Aggregator
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
மன்னிக்கனும் அண்ணா , நான் இப்படி எழுதுவதுக்கு , நான் தோழர் புரட்சிக்கு தான் எழுதினேன் , நீங்களாக வந்து எனக்கு பதில் எழுதி இருந்தீங்கள் , இப்ப இப்படி மட்டம் தட்டி எழுதுவது என்றால் அடுத்த முறை எனது கருத்துக்கு நீங்கள் பதில் அளிப்பதை நான் விரும்ப வில்லை😡 😉 உங்கட பதிலை நான் இந்த திரியில் எதிர் பார்க்கவும் இல்லை , நீங்களாகவே ஆரம்பித்து விட்டு வழமை போல் காட்டும் உங்கட நரி புத்திய காட்டி விட்டீங்கள்................... CNN , BBC நூற்றுக்கு நூறு உண்மையை தானே சொல்லிகினம் இணையவனுக்கு அதற்கான விளக்கத்தை கீழ் கொடுத்து இருந்தேன் அதை அவர் நீக்கி விட்டார்................... யாழில் முகம் தெரிந்த உறவுகள் வந்து ஆள் ஆளுக்கு விவாதிச்சு போட்டு போவினம்.....................யாழை குப்பை ஆக்க வேண்டி அவசியம் எனக்கு இல்லை..................... நன்றி வணக்கம்👍...................
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
பணி சுமை காரணமாக 10 நாள் விடுப்பு தோழர் ..
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
மன்னிக்க வேண்டும் இதைச் சொல்வதற்கு: உங்களுடைய புலம்பலுக்கு பதில் எழுதி நேர விரயம் செய்ய முடியாது. ஆனால், "உலக சமாதான தேவதை" ட்ரம்ப் என்று வரலாற்றை ரிக் ரொக்கில் வாசித்து விட்டு 2024 நவம்பர் வரை இங்கே எழுதிய உறவுகளிடம் தான் நீங்கள் "எங்கே என்ன பிசகியது?" எனக் கேட்க வேண்டும் (போன் போட்டும் கேக்கலாம், தப்பில்லை😎!) ஆனால், இணையவன் ஏற்கனவே கேட்டுக் கொண்டது போல, செயற்கை நுண்ணறிவு தயாரித்த போலி வீடியோக்கள், படங்களை இங்கே இணைத்து யாழ் களத்தைக் குப்பைத் தொட்டியாக்காமல் இருங்கள். குப்பை கொட்டுவதற்குரிய போதிய இடத்தை எக்ஸ், முகநூல் போன்றவை உங்கள் போன்றோருக்குத் தந்திருக்கும் நிலையில், தமிழர்களுக்கென்று இருக்கும் ஒரே தளத்தில் வந்து குப்பை கொட்டுவது கண்டிக்கத் தக்கது!
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான், சிரியா, இராக், லிபிய இல் இருந்து மிகவும் வேறுபட்டது. கடைசி மூன்றுக்கும் இணையில் ஒற்றுமை ஒரேயொரு இறுக்கமான (தனிமனித) தலைமை . ஷா இன் ஆட்சியில் ஈரான் அப்படியே இருந்தது, வெளியார் (cia, moosad, அமெரிக்கா. மேட்ற்கு, இஸ்ரேல்) மிகவும் ஆதரவு அளித்தும் அப்படி ( சிரியா, இராக், லிபிய போல ) இருஙக ஷாவின் ஆட்சி தூக்கி எறியப்பட்டது. (உண்மையில் ஷாவின் ஆட்சி அப்படி தூக்கி எறியப்படும் என்று கனவில் கூட cia நம்பவில்லை. (உண்மையில் ஷாவின் ஆட்சி அப்படி தூக்கி எறியப்படும் என்று கனவில் கூட cia நம்பவில்லை. இதை முன்பு அறிவேன் வேறு ஏதோ ஒரு வரலாற்று குறிப்பில் வாசித்த நினைவு. அனால் இப்பொது வந்துள்ள ஊடக பதிவு உறுதி செய்கிறது. https://www.theguardian.com/world/2025/jun/22/iran-israel-us-alliance-and-enemies) இபோஹையா ஈரான் அப்படி இல்லை ஆட்சியில். ஒரு பக்கம் இஸ்லாமிய புரட்சி, அதை பாதுகாப்பது, ஆனால் யாப்பின் வழியாக, மறு பக்கம் அதிபர் தேர்தலில் ஹெரிவு செய்யப்படுவது, அதாவது அதிகாரம் குவிக்கப்படாமல் பகிர, பரவப்படுவது. (இஸ்லாமிய (அரசாங்க / அரசு) பக்கம் கிட்டத்தட்ட முடியை போல, அனால் வேண்டுமாயின் அரசாங்கத்தில் தலையிடலாம்) இஸ்லாமிய அரசாங்க பக்கத்தில் கூட, moderates, hardliners என்று. ஈரானின் அதிபர் அண்மையில் ஒரு உயர் நிலை அதிகாரியை கூட பாகவி நீக்கி இருந்தார், ஏனெனில் இப்படியாக கடின காலத்தில் அவர் உல்லாச பிரயாணம் செய்தற்காக. (இஸ்லாமிய புரட்சி பக்கம் அதிபர் பீடத்தில் தலையிடாது. அதிபர் பீடம் இஸ்லாமிய புரட்சியை மதிக்கவேண்டும் என்பதே நிபந்தனை. இது பொதுவாக பிரச்சனை இல்லை) BBC NewsIranian president sacks deputy for 'lavish' Antarctic cruisePresident says trip by Shahram Dabiri, the vice-president for parliamentary affairs, was "indefensible" while Iran's economy suffers. இதனால்பெரும்பாண்மை மக்கள் அரசாங்கத்தில் இருந்து எதோ ஒரு விதத்தில் பயனை பெறுவது. இதே போலவே, IRGC (நோக்கம் இஸ்லாமிய புரட்சியை பாதுகாப்பது) , மரபுவழி இராணுவம் (Artesh, நிலப்புல ஒருமைப்பாட்டை பாதுகாப்பது) ஈரானில், இரண்டும் வேறு, வேறு அமைப்புகள். இப்படியான அமைப்பு இருந்ததாலேயே இரான் 24 மணித்தியாலத்தில் முதல் அடியில் இருந்து மீண்டதன் ஒரு முக்கிய காரணம். (வேறு திரியில் சொல்லி இருக்கிறேன், ஒவ்வொரு அரசும் அவற்றின் அரச /அரசங்க தேவைக்கு ஏற்ப ஆகி கொள்ளும் என்று, மேற்கின் வழிதான் இருக்க வேண்டும் என்று இல்லை) இவை எல்லாம் இணங்குவது அணுத்துறையில். ஹாமெனி தனக்கு எதாவது நடந்து இல்லை என்றால், அடுத்த படி எது என்பதை கூட இரான் முடிவு எடுத்துவிட்டது. இது காட்டுவது, இரான் அரசாங்கம் அமைப்பு அடிப்படையில், தனிமனித அடிப்படடையில் இல்லை (அது மேற்கின், us , இஸ்ரேல் இந்த பிரச்சாரம், அதை இங்கே சிலர் காவுவது, முல்லாக்கள் என்று). என்னவென்றால் இதை மேற்கு , இஸ்ரேல் ஐ அடிக்க விதன் மூலம் முழு ஈரானுக்கும் மானப் பிரச்சனை ஆக்கி விட்டது. காரணம், எந்தவித வெளி உதவியும் இல்லாமல் இரான் அணுத்துறையை கட்டி எழுப்பியது, சும்மா விளையாட்டு இல்லை அத்துடன், covid இல் மேற்கு நடந்து கொண்ட விதத்தை இரான் நினைவு ஊட்டினாலே போதும், மேற்கை, us இஸ்ரேல் ஐ எதிர்க்க. இது எனது தனிப்பட்ட புரிவு.
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் துரோகத்தால் வீழ்ந்தது😥 அதை ஈந்த போரிலின் போது பார்த்து விட்டடேன் ....................ஈழத்தில் ஒரு கருணா , ஈரானில் பல நூறு கருணாக்கள் , அது தான் ஈரான் அரசு ஒவ்வொருதராக வேட்டையாடி தூக்கில போடினம் , தாய் நாட்டை காட்டி கொடுப்பதும் பெத்த தாயை இன்னொருதனுடன் கூட்டி கொடுப்பதுக்கு நிகரானது...................அண்ண கச்சேரி இன்னும் முடிய வில்லை ஈரான் வெளிவிவகார அமைச்சர் ரஸ்சியா போய் இருக்கிறார் , இன்று மான்புமிகு புட்டினுடன் பேச இருக்கிறார் , ஈரானும் ரஸ்சியாவும் இந்த ஆண்டு ஆரம்பத்தில் இரு நாட்டு பாதுகாப்புக்கு ஒரு ஒப்பந்தம் போட்டவை பாப்போம்.........................செய்திகள் வருகிறதே அமெரிக்காவில் ரம்புக்கு கடும் எதிர்ப்பு என , உலகில் அமைதிய நிலை நாட்ட போகிறேன் என சொல்லி ஆட்சிக்கு வந்து , எங்கையோ இருக்கும் ஈரானுடன் கைவைத்தது உலக அளவில் அமெரிக்காவுக்கு கெட்ட பெயர் , இதை தான் ரம்ப் ஆசை பட்டாரா.....................நானும் ஆரம்பத்தில் நினைச்சேன் இவர் உக்கிரேன் ரஸ்சியா போரை நிறுத்தி உலகில் அமைதியை ஏற்படுத்துவார் என அது நடக்க வில்லை , வெள்ளைமாளிகையில் செலன்ஸ்கிக்கு என்ன சொன்னார் , நீ மூன்றாம் உலக போருக்கு திட்டம் தீட்டுகிறாய் என , ரம்ப் ஈரான் மீது கைவைத்ததால் மூன்றாம் உலக போரை இவரே ஆரம்பிச்சு வைப்பார் போல் தெரிகிறது.................... நான் அந்தக் காலம் தொட்டு அமெரிக்கன் விளையாட்டுக்களை அதிகம் நேசித்து விரும்பி பார்ப்பேன் , அமெரிக்கன் அரசியலை கண்ணிலும் காட்டக் கூடாது அமெரிக்கா அரசியல் குழந்தை பிள்ளை தனமான அரசியல் அண்ணா.......................
தமிழ் அரசியல்வாதிகள் உட்பட 28 பேர் மீது சொத்துக்கள் தொடர்பில் விசாரணை
சனாதிபதியின் பதவியேற்பில்....ஒற்றைகண் சிமிட்டி அவரை குளிர்வித்ததை ...நான் யாழ் களத்தில் ஏற்கனவே எழுதியிருந்தேன்..
இரான் மீது அமெரிக்கா தாக்குதல்
அமெரிக்கா ஈரான் மீது இராட்சத குண்டுகளைப் போட்டு விட்டது என்ற செய்தியைக் கேட்டவுடன், இவர்கள் இப்படிச் செய்து விட்டார்களே என்ற ஒரு பெருத்த ஏமாற்றமும், இப்போது கூட யோசனையாகவுமே இருக்கின்றது. உலகம் ஒரு ஒழுங்கில் இல்லாமல், பலம் உள்ளவர்கள் எதையும், எங்கேயும் செய்யலாம் என்பது எப்படியான ஒரு உலகத்தை கட்டமைத்துக் கொண்டிருக்கின்றது. கடந்த நான்கு வருடங்களாக இப்படியான தான்தோன்றித்தனமான நிகழ்வுகள் எத்தனை ஆரம்பிக்கப்பட்டு, முழு உலகமுமே அவற்றின் பாதிப்புகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. உலக சுகாதார மையத்தில் தலைமை விஞ்ஞானிகளில் ஒருவராக இருந்த தமிழ் பெண்மணி ஒருவரின் பேட்டி ஒன்று கடந்த வாரம் ஒரு இந்திய தமிழ் தொலைக்காட்சிகளில் போனது. கோவிட் வைரஸ் எங்கே ஆரம்பித்திருக்கலாம் என்ற மூன்று ஊகங்களை சொல்லி, அதில் ஒன்றை முற்றாக நிராகரித்து விட்டு, மற்றைய இரு ஊகங்களையும் உறுதிப்படுத்தி, உரிய நடவடிக்கைகளை எடுத்து, எதிர்காலத்தில் இவ்வாறான ஒன்று மீண்டும் நிகழாமல் தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க முடியாமல் இருக்கும் உலக சுகாதார மையத்தின் நிலையைச் சொன்னார். இந்தப் பெரிய நாடுகளுக்கு கொஞ்சம் கூட, தங்கள் நலன்கள் தவிர, அக்கறை என்பதே கிடையாது. சில தலைவர்களும் அப்படியே. மிகவும் முன்யோசனையற்ற ஏட்டிக்குப் போட்டியான செயல்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். சர்வாதிகாரிகளும், மத/இன அடிப்படைவாதிகளும் மட்டும் இல்லை, ஜனநாயக வழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் இப்படியே செய்வது ஆபத்தான ஒரு எடுத்துக்காட்டு.
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
INNINGS BREAK 1st Test, Leeds, June 20 - 24, 2025, India tour of England India (96 ov) 471 & 364 England 465 Day 4 - Session 3: India lead by 370 runs. Current RR: 3.79 • Min. Ov. Rem: 17 • Last 10 ov (RR): 29/4 (2.90)
பசியின் வலி
எந்த மொழியானாலும் பசியின் மொழி அழுகை.
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இது அடிக்கடி இஸ்ரேலில் வந்து போகும் தடை தான், ஆனால் முக்கியமாக பாதுகாப்புப் படையுடன் தொடர்புடைய ஏரியாக்களின் தகவல்கள் வெளிவராமல் தடுப்பதே நோக்கம். கீழே இருப்பது அல் ஜசீராவில் இருக்கும் தடை பற்றிய பட்டியல்: Specifically, journalists and editors are prohibited from: Filming or broadcasting images from impact sites, particularly near military installations. Using drones or wide-angle cameras to show impact areas. Detailing the precise location of affected areas near security installations. Broadcasting images of Israeli missiles being launched or of Iranian missiles being intercepted. The directive also bans the sharing of videos from social media without prior review by the censor, cautioning – as a side note – that some may be “enemy-generated fake news”. ஈரானில் இணையச் சேவையையே முடக்கி, ஆமை வேகத்தில் வைத்திருக்கிறார்களாமே? முல்லாக்களின் "குரல் தரவல்ல அதிகாரி" உங்களுக்கே தெரியவில்லையா😂?
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
Israel vs Iran: Nuclear Weapons யார் வைத்திருப்பது என முடிவு செய்வது யார்? Explained 30 ஆண்டுகளுக்கும் மேலாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதில் இருந்து சில படிகள் தொலைவில் இருப்பதாக பலமுறை கூறியுள்ளார். இப்போது மீண்டும், இரான் அணு ஆயுதங்களை உருவாக்கி வருவதாகவும், இரானின் அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவும் இரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி இருக்கிறது. ஆனால் இரான் உண்மையில் அணு ஆயுதங்களை உருவாக்குகிறது என்பதற்கு உறுதியான சான்றுகள் உள்ளனவா? மேலும், இஸ்ரேலின் அணு ஆயுதக் களஞ்சியம் பற்றி U.S. அமைதியாக இருப்பது ஏன்? Now once again, reports suggest that Iran is developing nuclear weapons, and Israel has reportedly attacked Iran’s nuclear facilities. U.S. President Donald Trump has gone as far as to demand Iran’s unconditional surrender. But is there solid evidence that Iran is indeed building nuclear arms? And why is the U.S. silent about Israel’s nuclear arsenal? #Iran #Israel #Nuclear இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
பசியின் வலி
பசியின் வலி
சிரிக்கவும் சிந்திக்கவும் .
ஊரின் பெயர் ஒரு கோடி. 🙂
தமிழ் அரசியல்வாதிகள் உட்பட 28 பேர் மீது சொத்துக்கள் தொடர்பில் விசாரணை
ரிஷாட் பதியுதீனின் பெயர் இதில் இல்லாத படியால்... தேசிய மக்கள் சக்தியின் விசாரணையில் சந்தேகம் ஏற்படுகின்றது.
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
நான் மூன்று உண்மையை சொல்லும் யூடுப்பை பார்ப்பேன் , மற்றம் படி பார்ப்பது கிடையாது.................இஸ்ரேல் தனக்கு ஏற்பட்ட அழிவுகளை சில நாள் மூடி மறைத்தது.................சர்வதேச ஊடகங்கள் தொட்டு உள்ளூரில் வசிப்பவர்கள் காணொளி பிடிச்சு அதை வட்சாப் மூலம் அனுப்பினால் சிறையில் அடைக்கப் படுவார்கள் என இஸ்ரேல் அரசால் விடுக்கப் பட்ட எச்சரிக்கை....................... தங்கட ஜடோம தாண்டி எதுவும் வந்து விடாது என்று நினைத்த இஸ்ரேல் , இப்படி ஈரான் முரட்டுதனமாக தாக்குவார்கள் என எதிர் பார்த்து இருந்து இருக்க மாட்டினம்........................... அது சரி தோழர் இப்ப உங்களை யாழில் பெரிதாக காண முடிவதில்லை.........................................
இரான் மீது அமெரிக்கா தாக்குதல்
ஏழு பி-2 குண்டு வீச்சு விமானங்கள் - 18 மணிநேர பயணம் - நடுவானில் எரிபொருள் நிரப்புதல் - கவனத்தை திசை திருப்பிய போலி விமானங்கள் - அமெரிக்கா ஈரானின் அணுஉலைகளை தாக்கியது எப்படி? Published By: RAJEEBAN 23 JUN, 2025 | 12:53 PM bbc இருவழிப் பயணம் 18 மணி நேரப் பயணம் பல முறை நடுவானில் எரிபொருள் நிரப்புதல் தொடர்ச்சியான ஏமாற்று வேலைகள் - ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்கும் பணி இப்படித்தான் முடிந்தது என்று அமெரிக்க இராணுவத்தின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் அதிகாரியும் கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவருமான நான்கு நட்சத்திர ஜெனரல் டான் கெய்ன் தெரிவித்தார். அமெரிக்கா 'ஒபரேஷன் மிட்நைட் ஹம்மர்' என்று அழைப்பதன் முழு தாக்கமும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் தாக்குதல்களுக்கு சில மணிநேரங்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை காலை பென்டகன் மாநாட்டில் சிக்கலான பணி எவ்வாறு வெளிப்பட்டது என்பதற்கான காலவரிசை வெளியானது அமெரிக்க குண்டுவீச்சுக்காரர்கள் "உலகத்திற்கு தெரியாமல் உள்ளே சென்று(ஈரான்) அங்கிருந்து வெளியேறினர் என " என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் செய்தியாளர்களிடம் கூறினார். நள்ளிரவுக்குப் பிறகு செயலாளர் ஹெக்ஸெ அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பென்டகன் அதிகாரிகளுடன் வெள்ளை மாளிகையில் உள்ள சூழ்நிலை அவதானிப்பு அறையில் மிசோரியின் கிராமப்புறத்தில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்திலிருந்து ஒரு விமானக் குழு புறப்படுவதைப் பார்த்தபோது இது அனைத்தும் தொடங்கியது. இருளின் மறைவின் கீழ் பி-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் வைட்மேன் விமானப்படை தளத்திலிருந்து காலை 00:01 மணிக்கு (05:01 BST காலை 05:01 மணிக்கு) புறப்பட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது. அவர்களின் இறுதி இலக்கு: ஈரானின் மிகவும் பாதுகாப்பான அணுசக்தி தளங்கள். ஒலியின் வேகத்திற்கு சற்றுக் குறைவாக பயணிக்கும் சப்சோனிக் ஜெட் விமானங்கள் 18 மீ (60 அடி) ஆழத்திற்கு மேல்கொங்கிறீட்டை ஊடுருவிச் செல்லும் திறன் கொண்ட சக்திவாய்ந்த "பதுங்கு குழியை அழிக்கும்" குண்டுகளுடன் அட்லாண்டிக் பெருங்கடலின் மீது பறந்தன. இது ஈரானின் ஃபோர்டோ அணுசக்தி செறிவூட்டல் நிலையத்தைத் தாக்கத் தேவையான ஆயுதமாகும். இது ஒரு மலையின் அடியில் நிலத்தடியில் புதைந்து கிடக்கிறது மற்றும் நாட்டின் அணுசக்தி திட்டத்தின் மையமாகக் கருதப்படுகிறது. உலகில் இந்த வகை ஆயுதங்களை வைத்திருக்கும் ஒரே நாடு அமெரிக்கா மட்டுமே. ஆனால் உலகம் இன்னும் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. அமெரிக்காவின் குவாம் தீவுப் பகுதிக்கு குண்டுவீச்சு விமானங்கள் அனுப்பப்பட்டதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து அனைவரின் பார்வையும் மேற்கு நோக்கி பசிபிக் பெருங்கடலை நோக்கி இருந்தது. "ஈரான் மீதான இஸ்ரேலின் போரில் அமெரிக்கா இணைவது குறித்த விவாதங்களுடன் இந்த நிலைப்பாடு அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படவில்லை என்றாலும் இந்த தொடர்பை சிலர் சந்தேகிப்பார்கள்" என்று பிபிசி அப்போது எழுதியது. பசிபிக் பெருங்கடலுக்கு மேலே மேற்கு நோக்கி பறந்த விமானங்கள் "மிகக் குறைந்த எண்ணிக்கையிலான திட்டமிடுபவர்கள் மற்றும் முக்கியத் தலைவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு ஏமாற்று முயற்சி" என்று ஜெனரல் கெய்ன் கூறினார். "ஒவ்வொன்றும் இரண்டு குழு உறுப்பினர்களைக் கொண்ட ஏழு பி-2 ஸ்பிரிட் குண்டுவீச்சு விமானங்களைக் கொண்ட முக்கிய தாக்குதல் விமானங்கள் குறைந்தபட்ச தகவல்தொடர்புகளுடன் கிழக்கு நோக்கி அமைதியாகச் சென்றது" என்று அவர்கூறினார். அந்த இராணுவ விமானங்கள் விமான கண்காணிப்பு வலைத்தளங்களில் தோன்றவில்லை, இதனால் பென்டகனின் நிகழ்வுகள் குறித்த விளக்கத்தை பிபிசி சுயாதீனமாக சரிபார்க்க கடினமாக உள்ளது. மேலும் ஒரே இரவில் தளங்களில் ஏற்பட்ட சேதத்தின் அளவைக் காட்ட செயற்கைக்கோள் படங்கள் உதவக்கூடும் என்றாலும் அவை எப்போது தாக்கப்பட்டன என்பதை அவர்களால் சரியான நேரங்களை நமக்குச் சொல்ல முடியாது. இந்த விமானங்கள் மத்திய கிழக்கை அடைந்தபோது 17:00 EDT (22:00 BST) அளவில் எதிரிபடையினர் மற்றும் தரையிலிருந்து வான் ஏவுகணைகளில் இருந்து குண்டுவீச்சு விமானங்களைப் பாதுகாக்க உதவிய துணை விமானங்களும் அதனுடன் இணைந்தன. ஜெனரல் கெய்ன் இதை "சிக்கலான இறுக்கமான நேர சூழ்ச்சி" என்று கூறினார். ஆனால் ஈரானிய போர் விமானங்கள் புறப்படவில்லை, ஈரானின் வான்பாதுகாப்பு ஆயுதங்கள் ஒரு தாக்குதலை கூட மேற்கொள்ளவில்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். "ஈரானிய வான்வெளியில் இஸ்ரேலிய ஆதிக்கம் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் தண்டனையின்றி செயல்படுவதற்கான உந்துதலைத் தூண்டியது" என்று வாஷிங்டன் டிசியில் உள்ள மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் ஏவுகணை பாதுகாப்பு நிபுணர் பேட்ரிக்ஜா பாசில்சிக் பிபிசி வெரிஃபைக்கு தெரிவித்தார். அடுத்த ஒரு மணி நேரமும் நாற்பது நிமிடங்களும் ஜெனரல் கெய்ன் பொதுமக்களிற்கு இதுவரை தெரியாத விபரங்களை வெளியிட்டார். சில நிகழ்வுகளுக்கான விளக்கக் குறிப்பு சில நிகழ்வுகளுக்கான நேரங்களை வழங்கியிருந்தாலும் குண்டுவீச்சு விமானங்களின் பயணத்தைக் காட்டும் வரைபடம் ஒரு குறிப்பிட்ட விமானப் பாதை அல்ல மேலும் வழங்கப்பட்ட இரண்டு பதிப்புகளில் சற்று வேறுபட்டது. ஈரானின் அணுசக்தி ஆட்சியை அமெரிக்கா "அழித்துவிட்டதாக" கூறி அடுத்தடுத்த நிகழ்வுகளை முழுமையான வெற்றியாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் சேதத்தின் உண்மையான அளவு மற்றும் அதன் பின்விளைவுகள் இன்னும் அளவிடப்படவில்லை. தாக்குதல்களை ஈரான் உறுதிப்படுத்தியுள்ள போதிலும் சேதத்தின் அளவைக் குறைத்துள்ளது மற்றும் நிகழ்வுகளின் வரிசை குறித்த குறிப்பிட்ட கணக்கை வழங்கவில்லை. சுமார் 17:00 EDT (22:00 BST) மணிக்கு அரேபிய கடலில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து சுமார் இரண்டு மில்லியன் மக்கள் வசிக்கும் இஸ்பஹானுக்கு அருகிலுள்ள அணுசக்தி தளத்தை நோக்கி 25க்கும் மேற்பட்ட டொம்ஹவுக் தரைவழி தாக்குதல் கப்பல் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். அங்குள்ள அணுசக்தி நிலையம் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் உள்நாட்டில் இருந்தாலும் விமானங்கள் இரகசியமாக தங்கள் "பதுங்கு குழி" குண்டுகளை மற்ற இரண்டு அணுசக்தி தளங்கள் மீது வீசிய அதே நேரத்தில் கப்பல் ஏவுகணைகள் தாக்கும் அளவுக்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் நெருக்கமாக இருந்தன என்று புதிய அமெரிக்க பாதுகாப்பு மையத்தின் பாதுகாப்பு நிபுணர் டாக்டர் ஸ்டேசி பெட்டிஜான் கூறினார். இதன் பொருள் அமெரிக்கா "பல தளங்கள் மீது ஒருங்கிணைந்த திடீர் தாக்குதலை" மேற்கொண்டது என்பதே என என்று அவர் பிபிசி வெரிஃபைக்கு தெரிவித்தார். அதேவேளை குண்டுவீச்சு விமானங்கள் ஈரானின் வான்பரப்பிற்குள் நுழைந்தன, அங்கு ஈரானை குழப்பும் பல தந்திரோபாயங்களை அமெரிக்கா முன்னெடுத்தது என பென்டகன் தெரிவித்துள்ளது. பின்னர் வான்வழித் தாக்குதல்கள் ஆரம்பமாகின. ஈரானில் அதிகாலை 02:00 மணிக்குப் பிறகு சுமார் 18:40 விமானங்களின் தலைமை விமானம் போர்டோவில் உள்ள அணுஉலையின் இரண்டு குண்டுகளை வீசியது.- வீசியது.( GBU-57 Massive Ordnance Penetrator weapons -) ஒரு உண்மையான போர் நடவடிக்கையில் "பதுங்கு குழித் தாக்குதல்" குண்டுகள் வீசப்பட்டது அதுவே முதல் முறை. இந்த வகை குண்டு கொன்கிறீட்டிற்குள் 18 மீற்றர் செல்லக்கூடியது( 60 அடி) அல்லது பூமிக்குள் 61மீற்றர் செல்லக்கூடியது. இந்த குண்டு வெற்றிகரமானது என உறுதியாக தெரிவிக்க முடியாவிட்டாலும் பூமிக்குள் 80 மீற்றர் உள்ளே இருக்கின்றது என கருதப்படும் போர்டோவின் சுரங்கப்பாதைகளை தாக்ககூடியது இந்த வகை குண்டுகள் மாத்திரமே. மீதமுள்ள குண்டுவீச்சு விமானங்கள் பின்னர் தங்கள் இலக்குகளைத் தாக்கின - மொத்தம் 14 MOP ஃபோர்டோ மீதும் இரண்டாவது அணுசக்தி நிலையம் நடான்ஸில் வீசப்பட்டதாகவும் பென்டகன் தெரிவித்துள்ளது. மேலும் ஃபோர்டோவிலிருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள இஸ்ஃபஹான் அணுசக்தி தளத்தில் டோமாஹாக் ஏவுகணைகள் தங்கள் இலக்குகளைத் தாக்கின. விமானங்கள் 18 மணிநேரம் காற்றில் செலவிட்ட பிறகு அனைத்து இலக்குகளும் சுமார் 25 நிமிடங்களில் தாக்கப்பட்டு 19:30 (00:30 BST)மணிக்கு ஈரானிலிருந்து அமெரிக்காவிற்குத் திரும்பும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது. மொத்தத்தில் சுமார் 75 துல்லிய வழிகாட்டப்பட்ட ஆயுதங்களும் 125 க்கும் மேற்பட்ட அமெரிக்க விமானங்களும் பயன்படுத்தப்பட்டன மேலும் செயலாளர் ஹெக்செத் இந்த பணி ஈரானின் அணுசக்தி திறன்களை "சக்திவாய்ந்த மற்றும் தெளிவான" அழிப்பதை வழங்கியதாகக் கூறினார். ஆனால் தாக்குதல்களின் முழு நோக்கத்திற்கான சான்றுகளை மதிப்பிடுவதற்கு நேரம் எடுக்கும் - பதுங்கு குழி வெடிக்கும் குண்டுகள் முக்கிய அணுசக்தி தளங்களில் எவ்வளவு ஆழமாக நிலத்தடியில் ஊடுருவ முடிந்தது என்பதைக் காண கூடுதல் காட்சிகள் தேவை. "இது உலகில் வேறு எந்த நாடும் நிகழ்த்தியிருக்க முடியாத நம்பமுடியாத சிக்கலான மற்றும் மிகவும் அதிநவீன தாக்குதலாகும்" என்று டாக்டர் பெட்டிஜான் கூறினார். "இந்த நடவடிக்கை தந்திரோபாய ரீதியாக வெற்றி பெற்ற போதிலும் ஈரானின் அணுசக்தி திட்டத்தை நிரந்தரமாக பின்னுக்குத் தள்ளும் இலக்கை இது அடையுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. https://www.virakesari.lk/article/218206
தமிழ் அரசியல்வாதிகள் உட்பட 28 பேர் மீது சொத்துக்கள் தொடர்பில் விசாரணை
அமசடக்கிகளாக இருக்கும் முசுலிம் அரசியல் வாதிகளும் உள்ளடக்கப் பட வேண்டுமே...அவர்கள் என்.பி.பியால் புனிதர்கள் ஆக்கப்படுகினமோ..