| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 378 online users. » 0 Member(s) | 375 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,284
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,227
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,287
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,619
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,045
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,455
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,468
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,021
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| வசியக்காரி... பகுதி-9 |
|
Posted by: sharish - 02-13-2004, 10:36 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (3)
|
 |
[size=18]<b>வசியக்காரி... பகுதி-9
காயம் தந்த
கவிதையே...
நீ
நாகரீக ஆடையணிந்தால்
புதுக்கவிதை...!
சேலைகட்டிவந்தால்
மரபுக்கவிதை...!
பார்ப்பவர்
மனம்மயங்க
பால்குடம்கொண்ட
பருவமங்கை
நீ...!
காண்பவர்
கண்திகை;க
கண்விழிக்குள்
மின்மினி கொண்ட
மின்னல்மலர்
நீ...!
முற்பிறப்பில்
நான்
உன் செல்ல.....
நாய்குட்டியாகத்தான்
இருந்திருப்பேன்
அதனால்தானோ என்னமோ...
நீ
செல்லும்போதெல்லாம்
உன்
பின்னாலே ஓடிவர
துடிக்கிறது என்
மனசு...!
நாண்பர்கள்
என்னைப் பழிக்கிறார்கள்..!
இப்போதெல்லாம்
நான்
முன்புபோல் இல்லையாம்
நிறையவே மாறிவிட்டேனாம்...!
ஒரு
மலரின் சிரிப்பால்
மரித்துப்போனவன்
மீண்டும்
©மியல் வந்து பிறந்தேன்
என்பது
அவர்களுக்கு தெரியாது..!
மழைநீர் நதியில்
காகிதக்கப்பல் செய்து
விளையாடக் கற்றுத்தந்தேன்
நீ
என் கண்ணீர் நதியில்
விளையாடிக்கொண்டிருக்கிறாய்....!
காதல்
நீதிமன்றங்களில்
வழக்குகளும்
விசாரணைகளும்
விசித்திரமாக நடக்கும்...?!
முடிவில்
குற்றவாழி
தப்பித்துக்கொள்கிறாள்...!
நிரபராதி
தண்டிக்கப்படுகிறான்...!!!
மனசு படும்
மரண வேதனையை
இதயம்
சொல்லிக்கொண்டிருக்கிறது
கண்களிடம்...!
இதயம் வாங்கிய
அடியைப்பற்றி
கண்கள் சொல்லியழுகிறது
கன்னங்களிடம்...!
உன்னை
காதலிக்கத் தொடங்கியபின்பு
குளியலறைக்குக்கூட
காகிதமும் பேனாவும்
கொண்டுசெல்கிறேன்
அங்குதானே...
அதிகம் கவிதை
சுரக்கின்றது..!
சாப்பிடும் நேரத்தில்
சாப்பாட்டை
மிகவும் வெறுக்கிறேன்...!
உன்
நினைவுகளைத்தான்
பிழிந்து
பழச்சாறுபோல்
குடிக்கிறேன்...!
நள்ளிரவில்
நடுவீட்டுக்குள்ளே
நடந்துதிரிகின்றேன்
என்ன செய்கிறாய்...?
என்று கேட்பவர்களுக்கு
காதலித்துக்கொண்டிருக்கிறேன்
என்று
பதில் சொல்லிக்கொண்டு...!
வேகமாக
ஓடிக்கொண்டிருக்கிறது
தொடரூந்து
மெதுவாகவே வருகிறது
அவள்
நினைவுகள் மட்டும்..!
ஆறுதலாகச் செல்லும்
தொடரூந்தில்தான்
நான் ஆசையோடு ஏறுவதுண்டு
ஏனெனில்...
தொடரூந்தின்
யன்னல்களை மூடிவிட்டு
மனக்கதவை திறந்து
நானும்
அவளும்
மனசும்
காதலும்
கவிதையும்
கலந்து பேசிக்கொண்டே
பயணம் செய்ய...!
நதிகளெல்லாம்
கடலில் விழுந்து
தற்கொலை செய்வது
ஏன் என்று
இப்போது புரிகிறது
நீ
குளிக்க வராததால்...!
உன் நினைவில்
என்னையறியாமல்
எழுதிக்கொண்டிருந்தேன்
அதை...
படித்தவர்கள்
நல்ல கவிதை
என்கிறார்கள்...!
நான்
உன் பெயரைத்தானே
எழுதினேன்...?!
உன் நினைவில்
பேசிக்கொண்டும்
சிலநேரம்
சிரித்துக்கொண்டும்
நடந்தேன்...
பைத்தியம் என்கிறார்கள்...!
நான்
உன்னோடுதானே பேசினேன்...?!
(இன்னும் வரும்...)
[b]த.சரீஷ்
12.02.2004 (பாரீஸ்)</b>
|
|
|
| Flaming text |
|
Posted by: vasisutha - 02-12-2004, 09:58 AM - Forum: பொழுதுபோக்கு
- No Replies
|
 |
http://www2.flamingtext.com/
இங்கே சென்று நீங்கள் விரும்பிய எழுத்துக்களை பெறலாம். இங்கே இருப்பது
அங்கே உருவாக்கிய ஒன்று.<img src='http://66.28.32.123/netfu/tmp10022/coollogo_com_272233203.gif' border='0' alt='user posted image'>
|
|
|
| அவர்கள் அவர்களாகவே.... |
|
Posted by: sharish - 02-12-2004, 08:18 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (1)
|
 |
[size=18]<b>அவர்கள்
அவர்களாகவே....</b>
குளிர்மயமான அதிகாலை
அலாரத்தின் மணிச்சத்தம்
காதுகளை வந்தடைய
கண்திறக்காமல்
கைகளால் தடவியபடி அலாரத்தை
நிறுத்திவிட்டு...
எழுந்திருக்க மனமின்றி
ஒரு நிமிடம்
மறுபடியும் உறங்கிவிட்டு....
அ......ய்.....யோ.....
நேரமாச்சென்று அலறிக்கொண்டொழும்பி
அவசரமாய் தயாராகி
தொடரூந்து நிலையம்வரை
ஓட்டமும் நடையுமாகப் பறக்கின்றேன்...!
அங்கு...
அலைமோதும் பயணிகள் கூட்டம்
என்னைப்போலவே
எல்லோருமே அவசரங்களாய்...
எல்லோருமே என்னைப்போல்
அதிகாலை அலாரமணியோசையோடு
உறங்கிவிட்டு வருகிறார்களா...?
;அத்தனை அவசரங்களுக்கு மத்தியில்
வளமைபோல...
ஒரு தெருப்பாடகன்
ஒரு பிச்சைக்காரன்
ஒரு காதலி
இவர்களோடு நான்
பாடகன்...
தன்கையில் இருந்த புல்லாங்குழல்கொண்டு
தொடரூந்து நிலையத்தில்
எங்கோ......
ஒரு மூலையில் இருந்துகொண்டே
நாலாபுறமும்...
இசையைப்பரப்பிக்கொண்டிருக்கிறான்...!
பிச்சைக்காரன்
ஒவ்வொருவர் முன்சென்று
ஒரு "யுரோ" கிடைக்குமா....?
என...
பிச்சை கேட்டுக்கொணடிருக்கிறான்...!
காதலி...
காதலனுக்காக காத்திருக்கிறாள்..!
அவசரப்பயணிகள்
தொடரூந்துக்காக காத்திருக்கின்றனர்...!
அதோ...
தொடரூந்து வருகிறது....
நான் அதில்
ஏறும்போது பார்கிறேன்
இறங்கிச்செல்லும் அவனை...!
தொடரூந்து
மீண்டும் புறப்படும்வரை...
கட்டியணைத்தபடி ஒட்டிய உதடுபிரியாது...!
வெள்ளைக்குயில்களின்
காலைமுத்தச்சத்தம்கலந்த புல்லாங்குழலோசை-என்
காதுகளுக்கு ஆறுதலாக வந்தடைய...
தினமும்.....
அவசரமாகவே செல்கின்றேன்..!
ஒரு நாள்...
வளமைபோல
பிச்சைக்காரன் ஒவ்வொருவர் முன்சென்று
பிச்சை கேட்டுக்கொணடிருக்கிறான்...!
எங்கள் தொடரூந்து வருகிறது
வளமைபோலவே
அதில் அவசரமாக ஏறிச்செல்கிறேன்
அவன் இறங்கிச்செல்லவில்லை...!!!
பாவம் காதலி
அவனுக்காகக் காத்திருக்கின்றாள்
காதலன் வரவே இல்லை..!
அதோ.....
அந்த மூலையில் இருந்து
புல்லாங்குழல் ஓசைமட்டும்
காற்றிலே கலந்து...
வந்துகொண்டே இருக்கிறது...!!!
<b>த.சரீஷ்
10.02.2004 (பாரீஸ்)</b>
|
|
|
| தேர்தல் |
|
Posted by: ganesh - 02-11-2004, 04:33 PM - Forum: புலம்
- Replies (5)
|
 |
தேர்தல் 2004
வெகுவிரைவில் நடைபெறவுள்ள தேர்தல்
சம்பந்தமான சகலகருத்துக்களையும்
ஊடகங்களில் வெளிவந்த செய்திகள்
தேர்தல் சம்பந்தமான துணுக்குகள்
சகலதையும் இங்கு பகிர்ந்துகொள்ளுங்கள்
நன்றி
கணேஸ்
|
|
|
| அமைதி முயற்சிக்கு பின்னடைவு - புலிகள் |
|
Posted by: kuruvikal - 02-09-2004, 03:30 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
அமைதி முயற்சிக்கு பின்னடைவு - விடுதலைப் புலிகள்!
<img src='http://www.webulagam.com/homepage/mainimages/img2_292004_44357am.jpg' border='0' alt='user posted image'>
இலங்கை நாடாளுமன்றத்தை அதன் ஆயுட் காலத்திற்கு முன்னரே கலைத்துவிட்டு தேர்தல் நடத்த உத்தரவிட்டிருக்கும் அதிபர் சந்திரிகாவின் முடிவு, இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு காண மேற்கொள்ளப்பட்டு வந்த அமைதி முயற்சிகளுக்கு ஆபத்தான பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆண்டன் பாலசிங்கம், தமிழர் தேசியப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காண்பதில் சிங்கள அரசியல் தலைமைக்கு உள்ள உறுதியின்மையையே இந்த முடிவு வெளிப்படுத்துகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
புலிகள் ஆதரவு இணையத்தளமான தமிழ்நெட்.காமிற்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ள ஆண்டன் பாலசிங்கம், கொழும்புவில் ஏற்பட்டுள்ள அரசியல் நிச்சயமற்றத்தன்மையும், குழப்பமும் நீடித்தாலும், விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தை தொடர்ந்து தீவிரமாக கடைபிடிப்பார்கள் என்று கூறியுள்ளார்.
அமைதி முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததன் வாயிலாகவும், போர் நிறுத்தத்தை எந்தவித மீறலும் இன்றி தீவிரமாக கடைபிடித்து வருவதும் அமைதி முயற்சிகளின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உள்ள நேர்மையான அக்கறையை சர்வதேச சமூகம் நன்கு புரிந்து கொண்டுள்ளது என்று கூறியுள்ள ஆண்டன் பாலசிங்கம், தேர்தல் முடிந்து புதிய ஆட்சியில் பொறுப்பேற்று அமைதி முயற்சிகளை தொடர்வது வரை காத்திருக்காமல் தமிழர்களுக்கு தேவைப்படும் மனிதாபிமான உதவிகளை உடனடியாக செய்ய முன்வருமாறு உலக நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய உரிமைகளையும், எதிர்பார்ப்புகளையும் அமைதி வழியில் பெற்றுத் தர முன்வந்த அரசியல் சக்திகளுக்கு சிங்கள மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சிக் கூட்டணிக்கு மறைமுகமாக ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார் பாலசிங்கம்.
இந்த தேர்தலில், தமிழர்களுடன் அமைதியாக ஒன்றிணைந்து ஒருமித்து செழிப்புடன் வாழ்வதா? அல்லது தங்களுடைய சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் அரசியல் விடுதலைக்கு தமிழர்களைத் தள்ளுவதா என்கின்ற கேள்விக்கு இலங்கையின் பெரும்பான்மை சிங்கள சமூகம் விடையளிக்க வேண்டும் என்று ஆண்டன் பாலசிங்கம் கேட்டுக் கொண்டுள்ளார்.
---------------
webulagam.com
|
|
|
|