ஊர்ப்புதினம்

இலங்கையில் பிறந்த மியான்மார் குழந்தை!

3 months ago

இலங்கையில் பிறந்த மியான்மார் குழந்தை!
Vhg ஜனவரி 21, 2025
1000424325.jpg

இலங்கைக்கு தஞ்சம் கோரி வந்த மியான்மார் கர்ப்பிணித்தாய் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நேற்று (20-01-2025) இரவு குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பரப்பில் கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி 115 பயணிகளுடன் மியன்மார் அகதிகள் படகு கரை ஒதுங்கியிருந்தது.

ஆண் குழந்தையை பிரசவித்த மியான்மார் கர்ப்பிணித்தாய்

குறித்த படகு கரைக்கு வரமுடியாத நிலையில், கடற்படையினரின் உதவியுடன் திருகோணமலை கடற்படை தளத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் அவர்கள் திருகோணமலையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு, பின்னர் முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படை தளம் ஒன்றில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

மியன்மார் அகதிகள் பயணித்த படகில் 45 சிறுவர்கள், 24 பெண்கள்,46 ஆண்கள் உள்ளடங்கலாக 115 பேர் இலங்கைக்கு அகதிகளாக வந்திருந்தனர். இவ்வாரு வந்தவர்களில் கர்ப்பிணி தாய் ஒருவரும் தாயும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், குறித்த கர்ப்பிணித்தாய் நேற்று (20) முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஆண் குழந்தையை பிரசவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

https://www.battinatham.com/2025/01/blog-post_979.html

‘அஸ்வெசும’ நலன்புரி திட்டம் – மறுபரிசீலனை செய்யப்படுவதாக அரசு தெரிவிப்பு

3 months ago

‘அஸ்வெசும’ நலன்புரி திட்டம் – மறுபரிசீலனை செய்யப்படுவதாக அரசு தெரிவிப்பு
‘அஸ்வெசும’ நலன்புரி திட்டம் – மறுபரிசீலனை செய்யப்படுவதாக அரசு தெரிவிப்பு

வறுமையான அனைவரை உள்ளடக்கும் வகையிலும் நியாயத்தை உறுதி செய்யும் வகையிலும் “அஸ்வெசும” நலன்புரி திட்டத்தின் விரிவான மதிப்பாய்வை அரசாங்கம் தொடங்கியுள்ளது என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும இன்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நிவாரணம் பெறாத தகுதியுள்ள நபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சலுகைகளை வழங்க மதிப்பாய்வுகள் நடந்து வருவதாகசும் அவர் கூறினார்.

சேகரிக்கப்பட்ட தகவல்கள் மீண்டும் ஆய்வு செய்யப்படுகின்றன. கணிசமான எண்ணிக்கையிலான மக்களிடமிருந்து முறையீடுகள் பெறப்பட்டுள்ளன. அவை முறையான நடைமுறைகளைப் பின்பற்றி முழுமையாக மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் பிரதி அமைச்சர் கூறினார்.

 

https://oruvan.com/ashwesuma-welfare-scheme-government-announces-review/

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் – புதிய சட்டம் நிறைவேற்றப்படும் வரை அமுலில் இருக்கும்

3 months ago

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் – புதிய சட்டம் நிறைவேற்றப்படும் வரை அமுலில் இருக்கும்
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் – புதிய சட்டம் நிறைவேற்றப்படும் வரை அமுலில் இருக்கும்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் புதிய சட்டம் நிறைவேற்றப்படும் வரை அமுலில் இருக்கும் என அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை கேள்வியொன்றை முன்வைத்து உரையாற்றிய யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

சிறீதரன் எம்.பி தனது சிறப்புரிமை கேள்வியில், கடந்த வாரம் தாம் இந்தியாவுக்குச் சென்ற தருணத்தில் தமக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவுக்குச் செல்ல முடியாது ஆவணங்களை பரிசீலிக்க வேண்டும் என விமான நிலையத்தில் இருக்கும் குடிவரவு – குடியகழ்வு அதிகாரிகள் தடைகளை ஏற்படுத்தியதாகவும் தனக்கு எதிராக எவ்வித வழக்கும் விசாரணைகளும் இல்லாத சூழலில் இவ்வாறு செயல்படுவதை வன்மையாக கண்டிப்பதாகவும் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தன்னுடன் வருகை தந்திருந்தார். அவர் இந்த விடயங்களை அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்த உதவினார் என்றும் சிறீதரன் எம்.பி தெரிவித்தார்.

இதன்போது எழுந்த ரவூப் ஹக்கீம், அதிகாரிகளின் இந்த செயல்பாட்டை கண்டித்ததுடன், அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் விரைவில் உரிய விசாரணைகளை செய்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இந்த அரசாங்கத்தின் காலத்திலும் பயங்கரவாத எதிர்ச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது.” என்றார்.

ஆளும் தரப்பில் சிறீதரன் எம்.பியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, ”சிறீதரன் எம்.பிக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பில் பின்னர்தான் அறிய கிடைத்தது. இதுகுறித்து வருந்துகிறோம். அரசாங்கத்தின் தீர்மானத்தின் பிரகாரம் எவ்வாறு தடைகள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. அங்கிருந்த அதிகாரிகள்தான் இதனை செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணை அறிக்கைகளை கோரியுள்ளோம்.

இந்த விசாரணை பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படவில்லை. புதிய சட்டம் இன்னமும் நிறைவேற்றப்படாமையால் பயங்கரவார எதிர்ப்புச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது. இருக்கும் சட்டத்தை பயன்படுத்த முடியும். அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை பயன்படுத்துவது எமது நோக்கமல்ல.” என்றார்.

 

https://oruvan.com/anti-terrorism-act-will-remain-in-effect-until-new-law-is-passed/

 

நினைவேந்தல் நிகழ்வு குறித்து இனி அதிக கவனம் செலுத்தப்படும் என்கிறார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

3 months ago

நினைவேந்தல் என்ற பெயரில் வடக்கு, கிழக்கில் இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பில் இனிமேல் அதிக கவனம் செலுத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கே.எம்.ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“உயிழந்த தமது உறவுகளை நினைவேந்த எந்த இனத்தவர்களுக்கும் முழு உரிமையுண்டு. அதை எமது அரசு தடுத்து நிறுத்தாது.

ஆனால், வடக்கு, கிழக்கில் சில நினைவேந்தல் நிகழ்வுகளில் அரசியல் தலையீடு ஆதிக்கம் செலுத்துவதால் அது வெளியில் வேறொரு கோணத்தில் பார்க்கப்படுகின்றது.

தெற்கில் உள்ள ஒரு தரப்பினர் அதைப் பயங்கரவாதக் கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர். இதனால் வடக்கு – தெற்கு அரசியல்வாதிகளுக்கிடையில் பொது வெளியில் கருத்து மோதல்கள் இடம்பெறுகின்றன.

எனவே, நினைவேந்தல் என்ற பெயரில் வடக்கு, கிழக்கில் இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பில் இனிமேல் அதிக கவனம் செலுத்தப்படும். நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்துவது எமது நோக்கம் அல்ல.” – என்றார்.

https://thinakkural.lk/article/314713

இந்தியா- சீன அரசாங்கங்களுடன் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு பிரகடனம் தொடர்பில் புபுது ஜாகொட கருத்து தெரிவிப்பு !

3 months ago

Published By: DIGITAL DESK 2   20 JAN, 2025 | 04:42 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கம், இந்தியா மற்றும் சீன அரசாங்கங்களுடன் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு பிரகடனம் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இந்தியாவின் ஆதிக்கத்துக்கு கீழ் கொண்டுவருவதற்கும் தென் மாகாணத்தின் கீழ் பிரதேசங்களை சீன அரசாங்கத்துக்கு வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இணக்கப்பாடுகள் மூலம் இலங்கை உலகளாவிய அரசியல் பொறிக்குள் சிக்கிக்கொண்டுள்ளது என முன்னிலை சோசலி கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியா மற்றும் சீன அரசாங்கங்களுடன் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு பிரகடனம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சீன அரசாங்கத்தின் ஒரே மண்டலம் ஒரே பாதை வேலைத்திட்டத்துக்கு இலங்கை முழுமையாக ஆதரவளிப்பதாகவும் அந்த வேலைத்திட்டத்துக்குள் அடங்கிய பல வேலைத்திட்டங்களை இலங்கைக்குள் செயற்படுத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருப்பது பாரிய விடயமாகும். ஏனெனில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்திய விஜயத்தின் பின்னர் வெளியிட்ட கூட்டு பிரகடனத்தில், இலங்கையின் பூமியை இந்தியாவுக்கு அச்சுறுத்தலாகும் வரை வேறு எந்த நாட்டுக்கும் பயன்படுத்த இடமளிப்பதில்லை என தெரிவித்திருந்தார்.

அதேநேரம் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டு அங்கும் பல்வேறு வாங்குறுதிகளை வழங்கியிருப்பதை பார்க்கும்போது, இலங்கைக்குள் பல்வேறு உலகளாவிய அரசியல் வேலைத்திட்டங்களுடன் இந்து சமுத்திரத்தில் செயற்பட்டுவரும் பல்வேறு அதிகாரம் படைத்தவர்களுக்கு, ஏகாதிபத்தியவாதிகளுக்கு அவர்களின் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக இலங்கை வாக்குறுதி வழங்கி வருகிறது. இது அரசியல் ரீதியில் மிகவும் எச்சரிக்கையான நடவடிக்கையாகும்.

இதன்மூலம் வலயத்தில் அதிகாரமுடையவர்கள் உலக அதிகாரம் படைத்தவர்களுக்கு ஏகாதிபத்தியவாதிகளுடன் ஏற்படுகின்ற சண்டையின்போது இலங்கை முழுமையாக ஈடுபட இடமிருக்கிறது.

யுத்தமொன்றுக்கு இலங்கை இலக்காக இடமிருக்கிறது. கூட்டு பிரகடனம் இரண்டையும் மிகவும் ஆழமாக ஆராய்ந்து பார்க்கும்போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இந்தியாவின் ஆதிக்கத்துக்கு கீழ் கொண்டுவருவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று  அம்பாந்தோட்டை மாவட்டம் உள்ளிட்ட தென் மாகாணத்தின் கீழ் பிரதேசங்களை சீன அரசாங்கத்துக்கு வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

துறைமுகத்தை அண்மித்ததாக எண்ணெய் சுத்திகரிப்பு ஒன்றை ஆரம்பிப்பதன் மூலம் கப்பல் மூலமான எண்ணெய் விநியோகம் முற்றாக சீனாவுக்கு செல்லும். தற்போதும் திருகோணமலை  எண்ணெய் குதங்களில் இருந்து கப்பல் மூலம் எண்ணெய் விநியோகிக்கும் உரிமம் இந்தியாவுக்கே இருந்து வருகிறது.

இந்தியாவில் இருந்து திருகோணமலை வரை செல்லும் எண்ணெய் குழாய், கொழும்புவரை நீடிப்பதாக தெரிவிக்கப்பட்ட பின்னர், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு இறங்குதுறை இந்தியாவிடமும் தெற்கு இறங்குதுறை  சீனாவிடம் இருக்கும் நிலையில், கொழும்பு முறைமுகத்தின் இருந்தும் எங்களுக்கு கப்பல் மூலம் எண்ணெய் வருமானம் எங்களுக்கு இல்லாமல் போகிறது.

எனவே அம்பதந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கிய பின்னர், அவர்களின் யுத்தக்கப்பல்களுக்கு எண்ணெய் விநியோகிப்பதை எங்களுக்கு தடுக்க முடியாது.

இந்தியாவுடன் இதனை பார்த்தால் அதே பிரச்சினை திருகோணமலை துறைமுகத்திலும் இடம்பெறும்.  எனவே இவ்வாறான இணக்கப்பாடுகள் மூலம்  நாங்கள் மிகவும் பயங்கரமான உலகளாவிய அரசியல் பொறிக்குள் சிக்கிக்கொண்டு இருக்கிறோம் என்றார்.

https://www.virakesari.lk/article/204364

225 எம்.பிக்களுக்கும் வாகனங்கள் வழங்க திட்டம்

3 months ago

எதிர்வரும் காலங்களில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

‍நேற்றிரவு ஊடக நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

அதேநேரம், இனிமேல் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான சிறப்பு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக விசேடமாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது என பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/314702

'நான் மகிந்த ராஜபக்ச என்பதை அனுரகுமார திசநாயக்க மறந்துவிட்டார் : எழுத்து மூலமாக வேண்டுகோள் விடுத்தால் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேற தயார்" - அனுரவிற்கு மகிந்த பதிலடி

3 months ago

Published By: RAJEEBAN   21 JAN, 2025 | 10:32 AM

image

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் தனது உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்திலிருந்து வெளியேற தயாராகயிருப்பதாக தெரிவித்துள்ளதுடன்  ஜனாதிபதி  இந்த விடயத்தை தனக்கு சாதகமான பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதற்கு பதில்  எழுத்து மூல வேண்டுகோளை விடுக்கவேண்டும் எனதெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் அமைச்சரவையின் அனுமதியின் பின்னரே தனக்கு உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலம் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ள அவர்  முன்னாள் ஜனாதிபதி என்ற அடிப்படையில் எனது பாதுகாப்பிற்காக அதனை வழங்கினார்கள் அரசமைப்பின் கீழ் எனக்குஅதற்கான உரிமையுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

நான் அந்த வீட்டிலிருந்து வெளியேறுவதால் ஜனாதிபதிக்கு பலாபலன்கள் கிட்டும் என்றால் நான் அங்கிருந்து வெளியேற தயார் என  குறிப்பிட்டுள்ள மகிந்த ராஜபக்ச நான் பலவந்தமாக அந்த வீட்டை பிடித்துவைத்திருக்கவில்லை அங்கிருந்து வெளியேற தயார் என  குறிப்பிட்டுள்ளார்.

அனுரகுமார திசநாயக்க நாட்டின் ஜனாதிபதி என்ற போதிலும், அவர் எதிர்கட்சி அரசியல்வாதி போல நடந்து கொள்கின்றார் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நான் மகிந்த ராஜபக்ச என்பதை அனுரகுமார திசநாயக்க மறந்துவிட்டார், அவரது பேச்சுக்கள் அரசியல் மேடைகளிற்கும் தேர்தல் காலத்தில் அவர் போலி வாக்குறுதிகளை வழங்கியதை போல மக்களை தவறாக வழிநடத்துவதற்கும் உகந்தவை என குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ஜனாதிபதி எனக்கு எழுத்து மூல வேண்டுகோள் விடுத்தால் எனக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்திலிருந்து வெளியேற தயார் என்பதை நான் ஜனாதிபதிக்கு தெரிவிக்கின்றேன் என  குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களிற்கு நிவாரணத்தை வழங்குவதற்கு பதில் அனுரகுமார திசநாயக்க அரசியல் மேடைகளில் மக்களை கவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார், முன்னாள் ஜனாதிபதிகளின் இல்லங்களையும் பாதுகாப்பினையும் பறித்த பின்னர் அவர்களிற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார், தனது தோல்விகளை மறைப்பதற்காகவே அவர் இதனை செய்கின்றார் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/204409

கூட்டுறவு சங்க தேர்தல் தோல்வியின் மூலம் அரசாங்கத்தின் சரிவு ஆரம்பித்துள்ளது - கம்மன்பில தெரிவிப்பு

3 months ago

கூட்டுறவு சங்க தேர்தல் தோல்வியின் மூலம் அரசாங்கத்தின் சரிவு ஆரம்பித்துள்ளது - கம்மன்பில தெரிவிப்பு
20 Jan, 2025 | 11:14 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

பல பிரதேசங்களில் இடம்பெற்ற கூட்டுறவு சங்க தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்துள்ளதன் மூலம் அரசாங்கத்தின் சரிவு ஆரம்பித்துள்ளது. தாேல்வியை தடுப்பதற்கே அரசாங்கம் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஹோமாகம, கொரட்டுவ, களனி,போருவளை போன்ற, தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற தேர்தலில் அதிக பெரும்பான்மை வாக்குகளால் வெற்றிபெற்ற தேர்தல் தொகுதிகளில் கூட்டுறவு சங்க தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி வருவதன் அரசாங்கத்தின் மீதான மக்களின் விரக்தி, கூட்டுறவு சங்க தேர்தல் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை இழந்துவருவதை அரசாஙகமும் தற்போது உணர ஆரம்பித்துள்ளது.

அதன் பிரதிபலனாகவே அரசாங்கம், 3 வருடங்களுக்கு மின் கட்டணத்தை குறைக்க முடியாது என தெரிவித்து வந்த நிலையில், தற்போது நூற்றுக்கு 20வீதம் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு  தீர்மானித்துள்ளது. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 3 வருடங்களுக்கு பின்னரே கூட்டுறவு சங்க தேர்தலில் தோல்வியடைய ஆரம்பித்தது. ஆனால் இந்த அரசாங்கம் பாராளுமன்ற தேர்தல் இடம்பெற்று 3 மாதங்களில் தோல்வியடைய ஆரம்பித்துள்ளதன் மூலம் அரசாங்கத்தின் சரிவு ஆரம்பித்திருப்பது தெரியவருகிறது.

அதனால் அரசாங்கம் இந்த சரிவை கையால் பிடித்து சரி செய்ய முடியாது என்பதை ஜனாதிபதி அநுரகுமார தெரிந்துகொள்ள வேண்டும். மாறாக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் மூலமே இந்த சரிவை நிறுத்த முடியும். அதனால் அரசாங்கம் மக்களுக்கு அளி்த்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், வைறாக்கியத்தை பரப்புவதன் மூலம் அரசாங்கத்தின் மீது மக்களின் எதிர்பார்ப்பு, நம்பிக்கை மேலும் இல்லாமல் போகும் நிலையே ஏற்படும்.

அத்துடன் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் உத்தியோகபூர் இல்லத்தை மீள பெறுவதாக தெரிவித்திருக்கிறார். இது ஜனாதிபதியின் அனுபவமில்லாமை அல்லது வைறாக்கியத்தில் மேற்கொள்ளும் செயலாகும்.

ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் அரச தலைவர்களாக வருபவர்கள், பயங்கரவாதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதால உலக கோஷ்டியினரை கட்டுப்படுத்த உறுதியான தீரமானங்களை எடுப்பதற்கு பின்வாக்கும் அபாயம் இருக்கிறது.

யுத்தத்தை வெற்றிகொள்ள நடவடிக்கை எடுத்த முன்னாள் ஜனாதிபதிக்கு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் எப்போதும் இருக்கும். அதனால் அதிகாரத்தில் இருந்து சென்ற பின்னரும் அவருக்கு பாதுகாப்பு வழங்க முடியுமான உத்தியோகபூர் வாசஸ்தலம்  வழங்குவது கட்டாயமாகும் என்றார்.

 

https://www.virakesari.lk/article/204376

 

யாழில் தேசிய மக்கள் சக்தியின் பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம்

3 months ago

 

பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம்

பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம்

January 20, 2025  09:01

தேசிய மக்கள் சக்தியின் 'பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம்' யாழ்ப்பாணத்தில் இன்று (20) திறந்து வைக்கப்பட்டது.

யாழ். பலாலி வீதி, கந்தர்மடத்தில் இந்த அலுவலகம் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில்,பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

https://tamil.adaderana.lk/news.php?nid=199047

 

பெண்கள் பொதுத் துறைகளில் ஈடுபடுவதும் ஆண்கள் அதற்கு துணை நிற்பதும் வரவேற்கத்தக்கது - கண்டி உதவி இந்தியத் தூதுவர்

3 months ago
20 JAN, 2025 | 03:47 PM
image
 

பெண்கள் பொதுத் துறைகளில் ஈடுபடுவதும், அதற்கு ஆண்கள் துணை நிற்பதும் வரவேற்கத் தக்க பண்புகளாகும் என கண்டி உதவி இந்தியத் தூதுவர் வீ.எஸ்.சரன்யா தெரிவித்தார். 

கண்டி சஹஸ் உயன பூங்காவில் நடைபெற்ற பொங்கல் தின வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். 
 

Assit._High_com__2_.jpg

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

நானும் பொங்கல் தினத்தை கொண்டாடும் ஒருவராக உள்ளேன். ஆனால், எனக்கு இம்முறை எனது சொந்த ஊரில் அதனை கொண்டாட முடியாமல் போனது. இருப்பினும் அது பற்றி எந்தக் கவலையும் ஏற்படாமல் எனது சொந்த ஊரில் கொண்டாடும் ஒரு நிகழ்வு போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. அதாவது இந்தியாவில் எமது பிரதேசத்தில் கொண்டாடும் அதே விதமாக இங்கு கொண்டாடப்பட்டமை எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.

மேலும், மகளிர் குழு ஒன்று ஒழுங்கு செய்தமை எனக்கு இன்னும் மகிழ்ச்சியாக உள்ளது. இப்படியான பொதுப் பணிகளில் மகளிர் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது. அதனை நாம் ஊக்குவித்தல் வேண்டும். ஆனால், இங்கு நடந்த வைபவத்தை நோக்கும்போது மேற்படி பெண்களது தொழிற்பாட்டுக்கு ஆண்கள் துணையாக நின்றிருப்பர் என என்னால் உணர முடிந்தது. இது இன்னும் வரவேற்கத்தக்க விடயமாகும். 

அந்த வகையில் இதனை ஒழுங்கு செய்த கண்டி இந்து மகளிர் அமைப்பு மற்றும் அதற்கு துணையாக நின்ற பொது அமைப்புக்கள், இவர்களுக்கு ஊக்கம் வழங்கிய ஆண்கள் எனப் பலரையும் பாராட்டுகிறேன் என்றார்.

கண்டி இந்து மகளிர் சங்கத்தின் தலைவி ஆர். கலையரசி தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் விசேட அதிதிகளாக கண்டி மாநகர ஆணையாளர் இந்திகா அபேசிங்க, கண்டி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் இரேசா பெர்னாண்டோ உட்பட கண்டி நகர வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்தகொண்டனர். 

Assit._High_com__4_.jpg

Assit._High_com__1_.jpg

https://www.virakesari.lk/article/204350

யாழில் கொள்ளையிட்டோர் பொலிஸ் பிடியில் சிக்கினர்; இருவர் இராணுவ புலனாய்வாளர்கள்!

3 months ago

யாழில் கொள்ளையிட்டோர் பொலிஸ் பிடியில் சிக்கினர்; இருவர் இராணுவ புலனாய்வாளர்கள்!

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் ரி.ஐ.டி. என்று அடையாளப்படுத்தி நூதனமான முறையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் சூத்திரதாரி  உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு தொகைப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் இருவர் இராணுவப் புலனாய்வாளர்கள் என்று தெரியவருகின்றது.

நூதனமாகக் கொள்ளை

சில நாள்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில், கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக்கடை ஒன்றிலேயே இந்த நூதனக்கொள்ளை நடந்திருந்தது.
நகைக்கடையொன்றுக்குச் சென்ற குழு ஒன்று தங்களை ரி.ஐ.டியினர் என்று அடையாளப்படுத்திக்கொண்டதுடன், விசாரணை என்ற போர்வையில் கடையில் இருந்த 30 லட்சம் ரூபா பணத்தைக் கொள்ளையிட்டு அந்தக் குழு தப்பிச் சென்றது.


இந்தச் சம்பவம் தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் காளிங்க  ஜெயசிங்கவின் வழிகாட்டலுக்கு அமைய, யாழ்ப்பாணக் குற்றவிசாரணைப் பொலிஸ் பிரிவுப் பொறுப்பதிகாரி கலும் பண்டார தலைமையிலான பொலிஸ் குழு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

சந்தேகநபர்கள் கைது

கண்காணிப்புக் கமராப் பதிவுகள் மற்றும் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் இனங்காணப்பட்ட நிலையில் பிரதான சூத்திரதாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஒருதொகைப் பணம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


பிரதான சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் வாகனச்சாரதி உட்பட மூவர் கண்டியில் வைத்தும், இருவர் கொழும்பில் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் இராணுவப் புலனாய்வாளர்கள் என்றும், மற்றுமொருவர் தெற்கு அரசியல் கட்சியொன்றில் பிரமுகர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கண்டியில் கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாணம் கொண்டுவந்து விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழில் கொள்ளையிட்டோர் பொலிஸ் பிடியில் சிக்கினர்; இருவர் இராணுவ புலனாய்வாளர்கள்!

மட்டக்களப்பில் பிரதான குளங்களின் வான் கதவுகள் திறப்பு ; போக்குவரத்து பாதிப்பு

3 months ago
image
 

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களின் ஒன்றான நவகிரி குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.  

மண்டூர் - வெல்லாவெளி பிரதான போக்குவரத்துப்பாதையின் ஊடாக வெள்ளம் பாய்வதன் காரணமாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளன.  

போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் உள்ள அலுவலகங்களுக்கு கடமைக்கு செல்லும் அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்துச்செய்வது பாதிக்கப்பட்ட நிலையில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் ஊடாக உழவு இயந்திரங்கள் மூலம் போக்குவரத்துச்சேவை முன்னெடுக்கப்பட்டது. 

போரதீவுப்பற்று பிரதேசசபையின் செயலாளர் எஸ்.பகீரதனின் தலைமையில் இந்த போக்குவரத்துச்சேவை முன்னெடுக்கப்பட்டதுடன் குறித்த பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இதேபோன்று பாலையடிவட்டை- வெல்லாவெளி பிரதான வீதி, மண்டூர் - ராணமடு வீதி, வெல்லாவெளி - உகன வீதி போன்றன வெள்ளம் காரணமாக போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.

உன்னிச்சையின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணாக வவுணதீவுப்பகுதிக்கான பல்வேறு போக்குவரத்துப்பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளன.   

WhatsApp_Image_2025-01-20_at_09.44.32.jp

WhatsApp_Image_2025-01-20_at_09.06.32__1

WhatsApp_Image_2025-01-20_at_09.44.30.jp

WhatsApp_Image_2025-01-20_at_09.06.48.jp  

மட்டக்களப்பில் பிரதான குளங்களின் வான் கதவுகள் திறப்பு ; போக்குவரத்து பாதிப்பு | Virakesari.lk

முல்லைத்தீவு கடற்கரையில் சிறப்புற நடைபெற்ற பட்டத்திருவிழா

3 months ago
20 Jan, 2025 | 11:15 AM
image
 

முல்லைத்தீவு - வட்டுவாகல் கிராமத்தைச்சேர்ந்த உறவுகளின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு கடற்கரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19)  பட்டத் திருவிழா மிகச் சிறப்பாக  நடைபெற்றது.

 இந்தப் பட்டத்திருவிழாவில் பிரதம விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றிருந்தார். 

அதனையடுத்து விருந்தினர்களால் சிறார்களிடம் பட்டங்கள் கையளிக்கப்பட்டு குறித்த பட்டத்திருவிழா வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் விருந்தினர்களாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவுமாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன், கரைதுறைப்பற்று பிரதேசசபைச் செயலாளர் இராஜயோகினி ஜெயக்குமார், வட்டுவாகல் அறநெறிப்பாடசாலையின் முதல்வர் அப்புத்துரை செல்வரட்ணம் ஆகியோர் பங்கேற்றிருந்ததுடன், பெருந்திரளான மக்களும் இந்த பட்டத்திருவிழாவில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

965758a0-141e-458d-8374-1943505839b5__1_

2057477a-323c-44ee-8fef-b2dffd25d5fa.jpg

6a4f2589-615c-497f-a124-fd364114a312.jpg

3a202e06-be80-4812-8a5c-c4775b8258c3.jpg

முல்லைத்தீவு கடற்கரையில் சிறப்புற நடைபெற்ற பட்டத்திருவிழா | Virakesari.lk

சாரதிக்கு மயக்கமருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து, தங்க நகைகள் கொள்ளை - யாழில் சம்பவம்

3 months ago

வாகன சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து, சாரதியின் 05 பவுண் நகைகளை இருவர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 

யாழ். நகர் பகுதியில் வாடகை முறையில் இயங்கும் கன்ரர் ரக வாகனத்தின் சாரதி ஒருவரது நகைகளே நேற்றைய தினம் (19) கொள்ளையடிக்கப்பட்டது. 

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: 

வாகன வாடகை தரிப்பிடத்துக்கு சென்ற இருவர், கிளிநொச்சி பகுதியிலிருந்து பொருட்களை ஏற்றிவர வேண்டுமெனக் கூறி, வாகனத்தை வாடகைக்கு அமர்த்தி, அவ்வாகனத்தில் இருவரும்  கிளிநொச்சி நோக்கி பயணித்துள்ளனர். 

பரந்தன் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது வீதியோரமாக வாகனத்தை நிறுத்துமாறு இருவரும் சாரதியிடம் கூறியுள்ளனர்.

வாகனம் நிறுத்தப்பட்ட பின்னர் அப்பகுதியில் உள்ள கடையொன்றில் இருவரும் குளிர்பானம் வாங்கி, சாரதிக்கு குடிப்பதற்கு வழங்கியுள்ளனர். 

குளிர்பானத்தை குடித்த சாரதி சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளார். 

வீதியோரத்தில் நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தில் சாரதி அசைவின்றி மயக்க நிலையில் இருந்ததை அவதானித்த சிலர், சாரதியை உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர். 

கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்ட சாரதி சுயநினைவுக்கு வந்த பின்னரே, தனது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்து பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். 

சாரதிக்கு மயக்கமருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து, தங்க நகைகள் கொள்ளை - யாழில் சம்பவம்  | Virakesari.lk

யாழில் தமிழ்மொழி மூன்றாவது இடத்தில் உள்ளதை பார்த்து அதிர்ச்சியுற்றேன் - அமைச்சர் சந்திரசேகரன்

3 months ago
20 Jan, 2025 | 03:23 PM
image
 

யாழில் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்தின் பெயர்ப் பலகையில் தமிழ்மொழிக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டிருந்ததை பார்த்து தான் அதிர்ச்சியுற்றதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை (20) யாழ்ப்பாணம் - பலாலி வீதி, கந்தர் மடம் பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பாடல் காரியாலயத்தை திறந்துவைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில்,

இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் கலாசார மையமானது திருவள்ளுவர் கலாசாரம் மையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

குறித்த நிகழ்வில் நானும் அதிதியாக கலந்துகொண்டவன் என்ற வகையில் பெயர் மாற்றம் தொடர்பில் திரை நீக்கத்தின்போது தான் அவதானித்தேன்.

திருவள்ளுவர் கலாசார மையம் எனப் பெயர் மாற்றியது குற்றமல்ல. யாழ்ப்பாணத்துக்கே உரித்தான பெயர்களான யாழ். கலாசார மையம் அல்லது யாழ். பண்பாட்டு மையம் என்ற பெயர் சூட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. 

பெயர் சூட்டும் நிகழ்வில் திருவள்ளுவர் கலாசார மையம் என காட்சிப்படுத்தப்பட்ட இலத்திரனியல்  திரையில் தமிழுக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டமை கவலை தரும்  விடயமாக இருந்தது. அதனைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன்.

தமிழ் மக்கள் வாழும் பகுதியில் தமிழுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். சிலவேளை தெரியாமல் சில தவறுகள் இடம்பெற்றிருக்கக்கூடும்.

குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் நான் இன்னும் கலந்துரையாடவில்லை. நிச்சயமாக அது தொடர்பில் கலந்துரையாடி இனிவரும் காலங்களில் தவறுகள் இடம்பெறா வண்ணம் செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

யாழில் தமிழ்மொழி மூன்றாவது இடத்தில் உள்ளதை பார்த்து அதிர்ச்சியுற்றேன் - அமைச்சர் சந்திரசேகரன் | Virakesari.lk

ரயில் பயணத்தை கண்காணிக்க மக்களோடு மக்களாக பயணித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க

3 months ago
20 Jan, 2025 | 03:44 PM
image
 

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று திங்கட்கிழமை (20) காலை மொரட்டுவையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி அலுவலக ரயிலில் மக்களோடு மக்களாக பயணித்துள்ளார்.

இந்த பயணத்தின்போது,  பயணிகள் எதிர்நோக்கும் பல பிரச்சனைகள் குறித்து பிமல் ரத்நாயக்க பயணிகளுடன் உரையாடும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இவர் ஊடகங்களுக்கு அறிவிக்காது, ரயில் பயணத்தின்போது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கண்காணிக்க நேரடி கள ஆய்வை முன்னெடுத்துள்ளார்.

இதன்போது, அடிக்கடி இடம்பெறும் ரயில் தாமதங்கள், மின் விசிறிகள் பழுது, ரயில்களில் ஏறுவதில் மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், தண்டவாளங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் சுகாதாரக்கேடு, பாதுகாப்பற்ற பாழடைந்த ரயிலை தொடர்ந்து பயன்படுத்தல் போன்ற பிரச்சினைகளை பொதுமக்களிடம் இருந்து கேட்டறிந்துள்ளார்.

ரயில் பயணத்தை கண்காணிக்க மக்களோடு மக்களாக பயணித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க | Virakesari.lk

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற முன்னாள் ஜனாதிபதி தயார் - நாமல் ராஜபக்ஷ

3 months ago
20 Jan, 2025 | 07:04 PM
image
 

(எம்.மனோசித்ரா)

இலங்கை வரலாற்றில் கடந்த காலங்களில் முன்னாள் நிறைவேற்றதிகார ஜனாதிபதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை இந்த அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துகின்றோம். பாதுகாப்பு மற்றும் அதன் நிமித்தம் வழங்கப்படும் உத்தியோகபூர்வ இல்லம் என்பன வரப்பிரசாதங்கள் அல்ல. அவை உரிமைகளாகும். எவ்வாறிருப்பினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அந்த இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராகவே இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

திங்கட்கிழமை (20) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எம்மை வெளியேறுமாறு கூறினால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளியேற நாம் தயாராகவே உள்ளோம். காரணம் இது எமது சொந்த குடியிருப்பு அல்ல. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இதே நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார். உத்தியோகபூர்வ இல்லம் என்பது முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பினை அடிப்படையாகக் கொண்டு அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ளவையாகும்.

எவ்வாறிருப்பினும் அந்த இல்லத்தை தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு யாருக்காவது விற்க வேண்டிய தேவை இருந்தால், அதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அங்கிருந்து வெளியேற்ற நினைத்தால் அதனை நாம் எதிர்க்கப் போவதில்லை. ஆனால் அதனை உத்தியோகபூர்வமாக எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும்.

காரணம் அந்த உத்தியோகபூர்வ இல்லம் பலவந்தமாக பெற்றுக் கொண்டதல்ல. அரசியலமைப்பு ரீதியாக கிடைக்கப் பெற்றதாகும். இது இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட நியதியுமல்ல. உலகில் எந்தவொரு நாட்டிலும் இந்த நடைமுறையே காணப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மாத்திரமின்றி, சகல முன்னாள் அரச உத்தியோகத்தர்களுக்கும் இது பொறுந்தும்.

முன்னாள் அரச தலைவர்கள் தற்போதைய அரசாங்கத்தில் பழிவாங்கப்படுகின்றனரா இல்லையா என்பது ஜனாதிபதி அநுரவின் உரைகளிலும், செயற்பாடுகளிலும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு என்பது சிறப்புரிமை அல்ல. அது உரிமையாகும். இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னர் பல நிறைவேற்றதிகார ஜனாதிபதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை இந்த அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துகின்றோம்.

எனவே முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எது எவ்வாறிருப்பினும் முன்னாள் ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் பட்சத்தில் அந்த இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு அவர் தயாராகவே இருக்கின்றார் என்றார். 

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற முன்னாள் ஜனாதிபதி தயார் - நாமல் ராஜபக்ஷ | Virakesari.lk

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் ஈடுபட்ட கம்பனிகளின் பெயர் விபரம் வெளியாகியது!

3 months ago

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் ஈடுபட்ட கம்பனிகளின் பெயர் விபரம் வெளியாகியது!

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டுள்ள கம்பனிகளின் பெயர் விபரங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக இலங்கை மத்திய வங்கி இதனை வெளிப்படுத்தியுள்ளது.

21 கம்பனிகள் திருத்தப்பட்டவாறான 1998 ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 83 (இ) பிரிவின் தடைசெய்யப்பட்ட திட்டமொன்றில் ஈடுபட்டுள்ளன என இலங்கை மத்திய வங்கி விசாரணைகளை நடத்தி தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

இதேவேளை வங்கித்தொழில் சட்டத்தின் 83(இ) பிரிவின் கீழ் இலங்கை மத்திய வங்கியினால் தீர்மானிக்கப்பட்டுள்ள கம்பனியொன்றின் பெயரை வெளிப்படுத்தலானது அந்தக் கம்பனி தொடர்பாக வழங்கப்பட்டுள்ள நீதிமன்ற கட்டளையொன்றின் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது



Open photo
 
 

யாழ். வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நபர் உயிரிழப்பு

3 months ago
20 JAN, 2025 | 10:33 AM
image

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த 49 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். 

இவருக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை (18) வல்வெட்டித்துறை பொலிஸார் இந்த நபரை கைது செய்து, பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் தடுத்து வைத்திருந்தனர். 

அந்நிலையில் திடீர் சுகவீனம் ஏற்பட்டதாக கூறி அவரை வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற நிலையில், அவர் உயிரிழந்துள்ளார். 

தொடர்ந்து உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், வைத்திய சாலைக்கு நேரில் சென்று சடலத்தை பார்வையிட்ட பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்க உத்தரவிட்டார்.

அதனையடுத்து, யாழ். போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைகள் நடைபெற்று, சடலத்தின் மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

https://www.virakesari.lk/article/204313

என்னப்பா இது அன்ரவுக்கு வந்த சோதனை...ஒரு பாராளுமன்ற எம்பிகளுக்கே சம்பளமில்லை...இதற்குள் இரண்டாவது வேறை

3 months ago
ரணில் விக்ரமசிங்க தலைமையில் நிறுவப்படவுள்ள மாற்று நாடாளுமன்றம்
Parliament of Sri LankaRanil WickremesingheGovernment Of Sri Lanka
 5 hours ago
 

 

 

 

Join us on our WhatsApp Group
விளம்பரம்
 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் மாற்று நாடாளுமன்றத்தை(நிழல் நாடாளுமன்றம்) நிறுவுவதற்கான முன்மொழிவு குறித்து விவாதங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாற்று நாடாளுமன்றத்திற்கு முன்னர் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஆனால் தற்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளை அழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த மாற்று நாடாளுமன்றத்திற்கு அழைக்க சுமார் 450 முன்னாள் அமைச்சர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

 


 

 

நிழல் அமைச்சரவை

ஆனால் அவர்களில் 225 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

ரணில் விக்ரமசிங்க தலைமையில் நிறுவப்படவுள்ள மாற்று நாடாளுமன்றம் | New Parliamentary Coalition Led By Ranil

 

அதன்படி, உண்மையான நாடாளுமன்றம் கூடும் 8ஆவது நாளில் இந்த மாற்று நாடாளுமன்றமும் கூடும். மேலும் மாற்று நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினர்களிடமிருந்து அரசாங்க அமைச்சகங்களின் எண்ணிக்கைக்கு சமமான அமைச்சர்களைக் கொண்ட நிழல் அமைச்சரவை நியமிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் நாடாளுமன்ற சபாநாயகர், சபைத் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட உள்ளதாகவும், தற்போது நாடாளுமன்றத்தில் செயல்பட்டு வரும் பொது வணிகக் குழு (COP) மற்றும் கணக்குக் குழு (COPA) உள்ளிட்ட பல குழுக்களை உருவாக்க அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.

இந்த மாற்று நாடாளுமன்றத்திற்கு முன்னாள் ஜனாதிபதிகளும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுவார்கள் என்றும், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மூத்த அரச தலைவர்களும் இலங்கையின் மாற்று நாடாளுமன்றத்தில் உரையாற்ற வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Checked
Fri, 04/25/2025 - 21:23
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr