Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 462 online users.
» 0 Member(s) | 459 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,316
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,641
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,069
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,496
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,038
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  ராஜபக்சவின் முதல் தாக்குதல்
Posted by: adsharan - 11-24-2005, 10:04 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

தமிழர்கள் மீதான மகிந்த ராஜபக்சவின் முதல் தாக்குதல்: வடக்கு-கிழக்கைப் பிரிக்க முடிவு!!

தமிழர் தாயகமான இலங்கையின் வடக்கு-கிழக்குப் பிரதேசங்கள் ஒருங்கிணைந்த மாகாணமாக சிறிலங்கா அரசியல் யாப்பின் கீழ் நீடிப்பது தொடர்பாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மக்கள் வாக்கெடுப்பு நடத்துவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார்.


கொழும்பில் நேற்று புதன்கிழமை இந்த ஆலோசனைக் கூட்டத்தை மகிந்த ராஜபக்ச நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், வடக்குப் பிரதேசத்துடன் கிழக்குப் பிரதேசம் இணைந்திருப்பது தொடர்பாக கிழக்குப் பிரதேச மக்களின் வாக்கெடுப்பு நடத்துவதை ஓராண்டுக்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளார்கள்.

சிறிலங்காவின் 1988 ஆம் ஆண்டு மாகாண சபை சட்டத்தின் கீழ் தாற்காலிகமாக இரு பிரதேசங்கள் இணைக்கப்பட்டு ஆண்டு தோறும் அது புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலில் மகிந்தருக்கு ஆதரவளித்த பேரினவாதக் கட்சிகளான ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமயவினர் கூட இந்த வடக்கு-கிழக்கை கூறுபோடும் விடயம் தொடர்பாக எதுவும் கூறாத நிலையில் மகிந்த ராஜபக்ச தனது முதல் நடவடிக்கையாக இதை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

\"வடக்கு-கிழக்கைப் பிரிப்பதானது அமைதி முயற்சிகளின் அடித்தளத்தை தகர்ப்பதாகும். வடக்கு-கிழக்கு இணைந்த அடிப்படையில்தான் இந்த அமைதிப் பேச்சுகளே நடைபெறுகின்றன என்று அவர் கூறியுள்ளார்.

ஈ.பி.டி.பி.யின் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கையில், வடக்கு-கிழக்கு இணைந்திருக்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடு. இருப்பினும் கிழக்கு மக்களின் கருத்தறிவதும் அவசியம் என்று கூறியுள்ளார்.

ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் ஒருவர், கிழக்கு மக்களின் ஜனநாயக உரிமையை மதிக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

http://www.eelampage.com/?cn=21968

Print this item

  நடிகை சுகாசினியை ஆதரிக்க முறைகேடான முயற்சி: பி.பி.சி., 'இநது
Posted by: Birundan - 11-24-2005, 04:02 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (44)

[புதன்கிழமை, 23 நவம்பர் 2005, 18:54 ஈழம்] [புதினம் நிருபர்]
சென்னை ஊடகவியலாளர்கள் இயக்கங்களின் பெயர்களை முறைகேடாக பயன்படுத்தியமைக்காக சர்வதேச செய்தித்தாபனமான பி.பி.சி.யின் சென்னை செய்தியாளர் மற்றும் தமிழ்நாட்டின் முன்னணி ஆங்கில நாளேடான இந்து நாளேட்டின் செய்தி ஆசிரியர் ஜயந்த் ஆகியோர் ஊடகவியலாளர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினர்.


நடிகர் சாருஹாசன், கமலஹாசன் குடும்பத்தைச் சேர்ந்த சுகாசினி, தமிழர்களுக்கு எதிராக கருத்துத் தெரிவித்துப் பேசியதற்காக கடுமையான போராட்டங்கள் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் சுகாசினியின் கணவர் மணிரத்னம் அண்மையில் இந்து ராமைச் சந்தித்து ஆதரவு தரக் கோரினார். இந்து ராமின் நடவடிக்கையால் தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சிகள் சுகாசினிக்கும், குஸ்புவுக்கும் ஆதரவாக அறிக்கை வெளியிட்டன.

தொடர்ந்து பி.பி.சி. செய்தியாளர் டி.என்.கோபால், இந்து நிர்வாகம் ஆகியவை இணைந்து ஊடகவியலாளர்களின் இயக்கங்களை அனுமதி பெறாமல் முறைகேடாக பயன்படுத்தி சுகாசினிக்கும் குஸ்புவுக்கும் ஆதரவாக ஊடகவியலாளர்கள் இருப்பதான தோற்றத்தை உருவாக்க முனைந்தனர். அதற்கு அனைத்து தமிழ் ஊடகவியலாளர்களும் ஒட்டுமொத்த எதிர்ப்புத் தெரிவித்து இரு முன்னணி நிறுவனங்களை பகிரங்க மன்னிப்பும் கேட்க வைத்துள்ளனர்.

சென்னையிலிருந்து எமக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் மின்னஞ்சல் செய்தி:

சென்னை பத்திரிகையாளர் சங்கம், பெண் நிருபர்கள் கூட்டமைப்பு, பத்திரிகையாளர் மன்றம், நிருபர்கள் சங்கம் இணைந்து கருத்து சுதந்திரத்துக்கான பத்திரிகையாளர்கள் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுப்பதாக இந்து நாளேட்டில் இன்று புதன்கிழமை காலை செய்தி வெளியானது.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் மாலை 3 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்று வெளியிடப்பட்ட அச்செய்தியில் இந்து முதன்மை ஆசிரியர் என். ராம், நடிகர் சாருஹாசன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பாக தகவல் சென்னை ஊடகவியலாளர்களுக்கு தனித்தனியாக, தகவலை அனுப்பியவர் பெயரோ, கையெழுத்தோ இல்லாமல் அனுப்பி வைக்கப்பட்டது.

இக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை பி.பி.சி. செய்தியாளர் டி.என். கோபாலன் முன்னின்று செய்துள்ளார்.

ஆனால் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்ட ஊடகவியலாளர்கள் அமைப்புகளிடம் எந்தவித முன் அனுமதியும் பெறாமல் அவற்றின் பெயரை பி.பி.சி. செய்தியாளர் பதிவு செய்திருந்ததால் விசனமடைந்த ஊடகவியலாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகள், கூட்டம் நடைபெற இருந்த சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக ஒன்று திரண்டனர்.

அப்போது அங்கு வந்த பி.பி.சி. செய்தியாளர் டி.என். கோபாலனிடம் இது பற்றி ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

ஊடகவியலாளர்களின் கடும் விசனத்துக்கு முகம் கொடுத்த பி.பி.சி. செய்தியாளர் டி.என். கோபாலன், ஊடகவியலாளர்கள் இயக்கங்களின் அனுமதியைப் பெறாமல் போட்டது தவறுதான். இதற்கு ராம், சாருஹாசன் கூப்பிடுவதாக ஏற்பாடு. கூட்டத்துக்கான அழைப்பு அனுப்பிவிட்டதால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை. இப்போது கூட்டம் நடத்த விடுங்கள் என்று கேட்டார். ஊடகவியலார்களின் இயக்கங்களின் அனுமதி பெறாமல் அவற்றை பயன்படுத்தியதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறினார்.

மேலும் இந்து நாளிதழில் 3 ஊடகவியலாளர்கள் இயக்கங்கள் இணைந்து கூட்டம் நடத்துவதாக குறிப்பிடப்பட்டிருந்தது தொடர்பாகவும் கேள்வி எழுப்பட்டது.

பின்னர் ஊடகவியலாளர்கள் இயக்கங்களின் நிர்வாகிகள் கலைந்து செல்ல முற்பட்ட போது காவல்துறையினர் துணையுடன் இந்து நாளேட்டினது முதன்மை செய்தி ஆசிரியர் ஜயந்த் தலைமையில் திரளான இந்து ஊழியர்கள் பத்திரிகையாளர் மன்றத்துக்குள் நுழைந்தனர்.

கூட்டம் இரத்து செய்யப்பட்ட நிலையில் இந்து ஊழியர்கள் திரண்டதை அறிந்து மேலும் விசனமடைந்த ஊடகவியலாளர்கள் இந்து முதன்மைச் செய்தியாளர் ஜயந்த் உள்ளிட்டோரை தடுத்து நிறுத்தினர்.

"இயக்கங்களினது முன் அனுமதியின்றி பாரம்பரியமிக்க மிக்க ஊடகம் செய்தி போடலாமா? தவறுதானே" என்றும் அவர்கள் ஆவேசமடைந்தனர்.

அதற்கு ஜயந்த், "அனுமதியெல்லாம் கேட்டாகிவிட்டது, முறைப்படி கூட்டத்துக்கான பணத்தையும் செலுத்துவிடோம். இந்தக் கூட்டத்தை நடத்தியே தீருவோம்" என்று பதில் கூறினார்.

தொடர்ந்து ஊடகவியலாளர்களின் எதிர்ப்பு கடுமையாகிய நிலையில் இந்து நாளேட்டின் முதன்மைச் செய்தியாளரான ஜயந்த்தும் பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அங்கு நடைபெற இருந்த கூட்டத்தையும் இரத்து செய்துவிட்டு இந்து ஊழியர்கள் புறப்பட்டனர்.
நன்றி>புதினம்

Print this item

  பார்ப்பதற்கு மட்டும் அல்ல; பார்த்ததைத் தின்பதற்கும்
Posted by: SUNDHAL - 11-24-2005, 03:56 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (1)

வித விதமான வன விலங்குகளை பார்ப்பதற்கு வசதி ஏற்படுத்தித் தரும் மிருகக் காட்சி சாலைகளில் வித்தியாசமான ஒன்று தாய்லாந்தில் உருவாகி வருகிறது.

இங்கு விலங்குகளை பார்ப்பதற்கு மட்டும் அல்ல ருசிப்பதற்கும் வசதி செய்யப்படும். சியாங் மாஸ் நைட் சபாரி மிருகக்காட்சி சாலையில் வருகிற புத்தாண்டு முதல் ஓட்டல் தொடங்கப்பட உள்ளது.

இங்கு வரும் விருந்தினர்கள் 5 ஆயிரத்து 500 ரூபாய் கொடுத்தால், நாய்கறி முதல் ஆப்பிரிக்க சிங்கக் கறி வரை ஒரு பிடி

பிடிக்கலாம்.மிருகக்காட்சி சாலையில் ஓட்டல் தொடங்குவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இது மிருகங்களை கறிக்காக கடத்துவதை அதிகரிக்கச் செய்யும் என்று விமர்சகர்கள் கூறி உள்ளனர்.

வன விலங்குகளைப் பாதுகாக்க வேண்டிய அரசாங்கமே, அவற்றை கறியாக்கி உணவாகப் படைப்பது கண்டிக்கத்தக்கது என்று அந்த நாட்டு வனவிலங்குகள் பாதுகாப்புச் சங்கம் கண்டித்தது.
Thanks:Thanthi...............

Print this item

  திருமண வாழ்வு நீடிக்க
Posted by: SUNDHAL - 11-24-2005, 03:54 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (20)

30 வயதுக்குப்பிறகு திருமணம் செய்து கொண்டால் தான் நீடித்த திருமண வாழ்வு கிடைக்கும் என்பது அமெரிக்காவில் நிலவி வரும் பொதுவான கருத்து ஆகும். ஆனால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு இதை தவறு என்று சித்தரிக்கிறது.

23 முதல் 27 வயதுக்குள் திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகள் தான் நீண்ட காலம் வெற்றிகரமான தம்பதிகளாக இருக்கிறார்கள் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

டெக்சாஸ் பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில், 20 வயதுக்கு முன்பு நடக்கும் திருமணம் பெரும்பாலும் விவாகரத்தில் முடிவதாக தெரிய வந்து உள்ளது. முதிர்ந்த வயதில் நடக்கும் திருமணமும் நீடிப்பதில்லை என்றும் ஆய்வு கூறுகிறது.

1970களில் திருமண வயது என்பது ஆண்களுக்கு 23 என்றும், பெண்களுக்கு 21 என்றும் இருந்தது. இப்போது அது 27-26 ஆக உயர்ந்து உள்ளது என்றும் ஆய்வு கூறுகிறது.

Print this item

  நீயூட்டன்
Posted by: Rasikai - 11-24-2005, 02:14 AM - Forum: தளமுகவரிகள் - Replies (4)

நீயூட்டன் லோ (Law) பற்றிய விளக்கங்கள் இங்கு பெறலாம்

http://www.globalsecurity.org/military/lib...ch22.htm#fig2_3

Print this item

  அன்புள்ள பில் கேட்சுக்கு......
Posted by: Rasikai - 11-24-2005, 02:05 AM - Forum: நகைச்சுவை - Replies (16)

அன்புள்ள பில் கேட்சுக்கு
( மெயிலில் வந்தது )

அன்புள்ள பில் கேட்சுக்கு,

நான் திருநெல்வேலி பக்கத்தில் உள்ள சிறு குக்கிராமத்தில் இருந்து எழுதுகிறேன். நான் நேற்று ஒரு கணிப்பொறி வாங்கினேன். அந்த கணிப்பொறியை உபயோகிக்கும் போது நான் கண்டறிந்த சில குறைபாபடகளை தங்களின் பார்வைக்கு கொண்டு வருகிறேன். இதுவரை யாருக்கும் தங்களை எதிர்த்து எழுத தைரியமில்லாததால் நான் எழுதுகிறேன்.

1. இணைத்தில் இணைப்பு கொடுத்த பிறகு நான் என்னுடைய ஹாட்மெயில் அக்கவுண்டை திறக்க முயற்சிக்கும் பொழது பாஸ்வோர்ட் என்ற பகுதியில் மட்டும் என்ன தட்டச்சு செய்தாலும் ****** என்றே வருகிறது. ஆனால் மற்ற இடங்களில் ஒழுங்காக தட்டச்சு ஆகிறது. நான் ஹார்டடுவேர் பொறியாளரை அழைத்து சோதனையிட்பொழுது அவர் தட்டச்சுப் பலகையில் எந்த பிரச்சனையுமில்லை என்று கூறினார்.

ஆகவே எப்போதும் என்னுடைய அக்கவுண்டை திறப்பதற்காக ****** என்ற பாஸ்வேர்டை மட்டுமே பயன்படுத்த முடிகிறது. என்னால் கூட என்னுடைய ஹாட்மெயில் பாஸ்வேர்ட் என்னவென்று தெரியாததால் தயவுசெய்து என்னுடைய அக்கவுண்டை சோதனையிட்டு என்னை இந்தத் தீராத பிரச்சனையிலிருந்து என்னை மீட்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

2. என்னால் Shut_Down பொத்தானை அழுத்தியபிறகு எதுவுமே தட்டச்சு செய்ய முடியவில்லையே ஏன்?

3. டெஸ்க்டாப்பில் Start என்ற பொத்தான் இருக்கிறது. ஆனால் Stop என்ற பொத்தான் இல்லையே ஏன்? வைக்க மறந்து விட்டீர்களா?

4. மெனுவில் Run என்ற பொத்தான் இருக்கிறது. எனக்கு மூட்டு வலியாக இருப்பதால் என்னால் ஓட முடியாது. ஆகவே அந்த பொத்தானை Sit என்று மாற்ற முடியுமானால் எனக்கு உட்கார்ந்து கொண்டே இயக்குவதற்கு வசதியாக இருக்கும்.

4. கணிப்பொறி திரையில் Re-Cycle Bin என்று ஒன்று இருக்கிறதே. அப்படியானால் Re-Scooter என்று ஒன்று எங்கேனும் இருக்கிறதா? ஆனால் நான் ஏற்கனவே ஸ்கூட்டர் வாங்கிவிட்டேனே?

5. Find என்ற ஒரு பொத்தான் இருக்கிறதே. அது சரியாக இயங்கவில்லை எனது மனைவி நேற்று வீட்டு சாவியை தெலைத்து விட்டு அதில் தேடியிருக்கிறாள் ஆனால் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லையே. விளக்கம் கூறவும். ஏதேனும் வைரஸால் பாதிக்கப்பட்டிருக்குமோ?

6. ஒவ்வொரு நாள் இரவிலும் எனது Mouseசை பூனையிடமிருந்து காப்பாற்ற நான் படும் பாடு படவேண்டியதாக இருக்கிறது.ஆகவே மவுஸோடு தாங்கள் நாயும் வழங்கினால் மவுஸை பாதுகாக்க வேண்டிய கவலை இருக்காது அல்லவா.? எப்படி யோசனை?

7. என்னுடை மகன் Microsoft Word கற்று விட்டான் இப்போது அவன் Microsoft Sentence படிக்க ஆசைப்படுகிறான்.எப்பொழுது அதனை வழங்குவீர்கள். ஆகவே இதுபோன்ற குறைகளை எல்லாம் களைந்துவிட்டால் உங்களுக்கு இந்தநாள் மட்டுமல்ல எந்த நாளும் இனிய நாள்தான்....

Print this item

  மகிந்தவின் விசேட வேண்டுகோளின் பேரில்
Posted by: spyder12uk - 11-24-2005, 01:33 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (8)

மெல்பேர்னில், அவுஸ்திரேலிய மத்திய அரசு காவல்துறை, விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் மற்றும் TCC அலுவலகங்களின் மீது நேற்று தேடுதல் மேற்கொண்டுள்ளதாக சிட்னி மோர்ணிங் கெறால்ட் பத்திரிகை தெரிவிக்கின்றது.

இந்த நடவடிக்கையில் எவரும் கைது செய்யப்படவில்லை.

இந்த நடவடிக்கை புதிதாக தெரிவான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் விசேட வேண்டுகோளின் பேரில் மேற்கொள்ளப்பட்டதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
http://sooriyan.com/index.php?option=conte...id=2542&Itemid=

Print this item

  ரொட்டி உப்புமா
Posted by: கீதா - 11-23-2005, 09:20 PM - Forum: சமையல் - Replies (4)

ரொட்டி உப்புமா

ரொட்டி 4 அல்லது 5 துண்டுகள்

கடுகு --அரை தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு 1 தேக்கரண்டி

வற்றல் மிளகாய் --3

வெங்காயம் --3
தேவையான எண்ணெய்
உப்பு தேவையதனது


முதலில் ரொட்டியைச் சிறி துண்டுகளாக பிய்த்துக் கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெயை விட்டு கடுகு - உளுத்தம் பருப்பு -வற்றல் மிளகாய் -இவற்றை வறுத்துக் கொண்டு சிறு துண்டுகளாக நறுக்கிய வெங்கயத்தைப் போட்டு உப்பு சேர்த்து சிறிது வதக்கி 2கரண்டி நீர் விடவும் - வெங்காயம் வெந்தவுடன் -ரொட்டித் துண்டுகளைப் போட்டு 2நிமிடம் கிளறி இறக்கி பரிமாறலாம் ? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Print this item

  சாய்பாபாவைப் பற்றி என்ன சொல்கிறார்கள் இந்த முன்னாள் சீடர்கள்
Posted by: narathar - 11-23-2005, 08:13 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - Replies (1)

சாய்பாபாவைப் பற்றி என்ன சொல்கிறார்கள் இந்த முன்னாள் சீடர்கள்

www.exbaba.com

http://home.hetnet.nl/~ex-baba/engels/moviesframe.html

சாய்பாபவின் மாயாஜாலம்.
http://home.hetnet.nl/~ex-baba/engels/moviesframe.html
விசாரணைகள்
http://home.hetnet.nl/~ex-baba/engels/moviesframe.html
கொலைகள்

http://home.hetnet.nl/~ex-baba/engels/moviesframe.html

The purpose of this site is to inform the public about a number of disconcerting reports that must be painful to many of Sai Baba's devotees. For some time now a lot of information in English is to be found on the web referring to his sexual dealings with male devotees of ages ranging from seven to thirty.

Although some scattered articles and persistent rumours were reported as early as the sixties, The Findings, an authorised document compiled by David and Faye Bailey, ranks first here. From its appearance on the web it started off a spate of reactions; angry or bewildered ones from devotees, but exhilarated and congratulating calls and letters from former victims and their families, who now at last also dared to speak out. The Baileys were long-standing devotees; they tell us about sexual abuse, fraud, misuse of funds and an attempt to murder Sai Baba. As a result many prominent functionaries left the movement.

The Findings, as well as everything that came before and after, you will find here in the original English version. A few valuable Dutch contributions from former devotees will be translated into English.

We hope that even those who keep shaking their heads in disbelief will keep on reading with an open mind and become curious enough to start their own research. You will find a number of persons here willing to help and give additional information.

After reading please give your own opinion in our visitor's book.

Print this item

  அவுஸ்திரேலியாவில் தமிழர்களின் வீடுகள் போலிசாரால் சோதனை
Posted by: Vaanampaadi - 11-23-2005, 05:37 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - Replies (2)

<b>Homes hit in Tamil Tiger link search</b>
http://www.heraldsun.news.com.au/common/st...55E2862,00.html

Print this item