3 weeks ago
நன்றி பையா சுடச்சுட பதில் தந்ததற்கு ........! 👍
3 weeks ago
நான் கைபேசியில் ஒரு ஆப் மூலம் விளையாட்டை பார்க்கிறேன் இணையத்தில் பார்க்க முடியாது.............அதிக வியூருஸ் மற்றும் தேவை இல்லா வெப்சைட்டுக்கள் வரும்................ உங்கட கைபேசியில் இருந்து இந்த ஆப்பை டவுன்லூட் செய்யுங்கோ.......................
3 weeks ago
நற்செயல் .........அநேகமான சின்னஞ்சிறு வருத்தங்களுடன் வருபவர்களுக்கு உபயோகமாய் இருக்கும் ........!
3 weeks ago
யாழ்.போதனாவில் “நாள் சத்திர சிகிச்சை நிலையம்” ஆரம்பிப்பு! adminFebruary 7, 2026 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் “யாழ்ப்பாணம் – நாள் சத்திர சிகிச்சை நிலையம்” நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்த யாழ்ப்பாணம் நாள் சத்திரசிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம், போதனா வைத்தியசாலை மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து சர்வதேச அமைப்புகளான IMHO, JMFOA மற்றும் புலம்பெயர் உறவுகளின் ஆதரவுடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப விழாவில் சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம், போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, மருத்துவபீடப் பீடாதிபதி பேராசிரியர் இ.சுரேந்திரகுமாரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். பகல்நேர அறுவை சிகிச்சை (Day Surgery) என்பது ஒரு நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்துகொண்டு, அதே நாளில் ( 24மணித்தியாலங்களுக்குள் ) வீடு திரும்புவதைக் குறிக்கும். இதனைத் தமிழில் “நாள் சத்திரசிகிச்சை” அல்லது “அன்றே வீடு திரும்பும் அறுவை சிகிச்சை முறை” என்று அழைப்பார்கள். இதனால் நோயாளிகளுக்கு தங்குமிடம் தேவையில்லை நோயாளி இரவு முழுவதும் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. நோயாளி தனது வீட்டிலேயே தங்கி ஓய்வெடுப்பதால் மனதளவில் விரைவாகக் குணமடைய முடிகிறது. மருத்துவமனையில் தங்கும் கட்டணங்கள் இல்லாததால் இது சிக்கனமான முறையாகும். பொதுவாக நுண்துளை அறுவை சிகிச்சை (Laparoscopy) போன்ற நவீன முறைகள் மூலம் இது செய்யப்படுகிறது. மருத்துவமனையில் நீண்ட நேரம் தங்கியிருக்காததால், பிற நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. இது போன்ற நிலையங்கள் (JDSC போன்றவை) சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அறுவை சிகிச்சைகளை மிக வினைத்திறனாக மேற்கொள்ள உதவுகின்றன இது வெறும் ஆரம்பம் மட்டுமே! எதிர்காலத்தில் மருத்துவ சுற்றுலா (Medical Tourism) மற்றும் விரிவான சிகிச்சை முறைகளை நோக்கி எமது வடக்கு மாகாணத்தின் சுகாதாரத் துறை அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. https://globaltamilnews.net/2026/228569/
3 weeks ago
ம்... இதை நான் சொன்னால் ஏளனம். வெட்கமில்லையா என்று கேள்வி. புத்தன் சொன்னால் நொட்டை. குரு செய்தால் குற்றமில்லை, சிஷ்யன் செய்தால் குற்றம்.
3 weeks ago
மேலதிக விளக்கத்துக்கு நன்றி. தமிழ் கொண்டிராக்டர் நல்ல விசயம் என தெரிந்தும் இழுத்தடித்து, மேலும் பணமும் வாங்கி தான் தமிழன் என்பதை நிறுவி உள்ளார். இடையில் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன் படுத்தி, ஈரச்சாக்கை போத்தி ஹரினி தான் சிங்களவர் என்பதை நிறுவி உள்ளார்😂. இதை பார்க்கும் ஒரு 18 வயதுக்கு கீழான சுழிபுரத்து பிள்ளை மனதில் ஆமி பற்றிய விம்பம் எப்படி இருக்கும்? நாளை அது தையிட்டிக்கு போராட போகுமா? இப்படிதான் தமிழர் தோற்பதும் சிங்களவர் தொடர்ந்து வெல்வதும் நடக்கிறது. ஆனால் இராசையா குடும்பம் வேறு வழி இல்லாமல் ஆமி மூலம் கட்டி கொடுத்துள்ளது, அதை குறை சொல்ல முடியாது. தானம் கிடைக்கும் மாட்டை பல்லை தூக்கி பார்க்கும் இடத்தில் நாமும் இல்லை. இந்த மகன் எத்தனையாம் ஆண்டு ஏ எல் எடுத்தவர் என தெரியுமா? இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்:
3 weeks ago
இன்னும்…இன்னும்…மேலே…மேலே…. அடுத்த முறை காவடி தோளுக்கு ஏறும் போது அந்த திரியில் சந்திப்போம். முகம் காட்டும் கண்ணாடி… நிஜம் காட்டும் எப்போதும் 😂 நீங்களும், நானும். ஏற்கிறேன்.
3 weeks ago
எவருக்கும் வெள்ளை அடிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. குறிப்பாக சிறுவர் துஸ்பிரயோகிகள் மீதும், அவர்களுக்கு கவர் எடுத்து எழுதுபவர் மீதும் யாழில் நான் எடுக்கும் அணுகுமுறை யாவரும் அறிந்ததே. ஆனால் அடிப்படை நியாயம் எண்டு ஒன்று உள்ளது. இன்னொரு சின்ன உதாரணம். நான் யாழ்கள உறவுகள் என ஒரு லிஸ்ட் போடுகிறேன் என வையுங்கள். யாருக்கும் நான் ஏன் அந்த லிஸ்டை போட்டே. என தெரியாது. அதில் குமாரசாமி, தமிழ் சிறி பெயர்கள் உள்ளன. உங்கள் வேலை, படிப்பு விபரம் உள்ளது. இப்படி ஒரு லிஸ்டை நான் போட்டது உங்களுக்கு தெரியுமா என்பது குஇட எவருக்கும் தெரியாது. பிண்னார் பொலிஸ் என்னை கள்ள மட்டை கள்ளன் என கைது செய்து தீர்ப்பும் ஆகிறது. நான் (தற்)கொலையான பின், ஒரு நாள் இந்த லிஸ்ட வெளி வருகிறது. இதை மட்டும் வைத்து குமாரசாமியும். தமிழ் சிறியும் கள்ள மட்டை கள்ளர் என யூடியூப் வீடியோ போட்டால் - அது நியாயமான செயல்தானா? பிகு இவர்கள் இருவரையும் நான் தனிப்பட்டு அறியேன். ராஜன் கூல் கொழும்பு டெலிகிராபில் எழுதிய ஆக்கங்கள், அவர் புலி, அரச தரப்பை சமனாக சாடும் ஒருவர் என என்ண வைத்தது. ஜீவன் அவரின் செயல்பாடுகள் மூலம் தான் ஒரு வெக்கங்கெட்ட சுயநல போக்க்கிரி என்பதை பலதடவை நிரூபித்துள்ளார். நானும் அதை யாழில் விமர்சித்துள்ளேன். மதம், சாதி, இனம் என தருணம் பார்த்து சுயநலனுக்கு பாவிக்கும் ஒரு கிருமிதான் ஜீவன் கூல். ஆனால் இந்த காரணங்களுக்காகத்தான் நீங்கள் இவர்களை போட்டு அடிக்கிறீர்கள் என்பது புரிகிறது. மேலே சொன்ன ஸ்டாமருக்கு விழும் அடிக்கும் இதுக்கும் வித்தியாசமில்லை. இதுதான் அரசியல். ஆனால் நான் அரசியல்வாதி அல்ல, என் மனதில் பட்டதை எழுதும் கருத்தாளர். இருவருமே இதை ஒரு பொருட்டாகவே எடுக்கவும் இல்லை, இதனால் அவர்கள் பதவி ஆட்டம் காணவும் இல்லை. நாம் எம்மை சமாதானப்படுத்த அப்படி நினைத்து, கார்டூன் வரைந்து மகிழ்ந்து கொள்ள மட்டுமே முடியும்.
3 weeks ago
கொல்கட்டா பிச்சில் மாற்றம் தெரியுது பகல் போட்டி என்பதால் ஜபிஎல்ல கே கே ஆர் வீரர்கள் உந்த மைதானத்தில் ரன்ஸ்ச வேகமாக கூட்டுவினம் ...................
3 weeks ago
ஹ்ஹஹ்ஹா.... உங்களின் இந்தக்கண்டுபிடிப்புபோற்தான் எல்லாமும். திருடன் நினைப்பு தன்னைப்போலத்தான் எல்லாரும் என்று. நான் கருத்து வைக்கத்தொடங்கிய காலத்திலிருந்து இப்போதுவரை ஒரே பெயரில்த்தான் எழுதிவருகிறேன், வேறொரு பெயரில் அல்லது இரு பெயரில் எழுத வேண்டிய தேவை எனக்கில்லை, இனியும் வராது. எதுவாக இருந்தாலும் நேரடியாக எழுதுவேன் அந்த துணிச்சல் எனக்குண்டு. இப்போது மடை மாற்றுவது யார்? மாவீரர் மீதான அபிமானம் எனக்கு எப்போதுமுண்டு. அனுரா ஆட்சிக்கு வந்த முதல், மாவீரர் நினைவு அமைதியாக நடந்தேறியது. நீதிமன்றம் அதற்கெதிராக தடையேதும் பிறப்பிக்கவில்லை, போலீசார் தடையுத்தரவு கோரி நீதிமன்றத்தை நாடவில்லை, எடுபிடியில்லை. நான் யாருக்கும் போட்டியாக எழுதவேண்டிய தேவையில்லை. என்னை வம்புக்கிழுப்பது நீங்கள் நான். தவறுகளை சுட்டிக்காட்டும்போது நீங்கள் நித்திரைக்கு போய்விடுவீர்கள், சாதகமாக எழுதினால் வரிஞ்சு கட்டிக்கொண்டு ஓடி வருவீர்கள். நான் ஒன்று எழுதினால் நீங்கள் அதற்கு புறம்பான வேறொன்றை எழுதி நான் மடைமாற்றுகிறேன் என்று கதறுவீர்கள். யார் மடை மாற்றுவது, யார் மற்றவர்களை சீண்டுவது என்பது வாசகருக்கு தெரியும். தன் குற்றத்தை மற்றவர் மேல் திணித்து அவர்களை குற்றவாளியாக்குவது சிலருக்கு கைவந்த கலை. ஹிஹி.....☝நான் யாருக்கும் போட்டியில்லை. எழுத வேண்டியதை வேண்டிய நேரத்தில் எழுதுகிறேன். எனக்குப் பிடித்தவர் என்பதற்காக அவர்கள் செய்யும் தவறை அடக்கி வாசிப்பதுமில்லை, பிடிக்காதவர் என்பதற்காக அவர்கள் செய்யும் நல்லதை கடிந்து கொள்வதுமில்லை. 👇 நான் உங்களுக்கு போட்டியாக எழுதவே வருகிறேனென நீங்கள் கற்பனை பண்ணினால் அது எனது தவறல்ல.
3 weeks ago
நிச்சயமாக…. ஆனால் நடப்பதென்ன? ஒரு சின்ன உதாரணம். பீட்டர் மண்டல்ஸன் ஒரு முன்னாள் அரசியல்வாதி. ஸ்டாமர் அரசியலுக்கு வர முன்னர் அமைச்சர். ஒரு காலத்தில் ஈயூ கொமிசனர். ஆனால் காசு, ஊழல் விசயத்தில் அப்படி, இப்படி. அமெரிகாவில் பெரும் புள்ளிகள், டிரம்ப் உள்வட்டத்துடன் நெருங்கியவர். டிரம்ப்பை தாஜா செய்ய இவர்தான் சரி என அவரை அமெரிக்காவுக்கான யூகே தூதுவராக்கினார் ஸ்டாமர். அவரும் கடமையை நன்றாகவே செய்தார். முக்கிய தகவல் இவர் ஒரு ஓரினசேர்க்கையாளர். நியமிக்கும் போது எப்ஸ்டீன் நட்பு பற்றி தான் கேட்டபோது “மேலோட்டமாக தெரியும்” என தனக்கு பொய் கூறினார் என்கிறார் ஸ்டாமர். முதல் முறை கோப்புகள் வெளிவந்த போது - இது பொய் என தெரிந்து கொண்டு அதிகாலை 1 மணிக்கு போன் போட்டு ஆளை வேலையில் இருந்து தூக்கினார் ஸ்டாமர். கடைசியாக வந்த கோப்புகள் இவரும் கணவரும் எப்ஸ்டீனிடம் பண உதவி பெற்றனர், அமைச்சராக இருந்தபோது நிதி தகவல்களை அவருக்கு கொடுத்தார் என்பதை காட்டுகிறன. ஆனால்…. அவர் கட்சிகாரர் உட்பட பலர் ஸ்டாமர் பதவி விலக வேண்டும் என அடம்பிடிக்கிறார்கள். அநேகமாக நடக்கும் போலவே தெரிகிறது. அப்படி நடப்பின்…. எப்ஸ்டீன் விடயத்தில் பதவி விலகிய ஒரே அரசியல்வாதி….எப்ஸ்டீனோடு ஒரு சம்பந்தமும் அறவே அற்ற, தான் அரச தலைமை வாதியாக இருந்த போது பல சிறார் கொடுமை வழக்குகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த ஸ்டாமராகவே இருக்கும். இது போல பல கூத்துக்கள் இந்த எப்ஸ்டீனை சுற்றி நடக்கிறன. குற்றவாளிகள் தண்டிக்கப பட வேண்டும் எனபதில் மாற்று கருத்து எவருக்கும் இருக்க முடியாது.
3 weeks ago
ஸ்கொட்லாந் வாங்கி கட்டப் போகினம்...............வெஸ்சின்டீஸ் வீரர்கள் கடந்த காலங்களில் அடிச்சு ஆடின மாதிரி மீண்டும் அடிச்சு ஆடத் தொடங்கிட்டினம் 200ரன்ஸ்ச கடப்பினம் இன்று💪...........................
3 weeks ago
எவரும் இங்கு காறி உமிழவில்லை. வேறு வழியின்றி முட்டுச்சந்தியில் மௌனித்தாக நீங்கள் கூறிய அந்த அரசியலை முன்மாதிரியாக கொள்ள நினைப்பவர்களிடம் கேள்விகள் தான் கேட்கிறோம். உரிய நேரத்தில் மௌனித்து மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வை கண்டிருந்தால் யாரும் இப்படி கேள்வி கேட்க மாட்டார்கள். மக்களை எதிரிக்கு பலி கொடுத்து தமிழர் அரசியலை ஒரு வக்கற்ற நிலைக்கு, முட்டுச்சந்திக்கு கொண்டுவந்த பின்னர் இனி வேறு வழியுன்றி மௌனித்ததாக கூறியதால் தான் இத்தனை கேள்விகள். அத்தோது அந்த தவறான அரசியலை நியாயப்படுத்தி அதே பாதையில் தானே தொடர்ந்து அடுத்த தலைமுறையையும் பயணிக்க வைக்க முயன்று அவர்களையும் நாசமாக்க ஆசைப்படுபவர்களிடம் மட்டும் தான் இந்த கேள்விகள்.
3 weeks ago
அரும் பொட்டுக்கை தப்பிட்டோம் இல்லையேன் 21 முட்டை குடிச்சு இருப்போம்😛....................
3 weeks ago
அ என்ற அறிவு, சம்பந்தப்பட்டவர்களை வழி நடத்தி இருந்தால் மக்களை கிளி நொச்சியில் இருந்து முள்ளிவாய்க்காலுக்கு பலவந்தமாக சாய்த்துக் கொண்டு போய்ப் பலி கொடுத்திருக்க மாட்டார்களே! செய்த தப்புகளை எல்லாம் கேள்வி கேட்காது ஆமாம் சாமி போட தெரிந்தவுடன் நிறுத்திய, அதாவது ஆவன்னாவுடன் நிறுத்திய சாமான்யனும், அதாவது நாங்களும் இதற்கு பொறுப்பு தான்
3 weeks ago
இங்கு கருத்துக்கள் எழுதுபவ்ர்கள் பாப்பாக்கள் அல்ல ஆனால் அந்த பாப்பாக்கல் எல்லோரும் ஏதோ ஒரு வித கருத்தாதிக்க த்தினால் கட்டுப்பட்டுள்ளனர்.அந்த கருத்துக்கு எதிராக மற்றவ்ர்கள் கருத்து வைக்கும் பொழுது எங்களை அறியாமல் துள்ளுகிறோம் ...
3 weeks ago
இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி ஆரம்பத்தில் வேகமாக ஓட்டங்களை எடுத்திருந்தாலும் பாகிஸ்தான் அணியின் இறுக்கமான பந்துவீச்சால் 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களையே எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி அதிரடியான துவக்கத்துடன் ஓட்டங்களை எடுத்திருந்தாலும் விக்கெட்டுகள் சரிய இறுதி இரு ஓவர்களில் 29 ஓட்டங்கள் எடுக்கும் நிலையில் இருந்தது. 19 வது ஓவரில் ஃவகீம் மூன்று சிக்ஸர்களுடன் 24 ஓட்டங்களை எடுத்ததால் 19.3 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். மற்றைய இருவருக்கும் புள்ளிகள் இல்லை!
3 weeks ago
பாபர் பாக்கிஸ்தான் அணிக்கு தேவையே இல்லை..............பந்தை வீன் அடித்து விட்டு அவுட் ஆகுவது தான் இவரின் செயல்......................
3 weeks ago
3 weeks ago
இல்லை , அடுத்த கட்டத்துக்கு நகரக் கூடாது. அப்படியே அ கூட தெரியாத கட்டதுக்கு பின் நோக்கி நகர்ந்தல் தான் எல்லா தப்புமே சரி போல் தெரியுமாம். பெரியவங்க கூறியிருகிறாங்க. 😂
Checked
Sat, 02/28/2026 - 14:06
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed