| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 216 online users. » 0 Member(s) | 213 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,394
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,280
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,622
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,309
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,653
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,111
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,475
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,520
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| ஆயுதக்குழுக்களை களைந்திடுக |
|
Posted by: வினித் - 09-20-2005, 10:41 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
ஆயுதக்குழுக்களை களைந்திடுக: சிறிலங்கா அரசுக்கு உதவி வழங்கும் நாடுகள் வலியுறுத்தல்!!
[செவ்வாய்க்கிழமை, 20 செப்ரெம்பர் 2005, 15:16 ஈழம்] [கொழும்பிலிருந்து சி.செந்தூரன்]
இலங்கையின் வடகிழக்கில் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஆயுதக்குழுக்களிடமிருந்து சிறிலங்கா அரசாங்கம் ஆயுதங்களைக் களைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் தலைவர்களினால் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயோர்க்கில் நேற்று திங்கட்கிழம கூடிய இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்தின் இறுதியில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
இலங்கையின் சமாதான நடவடிக்கைகள், இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் படுகொலை, அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் யுத்த நிறுத்த உடன்படிக்கை என்பன உட்பட பல்வேறு விடயங்கள் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டன.
யுத்த நிறுத்தத்தைப் தொடர இருதரப்பினரும் பல விடயங்களை அமுல்படுத்த வேண்டும் என்று உதவி வழங்கும் நாடுகள் வலியுறுத்தியுள்ளனர்.
அந்த அறிக்கையில்,
2002 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை பாதுகாப்பதிலேயே சமாதான முயற்சிகள் தங்கியுள்ளன.
தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வன்முறைகளே யுத்த நிறுத்தத்தை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளன.
யுத்த நிறுத்த உடன்படிக்கையை சரியான வகையில் அமுல்படுத்துவது அரசாங்கத்தினதும் விடுதலைப் புலிகளினதும் கடமையாகும். சமாதான நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகள் அக்கறையுடன் பங்களிப்பு வழங்குவதை வெளிப்படுத்தக்கூடிய வகையில் செயற்பட வேண்டும்.
அரசியல் படுகொலைகள் உட்பட அனைத்து படுகொலைகளையும் அவர்கள் நிறுத்த வேண்டும். சிறுவர்களைப் படையில் சேர்ப்பதை நிறுத்த வேண்டும்.
அத்துடன் யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு அமைய வடக்கு கிழக்கில் இயங்கும் ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களைக் களைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையின் சமாதான நடவடிக்கைகளை தொடர்வதற்காக முன்னாள் யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழுத் தலைவர் ட்ரொன்ட் ப்றூஹொவ்டே நோர்வேயின் விசேட பிரதிநிதியாக இலங்கைக்கு அனுப்பப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
|
|
|
| இன்று முதல் தனியன் |
|
Posted by: inthirajith - 09-20-2005, 05:56 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (3)
|
 |
இரத்த உறவுகள் பிரியும் போது வலி அதிகம்
அது தண்ணீரைவிட அடர்த்தி உங்களை பிரியும்
அந்தகணங்களை தவிர்க்க பார்க்கிறேன்
தவிப்பும் கலக்கமும் மனதை பிசைகின்றதே
அரவணைத்து ஆறுதல் தரும் தேவதை
ஒதுங்கிவிட்டாள்மனதின் ஓரம்வலிகள்
யாருக்கும் புரியாமல் மனதின் ஓரம்
தங்கிவிட்டவலிகள் எப்போதும் மனதில்
அதன் தழும்புகள் உங்கள் வாழ்க்கை
புதிய அத்தியாயம் படைக்க அன்புடன்
|
|
|
| அமைதிப்படை அட்டகாசங்களை ஏன் மறந்தீர்கள்? |
|
Posted by: AJeevan - 09-19-2005, 08:56 PM - Forum: நூற்றோட்டம்
- No Replies
|
 |
<b>அமைதிப்படை அட்டகாசங்களை ஏன் மறந்தீர்கள்?
புத்தகம் எழுதிய கார்த்திகேயனுக்கு புலிகள் கேள்வி</b>
ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பாக சி.பி.ஐ. இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் நடத்திய விசாரணையை-& உலகெங்கும், ஒரு மாதிரி விசாரணையாக எடுத்துக்கொள்ள வேண்டும்!
இப்படி பாராட்டுப் பத்திரம் வாசித்திருக்கிறது, Ôஇன்டர்போல்Õ எனப்படும் சர்வதேச போலீஸ். இதன் மூலம் உலக புலனாய்வு அமைப்புகளுக்கு இணையாகப் பேசப்படும் ஓர் அமைப்பாக மாறியிருக்கிறது இந்தியாவின் சி.பி.ஐ.
<img src='http://www.vikatan.com/jv/2005/sep/21092005/p23.jpg' border='0' alt='user posted image'>
இந்த அரிய பாராட்டால் உற்சாகப் பூரிப்பில் இருக்கும் டி.ஆர்.கார்த்திகேயனைச் சந்தித்தோம். சி.பி.ஐ&யிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட அவர், ராஜீவ் கொலை தொடர்பாக நடத்திய விசாரணையை, புத்தகமாகவும் எழுதி வெளியிட்டிருக்கிறார். ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள அந்தப் புத்தகம், வாய்மையின் வெற்றி என்ற தலைப்பில் விரைவில் தமிழிலும் வெளியாகவுள்ளது. Ôஇன்டர்போல் பாராட்டு... அவர் எழுதியிருக்கும் புத்தகம்... இவைப் பற்றியெல்லாம் அவரிடம் கேள்விகளை முன்வைத்தோம்.
<span style='color:red'>சர்வதேச போலீஸ் உங்களுக்கும், உங்கள் விசாரணைக் குழுவுக்கும் பெரிய அங்கீகாரம் கொடுத்திருக்கிறதே?
உலகத்தில் இதுவரை எத்தனையோ பெரிய தலைவர்கள், வி.வி.ஐ.பி&க்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அந்தக் கொலைகளை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை அமைப்புகள் எல்லாம் கொலையாளிகள் இவர்கள்தான் என யாரையும் அடையாளம் காட்டவில்லை. இந்தியாவை எடுத்துக் கொண்டால் மகாத்மா காந்தியையும், இந்திரா காந்தியையும் சுட்டுக் கொன்ற கொலையாளிகள் மட்டுமே சட்டத்துக்கு முன்பு நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு தண்டனை கொடுக்கப் பட்டிருக்கிறது. இதற்குக் காரணம், மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சே நான்தான் கொன்றேன் என்று பொறுப்பேற்றுக் கொண்டான். இந்திரா அம்மையார் விஷயத்தில் அவரை கொலை செய்தவர்கள் அந்த இடத்திலேயே கையும் களவுமாகப் பிடிபட்டு விட்டார்கள். ராஜீவ் காந்தி படுகொலை விஷயத்தில்கூட ஆரம்பத்தில் தயக்கங்கள்தான். கொலைக்கு மறுநாள் காலை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் உச்சபட்ச உளவு அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அப்போது எல்லா அமைப்புகளுமே இதை யார் செய்திருப்பார்கள் என்று யூகிக்க முடியவில்லை. இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கும் என்று எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என்றுதான் சொன்னார்கள்.
<img src='http://www.vikatan.com/jv/2005/sep/21092005/p23a.jpg' border='0' alt='user posted image'>
கார்த்திகேயன்
என்னை ராஜீவ் கொலையை விசாரிக்கப் பணித்த போது, அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டேன். ஆனால், அதன்பிறகுதான் எனக்கு ஒரு விஷயம் தெரிந்தது. என்னிடம் கொடுத்த அந்தப் பொறுப்பை அப்போதே பல உயர் அதிகாரிகளிடம் மத்திய அரசு கொடுத்திருக்கிறது. ஆனால், யாருமே அதை ஏற்காமல் தட்டிக் கழித்திருக்கிறார்கள். காரணம், ராஜீவ் கொலை என்பது சர்வதேச அளவில் கவனிக்கப்படுகிற ஒரு விஷயம். இந்த விசாரணையில் உருப்படியாக கண்டு பிடிக்காமல் வெறும் அறிக்கையை மட்டும் சமர்ப்பித்தால் அது இந்தியாவுக்கே அசிங்கம். தவிர, விசாரணைக்கு தலைமையேற்கும் உயர் அதிகாரிக்கும் பெரிய அசிங்கம்.
நான் மிகவும் நேசித்த ஒரு தலைவரின் கொலைப் பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடிக்க வெளிப்படை யான விசாரணையை மேற்கொண்டேன். அப்போதே எனக்கு அரசியல் குறுக்கீடுகள் வரத் துவங்கின. எங்கிருந்து, யார் மூலம் என்பதை இப்போது நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால், எனக்கு வந்த குறுக்கீடுகள் விசாரணையின் போக்கையே மாற்றும் வல்லமை படைத்ததாக இருந்தது. ஆனால், அரசியல் குறுக்கீடுகளைத் தவிர்க்க, எனக்குப் போதிய சுதந்திரம் கொடுத்தது மத்திய அரசு. அந்த சுதந்திரம்தான் ராஜீவ் கொலையாளிகளை உலகுக்கு அடையாளம் காட்ட எனக்கு உதவியது.ÕÕ
இலங்கையிலும் இந்தியாவிலும் பலிகள் பல நடந்தும், இன்னும் இலங்கையில் அமைதி நிலவவில்லையே?
இதற்குப் பதிலாக அண்மையில் நான் நார்வே நாட்டில் சர்வதேச தீவிரவாதம் பற்றி ஆற்றிய உரையைக் குறிப்பிட்டால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். நான் அங்கு நிகழ்த்திய உரையின் தலைப்பு ஏன் தீவிரவாதம்? என்பதுதான். தீவிரவாதத்தில் இரண்டு வகை உள்ளது. ஒன்று மக்கள் தீவிரவாதம். இரண்டாவது ஜனநாயக தீவிரவாதம்.
மக்கள் தீவிரவாதம் என்பது மத அடிப்படையில் பொதுமக்களுக்குள் மூட்டி விடப்படுகிற தீ. ஜனநாயக தீவிரவாதம் என்பது, சிறுபான்மையினரை மதிக்காமல், அவர்களின் சம்மதம் பெறாமல் பெரும்பான்மையினர் எடுக்கும் சில முடிவுகளினால் விளைகிற தீவிரவாதம். இதுதான் இலங்கையில் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிற உயிர்பலிகளுக்குக் காரணம்.
முதலில் தமிழர்கள் ஜனநாயக முறையில் குரல் கொடுத்தார்கள். ஆட்சியாளர்களின் காதில் இந்தக் குரல்கள் விழவில்லை. ஆகவே அடுத்த தலைமுறையினர் ஆயுதங்களைக் கையில் எடுத்து, தங்கள் வாழ்வுரிமையைக் காத்துக்கொள்ள போராடுகிறார்கள். அதற்கு தீர்வு கண்டால்தான் அங்கே அமைதி திரும்பும்ÕÕ
ராஜீவ் கொலை விசாரணையைப் பற்றி வெளியிட்டுள்ள புத்தகத் துக்கு விடுதலைப் புலிகளிடமிருந்து கடும் கண்டனம் வந்ததாமே?
அதை கண்டனம் என்று சொல்ல முடியாது. என் புத்தகத்தின் மீதான அவர்களின் உணர்வைப் பதிவு செய்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். புலிகளின் இணைய தளத்தில் என் புத்தகம் பற்றி அவர்கள் தரப்பு கருத்துக்களை வெளியிட்டனர். அதில், ராஜீவ் கொலையைப் பற்றியும், அதன் விசாரணையைப் பற்றியும் விரிவாக எழுதியுள்ள தாங்கள், இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தத்தைப் பற்றியும், இலங்கையில் இந்திய அமைதிப்படை செய்த அட்டகாசங்களைப் பற்றியும் ஏன் எழுத மறந்தீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.ÕÕ
ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள பிரபாகரனை இன்னும் ஏன் கைது செய்ய முடியவில்லை?
ராஜீவ் விவகாரத் தைப் பொறுத்த வரையில், யாரெல்லாம் குற்றவாளிகள் என்று அடையாளம் காட்டுவதும், அதற்கான ஆதாரங்களை கொடுப்பதும்தான் விசாரணை அமைப்பின் வேலை. மற்றபடி நீங்கள் என்னிடம் கேட்கும் கேள்வியை ஆட்சியாளர்களிடம்தான் கேட்க வேண்டும்.
- எஸ்.சரவணகுமார்
படம்: கே.கார்த்திகேயன்
</span>
Thanks: Vikadan
|
|
|
| ஆனந்தசங்கரி விடயத்தில் அவதானம் |
|
Posted by: வினித் - 09-19-2005, 08:55 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (28)
|
 |
கனடா முழக்கம் வார இதழில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கம்
ஆனந்தசங்கரி விடயத்தில் அவதானம்!
தமிழினத்திற்கு எதிராகக் கனடாவில் இயங்கிக் கொண்டிருக்கும் சிங்கள இனவாத அமைப்பொன்றின் அழைப்பில் திரு. ஆனந்தசங்கரி அவர்கள் கனடாவுக்கு வந்திருக்கின்றார்.
அந்த இனவாத அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்திற்குக் கனடிய அரசியலாளர்கள் சிலரும், சிறீலங்காத் தூதரகப் பிரதிநிதியும் அழைக்கப்படிருந்தனர்.
அந்தக் கூட்டம் என்ன கூட்டம்? எதற்காக நடைபெறுகிறது என்று விவரம் சொல்லாமல் 'தமிழ்க் கூட்டம்" நடக்கிறது என்று அழைப்பு விடுத்து, ஆள் எண்ணிக்கைக்காக சில தமிழின உணர்வாளர்களும் அழைக்கப்பட்டிருக்கின்றார்கள். அங்கு போன பின்னர்தான் அக்கூட்டம் கதிர்காமருடைய நினைவு வணக்கக் கூட்டம் என்று தெரிந்திருக்கிறது பலருக்கு.
அக்கூட்டத்தில் ஆனந்தசங்கரி அவர்கள் கதிகாமரின் உயிர் 100,000 விடுதலைப் புலிகளின் உயிருக்குக் கூட சமனானது கிடையாது. அப்படிப்பட்ட ஒருவரைக்கொன்ற புலிகளை ஏன் இன்னும் இக்கனேடிய மண்ணில் தடை செய்யாமல் இருக்கின்றீர்கள் என்று கனடிய அரசியலாளர்களை நோக்கிக் கேள்வி எழுப்பி உள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது மக்களால் நிராகரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட ஆனந்தசங்கரி அவர்களை சிங்கள இனவாத அமைப்பு கனடாவுக்கு அழைத்து இருக்கின்றது என்றால் அதன் பின்னணியில் என்னவெல்லாம் நடைபெறுகின்றது என்று மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
தமிழர் விடுதலைக் கூட்டணியில் பெரியவர் தந்தை செல்வா அவர்களுடன் இருந்து அரசியலில் முனைப்புடன் ஈடுபட்ட பலர் தற்போது அவர் கொள்கையை துரிதப்படுத்தும் பாதையைக் கொண்டிருக்கும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.
சிலர் இளைய அரசியல் தலைமுறைக்கு வழிவிட்டு அரசியலில் இருந்து ஒதுங்கியும் இருக்கின்றனர். ஆனால் இங்கு சிலர் சிறீலங்காப் பேரினவாத அரசினால் தூண்டப்பட்டு தமிழினத்திற்கு எதிராக நேரடியாகவும் மறைமுகமாகவும் நாசகாரப் பணியாற்றி வருகின்றனர்.
கனடாவில் இயங்கும் சிறீலங்கா தூதரகத்தின் அதிகாரியாக திரு. பூலோகசிங்கம் அவர்கள் இருக்கின்றார். அவர் யாழ். இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் என்பதால் சில யாழ். இந்துக்கல்லூரி நிகழ்வுகளிலும் இதர நிகழ்வுகளிலும் பங்குபற்றி வருகின்றார். அவர் அந்தப் பணியில் இருந்து ஒதுங்கி ஒரு சாதாரண தமிழனாக விழாக்களில் பங்குகொண்டால் யாருக்கும் பிரச்சினை இருக்காது.
ஆனால் தற்போது அவர் விழாக்களுக்கு அழைக்கப்பட்டு பெருமைப்படுத்தப்படும் போது தமிழர்களைக் கொன்றொழித்து வரும் சிறீலங்கா அரசுக்குக் கொடுத்த பெருமையாகவே இருக்கும்.
ரொரன்ரோ கனடாவில் நடைபெற்ற 'பொங்குதமிழ்" நிகழ்வுக்கு ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொள்கின்றார்கள் என்றால் தமிழர்கள் தெளிவாகத்தான் இருக்கின்றார்கள் என்று தெரிகின்றது. ஆக ஒரு சில வேடதாரிகளும் கைக்கூலிகளும் இலட்சக்கணக்கான தமிழர்களின் விருப்புகளையும் இலட்சியங்களையும் அழிக்கும் பணியில் இறங்கியிருக்கின்றார்கள்.
தலைவர் பிரபாகரன் அவர்களின் காலத்தில் கொள்கையால் இணைந்த தமிழர்களைப் பிரிக்க முடியாது என்பதைக் கனடாவாழ் தமிழர்கள் செயலில் காட்டுவோம். மாவீரர்களுக்கும் தமிழ்த்தேசியத் தலைமைக்கும் என்றும் உண்மையாய் இருப்போம்.
நன்றி: முழக்கம் வார இதழ் (16.09.05)
http://www.tamilnaatham.com/editorial/muzh...am/20050919.htm
|
|
|
| பிரிந்துவிட்ட நண்பனுக்காய் |
|
Posted by: inthirajith - 09-19-2005, 03:12 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (3)
|
 |
ஆண்டு பதினைந்துவயதா நம் நட்புக்கு
உன்மனைவி இறந்த கவலைக்கு ஆறுதலாக
வந்தநான் உன்வலியில் பங்கெடுத்த அந்த நினைவு
மனவானில் வட்டமிடுகிறது நண்பா அன்று
என்னுடன் இணைந்தது உன்மனம் உன் தப்பால்
என்னையும் என் உயிரையும் ஏன் உன்னையும்
பிரித்தது உன் மது மயக்கம் உனக்காக உன் நட்பை
தூயதாகநினைத்து வாதாடினேனே அப்போ
தான் இடியாய் வந்தது அவள் அனுப்பியமடல்
நம்பிக்கையின் ஆணிவேரை அறுத்து விட்டாயே
நண்பனே அது உண்மையாக இருக்ககூடாதா
தாயகம் போனநண்பனே நலமுடன் வாழ
என்பிரார்தனைகள் என்றும் உண்டு
நீ சொன்னவார்த்தைகள் நெஞ்சை அறுக்கிறது
நம்பாதே உன்னை ஏமாற்றுவார்கள்
உன்முகத்தில் விழிக்க தெம்பில்லை என்சோகம் பார்க்கவும்
என்நம்பிகை வழவாழ்த்துகள் சொன்னாய் தோழா
என்றும் உன்வார்தைகளை நம்பினேன் இதை நம்ப
மனம் மறுக்கிறதே அது நிஜம் ஆகாது தோழா
என்னில் அவளும் அவளில் நானும் வாழ்கிறோம் கண்ணை
இமை பிரிவதுண்டோ நண்பா நான் இருவரும் உன்னிடம்
வருவோம் அப்போ புரியும் அவள் தேவதை தான் என்று
|
|
|
| ஆண் இனம் அழியப்போகிறதா? |
|
Posted by: vasanthan - 09-19-2005, 12:23 PM - Forum: மருத்துவம்
- Replies (10)
|
 |
புதிய கண்டுபிடிப்புகள்
ஆண் இனம் அழியப்போகிறதா? :?: :oops:
எத்தனை பெண் குழந்தைகள் இருந்தாலும் ஆண் குழந்தை இல்லையே என்ற வருத்தம் உள்ளவர்கள் பலர் உண்டு.
சிலர் வரிசையாக பெண் குழந்தைகளை பெற்று விட்டு அடுத்தது கண்டிப்பாக ஆண் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்பவர்களும் உண்டு. ஆனால் அவர்களின் நம்பிக்கைக்கும் முயற்சிக்கும் ஆபத்து வரப்போகிறது என்று ஒரு தகவல் சமீபத்தில் வெளியானது.
விஞ்ஞானிகளின் இந்த திடுக்கிடும் அறிவிப்பு ஆண்களை கலங்கடித்துள்ளது. அது என்னவென்றால் இன்னும் 100 லட்சம் ஆண்டுகளுக்குப்பிறகு ஆண்குழந்தைகள் பிறக்காது. பிறக்கும் குழந்தைகள் எல்லாம் பெண்ணாகத்தான் இருக்கும்.
இதற்கு காரணம்- ஆண் விந்தணுவில் உள்ள (ஆண் குழந்தை பிறக்க காரணமாக இருக்கும்) "ஓய்'' குரோமோசோம்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதுதான்.
பொதுவாக ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென்றால் ஆண்களின் உயிரணுக்களில் உள்ள "ஓய்'' குரோமோசோம்களும் பெண்ணின் சினை முட்டையில் உள்ள "ஓய்'' குரோமோசோம்களும் இணைய வேண்டும் அப்போது தான் ஆண் குழந்தை பிறக்கும்.
அதற்கு மாறாக பெண்ணின் சினை முட்டையில் உள்ள "எக்ஸ்'' குரோமசோம்களும்இ ஆண்களின் உயிரணுவில் உள்ள "எக்ஸ்'' குரோமசோம்களும் இணையும் போது பெண் குழந்தைகள் பிறக்கின்றன.
விஞ்ஞானிகள் சொல்கிறபடி பார்த்தால் ஆண்குழந்தைகளை உருவாக்குகிற ஓய் குரோமசோம்கள் ஆண்களிடம் இருந்து அழிந்து விட்டால் ஆண்களை காட்டிலும் பெண் குழந்தைகளே அதிகஅளவு பிறக்கும் சூழ்நிலை உருவாகும்.
இதனால் ஒரு கட்டத்தில் மனித விருத்தியே தடைப்படும் சூழ்நிலை உருவாகலாம் என்று விஞ்ஞானிகள் பயமுறுத்தினர்.
இது உண்மைதானா என்பதை அறிய கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் உயிர் மருத்துவ விஞ்ஞானி டேவிட் பேஜி இதை பற்றிய ஆய்வை மேற்கொண்டார். ஆய்வின் முடிவில் அப்படி எதுவும் நடக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். இருப்பினும் இது போன்ற ஒய் குரோமோசோம்கள் அழிந்து வருவது ஒரு சில குடும்பங்களைச் சாந்தவர்களுக்கு நிகழும் வாய்ப்பு உள்ளது என்றார். ஒய் குரோமோசோம்கள் பல நூறு கோடி ஆண்டுகளாக இருந்து வருகிறது. அதாவது உயிரினம் குறிப்பாக மனித இனம் பல கோடி ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த காலகட்டத்தில் சில மாற்றங்கள் மனிதனின் உடலில் ஏற்பட்டுள்ளது. இது போல அவனது உயிரணு விலும் மரபணுவிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இத்தகைய மாற்றங்களால் மனித குலத்திற்கு துளியளவும் பாதிப்பில்லை என்றும் தெரிவித்தார்.
அவரால் அதற்கு சரியாக ஆதாரங்களை காட்ட முடியவில்லை. என்றாலும் மனித குலத்திற்கு இப்போதைக்கு ஆபத்தில்லை என்று மட்டும் தெரிவித்தார்.
ஆனால் அவரின் கூற்றை விஞ்ஞானிகள் ஒட்டு மொத்தமாக மறுத்து வருகின்றனர். ஆண் குழந்தைகளை உருவாக்கும் "ஓய்'' குரோமோசோம்கள் ஆண்களிடம் வேகமாக குறைந்து வருகிறது என்றும் 100 லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக குறைந்து விடும் என்றும் தெரிவித்தனர்.
இரு தரப்பினரும் சொல்வதில் யார் சொல்வது உண்மை என்பதில் குழப்பம் நிலவி வருகிறது.
இது உண்மையா இல்லையா என்பது இன்னும் போகபோக தான் தெரியும் என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சமீபகாலமாக நடந்த ஆய்வுகளில் ஆண்களின் மரபணுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. தவறான உணவு பழக்க வழக்கங்கள்இ போதிய உடற்பயிற்சி இல்லாததுஇ தவறான போதை மற்றும் மது அருந்தும் பழக்கம் காரணமாக இளைய தலைமுறையின் மரபணுக்கள் பாதிப்பது அதிகரித்துள்ளது. வாரிசுகளை பெற்றுக்கொடுக்க முடியாத அளவுக்கு சில இளைஞர்களின் விந்தணுக்கள் பலவீனமாக உள்ளது. இந்த நிலைக்கு சுற்றுப்புற சூழல் மாசுபட்டு இருப்பதும் ஒரு காரணமாக கருதப்படுகிறது.
எது எப்படியோ வருங்காலம் ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் வளமாக அமைய அவர்கள் நல்ல பழக்க வழக்கங்களுடன் சுகாதாரமான முறையில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்வது தான் சிறந்தது.
சுட்டது தினத்தந்தி இளைஞர்மலர்
|
|
|
|