Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 362 online users.
» 0 Member(s) | 359 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,404
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,282
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,639
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,309
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,673
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,198
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,475
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,522
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  நான் வாங்கிய சுனாமி..!
Posted by: kuruvikal - 02-06-2005, 11:22 AM - Forum: கவிதை/பாடல் - Replies (9)

<img src='http://img161.exs.cx/img161/9127/kagayaflowering0nc.jpg' border='0' alt='user posted image'>

<b>என்னவள் இதழ் விரிய
எழும் அந்த ராகங்கள்
என் இதய வீணை மீட்டிட்ட
சுரங்களாக....
அஞ்சுகம் அவள்
பஞ்சுள்ளம் கொண்ட மென்மை
என் இதய மெத்தை
தந்ததாக....
பொன்னிறம் மின்னும்
தன்னிறம் கொண்டவள்
தாங்கியது
என் உயிர் கொண்ட
வெப்பமாக....
காற்றோடு மிதந்து வந்த
அவள் சுகந்தம்
என் சுவாசம் தந்ததாக....
என்னையே தனதாக்கி
வாழ்கிறாள் பூவவள்
என்று நினைவுகள்
வாழ்ந்திருக்க...

ஒரு முறை எனைக்
கண்டதும் உமிழ்ந்தால்
ஒரு வார்த்தை....
பூவவள் இதழாய்
மென்மையாய் வருட வருவதாய்
எண்ணி வாங்கிய வேளை....
வந்தது இதயத்தைத் தாக்கியது
சுனாமி போல...
நீ அவன் போல்
இல்லை எனும்
அந்தப் பேரலை தந்தது
என் உயிர் கொல் சுனாமி....!</b>

நன்றி - http://kuruvikal.yarl.net/

Print this item

  மீண்டும் நேதாஜியின் மரண சர்ச்சை
Posted by: Vaanampaadi - 02-06-2005, 09:26 AM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

மீண்டும் நேதாஜியின் மரண சர்ச்சை

இந்தியாவின் விடுதலைப் போராட்டத் தலைவர்களில் ஒருவரும், தென்கிழக்காசியாவில் ராணுவம் அமைத்து இந்திய விடுதலைக்காகப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மரணம் இந்தியாவில் எப்போதுமே சர்ச்சைக்குரிய விஷயம் தான்.

நேதாஜி இறக்கவே இல்லை என நம்பும் மனிதர்களும் இந்தியாவில் ஆயிரக்கணக்கில் உள்ளனர். அவர் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி தைவானில் உள்ள தைப்பே விமான நிலையத்தில் விமான விபத்தில் இறந்து விட்டதாக கூறப்பட்டு வருகிறது.

ஆனால் அந்த நாளில் எவ்வித விமான விபத்தும் தைவானில் நடக்கவில்லை என தைவான் அரசாங்கம் தற்போது தெரிவித்துள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மரணம் குறித்து ஆராய்ந்து வரும் mukharjee விசாரணைக்குழுவிடம் இத்தகவலை தாய்வான் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் நேதாஜியுடன் கடைசியாகப் பயணம் செய்த அவரது தோழரும், பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுச் செயலாளருமான ரகுமான்கான் எழுதியுள்ள புத்தகத்தில் நேதாஜி பயணம் செய்த விமானம், தைவானின் காட்டுப்பகுதியில் விழுந்ததை நேரில் கண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ரகுமான்கான் குறிப்பிட்டுள்ள ஆகஸ்ட் 18-ஆம் தேதி, விமான விபத்துச் சம்பவம் எதுவும் நடக்கவில்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளது. நேதாஜி மரணம் பற்றிய சர்ச்சைகள் கடந்த 59 ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், தைவானின் கருத்து மேலும் இப்பிரச்னையைத் தீவிரமாக்கியுள்ளது.

வணக்கம் மலேஷியா

Print this item

  பகலில் வழங்கி இரவில் மீளப் பெற்றனராம்!
Posted by: Vaanampaadi - 02-06-2005, 09:02 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

சுனாமி அனர்த்த நிவாரணக் கொடுப்பனவை
பகலில் வழங்கி இரவில்மீளப் பெற்றனராம்!
மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
சுனாமி நிவாரணக் கொடுப்பனவுகளைப் பகலில் கொடுத்துவிட்டு இரவில் வீட்டைத் தட்டி எழுப்பி மீளப்பெற்றனராம் அதிகாரிகள்.
இச்சம்பவம் களுவாஞ்சிக்குடி பிரதேச செய லர் பிரிவிலுள்ள குருக்கள் மடத்தில் இடம் பெற்றுள்ளது.
சுனாமியினால் பாதிக்கப்பட்ட குருக்கள் மடம்துறையடி வீதியைச் சேர்ந்த 15 பேர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் இவ்வாறு முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளனர்.
மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் இரா.மனோகரனிடம் இது தொடர் பான எழுத்துமூல முறைப்பாடு ஒன்றும் சமர்ப்பிக் கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதா வது:-
சுனாமியால் பாதிக்கப்பட்ட குருக்கள் மட துறையடி வீதியிலுள்ள 15 பேருக்குச் சமையல் உபகரணங்களை கொள்வனவு செய்ய 2 ஆயி ரத்து 500 ரூபாவும் 375 ரூபா பெறுமதியான நிவாரண முத்திரையும் வழங்கப்பட்டது.
31.01.2005 அன்று பகல் கையொப்பமிட்டு அப்பிரதேச கிராம சேவையாளர் மற்றும் சமுர்த்தி ஊழியர் ஆகியோர் இந்தக் கொடுப் பனவுகளை வழங்கினர்.
பின்னர் அன்று நள்ளிரவு 12 மணியளவில் பிரஸ்தாப 15 பேரது வீடும் தட்டப்பட்டது. அவர் களை எழுப்பி பகல் வழங்கிய கொடுப்பனவை யும் முத்திரைகளையும் தருமாறு அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
இதனை அடுத்து உணவு முத்திரைகளை யும் சமையல் உபகரணங்களுக்கான கொடுப் பனவுகளையும் மீள ஒப்படைத்த இவர்கள்ää மறுநாள் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலரிடம் முறைப்பாடு செய்யவெனச் சென்றுள்ளனர்.
இவ்வாறு முறைப்பாடு செய்யச் சென்றவர் களைக் கொடுப்பனவை வழங்கியதாகக் கூறப் படும் அதிகாரிகள் பிரதேச செயலரிடம் முறைப் பாடு செய்யவிடாமல் தடுத்துவிட்டனர் என் றும் -
இதனை அடுத்தே மனித உரிமை ஆணைக் குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

உதயன்

Print this item

  கால்கள் ஒட்டி பிறந்த குழந்தைக்கு 24-ந்தேதி ஆபரேஷன்
Posted by: Vaanampaadi - 02-06-2005, 08:39 AM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

<img src='http://www.maalaimalar.com/images/news/Article/6-2-2005/06child.jpg' border='0' alt='user posted image'>
கால்கள் ஒட்டி பிறந்த குழந்தைக்கு 24-ந்தேதி ஆபரேஷன்

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவில் ஒன்றான பெருவில் குவாஞ்சாவோவில் உள்ள சாரா என்ற பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு இப்போது 9 மாதம் ஆகிறது. மிலாகிராஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த குழந்தையின் கால்கள் இரண்டும் ஒட்டிய நிலையில் இருக்கிறது.

பார்ப்பதற்கு கடல் கன்னி போல இருக்கும் இந்த குழந்தையின் 2 கால்களையும் ஆபரேஷன் செய்து பிரிப்பது தொடர்பாக டாக்டர்கள் ஆலோசனை நடத்தினார்கள். ஆய்வுகள் அனைத்தும் இப்போது முடிந்து விட்டன. வருகிற 24_ந்தேதி ஆபரேஷன் செய்ய டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த ஆபரேஷன் வெற்றி பெறும் என்றும், 2 கால் எலும்புகள் இருப்பதால் ஆபரேஷன் செய்வதில் எந்த சிக்கலும் இருக்காது என்றும் டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Maalaimalar

Print this item

  Tsunami
Posted by: eelapirean - 02-06-2005, 05:51 AM - Forum: சினிமா - No Replies

தசாவதாரம் படம் பார்க்காதவர்கள் ஒரு முறை பார்க்கவும்.சுனாமியை பார்க்கலாம்.

Print this item

  காதல்....
Posted by: Malalai - 02-06-2005, 04:54 AM - Forum: கவிதை/பாடல் - Replies (16)

உனக்கு என்னைப் பிடிக்க
எனக்கு உன்னைப் பிடிக்க
கண்கள் மட்டுமே பேச
மனம் ஒன்று பட்டும் - ஏன்
உடல் கொண்ட தூரத்தை
உணர்வுகளுக்கும் கொடுக்கிறாய்?.....

நான் உன்னைத்
தோடும் நேரம்
நீ இல்லை - ஆனால்
நீ என்னைத்
தேடும் நேரம்
நான் இருப்பபேன்
உனக்காக இருப்பேன்
என்றென்றும்.....


உன்னை என்றென்றும்
நினைக்கும்
என்னை எப்போதாவது
றினைக்கிறாயா
நீ?.....

Print this item

  இதய நோயை தொலைவிலிருந்து குணப்படுத்தும் கருவி
Posted by: Malalai - 02-06-2005, 03:56 AM - Forum: மருத்துவம் - Replies (7)

[b]<span style='font-size:25pt;line-height:100%'>இதய நோயை தொலைவிலிருந்து குணப்படுத்தும் கருவி </span>


<img src='http://www.dinakaran.com/health/daily/2005/feb/06/beat.jpg' border='0' alt='user posted image'>
ஆட்ரியல் பைப்ரிலேஷன் எனப்படும் இதய நோய் உள்ளவர்கள் இதயம் திடீரென்று தாறுமாறhக துடிக்க ஆரம்பிக்கும். இதனால் ரத்த அழுத்தம் அதிகமாகி பக்கவாதம் ஏற்படும். மாரடைப்பு வந்து உயிர் போவதற்கும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய நிலையில் மருத்துவ மனைக்கு வரும் நோயாளிக்கு மின்;சார ஷhக் கொடுத்து சிகிச்சை செய்யப்படும். அந்தச் சமயத்தில் நோயாளிக்கு பயங்கர வலி ஏற்படும். மேலும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுவராவிடில் உயிர் பிழைப்பது கடினம். அமெரிக்காவில் உள்ள வடகரோலினா மாநிலத்தில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் இந்த நோய்க்கு புதிய வகை எலக்ட்ரானிக் கருவி கண்டுபிடித்துள்ளார்கள். பேஸ்மேக்கர் போல் இந்த கருவியை இதயத்தில் பொருத்திக் கொள்ள வேண்டும். இந்தக் கருவிபொருத்தப்பட்ட நோயாளியின் இதயம் தாறுமாறhக துடிக்க ஆரம்பிப்பதற்கு முன் குறிப்பிட்ட சிக்னல்களை இந்தக் கருவி வெளியே அனுப்பும். சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் இ;தனை கண்காணித்து வரும் டாக்டர்கள் அங்கிருந்தபடியே ரிமோட் மூலம் சிறிய அளவு மின்சார ஷhக்கை இதயத்தில் பொருத்தப்பட்ட கருவி மூலம் பாயச் செய்வார்கள். இதனால் இதயம் சீராக இயங்க ஆரம்பிக்கும். இதய நோயாளிகள் மத்தியில் இந்தக் கருவிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.



நன்றி: தினகரன்

[b]************************************
மழலையின் கருத்து சரியான முறையில் திருத்தப்பட்டுள்ளது

கவிதன்

Print this item

  புலத்தில் வாணிபமாகும் ஆன்மீகம்
Posted by: Thaya Jibbrahn - 02-06-2005, 12:14 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (2)

நண்பர்களே. நான் படித்ததில் பிடித்தது. இந்த எழுத்துரு ஒத்துழைக்க மறுப்பதால் இணைப்பை தருகின்றேன். படித்து உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்களேன்.
http://www.worldtamilarweb.com/anmigam1.php

Print this item

  வெள்ளைமாளிகை அறிவித்தல்
Posted by: Vaanampaadi - 02-05-2005, 07:28 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

ஜனாதிபதியின் பிரதிநிதி ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுவார்கள் என அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் இன்று அறிவித்துள்ளார். இம் மாதம் 19ம் திகதியிலிருந்து 21ம் திகதி வரை மேற்கொள்ளப்பட இருக்கும் இவ் விஜயம் இலங்கை இந்தோனேசியா தாய்லாந்து மற்றும் மாலைதீவு நாடுகளை உள்ளடக்கியதாக இருக்கும் எனவும் வெள்ளை மாளிகை மேலும் தெரிவித்துள்ளது.

பங்குபற்றும் பிரதிநிதிகள்:
முன்னால் அதிபர் : ஜோர்ஜ் புஷ்
முன்னால் அதிபர் : வில்லியம் ஜெ.கிளிண்டன்


Personnel Announcement

President George W. Bush today announced the designation of a Presidential Delegation to visit tsunami-affected countries of South and Southeast Asia, including Indonesia, Sri Lanka, Thailand, and The Maldives from February 19-21, 2005.

Members of the Presidential Delegation are:

Former President George Bush

Former President William J. Clinton


Source : http://www.whitehouse.gov/news/releases/20...0050204-15.html

Print this item

  இன்று
Posted by: poo - 02-05-2005, 05:44 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

இன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளருடன் இலங்கைக்கான நோர்வே தூதுவர் கண்காணிப்பு குழுவின் பதில் தலைவர் சந்திப்பு.

Print this item