மாணவர்களுள் ஒரு வர். அத்துடன், பண்டிதமணியினால் ஷமன்னவன்| என அழைக்கப்பட்டிருந்தார்.
இலங்கை வானொலி மற்றும் பத்திரிகை நிறுவ னங்களினால் நடத்தப்பட்ட கவிதைப் போட்டிகளில் பங்குபற்றிப் பரிசில்கள் பெற்ற இவர், சிறந்த நகைச்சுவைப் பேச்சாளரும்கூட.
முற்போக்குச் சிந்தனையாளரான மன்னவன் கந்தப்பு அதிபராகக் கடமை யாற்றி ஓய்வுபெற்றவர். வடமராட்சியில் கம்பன் கழகம் நிறுவுவதற்குக் காரணமாக இருந்தவர்களுள் இவரும் ஒருவர்.
அன்னாரின் இறுதிக்கிரியை கரவெட்டியில் இன்று பிற்பகல் நடைபெறு கிறது.

தகவல்.உதயன்


- sOliyAn - 02-17-2004

அன்னாருக்கு எனது அஞ்சலிகள்! முடிந்தால் அவரது கவிதைகளை யாழில் பகிர்ந்துகொள்ளுங்கள்!


- nalayiny - 02-17-2004

உயிர் பிரிந்தாலும் கவிதை வாழட்டும் யாழில்.களத்தில் கொண்டு வந்து தாருங்கள் பரணி. அன்னாரை இழந்து தவிக்கும் அவர் தம் குடும்பத்தாhர்க்கு யாழ் களத்தின் ஊடாக எமது அஞ்சலிகள்.