![]() |
|
மதியுரைஞர் பாலசிங்கம் வன்னி வருகை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: மதியுரைஞர் பாலசிங்கம் வன்னி வருகை (/showthread.php?tid=1226) |
மதியுரைஞர் பாலசிங்கம் வன்னி வருகை - மேகநாதன் - 01-23-2006 <span style='color:green'><b>மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் வன்னியை வந்தடைந்தார் </b> இன்று காலை 09.30 மணியளவில் பாலசிங்கம் தம்பதியினர் கிளிநொச்சிசியினை வந்தடைந்தனர் ஸ்ரீலங்கா விமானப்படைக்குச் சொந்தமான விமானப்படை உலங்கவானூர்தி மூலம் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் சந்திரன் விளையாட்டு மைதானத்தை வந்தடைந்த மதியுரைஞரினை அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வன வரவேற்றார். அதன்போது கேணல்சூசை, முக்கியஉறுப்பினர் பாலகுமாரன் உள்ளிட்ட விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் வரவேற்றனர்.இன்று மதியுரைஞர் அவர்கள் தேசியத்தலைவர் அவர்களைச் சந்தித்து பேச்சு வார்த்தைகள் தொடர்பாக கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது </span> <b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b> - MUGATHTHAR - 01-23-2006 நேற்றிரவு நான் இருக்குமிடத்தில் சிங்களவர்களால் ஒரு வதந்திபரப்பபட்டது அதாவது அடம்பனில் ஒரு குண்ட வெடிப்பு நடைபெற்றதாகவும் அதில் புலிகளின் முக்கிய உறுப்பினர் கொல்லப்பட்டதாகவும் தமிழ்ச்செல்வனின் பேரும் அதில் அடிபட்டது என்னிடம் நக்கலாக தொலைபேசியில் துக்கம் விசாரித்தார்கள் இந்த படத்தை பிறின்ட் எடுத்து காட்டிய பின்தான் மனதுக்கு ஒரு சந்தோஷம் ( ஒரு சமாதான பேச்சுவார்த்தையில் குழப்பங்களை விளைவிக்க எப்பிடியெல்லாம் சிங்களம் பாடுபடுகிறது என விளங்கிக்கொள்ள முடிகிறது..). <img src='http://eelatamil.net/images/stories/january2006/bala-2.jpg' border='0' alt='user posted image'> thanks:Sankathi - தூயவன் - 01-23-2006 தளபதிமார் பார்த்து ஹெலிக்கு கிட்டப் போகலாமோ?. இந்தச் சிங்களவனை நம்ப இயலாது. குள்ளநரிகள். எதுக்கும் கவனமாக இருக்கவேண்டும். - மேகநாதன் - 01-23-2006 <b>விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தம்பதியினர் இன்று கிளிநொச்சியை வந்தடைந்தனர். </b> தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் மற்றும் திருமதி அடேல் பாலசிங்கம் ஆகியோர் இன்று கிளிநொச்சியை வந்தடைந்துள்ளனர். முற்பகல் 9.00 மணியளவில் சிறிலங்கா வான்படையின் உலங்குவானூர்தி மூலம் கிளிநொச்சியை வந்தடைந்தார். வந்தடைந்த அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தம்பதியினரை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள், விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் க.வே. பாலகுமாரன் அவர்கள், கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல், சூசை, கேணல் ந்ஐயம், கேணல் ரமேஸ், கேணல் யாழினி, கேணல் துர்க்கா, தமிழீழ கல்விக்கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன், தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், தமிழீழ நீதி நிர்வாகத் துறைப் பொறுப்பாளர் பரா, தமிழீழ மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி உட்பட பல தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் வரவேற்றனர். தனது வருகை தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், தலைவர் அவர்களை சந்தித்து இன்றைய சூழ் நிலைகள் களநிலைமைகள் பற்றி கலந்தாலோசிப்போம். நாளை மறுதினம் நோர்வே அமைச்சர் வருகிறார். அப்பொழுது மிகவும் முக்கியமான விடயங்கள் அவருடன் கலந்துரையாடுவோம். அதன் பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பு தொடர்பாக விளக்குவோம் எனவும் தெரிவித்தா <b><i>தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு</i>[</b> - மேகநாதன் - 01-23-2006 <b>படங்களுக்கு </b>http://www.battieezhanatham.com/2005/modul...rticle&sid=5192 - மேகநாதன் - 01-26-2006 <b>மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் சனிக்கிழமை லண்டன் பயணம் </b> சமாதான முயற்சிகள் குறித்து தமிழ்த் தேசியத் தலைவருக்கும், நோர்வேயின் சமாதான சிறப்புத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மிற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுக்களில் கலந்துகொள்ளுமுகமாக கடந்த திங்களன்று தாயகத்திற்கு வருகை தந்திருந்த விடுதலைப் புலிகளின் அரசியல் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் நாளை மறுநாள் லண்டனுக்கு திரும்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை மறுநாள் சனிக்கிழமை காலை ஸ்ரீலங்கா வான்படையின் உலங்குவானூர்தி மூலம் கிளிநொச்சியில் இருந்து கட்டுநாயக்க வானூர்தித் தளத்திற்கு செல்லும் அவர் பிற்பகல் 2 மணியளவில் லண்டன் நோக்கி புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. <b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b> - மேகநாதன் - 01-26-2006 <b>மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் சனிக்கிழமை லண்டன் பயணம் </b> சமாதான முயற்சிகள் குறித்து தமிழ்த் தேசியத் தலைவருக்கும், நோர்வேயின் சமாதான சிறப்புத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மிற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுக்களில் கலந்துகொள்ளுமுகமாக கடந்த திங்களன்று தாயகத்திற்கு வருகை தந்திருந்த விடுதலைப் புலிகளின் அரசியல் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் நாளை மறுநாள் லண்டனுக்கு திரும்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை மறுநாள் சனிக்கிழமை காலை ஸ்ரீலங்கா வான்படையின் உலங்குவானூர்தி மூலம் கிளிநொச்சியில் இருந்து கட்டுநாயக்க வானூர்தித் தளத்திற்கு செல்லும் அவர் பிற்பகல் 2 மணியளவில் லண்டன் நோக்கி புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. <b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b> - மேகநாதன் - 01-28-2006 <b>பாலசிங்கம் இன்று லண்டன் செல்கிறார் </b> [சனிக்கிழமை, 28 சனவரி 2006, 07:15 ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இன்று சனிக்கிழமை லண்டன் புறப்பட்டுச் செல்கிறார். நோர்வே சிறப்புத் தூதுவரும் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்மின் இலங்கை வருகையையொட்டி அன்ரன் பாலசிங்கமும் அவரது துணைவியார் அடேல் பாலசிங்கமும் இலங்கை வருகை தந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடனான சந்திப்பின் போது பாலசிங்கமும் பங்கேற்றார். இச்சந்திப்புகளையடுத்து இன்று பாலசிங்கம் மீண்டும் லண்டன் திரும்ப உள்ளார். <i><b> தகவல் மூலம் -புதினம் .கொம்</b></i> |