![]() |
|
இலக்கியத்தில் என்னைக் கவர்ந்த தலைசிறந்த காதல் காட்சி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழும் நயமும் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=22) +--- Thread: இலக்கியத்தில் என்னைக் கவர்ந்த தலைசிறந்த காதல் காட்சி (/showthread.php?tid=7438) |
இலக்கியத்தில் என்னைக - Mathan - 02-23-2004 படித்து சுவைத்தது - BBC <span style='font-size:25pt;line-height:100%'>இலக்கியத்தில் என்னைக் கவர்ந்த தலைசிறந்த காதல் காட்சி - பொன்னியின் செல்வன்</span> படிக்கப் படிக்கத் தெவிட்டாத "பொன்னியின் செல்வன்"நாவலில் அமரர் கல்கி எழுதிய கீழ்வரும் காட்சிக்கு இணையான காதல் காட்சி வேறு எந்த மொழி இலக்கியத்திலும் இருக்க முடியாது என்பதே என் கருத்து. காட்சியைக் கண்டுவிட்டு வாருங்கள், ஏனென்று சொல்கிறேன். (வந்தியத்தேவன் சிறையில் இருக்கிறான். இளவரசி குந்தவை அவனைப் பார்க்க அங்கு வந்திருக்கிறாள்.) "... போதும்! என்னைச் சிறையிலிருந்து விடுதலை செய்து விடுங்கள்! என் வழியே போகிறேன்..." "(அப்படியானால்) உமக்கு விடுதலை கிடையாது! இந்தச் சிறையிலேயே நீர் இருந்து வரவேண்டியது தான்"என்றாள். வந்தியத்தேவன் கலகலவென்று சிரித்தான். "நீர் எதற்காகச் சிரிக்கிறீர்? நான் சொல்வது வேடிக்கை என்றா?" "இல்லை, தேவி! இந்தச் சிறையிலிருந்து தாங்கள் என்னை விடுதலை செய்யாவிட்டால், நான் இதிலிருந்து தப்பிச் செல்ல முடியாதா?" இளவரசி ஒரு கணம் வந்தியத்தேவனைத் தன் மலர்ந்த கண்களால் உற்றுப் பார்த்து விட்டு, "ஐயா, நீர் கெட்டிக்காரர்; அதிலும் சிறையிலிருந்து தப்பிச் செல்வதில் மிகக் கெட்டிக்காரர். பழுவேட்டரையரின் பொக்கிஷ நிலவறையிலிருந்து தப்பிச் சென்றவருக்கு இது ஒரு பிரமாதமா?"என்றாள். "அப்படியானால், நீங்களே கதவைத் திறந்து என்னை விடுதலை செய்யுங்கள்." "நானே இந்தச் சிறையைத் திறந்து விடலாம். அல்லது நீரும் தப்பிச் செல்லலாம். ஆனால் இன்னொரு சிறைச்சாலையிலிருந்து நீர் தப்ப முடியாது..." "சின்னப் பழுவேட்டரையரின் பாதாளச் சிறையைச் சொல்கிறீர்களா?" "இல்லை; அதுவும் உமக்கு இலட்சியமில்லை; பாதாளச் சிறைவாசலில் காத்திருக்கும் புலிகளையும் வென்றுவிட்டுத் தப்பிச் சென்று விடுவீர்..." "பின்னே, எந்தச் சிறையைச் சொல்கிறீர்கள்?" "என்னுடைய இதயமாகிய சிறைச் சாலையைத் தான் சொல்கிறேன்." "தேவி! நான் வீடு வாசல் அற்ற அநாதை. என்னுடைய குலப் பெருமையெல்லாம் பழைய கதை, கவிஞர் கற்பனை. தாங்களோ மூன்று உலகையும் ஒரு குடை நிழலில் ஆளும் சக்கரவர்த்தியின் செல்வக்குமாரி..." "யார் கண்டது? இந்தச் சோழ குலத்தின் பெருமையும் ஒரு நாள் பழைய கதை ஆகலாம்." "ஆயினும், இன்றைக்குத் தாங்கள் இந்நாட்டில் இணையற்ற அதிகாரம் படைத்தவர். சக்கரவர்த்தியும், பழுவேட்டரையர்களும், முதன்மந்திரியும் தங்கள் விருப்பத்துக்கு மாறாக நடக்கத் துணிய மாட்டார்கள்..." "இதெல்லாம் உண்மையாயிருந்தால், நீர் மட்டும் எவ்விதம் என் அதிகாரத்தை மீற முடியும்?" "அரசாங்க அதிகாரம் வேறு விஷயம். தாங்கள் நெஞ்சின் அதிகாரத்தையல்லவா குறிப்பிட்டீர்கள்." "அதிலே தான் என்ன தவறு?" "நம் இருவருக்கும் அந்தஸ்திலே உள்ள வித்தியாசம் தான் தவறு..." "'அன்பிற்கும் உண்டோ, அடைக்கும் தாழ்' என்ற முதுமொழியைக் கேட்டதில்லையா?" "அந்த முதுமொழி பொன்னியின் செல்வருக்கும் படகுக்காரி பூங்குழலிக்கும் கூடப் பொருந்துமல்லவோ?" "ஆம்! பொருந்தும் தான்! என் தம்பி உலகமாளப் பிறந்தவன் என்று நினைத்தேன். அதனால் அவர்களுடைய நெஞ்சுக்கும் தாளிட விரும்பினேன்..." "நானும் இளவரசரைப் பற்றி எவ்வளவோ கேள்விப்பட்டு விட்டுத்தான் ஆவலுடன் வந்தேன். அவரோடு எட்டுத் திசைகளுக்கும் சென்று போர்க்களங்களில் வீரச் செயல்கள் புரிந்து பெயரும் புகழும் அடைய விரும்பினேன்..." "இப்போது அந்த ஆசை போய்விட்டதல்லவா?" "ஆம்; பொன்னியின் செல்வர் அரசுரிமையைக் காட்டிலும் அமைதியான வாழ்க்கையை அதிகம் விரும்புகிறார். போர்க்களத்தில் வாளேந்தி வீசுவதைக் காட்டிலும் ஆலயத் திருப்பணியில் கல்லுளி கொண்டு வேலை செய்வதற்கு அதிகம் ஆசைப்படுகிறார்!..." "மதுராந்தகனோ இராஜ்யம் ஆளுவதில் தீவிர நோக்கம் கொண்டிருக்கிறான். ஆடு புலியாக மாறுகிறது; புலி ஆடாகிறது. ஆலவாய் இறைவன் நரியைப் பரியாக்கிப் பரியை நரியாக்கியதாகச் சிவபக்தரின் வரலாறு கூறுகிறது. அதுபோல்..." "தேவி, தங்களுடைய கருணையினால் நானும் ஒரு நரியானேன். ஒளிந்து மறைந்தும், தந்திர மந்திரம் செய்தும், இல்லாதது பொல்லாததைச் சொல்லியும் பகைவர்களிடமிருந்து தப்பிவர வேண்டியதாயிற்று. அரசிளங்குமரி! இந்த வேலை இனிச் செய்ய என்னால் முடியாது. விடை கொடுங்கள்..." "ஐயோ! என் பிராண சிநேகிதி என்று எண்ணியிருந்த வானதி என்னை கைவிட்டுப் போகப் பார்க்கிறாள். நீருமா என்னைக் கைவிட்டுப் போய்விட எண்ணுகிறீர்?" "தேவி! கொடும்பாளூர் இளவரசிக்கும் தங்களுக்கும் உள்ள விவகாரத்தைப் பற்றி நான் அறியேன். ஆனால் நான் எப்படித் தங்களைக் கைவிட முடியும்? இராஜாதிராஜாக்கள் தங்களுடைய மணிப் பொற்கரத்தைக் கைப்பற்றத் தவம் கிடக்கிறார்கள். நானோ குற்றவேல் செய்ய வந்தவன்..." இளையபிராட்டி அப்போது தன்னுடைய திருக்கரத்தை நீட்டினாள். இது கனவா, நனவா என்ற தயக்கத்துடன் வந்தியத்தேவன் அந்த மலர்க்கரத்தைத் தன் இரு கைகளாலும் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டான். அவனது உள்ளமும் உடம்பும் பரவசமடைந்தன. "வாணர் குலத்து வீரரே! கற்பென்னும் திண்மையைக் குலதனமாகப் பெற்ற பழந்தமிழ் மன்னர் வம்சத்தில் வந்தவள் நான். எங்கள் குலத்து மாதரில் சிலர் கணவனுடன் உடன்கட்டை ஏறியதுண்டு. பதியின் உடலை எரித்த தீயைக் குளிர்ந்த நிலவென்று அவர்கள் கருதி அக்கினியில் குதித்தார்கள்..!" "கேள்விப்பட்டிருக்கிறேன், தேவி!" "உமது கரத்தைப் பற்றிய இந்த என் கரம், இன்னொரு ஆடவனுடைய கையை ஒரு நாளும் பற்றாது..." வல்லவரையன் சொல்லிழந்து, செயலிழந்து குந்தவையின் கண்ணீர் ததும்பிய கண்களைப் பார்த்த வண்ணம் மதியும் இழந்து நின்றான். X-X-X-X-X காதலின் மென்மையையும் தேடலையும் இதைவிட எப்படிச் சிறப்பாகச் சொல்ல முடியும்?? அமரர் கல்கி தீட்டும் சொல்லோவியங்களைப் பாருங்கள்.. இளவரசி ஒருகணம் வந்தியத்தேவனைத் தன் மலர்ந்த கண்களால் உற்றுப் பார்த்தாள்.. நீர் மட்டும் எவ்விதம் என் அதிகாரத்தை மீற முடியும்? அவன் உள்ளமும் உடம்பும் பரவசமடைந்தன. குந்தவையின் கன்ணீர் ததும்பும் கண்கள். சொல்லிழந்து, செயலிழந்து, மதியுமிழந்து நின்றான். அதி அற்புதம்.!! படிக்கின்ற ஒவ்வொரு ஆணும், 'அடடா, நம்மிடம் இப்படிச் சொல்ல ஒரு பெண் கிடைக்க மாட்டாளா' என்றும், படிக்கின்ற ஒவ்வொரு பெண்ணும், 'அடடா, நாம் இப்படிச் சொல்லுமளவிற்கு நமக்கு ஒரு ஆண் கிடைக்க மாட்டானா' என்றும் ஏங்க வைக்கும் அவரது திறமையே அவரது வெற்றிக்குச் சான்று. "இந்த இப்பிறவியில் இன்னொரு மாதினை என் சிந்தையாலும் தொடேன்"என்று இராமாயணத்தில் இராமன், சீதையிடம் வாக்குத் தருவதாய் கம்பர் காட்டும் காட்சிக்கு இணையாய், அதனினும் ஒரு படி மேல் சென்று அமரர் கல்கி ஒரு அற்புதமான காட்சியை நம் முன் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். குந்தவை, வந்தியத்தேவனின் வார்த்தைகளை வைத்தே அவனை மடக்கும் சொற்போர் அபாரம்.. இப்படிப் பல சிறப்புகள் கொண்டு ஒப்பற்று விளங்குவதால், இதுவே இலக்கியத்தில் எனக்கு மிகவும் விருப்பமான காதல் காட்சி. நன்றி - meenak குறிப்பு - இந்த கட்டுரைல வர்ர உடங்கட்டை ஏறுவது மாதிரியான விடயங்களை நான் ஏத்துக்கலை. உடங்கட்டை ஏறுவது பெண்கள் மேல் திணிக்கப்பட்ட பிற்போக்கான விடயம் - BBC - vasisutha - 02-26-2004 குருவியைக் கேட்டால் இல்லை இப்பவும் உடன்கட்டை ஏறுவது இருக்கவேண்டும் என்று சொல்லுவார். அப்படித்தானே குருவி? - Kanakkayanaar - 02-27-2004 பிபிசி எழுதியது: Quote:குறிப்பு - இந்த கட்டுரைல வர்ர உடங்கட்டை ஏறுவது மாதிரியான விடயங்களை நான் ஏத்துக்கலை....ஏன் பிபிசி அந்த உடங்கட்டை நிகழ்வை நீக்கினீர்கள். உங்களுக்கு பிடித்ததோ இல்லையோ, அது வரலாற்றில் நிகழ்ந்த உண்மை, அது இலக்கியத்தில் பதிவாகியுள்ளது, அதை ஏன் நீங்கள் இருட்டடிப்பு செய்ய வேண்டும்? அப்ப நீங்களும் நடுவின்மையாக தணிக்கை செய்வீர்கள் போலும்! Quote: ...உடங்கட்டை ஏறுவது பெண்கள் மேல் திணிக்கப்பட்ட பிற்போக்கான விடயம...யார் திணித்தது? ஒன்றை நினைவில் வையுங்கள், கடந்த இரு பத்தாண்டுகட்கு முன்னரும், விதவைப் பெணகளை கூடுதலாக துன்புறுத்தியது பெண்கள் தாம், (ஆரத்தி எடுக்க அழைப்பதில்லை, நன்நிகழ்வுகளில் சேர்த்துக்கொள்ளாமல் ஒதுக்கிவைத்தல், நிறப் புடவை கட்டினால் எள்ளுதல் போன்ற செயல்களால்). இதற்காக நான் பெண்களைக் குறை கூறவில்லை. இது ஒரு குமுகாயச் (சமுதாயப்) சிக்கல், இதில் இருபாலினரும் தான் தவறு இழைக்கின்றனர். சிந்தித்துப் பாருங்கள், ஒரு மாந்தன் அவன் வாழ்வில் தவறு இழைக்கிறான், நாமெல்லம் தவறு இழைப்பது மாந்தனின் இயல்பு என்பதை ஒத்துக் கொள்வோம். அப்படிப்பட்ட தவறு இழைக்கும் மாந்தர் குழுக்களால் அமையும் குமுகாயமும் தவறு இழைக்கத்தானே செய்யும். நமது மூதாதையர் குமுகாயத்தை, அவர்களை விடக் கூடக் காலம் இருக்கும், ஆதலால் கூடச் சிந்தனை செய்த நாம்குறை கூறுதல் நடுவுநிலை அற்றது. வசிசுதா எழுதியது: Quote:குருவியைக் கேட்டால் இல்லை இப்பவும் உடன்கட்டை ஏறுவது இருக்கவேண்டும் என்று சொல்லுவார். அப்படித்தானே குருவி?நாராயண, நாராயண...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 02-27-2004 Kanakkayanaar Wrote:பிபிசி எழுதியது: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 03-01-2004 இந்த காதல் காட்சியை படித்ததுக்கு அப்புறம் பொன்னியின் செல்வனை திருப்பி படிச்சுகிட்டிருக்கேன். விருப்பமுள்ள யாழ் நண்பர்கள் இந்த முகவரியில் பொன்னியின் செல்வனை படிக்கலாம். http://www.geocities.com/ponniyinselvan_ka...n/chapters.html - vasisutha - 03-02-2004 நன்றி பிபிஸி. இந்த நாவலை எங்கே வாங்கலாம்? - phozhil - 03-03-2004 கல்கியின் பொன்னியின் செல்வனை தீண்டாது ஒரு கருத்துக்களம் இயங்க ஏலுமோ? கருத்திடாது சென்றிட அகம் அனுமதிக்குமா என்னை. இதே இலக்கியத்தில் என் அகத்தையும் சிந்தையையும் மிக வருடிய காதல் காட்சி புதுவெள்ளம் பாகத்தில் நாற்பத்தெட்டாம்(நீர்ச்சுழலும் விழிச்சுழலும்) அத்யாயத்தில் பின்வருவது..... கடவுள் படைத்த ஆதி மனிதன் ஒரு மலையின் சாரலில் வசித்தான். மழைக்கும், காற்றுக்கும் அவனுக்கு மலைக்குகை அடைக்கலம் தந்தது. வன விருட்சங்கள் அவனுக்குத் தேவையான கனி வர்க்கங்களை உணவாக அளித்தன. காட்டு மிருகங்கள் அவனைக் கண்டு நடுநடுங்கின. வானத்துப் பறவைகளைப் போல் அவன் சுயேச்சையாக ஒரு குறையும் இல்லாமல் வாழ்ந்து வந்தான். ஆயினும் அவனுடைய உள்ளத்தின் உள்ளே ஏதோ ஒரு குறை, - இனந்தெரியாத ஒரு வகைத் தாபம், - இடைவிடாமல் குடிகொண்டிருந்தது. ஏதோ ஒரு காந்த சக்தி அவனைக் கவர்ந்து இழுத்துக் கொண்டிருந்தது. ஏதோ ஓர் அரிய பொருளை, - இது வரை பார்த்தும் அனுபவித்தும் அறியாத இன்பத்தை, - அவனுடைய இதயம் தேடிக் கொண்டிருந்தது. பகலில் அதைப் பற்றிக் கற்பனை செய்தான்; இரவில் அதைப் பற்றிக் கனவு கண்டான். "எனக்காகவே படைக்கப்பட்ட அந்த அற்புதப் பொருளை, - கற்பகக் கனியை, - என்னைக் கவர்ந்திழுக்கும் காந்தத்தை, எங்கே காண்பேன்? எப்போது காண்பேன்?" என்று அவன் இதயம் ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தது. ஆதி மனிதனைப் படைத்த அதே சமயத்தில் இறைவன் ஆதி ஸ்திரீயையும் படைத்தார். மலையின் மற்றொரு பக்கத்துச் சாரலில் அவள் வசித்து வந்தாள். பசிக்கு உணவும், தாகத்துக்குச் சுனை நீரும், தங்கியிருக்க மலைக்குகையும் அவளுக்கு இருந்தன. வெளிப்படையாகப் பார்த்தால் ஒரு குறையும் இல்லை. ஆனால் உள்ளத்தினுள்ளே ஒரு தீப்பிழம்பு ஜூவாலை விட்டு அவளை எரித்துக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு சக்தி அவளைக் கவர்ந்து இழுத்துக் கொண்டிருந்தது. அச்சக்தி எங்கிருந்து அவளை இழுக்கிறது, எந்தத் திசையை நோக்கி இழுக்கிறது என்பது ஒன்றும் தெரியவில்லை. ஆதி மனிதனுக்கும் ஆதி ஸ்திரீக்கும் இடையில் ஒரு பெரிய மலை ஓங்கி நின்று ஒருவரையொருவர் சந்திக்க முடியாமல் தடுத்துக் கொண்டிருந்தது. வெயிற் காலத்தில் ஒருநாள் இயற்கை நியதி காரணமாகக் காட்டில் தீ மூண்டு நாலாபுறமும் பரவத் தொடங்கியது. மலையைச் சுற்றி நெருப்பு அதிவேகமாகப் பரவி வந்தது. மனிதனும் ஸ்திரீயும் காட்டுக்குள் போனால் ஆபத்துக்குள்ளாவோம் என்று உணர்ந்து மலை மேல் ஏறினார்கள். மலையின் உச்சியில் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்தார்கள். பார்த்த கண்கள் பார்த்தபடி கண் கொட்டாமல் நின்றார்கள்; காட்டுத் தீயை மறந்தார்கள். எதற்காக மலை உச்சியில் ஏறினோம் என்பதையும் மறந்தார்கள். பசி தாகங்களை அடியோடு மறந்தார்கள். இத்தனை காலமும் தாங்கள் உயிர் வாழ்ந்ததெல்லாம் இந்த ஒரு சந்திப்புக்காகவே என்பதை உள்ளுணர்வினால் அறிந்தார்கள். தங்களைக் கவர்ந்திழுத்த இனந் தெரியாத சக்தி இதுதான் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். தங்களில் ஒருவரிடம் உள்ள குறையை இன்னொருவரால் இட்டு நிரப்பிப் பூர்த்தி செய்ய முடியும் என்பதை அறிந்தார்கள். இவ்விதம் ஒன்று சேர்ந்து விட்டவர்களை இனிப் பிரிக்கக் கூடிய சக்தி உலகில் வேறொன்றும் கிடையாது என்பதையும் உறுதியாக உணர்ந்தார்கள். இந்த அற்புதக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த படைப்புக் கடவுளான பிரம்ம தேவர் தாம் ஆரம்பித்த வேலை நல்ல முறையில் தொடங்கி விட்டது என்பதை அறிந்து பரிபூரணத் திருப்தி அடைந்தார்! மேற்கூறிய ஆதி மனிதனையும் ஆதி ஸ்திரீயையும் ஒத்திருந்தார்கள் அந்த நேரத்தில் நம் வல்லவரையனும் குந்தவை தேவியும............. "பொன்னியின் செல்வனை" வாங்க விழைவோர் கீழ்காணும் இணைப்பை நாடுக.. http://www.kalkionline.com/books/books05.asp#KALKIBK027 |