2 months 3 weeks ago
இத்தாலி அனைத்து கால்பந்து கிலப்புகளை தெரியும்....................juventus எனக்கு மிகவும் பிடிச்ச அணி , இவர்கள் இபோது கால்பந்தில் பெரிசாக சாதிப்பது கிடையாது............. இத்தாலியில் இன்னும் கிரிக்கேட் அழிய வில்லை , இத்தாலியும் வளந்து வரும் அணிகளில் ஒன்று , என்ன செய்வது அந்த நாட்டில் கால்பந்து rugby போன்ர விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கினம்..............................
2 months 3 weeks ago
எல்லாமும் மாறி மாறி நடக்கும். AC Milan தெரியும்தானே? பிரபல இத்தாலிய கால்பந்து கழகம். அதை ஆரம்பித்தது ஆங்கிலேயர். அதுமட்டும் அல்ல நவீன கால்பந்தை இத்தாலிக்கு அறிமுகம் செய்தவர்களும் ஆங்கிலேயரே. ஆனால் இன்று நாம் இத்தாலியை ஏதோ கால்பந்தின் சாம்ராஜ்யம் போல நினைக்கிறோம். ஒன்று தெரியுமா ? AC Milan இன் ஆரம்ப முழு பெயர் Milan Football and Cricket Club. அப்போது இத்தாலியில் கால்பந்து பிரபலமாகாது கிரிகெட் பிரபலமாகாகி இருப்பின் இப்போ இத்தாலி ஒரு டெஸ்ட் நாடாக இருக்கும்।
2 months 3 weeks ago
அவர்களிடம் ஆயுதம் இருந்தது. உங்களிடம் பேனா இருக்கிறது. அதை எவ்வளவு கூராக இங்குள்ளவர்கள் மீது பாவிக்கும் நீங்கள் கொலைகள் பற்றி பேசுவது.....????
2 months 3 weeks ago
20 ஓவர் வருகைக்கு பிறக்கு தான் ஜரோப்பாவில் பல நாடுகள் கிரிக்கேட் விளையாட தொடங்கி இருக்கினம் , உதாரனத்துக்கு நேட்டோ அமைப்பை சேர்ந்த நாடுகளில் இஸ்ரேல் மற்றும் சில நாடுகள் தான் இன்னும் கிரிக்கேட் விளையாட ஆரம்பிக்க வில்லை , மற்ற நாடுகள் ஜரோப்பாவில் வெதுவாய் வளந்து கொண்டு வருகினம்..................... ஜரோப்பாவில் சில நாடுகள் கிரிக்கேட்டை அங்கிகறீக்க கூடும்................. இலங்கை முதல் முறை உலக கோப்பை தூக்கின போது கிரிக்கேட்டை சில நாடுகள் தான் விளையாடினவை , இபோது அந்த நிலை இல்லை , கால்பந்துக்கு பெயர் போன பிரேசில் நாடே கிரிக்கேட் விளையாடுகினம் என்றால் , கிரிக்கேட் எவளவு தூரம் வளந்து விட்டது 2007க்கு பிறக்கு👍.............................
2 months 3 weeks ago
தென் தமிழீழத்தில் வீரச்சாவடைந்த வேவுப்புலி லெப் கேணல் சிவகாமி மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஐந்து போராளிகளுக்குமாக அமைக்கப்பட்டிருந்த வீரவணக்க நினைவாலயம்
2 months 3 weeks ago
நான் யாரையும் நியாயப்படுத்தவில்லை. கொலைகளை யார் செய்தாலும் அது குற்றம் தான். தமிழ் தேசிய சூழலில் உள்ள அரசியல்வாதிகள், சிவில் சமூகம், ஊடகவியலாளர்கள் நினைத்திருந்தால் யுத்தம் ஆரம்பித்த 1980 களின் ஆரம்பத்தில் இருந்து கொலை செய்யப்பட்டவர்கள், காணாமல் ஆக்ககப்படவர்கள் பெயர் ஶ்ரீலங்கா இராணுவத்தால் அல்லது எந்த இயக்கங்களால் அந்த கொலை நடத்தப்பட்டது யார் மீது அதிக சந்தேகம. உள்ளது போன்ற விபரங்களுடன் திகதி வாரியாக ஒரு பட்டியலை தயாரித்திருக்க முடியும்.அதை சர்வதேச கவனத்திற்கும் கொண்டு சென்றிருக்கலாம். அவை இந்த புதை குழுகளில் உள்ளனவா என்பதை டிஎன் ஏ பரிசோதனை மூலம் கண்டு பிடிக்கலாம்.மாவட்டங்களின் 1980 ம் ஆண்டுல் இருந்தான குடிசன மதிப்பு புள்ளிவிபரங்களின் துணையுடன் அதை செய்திருக்கலாம். அப்படி செய்வதன் மூலம் அந்த கொலைகளை யார் யார் செய்தார்கள் என்பதை விசாரணை உதவியாக அமையும். அத்தோடு அந்த கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் உலகில் எங்கு வசித்தாலும் அந்த பட்டியலை சரி பார்க்கவும் மேலதிக தகவல்களை வழங்கவும் நீதி விசாரணை சாட்சிகாக மாறவும் முடியும். இப்போது கூட காலம் கடந்து விடவில்லை. ஏனெனில் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தில் ஒரு சிலரவது தற்போது உயிருடன் ஏதோ ஒரு நாட்டில் வாழக்கூடிய சாத்தியம் உள்ளது. ஆனால், அதை செய்ய இவர்கள் எவருக்கும் அக்கறை இல்லை. அந்த கொலைகளை செய்தவர்களில் சிலர் தற்போது அரசியல்வாதிகளாக சிவில் சமூகத்தினராக, ஊடகவியலாளராகவோ அல்லது புலம் பெயர்ந்தோ மக்களுக்குள் பரவி இருக்கலாமென்பதால் அதை செய்ய இவர்களுக்கும் சற்று பயமாகவும் இருக்கலாம். ஆனால் இந்த நடவடிக்கை மூலம் நிச்சயமாக இலங்கை இராணுவத்தினர் செய்த கொலைகளை இனம் காண முடியும்.
2 months 3 weeks ago
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்ல மீண்டும் தடை! செவ்வாய்க்கு முதல் விடுவிக்கப்படும்! written by admin June 29, 2025 வலி வடக்கு பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் மக்கள் சுதந்திரமாக சென்று வழிபட அனுமதிக்கப்படுவார்கள் என யாழ்ப்பாண மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (28.06.25) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு மக்கள் சுதந்திரமாக சென்று வழிபட அனுமதியளிக்கப்படும். குறித்த ஆலயத்திற்கு சென்று விடுவிப்பதற்கான நடவடிக்கையை எடுத்திருந்தேன். அது நல்லெண்ண சமிக்ஞையாக யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் எடுக்கப்பட்ட முடிவாகும். அதனூடாக அதை கொழும்பு இராணுவ தலைமையகத்துக்கும் அறிவிக்கப்பட்டு தற்காலிகமாக விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பில் இராணுவத்திடம் கேட்ட போது, உத்தியோகபூர்வமாக கொழும்பில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் இருந்து எழுத்து மூலம் அனுமதி வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் எழுத்து மூலமாக ஆவணம் கிடைத்ததும் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்படும் – என மேலும் தெரிவித்தார். பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்ல மீண்டும் தடை! பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு 35 வருடங்களின் பின்னர், கட்டுப்பாடுகள் இன்றி வழிபட நேற்று முன்தினம் (27.06.25) வெள்ளிக்கிழமை இராணுவத்தினர் அனுமதித்திருந்த நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை (28.06.25) மீள ஆலயத்திற்கு செல்ல அனுமதி மறுத்துள்ளனர். உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி பலாலியில் இருந்து மக்கள் வெளியேறி இருந்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது. கடந்த 35 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள ஆலயத்திற்கு கடந்த 06 மாத காலத்திற்கு முதலே சுதந்திரமாக சென்று வழிபட அனுமதி வழங்கப்படும் என இராணுவத்தினர் அறிவித்து இருந்த போதிலும் , இதுவரை காலமும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் , விசேட தினங்களில் மாத்திரம் ஆலயத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆலயத்திற்கு மாத்திரம் செல்வதற்கு என உயர் பாதுகாப்பு வலயத்தினுள் பிரத்தியோக பாதை அமைக்கப்பட்டு , குறித்த பாதை ஊடாக நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் மக்கள் ஆலயத்திற்கு மாத்திரம் சென்று வழிபாட்டு திரும்ப இராணுவத்தினர் அனுமதி வழங்கி இருந்தனர். இந்நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை ஆலயத்திற்கு செல்லும் பிரத்தியோக பாதையில் இராணுவத்தினர் மூடி முட்கம்பி வேலி அமைத்திருந்ததுடன், இரு இராணுவத்தினர் கடமையிலும் ஈடுபடுத்தபட்டிருந்தனர். ஆலயத்திற்கு இன்றைய தினம் சனிக்கிழமை வழிபட சென்ற மக்கள் இராணுவத்தினர் ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்காததால் முட்கம்பி முன்பாக தேங்காய் உடைத்து கற்பூரம் கொளுத்தி பூப்போட்டு வழிப்பட்டனர். https://globaltamilnews.net/2025/217456/
2 months 3 weeks ago
ஆண்களுக்கு செய்யும் சுன்னத் இஸ்லாமிய மத கடப்பாடு. யூதருக்கும். ஆனால் பெண் பிள்ளைகளில் உறுப்பை முடமாக்கல் female genital mutilation மத கடப்பாடு அல்ல. வெறும் சமூக பழக்கம். பிரிதானியாவில் இதற்கு எதிராக கடும் சட்டம் உண்டு. வெளிநாட்டில் கொண்டு போய் செய்தாலும் மீள வந்ததும் பெற்றார் மீது வழக்கு பாயும். இப்படி சட்டங்கள் இலங்கையிலும் தேவை. இரெண்டு பேரை தூக்கி 5 வருடம் உள்ளே வைக்க எல்லாம் சரிவரும்.
2 months 3 weeks ago
இங்கிலாந்தை போல் ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் மைதானம் நிரம்பும் ஆதரவு ஏனை நாடுகலில் இல்லை எனிலும், இந்தியா, அவுஸ், தெஆ வில் இன்றும் டெஸ்டுக்கு மவுசு குறையவில்லை. ஆஷ்சஸ், பார்டர்-கவாஸ்கர், இந்தியா-பாக், இங்கிலாந்து/அவுஸ்/தெ ஆ தொடர்களுக்கு இந்த நாடுகளில் இப்போதும் நல்ல கூட்டம் வரும். இலங்கை பங்களாதேஷ் போன்ற போட்டிகளில் இந்த நாடுகளில் ஆர்வம் குறையினும், போட்டி விறு விறுப்பாக போனால் 3,4,5 நாளுக்கு கூட்டம் வரும். அனைத்தையும் விட முக்கியமாக, ஒரு அளவுக்கு கடினபந்து விளையாடிய அனைவருக்கும், பார்வையாளருக்கு அல்ல, வீரருக்கு டெஸ்டே இப்போதும் அவர்கள் விளையாட்டின் உச்சம். சச்சின் முதல், முரளி வரை தமது டெஸ்ட் சாதனைகளைதான் அதிகம் கொண்டாடுவார்கள். எத்தனை white ball specialist ஐ 10 வருடம் பின் நினைவில் வைக்கிறோம், ஆனால் அநேக டெஸ்ட்வீரர் புகழ் காலத்துக்கும் அழியாதது. ஆகவே இங்கிலாந்து, அவுஸ், தெ.ஆ, இந்தியா, பாக் இருக்கும் வரை டெஸ்ட்டுக்கு ஆபத்தில்லை. டெஸ்ட் உலக தொடர் புதிய ரத்தமும் பாய்ச்சியுள்ளது.
2 months 3 weeks ago
நேற்று இந்தியா மகளிர் இங்லாந் மகளிர அவர்களின்சொந்த மண்ணில் வைத்து வென்று விட்டினம்.................இந்தியாவின் முன்னனி வேக பந்து வீசும் மகளிர் ரேனு கலந்துக்காம இந்தியா வென்றது , பாராட்ட தக்கது , மகளிர் ஜபிஎலுக்கு பிறக்கு இந்தியா அணியில் சில இளம் புது முக மகளிர் அறிமுகமாகி இருக்கினம் , அருமையான பந்து வீச்சு.............................
2 months 3 weeks ago
அப்போ சந்திரசேகர், இளங்குமரனையும் வெளியேறும்படி கோரியிருந்தனரே, அவர்களும் தங்கள் கட்சியை சேர்ந்தவர்களை வெளியேற்றியிருந்தனரோ? தங்கள் தவறுகளை மறைக்க வேறொருவர் மேல் பழியை போட்டு தப்புவது உங்கள் மரபு. நீங்கள் அரிய நேந்திரனை சொல்கிறீர்கள் போலுள்ளது. அவருக்காக யாழ்ப்பாணத்தில் குரலெழுப்பினரா? அல்லது உங்களது மனசாட்சியின் குரலா அது?
2 months 3 weeks ago
தில்லைக்கு இன்று 75 29 JUN, 2025 | 02:33 PM வீரகத்தி தனபாலசிங்கம் வடமராட்சியில் எந்த சந்தியில் என்றாலும், எவரிடமாவது ‘றிப்போர்ட்டரை ‘ கண்டீர்களா என்று கேட்டால், அவர்கள் உடனே தில்லையைத் தான் கேட்கி!றார்கள் உடனடியாகவே என்று பதில் சொல்வார்கள். அந்தளவுக்கு தில்லைநாதன் வடமராட்சியில் மகா பிரபல்யம். அங்கு மாத்திரமல்ல, யாழ்ப்பாணத்தின் சகல பகுதிகளிலும் பரவலாக அறியப்பட்ட மூத்த செய்தியாளர் அவர். கொழும்பிலும் கூட பிரதான தமிழ்ப் பத்திரிகை நிறுவனங்களில் வடபகுதி செய்தியாளர்களைப் பற்றி பேசும்போது தில்லையின் கதை வராமல் அந்த பேச்சு நிறைவுறாது. அரைநூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக பத்திரிகைத்துறைக்கு தன்னை அர்ப்பணித்து இன்னமும் கூட சுறுசுறுப்புக் குறையாமல் செயற்பட்டுக்கொண்டிருக்கும் தில்லை என்று நாம் அன்புடன் அழைக்கும் சின்னத்துரை தில்லைநாதன் இன்று தனது 75 வது அகவையில் பிரவேசிக்கிறார். இதுவரையான முக்கால் நூற்றாண்டு வாழ்வில் அரைநூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தை தில்லை பத்திரிகைத்துறைக்கு அர்ப்பணித்திருக்கிறார் வடமராட்சி மந்திகையை பிறப்பிடமாகக்கொண்ட தில்லையுடன் சுமார் நான்கு தசாப்தங்களுக்கும அதிகமான காலமாக எனக்கு நெருக்கமான நட்புறவு. அவரது எளிமையான சுபாவமும் நகைச்சுவையுணர்வு நிறைந்த பேச்சும் எவரையும் எளிதாக அவர்பால் கவர்ந்து விடும். தில்லைக்கு செய்தித்துறையில் நாட்டம் மிகவும் இளம் வயதில் அதாவது பள்ளிக்காலத்திலேயே முளைவிட்டுவிட்டது. அது ஒரு சுவாரஸ்யமான கதையும் கூட. புலோலி மெதடிஸ்த மிசன் தமிழ்க்கலவன் பாடசாலையில் தரம் ஐந்து படிக்கும்போது தில்லையின் வகுப்பாசிரியரான டி.எம்.இராசலிங்கம் அந்த வேளையில் வீரகேசரி, ஈழநாடு பத்திரிகைகளின் நிருபர். ஓய்வான நேர இடைவெளியில் வகுப்பில் வைத்தே செய்திகளை எழுதிவிட்டு தினமும் அவற்றை தபாலில் சேர்ப்பதற்காக மாணவர்களிடம் கொடுத்து அனுப்புவது அவர் வழக்கம். அவ்வாறு செய்திகளை தபாலில் சேர்க்கும் வேலையை விரும்பிச்செய்த மாணவர்களில் ஒருவர் தில்லை. ஆசிரியர் மறந்தாலும் தில்லை அவரிடம் சென்று ‘ சேர் இன்று தபால் கந்தோருக்கு போகத்தேவையில்லையா ‘ என்று தானாகவே கேட்டு செய்திகள் அடங்கிய தபாலுறைகளை வாங்கிக் கொள்வார். ஊரில் உள்ள புதினங்களை இந்த ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம் கேட்டு அவற்றை செய்தியாக்குவதிலும் இராசலிங்கம் வல்லவராம். அவ்வாறு புதினங்களை அவருக்குச் சொல்வதில் தில்லைக்கு ஒரு பிரியம். தாங்கள் தபாலில் சேர்த்த செய்திகள் பத்திரிகைகளில்ாபிரசுரமாகியிருக்கிறதா என்று தேடி வாசிக்கும் ஆர்வத்தையும் தில்லை நாளடைவில் வளர்த்துக் கொண்டார்.இவ்வாறு தான் பின்னாளில் பத்திரிகைத்துறையில் முழுமையாக தன்னை அர்ப்பணிப்பதற்கான விதையை ஊன்றிக் கொண்டதாக கூறுவார் தில்லை. பாடசாலை முடிந்து வீடு திரும்பும்போது மந்திகை வைத்தியசாலைச் சந்தியை கடந்தே அவர் செல்லவேண்டும். வைத்தியசாலையை சூழவுள்ள பகுதிகள் விவசாயிகள் நிறைந்தது. அந்த சந்தியில் தினமும் ‘ குழைத்தரகர்கள் ‘ கூடி நிற்பார்கள். அவர்கள் பெரும்பாலும் படிப்பறிவில்லாதவர்கள். வீடு நோக்கிச்செல்லும் தில்லையை அவர்கள் இடைமறித்து வீரகேசரியையும் ஈழநாட்டையும் கொடுத்து உரத்து வாசிக்கவைத்து நாட்டு நடப்புக்களை அறிந்துகொள்வார்கள். இதை தில்லை ஒரு நாள், இரண்டு நாள் அல்ல தினமும்் செய்ய வேண்டி வந்தது. பத்திரிகைகளில் இருந்த சகல செய்திகளையும் ஒன்றுவிடாமல் வாசிக்கவேண்டும் என்று விடாப்பிடியாக நிர்பார்களாம் அந்த குழைத்தரகர்கள். தில்லை ஒன்றும் விருப்பமில்லாமல் அதைச் செய்யவுமில்லை. செய்திகளை முழுமையாக வாசித்து முடிந்த கையோடு அந்த தரகர்கள் அருகில் தேநீர் கடையில் வடை, பகோடா போன்ற பலகாரங்களை வாங்கி தில்லைக்கு கொடுப்பார்களாம். சிறு வயதில் இருந்தே தனக்கு பத்திரிகை வாசிப்பில் அக்கறை வளர்ந்ததற்கு அந்த ‘ மந்திகைச்சந்தி செய்திவாசிப்பு ‘ முக்கியமான ஒரு காரணம் என்று தில்லை தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பங்களில் சுவாரஸ்யமாக கூறுவதுண்டு. பாடசாலைக் கல்வியை முடித்துக்கொண்ட உடனடியாகவே தில்லை ஒரு செய்தியாளராக வேண்டும் என்பதைத் தவிர வேறு தொழிலில் நாட்டம் காட்டவில்லை. கண்டியில் இருந்து அப்போது வெளியாகிய ‘ செய்தி ‘ என்ற பத்திரிகையின் நிருபராகவே செய்தித் துறையில் அவர் காலடி வைத்தார். அந்த பத்திரிகையின் ஆசிரியர் சில வருடங்களுக்கு முன்னர் காலமான பேராசிரியர் சோ.சந்திரசேகரனின் மனைவியின் தந்தையார். ‘செய்தி ‘ நடத்திய கட்டுரைப்போட்டிக்கு தில்லை எழுதிய அனுப்பிய கட்டுரைக்கு பரிசு கிடைத்தது. 50 ரூபா பரிசைப் பெறுவதற்காக அவர் 1968 ஆண்டு கண்டிக்கு சென்றபோது அந்த பத்திரிகையின் செய்தி ஆசிரியராக இருந்த காலஞ்சென்ற கே.ஜி.மகாதேவா ( பிறகு அவர் ஈழநாடு பத்திரிகையின் செய்தி ஆசிரியராக பல வருடங்கள் சேவையாற்றினார்) நிருபராகப் பணியாற்றுமாறு கேட்கவே தில்லை அடுத்த பேச்சின்றி இணங்கிக்கொண்டார். பத்திரிகைத்துறையில் அன்று பிரவேசித்த அவர் அதற்குப் பிறகு திரும்பிப் பார்க்கவில்லை. அரைநூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக நீண்டு இன்றும் தொடருகிறது அவரின் செய்திப்பணி. பிறகு 1969 ஆம் ஆண்டில் ஈழநாடு பத்திரிகையின் நெல்லியடி செய்தியாளராக இணைந்துகொண்ட தில்லை மூன்று வருடங்களில் (1972) வீரகேசரியின் புலோலி செய்தியாளரானார். வடமராட்சியின் திக்கம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் வி.பி.சுந்தரலிங்கம் அன்றைய வீரகேசரி ஆசிரியர் கே. சிவப்பிரகாசத்துடன் தனக்கிருந்த நட்புறவை பயன்படுத்தி அந்த வாய்ப்பை தனக்கு பெற்றுக்கொடுத்ததாக நன்றியுணர்வுடன் தில்லை அடிக்கடி கூறுவார். 1987 வரை புலோலி செய்தியாளராக பணியாற்றிய தில்லையை வடமராட்சி ‘ லிபறேசன் ஒப்பரேசன் ‘ இராணுவ நடவடிக்கைக்கு பிறகு வீரகேசரியின் அன்றைய செய்தி ஆசிரியர் காலஞ் சென்ற செ.நடராஜா வடமராட்சி செய்தியாளராக கூடுதல் பொறுப்புகளுடன் பணியாற்றுமாறு பணித்தார். பிறகு யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பற்றியதை அடுத்து 1997 ஆம் ஆண்டில் அன்றைய வடபகுதி போர்நிலைவரங்களுக்கு மத்தியில் யாழ்ப்பாண செய்தியாளராக அனுபவமும் பொறுப்பும் வாய்ந்த ஒருவரே செயற்படவேண்டும் என்று முடிவெடுத்த வீரகேசரி நிறுவனம் தில்லையை யாழ்நகரை தளமாகக்கொண்டு பணியாற்றும் யாழ்ப்பாண செய்தியாளராகவும் மாற்றியது. ஆபத்து நிறைந்த அந்த காலகடடத்திலும், தில்லை எந்த தயக்கமும் இன்றி துணிவாற்றலுடன் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு 2009 வரை செம்மையாகப் பணியாற்றினார். இலங்கையின் உள்நாட்டுப்போர் பிராந்தியச் செய்தியாளர்களை தேசியரீதியான முக்கியத்துவத்தைக் கொண்டர்களாக மாற்றியது. அன்றைய சூழ்நிலையில் அது தவிர்க்க முடியாதது. பிராந்தியங்களில் இடம்பெற்ற சம்பவங்களே போர்க்காலத்தில் பெரும்பாலும் தேசிய மட்டத்தில் மாத்திரமல்ல, வெளியுலகினதும் கவனத்துக்குரியவையாக இருந்தன. அந்த வேளையில் பிராந்திய செய்தியாளர்கள் உள்நாட்டு ஊடகங்களினால் மாத்திரமல்ல, சர்வதேச ஊடகங்களினாலும் பெரிதும் நாடப்பட்டவர்களாக இருந்தார்கள். அவர்களது செய்திகள் வடக்கு, கிழக்கில் போரின் விளைவான அவலங்களை உலகறியச்செய்தன. அத்தகைய பணியை இடர்மிகுந்த சூழ்நிலைக்கு் மத்தியிலும், அர்ப்பணிப்புச் சிந்தையுடன் செய்த யாழ்ப்பாணச் செய்தியாளர்களில் தில்லைக்கு ஒரு முக்கிய இடமுண்டு. உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பிறகும் அவரின் பணி சுறுசுறுப்பாகத் தொடருகிறது. 1970 களின் பிற்பகுதியில் பருத்தித்துறையில் இடம்பெற்ற கமலம் கொலைவழக்கு, 1990 களின் பிற்பகுதியில் நடைபெற்ற செம்மணி கிருசாந்தி குமாரசாமி பாலியல் வல்லுறவு, கொலை வழக்கு விசாரணைகள் தொடர்பான செய்திகளை விரிவான முறையில் தில்லை அறிக்கையிட்டபோது முதலில் வீரகேசரியிலும் பின்னர் தினக்குரலிலும் நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அந்த வழக்கு விசாரணைகளின் தொகுப்புக்களை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாசித்தார்கள்.அந்த விசாரணைகள் பற்றிய செய்தி ஒரு நாள் பத்திரிகையில் வெளியாகத் தவறினாலும் உடனே வாசகர்களிடமிருந்து பத்திரிகை அலுவலகங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்துவிடும். அந்தளவுக்கு சிறப்பான முறையில் தில்லை செய்திகளை தொகுத்தளித்தார். போர்க்கால கட்டத்தில் இடர்பாடுகளுக்கு மத்தியில் பணியாற்றிய பத்திரிகையாளர்களுக்கு இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் 2004 ஆம் ஆண்டில் விருது வழங்கிக் கௌரவித்த போது யாழ்ப்பாண மாவட்டத்துக்கான அந்த விருது தில்லைக்கு கிடைத்தது. அடுத்து அதே ஆண்டு ஜூலை மாதம் இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் அமைப்பும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இணைந்து கொழும்பில் நடத்துகின்ற பத்திரிகைத்துறைக்கான உயர்விருது விழாவிலும் தில்லை கௌரவிக்கப்பட்டார். அவரின் ஊடகத்துறைச் சேவையை பாராட்டி பருத்தித்துறை பிரதேச செயலகம் 2013 ஆம் ஆண்டில் ‘ கலைப்பருதி ‘ பட்டம் வழங்கியது. கல்வி அமைச்சின் விருது ஒன்றும் தில்லைக்கு கிடைத்தது. பத்திரிகைத்துறைக்கு தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்த காலஞ்சென்ற வீரகேசரி யாழ்ப்பாணச் செய்தியாளர் செல்லத்துரை போன்று அனுபவசாலிகளின் வரிசையில் வைத்து ஒப்பிடக்கூடிய ஒருவரான தில்லையை எந்த நேரத்தில் நேரடியாகக் கண்டாலும் அல்லது தொலைபேசியில் தொடர்புகொண்டாலும், நலம் விசாரித்துவிட்டு அடுத்து உடனடியாக கதை பத்திரிகைத்துறைக்கு நகர்ந்து விடும். அந்த துறைக்கு தன்னாலான பணியை தொடர்ந்தும் செய்யவேண்டும் என்ற தில்லையின் ஆழமான ஆர்வத்தின் வெளிப்பாடே அது. தில்லை மிகுந்த ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ்ந்துவடமராட்சியில் எங்காவது ஒரு சந்தியில் எவரிடமாவது ‘றிப்போர்ட்டரை ‘ கண்டீர்களா என்று கேட்டால், அவர்கள் உடனே தில்லையைத்தான் கேட்கிறோம் என்று பதில் சொல்வார்கள். அந்தளவுக்கு தில்லைநாதன் வடமராட்சியில் மகா பிரபல்யம். அங்கு மாத்திரமல்ல, யாழ்ப்பாணத்தின் சகல பகுதிகளிலும் பரவலாக அறியப்பட்ட செய்தியாளர் அவர். கொழும்பிலும் கூட பிரதான தமிழ்ப்பத்திரிகை நிறுவனங்களில் வடபகுதி செய்தியாளர்களைப் பற்றி பேசும்போது தில்லையின் கதை வராமல் இருக்காது. அரைநூற்றாண்டு காலமாக பத்திரிகைத்துறைக்கு தன்னை அர்ப்பணித்து இன்னமும் கூட சுறுசுறுப்புக் குறையாமல் செயற்பட்டுக்கொண்டிருக்கும் தில்லை என்று நாம் அன்புடன் அழைக்கும் சின்னத்துரை தில்லைநாதன் நாளைய தினம் 70 வது அகவையில் காலடிவைக்கிறார். மந்திகையை பிறப்பிடமாகக்கொண்ட தில்லையுடன் சுமார் நான்கு தசாப்தங்களாக எனக்கு நெருக்கமான நட்புறவு இருந்துவருகிறது. அவரது எளிமையான சுபாவமும் நகைச்சுவையுணர்வு நிறைந்த பேச்சும் எவரையும் எளிதாக அவர்பால் கவர்ந்துவிடும். தில்லைக்கு செய்தித்துறையில் நாட்டம் மிகவும் இளம் வயதில் அதாவது பள்ளிக்காலத்திலேயே ஏற்பட்டுவிட்டது. அது ஒரு சுவாரஸ்யமான கதையும் கூட. புலோலி மெதடிஸ்த மிசன் தமிழ்க்கலவன் பாடசாலையில் தரம் ஐந்து படிக்கும்போது தில்லையின் வகுப்பாசிரியரான டி.எம்.இராசலிங்கம் அந்தவேளையில் வீரகேசரி, ஈழநாடு பத்திரிகைகளின் நிருபர்.ஓய்வான நேர இடைவெளியில் வகுப்பில்வைத்தே செய்திகளை எழுதிவிட்டு தினமும் அவற்றை தபாலில் சேர்ப்பதற்காக மாணவர்களிடம் கொடுத்து அனுப்புவது அவர் வழக்கம். அவ்வாறு செய்திகளை தபாலில் சேர்க்கும் வேலையை விரும்பிச்செய்த மாணவர்களில் ஒருவர் தில்லை. ஆசிரியர் மறந்தாலும் தில்லை அவரிடம் சென்று ‘ சேர் இன்று தபால் கந்தோருக்கு போகத்தேவையில்லையா ‘ என்று தானாகவே கேட்டு செய்திகள் அடங்கிய தபாலுறைகளை வாங்கிக்கொள்வாராம். ஊரில் உள்ள புதினங்களை இந்த ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம் கேட்டு அவற்றை செய்தியாக்குவதிலும் இராசலிங்கம் வல்லவராம். அவ்வாறு புதினங்களை அவருக்குச் சொல்வதில் தில்லைக்கு ஒரு பிரியம்.தாங்கள் தபாலில் சேர்த்த செய்திகள் பத்திரிகைகளில் வந்திருக்கிறதா என்று தேடி வாசிக்கும் ஆர்வத்தையும் தில்லை நாளடைவில் வளர்த்துக்கொண்டார்.இவ்வாறுதான் பின்னாளில் பத்திரிகைத்துறையில் முழுமையாக தன்னை அர்ப்பணிப்பதற்கான விதையை ஊன்றிக்கொண்டதாக தில்லை கூறுவார். பாடசாலை முடிந்து தில்லை வீடு திரும்பும்போது மந்திகை வைத்தியசாலைச் சந்தியை கடந்தே செல்லவேண்டும். வைத்தியசாலையை சூழவுள்ள பகுதிகள் விவசாயிகள் நிறைந்தது. அந்த சந்தியில் தினமும் ‘ குழைத்தரகர்கள் ‘ கூடி நிற்பார்கள். அவர்கள் பெரும்பாலும் படிப்பறிவில்லாதவர்கள். வீடு நோக்கிச்செல்லும் தில்லையை அவர்கள் இடைமறித்து வீரகேசரியையும் ஈழநாட்டையும் கொடுத்து உரத்து வாசிக்கவைத்து நாட்டு நடப்புக்களை அறிந்துகொள்வார்கள். இதை தில்லை ஒரு நாள், இரண்டு நாள் அல்ல தினமும் செய்யவேண்டியேற்பட்டுவிட்டது. இரு பத்திரிகைகளிலும் இருந்த சகல செய்திகளையும் ஒன்றுவிடாமல் வாசிக்கவேண்டுமாம். தில்லை ஒன்றும் விருப்பமில்லாமல் அதைச் செய்யவுமில்லை. செய்திகளை முழுமையாக வாசித்துமுடிந்த உடனடியாக அந்த தரகர்கள் அருகில் இருந்த தேநீர் கடையில் வடை, பகோடா போன்ற பலகாரங்களை வாங்கி தில்லைக்கு கொடுப்பார்களாம். சிறு வயதில் இருந்தே தனக்கு பத்திரிகை வாசிப்பில் அக்கறை வளர்ந்ததற்கு அந்த ‘ மந்திகைச்சந்தி செய்திவாசிப்பு ‘ முக்கியமான ஒரு காரணம் என்று தில்லை தனது அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பங்களில் கூறுவார். பாடசாலை கல்வியை முடித்துக்கொண்ட உடனடியாகவே தில்லை ஒரு செய்தியாளராக வேண்டும் என்பதைத் தவிர வேறு தொழிலில் நாட்டம் காட்டவில்லை. அவர் கண்டியில் இருந்து வெளியாகிக்கொண்டிருந்த ‘ செய்தி ‘ என்ற பத்திரிகையின் நிருபராகவே செய்தித்துறையில் காலடி வைத்தார். அதன் ஆசிரியர் பேராசிரியர் சோ.சந்திரசேகரனின் மாமனாராவார். ‘ செய்தி ‘ நடத்திய கட்டுரைப்போட்டிக்கு தில்லை எழுதிய அனுப்பிய கட்டுரைக்கு பரிசு கிடைத்தது. 50 ரூபா பரிசைப் பெறுவதற்காக அவர் 1968 ஆண்டு கண்டிக்கு சென்றபோது அந்த பத்திரிகையின் செய்தி ஆசிரியராக இருந்த காலஞ்சென்ற கே.ஜி.மகாதேவா ( பிறகு அவர் ஈழநாடு பத்திரிகையின் செய்தி ஆசிரியராக பல வருடங்கள் சேவையாற்றினார்) நிருபராகப் பணியாற்றுமாறு கேட்கவே தில்லை மறுபேச்சின்றி இணங்கிக்கொண்டார். அன்று பத்திரிகைத்துறையில் பிரவேசித்த அவர் அதற்குப் பிறகு திரும்பிப்பார்க்கவில்லை. 52 வருடங்களாக நீண்டு இன்றும் தொடருகிறது அவரின் செய்திப்பணி. பிறகு 1969 ஆம் ஆண்டில் ஈழநாடு பத்திரிகையின் நெல்லியடி செய்தியாளராக இணைந்துகொண்ட தில்லை மூன்று வருடங்களில் (1972) வீரகேசரியின் புலோலி செய்தியாளரானார். வடமராட்சியின் திக்கம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் வி.பி.சுந்தரலிங்கம் அன்றைய வீரகேசரி ஆசிரியர் கே. சிவப்பிரகாசத்துடன் தனக்கிருந்த நட்புறவை பயன்படுத்தி வாய்ப்பை தனக்கு பெற்றுக்கொடுத்ததாக நன்றியுணர்வுடன் தில்லை அடிக்கடி கூறுவார். 1987 வரை புலோலி செய்தியாளராக பணியாற்றிய அவரை வடமராட்சி ‘ லிபறேசன் ஒப்பரேசன் ‘ இராணுவ நடவடிக்கைக்கு பிறகு வீரகேசரியின் அன்றைய செய்தி ஆசிரியர் காலஞ்சென்ற செ.நடராஜா வடமராட்சி செய்தியாளராக கூடுதல் பொறுப்புகளுடன் மாற்றினார். பிறகு யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பற்றியதை அடுத்து 1997 ஆம் ஆண்டில் அன்றைய வடபகுதி போர்நிலைவரங்களுக்கு மத்தியில் யாழ்ப்பாண செய்தியாளராக அனுபவமும் பொறுப்பும் வாய்ந்த ஒருவரே செயற்படவேண்டும் என்று முடிவெடுத்த வீரகேசரி நிறுவனம் தில்லையை யாழ்நகரை தளமாகக்கொண்டு பணியாற்றும் யாழ்ப்பாண செய்தியாளராக பணியாற்றவைத்தது. அது ஆபத்து நிறைந்த காலகட்டம் என்றபோதிலும், தில்லை எந்தவிதமான தயக்கமும் இன்றி துணிச்சலுடன் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு 2009 வரை பணியாற்றினார். இலங்கை உள்நாட்டுப்போர் பிராந்தியச் செய்தியாளர்களுக்கு தேசியரீதியான முக்கியத்துவத்தை தவிர்க்கமுடியாமல் கொடுத்தது. பிராந்தியங்களில் இடம்பெற்ற சம்பவங்களே போர்க்காலத்தில் பெரும்பாலும் தேசிய மட்டத்தில் மாத்திரமல்ல, வெளியுலகினதும் கவனத்துக்குரியவையாக இருந்தன. அந்தவேளையில் பிராந்திய செய்தியாளர்கள் உள்நாட்டு ஊடகங்களினால் மாத்திரமல்ல, சர்வதேச ஊடகங்களினாலும் பெரிதும் நாடப்பட்டவர்களாக இருந்தார்கள்.அவர்களது செய்திகள் வடக்கு, கிழக்கில் போரின் விளைவான அவலங்களை உலகறியச்செய்தன. அத்தகைய பணியை இடர்மிகுந்த சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் அர்ப்பணிப்புடன் செய்த யாழ்ப்பாணச் செய்தியாளர்களில் தில்லைக்கு ஒரு முக்கிய இடமுண்டு.உள்நாட்டுப்போரின் முடிவுக்குப் பிறகும் அவரின் பணி சுறுசுறுப்பாகத் தொடருகிறது. 1970 களின் பிற்பகுதியில் பருத்தித்துறையில் இடம்பெற்ற கமலம் கொலைவழக்கு, 1990 களின் பிற்பகுதியில் நடைபெற்ற செம்மணி கிருசாந்தி குமாரசாமி பாலியல் வல்லுறவு, கொலை வழக்கு விசாரணைகள் தொடர்பான செய்திகளை விரிவான முறையில் தில்லை அறிக்கையிட்டபோது முதலில் வீரகேசரியிலும் பின்னர் தினக்குரலிலும் நான் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அந்த வழக்கு விசாரணைகளின் தொகுப்புக்களை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாசித்தார்கள்.அந்த விசாரணைகள் பற்றிய செய்தி ஒரு நாள் பத்திரிகையில் வெளியாகத் தவறினாலும் உடனே வாசகர்களிடமிருந்து பத்திரிகை அலுவலகங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்துவிடும்.அந்தளவுக்கு சிறப்பான முறையில் தில்லை செய்திகளை தொகுத்தளித்தார். போர்க்கால கட்டத்தில் இடர்பாடுகளுக்கு மத்தியில் பணியாற்றிய பத்திரிகையாளர்களுக்கு இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் 2004 ஆம் ஆண்டில் விருது வழங்கிக் கௌரவித்த போது யாழ்ப்பாண மாவட்டத்துக்கான அந்த விருது தில்லைக்கு கிடைத்தது. அடுத்து அதே ஆண்டு ஜூலை மாதம் இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் அமைப்பும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இணைந்து கொழும்பில் நடத்துகின்ற பத்திரிகைத்துறைக்கான உயர்விருது விழாவிலும் தில்லை கௌரவிக்கப்பட்டார். அவரின் ஊடகத்துறைச் சேவையை பாராட்டி பருத்தித்துறை பிரதேச செயலகம் 2013 ஆம் ஆண்டில் ‘ கலைப்பருதி ‘ பட்டம் வழங்கியது. கல்வி அமைச்சின் விருதொன்றும் அவருக்குக் கிடைத்தது. பத்திரிகைத்துறைக்கு தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்த காலஞ்சென்ற வீரகேசரி யாழ்ப்பாணச் செய்தியாளர் செல்லத்துரை போன்று அனுபவம் மிக்கவர்களின் வரிசையில் வைத்து ஒப்பிடக்கூடிய ஒருவரான தில்லையை எந்த நேரத்தில் நேரடியாகக் கண்டாலும் அல்லது தொலைபேசியல் பேசினாலும் நலம் விசாரித்துவிட்டு அடுத்து உடனடியாக கதை பத்திரிகைத்துறை பற்றியதாக நகர்ந்துவிடும். அந்த துறைக்கு தன்னாலான பணியை தொடர்ந்தும் செய்யவேண்டும் என்ற அவரின் ஆழமான ஆர்வத்தின் வெளிப்பாடே அது. தில்லை மிகுந்த ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ்ந்து பத்திரிகைத்துறைப் பணியை செவ்வனே தொடர வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறோம். https://www.virakesari.lk/article/218728
2 months 3 weeks ago
"இந்த குழந்தைகள் இஸ்ரேலிற்கு என்ன செய்தார்கள்?, இவர்கள் செய்த தவறு என்ன"? ; இரண்டு நாட்களில் காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் 75 பேர் பலி 29 JUN, 2025 | 12:25 PM வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் காசாவில் இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 75 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாசின் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இதனை உறுதி செய்துள்ளனர். காசா நகரின் பாலஸ்தீன விளையாட்டு அரங்கிற்கு அருகில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ள ஷிபா மருத்துவமனை வட்டாரங்கள் தங்கள் மருத்துவமனைக்கு இவர்களின் உடல்கள் கொண்டுவரப்பட்டன என தெரிவித்துள்ளன. நாசெர் மருத்துவமனைக்கு 20க்கும் மேற்பட்ட உடல்கள் கொண்டு செல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் கிழக்கு பகுதியில் மதியம் இடம்பெற்ற தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஹான்யூனிசிற்கு அருகில் உள்ள முவாசியில் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த கூடாரத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் மூன்று பிள்ளைகளும் பெற்றோரும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த குழந்தைகள் இஸ்ரேலிற்கு என்ன செய்தார்கள்,? இவர்கள் செய்த தவறு என்னவென அவர்களின் பேத்தியார் சுவட் அபு டெய்மா கேள்வி எழுப்பியுள்ளார். https://www.virakesari.lk/article/218751
2 months 3 weeks ago
பிரான்சில் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளை முடித்த இலங்கை தூதுக்குழு; கடல்சார், மீன்வள ஒத்துழைப்பை மேம்படுத்த வழிவகை Published By: DIGITAL DESK 3 29 JUN, 2025 | 04:22 PM கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி. கே. கோலித்த கமல் ஜினதாச தலைமையிலான இலங்கையின் உயர்மட்ட தூதுக்குழு, பிரான்சுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. மீன்வளம் மற்றும் கடல்சார் வளர்ச்சிக்கான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இரண்டு முக்கிய சந்திப்புகள் இந்த விஜயத்தில் அடங்கும். தூதுக்குழு பிரான்சின் கடல்சார் விவகாரங்கள், மீன்வளம் மற்றும் நீரியல் வளர்ப்பு அமைச்சகம், கடல் மற்றும் பல்லுயிர்ப்பு தொடர்பான வெளிவிவகார செயலாளர் அலுவலகம் மற்றும் பாரிசில் உள்ள கடற்துறை பொதுச் செயலாளர் அலுவலகத்தின் மூத்த அதிகாரிகளை சந்தித்தது. இந்த சந்திப்புகளில், இந்தியப் பெருங்கடல் பகுதியில் சட்டவிரோத, அறிக்கையிடப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத (IUU) மீன்பிடித்தலை நிவர்த்தி செய்வதற்கான கூட்டு நடவடிக்கைகள், முக்கிய சவால்கள் மற்றும் தேவையான தணிப்பு நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. IUU மீன்பிடித்தலுக்கு எதிராக இலங்கை எடுத்துள்ள செயலூக்கமான நடவடிக்கைகளை பிரெஞ்சு அதிகாரிகள் பாராட்டினர், மேலும் எதிர்கால முயற்சிகளுக்கு இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர். AFD உடன் மீன்பிடி துறைமுக மேம்பாட்டு பேச்சுவார்த்தைகள் இதனைத் தொடர்ந்து, தூதுக்குழு, பிரெஞ்சு அரசாங்கத்திற்கு சொந்தமான அபிவிருத்தி நிதி நிறுவனமான Agence Française de Développement (AFD) இன் கேத்தரின் சிமோவை சந்தித்தது. காலி, பேருவளை, புராணவெல மற்றும் குடாவெல்லா ஆகிய நான்கு முக்கிய மீன்பிடி துறைமுகங்களின் அபிவிருத்திக்கு AFD இன் சாத்தியமான ஆதரவு குறித்து இங்கு விவாதிக்கப்பட்டது. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை வெற்றிகரமாக முடிந்தவுடன், இலங்கையின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து மீண்டும் ஈடுபடவும், நிதி விருப்பங்களை ஆராயவும் AFD தயாராக இருப்பதாக சிமோ இங்கு குறிப்பிட்டார். இதன் மூலம், இலங்கைக்கும் பிரான்சுக்கும் இடையிலான நிதி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்கால எதிர்பார்ப்புகளும் அடுத்த படிகளும் இந்த பேச்சுவார்த்தைகளில் மீண்டும் எழுந்த நம்பிக்கையான எதிர்பார்ப்புகளுடன், துறைமுக மேம்பாட்டு திட்டம் தொடர எதிர்பார்க்கப்படுகிறது. திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து கடந்துவிட்ட காலத்தைக் கருத்தில் கொண்டு, திட்டத்தின் தொடர்ச்சியான பொருத்தம் மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த, ஒரு மேம்படுத்தப்பட்ட சாத்தியக்கூறு ஆய்வு மற்றும் மறுஆய்வு தேவைப்படலாம். இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை தொடர AFD எதிர்பார்க்கிறது, மேலும் தேவையான அரசாங்க அனுமதிகள் கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க தயாராக உள்ளது. இந்த வெற்றிகரமான பணி, முக்கியமான கடல்சார் மற்றும் மீன்வளப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இலங்கைக்கும் பிரான்சுக்கும் இடையிலான வலுவான கூட்டாண்மையை வலியுறுத்துகிறது, மேலும் மேம்பட்ட ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சியுடன் கூடிய எதிர்காலத்தை உறுதியளிக்கிறது. https://www.virakesari.lk/article/218775
2 months 3 weeks ago
இந்திய மீனவர்கள் 08 பேர் கைது Published By: DIGITAL DESK 3 29 JUN, 2025 | 01:13 PM மன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 08 இந்திய மீனவர்களும் அவர்கள் பயன்படுத்திய படகுகொன்றும் கடற்படையினரால் தாழ்வுப்பாடு கடற்படை முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்டன. மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/218757
2 months 3 weeks ago
புதைத்தவனே அடையாளம் காட்டி, கொலை செய்தவர்களையும் காட்டிக்கொடுத்துள்ளான். அவர்களுக்கு தண்டனையை கொடுங்கள். இல்லையேல் யாருடையது என அன்றே நிரூபித்திருக்கலாமே, எதற்கு காலத்தை கடத்தினீர்கள்? அவர் சுத்தமானவர் என்றால் அமெரிக்காவை விட்டு ஏன் தப்பியோடிவந்தார்? அங்கேயே நின்று விசாரணையை எதிர்கொண்டு தனது நிஞாயத்தை கூறி தான் சுற்றவாளி என நிரூபித்திருக்கலாமே? ஏன் அப்படி செய்யவில்லை? அவர் மனித உரிமை ஆணையாளர், அவர் அரசியல் பேசவோ, சட்டம் பேசவோ வரவில்லை. அவரை அவர்கள் அழைக்கவுமில்லை. உங்களுக்கு ஐ நா வில் காலத்திற்கு காலம் சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு நீங்கள் உறுதி அளித்துள்ளீர்கள். அதை செயற்படுத்தாமல் ஏமாற்றி, காலத்தை கடத்தி, புனை கதை சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள். வெகு விரைவில் மக்களால் நையப் புடைக்கப்படுவீர்கள். முதலில் உள்நாட்டில் உங்களுக்கெதிராக உள்ள வழக்குகளில் இருந்து உங்களை விடுவியுங்கள்.
2 months 3 weeks ago
யாழ். மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை வழிமறித்து மக்கள் போராட்டம் 29 JUN, 2025 | 12:40 PM யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை மறித்து கல்லூண்டாய் பகுதி மக்களும் மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்களும் ஞாயிற்றுக்கிழமை (29) போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் மாநகர சபையினர் தமது எல்லைக்குள் சேகரிக்கும் மருத்துவ கழிவு, மலக்கழிவு, பிளாஸ்டிக் கழிவு, விலக்குக் கழிவு உட்பட பல கழிவுகளை மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் உள்ள பகுதிக்குள் கொட்டுவதால் அதனை நிறுத்தும்படி கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதன்போது ஞாயிற்றுக்கிழமை (29) மாநகர சபை கழிவுகளை ஏற்றிவந்த உழவியந்திரங்கள் பல வழிமறிக்கப்பட்டன. மலக் கழிவினை ஏற்றிவந்த மாநகர சபையின் வாகனம் ஒன்று உடனடியாக திரும்பிச் சென்றது. வழமையாக குறித்த பகுதிக்குள் கொட்டப்படும் கழிவுகளுக்கு தீ வைக்கப்படுகிறது. இது குறித்து பல தடவைகள் செய்திகளும் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சனிக்கிழமை (28) தீ மூட்டிய நிலையில் அந்த தீ இன்றுவரை எரிந்து கொண்டு இருப்பதுடன் வீதியில் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளுக்கும் அண்டிய சூழலில் வசிக்கும் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறித்த பகுதிக்கு நேற்றிரவு நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் வருகைதந்து பிரச்சினையை ஆராய்ந்ததாகவும், இதுவரை மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் களத்திற்கு வருகை தரவில்லை எனவும் மக்கள் கூறுகின்றனர். இன்றைய எதிர்ப்பு நடவடிக்கையின்போது யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் மயூரனுக்கும், கல்லூண்டாய் பகுதி மக்கள், மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்களான உஷாந்தன், வாசன் ஆகியோருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. களத்திற்கு வருகை தந்த யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மானிப்பாய் பொலிஸார் ஆகியோர் நிலைமைகளை சீருக்கு கொண்டுவர முயற்சித்தும் அது பயனளிக்கவில்லை. https://www.virakesari.lk/article/218753
2 months 3 weeks ago
செம்மணியில் மண் மாதிரிகளை பகுப்பாய்வு செய்வதற்கு சென்ற குழு 29 JUN, 2025 | 03:55 PM யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மண்மாதிரிப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு நட பிரத்தியேக குழுவொன்று ஞாயிற்றுக்கிழமை (29) யாழ்ப்பாணம் செம்மணிக்கு சென்றுள்ளது. மனிதப்புதைகுழி அமைந்திருக்கும் இடத்தில் மண்மாதிரிகளைப் பரிசோதனை செய்வதற்காக, சட்ட மருத்துவ அதிகாரிகளால் விண்ணப்பம் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த விண்ணப்பத்துக்கு நீதிமன்றம் முறையான அனுமதிகளை வழங்கியதைத் தொடர்ந்தே, மண் மாதிரிகளை பரிசோதனை செய்வதற்காக கொழும்பிலிருந்து குறித்த குழு வருகைதந்து பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபடுகின்றது. இதைவிட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இரசாயனவியல் பீட பேராசிரியர்களும் கார்பன் பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர். அத்துடன், செய்மதிப் படங்கள் மூலமும், ட்ரோன் மூலமும் மேற்கொண்ட ஆய்விலும் தற்போது அகழ்வுப் பணிகள் இடம்பெறும் பகுதிக்கு அருகாகவும் புதைகுழிகள் இருக்கலாம் என்று அகழ்வுப் பணிகளை முன்னெடுத்துவரும் பேராசிரியர் ராஜ் சோமதேவ சந்தேகம் வெளியிட்டிருந்தார். இந்த விடயமும் நீதிமன்றத்துக்கு அறிக்கை யிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்தப் பகுதியில் நீதிமன்ற உத்தர வுக்கு அமைய துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், அகழ்வுப் பணிகள் விரிவாக வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகின்றது. https://www.virakesari.lk/article/218771
2 months 3 weeks ago
இது சரியான நிஞாயம்! இதை செய்யாமல் நாடு இம்மியளவும் முன்னேறாது. காலத்திற்கு காலம் இவற்றை சொல்லி ஏமாற்றியே தலைமைகள் மாறிக்கொண்டிருக்கும்.
2 months 3 weeks ago
இதைத்தானே சி. வி .விக்கினேஸ்வரனும் ஏற்கெனவே வலியுறுத்தியிருந்தார். அப்போ, சாணக்கியன் உட்பட பலர் விமர்சித்திருந்தனரே?
Checked
Fri, 09/26/2025 - 09:12
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed