3 months 2 weeks ago
108 ஜோடிகளுக்கு திருமணம் adminAugust 28, 2025 யாழ்ப்பாணத்தில் திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலைமை காரணமாக திருமணம் செய்ய முடியாத நிலையில் இருந்த 108 ஜோடிகளுக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரை வதிவிடமாக கொண்ட துரை தம்பதியினரின் , நிதியுதவியில் , 108 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. தாலி , கூறை சேலை மற்றும் திருமணத்திற்கான இதர செலவுகளுக்கும் பணம் வழங்கப்பட்டு , 108 தம்பதிகளுக்கும் செல்வ சந்நிதி ஆலயத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை திருமணம் செய்து வைக்கப்பட்டது இந்த 108 தம்பதியினரும் , யாழ்ப்பாணத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்கள் ஊடாகவே தெரிவு செய்யப்பட்டனர். https://globaltamilnews.net/2025/219730/ https://www.facebook.com/share/v/1AS7LQ8zPH/?mibextid=wwXIfr
3 months 2 weeks ago
இனிய பாரதியின் சகாவின் வாக்குமூலம்- 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுப்பு! adminAugust 28, 2025 கருணா -பிள்ளையான் குழு முக்கியஸ்தர் இனிய பாரதியின் மற்றொரு சகாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று வியாழக்கிழமை (28.08.25) அன்று மாலை அம்பாறை மாவட்டம் திருக்கோவில் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் மீண்டும் 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் திருமதி தெசீபா ரஜீபன் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் அடையாளம் காணப்பட்ட பல இடங்கள் தோண்டப்பட்டு வருகின்றன. கடந்த 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து கருணா- பிள்ளையான் அணியின் முக்கியஸ்தரான இனிய பாரதியின் முக்கிய சகாவாக செயற்பட்ட அம்பாறை மாவட்ட காரைதீவு பகுதியை சேர்ந்த சந்தேக நபர் குறித்த பகுதிக்கு கைவிலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். அவர் கடந்த காலங்களில் திருக்கோவில் பகுதியில் தனியார் தொலைத்தொடர்பு சிம் விற்பனை முகவராக செயற்பட்ட அருளானந்தன் சீலன் என்பவரை கடத்தி படுகொலை செய்து குறித்த இடத்தில் புதைத்திருப்பதாக அரசு சாட்சியாக மாறி குற்றப்புலனாய்வு பிரிவினரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார். இதன் போது குறித்த பிரதேசத்தை சுற்றி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது டன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி உட்பட பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் காவற்துறையினர் விசேட அதிரடிப்படையினர் தடயவியல் காவற்துறையினர் என பலரும் பிரசன்னமாகியிருந்தனர். கடந்த 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து கருணா-பிள்ளையான் அணியின் முக்கியஸ்தரான இனிய பாரதியின் முக்கிய சகாவாக செயற்பட்ட அனோசியஸ் சுரேஷ் கண்ணா எனப்படும் யூட் எனும் சந்தேக நபர் ஏற்கனவே கடந்த மாதம் ஜூ (31.07.25) அன்று குறித்த பொது மயானத்திற்கு கைவிலங்கிடப்பட்டு அழைத்து செல்லப்பட்டு இருந்தார். எனினும் குறித்த நபர் வாக்கு மூலத்திற்கமைய திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட பொது மயானத்தில் தேடுதல் மற்றும் தோண்டப்பட்ட பின்னர் எதுவும் கிடைக்காத காரணத்தினால் குறித்த செயற்பாடுகள் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டன.பின்னர் மற்றுமொருவரின் வாக்கு மூலத்திற்கமைய இன்று மற்றொரு இடமான தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் மீண்டும் 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. https://globaltamilnews.net/2025/219717/
3 months 2 weeks ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
3 months 2 weeks ago
சம்பந்தன், சிங்களத்துக்கு சேவை செய்து… எதிர்கட்சி தலைவராகவும் இருந்து சாகும் மட்டும்... அரச வீட்டில் இருந்து செத்துப் போனார். ஆனால் சுத்துமாத்து சுமந்திரனை…. பாராளுமன்றத்துக்குள் நுளைய விடாமல், சாணி அடி கொடுத்து வீட்டில் குந்த வைத்துள்ளார்கள். சம்பந்தனுக்கு உள்ள கெட்டித்தனம் இதுக்கு இல்லை. 😂 🤣 அந்தளவுக்கு இனி சுத்துமாத்து சுமந்திரனை நிமிர விடாமல் விழுந்த மரண அடிதான், இவர் அண்மையில் தான் தோன்றித்தனமாக அறிவித்த ஹர்த்தாலிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அது புரியாமல்… தான் ஒரு ஆள் என்று வாக்குப் பிச்சை எடுக்க, மக்கள் முன் பல்லைக் காட்டிக் கொண்டு திரியுது. 🤣 சுமந்திரன்.... இப்போ ஒர் அரசியல் அனாதை. தமிழ்ப் பகுதிகளில்... இவரின் சுத்துமாத்து இனி எடுபடாது. வேணுமென்றால்... கொழும்பு, அம்பாந்தோட்டை போன்ற சிங்களவர்கள் இவருக்கு வாக்கு போடலாம். அங்கு முயற்சி செய்வது நல்லது. 🤣
3 months 2 weeks ago
எரிவுக்கு… மிளகாய்த்தூள், ஆனையிறவு உப்பு ஓகே…. ✅ அது என்ன ஆமணக்கு எண்ணையின் விசேசம்? புதுசா இருக்கு. நான் இதுவரை கேள்விப்படவில்லை. 😂
3 months 2 weeks ago
இந்த கறுப்பு வெள்ளை இரு துருவ தீவிர சிந்தனையாளர்களை குறிவைத்து மிகைப்படுத்தப்பட்ட விளம்பர உத்தியினை வியாபாரத்தில் கைகொள்வார்கள். அதே போல் அரசியலில் Scare campaign எனும் உத்தியினை பயன்படுத்துவார்கள். எந்த விடயமும் நல்ல மாற்றத்திற்கானதாக இருக்கவேண்டும், சிலநேரங்களில் பெட்டி வெளியே நின்று சிந்திக்கும் போது ஒரு தெளிவு உருவாகும், குதிரை போல நேரே ஒரே இலக்கில் செல்வது சில வேளைகளில் பலன் தரும் ஆனால் அதனை நாம் தான் தீர்மானிக்கவேண்டும், மற்றவர்களல்ல.
3 months 2 weeks ago
வட கொரிய அதிபர் கிம்மின் அதிரடி செயல்களைப் பார்த்து, பம்மிக் கொண்டு இருக்கும் மேற்கு உலகம்…. சீனா நடத்தும் 26 நாட்டு உலகப் பெருந்தலைவர்களின் இராணுவ அணிவகுப்பை பார்த்து தமது சாணக்கியம் எங்கே சறுக்கியது என திரும்பி பார்ப்பார்கள். 😂
3 months 2 weeks ago
இந்த காட்டுமிராண்டி காலத்து முஸ்லீம் திருமண சட்டத்தை உடனடியாக திருத்தி, இலங்கையில் உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டத்தை கொண்டு வரவேண்டும். பல பெண்களை முஸ்லீம்கள் திருமணம் செய்து….. “வத வத” பிள்ளைகளைப் பெற்று இலங்கையின் சனத்தொகையையே மாற்றி அமைத்துக் கொண்டு இருக்கும் இவர்களின் கேவலமான செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
3 months 2 weeks ago
மேற்குலகின் வயித்தை கலக்குவதற்கான சந்தர்ப்பங்கள் நிறையவே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.😎
3 months 2 weeks ago
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நந்தன் ( @நந்தன் )!
3 months 2 weeks ago
இந்த உலகில் ஒரு விசித்திர அரசியல்வாதி என்றால் அது நடிகர் விஜய் தான்.நான் சில நேரம் இவரை ஒன்லைன் அரசியல்வாதி என நினைப்பதுண்டு. சினிமா கவர்ச்சியை மட்டும் மூலதனமாக வைத்து முதலமைச்சராக நினைக்கின்றார். இவர் மட்டுமல்ல அவர் சகாக்களும்.அவர் சகாக்களுக்கு தமிழே ஒழுங்காக வராது.இந்த நிலையில் அவர் சகாக்களுக்கு நடிகர் விஜய் அவர்களை முதல்வராக்கும் கனவு வேறு. பொது ஊடகங்கள் இல்லை என்றால் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பாரா என்பது சந்தேகம் தான்.😎
3 months 2 weeks ago
இனவாத சிங்களத்திற்கு சேவகம் செய்ய வந்தவர்களுக்கு தமிழின ரோசம் ஏது?மானம் ஏது? சம்பந்தன் எப்படியோ அவரின் கண்டுபிடிப்பு சுமந்திரனும் அப்படியே.
3 months 2 weeks ago
கலப்படம் இல்லாத சிறிதளவு மிளகாய்த்தூள்,கொஞ்ச ஆனையிறவு உப்பு,ஆமணக்கு எண்ணை கலந்து பச்சை மட்டை அடித்த இடங்களில் தடவ வேண்டும். ஏழேழு ஜென்மத்திற்கும் எந்த தவறும் செய்ய மாட்டார்கள்.
3 months 2 weeks ago
வெளியே சொல்லப்படாத,ஆதாரங்கள் இல்லாத உண்மை என்றால் நீங்கள் எழுதியதுதான். ஆனால் வெளியே ஆதாரத்தோடு சொல்லப்பட்ட காரணம் வேறு. சதாம் ஹுசைனும்,கடாபியும் ஈரோ நாணயத்தை கையில் எடுத்ததுதான் பெரியண்ணருக்கு எரிச்சலை ஊட்டியது. பெரியண்ணர் நேட்டோ எனும் போர்வையில் லிபியா மீது போர் தொடுத்து தன் எரிச்சலை தீர்த்து விட்டார்.அந்த நேரம் புட்டின் ஆட்சியில் இருந்திருந்தால் கடாபிக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது எனவும் பேசிக்கொள்ளப்பட்டது.
3 months 2 weeks ago
Note: Plz click on the image for better quality Number Class Name IBM/OBM (No. of Engines) Image Craft Names (discovered so far) Total built Note Manually Powered Paddle Boards - Under construction 1 Most likely not named, as they have not moved out of the construction yard - '6 different types of boards can be seen' Not much is known about this board as it's unfinished Most likely not named, as they have not moved out of the construction yard 8
3 months 2 weeks ago
சாலை விதிகளை பொருட்படுத்தாமல் ஓடினால் அல்லது தெரியாமல் ஓடினால் லொறியும் கவிழும். ஹொரவப்பொத்தானையில் லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிர் இழந்தனர் https://www.virakesari.lk/article/223640
3 months 2 weeks ago
🤣 ஹிற்லர் 33% ஜேர்மனியினரின் வாக்குகளைப் பெற்று, கம்யூனிஸ்ட்களை மட்டும் அழிக்கிறேன் என்று ஆரம்பித்து, பின்னர் யூதர், கத்தோலிக்கர், ஓர் பாலினத்தவர், உடல் ஊனமுற்றோர் என்று 10 மில்லியன் பேரைக் கொன்றொழித்தது, primary தகவலா அல்லது இன்னொருவர் எழுதி வைத்து விட்டுப் போன இரண்டாம் நிலைத் தகவலா? இது போன்ற பதிவான சம்பவங்களையே "இரு பக்கம் இருக்கிறது, பல பக்கங்கள் இருக்கின்றன" என்று சமாளிப்பது ஒன்றும் தெரியாமல் இருக்கும் ஆட்கள் செய்யும் வேலையை விட ஆபத்தான சகஜமயப்படுத்தல் எனக் கருதுகிறேன். ஓடாமல் நின்ற கடிகாரத்தை விட, தொடர்ந்து பிழையாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு கடிகாரத்தின் விளைவு நேர/கால நாசம் என்பார்களே? அது போன்ற நிலை உங்கள் இந்த அரை வேக்காட்டு மதிமேல் பூனை நிலை!
3 months 2 weeks ago
முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்த வேண்டும் - பலதார மணத்தை ஒழிக்க வேண்டும் Thursday, August 28, 2025 கட்டுரை முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் உட்பட நாட்டின் தனியார் சட்டங்களில் சர்வதேச தரத்திற்கு ஏற்றவாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் கடந்த திங்கட் கிழமை வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் எல்.ரி.பி. தெஹிதெனிய இவ்வாறு தெரிவித்துள்ளார். முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் உள்ள பாகுபாடு காட்டும் மற்றும் சர்வதேச தரங்களுக்கு முரணான விதிகளில் உடனடியாக திருத்தம் தேவை என வலியுறுத்தியுள்ள ஆணைக்குழு, நாட்டின் தேசிய சட்டங்கள் சர்வதேச மனித உரிமைகள் தரங்களுடன் ஒத்துப்போவதை உறுதி செய்யும் கடமை தமக்கு உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளை மேற்கோள்காட்டியுள்ள ஆணைக்குழு, நாட்டில் பெண்களின் சுகாதாரம் மற்றும் கல்வியில் முன்னேற்றம் இருந்தாலும், பாகுபாடு மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை பிரச்சினைகள் இன்னும் நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளது. கண்டியச் சட்டம், முஸ்லிம் திருமணச் சட்டம் மற்றும் யாழ்ப்பாண திருமண உரிமைகள் மற்றும் மரபுரிமைச் சட்டம் போன்ற தனியார் சட்டங்களில் சீர்திருத்தம் தேவைப்படும் பல விதிகள் உள்ளதாக ஆணைக்குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் காணப்படும் பல்வேறு பாகுபாடு காட்டும் விதிகளை ஆணைக்குழு அடையாளம் கண்டுள்ளது. அவையாவன: 1. இந்தச் சட்டத்தின் கீழ் முஸ்லிம் ஆண்கள் மட்டுமே பதிவாளர்களாகவும், காதிகளாகவும் (நீதிபதிகள்) நியமிக்கப்பட முடியும். 2. ஆண்களுக்கும், பெண்களுக்கும் விவாகரத்துக்கான நிபந்தனைகள் வேறுபடுகின்றன. ஒரு கணவர் காரணம் கூறாமல் ‘தலாக்’ விவாகரத்து செய்ய முடியும். ஆனால் ஒரு மனைவி ‘பஸ்ஹ{‘ விவாகரத்து கோரும்போது, திருமண முறிவுக்கான காரணத்தை நிரூபிப்பதுடன், இரு சாட்சிகளால் அதனை உறுதிப்படுத்தவும் வேண்டும். கணவர் தனது மனைவியால் தொடங்கப்பட்ட விவாகரத்தை மேல்முறையீடு செய்ய முடியும், ஆனால் மனைவிக்கு அந்த உரிமை இல்லை. 3. திருமண சம்மதம்: திருமணத்தின் போது மணமகளின் கையொப்பம் சம்மதத்திற்கான சான்றாகக் கோரப்படுவதில்லை. ஆனால் ஒரு ஆண் பாதுகாவலரின் (வாலி) கையொப்பம் கட்டாயமாகும். 4. முஸ்லிம் சட்டத்தில் பலதார மணம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது பெண்களின் உரிமையையும், ஊநுனுயுறு உடன்படிக்கையையும் மீறுவதாக ஆணைக்குழு கருதுகிறது. பலதார மணங்களில் உள்ள பெண்கள் பெரும்பாலும் உளவியல் ரீதியான அழுத்தம், கைவிடுதல் மற்றும் வன்முறையை எதிர்கொள்கிறார்கள். 5. முஸ்லிம் திருமணச் சட்டத்தில் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது குறிப்பிடப்படவில்லை. ஒரு காதியின் அனுமதியுடன் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணின் திருமணத்தைப் பதிவு செய்ய இந்தச் சட்டம் அனுமதிக்கிறது. பெண் குழந்தைகளின் திருமணம் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவதால் இது உடனடியாக சீர்திருத்தப்பட வேண்டும் என ஆணைக்குழு வலியுறுத்துகிறது. 6. காதி நீதிமன்ற அமைப்பானது பல குறைபாடுகளை கொண்டுள்ளது. பெண்களுக்கு இந்த அமைப்பின் மீது நம்பிக்கை இல்லை. காதி நீதிபதிகள் நியமனத்திற்கு முறையான தகுதிகள் அல்லது பயிற்சி வரையறுக்கப்படவில்லை. இந்த அறிக்கையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முக்கிய பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது. 1. அரசியலமைப்பின் 12(1) மற்றும் 12(2) பிரிவுகளுடன் முரண்படும் அனைத்து முஸ்லிம் திருமணச் சட்ட விதிகளையும் திருத்த வேண்டும். 2. அனைவருக்கும் குறைந்தபட்ச திருமண வயதை 18 ஆக நிர்ணயிக்க வேண்டும். 3. காதி அமைப்பின் நேர்மறையான அம்சங்களைத் தக்கவைத்துக்கொண்டு, பாகுபாடு அற்ற, புதிய குடும்பச் சட்ட நீதிமன்ற அமைப்பை அறிமுகப்படுத்த வேண்டும். 4. பெண் காதிகளை நியமிக்க அனுமதிக்கும் வகையில் சட்டத்தைத் திருத்த வேண்டும். 5. பலதார மணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தச் சீர்திருத்தம் தொடர்பான கலந்தாலோசனைகள் முஸ்லிம் பெண்கள் உட்பட பரந்த சமூகத்தின் பங்களிப்புடன் விரைவாகவும், உள்ளடக்கியதாகவும் நடத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.- Vidivelli வைச்சாண்டா ..பெரிய ஆப்பு...இனி சனத்தொகை குறையுமோ..
3 months 2 weeks ago
தமிழரசுக் கட்சி அனுப்பிய கடிதம்! ------- --- ---------- *சமகால அரசியல் புத்துணர்ச்சி *செம்மணியை உள்ளடக்கிய இன அழிப்பு விசாரணைக்கு முக்கியத்துவம்... *சர்வதேச நீதிமன்றத்தை நோக்கி... *"on" - "newly" என்பதற்கும் இடையில் "a" வேண்டும் என்றே தவிர்க்கப்பட்டதா? --- --- --- ----- ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில், ஆணையாளருக்கு தமிழரசுக் கட்சி நான்கு விடயங்களை பிரதானப்படுத்தி கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறது. இக் கடிதத்தின் ஆங்கில பிரதி ஒன்றை கிழக்கு மாகாணத்தில் உள்ள கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் எனக்கு அனுப்பியிருந்தார். ஆச்சரியம் என்னவென்றால்... ”இன அழிப்பு” என்ற விடயத்தை மற்றும் சில அரசியல் காரணிகளின் அடிப்படையிலும், கட்சிக்குள்ளேயே முரண்பட்டுக் கொண்டிருந்த ஒரு பின்னணியில், இக் கடிதத்தின் உள்ளடகத்தை நோக்கினால், ஏதோ ஒரு புள்ளியில் ஈழத்தமிழர்கள் சார்ந்து இவர்கள் ஒன்றிணைந்திருக்கின்றனர் என்பது புரிகிறது. என்னைப் போன்ற பத்திரிகையாளர்கள் சிலரின் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களும் இவர்களை மாற்றியிருக்கலாம். இன அழிப்பு என்பது ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த தொடர்ந்தும் நடந்து கொண்டிருக்கிற பேரவலம். இதை, உட்கட்சிப் பூசலுக்கும் கட்சிகளுக்கிடையிலான மோதல்களுக்கும் உட்படுத்தி அரசியல் ஆக்க வேண்டாம் என்று எழுதி வந்துள்ளோம். இது எங்கோ சுவறியுள்ளது போல் தெரிகிறது. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை மையப்படுத்திய தமிழ்த் தேசிய பேரவை ஆணையாளருக்கு அனுப்பிய கடிதம் தொடர்பான ஆக்கபூர்வமான விமர்சனங்களும், தமிழரசுக் கட்சியின் அரசியல் போக்கில் மாற்றத்தைத் தூண்டியிருக்கலாம். “வரவேற்க வேண்டியது“ - “குறை கூற வேண்டியது” என்ற இரண்டு விடயங்கள் கடிதத்தில் உண்டு. முதலில் வரவேற்பது என்றால்--- A) ”இன அழிப்பு” என்பதை போர்க் குற்றங்கள் - மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்ற இரு வகைக் குற்றங்களில் இருந்தும் வேறுபடுத்திக் காண்பித்துள்ளமை என்பது, தமிழரசுக் கட்சியின் சமகால அரசியல் புத்துணர்ச்சி. B) ஒஸ்லாப் எனப்படும் (OHCHR Sri Lanka Accountability Project - OSLAP) விசாரணைப் பொறிமுறையை விரைவாக முடிவுறுத்த வேண்டும் என்பதுடன், அதற்கு முன்னதாக இனப் படுகொலை மற்றும் இனப் படுகொலை நோக்கத்தைச் சுட்டிக்காட்டும் ஆதாரங்கள் சேகரிப்பதை விரைந்து செய்ய செய்வது பற்றி ஆராயத் தலைப்பட வேண்டும் என கேட்டிருப்பது... குறைபாடுகள் - மன்னிக்க முடியாத விடயங்கள் என்பது---- 1) (International, Impartial and Independent Mechanism - IIIM) என்ற விசாரணைப் பொறிமுறை கோரவில்லை. 2) ரோம் சாசனத்தில் இலங்கை கைச்சாத்திட்டால் போதும் என்ற மன நிலை... 3) புதிய யாப்பு தொடர்பான மயக்கமான விளக்கம் இம் மூன்றும் தமிழரசுக் கட்சியின் பழைய போக்கையும் ஞாபகப்படுத்தியுள்ளது என்ற முடிவுக்கும் வரலாம்.. எவ்வாறாயினும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை மையப்படுத்திய தமிழ்த் தேசிய பேரவை அனுப்பிய கடிதத்துக்கும், தமிழரசுக் கட்சி அனுப்பிய கடிதத்துக்கும் “இன அழிப்பு” என்ற விடயத்தில் கணிசமான வேறுபாடு உண்டு. அதாவது, இன அழிப்புக்கான அரச பொறுப்பு சர்வதேச நீதிமன்றில் (International Court of Justice - ICJ) விசாரிக்கப்பட வேண்டும் என்பதை மியான்மார் அரசுக்கு செய்ததைப் போன்று ”தீவிரமாக பரிசீலித்தல்” என்பதை கடித்தின் முதலாவது கோரிக்கையாக தமிழரசுக் கட்சி வலியுறுத்தியுள்ளது. இக் கோரிக்கையை 2021 ஆம் ஆண்டில் இந்த இரண்டு கட்சிகளும் அனுப்பிய கடிதத்தில் வலியுறுத்தவில்லை. ஆனால், இம் முறை தமிழரசுக் கட்சி இதை வலியுறுத்தியுள்ளது. தமிழ்த் தேசியப் போரவை முதலாவது கோரிக்கையின் இறுதி வரியில், பட்டும் படாமலும் சொல்லிச் சென்றிருக்கிறது. குறிப்பாக செம்மணியை மையப்படுத்தி தமிழரசுக் கட்சி மாத்திரமே, இன அழிப்புக்கான நோக்கம் என்ற சொற் பிரயோகத்தை பயன்படுத்தி அதற்கான ஆதாரங்களை ஒஸ்லாப் பொறிமுறை திரட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. ஆனால், தமிழ்த் தேசிய பேரவையோ, ஒஸ்லாப் எல்லாம் போதும், தனி நபர் குற்றவியல் விசாரணையை பாதுகாப்புச் சபை ஊடாக ஐசிசிக்கு பாரப்படுத்தினால் போதும் என்று மிகவும் பலவீனமாக கடிதத்தில் கையாண்டுள்ளது. புதிய அரசியல் யாப்பு தொடர்பாகவும் தமிழ்த் தரப்புடன் பேசிய விடயங்கள் என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ள நான்காவது கோரிக்கை மயக்கமாகவுள்ளது. அதாவது, தமிழ்த் தரப்புடன் ஏற்கனவே பேசப்பட்ட விடயங்களா? அல்லது இனிமேல்தான் தமிழ்த்தரப்புடன் பேசி முடிவெடுக்கவுள்ள விடயங்களா? என்பது குழப்பமாகவுள்ளது. அதன் ஆங்கில மூலப் பிரதி----- Continue to persuade Sri Lanka to enact a new federal constitution with extensive power sharing in the North-East on newly negotiated agreement with the Tamil People as a measure of non – recurrence. As an immediate step urge the Sri Lankan state to hold the provincial council elections without any further delay. இதற்கு தமிழரசுக் கட்சியின் செய்திகளை பிரத்தியேகமாகவும், உடனுக்குடனும் வழங்கும் ”மாலை முரசு என்ற மின் இதழில் நேற்று புதன்கிழமை வெளிவந்த தமிழாக்கம் பின்வருமாறு உள்ளது--- “மீண்டும் நிகழாமல் இருப்பதற்கான ஒரு நடவடிக்கையாக தமிழ் கட்சிகளுடன் புதிதாக பேச்சு நடத்தி இணக்கம் கண்டு வடக்கு கிழக்கில் விரிவான அதிகாரப்பரவலாக்கலுடன் கூடிய புதிய சமஷ்டி அரசியல் யாப்பை உருவாக்க இலங்கைக்கு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்” ”உடனடி நடவடிக்கையாக மாகாண சபைத் தேர்தல்களை மேலும் தாமதமின்றி நடத்த இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும்” இங்கே பிரச்சினை என்னவென்றால்---- தமிழில் இனிமேல்தான் புதிதாக உடன்படிக்கை செய்ய வேண்டும் என தெளிவாக சொல்லப்படுகின்றது. ஆனால், ஆங்கிலத்தில் ”Power sharing in the North-East on newly negotiated agreement” என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த ஆங்கிலத்தில் "on" - "newly" என்பதற்கும் இடையில் "a" வேண்டும் என்றே தவிர்க்கப்பட்டுள்ளதா என்ற வினர எழுகிறது... கடிதத்தின் முகவுரையில்----- *ஈழத்தமிழர்களின் அரசியல் விவகாரங்களை குறிப்பாக ஐரோப்பிய இனவத்தவர்களின் ஆட்சிக்காலத்துக்கு முன்னர் இலங்கைத்தீவில் மூன்று இராஜ்ஜியங்கள் இருந்ததன. *தமிழர்களுக்கு தனி இராஜ்ஜியம் இருந்தது என்பதை மையப்படுத்தி தொலைந்துபோன இறைமையை (Sovereignty) தான் தமிழர்கள் மீள் உருவாக்கம் செய்வது தமிழர்களுக்கான பாதுகாப்பு என்ற நல்ல கருத்து வெளிப்படுகிறது. அதாவது, 1976 இல் தமிழர் விடுதலைக் கூட்டணி முன்வைத்த வட்டுக்கோட்டை தீர்மானம் என்று நேரடியாக சுட்டிக்காட்டாமல், 1976 இல் இருந்து என்று அந்த ஆண்டைக் குறிப்பிட்டு, தமிழர்கள் தொலைந்து போன இறைமையை தேடுகிறார்கள் என்று கடிதத்தில் பொருள் கோடல் செய்யப்பட்டிருக்கிறது. இது வரவேற்புக்குரியது--- அதேநேரம்---- இன அழிப்பு நோக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது என்பதையும் கடிதம் கனதியாகக் காண்பிக்கிறது. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்க ஐநா பாதுகாப்புச் சபை ஊடாக மாத்திரமே போக வேண்டும் என, தமிழ்த் தேசிய பேரவை அனுப்பிய கடிதத்தில் கோரப்பட்டிருந்தது. அதேநேரம், ஆயர்கள் - சைவ மதத் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது நிலையினர் ஆகியோர் இணைந்து அனுப்பிய கடிதத்தில் IIIM என்ற விசாரணைப் பொறிமுறை முதன்மையாக இருந்தது. அக் கடிதத்தில் 2002 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட குற்றங்களும் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. ஆணையாளர் அரசாங்கத்துக்கு அனுப்பியுள்ள முன்னோடி அறிக்கையில் இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டவில்லை. ஓகஸ்ட் 4 ஆம் திகதி தமிழ்த் தேசியப் பேரவை அனுப்பிய கடிதத்துக்கு அதற்கு அடுத்த நாளே ஆணையாளர் பதில் வழங்கியிருந்தார். அவரது பதில் கடிதத்திலும் அவர் உள்ளக விசாரணைக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார். ஆனால், தமிழ்த் தேசியப் பேரவை இன்று வரை, அவரது பதிலுக்கு எந்தவித மறுப்போ கவலையோ தெரிவித்து பதில் கடிதம் எழுதவில்லை. இது ஏன் என்ற கேள்வி எழுகின்றது... அதேபோன்று---- தமிழரசுக் கட்சியின் கடிதத்தில் எந்த ஒரு இடத்திலும் ஆணையாளரின் கடிதத்தில் உள்ள குறைபாடுகள் சுட்டிக் காண்பிக்கப்படவில்லை. 2015 ஆம் ஆண்டு தீர்மானத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட ஓஎம்பி (Office on Missing Persons -OMP) எனப்படும் காணாமல் போனோர் அலுவலகத்தை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோரும் உறவினர்களும் நிராகரித்துள்ளனர். ஆனால், ஆணையாளரின் கடிதத்தில் அந்த அலுவலக செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது - இதனை தமிழரசுக் கட்சியின் கடிதமும் ஏற்றுக் கொள்கிறது. இந்த ஏற்பு வேடிக்கையானது. *ரோம் சாசன கையொப்பம் சாத்தியமா? சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கத்துவம் பெறுவதற்கான ரோம் சாசனத்தில் கைச்சாத்திட வேண்டும் என ஆணையாளரின் அறிக்கையும் தமிழரசுக் கட்சியின் அறிக்கையும் கேட்கப்பட்டுள்ளன. ஆனால், இலங்கை அவ்வாறு கைச்சாத்திட்டாலும், 2002ஆம் ஆண்டுக்கும் 2025 ஆம் ஆண்டுக்கும் இடையில் நடைபெற்ற எந்தக் குற்றங்களும் விசாரணைக்கு உள்ளாக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்காது. அதற்கான விசேட ஒழுங்கு ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும். அதை ஆணையாளரும் சொல்லவில்லை, தமிழரசுக் கட்சியின் கடிதமும் சொல்லவில்லை. இது கவலைக்குரியது... இந்தியா கூட இதுவரை இணையாமல் இருக்கும் ரோம் சாசனத்தில் இலங்கை இணையும் என்று எதிர்பார்க்க முடியுமா? பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க IMF எனப்படும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற அமைப்புகளிடம் இருந்து நிதிகளை பெறும் நோக்கில், சிலவேளை இலங்கை ரோம் சாசனத்தில் கைச்சாத்திடலாம். அவ்வாறு இலங்கை இணைந்துவிட்டால், அந்த மகிழ்ச்சியில் மனித உரிமைச் சபையும் உறுப்பு நாடுகளும் அமைதியாகிவிடும் ஆபத்தும் உண்டு... இரு கட்சிகள் பற்றிய விளக்கக் குறிப்புகள்--- 1) ஒட்டுமொத்தமாக இன அழிப்புக்கான அரச பொறுப்புக் கூறலுக்கான நீதியை குறிப்பாக கோருவதில் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசிய பேரவையை விட ஒருபடி மேலே சென்றுள்ளது... 2) தனிநபா் பொறுப்புக் கூறலை கோருவதில் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசிய பேரவையை விட ஒருபடி கீழே இறங்கியுள்ளது. 3) எப்போது இந்த இரண்டு கட்சிகளும் ஒத்திசைந்து உயர்வான பணியில் ஒன்றாக ஏறி நிற்கப் போகின்றன என்ற கேள்வி தொக்கி நிற்கின்றது... அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/share/p/1JZNefTxvF/?mibextid=wwXIfr
3 months 2 weeks ago
வரலாறுகள் முழுமையாக தெரியும் என கூறினால் அது பொய்யாகிவிடும், யாரோ கூறியது! வரலாறு என்பது கற்பனைகள் நிறைந்தது என; ஒவ்வொரு விடயங்களையும் நாம் எப்படி அணுகுகிறோம் என்பதிலேயே இருக்கிறது பிரச்சினை, அவை வெளியில் இல்லை எம்மிடமே இருக்கும். திரைப்படங்களில் ஒருவரை கதாநாயகனாகவும் இன்னொருவரை மிக மோசமான வில்லனாகவும் காட்டுவார்கள் அது மனித மனதினை இலகுவாக கவர்கிறது. யாதார்த்தத்தில் A இல்லாவிட்டால் B ஆகத்தான் இருக்கவேண்டும் என சிந்திப்பவர்கள் இருக்கிறார்கள், இது தீவிரமான இரு துருவ சிந்தனை, ஆனால் சம்பவங்கள் யதார்த்தத்தில் அப்படி இருப்பதில்லை. பிழையான புரிதலுடன் ஒன்றை அணுகி அது பிழை என தெரிந்த பின்னும் அதனை விட்டு நகரமால் அதன் மேல் அதிக ஆர்வம் காட்டுவதனை Doubling down என்பார்கள் மனம் ஒரு விந்தையானது, நடைமுறை வாழ்க்கையில் அது அதிக வலியினை கொடுக்கும் தேவையற்ற விடயம் (நானும் விதிவிலக்காக இருந்ததில்லை). ஒவ்வொரு விடயத்திற்கும் இரண்டு பக்கமல்ல பல பக்கங்களும் இருக்கலாம், நாம் எமக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்துகொள்கிறோம் அவ்வளவுதான் வித்தியாசம்.
Checked
Thu, 12/18/2025 - 08:09
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed