| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 216 online users. » 0 Member(s) | 213 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,394
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,280
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,622
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,309
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,653
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,111
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,475
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,520
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| வீரப்பனுக்கு அஞ்சலி! |
|
Posted by: Netfriend - 09-19-2005, 10:48 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
வீரப்பனுக்கு திடீர் அஞ்சலி! தர்மபுரியில் பரபரப்பு!
சந்தனக் கடத்தல் வீரப்பன் படத்திற்கு வன்னியர் சங்கம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் மலர் அஞ்சலி செலுத்தியதால் தர்மபுரி மாவட்டம் பாளையபுரம் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தமிழகஇ கர்நாடக காவல்துறையினருக்கு பெரும் சிம்ம சொப்பனமாக விளங்கி வந்தவன் வீரப்பன். எத்தனையோ வியூகங்கள் அமைத்தும் கூட வீரப்பனை யாராலும் பிடிக்க முடியவில்லை. அவனைப் பிடிக்கவே முடியாது என்று உறுதியாக மக்கள் கூறி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதி தமிழக அதிரடிப்படை கூடுதல் டிஜிபி விஜயக்குமார் தலைமையிலான அதிரடிப்படை தர்மபுரி மாவட்டம் பாடி வனப்பகுதியில் வைத்து வீரப்பனை வீழ்த்தியது.
வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு அடுத்த மாதத்துடன் ஒரு ஆண்டு முடிகிறது. இந்த நிலையில்இ தர்மபுரி மாவட்டம் பாளையபுரம் என்ற கிராமத்தில் ஏராளமான இளைஞர்கள் வீரப்பனின் உருவப் படத்திற்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்தினர்.
அந்த இளைஞர்கள் தாங்கள் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்டனர். வீரப்பன் படத்திற்கு அருகே சங்கத்தின் கொடி பறக்க விடப்பட்டிருந்தது ஜருகுஇ அசிப்பட்டிஇ கொங்கலாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் இங்கு வந்து மாலை போட்டு வீரப்பன் படத்திற்கு அஞ்சலி செலுத்தியதாக போலீஸார் குறிப்பிட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலைப் பகுதி கிராமங்களில் போலீஸார் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டிருந்தனர்.
thatstamil
|
|
|
| இலங்கை தேர்தல் - நவம்பர் 17 |
|
Posted by: Vasan - 09-19-2005, 07:26 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
சிறிலங்காவில் தேர்தல்Sri Lanka polls set for November
Sri Lanka is to hold presidential elections on 17 November, the country's election commission has announced.
The poll will pit current Prime Minister Mahinda Rajapakse against an opposition leader and former Prime Minister, Ranil Wickramasinghe.
The future of Sri Lanka's economy and of a peace deal with Tamil Tiger rebels are set to be central to the contest.
The poll was prompted by a court ruling last month that said the current president's term must end this year.
http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/4259278.stm
_________________
|
|
|
| திராவிடக் கட்டிடக் கலை - தமிழரின் பாரிய பங்களிப்பு |
|
Posted by: preethi - 09-19-2005, 03:53 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (2)
|
 |
<b>நாங்கள், ஈழத்தமிழர்களும் இந்தக் கட்டிடக் கலையினதும், எங்களின் தமிழ் முன்னோர்களினதும் வாரிசுகள். நிகழ்காலம் நன்றாக இல்லை, அதற்காக கடந்த காலப் பெருமைகளை மறக்க வேண்டுமா? இவற்றைப் பாதுகாக்க வேண்டியதும், அவற்றைக் களங்கப் படுத்துவோருக்கெதிராகக் குரலெழுப்ப வேண்டியதும், தமிழ்ரென்ற முறையில் எங்களின் கடமையல்லவா?</b>
<b>திராவிடக் கட்டிடக்கலையைப் பல துணைப் பிரிவுகளாகப் பிரித்து ஆராய்வது வழக்கம். பொதுவாகக் கால அடிப்படையில், அவ்வக்காலங்களில் முதன்மைபெற்றிருந்த அரசுகளின் தொடர்பில் இத் துணைப் பிரிவுகளை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்தியக் கட்டிடக்கலை (Indian Archtecture) என்னும் ஆங்கில நூலில் பேர்சி பிறவுன் என்பார் பின்வருமாறு திராவிடக் கட்டிடக்கலையைத் துணைப்பிரிவுகளாக வகுத்துள்ளார்.
பல்லவர் காலம் - (கி.பி 600 - கி.பி 900), சோழர் காலம் - (கி.பி 900 - கி.பி 1150), பாண்டியர் காலம் - (கி.பி 1100 - கி.பி 1350]], விஜயநகரக் காலம் - (கி.பி 1350 - கி.பி 1565), நாயக்கர் காலம் - (கி.பி 1600 - )
<img src='http://upload.wikimedia.org/wikipedia/ta/2/23/Mahapali_rath_small.png' border='0' alt='user posted image'>
ஆரம்பத்தில் பாறைகளைக் குடைந்து குடைவரை கோயில்களை அமைத்தனர். அத்துடன் பாறைகளை வெளிப்புறத்தில் செதுக்கி ஒற்றைக்கல் கோயில்களையும் அமைத்தனர். பின்னர் கற்களைப் பயன்படுத்திக் கட்டுமானக் கோயில்கள் அமைக்கப்பட்டன. திருச்சிராப்பள்ளி, திருக்கழுங்குன்றம், தளவானூர், பல்லாவரம், நாமக்கல் ஆகியவை உட்படப் பல இடங்களில் பல்லவர்களின் குடைவரை கோயில்களைக் காணலாம். மாமல்லபுரத்திலுள்ள புகழ் பெற்ற "பஞ்ச பாண்டவர் ரதங்கள்" என அழைக்கப்படும் கோயில்கள் ஒற்றைக் கல்லில் செதுக்கியெடுக்கப்பட்டவையாகும். காஞ்சிபுரத்திலுள்ள வைகுந்தப்பெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் என்பனவும் புகழ் பெற்ற மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலும் பல்லவர்களின் கட்டுமானக் கோயில்களுக்குச் சிறந்த எடுத்துக் காட்டுகளாகும்.
சோழர் எழுச்சியின் ஆரம்ப காலத்தில், முதல் ஒரு நூற்றாண்டு காலம் வரை கட்டப்பட்ட கட்டிடங்கள் மிகவும் குறைவாகவே காணப்படுவதுடன் அவை அளவிலும் சிறியவையாக உள்ளன. திருக்கட்டளை என்னும் இடத்திலுள்ள சுந்தரேஸ்வரர் கோயில், நர்த்தாமலையில் உள்ள விஜயாலயன் கோயில், கொடும்பாளூரிலுள்ள மூவர்கோயில் என்பன குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் திருக்கட்டளையிலும், நார்த்தாமலையிலும் உள்ளவை ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுவதால் அவையே சோழர்காலக் கட்டிடங்களில் காலத்தால் முந்தியவை எனலாம். இவை தவிர கடம்பர்மலை, குளத்தூர், [கண்ணனூர்], கலியபட்டி, [[திருப்பூர்], பனங்குடி போன்ற இடங்களிலும் இக்காலக் கோயில்களைக் காணமுடியும். இவற்றுடன் ஓரளவு பெரிய கட்டிடமான சிறீனிவாசநல்லூரிலுள்ள குரங்கநாதர் கோயிலும் 10 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்படதாகக் கருதப்படுகிறது.
இன்று நிலைத்திருக்கும் ஆரம்ப சோழர் காலக் கோயில்கள் அனைத்தும் முமையாகக் கருங்கற்களினால் ஆனவை. இவற்றிலே முந்தைய பல்லவர் காலக் கோயில்களின் அம்சங்கள் காணப்பட்டாலும், அவற்றைவிட இச் சோழர் காலக் கோயில்கள் திருத்தமாகக் கட்டப்பட்டுள்ளன. இது பல்லவர் காலத்துக்குப் பின்னர் கற் கட்டிடங்களைக் கட்டுவதில் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் காட்டுகிறது.
<img src='http://www.tamilnation.org/images/religion/temple/thanjavur8.jpg' border='0' alt='user posted image'>
தஞ்சை பிருஹதீஸ்வரர் கோயில், சோழர் காலக்
கட்டிடக்கலையின் முதிர்ச்சிக்கு எடுத்துக்காட்டு
பத்தாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இராஜராஜ சோழன் பட்டத்துக்கு வந்தபின்னர் சோழப் பேரரசின் வலிமை ஏறுமுகத்தில் இருந்தது. இதன் வெளிப்பாடாக இவன் காலத்திலும், இவன் மகனான இராஜேந்திர சோழன் காலத்திலும் பிரம்மாண்டமான கோயில்கள் கட்டப்பட்டன. இவற்றுள் கி.பி 1003 ஆண்டு தொடங்கப்பட்டு 1010 ல் கட்டிமுடிக்கப்பட்ட தஞ்சாவூரில் உள்ள தஞ்சைப் பெரிய கோயில் என்ற அழைக்கப்படும் பிருஹதீஸ்வரர் கோயில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சோழர்காலக் கட்டிடக்கலையின் முதிர்ச்சியை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிடப்படும் இக் கோயில் இந்தியாவில் கட்டப்பட்ட எந்தக் கோயிலிலும் அளவில் பெரியது எனக் கருதப்படுகின்றது. 90 அடி அகலம், 90 அடி நீளமுடைய கருவறைக்கு மேல் 190 அடியும், நிலத்திலிருந்து 210 அடி உயரமுடைய விமானத்தைக் கொண்டது இக் கோயில்.
<img src='http://www.cyberfocusindia.com/img2-2.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://photos1.blogger.com/blogger/1972/854/1600/Periakovil1.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://photos1.blogger.com/blogger/1972/854/400/peria%20%26%20nandhi.jpg' border='0' alt='user posted image'>
pictures to show the comparison of the size of the magnificent masterpiece of all times, the Brahadeeshwara Temple
There are 8 such nandhis atop the Cupola, just compare the size with the person sitting nearby. Each such nandhi is carved out of a single rock.
<img src='http://photos1.blogger.com/blogger/1972/854/400/PeriyaKoil-Base.jpg' border='0' alt='user posted image'>
[b]The base of the Periya Kovil, just compare the size of the Vimanam (Tower) with the people standing at the base. the view is from the behind of the Temple Vimana</b>
<b>Reasons for inscription on the World Heritage List and more info from Unesco </b>"
Criterion (i): The three Chola temples of Southern India represent an outstanding creative achievement in the architectural conception of the pure form of <b>the dravida type of temple.</b>
Criterion (ii): The Brihadisvara Temple at Thanjavur became the first great example of the Chola temples, followed by a development of which the other two properties also bear witness.
Criterion (iii): <b>The three Great Chola Temples are an exceptional and the most outstanding testimony to the development of the architecture of the Chola Empire and the Tamil civilisation in Southern India</b>.
<img src='http://img35.imageshack.us/img35/6554/gangaikonda0wv.th.jpg' border='0' alt='user posted image'>
<b>இராஜேந்திர சோழனுக்குச்
சிவபெருமான் முடிசூடும் காட்சி.
ரோமிலுள்ள மைக்கல் ஆஞ்சலோவின்,
கடவுள் ஆதாமைத் தொடும் ஓவியத்துக்கு
எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு
முன்பே ஓரு தமிழ்ச் சிற்பியின் கனவு.</b>
<span style='font-size:17pt;line-height:100%'>படத்தினை சிறியதாக்கி போட்டுள்ளேன்..
பெரியதாக பார்க்க படத்தின் மேல் CLICK செய்யுங்கள்-இராவணன்</span>
<img src='http://img331.imageshack.us/img331/654/gcpuram14zj.th.gif' border='0' alt='user posted image'>
<b>கங்கை கொண்ட சோழபுரக் கோபுரம்</b>
இதைத் தொடர்ந்து பதினோராம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இராந்திரசோழன் காலத்தில் கட்டப்பட்டதே கங்கை கொண்ட சோழபுரத்திலுள்ள கோயில். இதன் விமானம் 150 அடி உயரமுள்ளது. தான் பெற்ற போர் வெற்றிகளுக்கான சின்னமாகத் தஞ்சைப் பெரிய கோயிலின் அமைப்பைப் பின்பற்றிக் கட்டப்பட்டது இக் கோயில். கம்பீரமும் ஆண்மைப் பொலிவும் கொண்ட தஞ்சைக் கோயிலுடன் கங்கை கொண்ட சோழபுரக் கோயிலை ஒப்பிடமுடியாதெனினும், இங்கே அமைந்துள்ள நுணுக்கமான வேலைப்பாடுகள் சோழப்பேரரசின் உச்சகட்ட வலிமையை வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
தொடரும்.....................
|
|
|
| உயிர் வாசம் - கவிதைத் தொகுப்பு |
|
Posted by: kuruvikal - 09-18-2005, 09:06 PM - Forum: நூற்றோட்டம்
- Replies (55)
|
 |
<b>ஊடகவியலாளரான சாந்தி ரமேஷ் வவுனியன் - யாழ் கள சாந்தியக்கா - அவர்களின்</b> [url=http://img97.imageshack.us/img97/6933/uyirvaasam16ra.jpg]<span style='font-size:25pt;line-height:100%'><b>உயிர் வாசம்</b></span>
<img src='http://img97.imageshack.us/img97/2482/uyirvaasampic0ja.jpg' border='0' alt='user posted image'>
[size=14]<b>உங்கள் உறவு சாந்தி ரமேஷ் வவுனியனின் கவிதைத் தொகுப்பு நிகழ்ச்சி சிறப்புற உங்கள் பங்களிப்பையும் வாழ்த்துக்களையும் நல்குங்கள்...!</b>
|
|
|
| நிழல்யுத்தம் அழிவடையும் தமிழ் ஆயுதக்குழுக்கள் |
|
Posted by: வினித் - 09-18-2005, 12:52 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
அரசு ஆரம்பித்த நிழல் யுத்தத்தின் பலனாக அழிவடையும் தமிழ் ஆயுதக் குழுக்கள்
* `காந்தி'யின் படுகொலையுடன் இல்லாது போகும் ராசிக் குழு!
மட்டக்களப்பில் ராசிக் குழுவின் பொறுப்பாளர் காந்தியின் கொலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு பேரிடியாகியுள்ளது. இராணுவப் புலனாய்வுப் பிரிவில் அங்கம் வகிக்கும் தமிழ்க் குழுக்களின் மற்றொரு தலைவரின் கொலையால் ராசிக் குழுவின் எதிர்காலம் கேள்விக் குறியான அதேநேரம் இராணுவப் புலனாய்வுப் பிரிவும் தொடர்ந்தும் பலவீனமடைந்து வருகிறது.
ஈழ விடுதலைப் போராட்டத்திலிருந்து திசை மாறிய பல இயக்கங்கள் இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்கி வருகையில், புலிகளால் அவர்களில் பலர் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். முக்கிய தலைவர்கள் பலர் கொல்லப்பட்டதால் இந்தக் குழுக்கள் சின்னாபின்னமாகி சிதைவடைந்து போயுள்ளன.
1980 களின் பிற்பகுதியில் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் இந்தியப் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையிலான யுத்தத்தைத் தொடர்ந்து புலிகளுக்கெதிராக தமிழ் குழுக்களின் செயற்பாடுகள் ஆரம்பமானது. சில இயக்கங்கள் நேரடியாகவே புலிகளுக்கு எதிரான போரில் இந்தியப் படையுடன் இணைந்து குதித்தன.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.), ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எவ்.), தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) என்பன இந்தியப் படையுடன் இணைந்து புலிகளுக்கெதிராக நேரடியாகவே களமிறங்கின. ஆனால், அப்போது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) இந்தியப் படையை கடுமையாக எதிர்த்த போதும் இந்தியப் படைக்கு எதிராக (மோதல்களில்) செயற்படவில்லை.
இந்தியப் படை இலங்கையை விட்டு வெளியேறிய போது, இவர்களில் பெரும்பாலானோர் இந்தியப் படையுடன் சேர்ந்து இந்தியாவுக்குச் சென்றுவிட்டனர். எனினும், குறிப்பிடத்தக்களவினர் இலங்கையில் தங்கிய அதேநேரம், அவர்கள் இராணுவத்துடன் துணைப் படைகளாக இணைந்து கொண்டனர்.
தங்கள், தங்கள் இயக்கங்களிலிருந்து பிரிந்த தமிழ் குழுக்களை 2 ஆவது ஈழப்போரில் இலங்கைப் படையினர் மிக விருப்பத்துடன் உள்வாங்கினர்.
1990 களின் ஆரம்பத்தில் இந்தத் தமிழ்க் குழுக்கள் கிழக்கிலேயே படையினருடன் இணைந்து கொண்டன. ஒவ்வொரு இயக்கத்திலிருந்தும் கிழக்கு மாகாணத்தை, குறிப்பாக மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களே தமிழ்க் குழுக்களாகப் பிரிந்து சென்று இராணுவத்துடன் இணைய, அவர்கள் இராணுவத்தில் தேசிய துணைப்படைகளாக்கப்பட்டு இராணுவத்தினரின் சம்பளப் பட்டியலில் சேர்க்கப்பட்டு இராணுவத்தினருக்கு வழங்கப்படுவது போன்று சம்பளமும் சலுகைகளும் வழங்கப்பட்டன.
புளொட்டிலிருந்து புளொட் மோகன் குழுவும், ஈ.பி.ஆர்.எல்.எவ். விலிருந்து ராசிக் குழுவும், ரெலோவிலிருந்து வரதன் குழுவும் பிரிந்து இராணுவப் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து கொண்டு, புலிகளுக்கெதிராகச் செயற்படுவதாகக் கூறி தமிழ் மக்களுக்கெதிராகச் செயற்பட்டன. கடந்த காலங்களில் இந்தக் குழுக்கள் மட்டக்களப்பு மற்றும் அம்பாறைப் பகுதிகளில் செய்த அட்டகாசம் கொஞ்சநஞ்சமல்ல.
பல நூற்றுக்கணக்கானோர் கொல்லப்படவும் பல நூற்றுக்கணக்கானோர் காணாமல் போகவும் காரணமாயிருந்த இவர்கள் தமிழ்ப் பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவதிலும் பின்னிற்கவில்லை. சிங்களப் படையினருக்கு நிகராக, கிழக்கில் இவர்களும் பெரும் அட்டூழியங்களிலும் அடாவடித்தனங்களிலும் ஈடுபட்டதை கிழக்கு மக்கள் இன்றும் கதை, கதையாகச் சொல்லுவார்கள். அந்தளவிற்கு இவர்கள் கிழக்கை ஆட்டிப்படைத்திருந்தனர்.
இந்த அட்டூழியங்கள், அடாவடித்தனங்களூடாக விடுதலைப் புலிகளுக்கெதிரான நடவடிக்கைகளிலும் இவர்கள் படையினருடன் இணைந்து தீவிரமாகச் செயற்பட்டனர். புலிகள் தொடர்பாகவும் தமிழ்த் தேசியப் போராட்டம் தொடர்பாகவும் புலனாய்வுத் தகவல்களைப் பெற்று இராணுவத்திற்கு வழங்குவதே இவர்களது பிரதான வேலையாக இருந்தது. இதனால் இவர்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவுடன் மிகவும் நெருங்கிச் செயற்பட்டனர்.
புலிகளின் கிழக்கு மாகாண நடவடிக்கைகள் குறித்து மட்டுமல்லாது, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த புலிகளின் தென்பகுதி நடவடிக்கைகள் குறித்தும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு முக்கிய தகவல்களை வழங்கி வந்த அதேநேரம், புலிகளை இனங்காட்டுவதிலும் புலிகளின் ஆதரவாளர்களை இனங்காட்டுவதிலும் இவர்கள் பிரதானமாகச் செயற்பட்டனர்.
இதற்காக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளும் தென்பகுதியிலும் இவர்கள் உளவாளிகள் பலரையும் வைத்திருந்தனர். இதற்காக இராணுவப் புலனாய்வுப் பிரிவு பெருமளவு பணத்தைச் செலவிட்டது. பணத்திற்காகவும், பொருளுக்காகவும் புலிகளைக் காட்டிக் கொடுக்க முன் வந்தவர்களை இவர்கள் உளவாளிகளாக்கிக் கொண்டனர்.
இந்தத் தமிழ்க் குழுக்களையும் அவர்களது உளவாளிகளையும் விடுதலைப்புலிகள் காலத்திற்குக் காலம் இலக்கு வைத்தனர். பல உளவாளிகள் பிடிபடவே அவர்களுக்குப் பகிரங்க மரணதண்டனை வழங்கப்பட்டது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் ஊடுருவும் புலிகள் இந்தத் தமிழ்க் குழுக்களின் உறுப்பினர்கள் பலரை இலக்கு வைத்தனர்.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் புலிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் தளபதிகளின் நடமாட்டங்கள் தொடர்பாக இந்த உளவாளிகள் மூலம் தகவல்கள் திரட்டும் தமிழ்க் குழுக்கள், இராணுவப் புலனாய்வுப் பிரிவினருடன் புலிகளின் பகுதிகளுக்குள் ஆழ ஊடுருவி புலிகளின் முக்கியஸ்தர்கள் மீது கண்ணிவெடித் தாக்குதல்கள், கிளைமோர் தாக்குதல்களை நடத்தியதுடன் தேவைக்கேற்ப, தாக்குதல்களையும் மாற்றியமைத்தனர்.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கண்ணிவெடிகள் மற்றும் கிளேமோர் குண்டுகளைக் கொண்டு செல்வதற்கு இந்தத் தமிழ் உளவாளிகளை இவர்கள் பயன்படுத்தினர். ஆழ ஊடுருவும் படையணியால் புலிகள் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்தனர். இதனை முறியடிப்பதில் பெரும் சவால்களையும் புலிகள் எதிர்கொண்டனர்.
இவ்வாறு தமிழ்க் குழுக்கள் புலிகளுக்கு சவால்விட்டு வந்த அதேநேரம், தமிழ்க் குழுக்களையும் புலிகள் தொடர்ந்தும் இலக்கு வைத்தே வந்தனர். 1990களின் முற்பகுதியிலிருந்து ராசிக் குழு புலிகளுக்கு மட்டக்களப்பில் பெரும் சவாலாகவிருந்தது. அதன் உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டாலும் அதன் தலைவர் ராசிக்கும் வேறு பலரும் தொடர்ந்தும் சவாலாகவேயிருந்தனர்.
இந்த நிலையில் தான் 1999 ஆம் ஆண்டு, அதி உயர் பாதுகாப்புமிக்க பகுதியில் படைமுகாம்களுடன் இணைந்திருந்த ராசிக் குழுவின் முகாம் முன்பாக ராசிக், தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பலியானார். தமிழ்க் குழு ஒன்றைச் சேர்ந்த ஒருவருக்காக புலிகள் தற்கொலைக் குண்டுதாரியைப் பயன்படுத்தியது ராசிக்குக்குத் தான்.
இவரது கொலையுடன் இந்தக் குழு சற்று ஆட்டம் கண்டாலும், ராசிக் குழு ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் அவருக்கு மிகவும் பக்கபலமாக இருந்தவர் காந்தி. இவரே பின்னர் ராசிக் குழுவை வழி நடத்தி வந்தார். இவரது காலத்திலும் ராசிக் குழு உறுப்பினர்கள் பலர் இலக்கு வைக்கப்பட இந்தக் குழு சற்று ஆட்டம் கண்டது.
இதேவேளை, புளொட் மோகன் குழுவும் ரெலோ வரதன் குழுவும் தீவிரமாகச் செயற்பட்ட போதும் அவர்களிலும் பலர் இலக்கு வைக்கப்பட மட்டக்களப்பில் புளொட் மோகனைச் சுற்றி வளைக்கும் புலிகளின் வியூகம் இறுகியது. இதையடுத்து, அவர் எவ்வேளையிலும் இலக்கு வைக்கப்படலாமென்பதால் அவர் தனது முக்கிய ஆட்கள் சிலருடன் கொழும்பு வந்து படைமுகாம்களில் தங்கியிருந்து செயற்படத் தொடங்கினார்.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஆழ ஊடுருவி புலிகளின் முக்கியஸ்தர்களை இலக்கு வைப்பதை இராணுவ புலனாய்வுப் பிரிவு தீவிரப்படுத்தியது. அதில் தமிழ்க் குழுக்களின் பங்களிப்பு மிகவும் அதிகமாயிருந்தது. எனினும், இவர்களது நடவடிக்கைகளை முறியடிக்கும் திட்டங்களை வகுத்த புலிகள் வடக்கு, கிழக்கில் மட்டுமல்லாது, தெற்கிலும் பலரை இலக்கு வைத்தனர்.
இவ்வேளையில் தான் போர்நிறுத்த உடன்பாடு அமுலுக்கு வரவே, அத்துருகிரிய மிலேனியம் சிற்றியிலுள்ள வீடொன்றிலிருந்து ஆழ ஊடுருவும் படையணி இயங்கிய இரகசியமும் வெளியாகியது. இந்த இரகசியத்தை பொலிஸ் நடவடிக்கையொன்று அம்பலப்படுத்தியது.
இதையடுத்து, ஆழ ஊடுருவும் படையணியைச் சேர்ந்தவர்கள் பற்றி பூரண விபரம் வெளியானது. இந்த அணியில் 20 முதல் 40 தமிழ்க் குழு உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர்.
எனினும், போர் நிறுத்தக் காலப் பகுதியில் அடுத்தடுத்து, இவர்களில் பலர் தேடி அழிக்கப்படவே, இராணுவப் புலனாய்வுத் துறை எஞ்சியவர்களைப் பாதுகாக்கும் தீவிர முயற்சியில் இறங்கியது. தெற்கில் இவர்கள் பல்வேறு பகுதிகளில் மிகவும் இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு வந்த போதும், துல்லியமான உளவறிதல் மூலம் இவர்கள் தொடர்ச்சியாக இலக்கு வைக்கப்பட்டனர்.
மிகக் குறுகிய காலத்தில் தமிழ்ப் புலனாய்வாளர்களும் உளவாளிகளுமென 20 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட இராணுவப் புலனாய்வுப் பிரிவு நிலை குலைந்தது.
மிக இரகசியமாகவும் பலத்த பாதுகாப்புடனும் வைக்கப்பட்ட இவர்கள் எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டு இலக்கு வைக்கப்படுகிறார்கள் என்பதைப் படைத்தரப்பு தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருக்கையில், மேலும் பலர் இலக்கு வைக்கப்பட்டனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவே எலும்புக் கூடாகி விட்டதாக புலனாய்வுப் பிரிவு ஆதங்கப்படுமளவிற்கு தமிழ்ப் புலனாய்வாளர்களும் உளவாளிகளும் தேடித் தேடி அழிக்கப்பட்டனர்.
இதற்கிடையில், ரெலோ வரதன் குழுவின் தலைவர் வரதன் மட்டக்களப்பில் கொல்லப்பட அந்தக் குழுவும் சிதறிப்போனது. எஞ்சியவர்களில் சிலர் நாட்டை விட்டுத் தப்பியோட மிகுதியாக இருந்தவர்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவுடன் நிரந்தரமாகினர். இந்தக் காலப் பகுதியில் ராசிக் குழுவின் எஞ்சிய பலரும் இலக்கு வைக்கப்பட அக்குழுவும் பெரிதும் நிலை குலைந்தது.
இதையடுத்து, தமிழ்க் குழுக்களின் முக்கியஸ்தர்களையும் உளவாளிகள் சிலரையும் வெளிநாடுகளுக்கனுப்பி பாதுகாக்க இராணுவத் தரப்பு தீர்மானித்து, சிலரை வெளிநாடுகளுக்கும் அனுப்பியது. புளொட் மோகனும் வெளிநாடு சென்றிருந்தார். இக்காலப்பகுதியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் செயற்பாடு ஸ்தம்பித நிலையை அடைந்திருந்தது.
இவ்வேளையில் தான் புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிய, இராணுவப் புலனாய்வுப் பிரிவு துள்ளிக் குதித்தது. கருணாவின் பிரிவின் போது, கிழக்கு மாகாணம் இனி கருணா வசமெனவும் புலிகளால் கருணாவை ஒன்றும் செய்ய முடியாதெனவும் கருதிய இராணுவத் தரப்பு, கருணாவுக்கு கிழக்கில் ஆதரவளிப்பதன் மூலம் புலிகளை வடக்குடன் மட்டுப்படுத்தி விடலாமென மனப்பால் குடித்தது.
தென்னிலங்கை அரசியல்வாதிகளும் ஊடகங்களும் கருணாவுக்கு ஆதரவை வழங்கின. கருணாவைப் பாதுகாக்க வேண்டுமெனவும் புலிகளை அழிக்க இது நல்ல சந்தர்ப்பமென்றும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
எனினும், எவருமே எதிர்பாராத வகையில் புலிகள் மேற்கொண்ட அதிரடியால் அவர்கள் கிழக்கைக் கைப்பற்றிய அதேநேரம், அதன் பின்னான துரித நடவடிக்கைகள் மூலம் கிழக்கை புலிகள் தம்வசப்படுத்தினர். இது இராணுவ தரப்புக்கு பேரிடியாகிய போதும், கருணாவைத் தங்களுடன் இணைத்த அவர்கள் கருணா குழுவைப் பயன்படுத்தி கிழக்கில் புலிகளுக்கெதிராக நிழல் யுத்தத்தை ஆரம்பித்தனர்.
இந்த நிழல் யுத்தம் மூலம் புலிகளை முறியடித்து விடலாமெனக் கருதினர். இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அரசியல் நடவடிக்கைக்கு வந்த புலிகளின் முக்கியஸ்தர்கள் கொல்லப்பட்டனர். புலிகளின் அலுவலகங்கள் தாக்கப்பட்டன. புலிகள் தங்கள் அரசியல் பணிகளை முடக்கும் நிலை ஏற்பட, எல்லாத் தாக்குதல்களுக்கும் கருணா குழுவே பொறுப்பென இராணுவமும் அரசும் கூறிவந்தன.
கருணா குழுவின் பெயரில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு தங்களை இலக்கு வைப்பதை உணர்ந்த புலிகள் இதே பாணியில் பதிலளிக்கத் தொடங்கினர். கருணாவின் வலது கரங்களாகச் செயற்பட்ட பலர் அடுத்தடுத்து இலக்கு வைக்கப்பட்ட மிகச் சில மாதங்களில் கருணாவின் இராணுவத் தளபதியென வர்ணிக்கப்பட்ட அவரது சகோதரன் ரெஜி உட்பட 25 க்கும் மேற்பட்ட முக்கியஸ்தர்கள் கொல்லப்பட்டனர்.
கருணா குழுவுக்குள் மிகச் சுலபமாக ஊடுருவிய புலிகள் பல சந்தர்ப்பங்களில், கருணா குழுவினரை அழிக்க கருணா குழு தள்ளாடிவிட்டது. மிகக் குறுகிய காலத்தில் கருணாவின் முக்கிய சகாக்கள் கொல்லப்பட அக்குழுவுக்கு தலைமை தாங்கி வழி நடத்த ஆளில்லாது போனது.
கருணா குழுவினர் மீதான புலிகளின் அதிரடி நடவடிக்கைகள் இராணுவத்தைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கருணா குழுவைப் பயன்படுத்தி புலிகளுக்கெதிராக அதிரடித் தாக்குதல்களை நடத்த திட்டமிட்ட இராணுவம், கடைசியில் கருணா குழுவின் பெயரில் புலிகள் மீது தாங்களே தாக்குதல் நடத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இவ்வேளையில், தான் கருணா குழுவுக்குத் தலைமை தாங்கி தாக்குதல்களை முன்னெடுப்பதற்காக வெளிநாட்டில் பாதுகாப்பாகவிருந்த புளொட் மோகன் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டார். மிக நீண்ட நாட்களாக புளொட் மோகனை இலக்கு வைத்தும் அகப்படாத நிலையில் கொழும்பில் புளொட் மோகன் மிகச் சுலபமாக புலிகளிடம் சிக்கினார்.
புளொட் மோகன் கொல்லப்பட்டது இராணுவ புலனாய்வுப் பிரிவை அப்படியே ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. அவர்களால் இதனை ஜீரணிக்க முடியவில்லை.
தமிழ்க் குழுக்களையும் உளவாளிகளையும் பாதுகாக்க முடியாததொரு நிலை ஏற்பட்ட அதேநேரம், இராணுவ புலனாய்வுப் பிரிவுடன் சேர்ந்தியங்கிய தமிழ்ப் புலனாய்வாளர்கள் பலர் கொல்லப்பட்டனர், ரெலோ வரதன் கொல்லப்பட அக்குழு அப்படியே அழிந்தது. புளொட் மோகன் கொல்லப்பட அந்தக் குழுவும் அழிந்து வருகிறது.
இந்நிலையில், ராசிக் குழுவின் காந்தியும் கொல்லப்பட, அதில் எஞ்சியிருக்கும் சிலருக்குள் அதற்குத் தலைமை தாங்க எவருமேயில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. காந்தி கொல்லப்படுவதற்கு சில தினங்களுக்கு முன் ராசிக் குழுவைச் சேர்ந்த நால்வர் தப்பிச் சென்றுவிட்டனர். அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுவிட்டனர்.
இவ்வாறு தமிழ்க் குழுக்கள் பல அழிந்துவிட்ட நிலையிலும் கருணாவைத் தங்களுடன் மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு எஞ்சியவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, கருணா குழு என்ற பெயரில் இராணுவ புலனாய்வுப் பிரிவு புலிகளுக்கெதிரான நிழல் யுத்தத்தை தொடர்கிறது.
இவர்களது நிலையை அறிந்த புலிகள் தற்போது தங்கள் உறுப்பினர்களை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர்.
தமிழ்க் குழுக்களில் எஞ்சியிருப்பவர்களும் விரைவில் இலக்கு வைக்கப்பட்டு விடுவார்களெனப் புலிகள் கருதுகின்றனர். இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் புலிகள் இல்லாததால் அவர்கள் மீதான தாக்குதல்கள் குறைந்துவிட்டன. இழப்புகளைத் தவிர்த்து எதிரிகளை இலக்கு வைப்பதில் புலிகள் ஆர்வம் காட்டுவதாக படைத்தரப்பு கருதுகிறது.
இந்த நிழல் யுத்தத்தில் புலிகள் சில இழப்புகளைச் சந்தித்த போதும் மிகப் பெருமளவில் தமிழ்ப் புலனாய்வாளர்களையும் உளவாளிகளையும் இலக்கு வைத்துவிட்டனர். ஒரு விதத்தில் இந்த நிழல் யுத்தமானது, தங்களால் இலக்கு வைக்க முடியாதிருந்த பலரை தங்கள் வலைக்குள் இலகுவாகச் சிக்க வைத்துவிட்டதாகவே புலிகள் கருதுகின்றனர்.
பெரும்பாலானவர்களை இழந்த நிலையில் போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவைச் சந்தித்த கருணா குழு, இந்தச் சந்திப்பின் மூலம் தங்களுக்கொரு அங்கீகாரம் கிடைத்தால் அதனைப் பயன்படுத்தி போர்நிறுத்த உடன்படிக்கைக்குள் தாங்களும் வந்து அதன் மூலம் மோதலைத் தவிர்க்கலாமென்றும் அதன் பின் வெளிப்படையாக இயங்குவதன் மூலம் தங்களுக்கு ஆட்களைக் கூட திரட்டலாமெனவும் எண்ணியிருக்கக்கூடும்.
<span style='font-size:25pt;line-height:100%'>ஆனால், கருணா குழு யார், அவர்கள் எங்கிருந்து இயங்குகிறார்கள், நிழல் யுத்தத்தின் சூத்திரதாரிகள் யார் என்பதை இந்தச் சந்திப்பின் மூலம் கண்காணிப்புக்குழு தெளிவுபடுத்திவிட்டது</span>
|
|
|
| குடாநாட்டை அச்சுறுத்தும் ஊர்ச்சண்டைகள் |
|
Posted by: MUGATHTHAR - 09-18-2005, 11:09 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (7)
|
 |
குடாநாட்டை அச்சுறுத்தும் ஊர்ச்சண்டைகள்
சில வாரங்களுக்கு முன்னர் இரு கிராம இளைஞர் குழுக்களிடையே நடந்த
குழு மோதல் பலரின் பலத்த பிரயத்தனத்தின் மத்தியில் தணிக்கப்பட்ட
போதும் பழிவாங்கும் உணர்வு இரு தரப்பினரிடையேயும் நீறுபூத்த நெருப்பாகவே காணப்பட்டது
தமிழ் தேசிய போராட்டத்தின் மூலம் இல்லாதொழிக்கப்பட்ட "சாதிவெறி" மீண்டும் யாழ். குடாநாட்டில் தலைதூக்கும் அபாயத்தை தற்போது இங்கு நடந்தேறி வரும் வன்முறைச் சம்பவங்களும் ஊர்ச் சண்டைகளும் குழுச் சண்டைகளும் வெளிப்படுத்தி வருகின்றன.
தமிழ்த் தேசிய உரிமைப் போராட்டத்தின் முதல் வெற்றியாக கருதப்படக் கூடிய சாதிவெறி ஒழிப்பையே மூலதனமாகக் கொண்டு குடாநாட்டில் குழப்ப நிலைகளை ஏற்படுத்தி குளிர்காய சில தரப்பினர் முயன்று வருகின்றனர்.
இதன் விளைவாகவே தற்போது குடாநாட்டில் சாதிச்சண்டைகளும் கோஷ்டி மோதல்களும் ஊர்ச்சண்டைகளும் வெகுவாகத் தலைதூக்கத் தொடங்கியுள்ளன. சிறு சிறு முரண்பாடுகள் கூடஇ பெரும் மோதலாக மாறி உயிர்ப்பலிகள் எடுக்குமளவுக்கு நிலைமை விபரீதமாகியுள்ளது.
தேசிய இனமான தமிழர்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தி உரிமைப் போராட்டத்தினை வலுவிழக்கச் செய்யும் தந்திரோபாயங்களில் தற்போது இலங்கையரசும் படைத் தரப்பினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையே சதி நடவடிக்கை மூலம் முரண்பாடுகளை ஏற்படுத்தி கலவரங்களைத் தூண்டிய படைத் தரப்பு அதில் வெற்றியும் கண்டது. முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்குமிடையிலான மோதல்கள் குறிப்பிட்ட சில காலப் பகுதிகளில் உக்கிரமடைந்தன.
ஆனால்இ நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து கொண்ட விடுதலைப் புலிகள் எடுத்த உடனடி நடவடிக்கைகளும் முஸ்லிம் மக்களுடனான சந்திப்புகளும் பேச்சுகளும் படைத்தரப்பின் சதியையும் உண்மை நிலையையும் அவர்களுக்கு நன்கு உணர்த்தின.
இதனால்இ படைத்தரப்பின் தந்திரோபாயங்கள் தொடர்ந்தும் வெற்றியளிக்கவில்லை. இதையடுத்துஇ மாற்றுத் திட்டமொன்றைத் தயாரித்த படைத்தரப்பு புலிகளுக்கிடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சியை மேற்கொண்டது. இதற்குஇ புலிகள் அமைப்பிலிருந்த கருணா என்ற துரோகி துணை போனார். ஆனால்இ படைத்தரப்பால் நினைத்ததை சாதிக்க முடியவில்லை.
புலிகளின் அதிரடி நடவடிக்கைகளும் திட்டமிட்ட வெற்றிகர நகர்வுகளும் புலிகளுக்கிருந்த மக்களின் பேராதரவும் படைத்தரப்பினதும் துரோகி கருணாவினதும் நடவடிக்கைகளை தவிடு பொடியாக்கின. இதையடுத்துஇ கருணா என்ற பெயரைப் பயன்படுத்தி கிழக்கில் படுகொலைகளை இராணுவம் நடத்தத் தொடங்கியது.
இவ்வாறு கிழக்கு மாகாணத்தில் கருணா குழு என்ற போர்வையில் தமிழின அழிப்பில் ஈடுபட்டுள்ள படைத் தரப்புக்கு அவ்வாறானதொரு திட்டத்தை குடாநாட்டில் அரங்கேற்ற முடியவில்லை. இதையடுத்துஇ மாற்று வழி தேடிய அவர்களுக்கு இப்போது ஹசாதி' என்ற ஆயுதம் கிடைத்துள்ளது.
தமிழர் தாயகப் பகுதிகளில் செத்தொழிந்த சாதி வெறியை மீண்டும் உயிர்ப்பித்து நடமாடவிடும் நடவடிக்கையில் இறங்கிய படைத்தரப்புக்கு வேலை வெட்டியின்றி வெளிநாட்டுப் பணச் செழிப்புடன் தெருச் சுற்றும் காவாலிக் கூட்டமான இளைஞர் குழுக்கள் ஏவுதல் கருவிகளாகக் கிடைத்துள்ளன.
இவ்வாறான நாசகாரக் கும்பல்களுடன் நட்புறவு பாராட்டும் படைத்தரப்பு இஇக்கும்பல்கள் புரியும் அட்டகாசங்கள்இ குற்றச் செயல்கள் தொடர்பில் எதுவித சட்ட நடவடிக்கைகளையும் எடுக்காது அவர்களை மேலும் ஊக்குவிக்கும் விதமான செயற்பாடுகளிலேயே ஈடுபடுகின்றனர்.
குடாநாட்டில் அண்மைக் காலமாக பல கோஷ்டி மோதல்கள்இ ஊர்ச் சண்டைகள் இடம் பெற்று உயிர்ச் சேதங்கள் ஏற்பட்ட போது கூடஇ படைத்தரப்பு இது குறித்து எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காது வேடிக்கை பார்த்தது. அண்மையில் கொடிகாமத்தில் இடம்பெற்ற ஊர்ச் சண்டைகளில் துப்பாக்கிகள்இ கிரனைட்டுகள் பாவிக்கப்பட்டமை இக் குழுக்களின் பின்னணியில் படைத்தரப்பு இருப்பதை ஊர்ஜிதப்படுத்துகின்றது.
படைத் தரப்புடன் சேர்ந்தியங்கும் சில தமிழ்க் குழுக்கள் கூடஇ தமது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக தமது சொந்த ஊர்களில் சாதி வெறியைத் தூண்டும் வகையில் நடந்து கொள்கிறார்கள். இவ்வாறான சம்பவமொன்று அண்மையில் வட்டுக்கோட்டைப் பகுதியில் நடந்தேறியதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசிய உரிமைப் போராட்டத்தின் இருப்புக்கு பலமான அத்திபாரமிட்ட சாதிவெறி ஒழிப்பை தகர்த்தெறிந்து மீண்டும் சாதிவெறியைத் தூண்டும் முயற்சியில் படைத் தரப்புடன் இவ்வாறான வன்முறைக் கும்பல்கள் கைகோர்த்துள்ளமை மிகவும் அபாயகரமானது. இதன் விளைவுகள் தமிழ்த் தேசிய போராட்டத்துக்கு பின்னடைவுகளை ஏற்படுத்தும்.
இவ்வாறான நிலையில் யாழ். குடாநாட்டில் அதிகரித்து வரும் குழுச் சண்டைகள் அபாயகரமான பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. கத்திஇ வாள்இபொல்லுகளுடன் மோதியவர்கள் இன்று கட்டுத் துவக்குஇ இயந்திரத் துப்பாக்கிகள்இ கிரனைட்டுகளைக் கொண்டு மோதுமளவுக்கு நிலைமை விபரீதமாகியுள்ளது.
கடந்த சில வாரங்களாக வலிகாமத்தின் சில பகுதிகளிலும் தென்மராட்சியில் கொடிகாமம் பகுதியிலும் இடம்பெற்ற குழுச் சண்டைகள் நிலைமையின் விபரீதத்தை நன்குணர்த்தியுள்ளன.
கொடிகாமம்இ தவசிக்குளம் மற்றும் குடமியன் கிராமங்களுக்கிடையே சில நாட்களாக தொடர்ந்து நடந்த மோதலுக்கு பல பின்னணிகள் உண்டு. சில காலமாகவே இக்கிராமங்களிடையே குழுச் சண்டைகள் தொடர்ந்து நடந்து வந்தன. இதில் பலர் வாள் வெட்டுகளுக்கு இலக்காகி படுகாயமடைந்தனர்.
இவ்வாறு குழுக்களுக்கிடையே ஆரம்பித்த மோதல்இ பழிவாங்கும் உணர்வாக விஸ்வரூபமெடுத்து ஏட்டிக்குப் போட்டியாக தாக்குதல்கள் இடம்பெறுகின்றன. அத்துடன்இ இந்த மோதல் தற்போது கிராமங்களுக்கிடையிலான சாதிச் சண்டையாகவும் உருமாறியுள்ளது.
சில வாரங்களுக்கு முன்னர் இரு கிராம இளைஞர் குழுக்களிடையே நடந்த குழு மோதல் பலரின் பலத்த பிரயத்தனத்தின் மத்தியில் தணிக்கப்பட்ட போதும் பழிவாங்கும் உணர்வு இரு தரப்பினரிடையேயும் நீறு பூத்த நெருப்பாகவே காணப்பட்டது.
இந்நிலைமையில்இ அண்மையில் அப்பகுதியில் இடம்பெற்ற போட்டி நிகழ்வொன்றில் வெற்றியீட்டிய இளைஞனிடம் எதிர்க்கிராமத்தைச் சேர்ந்த அவரின் நண்பிகளான சில மாணவிகள் தமக்கு ஹபார்ட்டி' வைக்குமாறு கேட்டுள்ளனர்.
இதையடுத்துஇ குறிப்பிட்ட இளைஞன் அவர்களுக்கு ஐஸ்கிறீம் வேண்டிக் கொடுத்துள்ளார். இச்சமயத்தில் மாணவிகளில் ஒருவரின் சகோதரர் அங்கு நின்றதை இளைஞர் அவதானிக்கவில்லை. ஆனால்இ இதனை அவதானித்துவிட்ட மாணவிஇ இளைஞன் கொடுத்த ஐஸ்கிறீமை வேண்ட மறுத்துள்ளார். இதனால்இ குறிப்பிட்ட இளைஞர் ஐஸ்கிறீமை மாணவியின் சைக்கிள் கூடைக்குள் போட்டு விட்டுச் சென்றுள்ளார்.
தனது சகோதரிக்கு எதிர்க்கிராம இளைஞன் ஐஸ்கிறீம் வாங்கிக் கொடுத்ததால் ஆத்திரமுற்ற மாணவியின் சகோதரன் அந்த இளைஞனை துரத்திப் பிடித்து கடுமையாகத் தாக்கியுள்ளார். இதையடுத்தேஇ பழி வாங்கும் உணர்வுடன் காத்திருந்த இரு கிராமங்களிடையேயும் மோதல் மூண்டது.
இம் மோதல்களினால் கொடிகாமம் இரு நாட்களாக முற்றாகச் செயலிழந்தது. கடைகள்இ வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அக்கிராமங்களினூடாக வாகனங்களில் சென்றவர்கள் வழி மறிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டு தாக்கப்பட்டனர். வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இக் கிராமங்களுக்கிடையிலான மோதல்கள் ஆங்கிலப் படப் பாணியிலேயே நடத்தப்பட்டதுடன் இயந்திரத் துப்பாக்கிகள்இ கிரனைட்டுகளும் பயன்படுத்தப்பட்டமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மறைந்திருந்து தாக்குதல்இ அதிரடியாகப் புகுந்து தாக்குதல்இ தனிமைப்படுத்தி தாக்குதல்இ இலக்கு வைத்துத் தாக்குதல்இ தாக்குதலின்போது சிறைப்பிடித்தல் போன்ற பல வியூகங்கள் இம் மோதல்களின்போது நடைமுறைப்படுத்தப்பட்டன.
இதைவிட குறிப்பிட்ட ஒரு கிராமத்தவர் தமக்கு பலம் சேர்க்கும் முகமாக வடமராட்சி துன்னாலைப் பகுதியிலிருந்து அடியாட்களை இறக்குமதி செய்து எதிர்க் கிராமத்தவர் மீது பாரிய தாக்குதலொன்றை நடத்தினர். ஆனால்இ இதை எதிர்பார்த்து துப்பாக்கிகள் மற்றும் கிரனைட்டுகளுடன் காத்திருந்த எதிர்த்தரப்பு பதிலடி கொடுக்கவே தாக்க வந்தவர்கள் பலத்த காயங்களுடன் தப்பியோடியுள்ளனர்.
இவ்வாறு மோதல்கள் மிக மோசமாக நடந்த போதும் படையினரோஇ பொலிஸாரோ இது விடயத்தில் அதிகம் அக்கறை காட்டவில்லை. அதேவேளைஇ இளைஞர் குழுக்களின் கைகளில் துப்பாக்கிகள்இ கிரனைட்டுகள் போய்ச் சேர்ந்தமையும் இம் மோதல்களின் பின்னணி சக்திகள் குறித்த ஐயப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளைஇ பொது மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி வன்முறைகளைத் தூண்ட எதிரிகளும் எதிரிகளுக்குத் துணைபோகும் துரோகிகளும் முயற்சிப்பதாக விடுதலைப்புலிகள் குற்றம் சுமத்தியிருப்பது கவனிக்கத்தக்கது.
தம்மை தேசிய இனமாக அங்கீகரிக்கக் கோரி போராடும் ஒரு தேசிய இனத்தில் இவ்வாறான குழு மோதல்களை உருவாக்கி அதன் மூலம் அவ்வினத்தை நலிவடையச் செய்யவும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள சிறப்புப் பண்பியல்புகளை சிதறடிக்கவுமே இவ்வாறான குழு மோதல்களை சில தரப்பினர் திட்டமிட்டு அரங்கேற்றுகின்றனர்.
அண்மைக் காலமாக குடாநாட்டின் பல பகுதிகளிலும் குழுச் சண்டைகள்இ வெட்டுக் கொத்துகள்இ ஆட்கடத்தல்கள்இ பெண்களுடனான சேஷ்டைகளென குற்றச் செயல்கள் அதிரித்த போதும் இவற்றைக் கட்டுப்படுத்தும் எவ்விதமான செயற்பாடுகளிலும் பொலிஸாரோஇ படையினரோ ஈடுபடவில்லை. இன்னும் இவற்றை ஊதிப் பெருப்பிப்பவர்களாகவே செயற்பட்டனர்.
சந்திக்கு சந்தி மோட்டார் சைக்கிள்களுடன் குழுக்களாக நிற்கும் இளைஞர்களின் அட்டகாசங்கள்இ அடாவடித்தனங்களை கேட்பார் யாருமில்லை. வீதியில் சென்று வரும் மாணவிகளுடன் அவர்கள் தகாத முறையில் நடந்து கொள்கின்றார்கள். வீதிப் போக்குவரத்துக்கு இடையூறாகச் செயற்படுகின்றனர்.
யாரும் இதைத் தட்டிக் கேட்டால் அவர்களின் வீடு புகுந்து அடித்து நொருக்குகின்றார்கள். மாணவிகளைக் கடத்திச் செல்கின்றார்கள்.
இவை குறித்து பொலிஸ் நிலையங்களில் முறையிட்டால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இது தொடர்பாக பொலிஸாரிடம் கேட்டால் ஹமக்கள் முறையிடுவதில்லை. முறையிட்டால் தானே நடவடிக்கையெடுக்கலாம் என்கிறார்கள். மொத்தத்தில் இக் குழுக்களுக்கு இராணுவத்தினரும் பொலிஸாருமே பின்புலமாக செயற்படுகின்றார்கள்.
இதேவேளை இஇந்த வன்முறைக் கும்பல்கள் தம்மைத் தமிழின உணர்வாளர்களாக காட்டிக் கொள்வதற்காக படையினருக்கெதிரான வன்முறைகளிலும் ஈடுபடுகின்றனர்.
உதாரணமாகஇ படையினருக்கெதிராக மக்கள் அமைதியாக மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்களில் நுழையும் இந்த வன்முறைக் கும்பல்களே இராணுவத்தினர்இ பொலிஸார் மீதான கல்வீச்சுகள்இ ரயர் எரிப்புகள்இ தாக்குதல்களை மேற்கொண்டு மக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தின் போக்கையே மாற்றி விடுகின்றன.
தாம் இவ்வாறு படையினருக்கெதிராக கலகம் செய்வதன் மூலம் புலிகள் தம்மை அரவணைத்துக் கொள்வார்கள். புலிகளால் தமக்கு எதுவித பிரச்சினையும் ஏற்படாதென இவர்கள் நினைத்தே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். ஆனால்இ கண்ணை மூடிவிட்டால் உலகம் இருண்டு விடுமென பூனை நினைப்பது போல் இவர்களும் நினைக்கிறார்கள்.
இந்த இளைஞர் குழுக்களின் மோதல்களினால் அப்பாவிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மோதல் சம்பவங்களுடன் எவ்விதத்திலும் தொடர்புபடாதவர்கள் கூட இவர்களினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மோதல்கள் ஏற்படுவது இயல்பானதொன்று. திடீரென ஏற்படும் வாய்த் தர்க்கம் கூடஇ மோதலாக உருவெடுக்கும். ஆனால்இ இங்குஇ அடிஇதடிஇ மோதல்களுக்கென்றே குழுக்கள் இயங்குவதுதான் உற்று நோக்கப்பட வேண்டியது. தென்பகுதியில் இயங்கும் பாதாளக் குழுக்கள் போல்இ குடாநாட்டிலும் பாதாளக் குழுக்கள் தோன்றி விட்டனவா என்ற அச்ச உணர்வு தமிழ் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது. ஏனெனில்இ நடக்கும் சம்பவங்கள் அதனையே உறுதிப்படுத்துவதாகவுள்ளன.
பாட்ஷாஇ பத்ரிஇ தீனாஇ கில்லி போன்ற குழுப் பெயர்களில் செயற்படும் இவர்களினாலேயே குடாநாட்டில் கலாசாரத் தன்மை பெரும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. ஆபாசப் படங்கள்இ மதுபாவனைகள்இ பெண் தொடர்புகள் போன்ற கலாசார சீரழிவுகள் இவ்வாறான குழுக்களினாலேயே ஊக்குவிக்கப்படுகின்றன.
குடாநாட்டில் தற்போது அதிகரித்துள்ள கொள்ளைச் சம்பவங்கள்இ வழிப்பறிஇ கடையுடைப்புஇ வீடுடைப்பு போன்ற சம்பவங்களுடன் இந்தக் குழுக்களுக்கு நெருங்கிய தொடர்புகளுண்டு. அண்மையில் நல்லூர் திருவிழா நாட்களில் இடம்பெற்ற தாலி அறுப்புகள்இசங்கிலி அறுப்புகள் கூட இந்த வன்முறைக் குழுக்களினாலேயே மேற்கொள்ளப்பட்டன.
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு முன்னர் இவ்வாறான குழுக்களின் அடாவடித்தனங்கள்இ கலாசாரத்தைப் பேணும் குழுவினரால் இல்லாதொழிக்கப்பட்டிருந்தது. ஆனால்இ அது தற்போது மீண்டும் முளை விட்டு விருட்சமாகியுள்ளது.
வன்முறைச் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரிப்பதற்கு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து விடுதலைப்புலிகள் விலகிச் சென்றமையும் ஒரு காரணமாகவுள்ளது. புலிகள் விலகிச் சென்றதை வாய்ப்பாகப் பயன்படுத்தியே இந்தக் குழுக்கள் அடிதடிகள்இ வன்முறைகளில் ஈடுபடுகின்றன. இவ்வாறானவர்களை ஊக்குவிப்பதில் படைத் தரப்பினரும் முனைப்புடன் செயற்படுகின்றனர்.
ஆண்டாண்டு காலமாக இரத்தம் சிந்திஇ உயிர்கொடுத்து காத்து வந்த தமிழ் கலைஇ கலாசார பண்பாடுகளை குழி தோண்டிப் புதைக்கும் முயற்சியில் இந்த வன்முறைக் கும்பல்களும் படைத் தரப்பினரும் தீவிரமாக இறங்கியுள்ளன.
எமது உயிரினும் மேலான கலைஇ கலாசார பண்பாட்டு விழுமியங்களைக் காக்க வேண்டியது விடுதலைப்புலிகளின் பொறுப்பு மட்டுமல்ல. தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரினதும் தலையாய கடமை. எனவேஇ இவ்வாறான வன்முறைக் கும்பல்களைஇ அடிதடிக் கோஷ்டிகளை இல்லாதொழிக்க புலிகளுடன் நாம் அனைவரும் கைகோர்க்க வேண்டும்.
இவ்வாறான வன்முறைக் கும்பல்களின் நடவடிக்கைகளை புலிகளும் மிகத் தீவிரமாக கண்காணித்து வருவதுடன் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் எச்சரித்துள்ளனர். இதன் பின்னரும் வன்முறைக் கும்பல்களின் அட்டகாசங்கள் தொடருமானால்இ அதன் விளைவுகளை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும்.
பயிர்கள் நன்றாக வளர வேண்டுமென்றால்இ அதனோடு இணைந்து வளரும் களைகள் களையப்பட வேண்டும். அவ்வாறானதொரு நிலையையே வன்முறைக் கும்பல்கள் குடாநாட்டில் உருவாக்கி வருகின்றன. தெரியாமல் செய்யும் தவறைவிட தெரிந்து கொண்டு செய்யும் தவறு மிகவும் ஆபத்தானது என்பதை இந்த வன்முறைக் கும்பல்கள் விரைவில் உணருவார்கள். அதற்கிடையில்இ திருந்தும் சந்தர்ப்பம் இவர்களுக்கு நிறையவே உண்டு.
நன்றி : தினக்குரல்
|
|
|
| தேவை தேவை முகவர்கள் தேவை |
|
Posted by: RaMa - 09-17-2005, 11:13 PM - Forum: நகைச்சுவை
- Replies (39)
|
 |
காலம் இது பொற்காலம் (நகைச் சுவைக்காக மட்டும்)
எம்மிடம் நல்ல இனத்து காகங்கள் உண்டு. அவற்றை அதுவும் இந்த விரத காலங்களில் கோயில்களில் விட்டு பின்பு மக்கள் புசையை முடித்து வீட்டுக்குச் செல்ல அவற்றை திருப்பி கொண்டு சேர்க்க முகவர்கள் தேவை!!!!
தகமைகள்:
- கூட்டல் கழித்தல் பார்க்க கூடியவராக இருத்தல் வேண்டும்
- காகங்களுக்கு யாரவது மாமிசம் கொடுக்கமால் பார்த்துக் கொள்ள வேண்டும் (என்னெலில் இது கோயில் காகங்கள்)
- சாரதிப் பத்திரம் வைத்திருப்பவர் விரும்பத்தக்கது
ஒரு காகத்திற்கு ஒரு தரம் சாப்பாடு வைக்க 5 டொலர்கள்
நகரத்தில் உள்ள எல்லா ஆலயங்களுக்கு நீங்கள் காகங்களை எடுத்துச் செல்லாலம். பிற நாடுகளில் இருப்பவர்கள் உங்கள் நாடுகளில் இருக்கும் கோயில்களுக்கு காகங்களின் தேவை என்றால் எம்முடன் தொடர்பு கொள்ளாலம்
காகங்கள் உங்கள் சாப்பாட்டை சாப்பிடவில்லை என்றால் அதற்கு பொறுப்பாளிகள் நாம் அல்ல.
எந்த ஆலயத்தில் காகம் கூடுதலாகச் சாப்பிடுதோ அந்த முகவருக்கு ஒரு காகத்தை இலவசமாக அதுவும் சொந்தமாக வைத்திருக்க அனுமதி அளிக்கப்படும்
பிற்குறிப்பு::::::::: இந்த காகங்களினால் பறவைக் காய்ச்சால் என்று எதாவது தொற்று நோய்கள் வந்தால் அரசாங்கத்திற்கு நீங்கள் தான் பதிலளிக்க வேண்டும்.................
|
|
|
| நண்டுப் பொரியல் |
|
Posted by: கீதா - 09-17-2005, 08:30 PM - Forum: சமையல்
- Replies (16)
|
 |
நண்டுப் பொரியல்
-----------------------------
தேவையான பொருக்கள்
நண்டு ஒரு கிலோ ( துப்பரவுசெய்யப்பட்ட நண்டு
வெங்காயம் ஒன்று (சின்னனாக வெட்டப்படல்)
உள்ளி சிறிதளவு (சின்னனாக வெட்டப்படல்)
கருகப்பிளை சிறிதளவு
உப்பு சிறிதளவு
கறித்தூள் 2 தேக்கரண்டி
மஞ்சள் 1 தேக்கரண்டி
செத்தல் மிளகாய் ( பொடியாக இடிக்கப்படல்)
தேங்காய் எண்ணெய்
செய் முறை
நண்டுக்குள் உப்பு கறித்தூள் மஞ்சள் இவற்றை பிரட்டி 2நிமிடம் ஊற விடவும்
முதலில் பாத்திரத்தை களுவி
அடுப்பில் வைத்து ?
எண்ணெயை விட்டு
நன்றாக கொதிக்க விடவும் பின்
நண்டைப் போட்டு நன்றாக கிளறவும்
நன்றாக பொரிந்த பின் அதை ஒரு பக்கம் எடுத்து வைக்கவும்
பின்னர் வெங்காயம் உள்ளி கருகப்பிளை இவற்றைப் போட்டு
நன்றாக கிளறவும் பொரிந்த பின் அதனுடன் பொரித்தெடுத்த நண்டைச் சேர்க்கவும் பின்னர் ? பொடிச் செத்தல் மிளகாயை போட்டு அதன் மேல் கொஞ்ச உப்பையும் போட்டு இறக்கவும்
;இதோ நண்டுப் பொரியல் றொடி
|
|
|
|