Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 335 online users.
» 0 Member(s) | 332 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,289
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,228
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,288
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,620
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,046
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,456
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,471
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,022
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  'லெஸ்பியன்' 2 அமெரிக்க தமிழ்ப் பெண்கள்
Posted by: anpagam - 03-10-2004, 11:52 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (22)

'லெஸ்பியன்' உறவு: திருமண சான்றிதழ் கோரும் 2 அமெரிக்க தமிழ்ப் பெண்கள்

வாஷிங்டன்:

திருமணம் செய்து கொண்டுள்ள இரு லெஸ்பியன் பெண்கள், தங்களுக்குத் திருமணச் சான்றிதழ் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இருவரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இவர்களுக்கு திருமணச் சான்றிதழ் தர வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள கிங் கௌண்ட்டி பதிவகம் மறுத்ததையடுத்து நீதிமன்றத்தில் அவர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

அமெரிக்காவில் வசித்து வரும் தமிழ்ப் பெண்களான வேகவாஹினி சுப்பிரமணியமும் ('வேகா') வைஜெயந்திமாலா நாகராஜனும் ('மாலா') 1996ம் ஆண்டு இணைய தளம் மூலம் சந்தித்துக் கொண்டனர். இருவருமே தமிழர்கள் என்பதால் முதலில் நெருங்கிப் பழகியதாகவும், பின்னர் இருவருக்குமே ஓரினச் சேர்க்கையில் ஆர்வம் இருந்ததால் 'காதலிக்க' ஆரம்பித்தாகவும் கூறுகின்றனர்.

திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த இருவரும் ஒலிம்பியா நகரத்திலிருந்து சியாட்டில் நகரத்துக்கு 2000ம் ஆண்டு குடிபெயர்ந்தனர். அங்கு ஒரு வீட்டை வாங்கி இருவரும் இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந் நிலையில் 2002ம் ஆண்டு இருவரும் இந்து மதப்படி புரோகிதரை வைத்துத் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், முறைப்படி தங்களை தம்பதிகளாக அங்கீகரித்து திருமணச் சான்றிதழ் அளிக்கும்படியும் விண்ணப்பித்தனர்.

அமெரிக்க சட்டப்படி திருமணம் செய்து கொள்பவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை தாங்களும் பெற விரும்புவதாக விண்ணப்ப மனுவில் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் இவர்களின் கோரிக்கையை கிங் கௌண்டி பதிவகம் நிராகரித்துவிட்டது.

இதனையடுத்து தங்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாகக் கூறி, அமெரிக்க அரசுக்கு எதிராக வாஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

இதில் வேகா, தெற்காசிய சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்க்கும் ஒரு சமூக நல அமைப்பிலும், மாலா ஒரு சாப்ட்வேர் என்ஜினராவார்.

சமீபகாலமாக அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கை திருமணங்கள் அதிகரித்து வருவதும், அது குறித்து அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கவலை தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. லெஸ்பியன் உறவின் இரு தமிழ்ப் பெண்களும் சிக்கியிருப்பதும், அதை அவர்கள் வெளிப்படையாகவே சொல்லி வழக்குப் போட்டுள்ளதும் பெரும் அதிர்ச்சியைத் தருகிறது.

tnx:thatstamil.com
:x :oops: :roll:

Print this item

  ஸ்கிரீனை பிரதி பண்ணுவது எப்படி?
Posted by: vasisutha - 03-10-2004, 01:56 AM - Forum: இணையம் - No Replies

[size=13]<b>ஸ்கிரீனை பிரதி பண்ணுவது எப்படி?</b>

ஸ்கிரீன் ஷாட் என்று அடிக்கடி நாம் கேட்கிறோம். இது எதனைக் குறிக்கிறது?

இது அடிப்படையில் ஒரு படமாகும். நீங்கள் இந்த ஸ்கிரீன் ஷாட்டினை எடுக்கும்போது திரையில் எந்த தோற்றம் இருக்கிறதோ அது ஒரு பட பைலாக உருவாகும். இதுதான் ஸ்கிரீன் ஷாட் ஆகும். இவ்வாறு எடுக்கும் ஸ்கிரீன் ஷாட் படத்தினை வேர்ட், எக்ஸெல் work ஷீட் அல்லது பிரசண்டேஷன் டாகுமெண்டில் சேர்க்க நீங்கள் விரும்பலாம். குறிப்பாக மாணவர்களுக்கு அல்லது மற்றவர்களுக்கு கம்ப்யூட்டர் இயக்கத்தினை விவரமாக விளக்கிட முயற்சிக்கும்போது இத்தகைய ஸ்கிரின் ஷாட் படங்கள் நிச்சயமாகத் தேவைப்படும். இவற்றை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளும் முன் இவற்றை எப்படியெல்லாம் தயார் செய்து கொள்ளலாம் என்று பார்ப்போம்.

மானிட்டர் திரையில் தெரியும் முழு தோற்றத்தினையும் ஒரு ஸ்கிரின் ஷாட்டாக எடுக்க Print Screen என்னும் கீயை அழுத்தவும். இது F12 Key அருகே இருக்கும். தேடிப் பார்க்கவும்.

எந்த திரைத் தோற்றம் உங்களுக்குத் தேவையோ அது திரையில் இருக்கும்போது இந்த கீயை அழுத்தவும். இந்த தோற்றம் ஸ்கிரீன் ஷாட் ஆக பதியப்படும். இப்போது அது எங்கே எந்த தொகுப்பில் ஒட்டப்பட வேண்டுமோ அங்கு சென்று கர்சரைத் தேவையான இடத்தில் வைத்து paste செய்திடவும். இப்போது நீங்கள் முதலில் திரையில் பார்த்த அதே காட்சி இங்கு இன்னொரு புரோகிராம் டாகுமெண்டில் ஒட்டப்பட்டுவிடும்.

ஸ்கிரீன் ஷாட் எடுக்கையில் ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களின் காட்சிகள் இருக்கின்றனவா? இவை அனைத்தும் தேவையின்றி குறிப்பிட்ட புரோகிராம் காட்சி மட்டும் உங்களுக்கு ஸ்கிரீன் ஷாட்டாகத் தேவையா? அப்போது Alt + Print Screen Keyகளை ஒரு சேர அழுத்தவும். இப்போது டாஸ்க் பார் போன்ற சாமாச்சாரங்கள் இல்லாமல் நீங்கள் விரும்பும் புரோகிராம் காட்சி மட்டும் ஸ்கிரீன் ஷாட் மட்டும் கிடைக்கும். இதனை வேண்டும் இடத்தில் ஒட்டிக் கொள்ளலாம். இம்முறையில் ஒட்டப்படும் காட்சி சிறப்பாகத் தோற்றமளிக்கும்.

Print this item

  பேரழகன்..!
Posted by: vasisutha - 03-10-2004, 12:30 AM - Forum: சினிமா - Replies (2)

பேரழகன் சுூர்யா

<img src='http://www.vikatan.com/av/2004/mar/14032004/p18.jpg' border='0' alt='user posted image'>
Suriya

<img src='http://www.vikatan.com/av/2004/mar/14032004/p18a.jpg' border='0' alt='user posted image'>
suriya & Jothika

<img src='http://www.vikatan.com/av/2004/mar/14032004/p20.jpg' border='0' alt='user posted image'>
suriya & Jothika

<img src='http://www.vikatan.com/av/2004/mar/14032004/p20a.jpg' border='0' alt='user posted image'>
Suriya & Jothika

vikatan.com

Print this item

  enna solli ala
Posted by: aathipan - 03-09-2004, 08:14 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (10)

<img src='http://www.terato.com/v8/images-up/babylove/crying.gif' border='0' alt='user posted image'>

Print this item

  GTR German Tamil Radio
Posted by: sandiya - 03-09-2004, 05:55 PM - Forum: புலம் - Replies (26)

புதிய இணையத்தள வானொலி GTR { GermanTamil Radio }
web:- www.germantamilradio.com
e.Mail:- germantamilradio@hotmail.com

Print this item

  எம் அருமைத் தமிழ்மக்களே....!
Posted by: kuruvikal - 03-09-2004, 04:31 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

'பிரதேசவாத பிரசாரத்திற்கு இடமளிக்கவேண்டாமென கிழக்கு கல்விச் சமூகம் தமிழ் மக்களிடம் கோரிக்கை'
இக்கல்விச் சமூகத்தின் கருத்தே எமதென்றும் மாணவர்களாகிய நாமும் இக்கருத்தை அனைத்துத் தமிழ் மக்களுக்கும் மீண்டும் இங்கு தருகின்றோம்....!


----------------------------------------------------

<b>பிரதேசவாத பிரசாரத்திற்கு இடமளிக்கவேண்டாமென கிழக்கு கல்விச் சமூகம் தமிழ் மக்களிடம் கோரிக்கை

அந்நிய சக்திகளுக்கு விலைபோன தனிமனிதனின் அழைப்பை புறக்கணிக்க வலியுறுத்தல்

வடக்கு, கிழக்கு என்ற பிரிவினையால் ஏற்படப்போகும் எதிர் விளைவுகளை ஒரு கணம் சிந்தித்து, அந்நிய சக்திகளுக்கு விலைபோன ஒரு தனி மனிதனின் அழைப்புக்கு செவிசாய்க்காது, தமிழ் மக்கள் செயற்படவேண்டுமென கிழக்கின் கல்விச் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக கிழக்குப் பல்கலைக்கழகம், மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை, மட்டு.கல்வியியல் கல்லூரி, மட்டு. தொழில்நுட்பக் கல்லூரி, சுதந்திர மாணவர் முன்னணி விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மட்டக்களப்பில் ஏற்பட்டுள்ள பிரிவினைகோரும் நிலைமை தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கும், ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் ஏற்பட்டுள்ள ஒரு வரலாற்று அவமானமாகும். உலகமே வியக்கும் வண்ணம் தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டம் தனது இலட்சியப் பயணத்தில் வீறுகொண்டெழுந்து, வெற்றி நடைபோடுகின்ற இந்நேரத்தில், சர்வதேச சமூகத்தின் கணிப்பும், அங்கீகாரமும் விரைவில் கைகூடி வரும் இறுதிச் சந்தர்ப்பத்தில் ஒரு தனி மனிதனின் வரலாற்றுத் துரோகத்தால் தமிழ் இனத்தின் விடுதலைக்கனவு இன்று கேள்விக்குறியாகி நிற்கின்றது.

ஆயிரம் ஆயிரம் தமிழ் உறவுகளின் அதி உன்னதமான உயிர்த் தியாகத்தால் கட்டிý எழுப்பப்பட்ட ஒரு விடுதலை அமைப்பை தமிழர்களின் தேசியப் படை பலத்தை தனி மனிதனின் சுயநல விருப்பு, வெறுப்புகளுக்காக பலியிட அனுமதிக்கலாமா?

பாசத்தைத் துறந்து தேசத்தைக் காக்கும் இலட்சிய வாழ்வைத் தொடங்கும் ஒரு போராளி, அந்தக் கணமே சாதி, சமய, வர்க்க, பிரதேச வேறுபாடுகளை எல்லாம் கடந்து விடுதலை நெருப்பை மட்டுமே நெஞ்சிலே சுமந்து இலட்சிய வாழ்வைத் தொடங்குகின்றான்.

தமிழீழத்திற்காக தனது மண்ணிலேயே வீரச்சாவடைகின்றான். இதுவே, விடுதலைப்புலிகளின் இரு தசாப்தகால கொள்கைப் பற்றுதியாகும். இதுவரை இதில் குற்றமோ, குறையோ எவரும் கண்டதில்லை. அதனைப்பற்றிப் பேசுவதற்கு நா எழுந்ததும் இல்லை.

பிரதேச வேறுபாடுகளுக்குத் தூபமிட்டு தனது துரோகத்தனத்தை மூடிýமறைத்து, தமிழின விடுதலைக்கு குந்தகமும், பழியையும் ஏற்படுத்த முயல்பர் தமிழீழ சமூகத்தால் என்றுமே மறக்கமுடியாத அவமானச்சின்னவாக கறைபடிந்து நிற்கிறார்.

அந்நிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு விலைபோய் தன் இனமானத்தை விற்கத் துணிந்துள்ள ஒருவர் அவரே விசமத்தனமாகப் பரப்பி வருகின்ற பிரதேசவாத கருத்துகளை தமிழ் மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும்.

புலிகளே தமிழர்கள்! தமிழர்களே புலிகள்! இது அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற பொங்கு தமிழ் எழுச்சியில் மக்களாகிய நாம் அணிதிரண்டு எடுத்துக் கொண்ட கொள்கைப் பிரகடனமாகும்.

தமிழ் இனத்தில் தேசியத் தலைவர் என்றுமே மக்களுக்காக தீர்க்கதரிசனம் மிக்க தீர்மானங்களை எடுத்து, இன்றுவரை புலிகள் அமைப்பையும், தமிழ் மக்களையும் அரும்பாடுபட்டுக் காத்து வந்தவர் என்பதை யாரும், யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

கடந்த காலங்களில் விடுதலைப் போராட்டம் பெரும் சவால்களையும், துயரங்களையும் சந்தித்த போதெல்லாம் நச்சுவிதைகள் களையெடுக்கப்பட்டு, விடுதலைப்பயிர் செழித்து வளர்ந்தது என்பதுதான் வரலாறாகும். இவற்றை மனதில் நிறுத்தி, "தீர்க்கதரிசனமிக்க விடுதலைப்புலிகளின் தலைமைத்துவத்தின் தீர்மானத்தைப் புத்திசாதுர்யமாக ஏற்றுக் கொண்டு, தமிழர் ஒற்றுமைக்கும், விடுதலைக்கும் வலுச்சேர்ப்போமாக.

அன்பான தமிழ் உறவுகளே!

பிரிவினையால் ஏற்படப்போகும் எதிர் விளைவுகளை ஒரு கணம் சிந்தித்து, சீர்தூக்கிப் பார்த்து அந்நிய சக்திகளுக்கு விலைபோன ஒரு தனிமனிதனின் அழைப்புக்கு செவி சாய்க்காமல் கடையடைப்பு, ஊர்வலம் மற்றும் அமைதியையும் ஒற்றுமையையும் சீர்குலைக்கும் எந்தவித விடுதலைப்போராட்டத்திற்கு விரோதமான செயற்பாடுகளிலும் ஈடுபடவேண்டாமென உரிமையுடன் வேண்டிý நிற்கின்றோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</b>

நன்றி தினக்குரல்....!

Print this item

  நீயும்..இயற்கையும்..
Posted by: phozhil - 03-09-2004, 11:42 AM - Forum: கவிதை/பாடல் - Replies (21)

விசும்பில் மதக்களிறாய் முறைக்கும் மேகம்,
விளையாடிய நேரம் விதிர்த்த இரத்தம்;
பூமகளாகம் மெல்லென தீண்டிய நீர்முத்து,
புணரிசையாய் சில்லென வீசிய சுரக்காற்று;
இராகம்..தாளம்..இராகம்..தாளம்..
தாளம்..இராகம்..தாளம்..இராகம்..
காரூறிய வளியிடை ஏறிய வாசம்,
நீரூறிய சுவரிடை ஏறிய பாசம்;
இன்பம்..பித்தம்..இன்பம்..பித்தம்..
பித்தம்..இன்பம்..பித்தம்..இன்பம்..
அந்தோ!
சித்தம் பித்தாக்கிய உந்தன் சத்தம்
சற்றும் இல்லென மகிழ்ந்த நித்தம்
சாபமாய முளைத்த சூரிய கோரம்.....

Print this item

  பட்டாம்பூச்சியாய் பறக்கவா?
Posted by: sWEEtmICHe - 03-09-2004, 08:46 AM - Forum: கவிதை/பாடல் - Replies (44)

<img src='http://www.birdcrossstitch.com/cards/butterflies/P6160131.jpg' border='0' alt='user posted image'>
<b>
[size=22]மஞ்சள் நிறநிலவு ஒன்று மாலையில் மறையும் போது...
மலர்களாய் உன்னில் மலரவா
பட்டாம்பூச்சி போல் பறந்து வரவா?
என்னில் சுவறும் தேனை நீ ருசிக்கவா?
என் காதலா
பூக்களாய் பூக்கவா அல்லது
பட்டாம்பூச்சியாய் பறக்கவா?
தன் காதலனை பட்டாம்பூச்சசி தாவி பறந்த தேடியது. Cry Cry

[b]இந்த கவிதை MCgaL(சுவிற்மிச்சி) எழுதியது</b>

Print this item

  நல்ல பாஸ்வேர்டை எப்படி அமைப்பது ?
Posted by: vasisutha - 03-09-2004, 04:08 AM - Forum: இணையம் - Replies (1)

நல்ல பாஸ்வேர்டை எப்படி அமைப்பது ?

<span style='color:#ff00d1'>கணிப்பொறி பயன் படுத்துபவர்களில் பாஸ்வேர்ட் பயன்படுத்தாதவர்கள் இருக்க முடியாது. ஏதாவது ஒரு வகையில் தங்களுக்கென ஒன்றோ அல்லது அதற்கு மேலாகவோ பாஸ்வேர்ட் பயன்படுத்த வேண்டிய சந்தர்ப்பங்கள் பல உண்டு. சீமாஸ் அமைப்பில் நுழைய, குறிப்பிட்ட கோப்பைப் பாதுகாத்து பின் பயன்படுத்த, லேன் எனப்படும் உள் வலை(LAN) அமைப்பில் நுழைய, இணையத்தில் கணிப்பொறியை இணைக்க, மின்னஞ்சல்களைப் பார்வையிட, டெல்நெட் (TELNET) பயன்பாட்டை அனுபவிக்க என பாஸ்வேர்ட் பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள் கணிப்பொறி உலகில் மிக அதிகம். அடிப்படையான இதனை முறையாக அமைத்திடாவிட்டால் அதன் சரியான பயன்பாடு நமக்குக் கிடைக்காமலேயே போய்விடும்.

<b>பலருக்கு ஒரு பாஸ்வேர்டை எப்படி அமைத்திட வேண்டும் என்று அறியாமலேயே இருக்கின்றனர். பாஸ்வேர்ட் அதனைப் பயன்படுத்துபவர்களுக்கு எண்ணிப் பார்க்க எளிதாகவும் மற்றவர்கள் அறிய கடினமாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு எப்படி அமைக்க முடியும் என்பதனையும் அதற்கான சில குறிப்புகளையும் இங்கு காண்போம்.
</b>
* எண்கள் ( 4,8,2,7,9 etc.), எழுத் துக்கள் (d,z,e,t,y etc) சிறப்புக் குறியீடுகள் (&,%,$,@ etc) போன்றவை கலந்தவையாக ஒரு பாஸ்வேர்டை அமைக்கலாம்.

* பாஸ்வேர்ட் ஆங்கிலத்தில் சிறிய பெரிய எழுத்துக்களின் வேறுபாட்டைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடியதாக, அதாவது case sensitive ஆக, இருக்க முடியும் என்றால் அவற்றைக் கலந்து அமைக்கலாம். எடுத்துக் காட்டாக Thiru&Valluvar என அமைக்கலாம்.

* பாஸ்வேர்டில் குறைந்தது ஆறு அல்லது எட்டு எழுத்துக்களைப் பயன்படுத்தி நீளமாக அமைப்பது நல்லது. அதற்காக மிக நீளமாக அமைப்பதுவும் தவறு. எனவே நினைவில் வைத்து மீண்டும் எண்ணிப் பார்த்து பயன்படுத்தத்தக்க வகையில் அமைப்பது நல்லது.

* உங்கள் பெயர், மனைவியின் பெயர், கணவனின் பெயர், மகன் / மகளின் பெயர், செல்லப் பிராணியின் பெயர், பிறந்த ஊர் பெயர், பிறந்த நாள், பெற்றோர் பெயர் இவற்றில் ஒன்றைப் பலரும் அமைக் கின்றனர். இது தவறு. ஏனென்றால் உங்களுடன் இருப்பவர்கள் நிச்சயமாய் இவற்றைத் தெரிந்து வைத்திருப்பார்கள். அவர்கள் உங்கள் பாஸ்வேர்டை அறிந்து கொள்வது எளிதாகிவிடும்.

* பொதுவாக ஒரு அகராதியில் உள்ள சொல் எதனையும் பாஸ்வேர்டாக வைப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் பாஸ்வேர்டைக் கண்டு பிடித்து தருவதற்கென்றே சில புரோகிராம்கள் உள்ளன. இந்த புரோகிராம்கள் அகராதியில் உள்ள சொல் என்றால் விரைவில் கண்டு பிடித்துவிடும்.

* அகராதியில் உள்ள இரண்டு சொற்களை இணைத்து பயன்படுத்தலாமா என்று நீங்கள் கேட்கக் கூடும். இதுவும் தவறுதான். ஏனென்றால் மேலே குறிப்பிட்ட புரோகிராம்கள் இவற்றையும் கண்டுபிடித்துவிடும்.

<b>* ஒரு சிலர் பாஸ்வேர்ட் ( password ) என்ற சொல்லையே பாஸ்வேர்டாகப் பயன்படுத்துவார்கள். அவர்கள் கணிப்பில் அது எண்ணிப் பார்க்க எளிதானது என்று எண்ணுகிறார்கள். இதுவும் தவறுதான். இந்த சொல்லில் முதல் சில எழுத்துக்களை கணிக்க முடிந்தால் அடுத்து வரும் எழுத்துக்களைக் கண்டுபிடிப்பது எளிதாகிவிடும்</b>

* நினைவில் இருக்கிற பழமொழிகள் பல இருக்கின்றன. இவற்றின் முதல் எழுத்துக்களை சேர்த்து ஒரு சொல்லாக அமைத்து பாஸ்வேர்ட் அமைக்கலாம். எடுத்துக்காட்டாக East or West Home is the Best இந்த பழமொழியில் உள்ள சொற்களின் முதல் எழுத்துக்களைச் சேர்த்து EoWHitB என்று அமைக்கலாம். இந்த மாதிரி பாஸ்வேர்ட் அமைத்தால் எவராலும் கண்டுபிடிக்க முடியாது.

* நல்ல அடிக்கடி கேட்கும் அல்லது பயன்படுத்தும் வாக்கியம் ஒன்றை நினை வில் வைத்து அதிலுள்ள சொற்களின் முதல் எழுத்துக்களை ஒரு சொல்லாக அமைத்து பாஸ்வேர்ட் அமைக்கலாம். எடுத்துக் காட்டாக My Native Place is Jaffna என்ற வாக்கியத்திலிருந்து MNPiJ என்று ஒரு பாஸ்வேர்ட் அமைக்கலாம். இதில் 8 எழுத்துக்கள் வேண்டுமென்றால் இத்துடன் சில எண்கள் அல்லது சிறப்பு குறியீடுகளைச் சேர்த்துக் கொள்ளலாம். அந்த வகையில் இதனை MNPiJ5{} என அமைக்கலாம்.

* கீ போர்டைப் பார்க்காமல் சரியாக அடிக்கும் வகையில் பாஸ்வேர்டை அமைக் கலாம். கீ போர்டைப் பார்த்து பாஸ்வேர்ட் அமைத்தால் பாஸ்வேர்ட் அடிக்க நேரம் அதிகமாகும். இதனால் உங்களைச் சுற்றி உள்ளவர்கள் நீங்கள் டைப் செய்யும் வார்த்தையை ஓரளவிற்கு கிரகித்துக் கொண்டு பாஸ்வேர்டை அறிந்து கொள்ளும் சாத்தியக் கூறுகள் அதிகம். கூடுமானவரை கரங்களை கீ போர்டின் மீது வைத்து அவ்வளவாக அவற்றை விலக்காமல் அடிக்கும் வகையில் பாஸ்வேர்ட் அமைப்பதே நல்லது. அவ்வகையில் aandimadam, sadayan என்பன போன்ற சொற்களை அமைக்கலாம்.

<b>* பாஸ்வேர்டை எப்போது நினைவில் வைத்திருங்கள். எங்கும் எழுதி வைக்காதீர்கள்.</b>

* அடிக்கடி பாஸ்வேர்டை மாற்றிக் கொண்டிருங்கள். ஒரே பாஸ்வேர்டை பல நாட்கள் வைத்திருக்காதீர்கள். அது மற்றவர்கள் அறிந்து கொள்வதற்கான சூழ்நிலையை அமைத்துவிடும்.

* Login பெயர் என நாம் இணைய தளங்களில் மற்றும் பிற இடங்களில் நுழைய பெயர் வைத்திருப்போம். இதனையே சிலர் பாஸ்வேர்டாக வைத்திருப்பார்கள். அவ்வாறு வைத்திருப்பது மிகவும் ஆபத்தான விஷயமாகும். பிறர் முதலில் இதனைத்தான் பாஸ்வேர்டாகச் சோதித்துப் பார்ப்பார்கள். எனவே Login பெயரை பாஸ்வேர்டாக அமைத்துக் கொள்வதனை அறவே தவிர்க்க வேண்டும்.

* யாருக்கும் உங்களுடைய பாஸ்வேர் டைக் கொடுக்காதீர்கள். அப்படியே பாஸ்வேர்டைக் கொடுக்கும் சூழ்நிலை வந்தால் உடனே உங்கள் பாஸ்வேர்டை மாற்றிவிடுங்கள்.

மின்னஞ்சல் மூலம் உங்கள் பாஸ்வேர்டை அனுப்பாதீர்கள். அப்படி அனுப்பினால் அது பலருக்குப் போய்ச் சேரும் அபாயம் உள்ளது. அதனைப் பெறுபவர் அந்த கடிதத்தை அழிக்காமல் வைத்திருந்தால் அந்த கணிப்பொறியைப் பயன்படுத்தும் எவரும் அதனை அறிய முடியும்.

* பக்கத்தில் உங்களை ஒருவர் கவனித் துக் கொண்டிருக்கும்போது பாஸ்வேர்டை டைப் செய்யாதீர்கள். அப்படி டைப் செய் தால் அவர் அறியாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி சுற்றி இருப்பவர் அறிந்து கொள்ளும் வகையில் டைப் செய்தால் அவர்கள் சென்ற பின்னர் பாஸ்வேர்டை மாற்றி விடுங்கள்.

* உங்களுக்குப் பல அக்கவுண்டுகள் இருக்கும். எல்லாவற்றிற்கும் வசதியாக ஒரே பாஸ்வேர்டை வைத்துக் கொள்ளா தீர்கள். நினைவில் வைத்துக் கொள்ள கஷ்டமாக இருந்தாலும் வெவ்வேறு பாஸ்வேர்டை வைத்துக் கொள்வதே நல்லது. </span>

நன்றி:கணணிமலர். dinakaran

Print this item

  சேதுவை மீண்டும் கருத்துக்களத்திற்குள் அனுமதிக்கலாமா?
Posted by: vasisutha - 03-08-2004, 08:53 PM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (70)

சேதுவை மீண்டும் கருத்துக்களத்திற்குள் அனுமதிக்கலாமா?

Print this item