புதிய பதிவுகள்2

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
ந‌ன்றி அண்ணா ஜ‌பிஎல் போன்ற‌ விளையாட்டு முற்றிலும் ச‌ர்வ‌தேச‌ கிரிக்கேட்டுக்கு எதிரான‌வை , வையிட் ப‌ந்துக்கு ரிவியூ ம‌ற்ற‌து மாற்று வீர‌ர் இன்னொரு வீர‌ருக்கு ப‌திலா விளையாட‌ வ‌ருவ‌து வீர‌ர்க‌ளின் ம‌ட்டைய‌ பார்ப்ப‌து பார‌மான‌ ம‌ட்டைய‌ ஜ‌பிஎல்ல‌ ப‌ய‌ன் ப‌டுத்த‌ முடியாது கிரிக்கேட் என்றால் ஒரு விதிமுறை தான் எல்லாத்திலும் இருக்க‌னும் இதை ப‌ற்றிய‌ உங்க‌ளின் க‌ருத்தை தெரிந்துக்க‌ விரும்புகிறேன் அண்ணா..........................

ஐஸ் போதைப்பொருள் கலந்த நீரை குடித்த இரு நாய்கள் பரிதாபமாக உயிரிழப்பு!

3 months 2 weeks ago
இந்த நாய்கள்... போதைப் பொருள் கலந்த நீரை குடித்த பின்பு, அதுகள் எல்லாம் தமது வாலை பார்த்தபடி... பம்பரம் மாதிரி ஒரே இடத்தில் நின்று சுத்திக் கொண்டு இருந்ததை பார்க்க பாவமாக இருந்தது. வாய் பேசாத ஜீவனும்... இந்தப் போதை பொருளால் பாதிக்கப் பட்டிருக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது.

இனித்திடும் இனிய தமிழே....!

3 months 2 weeks ago
தினமும் ஒரு வரி தத்துவம் · Dr.A.B.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை முதல்வன் படத்தில் வரும் உளுந்து வெதைக்கையிலே என்ற பாடலை பயணத்தின் போது கேட்டேன் கிராமத்துப் பெண் பாடுவதாக அமைந்த பாடல் அது வைரமுத்துவின் வரிகளில் ஸ்வர்ணலதாவின் குரலில் ஒலிக்கும் பாடலுக்கு இசை ஏ .ஆர். ரஹ்மான் பல காலம் அந்த பாடலை தொடர்ந்து கேட்டு வந்தாலும் பல்லவி பகுதியில் வரும் ஒரு சில வரிகள் எனக்கு புரிந்து கொள்ள இயலாமல் இருந்தேன் அவை பின்வருமாறு " உளுந்து விதைக்கையிலே சுத்தி ஊதக்காத்து அடிக்கையிலே நான் அப்பனுக்கு கஞ்சி கொண்டு ஆத்து மேடு தாண்டி போனேன் அந்த நல்ல நல்ல சகுணத்தில் நெஞ்சுக்குளி பூத்துப்போனேன்.. வக்கப்படப்பில் கெவுளி கத்த.. வலது பக்கம் கருடன் சுத்த.. தெருவோரம் நெறக்கொடம் பாக்கவும். மணிச்சத்தம் கேக்கவும் ஆனதே.. ஒரு பூக்காரி எதுக்க வர. பசும்பால் மாடு கடக்கிறதே.. இனி என்னாகுமோ? ஏதாகுமோ? இந்த சிருக்கி வழியில் தெய்வம் புகுந்து வரம் தருமோ? என்று வரும் பல்லவி.. இதைப்பற்றி சிந்திக்கவே தோன்றாமல் பாடலின் இசைக்கு ஏற்றவாறு எழுதப்பட்ட வரிகள் போல என்றே எண்ணிக்கொண்டிருந்தேன். நேற்று தான் எனக்குப்புரிந்தது. இது இசைக்காக எழுதப்பட்ட வரிகள் அன்று. தமிழர்கள் காலம் காலமாக கொண்டிருக்கும் "சகுணங்கள்" மீது கொண்ட நம்பிக்கையை பிரதிபலிக்கும் வரிகள் என்று. பாடல் வரிகளுக்குள் செய்த சிறு மறுஆய்வு வருமாறு.. உளுந்து என்பது மானாவாரி நிலத்தில் விதைக்கபடும் பயிர் மேலும் உளுந்து வளர காற்றில் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்க வேண்டும் . அத்தகைய ஈரப்பதம் குளிர் காலத்தில் மட்டுமே இருக்கும் . தமிழகத்தில் அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதங்கள் குளிர்காலங்களாகும். அப்போது அடிக்கும் காற்றை ஊதக்காத்து / கூதக்காத்து என்று அழைப்பார்கள் கிராம் மக்கள். காற்றில் ஈரப்பதம் இருக்கும் காற்று ஊதக்காத்து. வாடக்காத்து என்றும் சொலவடை உண்டு. பெரும்பாலும் அந்த மாதங்களில் ஆற்றில் இருந்து வரும் வாய்க்காலில் ஓடையில் தண்ணீர் ஓடும் .ஆகவே அதில் இறங்கி நடந்து போக முடியாது. தாண்டி தான் போகமுடியும்.. இதைத்தான் அழகாக இரண்டு வரிகளில் வைரமுத்து எழுதியிருக்கிறார் பாருங்கள். " *உளுந்து வெதைக்கையிலே சுத்தி ஊதக்காத்து அடிக்கையிலே நான் அப்பனுக்கு கஞ்சி கொண்டு ஆத்து மேடு தாண்டி போனேன்* " அடுத்த வரிகளில் "அந்த நல்ல நல்ல சகுணத்தில் நெஞ்சுக்குளி பூத்துப்போனேன்" என்கிறாள் தமிழக மக்களிடம் பண்டைய காலம் தொட்டு சகுணம் பார்க்கும் பழக்கம் இருந்தது என்பதை சங்க நூல்கள் வழி அறிய முடிகிறது. இது ஒரு நம்பிக்கையாக இருந்து வந்துள்ளது. வருகிறது. அது பிரதிபலிக்கும் வகையில் அடுத்த வரிகள் வருகின்றன "வக்கப்படப்பில் கெவுளி கத்த. வலது பக்கம் கருடன் சுத்த.." எனும் வரிகளில் ஸ்வர்ணலதா " வெக்கப்படப்பில் " கெவுளி கத்த என்று பாடியிருப்பார். நானும் பல லிரிக்ஸ் வெப்சைட்டுகளில் இந்த பாடல் குறித்து தேடினாலும் அனைத்திலும் "வெக்கப்படப்பு" என்றே இருந்தது. நானும் வெக்கப்படப்பு என்பது கிராமத்து வீடுகளில் ஒரு பகுதியாக இருக்குமோ? என்று யோசித்து தேடிக்கொண்டிருந்தேன். இது குறித்த கிராமத்தில் வசிக்கும் தம்பியிடம் கேட்டேன். "வெக்கப்படப்பு" னா என்னது? கிராமத்து வீடுகளில் அது ஒரு இடமா? என்று கேட்டேன். அவர் "அப்படி ஒரு இடம் இல்லையே.. ஒரு வேளை வக்கப்படப்பா இருக்கும் " என்றார் வக்கப்படப்பு என்பது வைக்கோல் படப்பு என்ற சொல்லில் இருந்து மருவி வந்துள்ளது. நெற்கதிர் அறுத்து மீதம் இருக்கும் வைக்கோலை சேர்த்து குவித்து வைக்கும் இடத்தை " வக்கப்படப்பு " என்பார்கள். கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு "அடி காட்டுக்கு நடு மாட்டுக்கு நுனி வீட்டுக்கு" நெற்கதிரின் அடிப்பகுதி - அதை வயக்காட்டில் உரமாக விடப்படும் நடுப்பகுதி - மாட்டுக்கு வைக்கோலாக மாறும் நுனியில் இருக்கும் நெற்கதிர் - வீட்டுக்கு வரும் இதுவே அதன் அர்த்தம். வக்கப்படப்பில் கெவுளி கத்த.. இதில் கெவுளி என்பது பல்லிக்கு கிராமத்தில் வழங்கப்படும் பெயர். Indian house lizard என்று அழைக்கப்படும் பல்லி மேற்கில் இருந்து கத்துவது நல்ல சகுணம் என்று பார்க்கபடுகிறது. "வலது பக்கம் கருடன் சுத்த" என்ற வரிகளில் கருடன் என்று அழைக்கப்படும் கழுகு இடப்பக்கத்திலிருந்து வடப்பக்கம் செல்வதை நற்குணம் என்று கூறப்படும். நான் கேட்டு அறிந்த செய்தி யாதெனில் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சி நடக்கும் போது கருடன் மேலே வானத்தில் சுற்றுவது நற்சகுணம் என்று நம்பப்படுகிறது. அடுத்த வரிகள் "தெருவோரம் நெறகொடம் பாக்கவும். மணிச்சத்தம் கேட்கவும் ஆனதே.. ஒரு பூக்காரி எதுக்கவர. பசும்பால்மாடு கடக்கிறதே.. இனி என்னாகுமோ? ஏதாகுமோ? இந்த சிறுக்கி வழியில் தெய்வம் புகுந்து வரம் தருமோ?" இவையனைத்தும் கிராமங்களில் இன்றும் நல்ல சகுணங்களாக பார்க்கப்பட்டு வருகின்றன என்பதை சில கிராமவாசிகளிடம் கேட்டுத்தெரிந்து கொண்டேன் மேலும் எவற்றையெல்லாம் நற் சகுணங்கள் , கெட்ட சகுணங்கள் என்று நினைக்கிறார்கள் என்று ஆய்வு செய்ததில் பின்வரும் விசயங்கள் கிடைத்தன பண்டைய காலங்களிலும் தமிழ் மக்கள் பல விஷயங்களுக்கு சகுணங்கள் பார்த்திருப்பது பாடல்கள் மூலம் புலனாகிறது. அவற்றுள் ஒன்று இதோ “மையல் கொண்ட மதன்ழி இருக்கையள் பகுவாய் பல்லி படுதொறும் பரவி நல்ல கூறுகென நடுங்கி” (அகம்-289) இவ்வரிகளானது தலைவனைப் பிரிந்த தலைவி, தன் அன்புக் காதலன் வரும் நாளை எதிர் நோக்கியிருக்கும் வேளையில், பல்லியானது நிலைக் கதவுகளிலும், சுவர்களின் மீதும், இருப்பதனைப் பார்த்துக் கொண்டிருக்கும் அவள், பல்லியை நோக்கி நல்ல பலன் கூறுதல் வேண்டும் என தன் மனதில் எண்ணிக் கொள்கின்ற விதமாக அமைந்திருப்பதிலிருந்தே, அக்கால மக்களின் நம்பிக்கைகளின் ஒன்றில் முக்கியமானதாக இவை இருந்துள்ளது எனவும் அறிய முடிகிறது. என்னைப்பொறுத்த வரை சகுணம் என்பது Just a matter of coincidence . ஒன்றோடு ஒன்று ஒத்து நடக்கும் இரு செயல்களை நாம் முடிச்சுப்போட்டுக் கொள்வதே சகுணம் என்கிறோம். . யானை , குதிரை , பசு , கன்று , காளை , திருமணமாகாத பெண் , குழந்தையுடன் பெண் , ஆடை அணியாத குழந்தை , சங்கு , தாமரை , பூக்கள் விற்பவர் , பால் ,நிறை குடம் , காகம் இடப்பக்கமிருந்து வடப்பக்கம் செல்வது , பல்லி கத்துவது , வீட்டில் இருக்கும் காகம் கரைவது போன்றவற்றை நற்சகுணம் என்று நம்பினர். பூனை குறுக்கே போவது, நாய் குறுக்கே போவது, நாய் ஊளையிடுவது, மண்வெட்டியுடன் எதிரே வருவது, தும்முவது, தலையில் முக்காடு போட்டவர் எதிரே காண்பது , விதவயைக் காண்பது இப்படி பலவற்றை துற்சகுணங்கள் என்று மூடநம்பிக்கை கொண்டிருந்தனர் என்னைப்பொறுத்த வரை இந்த சகுணங்கள் மீது கொண்டிருக்கும் நம்பிக்கை மூடநம்பிக்கையாகும் . தன்னம்பிக்கையும், சமூகம் மீது தனிமனிதன் கொண்டிருக்கும் நம்பிக்கை இரண்டு மட்டுமே மனிதவாழ்க்கைக்கு நன்மை சேர்ப்பது. இருப்பினும் இந்தப்பாடல் வரிகள் மூலம் இத்தனை விசயங்களை கற்க முடிந்தது சிறப்பான விசயம். படித்து பகிர்ந்து Voir la traduction உளுந்து விதைக்கையிலே பாடலில் இவ்வளவு விடயங்கள் இருக்கின்றனவா . ........! 😇

ஐஸ் போதைப்பொருள் கலந்த நீரை குடித்த இரு நாய்கள் பரிதாபமாக உயிரிழப்பு!

3 months 2 weeks ago
சிங்கப்பூர் கனவில இருந்த ஸ்ரீலங்கா இப்ப பிரேசில் கிராமங்கள் மாதிரி எதிலும் எங்கும் போதை நாடாக மாறிக்கொண்டிருக்கு...

சிரிக்கவும் சிந்திக்கவும் .

3 months 2 weeks ago
Vino Mohan · Christmas Eve என்றே கிருஸ்துவ பெருமக்கள் கொண்டாடுகிறார்கள் உலகமெங்கும்.. நாம் அது போல கொண்டாடுவதில்லை தான்.. ஆனால் ஒவ்வொரு பண்டிகைக்கும் முந்திய நாள் வீடு அமர்க்களப்படும். அதிலும் தீபாவளிக்கு முதல் நாள் என்றால்.. ஏ அப்பா! ஏக ரகளை தான் போங்கள். 65 ஆண்டுகளுக்கு முன்னால் ஏதோ ஒரு ஆண்டு ஆனந்த விகடன் தீபாவளி மலரில் வெளியான கோபுலு அவர்களின் ஜோக் இது. ஒரே ஒரு வரிதான்.. தீபாவளிக்கு முதல் நாள்! மொத்த சேதியையும் சொல்லி விட்டார் கோபுலு.. அது தான் கோபுலு. எவ்வளவு விவரங்கள் பாருங்கள்.. இந்த ஒரே ஒரு சித்திரத்தில். 1960 க்கு முந்தைய, ஒரு நடுத்தர குடும்பத்தின் கதை..... ஒன்றும் பிரமாதம் இல்லை அய்யா! தீபாவளிக்கு முதல் நாள் வந்து சேர்ந்து விடுகிறேன் என்று கடிதம் போட்டுவிட்டார் மாப்பிள்ளை சார்வாள்.. கடிதம் பெண்ணின் கையில் இருக்கு. பேருக்கு ஒரு புத்தகமும் கையில் இருக்கு. இன்னொரு கை விரல் எத்தனை மணி, நிமிஷம் இன்னும் இருக்கு, அவர் வருவதற்கு என்று கணக்கு போடுகிறது. கண்கள் இப்போ என்ன மணி ஆச்சுது என்று ஒரு பார்வை பார்த்து கொள்ளுகிறது. மற்றபடி பெண்ணின் உடல் மட்டும் ஆத்தில் இருக்கு. மற்றபடி மனசெல்லாம் அகமுடையானிடத்தில்.. மகளுக்கு வாங்கிய தலை தீபாவளி புடவையை பார்த்து பார்த்து ஆனந்தித்து கொண்டிருக்கிறார் தகப்பனார். மூத்த பொண்ணோல்லியோ. பெருமையும் மகிழ்ச்சியும் பூரிப்பும் முகத்தில் பொங்கி பெருகுகிறது. மற்ற பேருக்கு வாங்கிய ஜவுளி ஒரு மூட்டையாக கட்டி அவருக்கு பின்னே இருக்கும் ஸ்டூலில் இருக்கு. அம்மா விறகு அடுப்போது போராடி கொண்டிருக்கிறாள். அத்தனை பட்சணங்களையும் சுட்டு எடுக்கணுமே... எண்ணெய் புகை வாணலிக்கு மேலே... சாதாரணமாக அப்பளம் பொரித்தால் கூட அடுப்படியை வட்டமிடும் குழந்தைகள் பட்டாசு பிரிவினையில் அதிருப்தி கொண்டு பேதப்பட்டு கிடக்கிறார்கள். மூத்த பயல் தங்கையைகெஞ்சலும் மிரட்டலுமாக ஏதோ கேட்கிறான். அவளோ எனில் பட்டு பாவாடையும் தானுமாக குத்து காலிட்டு அமர்ந்து கொண்டு ஒரு வார்த்தை பேசாமல் பார்க்கிறாள். பேரத்திற்கு படிய மாட்டாள் என்றே போடுகிறது. இன்னொரு பயல் தன்னுடைய பங்கை எடுத்துக்கொண்டு நகர்ந்து விட்டான். அது போல வார் வைத்து தைத்த அரை கால் சட்டையை போட்ட பேர் இங்கே யார் யார்? நான் ஆறாம் வகுப்பு வரை வார் வைத்து தைத்த அரைகால் சட்டை தான். M R ராதா இதே போல் வார் வைத்து தைத்த முழு கால் சட்டையையே போட்டுக்கொண்டு வருவார். சட்டையை டக் இன் செய்திருப்பார். 😂" கடை குட்டியை கவனிப்பார் இல்லை. வீட்டுக்கு வேணப்பட்ட காய்கறிஎல்லாம் மேலே ஒரு பிரம்பு கூடையில் தொங்குகிறது. ஒரு மாத காலண்டர், ஒரு டெய்லி காலண்டர்.. ஒரு ஸ்வாமி படம். முழம் பூ போட்டிருக்கிறது படத்திற்கு. இன்றைக்கு உதிரி சாமந்தி பூ தான் ஒவ்வொரு படத்திற்கும். சுவரில் ஒரே ஒரு மாடம். அதில் தான் கேச வர்த்தினி முதல் ரெமி பவுடர் வரை. பார்க்க பார்க்க மனம் நிறைந்து போகிறது சார். நானே பிறக்காத போது வந்த விகடன் மலரில் கோபுலு போட்டிருக்கிறார் இந்த சித்திரத்தை. இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள் மக்களே. ஆனந்தமாக கொண்டாடுங்கள். Voir la traduction

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
நொக்கவுட் போட்டிக்ளில் மழை வரும் என எதிர்பார்த்து, இன்னொரு நாள் ரிசர்வ் தினத்தில்போட்டியினை தொடர்ந்தார்கள் அவ்வாறே 2019 அரை இற்தியில் நியுசிலாந்துடன் இந்தியா மோதிய போது மழையால் தடைப்படவே அடுத்த நாள் போட்டியினை வைத்தனர், 2007 இலங்கை அவுஸ்ரேலிய இறுதிப்போட்டியில் இலங்கை அணி எட்ட முடியாத உயரத்தில் இருக்கும் இலக்கினை போதிய எளிச்சம் இல்லாத்ததனால் தோல்வியினை ஒப்புக்கொள்ள ஆனால் நடுவர் ரிசர்வ் தினத்தில் மீதமிருக்கும் சில ஓவர்கள் அவை எத்தனை என நினைவில்லை மறுதினம் என நினைக்கிறேன் வீச வேண்டும் என கூற விளையாடிய அணிகள் மட்டுமல்ல இரசிகர்கள் கூட கடுப்பானார்கள், பின்னர் அவஸ்ரேலிய அணி சுழல் பந்து வீச்சாளர்களை மட்டும் பயன்படுத்தி எஞ்சிய பன்ட்கு வீச்சினை முடித்திருந்தது. அனைத்து போட்டிகளுக்கும் ரிசர்வ் தினம் வைக்க மைதான வசதி இருந்தால் வைத்தால் நல்லதுதான், வாழ்க்கையில் பல விடயங்கள் நமது கைகளில் இல்லை, அத்துடன் வானிலை என்பது மாறுவதனாலேயே அதனை வானிலை என கூறுகிறார்கள், அதனால் கவலைப்படாதீர்கள், இந்த போட்டி யாழ்களத்தில் நடத்தப்பட்டிருக்காவிட்டால் பலர் பார்த்திருக்க மாட்டோம், யாழ் கள போட்டியினாலேயே நான் மீண்டும் கிரிக்கட்டினை இரசிக்கிறேன், இந்த போட்டியின் சுவாரசியமே உங்களை போன்ற உறவுகள்தான்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
நீங்களே உங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள். விதி முறைகள் முதலே வகுப்பட்டவை. அதன்படி எல்லோரும் ஒத்துக்கொண்டு விளையாடுவார்கள். நினைத்தது போல் மாற்ற முடியாது. கிரிக்கட்டில் அடிப்படை விதிகள் மாற்றவே முடியாதவை. மற்றயவை, போட்டியை நடத்தும் நாட்டிடம் விட்டுவிடுவார்கள். அதுவும் மழை சம்பந்தமான விதிகள் மாறுபடுவது உண்டு. ஆனால், அதிலும், சில விதிகள் மாற்ற முடியாதவை. ஒருநாள் போட்டிகளில் 20 பரிமாற்றங்கள் கொடுக்கப் பட்ட நேரத்துக்குள் முடிக்கப்பட வேண்டும். இல்லாவிடில் போட்டி முடிவில்லாமல் முடிவடையும். T20 போட்டிகளில், அது 5 பரிமாற்றங்கள். இப்போ புதிதாக வந்துள்ள 100 பந்துகள் போட்டியில், 25 பந்துகள் விளையாடினாற்தான், ஒரு முடிவு கிடைக்கும்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
என்ன‌ செய்வ‌து அண்ணா ப‌ல‌ கிரிக்கேட் பார்ப‌தால் ப‌ல‌ ச‌ந்தேக‌ங்க‌ள் என‌க்குள் 2019உல‌க‌ கோப்பை சிமி பின‌லில் இந்தியா எதிர் நியுசிலாந் விளையாடின‌ போது ம‌ழை வ‌ர‌ விளையாட்டை அடுத்த‌ நாள் மீண்டும் வைச்ச‌வை............... ஒவ்வொரு ம‌க‌ளிர் உல‌க‌ கோப்பையும் 7மாத‌ம் அல்ல‌து அதுக்கு முத‌ல் வைப்பின‌ம் , இந்த‌ உல‌க‌ கோப்பை 10மாத‌ம் வைக்கின‌ம்...................இல‌ங்கை ம‌ற்றும் இந்தியாவில் இப்ப‌டியான‌ மாத‌ங்க‌ள் ம‌ழை அல்ல‌து பனிப்பொழிவு அதிக‌ம் இருக்கும் இர‌வு நேர‌ங்க‌ளில்...........................

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
அப்ப‌ 20ஓவ‌ர் கிரிக்கேட்டில் ம‌ழை வ‌ந்தால் என்ன‌ விதிமுறை இருக்கு😋................. ஆண்க‌ளின் 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் ம‌ழை வ‌ர‌ மீதி விளையாட்டை அடுத்த‌ நாள் வைச்ச‌வை 2019ம் ஆண்டு😁 2007ம் ஆண்டு 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பை பின‌லில் ம‌ழை வ‌ர‌ இல‌ங்கை க‌ப்ட‌ன் மீத‌ம் உள்ள‌ போட்டிய‌ அடுத்த‌ நாள் வைக்க‌னும் என்று சொல்ல‌ , அவுஸ்ரேலியா வெற்றி என‌ அறிவித்து அவ‌ர்க‌ள் கையில் கோப்பை கொடுக்க‌ப் ப‌ட்ட‌து😉......................

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனேகமான பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த மழை-மூவர் மரணம் -144 குடும்பங்கள் பாதிப்பு!

3 months 2 weeks ago
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனேகமான பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த மழை-மூவர் மரணம் -144 குடும்பங்கள் பாதிப்பு! இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை எதிர்வரும் மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது இதன் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதுடன் இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றிரவு 8.30 வரை அமுலில் காணப்படும் வகையில் குறித்த மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலையில் சீரற்ற வானிலைக் காரணமாக மூன்று ;மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் பலத்த மழைக் காரணமாக 144 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த குடும்பங்களைச் சேர்ந்த 585 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அத்துடன் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக தொடருந்து மார்க்கத்தில் திட்டமிடப்பட்டிருந்த 04 தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோட்டை தொடருந்து மார்க்கத்தில் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையால் தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி கண்டி, மாத்தளையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் மாத்தறை வரையிலான 04 தொடருந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. https://athavannews.com/2025/1450782

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
இவ்வளவு போட்டிகள் பார்க்கிற பையனுக்கே இவ்வளவு குழப்பம் என்றால், மற்றவர்கள், என்ன வந்தாலும் சரி என்றுதான் இருப்பார்கள். சில விதிகள் கட்டாயம் தேவைதான், சமநிலையை மேம்படுத்த.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
அப்பிடி இல்லை. குறைந்தது 20 பரிமாற்றங்கள் விளையாடினாப் பிறகுதான், மிச்ச கணக்கு வழக்கெல்லாம். ஆண்கள் என்றாலென்ன, பெண்கள் என்றாலென்ன, இதுதான் முதலாவது நிபந்தனை. 20 பரிமாற்றங்கள் விளையாட முடியாமல் போகும்போதுதான் போட்டி கைவிடப்படும்.
Checked
Fri, 02/06/2026 - 16:58
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed