புதிய பதிவுகள்2

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
1) அகஸ்தியன் - 48 புள்ளிகள் முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள். பையா இந்தப் போட்டியில் உடனுக்குடன் போடுகிறார். பல ஆண்டுகளுக்கு முன் வைத்த போட்டிகளில் 4-5 நாட்கள் ஆகும் . ஆகவே அமைதி அமைதி.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
வினா 24) 6 விக்கேற்றுக்களினால் இங்கிலாந்து அணியை அவுஸ்திரேலியா அணி தோற்கடித்திருக்கிறது. 14 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 48 புள்ளிகள் 2) ரசோதரன் - 45 புள்ளிகள் 3) ஏராளன் - 43 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 43 புள்ளிகள் 5) வீரப்பையன் - 42 புள்ளிகள் 6) சுவி - 41 புள்ளிகள் 7) கிருபன் - 41 புள்ளிகள் 8) புலவர் - 41 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 41 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 39 புள்ளிகள் 11) வாதவூரான் - 37 புள்ளிகள் 12) கறுப்பி - 37 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 37 புள்ளிகள் 14) வசி - 35 புள்ளிகள் 15) வாத்தியார் - 31 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 24, 32(3/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 52).

தவெக உட்கட்சி மோதல்

3 months 2 weeks ago
யுரியுப்பர் IShowSpeed டனை தாய்லாந்தில் விஜய் இரசிகர்கள் துரத்தி சென்று ரிவிகே என்று கோசமிட்ட காணொளி பார்த்தேன். விஜயை Chief Minister of India என்றனர் 🤣

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
இந்த‌க் கிழ‌மையோட‌ ஆர‌ம்ப‌ சுற்றுப் போட்டிக‌ள் முடிந்து விடும் பிற‌க்கு 3மைச் இர‌ண்டு சிமி பின‌ல் அதுக்கு அடுத்து பின‌ல் வார‌ ஞாயிற்று கிழமை தெரியும் கோப்பையை வெல்லும் அணி எது என்று😁👍..............................

தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்

3 months 2 weeks ago
சுருக்கம் அதிகம் என்பதால் தான் சூட்டை பற்றி எழுதினீர்கள் என புரிந்து கொள்கிறேன்😀.

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

3 months 2 weeks ago
தமிழர்களுக்கு என்று பொங்கல் இருக்கின்றது . தமிழ் முஸ்லிம்களுக்கு ரமடான் கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்மஸ் சிங்களவர்களுக்கு பெரகரா என்று இருக்கின்றது ஆனால் ஸ்ரீ லங்கனுக்கு என்று கொண்டாடுவதற்கு என்ன இருக்கின்றது என்று கவலைபட்ட அனுரகுமார திசாநாயக்க டிசம்பர் 12 , 13 மற்றும் 14 ல் கொழும்பில் பிரமாண்டமான ஸ்ரீ லங்கன் தினம் கொண்டாட இருக்கின்றார். 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாம்.

இனிய தீபாவளி

3 months 2 weeks ago
இனிய தீபாவளி ------------------------ ஒரு ஆட்டை எப்படிக் கொல்வதென்று நாங்கள் கதைத்தோம் அதன் மூக்கையும் வாயையும் இறுக்கி மூடி பிடித்தல் ஒரு வழி தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு கழுத்தில் கீறுதல் இன்னொரு வழி தலையில் ஒரேயடியாக போடுதலும் ஒரு வழியே இப்படி சில வழிகள் இருக்கின்றன என்றனர் எப்படிக் கொன்றாலும் எட்டியும் பார்க்க மாட்டோம் என்றனர் பலரும் நானும் ஒழித்திருந்து மிளகாயும் வெங்காயமும் அரிந்தோம் ஒரு ஊர்ச் சந்தையில் இந்த வாரம் விற்ற ஆடுகளின் தொகை ஆறு கோடி ரூபா ஒரே மழை என்று அங்கே வியாபாரம் மந்தம் என்றார்கள் இப்படி இன்னும் நூறு சந்தைகளாவது இருக்கும் ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதியில் இறந்த உயிர்கள் எப்படி இறந்தாலும் நேரே வைகுண்டம் போகுமாம் நரகாசுரன் கூட அப்படித்தான் அங்கே போனார் ஆடு அவலப்பட்டு செத்தாலும் அது வைகுண்டம் போகுதே என்ற ஆறுதல் வர இனிய தீபாவளி ஆனது.

தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்

3 months 2 weeks ago
எழுத்துகளை சிறைவைப்பதால் கருத்து சோர்ந்து சுருங்கிவிடாது.🤩

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்

3 months 2 weeks ago
@மோகன் ஐயனுக்கு வணக்கம், இவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்ட தரநிலை கேணல் ஆகும். பிரிகேடியர் அன்று. தயவு கூர்ந்து இதனை மாற்றி அமைக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகோள் விடுக்கிறேன். எம் கண்முன்னே எமது வரலாற்றை நாமே திரித்தல் ஆகாது. நன்றி

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவை த‌விர்த்து ம‌ற்ற‌ உற‌வுக‌ள் இந்தியா வெல்லும் என‌ க‌ணித்து இருக்கின‌ம் நாளை இந்தியா க‌ன்டிப்பாய் வென்று ஆக‌ வேண்டும் , வ‌ங்கிளாதேஸ் கூட‌வும் இந்தியா வென்றால் தான் ரென்ச‌ன் இல்லாம‌ சிமி பின‌லுக்கு போக‌ முடியும் நியுசிலாந்தை வென்றாலே போதும் சிமி பின‌ உறுதி செய்திட‌லாம்.............................

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழப்பு!

3 months 2 weeks ago
தவிசாளர் கொலையும் தேசிய பாதுகாப்பும் --------- -------------- ----- *வடக்கு கிழக்கில் இடதுகை, தெற்கில் வலது கை. --- --- -- மாத்தறை வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர, அலுவலகத்தில் இருக்கும் போது சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக, சஜித் பிரேமதாச, இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார். இலங்கைத் தேசியப் பாதுகாப்பு இதுதானா? எனவும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், அவருடைய கேள்வி அமைந்துள்ளது. ஆனால் --- முப்பது வருட போரின் போதும், அதன் பின்னரான 16 வருடங்களிலும் வடக்கு கிழக்கில் கொலைகள் - குழு மோதல்கள் தூண்டிவிடப்பட்டிருக்கின்றன. அங்கு அளவுக்கு அதிகமான இரணுவ முகாம்களும் பல சோதனைச் சாவடிகளும் உள்ளன. அப்படியிருந்தும் கொலை - கொள்ளை - மண் அகழ்வு - போதைப்பொருள் வியாபாரம“ போன்ற பல குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றன. இக் குற்றச் செயல்கள் பற்றியெல்லாம் சஜித் பிரேமதாசா மாத்திரமல்ல, எந்தவொரு சிங்கள தலைவர்களும் கேள்வி எழுப்புவதில்லை. ஏனெனில், “தமிழ்த்தேசியம்” என்ற சிந்தனை - ”அரசியல் விடுதலை உணர்வுகள்” எல்லாமே இளைஞர்கள் - பெண்கள் மத்தியில் இருந்து மங்கிப் போகட்டும் என்ற போக்கு, கொழும்பு நிர்வாக மையத்திடம் உண்டு. ஆனால் ---- வடக்கு கிழக்கு வெளியே ஏதுவும் நடந்தால், அதற்கு தேசிய பாதுகாப்பு இல்லை என கேளவி எழுப்புவர். தேவை ஏற்பட்டால் ஜெனீவா மனித உரிமைச் சபைக்கும் முறைப்பாடுகள் போகும். ஆனால் வடக்கு கிழக்கு தமிழர்கள் சார்ந்த விவகாரம் என்றால், அது “பயங்கரவாத ஒழிப்பு” ”பிரிவினைவாதம்” என்ற கோணத்தில் தான் சிங்கள அரசியல் தலைவர்கள் அணுகுவர்... 13 ஆவது திருத்தச் சட்டம் கூட பிரிவினைவாதம் என்ற வரையறைக்குள் தள்ளிவிடப்பட்டுள்ளது. ஆனால் --- இயற்கை நீதி என்றோ ஒரு நாள் பதில் சொல்லும். அதற்குக் காலம் எடுக்கும்... அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/share/p/1BaKyC8aJ2/?mibextid=wwXIfr

நெதன்யாகு கனடா நுழைந்தால் நிச்சயம் கைது செய்யப்படுவார்! - கனடா பிரதமர் எச்சரிக்கை

3 months 2 weeks ago
கார்பன் டக்ஸ் கார்ணியின் மைனாரிட்டி அரசு வரும் நவம்பர் 4 ஆம் திகதி நாடாளுமன்றில் பட்ஜெட்டை சமர்ப்பிக்கின்றது. துண்டு விழும் தொகை 70 பில்லியன் டொலர்களாக எதிர்வுகூறப்படுகின்றது. நாட்டின் பணவீக்கம் 2.4% ஆக கடந்த செப்டம்பரில் அதிகரித்திருக்கின்றது. இன்னமும் இந்திய காட்டுமிராண்டிகளின் அராஜகம் தொடர்கின்றது. இந்த நிலையில் பட்ஜட் வெற்றிபெறவேண்டுமாயின் எதிர்க்கட்சிகளிடமிருந்து 4 மேலதிக வாக்குகள் தேவை. புளக் குபெக்குவா கட்சி குபெக் மாகாணத்துக்கு அதிக நிதி, மேலதிக அபிவிருத்தி கோருகின்றது. கொன்சர்வேட்டிவ் கட்சி துண்டுவிழும் தொகையை 40 பில்லியன்களாக குறைக்க அழுத்தம் கொடுக்கின்றது. என் டி பி கட்சி எடுக்கும் முடிவு வரும்காலத்தில் அதன் இருப்பைத் தக்கவைகும் நிலையில் இருக்கின்றது. ஏதாவது எலும்புத் துண்டைப் போட்டாவது கார்பன் டக்ஸ் கார்ணி ஆட்சியைத் தக்கவைக்க முயலக்கூடும். ஆனால் உட்கட்சிக்குள்ளேயே இப்போது சலசலப்புக்கள் தொடங்கிவிட்டன. ட்றம்பை எதிர்த்து அரசியல் செய்வேன் என வாக்குறுதி கொடுத்த கார்ணி இப்போது ட்ரம்பின் பாராட்டுதலுக்குரியவராகத் திகழ்கின்றார். கடந்த வாரம் கிறைஸ்லர் கார் உற்பத்தி நிறுவனம் பிராம்டனில் இருந்து அமெரிக்காவுக்கு தொழிற்சாலையை மாற்றிவிட்டது. இவற்றையெல்லாம் சரிசெய்துவிட்டு இஸ்ரேல் பிரதமரை கைதுசெய்யாலாம்! இஸ்ரேலைத் தொட்டவன் நிலைத்திருந்ததாக வரலாறு கிடையாது!

பைசன் காளமாடன் -திரைவிமர்சனம்: அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா!

3 months 2 weeks ago
காளமாடன் (பைசன்) இளங்கோ *** கலை என்பது எப்போதும் பாவனை செய்யக்கூடாது என்று நம்புபவன் நான். ஒரு படைப்பு எவ்வித ஆழமற்று, அப்பாவித்தனமாக இருந்தாலும், அது தன்னளவில் பாவனை செய்யாது இருக்கின்றதா என்பதைக் கூர்ந்து கவனிக்க விரும்புவன் நான். கலை என்பதன் அடிப்படை நோக்கமே படைப்பும்/படைத்தல் சார்ந்ததும் மட்டுமே. அதன் நிமித்தம் கிடைக்கும் இன்ன்பிற விடயங்களான புகழ்,பணம், செல்வாக்கு என்பவை, படைத்தலின் மகிழ்ச்சிக்கு அப்பால் கிடைக்கின்றவை என்று வேண்டுமெனில் சொல்லலாம். எனவே ஓர் உண்மையான படைப்பாளிக்கு படைப்பின் நிமித்தம் கிடைக்கும் நிறைவே முக்கியமே தவிர, அதன் நிமித்தம் கிடைக்கும் இவ்வாறான by products அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும் இப்போது இங்கு முதல் காட்சியாக பார்த்து வந்த காளமாடன் (பைசன்) அவ்வளவு மனம் நிறைந்திருக்கின்றது. வழமையான விளையாட்டு சார்ந்த திரைப்படங்களுக்கு ஒரு வாய்ப்பாடு இருக்கின்றது. அவ்வாறான எல்லைக்கோடுகளை 'ஆழப்புழா ஜிம்கானா' போன்ற சில மலையாளப் படங்கள் உடைக்ககூடும், ஆனால் டங்கலோ, இறுதிச்சுற்றோ, சர்ப்பட்டா பரம்பரையோ, ஏன் காளமாடனோ உடைத்தல் என்பது சற்றுக் கடினமானதுதான்; அதைப் புரிந்துகொள்ளவும் முடியும். ஆனால் அந்த எல்லைக் கோட்டுக்குள் நின்று மிகச் சிறப்பாக மாரி செல்வராஜ் 'காளமாடனை' நமக்கு அளித்திருக்கின்றார். அதிலும் ஓடுக்கப்பட்ட சாதி/ஆதிக்க சாதிகளை அதன் சிக்கல்கள்/வன்மங்கள்/சண்டைகள் என்று காட்டியிருந்தாலும், அனைவருக்கும் சொல்லப்படாத பக்கங்களைக் காட்டியிருப்பது, துவிதநிலையில் நாயக X எதிர்நாயக விம்பங்களை நவீனத்துவ நிலையில் நின்று கட்டியமைக்காததும் முக்கியமானது. எனக்கு இரத்தம் பிடிப்பதில்லை. அதற்கு என் சிறுவயதில் போரின் நிமித்தம் எறிகணை வீழ்ந்து இரத்தம் தோயத்தோய வைத்தியசாலைக்குக் கொண்டு வந்ததைப் பார்த்ததில் இருந்து, எங்கும் இரத்ததைப் பார்க்கப் பிடிப்பதில்லை. திரைகளில் என்றால் இந்த விடயத்தில் கண்ணை மூடிவிடும் சுதந்திரத்தை எப்போதும் அனுபவிப்பவன். இதிலும் வன்முறை இரத்தசகதியில் கடுமையாகக் காட்டப்படுகின்றது. ஆனால் சட்டென்று இப்படி சாதித்தலைவர்களின் (அல்லது ரெளடிகள் என விளிக்கப்பட்ட) பல கதைகளை/செய்திகளை முகப்பில் தாங்கிவந்த ஜூனியர் விகடன்களை என் பதின்மங்களில் வாசித்த/பார்த்த ஞாபகம் வருகின்றது. மாரி பத்திரிகைச் செய்திகளில் இருந்து கடந்தகால யதார்த்தத்தை மட்டுமில்லை, அசலான மனிதர்களின் சாயல்களுள்ள பாத்திரங்களையும் காளமாடனில் கொண்டு வருவது அருமையானது. அதுபோலவே இந்தச் சாதிச்சகதிகளுக்குள் விரும்பாமாலே சிக்கிகொள்ளும் ஒருவனது (அப்பாவி என்று சொல்வது அல்லது காட்சிப்படுத்துவது கூட பிறருக்கு ஏற்ற அரசியலைச் சொல்வதுதானல்லவா?) வாழ்வில் நாமும் ஒரு அங்கமாகின்றோம். அவனைப் போல நாங்களும் அவன் ஊர் என்கின்ற சாதிநோய் பிடித்த நிலப்பரப்பிலிருந்து தப்பிப்போக வழிகள் திறக்காதா என ஏங்குகின்றோம். இதில் தகப்பனாக வரும் பசுபதிதான் எல்லாப் பாத்திரங்களையும் விட ஓரடி முன்னே நிற்கின்றார். ஏனெனில் அந்தப் பாத்திரமே கடந்தகாலத்தின் எல்லா அவமானங்களை அறிந்தும், அதேவேளை நிகழ்காலத்தில் மகனைக் காப்பாற்றி பத்திரமாக வேறொரு கரைசேர்க்க விரும்பும் இந்தத் தலைமுறையின் ஒருவராகவும் இரண்டு காலங்களிலும் காலூன்றி நிற்பவராக இருக்கின்றார். துருவ்வை படத்தின் நீண்டநேரம் வரை விக்ரமின் இளம் பிரதியொன்றைப் பார்க்கின்றேனா என்றுதான் தோன்றிக்கொண்டிருந்தது. ஆனால் அதைத்தாண்டி அவர் உடல்மொழியில் தன்னை அந்தப் பாத்திரத்தில் கரைக்கும்போது, அவர் அந்தத் திருநெல்வேலியின் அசல் பாத்திரங்களில் ஒரு பாத்திரமாகக் கரைந்துவிடுகின்றார். ஒரு நடிகர் தன்னை இயக்குநனருக்குக் கொடுக்கும்போது எப்படி உருமாறமுடியும் என்பதற்கு இப்படத்தில் துருவ்வும், மாரியின் மற்றப்படமான 'மாமன்னனில்' வடிவேலும் நல்ல உதாரணங்கள். என்னைப் போன்று ஊர்களில் இருந்து வந்தவர்க்கு ஒரு துறையில் பிரகாசிப்பது என்பது எவ்வளவு கடினமென்று தெரியும். அதுவும் படிக்கும் பாடசாலையில் இருந்து பல்வேறு மட்டங்களில் நம்மை கீழிறக்க நம் கண்ணுக்குத் தெரியாத கரங்களோடு போராடிக் கொள்ள வேண்டும். அதுவும் ஒருவன் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்துவிட்டால், அவன் தன் திறமையைக் காட்ட மட்டுமல்ல, தன்னையொரு சக உயிரியாகப் பிறருக்கு நிரூபிக்கவும் தன் காலம் முழுவதையும் செலவழிக்க வேண்டியிருக்கின்றது என்பதற்கு காளமாடன் நம்முன் சாட்சியாக இருக்கின்றது. கலை என்ன செய்யும்? நாம் வாழாத வாழ்வைக்கூட அதன் ஒரு பகுதியாக நம்மைக் கரைத்து அந்த வாழ்வை வாழ்ந்து பார்க்க வைக்கும். நமது போலிப் பெருமிதங்களையும், சாதி ஆணவங்களையும் இது உங்களின் அடையாளங்களல்ல, கசடான அழுக்குகள் என்று ஒவ்வொருவரையும் 'தலையில் சுத்தியலால் அடித்து' உணரவைக்கும். அதை இந்தக் காளமாடன் செய்திருக்கின்றான். நமது ஈழப்போராட்டம் முடிவடைந்தபின் நமக்கான நீதியைக் கோருவதற்கு நாம் மற்றவர்கள் குற்றவுணர்வை அடைகின்ற மாதிரியான படைப்புக்களைக் கொண்டுவரவேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டேயிருப்பவன். எங்கள் வீரக்கதைகளைச் சொல்லி கடந்தகாலத்தில் நிலைத்து நிற்பதால் நமக்கு மட்டுமில்லை, அநியாயமாக இறந்துபோனவர்க்கும் நாம் அநீதி செய்தவர்களாகின்றோம். மேலும் நமது படைப்புக்கள் நம்மை ஒடுக்கிய இனத்தோடு மட்டுமில்லை, நாம் ஒடுக்கிய இனத்தோடும், ஏன் நமக்கிடையிலும் கூட உரையாடல்களைச் செய்வதாக இருக்க வேண்டும். மாரி இந்த காளமாடனில் -அவரின் முன்னைய திரைப்படங்களைப் போல- ஏன் அதைவிட இன்னும் மேலாக- ஆதிக்க சாதிகளிடையே ஓர் உரையாடலை - உணர்ச்சிவசப்படாது செய்ய வந்திருக்கின்றார். இந்திய/தமிழ்ச் சினிமாவின் செல்வாக்கில் அதைப் போல பாவனை செய்கின்ற நம் ஈழத்து/புலம்பெயர் சினிமாக்காரர்கள் ஆகக்குறைந்தது மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் போன்றவர்களிடமிருந்து, எப்படி முரண்பாடுகளை நேர்மறையான கலைகளாக முன்வைப்பது என்கின்ற திசைகளைக் கற்றுக்கொள்ளலாம். மாரி ஒரு நேர்காணலில், 'வாழை'யில் நடந்த ஒரு கதையை அப்படியோ சொல்லியிருக்கின்றேன். அதில் உரையாடல்களைச் செய்வதற்கு ஏதுமில்லை. அங்கே பார்வையாளர்களுக்கு ஒரு பெரும் மெளனத்தையே விட்டுச் சென்றேன். ஆனால் காளமாடன் பல்வேறு உரையாடல்களை -அது நேரோ எதிரோ- உருவாக்குவதையே விரும்புகின்றேன் என்று கூறியிருப்பார். மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடிய, எந்தக் காட்சியிலும் ஏதோ ஒரு பக்கம் சாய்ந்து இன்னொரு தரப்பை உணர்ச்சியூட்டக்கூடிய அசலான கதையை பொதுவெளியில் பார்வையாளருக்கு முன்னே வைப்பதற்கு வீரம் அல்ல, ஒருவர் தன் கலையை அந்தளவுக்கு நம்பினால்தான் இவ்வாறு அச்சமின்றி ஓர் படைப்பை உருவாக்க முடியும். அந்தவகையில் மாரி பாராட்டுக்குரியவர். இப்போது முன்பு போல அல்லாது மிகக் குறைவாக வருடத்துக்கு இரண்டோ/மூன்றோ தமிழ்த் திரைப்படங்களைத்தான் திரையரங்குக்குச் சென்று பார்ப்பேன். ஆனால் கடைசியாக வந்த மாரியின் 'மாமன்னன்', 'வாழை', இப்போது 'காளமாடன்' எல்லாவற்றையும் தவறவிடாது திரையங்கில் பார்த்தது மட்டுமின்றி முதல் காட்சியாக இவற்றைப் பார்த்திருக்கின்றேன் என்பதும் மாரி மீது என்னைப் போன்ற பார்வையாளர்கள் இன்னும் நம்பிக்கை இழக்காது இருக்கின்றோம் என்பதைத் தவிர வேறென்ன காரணம் இருக்கமுடியும்? ******** https://www.facebook.com/share/p/178yu7Yigi/?mibextid=wwXIfr
Checked
Sat, 02/07/2026 - 05:03
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed