| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 1693 online users. » 0 Member(s) | 1689 Guest(s) Applebot, Baidu, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,136
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,122
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,566
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,266
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,559
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,973
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,364
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,033
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,961
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,228
|
|
|
| டொராண்டோவில் தமிழியல் மாநாடு! அனைவரையும் அழைக்கிறார்கள் |
|
Posted by: Snegethy - 03-25-2006, 08:05 AM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (5)
|
 |
<span style='font-size:22pt;line-height:100%'>டொராண்டோவில் தமிழியல் மாநாடு! அனைவரையும் அழைக்கிறார்கள்.
டொராண்டோ பல்கலைக்கழக டிரினிடி கல்லுhரியில் நடைபெற இருக்கும் தமிழியல் மாநாடு பற்றி ஏற்றகனவே அறிந்திருப்பீர்கள் இருந்தாலும் எனக்கு இம்மாநாடு பற்றிக்கிடைத்த மேலதிக தகவல்கள் உங்களுக்காக.....</span>
தமிழியல்: திணையும் தளமும் நிலையும்
வடஅமெரிக்கா, ஐரோப்பா, தெற்காசியா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் ஒன்று கூடும் தமிழியல் மாநாடு, மே மாதம் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை டொராண்டோ பல்கலைக்கழக டிரினிடி கல்லுìரியில் நடைபெறுகிறது. பங்குபெற விரும்புவோர் அனைவரும் இந்த இணையத் தளத்தில் முன்பதிவு செய்வது அவசியம்.
டொராண்டோ பல்கலைக்கழகத்தின் தெற்கு ஆசிய கல்விக் கழகமும் வின்சர் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் மற்றும் மானுடவியல் துறையும் இணைந்து 'திணையும் தளமும் நிலையும்' தமிழியல் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன. 2006ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நான்கு நாட்கள் மாநாடு நடைபெறும். ஆண்டுதோறும் நிகழவுள்ள தமிழியல் மாநாட்டுத் தொடரின் முதல் நிகழ்வாக இம்மாநாடு அரங்கேறுகிறது.
மேற்குலகின் ஆகப்பெரிய புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தைக் கொண்டிருக்கும் டொராண்டோவில் தமிழ்க் கல்வி வளர்ச்சிக்கான நீண்ட காலத் திட்டத்தின் ஓர் அங்கமாக இந்த மாநாடுகள் அமைகின்றன. வடஅமெரிக்காவின் தமிழ்க் கல்வி மையமாக டொராண்டோவை உருவாக்கும் முயற்சியின் முதல் கட்டமாக டொராண்டோ பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இம்மாநாடும் கோடைக்கால தமிழ் மொழி வகுப்பும் இடம்பெறுகின்றன.
டொராண்டோ பல்கலைக்கழகத்துடனும் வடஅமெரிக்காவின் தமிழ்க் கல்வியாளர்களுடனும் டொராண்டோ தமிழ்ச் சமூகத்தைப் புத்தாக்க வழியில் மாநாட்டின் வழி இணைப்பது ஏற்பாட்டாளர்களின் நோக்கம். மேலும் டொராண்டோ மாணவர்களுக்கும் வடஅமெரிக்காவின் தமிழியல் கல்வியாளர்களுக்கும் தமிழ்க் கல்வியின் விரிந்த தளத்தையும் இம்மாநாடு அறிமுகப்படுத்தும்.
வடஅமெரிக்காவின் தமிழியல் கல்வியாளர்கள் தங்களது படைப்புகளை சக கல்வியாளர்கள் மற்றும் டொராண்டோ தமிழ்ச் சமூகத்தின் முன்னிலையில் படைக்க ஒரு வாய்ப்பையும் இந்த டொராண்டோ மாநாடு தருகிறது. அதனுடன் தமிழ்நாடு, இலங்கை தொடர்பான கல்விகளில் ஈடுபட்டிருக்கும் கல்வியாளர்கள் தங்களது ஆய்வுகளைப் பரிமாறிக்கொள்ளவும், இந்தத் தமிழ் வட்டாரங்கள் குறித்த கல்வியை பரந்த ஒப்பீட்டு முறையில் அணுகவும் மாநாடு வகைசெய்கிறது. அனைத்துலக கல்வி மையத்துக்கான மங் சென்டர் அல்லது பல்கலைக்கழக அச்சகம் மூலம் மாநாட்டில் படைக்கப்படும் கட்டுரைகளை நுìலாக வெளியிடுவது மாநாட்டின் நோக்கங்களில் ஒன்று.
அறிமுகம்
டொராண்டோ பல்கலைக்கழகத்தின் தெற்கு ஆசிய கல்விக் கழகமும் வின்சர் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் மற்றும் மானுடவியல் துறையும் இணைந்து 'திணையும் தளமும் நிலையும்' தமிழியல் மாநாட்டை 2006ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி முதல் 14ம் தேதி நடத்துகின்றன. தென்அமெரிக்கா, ஐரோப்பா, தெற்காசியா, ஆஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்களை இம்மாநாடு ஒன்றிணைக்கிறது. வரலாறு, இலக்கியம், மானுடவியல், சமயம், கலாசாரா மனோவியல், மொழியியல், புலம்பெயர் கல்வி போன்ற துறைகளில் ஆய்வுக் கட்டுரைகள் மாநாட்டில் இடம்பெறுகின்றன. லண்டன் பல்கலைக்கழகத்தின் கீழ்த்தேச நாடுகள் மற்றும் ஆப்ரிக்கக் கல்விக் கழகம், ஹார்வர்ட் பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம், உப்சாலா பல்கலைக்கழகம், மாசேய் பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பிரஞ்சு கல்வி நிலையம், மாக்கில் பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம், டொராண்டோ பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்று விரிந்த கல்வித் தளங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் இந்த முக்கிய மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
சக கல்வியாளர்கள் முன்பு தங்களது படைப்புகளை பன்முகத் தளத்தில் படைக்கும் ஓர் தனித்தன்மையான வாய்ப்பை வடஅமெரிக்காவின் தமிழியல் கல்வியாளர்களுக்கு இம்மாநாடு வழங்குகிறது. வடஅமெரிக்காவின் தமிழியல் கல்வி பெருமளவில் தமிழ் நாடு சார்ந்த ஆய்வுகளை முன்னிலைப்படுத்தியுள்ளது. இந்த மாநாடு, தமிழியல் மற்றும் தமிழியல் சார்ந்த துறைகளில் ஆய்வு செய்யும் கல்வியாளர்களை ஒன்றுகூட்டி, பன்முக ஆய்வை மேற்கொள்ள ஒரு தளத்தை அமைக்கிறது.
கருப்பொருள்
பண்டைக்கால தமிழ்க் கவிதை முதல் தற்கால இலக்கியம் வரை காணப்படும் படைப்பிலக்கியம், நிகழ்கலை மரபுகளின் வளர்ச்சியும் தொடர்ச்சியும்.
இடைக்காலம், தற்காலத்தின் தேசியக் கற்பனைகளின் மறுஉருவாக்கம்.
மேற்கத்திய நகரங்களில் தமிழ் புலம்பெயர் சமூகங்களில் உருவாக்கம்.
இலங்கை இனப் பிரச்சினை தொடர்பான கலாசார, பண்பாட்டு ஆய்வுகள்.
தற்காலத் தமிழ்நாட்டில் பால், சாதி, சமயம் தொடர்பான சமூக, கலாசார, இலக்கிய மறுஉருவாக்கங்கள்.
மாணவர்களுக்கு குறிப்பாக டோராண்டோவின் புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமிழியலின் விரிந்த துறைகளை இந்த மாநாடு அறிமுகப்படுத்தும். இதற்காக மாணவர்களுக்கான ஓர் அரங்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வரங்கில் வடஅமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் தமிழியல் கல்விக்கான வாய்ப்புகள் பற்றி வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் பேசுவார்கள். மேலும் இத்திட்டங்களில் சேர்வதற்குத் தேவையான கல்வி, பயிற்சித் தகுதிகள் பற்றியும் விளக்குவார்கள்.
தகவல்:http://tamilstudiesconference2006.blogspot.com
For more information, please visit http://www.chass.utoronto.ca/~tamils/main.html.
|
|
|
| ஸ்கந்தா மகாஜனா துடுப்பாட்டம் நேற்று விறுவிறுப்பாக ஆரம்பம்! |
|
Posted by: SUNDHAL - 03-25-2006, 04:39 AM - Forum: விளையாட்டு
- No Replies
|
 |
சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரிக் கும் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரிக் கும் இடையே வருடாந்தம் நடத்தப்படும் "நாயகர்களின் போர்' (ஆச்ttடூஞு ணிஞூ tடஞு ஏஞுணூணிண் ஞுண்)துடுப்பாட்டப் போட்டி ஸ்கந்தவரோதயக் கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமாகி யது.
நண்பகல் ஒரு மணிக்கு அணிகள் களம் இறங்கின. பூவா தலையா போட்டு வெற்றி யீட்டிய ஸ்கந்தா அணி மகாஜனா அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது.
மகாஜனாக் கல்லூரி அணி நேற்றைய தினம் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 145 ஓட்டங்களை மட்டும் பெற்றுக் கொண்டது.
மகாஜனாக் கல்லூரியின் சார்பில் பிரக லாதன் 50 ஓட்டங்களையும் மயூரன் 26 ஓட் டங்களையும் ஆகக் கூடிய ஓட்டங்களாகப் பெற்றுக் கொடுத்தனர்.
ஸ்கந்தவரோதயக் கல்லூரி சார்பில் பந்து வீசிய நிரோஜன் 46 ஒட்டங்களுக்கு 3 விக் கெட்டுக்களையும் நிசாகரன் 32 ஓட்டங் களுக்கு 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி னார்கள்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஸ்கந் தவரோதயக் கல்லூரி ஆட்டநேர முடிவில் 25 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்த நிலையில் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இதேநேரம் ஆட்டமிழக்காமல் நிசா கரன் 14 ஒட்டங்களுடனும் ஜெயன் 02 ஓட் டங்களுடனும் இருக்கின்றார்கள்.
இன்று காலை 9 மணிக்கு ஆட்டம் மீண் டும் ஆரம்பமாகும்.
"உதயன் சுடர் ஒளி' நிறுவனங்கள் மற் றும் செலான் வங்கி என்பவற்றின் அனு சரனையுடன் இந்தத் துடுப்பாட்டப் போட்டி நடைபெறுகிறது.
Thanks:uthayan...
|
|
|
| யாழில் சிங்கள இராணுவம் வெறியாட்டம்! 8 மாணவிகள் உட்பட 15 மாணவ |
|
Posted by: iruvizhi - 03-24-2006, 02:12 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
யாழ்ப்பாண தொழில்நுட்பக் கல்லூரிக்குள் உள்நுழைந்த சிறிலங்கா இராணுவத்தின் வெறியாட்டத்தில் 8 மாணவிகள் உட்பட 15 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
அன்னை பூபதி நினைவு நாள் நிகழ்வை இன்று வெள்ளிக்கிழமை காலை மாணவர்கள் நடத்திக் கொண்டிருந்தனர்.
பலாலி வீதியில் அமைந்துள்ள காலை 10.30 மணிக்கு இக்கல்லூரிக்குள் பவள் கவச வாகனத்துடன் உள்நுழைந்த இராணுவத்தினர் கல்லூரி மைதானத்தில் நிகழ்வில் பங்கேற்றிருந்த மாணவர் ஒன்றியத் தலைவர் சுகந்தன் மற்றும் 8 மாணவிகள் உள்ளிட்ட 15 மாணவர்களை அடித்துத் தாக்கினர்.
அன்னை பூபதியின் உருவப் படத்தை நாசம் செய்தனர். மைதானத்தில் ஏற்றப்பட்டிருந்த தமிழீழத் தேசியக் கொடியை இராணுவத்தினர் அகற்றினர்.
கல்லூரியின் சன்னல்கள் மற்றும் மாணவர்களின் மோட்டார் சைக்கிள்களை இராணுவத்தினர் அடித்து நொறுக்கினர்.
மாணவர்களின் செல்லிடப்பேசிகள் மற்றும் கையடக்க புகைப்படக் கருவிகளையும் இராணுவத்தினர் பறித்தனர்.
சிறிலங்கா இராணுவத்தின் இந்த வெறியாட்டத்துக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் மாணவர்களுக்கும் இராணுவத்துக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.
சம்பவ இடத்தை இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு பார்வையிட்டது.
<b>தகவல்: புதினம் புள்ளி கோம் www.puthinam.com</b>
|
|
|
| இராணுவம் யாழ் தொழில் நுட்பக் கல்லூருக்குள் நுழைந்து மாணவர் |
|
Posted by: narathar - 03-24-2006, 12:20 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- Replies (2)
|
 |
கூலுக்கு ஏன் இராணுவம் சுவரொட்டி ஒட்டுது எண்டு எல்லாருக்கும் விளங்கினாச் சரி....
SLA soldiers attack students inside Jaffna Technical College
[March 24, 2006 07:59 GMT]
Sri Lanka Army troopers Friday morning entered the grounds of Jaffna Technical College and beat the students who were paying tribute to Annai Poopathy. Soldiers attacked the Student Union Leader of the Technical College Mr. Suganthan and 15 fellow students including 8 female students. Sri Lankan soldiers, who entered into the grounds in a Buffel Armoured vehicle, removed the Thamileelam national flag, hoisted in the school grounds and smashed the photograph of Annai Poopathy, windows of the college building, and the motorbikes parked inside the college ground. Tension prevails in Jaffna where students were organising protests against the attack. Full story >>
http://www.tamilnet.com/
|
|
|
| தண்ணீர் தண்ணீர் |
|
Posted by: ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-24-2006, 11:37 AM - Forum: தமிழ் /தமிழர்
- No Replies
|
 |
<b>தண்ணீர் தண்ணீர்</b>
ஆனாரூனா
இந்தியா பல தேசங்களாக, சமஸ்தானங்களாக, பாளையங்களாகப் பிரிந்து, முரண்பட்டு, மோதிக் கொண்டிருந்த சூழ்நிலைதான் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமைந்தது. இந்தியாவை ஒற்றுமைப் படுத்தியதுதான் (!) பிரிட்டிஷ் ஆட்சி மறைவதற்கு அடிப்படையாய் அமைந்தது.
பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகும், சுதந்திர(?) இந்தியாவிலும் மாநில, வட்டார உணர்வுகள், - தேசிய அல்லது பிரிவினை உணர்வுகள் இருப்பதால்தான் இந்திய தேசியத்தின் பெயரால் `தேசிய ஒருமைப்பாட்டின்’ பெயரால் `வலிமையான’ அகில இந்தியக் கட்சியாக காங்கிரஸ் இருக்க முடிந்தது. அதே காரணம்தான் பாரதீய ஜனதாவுக்கும் ஆசையை வளர்த்தது. பல தேசிய இனங்களுக் கிடையேயான முரண்பாடுகளும், மோதல்களும் இருக்கும் வரைதான் இந்த இரு கட்சி களுக்கும் ஆட்சிக் கனவு நீடிக்கும்.
தேசிய இனங்களுக்கிடையேயான முரண்பாடுதான், மொழி வழித் தேசிய உணர்வு தான் இந்தக் கட்சிகளின் தோல்விகளுக்கும் காரண மாகின்றன. ஆகவே `இந்திய தேசிய’ ஆதிக்க சக்திகள் தேசிய ஒருமைப் பாட்டை வலியுறுத்தும் அதே நேரம் தேசிய இனச் சிக்கல்களையும் வளர்த்துவிட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றன.
இந்த நாடகத்தின் ஒரு பகுதிதான் முல்லைப் பெரியாறு அணை, காவிரி நதிநீர் போன்ற சிக்கல்கள்... மொழிவழித் தேசிய அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டது இந்த தேசிய இனங்களின் வளர்ச்சிக்காக அல்ல. தமிழர்களும், மலையாளிகளும், கன்னடியர்களும், ஆந்திரமும் ஒன்றாக இருந்தால் இந்தி - இந்திய - இந்துத்துவ ஆதிக்கம் ஏற்பட வாய்ப்பில்லை என்பதாலேயே மொழி வழி மாநிலப் பிரிவினைக்கு காங்கிரஸ் கட்சி தலையசைத்தது.
மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது நியாயங்கள் புறக்கணிக்கப் பட்டன. தேவிகுளம் பீர்மேடு எனும் மலைசார்ந்த தமிழ்ப் பகுதிகள் கேரளத்துக்குத் தரப்பட்டன. தமிழ்த் தேசிய உணர்வு கேள்வி எழுப்பிய போது இந்திய தேசிய ஒருமைப்பாட்டின் பெயரால் பெருந்தலைவர் காமராசர் பதிலளித்தார். ``குள மாவது குட்டையாவது, மேடாவது பள்ளமாவது. எது எங்கே இருந்தால் என்ன? எல்லாம் இந்தியா வுக்குள்தான் இருக்கிறது’’ என்றார் காமராசர். தேவிகுளம் பீர்மேடும், முல்லைப் பெரியாறும், காவிரியும், பொதுவாக கேரளமும், தமிழ்நாடும், கன்னடமும் இந்தியாவுக்குள் இருப்பதால்தான் இத்தனை சிக்கல்கள்; இத்தனை மோதல்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும் என்று கேட்கிறவர்களின் உணர்வுகளை ஒரேயடியாக அலட்சியப்படுத்தி விட முடியாது.
மாநிலப் பிரிவினையின் போது தமிழ்நாட்டில் தலைமைச் செயலாளராக இருந்தவர் வர்கீஸ். இவர் மலையாளி. தேவிகுளம் பீர்மேடு கேரளத்துக்குப் போவதில் இவர் பெரிதும் ஆர்வம் காட்டினார். தேவிகுளம் பீர்மேடு பகுதி கேரளத்துக்குத் தரப்படவில்லை என்றால் கேரளத்தைத் தனிமாநிலமாகப் பிரிப்பதில் அர்த்தமே இல்லை என்றார் வர்கீஸ்.
பிறகு எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம். குறித்துப் பிரச்சனை வந்தது. அப்போது கேரள முதலமைச்சரும் மலையாளி. தமிழக முதலமைச்சரும் மலையாளி. தமிழக அரசின் சார்பாகப் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட தலைமைச் செயலாளர் அந் தோணியும் மலையாளி. முதலமைச்சர்கள், தலைமைச் செயலாளர்கள், பொறியாளர்கள் எல்லோருமே மலையாளிகளாக இருந்த சூழலில் எந்த உணர்வில் பேச்சு வார்த்தை நடந்திருக்கும்?
இந்தப் பிரச்சனையின் இன்னொரு பக்கம் தீவிர சிந்தனைக்குரியது.
கேரளத்தில் ஒரு மலையாளிதான் அந்த நாட்டின் முதலமைச்சராக முடிகிறது. கன்னடத்தில் ஒரு கன்னடியர்தான் முதலமைச்சராக முடிகிறது. ஆந்திரத்தில் ஒரு தெலுங்கர்தான் முதலமைச்சராக முடிகிறது. மராட்டியத்தில், வங்கத்தில்... என்று இந்தியாவின் எந்த நாட்டிலும் அந்தந்தத் தேசிய இனத்தலைவர்களே முதலமைச்சராக முடிகிறது. இதுதான் இயல்பானது; இதுதான் முறையானது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் யார் வேண்டுமானாலும் முதல்வராக முடிகிறது.
இது தமிழர்களை மானக்கேடானவர்களாகவும் மடையர்களாகவும் அடை யாளப் படுத்துகிறதா?
தமிழர்கள் விரிந்த சிந்தனையாளர்கள்; விசால மனம் படைத்தவர்கள் என்று உலகுக்கு உணர்த்துகிறதா? ஆனால் பண்பாடுள்ள மக்கள் வரலாறு முழுவதிலும் படையெடுப்பாளர்களாலும், போக்கிரிகளாலும் வெல்லப்படுகிறார்கள் என்பதற்கு எத்தனையோ சான்றுகள் உண்டு.
இந்த வரலாற்று ஆதாரங்களைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு `தேசிய உணர்ச்சி’ என்கிற பெயரில் முற்போக்குச் சிந்தனைகளுக்கும், புரட்சிகரமான இயக்கங்களுக்கும் எதிராகப் புரட்டுரை செய்கிறவர்களும், பாசிசத்தை ஆதரிப்பவர்களும் இருக்கிறார்கள். இந்த போலித்தமிழர்களும் கூலித்தமிழர்களும் உண்மையில் தேசியப் பெருமிதத்தால் அவ்வாறு செய்யவில்லை. அவர்களின் நோக்கம் எல்லாம் புரட்சிகர உணர்வுகளை மழுங்கடிப்பதும், அழிப்பதும்தான்.
கம்பன் கவிநயத்தால் உயர்ந்த பீடத்தில் அமரத்தகுந்தவன்தான். ஆனால் தமிழுக்குத் தொண்டாற்றியதில் கால்டுவெல்லும், வீரமாமுனிவனும் மிக உயரத்தில் இருக்கிறார்கள். கம்பனோ பள்ளத்தாக்கில் விழுந்து விடுகிறான்.
தமிழினத்தை மானமும் அறிவும் உள்ள சுதந்திர இனமாக மாற்றுவதற்குப் போராடுவதில் தந்தை பெரியாருக்கு இணையாக யாருண்டு இங்கே?
ஆனால் பார்ப்பனிய பாசிஸ்ட்டுகளும், தமிழினத் துரோகிகளும் பெரியாரின் கருத்துக்களை எதிர் கொள்ள முடியாத போதெல்லாம் அவர் கன்னடத்துக்காரர் என்று கூறித் தங்கள் எஜமான விசுவாசத்தைக் காட்டிக் கொள்ளத் தவறியதில்லை.
இவர்களுடைய பெரியார் எதிர்ப்புக்கும் திராவிட இயக்க எதிர்ப்புக்கும் ஆணி வேராக, அச்சாணியாக இருப்பது தமிழ்த்தேசிய உணர்வல்ல, பாசிசப் பற்று; புரட்சிகரமான சிந்தனைகளின்மீதும் இயக்கங்களின் மீதும் உள்ள வெறுப்பு.
இவர்கள் இருத்தல்வாதிகள், அல்லது பிழைப்புவாதிகள். பெரியாரை விமர்சிப்பதன் மூலம் நாங்கள் அடிமைத் தொழிலுக்கும் அதைவிடக் கேவலமான காரியங்களுக்கும் பயன் படக்கூடியவர்கள் என்று யார் யாருக்கோ தெரியப்படுத்துகிறார்கள் என்பதே உண்மை!
தண்ணீர் எங்களுக்குத் (கேரளத்துக்கு) தேவைப்படுகிறதோ இல்லையோ, தமிழகத்துக்குப் பயன்படக் கூடாது என்கிற தோரணையிலேயே கேரளம் தொடர்ந்து சண்டித்தனம் செய்து வருகிறது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என்று 30 ஆண்டுகளாகக் கேரளம் பிடிவாதம் செய்து கொண்டிருக்கிறது. அணை பலவீனமாக இருக்கிறது. நீர் மட்டத்தை உயர்த்தினால் அணை உடைந்து கேரளமே மூழ்கி விடும் என்பதுபோன்ற அதீதக் கற்பனைகளை முன் வைத்து முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருக்கிறது. அணை உறுதியாக இருப்பதாக வல்லுநர்கள் சோதித்து உறுதியளித்த பிறகும் கேரளம் ஒப்புக் கொள்ள வில்லை.
இதை எதிர்த்து தமிழக அரசு தொடுத்த வழக்கில், அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடி யாக உயர்த்திக் கொள்ள லாம் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வால், நீதிபதிகள் சி.கே. தாக்கர், பி.கே.பாலசுப்பிர மணியன் ஆகியோர் தீர்ப்பளித்திருக்கிறார்கள்.
அந்தத் தீர்ப்பில் -
``நில நடுக்கம் உள்பட பல்வேறு கோணங்களில் அணையின் பாதுகாப்புக் குறித்து ஆராயப்பட்டிருக்கிறது. நீர் தேக்கி வைக்கும் உயரத்தை 142 அடியாக உயர்த்தினால் ஆபத்து ஏற்படும் என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் கேரளம் இதில் முட்டுக்கட்டை போடும் வகையில் நடந்து கொள்வதாகவே அறிக்கையின் மூலம் தெரிகிறது.’’
- என்று தெளிவுபடுத்தி யிருக்கிறார்கள்.
(அணையின் நீர்த்தேக்க உயரத்தை 152 அடியாக உயர்த்த அனுமதிக்க வேண் டும் என்கிற தமிழக அரசின் கோரிக்கை முதல் கட்டமாக 142 அடியை எட்டியிருக் கிறது.)
ஆனால், உச்சநீதி மன்றத் தின் இந்தத் தீர்ப்பை முறியடிக்கக் கேரளம் துணிந்து நிற்கிறது. கேரள முதல்வர் உம்மன் சாண்டி அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றைக் கூட்டி அதன் அடிப்படையில் கேரள சட்டமன்றத்தில் கேரள மாநில அணைகள் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி எந்தச் சூழலிலும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த அனுமதிக்க முடியாது. உச்சநீதிமன்றத் தீர்ப்பு எங்களைக் கட்டுப்படுத்தாது என்று போர் முரசு கொட்டத் தயாராகிவிட்டது.
இந்தியக் கட்டமைப்பில் நீதிமன்றத் தீர்ப்பு என்பது ஏழை எளிய கேட்பாரற்ற மக்களைத்தான் கட்டுப்படுத்தும், தண்டிக்க முடியும் என்பதைப் பல வழக்குகளில் கண்டிருக்கிறோம். நீதி மன்றத் தீர்ப்புகள் ஒரு திரைப்பட விமர்சனம் என்பதற்கு மேலாக அது ஒன்றும் விளைவையோ தீர்ப்பின் நோக்கத்தையோ எட்டியதில்லை.
காவிரி பிரச்சனையில் நீதிமன்றத் தீர்ப்புகள் வாங்கிய செருப்படிகள் கொஞ்சமல்ல. நரேந்திரமோடி போன்ற பல குற்றப் பின்னணியுடைய முதல்வர்களை எந்தத் தீர்ப்பும் அசைத்துவிட முடிய வில்லை. நீதிமன்றத் தீர்ப்புகளை நடைமுறைப்படுத்தும் அளவுக்கு அல்லது நீதித் துறையுடன் மோதிப் பார்ப்போரை எச்சரிக்கும் அளவுக்கு மத்திய அரசுக்கும் தெம்பில்லை.காவல் துறையும், நீதித் துறையும் லஞ்சப் பேர்வழிகளாலும், ஊழல் மன்னர்களாலும் மரியாதை கெட்டுக் கிடக்கிறது என்பதைப் பல சந்தர்ப்பங்களில் உச்சநீதிமன்ற நீதிபதிகளே மனங் கசந்து சொல்லி அழுதிருக்கிறார்கள்.
பல தீர்ப்புகளுக்குப் பின்னால் நீதிபதிகளே லஞ்சம் பெற்றிருந்தார்கள் என்பது இங்கே மறைக்க முடியாத விகாரமாகும்.
நீதித்துறையிலுள்ள இந்தப் பலவீனத்தால் அது பல வழக்குகளில் நீதி போதனைக் கதைகளைச் சொல்ல முடிகிறதே தவிர தீர்க்கமான தீர்ப்பெழுத முடிவதில்லை. எழுதிய தீர்ப்பும் தனக்குப் பிடித்த கவிதை என்பதற்கு மேலாக அதைப் பெரிதாக எண்ணுவ தில்லை.
மத்திய அரசோ நடிகர் வடிவேலுவின் கதாபாத்திரம்போல் ராஜநடை போடும் `உதார்’ நிலையிலேயே இருக்கிறது.சான்றாக, மத்திய அமைச்சர்களான டி.ஆர். பாலுவையும், முரசொலி மாறனையும் மாநிலப் போலீசார் பந்தாடினார்கள். குற்றவாளிகளாகக் கைது செய்து வழக்குப் போட்டார்கள். அப்படியெல்லாம் செய்ய முடியுமா? அரசியல் சட்டத்தில் அதற்கு இடம் உண்டா? என்று கேட்கக் கூட மத்திய அரசுக்கு வக்கில்லை. அந்த அமைச்சர்களும் தமக்கு நேர்ந்த அவமானத்துக்காக ஆத்திரப் படவும் இல்லை.
மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் அமெரிக்காவில் ஒரு கஞ்சா கடத்தல் ஆசாமிபோல் சோதனையிடப்பட்டார். வாய்திறக்க வில்லை மத்திய அரசு. இப் போது மன்மோகன் தலைமையில் மத்திய அரசை எந்த வெளிநாட்டுக்காரனும் மிரட்டலாம். அம்பாசி டர்கூட இந்திய அமைச்சர்களை எச்சரிக்கலாம். மத்திய அரசு அதுகுறித்து விளக்கம்கூடக் கேட்க முடியாது.
இந்தச் சூழலில், தைரியமுள்ள எந்த முதல்வரும் மத்திய அரசை ஆட்டிப் படைக்க முடியும் என்பதுதான் இன்றைய நிலை.
கேரளமும், கர்னாடகமும், ஆந்திரமும் தமிழகத்துடன் `போர் தொடுப்பதற்கு’க்காரணம் இந்திய அரசால் எங்களை ஒன்றும் செய்துவிட முடியாது என்கிற நம்பிக்கைதான்.
தமிழகம் பாலைவன மாகிக் கொண்டிருக்கும் நிலையிலும்கூட மத்திய அரசு தமிழகத்தை ஏமாற்றி வஞ்சித்து பகைமை பாராட்டும் மாநிலங்களுடன் பரிவுடன் நடந்து கொள்வதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு.
<b>இந்திய நாடுகளிலேயே தமிழ் நாடுதான் இந்தி ஆதிக்கத்தையும் சமஸ்கிருத அவலத்தையும் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டிருக்கிறது. ஆரிய சாம்ராஜ்யக் கனவுகளுக்கு இங்கேதான் எதிர்ப்பும் அடிகளும் வலுக்கின்றன. இதனால் இந்திய ஆதிக்க சக்திகளுக்குத் தமிழ் நாட்டின்மீது தனிப்பட்ட முறையில் பழி தீர்க்கும் ஆசையும் உண்டு.</b>
பெஸ்ட் பேக்கரி வழக்கில் ஓர் அராஜக அரசின் மிரட்டலுக்குப் பயந்து முன்னுக்குப் பின் முரணாக சாட்சியம் அளித்தார் ஜாகிரா என்ற பெண்மணி. இதனால் பொய் சாட்சி அளித்த குற்றத்துக்காக ஜாகிராவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது உச்சநீதிமன்றம்.
இந்தத் தீர்ப்புடன் நீதி மன்றம் என்றால், என்ன தெரியுமா? அதற்கு எத்தனை ஆற்றல் உண்டு தெரியுமா? என்றும் உரத்த குரல் எழுப்பியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
``நீதிமன்றம் என்பது இங்கு நடக்கும் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யும் ஒரு எந்திரமல்ல. வழக்கின் நடவடிக்கைகளில் செயலாற்றும் முக்கியத்துவம் வாய்ந்த துறை. நீதிமன்றங்களின்மீது மக்களுக்கு உள்ள நம்பிக் கைக்குக் கேடு ஏற்படாமல் காக்கவும், நீதியை நிமிர்த்தும் வகையிலும் நீதிமன்றம் செயல்படும்’’ என்று ஜாகிராவுக்குத் தீர்ப்பளித்த நீதிபதிகள் சினமேறி நின்றிருக்கிறார்கள்.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தன்னிலை விளக்கம் நியாயமானதும், அவசிய மானதும் ஆகும். அந்த உரிமை அதற்கு நிச்சயம் உண்டு. ஆனால், இதெல்லாம் அளவுக்கு அதிகமான ஆசை என்று சொல்லும் அளவுக்கே நீதிமன்றங்களின் கடந்தகால நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன.
இப்போதாவது, தனது அதிகாரத்தையும், உரிமையையும் நிலைநாட்ட உச்சநீதிமன்றம் உறுதியுடன் செயல்பட வேண்டும்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பையே கேலிக்குரியதாக்கும் விதத்தில் கேரள சட்ட மன்றம் அணைகள் பாதுகாப்பு விதிகளில் திருத்தம் கொண்டுவரும் என்று அறிவித்திருப்பதை உச்சநீதி மன்றம் எப்படி எடுத்துக் கொள்ளப்போகிறது?
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் புதிய சட்டம் கொண்டு வருவோம்; மாநில உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று கேரள அரசு பேச முடியும் என்றால், நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் தமிழக அரசின் உரிமையில் எந்த நீதி மன்றமும் தலையிட முடி யாது. தமிழக கிராமப்புற, ஏழை மாணவர்களின் எதிர் காலத்தைப் பாதிக்கும் எந்த நீதிமன்றத் தீர்ப்பையும் குப்பைத் தொட்டியில் தூக்கி எறிவோம் என்று தமிழக அரசு சொன்னால் அது தவறாகுமா?
தமிழ்வழிக் கல்விக்குத் தடை விதிக்கும் எந்தத் தீர்ப்பையும் எதிர்ப்போம் என்று தமிழகம் பொங்கி எழுந்தால் அந்த அறச்சீற்றம் குற்றமாகி விடுமா? மாநில அரசுகள் துணிந்து நின்றால் நீதி தேவதையும் முடங்கிப் போவாள். பாரத தேவியும் பதுங்கிக் கொள்வாள் என்பதுதான் நடை முறை. தமிழகம் என்ன செய்யப் போகிறது?
உலகில் பல நாடுகளின் வழியே ஓடுகிற நதிகள் பல உண்டு. இந்த நாடுகளுக்கிடையே போர் நடந்தால்கூட அந்த நதிகளை எந்த நாடும் தடை செய்ய முடியாது. இதுதான் நதிநீர் தொடர்பான சர்வதேச விதி.
சவுதி அரேபியா, ஈராக், குவைத் நாடுகளுக்கிடையே போர் நடந்தபோது, அமெரிக்கக் கூட்டணி ராணுவமே போரில் ஈடுபட்டபோதும் கூட மூன்று நாடுகளுக்கிடையே ஓடும் நதிநீரை யாரும் தடுத்ததில்லை. எந்த விதிமுறைகளையும் மீறும் அதிகாரம் தனக் குண்டு என்று `உலக போலீஸ்காரன்’ அல்ல `சர்வதேச ரௌடி’யின் தோரணையில் மிரட்டும் அமெரிக்காவுக்குக்கூட அந்த அத்துமீறும் உரிமையை உலக நாடுகள் அனுமதிக்காது.
சிந்துநதியை பாகிஸ் தானுக்குள் விட முடியாது என்று இந்தியா மறுத்துவிட முடியாது. ஆனால், காவிரியில் தமிழகத்துக்கு உள்ள உரிமையை கர்நாடகத்தால் மறுக்க முடிகிறது. முல்லைப் பெரியாற்றில் தமிழகத்துக்குள்ள உரிமையைக் கேரளம் மறுக்கிறது.
இந்த விதிமீறல்களும், நேர்மை மறுப்பும், எப்படி நடக்க முடிகிறது?கன்னடமும் கேரளமும், தமிழகமும் வேறுவேறு நாடுகள் அல்ல என்கிற காரணத்தால், தமிழகத்துள் பாயும் நதிகளை மறிக்கவும் திருப்பவும் முடிகிறது.
இந்திய ஒருமைப்பாட்டுக்காகத் தமிழகம் இன்னும் எத்தனை கொடுமைகளைத் தான் சுமந்து தீர்க்க வேண்டும்? உரிமைகளை இழந்தேனும் ஒற்றுமை காப்போம் என்பது பெருமைக் குரியதல்ல.
தனது விலங்கை மெச்சிக் கொள்ளும் அடிமையை வரலாறு வாழ்த்தியதில்லை.
¿ýÈ¢ - ¾Á¢úý§È¡÷§ÀèŦºö¾¢ÁÄ÷- Á¡÷î06
|
|
|
| இந்த இணையத்தளத்து யாராவது போயிருக்கிறீர்கிளா?.. |
|
Posted by: Snegethy - 03-24-2006, 04:19 AM - Forum: இணையம்
- Replies (6)
|
 |
சில நிமிடங்களுக்கு முதல் CBC தொலைக்காட்சியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட கல்முனைப் பகுதி பற்றிய ஒரு ஐந்து நிமிட விவரணம் பார்த்தேன்.
கனடாவில் இருந்து சென்ற குழந்தை வைத்திய நிபுணர் குழந்தைகளைப் பார்வையிடுதல்.
அங்குள்ள பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில வகுப்புக்கள் நடைபெறுதல்.
சின்னஞ்சிறிய சிறாருக்கான பாடசாலை அமைக்ப்டுதல்.
உயர்தரப்பாடசாலைக்கான புதிய கட்டிடம் மாணவர்களாலே அமைக்கப்படுதல்.
இப்படி பல விடயங்களைக் காட்டினார்கள்.
இந்த நல்ல விடயங்களுக்கு பொறுப்பான அமைப்பினுடைய இணையத்தள முகவரி இதோ.www.rosecharities.net
இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது என்னையும் அறியாமல் சிரிக்க வச்ச ஒரு காட்சி இது:
5 அல்லது 6 வயது சிறுவர்கள் சறுக்கீஸ் விளையாடினம் .....அப்ப ஒரு குட்டி ஆள் சறுக்கிக் கொண்டு வர அதை ஒளிப்படம் எடுக்கினம் இடையில ஒரு இன்னொரு சின்னத்தம்பி ஓடி வர அந்தக் குட்டி ஆள் சொல்றார்
"டேய் அவ என்னத்தான் வீடியோ எடுக்கினம் நீ தள்ளுடா"
|
|
|
| வணக்கம்!!நானொரு வித்தியாசமானவள். |
|
Posted by: TRAITOR - 03-24-2006, 02:32 AM - Forum: அறிமுகம்
- Replies (76)
|
 |
வணக்கம் என் அன்பு நெஞ்சங்களே!!!!!!
நானொரு வித்தியாசமானவள். கவிதை, கட்டுரை, சிறுகதை, மகாகதை நன்றாக இரசிப்பேன், BUT எழுதத்தெரியாது. However சுடச்சுட பதில் தருவேன்.
இன்றும் என்றும் தாயையும, தமிழையும், தமிழீழத்தையும் நேசிக்கும்
.........................TrAiToR
I heard that if we mix english words in Tamil, Then Tamil will be a style language to talk with Thamil people.
*********Is it true?
குறுக்கால போனவள் வந்து விட்டாள்!!!!!!! lol
|
|
|
|