Aggregator

யாழில் உரும்பிராய் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!

2 days 11 hours ago
Published By: DIGITAL DESK 7 14 MAY, 2024 | 03:28 PM யாழ்ப்பாணம் உரும்பிராய் மேற்கு இளைஞர்களால், தியாகி பொன். சிவகுமாரனின் சிலை முன்பாக முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை வாரத்தின் மூன்றாவது நாளான இன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. இதில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி மக்கள் பேரியக்க ஒருங்கிணைப்பாளரும் சிவகுரு ஆதீன முதல்வருமான வேலன் சுவாமிகள் மற்றும் உரும்பிராய் மேற்கு இளைஞர்கள் கிராம மக்கள் பயணிகள் என பலரும் கலந்துகொண்டனர். யாழில் உரும்பிராய் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்! | Virakesari.lk தலைவர் வீட்டின் முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி (இனிய பாரதி) இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் இன்று காலை 11 மணியளவில் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது வீட்டின் முன்றலில் அமைந்துள்ள வல்வெட்டித்துறை ஆலடிச்சந்தியில் காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலசந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. இதன் பொழுது முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்து இரு மாவீரர்களின் தந்தையான தங்கேஸ்வரனால் பொதுச்சுடரேற்றி வைக்கப்பட்டு தொடர்ச்சியாக ஈகச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியும் விநியோகிக்கப்பட்டது. இதன் பொழுது முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றை உள்ளடக்கிய துண்டறிக்கையும் வழங்கி வைக்கப்பட்டது. தலைவர் வீட்டின் முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி (newuthayan.com)

யாழில் உரும்பிராய் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!

2 days 11 hours ago

Published By: DIGITAL DESK 7

14 MAY, 2024 | 03:28 PM
image
 

 

யாழ்ப்பாணம் உரும்பிராய் மேற்கு இளைஞர்களால், தியாகி பொன். சிவகுமாரனின் சிலை முன்பாக முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை வாரத்தின் மூன்றாவது நாளான இன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.

IMG_20240514_123738.jpgIMG_20240514_124156.jpg

IMG_20240514_123407.jpg

இதில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி மக்கள் பேரியக்க ஒருங்கிணைப்பாளரும் சிவகுரு ஆதீன முதல்வருமான வேலன் சுவாமிகள் மற்றும் உரும்பிராய்  மேற்கு இளைஞர்கள் கிராம மக்கள் பயணிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

யாழில் உரும்பிராய் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்! | Virakesari.lk

தலைவர் வீட்டின் முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி

(இனிய பாரதி)

 

541588265.jpg

 

 

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் இன்று காலை 11 மணியளவில்  தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது வீட்டின் முன்றலில் அமைந்துள்ள வல்வெட்டித்துறை ஆலடிச்சந்தியில் காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலசந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.


இதன் பொழுது முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்து  இரு மாவீரர்களின் தந்தையான தங்கேஸ்வரனால் பொதுச்சுடரேற்றி வைக்கப்பட்டு தொடர்ச்சியாக ஈகச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.  தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியும்  விநியோகிக்கப்பட்டது.  இதன் பொழுது முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றை உள்ளடக்கிய துண்டறிக்கையும் வழங்கி வைக்கப்பட்டது.

தலைவர் வீட்டின் முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி (newuthayan.com)

மட்டக்களப்பில் பொலிஸாரின் தடைகளின் மத்தியில் மூன்றாவது நாளாகவும் தொடரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நடவடிக்கைகள்

2 days 11 hours ago
Published By: DIGITAL DESK 3 14 MAY, 2024 | 04:02 PM இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நடவடிக்கைகள் பொலிஸாரின் பல்வேறு தடைகளையும் அச்சுறுத்தலையும் மீறி நடைபெற்றது. இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து மூன்றாவது நாளாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு மட்டக்களப்பு நகரில் விமான நிலைய வீதியில் உள்ள ஸ்ரீபரிபூர்ண விநாயகர் ஆலயத்திற்கு முன்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி திருமதி அ.அமலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,ஜேசுசவை துறவி அருட்தந்தை ஜோசப்மேரி, சிவில் சமூக செயற்பாட்டாளர் வி.லவகுமார்,தமிழரசுக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் திருமதி ஆர்.ஜெயபிரகாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது ஆலயத்திற்கு முன்பாக கஞ்சி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அங்கு பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் பெருமளவு புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டிருந்தனர். அங்கு வந்த மட்டக்களப்பு பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸார் அங்கு கஞ்சி வழங்கும் செயற்பாடுகளை செய்யவேண்டாம் என்று அங்கிருந்து அனைத்தையும் எடுத்துக்கொண்டு செல்லுமாறும் பணித்த நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த ஏற்பாட்டாளர்கள் தொடர்ந்து தமது செயற்பாடுகளை முன்னெடுத்தனர். இந்த நிலையில் சுகாதார நடைமுறையினை பின்பற்றவும் பொதுச்சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனைகள் இன்று கஞ்சி செயற்பாடுகளை முன்னெடுக்கமுடியாது என மீண்டும் தடைகளை ஏற்படுத்துவதற்கு பொலிஸார் முயற்சித்த நிலையில் அங்கு பொதுச்சுகாதார பரிசோதர் ஒருவரையும் அழைத்துவந்து நிகழ்வினை தடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிலையில் அங்குவந்த பொதுச்சுகாதார பரிசோதகர் சுகாதார நடைமுறைகளைப்பேணி செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு தெரிவித்ததை தொடர்ந்து சுகாதார நடைமுறைகளை பேணியவாறு கஞ்சி காய்ச்சும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது கஞ்சியை பரிமாறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோது விமான நிலைய வீதியின் இரு மருங்கிலும் போக்குவரத்து பொலிஸார் நிறுத்தப்பட்டு வீதியில் செல்வோருக்கு கஞ்சியை பரிமாறும் செயற்பாடுகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. கஞ்சியை பருக வாகனங்களை நிறுத்தியவர்களை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகளை பொலிஸார் முன்னெடுத்திருந்த நிலையிலும் பெருமளவான மக்கள் கஞ்சியை வாங்கி பருகும் நிலைமையை காணமுடிந்தது. மட்டக்களப்பில் பொலிஸாரின் தடைகளின் மத்தியில் மூன்றாவது நாளாகவும் தொடரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நடவடிக்கைகள் | Virakesari.lk

மட்டக்களப்பில் பொலிஸாரின் தடைகளின் மத்தியில் மூன்றாவது நாளாகவும் தொடரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நடவடிக்கைகள்

2 days 11 hours ago

Published By: DIGITAL DESK 3

14 MAY, 2024 | 04:02 PM
image
 

இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நடவடிக்கைகள் பொலிஸாரின் பல்வேறு தடைகளையும் அச்சுறுத்தலையும் மீறி நடைபெற்றது.

இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து மூன்றாவது நாளாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு மட்டக்களப்பு நகரில் விமான நிலைய வீதியில் உள்ள ஸ்ரீபரிபூர்ண விநாயகர் ஆலயத்திற்கு முன்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி திருமதி அ.அமலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,ஜேசுசவை துறவி அருட்தந்தை ஜோசப்மேரி, சிவில் சமூக செயற்பாட்டாளர் வி.லவகுமார்,தமிழரசுக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் திருமதி ஆர்.ஜெயபிரகாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஆலயத்திற்கு முன்பாக கஞ்சி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அங்கு பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் பெருமளவு புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டிருந்தனர்.

அங்கு வந்த மட்டக்களப்பு பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸார் அங்கு கஞ்சி வழங்கும் செயற்பாடுகளை செய்யவேண்டாம் என்று அங்கிருந்து அனைத்தையும் எடுத்துக்கொண்டு செல்லுமாறும் பணித்த நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த ஏற்பாட்டாளர்கள் தொடர்ந்து தமது செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில் சுகாதார நடைமுறையினை பின்பற்றவும் பொதுச்சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனைகள் இன்று கஞ்சி செயற்பாடுகளை முன்னெடுக்கமுடியாது என மீண்டும் தடைகளை ஏற்படுத்துவதற்கு பொலிஸார் முயற்சித்த நிலையில் அங்கு பொதுச்சுகாதார பரிசோதர் ஒருவரையும் அழைத்துவந்து நிகழ்வினை தடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையில் அங்குவந்த பொதுச்சுகாதார பரிசோதகர் சுகாதார நடைமுறைகளைப்பேணி செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு தெரிவித்ததை தொடர்ந்து சுகாதார நடைமுறைகளை பேணியவாறு கஞ்சி காய்ச்சும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது கஞ்சியை பரிமாறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோது விமான நிலைய வீதியின் இரு மருங்கிலும் போக்குவரத்து பொலிஸார் நிறுத்தப்பட்டு வீதியில் செல்வோருக்கு கஞ்சியை பரிமாறும் செயற்பாடுகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

கஞ்சியை பருக வாகனங்களை நிறுத்தியவர்களை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகளை பொலிஸார் முன்னெடுத்திருந்த நிலையிலும் பெருமளவான மக்கள் கஞ்சியை வாங்கி பருகும் நிலைமையை காணமுடிந்தது.

A1EC916E-3894-4ADB-B734-B3975F3CD4E6.jpe

16588485-3B67-474B-8064-7D7CABB7134E.jpe

9E4C77A7-6B4C-4941-84A8-62E80C1A7BF7.jpe

21BACBD2-9ED5-4883-997F-B4F2D8F3DAC6.jpe

6F8E8B6F-200C-401B-81E9-51420CFE84E7.jpe

மட்டக்களப்பில் பொலிஸாரின் தடைகளின் மத்தியில் மூன்றாவது நாளாகவும் தொடரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நடவடிக்கைகள் | Virakesari.lk

காசா மீதான இஸ்ரேலின் யுத்தத்திற்கு அமெரிக்காவின் உதவி தார்மீக காயங்களை ஏற்படுத்தியது - பதவியை இராஜினாமா செய்த அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு அதிகாரி

2 days 11 hours ago
Published By: RAJEEBAN 14 MAY, 2024 | 11:06 AM காசா மீதான இஸ்ரேலின் யுத்தத்திற்கான அமெரிக்காவின் ஆதரவு பாலஸ்தீனியர்களிற்கு ஏற்பட்டுள்ள தீமைகள் காரணமாக ஏற்பட்ட தார்மீக காயம் காரணமாக அமெரிக்காவின் புலனாய்வு பிரிவிலிருந்து இராஜினாமா செய்ததாக அமெரிக்க புலனாய்வு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். நவம்பரில் தனது பதவியை இராஜினாமா செய்த இராணுவ மேஜர் ஹரிசன் மான் இது குறித்து திங்கட்கிழமை தனது சகாக்களிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தனது தார்மீக காயம்குறித்து குறிப்பிட்டுள்ளார். எனது இராஜினாமாவிற்கான காரணங்களை அச்சம் காரணமாக நான் பல மாதங்களாக தெரிவிக்கவில்லை. தொழில்முறை விதிமுறைகளை மீறுவது, நான் பெரிதும் மதிக்கும் எனது சிரேஸ்ட அதிகாரிகளிற்கு ஏமாற்றத்தை ஏற்படுத்துவது, நான் துரோகம் செய்துவிட்டேன் என நீங்கள் கருதுவீர்கள் என பல அச்சங்களால் இராஜினாமாவிற்கான காரணத்தை முதலில் தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனியர்கள் பாரியளவில் படுகொலை செய்வதற்கு காரணமான அமெரிக்காவின் கொள்கைகளை முன்னெடுக்க உதவுவது குறித்து வெட்கம் அடைந்தேன் குற்றவுணர்வினால் பாதிக்கப்பட்டேன் எனவும் ஹரிசன்மான் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/183480

காசா மீதான இஸ்ரேலின் யுத்தத்திற்கு அமெரிக்காவின் உதவி தார்மீக காயங்களை ஏற்படுத்தியது - பதவியை இராஜினாமா செய்த அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு அதிகாரி

2 days 11 hours ago

Published By: RAJEEBAN

14 MAY, 2024 | 11:06 AM
image

காசா மீதான இஸ்ரேலின் யுத்தத்திற்கான அமெரிக்காவின் ஆதரவு பாலஸ்தீனியர்களிற்கு ஏற்பட்டுள்ள தீமைகள் காரணமாக ஏற்பட்ட தார்மீக காயம் காரணமாக அமெரிக்காவின் புலனாய்வு பிரிவிலிருந்து இராஜினாமா செய்ததாக அமெரிக்க புலனாய்வு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

நவம்பரில் தனது பதவியை இராஜினாமா செய்த இராணுவ மேஜர் ஹரிசன் மான்  இது குறித்து திங்கட்கிழமை தனது சகாக்களிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தனது தார்மீக காயம்குறித்து குறிப்பிட்டுள்ளார்.

எனது இராஜினாமாவிற்கான காரணங்களை அச்சம் காரணமாக நான் பல மாதங்களாக தெரிவிக்கவில்லை. தொழில்முறை விதிமுறைகளை மீறுவது, நான் பெரிதும் மதிக்கும் எனது சிரேஸ்ட அதிகாரிகளிற்கு ஏமாற்றத்தை ஏற்படுத்துவது, நான் துரோகம் செய்துவிட்டேன் என நீங்கள் கருதுவீர்கள் என பல அச்சங்களால் இராஜினாமாவிற்கான காரணத்தை முதலில் தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனியர்கள் பாரியளவில் படுகொலை செய்வதற்கு காரணமான அமெரிக்காவின் கொள்கைகளை முன்னெடுக்க உதவுவது குறித்து வெட்கம் அடைந்தேன் குற்றவுணர்வினால் பாதிக்கப்பட்டேன் எனவும் ஹரிசன்மான் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/183480

பலஸ்தீனில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பொறுப்புக்கூற வேண்டும் - சஜித்

2 days 11 hours ago
இதே மாதிரித் தான் இலங்கையிலும் இனப்படுகொலை நடந்தது. அதற்கு யார் பொறுப்பு சார்?

நினைவேந்தும் உரிமையை நிராகரிக்கவே முடியாது சம்பந்தன் எடுத்துரைப்பு; மூதூர் கைதுகளுக்கு கடும் கண்டனம்

2 days 11 hours ago
ஆர்.ராம் தமிழ் மக்கள் தங்களது உயிர்நீத்த உறவுகளை நினைவேந்துவதற்கான முழுமையான உரிமை உடையவர்கள். அது அவர்களின் அடிப்படை உரிமையாகும். அதனை நிராகரிக்கவே முடியாது என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை மூதூர் சேனையூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை விநியோகித்தவர்கள் இரவு நேரத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கல்முனையிலும் கஞ்சி விநியோகிக்கும் செயற்பாடுகளுக்கும் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கருத்து வெளியிடும்போது சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் வைகாசி மாதம் உணர்வுப் பூர்வமானது. அவர்கள் தமது உறவுகளை நினைவு கூருவதற்கான புனிதமான மாதமாகும். அவர்கள் போரில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூருவதற்கு முழுமையான உரித்துடையவர்கள். அவர்களின் அந்த அடிப்படை உரித்தினை யாரும் நிராகரிக்கவே முடியாது. அவ்வாறு நிராகரிப்பதற்கு இடமளிக்க முடியாது. அவ்வாறு இடையூறுகளை ஏற்படுத்துவம், நிராகரிப்பதும் அடிப்படைச் சட்டங்களை மீறுவதாகும். அதேநேரம், திருகோணமலை மூதூரில் தமது உறவுகளை நினைவு கூர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கல்முனையில் நினைவு கூரல் தடுக்கப்பட்டுள்ளது. இது அடிப்படை மனித உரிமை மீறலாகும். இவ்விதமான செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கின்றேன். அத்துடன், கைது செய்யப்பட்டவர்கள் தாமதமின்றி விடுவிக்கப்படுவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பகிரங்கமான கோரிக்கை விடுகின்றேன். எமது மக்களின் உரிமைகளைக் கடந்த ஏழு தசாப்தமாக பறிந்து வருகின்ற நிலையில் தான் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரங்களைப் பகிருமாறு கோரிவருகின்றோம் என்றார். நினைவேந்தும் உரிமையை நிராகரிக்கவே முடியாது சம்பந்தன் எடுத்துரைப்பு; மூதூர் கைதுகளுக்கு கடும் கண்டனம் | Virakesari.lk

நினைவேந்தும் உரிமையை நிராகரிக்கவே முடியாது சம்பந்தன் எடுத்துரைப்பு; மூதூர் கைதுகளுக்கு கடும் கண்டனம்

2 days 11 hours ago
image
 

ஆர்.ராம்

தமிழ் மக்கள் தங்களது உயிர்நீத்த உறவுகளை நினைவேந்துவதற்கான முழுமையான உரிமை உடையவர்கள். அது அவர்களின் அடிப்படை உரிமையாகும். அதனை நிராகரிக்கவே முடியாது என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை மூதூர் சேனையூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை விநியோகித்தவர்கள் இரவு நேரத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று கல்முனையிலும் கஞ்சி விநியோகிக்கும் செயற்பாடுகளுக்கும் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கருத்து வெளியிடும்போது சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் வைகாசி மாதம் உணர்வுப் பூர்வமானது. அவர்கள் தமது உறவுகளை நினைவு கூருவதற்கான புனிதமான மாதமாகும்.

அவர்கள் போரில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூருவதற்கு முழுமையான உரித்துடையவர்கள். அவர்களின் அந்த அடிப்படை உரித்தினை யாரும் நிராகரிக்கவே முடியாது. அவ்வாறு நிராகரிப்பதற்கு இடமளிக்க முடியாது.

அவ்வாறு இடையூறுகளை ஏற்படுத்துவம், நிராகரிப்பதும் அடிப்படைச் சட்டங்களை மீறுவதாகும். அதேநேரம், திருகோணமலை மூதூரில் தமது உறவுகளை நினைவு கூர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கல்முனையில் நினைவு கூரல் தடுக்கப்பட்டுள்ளது.

இது அடிப்படை மனித உரிமை மீறலாகும். இவ்விதமான செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கின்றேன். அத்துடன், கைது செய்யப்பட்டவர்கள் தாமதமின்றி விடுவிக்கப்படுவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பகிரங்கமான கோரிக்கை விடுகின்றேன்.

எமது மக்களின் உரிமைகளைக் கடந்த ஏழு தசாப்தமாக பறிந்து வருகின்ற நிலையில் தான் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரங்களைப் பகிருமாறு கோரிவருகின்றோம் என்றார்.

நினைவேந்தும் உரிமையை நிராகரிக்கவே முடியாது சம்பந்தன் எடுத்துரைப்பு; மூதூர் கைதுகளுக்கு கடும் கண்டனம் | Virakesari.lk

பலஸ்தீனில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பொறுப்புக்கூற வேண்டும் - சஜித்

2 days 11 hours ago
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இஸ்ரேலின் கொலைகார அரச பயங்கரவாதம் பலஸ்தீன அப்பாவி மக்கள் மீது மேற்கொண்டுவரும் இனப்படுகொலையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த இனப்படுகொலைக்கு இஸ்ரேல் பிரதமர் நெததன்யாஹு பொறுப்புக்கூறவேண்டும். அதேநேரம் பலஸ்தீன், இஸ்ரேல் இரண்டு நாட்டு தீர்வுக்கு வரவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற பலஸ்தீனின் தற்பாேதைய நிலை தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொலைகார அரசாக இஸ்ரேல் அரசு பலஸ்தீன மக்களின் வாழ்வை முற்றாக அழித்து, அவர்களின் தாயகத்தை அழித்து, அரச பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்தி பலஸ்தீன மக்கள் மீது நடத்தி வரும் மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கு எதிராக இலங்கையர்களாகிய நாம் உலக மக்களோடு முன் நிற்போம் உடனடியாக போர் நிறுத்த்திற்குச் சென்று பட்டினியால் வாடும் பலஸ்தீன மக்களின் வாழும் உரிமை எல்லாவற்றுக்கும் முதல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று முழு உலகுமே கோரிக்கை விடுக்கிறது. இஸ்ரேல் அரசாங்கம் மருத்துவமனைகளுக்கு குண்டுத்தாக்குதல் நடத்துகிறது. பாடசாலைக்கு குண்டுத் தாக்குதல் நடத்துகிறது. சிவில் குடிமக்களை அப்பட்டமாக கொலை செய்து வருகிறது. இந்த கொலைகார இந்த அரச பயங்கரவாதத்தை கண்டிக்கின்றோம். இஸ்ரேலும் பலஸ்தீனும் சமாதானமாக பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என இதற்கு முன்னர் நாம் பேசும் போதெல்லாம் கூறினோம்.இஸ்ரேல் அரசாங்கம் தொடர்ச்சியாக பலமுறை பேச்சுவார்த்தைகளை நிராகரித்து, பலஸ்தீன தாயகத்தை அழிக்கும் அரச பயங்கரவாதத்தை கண்டிக்கின்றேன், இந்த கொலைகார பயங்கரவாதத்தை கைவிடுமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் கேட்டுக் கொள்கின்றேன். மேலும் ஹிட்லர் என்ற கொலைகாரன் அன்று யூதர்களை படுகொலை செய்ததுபோன்று இன்று இஸ்ரேலை ஆட்சி செய்யும் படுகொலை அரசாங்கம் பலஸ்தீன அப்பாவி மக்களை படுகொலை செய்துவருவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த அரச பயங்கரவாதத்தை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச சமூகத்திடம் கேட்டுக்கொள்கிறோம். அதற்கு தேவையான அனைத்து ஆதரவையும் நாங்கள் நிபந்தனையின்றி வழங்கவேண்டு்ம். நெதன்யாகு அரசாங்கம் தொடர்ச்சியாக இடைவிடாது மேற்கொண்டு வரும் மிலேச்சத்தனமான, கீழ் தர செயலை, பயங்கரவாத நடவடிக்கையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். பலஸ்தீன மக்களின் வாழ்வுரிமையை மாத்திரமல்ல, அவர்களது நாட்டுக்குள் வாழும் உரிமை அவர்களுக்குள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு, பலஸ்தீன், இஸ்ரேல் இரண்டு நாடு தீர்வாகும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார். பலஸ்தீனில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பொறுப்புக்கூற வேண்டும் - சஜித் | Virakesari.lk

பலஸ்தீனில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பொறுப்புக்கூற வேண்டும் - சஜித்

2 days 11 hours ago

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

இஸ்ரேலின் கொலைகார அரச பயங்கரவாதம் பலஸ்தீன அப்பாவி மக்கள் மீது மேற்கொண்டுவரும் இனப்படுகொலையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த இனப்படுகொலைக்கு இஸ்ரேல் பிரதமர் நெததன்யாஹு பொறுப்புக்கூறவேண்டும். 

அதேநேரம் பலஸ்தீன்,  இஸ்ரேல் இரண்டு நாட்டு தீர்வுக்கு வரவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற பலஸ்தீனின் தற்பாேதைய நிலை தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 

கொலைகார அரசாக இஸ்ரேல் அரசு பலஸ்தீன மக்களின் வாழ்வை முற்றாக அழித்து, அவர்களின் தாயகத்தை அழித்து, அரச பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்தி பலஸ்தீன மக்கள் மீது நடத்தி வரும் மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கு எதிராக இலங்கையர்களாகிய நாம் உலக மக்களோடு  முன் நிற்போம் 

உடனடியாக போர் நிறுத்த்திற்குச் சென்று பட்டினியால் வாடும் பலஸ்தீன மக்களின் வாழும் உரிமை எல்லாவற்றுக்கும் முதல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று முழு உலகுமே கோரிக்கை விடுக்கிறது. இஸ்ரேல் அரசாங்கம் மருத்துவமனைகளுக்கு குண்டுத்தாக்குதல் நடத்துகிறது. பாடசாலைக்கு குண்டுத் தாக்குதல் நடத்துகிறது. சிவில் குடிமக்களை அப்பட்டமாக கொலை செய்து வருகிறது. இந்த கொலைகார இந்த அரச பயங்கரவாதத்தை கண்டிக்கின்றோம்.

இஸ்ரேலும் பலஸ்தீனும் சமாதானமாக பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என இதற்கு முன்னர் நாம் பேசும் போதெல்லாம் கூறினோம்.இஸ்ரேல் அரசாங்கம் தொடர்ச்சியாக பலமுறை பேச்சுவார்த்தைகளை நிராகரித்து, பலஸ்தீன தாயகத்தை அழிக்கும் அரச பயங்கரவாதத்தை கண்டிக்கின்றேன், இந்த கொலைகார பயங்கரவாதத்தை கைவிடுமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும் ஹிட்லர் என்ற கொலைகாரன் அன்று யூதர்களை படுகொலை செய்ததுபோன்று இன்று இஸ்ரேலை ஆட்சி செய்யும் படுகொலை அரசாங்கம் பலஸ்தீன அப்பாவி மக்களை படுகொலை செய்துவருவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த  அரச பயங்கரவாதத்தை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச சமூகத்திடம் கேட்டுக்கொள்கிறோம். அதற்கு தேவையான அனைத்து ஆதரவையும் நாங்கள் நிபந்தனையின்றி வழங்கவேண்டு்ம்.

நெதன்யாகு அரசாங்கம் தொடர்ச்சியாக இடைவிடாது மேற்கொண்டு வரும் மிலேச்சத்தனமான, கீழ் தர செயலை, பயங்கரவாத நடவடிக்கையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். பலஸ்தீன மக்களின் வாழ்வுரிமையை மாத்திரமல்ல, அவர்களது நாட்டுக்குள் வாழும் உரிமை அவர்களுக்குள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு, பலஸ்தீன், இஸ்ரேல் இரண்டு நாடு தீர்வாகும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.

பலஸ்தீனில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பொறுப்புக்கூற வேண்டும் - சஜித் | Virakesari.lk

 முல்லைத்தீவில் மாணவிகள் குளியல்; காணொலி எடுத்தவர் நையப்புடைப்பு

2 days 11 hours ago
அவரை பத்து கிலோ மீட்டர் ஊர்வலமாக நடத்திக் கொண்டு, அதை காணொளி எடுத்து எல்லாருக்கும் காட்டி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்.

ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்

2 days 11 hours ago
யார்பதவிக்கு வந்தாலும் ஐ எம் எவ் இன் உதவி இல்லாமல் எழுந்து நிறக முடியாது. ஜேவிபி ஜனாதிபதியானால் ரணில் வெளிநாட்டுக்கு தப்பியோட வேண்டி வரலாம்.

ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்

2 days 11 hours ago
ஜேவிபி ஐ.எம்.எப் இனை முற்றாகத் தவிர்ப்பதாக எங்கும் சொல்லவில்லை. அவர்கள் சொல்வது எல்லாம், தாம் பதவிக்கு வந்தால், ஐ,எம்.எப் உடனான பேச்சுவார்த்தையை / கடன் வாங்குவதற்கான நிபந்தனைகளை மீண்டு புதிதாக ஆரம்பிப்போம் என்பது மாத்திரமே. ஒரு வேளை, பதவிக்கு வந்தால், தாம் ஒரு போதும், அவர்களை எதிர்க்கவில்லை என்று மக்களுக்கு சொல்லலாம்.

திருகோணமலையில் மாணவி உயிர்மாய்ப்பு

2 days 11 hours ago

Published By: DIGITAL DESK 3

14 MAY, 2024 | 04:44 PM
image
 

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவாநகர் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரை மாய்த்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை (14) காலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் கோணேஸ் துசானி (வயது 17) என்ற மாணவியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை தேவாநகர் பகுதியில் வசித்துவரும் குறித்த சிறுமிக்கும் தாய்க்கும் இடையே இன்றைய தினம் காலை வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதன் பின்னர் தாய் குறித்த சிறுமியின் அக்காவை பாடசாலைக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரியவருகின்றது. 

இதன் பின்னர் காலை 7.00 மணியளவில் குறித்த சிறுமி உயிரை மாய்க்க முயற்சித்ததாகவும் அயலவர்கள் சிறுமியைக் காப்பாற்றி திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுமி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், இன்றையதினம் (14) கிண்ணியாவைச் சேர்ந்த 18 வயதான சிறுமி ஒருவரும் உயிர்மாய்த்த சம்பவமும், கடந்த 12ஆம் திகதி மூதூர் - பாரதிபுரத்தில் 32 வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்த்த சம்பவமும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மைக்காலமாக உயிரை மாய்த்துக்கொள்பவர்களின்  எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் இதனை தடுக்க அல்லது கட்டுப்படுத்த சமூக அமைப்புக்கள் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

https://www.virakesari.lk/article/183540

சாதாரண தர பரீட்சை நிறைவடைந்தவுடன் உயர்தர கற்கையை ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம்

2 days 11 hours ago

Published By: DIGITAL DESK 3   14 MAY, 2024 | 04:34 PM

image

(எம்.மனோசித்ரா)

கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை முடிந்தவுடன் பாடசாலைகளில் கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை முடிந்தவுடன் அதன் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு  பரீட்சைகள் திணைக்களத்துக்கு குறைந்தது மூன்று மாதங்கள் தேவையாகும். இக்காலப்பகுதியில்  மாணவர்கள் பாடசாலைக் கல்வியிலிருந்து விலகியிருப்பதால், அவர்கள் கல்வி பொதுத்தராதர  உயர்தரத்தை பயில்வதற்கான போக்குகள் குறைவடைவதால் பல்வேறு சமூகப் பிரச்சினைகள்  உருவாவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

இவ்விடயத்தைக் கருத்தில் கொண்டு மாணவர்களுடைய நேரத்தை பயனுள்ளவாறு முகாமைத்துவப்படுத்துவதற்கும் க.பொ.த உயர்தர  பாடவிதானங்களை  உள்ளடக்குவதற்காக  ஆசிரியர்களுக்கு போதியளவு நேரத்தை ஒதுக்கி வழங்குவதற்கு இயலுமாகும் வகையில்  2024ஆம் ஆண்டில் சாதாரண பரிட்சை பூர்த்தியானதுடன் பாடசாலைகளில் உயர்கல்வி கற்கை நடவடிக்கைகளை ஆரம்பிப்பது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய 2023ஆம் ஆண்டுக்கான  க.பொ.த சாதாரணதர பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்காக, அப்பரீட்சை முடிந்தவுடன் க.பொ.த உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/183537

அதிகரித்து வரும் இன்ஃப்ளூயன்ஸா : சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை!

2 days 11 hours ago

இன்ஃப்ளூயன்ஸா தொற்றுகள் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து வரும் நிலையில், தலைவலி மற்றும் சோர்வு. காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதல் அல்லது அடைத்தல், தசை அல்லது உடல் வலி போன்ற அறிகுறிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில்,
இது குழந்தைகள் மத்தியில் அதிகமாகக் காணப்படுவதாகவும், எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

“வழக்கமாக நவம்பர் முதல் பெப்ரவரி வரை மற்றும் ஏப்ரல் முதல் ஜூலை வரை காய்ச்சலின் இரண்டு உச்சநிலைகள் உள்ளன,” என்று அவர் கூறினார்.

“இந்த நேரத்தில், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியிலும் தொற்றுகள் கணிசமாக உயர்ந்துள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நோயாளர் தொகை இரட்டிப்பாகியுள்ளன. நோய் அறிகுறிகள் தொடர்ந்தால், உடனடி மருத்துவ உதவியை நாடுவது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

கர்ப்பிணித் தாய்மார்கள், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய்களால் அதிகம் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு, ராகம, களுபோவில, நீர்கொழும்பு வைத்தியசாலைகள், லேடி ரிட்ஜ்வே சிறுவர்களுக்கான வைத்தியசாலை மற்றும் தொற்று நோய் வைத்தியசாலை உட்பட 20 வைத்தியசாலைகளில் இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய் கண்காணிப்பை அதிகரிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

https://thinakkural.lk/article/301578

மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!

2 days 14 hours ago
ஓம் .அதில் அவர்கள் காட்டும் ஆர்வம்👍 நீங்கள் சொன்னது உண்மை தான். மேலே உள்ள மாட்டுக்கறி பாடல் என்ற வீடியோவில் மாட்டு கறியின் புகழை பாடுகிறார்கள் என்று நம்புகிறேன்.இப்படி இது போல் நல்ல உணவுகள் சாப்பிடுங்கோ என்று பாட்டு பாடி இருப்பார்களா. பாடலில் மாட்டுக்கறி வேறுலெவல் என்கிறார்கள். வேறுலெவல் என்றால் தமிழில் ஒப்புவமையற்றது தானே

ஓபியாய்டு: உலகையே போதைக்கு அடிமையாக்கும் மருந்துகளின் மையமாக சீனா மாறியது எப்படி?

2 days 14 hours ago
நோயாளி மருந்தை விலைகொடுத்துப் பெற்று உட்கொண்ட பின்னர் மருந்துக்கடைக்காறரைக் கைகாட்டுவது சரியானதாகுமா? உலகம் முழுதும் எல்லாவற்றையும் கண்காணிக்கத் தெரிந்த அமெரிக்காவிற்கு உள்ளூர் மருந்து வினியோகத்தர்கள் யாரென்று மட்டும் தெரியாது.. 😁