Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 465 online users.
» 0 Member(s) | 462 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,285
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,227
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,288
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,620
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,046
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,456
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,470
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,022
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  "Back to war"
Posted by: வினித் - 01-22-2006, 11:25 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - No Replies

<b>"Back to war"

[b][TamilNet, January 22, 2006 21:06 GMT]
"Unlike Indonesia Sri Lanka has failed to usher in peace. Every opportunity for rapprochement has been squandered after the Tsunami...The Sri Lankan government and the LTTE are steeped in mutual suspicion and contempt and will not arrive at any resolution on their own. A new heavy weight mediator must join Norway's Herculean but waning peacemaking efforts, one whom both parties can respect as an honest broker," said an independent analysis appeared in the Sunday online edition of "The News" of Jang Group.
Full text of the article follows:

The news from Sri Lanka is not good. The new government and its nemesis the Liberation Tigers of Tamil Eelam (LTTE) are home alone and trashing the house again.

The 2002 ceasefire agreement is in tatters and Sri Lanka is at the brink of civil war. The head of LTTE's political wing S.P Thamilselvan told Reuters the LTTE will defy international opinion if necessary. The rebels, says Thamilselvan, "have come of age". His statements are ominous.

Since December nearly 100 people have been shot or blown up. At least 46 military and navy personnel were killed by mines, allegedly the handiwork of Tamil Tigers in the North. A prominent pro-LTTE parliamentarian Joseph Pararajasingam was assassinated in a Batticaloa church during Christmas mass. Fingers point toward army sponsored paramilitaries in the East. And five Tamil youths were executed in Trincomlee, allegedly by security forces.

This bloodshed follows years of countless reprisal killings by the Tigers, the army and paramilitaries. In 2005 Foreign Minister Lakshman Kadirgamar and several Tamil journalists also fell victim to assassinations.

The LTTE are a ruthless and determined separatist group which has attained virtual statehood. The world categorises them as a 'non-state' actor but the LTTE walk and talk like an independent government with territory, a population, a diaspora, financial resources, an army, a navy and a flag.

And it should not be surprising if since the ceasefire they have amassed significant weaponry and prepared for war. From their perspective it would probably be foolish not to. The LTTE's suspicion of all 'Southern' polity is absolute and paranoid. In their calculus letting down their guard is probably never an option.

The Tamil Tigers are giving this government, its armed forces and the international community a daily preview of their power and potential to rock the status quo; especially as they evaluate negotiations with a bevy of hardliners in Colombo.

However the clear and present danger is that events spiral out of control and no longer remain in the realm of incidents, skirmishes or muscle flexing. Sri Lanka stands at the edge of an abyss with no strong hands to pull it back.

This bodes ill for South Asia where numerous conflicts are festering and simultaneously boiling over. Decades long conflicts have killed and maimed more than 150,000 in Nepal, Sri Lanka and Kashmir. Daily the toll keeps rising. Two major disasters shattered the region in 2005 killing over 100,000 people, displacing nearly 4 million and destroying vast swathes of infrastructure worth billions of dollars.

A majority of the Tsunami victims are the war ravaged peoples of Sri Lanka's North-East upon whom Mother Nature heaped another catastrophe, followed shortly by the neglect of the government which insists that it alone represents all nineteen million inhabitants of that country.

In addition to those displaced by the Tsunami more than 100,000 Tamils who fled the civil war subsist in refugee camps in Tiger controlled territory. The world community must not turn its back on these people and allow yet another catastrophe of war to eclipse and devastate their already broken lives.

Unlike Indonesia Sri Lanka has failed to usher in peace. Every opportunity for rapprochement has been squandered after the Tsunami.

The world hoped that from the tragedy of the Tsunami Sri Lanka would break the pattern of racially partisan politics. However within days the window of opportunity slammed shut with no small thanks to former President Chandrika Kumaratunga. By pandering to her preferred coalition partner the racially xenophobic JVP, she squandered an opportunity to bridge the vast chasm created by Sri Lanka's civil war.

Although a $3 billion post tsunami aid sharing agreement with the LTTE was supported unanimously by the international donor community, Kumaratunga dragged her feet for six months before signing. At the JVP's behest the Supreme Court halted its implementation, giving further succor to racialism. This agreement has now wilted and died on the vine.

Just days following the Tsunami, accounts of aid being diverted away from predominantly Tamil and Muslim areas of the East and North began seeping out. A disproportionate amount of attention was lavished upon the majority Sinhalese South, particularly on President Rajapakse's hometown Hambantota.

Then the foreign media discovered the other traumatised regions populated largely by minority Tamils and Muslims. Muslim communities in the East endured the worst devastation in lives lost and infrastructure destroyed. The small town of Mullaitivu in the North was rendered a wasteland by the waves.

Once the journalists began reporting live from the North-East and the enormity of losses became irrefutable, the international aid community woke up to reality. However in the glaring absence of any official assistance the LTTE had rapidly mobilised efficient relief and rescue operations in areas they control.

Meanwhile back in Colombo the government continued to focus its efforts on the Southern coast while making sympathetic noises about the catastrophe elsewhere. When Kofi Annan requested a visit to the Tsunami affected areas under LTTE control the government much to his chagrin denied his request.

The world witnessed Sri Lanka's ethnic and religious heterogeneity, a richness its politicians cannot seem to appreciate. They demonstrate neither the will nor the intellect to leverage this most important asset.

The Tsunami which virtually altered the landscape of Sri Lanka could not wash away its retrograde, racially tethered and entrenched politics.

UN Special Envoy for Tsunami Relief, President Clinton expressed disappointment that politics in Sri Lanka has jeopardized the aid sharing agreement and hampered relief efforts to the Tamil and Muslim communities.

Donors committed to reconstruction express frustration at being stymied by the government's red tape, cronyism and inexplicable taxation.

Sri Lanka's auditor general also found irregularities in distribution of relief funds, stopping short of calling it corruption. However the Supreme Court again called into question its impartiality by thwarting further investigation of Rajapakse's handling of Hambantota related funds, agreeing that this would unfairly prejudice his election bid.

From the get-go Mahinda Rajapakse laid the dangerous groundwork guaranteeing a resumption of Sri Lanka's brutal civil war, and perhaps ultimately a two state outcome. The crowning glory was his pre-election alliance with the JVP rubbishing the interim peace agreement and reneging on aid sharing.

Much has been posited about LTTE's enforced boycott of the latest elections. One credible theory is that a Ranil Wickeramasinghe victory would have meant more of the same; i.e. no war no peace and no solution tolerable enough to the LTTE. However victory by the hardliner Rajapakse would shake things up decisively, forcing movement one way or another.

It's been a high stakes gamble by the LTTE, not least with the lives of millions of mostly poor people living under their writ. But the post Tsunami partisanship of the government only strengthened the ability of the rebels to position themselves as the sole legitimate protectors of the Tamil minority in the North-East.

Sri Lanka's key donors, including the United States and the UK have made clear that the only way to end this conflict is a negotiated political settlement based on a federal state for Tamils.

Now a more forceful message, one with teeth, needs to be delivered to both parties by the international community, stating unambiguously that the current state of play is unacceptable.

And unlike the past, Sri Lanka's neighbours must not salivate at this opportunity to peddle arms to the Sri Lankan state. Rather they should bilaterally or collectively encourage negotiation of a just and lasting peace, providing economic incentives if necessary.

The Sri Lankan government and the LTTE are steeped in mutual suspicion and contempt and will not arrive at any resolution on their own. A new heavy weight mediator must join Norway's Herculean but waning peacemaking efforts, one whom both parties can respect as an honest broker.

One could only wish that President Clinton with his gravitas would play an expanded UN role to end this intractable conflict, an absolute pre-requisite to the rehabilitation of millions of devastated lives.

The world must pull out all the stops to end Sri Lanka's ethnic bloodletting and avert further misery which surely lies ahead for its people if the world community does not act quickly and resolutely.</b>
http://www.tamilnet.com/art.html?catid=79&artid=16969

Print this item

  பொங்கி எழும் மக்கள் படையின் இறுதி எச்சரிக்கை
Posted by: sanjee05 - 01-22-2006, 08:14 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

திருகோணமலை மாவட்டத்தின் அரச சார்பற்ற திணைக்கள மேலாளர்களுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் அன்பான வேண்டுகோள் என்ற தலைப்பில் திருகோணமலை மாவட்ட பொங்கியெழும் மக்கள் படையினால் ஒரு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

திருக்கோணமலை நகரில் சிறீலங்கா அரசாங்கத்தாலும் அரச படைகளாலும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக தமிழ் பேசும் மக்களின் அன்றாட வாழ்விற்கும் உயிருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை தமிழ் பேசும் மக்கள் ஒவ்வொருவரும் தமக்கு ஏற்பட்டுள்ள நிலை என்பதை கருத்தில் எடுத்து எமது ஒன்று பட்ட செயலின் மூலம் எமது சமூகத்தை பாதுகாப்பதோடு பேரினவாத அரசிற்கும் படைகளுக்கும் எதிரான எமது எதிர்ப்பினை அந்தந்த வேளையில் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.

எனவே கீழ்கண்ட விடயங்களை கருத்தில் கொண்டு செயற்படுமாறு தமிழ் பேசும் மக்களை அன்பு கலந்த எச்சரிக்கையுடன் வேண்டுகின்றோம்.

சகல அரச தனியார் அலுவலகங்கள் கடைகள் யாவும் மாலை 5.00 மணிக்கு முன்னதாக மூடப்பட்டு வீடுகளுக்கு திரும்பக் கூடியதாக உங்கள் கடமைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள்.
பொய்வதந்திகள் பரப்புவோரும் தேவையற்ற விதத்தில் பதட்ட நிலையை உருவாக்குவோரும் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள். சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக ஈவிரக்கமற்ற முறையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
கதவடைப்பு போராட்டம் மற்றும் இறுக்கமான போராட்டம் ஏற்படும் போது பொருட்களை பதுக்குவதும் மற்றும் பன்மடங்கு கூட்டிவிற்பதும் எங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இனிமேல் இவ்வாறான செயலில் ஈடுபடுவோர் மன்னிக்கப்பட மாட்டார்கள்.
கசிப்பு, கள்ளச்சாராயம், போதைப் பொருள் விபச்சாரம், நீலப்படம் போன்றவற்றில் சம்பந்தப்படும் விற்பவர்கள் வாங்குபவர்கள் அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
எமது மண் எமது மக்கள் எமது தேசியம் என்ற எண்ணப்பாடின்றி சிறீலங்கா அரசிற்கு தமிழ் மக்களை காட்டிக் கொடுக்கும் உயர் அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
விருந்துபசாரங்களிலும் பொது வைபவங்களிலும் சிறீலங்கா படைத்துறை உயர் அதிகாரிகளுடன் கொஞ்சிக் குலாவி மது அருந்துவோரும் பின்னர் தமிழ் மக்களுக்கு சேவை செய்வோர் போல் காட்டிக் கொள்ளும் பலரைப்பற்றி எமக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்த வண்ணமே உள்ளது. இச் செயலில் ஈடுபடும் எந்த தமிழ் மகனும் மன்னிக்கப்பட மாட்டார்கள்.
தனியார் கல்வி நிறுவனங்கள் எக்காரணத்தாலும் காலை 6.00 மணிக்கு முன்னும் மாலை 6.00 மணிக்கு பின்னும் நடத்தப்படக்கூடாது. இதனை மீறுவோர் மீது தனியார் கல்வி நிறுவனம் மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
வீதிகளில் கூட்டமாக நிற்பதும் குடித்து கும்மாளம் போடுவதும் இரவு நேர கேளிக்கைகளில் ஈடுபடுவதும் பெண்களை நையாண்டி செய்வதும் எந்த வகையிலும் நியாயப்படுத்தப்பட முடியாத குற்றமாக உரியவர்கள கருதுகிறார்கள். எனவே இத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் உடனடியாக தங்கள் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோருகின்றோம்.
இவற்றை மீறி நடப்பவர் மீது 01.02.2006ல் இருந்து எவ்வித ஈவிரக்கமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மனவருத்தத்துடன் அறியத் தருகின்றோம்.

தமிழரின் தாகம் பண்பாடு மிக்க தமிழீழத் தாயகம்.

பொங்கியெழும் மக்கள் எழுச்சிப் படையணி

Print this item

  The Origins of Aryan People - History of Iran
Posted by: Aaruran - 01-22-2006, 06:48 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - Replies (6)

<span style='font-size:22pt;line-height:100%'><b>ஆரியப் படையெடுப்பை உண்மையில்லை என்பவர்கள் ஈரானியர்களின் சரித்திரத்தையும், பாரசீகத்தின் சரித்திர ஆராய்சியாளர்களையும் பொய்யன்களாக்குகிறார்கள்</b>.

[size=15]<b>இன்றும் ஈரானியர்கள் தாங்கள் தான் ஆரியர்கள் என்றும், இந்தியர்கள் தங்களுடையதும் திராவிடர்களினதும் கலப்பினால் வந்தவர்கள் என்றும் வாதாடுகிறார்கள்.
ஈரானிய சரித்திர ஆராய்ச்சியாளர்களையும், அவர்களின் சரித்திரத்தையும் பொய் என்று நிருபிக்கப் படவேண்டிய பொறுப்பு எல்லாம் தெரிந்த மாதிரி உளறும் குருவியின் தலையில் விழுகிறது. இந்த சவாலை ஏற்றுக் கொள்வாரா அல்லது தமிழரை வசைபாடி இந்த தலைப்பையும் திசை திருப்புவாரா என்று பார்ப்போம்.</b>

ஆரியப் படையெடுப்பை உண்மையென்று பல நூற்றாண்டுகளாக வாதாடி, அதைக் காரணம் காட்டி உயர்ந்த அந்தஸ்து தேடி இன்றும், அதன் பலன்களை அனுபவிக்கும் கூட்டம், பெரும்பான்மையான இந்தியர்கள் அவ்ர்களின் கபடவேடத்தை அறிந்ததும், அதைப் பொய் என்று நிரூபிக்க முனையும் இந்த வாதங்கள் எதுவும் நிரூபிக்கப் படவுமில்லை, எல்லோராலும் இன்னும் உண்மையானதாக ஏற்றுக் கொள்ளப் படவுமில்லை.

அமெரிக்காவில் இந்தக் ஆரியப் படையெடுப்பை மறுக்கும் கட்டுரை அப்படியே ஏற்றுக் கொள்ளப் படவில்லை. ஆனால் ஆரியப் படையெடுப்பை ஏற்றுக் கொள்பவர்களினதும், மறுப்பவ்ர்களினதும், இருபக்கக் கருத்துக்களும் பாட்ப் புத்தகத்தில் இடம் பெறவேண்டுமென்று தான் தீர்மானிக்கப் பட்டுள்ளது. இதன் கருத்து ஆரியப் படையெடுப்பு உண்மையல்ல என்று அமெரிக்க ஏற்றுக் கொண்டு விட்டது என்று இங்கு சிலர் பூச்சுத்துகிறார்கள்.</span>




<span style='color:green'>\"I am Darius, the great king, the king of kings
The king of many countries and many people
The king of this expansive land.
The son of whistashpa of Achaemenid
Persian the son of a Persian
<b>Aryan from the Aryan race</b>

[size=14]<b>From the Darius the Great's inscription in Naqshe-e-Rostam- Iran

The above inscription is the one of most valid written evidences of the history of Aryan race, and as can be seen Darius I, (Persian King) in the 5th century BC, declares himself a Persian and from the Aryan race </b></span>.

Darius the Great

<img src='http://www.livius.org/da-dd/darius/darius_s.jpg' border='0' alt='user posted image'>

Darius. Relief from the
northern stairs of the Apadana
at Persepolis (Archaeological
museum, Tehran) Darius I (Old Persian Dârayavauš): king of ancient Persia, <b>whose reign lasted from 522 to 486.</b> He seized power after killing king Gaumâta, fought a civil war (described in the Behistun inscription), and was finally able to refound the Achaemenid empire, which had been very loosely organized until then. <b>Darius fought several foreign wars, which brought him to India and Thrace.</b> When he died, the Persian empire had reached its largest extent. He was succeeded by his son Xerxes.

http://www.livius.org/da-dd/darius/darius_i_0.html


<b><span style='color:blue'>\"Indians are hybrid of early Dravidians and the white Iranian race, a fact which is evident from their dark skin. The origin of Aryan people- History of Iran\"

http://www.iranchamber.com/history/article...ple_origins.php



[size=14]ஆரியப் படையெடுப்பு பொய் என்று இன்னும் நிரூபிக்கப் படவில்லை. மாறுபட்ட கருத்துக்கள் தாண் வைக்கப் படுகின்றன. அமெரிக்காவில் அதற்கு, ஆதரவாகவும், எதிராகவும் கட்டுரைகள் எழுதப் படுகின்றன. அமெரிக்க அரசின் ஆதரவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரை என்று கதை விடும் ராஜாதிராஜாவுக்கு ஒன்று மட்டும் தெரியவில்லை. அமெரிக்காவில் அப்பளம் வட்டமாயிருப்பது நல்லதா அல்லது சதுரமாக வெட்டினால் பொரியுமா என்பது போன்ற ஆராய்ச்சிக்கும் நிதியதவி பெறலாம், உம்முடைய ஆராய்ச்சிக் கட்டுரையின் நோக்கத்தை விளக்கமாகச் சமர்ப்பித்தால் சரி. அதனால் ஆரியப் படையெடுப்பை உண்மை என்பவர்களும் கூட ஆராய்ச்சிக்கு Sponsor செய்யுமாறு விண்ணப்பிக்கலாம்.

[size=15][b]ஈரானியர்களின் சரித்திரம் பொய், ஆரியர்கள் என்பவர்கள் இந்தியர்கள், அவர்கள் எங்கிருந்தும் இந்தியாவுக்கு வரவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு குருவியின் தலையிலுள்ளது</b>.</span>

<img src='http://www.livius.org/a/1/iran/darius_seal.jpg' border='0' alt='user posted image'>

<b>Seal of Darius the Great
(British Museum, London; ©!!!)</b>

http://www.iranchamber.com/history/darius/darius.php

Print this item

  வேர் வாசிகள்
Posted by: மேகநாதன் - 01-22-2006, 05:34 PM - Forum: கவிதை/பாடல் - Replies (5)

<b><span style='color:blue'>\"தமிழ் முரசு\"(ஞாயிறு பதிப்பு)</b>{சிங்கப்பூர் தமிழ் தினசரி}
இல் இன்று படித்ததில் சட்டென்று மனதைப் பற்றிப் பிசைந்த கவிதை...
மிக இலகுவான மொழி நடை...
இலாகவமான,ஆனால் காத்திரமான சொல்லாட்சிகள் என்றதுடன்,ஈழத்தமிழர் அல்லாதவரின் கவிதை என்பதும் கவரத் தூண்டின...

நன்றிகளுடன் யாழ் கள உறவுகளோடு
பகிர்ந்து கொள்கிறேன்

<b>வேர் வாசிகள்</b>
-<b><i> பிச்சினிக்காடு இளங்கோ</i></b>

<b>வாழ்க்கையை
விரும்பியவர்கள்
மண் சுதந்திரத்தை
மறுதலித்தார்கள்.

மண் சுதந்திரம்
மானம் என்றவர்கள்
வெடித்துச் சிதறினார்கள்.

களத்தில் நில்லாமல்
காகிதத்தில் நின்றவர்கள்
புரட்சியைப் போர்த்திக்கொண்டார்கள்.

கல்லறைகளில் எழும்
கட்டடடத்தில் குடிபுக
மல்லுக் கட்டுகிறார்கள்
சனநாயகத் துணையுடன்</b></span>

Print this item

  திருகோணமலையும் ஆக்கிரமிப்பும்
Posted by: adsharan - 01-22-2006, 04:42 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

திருகோணமலையும் ஆக்கிரமிப்பும்!
தமிழ் மக்களின் வாழ்விடங்களில் இராணுவத்தை நிலை கொள்ளச் செய்தல், திருகோணமலை நகர்ப்பகுதியிலும் நகரை அண்டியிருக்கும் பகுதிகளிலும் மேலும் சிங்கள ஆக்கிரமிப்பை விஸ்தரித்தல். இவையே புத்தர் சிலையின் பின்னாலுள்ள கபட அரசியலாகும் சமீபத்தில் திருகோணமலை சென்றிருந்தபோது அங்கு சில விடயங்களை அவதானிக்கவும் நிலைமைகள் குறித்து சிலருடன் உரையாடவும் முடிந்தது. அவற்றை அடிப்படையாகக் கொண்டு உங்களுடன் சில விடயங்களை பகிர்ந்துகொள்ள விழைகின்றேன். சில மாதங்களுக்கு முன்னர் திருகோணமலை நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மணிக்கூண்டுக் கோபுரத்தின் அருகில் திடீரென புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை திருகோணமலையின் இயல்பு நிலை சீராக இல்லை. தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த பதற்றமும் ஒருவகையான அச்சமுமே காணப்படுகிறது எனலாம். புத்தர் சிலை விவகாரத்திற்கு, தமிழ் மக்கள் தமது சாத்வீகரீதியான எதிர்ப்பைத் தெரிவித்தபோதும் சிங்கள ஆளும்வர்க்கம் அது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. மாறாக சிறிலங்கா அரசு, புத்தர் சிலையை அடிப்படையாகக் கொண்டு திருகோணமலை நகரையும் நகரை அண்டிய பகுதிகளையும் இராணுவ நிர்வாகத்திற்கு உட்படுத்தியது. இந்த இராணுவத்தினரை அகற்றும்படியும், இராணுவத்தினர் தமது இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாகவும் அச்சுறுத்தலாகவும் இருக்கின்றனர் எனக்கூறி தமிழ் மக்கள் பல தடவை தமது சாத்வீக ரீதியான எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றனர் என்பதும் இந்த இடத்தில் நோக்கற்பாலது. உண்மையில் இன்று நகர்ப்பகுதிவாழ் தமிழ் மக்கள் ஒரு இராணுவ மேலாதிக்கத்திற்கு ஆளாகியிருக்கின்றனர். அதன் உச்சக் கட்டமாகவே ஐந்து அப்பாவி மாணவர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இதன் பின்னர் நிலைமை இன்னும் மோசமடைந்திருக்கிறது.

திருகோணமலையைப் பொறுத்தவரையில் திருகோணமலையின் மீதான சிங்கள ஆக்கிரமிப்பிற்கு நெடிய வரலாறுண்டு. கடந்த அரை நூற்றாண்டுகளாக திருகோணமலை தமிழ் மக்களின் பாரம்பரிய இருப்பை பலவீனப்படுத்தும் வகையில் சிங்கள ஆளும்வர்க்கம் திட்மிட்டவகையில் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டு வந்திருக்கிறது. இத்தகைய ஆக்கிரமிப்புக்களை சிங்கள குடியேற்றம் என்ற நிலையில் நாம் ஆராய முற்படுவோமாயின் நமது கணிப்பு பிழைத்துப் போய்விடும். இது குறித்து மாகாணசபை நிர்வாக அதிகாரி ஒருவருடன் உரையாடும்போது அவரது அவதானம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகத் தெரிந்தது. அவர் கூறிய கருத்துக்களை அப்படியே பதிவு செய்கிறேன். நாம் குடியேற்றம் என்னும் நோக்கில் பார்த்தால் சேருவாவில், மொறவேவா போன்ற சில குடியேற்றங்களை மட்டுமே சுட்டிக்காட்ட முடியும். அப்படியானால் மற்றைய சிங்களவர்கள் எவ்வாறு குடியமர்த்தப்பட்டனர்? அவர்களது குடியமர்வு வர்த்தமானியில் அறிக்கையிடப்படாத குடியமர்வுகளாகும். இது எவ்வாறு சாத்தியப்பட்டது. எனவே திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்ட சிங்கள ஆக்கிரமிப்பை நாம் திட்டமிட்ட சிங்கள ஊடுருவல் என்ற கருத்துருவாக்கத்தின் ஊடாகவே அணுக வேண்டியிருக்கிறது. இத்தகைய ஊடுருவலின் பின்னால் சிங்கள இராணுவம், சிங்கள தனியார் துறையினர், சிங்கள பௌத்த மதபீடம், ஆகிய மூன்று பிரிவினரினதும் கூட்டுச் சேர்க்கையான பங்களிப்பு இருக்கிறது. முதலில் ஒரு சோதனைச்சாவடியை உருவாக்குதல் பின்னர் அதில் உள்ளவர்களின் உறவினர்களை குடியமர்த்தல் பின்னர் அதிலுள்ள ஒருவரை ஊர்க்காவல் படையில் சேர்த்தல். இவ்வாறு படிப்படியாக ஆட்களின் எண்ணிக்கையை அதிகரித்தல். சாதாரணமாகப் பார்க்கும்ேபாது இதனைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கும். ஆனால் இவ்வாறு குடியமர்ந்தவர்கள்தான் இன்று நகர்ப்பகுதியை ஆக்கிரமித்திருக்கின்றனர். இதனை அரசு கண்டும்காணாமல் விடுவதன் மூலம் அரசு இவ் ஊடுருவலுக்கு உதவிவருகிறது. குடியேற்றம் என்பது குறிப்பிட்ட தொகையான குடும்பங்களை ஒரு குறிப்பிட்ட எல்லைப் பரப்பினுள் ஒரேயடியாக குடியமர்த்துவதாகும் என்றார் அந்த அதிகாரி. ஒரு தகவலுக்காகவே இதனைப் பதிவு செய்தேன். இது விரிந்த ஆய்வுக்கும் கணிப்புக்கும் உரியதாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது தொடர்பான ஆய்வுகளோ தகவல்களோ போதியளவு இல்லை. இராணுவமும் சிங்கள பௌத்த மதபீடத்தினரும் திருகோணமலையை முழுமையாக சிங்கள மேலாதிக்கத்தின் பிடியில் தக்கவைத்து வருவதன் நீட்சியாகவே இன்றைய நிலைமைகளை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. உண்மையில் திருகோணமலையில் இரவோடு இரவாக புத்தர் சிலையை வைத்ததன் பின்னால் இருந்த நிழல் நோக்கம் மதத்தை அடித்தளமாகக் கொண்ட இராணுவ மேலாதிக்கமாகும். இராணுவத்தினரை திருகோணமலையில் தமிழ் மக்கள் செறிந்துவாழும் பகுதிகளில் நிலைகொள்ளச் செய்வதற்கான ஒரு நிழல் கருவியே புத்தர் சிலை. இங்கு மிகவும் திட்டமிட்டவகையில் சிங்கள ஆளும்வர்க்கம் தொழிற்பட்டிருக்கிறது. முதலில் புத்தர்சிலை பின்னர் சிலையை பாதுகாப்பதற்காக சிங்கள பௌத்த இராணுவம் நிலை கொள்ளல் என்றவகையிலேயே இத்தொழிற்பாடு அரங்கேறியிருக்கிறது. இங்கு சிங்கள இராணுவத்தினதும் சிங்கள பௌத்த மதபீடத்தினரதும் அவதானம் என்னவென்றால் மதத்தின் மீதான சிங்கள மக்களின் இயல்பான அபிமானத்தையும் விசுவாசத்தையும் அரசியலாக்குவதன் ஊடாக இராணுவக் குவிப்பைச் செய்வதாகும். புத்தர்சிலை விவகாரத்திற்கு முன்னரே அரசும் இனவாத ஊடகங்களும் விடுதலைப்புலிகள் திருகோணமலையை சுற்றிவளைத்திருக்கின்றனர், விடுதலைப்புலிகள் சம்பூர்பகுதியில் விமான ஓடுதளத்தை உருவாக்கிவருகின்றனர் போன்ற பிரசாரங்களை திட்டமிட்டவகையில் முடுக்கிவிட்டிருந்தன என்பதையும் நாம் இந்த இடத்தில் நினைவு கொள்ளலாம். ஆகவே திருகோணமலையில் இராணுவ நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கான திட்டத்தை முன்கூட்டியே வகுத்துக் கொண்ட சிங்களப் படைத்துறை இறுதியில் மதத்தை துணைக்கழைத்தது. படைத்துறையின் இலக்கு இவ்வாறிருக்க திருகோணமலையில் இருக்கும் சிங்கள பௌத்த மதபீடமும் அதனுடன் கைகோர்த்து இயங்கும் இனவாத அமைப்புக்களும் புத்தர்சிலையை அடிப்படையாகக் கொண்டு நகர்ப்பகுதியில் அத்துமீறி குடியமர்ந்திருக்கும் சிங்களவர்களின் சனச்செறிவை மேலும் விஸ்தரிக்கும் திட்டத்தை வகுத்தனர். புத்தர் சிலை நிறுவப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் ஜே.வி.பி. இரவோடு இரவாக திருமலை இந்துக் கல்லூரிக்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்தில் சிங்களவர்களை குடியமர்த்த முற்பட்டதும் பின்னர் தமிழ் மக்களின் எதிர்ப்பினால் அம்முயற்சி தோல்வியில் முடிந்ததையும் நாம் புத்தர் சிலை விவகாரத்துடன் இணைத்துப் பார்க்கலாம். ஏற்கனவே இராணுவம் தமிழ் மக்களின் பாரம்பரிய வழிபாட்டுத்தலங்களில் ஒன்றான கோணேசர் ஆலயத்தை பௌத்தமயப்படுத்திவருகிறது. கோட்டைவாயிலுக்கு அருகிலேயே மிகப் பிரமாண்டமானதொரு விகாரை அமைக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் நகரின் மையப்பகுதியான மணிக்கூண்டுக் கோபுரப்பகுயில் புத்தர் சிலை நிறுவுவதற்கான எந்தவிதமான வழிபாட்டியல் சார்ந்த காரணமும் கிடையாது. தமிழ் மக்களின் வாழ்விடங்களில் இராணுவத்தை நிலை கொள்ளச் செய்தல், திருகோணமைல நகர்ப்பகுதியிலும் நகரை அண்டியிருக்கும் பகுதிகளிலும் மேலும் சிங்கள ஆக்கிரமிப்பை விஸ்தரித்தல். இவையே புத்தர் சிலையின் பின்னாலுள்ள கபட அரசியலாகும்.

தமிழர் தாயகக் கோட்பாட்டை புவியியல் ரீதியாக பலவீனப்படுத்தும் வகையிலேயே சிங்கள ஆளும்வர்க்கம் இவ்வாறான திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களையும் ஊடுருவல்களையும் மேற்கொண்டு வந்திருக்கிறது. இதனடிப்படையிலேயே வடக்கு,கிழக்கு இணைந்த தமிழர்களின் அரசியலைச் சிதைக்கும் வகையில் கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்டவகையில் குடியேற்றங்களை நிறுவி சிங்கள மக்களின் சனச் செறிவை அதிகரித்தது. 1949ஆம் ஆண்டு பட்டிப்பளை என்னும் தமிழ் மக்களின் பாரம்பரிய இடம் கல்லோயா எனப் பெயர் மாற்றப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை சிங்கள ஆக்கிரமிப்பு தொடர்கிறது. கிழக்கு மாகாணத்தில் சிங்கள ஆக்கிரமிப்பின் மையப்பகுதியாக திருகோணமலையே இருந்துவருகிறது. உண்மையில் தமிழர் தாயகக் கோட்பாட்டின் அரசியலை புவியியல்ரீதியாக பலவீனப்படுத்துவதற்கு சிங்கள ஆளும்வர்க்கம் திருகோணமலையையே தமது தெரிவாக வைத்திருக்கிறது என்பதே எனது துணிபு. இன்றுவரையான நிலைமைகள் அதைத்தான் நமக்கு தெளிவுபடுத்துகின்றன. 1048 சதுரமைல் பரப்பைக் கொண்ட திருகோணமலை மாவட்டத்தில் 574 சதுரமைல் நிலப்பகுதியை உள்ளடக்கியவாறு சேருவெல தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக 1977இல் தமிழ் மக்களின் பாரம்பரிய இடத்திலிருந்து ஒரு சிங்களவர் பாராளுமன்றம் செல்லக் கூடிய வாய்ப்பு உருவாகியது. தவிர திருகோணமலையின் எல்லைப்பகுதியிலுள்ள சில இடங்களை சிங்கள நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதிகளுடன் இணைப்பதனூடாகவும் திருகோணமலையின் தமிழர் அரசியலை பலவீனப்படுத்தவும் சிங்கள ஆளும் வர்க்கம் முயன்று வருகிறது. திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளை அனுராதபுர மாவட்டத்துடன் இணைத்து அனுராதபுர அரச அதிபர் ஊடாக காணிக்கச்சேரிகளை நடத்துவதன் மூலம் சிங்கள மக்களுக்கு சட்டரீதியாக காணிகளையும் தொழில் வாய்ப்புக்களையும் வழங்கியது. அதேவேளை சில அரச ஸ்தாபனங்களையும் பிற சிங்கள நிர்வாகப் பிரிவிற்குள் அடக்குவதன் மூலமும் திருகோணமலை தமிழ் மக்கள் மீது ஆக்கிரமிப்பைத் தொடர்கிறது. சமீபத்தில் திருகோணமலை மின்சார சபை நிர்வாகத்தை அனுராதபுரத்திற்கு மாற்றியதும் அவ்வாறானதொரு ஆக்கிரமிப்பு அரசியல் நோக்கத்தினைக் கொண்ட முயற்சியே. இன்று திருகோணமலையிலுள்ள லைட்போஸ்ட் ஒன்றிற்கு லைட் மாற்றுவதானாலும் தமிழ் மக்கள் அனுராதபுரத்திற்கு செல்ல வேண்டியிருக்கிறது. இன்று திருகோணமலைவாழ் தமிழ் மக்கள் குறிப்பாக நகரையும் நகரையண்டிய பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்கள் ஒரு சிங்கள சிறைக்கூடத்தினுள் வாழ்கின்றனர் என ஒருவர் கூறினால் அது மிகையானதொரு கணிப்பல்ல. இன்று திருமலை நகர்ப்பகுதியில் வாழும் தமிழ் மக்கள் அத்துமீறிக் குடியமர்ந்த சிங்களவர்களால் சூழப்பட்டிருக்கின்றனர். நாளை ஒரு யுத்தம் வெடிக்குமாக இருந்தால் இவர்களது இருப்பு மிகுந்த கேள்விக்குள்ளாகும். இவர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்தும் தமிழ்த் தேசிய சக்திகள் சிந்திக்க வேண்டியிருக்கிறது. இந்த இடத்தில்தான் ஒரு ஒடுக்கும் தேசத்தினது ஆக்கிரமிப்பிற்கு துணைபோகும் மக்களுக்கும், ஒடுக்கும் இராணுவத்திற்குமான தொடர்பு பற்றிக் கூறவேண்டியிருக்கிறது. இன்று திருகோணமலையில் திட்டமிட்ட குடியேற்றம், திட்டமிட்ட சிங்கள ஊடுருவல் என்பவற்றின் மூலம் தமிழ் மக்களைச் சூழ்ந்து ஆக்கிரமித்திருக்கும் சிங்கள மக்களும் ஒரு வகையில் இராணுவத் தொழிற்பாட்டை ஆற்றுபவர்கள்தான். மாக்கியவல்லியின் வார்த்தையில் சொல்வதானால் இவர்கள்தான் நிரந்தர இராணுவத்தினர். (Strengthen military) இவ்வாறு ஒடுக்கும் அரசானது ஒடுக்கப்படும் தேசத்தின் நிலப்பரப்பினுள் தனது விசுவாசத்திற்குரிய மக்களை ஆக்கிரமிக்க வழிசமைப்பதன் ஊடாக இரண்டு தொழிபாடுகளை நிறைவு செய்துகொள்ள முயல்கிறது. ஒன்று ஒடுக்கும் தேசத்தின் அரசியலை பலவீனப்படுத்தல். மற்றையது ஒடுக்கும் இராணுவத்திற்கான சமூக பலத்தை உருவாக்குதல். ஒடுக்கும் இராணுவத்திற்கு விசுவாசமான மக்களை மாக்கியவல்லி நிரந்தர இராணுவத்தினர் எனக் கூறுவது இந்த அடிப்படையில்தான்.

ஒடுக்குமுறைக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்துவதற்கு ஒடுக்கும் அரசுகள் வரலாறு நெடுகிலும் நில ஆக்கிரமிப்பை ஒரு முக்கிய கருவியாகவே பயன்படுத்தி வந்திருக்கின்றன. சிங்கள ஆளும்வர்க்கமும் தமிழர் விடுதலைப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் முயற்சிகளில் நில ஆக்கிரமிப்பையும் ஒரு முக்கிய கருவியாகக் கைக்கொண்டு வருகிறது. சிறிலங்கா அரசினது காணிக் கொள்கையும் நில ஆக்கரமிப்பை மேற்கொள்ளக்கூடிய வகையில் அமைந்திருப்பதாகவே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இன்னொருவகையில் பார்த்தால் சிறிலங்கா அரசு இன்று கைக்கொண்டுவரும் காணிக்கொள்கை பிரித்தானிய காலனித்துவ ஆக்கிரமிப்பு காலத்தில் பிரித்தானிய நிர்வாகத்தினரால் வகுக்கப்பட்ட கொள்கையாகும். 1815இல் கண்டி நிர்வாகத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த பிரித்தானியர் 1840இல் மக்களின் குடியிருப்புக்குள்ளாகாத காணிகள் அனைத்தையும் முடிக்குரிய காணிகளாக பிரகடனப்படுத்தி, அதில் அத்துமீறி குடியமரும் சட்டத்தையும் நடைமுறைப்படுத்தினர். இச் சட்டநடைமுறையின் முக்கிய நோக்கம் அப்போது கண்டி, வெல்லச மாகாணங்களில் காணப்பட்ட விடுதலைப் போராளிகளின் கிராமியப் பொருளாதாரத்தை சிதைப்பதும், அவர்களின் புகலிடமாக விளங்கிய மத்திய மலைநாட்டினுள் ஊடுருவுவதுமாகும். இன்றுவரை சிறிலங்கா அரசினது காணிக்கொள்கையும் காலனித்துவக் காணிக் கொள்கையினது நீட்சியாகவே தொடர்கிறது. 1985ஆம் ஆண்டு அப்போது சிறிலங்காவின் சனாதிபதியாக இருந்த ஜீலியட் ரிச்சட் ஜெயவர்த்தன திட்டமிட்ட குடியேற்றங்கள் தொடர்பாக பின்வருமாறு கூறியிருக்கிறார். நாம் எல்லைகளில் குடியேறா விடின் எல்லைகள் எம்மை நோக்கி நகரும் (If we do not occupy the border, the border will come to us) இன்றுவரை தமிழ் மக்களின் எல்லைகளை சிதைப்பதையே திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களினதும், ஊடுருவல்களினதும் நோக்கங்களாக இருந்துவருகிறது. இத் தொழிற்பாட்டில் அரசயந்திரங்கள் அனைத்தும் ஒரு நேர் கோட்டில் சந்தித்துக் கொள்கின்றன. ஒடுக்கும் அரசு, அதனைப் பாதுகாக்கும் ஒடுக்கும் இராணுவம், அதற்கான

சித்தாந்த பலத்தை வழங்கிவரும் சிங்கள பௌத்த மதபீடம் ஆகிய மூன்றும் தமிழ் மக்களின் பாரம்பரிய நில ஆக்கிரமிப்பின் பின்னணியில் கைகோர்த்து நிற்கின்றன. இன்று திருகோணமலையில் மேற்படி மூன்று தரப்பினரது இணைவையும் நாம் தெளிவாகவே பார்க்கக் கூடியதாக இருக்கிறது. தமிழர் தாயகப் பகுதிகளில் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு என்ற தலைப்பானது மிகவும் விரிவானதொரு ஆய்வுக்குரிய விடயமாகும். எனினும் திருகோணமலையில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம், சிங்கள ஊடுருவல்கள், அவற்றின் தாக்கம் தொடர்பாக ஒரு சிறு அவதானத்தையே இங்கு பதிவு செய்ய முயன்றிருக்கிறேன். இது குறித்து விரிவானதொரு பார்வை நமக்குத் தேவையாகும்.
http://www.thinakural.com/New%20web%20site...2/Article-6.htm

Print this item

  இதை தினமும் கடைபிடியுங்கள்
Posted by: SUNDHAL - 01-22-2006, 03:11 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (15)

*தினமும் காலையில் அருகில் உள்ள பார்க்குக்குச் சென்று வாக்கிங் மேற்கொள்ளுங்கள். பூங்கா இல்லாவிட்டாலும் பாதுகாப்பான இதரப் பகுதிகளை தேர்ந்தெடுத்து நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள். இந்த பயிற்சி உங்கள் வாழ்க்கையில் பல்வேறு நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.

* உணவுக்கட்டுப்பாட்டை தவறாமல் மேற்கொள்ளுங்கள். கொரிக்கும் உணவுகள், மில்க்ஷேக், வேகவைத்த உருளைக்கிழங்கு, காரம் நிறைந்த மசாலாக்கள் போன்றவைகளை, சுவைக்கு அடிமையாகி தினமும் சுவைக்காதீர்கள்.

* எப்போது எந்த செயலை செய்வதற்கு முன்னாலும் அந்த செயல் தனிப்பட்ட முறையில் உங்களுக்கோ, உங்கள் கவுரவத்திற்கோ எந்தவிதத்திலும் இழுக்கை ஏற்படுத்துமா? என்று ஆராயுங்கள். நீங்கள் இன்றல்லது நாளை வெட்கப்படும் அளவுக்குரிய எந்த செயலையும் செய்துவிடவேண்டாம்.

* நீங்கள் செலவிடும் ஒவ்வொரும் ரூபாயும் மதிப்புமிக்கது என்று உணருங்கள். அதே நேரத்தில் தேவையான செலவுகளை செய்வதற்கும் தயங்காதீர்கள். சிலர் நல்ல உழைப்பாளியாக இருப்பார்கள். ஆனால் அந்தப் பணத்தை அவர்களுக்கு சேமிக்கத்தெரியாது. சேமிப்பும் அவசியம் என்பதை உணருங்கள். கிரடிட் கார்டு இப்போது எல்லோருடைய கைகளிலும் இருக்கிறது. அதனைக் கண்டபடி செலவிட பயன்படுத்திவிடக்கூடாது. அது போல் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கடன் வாங்கிவிடவேண்டும் என்றும் நினைக்காதீர்கள். கடன் கிடைக்கிறது என்பதற்காக தேவையற்ற ஒரு பொருளை வாங்கிவிட வேண்டும் என்று ஒரு போதும் திட்டமிடக்கூடாது.

* குழந்தைகளிடம் கோபத்தைக்காட்ட வேண்டாம். அவர் களிடம் முடிந்த அளவுக்கு பொறுமையை கடை பிடியுங்கள்.

* கணவரோடு உங்களுக்கு நிறைய கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், அவரை குற்றவாளி போல் மற்றவர்கள் முன்னால் சித்தரிக்க முயற்சிக்கவேண்டாம். முடிந்த அளவு அவரோடு பொருந்தி வாழ முயற்சி செய்யுங்கள்.

* மாதத்திற்கு ஒரு புதிய புத்தகம் படிப்பதை வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். அதன் மூலம் அறிவை புதுப்பித்துக்கொள்ளமுடியும்.

* விளையாட்டில் ஆர்வம் காட்டுங்கள். அதன் மூலம் உடல் ஆரோக்கியம், நட்பு வளரும்.

* தினசரி வாழ்க்கையில் பெரும் பகுதி நேரத்தை புன்னகையுடன் செலவிடுங்கள். புன்னகை வாழ்க்கைக்கு மிகத்தேவையானது. அது உங்களைப்பற்றி மற்றவர்கள் மனதில் ஈர்ப்பை உருவாக்கிக்கொண்டே இருக்கும்.

* அடுத்தவர்களைப் பற்றி முதுகுக்குப்பின்னால் பேசும் பழக்கத்தை அடியோடு கைவிட்டுவிடுங்கள். அக்கம் பக்கத்தினரைப் பற்றி கிசுகிசு பரப்பும் செயலையும் அடியோடு விட்டொழியுங்கள்.

* எப்போதும் மனதை சந்தோஷ மாக வைத்திருங்கள். உங்களையே நீங்கள் நம்புங்கள். வெற்றிகரமாக ஒரு செயலை செய்து முடிக்கும் போது, குடும்பத்தினரோ, நண்பர்களோ உங்களை பாராட்டாவிட்டாலும் உங்களையே நீங்கள் பாராட்டிவிட்டு அடுத்த செயலில் தீவிரமாக இறங்கிவிடுங்கள்.

Thanks:Thanthi...........

Print this item

  அஜித்தின் பரமசிவன்
Posted by: Vasampu - 01-22-2006, 03:03 PM - Forum: சினிமா - Replies (15)

<b>அஜித்தின் பரமசிவன்</b>

சந்திரமுகிக்குப் பின் வாசு இயக்கும் படம் அது போல் அஜித்திற்கு மறுவாழ்வு அழிக்கும் படம் என்று பலராலும் பரபரப்பாக எதிர் பார்க்கப்பட்ட படம். அஜித் பிரகாஷ்ராஜ் போன்றோர் தம் பங்கினை சிறப்பாகத்தான் செய்துள்ளனர். மற்றொரு புறத்தில் ஜெயராம் விவேக் கூட்டணியமைத்து காமடி பண்ணியுள்ளனர். லைலாவும் தம் பங்கிற்கு வந்து போயுள்ளார். ஏனையவர்களும் தம் பங்கை சிறப்பாக செய்ய முனைந்துள்ளனர். ஆனாலும் படமோ பாடல்களோ மனதில் ஒட்ட மறுக்கின்றன. முதல்க் காரணம் அஜித்தின் தோற்.றம் ( அஜித் ரகுவரனாகிவிட்டிருக்கின்றார் ) படம் பார்த்துவிட்டு வெளியில் வந்த பலர் அடித்த காமெண்ட் அஜித்திற்கு ஏதும் வருத்தமோ?? அடுத்தது விஜயகாந் பாணி படமோன்றை அஜித்தை வைத்து வாசு இயக்க முற்பட்டுள்ளார். அதுபோல் ஆரம்பத்தில் அஜித்தின் தோற்றம் அப்பட்டமான அந்நியனின் பாதிப்பு. படத்தைப் பார்த்துவிட்டு வெளியில் வரும்போது இந்தப் <b>பரமசிவனும் </b>அஜித்தைக் கைவிட்டுவிட்டார் என்ற கவலைதான் வருகின்றது.. அஜித்தைப் பொறுத்தவரை திறைமையுள்ள நடிகர் தன் தோற்றத்திலும் சற்றுக் கவனம் செலுத்தினால் மீண்டும் அவரால் ஜெயிக்க முடியும்.

Print this item

  காலை பூந்தென்றல் ௭ன் மீது வீச.......
Posted by: sWEEtmICHe - 01-22-2006, 01:48 PM - Forum: கவிதை/பாடல் - Replies (5)

<img src='http://www.isaithenral.com/gallery/data/tamilfotos/222/12.jpg' border='0' alt='user posted image'>

<span style='font-size:29pt;line-height:100%'><b> காலை பூந்தென்றல் ௭ன் மீது வீச... .....</b>
செல்லமே விடிய விடிய கண்விழித்து
உன்
காதலை
சிரித்தபடியே நினைத்து பார்க்கிறேன்
நானும் நல்லா யோசித்து விட்டேன் - சாரி
எனச்சொல்லிச் சென்ற நாளை
உனக்கு பிடித்த என் - புன்னகையுடன்
நினைத்துபார்க்கிறேன் எப்போதேனும்,
காலை பூந்தென்றல் எ ௭ன் மீது வீச.....
காதல் தரும் இன்பதையும்
ஆசை நினையுகளையும் ......
<b>விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)</b> </span>

Print this item

  முன்னை நாள் அரச உத்தியோகத்தர் துன்னாலையில் சுட்டுக்கொலை.
Posted by: நர்மதா - 01-22-2006, 01:09 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

இராணுவ புலனாய்வாளர்களால் முன்னை நாள் அரச உத்தியோகத்தர் துன்னாலையில் சுட்டுக்கொலை.

முன்னைநாள் அரச மாவட்ட செயலகத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் கோரமான முறையில் இன்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். முன்னை நாள் அரச செயலகத்தின் தொழில்நுட்ப உத்தியோகஸ்தரான இளையதம்பி இராமகிருஸ்ணன் என்பவரே இவ்வாறு அரச புலனாய்வுப் பிரிவினரால் கோரத்தனமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராகச் செயற்பட்டு வந்த இவர் தினமும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்று வருவதால் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் பின்தொடரப்பட்டு வந்துள்ளார். காட்லிக் கல்லூரியின் முன்னைநான் மாணவர் தலைவனும் பிரித்தானியாவின் பிரபல சர்வதேச தொலைபேசி அட்டை நிறுவனமொன்றின் பிரதம பொறியிலாளருமாகக் கடமையாற்றும் கடம்பன் (மொறட்டுவ பல்கலைக்களகத்தில் 1993 ம் ஆண்டு பொறியில் பீடமாணவனாக இணைந்தவர் 1992 ஆண்டு காட்லி உயர்தர மாணவன்) மற்றும் யாழ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மருத்துவர் கேசவன் (காட்லிக் கல்லூரியின் 1991 ஆண்டு உயர்தர மாணவர் பிரிவு) ஆகியோரின் தகப்பனார் என்பதும் குறிப்பிடத்தக்கது

நிதர்சனம்

Print this item

  ஜெயலலிதாவுடன் கை கோர்க்கும் வைகோ: இலங்கை பிரச்சனையில் இந்திய
Posted by: yarlmohan - 01-22-2006, 12:13 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (99)

<b>ஜெயலலிதாவுடன் கை கோர்க்கும் வைகோ: இலங்கை பிரச்சனையில் இந்தியா "பல்டி" அடிக்குமா?</b>

<img src='http://www.yarl.com/other/uploads/vaiko1.jpg' border='0' alt='user posted image'>

தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. கட்சிகளின் புதிய வியூகங்கள் தொடர்பான செய்திகள் எல்லாம் "அரசியலில் எதிரியும் இல்லை..நண்பனும் இல்லை" என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டு இருக்கின்றன.

தமிழகத் தேர்தல் களம் இரண்டு அணிகளைக் கொண்டது.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான 7 கட்சி கூட்டணி. இதில் வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய ஆட்சிப் பொறுப்பில் உள்ள காங்கிரஸ் கட்சி, தமிழக கொம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை பிரதான கட்சிகள்.

இவர்களுக்கு எதிர் அணியான தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். பிரதான கட்சிகளின் கூட்டணி இல்லாமல் இதுவரை தனித்தே நிற்கிறது.

இவர்களைத் தவிர தொல். திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள், விஜயகாந்தின் கட்சி, கார்த்திக்கைத் தலைவராகக் கொண்டுள்ள பார்வார்டு பிளாக் என சிறு சிறு கட்சிகளும் களத்தில் உள்ளன.

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர், பல தேர்தல்களுக்குப் பின்னர் ஈழத் தமிழர் பிரச்சனையானது தமிழகத் தேர்தல் களத்தில் இம்முறை நேரடியாகவும் மறைமுகமாகவும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஈழத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வன்முறைகளைக் கண்டு தமிழகம் கொதித்து எழுந்தது.

தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களான வைகோ, ராமதாஸ் கண்டனக் கூட்டங்களை நடத்தினர். இதைத் தொடர்ந்து கூட்டணியின் தலைவரான கலைஞர் கருணாநிதியும் தமது கூட்டணிக் கட்சியினரது கருத்தே தமது கருத்து என்று கூறினார்.

ஒரு திருப்பமாக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சென்னையில் சந்திக்க மறுத்தார்.

சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் சந்திரிகாவுக்கும் ஜெயலலிதாவுக்குமான உறவு உலகம் அறிந்தது. இருவரும் இன்னொரு உடன்பிறவா சகோதரிகளாகவே அடையாளம் காணப்பட்டு வந்தனர்.

தமிழகத் தேர்தல் களத்தை மனதில் கொண்டு மகிந்த ராஜபக்சவை ஜெயலலிதா தவிர்த்தாரா, சந்திரிகாவின் வேண்டுகோளை ஏற்று மகிந்த ராஜபக்சவின் மூக்கை உடைத்தாரா என்பது ஜெயலலிதா ஜெயராமுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

சரி இப்போது..தேர்தல் களத்துக்கு வருவோம்.

இந்திய மத்திய அரசில் தி.மு.க, ம.தி.மு.க, பா.ம.க. ஆகிய கட்சிகள் ஒன்றாக இடம்பெற்றிருப்பதன் மூலமே இலங்கை இனப்பிரச்சனையில் இந்திய அரசின் வழமையான வல்லாதிக்கப் போக்கு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது என்று ஒப்புக்கொள்ளக் கூடிய உண்மை.

சிறிலங்காவுக்கு இந்திய அரசாங்கம் உதவக் கூடும் என்று ஒவ்வொரு முறையும் செய்திகள் வெளியான போதெல்லாம் புதுடில்லிக்கு ஓடோடிச் சென்ற வைகோ, ஒவ்வொரு நிகழ்வையும் ஒவ்வொரு அங்குலத்தையுமே தடுத்தார் என்றால் மிகையில்லை. மகிந்த ராஜபக்சவின் அண்மைய இந்திய வருகையின் போது வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூட, இந்தியா-சிறிலங்கா இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தம் கைவிடப்பட்டமைக்கு வைகோவின் பங்கு பாரியதானது.

இந்திய அரசாங்கத்தில் வைகோவின் கட்சி கூட்டணிக் கட்சியாக நீடிக்கும் வரையில் இலங்கை இனப்பிரச்சனையில் இந்தியாவின் கால்களும் கைகளும் கட்டப்பட்டுத்தான் இருக்கும். அதற்கு காரணம் வைகோவின் செயற்பாடுகளை அந்தக் கூட்டணியில் உள்ள தமிழகக் கட்சிகள் எதுவும் எதிர்க்கப்போவதில்லை. இதனால் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்- இந்திய அரசின் பிரதான கூட்டணிக் கட்சிகளின் உணர்வுகளை மதிக்க வேண்டிய கடமையும் நெருக்கடியும் இந்திய அரசின் இறுதிநாள் வரை நீடிக்கும்.

ஆனால் இதுநாள் வரை ஈழத் தமிழர்களுக்கு எதிரான கொள்கையோடுதான் தமிழக முதல்வர் ஜெயலலிதா செயற்பட்டு வருகிறார். உச்சகட்டமாக வைகோ, நெடுமாறன் உள்ளிட்டோரை விடுதலைப் புலிகளை ஆதரித்தமைக்காக பொடாச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தார்.

தமிழகத்தில் ஈழ விடுதலைப் புலிகளின் கொட்டத்தை ஒடுக்கிய ஒரே முதல்வர் நானே என்றும் கருணாநிதிதான் விடுதலைப் புலிகளை ஆதரித்தவர் என்றும் யார் சொல்வார்கள் என்று கேட்டால் அது ஜெயலலிதாதான் என்று எல்லோரும் சொல்லிவிடலாம்.

எதற்காக இந்தப் பீடிகை என்று கேட்கிறீர்களா?

ஆம். நீங்கள் ஊகிப்பதும் நம்ப முடியாத ஒன்றும் இப்போது அரங்கேறப் போவதாக தமிழகத்திலிருந்து உறுதிப்படுத்தப்படுகிற தகவல்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.

ஆம்.

ஜெயலலிதாவின் அணியில் வைகோ இணைகிறார் என்பதுதான் அது.

பொடா சட்டத்தின் கீழ் தம்மை சிறையிலடைத்த அதே ஜெயலலிதாவுடன் வைகோ இணையக் கூடுமாம்.

தமிழ்நாட்டில் தாம் எப்போதும் கருணாநிதி தலைமையிலான கூட்டணியிலே நீடிப்பதாகவும் கருணாநிதிதான் முதல்வராக பதவியேற்பார் என்றும் வீர முழக்கமிட்டு வந்த வைகோ, அண்மைக்கலமாக இந்த சுருதியை மாற்றியிருப்பதாக சொல்லப்படுகிறது.

கடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 21 ஆசனங்களுடன் போட்டியிட்டது மறுமலர்ச்சி தி.மு.க. இம்முறை ஆகக் கூடிய அளவில் ஏறக்குறைய 60 ஆசனங்களை தி.மு.க. கூட்டணியில் அக்கட்சி எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. இந்தக் கருத்து அந்தக் கட்சியின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் தி.மு.க. கூட்டணியில் வைகோவுக்கு 60 ஆசனங்கள் ஒதுக்கப்படும் என்பது நடக்கவே நடக்காத ஒன்று.

ஏனெனில் தமிழகத்தில் உள்ள மொத்த தொகுதிகள் எண்ணிக்கை 234.

இதில் தனிப்பெரும்பான்மை பெற திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடக் கூடிய தொகுதிகள் 130-140 வரையாகும். இதர 100 தொகுதிகளை காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி தி.மு.க., 2 கொம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவற்றுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சிக்கு 40-45, பாட்டாளி மக்கள் கட்சிக்கு 25 முதல் 27 வரை, மறுமலர்ச்சி தி.மு.க.வுக்கு 20-22, கொம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 15-18 என்றுதான் அனேகம் ஒதுக்கீடு செய்ய முடியும்.

ஆகவே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளின் அளவில்தான் இந்த முறையும் போட்டியிட முடியும்.

ஆனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அணியில் அக்கட்சி தனியாக இருப்பதால் தன்னுடன் வரும் ஏதோ ஒரு கூட்டணிக் கட்சிக்கு ஆகக் கூடிய ஆசனங்களை ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு இருக்கிறது.

அந்த ஆகக் கூடிய ஆசனங்கள் கிடைக்கக் கூடிய வாய்ப்பு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மட்டுமே உள்ளது.

ஏனெனில் இந்திய மைய ஆட்சி நடத்தும் காங்கிரசின் பிரதான கூட்டணிக் கட்சி தி.மு.க.. அதனால் காங்கிரசு கட்சி, அணி மாறுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.

பாட்டாளி மக்கள் கட்சிக்கான கதவை முதலிலே மூடிவிட்டதாகக் கூறுவதுபோல் அந்தக் கட்சியின் 3 சட்டப்பேரவை உறுப்பினர்களை அண்மையில் ஜெயலலிதா தன் பக்கம் இணைத்துக் கொண்டுள்ளார்.

அதனால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கான சந்தர்ப்பம் இது என்று சொல்லப்படுகிறது.

ஜெயலலிதா ஜெயராமின் கணக்கு சரியாகிவிடும் என்பதைப் போல் தேர்தல் களம் சூடுபிடிக்கும் நிலையில் வைகோ மற்றும் அவர்களது கட்சியினரது செயற்பாடுகள் இருப்பதாக தமிழக பத்திரிகைகளும் சில உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களும் தெரிவிக்கின்றன.

அதுவும் ஜெயலலிதா ஆட்சியை எதிர்த்து தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் தொடங்கிய முதல் பிரச்சார இயக்கத்தில் வைகோவின் பேச்சுதான் இந்த ஊகங்களை உறுதிப்படுத்துவதாக உள்ளது என்கிறார்கள் ஊடகவியலாளர்கள்.

தமிழகம் முழுவதும் ஜெயலலிதா ஆட்சியை அகற்ற வலியுறுத்தும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் ஒரே நாளில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்தினர்.

விருதுநகரில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கூட்டம் நடைபெற்றது. தேர்தல் காலத்துக்கு முன்பெல்லாம் நான் தி.மு.க. கூட்டணியில்தான் இருப்போம்; கருணாநிதிதான் முதல்வர் என்றெல்லாம் கூறி வந்த வைகோ, விருதுநகர் கூட்டத்தில் அதுகுறித்து எதுவும் பேசாததோடு ஜெயலலிதா எதிர்ப்பு முழக்கத்தை மட்டுப்படுத்தியிருப்பதாக தமிழக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அதேபோல் அண்மைக்காலங்களில் ம.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்தும், ஆகக் கூடிய ஆசனங்களை அளிக்காவிட்டால் கூட்டணி மாறுவோம் என்று பொதுக்கூட்டங்களில் பகிரங்கமாக பேசி வருகிறார் என்றும் இதை வைகோ கண்டுகொள்ளாமல் இருப்பதன் மர்மம் என்ன என்றும் தமிழக ஊடகங்கள் கேள்வி எழுப்பி வருகின்றன.

ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்க வைகோ தயாராகிவிட்டார் போல்; அதனால்தான் தி.மு.க. மீதான விமர்சனங்களை வைகோ சுட்டிக்காட்டாமல் மவுனமாக இருக்கிறார் என்று தி.மு.க. தரப்பினர் குமுறுகின்றனர்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டங்களிலும் கூட அனைத்து நிர்வாகிகளும் தாங்கள் வகிக்கிற தி.மு.க.வை சாடி வருவதும் அதற்கான காரணங்களை பட்டியலிடுவதுமாகவும் இருந்து வருகின்றனர். அதையும் வைகோ கண்டுகொள்ளுவதில்லை என்றும் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்க உள்ளதால்தான் அவர்களை வைகோ பேச அனுமதிக்கிறார் என்றும் தி.மு.க. தரப்பு கூறி வருகின்றனர்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊசலாட்ட நிலையை உள்வாங்கிக் கொண்ட தமிழக உளவுத் துறையும் ஜெயலலிதாவின் நிழல் ஆலோசகர் சசிகலா நடராசனும் இது தொடர்பிலான பேச்சுகளை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

ஜெயலலிதாவின் அணியில் வைகோ இணைந்துவிடுவார் என்றே கூறப்படுகிறது.

என்றைக்கும் ஈழத் தமிழர் பிரச்சனையில் வைகோ ஆதரவானவராகத்தான் இருக்கிறார்.

ஒரு சிக்கலான காலகட்டத்தில், ஈழத் தமிழர் பிரச்சனையானது இறுதி காலகட்டத்தில் இருக்கும்போது தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு எதிர்நிலை எடுப்பதைத் தடுக்க வைகோவின் கட்சி இந்திய அரசாங்கத்தில் இருக்க வேண்டியது காலத்தின் அவசியமாகும் என்பது ஈழத் தமிழ் ஆதரவாளர்களின் விருப்பம்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்த விடயத்தில் வெளிப்படையாக வைகோவைப் போல் செயற்படாவிட்டாலும் எதிர்க்காமல் இருந்துவருவதால் இந்திய அரசினது நிலைப்பாடானது தமிழர்களுக்குச் சாதகமாக இருக்கிறது.

கடந்த காலத்தில் வைகோ, ஜெயலலிதா அணியில் இருந்த போதும் ஈழத் தமிழர் பிரச்சனையில் ஜெயலலிதா தன் கருத்துகளை மாற்றிக்கொண்டுவிடவில்லை. வைகோதான் கொஞ்சம் அடக்கி வாசிக்க நேரிட்டது என்பதையும் ஈழத் தமிழ் ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அணி மாற்றத்துக்காக வைகோ தரப்பிலிருந்து ஆயிரம் காரணங்கள் சொல்லப்படலாம். ஆனால் மீண்டும் ஜெயலலிதாவை விட்டு வைகோ விலகவும் செய்யலாம்.

ஆனால் கருணாநிதி நல்லவரா? ஜெயலலிதா பரவாயில்லையா? என்பதன் அடிப்படையில் தனது கட்சி நலனைக் கருத்தில் கொண்டு வைகோ எடுக்கப் போகும் முடிவு, ஈழத் தமிழர் பிரச்சனையில் ஒரு பாரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் தமிழின உணர்வாளர்கள் மத்தியில் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதே விடயம் முகப்பிலும் இணைக்கப்பட்டுள்ளது

Print this item