Aggregator

பூமி அதிவேகமாகச் சுழன்றாலும் நாம் ஏன் தூக்கி வீசப்படுவதில்லை?

3 days ago
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜுவான் பிரான்சிஸ்கோ அலோன்சோ பதவி, பிபிசி செய்திகள் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பிரபஞ்சத்தின் வழியான ஒரு அற்புதமான பயணத்தில் நம்மை அழைத்துச் செல்லும் கப்பல் இந்த பூமி. இந்த கிரகம் மணிக்கு 107,280 கிலோமீட்டர் வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது. மேலும் இது தன் அச்சில் அதாவது பூமத்திய ரேகையில் மணிக்கு சுமார் 1,666 கிலோமீட்டர் வேகத்தில் சுழல்கிறது. ஆனால் ஒரு விண்வெளி காரில் சவாரி செய்வது போல் நாம் ஏன் உணர்வதில்லை? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஒரு விமானம் நிலையான வேகத்தை அடையும் போது அது அப்படியே நிற்பது போன்ற உணர்வு ஏற்படும். நிலைத்தன்மை மற்றும் செயலற்றதன்மை இந்த நிகழ்வைப் புரிந்து கொள்ள, சிலியின் வானியல் இயற்பியலாளர் ஜவீரா ரே நமக்கு ஒரு உதாரணம் கூறுகிறார். இவர் லத்தீன் அமெரிக்காவில் விஞ்ஞான அறிவைப் பரப்பும் அமைப்பான ஸ்டார் டிரேஸின் (Star Tres) இணை நிறுவனர். "நீங்கள் ஒரு விமானத்தில் இருக்கிறீர்கள் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். விமானம் பறக்கத் தொடங்கும்போது உங்கள் இருக்கையில் மூழ்குவது போல் உணர்கிறீர்கள். மேலும் தரையிறங்கும்போது முன்னோக்கி நகர்வதைப் போல உணர்கிறீர்கள். ஏனென்றால் நிலைமம் (Inertia) நம்மை ஓய்வு நிலையில் வைக்கத் தூண்டுகிறது. விமானம் அதன் முழு வேகத்தை அடையும் போது அது நகர்வதை நாம் உணர்வதில்லை. நாம் எழுந்து நின்று, நடக்க முடிகிறது." என்கிறார் ரே. இவ்வாறாக விமானம் சீரான வேகத்தில் செல்லும் போது, அது அப்படியே நிற்பது போல் தோன்றுகிறது. பூமியிலும் இதேதான் நடக்கிறது. ஏனென்றால் அது நிலையான வேகத்தில் பயணிக்கும்போது, அது உண்மையில் பிரபஞ்சத்தின் ஊடாக பயணிக்கவில்லை என்பது போல் தெரிகிறது. மனிதர்கள் உட்பட பூமியில் உள்ள அனைத்துமே அதே நிலையான வேகத்தில் பயணிக்கின்றன. நாம் பூமியுடன் சுழல்கிறோம். எனவே வேகத்தை நாம் உணர்வதில்லை. ஆனால் மற்ற முக்கிய கூறுகளும் உள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பூமியின் இயக்கங்களை நாம் உணராமல் இருப்பதற்கு புவியீர்ப்பும் ஒரு காரணம். பிற சக்திகள் பூமி சுழல்வதை நாம் ஏன் உணர்வதில்லை என்பதை விளக்கவும் புவிஈர்ப்பு விசை உதவுகிறது. "நீங்கள் ஃபார்முலா 1 காரில் இருக்கிறீர்கள் என்றும் நிலையான வேகத்தில் நேர்கோட்டில் பயணிக்கிறீர்கள் என்றும் கற்பனை செய்து பாருங்கள்,” என்று வெனிசுலாவின் மத்திய பல்கலைக்கழகத்தின் தத்துவார்த்த இயற்பியலாளரும் அறிவியல் தொடர்பாளருமான சோல்மர் வரேலா கூறுகிறார். தொடர்ந்து பேசிய அவர், "அந்த நேரத்தில் வாகனம் நகர்வதை நீங்கள் உணர மாட்டீர்கள். ஆனால் நீங்கள் ஒரு திருப்பத்தை நெருங்கும் போது, ஒரு சக்தி உங்களை வளைவின் எதிர் திசையை நோக்கித் தள்ளுவதை உணர்வீர்கள். அது உங்களை காரிலிருந்து வெளியே தள்ள முயற்சிப்பது போல இருக்கும்,” என்று விளக்குகிறார். "நீங்கள் காரில் இருந்து தூக்கி எறியப்படாததற்குக் காரணம், நீங்கள் சீட் பெல்ட் அணிந்திருப்பதே" என்று அவர் கூறுகிறார். நமது கிரகத்திலும் இதே தான் நடக்கிறது. அது சுழலும் போது ஒரு மையவிலக்கு விசை உருவாகிறது. கோட்பாட்டின்படி அது நம்மை விண்வெளிக்கு தூக்கி அடிக்கும். இருப்பினும் என்ன நடக்கிறது என்றால், பூமியின் புவிஈர்ப்பு அந்த மையவிலக்கு விசையை விட மிகவும் வலுவானது. அதனால் தான் நாம் கிரகத்துடன் ஒட்டியிருக்கிறோம். "புவியீர்ப்பு விசை ஒரு காரின் சீட் பெல்ட் போல வேலை செய்கிறது," என்று வரேலா கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பூமியின் இயக்கத்தை நம்மால் உணர முடியாமல் இருப்பதே, நட்சத்திரங்கள் நமது கிரகத்தைச் சுற்றி வருகின்றன என்று பல நூற்றாண்டுகளாக நம்பப்பட்டதற்கு ஒரு காரணம். இயக்கம் என்பது ஒப்புமை சார்ந்தது பூமியின் நகரவை நம்மால் உணர முடியாததே, நமது கிரகம் பிரபஞ்சத்தின் மையம் என்று பல நூற்றாண்டுகளாக நம்பப்பட்டதற்கு ஒரு காரணம். "நீண்ட காலமாக பூமியே பிரபஞ்சத்தின் மையம் என்று நம்பப்பட்டது. ஏனென்றால் மக்கள் வானத்தைப் பார்த்தபோது நட்சத்திரங்கள் நகர்வதைக் கண்டார்கள்," என்று வெனிசுலா வானியலாளர் மற்றும் ஜெர்மனியில் உள்ள சூரிய மண்டல ஆராய்ச்சிக்கான மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட்டில் ஆராய்ச்சியாளரான மிரியம் ரேஞ்சல் விளக்குகிறார். "ஆனால் நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் மற்றும் ஜோஹன்னஸ் கெப்லர் ஆகியோர் சூரிய மைய மாதிரியை உருவாக்கினர். கலிலியோ வியாழனின் நான்கு நிலவுகளைக் கண்டுபிடித்தார். இந்த கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருவதை அவர்கள் கண்டுபிடித்தபோது இந்த எண்ணம் மாறியது" என்கிறார் ரேஞ்சல். கிரகம் நகர்ந்தால் அதை நம்மால் உணர முடியும் என்றும் உயரமான இடத்தில் இருந்து ஒரு பொருளை வீசினால் அது அடிவாரத்தில் விழாமல் பின்னால் தான் விழும் என்றும் பூமியே மையத்தில் உள்ளது என்ற கூற்றை ஆதரிப்பவர்கள் கூறினர். ஆனால் கலிலியோ அதை நிராகரிக்க ஒரு வழியைக் கண்டுபிடித்தார். அமைதியான கடலில் சீரான வேகத்தில் செல்லும் கப்பலில், தண்ணீர் துளிகளை கொள்கலனில் ஊற்றி அவர் சில சோதனைகளை நடத்தினார். கப்பல் முன்னோக்கி நகர்வதை அவர் கண்டார். ஆனால் துளிகள் எப்போதும் கொள்கலனில் விழுந்து கொண்டே இருந்தன. "இதன் மூலம் எல்லாமே நாம் இருக்கும் இடத்தைப் பொறுத்தது என்பதை அவர் காட்டினார்," என்கிறார் ரேஞ்சல். இவ்வாறு சார்பியல் கோட்பாட்டை முன்வைத்த முதல் நபர் கலிலியோ ஆவார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கலிலியோவின் ஆய்வுகள் பூமி நகர்வதையும், அது சூரியனைச் சுற்றி வருவதையும் காட்டுகின்றன. பழகிக்கொள்ளுதல் மற்றும் தயார் நிலை பூமியின் இயக்கத்தை உணர முடியாமல் இருப்பதற்கு மற்றொரு காரணம், நாம் அதற்குப் பழகிவிட்டோம். "நாம் பிறப்பிலிருந்தே இந்த இயக்கத்திற்குப் பழகிவிட்டோம்" என்று மாட்ரிட்டின் கம்ப்ளூட்டன்ஸ் பல்கலைக்கழகத்தின் புவி இயற்பியல் பேராசிரியரான மார்டா அபாலோஸ் விளக்குகிறார். உயிரினங்களின் செவிவழி அமைப்பு கிரகத்தின் இயக்கம் நம்மை மயக்கமடையச் செய்வதைத் தடுப்பதற்கு ஏற்றபடி அமைந்துள்ளது என்று ரே சுட்டிக்காட்டுகிறார். அதேபோல், வளிமண்டலம் கிட்டத்தட்ட பூமியின் அதே வேகத்தில் நகர்கிறது என்பதும் இதில் ஒரு பங்கை வகிக்கிறது. "பூமியைச் சுற்றியுள்ள காற்றின் அடுக்கு கிட்டத்தட்ட அதே வேகத்தில் சுழல்வதால், பூமியின் சுழற்சியால் ஏற்படும் எந்த 'காற்றையும்' நாம் உணர்வதில்லை" என்று அபாலோஸ் விளக்குகிறார். ”கிரகத்தின் இயக்கம் காற்றை உருவாக்காது. ஏனெனில் விண்வெளி கிட்டத்தட்ட காலியாக உள்ளது," என்று ரே சுட்டிக்காட்டுகிறார். https://www.bbc.com/tamil/articles/c6pym0ry5j2o

மோடி மீண்டும் பிரதமரானால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்போம்” – இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

3 days ago
பேச்சோடு நிற்காமல் செய்கையிலும் காட்டணும்.

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

3 days ago
வணக்கம் வாத்தியார்..........! ஆண் : ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன் அத்த பெத்த பூங்குயில தேடி வாடுறேன். ஆண் : சந்தன மாலை அள்ளுது ஆள வாசம் ஏருது. என் கிளி மேல சங்கிலி போல சேர தோணுது. சக்கர ஆல சொக்குது ஆள மாலை மாத்த மாமன் வரட்டுமா…. ஆண் : கண்மணியே…. ஆண் : வழியில பூத்த சாமந்தி நீயே. விழியில சேர்த்த பூங்கொத்து நீயே ஆண் : அடியே அடியே பூங்கொடியே கவலை மறக்கும் தாய் மடியே . அழகே அழகே பெண் அழகே தரையில் நடக்கும் பேரழகே ஆண் : நிழலாட்டம் பின்னால நான் ஓடி வந்தேனே ஒரு வாட்டி என்ன பாரேன் மா ஆண் : பலமுறை நீயும் பாக்காம போனா இரும்புக்கு மேல துரும்பென ஆனேன். உசுர உனக்கே நேந்து விட்டேன் இருந்தும் நெருங்க பயந்துக்கிட்டேன் ஆண் : உயிரே உயிரே என்னுயிரே உலகம் நீதான் வா உயிரே மனசெல்லாம் கண்ணாடி உடைக்காத பந்தாடி வதைக்காத கண்ணே கண்மணியே நெஞ்சுல வீசும் கண்மணி வாசம் காட்டு செண்பகமே சங்கதி பேசும் கண்களும் கூசும் காதல் சந்தனமே ஆண் : பறவை போல பறந்து போக கூட சேர்ந்து நீயும் வருவியா கண்மணியே….. வா….கொஞ்சிடவே….....! --- ஒத்தையடி பாதையில ---

மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் 'குணா குகை' நிகழ்வை தழுவிய இந்த மலையாளப் படம் எப்படி இருக்கிறது?

3 days 3 hours ago
இந்த பகுதியில் கூலி வேலைகளுக்கு சென்றுள்ளேன், காலை உணவாக அவித்த மரவள்ளி கிழங்கும் பிளேன்ரியும் (கட்டன் சாயா என அழைப்பார்கள் என்பதாக நினைவுள்ளது?) வழங்குவார்கள்.

மனிதன் பிறந்த பின் கடவுள் பிறந்தார்

3 days 6 hours ago
இராத்திரி உறக்கங் கொள்ள இயலாமல் போனது. நீலகண்டன் கடிதம் போட்டிருந்தான். குழந்தைக்கு அரையாண்டு விடுமுறை. கிளம்பி வருகிறோம், தன் பிள்ளைக்காக, அவனைப் பார்க்க அவரே விடுமுறை நாளுக்குக் காத்திருத்தல் என்றாச்சு. நகரத்தில் அவன் ஒரு நடமாடும் காந்தம். உயர்ந்த கட்டிடத்தில் உயர்ந்த உத்தியோகம். சட்டை காணாத தன் வாழ்க்கை போல இல்லை இது. நேரமின்றித் தவிக்கிற அவனது கணங்கள். பொற்கணங்கள். கார் வைத்திருக்கிறான். தொலைபேசி எப்போதும் கூடவே. குரைக்கிற நாயைக் கூடக் கூட்டிப் போகிறாப்போல. கிராப் எடுப்பும் உடைகளும், எல்லாமே மாறிவிட்டன. அழுத மூக்கை அவர்தான் சிந்திவிட வேண்டும் என்றிருந்த பிள்ளை. டென்னிஸ் விளையாடுகிறதைப் போல, முன்மடிந்த வாக்கில் ஓடியோடி பந்தடிப்பது போலக் காசு வேட்டையாடுகிறான். சொந்த ஜாகை, வீட்டில் வேலையாட்கள் என அவன் உலகம் விரிந்து விட்டது. சிறகு எனப் பொன்னாடை போர்த்தி அலைகிற மனிதன். குளத்து ஐயருக்கு பிள்ளையையிட்டு எப்பவுமே மயக்கம் சார்ந்த பெருமை உண்டு. பார்த்து எத்தனை நாளாச்சி. அவனும் வரக் கூடாது என்றில்லை. வருகிறதைப் பற்றி நினைக்கவே நேரமில்லை அவனுக்கு. அவளாவது! அவன் மனைவியாவது அவனை ஊக்கி வெளியிடம் நாலு இடம் போக வர என்றிருக்கலாம். அவள் டாக்டர். நகரத்தில் அவளை நம்பி ஆயிரம் ஜனங்கள். தொலைக்காட்சிப் பெட்டியில் சேனல் மாற்றினாற் போல, பாதிப் பேச்சிலேயே அவளுக்கு அழைப்பு வந்து விடும். அந்தப் பொழுதின் முகமே மாறிப்போகும். வேலை அப்படி. அது வேறுலகம் அல்லவா? தனிமைச் சிறு கணங்கள் என்னுடையவை. உலகின் ஒரு பகுதி என தன்னைப் பாராட்டாமல் வாழ்கிற கணங்கள். அவன் வேறு மாதிரி. தன் முனைப்பானவன் – புறப்பட்ட அம்பு. அனுபவங்கள் சிக்காது. தேடிப் போக வேண்டும். கணவனும் மனைவியும் பேசும்போதே திடீரென்று தங்களை அறியாமல் பேச்சு ஆங்கில பாஷையில் மாறிப் போகிறது. அவருக்குப் புரியும் என்றாலும் பேச இந்த வேகம் கிடையாது அவரிடம். அவர்கள் அவருடன் ஆங்கிலத்தில் பேச அவர் தமிழில் பதில் சொல்கிற கணங்கள் அநேகம்! மடப்பள்ளியில் சிறு வெண்கலப்பானைச் சாதம். பிரசாதம் என சந்நிதியில் பிரசாதம் காட்டி எடுத்துக் கொண்டு வருவார். சாம்பார் அல்லது ரசம் அல்லது கொத்துமல்லிச் சட்னி, தேங்காய்த் துவையல் ஏதோ ஒன்று சேர்த்துக் கொள்ள அவர் வயிற்றுப்பாடு தீர்ந்தது. கத்திரிக்காய் அல்லது வெண்டைக்காய் வதக்கல் அல்லது அப்பளம் பொறித்தால் கூடத் தொட்டுக் கொண்டு சாப்பிடத் தாராளம் அல்லவா. மனைவி இல்லாத கணங்களைப் பிரச்சனையாக உணராமல், மனம் அடுத்த சுற்றுக்குப் பழகிக் கொண்டது. கோவில் கைங்கர்யம் பரம்பரை பாத்யதை என்றாச்சி. வம்சாவளியாய் ஊரும் ஊர்மண்ணும் இரத்தத்தில் இருக்கிறது. மண்தாண்டி எல்லை கடக்க மனம் வரமாட்டேனென்கிறது. ”இதெல்லாம் நம்ம பிரமைப்பா” என்கிறான் நீலு. ”உலகமே பிரம்மாண்டமான பிரமைதாண்டா” என்று குளத்து பதில் சொல்லிச் சிரிக்கிறார். ”நாம வாழறதா நினைச்சிக்கறதே ஒரு பாவனைதான்றேன்! நம்மால என்ன முடியுஞ் சொல்லு. அவன் ஆட்டுவிக்கிறான். நாம வெறும் பொம்மை”. ”இன்னும் எத்தனை தலைமுறைக்குச் சபரிமலை இருமுடி போல இப்படித் தூக்கி வெச்சிண்டு திரியப் போறீங்களோ தெரியல” என்று சிரித்தான் நீலு. அவருக்கு நன்றாய் நினைவிருக்கிறது. அப்போது அவன் ஃபோர்த் ஃபார்ம், ஒன்பதாங் கிளாஸ். தனது மூளையைப் பொக்கிஷ அறையாய் அவன் சட்டெனப் பிடித்துக் கொண்டதும், அதில் விளைச்சல் எடுத்த, அறுவடைகண்டு தானியங்களை அவருக்குப் படையல் செய்ததுமான கணங்கள். ”கடவுள் இல்லை” – என்பது அவன் நம்பிக்கை. அவன் வாதம். அந்த-வயதின் வாதம் அது அல்லவா? அந்தந்த வயதுக்கேற்ற எடுப்புகள் வேண்டிதான் இருக்கிறது. சிறு பாலகனாய் அவர் கைப்பிடித்துக் கூட வந்தவன். “அப்பா தூக்கிக்கோ” என்று அழுதவன்தான். இப்போது ரொம்ப தூரம் அவன்கூட அவர் நடந்து வருகையில் அவரைக் கேட்டான் அவன் ”கால் வலிக்கிறதாப்பா?”… அவர் புன்னகைத்துக் கொள்கிறார். “அவன் இருக்க முடியாது. ஆதியில் உலகில் என்ன இருந்தது. எதுவுமேயில்லை” ”ஆமாம், எதுவுமே இல்லை என்று நமக்குப் படுவதில் ஏதோ எப்படியோ மறைந்திருக்கிறது. ஒளிந்திருக்கிறது. என்னவோ மிகப் பெரும் பலத்துடன், என்னமோ மிகப் பெரும் ஆளுமை சக்தி, மிகத் தீர்மானமான சக்தி, அது நம்மை இயக்குகிறது. அதற்கு இறைநம்பிக்கை எனப் பெயர் சூட்டுகிறோம். அவனை நம்மால் நம் சிற்றறிவால் புரிந்து கொள்ள இயலாது என நாம் கட்டாயம் புரிந்து உணர வேண்டும். புரிந்து கொள்ள முயல்கிறோம் மதத்தின் மூலமாக” என்று புன்னகைத்தார் குருக்கள். “இந்தியா ஆன்மிக நாடப்பா” என்றார் மகனைப் பார்த்து. ”இவர்கள் மத நம்பிக்கை மிகப் பெரிய அளவில் கொண்டவர்கள். அதன் சிந்தனையில் திளைத்தவர்கள். ஆகவேதான் அவர்கள் பூஜ்யத்தைக் கண்டு பிடித்தார்கள். வேறு யாராலும் பூஜ்யம் என்ற எண்ணைக் கண்டு பிடித்திருக்கவே முடியாதுதான். விளங்குகிறதா நீலு? பூஜ்யம் எத்தனை புதிர்களைக் கிடுகிடுவென்று முடிச்சு-அவிழ்த்து எறிந்தது இல்லையா? இன்றைய கம்ப்யூட்டர் வரை பூஜ்யம் அற்புதமாய்க் கூட உதவிக்கொண்டே வரவில்லையா நீலு?” அவருக்கே ஆச்சரியம் தான் இவ்வளவு பேசியது – எல்லாம் கடவுள் சித்தம் போலும். ”அப்படியானால் நமது இப்பிறப்பின அர்த்தம் ஊடுபொருள் – சரி… தாத்பர்யம் என்ன?” ”தெரியாது! சந்ததிகளைக் கடந்து மானுடம் மேலும் மேலும் முன்னேறிச் செல்கிறது. இயற்கையை சுவீகரித்துக் கொண்டு தன் அறிவுப்பரப்பை விஸ்தரித்துக் கொண்டு செல்கிறது அல்லவா?” ”ம் – ஓர் எல்லையில் மார்க்சியமும் மதமும் சந்திக்கவே செய்யும். அது முரண் அல்ல” என்றான் நீலு சர்வ அலட்சியமாய். அவர் திகைத்தார். அப்படியா? முரண்களால் அதனிடை ஒற்றுமை. சாத்தியமா இது? கடவுளை அலட்சிக்கிற ஒவ்வொருவனிடமும் கடவுள் இருக்கிறார். அவன் சுயபலனை எதிர்பாராதவன் அல்லவா? அம்மட்டில் பிறரை எதிர்பாராத நேயக்காரன் அல்லவா? ”உலகின் பெரும் புதிரை நோக்கி நாம் நகர்கிறோம் என்று உனக்குப் படாதது வியப்புதான்” ”சரி, அதை வெறும் கடவுளை வணங்குகிற எளிய நிலையில் நாம் வீணடிக்கலாமா? நமக்கு அதற்கு உரிமை உண்டா அப்பா?” ”வளர்ந்த பின் பெற்ற தந்தையைப் பற்றி மறந்து விடுவது போல நீ பேசுகிறாய்” என்று சிரித்தார் குளத்து. ஆனால் குழந்தையின் மழலைத் தத்துவங்கள் அவரை பிரமிப்பில் ஆழ்த்தின. என்னை மறந்து தன் போக்கில் சிறகு விரிக்க அவனுக்குச் சுதந்திரம் தந்தவனே நான்தான். கடவுளும் அத்தகைய ஒரு நிலை எடுத்திருக்க வேண்டும். எதோ ஒரு எதிர்பார்ப்பு அவருக்கு இல்லாமல் எதற்கு நம்மை இந்தப் பூமியில் பிறப்பித்திருக்கக் கூடும். அடேடே இந்தச் சிந்தனையிலேயே முதல் கட்டத்திலும் இரண்டாவது கட்டத்திலும் எத்தனை முரண், சிக்கல்? ”மனிதன் பிறந்த பின் கடவுள் பிறந்தார். அவனது பயம் சார்ந்த பிரதிபிம்பம். பிரமை. பீதியின் நிழல். அவனது மரணத்தின் நிழல்-பிரம்மாண்டம்! அதன் பெயர் கடவுள்” ”மரணம், காலம், கணக்குகள் வாழ்க்கையில் எத்தனை நூல்சிக்கல்கள்!” என்று அவர் பேசுவதை அவன் கைமறித்துத் தடுத்தான். ”மொழியலங்காரச் சிந்தனைகள் வேண்டாம் அப்பா, தயவுசெய்து” என்றான் உடனடியாக. நுணுக்கமான சூட்டிகையான பிள்ளைதான்! அவர் கைப்பிடிக்குள் அவன் இல்லை என விரைவில் அவன் நிரூபித்தான். மண் எல்லை கடந்தான் அவன், அவருக்கு அது வருத்தமாகவும் சந்தோசமாகவும் இருந்தது. கடமைசெய்! பலனை எதிர்பாராதே! கீதை! தனிப்பெரும் தத்துவம் அல்ல அது. இயற்கையின் வாழ்வம்சமே. மிருகங்கள் அப்படியே வாழ்கின்றன அல்லவா? பெத்ததோடு அவை குஞ்சுகளின் இறக்கை முளைக்கும் வரை காத்திருந்து வழியனுப்பி வைத்து விடுகின்றன. இது என் குஞ்சு என வளர்த்த – பெற்ற தாய் பிறிது கண்டு கொள்ளுதல் இயலுமோ? கடவுள் ஊனிலும் உயிரிலும் இருக்கிறான். ஆனால் ஊனில் இல்லை. உயிரில் இல்லை, இரண்டின் கலவையாக இரண்டின் பேரிணைப்பாக நடுவே படைப்பிலக்கிய இரகசியமாய் அவன், உள்க்குறிக்கோள், அம்பின் திசையாய் வேகமாய் அவன், அருவ உருவம் அவன். கடவுளுக்கு உருவம் உண்டா? ”ஏன் இல்லை?” என்றான் நீலகண்டன். ”புராணங்கள் இதிகாசங்கள் மாற்றி மாற்றிச் சொல்கின்றனவே! படைப்பின் உச்சகட்டமான மனிதன்… அவன்தான் கடவுள். அதுவே அவன் உருவம். இறுதி அவதாரம் என விளங்கவில்லையா அப்பா” அவர் அவனைப் பார்த்தார், ”நீங்கள் தினந்தோறும் கற்பூரம் காட்டும் மூல விக்கிரகர், அதில் மனித முக வடிவம் எதற்கு அப்பா?” என்கிறான் அவன் தொடர்ந்து. முரண்களின் சங்கமத்தில் கடவுள் ஒளிந்திருக்கிறார். பிடி கொடுக்காமல். ஆனால் உணர வைக்கிறார். எளிய பரபரப்பில்லாத மனிதன் நான். எனது உயிரை சர்வவியாபியான கடவுளின் துகளாக நான் காண்கிறேன். நீலகண்டன் நியதிகளில் சவாரி செய்தபடி தன்னை பிரபஞ்சத்தின் சாரதி என உணர்கிறான். இரு நிலைகளிலும் கடவுள் இருக்கிறார். முரண்களின் சங்கமமாக! நீலகண்டன் வந்த தினங்களில் மீண்டும் விவாதங்கள் இவ்விதமே வளைய வந்தன. அவற்றின் உச்சபட்ச உக்கிரத்துடன். நாம் சந்திக்கவே முடியாது என்ற கட்டத்தில் சட்டென்று தத்துவங்கள் சந்தித்து விடுகின்றன – ஆச்சர்யம். ”கோவில் எப்படி இருக்குப்பா” என்கிறான் நீலகண்டன். ”அப்டீன்னா?” ”நீங்க இன்னமும் மாறவே இல்லையே” ”நீயும்” என்று சிரித்தார் குளத்து. ”சாயந்தரம் கோவிலுக்கு வாடா! எல்லாருமா வாங்கோ” என்றார் மருமகளைப் பார்த்து. அவன் வந்ததுகூட இல்லை. கூட அவள் அவரைப்பார்க்க வந்தது ஆச்சரியம். ஒரே நாளில் அவள் திரும்பிப் போய்விடுவாள். அவள்வேலை அப்படி,. இம்முறை அவளும் கூட ரெண்டுநாள் தங்கிப் போவதாகச் சொன்னாள். நியதிகளில் அலுத்துப் போய் அவர்கள் வந்திருந்தார்கள் என யூகித்தார். அதைத்தான் அவன் கேட்கிறான் போலும் – அப்பா உங்களுக்கு உங்கள் காலாந்தர நியதிகள் இன்னும் அலுக்கவில்லையா? சுயம் சார்ந்த பிரமைகள் நியதிகளை அலுப்பாய் உணர வைக்கின்றன. சகலத்திலும் தன்னை உணர்ந்ததற்குப் பின் நியதிகளைப் பற்றிய கணிப்புகள் பின்னடைவு கொண்டு நித்தமும் பிரபஞ்ச வாசனை நுகர்ச்சி ஒரு மானுடனுக்கு அலுக்குமோ? அவர் புன்னகை செய்து கொள்கிறார் – அன்று மாலை நீலகண்டன் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்தான். கர்ப்பக்கிரகத்துள் நின்று கற்பூரங் காட்டுகிறார் குருக்கள். நீலகண்டன் கைகட்டி நிற்கிறான் உற்றுக் கடவுளை அவதானித்தபடி! என்ன ஒரு சவால் அந்த நிற்றலில். கடவுள் சந்நிதியில் அவர்முன், இது சாத்தியமா? என்ன அழகான சக்தியாளுமை கொண்ட விக்கிரகம் இது என்கிறார்கள். இவனுக்கான அனுபவம் என எதுவும் இராதா? கற்பூரத்தட்டை நீலகண்டன் முன் நீட்டிக் காட்டினார் குருக்கள். குனிந்து நெற்றியில் கற்பூரத்தட்டின் திருநீற்றை எடுத்து அவன் பூசிக் கொண்ட கணம் அவர் முதுகுசிலிர்ப்புடன் – யாரோ பார்க்கிற பிரமையில், திரும்பிப் பார்த்தார், சந்நிதியில் உள்ளே மனிதன். ம் மனிதன். கடவுள் விக்கிரகமல்ல. அவன்! மனிதன். நீலகண்டனைப் பார்த்து அந்த கற்பூர ஆராதனைக்குக் கும்பிட்டாற்போல இருந்தது. – ஜூலை 2007 https://engalblog.blogspot.com/2024/05/positive.html

மோடி மீண்டும் பிரதமரானால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்போம்” – இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

3 days 6 hours ago
13 MAY, 2024 | 10:05 AM நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியையும் இந்தியாவுடன் இணைப்போம் என இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மூன்று கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவுகள் வரும் வாரங்களில் நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதாகவும் அவர்களும் ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்பதால் அவர்களுடன் நாம் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மணிசங்கர் ஐயர் பேசிய காணொலி ஒன்று சமீபத்தில் வைரலானது. அவரது பேச்சை பாஜக-வினர் விமர்சித்து வரும் நிலையில் மணிசங்கர் ஐயரின் கருத்தில் உடன்பாடு இல்லை என காங்கிரஸ் கட்சி விளக்கமளித்துள்ளது. தெலங்கானா மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நாளை (மே.13) வாக்கு பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில்இ தெலங்கானாவில் நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாஇ நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியையும் இந்தியாவுடன் இணைப்போம் என்று தெரிவித்துள்ளார். “அணுகுண்டு மீதான பயம் காரணமாகஇ அவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீதான நமது உரிமைகளை விட்டுக்கொடுக்க நினைக்கிறார்கள். ஆனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம் நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியையும் இந்தியாவுடன் இணைப்போம். பாகிஸ்தானின் தோட்டாக்களுக்கு பீரங்கிகளால் பதில் அளிக்கப்படும்.” இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். https://www.virakesari.lk/article/183375

குழந்தைகள் மீது 33 ஆண்டுகள் நடந்த கொடிய பரிசோதனை - மஞ்சள் மாளிகை மர்மம் என்ன?

3 days 6 hours ago
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அவுட்லுக் தொடர் பதவி, பிபிசி உலக சேவை 12 மே 2024 "ஆஸ்திரியாவில் நான் வசித்த நகரத்தை பற்றி கூகுள் செய்த போது எதேச்சையாக அந்த குழந்தைகள் கண்காணிப்பு மையத்தின் பெயரை திரையில் பார்த்தேன். என்னால் நம்பவே முடியவில்லை. நான் இதுவரை யாரிடமும் பகிர்ந்திராத நினைவுகள் எனக்குள் இருந்தன, அந்த பெயரை பார்த்ததும், திடீரென எனக்குள் தேக்கி வைத்திருந்த அந்த உணர்வுகள் வெடித்தன, நான் வீட்டை விட்டு வெளியேறினேன்... நான் மலை உச்சியில் இருந்து அந்த பெயரை கத்த விரும்பினேன்!" என்று ஈவி மேகஸ் விவரித்தார். ஒரு இணையத் தேடலில், ஈவி மேகஸ் வாழ்க்கையின் கடந்த காலத்திலிருந்த ஒரு தீய சக்தி மீண்டும் அவரின் கண் முன் தோன்றியது. `இன்’ நதியின் பள்ளத்தாக்கின் சரிவுகளில், பனி மூடிய ஆஸ்திரிய ஆல்ப்ஸ் மலைத் தொடரின் நிழலில் அமைந்திருக்கும் வெளிறிய மஞ்சள் நிற வீட்டின் புகைப்படம் அது. இப்போது அந்த மஞ்சள் வீடு ஒரு அடுக்குமாடி கட்டிடமாக உருமாறி இருந்தது. ஆனால் அதன் சுவர்கள், இன்னமும் பல ஆண்டுகளுக்கு முன்பு அந்த கட்டிடத்தில் வாழ்ந்த ஈவி போன்ற குழந்தைகளிடம் மறைக்கப்பட்ட ஒரு பயங்கரமான ரகசியத்தை ஒளித்து வைத்திருந்தது. ஆஸ்திரியாவை பூர்விகமாக கொண்ட ஈவி, விருது பெற்ற புகைப்பட பத்திரிகையாளர். தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். ஆனால் அவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை, தன் குழந்தைப் பருவத்தின் இருண்ட அத்தியாயத்தை தனது மனதில் பூட்டி வைத்திருந்தார். தனது உயிரைக் காப்பாற்றிய சிகிச்சையாளரிடம் கூட இந்த உண்மைகளை ஈவி சொல்லவில்லை. பட மூலாதாரம்,EVY MAGES ஈவியின் வாழ்க்கையில் இரண்டு கருப்பு அத்தியாயங்கள் இருந்தன. ஒன்று அவரின் வீடு, மற்றொன்று அந்த மஞ்சள் நிற குழந்தைகள் கண்காணிப்பு மையம். முதல் அத்தியாயத்தில் சரியான குடும்ப அமைப்பு இன்றி தனிமையில் எப்போதும் கொந்தளிப்பான மனநிலையில் இருந்துள்ளார். ஆஸ்திரியாவில் இருந்தவரை அவருக்கு சில இனிமையான நினைவுகள் இருந்தாலும், பெரும்பகுதி கசப்பான நினைவுகளை கொண்டிருந்தது. எனவே அவர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த பின்னர், ஆஸ்திரியா பற்றிய கடினமான நினைவுகள் மீண்டும் தோன்றுவதை தடுக்கும் முயற்சியில், அவர் அங்கு திரும்பி செல்லக்கூடாது என்றும் ஜெர்மன் மொழியைப் பேச மாட்டேன் என்று சத்தியம் செய்தார். ஆனால் உண்மை வேறு. அவர் அந்த நினைவுகளில் இருந்து தன்னை விடுவிக்க முயன்றாலும், அவை ஆழ்மனதில் நிரந்தரமான வலியை ஏற்படுத்தி கொண்டிருந்தன. சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த குழந்தைகள் கண்காணிப்பு மையத்தை பற்றிய இணையத் தேடலுடன், தனக்குள் புதைந்திருக்கும் கொடிய நினைவுகளை மீண்டும் எதிர்கொள்ளத் தொடங்கினார். ஒருவழியாக அந்த சம்பவங்களை வெளியே சொல்லும் தைரியம் அவருக்கு வந்தது. குழந்தை பருவத்தில் நடந்தவற்றை, 59 வயதான ஈவி பகிர்ந்து கொண்டார். ஈவியின் தற்போதைய வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் உள்ளது. ஆனாலும் துன்பகரமான குழந்தை பருவத்தை பற்றி சொல்லும் போது, சிரமத்துடனும் பதற்றத்துடனும் காணப்படுகிறார். பட மூலாதாரம்,EVY MAGES படக்குறிப்பு,8 வயதில் ஈவி ஈவியின் மகள் லில்லி மற்றும் ஒரு நண்பருடன் உரையாடிக் கொண்டிருக்கையில் அவர் தனது குழந்தைப் பருவத்தைப் பற்றி அவர்களிடம் பகிர்ந்து கொள்ள முற்பட்டார். "நான் என் கடந்த காலத்தைப் பற்றி மிகவும் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் பகிர்ந்தேன். ஆனால் குழந்தைகள் கண்காணிப்பு மையம் என்ற பெயரில் இயங்கிய அந்த மனநல மருத்துவமனையில் நான் வைக்கப்பட்ட அத்தியாயத்தை மட்டும் ரகசியமாக வைத்துக் கொண்டேன். ஏனென்றால் அது இருட்டு, வலி.. என்னோடு போகட்டும்” ஒரு நாள், ஈவி தனிமையில் இருந்தபோது, அவருக்கு சட்டென நினைவுக்கு வந்த ஆஸ்திரிய நகரான இன்ஸ்ப்ரூக்கில் ஒரு முகவரியை இணையத்தில் தேடினார், அப்போது தான் அந்த ’வார்த்தை’ அவர் கண்களில் தென்பட்டது. " `Kinderbeobachtungsstation” .. ஆம் இது தான் அந்த குழந்தைகள் காப்பகத்தின் பெயர். அதன் பொருள் 'குழந்தைகள் கண்காணிப்பு நிலையம்’. டாக்டர் மரியா நோவாக்-வோக்ல்...,' என்று தொடர்ந்து படித்த போது, ஆமாம், அவர்தான் அந்த மருத்துவர் என்று நினைக்கிறேன். இதுதான் அந்த இடம் என்று நினைத்தேன்." Kinderbeobachtungsstation என்பது ஈவிக்கு ஒரு புதிய பெயர்; ஆனால் அந்த காப்பகத்தை வழி நடத்திய அந்த நபரை ஈவிக்கு நன்றாக தெரியும். அந்த நினைவுகள் அவர் மனதில் மெல்லமெல்ல எழ ஆரம்பித்தது. மேலும் அந்த இடத்தை பற்றி இணையத்தில் இருந்த பலவற்றைக் கண்டுபிடித்தார். அங்கு வளர்ந்த மற்றவர்களும் தங்களின் கொடிய அனுபவத்தை பகிர்ந்திருந்தனர். பல விரிவான தகவல்கள் கிடைத்தன. ஈவி அவற்றை அவநம்பிக்கையுடன் படித்தார். குழந்தை பருவத்தில் ஈவியை அங்கு அனுப்பி வைத்தவர்கள், குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிகிச்சை மையம் என்றே சொல்லி சேர்த்து விட்டனர். ஆனால் அதன் நோக்கம் மிகவும் மோசமானது என்பதை அவர் பின்னர் தான் உணர்ந்தார். அவர்கள் ஈவி போன்ற குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக அங்கு அழைத்துச் செல்லவில்லை, மாறாக அங்கு ஒரு பெரிய பரிசோதனைக்கு குழந்தைகள் உட்படுத்தப்பட்டனர். ஓர் இருண்ட இரவு பட மூலாதாரம்,GETTY படக்குறிப்பு,ஈவி மஞ்சள் நிற சூரியகாந்தியை வழக்கமாக வாங்குகிறார்.. இன்ஸ்ப்ரூக்கில் உள்ள அந்த மஞ்சள் வீட்டில் தன்னை வைத்து என்ன பரிசோதனை செய்தார்கள் என்பதை இப்போது அவர் அறிய விரும்பினார். "என்னை என்ன செய்தார்கள்?’’ குழந்தை பருவத்தில் தனக்கு இருண்ட அறையில் நடந்ததை பற்றி ஈவி தற்போது கண்டுபிடிக்க முடிவு செய்தார். " எட்டு வயது சிறுமியாக இருந்த போது எனக்கு அது நடந்தது. அந்த கண்காணிப்பு மையத்தின் இருட்டு அறையில் எனக்கு என்ன நடந்தது என்பது புரியவில்லை. அதன் தாக்கம் 60 வயதை கடந்தும் எனக்குள் இருக்கிறது. இப்போதும் நான் இருட்டைக் கண்டு பயப்படுகிறேன், எனவே நான் எல்லா நேரங்களிலும் விளக்கை எரிய விடுகிறேன். எனக்கு மஞ்சள் மீது வெறுப்பு உள்ளது. இந்த நிறம் என் அனுபவத்தை தொடர்ந்து நினைவூட்டுகிறது. மஞ்சள் நிறத்துடன் சமாதானம் செய்வது எனக்கு ஒரு சவாலாக உள்ளது. மஞ்சள் அந்த வீட்டின் நிறம் மட்டும் அல்ல. சூரியன், பூக்கள் மற்றும் ஒளியின் நிறம் என்பதை நினைவூட்ட முயற்சிக்கிறேன்." கடந்த காலத்தை பற்றி மீண்டும் ஆராய வேண்டுமெனில் இந்த பயத்திலிருந்து விடுபட வேண்டும். எனவே ஈவி மஞ்சள் நிற சூரியகாந்தியை வழக்கமாக வாங்குகிறார். ஈவி 60களின் நடுப்பகுதியில் ஆஸ்திரியாவில் பிறந்த போது, அவரது தாயாருக்கு திருமணமாகவில்லை, எனவே அந்த சமயத்தில் ஈவி மீதும் அவரது தாயின் மீதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. சமூகத்தின் பார்வையில் இருவரும் தவறாக தெரிந்தனர். சரியான குடும்ப சூழல் அமையாததால், ஈவி அனாதை இல்லங்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மையங்களின் பராமரிப்பில் வளர்ந்தார். பின்னர், ஈவி தனது வளர்ப்பு தாய் 'ஆனி' நடத்தி வந்த விடுதியில் ஒரு தத்தெடுக்கப்பட்ட குடும்பத்துடன் சேர்ந்து வசித்து வந்தார். "என் வளர்ப்பு தாயான ஆனிக்கு என்னைப் பிடிக்கவில்லை, என்னை தொல்லைமிகு உயிரினமாக பார்த்தார். சதா என்னை திட்டி கொண்டே இருப்பார். விடுதியில் இருந்த பாதிரியாரும் என்னை மிகவும் கண்டிப்பாக நடத்துவார். நான் முட்டாள்தனமாக இருந்ததற்காகவும், என் அம்மாவுக்கு கஷ்டம் கொடுப்பதற்காகவும் என்னைத் திட்டி கொண்டிருப்பார்." "எனக்கு 4 வயது இருக்கும். எனக்கு நினைவில் இருப்பதெல்லாம் ஆனி என்னை திட்டியது மட்டும் தான். வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியதாக என்னைக் குற்றம் சாட்டினார். பாத்திரங்களை உடைக்கிறேன். சுவற்றில் கிறுக்குகிறேன் என்று காரணங்களை சொல்லி திட்டுவார். ஆனால் நான் எதையும் செய்யவில்லை. செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வரை என்னை அடிப்பார், பின்னர் மணிக்கணக்கில் அறைக்குள் அடைத்து தண்டனை கொடுப்பார்.” "அச்சுறுத்தல்கள், அவமானங்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு உட்பட்டு, டிசம்பர் 1973 இன் இறுதியில் ஓர் இரவில் அங்கிருந்து நான் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டேன். அப்போது எனக்கு 8 வயது. இன்ஸ்ப்ரூக்கில் உள்ள மஞ்சள் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்."என்றார். பட மூலாதாரம்,EVY MAGES படக்குறிப்பு,6 அல்லது 7 வயதாக இருந்தபோது ஈவி.. அன்று நடு ராத்திரியில் என் வீட்டில், யாரோ வந்து என்னை கட்டிலில் இருந்து தூக்கி சென்று, காரில் ஏற்றினார்கள். அப்போது இருட்டாக இருந்தது, குளிர்ந்தது, நான் மிகவும் பயந்தேன். யாரும் எதுவுமே பேசவில்லை, நாங்கள் நீண்ட நேரம் பயணித்தோம். காரில் யார் இருந்தார்கள் என்பது எனக்கு நினைவில் இல்லை, ஆனால் நாங்கள் இன்ஸ்ப்ரூக் வந்தடைந்த போது என்னுடன் ஆனி இருந்ததாக எனக்கு நினைவிருக்கிறது. அவர்கள் எனக்கு சீருடை, உள்ளாடைகள் மற்றும் போர்வை உள்ளிட்டவற்றை கொடுத்தனர். எனக்கு நினைவிருக்கிறது, அந்த வீட்டின் உட்புற சுவர்களில் எல்லா இடங்களும் மரத்தால் செய்யப்பட்டிருந்தது, ஹால்வேயில் ஒரு பெரிய மீன் தொட்டி இருந்தது. இரண்டாவது மாடியில், ஒரு ஜன்னல் கொண்ட ஒரு பெரிய அறை இருந்தது, வரிசையாக படுக்கைகள் இருந்தன. கட்டிலில் ஒவ்வொரு குழந்தையையும் அடையாளம் காணும் தனி வண்ணங்கள் பூசப்பட்டிருந்தன. என் கட்டிலில் மஞ்சள் நிறம் பூசப்பட்டிருந்தது. அது ஒரு மனநல மருத்துவமனை என்பதை எப்போது உணர்ந்தேன் என்று சரியாக நினைவில்லை. வெள்ளை கோட் அணிந்த பெரியவர்கள் தான் என் நினைவுக்கு வருகிறார்கள். அந்த அறையின் கதவுக்கு மேல் ஸ்பீக்கர் இருந்தது, பகல் முழுவதும் பல ஒலிகள் மற்றும் அலாரங்களை அது உருவாக்கியது." குழப்பமும் பயமுமாக அந்த இடத்தின் விதிகளைப் பின்பற்ற ஆரம்பித்தேன். அவர்கள் எங்களை பேச விடவில்லை, சைகையால் பேச வேண்டும், இல்லையெனில் சுருக்கமாக பேச வேண்டும். எதையும் செய்வதற்கு முன் நாங்கள் அனுமதி கேட்க வேண்டும். உதாரணமாக, 'தயவுசெய்து, பல் துலக்க வேண்டும்’ , சாப்பிடும் போது, 'ப்ளீஸ், ஸ்பூன்' என்று சொல்ல வேண்டும். தட்டில் உள்ள அனைத்தையும் நாங்கள் சாப்பிட வேண்டும். மீதம் வைத்தால், அந்த தட்டில் இருக்கும் உணவு கெட்டு போனாலும், அடுத்த வேளைக்கு அதையே கொடுத்து சாப்பிட சொல்வார்கள். கொடூர மருத்துவர் பட மூலாதாரம்,GETTY படக்குறிப்பு,குழந்தைகளுக்கு அடிக்கடி ஊசி போடப்பட்டது, ஆனால் ஏன் என்று யாருக்கும் தெரியாது. ஈவி மற்றும் இளம் குழந்தைகளின் வாழ்க்கையை நிர்வகித்த, அந்த மையத்தை நடத்திய மனநல மருத்துவரின் பெயர் டாக்டர் மரியா நோவாக்-வோக்ல். "அவர் ஜெர்மனியின் நாஜிகளால் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு மருத்துவர் மற்றும் அந்த சித்தாந்தத்தை கொண்டிருந்தார். ஆனால் ஆஸ்திரியாவில் அவர் அனைவராலும் மதிக்கப்பட்டார். அவர் குழந்தைகள் மற்றும் இளம்பருவ மனநல மருத்துவத்தில் நிபுணராக கருதப்பட்டார். ஆஸ்திரிய குழந்தைகள் சுகாதார அமைப்புடன் அவர் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தார், எனவே அவரது பரிசோதனைக்கு அதிக அளவில் குழந்தைகள் தரப்பட்டனர்." மஞ்சள் மாளிகையில் என்ன நடக்கிறது என்பது குறித்து நோவாக்-வோகல் ஒரு நாள் எங்கள் முன்னிலையில் கூறினார். அனைத்து குழந்தைகளும் பின்பற்ற வேண்டிய விதிகள் மற்றும் தனது ஊழியர்களுக்கான வழிமுறைகளின் பட்டியலையும் அவர் சொன்னார்.” "இது மிகவும் நீளமானது மற்றும் அபத்தமானது. அவர்கள் குழந்தைகளின் அனைத்து பழக்கவழக்கங்களையும் கண்காணிப்பார்கள். எங்களின் குளியல் அறையை கூட பார்ப்பார்கள். இது மிகவும் ஊடுருவும் சூழல். எங்கள் கனவுகளை கூட அவர்களிடம் சொல்லும்படி வற்புறுத்தினார்கள்." குழந்தைகள் அங்கு பயத்தில் வாழ்ந்தனர். ஈவி வேண்டுமென்றே விதிகளை மீறிய ஒரு குழப்பமான தருணத்தை தெளிவாக நினைவு கூர்ந்தார். "அன்று ஏதோ இனிப்பு தருவதாக வரிசையாக வரச் சொல்லி இருந்தார்கள், அதைக் கொடுத்த போது, அந்த இனிப்பு முழுக்க எறும்புகள் நிறைந்திருப்பதை கண்டு நான் பயந்தேன். நான் ஓ வென கத்தினேன், கவுன் அணிந்த பெரியவர்கள் என்னைத் தூக்கி வெளியே அழைத்துச் சென்று அடிக் கொடுத்தார்கள்.” இது அடிக்கடி நடந்தது, ஆனால் ஈவி மற்றும் மற்ற குழந்தைகளுக்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் இருந்தனர். பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் யாரும் அவர்களுக்கு இல்லை. கொடிய சிகிச்சை முறை ஈவி இவற்றை பற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு விசாரணையைத் தொடங்கியபோது, அதிர்ச்சியான ஒன்றைக் கண்டுபிடித்தார். "சிகிச்சைகள்" நோவாக்-வோகல் குழந்தைகளுக்கு ரோஹிப்னோல் உட்பட வலுவான மயக்க மருந்துகளை வழங்கி இருக்கிறார், மேலும் எபிஃபிசன் என்ற விசித்திரமான ஹார்மோனையும் உட்செலுத்தி இருக்கிறார். எபிஃபிசன் என்பது கால்நடைகளின் பினியல் சுரப்பிகளில் இருந்து பெறப்பட்டதாகும். இதனை கால்நடை மருத்துவர்கள் கால்நடைகள் மற்றும் பசுக்களில் வெப்பத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தினர். இது மனிதர்களுக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று யாருக்கும் தெரியவில்லை என்றாலும், குழந்தைகளின் பாலியல் உணர்வுகளை அடக்கவும், சுயஇன்ப உணர்வை கட்டுப்படுத்தவும், நோவாக்-வோகல் இதை சோதித்திருக்கிறார் என்பது இப்போது எனக்கு தெரிய வந்தது. அவர் உடலுறவு மற்றும் குழந்தைகள் பாலுறவு மீது வெறுப்பாக இருந்தார். நாங்கள் அவருடைய சோதனைப் பொருட்களாக இருந்தோம். அவர் எங்களை விலங்குகளைப் போல நடத்தினார். சக்தி வாய்ந்த மருந்துகளை எங்களுக்கு கொடுத்தார்." நோவாக்-வோகலைப் பற்றி ஈவி எவ்வளவு அதிகமாக கண்டுபிடித்தாரோ, அவ்வளவு அதிகமாக அவள் வருத்தமடைந்தார். குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதில் அந்த மருத்துவரின் அணுகுமுறை, நாஜி கண்ணோட்டத்தின் தாக்கத்தால் தோன்றியிருக்கலாம். பராமரிப்பில் உள்ள பிரச்னையுள்ள குழந்தைகளின் குறைபாடுகள் மரபணு அடிப்படையைக் கொண்டு இருப்பதாக அவர் நம்புகிறார். அந்த நேரத்தில் ஆஸ்திரிய கத்தோலிக்கத்தின் மிகவும் பழமைவாதம் பின்பற்றப்பட்டு வந்ததால் ஈவி போன்ற குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தியது. "திருமணமாகாத தாயின் மகளாக இருப்பதால், என்னைப் போன்ற குழந்தைகள் ஒழுக்கம் இல்லாதவர்கள் என்ற அவர்களின் நம்பிக்கைகளுக்கு நான் பலியானேன். அவர்களை பொருத்தவரை நாங்கள் தேவையற்றவர்கள், சமூகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள்." நோவாக்-வோகலை பொறுத்தவரை, இடது கை பழக்கம் உள்ள குழந்தைகள், படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகள், சுய இன்பம் செய்யும் குழந்தைகள் மோசமான பிறப்பை கொண்டவர்கள் என்று நம்பினார். ஆஸ்திரிய சமுதாயத்தைப் பாதுகாக்க, அத்தகைய "குறைபாடுள்ள குழந்தைகளை" கவனித்துக் கொள்வதை விட சரிசெய்ய வேண்டும் என்று அவர் நம்பினார். மேலும் அவர்களை, கீழ்ப்படிய வைத்து, அவர்களது பாலியல் உணர்வை மாற்றி, சாதாரண நபர்களாக மாற்றுவதை அவர் தனது பணியாக மாற்றினார். அங்கு இரவுகள் மிகவும் பயங்கரமானவை. நாங்கள் ஒருவரையொருவர் தொடாதபடி எங்கள் அக்குளுக்கு கீழே போர்வை மற்றும் அதன் மேல் கைகளை வைத்துக் கொண்டு படுக்கைக்குச் செல்வோம். மெத்தைகளில் உள்ளமைக்கப்பட்ட அலாரம் இருந்தது, அது யார் படுக்கையை நனைத்தாலும் அவர்களை எச்சரித்தது. அப்படி படுகையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு வெள்ளை கோட் அணிந்தவர்கள் தண்டனையாக குளிர்ந்த நீரில் குளிக்க செய்வார்கள். பின்னர் நீங்கள் ஹால்வேயின் மூலையில் நிற்க வேண்டும். அடுத்த நாள், குழந்தைகள் படுக்கையை நனைத்த குழந்தையின் படுக்கையைச் சுற்றி நின்று அவரைப் பார்த்து அவமானப்படுத்தி சிரிக்க வேண்டும்." வலியின் சுவடுகள் பட மூலாதாரம்,EVY MAGES படக்குறிப்பு,ஈவி தனது கடந்த காலத்தைக் கண்டறிய ஆஸ்திரியாவுக்குச் சென்ற பயணங்களில் ஒன்றில் தனது குழந்தைகளுடன். தற்போது, அந்த இடத்தைப் பற்றி ஈவி கண்டுபிடித்தது உண்மையிலேயே பயங்கரமானது, ஆனால் அது அவளுடைய நினைவுகளை அவற்றின் சரியான சூழலில் வைக்க உதவியது. அப்போது தனக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள உதவியது. "அந்த மஞ்சள் வீடு 3,650 க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாதித்தது என்பதைக் கண்டுபிடித்தது முற்றிலும் அதிர்ச்சியாக இருந்தது." 2013 ஆம் ஆண்டில், இன்ஸ்ப்ரூக் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையின் கீழ் உள்ள நிபுணர்கள் குழு, இந்த மையத்தின் மீது ஒரு அறிக்கையை வெளியிட்டது, நோவாக்-வோகல் "குறைபாடுள்ள" குழந்தைகளை கையாள்வதற்கான சாக்குப்போக்கின் கீழ் பல்வேறு துஷ்பிரயோகங்களை செய்ததாக அந்த அறிக்கை கூறியது. Kinderbeobachtungsstation ஐ "வளர்ப்பு இல்லம், சிறைச்சாலை மற்றும் சோதனை கிளினிக்" என்று விவரித்தது, அங்கு 7 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பல மாதங்கள் அனுமதிக்கப்பட்டனர். மஞ்சள் மாளிகை 1954 முதல் 1987 வரை 33 ஆண்டுகள் செயல்பட்டது. அவரது மையம் மூடப்பட்ட பிறகும், நோவாக்-வோகல் பல்கலைக் கழகங்களில் விரிவுரை பணியைத் தொடர்ந்தார் மற்றும் 1998 இல் அவர் இறப்பதற்கு முன்பு கத்தோலிக்க திருச்சபையிலிருந்து பதக்கம் பெற்றார். அவரது கட்டுப்பாட்டில் இருந்த குழந்தைகள் இந்த விதிமுறைகளை ஒருபோதும் கேள்வி கேட்கவில்லை என்பதில் ஆச்சரியமில்லை. "என்னை இன்ஸ்ப்ரூக்கில் சேர்த்தது என் தவறு என்று நான் நம்பினேன். என்னை நானே குற்றம் செய்தவள் என்று நம்பினேன். நிறைய குழந்தைகள் அப்படித்தான் நம்பினார்கள்” ஈவி ஏன் அங்கு அழைத்துச் செல்லப்பட்டார் அல்லது ஒரு கட்டத்தில் அவர் ஏன் எதிர்பாராத விதமாக வளர்ப்புத் தாயான ஆனியுடன் வாழத் திருப்பி அனுப்பப்பட்டார் என்று ஈவி ஒருபோதும் கண்டுபிடிக்கவில்லை. "மீண்டும் ஆனியிடம் வந்து சேர்ந்தேன். அங்கிருந்த கொடுமைகளுக்கு இது தேவலாம் போலிருந்தது. அன்று இரவு சாப்பாட்டு மேசையில், ஆனி குனிந்து, நாற்காலியில் ஒரு சிறிய கீறலைக் காட்டி, இது உன் வேலையா என்று திட்டத் தொடங்கினார். என் இதயம் நடுங்கியது. மீண்டும் மற்றொரு கொடுமை தொடங்கியது." பட மூலாதாரம்,EVY MAGES படக்குறிப்பு,ஈவி, Kinderbeobachtungsstation இல் தனது கோப்பில் ஸ்டேபிள் செய்யப்பட்ட புகைப்படத்தை வைத்திருக்கிறார் . "ஓரளவுக்கு சுயமாக முடிவெடுக்கும் வயது வந்த போது, ஆஸ்திரியாவை விட்டு வெளியேறினேன். அதுவரை ஆனியை சகிக்க வேண்டியிருந்தது. நண்பர்களின் உதவியுடனும், கரீபியனில் ஒரு பயணக் கப்பலில் வேலை கிடைத்தது. அதன் பின் நியூயார்க் வந்தேன். எனக்கு இந்த புதிய வாழ்க்கை பிடித்தது. என்னை யாரும் குறை சொல்லவில்லை. தண்டிக்கவில்லை. நான் நிம்மதியாக உணர்ந்த முதல் இடம் நியூயார்க் தான்" அங்கிருந்து என்னால் தப்பிக்க முடிந்தது. புதிய எல்லைகளை அடைந்தேன். ஆனால் எனக்கு நடந்த கொடுமைகளால் மனநோயாளி ஆனேன். ஆழமாக பாதிக்கப்பட்டேன். தூங்குவதில் மிகவும் சிரமப்பட்டேன், சாப்பிட முடியவில்லை. Kinderbeobachtungsstation இல் இருந்த பிறகு , மனநல மருத்துவத்தின் மீது எனக்கு ஏற்பட்ட அவநம்பிக்கை காரணமாக நான் ஒருபோதும் உளவியலாளரின் உதவியை நாட போவதில்லை என்று முடிவெடுத்திருந்தேன். ஆனால், எனக்கு கிட்டத்தட்ட 30 வயதாக இருந்தபோது தான் மனநல சிகிச்சை உண்மையில் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து என்னால் சிகிச்சைக்கு செல்ல முடிந்தது." முதலில் நியூயார்க்கிலும் பின்னர் வாஷிங்டனிலும், ஈவி ஒரு புகைப்படக் கலைஞராக ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்கினார், காதலித்தார், திருமணம் செய்து கொண்டார், மூன்று குழந்தைகள் மற்றும் பல பூனைகளுக்கு தாயாக நிம்மதியாக வாழ்ந்தார். 2021 ஆம் ஆண்டில், மஞ்சள் மாளிகை பற்றிய உண்மையை கண்டுபிடித்த போது, ஈவி தன் குடும்பத்தினரின் அன்பால் சூழப்பட்டிருந்தார். கடந்த காலத்தின் பயங்கரங்களுக்கு விடை தேடி அவர் ஆஸ்திரியா திரும்பிய போது ஈவியின் குழந்தைகள் அனைவரும் அவருடன் சென்றனர். மஞ்சள் வீட்டில் என்ன நடந்தது என்பதை விசாரிக்கும் அதிகாரப்பூர்வ ஆணையம் இருப்பதை அவர்கள் அறிந்தனர் மற்றும் ஈவி அவர்களிடம் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். "மற்றொரு பயணத்தில் என்னை வளர்த்த ஆனியைப் பார்க்க சென்றேன். அவர் என்னை பார்த்துவிட்டு வெளியே போ என்று சொல்வார் என்று நான் நினைத்தேன். உண்மையில் நம்ப முடியாத ஒன்றை எதிர்கொண்டேன். என்னைப் பார்த்து என் மகளை சந்தித்ததில் மகிழ்ச்சி என்றார். அன்பான ஒரு வயதான பெண்ணை அன்று நான் சந்தித்தேன்." ஆனி என்னிடம் மன்னிப்பு கேட்டு அழுதார். நான் ஆறுதல்படுத்தினேன். நான் அவருக்கு தீங்கு செய்ய விரும்பவில்லை. அதே சமயம் குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களை நான் மன்னிப்பதில்லை." இப்போதெல்லாம் ஈவி நிம்மதியாக தூங்குகிறார், கடந்த காலத்தை பற்றி நினைப்பதில்லை. "நான் கண்டறிந்த உண்மைகள் என்னை மாற்றின. இனி குற்றவுணர்ச்சிக்கும் பயத்துக்கும் இடமில்லை. நான் நன்றாக தூங்குகிறேன், நான் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறேன்." என்கிறார் ஈவி உற்சாகத்துடன். https://www.virakesari.lk/article/183355

குழந்தைகள் மீது 33 ஆண்டுகள் நடந்த கொடிய பரிசோதனை - மஞ்சள் மாளிகை மர்மம் என்ன?

3 days 6 hours ago
மஞ்சள் மாளிகை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், அவுட்லுக் தொடர்
  • பதவி, பிபிசி உலக சேவை
  • 12 மே 2024

"ஆஸ்திரியாவில் நான் வசித்த நகரத்தை பற்றி கூகுள் செய்த போது எதேச்சையாக அந்த குழந்தைகள் கண்காணிப்பு மையத்தின் பெயரை திரையில் பார்த்தேன். என்னால் நம்பவே முடியவில்லை. நான் இதுவரை யாரிடமும் பகிர்ந்திராத நினைவுகள் எனக்குள் இருந்தன, அந்த பெயரை பார்த்ததும், திடீரென எனக்குள் தேக்கி வைத்திருந்த அந்த உணர்வுகள் வெடித்தன, நான் வீட்டை விட்டு வெளியேறினேன்... நான் மலை உச்சியில் இருந்து அந்த பெயரை கத்த விரும்பினேன்!" என்று ஈவி மேகஸ் விவரித்தார்.

ஒரு இணையத் தேடலில், ஈவி மேகஸ் வாழ்க்கையின் கடந்த காலத்திலிருந்த ஒரு தீய சக்தி மீண்டும் அவரின் கண் முன் தோன்றியது.

`இன்’ நதியின் பள்ளத்தாக்கின் சரிவுகளில், பனி மூடிய ஆஸ்திரிய ஆல்ப்ஸ் மலைத் தொடரின் நிழலில் அமைந்திருக்கும் வெளிறிய மஞ்சள் நிற வீட்டின் புகைப்படம் அது.

இப்போது அந்த மஞ்சள் வீடு ஒரு அடுக்குமாடி கட்டிடமாக உருமாறி இருந்தது. ஆனால் அதன் சுவர்கள், இன்னமும் பல ஆண்டுகளுக்கு முன்பு அந்த கட்டிடத்தில் வாழ்ந்த ஈவி போன்ற குழந்தைகளிடம் மறைக்கப்பட்ட ஒரு பயங்கரமான ரகசியத்தை ஒளித்து வைத்திருந்தது.

ஆஸ்திரியாவை பூர்விகமாக கொண்ட ஈவி, விருது பெற்ற புகைப்பட பத்திரிகையாளர். தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். ஆனால் அவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை, தன் குழந்தைப் பருவத்தின் இருண்ட அத்தியாயத்தை தனது மனதில் பூட்டி வைத்திருந்தார். தனது உயிரைக் காப்பாற்றிய சிகிச்சையாளரிடம் கூட இந்த உண்மைகளை ஈவி சொல்லவில்லை.

குழந்தைகள் மீது கொடிய பரிசோதனை செய்த மருத்துவர் : ஆல்ப்ஸ் மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் மஞ்சள் வீட்டின் பின்னணி

பட மூலாதாரம்,EVY MAGES

ஈவியின் வாழ்க்கையில் இரண்டு கருப்பு அத்தியாயங்கள் இருந்தன. ஒன்று அவரின் வீடு, மற்றொன்று அந்த மஞ்சள் நிற குழந்தைகள் கண்காணிப்பு மையம். முதல் அத்தியாயத்தில் சரியான குடும்ப அமைப்பு இன்றி தனிமையில் எப்போதும் கொந்தளிப்பான மனநிலையில் இருந்துள்ளார். ஆஸ்திரியாவில் இருந்தவரை அவருக்கு சில இனிமையான நினைவுகள் இருந்தாலும், பெரும்பகுதி கசப்பான நினைவுகளை கொண்டிருந்தது. எனவே அவர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த பின்னர், ஆஸ்திரியா பற்றிய கடினமான நினைவுகள் மீண்டும் தோன்றுவதை தடுக்கும் முயற்சியில், அவர் அங்கு திரும்பி செல்லக்கூடாது என்றும் ஜெர்மன் மொழியைப் பேச மாட்டேன் என்று சத்தியம் செய்தார்.

ஆனால் உண்மை வேறு. அவர் அந்த நினைவுகளில் இருந்து தன்னை விடுவிக்க முயன்றாலும், அவை ஆழ்மனதில் நிரந்தரமான வலியை ஏற்படுத்தி கொண்டிருந்தன.

சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த குழந்தைகள் கண்காணிப்பு மையத்தை பற்றிய இணையத் தேடலுடன், தனக்குள் புதைந்திருக்கும் கொடிய நினைவுகளை மீண்டும் எதிர்கொள்ளத் தொடங்கினார். ஒருவழியாக அந்த சம்பவங்களை வெளியே சொல்லும் தைரியம் அவருக்கு வந்தது. குழந்தை பருவத்தில் நடந்தவற்றை, 59 வயதான ஈவி பகிர்ந்து கொண்டார்.

ஈவியின் தற்போதைய வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் உள்ளது. ஆனாலும் துன்பகரமான குழந்தை பருவத்தை பற்றி சொல்லும் போது, சிரமத்துடனும் பதற்றத்துடனும் காணப்படுகிறார்.

குழந்தைகள் மீது கொடிய பரிசோதனை செய்த மருத்துவர் : ஆல்ப்ஸ் மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் மஞ்சள் வீட்டின் பின்னணி

பட மூலாதாரம்,EVY MAGES

படக்குறிப்பு,8 வயதில் ஈவி

ஈவியின் மகள் லில்லி மற்றும் ஒரு நண்பருடன் உரையாடிக் கொண்டிருக்கையில் அவர் தனது குழந்தைப் பருவத்தைப் பற்றி அவர்களிடம் பகிர்ந்து கொள்ள முற்பட்டார்.

"நான் என் கடந்த காலத்தைப் பற்றி மிகவும் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் பகிர்ந்தேன். ஆனால் குழந்தைகள் கண்காணிப்பு மையம் என்ற பெயரில் இயங்கிய அந்த மனநல மருத்துவமனையில் நான் வைக்கப்பட்ட அத்தியாயத்தை மட்டும் ரகசியமாக வைத்துக் கொண்டேன். ஏனென்றால் அது இருட்டு, வலி.. என்னோடு போகட்டும்”

ஒரு நாள், ஈவி தனிமையில் இருந்தபோது, அவருக்கு சட்டென நினைவுக்கு வந்த ஆஸ்திரிய நகரான இன்ஸ்ப்ரூக்கில் ஒரு முகவரியை இணையத்தில் தேடினார், அப்போது தான் அந்த ’வார்த்தை’ அவர் கண்களில் தென்பட்டது.

" `Kinderbeobachtungsstation” .. ஆம் இது தான் அந்த குழந்தைகள் காப்பகத்தின் பெயர். அதன் பொருள் 'குழந்தைகள் கண்காணிப்பு நிலையம்’. டாக்டர் மரியா நோவாக்-வோக்ல்...,' என்று தொடர்ந்து படித்த போது, ஆமாம், அவர்தான் அந்த மருத்துவர் என்று நினைக்கிறேன். இதுதான் அந்த இடம் என்று நினைத்தேன்."

Kinderbeobachtungsstation என்பது ஈவிக்கு ஒரு புதிய பெயர்; ஆனால் அந்த காப்பகத்தை வழி நடத்திய அந்த நபரை ஈவிக்கு நன்றாக தெரியும். அந்த நினைவுகள் அவர் மனதில் மெல்லமெல்ல எழ ஆரம்பித்தது.

மேலும் அந்த இடத்தை பற்றி இணையத்தில் இருந்த பலவற்றைக் கண்டுபிடித்தார். அங்கு வளர்ந்த மற்றவர்களும் தங்களின் கொடிய அனுபவத்தை பகிர்ந்திருந்தனர். பல விரிவான தகவல்கள் கிடைத்தன. ஈவி அவற்றை அவநம்பிக்கையுடன் படித்தார்.

குழந்தை பருவத்தில் ஈவியை அங்கு அனுப்பி வைத்தவர்கள், குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிகிச்சை மையம் என்றே சொல்லி சேர்த்து விட்டனர். ஆனால் அதன் நோக்கம் மிகவும் மோசமானது என்பதை அவர் பின்னர் தான் உணர்ந்தார்.

அவர்கள் ஈவி போன்ற குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக அங்கு அழைத்துச் செல்லவில்லை, மாறாக அங்கு ஒரு பெரிய பரிசோதனைக்கு குழந்தைகள் உட்படுத்தப்பட்டனர்.

ஓர் இருண்ட இரவு
குழந்தைகள் மீது கொடிய பரிசோதனை செய்த மருத்துவர் : ஆல்ப்ஸ் மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் மஞ்சள் வீட்டின் பின்னணி

பட மூலாதாரம்,GETTY

படக்குறிப்பு,ஈவி மஞ்சள் நிற சூரியகாந்தியை வழக்கமாக வாங்குகிறார்..

இன்ஸ்ப்ரூக்கில் உள்ள அந்த மஞ்சள் வீட்டில் தன்னை வைத்து என்ன பரிசோதனை செய்தார்கள் என்பதை இப்போது அவர் அறிய விரும்பினார்.

"என்னை என்ன செய்தார்கள்?’’

குழந்தை பருவத்தில் தனக்கு இருண்ட அறையில் நடந்ததை பற்றி ஈவி தற்போது கண்டுபிடிக்க முடிவு செய்தார்.

" எட்டு வயது சிறுமியாக இருந்த போது எனக்கு அது நடந்தது. அந்த கண்காணிப்பு மையத்தின் இருட்டு அறையில் எனக்கு என்ன நடந்தது என்பது புரியவில்லை. அதன் தாக்கம் 60 வயதை கடந்தும் எனக்குள் இருக்கிறது. இப்போதும் நான் இருட்டைக் கண்டு பயப்படுகிறேன், எனவே நான் எல்லா நேரங்களிலும் விளக்கை எரிய விடுகிறேன். எனக்கு மஞ்சள் மீது வெறுப்பு உள்ளது. இந்த நிறம் என் அனுபவத்தை தொடர்ந்து நினைவூட்டுகிறது.

மஞ்சள் நிறத்துடன் சமாதானம் செய்வது எனக்கு ஒரு சவாலாக உள்ளது. மஞ்சள் அந்த வீட்டின் நிறம் மட்டும் அல்ல. சூரியன், பூக்கள் மற்றும் ஒளியின் நிறம் என்பதை நினைவூட்ட முயற்சிக்கிறேன்."

கடந்த காலத்தை பற்றி மீண்டும் ஆராய வேண்டுமெனில் இந்த பயத்திலிருந்து விடுபட வேண்டும். எனவே ஈவி மஞ்சள் நிற சூரியகாந்தியை வழக்கமாக வாங்குகிறார்.

ஈவி 60களின் நடுப்பகுதியில் ஆஸ்திரியாவில் பிறந்த போது, அவரது தாயாருக்கு திருமணமாகவில்லை, எனவே அந்த சமயத்தில் ஈவி மீதும் அவரது தாயின் மீதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. சமூகத்தின் பார்வையில் இருவரும் தவறாக தெரிந்தனர்.

சரியான குடும்ப சூழல் அமையாததால், ஈவி அனாதை இல்லங்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மையங்களின் பராமரிப்பில் வளர்ந்தார்.

பின்னர், ஈவி தனது வளர்ப்பு தாய் 'ஆனி' நடத்தி வந்த விடுதியில் ஒரு தத்தெடுக்கப்பட்ட குடும்பத்துடன் சேர்ந்து வசித்து வந்தார்.

"என் வளர்ப்பு தாயான ஆனிக்கு என்னைப் பிடிக்கவில்லை, என்னை தொல்லைமிகு உயிரினமாக பார்த்தார். சதா என்னை திட்டி கொண்டே இருப்பார்.

விடுதியில் இருந்த பாதிரியாரும் என்னை மிகவும் கண்டிப்பாக நடத்துவார். நான் முட்டாள்தனமாக இருந்ததற்காகவும், என் அம்மாவுக்கு கஷ்டம் கொடுப்பதற்காகவும் என்னைத் திட்டி கொண்டிருப்பார்."

"எனக்கு 4 வயது இருக்கும். எனக்கு நினைவில் இருப்பதெல்லாம் ஆனி என்னை திட்டியது மட்டும் தான். வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியதாக என்னைக் குற்றம் சாட்டினார். பாத்திரங்களை உடைக்கிறேன். சுவற்றில் கிறுக்குகிறேன் என்று காரணங்களை சொல்லி திட்டுவார். ஆனால் நான் எதையும் செய்யவில்லை. செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வரை என்னை அடிப்பார், பின்னர் மணிக்கணக்கில் அறைக்குள் அடைத்து தண்டனை கொடுப்பார்.”

"அச்சுறுத்தல்கள், அவமானங்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு உட்பட்டு, டிசம்பர் 1973 இன் இறுதியில் ஓர் இரவில் அங்கிருந்து நான் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டேன். அப்போது எனக்கு 8 வயது. இன்ஸ்ப்ரூக்கில் உள்ள மஞ்சள் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்."என்றார்.

 
குழந்தைகள் மீது கொடிய பரிசோதனை செய்த மருத்துவர் : ஆல்ப்ஸ் மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் மஞ்சள் வீட்டின் பின்னணி

பட மூலாதாரம்,EVY MAGES

படக்குறிப்பு,6 அல்லது 7 வயதாக இருந்தபோது ஈவி..

அன்று நடு ராத்திரியில் என் வீட்டில், யாரோ வந்து என்னை கட்டிலில் இருந்து தூக்கி சென்று, காரில் ஏற்றினார்கள். அப்போது இருட்டாக இருந்தது, குளிர்ந்தது, நான் மிகவும் பயந்தேன். யாரும் எதுவுமே பேசவில்லை, நாங்கள் நீண்ட நேரம் பயணித்தோம். காரில் யார் இருந்தார்கள் என்பது எனக்கு நினைவில் இல்லை, ஆனால் நாங்கள் இன்ஸ்ப்ரூக் வந்தடைந்த போது என்னுடன் ஆனி இருந்ததாக எனக்கு நினைவிருக்கிறது.

அவர்கள் எனக்கு சீருடை, உள்ளாடைகள் மற்றும் போர்வை உள்ளிட்டவற்றை கொடுத்தனர். எனக்கு நினைவிருக்கிறது, அந்த வீட்டின் உட்புற சுவர்களில் எல்லா இடங்களும் மரத்தால் செய்யப்பட்டிருந்தது, ஹால்வேயில் ஒரு பெரிய மீன் தொட்டி இருந்தது. இரண்டாவது மாடியில், ஒரு ஜன்னல் கொண்ட ஒரு பெரிய அறை இருந்தது, வரிசையாக படுக்கைகள் இருந்தன. கட்டிலில் ஒவ்வொரு குழந்தையையும் அடையாளம் காணும் தனி வண்ணங்கள் பூசப்பட்டிருந்தன. என் கட்டிலில் மஞ்சள் நிறம் பூசப்பட்டிருந்தது.

அது ஒரு மனநல மருத்துவமனை என்பதை எப்போது உணர்ந்தேன் என்று சரியாக நினைவில்லை. வெள்ளை கோட் அணிந்த பெரியவர்கள் தான் என் நினைவுக்கு வருகிறார்கள். அந்த அறையின் கதவுக்கு மேல் ஸ்பீக்கர் இருந்தது, பகல் முழுவதும் பல ஒலிகள் மற்றும் அலாரங்களை அது உருவாக்கியது."

குழப்பமும் பயமுமாக அந்த இடத்தின் விதிகளைப் பின்பற்ற ஆரம்பித்தேன். அவர்கள் எங்களை பேச விடவில்லை, சைகையால் பேச வேண்டும், இல்லையெனில் சுருக்கமாக பேச வேண்டும். எதையும் செய்வதற்கு முன் நாங்கள் அனுமதி கேட்க வேண்டும். உதாரணமாக, 'தயவுசெய்து, பல் துலக்க வேண்டும்’ , சாப்பிடும் போது, 'ப்ளீஸ், ஸ்பூன்' என்று சொல்ல வேண்டும்.

தட்டில் உள்ள அனைத்தையும் நாங்கள் சாப்பிட வேண்டும். மீதம் வைத்தால், அந்த தட்டில் இருக்கும் உணவு கெட்டு போனாலும், அடுத்த வேளைக்கு அதையே கொடுத்து சாப்பிட சொல்வார்கள்.

கொடூர மருத்துவர்
குழந்தைகள் மீது கொடிய பரிசோதனை செய்த மருத்துவர் : ஆல்ப்ஸ் மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் மஞ்சள் வீட்டின் பின்னணி

பட மூலாதாரம்,GETTY

படக்குறிப்பு,குழந்தைகளுக்கு அடிக்கடி ஊசி போடப்பட்டது, ஆனால் ஏன் என்று யாருக்கும் தெரியாது.

ஈவி மற்றும் இளம் குழந்தைகளின் வாழ்க்கையை நிர்வகித்த, அந்த மையத்தை நடத்திய மனநல மருத்துவரின் பெயர் டாக்டர் மரியா நோவாக்-வோக்ல்.

"அவர் ஜெர்மனியின் நாஜிகளால் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு மருத்துவர் மற்றும் அந்த சித்தாந்தத்தை கொண்டிருந்தார். ஆனால் ஆஸ்திரியாவில் அவர் அனைவராலும் மதிக்கப்பட்டார். அவர் குழந்தைகள் மற்றும் இளம்பருவ மனநல மருத்துவத்தில் நிபுணராக கருதப்பட்டார். ஆஸ்திரிய குழந்தைகள் சுகாதார அமைப்புடன் அவர் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தார், எனவே அவரது பரிசோதனைக்கு அதிக அளவில் குழந்தைகள் தரப்பட்டனர்."

மஞ்சள் மாளிகையில் என்ன நடக்கிறது என்பது குறித்து நோவாக்-வோகல் ஒரு நாள் எங்கள் முன்னிலையில் கூறினார். அனைத்து குழந்தைகளும் பின்பற்ற வேண்டிய விதிகள் மற்றும் தனது ஊழியர்களுக்கான வழிமுறைகளின் பட்டியலையும் அவர் சொன்னார்.”

"இது மிகவும் நீளமானது மற்றும் அபத்தமானது. அவர்கள் குழந்தைகளின் அனைத்து பழக்கவழக்கங்களையும் கண்காணிப்பார்கள். எங்களின் குளியல் அறையை கூட பார்ப்பார்கள். இது மிகவும் ஊடுருவும் சூழல். எங்கள் கனவுகளை கூட அவர்களிடம் சொல்லும்படி வற்புறுத்தினார்கள்."

குழந்தைகள் அங்கு பயத்தில் வாழ்ந்தனர். ஈவி வேண்டுமென்றே விதிகளை மீறிய ஒரு குழப்பமான தருணத்தை தெளிவாக நினைவு கூர்ந்தார்.

"அன்று ஏதோ இனிப்பு தருவதாக வரிசையாக வரச் சொல்லி இருந்தார்கள், அதைக் கொடுத்த போது, அந்த இனிப்பு முழுக்க எறும்புகள் நிறைந்திருப்பதை கண்டு நான் பயந்தேன். நான் ஓ வென கத்தினேன், கவுன் அணிந்த பெரியவர்கள் என்னைத் தூக்கி வெளியே அழைத்துச் சென்று அடிக் கொடுத்தார்கள்.”

இது அடிக்கடி நடந்தது, ஆனால் ஈவி மற்றும் மற்ற குழந்தைகளுக்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் இருந்தனர். பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் யாரும் அவர்களுக்கு இல்லை.

கொடிய சிகிச்சை முறை

ஈவி இவற்றை பற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு விசாரணையைத் தொடங்கியபோது, அதிர்ச்சியான ஒன்றைக் கண்டுபிடித்தார்.

"சிகிச்சைகள்"

நோவாக்-வோகல் குழந்தைகளுக்கு ரோஹிப்னோல் உட்பட வலுவான மயக்க மருந்துகளை வழங்கி இருக்கிறார், மேலும் எபிஃபிசன் என்ற விசித்திரமான ஹார்மோனையும் உட்செலுத்தி இருக்கிறார். எபிஃபிசன் என்பது கால்நடைகளின் பினியல் சுரப்பிகளில் இருந்து பெறப்பட்டதாகும். இதனை கால்நடை மருத்துவர்கள் கால்நடைகள் மற்றும் பசுக்களில் வெப்பத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தினர்.

இது மனிதர்களுக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று யாருக்கும் தெரியவில்லை என்றாலும், குழந்தைகளின் பாலியல் உணர்வுகளை அடக்கவும், சுயஇன்ப உணர்வை கட்டுப்படுத்தவும், நோவாக்-வோகல் இதை சோதித்திருக்கிறார் என்பது இப்போது எனக்கு தெரிய வந்தது.

அவர் உடலுறவு மற்றும் குழந்தைகள் பாலுறவு மீது வெறுப்பாக இருந்தார். நாங்கள் அவருடைய சோதனைப் பொருட்களாக இருந்தோம். அவர் எங்களை விலங்குகளைப் போல நடத்தினார். சக்தி வாய்ந்த மருந்துகளை எங்களுக்கு கொடுத்தார்."

நோவாக்-வோகலைப் பற்றி ஈவி எவ்வளவு அதிகமாக கண்டுபிடித்தாரோ, அவ்வளவு அதிகமாக அவள் வருத்தமடைந்தார்.

குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதில் அந்த மருத்துவரின் அணுகுமுறை, நாஜி கண்ணோட்டத்தின் தாக்கத்தால் தோன்றியிருக்கலாம். பராமரிப்பில் உள்ள பிரச்னையுள்ள குழந்தைகளின் குறைபாடுகள் மரபணு அடிப்படையைக் கொண்டு இருப்பதாக அவர் நம்புகிறார். அந்த நேரத்தில் ஆஸ்திரிய கத்தோலிக்கத்தின் மிகவும் பழமைவாதம் பின்பற்றப்பட்டு வந்ததால் ஈவி போன்ற குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தியது.

"திருமணமாகாத தாயின் மகளாக இருப்பதால், என்னைப் போன்ற குழந்தைகள் ஒழுக்கம் இல்லாதவர்கள் என்ற அவர்களின் நம்பிக்கைகளுக்கு நான் பலியானேன். அவர்களை பொருத்தவரை நாங்கள் தேவையற்றவர்கள், சமூகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள்."

நோவாக்-வோகலை பொறுத்தவரை, இடது கை பழக்கம் உள்ள குழந்தைகள், படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகள், சுய இன்பம் செய்யும் குழந்தைகள் மோசமான பிறப்பை கொண்டவர்கள் என்று நம்பினார். ஆஸ்திரிய சமுதாயத்தைப் பாதுகாக்க, அத்தகைய "குறைபாடுள்ள குழந்தைகளை" கவனித்துக் கொள்வதை விட சரிசெய்ய வேண்டும் என்று அவர் நம்பினார்.

மேலும் அவர்களை, கீழ்ப்படிய வைத்து, அவர்களது பாலியல் உணர்வை மாற்றி, சாதாரண நபர்களாக மாற்றுவதை அவர் தனது பணியாக மாற்றினார். அங்கு இரவுகள் மிகவும் பயங்கரமானவை. நாங்கள் ஒருவரையொருவர் தொடாதபடி எங்கள் அக்குளுக்கு கீழே போர்வை மற்றும் அதன் மேல் கைகளை வைத்துக் கொண்டு படுக்கைக்குச் செல்வோம்.

மெத்தைகளில் உள்ளமைக்கப்பட்ட அலாரம் இருந்தது, அது யார் படுக்கையை நனைத்தாலும் அவர்களை எச்சரித்தது. அப்படி படுகையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு வெள்ளை கோட் அணிந்தவர்கள் தண்டனையாக குளிர்ந்த நீரில் குளிக்க செய்வார்கள். பின்னர் நீங்கள் ஹால்வேயின் மூலையில் நிற்க வேண்டும். அடுத்த நாள், குழந்தைகள் படுக்கையை நனைத்த குழந்தையின் படுக்கையைச் சுற்றி நின்று அவரைப் பார்த்து அவமானப்படுத்தி சிரிக்க வேண்டும்."

 
வலியின் சுவடுகள்
குழந்தைகள் மீது கொடிய பரிசோதனை செய்த மருத்துவர் : ஆல்ப்ஸ் மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் மஞ்சள் வீட்டின் பின்னணி

பட மூலாதாரம்,EVY MAGES

படக்குறிப்பு,ஈவி தனது கடந்த காலத்தைக் கண்டறிய ஆஸ்திரியாவுக்குச் சென்ற பயணங்களில் ஒன்றில் தனது குழந்தைகளுடன்.

தற்போது, அந்த இடத்தைப் பற்றி ஈவி கண்டுபிடித்தது உண்மையிலேயே பயங்கரமானது, ஆனால் அது அவளுடைய நினைவுகளை அவற்றின் சரியான சூழலில் வைக்க உதவியது. அப்போது தனக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள உதவியது.

"அந்த மஞ்சள் வீடு 3,650 க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாதித்தது என்பதைக் கண்டுபிடித்தது முற்றிலும் அதிர்ச்சியாக இருந்தது."

2013 ஆம் ஆண்டில், இன்ஸ்ப்ரூக் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையின் கீழ் உள்ள நிபுணர்கள் குழு, இந்த மையத்தின் மீது ஒரு அறிக்கையை வெளியிட்டது, நோவாக்-வோகல் "குறைபாடுள்ள" குழந்தைகளை கையாள்வதற்கான சாக்குப்போக்கின் கீழ் பல்வேறு துஷ்பிரயோகங்களை செய்ததாக அந்த அறிக்கை கூறியது. Kinderbeobachtungsstation ஐ "வளர்ப்பு இல்லம், சிறைச்சாலை மற்றும் சோதனை கிளினிக்" என்று விவரித்தது, அங்கு 7 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பல மாதங்கள் அனுமதிக்கப்பட்டனர். மஞ்சள் மாளிகை 1954 முதல் 1987 வரை 33 ஆண்டுகள் செயல்பட்டது.

அவரது மையம் மூடப்பட்ட பிறகும், நோவாக்-வோகல் பல்கலைக் கழகங்களில் விரிவுரை பணியைத் தொடர்ந்தார் மற்றும் 1998 இல் அவர் இறப்பதற்கு முன்பு கத்தோலிக்க திருச்சபையிலிருந்து பதக்கம் பெற்றார். அவரது கட்டுப்பாட்டில் இருந்த குழந்தைகள் இந்த விதிமுறைகளை ஒருபோதும் கேள்வி கேட்கவில்லை என்பதில் ஆச்சரியமில்லை.

"என்னை இன்ஸ்ப்ரூக்கில் சேர்த்தது என் தவறு என்று நான் நம்பினேன். என்னை நானே குற்றம் செய்தவள் என்று நம்பினேன். நிறைய குழந்தைகள் அப்படித்தான் நம்பினார்கள்”

ஈவி ஏன் அங்கு அழைத்துச் செல்லப்பட்டார் அல்லது ஒரு கட்டத்தில் அவர் ஏன் எதிர்பாராத விதமாக வளர்ப்புத் தாயான ஆனியுடன் வாழத் திருப்பி அனுப்பப்பட்டார் என்று ஈவி ஒருபோதும் கண்டுபிடிக்கவில்லை.

"மீண்டும் ஆனியிடம் வந்து சேர்ந்தேன். அங்கிருந்த கொடுமைகளுக்கு இது தேவலாம் போலிருந்தது. அன்று இரவு சாப்பாட்டு மேசையில், ஆனி குனிந்து, நாற்காலியில் ஒரு சிறிய கீறலைக் காட்டி, இது உன் வேலையா என்று திட்டத் தொடங்கினார். என் இதயம் நடுங்கியது. மீண்டும் மற்றொரு கொடுமை தொடங்கியது."

குழந்தைகள் மீது கொடிய பரிசோதனை செய்த மருத்துவர் : ஆல்ப்ஸ் மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் மஞ்சள் வீட்டின் பின்னணி

பட மூலாதாரம்,EVY MAGES

படக்குறிப்பு,ஈவி, Kinderbeobachtungsstation இல் தனது கோப்பில் ஸ்டேபிள் செய்யப்பட்ட புகைப்படத்தை வைத்திருக்கிறார் .

"ஓரளவுக்கு சுயமாக முடிவெடுக்கும் வயது வந்த போது, ஆஸ்திரியாவை விட்டு வெளியேறினேன். அதுவரை ஆனியை சகிக்க வேண்டியிருந்தது. நண்பர்களின் உதவியுடனும், கரீபியனில் ஒரு பயணக் கப்பலில் வேலை கிடைத்தது. அதன் பின் நியூயார்க் வந்தேன். எனக்கு இந்த புதிய வாழ்க்கை பிடித்தது. என்னை யாரும் குறை சொல்லவில்லை. தண்டிக்கவில்லை. நான் நிம்மதியாக உணர்ந்த முதல் இடம் நியூயார்க் தான்"

அங்கிருந்து என்னால் தப்பிக்க முடிந்தது. புதிய எல்லைகளை அடைந்தேன். ஆனால் எனக்கு நடந்த கொடுமைகளால் மனநோயாளி ஆனேன். ஆழமாக பாதிக்கப்பட்டேன். தூங்குவதில் மிகவும் சிரமப்பட்டேன், சாப்பிட முடியவில்லை.

Kinderbeobachtungsstation இல் இருந்த பிறகு , மனநல மருத்துவத்தின் மீது எனக்கு ஏற்பட்ட அவநம்பிக்கை காரணமாக நான் ஒருபோதும் உளவியலாளரின் உதவியை நாட போவதில்லை என்று முடிவெடுத்திருந்தேன். ஆனால், எனக்கு கிட்டத்தட்ட 30 வயதாக இருந்தபோது தான் மனநல சிகிச்சை உண்மையில் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து என்னால் சிகிச்சைக்கு செல்ல முடிந்தது."

முதலில் நியூயார்க்கிலும் பின்னர் வாஷிங்டனிலும், ஈவி ஒரு புகைப்படக் கலைஞராக ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்கினார், காதலித்தார், திருமணம் செய்து கொண்டார், மூன்று குழந்தைகள் மற்றும் பல பூனைகளுக்கு தாயாக நிம்மதியாக வாழ்ந்தார்.

2021 ஆம் ஆண்டில், மஞ்சள் மாளிகை பற்றிய உண்மையை கண்டுபிடித்த போது, ஈவி தன் குடும்பத்தினரின் அன்பால் சூழப்பட்டிருந்தார். கடந்த காலத்தின் பயங்கரங்களுக்கு விடை தேடி அவர் ஆஸ்திரியா திரும்பிய போது ஈவியின் குழந்தைகள் அனைவரும் அவருடன் சென்றனர்.

மஞ்சள் வீட்டில் என்ன நடந்தது என்பதை விசாரிக்கும் அதிகாரப்பூர்வ ஆணையம் இருப்பதை அவர்கள் அறிந்தனர் மற்றும் ஈவி அவர்களிடம் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.

"மற்றொரு பயணத்தில் என்னை வளர்த்த ஆனியைப் பார்க்க சென்றேன்.

அவர் என்னை பார்த்துவிட்டு வெளியே போ என்று சொல்வார் என்று நான் நினைத்தேன். உண்மையில் நம்ப முடியாத ஒன்றை எதிர்கொண்டேன். என்னைப் பார்த்து என் மகளை சந்தித்ததில் மகிழ்ச்சி என்றார். அன்பான ஒரு வயதான பெண்ணை அன்று நான் சந்தித்தேன்."

ஆனி என்னிடம் மன்னிப்பு கேட்டு அழுதார். நான் ஆறுதல்படுத்தினேன். நான் அவருக்கு தீங்கு செய்ய விரும்பவில்லை. அதே சமயம் குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களை நான் மன்னிப்பதில்லை."

இப்போதெல்லாம் ஈவி நிம்மதியாக தூங்குகிறார், கடந்த காலத்தை பற்றி நினைப்பதில்லை.

"நான் கண்டறிந்த உண்மைகள் என்னை மாற்றின. இனி குற்றவுணர்ச்சிக்கும் பயத்துக்கும் இடமில்லை. நான் நன்றாக தூங்குகிறேன், நான் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறேன்." என்கிறார் ஈவி உற்சாகத்துடன்.

https://www.virakesari.lk/article/183355

வடக்கு ஆசிரியர் சேவையில் தொல்லியல் பட்டதாரிகள் புறக்கணிப்பு

3 days 6 hours ago
12 MAY, 2024 | 06:12 PM ஆசிரியர் சேவைக்குள் பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்காக தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆட்சேர்ப்பின்போது வடக்கு மாகாணத்தில் மாத்திரம் தொல்லியல் துறை பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் கவலை தெரிவித்துள்ளதோடு, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையில் படித்து பட்டம் பெற்றவர்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பட்டதாரிகள் மேலும் தெரிவிக்கையில், பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இந்த விண்ணப்ப கோரலின்போது வடக்கில் தொல்லியல் பட்டதாரிகள் தவிர்க்கப்பட்டே விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இருப்பினும், தொல்லியல் பட்டதாரிகளை வரலாறு பாடத்துக்கு ஆட்சேர்ப்பு செய்வார்கள் என்ற நம்பிக்கையில் சில தொல்லியல் பட்டதாரிகளும் விண்ணப்பித்திருந்தனர். அதற்கமைவாக 30.03.2024 நடந்த ஆட்சேர்ப்பு பரீட்சையில் அவர்கள் சித்தியடைந்து 24.04.2024 நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் 09.05.2024 அன்று வெளியான நேர்முகத் தேர்வு முடிவுகளில் தொல்லியல் பட்டதாரிகள் நீக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது. கடந்த 2018ஆம் ஆண்டு பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கும் திட்டத்தின் போது தொல்லியல் பட்டதாரிகளும் உள்வாங்கப்பட்டு, அவர்கள் தெரிவு செய்யப்பட்டு, தற்போது வடக்கில் உள்ள பல பாடசாலைகளில் வரலாறு பாட ஆசிரியர்களாக உள்ளனர் என கூறியுள்ளனர். மேலும் அவர்கள், இவ்வருடமே தொல்லியல் பட்டதாரிகள் வடக்கில் மாத்திரம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் ஏனைய மாகாணங்களில் தொல்லியல் துறை பட்டதாரிகள் ஆசிரிய சேவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். எனவே, இது தொடர்பில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவனுடன் தொடர்புகொண்டு வினவியபோது வடக்கு மாகாணத்தில் பட்டதாரிகளை ஆசிரிய சேவைக்குள் உள்வாங்கும் வர்த்தமானி அறிவித்தலில் தொல்லியல் துறை பட்டதாரிகள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்த அவரிடம் கடந்த 2018ஆம் ஆண்டு உள்வாங்கப்பட்டது என்றும் ஏன் இவ்வருடம் உள்வாங்கப்படவில்லை என வினவியபோது இது தொடர்பில் மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளரை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்தார். தொடர்ந்து பட்டதாரிகள் குறிப்பிடுகையில், வடக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் எஸ்.திருவாகரன் அவர்களை தொடர்புகொண்டு வினவிய போது வடக்கு மாகாணத்தில் தொல்லியல் துறையில் வெற்றிடங்கள் இன்மையால் ஆட்சேர்ப்பு செய்யவில்லை என்றும் வரலாறு பாட ஆசிரியர் பதவிக்கு தொல்லியல் துறை பட்டதாரிகள் உள்வாங்கப்படுவதாக இருப்பின் அவர்கள் தங்களின் பாடத்தில் மூன்றில் ஒன்று என்ற அடிப்படையில் சம்பந்தப்பட்ட பாடங்களை கற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையில் பட்டதாரிகளாக வெளிவரும் பட்டதாரிகளை மத்திய அரசின் கீழ் இயங்கும் தொல்லியல் திணைக்களம், அருங்காட்சியகம் போன்றவற்றுக்கு உள்வாங்கப்படுவதில்லை. இப்போது ஆசிரியர் சேவைக்குள்ளும் உள்வாங்காது தவிர்க்கப்பட்டிருப்பதனால் எங்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது என்று பட்டதாரிகள் கவலையோடு கூறுகின்றனர். https://www.virakesari.lk/article/183354

வடக்கு ஆசிரியர் சேவையில் தொல்லியல் பட்டதாரிகள் புறக்கணிப்பு

3 days 6 hours ago
12 MAY, 2024 | 06:12 PM
image

ஆசிரியர் சேவைக்குள் பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்காக தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆட்சேர்ப்பின்போது வடக்கு மாகாணத்தில் மாத்திரம் தொல்லியல் துறை பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் கவலை தெரிவித்துள்ளதோடு, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையில் படித்து பட்டம் பெற்றவர்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பட்டதாரிகள் மேலும் தெரிவிக்கையில்,

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இந்த விண்ணப்ப கோரலின்போது வடக்கில் தொல்லியல் பட்டதாரிகள் தவிர்க்கப்பட்டே விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

இருப்பினும், தொல்லியல் பட்டதாரிகளை வரலாறு பாடத்துக்கு ஆட்சேர்ப்பு செய்வார்கள் என்ற நம்பிக்கையில் சில தொல்லியல் பட்டதாரிகளும் விண்ணப்பித்திருந்தனர். அதற்கமைவாக 30.03.2024 நடந்த ஆட்சேர்ப்பு பரீட்சையில் அவர்கள் சித்தியடைந்து 24.04.2024 நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் 09.05.2024 அன்று வெளியான நேர்முகத் தேர்வு முடிவுகளில் தொல்லியல் பட்டதாரிகள்  நீக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது. 

கடந்த 2018ஆம் ஆண்டு பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கும் திட்டத்தின் போது தொல்லியல் பட்டதாரிகளும் உள்வாங்கப்பட்டு, அவர்கள் தெரிவு செய்யப்பட்டு, தற்போது வடக்கில் உள்ள பல பாடசாலைகளில் வரலாறு பாட ஆசிரியர்களாக உள்ளனர் என கூறியுள்ளனர். 

மேலும் அவர்கள், இவ்வருடமே தொல்லியல் பட்டதாரிகள் வடக்கில் மாத்திரம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் ஏனைய மாகாணங்களில் தொல்லியல் துறை பட்டதாரிகள் ஆசிரிய சேவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

எனவே, இது தொடர்பில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவனுடன் தொடர்புகொண்டு வினவியபோது வடக்கு மாகாணத்தில் பட்டதாரிகளை ஆசிரிய சேவைக்குள் உள்வாங்கும் வர்த்தமானி  அறிவித்தலில் தொல்லியல் துறை பட்டதாரிகள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்த அவரிடம் கடந்த 2018ஆம் ஆண்டு உள்வாங்கப்பட்டது என்றும் ஏன் இவ்வருடம் உள்வாங்கப்படவில்லை என வினவியபோது  இது தொடர்பில் மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளரை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பட்டதாரிகள் குறிப்பிடுகையில், 

வடக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் எஸ்.திருவாகரன் அவர்களை தொடர்புகொண்டு வினவிய போது வடக்கு மாகாணத்தில் தொல்லியல் துறையில் வெற்றிடங்கள் இன்மையால் ஆட்சேர்ப்பு செய்யவில்லை என்றும் வரலாறு பாட ஆசிரியர் பதவிக்கு தொல்லியல் துறை பட்டதாரிகள் உள்வாங்கப்படுவதாக இருப்பின் அவர்கள் தங்களின் பாடத்தில் மூன்றில் ஒன்று என்ற அடிப்படையில் சம்பந்தப்பட்ட பாடங்களை கற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையில் பட்டதாரிகளாக வெளிவரும் பட்டதாரிகளை மத்திய அரசின் கீழ் இயங்கும் தொல்லியல் திணைக்களம், அருங்காட்சியகம் போன்றவற்றுக்கு உள்வாங்கப்படுவதில்லை. இப்போது ஆசிரியர் சேவைக்குள்ளும் உள்வாங்காது தவிர்க்கப்பட்டிருப்பதனால் எங்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது என்று பட்டதாரிகள் கவலையோடு கூறுகின்றனர்.  

https://www.virakesari.lk/article/183354

ஐ.பி.எல் 2024 - செய்திகள்

3 days 6 hours ago
ஐபிஎல்: பிளேஆப் வாய்ப்பு அதிகரித்தாலும் ஆர்சிபி அணியில் வெளிப்பட்ட பலவீனம் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் புள்ளிப்பட்டியலில் கடந்த இரு வாரங்களுக்கு முன்புவரை கடைசி இடத்தில் இருந்த ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் செல்லாது என்றே ரசிகர்களும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் ஆர்சிபி 5வது இடத்துக்கு முன்னேறி ப்ளே ஆஃப் வாய்ப்பை உயிர்ப்பித்துள்ளது. ப்ளே ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்தியிருந்த டெல்லி கேபிடல்ஸ் அணி அதற்கான வாய்ப்பை மெல்ல இழந்துள்ளது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 62-ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 9 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது. 188 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 19.1ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்து 47 ரன்களில் தோல்வி அடைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு எப்படி கிடைக்கும்? இந்த வெற்றியால் ஆர்சிபியின் ப்ளே ஆஃப் கனவு உயிர்ப்பித்துள்ளது. இதுவரை 13 போட்டிகளில் ஆடிய ஆர்சிபி அணி 5 வெற்றிகள் உள்பட 12 புள்ளிகள் பெற்று 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நிகர ரன்ரேட்டிலும் லக்னெள, டெல்லி அணிகளைவிட சிறப்பாக 0.367 என்று வலுவாக இருக்கிறது. கடந்த 3 வாரங்களுக்கு முன்பு வரை கொல்கத்தா அணியிடம் ஒரு ரன்வித்தியாசத்தில் தோற்று 6வது தோல்வியை எதிர்கொண்டபோது, ஆர்சிபி அணி 5வது இடத்துக்கு முன்னேறியும் என யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இப்போது 12 புள்ளிகளுடன் இருக்கும் ஆர்சிபி அணி, கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியைச் சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் வென்றால் 14 புள்ளிகள் பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. ஆனால் மற்ற அணிகளின் முடிவுகள் ஆர்சிபிக்கு சாதகமாக இருக்க வேண்டும். அதாவது ஆர்சிபி அணி சிஎஸ்கே அணியை வென்று 14 புள்ளிகளுடன் இருக்கும்போது, சன்ரைசர்ஸ், லக்னெள அணிகள் தலா 16 புள்ளிகள் பெற்றால் ஆர்சிபி வெளியேற்றப்படும். லக்னெள அணி கடைசி லீக் ஆட்டத்தில் ஏதாவது ஒன்றில் லக்னெள தோற்க வேண்டும். இவ்வாறு நடந்தால், லக்னெள, டெல்லி அணிகள் 14 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட் ஆர்சிபியைவிட மோசமாக இருக்கும். அப்போது இயல்பாக போட்டியிலிருந்து இரு அணிகளும் வெளியேறிவிடும். அது மட்டுமல்லாமல் கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெல்ல வேண்டும், அந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்து 200 ரன்கள் ஸ்கோர் செய்ய வேண்டும். இவை நடந்தால், சிஎஸ்கே ரன் ரேட்டைவிட ஆர்சிபி ரன்ரேட் அதிகரித்து ப்ளே ஆஃப் சுற்றில் 4வது இடத்தை அடையும். பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லியின் ப்ளே ஆஃப் கனவு சாத்தியமா? டெல்லி கேபிடல்ஸ் அணி 13 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளுடன் 6வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டில் லக்னெள அணியைவிட சுமாராக இருந்து மைனஸ் 0.482 ஆக இருக்கிறது.அடுத்து வரும் லக்னெள அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் கண்டிப்பாக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் டெல்லி இருக்கிறது. ஒருவேளை லக்னெளவை வென்றால் 14 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் வாய்ப்பைத் தக்கவைக்கும் என்றாலும், நிகர ரன்ரேட் மைனஸ் 0.482 என இருப்பது பெரிய பின்னடைவு. ஒருவேளை லக்னெளவிடம் தோற்றால், டெல்லி அணி 12 புள்ளிகளுடன் வெளியேறும். டெல்லி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பு பெற வேண்டுமென்றால், சன்ரைசர்ஸ் அணி தனது அடுத்த இரு லீக் ஆட்டங்களிலும் படுமோசமாகத் தோற்க வேண்டும், அதாவது ஒவ்வொரு ஆட்டத்திலும் சன்ரைசர்ஸ் அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் தோற்க வேண்டும். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்யும் அணிகள் 200 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும். லக்னெள அணியை 64ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி தோற்கடிக்க வேண்டும். இவை நடந்தால், சன்ரைசர்ஸ் அணியின் நிகர ரன்ரேட்டைவிட டெல்லி அணியின் ரன்ரேட் உயர்ந்திருக்கும். இவ்வாறு நடந்தால் டெல்லி அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு செல்லும். ஆதலால் டெல்லியின் ப்ளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துவிட்டது. அடுத்த கடைசி லீக்கில் லக்னெளவை வென்றாலும் டெல்லியின் ப்ளே ஆஃப் கனவு நனவாகாது. பட மூலாதாரம்,GETTY IMAGES இரண்டாம் பாதியில் தடுமாறிய ஆர்சிபி பேட்டர்கள் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் பேட்டிங்கில் ரஜத் பட்டிதார்(52), வில் ஜேக்ஸ்(41) ஆகியோரின் பொறுப்பான பேட்டிங்கும், கேமரூன் கிரீனின் (32) கேமியோவும்தான். இவர்களால்தான் ஆர்சிபி அணி ஓரளவுக்கு பெரிய ஸ்கோரை எட்டமுடிந்தது, பந்துவீச்சாளர்களும் துணிச்சலாக ஸ்கோரை டிபெண்ட் செய்ய முடிந்தது. அதிலும் பேட்டிங்கில் 32 ரன்களும், பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்திய கேமரூன் கிரீன் ஆட்டநாயகன் விருது வென்றார். ஆர்சிபியின் நடத்திர பேட்டர்கள் டூப்பிளசிஸ், விராட் கோலியை விரைவாக இழந்தபின் ஆர்சிபி அவ்வளவுதான் எனரசிகர்கள் எண்ணினர். ஆனால், ரஜத் பட்டிதார், வில் ஜேக்ஸ் இருவரும் அணியைக் கட்டமைத்து 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் வில் ஜேக்ஸ் ஆட்டமிழந்தபின் ஆர்சிபி சரிவைச் சந்தித்தது. ஒரு கட்டத்தில் 220 ரன்கள் வரை அடிப்பதற்கு வாய்ப்பிருந்தாலும், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது ஆர்சிபி. 174 ரன்கள் வரை ஆர்சிபி 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது, அடுத்த 13 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை விரைவாக இழந்தது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வேகமான விக்கெட் வீழ்ச்சிகளுள் இதுவும் ஒன்றாகும். ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்டு பவர்ப்ளே ஓவருக்குள் டெல்லி அணியின் 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினர். பவர்ப்ளேயில் 4 விக்கெட்டுகளை இழந்தபோதே டெல்லி பாதி தோற்றுவிட்டது. அதிலும் அதிரடி பேட்டர் மெக்ருக்கின் விக்கெட்டை வீழ்த்தியபோது ஆர்சிபியின் வெற்றி ஏறக்குறைய உறுதியானது. ஏனென்றால் களத்தில் மெக்ருக் நின்றிருந்தால் எந்த நேரத்திலும் ஆட்டத்தை திருப்பக்கூடியவர். 86 ரன்கள் வரை டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்திருந்தநிலையில் அடுத்த 54 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES கோலியை வென்ற இசாந்த் விராட் கோலி தனது 250-வது ஐபிஎல் போட்டியில் நேற்று விளையாடினார். தொடக்கத்திலிருந்தே கோலி அதிரடியாக பேட் செய்து 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினார். இசாந்த் சர்மா வீசிய ஓவரில் கோலி முதல் பந்தில் பவுண்டரியும், அடுத்த பந்தில் ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸரும் விளாசி சிரித்தார். ஆனால் அடுத்த இரு பந்துகளில் இசாந்த்தின் அற்புதமான அவுட் ஸ்விங்கில் விக்கெட் கீப்பர் அபிஷேக்கிடம் கோலி கேட்ச் கொடுத்து 27 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலி ஆட்டமிழந்து செல்லும்போது இசாந்த் சர்மா வேண்டுமென்றே கோலியை தடுத்து நகைச்சுவை செய்தார், இதை கோலியும் ரசித்து சிரித்துக்கொண்டே பெவிலியின் திரும்பினார். ரஜத் பட்டிதார் இந்தசீசனில் 11 போட்டிகளில் 8 முறை வேகப்பந்துவீச்சில் ஆட்டமிழந்திருந்தார். ஆனால், நேற்று நிதானமாக ஆடிய பட்டிதர் 8 பந்துகளில் 3 பவுண்டரி உள்பட 15 ரன்கள் சேர்த்தார். அதன்பின் அக்ஸர் படேல், குல்தீப் ஓவர்களில் அதிரடியாக ஆடிய பட்டிதரால் பவர்ப்ளேயில் ஆர்சிபி 2 விக்கெட்இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. குல்தீப், அக்ஸர் ஓவர்களை வெளுத்த பட்டிதார் 29 பந்துகளில் அரைசதம் அடித்தார். கடந்த 5 இன்னிங்ஸ்களில் பட்டிதார் 4வது அரைசதத்தை நிறைவு செய்தார், பெங்களூருவில் இந்த சீசனில் முதல் அரைச் சதத்தை அடித்தார். பட்டிதாரை ஆட்டமிழக்கச் செய்ய 4 வாய்ப்புகள் வந்தும் அனைத்தையும் டெல்லி வீரர்கள் தவறவிட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லியின் தோல்விக்கு காரணம் என்ன? டெல்லி அணியின் கேப்டன் அக்ஸர் படேல் கூறுகையில் “ சரியான நேரத்தில் கேட்ச் பிடித்திருந்தால் 20 முதல் 30 ரன்களைக் குறைத்திருப்போம், 150 ரன்களை எளிதாக சேஸிங் செய்திருப்போம். பவர்ப்ளேயில் நாங்கள் 4 விக்கெட்டுகளை இழந்தது தோல்விக்கான காரணம். 160 முதல் 170 ரன்கள் வரை எட்டக்கூடிய இலக்குதான். ஏனென்றால், இரவில் பந்து பேட்டர்களை நோக்கி வேகமாக வரவில்லை, வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போது பந்து விக்கெட்டில் பட்டு நின்று வந்ததால் அடித்து ஆட சிரமமாக இருந்தது. இன்றைய ஆட்டத்தில் நடந்தது எங்களுக்கு அதிர்ஷ்டமில்லை என்பதை காண்பிக்கிறது. ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல எதுவேண்டுமானாலும் நடக்கலாம், பொறுத்திருந்து பார்ப்போம்” எனத் தெரிவித்தார் அக்ஸர் படேல் போராட்டம் டெல்லி அணியின் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்ட அக்ஸர் படேல் நேற்று பேட்டிங்கில் ஒற்றை வீரராகப் போராடி அரைசதம் அடித்து 57 ரன்களில் ஆட்டமிழந்தார். அக்ஸர் படேலுக்கு ஒத்துழைத்து எந்த பேட்டரும் பேட் செய்யவில்லை. பவர்ப்ளே ஓவருக்குள் வார்னர்(1), ப்ரேசர்(21), அபிஷேக்(2), ஹோப்(29) என விக்கெட்டுகளை இழந்தபோதே டெல்லி அணி பாதி தோற்றுவிட்டது. 4 ஆட்டங்களுக்குப்பின் நேற்று பேட் செய்த வார்னர் ஒரு ரன்னில் ஸ்வப்னில் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். யாஷ் தயாலின் பவுன்ஸரில் அபிஷேக் போரெல் ஆட்டமிழந்தார். இந்த சீசனில் பவர்ப்ளேயில் விக்கெட்டுகளை ஆர்சிபி வீழ்த்தியது 2வது முறையாகும், இதற்கு முன் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக பவர்ப்ளேயில் விக்கெட் வீழ்த்தியது. நடுப்பகுதி ஓவர்களில் சரியான திட்டத்துடன் வந்த ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் லைன் லென்த்தில் துல்லியமாக வீசி டெல்லி பேட்டர்களை திணறவிட்டனர். 8-ஆவது ஓவரிலிருந்து 11வது ஓவர்கள் வரை ஆர்சிபி அணி 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தது. அக்ஸர் படேல் மட்டும் அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர் அடித்து ஸ்கோரை உயர்த்தினார். மற்றவகையில் குமார்(2),ஸ்டெப்ஸ்(3) இருவருமே ஏமாற்றினர். கடைசி 4 விக்கெட்டுகளை டெல்லி அணி 13 ரன்களுக்குள் இழந்தது. https://www.bbc.com/tamil/articles/c8vz33z04eyo

முள்ளிவாய்க்கால் கஞ்சி : திருகோணமலையில் நால்வர் கைது

3 days 6 hours ago
13 MAY, 2024 | 09:50 AM (துரைநாயகம் சஞ்சீவன்) திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் மூன்று பேரும் பல்கலைக்கழக மாணவி ஒருவருமாக நால்வர் சம்பூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது சம்பவம் நேற்றைய தினம் (12) ஞாயிற்றுக்கிழமை இரவு எட்டு முப்பது மணிக்கு பின்னர் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பல்கலைக்கழக மாணவி உட்பட 3 பெண்களும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டு சம்பூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பின்வரும் நபர்களே கைது செய்யப்பட்டு இன்றைய தினம் (13) மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக தெரியவருகின்றது. சமூக செயற்பாட்டாளர் கமலேஸ்வரன் விஜிதா (வயது 40), பல்கலைக்கழக மாணவி கமலேஸ்வரன் தேமிலா (வயது 22), சமூக செயற்பாட்டாளர் செல்வவினோத்குமார் சுஜானி (வயது 40), தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் முன்னாள் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் நவரெட்ணராஜா ஹரிஹரகுமார் (வயது 43) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையின் போது பல்கலைக்கழக மாணவியின் தாயாரான கமலேஸ்வரன் விஜிதா என்பவரை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது மகளான தேமிலா தனது கழுத்தில் கத்தி வைத்து மிரட்டியதாகவும் அதனை தடுக்க முயற்சித்த பெண் பொலிசாருக்கு கத்தி வெட்டி காயம் ஏற்பட்டதால் அவர் தற்போது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் இதனால் பல்கலைக்கழக மாணவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் முகமாக நேற்றைய தினம் (12) ஞாயிற்றுக்கிழமை சேனையூர் பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு பொதுமக்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்தபோது சம்பூர் பொலிசாரினால் நீதிமன்ற தடை உத்தரவை காண்பித்து குறித்த நடவடிக்கையை நிறுத்துமாறு கூறப்பட்டிருந்த நிலையில் அதில் ஈடுபட்டிருந்தவர்கள் தடை உத்தரவை வாங்காமல் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வை முன்னெடுத்ததாகவும், இந்நிலையிலேயே குறித்த கைது சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது. https://www.virakesari.lk/article/183370

முள்ளிவாய்க்கால் கஞ்சி : திருகோணமலையில் நால்வர் கைது

3 days 6 hours ago
13 MAY, 2024 | 09:50 AM
image

(துரைநாயகம் சஞ்சீவன்)

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் மூன்று பேரும் பல்கலைக்கழக மாணவி ஒருவருமாக நால்வர் சம்பூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது சம்பவம் நேற்றைய தினம் (12) ஞாயிற்றுக்கிழமை இரவு எட்டு முப்பது மணிக்கு பின்னர் இடம்பெற்றுள்ளது. 

இச்சம்பவத்தில் பல்கலைக்கழக மாணவி உட்பட 3 பெண்களும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டு சம்பூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பின்வரும் நபர்களே கைது செய்யப்பட்டு இன்றைய தினம் (13) மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக தெரியவருகின்றது. சமூக செயற்பாட்டாளர் கமலேஸ்வரன் விஜிதா (வயது 40),  பல்கலைக்கழக மாணவி கமலேஸ்வரன் தேமிலா (வயது 22), சமூக செயற்பாட்டாளர் செல்வவினோத்குமார் சுஜானி (வயது 40), தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் முன்னாள் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் நவரெட்ணராஜா ஹரிஹரகுமார் (வயது 43) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையின் போது பல்கலைக்கழக மாணவியின் தாயாரான கமலேஸ்வரன் விஜிதா என்பவரை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது மகளான தேமிலா தனது கழுத்தில் கத்தி வைத்து மிரட்டியதாகவும் அதனை தடுக்க முயற்சித்த பெண் பொலிசாருக்கு கத்தி வெட்டி காயம் ஏற்பட்டதால் அவர் தற்போது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் இதனால் பல்கலைக்கழக மாணவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் முகமாக நேற்றைய தினம் (12) ஞாயிற்றுக்கிழமை சேனையூர் பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு பொதுமக்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்தபோது சம்பூர் பொலிசாரினால் நீதிமன்ற தடை உத்தரவை காண்பித்து குறித்த நடவடிக்கையை நிறுத்துமாறு கூறப்பட்டிருந்த நிலையில் அதில் ஈடுபட்டிருந்தவர்கள் தடை உத்தரவை வாங்காமல் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வை முன்னெடுத்ததாகவும், இந்நிலையிலேயே குறித்த கைது சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

Screenshot_20240513_085759_WhatsAppBusin

Screenshot_20240513_085752_WhatsAppBusin

Screenshot_20240513_085727_WhatsAppBusin

Screenshot_20240513_085716_WhatsAppBusin

Screenshot_20240513_085712_WhatsAppBusin

WhatsApp_Image_2024-05-13_at_07.50.09__1

https://www.virakesari.lk/article/183370

தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனையை அழிக்க முனையும் எதிரிகளின் சதிவலைப்பின்னல்களை முறியடிப்போம்

3 days 7 hours ago
பொதுமக்களை முட்டாள்களாக நினைத்துக்கொள்வதைப் போன்ற கேனைத்தனம் வேறெதுவும் இல்லை. 😏