Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 419 online users.
» 0 Member(s) | 416 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,285
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,227
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,288
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,620
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,046
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,456
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,469
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,022
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  வவுனியாவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சுட்டில் ஆசிரியர் ஒருவர்
Posted by: சந்தியா - 01-23-2006, 10:06 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (7)

வவுனியாவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சுட்டில் ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொலை.

கமலநாதன் 35 வயது உடையவர் அத்துடன் 3 பிள்ளைகளின் தந்தையும் ஆவார்.

இவர் அவருடைய நண்பன் உடன் மோட்டார் ஊர்தியில் சென்று கொண்டிருந்த போதே இனம் தெரியா 3 நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது பற்றிய மேலதிக தகவல் கள உறவுகளுக்கு யாருக்காவது தெரிந்தால் போடுங்கள்

நானும் அறிந்தால் போடுகின்றேன்

Print this item

  மாந்தோப்பும் மலரும் மானிடரும்..!
Posted by: kuruvikal - 01-23-2006, 09:39 PM - Forum: கவிதை/பாடல் - Replies (20)

<img src='http://img360.imageshack.us/img360/5616/kuruvi68jb.jpg' border='0' alt='user posted image'>

<b>குருவி ஒன்று தான் வாழ
தேடியது ஒரு தோப்பு
வந்தது மாந்தோப்பு
வரவினில் கண்டது
ஓர் மலர்
மலரிடை மலர்ந்தது
வாழ்வெனும் வசந்தம்
மலரதும் குருவியதும்
படைக்குது ஒரு காவியம்
அது...
மாநிலத்தில் மானிடர் தாம்
கண்டிடாத புனித காவியம்.

தோப்பருகே ஒரு குடிசை
அங்கும் வாழுது
ஒரு கூட்டம்..!
வஞ்சகமும் பொறாமையும்
அவர்தம் மனங்களில்
கறுவும் மனதை அடக்க முடியா
கலங்கி நிற்குது அவர் சித்தம்..!
கற்பனையில் கூட
அடுத்தவன் வீழ்ச்சியில்
அகம் மகிழவே துடிக்குது..!
பாவம் அவர்
அறிவிருந்தும்
அறியாமையில்...!

தோப்பிருந்த குருவியது
மனமிரங்கி
மலருடனிணைந்து
பாவப்பட்டவர் மீது
ரட்சிக்கிறது
மானிடா....
மனமதில் அமைதி கொள்
வாழ்வதில் சிறப்பாய்
மாற்றானை உன்னில் தரிசி
உன்னை மாற்றான் மதிப்பான்..!
அன்றி...
வாழ்வில் நீயே
உன்னை மிதிப்பாய்
உன் நினைவுகள்
ஓர் நாள்
உன் நிஜம் அழிக்கும்...!</b>

தவறுதலான இங்கு இடப்பட்டுவிட்டது..! தவறுக்கு வருந்துகின்றோம்..! - இது பொழுதுபோக்கில் இக்கிறுக்கல் தவறுதலாக இடப்பட்ட போது எழுதப்பட்ட குறிப்பு

Print this item

  எது சுகம்?
Posted by: Rasikai - 01-23-2006, 08:02 PM - Forum: கவிதை/பாடல் - Replies (18)

<b>எது சுகம்?
----------------------

<img src='http://img451.imageshack.us/img451/7029/mutterkindker2bz.jpg' border='0' alt='user posted image'>

பட்டப்படிப்பு சுகமா?
அதனால் வந்த பதவி வாழ்வு சுகமா?

கட்டிக்காத்த சொத்து சுகமா?
இல்லை கட்டிலறை என்னும்
மனித இச்சை தான் சுகமா?
அள்ளி அள்ளி சேர்க்கும் பணம் சுகமா?
அதனால் வரும் பகட்டு சுகமா?

உண்மை சொல்லுங்க
அம்மா இல்ல ராசா இல்ல
சாப்பிடுடா செல்லம் என்று சொல்ல
அன்னை கையால் சோறு உண்டு வாழ்ந்தோமே
அதை விடவா இத்தனையும் சுகம்????</b>

Print this item

  அல்-கெய்டாவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் வேறுபாடு உண்டு:
Posted by: வினித் - 01-23-2006, 05:13 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

<b>அல்-கெய்டாவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் வேறுபாடு உண்டு: அமெரிக்காவின் நிக்கலஸ் பேர்ன்ஸ்

[திங்கட்கிழமை, 23 சனவரி 2006, 21:37 ஈழம்] [ச.விமலராஜா]

அமெரிக்க அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக இருந்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அல்-கெய்டா இயக்கத்துக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உண்டு என்று இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் பிரதிநிதி நிக்கலஸ் பேர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் நிக்கலஸ் பேர்னஸ் இன்று திங்கட்கிழமை கூறியதாவது:

நாங்கள் இந்த நாட்டின் நண்பர்கள். இந்த நாட்டின் பிராந்திய ஒற்றுமையை ஆதரிக்கிறோம்.

கண்டனத்துக்குரிய ஒரு பயங்கரவாத அமைப்பினால் இந்த நாட்டினது மக்கள் மேலும் 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு யுத்தச் சூழலில் வாழ வேண்டியது இல்லை.

அரச படையினர் மீதான புலிகளின் தாக்குதலால் அப்பாவி மக்கள் அழிந்து வருகின்றனர். மீண்டும் ஒரு உள்நாட்டு யுத்தம் உருவாகும் என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த யுத்த காலங்களில் 64 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.

ஆழிப்பேரலை மீளமைப்புக்கான நிதி உதவி மற்றும் சிறிலங்கா அரச படையினருக்கு பயிற்சி அளித்தல் தொடர்பிலான திட்டங்கள் இறுதிப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

<span style='font-size:25pt;line-height:100%'>அமெரிக்காவினால் அல்-கெய்டா அமைப்பும் தமிழீழ விடுதலைப் புலிகளும் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த இரண்டுக்கும் இடையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உண்டு.</span>

தமிழ் மக்களின் ஏழ்மை நிலை மற்றும் ஆழிப்பேரலையால் வடக்கு-கிழக்கில் அவர்கள் பாதிப்புக்குள்ளான நிலையில் சட்டபூர்வமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்பதை அமெரிக்கா உணருகிறது.

ஆனால் விடுதலைப் புலிகள் கண்டிப்பாக வன்முறையைக் கைவிட வேண்டும். அமெரிக்காவுடன் அல்-கெய்டா பேச்சு நடத்த ஒரு அடிப்படையும் இல்லை.

அல்-கெய்டா இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம். வன்மையாக கண்டனத்துக்குரிய செயற்பாடுகளுக்காக அது பயங்கரவாதத்தைப் பயன்படுத்துகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் உட்கார்ந்து பேசினால்தான் நீண்டகால பிரச்சனைக்கு முடிவு ஏற்பட்டு, வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வந்து அடுத்த கட்ட நகர்வுக்குச் செல்ல முடியும் என்பதை இந்த நாட்டினது அனைத்து நண்பர்களுக்கும் நாம் சொல்கிறோம்.

துப்பாக்கி முனைகளினூடே தங்களது பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம் என்று விரும்பினால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அமெரிக்க அரசாங்கத்துக்கும் எதுவித உறவும் ஏற்படாது என்பதோடு உண்மையில் நீண்டகாலத்துக்கு எந்த நாட்டோடும் ஆக்கபூர்வமான உறவும் ஏற்படாது என்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம் என்றார் பேர்ன்ஸ்.

கொழும்பில் இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவரும் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்மை நிக்கலஸ் பேர்ன்ஸ் திங்கட்கிழமை சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பின் மேலதிக விவரங்கள் வெளியாகவில்லை.

கொழும்பு வருவதற்கு முன்பாக இந்தியா சென்ற நிக்கலஸ் பேர்ன்ஸ் இந்தியத் தலைநகரம் புதுடில்லியில் ஊடகவியலாளர்களிடம் பேசுகையில், யுத்த நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்து வருவது குறித்து அமெரிக்கா கவலைப்படுகிறது என்று கூறினார்.

மேலும், சிறிலங்கா அரசாங்கத் தரப்பு மற்றும் நோர்வேத் தரப்பினருடன் இலங்கையில் தாம் பேச்சுகளை நடத்த உள்ளதாகவும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தையும் அமைதியையும் காப்பதற்காகவும் பிரச்சனைகளுக்கு அமைதி வழியில் தீர்வு காணவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் நிக்கலஸ் பேர்ன்ஸ் கூறினார்.

நன்றி: புதினம்</b>

Print this item

  உளவு பார்த்து கையும் மெய்யுமாய் மாட்டிய பிரிட்டன்
Posted by: kuruvikal - 01-23-2006, 10:16 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (2)

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41244000/jpg/_41244806_spyrock203.jpg' border='0' alt='user posted image'><img src='http://newsimg.bbc.co.uk/media/images/41246000/jpg/_41246592_rock300.jpg' border='0' alt='user posted image'>

போலியான கல்லுக்குள் ஒழித்து வைக்கப்பட்டுள்ள உளவுத்தகவல்களை பரிமாறப் பயன்படும் இலத்திரனியல் டிவைஸ்..!

ரஷ்சியாவில் உள்ள பிரித்தானிய தூதராலய தூதுவர் உட்பட சிலர் பிரிட்டனுக்காக ரகசிய அதிநவீன இலத்திரனியல் உபகரணங்களை (ரான்ஸ்மிற்றர்கள்) போலிக் கல் ஒன்றுக்குள் ஒழித்து வைத்து உளவு பார்த்தது ரஷ்சிய உளவுத்துறையான எப் எஸ் பி (FSB) யால் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த உளவாளிகளுக்கும் ரஷ்சியாவில் இயங்கும் சில அரசுசாரா தொண்டர் நிறுவனங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

அண்மையில் ரஷ்சியா அரசு சாரா வெளிநாட்டு தொண்டர் நிறுவனங்கள் மீது புதிய கட்டுப்பாடுகளை அமுல்படுத்திய போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அதை மனத உரிமை மீறல் என்ற தொனியில் எதிர்த்து குரல் கொடுத்தன..என்பதும் குறிப்பிடத்தக்கது..!

அமெரிக்க ஐரோப்பிய உளவுத் தேவைகளுக்காக மனித உரிமைகளும் விலை போகும் மிகப்பயங்கரமான சூழலை..உலகின் சனநாயகம் காப்போர் தமது சுயநலத்துக்காக உருவாக்கி உள்ளனர் என்பதையே இச்செய்தி கூறி நிற்கிறது..!

http://news.bbc.co.uk/1/hi/world/europe/4638136.stm

Print this item

  ----பா-ச-ம்........
Posted by: sWEEtmICHe - 01-23-2006, 07:20 AM - Forum: கவிதை/பாடல் - No Replies

Arrow <b><span style='color:palevioletred'> இங்கே கிலிக் >>>

<img src='http://images.tamilstation.de/images/g8B32426.jpg' border='0' alt='user posted image'>
[b][size=24]பாசம் </span>
[size=15] என்னவனின் அன்பு முகம் இதுவெனில்
அவர் அடுத்த முகம்...?
----பா-ச-ம்........
பாசத்தை காட்டி என்னை கொல்லாதே செல்ஷ்
வார்த்தை ஒன்றை சொல்லி.....
பூமியின் பந்தையே சுற்றி விட்டாய்
ஏன்டா பாசம் வளர்த்தேனோ உன் மேல்........
புரியுமுன்.........
... சுடும் இதையத்தில் முள் தைத்தாய்
இன்று உன் நினைவை புதைத்து விட்டேன் ........சாம்பலாய்
சொல்லிவிட்டு பிரிந்து போகிறேன்...... Cry Cry
[b]விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)</b>

Print this item

  மதியுரைஞர் பாலசிங்கம் வன்னி வருகை
Posted by: மேகநாதன் - 01-23-2006, 05:28 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (7)

<span style='color:green'><b>மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் வன்னியை வந்தடைந்தார் </b>


இன்று காலை 09.30 மணியளவில் பாலசிங்கம் தம்பதியினர் கிளிநொச்சிசியினை வந்தடைந்தனர் ஸ்ரீலங்கா விமானப்படைக்குச் சொந்தமான விமானப்படை உலங்கவானூர்தி மூலம் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் சந்திரன் விளையாட்டு மைதானத்தை வந்தடைந்த மதியுரைஞரினை அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வன வரவேற்றார். அதன்போது கேணல்சூசை, முக்கியஉறுப்பினர் பாலகுமாரன் உள்ளிட்ட விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் வரவேற்றனர்.இன்று மதியுரைஞர் அவர்கள் தேசியத்தலைவர் அவர்களைச் சந்தித்து பேச்சு வார்த்தைகள் தொடர்பாக கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது </span>

<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>

Print this item

  மலையகத்தில் விரியும் சிங்களத்தின் கொடூரக் கரங்கள்
Posted by: மேகநாதன் - 01-23-2006, 05:26 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<span style='color:red'><b>மலையகத்தில் பாரிய சுற்றிவளைப்புத்தேடுதல்! - நூற்றிற்கும் அதிகமான இளைஞர்கள் கைது </b>


மலையகப்பகுதிகளில் குறிப்பாக ஹற்றன் மற்றும் நுவரெலியாவில் நேற்று ஸ்ரீலங்கா படையினரால் பாரிய அளவில் தேடுதல் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டு பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


நுவரெலியா பகுதிகளில் நேற்று சனிக்கிழமையும், இன்று ஞாயிற்றுக்கிழமையும் சிறப்புத் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டு நூற்றுக்கும் அதிகமான இளைஞர்கள் விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடையாள அட்டை வைத்திராதவர்கள் மற்றும், சந்தேகத்திற்குரியவர்களையே தாம் கைது செய்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 60 பேர் வரையில் விடுவிக்கப்பட்டுவிட்டார்கள் எனவும், 40 பேர் வரையிலானவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யவுள்ளதாகவும் காவற்துறையினர் அறிவித்துள்ளனர்.</span>

<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>

Print this item

  கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இயல்புச்சூழல் பாதிப்பு
Posted by: மேகநாதன் - 01-23-2006, 05:13 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

[size=18]<b>கிழக்கு பல்கலைக்கழகத்தின் 15 பேராசிரியர்கள் ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தலால் நாட்டை விட்டு வெளியேறினர்
[திங்கட்கிழமை, 23 சனவரி 2006, 09:20 ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை]

கருணா குழுவால் படுகொலை செய்யப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் தம்பையாவின் மறைவை அடுத்து தொடர்ச்சியாக விடுக்கபட்ட கொலை அச்சுறுத்தல்களால் அச்சமடைந்த அந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த சுமார் 15 பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.


குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தில் தொடர்ந்தும் தனது கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொண்டு வரும் பேராசியரியர் ஒருவருக்கு அடையாளம் தெரியாத குழு ஒன்று விடுத்து வரும் தொடர்ச்சியான கொலை அச்சுறுத்தலை அடுத்து அவரும் நாட்டை விட்டு வெளியேற தயாராகி வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட கருணா, தனது குழுவினரை கொண்டு மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாண மக்களை துரத்தி அடித்ததை அடுத்து கிழக்குப் பல்கலைக்கழக பொருளியல்துறை தலைவர் இடம்பெயர்ந்து சென்றுவிட்டு மீள வந்து பல்கலைக்கழகத்தில் தனது கற்பித்தல் செயற்பாட்டை தொடர்ந்தார். இதனை தொடர்ந்து மட்டக்களப்பு நகரில் வைத்து இவர் படுகொலை செய்யப்பட்டார்.

இதனை அடுத்த தமக்கும் இதே கதி நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் அந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்து சுமார் 15 பேராசிரியர்கள் தமது குடும்பத்துடன் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

தற்பொது அந்த பல்கலைக்கழகத்தில் "விடுதலைப் புலிகளால் ஏற்பாடு செய்யப்படும் பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வுக்கோ அல்லது வேறு நிகழ்ச்சிகளுக்கோ சமூகமளித்தால் ஜோசப் பரராஜசிங்கத்துக்கு நடந்த அதே கதிதான் நடக்கும்" என்று அச்சுறுத்தும் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள், வலயக்கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள் ஆகியோருக்கு தொலைபேசிகள் மூலமும் அச்சுறுத்தல் விடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் கிழக்கு கல்விச் சமூகம் பீதியில் உறைந்து போயுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

<i>[b]தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>

Print this item

  2050-இல் ஒருநாள், புதிய விவாதம் 'தோசா' தமிழர்களின் பாரம்பரிய
Posted by: agathyan - 01-23-2006, 01:29 AM - Forum: தமிழ் /தமிழர் - Replies (12)

சென்ற வார இறுதியில் புலம்பெயர் நகரொன்றின் தமிழ்- மன்னிக்க இந்திய உணவகமொன்றில் இரவுச்சாப்பாடுக்காக கூடியிருந்தோம். இது முழுமையான சைவ(பிராமணாள் மன்னிக்க) உணவகம். நாங்கள் நான்கு பேர். வெங்காய தோசையும், மசாலாத் தோசையும் தருமாறு விழித்திருந்தோம். உணவைப் பரிமாறிய சேவையாளர் இதோ ஆனியன் தோசா, இதோ மசாலா தோசா எனப்பரிமாறினார்.

இதன்பின்னர் வீடு திரும்பிய நான் இணைய உலா சென்றேன். இதன்பின் து}ங்கியபோது கண்ட கனா விசித்திரமாக இருந்தது.

2050 இல் ஒருநாள், யாழ் இணையக் கருத்துக்களம்:
'தோசா" தமிழர்களின் பாரம்பரிய உணவா? இல்லை தெய்வீக ஞானத்தால் தோசமுனிவரால் படைக்கப்பட்டதா?

கனல்பறந்த விவாத்தை முணுமுணுத்த என்னை 'என்னப்பா ஆச்சு உங்களுக்கு விசர் கிசர் புடிச்சுப் போட்டுதோ நடுச்சாமத்திலே தோசா... தோசை என்று பினாத்துகிறீர்கள்..."
-என்று மனையாளின் அழைப்பால்! நிசவுலகிற்கு வந்த நான் வெட்கத்துடன் உங்கள் முன்னால்

அட இது கனவு. அப்ப நிசம்?

Print this item