புதிய பதிவுகள்2

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழப்பு!

3 months 2 weeks ago
வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்கிரமசேகர பாதாளக் குழு குற்றவாளி - ஆனந்த விஜேபால 22 Oct, 2025 | 04:49 PM (எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்) வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்கிரமசேகர பாதாளக் குழு குற்றவாளி பல சமூக விரோத குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார். நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறைக்கும் சென்றுள்ளார். பாதாள குழுக்களுக்கிடையிலான மோதலின் பிரதிபலனாகவே இது காணப்படுகிறது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற அமர்வின்போது வெலிகம பிரதேச சபையின் தலைவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, வெலிகம பிரதேச சபையின் தலைவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பல விடயங்களை குறிப்பிட்டார்கள்.இந்த கொலை மற்றும் இதற்கு முன்னரான படுகொலைகளினால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும், பொதுமக்களின் பாதுகாப்புக்கும் எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. இந்த நாட்டில் பல குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் உள்ளார்கள். அவர்கள் பல குழுக்களாக பிரிந்துள்ளார்கள்.அவர்களிடம் ஆயுதங்கள் உள்ளன. அவர்களுக்கிடையில் மோதல்கள் உள்ளன. இவ்விடயம் தொடர்பில் நான் கடந்த மே மாதம் 20 ஆம் திகதி சபைக்கு விடயங்களை வெளிப்படுத்தினேன். வெலிகம பிரதேச சபை உறுப்பினரான லசந்த விக்கிரமசேகர என்ற பெயருடைன இவர் வெலிகம லசந்த என்று அழைக்கப்படுவார்.இவர் மக்கள் பிரதிநிதியாக இருந்தாலும், அவர் பாதாளக்குழு குற்றவாளி.இவருக்கு எதிராக 6 வழக்குகள் உள்ளன. சிறைதண்டனை அனுபவித்துள்ளார்.தற்போதும் ஒத்திவைக்கப்பட்ட சிறைதண்டனை ஊடாகவே இருந்துள்ளார்.இவர் பல குற்றச்செயல்களுடன் தொடர்புப்பட்டுள்ளார். இந்த நபர் தொடர்பில் பல விடயங்கள் நீதிமன்றத்துக்கு அறிக்கையிடப்பட்டுள்ளன. அண்மையில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட பாதாளக் குழுக்களின் உறுப்பினர்கள் பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்கள். பாதாள குழுக்களுக்கிடையில் மோதல்கள் உள்ளன. இந்த சம்பவமும் அவ்வாறானதே, ஐக்கிய மக்கள் சக்தி இவ்வாறானவர்களை தமது கட்சிக்கு எவ்வாறு தெரிவு செய்தது என்பதை அறிய முடியவில்லை. பாதாள குழுக்கள் மற்றும் ஏனையோர் இவ்வாறு மோதிக் கொண்டு, இறப்பதை ஒருபோதும் அனுமதிக்கபோவதில்லை. இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும். பாதாள குழுக்களுடன் ஒன்றிணைந்து செயற்பட்டு பின்னர் மக்கள் பிரதிநிதியான ஒருவர் பாதாளக் குழுக்களின் முரண்பாடுகளினால் கொலை செய்யப்பட்டவுடன் அதனை மக்கள் பிரதிநிதி கொலை என்று எவ்வாறு குறிப்பிடுவது. வெலிகம பிரதேச சபையின் தலைவர் பாதாள குழுக்களுடனும், சமூக விரோத செயற்பாடுகளுடன் தொடர்புப்பட்டுள்ளார். இவருக்கு நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பதை ஐக்கிய மக்கள் சக்தியினர் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/228395

பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து பாதணிகள்

3 months 2 weeks ago
22 Oct, 2025 | 05:22 PM (எம்.மனோசித்ரா) 2026 ஆம் ஆண்டுக்கான தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயில்கின்ற துறவு மாணவர்களுக்கான பாதணி வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய 2026 ஆம் ஆண்டுக்கான தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயில்கின்ற துறவு மாணவர்களுக்கான பாதணிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர் சிட்டைகளை 2025 பாடசாலை தவணை முடிவடையும் போது பயனாளிகளுக்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த வவுச்சர்சிட்டைகள் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சால் நலன்புரிக் கொடுப்பனவுகளை வழங்குவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள பரிசு வழங்கும் கைத்தொலைபேசி மென்பொருள் மூலம் ஸ்கான் செய்வதற்கு இயலுமாகும் வகையில் ஞசு குறியீட்டுடன் பாதுகாப்பாக அச்சிட்டு பயன்பெறுகின்ற மாணவர்களுக்கு வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் கீழ்வரும் வகையில் மாணவர்களைத் தெரிவு செய்வதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாடளாவிய ரீதியில் மாணவர்களின் எண்ணிக்கை 250 இனை விடவும் குறைவான பாடசாலைகளில் கல்வி கற்கின்ற மாணவர்கள் 644,000 பேர், 251-500 இடைப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையைக் கொண்ட தோட்டப் பாடசாலை மாணவர்கள் 53,093 பேர், விசேட தேவையுடைய மாணவர்கள் கல்வி கற்கின்ற 30 பாடசாலைகளில் மாணவர்கள் 2,300 பேர், பிரிவெனாக்களில் தெரிவு செய்யப்பட்ட துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்கள் 30,000 பேர் என இதற்காக மாணவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். https://www.virakesari.lk/article/228397

யாழ்ப்பாணத்தை சென்றடைந்த சூரன்

3 months 2 weeks ago
யாழ்ப்பாணத்தை சென்றடைந்த சூரன் adminOctober 22, 2025 பிரான்சில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து , சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை துவிச்சக்கர வண்டியில் கடந்து இன்றைய தினம் புதன்கிழமை சூரன் என்ற இளைஞன் யாழ்ப்பணத்தை சென்றடைந்துள்ளார். யாழ்ப்பாணம் நல்லூரை பூர்வீகமாகக் கொண்ட 28 வயதுடைய சூரன் என்ற இளைஞன் இலங்கையின் மகத்துவத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லும் ஒரு பொறிமுறையாகவே இந்த துவிச்சக்கர வண்டி பயணத்தை முன்னெடுத்து யாழ்ப்பாணத்தை சென்றடைந்ததாக தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து தனது பயணம் குறித்து மேலும் தெரிவிக்கையில் – “நான் பாரிஸில் இருந்து கடந்த செப்டம்பர் 01ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, செர்பியா, பல்கேரியா, துருக்கி, ஜார்ஜியா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற பல நாடுகள் வழியாக சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை துவிச்சக்கர வண்டியில் பயணித்து இன்று எனது பூர்வீக இடமான நல்லூரை வந்தடைத்தேன். யாழ்ப்பாணம் தனது பெற்றோரின் சொந்த ஊர் என்பதால் எனது பயணத்தின் இறுதி இலக்காக யாழ்ப்பாணத்தின் நல்லூர் கோயிலைத் தேர்ந்தெடுத்திருந்தேன். அத்துடன் இலங்கை ஒரு நாடு மட்டுமல்ல, என் பூர்வீகத்துடன் தொடர்புபட்ட உன்னத உணர்வு. எனது நோக்கம் தனது குடும்பத்துடன் மீண்டும் இணைவது மட்டுமல்லாமல்ல யாழ்ப்பாணத்தின் கலாசார முக்கியத்துவத்தை உலகிற்கு வெளிப்படுத்துவதும் ஆகும். மேலும் யாழ்ப்பாண தீபகற்பத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், பிராந்தியத்துடன் வலுவான உணர்வு மற்றும் கலாசார உறவுகளைப் பேணுகின்ற உலகளாவிய தமிழ் புலம்பெயர்ந்த சமூகத்தை ஊக்குவிப்பதற்கும் ஒரு மதிப்புமிக்க வாய்ப்பை உருவாக்குவதுமாகும். நான் பாகிஸ்தானுக்கும் சென்று வர முயற்சித்தேன். ஆனால் அந்நாடு அனுமதி மறுத்திருந்தது. அதன்பின் இந்தியா சென்று நாகப்பட்டினத்தில் இருந்து கப்பல் மூலம் காங்கேசன்துறையை வந்தடைந்து எனது இறுதி நல்லூரை வந்தடைந்துள்ளேன் இங்கு எனக்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கப்பெற்றது. அத்துடன் நான் இந்த பயணத்தில் கரடுமுரடன சவால்களை எதிர்கொண்டாலும் அந்த நாடுகளின் அரசுகளும் மக்களும் எனக்கு மிகுந்த வரவேற்பையும் ஒத்துழைப்புகளையும் தந்திருந்தனர். அவர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றிகளை கூறுகின்றேன் என தெரிவித்திருந்தார். அதேநேரம் சுமார் 40 வருடங்களுகு முன்னர் பெற்றோர் பிரான்சில் குடியேறிய நிலையில் சூரன் சரளமாக தமிழில் தனது உணர்வுகளை பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2025/221853/

தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்

3 months 2 weeks ago
கருத்து பா(ப)ஞ்(சம்)😂

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

3 months 2 weeks ago
இஷாரா செவ்வந்தி வழங்கிய தகவலுக்கமைய பிரதான ஆட்கடத்தல்காரர் கைது! 22 Oct, 2025 | 03:23 PM பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர்களை நாடு கடத்துவதற்கு உதவி செய்த பிரதான ஆட்கடத்தல்காரர் ஒருவர் கிளிநொச்சி பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளுக்காக இஷாரா செவ்வந்தி தலைமறைவாக இருந்த கிளிநொச்சி பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போதே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். “கணேமுல்ல சஞ்சீவ” படுகொலைசெய்யப்பட்டதையடுத்து இஷாரா செவ்வந்தி சுமார் மூன்று நாட்களாக கிளிநொச்சியில் தலைமறைவாக இருந்துள்ள நிலையில் குறித்த ஆல்கடத்தல்காரரின் உதவியுடன் இந்தியாவிற்கு தப்பிச் சென்று பின்னர் அங்கிருந்து நேபாளத்திற்கு சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த ஆல்கடத்தல்காரர் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த பலரை இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது. கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். சட்டத்தரணிகள் போன்று வேடமணிந்து நீதிமன்றத்துக்குள் நுழைந்த இஷாரா செவ்வந்தி உட்பட இருவரே “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரை சுட்டுக்கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் 14 கைதுசெய்யப்பட்டார். நேபாள அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மூன்று நாட்களாக நேபாளத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இஷாரா செவ்வந்தி இவ்வாறு கைதுசெய்யப்பட்டார். இஷாரா செவ்வந்தியுடன் “கம்பஹா பபா” , “ஜேகே பாய்” உட்பட மேலும் பலர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட அனைவரும் நாட்டுக்கு அழைத்துவருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் ஒக்டோபர் 15 நேபாளம் நோக்கி பயணித்து அவர்களை இரவு நேரத்தில் நாட்டுக்கு அழைத்துவந்தனர். நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட அனைவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/228387

தவிசாளர்கள் - செயலாளர்கள் முரண்பாடு பெரும் தலையிடி ; அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் - வடக்கு ஆளுநர்

3 months 2 weeks ago
Published By: Digital Desk 1 22 Oct, 2025 | 03:53 PM தவிசாளர்களுக்கும் செயலாளர்களுக்கும் இடையேயான முரண்பாட்டை தீர்ப்பது பெரும் தலையிடியாக உள்ளதென தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் எல்லோரும் ஒன்றிணைந்தாலே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார். நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், செயலாளர்கள் ஆகியோருக்கான பயிற்சி வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (22) வடக்கு மாகாண ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கும்போதே, அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை நாம் ஏற்படுத்தவேண்டும். எங்கள் சேவைகளை விரிவாக்குவதுடன் அவற்றையும் நாம் விரைவுபடுத்தவும் வேண்டும். தவிசாளர்கள் மற்றும் செயலாளர்கள் சிலர் துணிவுடன் நடவடிக்கைகள் எடுக்கின்றீர்கள். அதைப் பாராட்டுகின்றேன். ஏனையோரும் அவ்வாறு செயற்படவேண்டும். தவிசாளர்களும் செயலாளர்களும் இணைந்து செயற்படவேண்டும். இருவரும் முரண்பட்டால் அதைத் தீர்ப்பதே எங்களுக்குப் பெரும் தலையிடியாக மாறிவிடும். தவிசாளர்களுக்கும் செயலாளர்களுக்கும் இடையிலான முரண்பாட்டால் பாதிக்கப்படப்போவது அந்தப் பகுதி மக்களே. அந்த மக்களுக்கு சேவை செய்வதற்கே எல்லோருக்கும் இருக்கின்றார்கள். அதை மனதிலிருத்தினாலே போதும். மக்களை அவர்களது சேவைகளை நிறைவேற்றுவதற்கு அலைக்கழிக்காதீர்கள். இதேநேரம், யாழ். மாநகரசபை எல்லைக்குள் உள்ள பெரு வணிக நிறுவனங்கள் குடிபுகு சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளாமல் இயங்குகின்றன. இதனால் அவர்கள் மாநகர சபைக்குச் செலுத்தும் வரியானது, பிரதேச சபையொன்றிலுள்ள குடியிருப்பாளர் செலுத்தும் வரியைவிடக் குறைவானது. இதைத் தொடர்ந்து அனுமதிக்க முடியாது. அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கவேண்டியது உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்பு. அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் ஊடாக மாற்றங்களை ஏற்படுத்துவோம் என்றார் . இந்த நிகழ்வில் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன், பிரதிப் பிரதம செயலாளர் - ஆளணியும் பயிற்சியும் செ.பிரணவநாதன், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.சுதர்சன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/228385

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
இந்திய‌ அணிய‌ ப‌ற்றி செம்பாட்ட‌ன் அண்ணைக்கு எழுதி இருந்தேன் மேல‌ , இந்திய‌ அணியின் ம‌டைய‌டிய‌ குறை சொல்ல‌ முடியாது விளையாடின‌ அனைத்து விளையாட்டிலும் ந‌ல்ல‌ ஸ்கோர் அடிச்ச‌வை ஆனால் அனுப‌வ‌ம் இல்லா வேக‌ ப‌ந்து வீச்சு ம‌க‌ளிர‌ இந்த‌ உல‌க‌ கோப்பையில் எப்ப‌டி தான் சேர்த்தார்க‌ள் தெரிய‌ல‌ , இந்த‌ வ‌ருட‌ம் அறிமுக‌மாகி 7ச‌ர்வ‌தேச‌ போட்டியில் விளையாடின‌ ம‌க‌ளிர‌ தொட‌க்க‌ ப‌ந்து போட‌ விட‌ , அவா அதிக‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுப்ப‌தோடு விக்கேட் எடுப்ப‌தும் இல்லை , பாக்கிஸ்தானுக்கு எதிரா அங்கினேக்க‌ ப‌ந்து போட்டு 3விக்கேட் எடுத்தா , அத‌ன் பிற‌க்கு ம‌ற்ற‌ அணிக‌ளுட‌ன் விளையாடும் போது அவான்ட‌ ப‌ந்துக்கு செம‌ அடி , அடுத்த‌ போட்டியில் அவாவை உக்கார‌ வைத்து விட்டு இன்னொரு ம‌க‌ளிருக்கு வாய்ப்பு கொடுத்தால் மாற்ற‌ம் நிக‌ழ‌லாம்...........................

கட்டுநாயக்க விமான நிலைய Check-in நேரத்தில் மாற்றம்

3 months 2 weeks ago
பிகு நீங்கள் உட்பட யாழில் எழுதும் பலர் கடன் அட்டையை நான் மேலே சொன்னபடி responsible ஆக பாவிப்போர்தான் என்பது அவரவர் எழுத்துக்களிலேயே தெரிகிறது. ஆனால் யாழுக்கு வெளியே இறாலுக்கு ஆசைபட்டு சுறாவை இழந்த எமது மக்கள் அதிகம். குறிப்பாக அடுத்த சந்ததி…கொஞ்சம் பயமாகவே உள்ளது😂

கார்சிகா தீவில் பிறந்த நெப்போலியன் பிரெஞ்சு பேரரசரானது எப்படி?

3 months 2 weeks ago
பட மூலாதாரம், Getty Images 21 அக்டோபர் 2025 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் (2021-ஆம் ஆண்டு உலக நாடுகள் மற்றும் தமிழர்களின் வரலாறு மற்றும் தொல்லியல் தொடர்பான சிறப்புக் கட்டுரைகளை 'வரலாற்றுப் பதிவுகள்' என்ற பெயரில் ஞாயிறுதோறும் பிபிசி தமிழ் வெளியிட்டது. அந்த வரிசையில் வெளியான மூன்றாம் கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது.) மனிதகுல வரலாற்றில் மிகச் சிறந்த ராணுவத் தலைவர்களில் ஒருவராக பிரெஞ்சு மன்னர் நெப்போலியன் போனபார்ட் (1769-1821) கருதப்படுகிறார். பிரெஞ்சுப் புரட்சி (1787-1799) நடந்த காலத்தில் முக்கியத்துவம் பெறும் நிலைக்கு உயர்ந்த நெப்போலியன், 1804 முதல் 1814 வரை பிரான்சின் பேரரசராக இருந்தார். 1814இல் ஆட்சியை இழந்த பின் மீண்டும் 1815இல் பிரான்சின் பேரரசராக அவர் இருந்தார். 1803 மற்றும் 1815 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலகட்டங்களில் நடைபெற்ற நெப்போலியப் போர்கள் மூலம் அவர் நினைவுகூரப்படுகிறார். பிரிட்டன் உடனான வாட்டர்லூ போரில் ஜூன் 18, 1815 அன்று நெப்போலியன் போனபார்ட் தோல்வி அடைந்ததும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சரி.. நெப்போலியன் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்கு தெரியும்? நெப்போலியன் எங்கு எப்போது பிறந்தார் ? ஆகஸ்ட் 15, 1769 அன்று மத்திய தரைக்கடலில் உள்ள கோர்சிகா தீவில் பிறந்தார் நெப்போலியன். இந்தத் தீவு பிரான்சின் ஓர் அங்கம். நெப்போலியன் வரலாற்றில் எதற்காக நினைவுகூரப்படுகிறார்? அதற்குப் பல காரணங்கள் உண்டு. ஆனால், பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே நெப்போலியப் போர்கள் நடந்த காலகட்டத்தில் பிரான்சின் பேரரசராக இருந்ததற்கும், வாட்டர்லூ போரில் தோல்வி அடைந்ததற்கு அவர் நினைவுகூரப்படுகிறார். நெப்போலியனின் குடும்ப பின்புலம் என்ன? பட மூலாதாரம், Getty Images கார்சிகா தீவில் கார்லோ மரியா போனபார்ட் எனும் வழக்கறிஞருக்கும், அவரது மனைவி லெடிசியா ரமோலினா போனபார்ட்டுக்கும் பிறந்த குழந்தைகளில் எட்டு குழந்தைகள் உயிர் பிழைத்தனர். அவர்களில் இரண்டாவது குழந்தை நெப்போலியன் ஆவர். 'போனபார்ட்' என்போர் கார்சிகா தீவில் வாழ்ந்த ஒரு சிறிய மேட்டுக்குடி சமூகத்தினர் ஆவர். நெப்போலியன் இருமுறை திருமணம் செய்து கொண்டவர். அவரது முதல் மனைவியின் பெயர் ஜோசஃபைன் டீ புஹார்னே (1796 - 1810). இரண்டாவது மனைவியின் பெயர் மேரி லூயி, பார்மாவின் கோமாட்டி (1810 - 1821). மேரி மூலமாகத்தான் இரண்டாம் நெப்போலியன் பிறந்தார். தனக்கு 1806ஆம் ஆண்டில் முறையின்றி பிறந்த, சார்லஸ் லியான் என வேறொரு மகன் இருப்பதாக முதலில் ஒப்புக் கொண்ட நெப்போலியன், காலப்போக்கில் அதை மறுத்தார். நெப்போலியனின் உயரம் என்ன? நெப்போலியன் தாம் உயரம் குறைவாக இருப்பது குறித்து அதிகம் வருத்தப்பட்டிருக்கிறார். அவர் ஐந்து அடி இரண்டு அங்குலம் உயரம் என அவர் மரணத்தின் போது எழுதப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டிருக்கிறது. ஆங்கில அளவீட்டு முறைப்படி பார்த்தால் ஐந்து அடி ஆறு அங்குல உயரமிருப்பார். நெப்போலியனின் இளமைக்காலம் எப்படி இருந்தது? நெப்போலியனின் தாய் தந்தையர் கார்சிகா தீவில் வாழ்ந்த ஒரு சிறிய மேட்டுக்குடியைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அவர்கள் குடும்பம் அத்தனை செல்வாக்கானது அல்ல. நெப்போலியன் பிரான்சின் ராணுவ அகாடமிகளில் ஊக்கத் தொகையில் படித்தார். தன் வகுப்பறை சகாக்களை ஒப்பிடும் போது நெப்போலியன் ஏழை. கார்சியா தீவில் வளர்ந்த போது அவரது முதல் மொழி பிரெஞ்சு அல்ல, இத்தாலி மொழி. அவர் பேசுவது பாமரத்தனமாக இருக்கிறது என அவரது வகுப்பறை சகாக்கள் விமர்சித்திருக்கிறார்கள். நெப்போலியன் எப்போது ராணுவத்தில் சேர்ந்தார்? பட மூலாதாரம், Getty Images தனது 15ஆவது வயதில் பிரான்சின் முக்கிய படைகளில் ஒன்றான 'இகோல் மிலிடைர்' பிரிவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஆனால், சேர்ந்த உடன் இரு ஆண்டுகளில் படித்து முடிக்க வேண்டிய படிப்பை ஓராண்டு காலத்தில் படித்து முடிக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். நெப்போலியனின் தந்தை வயிற்றுப் புற்றுநோய் காரணமாக மரணமடைந்ததால், நெப்போலியன் ஒருவரே மொத்த குடும்பத்தின் முக்கிய பொருள் ஈட்டுபவர் ஆனார். தன் 16ஆவது பிறந்தநாள் நிறைவடைந்து சில காலங்களுக்குள்ளேயே ராணுவத்தில் உயர் அதிகாரி ஆனார். ஐரோப்பாவில் போர் வெடிக்கும் சூழல் இருந்த போது நெப்போலியன் இரண்டாம் லெப்டினன்டாக கேரிசன் என்கிற நகரத்தில் இருந்தார். அந்த காலகட்டத்தில் விடுமுறை எடுத்துக் கொண்டு கார்சியாவில் வாழ்ந்து வந்த தன் குடும்பத்தைப் பார்க்கச் சென்றார். நெப்போலியனின் ஆரம்ப கால சாதனைகள் என்ன? 1792ஆம் ஆண்டு, நெப்போலியன் ராணுவத்தில் கேப்டனாக பதவி உயர்வு பெற்றார். 1796-ல் பாரிஸில் ஆட்சி புரிந்து வந்த புரட்சிகர படைக்கும் எதிராக எழுந்த கிளர்ச்சியைக் கட்டுப்படுத்தியதால், அவர் இத்தாலியில் இருந்த பிரெஞ்சு ராணுவத்தில் கமாண்டராக்கப்பட்டார். ஆஸ்திரியாவுக்கு எதிரான பல முக்கிய வெற்றிகள், ஜோசஃபைன் டீ புஹார்னேவை மணந்து கொண்டது நெப்போலியனின் பெயரையும் புகழையும் தேசிய அளவில் உயர்த்தியது. 1799 நவம்பரில் நெப்போலியன் முதல் கன்சுலானார். தன் ராணுவ சர்வாதிகாரத்தின் கீழ் ஓர் ஐரோப்பிய சாம்ராஜ்யத்தை நிறுவ வேலை செய்தார். நெப்போலியன் ஆட்சியை மத்திய அரசாக்கினார். மீண்டும் ரோமன் கத்தோலிக்கத்தை நாட்டின் மதமாக்கினார். பல கல்வி சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். பேங்க் ஆஃப் பிரான்ஸ் என்கிற பிரான்ஸின் மத்திய வங்கியை நிறுவினார். நெப்போலியன் பிரான்ஸின் பேரரசரானது எப்படி? 1800ஆம் ஆண்டில் மாரெங்கோவில் வைத்து ஆஸ்திரியர்களை வென்றார் நெப்போலியன். அதன் பிறகு ஒரு பொது ஐரோப்பிய அமைதி ஒப்பந்தத்தைக் குறித்துப் பேசினார். அது ஐரோப்பிய கண்டத்தில் பிரான்சின் ஆதிக்கத்தை நிறுவியது. 1802ஆம் ஆண்டு நெப்போலியன் தன்னைத் தானே நிரந்தர கன்சுலாக நியமித்துக் கொண்டார், இரண்டாண்டுகளுக்குப் பிறகு பிரான்சின் பேரரசரானார். ஐரோப்பாவின் மீது நெப்போலியன் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது எப்படி? பட மூலாதாரம், Getty Images நெப்போலியன் முன் வைத்த அமைதி ஒப்பந்தத்தை மீறி 1803ஆம் ஆண்டு பிரிட்டன், பிரான்சின் மீது போர் தொடுத்தது. பிறகு ரஷ்யாவும், ஆஸ்திரியாவும் பிரிட்டனோடு இணைந்து கொண்டன. பிரிட்டனின் கடற்படை 'ட்ராஃபல்கர் போரில்' வென்ற பிறகு, பிரிட்டன் மீது படையெடுக்கும் திட்டத்தை கைவிட்டு, ரஷ்யா மற்றும் ஆஸ்திரிய படைகள் மீது கவனத்தைச் செலுத்தினார். 'ஆஸ்டெர்லிட்ஸ் போரில்' அவ்விரு படைகளையும் வென்றார். அது அவர் வாழ்நாளில் கண்ட மிகப் பெரிய வெற்றிகளில் ஒன்று. அந்த ஆண்டில் அவர் மேலும் பல நிலப் பகுதிகளைக் கைப்பற்றினார். அது அவருக்கு ஐரோப்பிய கண்டத்தில் ஆதிக்கம் செலுத்த வழிவகுத்தது. ஹோலி ரோமன் சாம்ராஜ்யம் கலைக்கப்பட்டு, நெப்போலியனின் உறவினர்கள் மற்றும் விசுவாசிகள் இத்தாலி, நேபிள், ஸ்பெயின், ஸ்வீடன், ஹாலந்து, வெஸ்ட்ஃபெலியா போன்ற பகுதிகளுக்கு தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். நெப்போலியனின் முதல் திருமணம் எப்படி முறிந்தது? ஜோசஃபைன் டீ புஹார்னேவுக்கும் தனக்கும் குழந்தை பிறக்கவில்லை என்பதால், ஜோசஃபைனை 1810ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். பிறகு ஆஸ்திரிய பேரரசரின் 18 வயது இளவரசியான மேரி லூயியை திருமணம் செய்து கொண்டார். அடுத்த ஆண்டு மேரி இரண்டாம் நெப்போலியனைப் பெற்றெடுத்தார். நெப்போலியன் ஏன் நாடு கடத்தப்பட்டார்? 1810ஆம் ஆண்டிலிருந்து நெப்போலியனுக்கு எதிரான அலைகள் வீசத் தொடங்கின. பிரெஞ்சு ராணுவம் சில பெரிய தோல்விகளைச் சந்தித்தது. அது பிரான்ஸ் நாட்டின் வளத்தை காலி செய்தது. 1812ஆம் ஆண்டு ரஷ்யா மீது படையெடுத்து தோல்வியடைந்தது. நான்கு லட்சம் பேராக சென்ற படை வெறும் 40,000 பேராக சுருங்கி பிரான்ஸ் வந்து சேர்ந்தது. 1814-ல் பாரிஸ் வீழ்ந்தது. நெப்போலியன் எல்பா தீவுக்கு நாடுகடத்தப்பட்டார். அவரது மனைவி மேரி மற்றும் மகன் இரண்டாம் நெப்போலியன் ஆஸ்திரியா சென்றனர். மீண்டும் அதிகாரத்துக்கு வந்த நெப்போலியன் ஓராண்டுக்கும் குறைவான காலத்துக்குப் பிறகு, 1815 பிப்ரவரியில் நெப்போலியன் எல்பா தீவிலிருந்து தப்பித்து பிரான்ஸ் தலைநகரத்துக்குள் நுழைந்து வெற்றிகரமாக அதிகாரத்தைக் கைப்பற்றினார். பிரிட்டன், ப்ருஷ்யா, ரஷ்யா, ஆஸ்திரியா அனைவரும் ஒன்று திரண்டு நெப்போலியன் மீது போர் தொடுத்தனர். இத தான் வரலாற்று புகழ் பெற்ற வாட்டர்லூ யுத்தம் என்றழைக்கப்படுகிறது. இதில் நெப்போலியன் தோல்வியுற்று 100 நாட்களில் மீண்டும் தன் ஆட்சியை இழந்தார் மீண்டும் புனித ஹெலெனா தீவுக்கு நாடு கடத்தப்பட்டார். நெப்போலியன் மரணம் 1821ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள தீவான செயின்ட் ஹெலனாவில் நெப்போலியன் மரணமடைந்தார். அத்தீவில் தன் 51ஆவது வயதில், வயிற்றுப் புற்றுநோயால் இறந்ததாக கூறப்படுகிறது. நெப்போலியன் மரணத்துக்கான காரணம் நீண்ட காலமாக சர்ச்சைக்குறியதாக இருந்து வருகிறது. நெப்போலியன் எங்கு புதைக்கப்பட்டார்? நெப்போலியன் அதே தீவில்தான் புதைக்கப்பட்டார். 1840ஆம் ஆண்டு வரை அவரது எச்சங்கள் பிரான்ஸுக்கு கொண்டு செல்லப்படவில்லை. அதன் பிறகு பிரான்சின் ராணுவத் தலைவர்கள் அடக்கம் செய்யப்படும் பாரிஸில் இருக்கும் லெஸ் இன்வெலிட்ஸ் பகுதியில் நெப்போலியனின் எச்சம் புதைக்கப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czr1l5xdn4no

தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்

3 months 2 weeks ago
உண்மை சுடும் என்றும் சொல்வார்கள். சூடுபட்டு கொதிப்போரையும் களத்தில் காணலாம். “பாலை ஊற்றிப் பாம்பை நாம் வளர்த்தாலும் நம்மையே கடிக்கத்தானே வரும் அதை அடித்துக் கொல்ல நேருமே”.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
👍.............. அதுவே தான், பையன் சார்.............. மிகவும் திறமையான அணியாக இருக்கின்றார்கள். இந்திய அணி இவர்களுடன் ஓரளவாவது போட்டி போடுவார்கள் என்று நினைத்தேன்......... ஆனால் இந்திய அணி மோசமாக விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்....................

கட்டுநாயக்க விமான நிலைய Check-in நேரத்தில் மாற்றம்

3 months 2 weeks ago
நானும் டிக்கெட் வாங்க கடனட்டையைத்தான் பாவிப்பேன். விமான டிக்கெட்டுகளை IATA அதிகாரமுள்ள ஏஜெண்டிடம் வாங்கினும் கடன் அட்டை தரும் section75 உத்தரவாதம் ஒரு மேலதிக பாதுகாப்பு. 30-50 நாள் வட்டி இல்லை. Avios போன்ற புள்ளிகளை சேர்த்து கொள்ளலாம். இப்படி அனுகூலங்கள் பல. ஆகவே ஏர் டிக்கெட் மட்டும் அல்ல, சாண்ட்விச் வாங்குவது, டயருக்கு காத்தடிப்பது ஈறாக கடன் அட்டையில்தான். ஆனால் இலவச கடன் அட்டைகள் மட்டும்தான். வாழ்நாளில் மாத சந்தா கடன் அட்டைக்கு கட்டியதே இல்லை. அதேபோல் அடுத்த தவணைக்குள் முழுவதுமாக (0%வட்டியில்) கட்டி முடிக்க பார்ப்பேன். சில சமயம் அது அடுத்த மாதம், 3ம் மாதம் என தள்ளி போகும் (எதிர்பாரா செலவுகள் தொடர்ந்து வரும் போது). ஆனால் வட்டி கட்டும் ஒவ்வொரு மாதமும் வங்கியுடனான போட்டியில் தோற்று விட்டேன் என மனம் அல்லல்படும்😂. ஆனால் ஒரு போதும் ஹொலிடே கடன் அட்டையை நம்பி போவதில்லை என்பது கல்லில் எழுத்து. போய் வந்து அடுத்த தவணைக்குள் கட்ட வேண்டிய தொகை வங்கி கணக்கில் இருந்தால் மட்டுமே ஹொலிடே. இல்லை எண்டால் ஐரோப்பாவுக்குள் போய் வரலாம். அதுவும் இல்லை எண்டால் யூகேயில் பார்க்க எவ்வளவோ இருக்கு. அதுவும் இல்லை எண்டால் - டிவியில் போகும் ஹொலிடே நிகழ்சிகளை பார்த்து இன்புறலாம் 😂. ஆனால் வட அமெரிக்கா வாழிகளானா உங்களின் அலுப்பும் புரிகிறது. டிரான்சிட்டிலேயே பாதி வாழ்க்கை போய்விடும். உங்களுக்கு ஏர்போர்ட் லவுஞ்சுகள் சொகுசு என்பதை மேவி தேவை என்ற எல்லைக்குள் வரும் என நினைக்கிறேன். சும்மா பகிடியண்ணை

தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்

3 months 2 weeks ago
உங்களுக்கு என் கருத்தும் பெயரும் அலர்ஜி என்பதை பலமுறை கண்டு விட்டேன். அது முற்றிவிட்டதும் அதற்கு நிதானம் என்றொரு மருந்துண்டு. ஆம் மகிந்தவும் தலைவரும் பேசியிருந்தாலும் வலிகள் மன்னிக்கப்பட்டு மறக்கப்பட்டிருக்கும்....

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
போன‌ 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் தென் ஆபிரிக்காவிட‌ம் தோத்த‌வை எப்ப‌வாவ‌து இருந்துட்டு எதிர் அணியிட‌ம் தோத்தும் இருக்கின‌ம் நான் பார்த்த‌ ம‌ட்டில் அவுஸ் மக‌ளிர்க‌ள் வெற்றி பெற்ற‌து தான் அதிக‌ம்................இந்த‌ உல‌க‌ கோப்பைக்கு தெரிவாகாத‌ ப‌ல‌ திற‌மையான‌ ம‌க‌ளிர் அவுஸ்ரேலியா அணியில் இருக்கின‌ம்...............................

ட்ரம்ப் – புட்டின் சந்திப்பு நிறுத்தி வைப்பு!

3 months 2 weeks ago
ட்ரம்ப் - புதின் சந்திப்பு இடைநிறுத்தம்! - வெள்ளை மாளிகை 22 Oct, 2025 | 02:40 PM ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புதினை ஹங்கேரியின் புடா பெஸ்ட் நகரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கும் நிகழ்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகிய இருவரும் தொலைப்பேசி ஊடாக உரையாடியதைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் இருவரும் தொலைப்பேசியில் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதை பொதுவெளியில் தெரிவிக்க முடியாது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை நிறுத்த ட்ரம்ப் கடும் முயற்சி எடுத்து வருவதாக சர்வதேச அளவில் தெரிவிக்கப்படுகிறது. இப்போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளின் ஜனாதிபதிகளுடனும் ட்ரம்ப பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ட்ரம்ப் - புதின் இடையிலான பேச்சுவார்த்தை அமெரிக்காவின் அலாஸ்காவில் நடைபெற்றது. எனினும், அந்த பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை. இதனால், மீண்டுமொரு சந்தித்துப் பேசுவோம் என இருவரும் தெரிவித்திருந்தனர். அதன்படி, ஹங்கேரியில் இரு தலைவர்களும் சந்தித்து பேசவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அந்த சந்திப்பும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/228379

தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்

3 months 2 weeks ago
எனக்கு, இந்த முஸ்லிம்கள் வெளியேற்றம் பற்றி இரண்டு வகையான அனுபவங்களும் கிடைத்திருக்கின்றன. ஒரு தடவை ஜனாதிபதி மாவத்தையில் போக வேண்டியிருந்த ஒரு இடத்திற்கு, பஸ்ஸில் இடம் மாறி இறங்கி விட்டேன். நடந்து போய்க் கொண்டிருந்த ஒரு முஸ்லிம் நபரிடம் வழி கேட்டேன். "அந்த வழியாகத் தான் போகிறேன், வாருங்கள்" என்று அழைத்துப் போகும் போது "எங்கிருந்து வருகிறீர்கள்?" எனக் கேட்டார், "யாழ்ப்பாணம்" என்றேன். ஆங்கிலத்தில் எனக்கு அர்ச்சனை செய்ய ஆரம்பித்து விட்டார் (ஆனால், எனக்கு முன்னால் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்😂). நான் எதுவும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். 5 நிமிடங்களில் இடம் வந்தது. "அந்த நேரம் நீங்கள் சிறுவனாக இருந்திருப்பீர்கள், நீங்களும் தான் என்ன செய்திருக்க முடியும்? உங்களிடம் நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது, மன்னியுங்கள்" என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். மன்னாரில் இருந்து வெளியேறிய ஒரு முஸ்லிம் முதியவரை, புத்தளத்தில் ஒரு ஆட்டுப் பண்ணையில் சந்தித்தேன். சந்திரிக்கா, ரத்வத்தை போன்றோர் பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்த காலம். "புலிகளால் தான் இவங்களுக்கு ஒரு முடிவு வரும், வேறெவரும் எதுவும் செய்ய முடியாது" என்றார். ஏன் சொல்கிறார், கொக்கி போடுகிறாரா என்று புரியாததால், நான் சிரித்துக் கொண்டு பேசாமல் இருந்து விட்டேன்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
இந்தியாவை விட‌ அவுஸ்ரேலியா ம‌க‌ளிர்க‌ள் கிரிக்கேட்டில் திற‌மையான‌வை என்ன‌ தொட‌ர்ந்து இவ‌ர்க‌ளே ப‌ல‌ த‌ட‌வை உல‌க‌ கோப்பையை தூக்கி விட்டின‌ம் இந்த‌ முறை இந்தியாவில் ந‌ட‌ப்ப‌தால் இந்தியா ம‌க‌ளிர் சொந்த‌ மைதான‌ங்க‌ளில் சிற‌ப்பாக‌ விளையாடுவின‌ம் என‌ நினைத்து இந்தியாவை தெரிவு செய்தேன் போர‌ போக்கை பார்த்தால் ம‌று ப‌டியும் இந்திய‌ ம‌ண்ணில் வைத்து அவுஸ்ரேலியா கோப்பையை வென்று விடுவின‌ம் போல் தெரியுது இந்தியா வென்றால் ம‌கிழ்ச்சி என்று தெரிந்து தான் இந்தியாவை தெரிவு செய்தேன் ஆனால் இந்தியா ம‌க‌ளிரின் விளையாட்டு பாராட்டும் ப‌டி இல்லை பாப்போம் இனி வ‌ரும் போட்டிக‌ளில் எப்ப‌டி விளையாடுகின‌ம் என்று................... இந்தியா ம‌க‌ளிரின் ப‌ந்து வீச்சு தான் தோல்விக்கு கார‌ண‌ம் இனி அதை ச‌ரி செய்து வெல்வின‌ம் என‌ ந‌ம்புகிறேன் லொள்😁👍...................

பாரிய செலவினச் சுமையாக மாறியுள்ள இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்படும் - வலுசக்தி அமைச்சர்

3 months 2 weeks ago
22 Oct, 2025 | 04:49 PM (எம்.ஆர்.எம் வசீம்,இராஜதுரை ஹஷான்) வரிச்செலுத்தும் மக்களுக்கும், பொதுத் திறைச்சேரிக்கும், அரச வங்கிகளுக்கும் பாரிய செலவினச் சுமையாக மாறியுள்ள இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்பட்டு, புதிதாக 6 நிறுவன கட்டமைப்புக்கள் உருவாக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற அமர்வின்போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் பதிலளித்ததாவது, வரிச்செலுத்தும் மக்களுக்கும், பொதுத் திறைச்சேரிக்கும், அரச வங்கிகளுக்கும் பாரிய செலவினச் சுமையாக மாறியுள்ள இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகிறது. 2025 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க (திருத்த) மின்சார சபைச் சட்டத்தின் பிரகாரம் , 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார சபை சட்டத்தின் முதலாவது உப பிரிவின் குறிப்பிடப்பட்டுள்ள மாதிரிக்கு அமைய, 17 ஆவது உறுப்புரைக்கமைய, இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்படும். புதிய மறுசீரமைப்பைத் தொடர்ந்து நேஷனல் சிஸ்டம் ஒபரேட் (பிரைவெட்) லிமிடெட், நேஷனல் ட்ரான்ஸ்மிஷன் நெட்வொர்க் சர்விஸ் (பிரைவெட்) லிமிடெட், எலெக்ட்ரிசிட்டி ஜெனரேசன் (பிரைவெட்) லிமிடெட், எலக்ட்ரிசிட்டி டிஸ்ட்ரிபூசன் (பிரைவெட்) லிமிடெட், எனெர்ஜி வென்டேர்ஸ் லங்கா (பிரைவெட்) லிமிடெட், சி.இ.பி எம்ப்லோயீஸ் (பிரைவெட்) லிமிடெட், என்ற அடிப்படையில் புதிதாக 6 நிறுவன கட்டமைப்புக்கள் உருவாக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/228394

தவிக்கும் தன்னறிவு

3 months 2 weeks ago
கேட்கிறேன் என்று குறை நினைக்கப் படாது, இந்தக் காட்சியை எழுத யாழ் களத்தில் நடக்கும் சில பரிமாற்றங்கள் உங்களுக்கு ஊக்கம் தந்திருக்குமோ😂?
Checked
Sat, 02/07/2026 - 05:03
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed