Aggregator
நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்
தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்
புட்டு கேட்ட கணவனை போட்டு தள்ளிய மனைவி கத்தியுடன் சரண்
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
இந்தியாவை உடைப்போம் என கோஷம்; மீண்டும் வெடித்த வன்முறை - வங்கதேசத்தில் நடப்பது என்ன?
இந்தியாவை உடைப்போம் என கோஷம்; மீண்டும் வெடித்த வன்முறை - வங்கதேசத்தில் நடப்பது என்ன?
வங்கதேசத்தில் இந்தியாவிற்கு எதிராக கோஷங்களும், மீண்டும் வன்முறையும் வெடித்துள்ளது.
வங்கதேசத்தில் தேர்தல்
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ராணுவத்தில் உள்ள இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் ஆட்சி கவிழ்ந்ததில் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது.

வங்கதேச இடைக்கால அரசின் பிரதமர் முகமது யூனுஸ் தலைமையில், ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது.
சமீபத்தில் இந்த வழக்கில் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை ஷேக் ஹசீனா நாடு கடத்தப்படாமல் இந்தியாவிலே இருந்து வருகிறார்.
வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தியாவிற்கு எதிராக கோஷம்
வங்கதேசத்தில் இந்தியாவிற்கு எதிரான கோஷங்கள் அதிகரித்து வருகிறது.
டிசம்பர் 15 ஆம் திகதி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய தேசிய குடிமக்கள் கட்சி தலைவர் ஹஸ்னத் அப்துல்லா, "இந்தியா பிரிவினைவாத சக்திகளுக்கு தங்குமிடம் அளித்தால், வங்கதேசமும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை பிரிக்கும்" என பேசினார்.

இதனால் கவலையடைந்த இந்திய அரசு, டெல்லியில் உள்ள வங்கதேச உயர் ஆணையரை இந்திய வெளியுறவுத் துறை நேரில் அழைத்து விளக்கம் கேட்டது.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்த ஹஸ்னத் அப்துல்லா, "ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் அளித்து வருவதால், இந்திய உயர் ஆணையரை நமது நாட்டை விட்டு வெளியேற்றி இருக்க வேண்டும்" என பேசினார்.
மேலும், டாக்காவில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் நோக்கி சில அமைப்புகள் பேரணி நடத்த முயன்றது.

இதனையடுத்து, வங்கதேசத்தில் உள்ள 3 விசா மையங்களை இந்தியா மூடியது. வங்கதேசத்தில் மீண்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது.
ஷெரீப் உஸ்மான் ஹாதி உயிரிழப்பு
கடந்த ஆண்டு ஆட்சி கவிழ்ப்பிற்கு காரணமான போராட்டத்தில் "இன்கிலாப் மோன்சோ"( Inqilab Moncho) அமைப்பு முக்கிய வகித்தது.

இந்த அமைப்பின் தலைவரான 32 வயதான ஷெரீப் உஸ்மான் ஹாதி(sharif osman hadi), கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி, டாக்காவில் உள்ள ஒரு மசூதியிலிருந்து வெளியேறியபோது முகமூடி அணிந்த நபர்களால் சுடப்பட்டார்.
சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் அவர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட திட்டமிட்டிருந்த நிலையில், தேர்தல் அறிவிப்பு வெளியான மறுநாள் அவர் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவரது மரண செய்தி வெளியானதும் ஆதரவாளர்கள் டாக்காவில் உள்ள சதுக்கத்தில் போராட்டத்தில் இறங்கினர்.
ஹிந்து இளைஞர் அடித்து கொலை இதனையடுத்து, போராட்டக்காரர்கள் வங்கதேசத்தின் முக்கிய நாளிதழ்களான 'தி டெய்லி ஸ்டார்' (The Daily Star), 'புரோதோம் ஆலோ' (Prothom Alo) ஆகிய அலுவலகங்களுக்கு தீ வைத்து சேதப்படுத்தினர்.
மேலும், சட்டகிராம் (Chattogram) நகரில் உள்ள இந்தியத் துணை உயர் ஆணையரின் இல்லம் மற்றும் இந்திய துணை தூதரகம் மீதும் கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உடனாடியாக விரைந்த காவல்துறையினர், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர்.

இதனையடுத்து, மைமென்சிங் மாவட்டத்தின் பல்லூகா உபஜிலா, துபாலியா பரா பகுதியில் ஜவுளி கடை ஒன்றில் பணியாற்றிய தீபு சந்திர தாஸ் என்பவர் முகமது நபி குறித்து அவதூறாக பேசியதாக கூறி அடித்து கொல்லப்பட்டார். மேலும், அவரை மரத்தில் கட்டி வைத்து தீ வைத்துள்ளனர்.

இந்தியாவை உடைப்போம் என கோஷம்; மீண்டும் வெடித்த வன்முறை -...இமயமலையில் அணு ஆயுதம் ஒன்றைத் தொலைத்த அமெரிக்கா... 60 வருடங்களாக நீடிக்கும் மர்மம்
இமயமலையில் அணு ஆயுதம் ஒன்றைத் தொலைத்த அமெரிக்கா... 60 வருடங்களாக நீடிக்கும் மர்மம்
சீனாவை ரகசியமாக கண்காணிக்கும் பொருட்டு அணு ஆயுதத்தால் இயங்கும் கருவி ஒன்றை இமயமலையில் நிறுவ முயன்ற அமெரிக்கா, அதை அங்கேயே தொலைத்த சம்பவம் அம்பலமாகியுள்ளது.
அணுசக்தி கருவி
1965 ஆம் ஆண்டு பனிப்போர் உச்சத்தில் இருந்தபோது, சீனா அணுகுண்டு சோதனை ஒன்றை முன்னெடுத்தது. இதனையடுத்து சீனாவின் ஏவுகணை சோதனையைக் கண்காணிக்கும் பொருட்டு இமயமலையின் நந்தா தேவி சிகரத்தின் மீது அணுசக்தியால் இயங்கும் ஆண்டெனா ஒன்றை நிறுவ அமெரிக்கா முடிவு செய்தது.

அமெரிக்க மற்றும் இந்திய மலையேறுபவர்கள் தங்கள் சரக்குகளை தயார் செய்தனர். ஒரு ஆண்டெனா, கேபிள்கள் மற்றும் SNAP-19C எனப்படும் 13 கிலோ ஜெனரேட்டர். அதன் உள்ளே புளூட்டோனியம் இருந்தது.
மலையேறுபவர்கள் தங்கள் இலக்கை நெருங்கவிருந்த நேரம், திடீரென்று ஒரு பனிப்புயல் மலையை மூடியது. கீழே முகாமில், அதிர்ச்சியில் உறைந்துபோன அதிகாரிகள் குழு அவர்களைத் தொடர்புகொண்டு, எடுத்துச்சென்ற பொருட்களை தொலைக்க வேண்டாம், பத்திரப்படுத்துங்கள் என வேண்டுகோள் விடுத்த நிலையில், மொத்த கருவிகளையும் சிகரத்தின் ஒருபகுதியில் மறைத்துவிட்டு, உயிருடன் தப்பியுள்ளனர்.
நாகசாகியில் வீசப்பட்ட அணு குண்டில் பயன்படுத்தப்பட்ட புளூட்டோனியத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு கொண்ட அணுசக்தி கருவி ஒன்றை அவர்கள் இமயமலையில் விட்டுச் சென்றனர்.
அதன் பின்னர் அந்த அணுசக்தி கருவிகளை எவரும் பார்த்ததில்லை. சீனாவை உளவு பார்க்க, அப்படி ஒரு திட்டத்தை முன்னெடுத்ததை அமெரிக்கா இதுவரை ஒப்புக்கொண்டதில்லை.
அமெரிக்காவின் உளவு அமைப்பான CIA முதலில் அந்த அணுசக்தி கருவியை காஞ்சன்ஜங்கா சிகரத்தில் நிறுவவே திட்டம் தீட்டியுள்ளது. உலகின் மூன்றாவது உயரமான சிகரம் அது.

பின்னர் இந்திய இராணுவம் தரப்பில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், நந்தா தேவி சிகரத்தின் மீது அணுசக்தியால் இயங்கும் ஆண்டெனாவை நிறுவ முடிவானது.
மூடி மறைக்கப்பட்டது
செப்டம்பர் மாதம் மலையேறத் தொடங்கிய குழு, அக்டோபர் 16 ஆம் திகதி பனிப்புயலில் சிக்கியுள்ளது. 1965ல் நடந்த இச்சம்பவத்தில், தொலைத்த அணு ஆயுத கருவிகளை மீட்க மீண்டும் அதே குழு, ஓராண்டுக்குப் பிறகு மலையேறியுள்ளது.
ஆனால் அவை மாயமாகியிருந்தது. பனிக்கட்டி, பாறை, உபகரணங்கள் என அனைத்தும் அந்தப் பனிச்சரிவால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. 1978 வரையில் அமெரிக்காவின் அந்த ரகசிய திட்டம் மூடி மறைக்கப்பட்டது.

ஆனால் ஒரு பத்திரிகையாளர் மொத்தமாக அம்பலப்படுத்த, அமெரிக்காவிற்கு எதிராக இந்தியாவில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தது. சிஐஏ எங்கள் தண்ணீரை விஷமாக்குகிறது என ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் ஒலித்தன.
ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரும் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்ம் ரகசியமாக முன்னெடுத்த பேச்சுவார்த்தைகளின் முடிவில், ஆர்ப்பாட்டங்கள் கைவிடப்படுவதாக தகவல் வெளியானது.
தற்போது வரையில், SNAP-19C எனப்படும் 13 கிலோ எடை கொண்ட புளூட்டோனியம் ஜெனரேட்டர் என்ன ஆனது என்பது மர்மமாகவே உள்ளது.
இமயமலையில் அணு ஆயுதம் ஒன்றைத் தொலைத்த அமெரிக்கா... 60 வரு...நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
வெள்ளத்தில் மூழ்கிய துபாய்.. மத்திய கிழக்கிலும் பதற்றத்தை ஏற்படுத்தும் காலநிலை மாற்றம்
வெள்ளத்தில் மூழ்கிய துபாய்.. மத்திய கிழக்கிலும் பதற்றத்தை ஏற்படுத்தும் காலநிலை மாற்றம்
மத்திய கிழக்கின் முக்கிய நகரமான துபாயில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக, பல பகுதிகள் இடுப்பளவு வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் காலநிலை மாற்றத்தால் கடுமையான பாதிப்புக்கள் பதிவாகி வரும் நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் தற்போது மழை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், துபாய் பொலிஸார், கனமழை பெய்து வருவதன் காரணமாக பாதுகாப்பு கவலைகள் எழும்பியுள்ளதால், அப்பகுதி மக்களை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மேலும், நகரின் சில பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்நகர மக்களின் தொலைபேசிகளுக்கு அனுப்பப்பட்ட எச்சரிக்கையில், வெள்ளிக்கிழமை நண்பகல் வரை மிகவும் கவனமாக இருக்கவும், தேவைப்படாவிட்டால் முற்றிலும் வெளியே செல்வதைத் தவிர்க்கவும் துபாய் பொலிஸார் வலியுறுத்தியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், குறிப்பாக துபாய் மற்றும் அபுதாபியில், கனமழை எச்சரிக்கைகள் நடைமுறையில் இருந்ததாக அந்நாட்டு தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கலீஜ் டைம்ஸின் அறிக்கையின்படி, மாறிவரும் வானிலை காரணமாக அபுதாபி சிவில் பாதுகாப்பும் மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு கோரியுள்ளது.
அத்துடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், திடீர் வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளிலிருந்து விலகி இருக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், சமூக ஊடக தளமான X இல், மழை மற்றும் மூடுபனி நகர வானலையை மூடியதால், சின்னமான புர்ஜ் கலீஃபா கிட்டத்தட்ட முற்றிலும் அடர்ந்த மேகங்களுக்குப் பின்னால் மறைந்திருப்பதைக் காட்டும் காட்சிகளும் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வெள்ளத்தில் மூழ்கிய துபாய்.. மத்திய கிழக்கிலும் பதற்றத்தை...