புதிய பதிவுகள்2

யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!

4 weeks 1 day ago
விசேடமான விடயம் எது என நினைவில் இல்லை. சாரை சாரையாக போராளிகள் அங்கும் இங்குமாக நிகழ்ச்சிக்கு வந்து சென்றார்கள். உலக தமிழினத்தின் ஒளிவிளக்கு எனும் பாடல் ஒலித்தது இப்போதும் காதுகளில் கேட்கின்றது. அன்றைய பொழுதுகளில் சைக்கிள் திருட்டு அதிகம். நிகழ்ச்சிக்கு வந்த பலரின் சைக்கிள்கள் களவாடப்பட்டது. பெல் மூடிகளும் திருடப்பட்டன. பெல் மூடிகளை மாலையாக அணிவித்து பிடிபட்ட ஓரிருவரை இயக்கம் மணிக்கூட்டு கோபுர சந்தியில் காண்பித்தது நினைவில் உள்ளது. இராணுவம் நிகழ்ச்சிகளை அப்போது குழப்பவில்லை. அது மண்டைதீவில் நிலைகொண்டு காணப்பட்டது. உலக தமிழினத்தின் ஒளிவிளக்கு பாடலை தேடல் செய்து பார்த்தேன். கீழ்கண்ட இணைப்பில் உள்ளது. https://tamileelamsongs.com/parani-paaduvom/

யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!

4 weeks 1 day ago
The Siege of Jaffna Fort by the LTTE in 1990 | Thuppahi's Blog அந்த நேரம் பலாலியில் நின்ற ஒரு சத்திர சிகிச்சை நிபுணரின் வாக்குமூலம். கொடுத்த விலை அதிகம் ஆனால் அரசு தாக்கு பிடிக்க முடியாமல்தான் பின்வாங்கியது. இது புலிகளின் வெற்றியே. ஒரு சியாமாசெட்டியும் பண்ணைக்குள் வீழ்த்தப்பட்டது.

ஈரானை நோக்கி அமெரிக்கக் கடற்படை சென்று கொண்டிருப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு!

4 weeks 1 day ago
இது ஒரு வெறும் உளவியல் யுத்தமாகவே கருதுகிறேன் நடைமுறையில் இதன் பயன்பாடு அதன் பெறுபேறும் மிக மிக மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும். இந்த காணொளியில் கூறப்படுவது போல மிகைப்படுத்தப்பட்ட விளைவுகளை எந்த ஒரு ஆயுதத்தினாலும் தேர்ந்தெடுத்த இலக்குகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஏற்படுத்த முடியாது. வெனிசுலா அதிபர் இதனால் பாதிக்கப்படவில்லை எனவே மிக குறுகிய அளவான தனித்தனியான இலக்குககள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும் அவ்வாறிருக்கையில் ஒட்டுமொத்த தற்காப்பு பொறிமுறைக்கெதிராக பரந்தளவிலான வகையில் இது பாவிக்கப்பட்டது போல கருத்துருவாக்கத்தினை இக்காணொளி ஏற்படுத்துகிறது அது தவறாக இருக்க வாய்ப்பு அதிகம். இந்த ஆயுதம் பரவலாக பாவிக்கப்பட்டதற்கான பாதிப்புக்களை மக்கள் உணர்ந்த மாதிரி எந்த செய்திகளும் வரவில்லை. விமான எதிர்ப்பு பாவிக்கப்படாமல் இருக்கப்படுவதற்காக அமெரிக்க தரப்பு கூறிய விடயம் இலத்திரனியல் போரியல் நடவடிக்கையினை மேற்கொண்டதாக ஆரம்பத்திலேயே கூறியிருந்தது, அதுதவிரவும் வேறு வதந்திகளும் அது தொடர்பில் உள்ளது.

கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் 3 ஆசிரியைகள் உல்லாசம்: வீடியோவால் சர்ச்சை

4 weeks 1 day ago
எனக்கு இப்படியான பொறுக்கி நண்பர்கள் இல்லை என்பதால் வீடியோ ஒன்றும் வரவில்லை! மேலும் பிரித்தானியா age verification ஐ கட்டாயம் என ஆக்கியுள்ளதால் சில பிரபலமான/பிரபலமற்ற பலான தளங்கள் எல்லாம் பார்க்கமுடியாது!🙁 👆🏿

சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.

4 weeks 1 day ago
இவர் தான் தூய தமிழன் யார் யார் மற்றவர்கள் வெறுக்கபட வேண்டியவர்கள் என்று தமிழர்களுக்கு விளக்கம் கொடுத்து கொண்டு திரிகின்றார்.

கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் 3 ஆசிரியைகள் உல்லாசம்: வீடியோவால் சர்ச்சை

4 weeks 1 day ago
கிருபன் பொய்ச் செய்திகளை இணைக்காதீர்கள். அப்படி இணைப்பதானால் காணொளிகளுடன் இணையுங்கள்.

யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!

4 weeks 1 day ago
ஏன், விபுலானந்தன் போல ஒரு மாணவன் இறந்து கிடப்பதாகவும் சீன் காட்டலாம். ஆனால், உல்லாசப் பயணிகளாக வருவோர் உங்களை விட வரலாற்றுக்கு மரியாதை கொடுப்போராக இருப்பர் என நினைக்கிறேன்😎. அதனால் தகவல் பலகைகளே போதும் அவர்களுக்கு!

யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!

4 weeks 1 day ago
திலீபன் நினைவு நாளில் தாக்குதல் நடத்தப்பட்டதாக நினைவுள்ளது, ஆனால் வெளியேறுவதற்கு வசதியாக வழியினை உருவாக்கியிருந்ததனால் சண்டை ஆரம்பித்தது அதனூடாக பின்வாங்கி சென்றிருந்தனர். முத்தமிழ் விழா புலிகளால் நடத்தப்பட்டது அதன் தொடர்ச்சியாக என்பதாகவே நினைவுள்ளது, அதில் ஒரு விசேடமான விடயம் உள்ளடங்கியிருந்ததாக கூறப்படுகிறது, நீங்கள் அதில் கலந்து கொண்டமையால் உங்களுக்கு அது நினைவுள்ளதா?

யாழ்ப்பாணத்தில் பொங்கிய அனுர: தேசிய மக்கள் சக்தியின் வியூகம் என்ன? - நிலாந்தன்

4 weeks 1 day ago
நீங்கள் கூறுவது போல தமிழ்த்தேசியத்திற்கு ஒரு நீண்ட வரலாற்று ரீதியான வரலாறு உள்ளது, தற்போதய நிலையில் தமிழ் தேசியம் சாதகமற்ற நிலையில் உள்ளது ஆனால் அதன் மீழெழுச்சியினை தடுக்க முடியாது, ஏனெனில் அதன் வரலாறு அவ்வாறானது. ரே டாலியோவின் மாறும் உலக ஒழுங்கினை கையாழ்வது எவ்வாறு எனும் புத்தகத்தின் குறிப்புகளடங்கிய காணொளிகளை முன்னரும் யாழ்களத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அந்த புத்தகத்தில் குறிப்பிட்ட சாம்ராஜ்ஜியங்களிற்குள்ள பொதுவான குணநலனை கொண்டதாக தமிழ்த்தேசியமும் உள்ளது, அதனால் தமிழ்த்தேசியம் மீழெழுச்சி பெறும் என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு ஆனால் நிகழ்கால சூழல் நிலை சாதகமற்றதாக உள்ளதாக கருதுகிறேன். இது அந்த புத்தகத்தின் சுருக்கிய வடிவம்.

யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!

4 weeks 1 day ago
இராணுவம் வெளியேறியதும் சிறிது காலத்தில் கோட்டை உடைப்பு தொடங்கிவிட்டது. அப்போதைய காலத்தில் இயக்கத்தை விட்டு வெளியேற விரும்பியவர்களுக்கு கோட்டை இடிப்பு தண்டனையாக கொடுக்கப்பட்டது. பொதுவாக தண்டனைக்காலம் மூன்று மாதங்கள் கோட்டை இடிப்பு என கேள்விப்பட்டுள்ளேன். கோட்டையில் இடிக்கப்பட்ட கற்களை இயக்கம் பின்னர் பல்வேறு தேவைகளிற்கு பயன்படுத்தியதாக நினைவு. கோட்டைக்குள் எதிர்காலத்தில் மீண்டும் இராணுவம் வரக்கூடாது என்பது அடிப்படை காரணம் என்பதில் சந்தேகம் இல்லை. கோட்டை இராணுவ முகாமை தகர்ப்பதற்கு விடுதலை புலிகள் அமைப்பு கொடுத்த விலை, உயிர்த்தியாகங்கள் அதிகம். அனைத்து கோட்டை தாக்குதல்களும் தோல்வியிலேயே நிறைவடைந்தன. கோட்டை முற்றுகை இராணுவம் தாமாக வெளியேறியதுடன் நிறைவுக்கு வந்தது. 1995ம் ஆண்டு இறுதிகளில் இலங்கை படைகள் யாழ்ப்பாணத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்வரை கோட்டை இடிப்பு தொடர்ந்தது. இடிப்பு இதனால் முழுமை பெறவில்லை. கோட்டை இராணுவ வெளியேற்றத்தின் பின் முத்தமிழ் விழா சிறப்பாக நடைபெற்றதும், அதைப்பார்க்க சென்று வந்ததும் நினைவில் உள்ளன. கோட்டையில் உயரமாக சென்றி பொயிண்ட் அமைத்து அதில் சினைப்பர்கள்/குறி பார்த்து சுடும் இராணுவத்தினர் துவக்கை யாழ் மத்திய கல்லூரி நோக்கி நீட்டுவதாக காண்பிக்கலாம். சுற்றுலா பயணிகளிக்கு வரலாறு தெரியவேண்டும் அல்லவா.

அமெரிக்காவுடன் 20 அம்ச அமைதித் திட்டத்தில் உக்ரைன் கையெழுத்திடும், ஐரோப்பிய ஒன்றியம் கையெழுத்திடவில்லை - உக்ரைன் வெளியுறவு அமைச்சர்.

4 weeks 1 day ago
அமெரிக்க புதிய ஆண்டிற்கான பாதுகாப்பு கொள்கையில் ஐரோப்பாவினது பாதுகாப்பானது ஐரோப்பாவின் சொந்தமானது எனும் வகையில் கூறப்பட்டுள்ளது, உக்கிரேனுக்கான பாதுகாப்பு உறுதி மொழியினை அமெரிக்கா வழங்குமா?
Checked
Fri, 02/27/2026 - 13:59
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed