புதிய பதிவுகள்2

வாரிசு அரசியலால் வதைபடும் தலைவர்கள்!

2 months 3 weeks ago
ஜி செய்திகள் பகுதியில் இப்போ அதிகம் கட்டுரைகளை இணைக்கிறீர்கள். கவனத்தில் எடுக்கவும். உங்களுக்கே ரிப்போர்ட் அடிக்க முடியவில்லை😂

வடக்கில் காணி விடுவிப்பு: பொன்சேகா எச்சரிக்கை

2 months 3 weeks ago
எப்பொழுதும் தமிழர்களை அச்சுறுத்தலிலும் கட்டுப்பாட்டிலும் தமது கண்காணிப்பிலும் வைத்திருக்கவே சிங்களமும் தமிழ் அரசியல் வாதிகளும் சிந்திக்கின்றனர். தமிழரை வன்முறையை பற்றி சிந்திக்கவும் அதை நோக்கி தூண்டி இந அழிப்பை செய்யவும் நடவடிக்கையிலேயே அது தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. ஆவா குழு, கஞ்சா எங்கிருந்து யாரால் எப்போது வடக்கில் தலைதூக்கியது என்பது இந்த முட்டாளுக்கு தெரியவில்லை. ஏன், தெற்கில் பாதாள உலகம் மற்றும் இவர் சொல்லும் பிரச்சனைகள் துப்பாக்கிச்சூடுகள் அதிலும் நீதிமன்றத்திற்குள் இல்லையா? ஏன் வடக்கில் மட்டும் இவ்வளவு கரிசனை? ஒரு இராணுவ அதிகாரி, நிர்வாகம் செய்ய முற்பட்டால் கருத்து சொல்ல வெளிக்கிட்டால் இப்படித்தான் இருக்கும். இந்த பிரச்னைகள் சமூகப்பிரச்னைகள். இவற்றை உருவாக்கி, வளர்த்து, சுயநலம், வருமானம் காண்பவர்கள். அரசியல்வாதிகள் மக்களை நல்வழியில் நடத்துவதற்கு பதிலாக இவ்வாறான சமுக சீர்கேடுகளை,இந, மத வன்முறைகளை, முரண்பாடுகளை தூண்டி வயிறு வளர்க்கின்றனர். இதை தீர்க்க வேண்டியது நீதி, சட்ட, காவற்துறை சம்பந்தமானது. சட்டம் எல்லோருக்கும் சமமாக இயற்றப்படவேண்டும், பிரச்சனைகள் நீதிமன்றம்மூலம் நிஞாயமாக தீர்க்கப்பட வேண்டும். அதை விட்டு ஆயுதம் தூக்க தூண்டக்கூடாது, அடக்குமுறை செயற்படுத்தக்கூடாது. உண்மை, அந்த நாடுகள்போல் இங்கு சட்டங்கள் இல்லை, நீதி இல்லை, நாட்டு நலன் இல்லை, அரசியல் இல்லை, அரசியல்வாதிகள் இல்லை, எங்கே பிரச்சனையின் ஆரம்பம் என அடையாளம் காண முடியவில்லை அல்லது ஏற்றுக்கொள்ள தைரியம் இல்லை இவருக்கு. எல்லாவற்றையும் ஆயுதத்தாலும் அதிகாரத்தாலும் அடக்கிவிடலாமென நினைக்கிறார். அதனால் துரத்தப்பட்டவர்களை கண்டும் விளங்கிக்கொள்ளும் அறிவு இல்லை அல்லது தானும் மாட்டுப்பட்டு விடுவேன் என்கிற அச்சமோ தெரியவில்லை. இங்கு அது தான் பிரச்சனையே. அது தான் முக்கிய பிரச்சனை. அதை சரி செய்ய யாரும் இல்லை, சரி செய்யவும் விடமாட்டார்கள். அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி. அதுவே இப்போ பெரிய கள்ளர், கொலைகாரருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது. இவருக்கு நாமல் போன்றவர்களுக்கு ஜனாதிபதி ஆசை அடங்கும் வரை இது தொடரும். குற்றவாளிகள் வெளியில் சுதந்திரமாக உலாவும்வரை இந்த நப்பாசை இருந்துகொண்டே இருக்கும். ஒரு வேலைக்கு விண்ணப்பம் செய்யும்போதுவிண்ணப்பதாரியின் நன்னடத்தை நற்சான்றிதழ் பரிசோதிக்கப்படுகிறது. வெளிநாட்டுக்கு குடியேற விரும்புவோருக்கும் அவ்வாறான நடைமுறைகளே பின்பற்றப்படுகின்றன. ஆனால் ஒரு நாட்டை ஆளும் தலைவர்களுக்கோ, அரசியல் தலைவர்களுக்கோ இது நடைமுறையில்லிலை. இந்த நாட்டில், பாராளுமன்றத்தில் இருப்பதெல்லாம் வடித்தெடுத்த கள்ளர், கொலை கொள்ளை, பொறுக்கி, போதைப்பொருள் கடத்திகள். நாடு எப்படி உருப்படும்? அனுர இப்படியானவர்களை தண்டித்து இப்டிப்பட்டவர்கள் அரசியலில் ஈடுபட தடைச் சட்டம் கொண்டுவரவேண்டும். நாளைக்கு இவர் தேர்தலில் நின்றாலும், தமிழர் வாக்கை இவருக்காக சேகரிக்க ஒரு கூட்டம் முண்டியடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன் ; சி.வீ.கே.சிவஞானம்

2 months 3 weeks ago
கொலைகளை செய்பவர்கள் அனைவரும் தப்பிக்கும் நோக்குடன் ஏதோ ஒரு காரணத்தை கூறிக்கொண்டே இருப்பர். இந்த விடயத்தில் இலங்கை அரசு இயக்கங்கள் எல்லோருமே ஒரே நேர்கோட்டிலேயே ஒரே கொள்கையிலேயே பயணித்தார்கள். அவரவுக்கு சார்பானவர்கள் அவர்களின் கொலைகளை மட்டும் நியாயப்படுத்துவார்கள். ஏதோ யுத்தம் முடிந்தது மக்களைப் பொறுத்தவரை மகிழ்சசியே. தமிழர்களின் ஜனத்தொகை யுத்தத்திற்கு முன்னர் இருந்த காலத்தில் வளர்சசியடைந்த வேகத்தில் மீண்டும் வளர்ச்சியடைய தொடங்கியுள்ளது. அதே போல யுத்தத்திற்கு முன்பு இருந்த கலவி, வேலைவாய்புகள், சுய பொருளாதாரம் ஆகியவை கிடைத்தாலே தற்போதைய நிலையில் போதைமர என்ற நிலையே காணப்படுகிறது. 1970 களில் யாழ்பாணத்தில் சொந்த உழைப்பில் வீடுகளைக் கட்டிய எம்மவரால் இன்று ஊர் உழைப்பில் அதை செய்ய முடியாதுள்ளது. வெளிநாட்டு வருமானத்தில் தங்கி வாழும் பொருளாதார நிலையையும் சோம்பேறித்தனத்தையும் யுத்தமே ஏற்படுத்தியது.

பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் & படைக்கலன்கள் - 150+ படிமங்களுடன்

2 months 3 weeks ago
இதுக்கு எதாவது வரலாற்று ஆதாரம் இருக்கிறதா? அப்படியானால் சோழரருக்கு பின், எப்படி (இப்போதைய) ஆந்திராவில் இந்த தொழிநுட்பம் தங்கியது?

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials

2 months 3 weeks ago
கிட்டு நினைவாலயம்... யாழில் 1994 இடிக்கப்பட்ட பின்னர் சமாதான காலத்தில் சிறிது கட்டப்பட்டு எடுக்கப்பட்ட படிமங்கள்:

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials

2 months 3 weeks ago
லெப். சீலன், வீரவேங்கை ஆனந்தன் எ ஆனந் ஆகியோருக்கான வீரவணக்க நினைவாலயம் மீசாலை, அல்லாரை இந்நினைவுச் சின்னமானது அன்னவர்கள் வீரச்சாவடைந்த அதே வெட்டையில்தான் அமைக்கப்பட்டது. இவ்வெட்டையானது பின்னாளில் தோப்பாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials

2 months 3 weeks ago
மாவீரர் வீரவணக்க நினைவாலயம் இதுவே வரலாற்றில் மாவீரர்களுக்கென எழுப்பப்பட்ட முதலாவது பொது வீரவணக்க நினைவாலயம் ஆகும். இருந்தவிடம்: பத்திரகாளி கோவிலடி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம் உயரம்: 28 அடி செய்தோர்: திர்சிகா கலைக்கூடம் உதவியோர்: பத்திரகாளி கோவிலடி இளைஞர்கள் எழுப்பப்பட்டது: மாவீரர் வாரம், 1990 வடிவ விரிப்பு: உச்சியில் வகை-56 துமுக்கியினையும் அடியில் நான்கு வாசல்களையும் உடைய இதன் தூணின் நான்கு பக்கங்களிலும் ஈழப்போர் தொடர்பான பல காட்சிகள் சட்டப்படங்களாக காட்சிப்பட்டிருந்தன. திராவிடக் கட்டிடக்கலையில் இத்தூண் அமைக்கப்பட்டிருந்தது. அழிக்கப்பட்டது: யாழை 'சூரியகதிர்-1' நடவடிக்கை மூலம் சிங்களவர் கைப்பற்றிய போது

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials

2 months 3 weeks ago
கரும்புலிகளின் வீரவணக்க நினைவாலயம் தம்பலகாமம், தலைநகர் 28/03/2004 தலைநகரின் தம்பலகாமத்தை பிறப்பிடமாகக் கொண்ட கரும்புலி மறவர்களின் நினைவாக எழுப்பப்பட்ட தூண் இதுவாகும். தலைநகரின் தம்பலகாமம் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக பேரணி செய்த போது கொழும்புத் துறைமுகத்தினுள் ஊடுருவி தாக்கிய 9 கடற்கரும்புலிகளுள் ஒருவரான தம்பலகாமத்தைச் சேர்ந்த கடற்கரும்புலி கப்டன் சுபாஸ் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கிறார், சம்பந்தன் அவர்கள். இஞ்சால் தெரிவது திருமலை துறைமுகத்தினுள் ஊடுருவித் தாக்கிய கடற்கரும்புலி மேஜர் மதுசாவின் திருவுருவப்படமாகும். .

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 3 weeks ago
நீங்கள் சொல்லியதன் ஆழ, அகலம் புரியாது, அதில் ஒரு குறித்த உதாரணத்தை தான் நீங்கள் விபரித்து இருப்பது. இரான் எனும் குறித்த விடயத்தில், நீங்கள் செய்வது virtue signaling. பொதுவெளி என்பதால் எவரும் சுட்டிக்காட்டலாம்

சர்வதேச கிரிக்கெட்டில் ட்விஸ்ட்… ஐசிசி புதிய விதிமுறைகள் வெளியானது – முழு விபரம்!

2 months 3 weeks ago
1ம் அல்லது 2ம் உலக கோப்பையில் கென்யா, உகண்டா, சிம்பாப்வே, தன்சானியா சேர்ந்து கிழக்கு ஆபிரிக்கா என களமிறங்கினர் என நினைக்கிறேன்.

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials

2 months 3 weeks ago
மேஜர் பிறேமச்சந்திரன் மற்றும் மேஜர் திலீப் ஆகியோருக்கான வீரவணக்க நினைவாலயம் தலைநகர் "திருமலை எங்களின் தலைநகர் என்பது எழுதிய விடையமடா! - புலி பெரும்படை ஆகியே வருமொரு நாளிலே விடுதலையடையுமடா!"
Checked
Fri, 09/26/2025 - 06:12
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed