Aggregator

நடிகரும் கராத்தே நிபுணருமான ஷிஹான் ஹுசைனி காலமானார்!

3 months 2 weeks ago

New-Project-328.jpg?resize=750%2C375&ssl

நடிகரும் கராத்தே நிபுணருமான ஷிஹான் ஹுசைனி காலமானார்!

தென்னிந்திய நடிகரும், கராத்தே மற்றும் வில்வித்தை நிபுணருமான ஷிஹான் ஹுசைனி (Shihan Hussaini) இன்று அதிகாலையில் இரத்தப் புற்றுநோயுடன் போராடி காலமானார்.

அவரது மறைவுச் செய்தியை அவரது குடும்பத்தினர் பேஸ்புக்கில் உறுதிப்படுத்தினர்.

அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படும்.

பின்னர், அவரது உடல் மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இறுதிச் சடங்குகள் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹுசைனி தனது சமூக ஊடகப் பக்கங்களில் தொடர்ந்து புதுப்பிப்புகளை வழங்கி தனது புற்றுநோய் பயணத்தை ஆவணப்படுத்தி வந்தார்.

அவரது பதிவுகளைப் பார்த்த தமிழக அரசு அவரது புற்றுநோய் சிகிச்சைக்காக 5 இலட்சம் இந்திய ரூபா நிதி உதவி வழங்கியது.

அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஹுசைனி தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக தானம் செய்யும் முடிவை அறிவித்தார்.

Gm29h6DbQAA-Zjc?format=jpg&name=large

1986 ஆம் ஆண்டு கமல்ஹாசனின் புன்னகை மன்னன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

பின்னர் ரஜினிகாந்தின் வேலைக்காரன், பிளட்ஸ்டோன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார்.

விஜய்யின் பத்ரி படத்தில் கராத்தே பயிற்சியாளராக நடித்தார்.

விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் ஆகியவை அவரது இறுதி நடிப்பு முயற்சிகளில் சில.

படங்களில் நடிப்பதைத் தவிர, பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் தொகுப்பாளராகவும் அவர் தோன்றினார்.

ஹுசைனி, போர் விளையாட்டு, சிற்பம், தற்காப்புக் கலைகள் மற்றும் வில்வித்தை ஆகியவற்றில் தனது நிபுணத்துவத்தை வெளிப்படுத்திய பன்முகத் திறமை கொண்டவராக இருந்தார்.

https://athavannews.com/2025/1426343

இங்கிலாந்து கடற்கரையில் மர்ம உயிரினம்!

3 months 2 weeks ago
இங்கிலாந்து கடற்கரையில் மர்ம உயிரினம்! இங்கிலாந்தின் கென்ட் பகுதியில் உள்ள கடற்கரையில் பார்ப்பதற்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இனம் காணப்பட்ட உயிரற்ற உயிரினமொன்று அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீனின் உடலையும் வேற்றுக் கிரக வாசியின் தோற்றத்தையும் கொண்டு காணப்படும் குறித்த உயிரினமானது உயிரற்ற நிலையில் கடற்பாசியால் சூழப்பட்டு மணலில் புதையுண்ட நிலையில் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக் கடற்கரைக்குச் சென்ற இருவர் குறித்த உயிரினத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளதோடு அதனை புகைப்படம் எடுத்து தமது சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1426302

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணை சுமந்திரனிடம் பிரித்தானிய பிரதிநிதி பென் மெல்லர் தெரிவிப்பு

3 months 2 weeks ago
போர்க்குற்றம் நடக்கவில்லை. நாங்கள் உள்ளூர் பொறிமுறை மூலம் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வோம் என்று சுமந்திரன் சொல்லியிருப்பாரே. வழமை போல் நடக்க இருக்கும்… ஐ.நா.வின் செப்ரெம்பர் திருவிழாவிற்கு, இப்பவே பந்தல் போட்டு காவடி எடுத்து பம்மாத்து காட்ட வெளிக்கிட்டினம். இத்தனை வருடமாக நடந்த ஐ.நா.வின் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஏதாவது ஒரு பிரயோசனமாவது இருந்ததா? அதனை ஏன்… நிறைவேற்ற முடியாமல் போனது என்று தமிழ் தரப்புகள் ஐ.நா.வை நோக்கி கேள்வி எழுப்பியதா? இறுதியாக நடந்த ஐ.நா. கூட்டத் தொடரில்…. அனந்தி சசிதரனைத் தவிர தமிழ் கட்சிகள் எதுவுமே கலந்து கொள்ளவில்லை எனத் தெரிகின்றது. அதே நேரம் சிங்கள தரப்பு பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டு தமது தரப்பு வாதங்களை முன் வைத்தது. நமது தமிழ் கட்சிகள்… தமக்குள் அடிபட்டு, வெள்ளைகாரனுடன் இருந்து படம் எடுத்து… உள்ளூர் பத்திரிகைகளுக்கு படம் காட்டத்தான் லாயக்கு. இனியாவது கொஞ்சம் திருந்துங்கள் என்று பார்த்தால்…. ஹ்ஹூம் சான்ஸே இல்லை. இன்னும் மக்களை பைத்தியக்காரர்களாகவே நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

ஈரான் தனது அணுவாயுத திட்டத்தை முற்றாக கைவிடவேண்டும் அல்லது விளைவுகளை எதிர்கொள்ளவேண்டும் - வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

3 months 2 weeks ago
Published By: RAJEEBAN 24 MAR, 2025 | 01:15 PM ஈரான் தனது அணுவாயுத திட்டத்தை முற்றாக கைவிடவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் எதிர்பார்ப்பதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்வோல்ட்ஸ் தெரிவித்துள்ளார். உலகம் பார்க்கக்கூடிய விதத்தில் ஈரான் தனது திட்டத்தை கைவிடவேண்டும் என தெரிவித்துள்ள அவர் அணுவாயுதங்களை உருவாக்கவேண்டும் என்ற விருப்பத்திலிருந்து ஈரான் விலகுவதற்கான தருணம் இது, அவர்கள் அணு ஆயுத திட்டங்களை தொடர்வதற்கு அனுமதிக்கமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார். யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய எந்த தாக்குதலிற்கும் ஈரானே காரணம் என கருதப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையிலேயே வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு பேச்சாளர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ஈரானின் அணுவாயுத திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள வோல்ட்ஸ் டிரம்பின் கருத்துக்களை எதிரொலித்துள்ளதுடன் ஈரான் கைவிடவேண்டும் அல்லது விளைவுகளை எதிர்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார். ஈரானின் அணுவாயுத திட்டத்தினை அமெரிக்கா முற்றா செயல் இழக்க செய்யும் என அவர் தெரிவித்துள்ளார். ஈரான் தனது இரகசிய ஆதரவு குழுக்கள் மூலம் ஏற்படுத்துகின்ற உயிரிழப்புகளையும் அழிவுகளையும் நாங்கள் பார்த்திருக்கின்றோம் என தெரிவித்துள்ள அவர் ஈரானிடம் அணுவாயுதங்கள் இருந்தால், மத்திய கிழக்கு முழுவதும் அணுவாயுத மோதலில் சிக்குப்படும், இது எங்களின் தேசிய பாதுகாப்பினை பொறுத்தவரை முற்றாக ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/210052

ஈரான் தனது அணுவாயுத திட்டத்தை முற்றாக கைவிடவேண்டும் அல்லது விளைவுகளை எதிர்கொள்ளவேண்டும் - வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

3 months 2 weeks ago

Published By: RAJEEBAN 24 MAR, 2025 | 01:15 PM

image

ஈரான் தனது அணுவாயுத திட்டத்தை முற்றாக கைவிடவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் எதிர்பார்ப்பதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்வோல்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

உலகம் பார்க்கக்கூடிய விதத்தில் ஈரான் தனது திட்டத்தை கைவிடவேண்டும் என தெரிவித்துள்ள அவர் அணுவாயுதங்களை உருவாக்கவேண்டும் என்ற விருப்பத்திலிருந்து ஈரான் விலகுவதற்கான தருணம் இது, அவர்கள் அணு ஆயுத திட்டங்களை தொடர்வதற்கு அனுமதிக்கமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய எந்த தாக்குதலிற்கும் ஈரானே காரணம் என கருதப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையிலேயே வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு பேச்சாளர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

ஈரானின் அணுவாயுத திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள வோல்ட்ஸ் டிரம்பின் கருத்துக்களை எதிரொலித்துள்ளதுடன் ஈரான் கைவிடவேண்டும் அல்லது விளைவுகளை எதிர்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணுவாயுத திட்டத்தினை அமெரிக்கா முற்றா செயல் இழக்க செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் தனது இரகசிய ஆதரவு குழுக்கள் மூலம் ஏற்படுத்துகின்ற  உயிரிழப்புகளையும் அழிவுகளையும் நாங்கள் பார்த்திருக்கின்றோம் என தெரிவித்துள்ள அவர் ஈரானிடம் அணுவாயுதங்கள் இருந்தால், மத்திய கிழக்கு முழுவதும் அணுவாயுத மோதலில் சிக்குப்படும், இது எங்களின் தேசிய பாதுகாப்பினை பொறுத்தவரை முற்றாக ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/210052

சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய, கருணா அம்மானிற்கு எதிராக தடைகள் - பிரிட்டன் அறிவிப்பு

3 months 2 weeks ago
பிரிவினைவாத புலம்பெயர்ந்தோர் முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் சுறுசுறுப்பாகவும், மூலோபாயரீதியாகவும், விடாமுயற்சியுடனும் உள்ளனர்; பிரிட்டனின் தடை குறித்து அலி சப்ரி Published By: RAJEEBAN 25 MAR, 2025 | 11:06 AM பிரிவினைவாத புலம்பெயர்ந்தோர் முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் சுறுசுறுப்பாகவும், மூலோபாயரீதியாகவும், விடாமுயற்சியுடனும் உள்ளனர் என்பதை பிரிட்டனின் தடை அறிவிப்புகள் வெளிப்படுத்துவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார் பிரிட்டன் இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கருணா அம்மானிற்கு எதிராக விதித்துள்ள தடைகள் குறித்த தனது சமூக ஊடக பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ஐக்கிய இராச்சியம் எங்கள் யுத்த வெற்றி வீரர்களிற்கு எதிராக தடைகளை விதித்துள்ளது. இந்த விடயங்கள் எவையும் வெற்றிடத்தில் நிகழவில்லை. பிரிவினைவாத புலம்பெயர்ந்தோர் முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் சுறுசுறுப்பாகவும், மூலோபாயரீதியாகவும், விடாமுயற்சியுடனும் உள்ளனர். எங்களின் அரசியல்வாதிகள் சுயவிருப்பத்துடனோ அல்லது அறியாமையினாலோ அல்லது திட்டமிட்டோ அவர்களின் கரங்களில் சிக்கிக்கொள்வது வருந்தத்தக்க விடயம். உலகின் மிகக்கொடுரமான பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றை தோற்கடித்து, பல தசாப்தங்களாக இரத்தக்களறியை எதிர்கொண்ட எமது தேசத்திற்கு அமைதியையும் ஸ்திரதன்மையையும், கொண்டுவருவதற்கு பொறுப்பானவர்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் அரசியல் நோக்கத்திற்காக இலாபத்திற்காக ஆபத்தான முறையில் சமரசம் செய்துவருகின்றோம் என்பது எனக்கு உண்மையிலேயே கவலையளிக்கின்றது. ஐக்கியம் சுதந்திரத்திற்காக செய்யப்பட்ட தியாகங்களை மறந்தால் அது எவ்வளவு தூரம் நன்றிகெட்ட தேசமாக இருக்கமுடியும்? இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடாகவே விளங்கவேண்டும், இதில் எந்த விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லை. எங்கள் நாட்டின் இறைமை மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டை பேணுவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு உறுதியானதாகயிருக்கவேண்டும். அனைத்து இலங்கையர்களும் இனமதமொழி பேதமின்றி கௌவரம் சமத்துவத்துடன் பரஸ்பர கௌரவத்துடன் வாழும் நாட்டை கட்டியெழுப்பும் அதேவேளை வெளிப்படையான அல்லது நயவஞ்சகமான அனைத்து வகையான பிரிவினை வாதத்தையும் எதிர்ப்பதற்கான எங்களின் கூட்டு தீர்மானத்தை நாங்கள் வலுப்படுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/210126

ஐபிஎல் டி20 செய்திகள் - 2025

3 months 2 weeks ago
'என் மகனிடம் தோனி சொன்னது இதுதான்' - சிஎஸ்கே அணியை மிரட்டிய விக்னேஷ் புத்தூரின் தந்தை நெகிழ்ச்சி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் போட்டிக்குப் பின்னர் விக்னேஷுடன் பேசிய தோனி கட்டுரை தகவல் எழுதியவர், சங்கரநாராயணன் சுடலை பதவி, பிபிசி தமிழ் 24 மார்ச் 2025 புதுப்பிக்கப்பட்டது 46 நிமிடங்களுக்கு முன்னர் "தோனி எனது மகனைப் பாராட்டியதைப் பார்த்துவிட்டு எனக்கு தூக்கம் வரவில்லை" என்று கூறுகிறார், மும்பை இந்தியன்ஸ் வீரர் விக்னேஷ் புத்தூரின் தந்தை சுனில் குமார். ஆட்டோ ஓட்டுநரின் மகனான விக்னேஷ் புத்தூர் மும்பை அணியின் இம்பாக்ட் பிளேயராக களமிறங்கி பலரின் பார்வையை ஈர்த்தார். சென்னை - மும்பை என இரு பெரும் சாம்பியன் அணிகள் மோதும் போட்டிகள் பொதுவாக "எல்கிளாசிகோ" அதாவது பெரும் எதிர்பார்ப்புக்குரிய போட்டியாக பார்க்கப்படுகிறது. நேற்றைய போட்டியில் இருதரப்பிலும் ஜாம்பவான் வீரர்கள் பலர் இருந்த நிலையில், இவர்கள் அனைவருக்கும் மத்தியிலும் 24 வயது இளைஞர் விக்னேஷ் தனது அழுத்தமான தடத்தை பதிவு செய்துள்ளார். பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக ஆடி 26 பந்துகளில் 53 ரன்களை அடித்திருந்த சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விக்னேஷின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். மெதுவாக வந்த பந்தை ஸ்ரெயிட் டிரைவ் ஆட முயல, பந்து பேட்டின் முனையில் பட்டதால் கேட்சாக மாறியது. அடுத்து ஷிவம் துபே, இதே போன்று ஃபுல்டாஸ் ஆக வந்த பந்தை சிக்ஸ் ஆக மாற்ற முயன்று ஆட்டமிழந்தார். இதிலிருந்து மீள்வதற்குள் தீபக் ஹூடாவின் விக்கெட்டையும் விக்னேஷ் வீழ்த்தியிருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மந்திரப் பந்து வீச்சால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் விக்னேஷ் 'தோனி பாராட்டியதைப் பார்த்து தூக்கம் வரவில்லை' பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு,தந்தை சுனில் குமார் மற்றும் தாயார் பிந்துவுடன் விக்னேஷ் நேற்றைய போட்டியில் மும்பை அணி தோற்ற போதிலும், அறிமுக போட்டியிலேயே 4 ஓவர்களில் 32 ரன்களை வழங்கி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியில் வளரும் நட்சத்திரமாக உருவெடுத்திருக்கிறார் விக்னேஷ் புத்தூர். விக்னேஷின் இந்த ஆட்டம் அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பிபிசி தமிழிடம் பேசிய அவரது தந்தை சுனில் குமார், போட்டிக்குப் பின்னர் தனது மகனை தோனி பாராட்டுவதைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியில் தனக்கு தூக்கம் வரவில்லை என்று கூறினார். "தோனி சார் எனது மகனை வெகுவாக பாராட்டினார். பெற்றோருக்கு வாழ்த்துக்களை கூறுமாறு தோனி எனது மகனிடம் கூறினார். இரவு 12 மணியளவில் போட்டி முடிவடைந்ததும், எனது மகன் எனக்கு போன் செய்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்" என்கிறார் சுனில். தோனி தன்னைப் பாராட்டிய புகைப்படத்தை தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் பதிவிட்டுள்ளார். கேரளாவில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வரும் சுனில் குமார், நேற்றும் வழக்கம் போல தனது ஆட்டோவை ஓட்டச் சென்றுவிட்டார். மாலை 5 மணியளவில் உறவினருக்கு போன் செய்த விக்னேஷ், இன்று தான் விளையாட வாய்ப்பிருக்கலாம் என கூறியிருக்கிறார். "உறுதியாகத் தெரியாவிட்டாலும், தன்னை நன்கு பயிற்சி எடுக்கச் சொன்னதால் விளையாடுவதற்கான வாய்ப்பு உள்ளது" என விக்னேஷ் கூறியிருக்கிறார். இதனால், ஆட்டோ ஓட்டும் பணியை முன்னமே முடித்துக் கொண்டு டிவி முன் அமர்ந்திருந்ததாக சுனில் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விக்னேஷின் வருகையால் சைனா மேன் வகை பந்து வீச்சில் மேலும் ஒருவர் 'மேலும் ஒரு சைனா மேன் பவுலர்' 10 வயதில் வீதியில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியிருக்கிறார் விக்னேஷ் அவரிடம் தனித்தன்மை இருப்பதைப் பார்த்து விட்டு, மலப்புரத்தில் அகாடமி நடத்தி வரும் விஜய்குமார் பயிற்சிக்கு சேர்த்துக் கொண்டுள்ளார். விக்னேஷ்-க்கு இளம் வயதில் பயிற்சி அளித்த விஜய்குமார் பிபிசி தமிழிடம் பேசிய போது,"நேற்று மாலை வரை இந்தியாவுக்கு சர்வதேச தரத்திலான ஒரே ஒரு சைனா மேன் பவுலராக குல்தீப் யாதவ் மட்டுமே இருந்தார். ஆனால் நேற்று ஐபிஎல் போட்டிக்குப் பிறகு விக்னேஷும் அந்த பட்டியலில் இணைந்து கொண்டார்" எனக் கூறினார் "கனவு போட்டியான இதில் பிரமாண்டத்தை நினைத்து அச்சப்படாமல் விக்னேஷ் செயல்பட்டார். ரன் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் பேட்டர்கள் இருந்தனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட விக்னேஷ், துல்லியமாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்தார்." என கூறும் விஜய்குமார், சைனா மேன் ஸ்டைல் பந்து வீச்சை துல்லியமாக வீசுவதுதான் விக்னேஷின் சிறப்பு எனக் கூறுகிறார். 10 வயதில் தம்மிடம் பயிற்சிக்காக வந்தபோது, மிதவேகம், ரைட் ஆர்ம் ஸ்பின் என பல பந்து வீச்சுக்களை முயற்சி செய்து பார்த்து விக்னேஷுக்கான தேர்வை இறுதி செய்ததாகக் கூறும் விஜய்குமார், ''தொடக்கத்தில் விக்கெட் கீப்பராகவும் அவருக்கு பயிற்சி அளித்தோம்'' என்று கூறினார். உறுதுணையாக இருந்த பயிற்சி அரங்கங்கள் Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்ற பின்னர் கேரள கிரிக்கெட் அகாடமியின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, மாநில அணிக்காக அண்டர் 14, அண்டர் 19, அண்டர் 23 பிரிவுகளில் விளையாடியிருக்கிறார் விக்னேஷ். மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டவரான விக்னேஷ், யாரிடமும் பேச மாட்டார் எனக் கூறும் விஜய்குமார், ஆனால் சிறந்த கிரிக்கெட் திறமை அவரிடம் இருப்பதாகக் கூறுகிறார். "விக்னேஷ் பயிற்சியைத் தொடங்கிய 2010, 2011 கால கட்டத்திற்கு முன்பு வரை கேரளாவில் கிரிக்கெட் பயிற்சிக்கான உள்ளரங்கங்கள் ஏதும் இல்லை. பின்னர் கேரள கிரிக்கெட் அகாடமியின் மூலம் மாவட்டம் தோறும் கிரிக்கெட் பயிற்சிக்கான உள்ளரங்கங்கள் உருவாக்கப்பட்டன. கேரளாவைப் பொறுத்தவரையிலும் ஜூன் முதல் செப்டம்பர் வரை இடைவிடாத மழை பெய்யும். இதனால் விளையாட்டு வீரர்களை பயிற்சியை கைவிட வேண்டியது வரும். இந்த இடைவெளிக்குப் பின்னர் பேட்டர்கள் தங்கள் ஃபுட் மூவ்மெண்ட்டை சரி செய்வதற்கும், பவுலர்கள் சரியான ஆக்ஷன் வேகம் மற்றும் துல்லியத்தைப் பெறுவதற்கும் திணறுவார்கள், உள்ளரங்கங்கள் கிடைத்த பின்பு இந்த பிரச்னை தீர்ந்தது. குறிப்பாக விக்னேஷின் வசிப்பிடத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் கிரிக்கெட் உள்ளரங்கம் கிடைத்தது" என பயிற்சியாளர் விஜய்குமார் நினைவு கூர்கிறார். சைனா மேன் பவுலிங் என்றால் என்ன? பட மூலாதாரம்,VIGNESH PUTHUR / INSTAGRAM படக்குறிப்பு, ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் முடித்திருக்கிறார் விக்னேஷ் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் தனது மணிக்கட்டை சுழற்றி பந்து வீசுவது சைனாமேன் பந்து வீச்சு என அழைக்கப்படுகிறது. பந்தின் சுழற்சிக்கு இடக்கையின் மணிக்கட்டில் கொடுக்கப்படும் மாறுபாடே காரணமாகிறது. 1920களில் முதன்முறையாக பயன்படுத்தப்பட்ட சைனாமேன் பவுலிங் எனப்படும் இந்த வார்த்தை ராய் கில்னர் என்ற பந்து வீச்சாளரை குறிப்பிட பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் குல்தீப் யாதவ் மிக அரிதான சைனா மேன் பவுலராக அறியப்படுகிறார். தற்போது விக்னேஷ் புத்தூரையும் சைனாமேன் பவுலராக பலரும் ஒப்பிடத் தொடங்கியுள்ளனர். விளையாட்டு , கல்வி என அனைத்திலும் ஒரே பாதையில் பயணிக்கும் தனது மகன், முதுகலை ஆங்கில இலக்கிய படிப்பை முடித்திருப்பதாக சுனில் கூறுகிறார் இளங்கலை பட்டத்தில் நல்ல மதிப்பெண்களுடன் தனது மகன் தேர்ச்சியடைந்ததாக குறிப்பிடுகிறார் சுனில். -இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8j0ddx30g1o

'மனித உரிமை மீறல் குற்றவாளிகளை சர்வதேசநீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் என நான் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுப்பேன்' - உமாகுமரன்

3 months 2 weeks ago
Published By: RAJEEBAN 25 MAR, 2025 | 10:47 AM இலங்கையின் உள்நாட்டு போரின் போது பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட தனிநபர்களிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை வரவேற்றுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் மனித உரிமை மீறல் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டும் என நான் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுப்பேன் என தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையின் உள்நாட்டு போரின் போது பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட தனிநபர்களிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை நான் வரவேற்கின்றேன். யுத்தத்தின் இறுதி தருணங்களில் இழைக்கப்பட்ட அட்டுழியங்களிற்கு நீதி வழங்கப்படவேண்டும் என ஐக்கிய இராச்சியத்தில் வாழும் தமிழர்களும் உலகெங்கிலும் வாழும் தமிழர்களும் நீண்டகாலமாக வேண்டுகோள் விடுத்துவருகின்றனர். மோதலின் வடுக்களும், பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டமையும் என்றும் நினைவிலிருந்து அழியாது. தமிழ் சமூகத்திற்குள் இது குறித்த வலி எவ்வளவு ஆழமானதாக காணப்படுகின்றது என்பது எனக்கு தெரியும், அவர்களில் பலர் 15 வருடங்களாக நீதிக்கான பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். மனித உரிமை மீறல்களிற்கு எதிரான தடை முக்கியமான முதலாவது நடவடிக்கையாகும். மிக நீண்டகாலமாக குற்றவாளிகள் தண்டனையின் பிடியிலிருந்து தப்பியுள்ளனர் . மனித உரிமை மீறல்களிற்கு காரணமானவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை அனுமதிக்கப்போவதில்லை என பல காலமாக தொழில்கட்சி உறுதியளித்து வந்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் பரிந்துரைத்தது போன்று மனித உரிமை மீறல் குற்றவாளிகளை சர்வதேசநீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டும் என நான் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுப்பேன். உயிர்பிழைத்தவர்கள், விடைகளை இன்னமும் தேடும் குடும்பத்தவர்கள், இந்த குற்றங்களின் நிழலில் வளரும் அடுத்த தலைமுறையினருக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், நீதி பொறுப்புக்கூறலிற்கு வேண்டுகோள் விடுப்பதற்கு எனது குரலை பயன்படுத்துவதை ஒருபோதும் நிறுத்தமாட்டேன். https://www.virakesari.lk/article/210123

'மனித உரிமை மீறல் குற்றவாளிகளை சர்வதேசநீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் என நான் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுப்பேன்' - உமாகுமரன்

3 months 2 weeks ago

Published By: RAJEEBAN

25 MAR, 2025 | 10:47 AM

image

இலங்கையின் உள்நாட்டு போரின் போது பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட தனிநபர்களிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை வரவேற்றுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் மனித உரிமை மீறல் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டும் என நான் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையின் உள்நாட்டு போரின் போது பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட தனிநபர்களிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை நான் வரவேற்கின்றேன்.

யுத்தத்தின் இறுதி தருணங்களில் இழைக்கப்பட்ட அட்டுழியங்களிற்கு நீதி வழங்கப்படவேண்டும் என ஐக்கிய இராச்சியத்தில் வாழும் தமிழர்களும் உலகெங்கிலும் வாழும் தமிழர்களும் நீண்டகாலமாக வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.

மோதலின் வடுக்களும், பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டமையும் என்றும் நினைவிலிருந்து அழியாது. தமிழ் சமூகத்திற்குள் இது குறித்த வலி எவ்வளவு ஆழமானதாக காணப்படுகின்றது என்பது எனக்கு தெரியும், அவர்களில் பலர் 15 வருடங்களாக நீதிக்கான பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

மனித உரிமை மீறல்களிற்கு எதிரான தடை முக்கியமான முதலாவது நடவடிக்கையாகும். மிக நீண்டகாலமாக குற்றவாளிகள் தண்டனையின் பிடியிலிருந்து தப்பியுள்ளனர் .

மனித உரிமை மீறல்களிற்கு காரணமானவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை அனுமதிக்கப்போவதில்லை என பல காலமாக தொழில்கட்சி உறுதியளித்து வந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் பரிந்துரைத்தது போன்று மனித உரிமை மீறல் குற்றவாளிகளை சர்வதேசநீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டும் என நான் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுப்பேன்.

உயிர்பிழைத்தவர்கள், விடைகளை இன்னமும் தேடும் குடும்பத்தவர்கள், இந்த குற்றங்களின் நிழலில் வளரும் அடுத்த தலைமுறையினருக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், நீதி பொறுப்புக்கூறலிற்கு வேண்டுகோள் விடுப்பதற்கு எனது குரலை பயன்படுத்துவதை ஒருபோதும் நிறுத்தமாட்டேன்.

https://www.virakesari.lk/article/210123

கடையில் சொக்லேட் எடுத்ததாக தெரிவித்து சிறுமியை கம்பத்தில் கட்டி தாக்குதல்; யாழில் நடந்த கொடூரம்

3 months 2 weeks ago
சிறுமி…. கண்டோஸ் எடுத்து இருந்தால், அதனை பெற்றோருக்கு தெரியப் படுத்தி இருக்க வேண்டும். அதை விடுத்து…. கட்டி வைத்து, சிறுநீர் கழிக்கும் வரை… வயரால் தாக்கும் உரிமையை கடைக்காரருக்கு யார் கொடுத்தது. சிறுமி மீது தாக்குதல் நடத்திய கடைக்காரர் மீது பொலிசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணை சுமந்திரனிடம் பிரித்தானிய பிரதிநிதி பென் மெல்லர் தெரிவிப்பு

3 months 2 weeks ago
24 MAR, 2025 | 08:02 PM ஆர்.ராம்- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள 59ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தலை மையப்படுத்திய புதிய பிரேரணையொன்று பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் கொண்டுவரப்படவுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்தோ-பசிபிக் பிராந்திய பணிப்பாளர் பென் மெல்லர் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், ஊடகப்பேச்சாளருமான ஜனாதிபதி எம்.ஏ.சுமந்திரனிடத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன், அவர், வடக்கு,கிழக்கில் உள்ள நிலைமைகள் மற்றும் புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தியிருந்ததோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கீழ் செயற்படும் சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறையின் கால நீடிப்பு தொடர்பிலும் பரஸ்பர கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்தோ-பசிபிக் பிராந்திய பணிப்பாளர் பென் மெல்லருக்கும், எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது, முதலில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் போரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பிலான தீர்மானத்தை பிரதான அனுசரணையாளர் என்ற வகையில் பிரித்தானியா தலைமைதாங்கிக் கொண்டுவரவுள்ள விடயத்தினை பென் மெல்லர் பகிர்ந்துள்ளார். அத்துடன், குறித்த பிரேரணைக்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் அதிகமான கவனம் செலுத்தப்பட்டுள்ளபோதும் அதற்கான சதகமான நிலைமைகள் குறைந்தே காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் இலங்கையில் 'நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தலை' நடைமுறைச்சாத்தியமாக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் புதிய பிரேரணையை கொண்டுவருவதில் பிரித்தானியா கொண்டிருக்கின்ற அர்ப்பணிப்பை வரவேற்ற சுமுந்திரன் அதற்கான அவசியத்தையும், சர்வதேச தளத்தில் வைத்திருக்க வேண்டும் என்ற தமது நிலைப்பாட்டையும் பகிர்ந்து கொண்டார். விடேசமாக தற்போதைய அரசாங்கம் கடந்தகால தவறுகளை சரிசெய்து முறைமை மாற்றத்தினையே மையப்படுத்தி ஆட்சியில் அமர்ந்தது. இவ்வாறான நிலையில் அந்த அரசாத்தினாலேயே அதற்கான இலக்குகளை முன்னகர்த்த முடியும் என்றும் குறிப்பிட்டார். அதனையடுத்து, மெல்லர் வடக்கு,கிழக்கு மக்களின் நிலைமைகள் தொடர்பில் கேட்டதோடு, அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் சுமந்திரனிடத்தில் வினவியிருந்தார். இதற்குப்பதிலளித்திருந்த சுமந்திரன், வடக்கு,கிழக்கு மக்கள் தமது அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலான புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதோடு அதிகாரங்கள் பகிரப்பட்ட சமஷ்டி அடிப்படையிலான நிரந்திரமான தீர்வொன்று இனப்பிரச்சிக்காக முன்வைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள். அதற்காகவே அவர்கள் தொடர்ச்சியாக ஆணை வழங்கி வருகின்றார்கள் என்று குறிப்பிட்டார். அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில் வடக்கு,கிழக்கு மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக மாற்றங்களை எதிர்பார்த்த மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தபோதும் அவற்றை இன்னமும் பூர்த்தி செய்யாத நிலைமை தான் நீடிக்கின்றது என்றும் சுட்டிக்காட்டினார். அத்தோடு, மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறல் செய்யப்பட வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த நிலைப்பாடாக இருக்கின்ற நிலையில், சாட்சியங்களை திரட்டும் பொறிமுறையின் கால எல்லையையும் நீடிக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாகவுள்ளதாகவும் கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/210099

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணை சுமந்திரனிடம் பிரித்தானிய பிரதிநிதி பென் மெல்லர் தெரிவிப்பு

3 months 2 weeks ago

24 MAR, 2025 | 08:02 PM

image

ஆர்.ராம்-

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள 59ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தலை மையப்படுத்திய புதிய பிரேரணையொன்று பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் கொண்டுவரப்படவுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்தோ-பசிபிக் பிராந்திய பணிப்பாளர் பென் மெல்லர் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், ஊடகப்பேச்சாளருமான ஜனாதிபதி எம்.ஏ.சுமந்திரனிடத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர், வடக்கு,கிழக்கில் உள்ள நிலைமைகள் மற்றும் புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தியிருந்ததோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கீழ் செயற்படும் சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறையின் கால நீடிப்பு தொடர்பிலும் பரஸ்பர கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்தோ-பசிபிக் பிராந்திய பணிப்பாளர் பென் மெல்லருக்கும், எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் நடைபெற்றிருந்தது.

இதன்போது, முதலில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் போரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பிலான தீர்மானத்தை பிரதான அனுசரணையாளர் என்ற வகையில் பிரித்தானியா தலைமைதாங்கிக் கொண்டுவரவுள்ள விடயத்தினை பென் மெல்லர் பகிர்ந்துள்ளார்.

அத்துடன், குறித்த பிரேரணைக்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் அதிகமான கவனம் செலுத்தப்பட்டுள்ளபோதும் அதற்கான சதகமான நிலைமைகள் குறைந்தே காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இலங்கையில் 'நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தலை' நடைமுறைச்சாத்தியமாக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் புதிய பிரேரணையை கொண்டுவருவதில் பிரித்தானியா கொண்டிருக்கின்ற அர்ப்பணிப்பை வரவேற்ற சுமுந்திரன் அதற்கான அவசியத்தையும், சர்வதேச தளத்தில் வைத்திருக்க வேண்டும் என்ற தமது நிலைப்பாட்டையும் பகிர்ந்து கொண்டார்.

விடேசமாக தற்போதைய அரசாங்கம் கடந்தகால தவறுகளை சரிசெய்து முறைமை மாற்றத்தினையே மையப்படுத்தி ஆட்சியில் அமர்ந்தது. இவ்வாறான நிலையில் அந்த அரசாத்தினாலேயே அதற்கான இலக்குகளை முன்னகர்த்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.

அதனையடுத்து, மெல்லர் வடக்கு,கிழக்கு  மக்களின் நிலைமைகள் தொடர்பில் கேட்டதோடு, அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் சுமந்திரனிடத்தில் வினவியிருந்தார்.

இதற்குப்பதிலளித்திருந்த சுமந்திரன், வடக்கு,கிழக்கு மக்கள் தமது அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலான புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதோடு அதிகாரங்கள் பகிரப்பட்ட சமஷ்டி அடிப்படையிலான நிரந்திரமான தீர்வொன்று இனப்பிரச்சிக்காக முன்வைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள். அதற்காகவே அவர்கள் தொடர்ச்சியாக ஆணை வழங்கி வருகின்றார்கள் என்று குறிப்பிட்டார்.

அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில் வடக்கு,கிழக்கு மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக மாற்றங்களை எதிர்பார்த்த மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தபோதும் அவற்றை இன்னமும் பூர்த்தி செய்யாத நிலைமை தான் நீடிக்கின்றது என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறல் செய்யப்பட வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த நிலைப்பாடாக இருக்கின்ற நிலையில், சாட்சியங்களை திரட்டும் பொறிமுறையின் கால எல்லையையும் நீடிக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாகவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

486534267_10161085885066016_327834672600

https://www.virakesari.lk/article/210099

இந்திய பிரதமருடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டும் - முன்னணி சோசலிச கட்சி

3 months 2 weeks ago
24 MAR, 2025 | 08:22 PM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு வர இருக்கும் இந்திய பிரதமரின் நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் ஐந்து ஒப்பந்தங்களில் கைச்சாத்திட இருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. அந்த ஒப்பந்தங்களை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டும் என முன்னணி சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார். பதுளை பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) இடம்பெற்ற மக்கள் சக்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கைக்கு வர இருப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இலங்கைக்கு வரும் இந்திய பிரதமர் இலங்கையில் அவரின் நிகழ்ச்சித்திட்டம் என்ன என அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் இந்திய ஊடகங்கள் அதுதொடர்பில் செய்தி வெளியிட்டிருக்கின்றன. இலங்கைக்கு வரும் இந்திய பிரதமர் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட இருப்பதாக இந்திய ஊடகங்கள் இரண்டு தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டிருக்கின்றன. வெளிநாடுகளுடன் புரிந்துணர் ஒப்பந்தங்கள் தொடர்பில் கைச்சாத்திடும்போது அது தொடர்பில் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அங்கு இந்திய அரசாங்கத்துடன் சில ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டிருந்தார். ஆனால் அந்த ஒப்பந்தங்கள் தொடர்பில் முன்கூட்டி எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனால் இந்திய ஊடகங்கள் அதனை வெளியிட்டிருந்தன. அதேபோன்று தற்போது இந்திய பிரதமர் இலங்கைக்கு வந்து என்ன செய்யப்போகிறார் என அரசாங்கம் இதுவரை வெளியிடாத நிலையில் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அரசாங்கம் நினைத்த பிரகாரம் செயற்பட முடியாது. அதற்கு அரசாங்கத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதனால் இந்திய பிரதமருடன் அரசாங்கம் கைச்சாத்திட இருக்கும் 5புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்ன என்பதை உடனடியாக வெளியிட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/210083

இந்திய பிரதமருடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டும் - முன்னணி சோசலிச கட்சி

3 months 2 weeks ago

24 MAR, 2025 | 08:22 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கைக்கு வர இருக்கும் இந்திய பிரதமரின் நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை. ஆனால்  ஐந்து ஒப்பந்தங்களில் கைச்சாத்திட இருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. அந்த ஒப்பந்தங்களை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டும் என முன்னணி சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார்.

பதுளை பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) இடம்பெற்ற மக்கள் சக்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கைக்கு வர இருப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இலங்கைக்கு வரும் இந்திய பிரதமர் இலங்கையில் அவரின் நிகழ்ச்சித்திட்டம் என்ன என அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை.

ஆனால் இந்திய ஊடகங்கள் அதுதொடர்பில் செய்தி வெளியிட்டிருக்கின்றன. இலங்கைக்கு வரும் இந்திய பிரதமர் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட இருப்பதாக இந்திய ஊடகங்கள் இரண்டு தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

வெளிநாடுகளுடன் புரிந்துணர் ஒப்பந்தங்கள் தொடர்பில் கைச்சாத்திடும்போது அது தொடர்பில் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அங்கு இந்திய அரசாங்கத்துடன் சில ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டிருந்தார். ஆனால் அந்த ஒப்பந்தங்கள் தொடர்பில் முன்கூட்டி எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனால் இந்திய ஊடகங்கள் அதனை வெளியிட்டிருந்தன.

அதேபோன்று தற்போது இந்திய பிரதமர் இலங்கைக்கு வந்து என்ன செய்யப்போகிறார் என அரசாங்கம் இதுவரை வெளியிடாத நிலையில் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அரசாங்கம் நினைத்த பிரகாரம் செயற்பட முடியாது. அதற்கு அரசாங்கத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதனால் இந்திய பிரதமருடன் அரசாங்கம் கைச்சாத்திட இருக்கும் 5புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்ன என்பதை உடனடியாக வெளியிட வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/210083

ஐபிஎல் டி20 செய்திகள் - 2025

3 months 2 weeks ago
டெல்லி அசாத்திய வெற்றி: சிக்ஸர், பவுண்டரிகளால் ஆட்டத்தையே தலைகீழாக மாற்றிய 'தனி ஒருவன்' பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் டெல்லி - லக்னௌ போட்டி ஐபிஎல் ஆட்டம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று 4வது ஆட்டத்திலேயே ரசிகர்களுக்கு உணர்த்திவிட்டது. விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 4வது லீக் ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. கடைசி ஓவர் வரை எந்த அணி வெல்லும் என்று யாராலும் கணிக்க முடியாத ஆட்டமாக இருந்தது. டெல்லி அணி வீரர் அசுதோஷ் ஷர்மா என்ற ஒற்றை பேட்டர்தான் சாத்தியமில்லாத வெற்றியை சாத்தியமாக்கினார். கடைசி ஓவரை அசுதோஷ் சந்திக்கும் வரை டெல்லி அணி பக்கம் வெற்றி இல்லை என்ற நிலைதான் இருந்தது. கடைசி ஓவரில் ஒரு பந்தை சந்தித்தவுடனே அசுதோஷ் வெற்றியை உறுதி செய்தார். லக்னௌ அதிரடி டெல்லி அணியின் பந்துவீச்சை தொடக்கத்தில் மிட்ஷெல் மார்ஷ், நிகோலஸ் பூரன் இருவரும் சேர்ந்து வெளுத்து வாங்கினர் 4.5 ஓவர்களில் 50 ரன்களும், பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்களும் என லக்னெள வலுவாக இருந்தது. மார்ஷ் 19 பந்துகளிலும், பூரன் 24 பந்துகளிலும் அரைசதத்தைக் கடந்தனர். இவர்கள் அணியின் ஸ்கோரை 250 ரன்களுக்கு உயர்த்துவார்கள் என கணிக்கப்பட்டது. ஆனால் மார்ஷ் 36 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்த நிலையில் முகேஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார், பூரன் 30 பந்துகளில் 75 ரன்களில் ஸ்டார்க் பந்துவீச்சில் க்ளீன் போல்டான பின் ஆட்டம் தலைகீழாக மாறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES 13-வது ஓவரில் லக்னெள அணி 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது, அடுத்த 7 ஓவர்களில் லக்னெள அணி எப்படியும் குறைந்தபட்சம் 70 ரன்கள் சேர்த்து 246 ரன்கள் ஸ்கோர் செல்லும் என கணிக்கப்பட்டது. ஆனால், குல்தீப் யாதவ், மிட்ஷெல் ஸ்டார்க் இருவரும் சேர்ந்து லக்னெள பேட்டிங் வரிசையை சீர்குலைத்தனர். கேப்டன் ரிஷப் பந்த் டக்அவுட்டில் குல்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். குல்தீப் வீசிய 17வது ஓவரில் பதோனை சிக்ஸருக்கு முயன்று விக்கெட்டை இழந்தார், அதே ஓவரில் ஷர்துல் தாக்கூர் ரன்அவுட்டாகி வெளியேறினர். ஸ்டார்க் தனது கடைசி ஓவரில் ஷாபாஸ் அகமது, ரவி பிஸ்னோய் விக்கெட்டுகளை வீழ்த்தவே லக்னெள அணி 194 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. ஒரு கட்டத்தில் 162 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என வலுவாக இருந்த லக்னெள அடுத்த 32 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி ஓவரில் டேவிட் மில்லர் 2 சிக்ஸர்களை விளாசி ஸ்கோரை 200 ரன்களுக்கு மேல் உயர்த்தினார். மில்லருக்கு ஒத்துழைத்து எந்த பார்ட்னர்ஷிப்பும் அமையவில்லை. 20 ஓவர் முடிவில் லக்னெள அணி 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் சேர்த்தது. டிரம்பின் வரி விதிப்பு இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டுவருமா?24 மார்ச் 2025 சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் வளர்த்த செடி எது? பூமியை விட அங்கே வேகமாக வளர்வது ஏன்?24 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி கடினமான இலக்கைத் துரத்திய டெல்லி அணி முதல் ஓவரிலேயே மெக்ருக்(1), போரெல்(0), ரிஸ்வி(4) என 7 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. 13-வது ஓவரின் போது டெல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் என ஏறக்குறைய தோல்வியின் பிடியில் இருந்தது. டெல்லி அணி வெற்றிக்கு கடைசி 7 ஓவர்களில் 94 ரன்கள் தேவைப்பட்டது. டெல்லி வெற்றி பெற 1.74 சதவீதமும், லக்னெள அணி வெல்ல 98.44 சதவீதமும் வாய்ப்பு இருப்பதாக கணினியின் கணிப்பு கூறியது. ஆனால், அனைத்துக் கணிப்புகளையும் தகர்த்து அசுதோஷ் ஷர்மா அறிமுக வீரராக வந்த விப்ராஜ் நிகம் ஆகியோர் போட்டியை வேறு திசையில் பயணிக்க வைத்தனர். 5வது விக்கெட்டை டெல்லி அணி இழந்த போது அந்த அணி வெற்றி பெற 145 ரன்கள் தேவைப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES திருப்பம் தந்த அசுதோஷ் ஷர்மா டிரிஸ்டன் ஸ்டெப்ஸ், அசுதோஷ் ஷர்மா ஆகிய இருவரும் களத்தில் இருந்த வரை டெல்லி அணி சற்று நம்பிக்கையுடன் இருந்தது. இருவரும் ஓவருக்கு ஒரு பவுண்டரி, சிக்ஸர் விளாசினர். ஆனால் ஸ்டெப்ஸ் 34 ரன்னில் சித்தார்த் பந்துவீச்சில் ஆட்டமிழந்த பின் நம்பிக்கை குறையத் தொடங்கியது. ஆனால், அதன் பிறகுதான் ஆட்டத்தின் முடிவையே மாற்றிய அந்த ஜோடி அமைந்தது அறிமுக வீரர் விப்ராஜ் நிகம் வந்து, அசுதோஷுடன் சேர்ந்தார். பிஸ்னாய் வீசிய 14வது ஓவரை விப்ராஜ் விளாசினார். அந்த ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 17 ரன்கள் குவித்த விப்ராஜ், ஷாபாஸ் அகமது ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்ஸர் என 15 ரன்களை சேர்த்தார். இதன் மூலம் டெல்லி அணிக்கு நெருக்கடியைக் குறைத்து அவர் நம்பிக்கை அளித்தார். 15 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் என இருந்தது. கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 62 ரன்கள் தேவைப்பட்டன. பிரின்ஸ் வீசிய 16-வது ஓவரில் அசுதோஷ் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரி என 20 ரன்களைச் சேர்த்து ஆட்டத்தை பரபரப்பாக்கினார். திக்வேஷ் ரதி வீசிய 17-வது ஓவரின் முதல் பந்தில் விப்ராஜ் 39 ரன்னில் ஆட்டமிழக்க டெல்லி அணி மீண்டும் சிக்கலில் மாட்டியது. அடுத்து வந்த மிட்ஷெல் ஸ்டார்க் பெரிய ஷாட்டுக்கு முற்பட்டு பிஸ்னாய் ஓவரில் ஆட்டிமிழந்தார். பிஸ்னாய் வீசிய 18-வது ஓவரிலேயே 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியை அசுதோஷ் விளாசினார். தமிழ்நாட்டை சேர்ந்த அமெரிக்க தொழிலதிபரும், அவரது மனைவியும் பரஸ்பர குற்றச்சாட்டு - என்ன பிரச்னை?24 மார்ச் 2025 நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கு: உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது எவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது?24 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES திக் திக் ஓவர்கள் இதனால் கடைசி 2 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டன. டெல்லி வசம் கடைசி 2 விக்கெட்டுகள்தான் இருந்தன. பிரின்ஸ் வீசிய 19-வது ஓவரில் பவுண்டரி அடித்த குல்தீப், அடுத்த பந்தில் ரன்அவுட்டானார். 9-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய மோகித் சர்மா, அசுதோஷுடன் சேர்ந்தார். 4-வது பந்தில் 2 ரன்கள் சேர்த்து 28 பந்துகளில் அசுதோஷ் அரைசதத்தை நிறைவுசெய்தார். 5வது பந்தில் சிக்ஸரும், கடைசிப் பந்தில் பவுண்டரியும் அசுதோஷ் விளாச ஆட்டத்தில் உச்சக்கட்ட பரபரப்பு தொற்றிக் கொண்டது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டன. ஷாபாஸ் அகமது வீசிய கடைசி ஓவரில் முதல் பந்தை தவறவிட்ட மோகித் சர்மா அடுத்து பந்தில் ஒரு ரன் எடுத்தார். ஸ்லாட்டில் வீசப்பட்ட 3வது பந்தை சந்தித்த அசுதோஷ் தூக்கி அடித்து சிக்ஸருக்கு அனுப்பவே டெல்லி அணி ஆர்ப்பரிப்பான வெற்றியைப் பெற்றது. ஒரு கட்டத்தில் 19 பந்துகளில் 19 ரன் எடுத்திருந்த அசுதோஷ் ஆட்டத்தை முடிக்கும் போது 31 பந்துகளில் 66 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அசுதோஷ் சர்மா தான் சந்தித்த கடைசி 11 பந்துகளில் மட்டும் 46 ரன்கள் சேர்த்தார். அசுதோஷ் 31 பந்துகளில் 5 சிக்ஸர், 5 பவுண்டரி என 66 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருது வென்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES அசுதோஷ் ஷர்மா என்ன பேசினார்? ஆட்ட நாயகன் விருது வென்ற டெல்லி வீரர் அசுதோஷ் ஷர்மா கூறுகையில் "பல போட்டிகளை என்னால் ஃபினிஷ் செய்ய முடியாமல் போனதால், ஃபினிஷ் எப்படி செய்வது என கடந்த ஆண்டிலிருந்துதான் நான் ஃபினிஷிங்கை கற்றுக்கொண்டேன். என் கவனத்தை ஃபினிஷிங்கில் செலுத்தினேன், உள்நாட்டுப் போட்டிகளிலும் இதில்தான் கவனம் செலுத்தினேன். என் மீது அளவு கடந்த நம்பிக்கையை நான் வைத்திருக்கிறேன், கடைசி ஓவர், கடைசிப் பந்து வரை நான் களத்தில் இருந்தால் ஏதாவது செய்ய முடியும் என்று நம்புகிறேன். அமைதியாக இருக்க வேண்டும், நம்ப வேண்டும், பயிற்சி எடுத்த ஷாட்கள் குறித்து சிந்தித்து அதை செயல்படுத்த முயற்சிக்க வேண்டும். இதைத்தான் இன்று நான் செய்தேன். விப்ராஜ் சிறப்பாக ஆடினார், நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். பந்து மட்டும் உனக்கு செட்ஆகிவிட்டால் உன்னால் பெரியஷாட்களுக்கு செல்ல முடியும் என்றேன். அமைதியாக இருந்தேன், அதிகமான அழுத்தத்தை நான் எனக்குக் கொடுக்கவில்லை. இந்த ஆட்டநாயன் விருதை என்னுடைய வழிகாட்டி ஷிகர் தவாணுக்கு அர்ப்பணிக்கிறேன்" எனத் தெரிவித்தார். ஔரங்கசீப்பை 'பொருத்தமற்றவர்' என கூறும் ஆர்எஸ்எஸ் அவரது சகோதரர் தாரா ஷிகோவை முன்னிலைப்படுத்துவது ஏன்?2 மணி நேரங்களுக்கு முன்னர் யானை - மனித மோதலைத் தடுக்கும் தேனீக்கள் - எப்படி தெரியுமா?24 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES பஞ்சாபிலும் பட்டைய கிளப்பிய அசுதோஷ் கடந்த 2024-ஆம் ஆண்டு சீசனில் பஞ்சாப் அணியில் இருந்த அசுதோஷ் ஷர்மா, பல சாத்தியமற்ற வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். குறிப்பாக மும்பை அணிக்கு எதிராகவும், சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராகவும் அசுதோஷ் அற்புதமாக ஆடி பஞ்சாப் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இந்த ஆட்டத்தில் டெல்லி அணி இம்பாக்ட் வீரராகவே அசுதோஷை களமிறக்கியது, ஆட்டத்தின் போக்கை மெல்ல உணர்ந்து ,அதற்கு ஏற்றார்போல் சென்று, ஆட்டத்தை தனது அணி பக்கம் திருப்பினார் அசுதோஷ். லக்னெள அணி செய்த தவறுகள் லக்னெள அணிக்கு மிட்ஷெல் மார்ஷ்(72), நிகோலஸ் பூரன்(75) ஆகியோர் சேர்த்த ரன்கள்தான் பெரும்பகுதியாகும். லக்னெள அணியின் 22.97 சதவீத ரன்கள் கடைசி 7 ஓவர்களில் சேர்க்கப்பட்டவை. லக்னெள அணி 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் என இருந்தபின் அடுத்த 7 ஓவர்களில் 48 ரன்கள் மட்டுமே சேர்த்தது. நடுவரிசை பேட்டர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்தனர். கடைசியில் டேவிட் மில்லருக்கு ஒத்துழைத்து ஆட பார்ட்னர்ஷிப் இல்லை. சேஸிங்கில் அசுதோஷ் வெறித்தனமாக பேட் செய்தபோது, பிரின்ஸ் யாதவ் 16-வது ஓவரையும், 19-வது ஓவரையும் பந்துவீச ரிஷப் பந்த் எடுத்த முடிவு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டிய ஒன்று. பிரின்ஸுக்கு ஓவர் வழங்குவதற்குப் பதிலாக ஷர்துல் தாக்கூருக்கு பந்துவீச வாய்ப்புக் கொடுத்திருக்கலாம். 'விக்னேஷ் புத்தூரிடம் தோனி சொன்னது இதுதான்' - தந்தை நெகிழ்ச்சி தோனி மின்னல் வேக ஸ்டம்பிங்: சென்னையை திணறடித்த மும்பையின் இளம் சுழல் 'மாயாவி' சுனில் நரைன் பேட்டால் ஸ்டம்பை உரசியும் கூட அவுட் கொடுக்கப்படாதது ஏன்? குடிநீர் பாட்டிலை எத்தனை நாளைக்கு ஒருமுறை, எவ்வாறு கழுவ வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES ஏனென்றால் ஷர்துல் தாக்கூர் தனது முதல் ஓவரிலேயே டெல்லி அணியின் பிரேசர், போரெல் இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தி ஃபார்மில் இருந்தார். அவருக்கு கடைசி வரை 2 ஓவர்கள் மட்டுமே ரிஷப் பந்த் வழங்கியிருந்தார். ஆல்ரவுண்டர் மிட்ஷெல் மார்ஷ் அணியில் இருந்தும் அவரை பயன்படுத்தவே இல்லை. கடந்த காலத்தில், இதுபோன்ற தருணங்களில் மார்ஷ் பல முறை சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். கேப்டன்சியில் சில நுணுக்கமான அம்சங்களில் ரிஷப் பந்த் தவறவிட்டது தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதேபோல ஷாபாஸ் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் மோகித் சர்மாவை ஸ்டெம்பிங் செய்யக் கிடைத்த வாய்ப்பையும் ரிஷப் பந்த் தவறவிட்டார். மாறாக மோகித் சர்மா கால் காப்பில் வாங்கியதற்காக அப்பீல் செய்து ரிஷப் பந்த் தவறு செய்தார். உச்சக்கட்ட பதற்றத்தில் ரிஷப் பந்த் இருந்த போதுதான் ஸ்டெம்பிங் வாய்ப்பை தவறவிட்டது நன்கு தெரிந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cgr28gnlgpvo

தையிட்டி போராட்டம்; இனவாதிகளுக்கு அரசு அடிபணிந்து செயற்படுகிறது என்கிறார் சரத் வீரசேகர

3 months 2 weeks ago
தையிட்டி திஸ்ஸ விகாரையில் மத வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிப்பது ஒட்டுமொத்த சிங்கள பௌத்தர்களின் மனங்களையும் பாதித்துள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை தையிட்டி திஸ்ஸ விகாரையில் நேற்று முன்தினம் புதிதாக ஒரு விகாரைக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது 29 பௌத்த பிக்குகள் பூஜை வழிபாட்டில் கலந்துக் கொண்டிருந்தனர். இவர்களுக்கு மதிய உணவு வழங்கலுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகிய நிலையில் காலை 07 மணியளவில் நேற்று முன்தினம் திஸ்ஸ விகாரையின் முன்பாக தமிழ் மக்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது அங்கு கூடியிருந்த இராணுவத்தினர் உடனடியாக விகாரையின் வளாகத்தில் இருந்து வெளியேறினர். தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில் அவ்விடயத்தை விட்டு வெளியேறுமாறு இராணுவத்துக்கு கட்டளை பிறப்பித்தது யார்?, ஜனாதிபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோருக்கு மாத்திரமே அதிகாரம் உண்டு. சிங்கள பௌத்த நாட்டில் பௌத்த விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இனவாதிகளுக்கு அரசாங்கம் அடிபணிந்து செயற்படுகிறது. ஆகவே இதன் உண்மைத் தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்றார். https://thinakkural.lk/article/316413

தையிட்டி போராட்டம்; இனவாதிகளுக்கு அரசு அடிபணிந்து செயற்படுகிறது என்கிறார் சரத் வீரசேகர

3 months 2 weeks ago

தையிட்டி திஸ்ஸ விகாரையில் மத வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிப்பது ஒட்டுமொத்த சிங்கள பௌத்தர்களின் மனங்களையும் பாதித்துள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை தையிட்டி திஸ்ஸ விகாரையில் நேற்று முன்தினம் புதிதாக ஒரு விகாரைக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது 29 பௌத்த பிக்குகள் பூஜை வழிபாட்டில் கலந்துக் கொண்டிருந்தனர். இவர்களுக்கு மதிய உணவு வழங்கலுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகிய நிலையில் காலை 07 மணியளவில் நேற்று முன்தினம் திஸ்ஸ விகாரையின் முன்பாக தமிழ் மக்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அங்கு கூடியிருந்த இராணுவத்தினர் உடனடியாக விகாரையின் வளாகத்தில் இருந்து வெளியேறினர்.

தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில் அவ்விடயத்தை விட்டு வெளியேறுமாறு இராணுவத்துக்கு கட்டளை பிறப்பித்தது யார்?,

ஜனாதிபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோருக்கு மாத்திரமே அதிகாரம் உண்டு.

சிங்கள பௌத்த நாட்டில் பௌத்த விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இனவாதிகளுக்கு அரசாங்கம் அடிபணிந்து செயற்படுகிறது.

ஆகவே இதன் உண்மைத் தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

https://thinakkural.lk/article/316413

பொறுப்புக்கூறலை நோக்கிய முக்கியமான நடவடிக்கை : பிரிட்டனின் தடைகள் குறித்து கனடாவின் நீதியமைச்சர்

3 months 2 weeks ago
Published By: RAJEEBAN 25 MAR, 2025 | 09:29 AM இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை வரவேற்றுள்ள கனடாவின் நீதியமைசர் ஹரி ஆனந்தசங்கரி, இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது என தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதித்துள்ளதை நான் வரவேற்கின்றேன். இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது. 2023 இல் கனடா மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக விதித்த தடைகளை தொடர்ந்து பிரிட்டனும் தடைகளை விதித்துள்ளது. இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும் கலாச்சாரத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கும், சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் கனடா தொடர்ந்து பாடுபடும். https://www.virakesari.lk/article/210109

பொறுப்புக்கூறலை நோக்கிய முக்கியமான நடவடிக்கை : பிரிட்டனின் தடைகள் குறித்து கனடாவின் நீதியமைச்சர்

3 months 2 weeks ago

Published By: RAJEEBAN 25 MAR, 2025 | 09:29 AM

image

இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை வரவேற்றுள்ள கனடாவின் நீதியமைசர் ஹரி ஆனந்தசங்கரி, இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது என தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதித்துள்ளதை நான் வரவேற்கின்றேன்.

இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது.

2023 இல் கனடா மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக விதித்த தடைகளை தொடர்ந்து பிரிட்டனும் தடைகளை விதித்துள்ளது.

இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும் கலாச்சாரத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கும், சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் கனடா தொடர்ந்து பாடுபடும்.

https://www.virakesari.lk/article/210109