| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 480 online users. » 0 Member(s) | 477 Guest(s) Baidu, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,154
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,151
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,569
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,266
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,560
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,984
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,380
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,050
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,962
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,229
|
|
|
| (6618)*** Panipazar |
|
Posted by: Paranee - 08-20-2003, 09:09 AM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (1)
|
 |
Click Here to go to the reported post
--------------------------------
வணக்கம்
களம் சாக்கடையை நோக்கிப்போவது போல் தோன்றுகின்றது.
இந்த பகுதியை நிறுத்திவிடுங்கள். இனிமேல் வானொலிகள் பற்றி இங்கு எதுவும் எழுதவேண்டாம் என்று அறிக்கையும் விட்டுவிடுங்கள்.
நன்றி
பரணீதரன்
|
|
|
| Sobig.F வைரஸ் |
|
Posted by: இனியவன் - 08-19-2003, 01:52 PM - Forum: கணினி
- Replies (22)
|
 |
மின்னஞ்சல் மூலம் Sobig.F என்னும் பெயர் கொண்ட வைரஸ் ஒன்று பரவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஆபத்தான வைரசாக இல்லையென்ற போதிலும் இது நீங்கள் பதிவில் வைத்திருக்கும் முகவரிகளுக்கும் வைரசினை தானாகவே அனுப்புகின்றது. :evil:
|
|
|
| இன்றைய செய்தி 19-08-2003 |
|
Posted by: Paranee - 08-19-2003, 06:24 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (5)
|
 |
இன்றைய செய்தி - நன்றி உதயன்
வேளை வந்துவிட்டது.தீவிரமாகச் செயற்படாவிட்டால் இலங்கையில் புதிதாகத் தேசம் ஒன்று உருவாவதை இந்தியா காண நேரிடும். அந்நாட்டுத்தலைவர்களிடம் கதிர்காமர் எச்சரிக்கை
இலங்கை இனப்பிரச்சினைக்கு சட்டாPதியாக எத்தகைய தீர்வைக் காணமுடியும் என்பது குறித்து இந்தியா தீவிரமாகச் சிந்திக்கவேண் டிய நேரம் வந்துவிட்டது. இதில் இந்தியா சரியாகச் செயற்படத் தவறு மானால் இலங்கையில் புதிய நாடு ஒன்று உருவாகுவதை இந்தியா பார்க்க நேரிடும்.- இவ்வாறு கருத்து வெளியிட்டிருக்கின்றார் இலங்கை ஜனாதிபதி யின் வெளிவிவகார ஆலோசகரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சரு மான லச~;மன் கதிர்காமர்.இந்தியாவுக்கு விஜயஞ்செய்து அங்கு ஒருவார காலம் தங்கியுள்ள லச~;மன் கதிர்காமர் கடந்த சனி யன்று புதுடில்லியில் செய்தியாளர்கள் மத்தியல் பேசும்போதே இவ்வாறு தெரிவித்தார்.இலங்கையில் யுத்தநிறுத்த காலத் திலும் எழுந்துள்ள அச்சநிலைமை தொடர்பாக இந்திய உயர் பீடத்துக்குத் தெளிவுபடுத்தவே தான் இந்தியா வந் திருக்கின்றார் எனத் தெரிவித்த லச~;மன் கதிர்காமர் செய்தியாளர் கள் மத்தியில் மேலும் குறிப்பிட்ட தாவது?கடந்த ஒன்றரை வருட யுத்த நிறுத்த காலத்தில் இலங்கையில் அமைதி நிலவிவிட்டது எனக் கருத முடியாது. இந்தக் காலப்பகுதியினுள் புலிகள் தமது பலத்தை பலமடங்கு அதிகரித்துள்ளனர். குறிப்பாக திரு ணகோணமலை துறைமுகத்தை சுற்றி புலிகள் பலமுகாம்களை அமைத்துள் ளனர். திருகோணமலைக் கடற்பரப் பில் கடற்புலிகள் தற்கொலைப் படை யணிகளின் நடமாட்டம் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் அதிகரித்துள்ளது.திருமலையில் உள்ள எண் ணெய்க் குதங்களை இந்தியாவின் இந்திய எண்ணெய்க் கூட்டுத்தா பனம்| பெற்றுள்ள நிலையில் இந்த அச்ச சூழ்நிலையை இந்தியா வெறு மனே வேடிக்கை பார்த்துக் கொண் டிருக்கக் கூடாது. இதற்காக இந்தியா நேரடியாக இலங்கைக்கு வந்து புலி களை எச்சரிக்கவேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. இலங்கை இனப் பிரச்சினையைத் தீர்க்க ஒரு சட்ட ரீதி யான தீர்வு குறித்து இந்தியா ஒரு செயல்திட்டத்தை வகுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது.புலிகள் இந்தியாவைப் பற்றி பெரி தும் கவலைப்படுகிறார்கள்| பயப்படு கிறார்கள். அது வெளிப்படையான உண்மை. ராஜீவ் காந்தி விவகாரம் குறித்து அவர்கள் பெரிதும் வருந்து கிறார்கள். இதற்குக் காரணம் இருக் கிறது. இலங்கையில் நாளை யுத் தம் ஒன்று வந்தால் அமெரிக்கா அதில் தலையிடாது. ஆனால், இந்தியாவால் அப்படி இருக்கமுடியாது எனப் பிர பாகரனுக்கு நன்றாகத் தெரியும். அத னால்தான் கடந்தகாலத் தவறுகளில் இருந்து விடுபட வேண்டும் என புலிகள் விரும்புகிறார்கள்.இவ்வாறு அவர் மேலும் தெரி வித்தர்.
இந்தியாவின் பல முக்கிய அமைச் சர்களையும் சந்தித்த கதிர்காமர், செய்தியாளர் சந்திப்பின்போது திரு கோணமலை துறைமுகத்தின் வரை படத்தை வைத்து அதனைச் சூழு உள்ள அபாயங்கள் குறித்து சுமார் மூன்று மணித்தியாலங்கள் செய்தி யாளர்களுக்கு விளக்கமளித்தார். இலங்கையில் எழுந்துள்ள அச்ச சூழ்நிலை குறித்து இந்தியத் தலை வர்களுக்கு எடுத்துக்கூறவே இங்கு தாம் வந்திருப்பதாக அழுத்திக் கூறிய கதிர்காமர், இதில் இந்தியா தலையிட வேண்டும் எனத்தாம் இந் தியத் தலைவர்களிடம் வலியுறுத்தி னார் எனவும் தெரிவித்தாh . .
|
|
|
| தினமுரசு |
|
Posted by: Guest - 08-18-2003, 07:33 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (19)
|
 |
தினமுரசு
தினமுரசு பற்றி ஏற்கனவே பல அபிப்பிராயங்கள் இருந்தன.அற்புதன் வாழும் காலத்திலேயே இந்தப் பத்திரிகை புலிக்கு எதிரா சார்பா என கணக்கிடமுடியாதிருந்தது.
அற்புதன் கொலையின் பின் பல வதந்திகள் வெளிவந்தன...புலத்தில் தடை என்றார்கள்
இங்கு எனது நகரத்தில் எப்போதும் போல
கலர் கலராக நீளமாக வழமைபோல் வந்துகொண்டுதானிருந்தது.
இப்போது செய்திக்கு வருகிறேன்..வழமையாக நாம்தான் தென்னிந்திய சினிமாவை சாடுவோம் இந்தமுறை......
ஒரு தமிழ்நர்டு குடிமகனின் பார்வையில் கொழும்பு..
அலைச்சலுக்கு இடமில்லாமல் அப்படியே உருவி இங்கு இடுகிறேன்.
Sunday, August 17, 2003
கொழும்பு பயணம்
வேலை நிமித்தமாக இன்று ஒருநாள் கொழும்பு வர வேண்டியிருந்தது.
நேற்று இரவு ஸ்ரீலங்கன் விமானத்தில் பயணம். இப்பொழுது இந்தியப் பயணிகள் இலங்கை வருவதற்கு விசா வாங்க வேண்டிய தேவையில்லை. இறங்கியவுடன் விமான நிலையத்திலேயே கடவுச்சீட்டில் அனுமதி வாங்கிக்கொள்ளலாம்.
சென்னை விமான நிலையத்தில் இலங்கை ரூபாய்கள் வாங்க பாரத ஸ்டேட் வங்கியை அணுகினால் அங்கு வேலை பார்க்கும் ஊழியர் பத்து நிமிடம் கழித்து வரச்சொன்னார். இருபது நிமிடம் கழித்துச் செல்கையில் அங்கு வேறொரு ஊழியர், மிகக் கண்ணும் கருத்துமாக ஏதோ அமீரகப் பணக்கட்டில் தாள்களை எண்ணிக் கொண்டிருந்தார். அவரும் சொன்னது: "இன்னும் பத்து நிமிஷம் கழிச்சு வாங்களேன்." கொஞ்சம் தள்ளி அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கியின் நாணய மாற்றுக் கிளை. அதற்கு முன் பெருங்கூட்டம். அங்கு போய் ஒரு வழியாகக் கொஞ்சம் இலங்கைப் பணத்தாள்களைப் பெற்றுக் கொண்டு வேண்டுமென்றே வம்புக்காக, ஈ ஓட்டிக் கொண்டிருக்கும் பாரத ஸ்டேட் வங்கி ஊழியரை அணுகினேன். மீண்டும், "இன்னும் பத்து நிமிஷம் கழிச்சு வாங்க."
இரு வங்கிக் கிளைகளிலும் வேலை பார்ப்பது நம்மூர் ஆசாமிகள்தான். ஏன்தான் இப்படி ஒரு உழைப்பில் வித்தியாசமோ?
ஒரே இரைச்சலுடன் ஏர்பஸ் விமானம் சென்னையிலிருந்து கிளம்பி கொழும்பு வந்தடைய வெறும் ஒரு மணி நேரமே பிடிக்கிறது. சும்மா இல்லாமல் விமானத்தில் இருந்த 'தினமுரசு' என்ற வாரப் பத்திரிக்கையைத் திருப்பினால் உள்ளே சுஜாதாவின் தொடர்கதை 'வண்ணத்துபூச்சி வேட்டை' என்று நினைக்கிறேன். புதிதாக எழுதுகிறாரா அல்லது பழைய சரக்கா என்று தெரியவில்லை. வாலி தன் சொந்த வாழ்க்கை பற்றி எழுதுகிறார். நிறைய அரசியல் கட்டுரைகள். இந்தப் பத்திரிக்கை புலி ஆதரவா, எதிரா என்று புரியவில்லை. ரணில் விக்கிரமசிங்கேயின் பிரதம ஆலோசகர் ஸ்ரீலங்கன் நிறுவனத்தில் ஏதோ ஊழல் செய்து விட்டார் என்று ஒரு கட்டுரை. நம்மூர் சமாசாரம்தான். நடுப்பக்கம் திருப்பினால் குறைந்த ஆடைகளோடு கோடம்பாக்கம் "அழகிகள்" அழகு காட்டுகின்றனர். தமிங்கிலம் தலை விரித்தாடுகிறது. ஷாலினி அஜித்துக்கு அறிவுரை சொல்கிறாராம், "ஒழுங்கு மருவாதையா படத்துல நடி, சும்மானாச்சிக்கும் துப்பாக்கி சுடறது, கார் ரேஸ் போறதுன்னு டயத்த வேஸ்டு பண்ணாத". அப்புறம் கருணாஸுக்கும், விவேக்குக்கும் தகராறு, ரதி என்னும் நடிகையை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய தயாரிப்பாளர், பல "ஸ்டில்" படங்கள் என்று கண்ணுக்கு நிறைவாக இருக்கிறது. அடுத்த பìகம் இன்னும் பயங்கரம்: யாரோ ஒரு இலங்கைத் தமிழ் அபிமானி, நடிகர் விஜய் பேரில் எழுதிய அருமையான கவிதை, இன்னும் பல 'புதுக்கவிதை' என்ற பெயரில் சினிமாக்கள் பற்றி எழுதப்பட்ட கொடுமைகள்.
வெளியே வந்தால் குடியேறல் துறை அலுவலர் பொறுமையாக கடவுச்சீட்டில் அச்சடித்து வெளியே அனுப்புகிறார். சுங்க அதிகாரியைத் தாண்டி வெளியே வருகையில் நாளுக்கு நாள் மாறி வரும் கொழும்பு தெரிகிறது.
காரில் தங்குமிடத்துக்குச் செல்லும்போது, போர் நிறுத்தத்தினால் உள்ள தெளிவும், அமைதியும், கேளிக்கையும், சந்தோஷமும் மனதைத் தொடுகிறது. கூட்டம் கூட்டமாக இளம் பெண்களும், ஆண்களும் இரவு பதினொரு மணிக்கு மேல் தெருவில் கை கோர்த்து நடந்து கொண்டிருக்கின்றனர். எங்கு பார்த்தாலும் விளக்குச் சரங்கள் மின்னுகின்றன. எப்பொழுதும் காட்டமாக இருக்கும் தெருவோர செக்போஸ்டுகள், அதிலிருந்து முறைத்துப் பார்க்கும் கையில் துப்பாக்கி ஏந்திய இராணுவ வீரர்கள் என்ற கெடுபிடிகள் மிகவும் தளர்த்தப்பட்டுள்ளன. என் கடவுச்சீட்டைக் காண்பிக்கும்படி யாரும் கேட்கவில்லை.
இன்று காலையில் ஹோட்டல் அறையிலிருந்து வெளியே பார்த்தால் நுரை பொங்கும் கடலும், கரையெல்லாம் கூட்டமும். தெருக்களும், கடற்கரையும் சென்னையை விடப் பலமடங்கு துப்புறவாக உள்ளன.
அமைதி வேண்டும். சந்தோஷம் வேண்டும். தெருவில் கூட்டம் கூட்டமாய்ப் போய்க்கொண்டிருக்கும் இளைஞர்களை நினைத்துக் கொள்கிறேன். நன்றாகக் குடிக்கட்டும். காதலிலும், கலவியிலும் சந்தோஷம் பெறட்டும். அவ்வப்போது வேண்டுமென்றால் புத்தனோ, சிவனோ, சிலுவையோ, மசூதியோ அதன்முன் ஒரு நிமிடம் கண்மூடி நிற்கட்டும்.
அப்பொழுதாவது போர் மீண்டும் மூளாமல் தடுக்கப்படலாம்.
- Badri, 11:25
http://thoughtsintamil.blogspot.com/
|
|
|
|