Aggregator

தீபாவளி பண்டிகையில் 26 இலட்ச அகல்விளக்குகள் ஏற்றி உலக சாதனை!

2 weeks 2 days ago
தீபாவளி பண்டிகையில் 26 இலட்ச அகல்விளக்குகள் ஏற்றி உலக சாதனை! உலகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி அயோத்தியின் சரயு நதிக்கரையில் ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கமாகும் இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி நகரில் சுற்றுலாத்துறை, மாநில அரசு மற்றும் அயோத்தி மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து மகா தீபத்திருவிழாவை நடத்தியது. இதன்போது சரயு ஆற்றின் கரையில் 26,17,215 இலட்சம் அகல் விளக்குகள் ஏற்றி உலக சாதனை படைக்கப்பட்டது. திரளான மக்கள் கலந்து கொண்டு தீபங்களை ஏற்றினர். உத்தரப் பிரதேசத்தின் முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத், 26 இலட்சத்திற்கும் அதிகமான விளக்குகளை ஏற்றியமைக்கு கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழ் பெற்றார். இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1450772

கரூர் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது எப்படி? ஆம்புலன்ஸ் வந்தது ஏன்? சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

2 weeks 2 days ago
👆 மேலே உள்ள காணொளியில் விளக்கம் கொடுப்பவர் மாரிதாஸ் என்கின்ற சிறை சென்ற பிஜேபி போராளியாவார்.

கட்டுநாயக்க விமான நிலைய Check-in நேரத்தில் மாற்றம்

2 weeks 2 days ago
இவ்வளவு நாளும் ஒழிச்சிருந்த பூனைக்குட்டி வெளியில வந்துட்டுதடோய்.....எப்ப பார்த்தாலும் இடம் வலம் நேர காலமில்லாமல் கட்டிக்கொண்டுபோற ஊத்தைப்பழக்கம்..😂

"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா? ராமனை தெய்வமாக்க வேண்டுமா?"

2 weeks 2 days ago
துளி/DROP:177["தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா?ராமனை தெய்வமாக்க வேண்டுமா?"[பகுதி :01]]- https://www.facebook.com/groups/978753388866632/permalink/1227695237305778/ துளி/DROP:179["தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா?ராமனை தெய்வமாக்க வேண்டுமா?"[பகுதி :02]]https://www.facebook.com/groups/978753388866632/permalink/1228633883878580/ துளி/DROP:190["தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா?ராமனை தெய்வமாக்க வேண்டுமா?"[பகுதி :03]]https://www.facebook.com/groups/978753388866632/permalink/1243879122354056/ துளி/DROP:197["தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா?ராமனை தெய்வமாக்க வேண்டுமா?"/பகுதி:04]:https://www.facebook.com/groups/978753388866632/permalink/1252527018155933/ துளி/DROP:204["தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா?ராமனை தெய்வமாக்க வேண்டுமா?"/பகுதி:05]:https://www.facebook.com/groups/978753388866632/permalink/1261114833963818/

அறுவை சிகிச்சை இல்லாத தீர்வு: புற்றுநோய் கட்டிகளை அழிக்கும் 'ஒலி அலைகள்'

2 weeks 2 days ago

அறுவை சிகிச்சையற்ற புற்றுநோய் சிகிச்சையின் புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைக்கும் அல்ட்ராசவுண்ட்

பட மூலாதாரம், Erica Bass/ Rogel Cancer Center/ Michigan Medicine

கட்டுரை தகவல்

  • ஜேமி டச்சார்ம்

  • 20 அக்டோபர் 2025, 06:48 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மனித உடலில் உள்ளுறுப்புகளை அறிய மருத்துவர்களுக்கு உதவுவதற்காக நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் அல்ட்ராசவுண்ட், இப்போது அதிக அதிர்வெண் கொண்ட குவிக்கப்பட்ட ஒலி அலைகள் (focused high frequency sound waves) மூலம் புற்றுநோய் கட்டிகளை அழிக்கும் புதிய வழிகளை வழங்குகிறது.

முனைவர் பட்ட மாணவராக இருந்தபோது ஜென் ஸு (Zhen Xu) தனது ஆய்வக நண்பர்களை எரிச்சலூட்டி இருக்காவிட்டால், கல்லீரல் புற்றுநோய்க்கான ஒரு அற்புதமான சிகிச்சையைக் கண்டுபிடித்திருக்க மாட்டார்.

2000-களின் முற்பகுதியில் அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உயிரி மருத்துவப் பொறியியல் (Biomedical Engineering) துறையில் பிஹெச்டி மாணவியாக இருந்த ஸு, அறுவை சிகிச்சை (invasive surgery) இல்லாமல் நோயுற்ற திசுக்களை அழிப்பதற்கான வழியைக் கண்டறிய முயன்றார். அதிக அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளைப் (அல்ட்ராசவுண்ட்) பயன்படுத்தி திசுக்களை இயந்திர ரீதியாக உடைக்கும் ஆய்வில் அவர் இறங்கினார். தனது கோட்பாட்டைப் பன்றியின் இதயங்கள் மீது பரிசோதித்து வந்தார்.

அல்ட்ராசவுண்ட் மனித காதுகளுக்குக் கேட்கக் கூடியது அல்ல. ஆனால், ஸு தனது பரிசோதனைகளில் மிகவும் சக்திவாய்ந்த ஒலி பெருக்கியைப் பயன்படுத்தியதால், அவர் ஆய்வகத்தைப் பகிர்ந்துகொண்ட மற்ற ஆராய்ச்சியாளர்கள் சத்தம் குறித்துக் குறை கூறத் தொடங்கினர். எனவே, தனது சகாக்களுக்குச் செவி சாய்த்து, அல்ட்ராசவுண்ட் துடிப்புகளின் வீதத்தை (rate of ultrasound pulses) ஒலி அளவை மனித காது கேட்கும் வரம்புக்கு வெளியே கொண்டு செல்லும் அளவுக்கு அதிகரிக்க முடிவு செய்தார்.

அவருக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக, ஒரு விநாடியில் ஏற்படும் துடிப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்தது (இது ஒவ்வொரு துடிப்பின் நீளத்தையும் ஒரு மைக்ரோ விநாடிக்குக் குறைத்தது). அவர் முன்பு முயற்சித்த அணுகுமுறையை விட உயிருள்ள திசுக்களில் மிகவும் பயனுள்ளதாகவும் அது இருந்தது. அவர் பார்த்துக் கொண்டிருந்த போதே, அல்ட்ராசவுண்ட் செலுத்தப்பட்ட ஒரு நிமிடத்திற்குள் பன்றியின் இதயத் திசுவில் ஒரு துளை தோன்றியது. "நான் கனவு காண்பதாக நினைத்தேன்," என்று தற்போது மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உயிர் மருத்துவப் பொறியியல் பேராசிரியராக இருக்கும் ஸு கூறுகிறார்.

பல பத்தாண்டுகளுக்குப் பிறகு, அல்ட்ராசவுண்டைப் பயன்படுத்தி புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் ஒரு புதிய சகாப்தத்தை கொண்டு வரும் பல அணுகுமுறைகளில் ஒன்றாக ஹிஸ்டோட்ரிப்சி (histotripsy) என்று இருக்கிறது. இது, அறுவை சிகிச்சை இல்லாமல், ஒலி அலைகள் மூலம் புற்றுநோய் கட்டிகளை நீக்க மருத்துவர்களுக்கு உதவுகிறது.

அறுவை சிகிச்சையற்ற புற்றுநோய் சிகிச்சையின் புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைக்கும் அல்ட்ராசவுண்ட்

பட மூலாதாரம், Erica Bass/ Rogel Cancer Center/ Michigan Medicine

படக்குறிப்பு, ஒவ்வொரு விநாடிக்கும் உற்பத்தி செய்யப்படும் அல்ட்ராசவுண்ட் துடிப்புகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, கருவியைத் திசுக்களை அழிப்பதில் சிறப்பாகச் செயல்பட வைத்தது.

ஹிஸ்டோட்ரிப்சி, கல்லீரல் புற்றுநோய் கட்டிகளுக்குச் சிகிச்சையளிப்பதற்காக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (FDA) அக்டோபர் 2023 இல் அங்கீகரிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு, ஸுவின் தொழில்நுட்பத்தை வணிகமயமாக்க அமைக்கப்பட்ட ஹிஸ்டோசோனிக்ஸ் (HistoSonics) என்ற நிறுவனம் நிதியளித்த ஒரு சிறிய ஆய்வில், இந்த அணுகுமுறை 95% கல்லீரல் புற்றுநோய் கட்டிகளுக்கு எதிராகத் தொழில்நுட்ப ரீதியான வெற்றியை அடைந்தது. வயிற்று வலி முதல் உள் ரத்தப்போக்கு வரை பக்க விளைவுகள் சாத்தியம் என்றாலும், சிக்கல்கள் அரிதானவை என்றும், இந்த முறை பொதுவாகப் பாதுகாப்பானது என்றும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

கடந்த ஜூன் மாதம், ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டன்தான் ஹிஸ்டோட்ரிப்சியை அங்கீகரித்த முதல் நாடானது. புதுமையான சாதனங்களுக்கான அணுகல் பாதை (Innovative Devices Access Pathway) முன்னோடித் திட்டத்தின்படி, தேசிய சுகாதார சேவையின் (NHS) கீழ் இந்தச் சிகிச்சை கிடைக்கப் பெறுகிறது.

இது புற்றுநோய் கட்டிகளை அழிக்கவும், புற்றுநோய் (metastatic disease) பரவலைக் கட்டுப்படுத்தவும், பிற புற்றுநோய் சிகிச்சைகளின் செயல்திறனை அதிகரிக்கவும் உதவும் என்று அடுத்தடுத்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவை அனைத்தும் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் செய்யப்படுகிறது.

அல்ட்ராசவுண்ட் எப்படி வேலை செய்கிறது?

பலருக்கு, "அல்ட்ராசவுண்ட்" என்ற வார்த்தை உடனடியாக கர்ப்ப காலத்தில் எடுக்கப்படும் சோனோகிராம் படங்களை நினைவுபடுத்துகிறது. சோனோகிராம் போன்ற ஒரு மருத்துவப் படத்தை உருவாக்க, ஒரு கையடக்கக் கருவி (transducer) அதிக அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளை உடலுக்குள் அனுப்புகிறது. அவை உள்ளே உள்ள திசுக்களில் இருந்து எதிரொலிக்கும். திரும்ப வரும் அலைகளைக் கருவியில் உள்ள ஒரு சென்சார் எடுத்துக்கொள்கிறது. அதன் செயல்பாடுகளை மின் சமிக்ஞைகளாக மாற்றுகிறது. அவை பின்னர் தோலின் அடியில் என்ன நடக்கிறது என்பதைக் காட்டும் ஒரு படத்தைப் உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

புற்றுநோய் சிகிச்சையில், அல்ட்ராசவுண்ட் அலைகள் ஒரு கட்டியின் ஒரு சிறிய பகுதியில் குவிக்கப்பட்டு அதை அழிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

அவை நுட்பமான "நுண் குமிழிகளை" (microbubbles) உருவாக்குகின்றன, அவை மைக்ரோ விநாடிகளில் விரிவடைந்து, பின்னர் சுருங்குகின்றன, அவ்வாறு செய்யும்போது புற்றுநோய் கட்டியின் திசுக்களை உடைக்கின்றன.

கல்லீரல் புற்றுநோய் சிகிச்சைக்காக, ஹிஸ்டோட்ரிப்சி சாதனங்கள் அல்ட்ராசவுண்ட் அலைகளை சுமார் இரண்டுக்கு நான்கு மில்லிமீட்டர் அளவுள்ள ஒரு குவிய மண்டலத்திற்குள் (focal zone) அனுப்புகின்றன – "அடிப்படையில், உங்கள் வண்ணம் தீட்டும் பேனாவின் நுனி போன்றது," என்று ஸு கூறுகிறார். பின்னர், சரியான பகுதியை இலக்கு வைக்க ஒரு ரோபோ கை (robotic arm) வழிகாட்டுகிறது.

அல்ட்ராசவுண்ட் ஒலி விரைவான துடிப்புகளாக வழங்கப்படுகிறது. இந்தத் துடிப்புகள் நுட்பமான "நுண் குமிழிகளை" உருவாக்குகின்றன, அவை மைக்ரோ விநாடிகளில் விரிவடைந்து, பின்னர் சுருங்குகின்றனர். அவ்வாறு செய்யும்போது கட்டியின் திசுக்களை அவை உடைக்கின்றன. இதனால் பின்னர் நோயாளியின் நோயெதிர்ப்பு அமைப்பு எஞ்சியவற்றைச் சுத்தம் செய்ய முடிகிறது.

இந்த முழு செயல்முறையும் வேகமானது, நச்சுத்தன்மையற்றது மற்றும் அறுவை சிகிச்சை அற்றது. பொதுவாக நோயாளிகள் அன்றே வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறார்கள் என்று ஸு கூறுகிறார். சரியான சிகிச்சையின் நேரம் மாறுபடும் என்றாலும், ஹிஸ்டோசோனிக்ஸ் படி, பெரும்பாலான நடைமுறைகள் ஒன்று முதல் மூன்று மணி நேரத்திற்குள் முடிந்துவிடுகின்றன. புற்றுநோய் கட்டிகள் பெரும்பாலும் ஒரே முறையில் அழிக்கப்பட்டு விடுகின்றன, இருப்பினும் பல அல்லது பெரிய கட்டிகள் உள்ள நோயாளிகளுக்குப் பல சுற்றுகள் தேவைப்படலாம்.

ஹிஸ்டோட்ரிப்சியின் நன்மைகள் நம்பிக்கையளிப்பதாக இருந்தாலும், தீர்க்கப்படாத கேள்விகள் உள்ளன. சிகிச்சைக்குப் பிறகு புற்றுநோய் மீண்டும் வருமா என்பதற்கு நீண்ட காலத் தரவு இன்னும் வலுவாக இல்லை. புற்றுநோய் கட்டிகள் உடலுக்குள் உடையும்போது வேறிடங்களில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை ஹிஸ்டோட்ரிப்சி ஏற்படுத்தக் கூடும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கவலை எழுப்பியுள்ளனர். இருப்பினும், இந்தக் கவலை இதுவரை விலங்கு ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்படவில்லை.

அறுவை சிகிச்சையற்ற புற்றுநோய் சிகிச்சையின் புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைக்கும் அல்ட்ராசவுண்ட்

பட மூலாதாரம், Erica Bass/ Rogel Cancer Center/ Michigan Medicine

படக்குறிப்பு, உருவாக்கப்படும் அல்ட்ராசவுண்ட் ஆற்றலின் அளவைச் தேவைக்கு ஏற்ப மாற்றுவதன் மூலம், ஹிஸ்டோட்ரிப்சி கருவி எவ்வளவு திசு பாதிக்கப்படுகிறது என்பதைக் கட்டுப்படுத்த முடியும்.

ஹிஸ்டோட்ரிப்சி எல்லா புற்றுநோய்களுக்கும் எதிராகச் செயல்படாமல் போகலாம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எலும்புகள் அல்ட்ராசவுண்ட் அதன் இலக்கை அடைவதைத் தடுக்கலாம், இதனால் சில இடங்களில் உள்ள புற்றுநோய் கட்டிகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியாது.

நுரையீரல்கள் போன்ற வாயு நிரம்பிய உறுப்புகளில் ஹிஸ்டோட்ரிப்சியைப் பயன்படுத்துவது அபாயகரமானதாக இருக்கலாம், இதனால் அருகிலுள்ள ஆரோக்கியமான திசுக்களுக்குச் சேதம் ஏற்படலாம்.

அல்ட்ராசவுண்ட் மூலம் புற்றுநோயை 'எரித்தல்'

புற்றுநோய் சிகிச்சையில் அல்ட்ராசவுண்டைப் பயன்படுத்தும் முதல் சிகிச்சை ஹிஸ்டோட்ரிப்சி அல்ல. அதிக-தீவிரமாக குவிக்கப்பட்ட அல்ட்ராசவுண்ட் (High-intensity Focused Ultrasound - HIFU), ஒரு பழமையான தொழில்நுட்பம் ஆகும். இதுவும் கட்டிகளைத் தாக்கப் பயன்படுத்தப்படலாம். குவிக்கப்பட்ட அல்ட்ராசவுண்ட், புற்றுநோய் கட்டியின் மீது செலுத்தப்பட்டு வெப்பத்தை உருவாக்குகிறது. இது அடிப்படையில் திசுக்களை "எரிக்கிறது" (cooks), என்று அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் அல்ட்ராசவுண்ட் புற்றுநோய் நோயெதிர்ப்பு சிகிச்சை மையத்தின் இணை இயக்குநரான ரிச்சர்ட் பிரைஸ் கூறுகிறார்.

"நீங்கள் ஒரு உருப்பெருக்கி கண்ணாடியை எடுத்து, வெயில் நாளில் ஒரு உலர்ந்த இலை மீது பிடித்தால், நீங்கள் இலையை எரிய வைக்க முடியும்," என்று பிரைஸ் கூறுகிறார். HIFU அடிப்படையில் புற்றுநோய் திசுக்களில் அதே காரியத்தைச் செய்கிறது, ஆனால் ஒலி ஆற்றலைப் பயன்படுத்துகிறது.

புற்றுநோயியல் துறையில், HIFU அநேகமாக புரோஸ்டேட் புற்றுநோய்க்குச் சிகிச்சையளிப்பதற்கான ஒரு வழியாக அறியப்படுகிறது. 2025 ஆய்வின்படி, இந்தச் சிகிச்சையும் அறுவை சிகிச்சையைப் போலவே கிட்டத்தட்ட சமமான செயல்திறன் கொண்டது. நோயாளிகள் விழித்தவுடன் வலி மற்றும் சிறுநீர் தொடர்பான சில பக்க விளைவுகளை அனுபவிக்கலாம், ஆனால் அறுவை சிகிச்சை போன்ற தீவிர சிகிச்சைகளுக்குப் பிறகு குணமடைய எடுத்துக்கொள்ளும் காலத்தை விட இது பொதுவாக வேகமாக இருக்கும்.

சிகிச்சையின் போது நோயாளிகள் நகர்வதைத் தவிர்க்கவும், அருகிலுள்ள உறுப்புகள் அல்லது திசுக்களுக்குத் தற்செயலான சேதத்தைத் தடுக்கவும், ஹிஸ்டோட்ரிப்சி மற்றும் HIFU சிகிச்சை இரண்டும் பொதுவாக பொது மயக்க மருந்துகளின் கீழ் செய்யப்படுகின்றன. ஆனால், ஹிஸ்டோட்ரிப்சி, HIFU ஆல் உருவாக்கப்படும் வெப்பத்தை உருவாக்குவதில்லை. இந்த வெப்பம் அருகில் உள்ள ஆரோக்கியமான திசுக்களைச் சேதப்படுத்தலாம்.

அறுவை சிகிச்சையற்ற புற்றுநோய் சிகிச்சையின் புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைக்கும் அல்ட்ராசவுண்ட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, HIFU என்பது புரோஸ்டேட் புற்றுநோய்க்குச் சிகிச்சையளிப்பதற்கு அல்ட்ராசவுண்டை பயன்படுத்தும் நிறுவப்பட்ட நடைமுறையாகும், இந்த நடைமுறை திசுக்களைச் சூடாக்குவதை நம்பியுள்ளது.

அல்ட்ராசவுண்ட் மற்றும் பிற மருந்துகள்

மற்றப் புற்றுநோய் சிகிச்சைகளுடன் இணைப்பதன் மூலமும் அல்ட்ராசவுண்டின் செயல் திறனை அதிகரிக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சமீபத்திய ஆய்வு, ரத்த ஓட்டத்தில் நுண் குமிழிகளைச் செலுத்தி, அல்ட்ராசவுண்ட் மூலம் தூண்டுவது ரத்த-மூளைத் தடையை (blood-brain barrier) தற்காலிகமாகத் திறக்க முடியும் என்று தெரிவிக்கிறது. இந்தத் தடை பொதுவாக ரத்த ஓட்டத்தில் உள்ள நச்சுகள் மூளைக்குள் நுழைந்து சேதப்படுத்துவதைத் தடுக்கிறது. ஆனால், புற்றுநோய் சிகிச்சையின் போது அதை வேண்டுமென்றே திறப்பது, மருந்துகள் அவை தாக்க வேண்டிய புற்றுநோய் கட்டிகளைச் சென்றடைய அனுமதிக்கும்.

கனடாவின் சன்னிப்ரூக் சுகாதார அறிவியல் மையத்தை சேர்ந்த விஞ்ஞானியான தீபா சர்மா, அந்த நன்மைகள் மூளைப் புற்றுநோயுடன் நின்றுவிடவில்லை என்று கூறுகிறார். அல்ட்ராசவுண்ட் மற்றும் நுண் குமிழிகளின் கலவையை அவர் பல புற்றுநோய் வகைகளில் ஆய்வு செய்துள்ளார். இது மருந்து விநியோகத்தை பரவலாக மேம்படுத்தும் என்று அவர் கண்டறிந்துள்ளார்.

"கதிர்வீச்சு சிகிச்சை புற்றுநோயைக் குணப்படுத்துகிறது, ஆனால் இது பல நீண்ட காலப் பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது," என்று சர்மா கூறுகிறார். அல்ட்ராசவுண்ட் தூண்டப்பட்ட நுண் குமிழிகளின் உதவியால் கதிர்வீச்சு சிகிச்சையின் விளைவுகளை மேம்படுத்த முடிந்தால், அதே சிகிச்சைப் பலன்களை பெற குறைந்த கதிர்வீச்சு சிகிச்சையை பயன்படுத்த முடியும். இதனால் பேரழிவுகரமான பக்க விளைவுகளையும் குறைக்கலாம் என்று மருத்துவர்கள் கோட்பாட்டளவில் நம்பலாம்.

அல்ட்ராசவுண்ட் நோயெதிர்ப்பு சிகிச்சைக்கும் (immunotherapy) ஒரு நல்ல இணையாகத் தோன்றுகிறது. இந்தச் சிகிச்சை அணுகுமுறை, மறைந்து இருக்கும் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுவதில் கவனம் செலுத்துகிறது.

குவிக்கப்பட்ட அல்ட்ராசவுண்ட், புற்றுநோய் கட்டிகளைச் சூடாக்கிச் சேதப்படுத்தும் போது, இந்தத் திசுக்களை நோயெதிர்ப்பு மண்டலத்திற்குக் கூடுதலாகக் தெரியும்படி செய்கிறது என்று அல்ட்ராசவுண்டை நோயெதிர்ப்பு சிகிச்சையுடன் இணைந்து பயன்படுத்துவதில் கவனம் செலுத்தும் பிரைஸ் கூறுகிறார்.

அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் புற்றுநோய்க்கு எதிராக இந்த இணை சிறப்பாக செயல்பட முடியுமா என்பதைக் கண்டறிவது எதிர்கால ஆராய்ச்சிக்கான ஒரு திசையாக இருக்கும். புற்றுநோய் உடல் முழுவதும் பரவும் போது, ஒரே ஒரு கட்டியை மட்டும் அகற்றுவது போதாது. எனவே, மெட்டாஸ்டேடிக் புற்றுநோய்க்குச் சிகிச்சை அளிப்பது மிகவும் கடினம்.

மருத்துவர்கள் அல்ட்ராசவுண்டைப் பயன்படுத்தி ஒரு கட்டியை உடைப்பதால், அதன் பண்புகளை நோயெதிர்ப்பு அமைப்பு அறியும். இதன் மூலம், உடலின் மற்ற இடங்களில் உள்ள புற்றுநோய் செல்களுக்கு எதிராக ஒரு அமைப்பு அளவிலான தாக்குதலை நோயெதிர்ப்பு அமைப்பு தொடங்குவதற்கு வழிவகுப்பதுதான் உச்சமாக இருக்கும் என்று பிரைஸ் கூறுகிறார்.

இது இன்னும் எந்த வகையான சோதனைகளிலும் பரிசோதிக்கப்படவில்லை, ஆனால் கோட்பாட்டளவில், "ஒரே ஒரு கட்டிக்குச் சிகிச்சை அளிப்பதன் மூலம் 10, 15, 20 கட்டிகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியும்," என்று பிரைஸ் கூறுகிறார்.

அறுவை சிகிச்சையற்ற புற்றுநோய் சிகிச்சையின் புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைக்கும் அல்ட்ராசவுண்ட்

பட மூலாதாரம், Erica Bass/ Rogel Cancer Center/ Michigan Medicine

படக்குறிப்பு, ஹிஸ்டோட்ரிப்சி டிரான்ஸ்யூசர் தலைப்பகுதி, திசுக்களை உடைக்கக்கூடிய நுண்ணிய குமிழிக் கூட்டத்தை (tiny cloud of bubbles) உருவாக்குகிறது

அல்ட்ராசவுண்ட் மற்றும் நோயெதிர்ப்பு சிகிச்சை குறித்த சோதனைகள் இன்னும் ஒப்பீட்டளவில் ஆரம்ப கட்டத்தில் உள்ளன என்று பிரைஸ் எச்சரிக்கிறார். இந்த இணைந்த அணுகுமுறை சிகிச்சையை எப்போது அல்லது எப்படி மாற்றும் என்பதை அறிய மேலும் பல ஆராய்ச்சிகள் தேவை.

அறுவை சிகிச்சை, கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு போன்ற பயனுள்ள ஆனால் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் சிகிச்சைகளை மாற்றுவதை அல்லது மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட புற்றுநோயியலில் அல்ட்ராசவுண்ட் அணுகுமுறை ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்குகிறது.

அல்ட்ராசவுண்ட் புற்றுநோய்க்கு ஒரு "அற்புதமான குணம் அளிப்பது" அல்ல, என்று ஸு கூறுகிறார். எந்தவொரு மருத்துவ சிகிச்சையைப் போலவே, இதற்கும் சில குறைபாடுகள் உள்ளன. ஆனால், பல தசாப்தங்களுக்கு முன்பு அவர் தனது ஆய்வக நண்பர்களை எரிச்சலூட்டும் சத்தத்தில் இருந்து விடுவித்ததைப் போலவே, அவரது கண்டுபிடிப்பும் – மற்ற விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் – வரும் ஆண்டுகளில் நோயாளிகளின் தேவையற்ற துன்பத்தைத் தவிர்க்க உதவும் என்று ஸு நம்புகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cy7e6p4ykl8o

அறுவை சிகிச்சை இல்லாத தீர்வு: புற்றுநோய் கட்டிகளை அழிக்கும் 'ஒலி அலைகள்'

2 weeks 2 days ago
பட மூலாதாரம், Erica Bass/ Rogel Cancer Center/ Michigan Medicine கட்டுரை தகவல் ஜேமி டச்சார்ம் 20 அக்டோபர் 2025, 06:48 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மனித உடலில் உள்ளுறுப்புகளை அறிய மருத்துவர்களுக்கு உதவுவதற்காக நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் அல்ட்ராசவுண்ட், இப்போது அதிக அதிர்வெண் கொண்ட குவிக்கப்பட்ட ஒலி அலைகள் (focused high frequency sound waves) மூலம் புற்றுநோய் கட்டிகளை அழிக்கும் புதிய வழிகளை வழங்குகிறது. முனைவர் பட்ட மாணவராக இருந்தபோது ஜென் ஸு (Zhen Xu) தனது ஆய்வக நண்பர்களை எரிச்சலூட்டி இருக்காவிட்டால், கல்லீரல் புற்றுநோய்க்கான ஒரு அற்புதமான சிகிச்சையைக் கண்டுபிடித்திருக்க மாட்டார். 2000-களின் முற்பகுதியில் அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உயிரி மருத்துவப் பொறியியல் (Biomedical Engineering) துறையில் பிஹெச்டி மாணவியாக இருந்த ஸு, அறுவை சிகிச்சை (invasive surgery) இல்லாமல் நோயுற்ற திசுக்களை அழிப்பதற்கான வழியைக் கண்டறிய முயன்றார். அதிக அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளைப் (அல்ட்ராசவுண்ட்) பயன்படுத்தி திசுக்களை இயந்திர ரீதியாக உடைக்கும் ஆய்வில் அவர் இறங்கினார். தனது கோட்பாட்டைப் பன்றியின் இதயங்கள் மீது பரிசோதித்து வந்தார். அல்ட்ராசவுண்ட் மனித காதுகளுக்குக் கேட்கக் கூடியது அல்ல. ஆனால், ஸு தனது பரிசோதனைகளில் மிகவும் சக்திவாய்ந்த ஒலி பெருக்கியைப் பயன்படுத்தியதால், அவர் ஆய்வகத்தைப் பகிர்ந்துகொண்ட மற்ற ஆராய்ச்சியாளர்கள் சத்தம் குறித்துக் குறை கூறத் தொடங்கினர். எனவே, தனது சகாக்களுக்குச் செவி சாய்த்து, அல்ட்ராசவுண்ட் துடிப்புகளின் வீதத்தை (rate of ultrasound pulses) ஒலி அளவை மனித காது கேட்கும் வரம்புக்கு வெளியே கொண்டு செல்லும் அளவுக்கு அதிகரிக்க முடிவு செய்தார். அவருக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக, ஒரு விநாடியில் ஏற்படும் துடிப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்தது (இது ஒவ்வொரு துடிப்பின் நீளத்தையும் ஒரு மைக்ரோ விநாடிக்குக் குறைத்தது). அவர் முன்பு முயற்சித்த அணுகுமுறையை விட உயிருள்ள திசுக்களில் மிகவும் பயனுள்ளதாகவும் அது இருந்தது. அவர் பார்த்துக் கொண்டிருந்த போதே, அல்ட்ராசவுண்ட் செலுத்தப்பட்ட ஒரு நிமிடத்திற்குள் பன்றியின் இதயத் திசுவில் ஒரு துளை தோன்றியது. "நான் கனவு காண்பதாக நினைத்தேன்," என்று தற்போது மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உயிர் மருத்துவப் பொறியியல் பேராசிரியராக இருக்கும் ஸு கூறுகிறார். பல பத்தாண்டுகளுக்குப் பிறகு, அல்ட்ராசவுண்டைப் பயன்படுத்தி புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் ஒரு புதிய சகாப்தத்தை கொண்டு வரும் பல அணுகுமுறைகளில் ஒன்றாக ஹிஸ்டோட்ரிப்சி (histotripsy) என்று இருக்கிறது. இது, அறுவை சிகிச்சை இல்லாமல், ஒலி அலைகள் மூலம் புற்றுநோய் கட்டிகளை நீக்க மருத்துவர்களுக்கு உதவுகிறது. பட மூலாதாரம், Erica Bass/ Rogel Cancer Center/ Michigan Medicine படக்குறிப்பு, ஒவ்வொரு விநாடிக்கும் உற்பத்தி செய்யப்படும் அல்ட்ராசவுண்ட் துடிப்புகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, கருவியைத் திசுக்களை அழிப்பதில் சிறப்பாகச் செயல்பட வைத்தது. ஹிஸ்டோட்ரிப்சி, கல்லீரல் புற்றுநோய் கட்டிகளுக்குச் சிகிச்சையளிப்பதற்காக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (FDA) அக்டோபர் 2023 இல் அங்கீகரிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு, ஸுவின் தொழில்நுட்பத்தை வணிகமயமாக்க அமைக்கப்பட்ட ஹிஸ்டோசோனிக்ஸ் (HistoSonics) என்ற நிறுவனம் நிதியளித்த ஒரு சிறிய ஆய்வில், இந்த அணுகுமுறை 95% கல்லீரல் புற்றுநோய் கட்டிகளுக்கு எதிராகத் தொழில்நுட்ப ரீதியான வெற்றியை அடைந்தது. வயிற்று வலி முதல் உள் ரத்தப்போக்கு வரை பக்க விளைவுகள் சாத்தியம் என்றாலும், சிக்கல்கள் அரிதானவை என்றும், இந்த முறை பொதுவாகப் பாதுகாப்பானது என்றும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. கடந்த ஜூன் மாதம், ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டன்தான் ஹிஸ்டோட்ரிப்சியை அங்கீகரித்த முதல் நாடானது. புதுமையான சாதனங்களுக்கான அணுகல் பாதை (Innovative Devices Access Pathway) முன்னோடித் திட்டத்தின்படி, தேசிய சுகாதார சேவையின் (NHS) கீழ் இந்தச் சிகிச்சை கிடைக்கப் பெறுகிறது. இது புற்றுநோய் கட்டிகளை அழிக்கவும், புற்றுநோய் (metastatic disease) பரவலைக் கட்டுப்படுத்தவும், பிற புற்றுநோய் சிகிச்சைகளின் செயல்திறனை அதிகரிக்கவும் உதவும் என்று அடுத்தடுத்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவை அனைத்தும் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் செய்யப்படுகிறது. அல்ட்ராசவுண்ட் எப்படி வேலை செய்கிறது? பலருக்கு, "அல்ட்ராசவுண்ட்" என்ற வார்த்தை உடனடியாக கர்ப்ப காலத்தில் எடுக்கப்படும் சோனோகிராம் படங்களை நினைவுபடுத்துகிறது. சோனோகிராம் போன்ற ஒரு மருத்துவப் படத்தை உருவாக்க, ஒரு கையடக்கக் கருவி (transducer) அதிக அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளை உடலுக்குள் அனுப்புகிறது. அவை உள்ளே உள்ள திசுக்களில் இருந்து எதிரொலிக்கும். திரும்ப வரும் அலைகளைக் கருவியில் உள்ள ஒரு சென்சார் எடுத்துக்கொள்கிறது. அதன் செயல்பாடுகளை மின் சமிக்ஞைகளாக மாற்றுகிறது. அவை பின்னர் தோலின் அடியில் என்ன நடக்கிறது என்பதைக் காட்டும் ஒரு படத்தைப் உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. புற்றுநோய் சிகிச்சையில், அல்ட்ராசவுண்ட் அலைகள் ஒரு கட்டியின் ஒரு சிறிய பகுதியில் குவிக்கப்பட்டு அதை அழிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. அவை நுட்பமான "நுண் குமிழிகளை" (microbubbles) உருவாக்குகின்றன, அவை மைக்ரோ விநாடிகளில் விரிவடைந்து, பின்னர் சுருங்குகின்றன, அவ்வாறு செய்யும்போது புற்றுநோய் கட்டியின் திசுக்களை உடைக்கின்றன. கல்லீரல் புற்றுநோய் சிகிச்சைக்காக, ஹிஸ்டோட்ரிப்சி சாதனங்கள் அல்ட்ராசவுண்ட் அலைகளை சுமார் இரண்டுக்கு நான்கு மில்லிமீட்டர் அளவுள்ள ஒரு குவிய மண்டலத்திற்குள் (focal zone) அனுப்புகின்றன – "அடிப்படையில், உங்கள் வண்ணம் தீட்டும் பேனாவின் நுனி போன்றது," என்று ஸு கூறுகிறார். பின்னர், சரியான பகுதியை இலக்கு வைக்க ஒரு ரோபோ கை (robotic arm) வழிகாட்டுகிறது. அல்ட்ராசவுண்ட் ஒலி விரைவான துடிப்புகளாக வழங்கப்படுகிறது. இந்தத் துடிப்புகள் நுட்பமான "நுண் குமிழிகளை" உருவாக்குகின்றன, அவை மைக்ரோ விநாடிகளில் விரிவடைந்து, பின்னர் சுருங்குகின்றனர். அவ்வாறு செய்யும்போது கட்டியின் திசுக்களை அவை உடைக்கின்றன. இதனால் பின்னர் நோயாளியின் நோயெதிர்ப்பு அமைப்பு எஞ்சியவற்றைச் சுத்தம் செய்ய முடிகிறது. இந்த முழு செயல்முறையும் வேகமானது, நச்சுத்தன்மையற்றது மற்றும் அறுவை சிகிச்சை அற்றது. பொதுவாக நோயாளிகள் அன்றே வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறார்கள் என்று ஸு கூறுகிறார். சரியான சிகிச்சையின் நேரம் மாறுபடும் என்றாலும், ஹிஸ்டோசோனிக்ஸ் படி, பெரும்பாலான நடைமுறைகள் ஒன்று முதல் மூன்று மணி நேரத்திற்குள் முடிந்துவிடுகின்றன. புற்றுநோய் கட்டிகள் பெரும்பாலும் ஒரே முறையில் அழிக்கப்பட்டு விடுகின்றன, இருப்பினும் பல அல்லது பெரிய கட்டிகள் உள்ள நோயாளிகளுக்குப் பல சுற்றுகள் தேவைப்படலாம். ஹிஸ்டோட்ரிப்சியின் நன்மைகள் நம்பிக்கையளிப்பதாக இருந்தாலும், தீர்க்கப்படாத கேள்விகள் உள்ளன. சிகிச்சைக்குப் பிறகு புற்றுநோய் மீண்டும் வருமா என்பதற்கு நீண்ட காலத் தரவு இன்னும் வலுவாக இல்லை. புற்றுநோய் கட்டிகள் உடலுக்குள் உடையும்போது வேறிடங்களில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை ஹிஸ்டோட்ரிப்சி ஏற்படுத்தக் கூடும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கவலை எழுப்பியுள்ளனர். இருப்பினும், இந்தக் கவலை இதுவரை விலங்கு ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்படவில்லை. பட மூலாதாரம், Erica Bass/ Rogel Cancer Center/ Michigan Medicine படக்குறிப்பு, உருவாக்கப்படும் அல்ட்ராசவுண்ட் ஆற்றலின் அளவைச் தேவைக்கு ஏற்ப மாற்றுவதன் மூலம், ஹிஸ்டோட்ரிப்சி கருவி எவ்வளவு திசு பாதிக்கப்படுகிறது என்பதைக் கட்டுப்படுத்த முடியும். ஹிஸ்டோட்ரிப்சி எல்லா புற்றுநோய்களுக்கும் எதிராகச் செயல்படாமல் போகலாம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எலும்புகள் அல்ட்ராசவுண்ட் அதன் இலக்கை அடைவதைத் தடுக்கலாம், இதனால் சில இடங்களில் உள்ள புற்றுநோய் கட்டிகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியாது. நுரையீரல்கள் போன்ற வாயு நிரம்பிய உறுப்புகளில் ஹிஸ்டோட்ரிப்சியைப் பயன்படுத்துவது அபாயகரமானதாக இருக்கலாம், இதனால் அருகிலுள்ள ஆரோக்கியமான திசுக்களுக்குச் சேதம் ஏற்படலாம். அல்ட்ராசவுண்ட் மூலம் புற்றுநோயை 'எரித்தல்' புற்றுநோய் சிகிச்சையில் அல்ட்ராசவுண்டைப் பயன்படுத்தும் முதல் சிகிச்சை ஹிஸ்டோட்ரிப்சி அல்ல. அதிக-தீவிரமாக குவிக்கப்பட்ட அல்ட்ராசவுண்ட் (High-intensity Focused Ultrasound - HIFU), ஒரு பழமையான தொழில்நுட்பம் ஆகும். இதுவும் கட்டிகளைத் தாக்கப் பயன்படுத்தப்படலாம். குவிக்கப்பட்ட அல்ட்ராசவுண்ட், புற்றுநோய் கட்டியின் மீது செலுத்தப்பட்டு வெப்பத்தை உருவாக்குகிறது. இது அடிப்படையில் திசுக்களை "எரிக்கிறது" (cooks), என்று அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் அல்ட்ராசவுண்ட் புற்றுநோய் நோயெதிர்ப்பு சிகிச்சை மையத்தின் இணை இயக்குநரான ரிச்சர்ட் பிரைஸ் கூறுகிறார். "நீங்கள் ஒரு உருப்பெருக்கி கண்ணாடியை எடுத்து, வெயில் நாளில் ஒரு உலர்ந்த இலை மீது பிடித்தால், நீங்கள் இலையை எரிய வைக்க முடியும்," என்று பிரைஸ் கூறுகிறார். HIFU அடிப்படையில் புற்றுநோய் திசுக்களில் அதே காரியத்தைச் செய்கிறது, ஆனால் ஒலி ஆற்றலைப் பயன்படுத்துகிறது. புற்றுநோயியல் துறையில், HIFU அநேகமாக புரோஸ்டேட் புற்றுநோய்க்குச் சிகிச்சையளிப்பதற்கான ஒரு வழியாக அறியப்படுகிறது. 2025 ஆய்வின்படி, இந்தச் சிகிச்சையும் அறுவை சிகிச்சையைப் போலவே கிட்டத்தட்ட சமமான செயல்திறன் கொண்டது. நோயாளிகள் விழித்தவுடன் வலி மற்றும் சிறுநீர் தொடர்பான சில பக்க விளைவுகளை அனுபவிக்கலாம், ஆனால் அறுவை சிகிச்சை போன்ற தீவிர சிகிச்சைகளுக்குப் பிறகு குணமடைய எடுத்துக்கொள்ளும் காலத்தை விட இது பொதுவாக வேகமாக இருக்கும். சிகிச்சையின் போது நோயாளிகள் நகர்வதைத் தவிர்க்கவும், அருகிலுள்ள உறுப்புகள் அல்லது திசுக்களுக்குத் தற்செயலான சேதத்தைத் தடுக்கவும், ஹிஸ்டோட்ரிப்சி மற்றும் HIFU சிகிச்சை இரண்டும் பொதுவாக பொது மயக்க மருந்துகளின் கீழ் செய்யப்படுகின்றன. ஆனால், ஹிஸ்டோட்ரிப்சி, HIFU ஆல் உருவாக்கப்படும் வெப்பத்தை உருவாக்குவதில்லை. இந்த வெப்பம் அருகில் உள்ள ஆரோக்கியமான திசுக்களைச் சேதப்படுத்தலாம். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, HIFU என்பது புரோஸ்டேட் புற்றுநோய்க்குச் சிகிச்சையளிப்பதற்கு அல்ட்ராசவுண்டை பயன்படுத்தும் நிறுவப்பட்ட நடைமுறையாகும், இந்த நடைமுறை திசுக்களைச் சூடாக்குவதை நம்பியுள்ளது. அல்ட்ராசவுண்ட் மற்றும் பிற மருந்துகள் மற்றப் புற்றுநோய் சிகிச்சைகளுடன் இணைப்பதன் மூலமும் அல்ட்ராசவுண்டின் செயல் திறனை அதிகரிக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சமீபத்திய ஆய்வு, ரத்த ஓட்டத்தில் நுண் குமிழிகளைச் செலுத்தி, அல்ட்ராசவுண்ட் மூலம் தூண்டுவது ரத்த-மூளைத் தடையை (blood-brain barrier) தற்காலிகமாகத் திறக்க முடியும் என்று தெரிவிக்கிறது. இந்தத் தடை பொதுவாக ரத்த ஓட்டத்தில் உள்ள நச்சுகள் மூளைக்குள் நுழைந்து சேதப்படுத்துவதைத் தடுக்கிறது. ஆனால், புற்றுநோய் சிகிச்சையின் போது அதை வேண்டுமென்றே திறப்பது, மருந்துகள் அவை தாக்க வேண்டிய புற்றுநோய் கட்டிகளைச் சென்றடைய அனுமதிக்கும். கனடாவின் சன்னிப்ரூக் சுகாதார அறிவியல் மையத்தை சேர்ந்த விஞ்ஞானியான தீபா சர்மா, அந்த நன்மைகள் மூளைப் புற்றுநோயுடன் நின்றுவிடவில்லை என்று கூறுகிறார். அல்ட்ராசவுண்ட் மற்றும் நுண் குமிழிகளின் கலவையை அவர் பல புற்றுநோய் வகைகளில் ஆய்வு செய்துள்ளார். இது மருந்து விநியோகத்தை பரவலாக மேம்படுத்தும் என்று அவர் கண்டறிந்துள்ளார். "கதிர்வீச்சு சிகிச்சை புற்றுநோயைக் குணப்படுத்துகிறது, ஆனால் இது பல நீண்ட காலப் பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது," என்று சர்மா கூறுகிறார். அல்ட்ராசவுண்ட் தூண்டப்பட்ட நுண் குமிழிகளின் உதவியால் கதிர்வீச்சு சிகிச்சையின் விளைவுகளை மேம்படுத்த முடிந்தால், அதே சிகிச்சைப் பலன்களை பெற குறைந்த கதிர்வீச்சு சிகிச்சையை பயன்படுத்த முடியும். இதனால் பேரழிவுகரமான பக்க விளைவுகளையும் குறைக்கலாம் என்று மருத்துவர்கள் கோட்பாட்டளவில் நம்பலாம். அல்ட்ராசவுண்ட் நோயெதிர்ப்பு சிகிச்சைக்கும் (immunotherapy) ஒரு நல்ல இணையாகத் தோன்றுகிறது. இந்தச் சிகிச்சை அணுகுமுறை, மறைந்து இருக்கும் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுவதில் கவனம் செலுத்துகிறது. குவிக்கப்பட்ட அல்ட்ராசவுண்ட், புற்றுநோய் கட்டிகளைச் சூடாக்கிச் சேதப்படுத்தும் போது, இந்தத் திசுக்களை நோயெதிர்ப்பு மண்டலத்திற்குக் கூடுதலாகக் தெரியும்படி செய்கிறது என்று அல்ட்ராசவுண்டை நோயெதிர்ப்பு சிகிச்சையுடன் இணைந்து பயன்படுத்துவதில் கவனம் செலுத்தும் பிரைஸ் கூறுகிறார். அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் புற்றுநோய்க்கு எதிராக இந்த இணை சிறப்பாக செயல்பட முடியுமா என்பதைக் கண்டறிவது எதிர்கால ஆராய்ச்சிக்கான ஒரு திசையாக இருக்கும். புற்றுநோய் உடல் முழுவதும் பரவும் போது, ஒரே ஒரு கட்டியை மட்டும் அகற்றுவது போதாது. எனவே, மெட்டாஸ்டேடிக் புற்றுநோய்க்குச் சிகிச்சை அளிப்பது மிகவும் கடினம். மருத்துவர்கள் அல்ட்ராசவுண்டைப் பயன்படுத்தி ஒரு கட்டியை உடைப்பதால், அதன் பண்புகளை நோயெதிர்ப்பு அமைப்பு அறியும். இதன் மூலம், உடலின் மற்ற இடங்களில் உள்ள புற்றுநோய் செல்களுக்கு எதிராக ஒரு அமைப்பு அளவிலான தாக்குதலை நோயெதிர்ப்பு அமைப்பு தொடங்குவதற்கு வழிவகுப்பதுதான் உச்சமாக இருக்கும் என்று பிரைஸ் கூறுகிறார். இது இன்னும் எந்த வகையான சோதனைகளிலும் பரிசோதிக்கப்படவில்லை, ஆனால் கோட்பாட்டளவில், "ஒரே ஒரு கட்டிக்குச் சிகிச்சை அளிப்பதன் மூலம் 10, 15, 20 கட்டிகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியும்," என்று பிரைஸ் கூறுகிறார். பட மூலாதாரம், Erica Bass/ Rogel Cancer Center/ Michigan Medicine படக்குறிப்பு, ஹிஸ்டோட்ரிப்சி டிரான்ஸ்யூசர் தலைப்பகுதி, திசுக்களை உடைக்கக்கூடிய நுண்ணிய குமிழிக் கூட்டத்தை (tiny cloud of bubbles) உருவாக்குகிறது அல்ட்ராசவுண்ட் மற்றும் நோயெதிர்ப்பு சிகிச்சை குறித்த சோதனைகள் இன்னும் ஒப்பீட்டளவில் ஆரம்ப கட்டத்தில் உள்ளன என்று பிரைஸ் எச்சரிக்கிறார். இந்த இணைந்த அணுகுமுறை சிகிச்சையை எப்போது அல்லது எப்படி மாற்றும் என்பதை அறிய மேலும் பல ஆராய்ச்சிகள் தேவை. அறுவை சிகிச்சை, கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு போன்ற பயனுள்ள ஆனால் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் சிகிச்சைகளை மாற்றுவதை அல்லது மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட புற்றுநோயியலில் அல்ட்ராசவுண்ட் அணுகுமுறை ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்குகிறது. அல்ட்ராசவுண்ட் புற்றுநோய்க்கு ஒரு "அற்புதமான குணம் அளிப்பது" அல்ல, என்று ஸு கூறுகிறார். எந்தவொரு மருத்துவ சிகிச்சையைப் போலவே, இதற்கும் சில குறைபாடுகள் உள்ளன. ஆனால், பல தசாப்தங்களுக்கு முன்பு அவர் தனது ஆய்வக நண்பர்களை எரிச்சலூட்டும் சத்தத்தில் இருந்து விடுவித்ததைப் போலவே, அவரது கண்டுபிடிப்பும் – மற்ற விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் – வரும் ஆண்டுகளில் நோயாளிகளின் தேவையற்ற துன்பத்தைத் தவிர்க்க உதவும் என்று ஸு நம்புகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy7e6p4ykl8o

கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்'

2 weeks 2 days ago
இரு பாடல்கள் பகுதி 5 இல் தவறிவிட்டன. அவை இங்கே இணைக்கப்படுகிறது கீழே [1] ஜெயா கேட்டாள், “தாத்தா... மனிதர்கள் ஏன் சண்டையிடுகிறார்கள், ஆனால் விலங்குகள் ஒன்றாக வாழ்கின்றன? விலங்குகளுக்கு விலங்கிட்டு கூண்டில் அடைத்து மனித விலங்குகளை சுதந்திரமாய் விட்டோம் விலங்குகளை ஒவ் வொன்றாக அடக்கிஅடக்கி குப்பை மனிதர்கள் செழிக்கசெழிக்க விட்டோம்! ஆசையில் மூழ்கி அசிங்கத்தை பூசி புண்ணிம் கண்ணியம் புதையுண்டு போக பாதை தவறி அழுக்கை சுமந்து மனிதன் வாழ்கிறான் மனிதம் இல்லாமலே! தாத்தா கிசுகிசுத்தார், “ஏனென்றால் விலங்குகள் பேராசையால் வாழ்வதல்ல, சமநிலையால் வாழ்பவை.” [2] ஆனால் இந்த மீனவர்களின் வறுமை, தாத்தாவுக்கு நன்றாக நினைவிருந்தது, அவர்களின் வாழ்க்கை சுற்றுலாப் பயணிகளுக்காக கற்பனையான தோற்றம் ஒன்றால் இங்கு உருவாக்ப் பட்டுள்ளது [Romanticized] என்பது தான் அது. ஆனால் அவர்கள் பசியால் நிறைந்தவர்கள் என்பது பார்வையாளர் பலருக்குப் புரியாது. மரக் கம்பம் விடிவெள்ளி நமக்கு விரி கடலே பள்ளிக்கூடம் - ஐலசா குட்டி மீன்கள் நம்தோழன் - ஐலசா கொக்காய் ஒற்றைக்காலில் - ஐலசா அருமைமேகம் நமதுகுடை - ஐலசா பாயும் புயல் நம்ஊஞ்சல் - ஐலசா பனிமூட்டம் உடல்போர்வை - ஐலசா பிடிக்கும் மீன்கள் நம்உணவு - ஐலசா “கடலில் திமிங்கலங்கள் சுதந்திரமாக உள்ளன,” தாத்தா தன் பேத்தியிடம் கூறினார், “ஆனால் இங்குள்ள மக்கள் அனைவரும் இன்னும் சுதந்திரமாக இல்லை.”

சிறுவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வலைப்பின்னல் உருவாக்கப்படுகின்றது - வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்

2 weeks 2 days ago
Published By: Digital Desk 1 20 Oct, 2025 | 09:36 AM போதைப்பொருள் பாவனையிலிருந்து சிறுவர்களை பாதுகாக்கவேண்டும். சிறுவர்களை இலக்கு வைத்து வலைப்பின்னல் உருவாக்கப்படுகின்றது. அதை உடைத்தெறிந்து அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்கவேண்டும். சிறுவர்கள் மீதான முதலீடு என்பது சிறப்பான எதிர்கால நாட்டுக்கான அடித்தளமாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண நன்னடத்தை பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு கிளிநொச்சி பாரதி ஸ்ரார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், சிறுவர்களுக்கு உடல், உள ரீதியான தண்டனைகள் வழங்கப்படக்கூடாது. சிறுவர்களை அன்பாகப் போசித்தால் சிறப்பான நாட்டை உருவாக்க முடியும். சிறுவர்களுக்கு தீங்கான எதையும் நாம் முன்னெடுக்கக் கூடாது. கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் பெற்றோர்களை இழந்த சிறுவர்கள் இருந்தார்கள். இன்றும் விபத்துக்களால் பெற்றோர்களை இழந்து அநாதரவான நிலைக்கு சிறுவர்கள் தள்ளப்படுகின்றார்கள். எந்தவொரு சிறுவர்களுக்கும் ஆதரவில்லாத நிலைமை வரக்கூடாது. அவர்களி;ன் எதிர்காலம் பாதிக்க அனுமதிக்க முடியாது. மாகாணத் திணைக்களம் சிறுவர் இல்லங்களைக் கண்காணித்து சகல சிறுவர்களையும் அரவணைத்து அவர்களை இந்த நாட்டுக்குத் தேவையான நற்பிரஜையாக உருவாக்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/228179

சிறுவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வலைப்பின்னல் உருவாக்கப்படுகின்றது - வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்

2 weeks 2 days ago

Published By: Digital Desk 1

20 Oct, 2025 | 09:36 AM

image

போதைப்பொருள் பாவனையிலிருந்து சிறுவர்களை பாதுகாக்கவேண்டும். சிறுவர்களை இலக்கு வைத்து வலைப்பின்னல் உருவாக்கப்படுகின்றது. அதை உடைத்தெறிந்து அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்கவேண்டும். சிறுவர்கள் மீதான முதலீடு என்பது சிறப்பான எதிர்கால நாட்டுக்கான அடித்தளமாகும் என  வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன்  தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண நன்னடத்தை பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு கிளிநொச்சி பாரதி ஸ்ரார் மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், சிறுவர்களுக்கு உடல், உள ரீதியான தண்டனைகள் வழங்கப்படக்கூடாது. சிறுவர்களை அன்பாகப் போசித்தால் சிறப்பான நாட்டை உருவாக்க முடியும். சிறுவர்களுக்கு தீங்கான எதையும் நாம் முன்னெடுக்கக் கூடாது. 

கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் பெற்றோர்களை இழந்த சிறுவர்கள் இருந்தார்கள். இன்றும் விபத்துக்களால் பெற்றோர்களை இழந்து அநாதரவான நிலைக்கு சிறுவர்கள் தள்ளப்படுகின்றார்கள். 

எந்தவொரு சிறுவர்களுக்கும் ஆதரவில்லாத நிலைமை வரக்கூடாது. அவர்களி;ன் எதிர்காலம் பாதிக்க அனுமதிக்க முடியாது. மாகாணத் திணைக்களம் சிறுவர் இல்லங்களைக் கண்காணித்து சகல சிறுவர்களையும் அரவணைத்து அவர்களை இந்த நாட்டுக்குத் தேவையான நற்பிரஜையாக உருவாக்கவேண்டும் என வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன்  தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/228179

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 weeks 2 days ago
கீரை விக்கிறது அவ்வளவு சுலபமா ......? அதுக்கும் சரிவரமாட்டார்கள் என்று நீங்கள் கிரிக்கட் டுக்குத்தான் லாயக்கு என்று அனுப்பி வைத்தவை ......! 😂 அட .....8,9 ம் இடத்தில் என்னைக் காணவில்லை என்று கீழே பார்த்தால் அங்கே செம்பாட்டான் , பிரியன் எல்லோரும் வரிசையாய் நிக்க, சரி நான் தனியாய் இல்லை துணைக்கு ஆட்கள் இருக்கினம் என்று பார்த்தால் அங்கும் என் பெயர் இல்லை என்று மேலே பார்க்க அதிசயமாய் 6 ல் என்னை அப்பி வைத்திருக்கு ........மகிழ்ச்சி ......! 😂

கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25 வது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று!

2 weeks 2 days ago
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25வது ஆண்டு நினைவேந்தல் யாழில்! Published By: Digital Desk 1 20 Oct, 2025 | 10:39 AM படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) யாழ் . ஊடக அமையத்தில் கு. செல்வக்குமார் தலைமையில் நடைபெற்றது. நிமலராஜனின் படத்திற்கு குரலற்றவர்களின் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் மற்றும் செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான பெடி கமகே மலர் மாலை அணிவித்தனர். தென்னிலங்கை ஊடகவியலாளர் அஜித் பொது சுடரேற்றியதை தொடர்ந்து, ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர். போர் சூழலில் யாழில் இருந்து ஊடகப்பணியாற்றிய மயில்வாகனம் நிமலராஜன். பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை, வீரகேசரி, ராவய போன்ற ஊடகங்களில் பணியாற்றி இருந்தார். அந்த நிலையில் 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி யாழ். மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை இவரது வீட்டு வளவினுள் புகுந்த ஆயுததாரிகள், வீட்டின் யன்னல் ஊடாக அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். அதன் போது அவர் எழுதிக்கொண்டு இருந்த கட்டுரை மீது வீழ்ந்தே உயிர் துறந்தார். கொலையாளிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு நிமலராஜனை படுகொலை செய்த பின்னர், வீட்டின் மீது கைக்குண்டு தாக்குதலையும் மேற்கொண்டனர். அதன்போது வீட்டில் இருந்த நிலமராஜனின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம் , தாய் லில்லி மயில்வாகனம் மற்றும் மருமகன் ஜெகதாஸ் பிரசன்னா ஆகியோர் படுகாயமடைந்தனர். இந்த படுகொலை சம்பவம் நடைபெற்று 25ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், இதுவரையில் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. நிமலராஜன் படுகொலைக்கு நீதி கோரி யாழ் . ஊடக அமையம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக குரல் கொடுத்தே வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/228187

பாரிஸ் அருங்காட்சியகத்தில் சினிமா பாணியில் கொள்ளை - வெறும் 7 நிமிடங்களில் நடந்தது என்ன?

2 weeks 2 days ago
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, லூவா அருங்காட்சியகம் கட்டுரை தகவல் இயன் ஐக்மேன் ரேசல் ஹாகன் 20 அக்டோபர் 2025, 04:14 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் சினிமா பாணியில் துணிகர கொள்ளை நடந்துள்ளது. இதில், பிரான்சின் மதிப்பு மிக்க அரச குடும்ப நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை தொடர்ந்து அருங்காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. உலகில் அதிக சுற்றுலாப் பயணிகளை வரும் இந்த அருங்காட்சியகத்தில் பட்டப்பகலில் நுழைந்த கொள்ளையர்கள் மிகவும் விலையுயர்ந்த 8 நகைகளை திருடிவிட்டு ஸ்கூட்டர்களில் தப்பிச் சென்றனர். சினிமா பாணியில் நடந்தேறியுள்ள இந்த கொள்ளை பிரான்ஸையே உலுக்கியுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவத்தில் தற்போது வரை நடந்தது என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, திருடர்கள் பால்கனி வழியாக அப்போலோ காட்சி கூடத்தை அடைந்தனர். கொள்ளை எப்படி நடந்தது? ஞாயிற்றுக்கிழமை பார்வையாளர்களுக்காக அருங்காட்சியகம் திறந்த சில நிமிடங்களிலே 09:30 மணியிலிருந்து 09:40 மணிக்குள் இந்த கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. நான்கு கொள்ளையர்கள் வாகனத்தில் பொருத்தப்பட்ட இயந்திர ஏணியைப் பயன்படுத்தி செய்ன்(Seine) நதிக்கு அருகே உள்ள பால்கனி வழியாக அருங்காட்சியகத்தின் அப்போலோ காட்சி கூடத்தை அடைந்தனர். வாகனத்தில் பொருத்தப்பட்ட ஏணி ஒன்று முதல் தளத்தின் ஜன்னல் வரை இருப்பதை சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் மூலம் காண முடிகிறது. இரண்டு கொள்ளையர்கள் பேட்டரியால் இயங்கும் கட்டர்களைப் பயன்படுத்தி கண்ணாடி தகட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் அங்கு பணியிலிருந்த காவலர்களை அச்சுறுத்தி அந்த தளத்தை காலி செய்ய வைத்துவிட்டு, இரண்டு காட்சி பெட்டிகளில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கொள்ளையர்கள் பயன்படுத்திய ஏணி அருங்காட்சியகத்தில் உள்ள எச்சரிக்கை மணி ஒலித்ததைத் தொடர்ந்து பணியாளர்கள் நெறிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பு படைகளை அழைத்தனர் என கலாச்சாரத் துறை அறிக்கை மூலம் கூறியுள்ளது. கொள்ளையில் ஈடுபட்ட குழுவினர் அவர்கள் வந்த வாகனத்திற்கு தீ வைக்க முயன்ற போது அருங்காட்சியக ஊழியரின் தலையீட்டால் தடுக்கப்பட்டது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஎஃப்1 செய்தி ஊடகத்திடம் பேசிய கலாச்சாரத் துறை அமைச்சர் ரச்சிதா, "கொள்ளைச் சம்பவத்தின் காட்சிகள், கொள்ளையர்கள் அமைதியாக வந்து நகைகள் இருந்த காட்சி பெட்டிகளை உடைக்க ஆரம்பித்ததைக் காட்டுகின்றன" எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை, "வன்முறை இல்லாமல் இந்த கொள்ளை நடத்தப்பட்டுள்ளது." என தாடி தெரிவித்தார். கொள்ளையர்கள் மிகவும் "அனுபவம் வாய்ந்தவர்கள்" போல தெரிந்ததாக கூறும் அவர், இரு சக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல வேண்டும் என்கிற மிகவும் தெளிவான திட்டத்தோடு வந்துள்ளனர் என்றார். காவல்துறை அதிகாரிகள் சிசிடிவி காட்சி அடிப்படையில் சந்தேகத்திற்கிடமான நான்கு பேரையும் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பிரான்ஸ் இண்டர் ரேடியோவில் பேசிய அந்நாட்டின் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ், "இந்தச் சம்பவம் மிகமிக வேகமாக நடைபெற்றது, வெறும் ஏழே நிமிடங்களில் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்." எனத் தெரிவித்தார். அருங்காட்சியகம் காலி செய்யப்பட்ட போது "மிகவும் பதற்றம்" நிறைந்து காணப்பட்டதாக கொள்ளைச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் குறிப்பிட்டார். அதன் பின்னர் அருங்காட்சியகத்தின் நுழைவுவாயில் மெட்டல் கதவுகளைக் கொண்டு மூடப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. திருடப்பட்ட நகைகள் எவை? அருங்காட்சியகத்திலிருந்து கிரீடங்கள், நெக்லஸ், காதணிகள் மற்றும் ப்ரூச்கள் உள்ளிட்ட எட்டு பொருட்கள் திருடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நகைகள் அனைத்தும் பிரெஞ்சு மன்னர்கள் வசம் இருந்தவை. திருடு போன நகைகளின் பட்டியலை பிரான்ஸ் கலாசார அமைச்சகம் வெளியிட்டுள்ளது, அவை மூன்றாம் நெப்போலியனின் மனைவியும் அரசியுமான யூஜினிக்குச் சொந்தமான கிரீடமும் அணிகலன் அரசர் மேரி லூயிசிற்கு சொந்தமான மரகத நெக்லஸ் மற்றும் ஒரு ஜோடி மரகத காதணிகள் அரசி மேரி அமீலி மற்றும் ஹார்டென்சுக்கு சொந்தமான நெக்லஸ், கிரீடம் மற்றும் ஒற்றைக் காதணி "ரெலிகுவரி ப்ரூச்" என அழைக்கப்படும் நகை இந்த நகைகளுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான வைரங்களும் இதர விலை மதிக்க முடியாத ரத்தின கற்களும் இடம்பெற்றுள்ளன. அரசி யூஜினின் கிரீடம் உட்பட இரண்டு பொருட்கள் சம்பவ இடத்திற்கு அருகே கிடந்தன. அவை தப்பிச் செல்லும்போது தவறவிடப்பட்டிருக்கலாம். அந்த நகைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். திருடப்பட்ட நகைகள் "விலைமதிக்க முடியாதவை" மற்றும் "அளவிட முடியாத பாரம்பரிய மதிப்பை" கொண்டவை எனக் குறிப்பிட்டார் நுனெஸ். முன்னர் இதுபோன்ற கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளதா? 1911-ஆம் ஆண்டு இத்தாலி நாட்டைச் சேர்ந்த அருங்காட்சியக பணியாளர் ஒருவர் மோனாலிசா ஓவியத்தை சுவரிலிருந்து அகற்றி அவர் அணிந்திருந்த கோட்டிற்கு அடியில் வைத்து எடுத்துச் சென்றார். அப்போது மோனாலிசா ஓவியம் பிரபலமாகியிருக்கவில்லை. பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து ஓவியம் மீட்கப்பட்டது. லியோனார்டோ டவின்சியின் இந்த ஓவியம் இத்தாலிக்குச் சொந்தமானது என நம்பியதால் அதனை திருடியதாக அருங்காட்சியக பணியாளர் ஒப்புக்கொண்டார். தற்போது மோனாலிசா ஓவியத்தை யாரும் திருட முயற்சிப்பதில்லை. அருங்காட்சியத்தில் உள்ளதிலேயே மிகவும் பிரபலமான மோனாலிசா ஓவியம் மிகவும் பாதுகாக்கப்பட்ட கண்ணாடி அறையில் இருக்கிறது. 1998-ஆம் ஆண்டு கமில் கோரோட் வரைந்த 19-ஆம் நூற்றாண்டு ஓவியமான 'லே செமின் தி செவ்ரே' திருடப்பட்டு பின்னர் கண்டுபிடிக்கப்படவே இல்லை. அதன் பிறகு அருங்காட்சியகத்தின் பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட்டது. சமீபத்தில் பிரெஞ்சு அருங்காட்சியகங்களைக் குறிவைத்து தொடர் கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த மாதம் லிமோஜஸில் உள்ள அட்ரியன் துபோச் அருங்காட்சியகத்தில் நுழைந்த திருடர்கள் 11 மில்லியன் டாலர் மதிப்புள்ள பீங்கான் பொருட்களை திருடிச் சென்றனர். 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், பாரிசில் உள்ள காக்னாக்-ஜே அருங்காட்சியகத்திலிருந்து "மிகவும் வரலாற்று மற்றும் பாரம்பரிய மதிப்புள்ள" ஏழு பொருட்களை திருடப்பட்டது. அவற்றில் ஐந்து பொருட்கள் சில நாட்கள் கழித்து மீட்கப்பட்டன. அதே மாதம் புர்கண்டியில் உள்ள ஹிரோன் அருங்காட்சியகத்தில் நுழைந்த ஆயுதமேந்திய திருடர்கள் பல மில்லியன் பவுண்ட்கள் மதிப்புள்ள 20-ஆம் நூற்றாண்டு கலைப் பொருட்களை திருடிச் சென்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5ydvg38dvzo

பாரிஸ் அருங்காட்சியகத்தில் சினிமா பாணியில் கொள்ளை - வெறும் 7 நிமிடங்களில் நடந்தது என்ன?

2 weeks 2 days ago

பிரான்ஸ், பாரிஸ், நகை கொள்ளை, லூவ்ர் அருங்காட்சியகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லூவா அருங்காட்சியகம்

கட்டுரை தகவல்

  • இயன் ஐக்மேன்

  • ரேசல் ஹாகன்

  • 20 அக்டோபர் 2025, 04:14 GMT

    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் சினிமா பாணியில் துணிகர கொள்ளை நடந்துள்ளது. இதில், பிரான்சின் மதிப்பு மிக்க அரச குடும்ப நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை தொடர்ந்து அருங்காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

உலகில் அதிக சுற்றுலாப் பயணிகளை வரும் இந்த அருங்காட்சியகத்தில் பட்டப்பகலில் நுழைந்த கொள்ளையர்கள் மிகவும் விலையுயர்ந்த 8 நகைகளை திருடிவிட்டு ஸ்கூட்டர்களில் தப்பிச் சென்றனர்.

சினிமா பாணியில் நடந்தேறியுள்ள இந்த கொள்ளை பிரான்ஸையே உலுக்கியுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவத்தில் தற்போது வரை நடந்தது என்ன?

பிரான்ஸ், பாரிஸ், நகை கொள்ளை, லூவ்ர் அருங்காட்சியகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, திருடர்கள் பால்கனி வழியாக அப்போலோ காட்சி கூடத்தை அடைந்தனர்.

கொள்ளை எப்படி நடந்தது?

ஞாயிற்றுக்கிழமை பார்வையாளர்களுக்காக அருங்காட்சியகம் திறந்த சில நிமிடங்களிலே 09:30 மணியிலிருந்து 09:40 மணிக்குள் இந்த கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.

நான்கு கொள்ளையர்கள் வாகனத்தில் பொருத்தப்பட்ட இயந்திர ஏணியைப் பயன்படுத்தி செய்ன்(Seine) நதிக்கு அருகே உள்ள பால்கனி வழியாக அருங்காட்சியகத்தின் அப்போலோ காட்சி கூடத்தை அடைந்தனர்.

வாகனத்தில் பொருத்தப்பட்ட ஏணி ஒன்று முதல் தளத்தின் ஜன்னல் வரை இருப்பதை சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் மூலம் காண முடிகிறது.

இரண்டு கொள்ளையர்கள் பேட்டரியால் இயங்கும் கட்டர்களைப் பயன்படுத்தி கண்ணாடி தகட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

பின்னர் அங்கு பணியிலிருந்த காவலர்களை அச்சுறுத்தி அந்த தளத்தை காலி செய்ய வைத்துவிட்டு, இரண்டு காட்சி பெட்டிகளில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

பிரான்ஸ், பாரிஸ், நகை கொள்ளை, லூவ்ர் அருங்காட்சியகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொள்ளையர்கள் பயன்படுத்திய ஏணி

அருங்காட்சியகத்தில் உள்ள எச்சரிக்கை மணி ஒலித்ததைத் தொடர்ந்து பணியாளர்கள் நெறிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பு படைகளை அழைத்தனர் என கலாச்சாரத் துறை அறிக்கை மூலம் கூறியுள்ளது.

கொள்ளையில் ஈடுபட்ட குழுவினர் அவர்கள் வந்த வாகனத்திற்கு தீ வைக்க முயன்ற போது அருங்காட்சியக ஊழியரின் தலையீட்டால் தடுக்கப்பட்டது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஎஃப்1 செய்தி ஊடகத்திடம் பேசிய கலாச்சாரத் துறை அமைச்சர் ரச்சிதா, "கொள்ளைச் சம்பவத்தின் காட்சிகள், கொள்ளையர்கள் அமைதியாக வந்து நகைகள் இருந்த காட்சி பெட்டிகளை உடைக்க ஆரம்பித்ததைக் காட்டுகின்றன" எனத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை, "வன்முறை இல்லாமல் இந்த கொள்ளை நடத்தப்பட்டுள்ளது." என தாடி தெரிவித்தார்.

கொள்ளையர்கள் மிகவும் "அனுபவம் வாய்ந்தவர்கள்" போல தெரிந்ததாக கூறும் அவர், இரு சக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல வேண்டும் என்கிற மிகவும் தெளிவான திட்டத்தோடு வந்துள்ளனர் என்றார்.

பிரான்ஸ், பாரிஸ், நகை கொள்ளை, லூவ்ர் அருங்காட்சியகம்

காவல்துறை அதிகாரிகள் சிசிடிவி காட்சி அடிப்படையில் சந்தேகத்திற்கிடமான நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பிரான்ஸ் இண்டர் ரேடியோவில் பேசிய அந்நாட்டின் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ், "இந்தச் சம்பவம் மிகமிக வேகமாக நடைபெற்றது, வெறும் ஏழே நிமிடங்களில் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்." எனத் தெரிவித்தார்.

அருங்காட்சியகம் காலி செய்யப்பட்ட போது "மிகவும் பதற்றம்" நிறைந்து காணப்பட்டதாக கொள்ளைச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் குறிப்பிட்டார். அதன் பின்னர் அருங்காட்சியகத்தின் நுழைவுவாயில் மெட்டல் கதவுகளைக் கொண்டு மூடப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

திருடப்பட்ட நகைகள் எவை?

அருங்காட்சியகத்திலிருந்து கிரீடங்கள், நெக்லஸ், காதணிகள் மற்றும் ப்ரூச்கள் உள்ளிட்ட எட்டு பொருட்கள் திருடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நகைகள் அனைத்தும் பிரெஞ்சு மன்னர்கள் வசம் இருந்தவை.

திருடு போன நகைகளின் பட்டியலை பிரான்ஸ் கலாசார அமைச்சகம் வெளியிட்டுள்ளது, அவை

  • மூன்றாம் நெப்போலியனின் மனைவியும் அரசியுமான யூஜினிக்குச் சொந்தமான கிரீடமும் அணிகலன்

  • அரசர் மேரி லூயிசிற்கு சொந்தமான மரகத நெக்லஸ் மற்றும் ஒரு ஜோடி மரகத காதணிகள்

  • அரசி மேரி அமீலி மற்றும் ஹார்டென்சுக்கு சொந்தமான நெக்லஸ், கிரீடம் மற்றும் ஒற்றைக் காதணி

  • "ரெலிகுவரி ப்ரூச்" என அழைக்கப்படும் நகை

இந்த நகைகளுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான வைரங்களும் இதர விலை மதிக்க முடியாத ரத்தின கற்களும் இடம்பெற்றுள்ளன.

அரசி யூஜினின் கிரீடம் உட்பட இரண்டு பொருட்கள் சம்பவ இடத்திற்கு அருகே கிடந்தன. அவை தப்பிச் செல்லும்போது தவறவிடப்பட்டிருக்கலாம். அந்த நகைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

திருடப்பட்ட நகைகள் "விலைமதிக்க முடியாதவை" மற்றும் "அளவிட முடியாத பாரம்பரிய மதிப்பை" கொண்டவை எனக் குறிப்பிட்டார் நுனெஸ்.

முன்னர் இதுபோன்ற கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளதா?

1911-ஆம் ஆண்டு இத்தாலி நாட்டைச் சேர்ந்த அருங்காட்சியக பணியாளர் ஒருவர் மோனாலிசா ஓவியத்தை சுவரிலிருந்து அகற்றி அவர் அணிந்திருந்த கோட்டிற்கு அடியில் வைத்து எடுத்துச் சென்றார். அப்போது மோனாலிசா ஓவியம் பிரபலமாகியிருக்கவில்லை.

பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து ஓவியம் மீட்கப்பட்டது. லியோனார்டோ டவின்சியின் இந்த ஓவியம் இத்தாலிக்குச் சொந்தமானது என நம்பியதால் அதனை திருடியதாக அருங்காட்சியக பணியாளர் ஒப்புக்கொண்டார்.

தற்போது மோனாலிசா ஓவியத்தை யாரும் திருட முயற்சிப்பதில்லை. அருங்காட்சியத்தில் உள்ளதிலேயே மிகவும் பிரபலமான மோனாலிசா ஓவியம் மிகவும் பாதுகாக்கப்பட்ட கண்ணாடி அறையில் இருக்கிறது.

1998-ஆம் ஆண்டு கமில் கோரோட் வரைந்த 19-ஆம் நூற்றாண்டு ஓவியமான 'லே செமின் தி செவ்ரே' திருடப்பட்டு பின்னர் கண்டுபிடிக்கப்படவே இல்லை. அதன் பிறகு அருங்காட்சியகத்தின் பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட்டது.

சமீபத்தில் பிரெஞ்சு அருங்காட்சியகங்களைக் குறிவைத்து தொடர் கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

கடந்த மாதம் லிமோஜஸில் உள்ள அட்ரியன் துபோச் அருங்காட்சியகத்தில் நுழைந்த திருடர்கள் 11 மில்லியன் டாலர் மதிப்புள்ள பீங்கான் பொருட்களை திருடிச் சென்றனர்.

2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், பாரிசில் உள்ள காக்னாக்-ஜே அருங்காட்சியகத்திலிருந்து "மிகவும் வரலாற்று மற்றும் பாரம்பரிய மதிப்புள்ள" ஏழு பொருட்களை திருடப்பட்டது. அவற்றில் ஐந்து பொருட்கள் சில நாட்கள் கழித்து மீட்கப்பட்டன.

அதே மாதம் புர்கண்டியில் உள்ள ஹிரோன் அருங்காட்சியகத்தில் நுழைந்த ஆயுதமேந்திய திருடர்கள் பல மில்லியன் பவுண்ட்கள் மதிப்புள்ள 20-ஆம் நூற்றாண்டு கலைப் பொருட்களை திருடிச் சென்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c5ydvg38dvzo

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025

2 weeks 2 days ago
இந்தியாவை 4 ஓட்டங்களால் வென்று உலகக் கிண்ண அரை இறுதி வாய்ப்பை உறுதிசெய்தது இங்கிலாந்து 20 Oct, 2025 | 01:20 AM (நெவில் அன்தனி) இந்தூர், ஹொல்கார் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ணப் போட்யில் இந்தியாவை 4 ஓட்டங்களால் பரபரப்பான முறையில் வெற்றிகொண்ட இங்கிலாந்து, அரை இறுதியில் விளையாடும் தகுதியை உறுதிசெய்துகொண்டது. அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா ஆகிய அணிகளைத் தொடர்ந்து மூன்றாவது அணியாக அரை இறதி வாப்ப்பை இங்கிலாந்து பெற்றுக்கொண்டது. இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்ட இப் போட்யில் இந்திய அணித் தலைவி ஹார்மன்ப்ரீத் கோர், ஸ்ம்ரித்தி மந்தனா, தீப்தி ஷர்மா ஆகிய மூவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் குவித்த போதிலும் அநாவசியமான அடி தெரிவுகளால் தங்களது விக்கெட்களைத் தாரை வார்த்ததால் இங்கிலாந்து வெற்றியைத் தனதாக்கிக்கொண்டது. ஹீதர் நைட் குவித்த சதமும் கடைசி ஓவர்களில் பந்துவீச்சாளர்களின் கட்டுப்பாடான பந்துவீச்சுகளும் இங்கிலாந்தை வெற்றிபெறச்செய்தன. 289 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 284 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பவர் ப்ளேயில் இந்தியா 2 விக்கெட்களை இழந்து 42 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சிறு அழுத்தத்தை எதிர்கொண்டது. ஆனால், ஸ்ம்ரித்தி மந்தனா, ஹார்மன்ப்ரீத் கோர் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 125 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு நம்பிக்கை ஊட்டினர். ஹார்மன் ப்ரீத் கோர் 70 பந்துகளில் 10 பவுண்டறிகளுடன் 70 ஓட்டங்களைப் பெற்று தவறான ஆட்டத் தெரிவின்மூலம் விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து மந்தனா, தீப்தி ஷர்மா ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு நம்பிக்கை ஊட்டினர். மொத்த எண்ணிக்கை 234 ஓட்டங்களாக இருந்தபோது ஸ்ம்ரித்தி மந்தனா பந்தை விசுக்கி அடிக்க முயற்சித்து பிடி கொடுத்து களம் விட்டகன்றார். அவர் 8 பவுண்டறிகளுடன் 88 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து ரிச்சா கோஷ் (8), திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த தீப்தி ஷர்மா ஆகிய இருவரும் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். தீப்தி ஷர்மா 5 பவுண்டறிகளுடன் 50 ஓட்டங்களைப் பெற்று விக்கெட்டை பறிகொடுத்தார். அத்துடன் இந்தியாவின் வெற்றிக்கான எதிர்பார்ப்பு கலைந்துபோனது. ஆமன்ஜோத் கோர் 18 ஓட்டங்களுடனும் ஸ்நேஹ் ராணா 10 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் நெட் சிவர் - ப்றன்ட் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். முன்னதாக இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து, 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 288 ஓட்டங்களைக் குவித்தது. டமி போமன்ட் (22), அமி ஜோன்ஸ் (56) ஆகிய இருவரும் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். தொடர்ந்து ஹீதர் நைட், அணித் தலைவி நெட் சிவர் - ப்றன்ட் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 113 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டனர். நெட் சிவர் - ப்ரன்ட் 38 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து ஹீதர் நைட் 91 பந்துகளில் 15 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 109 ஓட்டங்களைக் குவித்தார். மத்திய மற்றும் பின்வரிசையில் எவரும் துடுப்பாட்டத்தில் பெரியளவில் பிரகாசிக்கவில்லை. சார்ளி டீன் 19 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் தீப்தி ஷர்மா 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஸ்ரீ சரணி 68 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி: ஹீதர் நைட். https://www.virakesari.lk/article/228164

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

2 weeks 2 days ago
வணக்கம் வாத்தியார் .......! அனைவருக்கும் இனிய தீபாவளி நாள் வாழ்த்துகள் ........! 🌻 தமிழ் பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எ.எம். ராஜா பெண் : உன்னைக்கண்டு நான் ஆட என்னைக்கண்டு நீ ஆட உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி பெண் : ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாக கலந்து உறவாடும் நேரமடா உறவாடும் நேரமடா பெண் : { கன்னத்தில் ஒன்னே ஒன்னு கடனாக தாடா கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா } (2) பெண் : எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன் எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன் பெண் : எனக்கு இனி நீ என்னென்ன தருவாய் வல்லமை சேர நல்லவனாக வளர்ந்தாலே போதுமடா வளர்ந்தாலே போதுமடா பெண் : { சித்திர பூப்போல சிதறும் மத்தாப்பு தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு } (2) பெண் : முத்திரை பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு முத்திரை பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு பெண் : முகமோ மலரோ இது என்ன ரசிப்பு மின்னொளி வீசும் உன் எழில் கண்டால் வேறென்ன வேணுமடா.........! --- உன்னைக்கண்டு நான் ஆட என்னைக்கண்டு நீ ஆட ---