| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 385 online users. » 0 Member(s) | 382 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,285
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,227
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,288
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,620
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,046
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,456
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,470
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,022
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| வைரமுத்துவுக்கு ஒரு விருது... |
|
Posted by: kuruvikal - 02-25-2004, 12:56 PM - Forum: சினிமா
- Replies (2)
|
 |
<b>சாகித்ய அகாடமி விருது பெற்றார் வைரமுத்து</b>
<img src='http://thatstamil.com/images20/cinema/vairamuthu-300.jpg' border='0' alt='user posted image'>
கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலுக்காக கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்காக நாடு முழுவதும் 22 மொழிகளில் இருந்து கவிதை, நாவல், சிறுகதை, நாடகம், விமர்சனம் ஆகிய பிரிவுகளில் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதில் ஆனந்த விகடன் இதழில் வைரமுத்து தொடர்கதையாக எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் நாவல் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
விருதுடன் நினைவுப் பரிசையையும், ரூ.50,000 ரொக்கப் பணத்தையும் சாகித்ய அகாடமி தலைவர் கோபிசந்த் நாரங் வைரமுத்துக்கு வழங்கினார்.
பின்னர் வைரமுத்து கூறுகையில், வட்டார மொழி வழக்கைப் பயன்படுத்தியதுதான் நாவலின் சிறப்பாகும். விருது வழங்கப்பட்டபோது, எனக்கு மாலை அணிவிக்கப்பட்டது. டெல்லிப் பூக்கள் என்னை அலங்கரித்தன. அப்போது நான் கள்ளிப்பூக்களைத்தான் நினைத்தேன். அந்தப் பூக்கள் இல்லாமல் இந்த டெல்லிப் பூக்கள் இல்லை.
இன்னொரு முறை இப்படி எழுத முடியுமா என்று கேட்கிறார்கள். இதுதான் என் நாவலுக்குக் கிடைத்த உண்மையான விருதாகும். இன்னொரு இதிகாசம் படைப்பதற்கான கரு கிடைத்துள்ளது. அது என்னவென்று இப்போது சொல்ல மாட்டேன் என்றார் வைரமுத்து.
கலைஞர் வாழ்த்து:
இந் நிலையில், திமுக தலைவர் கருணாநிதி முரசொலியில் வைரமுத்துவை வாழ்த்தி எழுதியுள்ளார். அவர் தனது வாழ்த்தில், நடந்த கதையை நடமாடும் தமிழில் நனைத்துக் கொடுத்துள்ள திறமையை நினைத்து இந்த விருது போதுமானதல்லவே என்ற மனக்குறையுடன் தம்பியை வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
-------------
thatstamil.com
<b>விருது பெற்ற கவிஞனுக்கு எங்கள் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...!</b>
|
|
|
| இந்திய விண்வெளி ஏவுகணை ஏவுதளத்தில் விபத்து...! |
|
Posted by: kuruvikal - 02-24-2004, 01:28 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் பயங்கர விபத்து: 6 இஸ்ரோ ஊழியர்கள் பலி
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39893000/gif/_39893343_india_sriharikota_map203.gif' border='0' alt='user posted image'>
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவு தளத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 6 ஊழியர்கள் பலியாயினர். ஒரு பெரிய கட்டடமே சிதைந்து, தரைமட்டமானது.
சதீஷ் தாவன் விண்வெளி ஆய்வு மையம் என்றழைக்கப்படும் இந்த தளத்தில் இங்கு ராக்கெட்களை உருவாக்கும் பிரிவுகளும், ராக்கெட் ஏவுதளமும் உள்ளன.
பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் உருவாக்கப்படும் செயற்கைக் கோள்கள் இந்தத் தளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் மூலம் ஏவப்பட்டு வருகின்றன.
இங்கு ராக்கெட்டுகளுக்குத் தேவையான திட, திரவ எரிபொருள்களும் உருவாக்கப்படுகின்றன. நேற்று திட எரிபொருள் உருவாக்கும் மையத்தில் திடீரென பயங்கரமான வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அந்த மையத்தின் கட்டடம் சிதறி, சின்னாபின்னாவானது.
14.5 டன் திட எரிபொருள் வெடித்ததால் 3,000 டிகிரி வெப்பம் உண்டானது. இதில் கட்டட இடிபாடுகள் கூட உருகிப் போயின.
அங்கு பணியில் இருந்த கிருஷ்ணரெட்டி, சீனிவாசுலு, பஷீர் அகமது ஆகிய ராக்கெட் நிபுணர்களும் பண்டிட் என்ற காண்ட்ராக்ட் தொழிலாளரும் அந்த இடத்திலேயே உடல் உருகிப் போய் பரிதாபமாகப் பலியாயினர். கட்டடமும் தீப் பிடித்து வெடித்துச் சிதறி உருகியது.
மேலும் கிருஷ்ணய்யா மற்றும் சஞ்சீவ் என்ற காண்ட்ராக்ட் தொழிலாளி உள்ளிட்ட 2 பேர் கட்டட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். உடனடியாக அங்குள்ள தீயணைப்புப் படைப் பிரிவுகள் அங்கு விரைந்தன. ஆனால், தீயை அணைக்க முடியாமல் அவை திணறின.
சுமார் 4 மணி நேரம் போராடித் தான் ராக்கெட்டின் திட எரிபொருளை அணைக்க முடிந்தது. இதனால் கட்ட இடிபாடுகளில் சிக்கிய கிருஷ்ணய்யா. சஞ்சீவ் ஆகிய இருவரும் பலியாகிவிட்டனர். அவர்களது பெயர் விவரம் தெரியவில்லை.
திட எரிபொருள் உருவாக்கும் பிரிவுக்குள் நுழையும் அனைவரும் அங்கு தங்களை டிசார்ஜ் செய்து கொண்டு நுழைய வேண்டும். நம் உடலில் உள்ள சிறிய அளவிலான மின் இயக்கம் கூட திட எரிபொருளைத் தூண்டி வெடிக்கச் செய்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று இந்த மையத்தில் உருவாக்கப்பட்ட திட எரிபொருளாள் ஆன ராக்கெட் பூஸ்டர் இன்னொரு இடத்துக்கு மாற்றப்பட்டுக் கொண்டிருந்தபோது அது வெடித்துச் சிதறியதாக இஸ்ரோ செயலாளரான தாஸ் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து மிக உயர் மட்ட விசாரணைக்கு இஸ்ரோ உத்தரவிட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கிருஷ்ணபிரசாத், நாராயணன் மற்றும் சச்சின் ஆகியோர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் நாராயணனைத் தவிர மற்ற இருவரும் கவலைக்கிடமாக உள்ளனர்.
இந்த விண்வெளி மையத்தில் நடந்துள்ள முதல் பெரிய விபத்து இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்து குறித்து அறிந்தவுடன் இந்திய விண்வெளி ஆய்வு கழகத் (இஸ்ரோ) தலைவர் மாதவன் நாயர் பெங்களூரில் இருந்து சென்னை வந்தார். அங்கிருந்து சிறப்பு ஹெலிகாப்டரில் ஸ்ரீஹரிகோட்டா புறப்பட்டுச் சென்றார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்தச் சம்பவம் மிகவும் துயரமானது. இருப்பினும் இதனால் ஸ்ரீஹரிகோட்டா மையத்தின் பணிகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார்.
இதற்கிடையே ஸ்ரீஹரிகோட்டாவைச் சுற்றிலும் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு முழு உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெடி விபத்தில் பலியான4 இஸ்ரோ ஊழியர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது. அதே போல பலியான காண்ட்ராக்ட் தொழிலாளிகள் இருவரின் குடும்பத்தினருக்கும் உரிய நிவாரணம வழங்கப்படும் என்று விண்வெளி ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.
விபத்தால் இஸ்ரோவுக்கு ரூ. 70 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவ் விபத்து குறித்து ஆராய ராக்கெட் நிபுணர் ஆராவமுதன் தலைமையில் உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
-------------
Thatstamil.com and BBC.com
|
|
|
| இது நியாயமா? |
|
Posted by: mohamed - 02-24-2004, 11:09 AM - Forum: புலம்
- Replies (41)
|
 |
நண்பர் ஒருவர் நேற்று ஒரு செய்தியை இங்கு போட்டாராம். இந்த செய்தி லண்டனில் இரந்து வெளிவரும் பதினம் பத்ததிரிகையில் வந்த செய்தி, ஆனால் அதை கள நிருவாகம் தடை செய்து விட்டது, இது என்ன நியாயம் என்று அவர் கேட்கிறார். பத்திரிகை சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எல்லாம் யாழ் கழத்திற்கு கிடையாதா என்ற அவர் கேட்ட அந்த வினாக்களுக்க நான் பதிலளிக்க முடியவில்லை. அந்த அன்பரை இந்த களத்திற்கு அறிமுகதம் செயதவ்ன என்ற முறையில் இந்த கேள்வியை விடுக்கிறேன். அவர் சொன்ன செய்தி ஒரு தொலைக்காட்சி ஒன்றின் நிர்வாக மாற்றம் சம்பந்தப்பட்டது. ரீபீசி வானொலி பற்றியும், ஈரீபிசி வானொலி பற்றியும் எழுதியபோது மௌனம் காத்தவர்கள் நண்பரின் செய்தியை அதுவும் உலகம் அறிந்த செய்தியை தடை செய்த மர்மம்? இது தான் ஊடக தர்மமா? நஒ;பர் இனி இந்த களப்பக்கம் வரமாட்டேன் என்றும் இப்படி அராஜகவாதிகள் நடாத்தும் இணையத்தளங்கள் மக்களுக்கு ஒரு பயனும் தரப்போவதில்லை என்பதும் அவர் கருத்து. விளக்கம் தர முடியுமா?
|
|
|
| எல்லாருக்கும் வணக்கம், |
|
Posted by: Ramanan - 02-24-2004, 07:44 AM - Forum: அறிமுகம்
- Replies (10)
|
 |
எல்லாருக்கும் வணக்கம்,
"இனிவரும் காலத்தில் எம்இனம் அழிந்து விடும் என எவனோ சென்னான், ஆனால் இனிவரும் காலத்தில் எம்இனம் எழுந்து நிற்கும் என இறுமாப்புடன் இடித்துரைத்தோம் அன்று. ஆனால் இன்று?"
களத்தில யார் கருத்துச்சொன்னாலும் அதை சேறா மாத்தி ஆளுக்காள் எறிபடிறது கூடிப்போச்சு, அதால புதியவர்கள் தங்கட கருத்துக்களும் நாறிப்போடும் எண்டு நினைக்கினம் போல. நானும் அப்பிடித்தான் நினைக்கிறன். கருத்துள் பகிரப்படும்போது அதின்ட முக்கியத்துவம் விளங்காம அதை தனிப்பட்ட சண்டைக்கு பாவிக்கிறது புதிசா வாறவயயும், புதுக்கருத்துக்களையும் வலுவிளக்கச் செய்யிது. முந்தி நல்ல கருத்ததுக்கள் எழுதினவ கூட இப்ப சேற்ற வாரி இறைக்கிறதிலதான் முன்னுக்கு நிக்கினம். எப்பமாறும் இது? யோசிப்பம்.
|
|
|
| இந்த 21ம் நூற்றாண்டிலும்.... புலத்தில் தமிழ்ப் பெண்கள்... |
|
Posted by: Mathan - 02-23-2004, 09:45 PM - Forum: புலம்
- Replies (19)
|
 |
<span style='font-size:30pt;line-height:100%'>இந்த 21ம் நூற்றாண்டிலும்.... புலத்தில் தமிழ்ப் பெண்கள்...</span>
இந்த 21ம் நூற்றாண்டிலும், தமக்குள்ளே ஊறிப் போயிருக்கும் பழைமைகளைக் களைந்தெறியத் தைரியமின்றி, தமக்கு முன்னே கட்டியெழுப்பியிருக்கும் கலாச்சார வேலிகளைத் தாண்டும் துணிவின்றி, மரபுத் தூண்களுக்குள் மறைந்து நின்று, வழமை என்ற கோட்பாட்டால் தமக்குத் தாமே விலங்கிட்டு எம்மில் சில பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
பெண்ணுக்கு விடுதலை கிடைத்து விட்டது என்றும், பெண் சுதந்திரமாகத்தானே வாழ்கிறாள் என்றும், பெண்ணியம் பேசுவது தற்போதைய நாகாPகம் என்றும் பிதற்றும் ஆண் சமூகத்துக்கு, அந்த ஆண்சமூகம் தம்மைத்தான் மிதிக்கிறது என்று தெரியாமல், புரியாமல் குடை பிடித்துப் பலம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் சில பெண்கள்.
இவர்களின் இந்த அறியாமை நிறைந்த செயற்பாடுகளினால் பெண்விடுதலை என்பது இன்னும் எட்டாத உயரத்திலேயேதான் இருக்கிறது.
ஆங்காங்கு ஓரிரு பெண்களுக்கு சந்திரமண்டலத்தில் காலடி வைக்கவும், ரெயின் ஓட்டவும், விமானமோட்டவும் - ஏன்...! இன்னும் பெண்களால் முடியாதென்று சொல்லி வைத்த வேலைகளிலெல்லாம் தடம் பதிக்கவும் அனுமதி கிடைத்தாலும், அவை சாதனைகளாகவே அமைந்தாலும் - மிகுதி ஒட்டு மொத்தப் பெண்களுக்கும் இவைகளையே சுட்டிக் காட்டி வெறுமனே கண்துடைப்புத்தான்; செய்யப் பட்டுக் கொண்டிருக்கிறது. உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் இன்னும் எத்தனையோ பெண்கள் அடக்கப் பட்டுக் கொண்டும் ஒடுக்கப் பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்.
பெண்கள் மீதான அநீதியும் அடக்குமுறையும் உலகெலாம் பரந்து இருக்கும் அதே வேளையில் ஆங்காங்கு பலபெண்கள் தம்பலம் உணர்ந்து, தாழ்வு மனப்பான்மை துறந்து வாழ்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.
பின் வளவுக்குப் போகவே துணை தேடிய எமது தாயகப் பெண்கள் இன்று எம் மண்ணிலே நிமிர்ந்து நிற்கிறார்கள். ஆணுக்கு நிகராக ஆயுதந்தூக்கி வீரியத்துடன் போராடுகிறார்கள். தாமே போர்க்கப்பல்களைத் தயாரித்து எந்த ஆண் துணையும் இன்றி தாமே அதைக் கடலில் இறக்கி.... தனித்து நின்று தைரியமாக போரியலில் காவியம் படைக்கிறார்கள். சமூகத்தின் போலிக் கலாச்சார அடக்கு முறைகளைத் தூக்கியெறிந்து, அநீதி என்று கண்டதை வெட்டிச் சாய்த்து தாய் மண்ணுக்காய் உயிரை விடுவதும் போராட்டக்களங்களிலும் ஆங்காங்கு வேறு கல்வி கலை....... சார்ந்த இடங்களில் சாதனை புரிவதும் என்று பெண் இனத்துக்கே பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனாலும் எமது தமிழ்ப் பெண்களின் விகிதாசாரத்தில் அவர்கள் மிகவும் சொற்பமானவர்களே! அவர்கள் தவிர்ந்த எஞ்சியுள்ள பெண்கள் மீதான அடக்குமுறைகளும் வன்முறைகளும் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
எல்லாப் பொருட்களையும் பணம் பெறுவதற்காக விற்பார்கள். கல்யாண சந்தையில் மட்டும் பெண் என்ற உயிர்ப்பொருள் பணம் கொடுத்து இன்னொருவனுக்குச் சுகம் கொடுப்பதற்காக விற்கப் படும்.
இந்த வேடிக்கையான விற்பனைச் சந்தையில் திருமண பந்தத்தில் இணைந்தால்தான் சமூகத்தில் ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்ற நிலையில், தாய் தந்தையரின் திருப்திக்காகவேனும் திருமணத்துக்கு முகம் கொடுப்பதற்காக, முகம் தெரியாத பொறுப்பற்ற கணவன்மார்களிடம் வாழ்வைத் தொலைத்து ஜடமாகிப் போன எமது தமிழ்ப் பெண்கள் எத்தனையோ பேர். இவர்கள் புலத்தில் மட்டுமல்ல. போரியலில் புதுச் சரித்திரம் எழுதிக் கொண்டிருக்கும் எமது தாய்நிலத்திலும் இன்னும் வாழ்ந்து கொண்டு தானிருக்கிறார்கள். ஆனாலும் புலத்தில் இவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகவே இருக்கிறது.
பிரச்சனை என்று வரும் போது தாய்நிலத்தில் உறவுகள் சொந்தங்கள் பந்தங்கள் என்ற பக்கத் துணைகளும் அவர்களது உதவிகளும் ஓரளவுக்காவது ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைக்கிறது.
ஆனால் இங்கே புலத்தில் கணவன் என்ற ஒருவனை மட்டும் நம்பி கனவுகளைச் சுமந்து வந்த தமிழ்ப்பெண்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாகவும் அவலத்துக்குரியதாகவும் அமைந்து விடுகிறது.
எதைச் செய்ய நினைத்தாலும் கருவிலேயே ஆரம்பிக்கப் பட்ட நீ பெண்! அதனால்.......... என்ற திணிப்புக்கள் பதியப் பட்ட மூளையிடமிருந்து மீளமுடியாததொரு குற்ற உணர்வினாலும், கணவன், சமூகம் இணைந்த ஒரு கும்பலின் பல் வேறுவிதமான அழுத்தங்களை எதிர் நோக்க முடியாத ஆனால் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையினாலும், துரோகங்களினால் ஏற்படும் ஏமாற்றங்களினாலும் இவர்கள் துவண்டு நட்டாற்றில் விடப்பட்ட வள்ளங்கள் போலத் தள்ளாடிப் போகிறார்கள்.
தம்மை வாழ்க்கையில் தோற்றுப் போனவர்களாககத் தாமே கருதி விரக்தியடைந்து உளவியற் தாக்கங்களுக்கு ஆளாகி விடுகிறார்கள். இந்த உளவியற் தாக்கங்களுக்கு எந்த விதமான சிகிச்சைகளும் கிடைக்காத ஒரு காலகட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் மெதுமெதுவாக மனநோயாளிகளாகித் தற்கொலைக்குத் தயாராகியும் விடுகிறார்கள்.
இதனால் இன்று புலத்தில் கலாச்சாரம் என்ற போலி வேலிக்கு நடுவே தற்கொலை என்ற சமாச்சாரம் ஆழ வேரூன்றி விட்டிருக்கிறது. ஏன் இது தமிழ் சமூகத்தில் அடிக்கடி ஏற்படுகிறது என ஐரோப்பியர்கள் ஆராய்ச்சி செய்யுமளவுக்கு துன்பியல் நிறைந்த இந்தத் தற்கொலைச் சமாச்சாரம் புலத்தில் பிரபல்யமானதொன்றாகி விட்டது.
சில மாதங்களுக்கு முன்னர் யேர்மனியில் நடந்த ஒரு சம்பவம் -
19 வயது மட்டுமே நிரம்பிய அந்தப் பெண் தாய்க்கு ஒரு மகளாம். யேர்மனிய மாப்பிள்ளையிடம் என்று சொல்லி சகல சீதன சம்பிரதாயங்களுடன் கனவுகளையும் சுமந்து கொண்டு இங்கு யேர்மனிக்கு வந்து சேர்ந்திருக்கிறாள். வந்த பின்தான் கணவனுக்கு வேற்று நாட்டைச் சேர்ந்த இன்னொரு பெண்ணுடன் தொடர்பிருப்பது தெரிய வந்தது. எந்தப் பெண்ணால்தான் இதைத் தாங்க முடியும்.
இவள் வந்த பின்னாவது அவன் அந்தப் பெண்ணை விட்டு வந்து இவளுடன் ஒழுங்காகக் குடும்பம் நடத்தியிருக்காலம். அவன் அதைச் செய்ய வில்லை. தான் ஆண் என்ற திமிர்த்தனத்துடன் இருவருடனும் குடித்தனம் நடத்தியிருக்கிறான்.
அதுமட்டுமல்லாமல் அடி உதைகளால் அவள் வாயைக் கட்ட முனைந்திருக்கிறான். இந்தக் கொடுமையினால் மனம் துடித்த அந்தப் பெண் அக்கம் பக்கம் உள்ள தமிழ்க் குடும்பங்களிடம் சாடைமாடையாக தனது மனக்குமுறலைக் கொட்டியிருக்கிறாள்.
ஒரு ஆண் என்ன செய்தாலும் பிரச்சனையில்லை. பெண் சரியாக நடக்க வேண்டும் என்ற கருத்துக் கொண்டவர்கள்தானே எம்மவர்கள். அவர்கள் அவளை அனுசரிச்சுப் போகும் படியும் சமாளிக்கும் படியும் புத்தி சொல்லியுள்ளார்கள்.
அவளை வாழும் நாட்டின் மொழி படிக்கவோ அல்லது ஏதாவது வேலைக்குப் போகவோ அந்தக் கணவன் அனுமதிக்கவில்லை. அதனால் அவளுக்கு யேர்மனியரிடம் தனது பிரச்சனையைச் சொல்லி உதவி கேட்குமளவுக்குப் பாசை தெரியாது. யாருடனும் பரிட்சயமும் கிடையாது.
இந்த நிலையில் கணவன் என்பவன் இன்னொருத்தியிடம் போய் விட்டான் என்பது தெரிந்த பொழுதுகளில், தனியாக வீட்டில் இருந்து அலை மோதும் கொடிய நினைவுகளோடு போராடிக் கொண்டு எத்தனை காலத்துக்குத்தான் ஒரு பெண்ணால் தனியாக வாழ முடியும்..??
முழுமையான இரண்டு வருடம் கூட அவள் வாழ்வு இங்கே நீளவில்லை. தனியான ஒரு பொழுதில் கழுத்துக்குக் கட்டும் சால் எனப்படும் சால்வை போன்ற நீண்ட துண்டை தான் வாழும் இரண்டாவது மாடியின் யன்னலில் கொழுவி அதைத் தன் கழுத்தில் போட்டுத் தொங்கி தன்னை மாய்த்துக் கொண்டு விட்டாள்.
இவள் இறப்புக்கு யார் காரணம்?
கணவன் என்ற கயவன் முதற் காரணமாக இருந்தாலும், அவன் மட்டுமல்ல அந்தப் பெண்ணின் இறப்புக்குக் காரணம். பாரா முகமாய் இருந்த எமது தமிழ்ச் சமூகமும்தான்.
அந்தப் பெண்ணுக்கு அவர்கள் ஆறுதல் கூறியிருக்கலாம். நிலைமை மோசமாகும் கட்டத்தில் அவள் தற்கொலை வரை போகாத படிக்கு அவளை ஒரு பெண்கள் பாதுகாப்பு நிலையத்தில் சேர்த்து விட்டிருக்கலாம். ஆனால் செய்ய வில்லை. அசிரத்தையாக இருந்து விட்டார்கள். மறைமுகமாக ஒரு கொலைக்குத் துணை போயிருக்கிறார்கள்.
இவைகள் மட்டு மல்ல. புலத்தில் இப்போதெல்லாம் பல புதுப் புதுக் கலாச்சாரங்கள் முளை விடவும் கிளை விடவும் தொடங்கியிருக்கின்றன.
அவற்றில் ஒன்று மனைவியை வீட்டில் வைத்து விட்டு கணவன் என்பவன் வேறு பெண்களைத் தேடிச் சென்று அரட்டை அடித்து வருவது. வேறு பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பது போன்ற செயற்பாடுகள். இது பற்றி மனைவி அறிந்து கேட்டால் அவளை அடியால் உதையால் வார்த்தையால் அடக்கி விடுவது.
இதனால் மனைவி என்பவள் சமைப்பவள், படுக்கை விரிப்பவள்.... என்ற வரையறைக்குள் இருந்து கொண்டு அதிலிருந்து விலக முடியாமலும், அடி உதை நச்சரிப்பு போன்ற வதைகளிலிருந்து மீள முடியாமலும் ஒரு வேலைக்கார்p போன்றதான பிரமையைத் தனக்குள் தானே வளர்த்துத் தனித்து வாழ்கிறாள்.
வெளியில் சொன்னால் மானம் போய்விடும்... என்ன நினைப்பார்கள்... என்றதான போலிக் கௌரவத்துக்குள் தன்னைப் புதைத்து விடுகிறாள். கணவனை விட்டுப் போனால் கலாச்சார வேலி தாண்டி விட்டாள் என சமூகம் சொல்லும் எனப் பயந்து உள்ளுக்குள்ளேயே தன்னை ஒடுக்கி உடைந்து போகிறாள்.
இப்படியாக - எமது பெண்கள் இதை யாருடனும் பேசாது தற்கொலை வரை போவதற்கும் எமது சமூகமே முக்கியமான காரணமாகிறது.
பாதிக்கப் பட்டவளுக்கு உதவுவதை விட அவள் ஆற்றாமை தாங்காது தன் வீட்டுப் பிரச்சனையை சொல்லி உதவி கேட்கும் போதோ அல்லது மன ஆறுதல் தேடும் போதோ அதைக் கேலிக்குரிய விடயமாக எடுத்து மற்றவருடன் சேர்ந்து பாதிக்கப் பட்ட பெண்ணையே பரிகசிக்கத் தொடங்கி விடும் எமது சமூகம் இது விடயத்தில் பாரிய குற்றவாளியாக தன் மேல் முத்திரை குத்திக் கொள்கிறது.
தற்கொலை என்று நடைபெறும் போது அதிர்ச்சியில் வாய்பிழந்து விட்டு, அடுத்த நிமிடமே அந்தப் பெண் மேல் இல்லாத பொல்லாத கதைகளையெல்லாம் கட்டி விட்டு நின்று வேடிக்கை பார்க்கிறது.
இதுவே கணவன் என்ற பெயரில் பெண்களை வதம் செய்யும் ஆடவர்க்கு நல்ல சாதகமாகி விடுகிறது. இறந்தவள் மனநோயாளி. அவள் இங்கே வந்ததிலிருந்து இப்படித்தான். எல்லாத்துக்கும் சந்தேகம்தான்..... என்பது போன்றதான கணவனின் பொய் பிரச்சாரத்துக்கு உறுதுணையாகிவிடுகிறது.
இந்த நிலை மாற வேண்டும். எமது சமூகம் திருந்த வேண்டும்.
பிரச்சனைகளில் வீழ்ந்து போன பெண்களைக் காக்க சமூகம் ஆரோக்கியமான பிரயோசனமான உதவிகளைச் செய்ய முன் வர வேண்டும். ஒரு பெண்ணுக்கு பிரச்சனை என்று வரும் போது அதைத் தமக்கு வந்ததாக எண்ணி உடனடியாக அதைத் தடுப்பதற்கான வழிகளில் தம்மை ஈடு படுத்த வேண்டும். வலிந்து உதவ வேண்டும்.
ஊரென்ன சொல்லும்? உலகமென்ன சொலலும்? சமூகமென்ன சொல்லும் ? என்று தாமே தமது ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் விலங்கிடும் பேதைத் தனம் பெண்களிடமிருந்து ஒளிய வேண்டும். அதற்கான தைரியத்தை சுற்றியுள்ள சமூக உறுப்பினர்கள் வலுவோடு கொடுத்து உறுதுணையாக இருக்க வேண்டும்.
தமது பிரச்சனைகளை மற்றவர்களுடன் பேசும் துணிவும் தைரியமும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வரவேண்டும். தமது பிரச்சனைகளை மட்டுமின்றி தம்மைச் சுற்றியுள்ள மற்றைய பெண்களின் பிரச்சனைகளையும் கூடத் தயக்கமின்றி வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்கு இவர்கள் தயாராக இருக்க வேண்டும்.
நாம் என்ன செய்கிறோம்? என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும் என்பதையும் உண்மை , நேர்மை, கடமை, கண்ணியம், சரியெனப் பட்டதைச் செய்யும் துணிவு, நினைத்ததை செயற்படுத்தும் தைரியம், அறிவார்ந்த செயற்பாடு.......... இப்படியான விடயங்கள்தான் எமது வாழ்வுக்குத் தேவை என்பதையும் யாருக்கும் பயந்து வாழ்ந்தோமேயானால் எமக்கான வாழ்வு இல்லாமல் போய்விடும். என்பதையும் மன உளைச்சலினால் பாதிக்கப் பட்ட பெண்களுக்கு உணர்த்த வேண்டும். தன்னம்பிக்கையை முடிந்தவரை அவர்களுக்கு ஊட்ட வேண்டும்.
இப்படியான செயற்பாடுகளால்தான் இந்தத் தற்கொலைக் கலாசாரத்திலிருந்து நாம் எம்மை மீட்டுக் கொள்ள முடியும்.
எமது சமூகத்தில் உள்ள இன்னொரு பெரிய பிழையும் பிரச்சனையும் என்ன வென்றால் அனேகமான ஆண்கள் தமது கூடிய பொழுதை வெளியிலேயே கழிக்கிறார்கள். ஒரு சாராருக்கு நாள் முழுக்க வேலையென்றால் இன்னொரு சாரார் வேலை முடிய வெளியில் நண்பர்களிடம் சென்று விடுகிறார்கள். இன்னும் சிலரோ நண்பர்களையே வீட்டுக்கு அழைத்து வந்து வரவேற்பறையிலோ சாப்பாட்டு மேசையிலோ இருந்து அரட்டை அடிக்கவோ குடிக்கவோ தொடங்கி விடுகிறார்கள்.
இந்த வெளியுலகமும் பொழுது போக்கும் ஆண்களுக்கு மட்டுமே என்பதான பிரமை எமது சமூகத்தில் ஏற்படுத்தப் பட்டு விட்டது. இந்தப் பிரமையின் பாதிப்பை பல ஆண்கள் உணர்ந்து கொள்வதும் இல்லை. இதனால் அவர்களது மனைவியர் தனிமைப் படுத்தப் படுவதைப் புரிந்து கொள்வதும் இல்லை.
மனைவி என்பவள் சமையல், சாப்பாடு, உடைகள்...... நேரம் கிடைத்தால் தொலைக்காட்சி அல்லது வானொலி போன்றவைகளுடனேயே வாழ்கிறாள். கணவன் வீட்டில் நிற்கும் நேரத்தில் கூட தனிமைதான் அவளுக்குத் துணையாகிறது.
கணவனும் அவரது நண்பர்களும் வீட்டில் நிற்பதால் ஒரு மனைவி மன நிறைவாக இருக்கிறாள் என்றும் கலகலப்பாக இருக்கிறாள் என்றும் கருத்துக் கொள்ள முடியாது. கணவன் என்பவன் தன்னோடு கூட இருந்து மனம் விட்டுப் பேசி வீட்டின் ஒவ்வொரு வேலையிலும் பங்கு கொள்ளும் போதுதான் ஒரு மனைவி தனக்கென ஒருவன் இருப்பதை உணர்கிறாள்.
ஆனால் எம்மவர்களில் எத்தனை பேர் மனைவியின் ஒவ்வொரு வேலையிலும் பங்கெடுக்கிறார்கள். எத்தனைபேர் ஒவ்வொரு நாளும் ஒரு கொஞ்ச நேரத்தையாவது மனைவிக்காக ஒதுக்கி அவளை அழைத்துக் கொண்டு வெளியில் போய் ஒரு ரம்மியமான இடத்திலிருந்து கதைத்து விட்டு வருகிறார்கள். எத்தனை பேர் குடும்பம் என்ற கூட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
ஓட்டு மொத்தக் கணவன்மாரும் அப்படி ஏனோதானோ என்று நடந்து கொள்வதில்லை என்பது உண்மைதான். ஆனால் பெரும்பான்மையான கணவர்கள் - இஞ்சரும், நான் கொஞ்சம் வெளியிலை போட்டு வாறன். - என்று சொல்லி தாம் மட்டுமாய் வெளியில் போய் விட்டு வருகிறார்கள். - என்னால் இந்த சொற்ப நேரத்தில் கூட வீட்டில் இருக்க முடியவில்லை. எனது மனைவி நாள் முழுக்க வீட்டில் இருக்கிறாளே! அவளுக்கு ஒரு மாற்றம் வேண்டுமே! -என்று. அனேகமான எந்தக் கணவன்மாரும் யோசிப்பதில்லை.
உழைப்பு, பணம்... இவைகள் மட்டுந்தான் குடும்பம் என்ற கோயிலின் தனித்துவங்கள் என்றும் இதனால் ஒரு பெண் திருப்திப் பட்டு விடுவாள் என்றும் ஆண்கள் நினைத்துக் கொண்டு செயற் பட எத்தனையோ ஆயிரம் புலம் பெயர் பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி மனம் பொசுங்கிக் கிடக்கிறார்கள். இவர்கள் கூட நாளடைவில் உளவியற் தாக்கங்களுக்கு ஆளாவது தவிர்க்க முடியாததொன்றாகி விடுகிறது.
அடுத்து நாம் இங்கே எதிர் நோக்கும் பிரச்சனைகளில்.. இப்படியான தனிமைப் படுத்தப் பட்ட பெண்களின் தனிமையைச் தமக்கு சாதகமாக்கி தமது நண்பனின் மனைவிக்கே வலை விரிக்கும் ஆண்கள்...
ரீன்ஏஜ் பருவத்தில் பெண்குழந்கைளிடம் ஏற்படும் மாற்றங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டு வீட்டுக்குள் புகுந்து ரீன்ஏஜ் குழந்தைகளுக்கே வலை விரிக்கும் அப்பாவின் நண்பர்கள்..... என்று புலத்தில் ஒரு பெரிய சீரழிவு தலை விரித்து ஆடுகிறது.
இவைகளில் இருந்து எமது பெண் பிள்ளைகளும் இளம் பெண்களும் காப்பாற்றுப் பட விழிப்புணர்வு குழந்தைப் பருவத்திலிருந்தே ஊட்டப் பட வேண்டும். அந்தத் தலையாய கடமை பெற்றோரையே சார்ந்தது.
இது பற்றியதான ஒரு விளக்கத்தையும் இன்றைய எனது கட்டுரைக்குள் அடக்க நினைத்தால் கட்டுரை அளவுக்கதிகமாக நீண்டு விடும். அதனால் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் இவைகள் பற்றியதான விரிவான ஒரு பார்வையுடன் வருகிறேன்.
நன்றி - சந்திரவதனா http://www.selvakumaran.de/
|
|
|
| இலக்கியத்தில் என்னைக் கவர்ந்த தலைசிறந்த காதல் காட்சி |
|
Posted by: Mathan - 02-23-2004, 09:13 PM - Forum: தமிழும் நயமும்
- Replies (6)
|
 |
படித்து சுவைத்தது - BBC
<span style='font-size:25pt;line-height:100%'>இலக்கியத்தில் என்னைக் கவர்ந்த தலைசிறந்த காதல் காட்சி - பொன்னியின் செல்வன்</span>
படிக்கப் படிக்கத் தெவிட்டாத "பொன்னியின் செல்வன்"நாவலில் அமரர் கல்கி எழுதிய கீழ்வரும் காட்சிக்கு இணையான காதல் காட்சி வேறு எந்த மொழி இலக்கியத்திலும் இருக்க முடியாது என்பதே என் கருத்து. காட்சியைக் கண்டுவிட்டு வாருங்கள், ஏனென்று சொல்கிறேன்.
(வந்தியத்தேவன் சிறையில் இருக்கிறான். இளவரசி குந்தவை அவனைப் பார்க்க அங்கு வந்திருக்கிறாள்.)
"... போதும்! என்னைச் சிறையிலிருந்து விடுதலை செய்து விடுங்கள்! என் வழியே போகிறேன்..."
"(அப்படியானால்) உமக்கு விடுதலை கிடையாது! இந்தச் சிறையிலேயே நீர் இருந்து வரவேண்டியது தான்"என்றாள்.
வந்தியத்தேவன் கலகலவென்று சிரித்தான்.
"நீர் எதற்காகச் சிரிக்கிறீர்? நான் சொல்வது வேடிக்கை என்றா?"
"இல்லை, தேவி! இந்தச் சிறையிலிருந்து தாங்கள் என்னை விடுதலை செய்யாவிட்டால், நான் இதிலிருந்து தப்பிச் செல்ல முடியாதா?"
இளவரசி ஒரு கணம் வந்தியத்தேவனைத் தன் மலர்ந்த கண்களால் உற்றுப் பார்த்து விட்டு,
"ஐயா, நீர் கெட்டிக்காரர்; அதிலும் சிறையிலிருந்து தப்பிச் செல்வதில் மிகக் கெட்டிக்காரர். பழுவேட்டரையரின் பொக்கிஷ நிலவறையிலிருந்து தப்பிச் சென்றவருக்கு இது ஒரு பிரமாதமா?"என்றாள்.
"அப்படியானால், நீங்களே கதவைத் திறந்து என்னை விடுதலை செய்யுங்கள்."
"நானே இந்தச் சிறையைத் திறந்து விடலாம். அல்லது நீரும் தப்பிச் செல்லலாம். ஆனால் இன்னொரு சிறைச்சாலையிலிருந்து நீர் தப்ப முடியாது..."
"சின்னப் பழுவேட்டரையரின் பாதாளச் சிறையைச் சொல்கிறீர்களா?"
"இல்லை; அதுவும் உமக்கு இலட்சியமில்லை; பாதாளச் சிறைவாசலில் காத்திருக்கும் புலிகளையும் வென்றுவிட்டுத் தப்பிச் சென்று விடுவீர்..."
"பின்னே, எந்தச் சிறையைச் சொல்கிறீர்கள்?"
"என்னுடைய இதயமாகிய சிறைச் சாலையைத் தான் சொல்கிறேன்."
"தேவி! நான் வீடு வாசல் அற்ற அநாதை. என்னுடைய குலப் பெருமையெல்லாம் பழைய கதை, கவிஞர் கற்பனை. தாங்களோ மூன்று உலகையும் ஒரு குடை நிழலில் ஆளும் சக்கரவர்த்தியின் செல்வக்குமாரி..."
"யார் கண்டது? இந்தச் சோழ குலத்தின் பெருமையும் ஒரு நாள் பழைய கதை ஆகலாம்."
"ஆயினும், இன்றைக்குத் தாங்கள் இந்நாட்டில் இணையற்ற அதிகாரம் படைத்தவர். சக்கரவர்த்தியும், பழுவேட்டரையர்களும், முதன்மந்திரியும் தங்கள் விருப்பத்துக்கு மாறாக நடக்கத் துணிய மாட்டார்கள்..."
"இதெல்லாம் உண்மையாயிருந்தால், நீர் மட்டும் எவ்விதம் என் அதிகாரத்தை மீற முடியும்?"
"அரசாங்க அதிகாரம் வேறு விஷயம். தாங்கள் நெஞ்சின் அதிகாரத்தையல்லவா குறிப்பிட்டீர்கள்."
"அதிலே தான் என்ன தவறு?"
"நம் இருவருக்கும் அந்தஸ்திலே உள்ள வித்தியாசம் தான் தவறு..."
"'அன்பிற்கும் உண்டோ, அடைக்கும் தாழ்' என்ற முதுமொழியைக் கேட்டதில்லையா?"
"அந்த முதுமொழி பொன்னியின் செல்வருக்கும் படகுக்காரி பூங்குழலிக்கும் கூடப் பொருந்துமல்லவோ?"
"ஆம்! பொருந்தும் தான்! என் தம்பி உலகமாளப் பிறந்தவன் என்று நினைத்தேன். அதனால் அவர்களுடைய நெஞ்சுக்கும் தாளிட விரும்பினேன்..."
"நானும் இளவரசரைப் பற்றி எவ்வளவோ கேள்விப்பட்டு விட்டுத்தான் ஆவலுடன் வந்தேன். அவரோடு எட்டுத் திசைகளுக்கும் சென்று போர்க்களங்களில் வீரச் செயல்கள் புரிந்து பெயரும் புகழும் அடைய விரும்பினேன்..."
"இப்போது அந்த ஆசை போய்விட்டதல்லவா?"
"ஆம்; பொன்னியின் செல்வர் அரசுரிமையைக் காட்டிலும் அமைதியான வாழ்க்கையை அதிகம் விரும்புகிறார். போர்க்களத்தில் வாளேந்தி வீசுவதைக் காட்டிலும் ஆலயத் திருப்பணியில் கல்லுளி கொண்டு வேலை செய்வதற்கு அதிகம் ஆசைப்படுகிறார்!..."
"மதுராந்தகனோ இராஜ்யம் ஆளுவதில் தீவிர நோக்கம் கொண்டிருக்கிறான். ஆடு புலியாக மாறுகிறது; புலி ஆடாகிறது. ஆலவாய் இறைவன் நரியைப் பரியாக்கிப் பரியை நரியாக்கியதாகச் சிவபக்தரின் வரலாறு கூறுகிறது. அதுபோல்..."
"தேவி, தங்களுடைய கருணையினால் நானும் ஒரு நரியானேன். ஒளிந்து மறைந்தும், தந்திர மந்திரம் செய்தும், இல்லாதது பொல்லாததைச் சொல்லியும் பகைவர்களிடமிருந்து தப்பிவர வேண்டியதாயிற்று. அரசிளங்குமரி! இந்த வேலை இனிச் செய்ய என்னால் முடியாது. விடை கொடுங்கள்..."
"ஐயோ! என் பிராண சிநேகிதி என்று எண்ணியிருந்த வானதி என்னை கைவிட்டுப் போகப் பார்க்கிறாள். நீருமா என்னைக் கைவிட்டுப் போய்விட எண்ணுகிறீர்?"
"தேவி! கொடும்பாளூர் இளவரசிக்கும் தங்களுக்கும் உள்ள விவகாரத்தைப் பற்றி நான் அறியேன். ஆனால் நான் எப்படித் தங்களைக் கைவிட முடியும்? இராஜாதிராஜாக்கள் தங்களுடைய மணிப் பொற்கரத்தைக் கைப்பற்றத் தவம் கிடக்கிறார்கள். நானோ குற்றவேல் செய்ய வந்தவன்..."
இளையபிராட்டி அப்போது தன்னுடைய திருக்கரத்தை நீட்டினாள். இது கனவா, நனவா என்ற தயக்கத்துடன் வந்தியத்தேவன் அந்த மலர்க்கரத்தைத் தன் இரு கைகளாலும் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டான். அவனது உள்ளமும் உடம்பும் பரவசமடைந்தன.
"வாணர் குலத்து வீரரே! கற்பென்னும் திண்மையைக் குலதனமாகப் பெற்ற பழந்தமிழ் மன்னர் வம்சத்தில் வந்தவள் நான். எங்கள் குலத்து மாதரில் சிலர் கணவனுடன் உடன்கட்டை ஏறியதுண்டு. பதியின் உடலை எரித்த தீயைக் குளிர்ந்த நிலவென்று அவர்கள் கருதி அக்கினியில் குதித்தார்கள்..!"
"கேள்விப்பட்டிருக்கிறேன், தேவி!"
"உமது கரத்தைப் பற்றிய இந்த என் கரம், இன்னொரு ஆடவனுடைய கையை ஒரு நாளும் பற்றாது..."
வல்லவரையன் சொல்லிழந்து, செயலிழந்து குந்தவையின் கண்ணீர் ததும்பிய கண்களைப் பார்த்த வண்ணம் மதியும் இழந்து நின்றான்.
X-X-X-X-X
காதலின் மென்மையையும் தேடலையும் இதைவிட எப்படிச் சிறப்பாகச் சொல்ல முடியும்?? அமரர் கல்கி தீட்டும் சொல்லோவியங்களைப் பாருங்கள்..
இளவரசி ஒருகணம் வந்தியத்தேவனைத் தன் மலர்ந்த கண்களால் உற்றுப் பார்த்தாள்..
நீர் மட்டும் எவ்விதம் என் அதிகாரத்தை மீற முடியும்?
அவன் உள்ளமும் உடம்பும் பரவசமடைந்தன.
குந்தவையின் கன்ணீர் ததும்பும் கண்கள்.
சொல்லிழந்து, செயலிழந்து, மதியுமிழந்து நின்றான்.
அதி அற்புதம்.!! படிக்கின்ற ஒவ்வொரு ஆணும், 'அடடா, நம்மிடம் இப்படிச் சொல்ல ஒரு பெண் கிடைக்க மாட்டாளா' என்றும், படிக்கின்ற ஒவ்வொரு பெண்ணும், 'அடடா, நாம் இப்படிச் சொல்லுமளவிற்கு நமக்கு ஒரு ஆண் கிடைக்க மாட்டானா' என்றும் ஏங்க வைக்கும் அவரது திறமையே அவரது வெற்றிக்குச் சான்று.
"இந்த இப்பிறவியில் இன்னொரு மாதினை என் சிந்தையாலும் தொடேன்"என்று இராமாயணத்தில் இராமன், சீதையிடம் வாக்குத் தருவதாய் கம்பர் காட்டும் காட்சிக்கு இணையாய், அதனினும் ஒரு படி மேல் சென்று அமரர் கல்கி ஒரு அற்புதமான காட்சியை நம் முன் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.
குந்தவை, வந்தியத்தேவனின் வார்த்தைகளை வைத்தே அவனை மடக்கும் சொற்போர் அபாரம்..
இப்படிப் பல சிறப்புகள் கொண்டு ஒப்பற்று விளங்குவதால், இதுவே இலக்கியத்தில் எனக்கு மிகவும் விருப்பமான காதல் காட்சி.
நன்றி - meenak
குறிப்பு - இந்த கட்டுரைல வர்ர உடங்கட்டை ஏறுவது மாதிரியான விடயங்களை நான் ஏத்துக்கலை. உடங்கட்டை ஏறுவது பெண்கள் மேல் திணிக்கப்பட்ட பிற்போக்கான விடயம் - BBC
|
|
|
| மொழிமாற்றம் சில எண்ணங்கள் |
|
Posted by: Mathan - 02-23-2004, 08:15 PM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (22)
|
 |
நா படித்ததை நீங்களும் படிக்க இங்கை போட்டிருக்கேன்
மொழிமாற்றம் சில எண்ணங்கள்
உஷா ஒரு கேள்வி கேட்டிருந்தார். 'காசி! comment க்கு சரியாய் ஒரு வார்த்தை தமிழில் சொல்லுங்கள் பார்ப்போம்?'. முதலில் நான் ஒன்றும் தனித்தமிழ் ஆர்வலன் அல்ல. அதை மீண்டும் மீண்டும் சொல்லிகொள்கிறேன். நான் காலையில் 'காப்பி'தான் சாப்பிடுகிறேன். 'காரி'ல் தான் அலுவலகம் வருகிறேன். தமிழ்ப்பித்தன் எல்லாம் கிடையாது. என் குழந்தைகளுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் வைத்துள்ளேன். அதை மாற்றும் உத்தேசம் கிடையாது. ஆகவே நானும் எல்லாரையும் போல சாதாரண 'குமுதம்-சன்டிவி-தனுஷ்-சிம்ரன்-செரினா-வைகோ' தமிழன்:-)))
உஷா, உங்கள் மேல் கோபமில்லை:-))
எனக்குத் தோன்றியதைச் சொல்கிறேன். இதில் தவறும் இருக்கலாம்.
எந்த ஒரு சொல்லுக்கும் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றம் செய்யும்போது 'இதுக்கு இது' என்று நேரான சொல் ஒன்றைச் சொல்ல முடியாது. மூல மொழியில் அந்தச் சொல்லுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள் இருக்கும். அதே பொருளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சொல்லும் இருக்கும். அதே போல் ஆக்கவேண்டிய மொழியிலும் இப்படியே. ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் என்பது சூழல், தொனி, முதலானவற்றை (context, connotation, etc.) சார்ந்தே இருக்கிறது.
எனவே comment என்பதற்கு கருத்து, விமரிசனம், எண்ணம், மறுமொழி என்று சொல்லாலாம். இதில் 'கருத்து'க்கு, opinion, message, என்று விரிந்து கொண்டே போகும். 'விமரிசன'த்திற்கு, இதே போல் criticism, review, etc. என்று சொல்லலாம். opinion என்பதற்கு எண்ணம், அபிப்ராயம் என்றும், message என்றால் செய்தி, தூது, அறிக்கை என்றும் சொல்ல முடியும். review என்பதற்கு, அலசல், பார்வை, என்று விரியும். இது மொழிகளின் பெருமையைத்தான் குறிக்குமே அன்றி சிறுமையை அல்ல.
நம் வலைப்பதிவுகளில் comment என்பதற்குப்பதில் ஒவ்வொருவர் ஒவ்வொன்றை பயன்படுத்துகிறோம். அதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. comment என்பதில் ஒரு குறைகூறும் தொனி இருப்பதாகவும், 'மறுமொழி' அப்படி எந்தத் தொனியும் இல்லாமல் வெள்ளையாக (neutral) இருப்பதாக எனக்குப் படுகிறது. comment என்பது என்னவோ தேவ வாசகம் என்று எண்ணி அதற்கு நேர் தமிழ்ச் சொல் தேடினோமானால் ஒற்றைசொல் கிடைக்காமல் போகலாம். எனவே தமிழ்மேல் சற்றுக் கோபம் கூட வரலாம். ஆனால் எங்கு அதைப் பயன்படுத்தப் போகிறோம், அந்த இடத்தில் என்ன பொருளை எதிர்பார்க்கிறோம் என்று பார்த்தால் இப்படிப்பட்ட பல விடைகளிலிருந்து பொருத்தமானதை தேர்வுசெய்யமுடியலாம்.
மொழிமாற்றம் செய்யும்போது, குறிப்பாய் கலைச்சொற்களை மாற்றும்போது இன்னொன்றையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. முக்கியமாய் ஆங்கிலத்தில் இருந்து மொழிமாற்றம் செய்யும்போது வினை(verb - transitive, verb - intransitive) வினையின் பெயர்(Noun - act of doing), விளைவின் பெயர் (Noun - result of doing), உரிச்சொல் (adjective) என்ற பல வடிவங்களில் எந்த வடிவம் நமக்குத்தேவை என்று அறிந்து செய்யும்போது ஒரே சொல்லுக்கு வேறு வேறு தமிழ்ச் சொல் வரும். உதாரணமாய், cut, copy, paste எல்லாருக்கும் தெரியும். இதைத் தமிழில் வெட்டு, நகல், ஒட்டு என்று மொழிபெயர்த்தால் அதில் பிழை இருக்கிறது. copy என்ற பெயர்ச் சொல்லுக்கு 'நகல்' சரிதான். ஆனால் copy என்ற வினைக்கு 'நகலெடு' என்பதுதான் சரியாக இருக்கும். view என்பதற்கும் 'பார்' (வினை) 'பார்வை' (வினையின் பெயர்) 'தோற்றம்' (விளைவின் பெயர்) என்று பல பொருள்படும்.
Update என்ற சொல்லுக்கு மொழிமாற்றம் பற்றிய பேச்சு வந்தபோது அதற்கு 'புதுப்பித்தல்' என்று ஒரு சொல் முன்வைக்கப்பட்டது. எனக்கு அப்போது தோன்றிய சில எண்ணங்களை ஒரு சிறு உரையாடல் மூலம் விளக்க முயன்றேன். அது மீண்டும் இங்கே:
____________________________________________________
ஒரு சிறு உணவகத்தில் ஒரு உரையாடல்:
-----------------------------------------------------
'வாங்க அண்ணே, இப்ப எப்படி இருக்குது நம்ம கடை?'
'என்னடா ரொம்ப நாளாக் கடை மூடிக் கிடந்ததேன்னு பாத்தேன். ஓஹோ, கடையைப் புதுப்பிச்சுட்டே(1) போலிருக்கு. எல்லாம் அழகா இருக்குது.'
'ஆமாங்கண்ணே.'
'அதெல்லாம் சரி கடைக்கு உரிமமும் புதுப்பிச்சிட்டியா?)(2) காலாவதி ஆயிருக்குமே...'
'ஓ..ஆச்சுங்க, அதெல்லாம் நேரத்துக்கு செய்திட வேண்டாமா?'
'எல்லாம் சரியாப் பண்ணிருக்கே, ஆனா இந்த இன்றைய ஸ்பெஷல் பலகையை மட்டும் புதுப்பிக்க(3) மறந்துட்டே போலிருக்கே...'
'இல்லீங்களே, அதையும் ஆசாரி கிட்டே குடுத்து உடைஞ்ச கட்டையெல்லாம் சரி பண்ணி, புது பெயின்ட் எல்லாம் அடிச்சுப் புதுப்பிச்சுட்டேனே.'
'அட அது இல்லப்பா, இது இன்னும் நேற்றைய ஸ்பெஷலையே காட்டிட்டு இருக்கேனு சொல்ல வந்தேன்.'
'அட ஆமாங்கண்ணே. டேய் பையா, அந்த போர்டை அழிச்சுவிடு, சாக் பீஸ் கொண்டா, இன்றைய ஸ்பெஷலை சரி பண்ணிடலாம்.'
----------------------------------------------------
புதுப்பித்தல்(1)=refurbish
புதுப்பித்தல்(2)=renew
புதுப்பித்தல்(3)=update
செம்மொழி என்று சொல்லிக்கொண்டு மூன்றுக்கும் ஒரே சொல்லை பயன்படுத்தினால் எனக்கென்னவோ சரியாகப் படவில்லை.
____________________________________________________
எனக்கு என்ன ஆச்சு, நான் என்னவோ தமிழாசிரியர் மாதிரி இப்படி விளக்கமெல்லாம் கொடுத்துக்கொண்டு... நான் எனக்குத் தோன்றியதைச் சொல்லுகிறேன். உண்மையில் தமிழ் இலக்கணம் படித்தவர் இன்னும் சரியாகச் சொல்லமுடியும். நினைத்துப் பார்க்கிறேன், என் முந்தைய அலுவலகத்தில், வாரம் ஒருவர் சிறு குழுவில் ஏதாவது தலைப்பில் பேசுவோம். அங்கு நான் பேசிய முதல் தலைப்பு, 'How to improve our English vocabulary?'
|
|
|
| ஒட்டிப்பிறந்த குழந்தைகள். |
|
Posted by: vasisutha - 02-23-2004, 07:44 PM - Forum: மருத்துவம்
- No Replies
|
 |
<img src='http://www.kumudam.com/phototoday/23-02-04/3.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.kumudam.com/phototoday/23-02-04/t3.jpg' border='0' alt='user posted image'>
புகைப்படம்:-
www.kumudam.com
|
|
|
| இந்தியன் கிரிக்கட் வீரர் வி.வி.எஸ். லட்சுமண் திருமணம் |
|
Posted by: Mathan - 02-22-2004, 05:02 PM - Forum: விளையாட்டு
- Replies (4)
|
 |
இந்தியன் கிரிக்கட் வீரர் வி.வி.எஸ். லட்சுமண், ஜி.கே.சைலஜா திருமணம்
படங்கள் சுட்டது: குமுதம்
<img src='http://www.kumudam.com/phototoday/img/1.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.kumudam.com/phototoday/img/5.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.kumudam.com/phototoday/img/8.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
|