Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 386 online users.
» 0 Member(s) | 384 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,287
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,227
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,288
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,620
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,046
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,456
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,471
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,022
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  வெறுமை
Posted by: vasisutha - 03-02-2004, 05:06 AM - Forum: கவிதை/பாடல் - Replies (3)

<span style='color:#9100ff'>தொலைந்து போன எதனையோ
தேடிக்கொண்டிருக்கும் வயோதிபங்கள்...
தொலைத்துக் கொண்டிருக்கும் இளமைகள்...
தொலைப்பதற்காய் பிறந்திருக்கும் கருக்கள்!
* * *
-------------------------

* * *
காற்று வந்து மூடும் மணல்
எழுத்துக்கள் போல
அழிந்து கொண்டிருக்கும்
சிறிய வயது சினேகிதங்கள்..!
விழிப்புற்றுப் பார்க்கையில்
சில மிச்சங்கள் மட்டும் இருந்தன
வாழ்க்கையில்...!

---------------------------- </span>

Print this item

  ஒஸ்கார் விருது
Posted by: vasisutha - 03-02-2004, 04:14 AM - Forum: சினிமா - Replies (1)

இம்முறை ஒஸ்கார் விருதினை பெற்ற திரைப்படங்கள், கலைஞர்கள் விபரம்.


*<span style='color:#ad00ff'>ACTOR IN A LEADING ROLE
Sean Penn
MYSTIC RIVER

*ACTOR IN A SUPPORTING ROLE
Tim Robbins
MYSTIC RIVER

*ACTRESS IN A LEADING ROLE
Charlize Theron
MONSTER

*ACTRESS IN A SUPPORTING ROLE
Renee Zellweger
COLD MOUNTAIN

*ANIMATED FEATURE FILM
FINDING NEMO
Andrew Stanton

*ART DIRECTION
THE LORD OF THE RINGS: THE RETURN OF THE KING
Grant Major (Art Direction); Dan Hennah and Alan Lee (Set Decoration)

*CINEMATOGRAPHY
MASTER AND COMMANDER: THE FAR SIDE OF THE WORLD
Russell Boyd

*COSTUME DESIGN
THE LORD OF THE RINGS: THE RETURN OF THE KING
Ngila Dickson and Richard Taylor

*DIRECTING
THE LORD OF THE RINGS: THE RETURN OF THE KING
Peter Jackson

*DOCUMENTARY FEATURE
THE FOG OF WAR
Errol Morris and Michael Williams

*DOCUMENTARY SHORT SUBJECT
CHERNOBYL HEART
Maryann DeLeo

*FILM EDITING
THE LORD OF THE RINGS: THE RETURN OF THE KING
Jamie Selkirk

*FOREIGN LANGUAGE FILM
THE BARBARIAN INVASIONS
Canada
Directed by Denys Arcand

*HONORARY AWARD
HONORARY AWARD
Blake Edwards

*MAKEUP
THE LORD OF THE RINGS: THE RETURN OF THE KING
Richard Taylor
Peter King

*MUSIC (SCORE)
THE LORD OF THE RINGS: THE RETURN OF THE KING
Howard Shore

*MUSIC (SONG)
THE LORD OF THE RINGS: THE RETURN OF THE KING
"Into the West"
Music and Lyric by Fran Walsh and Howard Shore and Annie Lennox

*BEST PICTURE
THE LORD OF THE RINGS: THE RETURN OF THE KING
Barrie M. Osborne, Peter Jackson and Fran Walsh

*SHORT FILM (ANIMATED)
HARVIE KRUMPET
Adam Elliot

*SHORT FILM (LIVE ACTION)
TWO SOLDIERS
Aaron Schneider and Andrew J. Sacks

*SOUND EDITING
MASTER AND COMMANDER: THE FAR SIDE OF THE WORLD
Richard King

*SOUND MIXING
THE LORD OF THE RINGS: THE RETURN OF THE KING
Christopher Boyes, Michael Semanick, Michael Hedges and Hammond Peek

*VISUAL EFFECTS
THE LORD OF THE RINGS: THE RETURN OF THE KING
Jim Rygiel, Joe Letteri, Randall William Cook and Alex Funke

*WRITING (ADAPTED SCREENPLAY)
THE LORD OF THE RINGS: THE RETURN OF THE KING
Screenplay by Fran Walsh, Philippa Boyens & Peter Jackson

*WRITING (ORIGINAL SCREENPLAY)
LOST IN TRANSLATION
Written by Sofia Coppola </span>


thank to oscar.com
http://www.oscar.com/oscarnight/winners/index.html

Print this item

  News
Posted by: oslo - 03-01-2004, 11:17 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (4)

அன்புக்குரிய தமிழ் பேசும் சகோதர, சகோதரிகளே !

2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் நாள் நடைபெற்ற கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இரண்டு ஆண்டுகளே கழிந்த நிலையில் இருபெரும் சிங்களப் பேரினவாதக் கட்சிகளுக்குமிடையே தொடர்ந்து கொண்டிருக்கும் அதிகாரப் போட்டியின் விளைவாக மீண்டும் ஒரு பொதுத் தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமைக்குத் தமிழ்த் தேசிய இனம் தள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும் இலங்கையில் இப்போது நிலவிக் கொண்டிருக்கும் அரசியற் சுூழ்நிலையினதும் சர்வதேச அரங்கில் எமது விடுதலைப் போராட்டத்திற்கு சாதகமாக உருவாகி வரும் மாற்றங்களினதும் பின்னணியில் எம்மினத்தின் சுயநிர்ணய உரிமைத் தீர்மானத்தை உலகறிய மீண்டும் வலியுறுத்தக் கிடைத்த ஓர் வரலாற்றுச் சந்தர்ப்பமாக இத் தேர்தலைப் பயன்படுத்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுதி புூண்டுள்ளது.

வரலாற்றுக் காலத்திலிருந்து இலங்கைத் தீவில் தனக்கெனத் தனியானதோர் மரபு வழித் தாயகத்தையும் அதில் இறைமையையும், ஆட்சி உரிமையையும் தன் வசம் கொண்டிருந்த தமிழ்த் தேசிய இனம், ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து முதலில் தன் இறைமையை இழந்து பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1833 ல் முழு இலங்கைத் தீவும் ஒரே அரசியல் நிர்வாகக் கட்டமைப்பிற்குள் கொண்டு வரப்பட்டபோது தமிழ்த்தேசிய இனத்தின் அங்கீகாரமின்றி ஆங்கிலேய மேலாதிக்கத்தால் தமிழர் தாயகம் சிங்கள மேலாதிக்கத்துடன் ஒன்றிணைக்கப்பட்டது.

பின்னர் 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி ஆங்கிலேய ஆட்சியாளர் இலங்கைத் தீவை விட்டு வெளியேறிய வேளையில், தமிழ்த் தேசிய இனத்தின் தரப்பில் முன்வைக்கப்பட்ட அனைத்து அரசியல் கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டு சிங்கள தேசத்தின் தயவில் தமிழ்த்தேசிய இனத்தின் தலைவிதி தங்கியிருக்க வேண்டிய நிலைமைக்கு வழியமைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட நிலப்பறிப்பு, குடியுரிமைப்பறிப்பு, வாக்குரிமைப் பறிப்பு,மொழியுரிமைப் பறிப்பு மற்றும் கல்வி,தொழில் பண்பாடு போன்றவற்றில் ஏற்படுத்தப்பட்ட இனரீதியான பாரபட்ச நடவடிக்கைகள் ஆகியவற்றினால் தமிழ் இனத்தின் தனித்துவத்திற்கும் வாழ்விற்கும் விடுக்கப்பட்ட இன அழிப்பு அச்சுறுத்தலின் விளைவாக எமது மரபு வழித்தாயகத்தில் எமது விவகாரங்களை நாமே நிர்வகிக்க வேண்டும் என்ற தீர்மானத்தின் அடிப்படையிலும் சுயநிர்ணய உரிமைத் தத்துவத்தின் பெயரிலும், தமிழ் இனத்தின் சார்பில் இலங்கை தமிழரசுக் கட்சியால் முன்னெடுக்கப்பட்ட அகிம்சை வழிப்போராட்டங்கள் சிங்கள அரசுகளினால் ஆயுத முனையில் அடக்கப்பட்டன. 1957 ஆம் ஆண்டிலிருந்து காலத்திற்குக் காலம் தமிழினத் தலைவர்கள் சிங்களப் பேரினவாத ஆட்சியாளரோடு செய்து கொண்ட அரசியல் ஒப்பந்தங்களும் கிழித்தெறியப்பட்டன.

தொடர்ந்து பாதுகாப்பற்ற தமிழ் மக்கள் மீது 1956,1958 ஆம் ஆண்டுகளில் திட்டமிட்ட அரச வன்முறை ஏவிவிடப்பட்டது. 1972 இல் தமிழ் இனத்தின் பிரதிநிதிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களினால் நிறைவேற்றப்பட்ட ஒற்றை ஆட்சி முறையிலான குடியரசு அரசியல் சாசனத்தினால் தமிழ் இனத்தின் உரிமைகள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக மறுக்கப்பட்ட நிலையில் தமிழ் இனத்தரப்பில் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் ஏற்பட்டது.

இந்த அரசியற் சுூழ்நிலையில் தமிழரின் அரசியல் அமைப்புகள் ஒன்றிணைந்து 1976 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் நாள் தமிழ்த் தேசிய இனத்திற்கு உரித்தான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் முழுமையான இறைமை கொண்ட சுதந்திரத் தமிழீழ அரசை நிறுவுவதெனத் தீர்மானித்தன.

தமீழீழத்திற்கான ஆணை

1977 ஆம் ஆண்டு ஆடி மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழீழ இலட்சியத்தை முன்வைத்துப் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு அமோகமான ஆதரவை தமிழினத்தின் தாயகமான வடக்குக்கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் பேசும் மக்கள் அளித்ததன் மூலம் சுதந்திரத் தமிழீழத்திற்கான ஆணை வழங்கப்பட்டது.

சுதந்திர தமிழீழத்திற்கான ஆணைக்குப் பதிலடியாக உடனடியாகவே சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களினால் இனப்படுகொலைத் தாக்குதல்கள் தமிழ் இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டதோடு, அடுத்த ஆண்டில் (1978) ஒற்றையாட்சி முறையை மேலும் வலுப்படுத்தி இரண்டாவது குடியரசு அரசியல் சாசனம் தமிழ் மக்களினதும் அவர்களது பிரதிநிதிகளினதும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து 1979 இலும் 1981 இலும் பின்னர் பாரியளவில் 1983 இலும் தமிழினப் படுகொலைத் தாக்குதல்கள் சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களினால் திட்டமிட்டுத் தீவிரப்படுத்தப்பட்டன.

இந்தச் சுூழ்நிலையில் தமிழ் இனத்தின் வாழ்வையும் தனித்துவத்தையும் பாதுகாக்கவும் அதன் பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டவும் ஆயுதப் போராட்டமே ஒரே வழி என்ற தவிர்க்க முடியாத நிலைமைக்குத் தமிழ்த் தேசிய இனம் தள்ளப்பட்டு, ஆயுதப் போராட்டம் விரிவடைந்ததோடு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் தலைமையில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தினை முறியடிப்பதற்கும் அதன் மூலம் தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் அபிலாஷைகளை நசுக்குவதற்கும் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த சிங்களப் பேரினவாத அரசுகளினால் எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்விடைந்த நிலையில் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு இராணுவ ரீதியாக தீர்வு காண முடியாது. அரசியல் ரீதியாகவே அதனைத் தீர்க்க முடியும்'' என்னும் மெய்நிலை சர்வதேச சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வலியுறுத்தப்பட்ட சுூழ்நிலையில் சர்வதேச சமூகத்தின் பங்களிப்புடன் கூடிய அரசியற் பேச்சுவார்த்தைகளுக்கு அடிகோலப்பட்டது.

மாவீரரது தியாகமே காரணம்

இவ்விதம் தமிழ்த் தேசியத்தின் வலிமை நிலை நாட்டப்பட்டிருப்பதற்கு, பல்வேறு துன்ப துயரங்களும், ஒரு இலட்சம் வரையிலான உயிரிழப்புக்களுக்கும் இடையே எமது மக்கள் தொடர்ந்து காட்டி வந்திருக்கும் அர்ப்பணிப்புடன் கூடிய இலட்சியப் பற்றுறுதியும் , வீரவரலாறு படைத்திருக்கும் எமது மாவீரரதும், போராளிகளினதும் தியாகங்களும் சாதனைகளுமே காரணமென்பதை இச் சந்தர்ப்பத்தில் நாம் எல்லோரும் நினைவு கூரக்கடமைப்பட்டுள்ளோம்.

2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் நாள் நள்ளிரவு தமிழீழ விடுதலைப் புலிகள் தாமாகவே முன்வந்து ஒரு தலைப்பட்சமாகப் பிரகடனப்படுத்திய போர் நிறுத்தமும் தொடர்ந்து ஸ்ரீலங்கா அரசினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் இணக்கப்பாட்டுடன் மேற்கொள்ளப்பட்ட நோர்வே அரசின் அனுசரணை முயற்சிகளின் விளைவாக ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையும் ஸ்ரீலங்கா அரசுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பல சுற்றுப் பேச்சுக்களுக்கு வழிசமைத்தன.

இந்தப் பேச்சுக்களின் போது எட்டப்பட்ட உடன்பாடுகளின் பிரகாரம் தமிழ் மக்களுடைய அன்றாட வாழ்வில் மீண்டும் இயல்புநிலையினை ஏற்படுத்துவதற்கு அவசியமாகவும் அவசரமாகவும் தேவைப்படும் மனிதாபிமான அடிப்படையிலமைந்த புனர்வாழ்வு மற்றும் புனர்நிர்மாண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே அமைக்கப்பட்ட சிரான் உள்ளிட்ட உப அமைப்புக்கள் செயற்படாத காரணத்தினாலும் மேலும் எமது மக்களின் அவசியத் தேவைக்கெனச் சர்வதேச சமூகம் உவந்தளித்த பெருந்தொகை நிதியுதவியைப் பயன்படுத்துவதற்கான அதிகாரக் கட்டமைப்பு இல்லாத காரணத்தினாலும் எமது மக்களின் அதிகரித்து வந்திருக்கும் அன்றாட துன்ப துயரங்களையும் அதன் விளைவாக அவர்களின் மனஉணர்வுகளையும் கருத்திற் கொண்டு தமிழ்த் தேசிய இனத்தின் தாயகத்திற்கென இடைக்காலத் தன்னாட்சி அதிகாரக்கட்டமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையினைத் தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வைத்தனர்.

அந்த இடைக்காலத் தன்னாட்சி அதிகாரக் கட்டமைப்பிற்கான தமது வரைவினை 2003 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் நாள் நோர்வே அனுசரணையாளர்களூடாகச் சமர்ப்பித்தனர். இந்த வரைபு தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பிப்பதற்கான நாளைக் குறிப்பிடுமாறு ஸ்ரீலங்கா அரசினைத் தமிழீழ விடுதலைப் புலிகள் கோரினர்.

தீர்வு முயற்சிக்கு பாரிய பின்னடைவு

இந்த நிலையிற் போர் நிறுத்த உடன்படிக்கை நிலைத்து நிற்பதற்குக் கணிசமானளவு ஆதாரமாக விளங்கிய பாதுகாப்பு,உள்துறை மற்றும் தகவல் தொடர்பு ஆகிய மூன்று முக்கிய அமைச்சுக்களையும் தன்னாட்சி அதிகாரக் கட்டமைப்பு வரைபு வழங்கப்பட்ட 3 நாட்களுக்குள் ஜனாதிபதி பொறுப்பேற்றதையடுத்து ஆரம்பமான அரசியற் சச்சரவு ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்து எதிர்வரும் 20040402 ஆம் நாள் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான உத்தரவைப் பிரகடனப்படுத்தியதோடு முடிவுக்கு வந்தது.

இந்த நிலைமை எமது மக்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரக்கட்டமைப்பினை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளைச் சீர்குலைத்ததோடு தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு முயற்சிகளுக்கும் பாரிய பின்னடைவையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது.

இதன் பின்னரும் சமாதான முயற்சிகளில் தமது திடமான உறுதிப்பாட்டைத் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனைச் சர்வதேச சமூகம் அங்கீகரித்ததுடன் பாராட்டியுமுள்ளது.

தமிழீழ தேசிய இனத்தின் மரபு வழித்தாயகத்தின் நிலப்பரப்பில் 70 வீதத்தைத் தொடர்ச்சியாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து அங்கு ஓர் அரச நிர்வாகத்திற்குச் சமமான சகல அம்சங்களையும் உள்ளடக்கிய நிர்வாகக் கட்டமைப்பை நடத்தி, ஓர் நடைமுறை அரசினை தம்வசம் கொண்டிருந்தபோதிலும், தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்தத்தை 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி பிரகடனம் செய்து, தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி யுத்த நிறுத்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டுத் தமிழ்த் தேசியப் பிரச்சினை தொடர்பான அரசியல் பேச்சுவார்த்தைகளில் பங்கு கொண்டிருந்தார்கள் என்பதைச் சகலரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று நாம் கருதுகின்றோம். எனவே தான் சீர்குலைந்திருக்கும் அரசியல் தீர்வு முயற்சிகளை ஆக்கபுூர்வமாகவம் ஆரோக்கியமாகவும் மீண்டும் முன்னெடுக்கும் விதத்திற் சிங்கள தேசமும் தமது பங்களிப்பை வழங்குமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கின்றது.

இதனடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்வரும் தீர்மானங்களை முன்வைக்கின்றது,

தமிழ்த் தேசிய இனத்தின் தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை (சுயநிர்ணயவுரிமை) ஆகிய மூலாதாரக் கொள்கைகளை ஏற்று அவற்றின் அடிப்படையில் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வில் முஸ்லிம் மக்கள் தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவானதும் திட்டவட்டமானதுமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. தமிழர்களைப் போலவே முஸ்லிம்களும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருப்பவர்கள் என்ற வகையிலும் எமது தாயகத்தில் தமிழர்களுடன் இணைந்து வாழ்ந்து வந்திருப்பவர்கள் என்ற அடிப்படையிலும் தமிழ்த்தேசியப் பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம் மக்களின் தனித்துவம் , பாதுகாப்பு ,பண்பாடு, பொருளாதாரம் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கான விடயங்களும், அம்சங்களும் உள்ளடக்கப்பட வேண்டும்எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதிபுூண்டுள்ளது. இந்த வகையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகாரசபைக்கான பிரேரணையில் முஸ்லிம்கள் தொடர்பான அம்சங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபையில் தங்களின் பங்கு எவ்வாறு அமையவேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் பங்குபற்றும் உரிமை முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளுக்குண்டெனத் தமிழீழ விடுதலைப் புலிகள் தெளிவாகத் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் வடக்கு,கிழக்கிலுள்ள முஸ்லிம் சமூகத்தினால் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபையில் இடம்பெறுவார்கள் என அவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். இந்தப் பின்னணியில் ஒரு பொதுவான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதில் தமிழர்களுடன் முஸ்லிம் சகோதரர்களும் இணைந்து கொள்வார்கள் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை கொண்டுள்ளது.

இருபது ஆண்டு காலமாக நீடித்த போரினால் அழிந்து போன தமிழ்தேசத்தையும் , சிதைந்துபோன தமிழர் வாழ்வையும் மீளக்கட்டியெழுப்பி தமிழ் மக்கள் நாள் தோறும் எதிர்கொள்ளும் புூதாகாரமான வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, தமிழ் மக்களது வாழ்வில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்காக மக்கள் நலனை மையப்படுத்தி மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து சட்ட ஆட்சிக்கு அமைவாக நடைமுறை சாத்தியமான முறையில் தமிழ் மக்கள் சார்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வைத்த இடைக்கால தன்னாட்சி அதிகாரசபைக்கான ஆலோசனையைச் சிங்கள தேசம் முழுமையாக ஏற்றுத் தமிழீழ விடுதலைப் புலிகளோடு விரைவாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தி இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபையாக நிறுவ வேண்டும்.

மக்களின் நலன்களைப் புறந்தள்ளிப் போரியல் நலன்களுக்கு முதன்மை கொடுத்து அநீதியான முறையில் தமிழர் வாழ்விடங்களில் அமைக்கப்பட்டுள்ள உயர்பாதுகாப்பு வலயங்களும், இராணுவ முகாம்களும், அகற்றப்பட்டு, இராணுவ நெருக்குதல்கள் அற்ற நிலையில் தமிழ்மக்கள் தமது சொந்த வாழ்விடங்களுக்கு உடனடியாகத் திரும்பிச் சென்று குடியமர ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் நடமாடி, தரையிலும் கடலிலும் தமது வாழ்வாதாரச் செயற்பாடுகளை மேற்கொள்ளுவதற்கு விதிக்கப்பட்டுள்ள இராணுவ அழுத்தங்களும் தடைகளும் முற்றாக அகற்றப்பட வேண்டும்.

தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் வரை காத்திராது தமிழ் மக்களை அழுத்திக்கொண்டிருக்கும் அவசர மனிதாபிமானத்தேவைகளுக்கும், மற்றும் பாரிய பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களுக்கும் நேரடியாக உதவிகளை வழங்கி தமிழ்த் தேசத்தின் பொருளாதார வாழ்வை மேம்படுத்தச் சர்வதேச சமூகம் உதவவேண்டும்.

நியாயமற்ற முறையில் ஆண்டுக்கணக்காகச் ஸ்ரீலங்காவின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியற் கைதிகள் அனைவரும் விரைவாக விடுவிக்கப்பட வேண்டும்.

தமிழர் தாயகப் பிரதேசங்களில் இராணுவத்தினராலும்,பொலிஸாரினாலும் கைது செய்யப்பட்டு காணாமற்போன அப்பாவி மக்களின் நிலையை என்னவென அறியாது பல்லாண்டுகளாகப் பெரும் துன்ப துயரங்களைச் சுமந்து வாழும் அவர்களது உறவுகளுக்கும் எமது மக்களுக்கும் நீதி கிடைப்பதற்காக ஒரு நீதியான சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு உறுதியான தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளும் கடப்பாடுகளும் முழுமையாக நிறைவேற்றப்பட்டுத் தமிழர் தாயகத்தில் புூரணமான அமைதி நிலையும் இயல்பு நிலையும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆயுதப்படைகளின் அடாவடித்தனங்களைச் சகித்துக்கொண்டும் சமாதானச் சுூழலுக்கு எதுவித பங்கமும் ஏற்படாதவாறு போர் நிறுத்தத்தை இறுக்கமாகவும் உறுதியாகவும் கடைப்பிடித்துக் கொண்டும் சமாதான வழிமுறையில் ஆழமான பற்றுறுதியுடனும் உறுதிப்பாட்டுடனும் விடுதலைப் புலிகள் செயற்பட்டு வருகின்றனர். எனவே தமிழ் மக்களின் உண்மையான ஏகப் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சில நாடுகள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்திவரும் தடையை நீக்கி அவர்கள் கௌரவமாகவும் சமநிலையிலும் அதிகாரபுூர்வமாகவும் ஸ்ரீலங்கா அரசுடன் பேச்சு நடத்துவதற்கான சுூழலை சர்வதேச சமூகம் உருவாக்க வேண்டும்.

மேற்சொல்லப்பட்ட தீர்மானங்களை புூரணமாக செயல் வடிவில் சாதிக்கும் நோக்கத்துடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பினராகிய நாம்,

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை தமிழ் மக்களின் தேசியத் தலைமையாகவும், விடுதலைப் புலிகளைத் தமிழ் மக்களின் உண்மையான ஏகப்பிரதிநிதிகளாகவும் ஏற்று தமிழ் தேசிய இனத்தின் சார்பிலான விடுதலைப் புலிகளின் போராட்ட இலட்சியத்திற்கு நேர்மையாகவும் உறுதியாகவும் முழு ஒத்துழைப்பையும் நல்குவோம்.

தமிழீழ மக்களது சுதந்திரமான, கௌரவமான, நீதியான வாழ்விற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் கீழ் தமிழ் மக்களை சாதி மத பேதங்களுக்கு அப்பால் ஒரே அணியில் ஒரே தேசமாக அணிதிரட்டி உறுதியாக உழைப்போம்.

தமிழ் பேசும் மக்களது பாதுகாப்பிற்காகவும் சுதந்திரமான வாழ்விற்காகவும் போராடிவரும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அதன் தலைமைத்துவத்தின் அரசியல் போராட்ட முன்னெடுப்புகளுக்கும் உறுதுணையாக இருந்து செயற்படுவோம்.

தமிழ்த் தேசிய இனத்தின் கோரிக்கைகள் தொடர்ந்தும் நிராகரிக்கப்பட்டு, நியாய புூர்வமான அரசியல் தீர்வு மறுக்கப்பட்டு இராணுவ ஆக்கிரமிப்பும், அரச அடக்குமுறையும் தொடருமானால், தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழர் தாயகத்தில் , தமிழரின் இறைமையும் சுதந்திரமும் நிலைநிறுத்தப்படுவது தவிர்க்க முடியாத யதார்த்தமாகிவிடும் என்பதை வலியுறுத்துகின்றோம்.

கௌரவத்துடன் கூடிய அமைதியான வாழ்வினை நாடி நிற்கும் தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் அபிலாஷைகளுக்கு எதிரிகளாகவும் சிங்களப் பேரினவாத சக்திகளின் எடுபிடிகளாகவும் எம் மத்தியில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் சுயநல சந்தர்ப்பவாத குழுக்களை தமிழ் மக்கள் அடையாளங் கண்டு எதிர்வரும் தேர்தலில் அவர்களை ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டுமென எமது மக்களை நாம் வேண்டி நிற்கின்றோம். தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் அபிலாஷைகளை வலியுறுத்தி எம்மினத்தின் அரசியல் உறுதிப்பாட்டை மீண்டும் பிரகடனப்படுத்தி தமிழ்த் தேசியத்தை மேலும் பலப்படுத்தித் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைந்து தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமது அமோக ஆதரவை வழங்க வேண்டுமெனத் தமிழ் பேசும் மக்களை நாம் அறைகூவி அழைக்கின்றோம்.

Print this item

  டேட்டிங்
Posted by: Mathan - 03-01-2004, 08:08 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (13)

டேட்டிங் இது இப்போது இல்லாத இடமே இல்லை. இதைப்பத்தி உங்க கருத்து என்ன?

டேட்டிங் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதா? அதன் எல்லைகள் என்ன?

Print this item

  ஆதங்கம்
Posted by: Mathan - 03-01-2004, 06:04 PM - Forum: கவிதை/பாடல் - Replies (5)

இது பரணியோட கவிதை. அவர் ஏன் இதை இங்கை போடலைன்னு தெரியலை. இல்லை ரொம்ப காலத்துக்கு முன்னால் போட்டு நான் பாக்கலையா? பரணி தான் சொல்லணும்.

உறவு, நண்பர்கள் இல்லாம வெளி நாட்டிலை தவிக்கிற தமிழனோட மனத்தை ரொம்ப அருமையா சொல்லியிருக்கார்.

வாழ்த்துக்கள் பரணி

[size=18]ஆதங்கம்

[size=14]எத்தனை இழப்புகள்
எத்தனை தவிர்ப்புகள்
தேசம்விட்டு வந்தபின்
என்னை நானே உணர்கின்றேன்

ஆலயத் திருவிழாக்கள்
பாடசாலை விளையாட்டு
பொங்கலின் களிப்புகள்
புத்தாண்டு கொண்டாட்டம்
தீபாவளி விற்பனை என
எத்தனை எத்தனையோ
இழப்புகள் எனக்குள்ளே

அவைமட்டுமல்ல

உறவுகளின் திருமணங்கள்
உடன்பிறப்பின் சந்தோசங்கள்
ஊரவரின் மறைவுகள்
நண்பர்களின் விருந்துபசாரங்கள்
என எத்தனை எத்தனையோ
இழப்புகள் எனக்குள்ளே

இன்றும்கூட
நாம் ஆலயம் சென்றோம்
நாம் உறவினர் வீடு சென்றோம்

அவர்கள் வந்தார்கள்
இவர்கள் வந்தார்கள் என
என் வீட்டார் கூறும்போது எனக்கு
ஆத்திரமும் பொறாமையும்
ஓருங்கே வருகின்றது

நான் மட்டும் இங்கே
அனாதையாய் வாழ்கின்றேன்

உறவினர் இல்லை
ஊரவர் இல்லை
பண்டிகை இல்லை
இது என்ன வாழ்க்கை

தமிழனாய் பிறந்து
இன்று தனியனாய் வாழ்கின்றேன்
அங்கும் இல்லை
இங்கும் இல்லை
இடையினில் வாடுகின்றேன்

அழகாக உடுத்த ஆடை உண்டு
ஆசைதீர உண்ண உணவுகள் உண்டு
கால்நீட்டி உட்கார அழகான மனை உண்டு
இத்தனை இருந்தும்
உறவுகள் இல்லாது
ஊரவர் இல்லாது
எப்படி வாழ்வது

நன்றி - பரணிதரன்

Print this item

  வளைகாப்பு--இன்று விஞ்ஞான ஆய்வில் நிரூபிப்பு....!
Posted by: kuruvikal - 03-01-2004, 05:02 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - No Replies

<img src='http://www.nature.com/nsu/040126/images/foetus_180.jpg' border='0' alt='user posted image'>
கருப்பையிலுள் குழந்தை ஒன்று...!

தமிழர்களின் கலாசாரத்தில் (இன்றும் தமிழ்நாட்டில் வழக்கில் இருப்பது) கர்ப்பவதியான பெண்ணிற்கு வளைகாப்பு சடங்கு நடத்துவது வழமையாக இருந்தது...! (இலங்கைத்தமிழரிடத்தில் இது மூடநம்பிக்கை என்று சொல்லி அருகிவிட்டது) இச்சடங்கின் போது கர்ப்பமான பெண்ணின் இரண்டு கைகளிலும் பலவை ஒலி எழுப்பக் கூடிய வளையல்களை (காப்பு) அணிவித்து ஒலி எழுப்பி பாடல்கள் பாடி மகிழ்வர்....!

மிகச் சமீபத்தில் செம்மறி ஆடோன்றில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் இருந்து மெல்லிசைகளை (பியானோ இசை போன்றவற்றை) கருவில் இருக்கும் குட்டி ஆடொன்று கேட்டு உணர்வது உறுதி செய்யப்பட்டுள்ளது...! மனிதனின் கருப்பையும் ஆடுகளின் கருப்பையும் அமைப்பில் கிட்டத்தட்ட ஒத்தவையாக இருப்பதால் இதே நிலை மனித சிசுவிற்கும் உறுதிப்படுத்தக் கூடியதே....!

தாயின் கருவறையில் இருக்கும் போதே குழந்தை கேட்டல் திறனை விருத்தி செய்யத் தொடங்குவதாகவும் தாயின் குரல் என்பவற்றை அடையாளம் கண்டு கொள்வதாகவும் இவ்வாய்வு கூறுகிறது....! அதேவேளை உயர் அளவு சத்தங்கள் கருப்பைச் சுழலில் நுண் அதிர்வுகளை ஏற்படுத்துவதுடன் சிசுவின் கேட்டல் திறனையும் பாதிப்படையச் செய்ய சாத்தியம் இருக்கின்றது எனவும் குறிப்பாக அதிகம் இரைச்சல் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்யும் கர்ப்பிணிகளின் குழந்தைகள் இதனால் பாதிப்படைய சாத்தியம் இருப்பதாகவும் முன்னர் கருதப்பட்டது இருப்பினும் சிலவகை உயர் சத்த அலைகள் கருப்பைச் சூழலினால் வடிகட்டப்படுவதும் இவ்வாய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது....!

மேலதிக தகவல் இங்கே..


Thanks...Nature.com...In tamil kuruvikal valippoo...!

Print this item

  கடவுள் ஆணா? பெண்ணா?
Posted by: Mathan - 03-01-2004, 12:53 PM - Forum: தத்துவம் (மெய்யியல்) - Replies (12)

கடவுள் ஆணா? பெண்ணா?

ஏவாளுக்குப் போரடிக்கத் துவங்கியது. ஈடன் தோட்டம் முழுவதையும் சுற்றி வந்து விட்டாள்.அழகிய சிற்றோடைகளும், அருவியும், பசும்புல் வெளியும், மலர்த்தோட்டங்களும், மலைச்சாரலும், அடர்ந்த வனங்களும் போரடித்து விட்டன.
"கடவுளே!" என்று அழைத்தாள். கடவுள் அவள் முன் தோன்றினார். அவர் பார்வை அவள் கையில் இருந்த ஆப்பிள் மீது படிந்தது. " இந்த ஆப்பிளைச் சாப்பிடாதே!" என்று எத்தனை முறை உனக்குச் சொல்லியிருக்கிறேன்?" என்று ஏவாளைக் கடிந்து கொண்டார் கடவுள்.

"ச். போங்க!" என்று சலித்துக் கொண்டாள் ஏவாள்.
"என்ன பசிக்கிறாதா?" என்றார் கடவுள்.
"இல்லை. போரடிக்கிறது"
" என்ன வேண்டும்?"
"எனக்குப் பேச்சுத் துணைக்கு இன்னொரு மனித உயிரைப் படைத்துக் கொடுங்கள்" என்றாள் ஏவாள்
கடவுள் யோசித்தார். பின் சொன்னார்.:
"சரி. படைத்துவிடலாம். ஆனால் மூன்று நிபந்தனைகள்." என்றார்.
"என்ன?'
முதல் நிபந்தனை: அந்த உயிர் உருவம், உள்ளம் எல்லாவற்றிலும் உனக்கு நேர் எதிரானதாக இருக்கும். அங்கே பொறுமை இராது. அவசரம் இருக்கும். கனிவு இருக்காது, முன் கோபம் இருக்கும். அங்கே மென்மை இருக்காது, முரட்டுத்தனம் இருக்கும்."
"ஏன் அப்படி படைக்க வேண்டும்?"
"அப்போதுதான் அவனோடு மல்லுக்கட்டவே உனக்கு நேரம் சரியாக இருக்கும். போரடிக்கிறது என்று சொல்ல மாட்டாய்"
சற்று யோசித்த ஏவாள் சரி என்றாள்." இரண்டு நிபந்தனைகள் என்றீர்களே இன்னொன்று என்ன?"
"அவன் நம்மைப் போல் இல்லை. அவனுக்கு ஈகோ அதிகம். உன்னைத்தான் முதலில் படைத்தேன் என்று அவனுக்குத் தெரியவந்தால் அவனால் தாங்க முடியாது. அதனால் அவனைத்தான் முதலில் படைத்தேன், அவன் விலா எலும்பிலிருந்துதான் உன்னைப் படைத்தேன் என்று அவனுக்கு சொல்லி அனுப்பப் போகிறேன். நீ ரகசியத்தைப் போட்டு உடைத்து விடக்கூடாது"
"சரி போனால் போகிறது, விட்டுக் கொடுத்து விடுகிறேன்?" என்றாள் ஏவாள்
"இன்னொரு விஷயம். இந்த ரகசியம் நம் இருவருக்கு மட்டும்தான் தெரிய வேண்டும். எந்தக் காரணத்தைக் கொMடும் வெளியே சொல்லிவிடாதே!"
"ஏன் சொல்லக் கூடாது?'
"அதான் சொன்னேனே, அவனுக்கு ஈகோ அதிகம். நாம் இரண்டாவதாகத்தான் படைக்கப்பட்டோ ம் என்பதையே தாங்க முடியாதவனால், கடவுள் என்பவரும் உன் போல் பெண்தான் என்ற விஷயத்தை எப்படித் தாங்க முடியும்?" என்றாள் கடவுள்.

கடவுள் ஆணா? பெண்ணா? ஏன் பெண்ணாக இருக்கக்கூடாது என்று, ஆணின் விலா எலும்பிலிருந்துதான் பெண் படைக்கப்பட்டாள் என்பதை மாற்றி எழுத வேண்டும் என்று வாதாடி வரும் பெண்கள் இந்தக் கதையைச் சொல்லிக் கேள்வி எழுப்புகிறார்கள்.

ஐரோப்பா கிடக்கட்டும். தமிழ் மரபென்ன? ஆதி பகவன், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், மலர் மிசை ஏகினான் எண்குணத்தான் என்று கடவுளை ஆணாகவே கருதி எழுதுகிறார் வள்ளுவர்.

வள்ளுவர் காலத்தில், பெண் ' ஒண்ணுந்தெரியாத' பிறவியாகக் கருதப்பட்டாள் என்பதற்குப் பல சான்றுகளைச் சொல்ல முடியும். ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்க்கு உரை எழுதும் பரிமேலழகர், "பெண்மைக் குணத்தினால் தானாய் அறியமாட்டாமையால் கேட்டதாய்" என்று வள்ளுவர் சொல்லியிருப்பதாகக் கருதுகிறார். விவரம் அறியாதவளாகப் பெண் கருதப்பட்ட காலத்தில் அவளை சர்வ வல்லமை பொருந்திய கடவுளாகச் சித்தரிக்க யார் முனைவார்கள். அதனால் வள்ளுவத்தை விட்டுவிடலாம்.

அதற்குப் பல ஆண்டுகாலம் பிற்பட்ட பெரிய புராணம், உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் என்று துவங்குகிறது. ஜோதியன், ஆடுவான் என்று அடுத்தடுத்து ஆணாகவே கடவுளை விவரிக்கிறது. இறைவனே முதலடி எடுத்துக் கொடுக்க சேக்கிழார் இயற்றிய காவியன்ம் பெரிய புராணம் என்பதால் இதை கடவுளுடைய ஒரு சுய அறிமுகமாக (self introduction) எடுதுக்கொள்ளலாமா?

கம்பர் இந்த வம்பே வேண்டாம் என்று, 'தலைவர்' என்று ஆணுக்கும் பெண்ணுக்கும் பயன்படுத்தக் கூடிய ஒரு பொதுச் சொல்லைப் பயன்படுத்தி 'அவருக்கு' சரண் நாங்களே என்று காலில் விழுந்துவிடுகிறார்.

ராமன், கிருஷணன், சிவன், விஷ்ணு, லட்சுமி, சரஸ்வதி என்று கடவுள் என்ற கருத்தாக்கத்திற்கு ஆண் பெண் என்ற தோற்றங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, கடவுளைப் பொன்னார் மேனியனாகவோ, பச்சைமாமலை போல் மேனியாகவோ, கதிர் மதியம் போல் முகத்தானாகவோ கவிஞர்கள் கற்பனையைக் கொட்டியிருக்கிறார்கள். ஆனால் அதற்கு முன்பு, இயற்கையைக் கடவுளாக மனிதர்கள் கண்ட
காலத்தில் கடவுள் ஆணா? பெண்ணா?

இளங்கோவடிகள், கடவுள் வாழ்த்துப் பாடுவதில்லை. மங்கல வாழ்த்துப் பாடுகிறார். சூரியன், மழை இரண்டையும் வாழ்த்தும் பாடல்கள் அதில் இடம் பெறுகின்றன.
காவிரி, வைகை ஆகிய நதிகளைப் பெண்ணாக வர்ணிக்கும் இளங்கோ மழை ஆணா பெண்ணா என்று குறிப்பிடுவதில்லை. ஆனால் பூமியைப் பெண்ணாகக் குறிப்பிடுகிறார். ( வண்ணச் சீரடி மண் மகள் அறிந்திலள்)

வைதீக மதங்கள், பஞ்ச பூதங்களில் மண்ணைத் தவிர மற்ற எல்லாவற்றையும் ஆண்களாகவே குறிப்பிடுகின்றன. மழையின் கடவுள் இந்திரன் ( பலர் நினைப்பது போல் வருணன் அல்ல. வருணன் கடலின் கடவுள். அவனது வாகனமே மீன் -மகரம்-தான்) என்ற கருத்தாக்கம் வைதீக மதங்களோடு வந்ததாக இருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுகிறது. தமிழ் மரபில், நிலம் என்னும் நல்லாள் மட்டுமல்ல, மழையும் கூடப் பெண் கடவுள்தான். சான்று இன்றும் வணங்கப்படும், 'மாரி' அம்மன். மழைக்குத் தமிழில் 'எழிலி' (அழகானவள்) என்று ஒரு சொல் இருக்கிறது.

அக்னியைக் கும்பிடும் வழக்கமும் வைதீக மதங்களோடுதான் வந்திருக்க வேண்டும். அக்னியைக் கும்பிட ஆரம்பித்த கலாசாரத்தில், இந்திரன் மழைக்கடவுளாகியிருக்க வேண்டும். புறநானுற்றில் 'பல்யாக சாலை முது குடுமிப் பெருவழுதி' என்று ஒரு பெயர் குறிப்பிடப்படுகிறது. அவர் முந்நீர் விழவு என்று மழைக்காக விழாக்கள் எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த விழாக்கள்தான் இந்திர விழாக்களாக ஆகியிருக்க வேண்டும். சிலப்பதிகார இந்திர விழா மழை வேண்டி நடந்த விழா அல்ல. அது கோடைகாலத்தில், சித்திரை மாதத்துப் பெளர்ணமி அன்று நடைபெற்ற வசந்த விழா. அப்போது காவிரி நீர் நிறைந்து மலர்கள் சூடி நடந்ததாக மாதவி வாக்குமூலம் கொடுத்திருக்கிறாள். வைதீக மதங்கள் வருவதற்கு முன் மழை வேண்டி நடந்த விழாக்களில், இந்திரனிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.பாரியைப் போல இன்னொரு வள்ளல் பேகன் அவன் காலத்தில் வாழ்ந்த கபிலர், மழை வேண்டிப் பாடிய பாடலில் இந்திரனைக் காணோம். அவர் வேண்டிய கடவுள் முருகனாக இருந்திருக்கலாம்.

தொல்காப்பியத்தில் வருணன் என்ற சொல்லைப் பயன்படுத்தும் தொல்காப்பியர் இந்திரன் என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை. மாறாக வேந்தன் என்று எழுதுகிறார். வேந்தன் என்றால் அரசன் என்றும் கூடப் பொருள் கொள்ளலாம்.

பழந்தமிழ் நூல்களில் நெருப்பை முன்னிறுத்திச் சடங்குகள் செய்தாக அதிகம் தகவல்கள் இல்லை. தமிழில் அக்னி தீ என்று சொல்லப்படுகிறது. நல்லது அல்ல என்பதற்கு முன் அடையாகப் (prefix) பயன்படுத்தப்படுவதும் இந்தச் சொல்தான்.(உதாரணம்: தீ வினை) ஆனால் நீர் நிலைகளைக் குறிப்பதற்கு ஏராளமான சொற்கள் இருக்கின்றன. அருவி, ஆறு, சுனை, துறை, ஓடை, துருத்தி, கடல், ஊற்று, பொய்கை, மடு, குழி, குளம், ஆவி, வாவி, செறு, கேணி, கிணறு, ஊருணி, ஏந்தல், தாங்கள், இலஞ்சி, கோட்டகம், ஏரி, அனை, கால்வாய், மடை, சமுத்திரம், வாரிதி, தீர்த்தம் இவை அனைத்தும் நீர் இடங்களை (water sources) தமிழ் சொற்கள். இந்தப் பெயர்களில் அமைந்த பல ஊர்கள் இப்போதும் தமிழ் நாட்டில் இருக்கின்றன.

நீர் நிலைகளைக் காவல் காக்கும் தெய்வமாக பெண்களை பெளத்த மரபிலும் குறிப்பிடுகிறார்கள். சம்பாபதி என்பது அந்தத் தெய்வத்தின் பெயர்.இதற்கான ஆதாரங்கள் மணிமேகலையில் இருக்கின்றன. புத்த சாதக கதைகளில் ஒரு மணிமேகலை வருகிறார். அவரைக் கடல் தெய்வமாக, கடல் பயணம் செல்வோருக்கு ஏற்படும் இடர்பாடுகளிலிருந்து காப்பாற்றும் தெய்வமாக அந்தக் கதைகள்
சித்தரிக்கின்றன.

கெடுதி செய்யும் பெண் தெய்வங்களையும் பற்றி இளங்கோ எழுதுகிறார்: மதுரைக்கு வரும் வழியில், காட்டில், தாகத்தில் தவிக்கும் கண்ணகிக்குத் தாமரைப் பொய்கையிலிருந்து நீர் கொண்டு வரச் செல்லும் கோவலனை வனசாரிணி என்ற கானுறை தெய்வம் மயக்க முயல்வதாக சிலப்பதிகாரத்தில் ஒர் காட்சி விரிகிறது.

இயற்கை வழிபாடு இருந்த காலத்தில் கடவுள் பெண்ணாக இருந்திருக்கிறார். அவர் ஆணாக எப்போது மாறினார் என்பதுதான் என் கேள்வி. வைதீக மதங்கள் வந்த பின்னரா? அல்லது அதற்கும் முன்னரேவா? மலையாளிகளைப் போலத் தமிழ் சமூகமும் தாய் வழிச் சமூகமாக இருந்ததா? அப்படியானால் அது தந்தைவழிச் சமூகமாக மாறியது எப்போது? கி.பி.10ம் நூற்றாண்டு வாக்கில் என்று ஒரு கருத்து இருக்கிறது, அது உண்மைதானா? தந்தை வழிச் சமுகமாக மாறியதால்தான் கடவுளும் ஆண் ஆனாரா?

மற்ற மரபுகளில் - குறிப்பாக நம்மைப் போலவே பழமை வாய்ந்த சீன மரபில்- என்ன சொல்கிறார்கள்? கடவுள் ஆணா? பெண்ணா/
ஏன் இப்போது இந்தக் கேள்விகள் என்கிறீர்களா? அயோத்தியில் ராமர் கோயில் இருந்ததா என்று அகழ்வராய்ச்சித் துவங்கியிருக்கிறது.நாமும் நம் பக்கத்தில் தோண்டி வைப்போமே என்று இலக்கியத்தில் கை வைத்தேன். அது கேள்விகள் என்னும் சுரங்கத்தில் இறக்கி விட்டது.

இது குறித்து நன்கு அறிந்த இலக்கிய வல்லுநர்கள், மானிடவியல் அறிஞர்கள், வரலாற்றாசிரியர்கள் யாராவது கை தூக்கி விடுவார்களா? ( அவர்கள் ஆண்களாகவும் இருக்கலாம், தப்பில்லை)

நன்றி - மாலன்

Print this item

  பாராட்டுக்கள்
Posted by: Eelavan - 03-01-2004, 11:47 AM - Forum: பொழுதுபோக்கு - Replies (7)

நண்பர்களே
இந்தக் களத்தில் சிறிது காலம் முன்பு களத்தில் சிறப்பாகக் கருத்தெழுதி வந்த உறுப்பினர்கள் களப் பொறுப்பாளரொருவரால் பாராட்டப் பட்டதை நாமறிவோம் அதன் தொடர்ச்சியாக களத்தின் சூடு,சுவை,சுவாரசியம் குறையாமல் கருத்துக்கள் எழுதி வரும் நண்பர் B.B.C அவர்களைப் பாராட்ட விரும்புகின்றேன்
இவர் தனது முதல் கருத்தை தை மாதம் 29 ம் திகதி வணக்கத்துடன் ஆரம்பித்தார் இன்று வரையுள்ள ஒரு மாத காலப் பகுதியில் இவர் எழுதிய கருத்துக்கள் 775
களத்தின் சார்பாக B.B.Cக்கு உங்கள் கரகோசங்கள் ஒலிக்கட்டும்

Print this item

  குழந்தைகள் மேல் வன்முறை
Posted by: Mathan - 02-29-2004, 11:53 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (7)

குழந்தைகள் மேல் வன்முறையை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க.

இலங்கையில குழந்தைகளை அடிச்சு வளர்க்கும் (பொதுவா) வெளிநாடுகளிலும் அதே போக்கை தொடர்ராங்கன்னு அறிஞ்சேன். உங்க கருத்தை சொல்லுங்க.

Print this item

  அவங்களோ 4வதுக்கும் ‘
Posted by: Rajan - 02-29-2004, 11:35 PM - Forum: புலம் - Replies (102)

மங்களகரமான 3வது தடைவையாக திறக்கப்இன்றய புலனாய்வுத் என்ற துரொக வானெலிக்கு வாழ்த்து சொல்லவரும் தோழமையின் பட்டியல்

1திரு.*****கம்
2திருதிருமதி.நி****
3திரு.திருமதி.*****தா
4திரு.*****ரன்
5திரு.திருமதி.க*****ன்

6திரு.திருமதி.ம*****
7திரு.திருமதி.க *****
8திருச*****சன்
9திரு.திருமதி.*****னி
10திரு.*****ர் Nஐர்மனி


இவர்கள் குடும்ப சமேதராய் திறப்பு விழாவில் நிச்சயம்கலந்து கொள்வார்கள் சில உணர்வுகள் இருந்தாலும் பாடுன வாயும் ஆடுன காலும் சும்மாவிடாது என்ற தத்துவம்பொருந்தும் சிலரும் கில வேளை வரலாம் பாவங்கள். 1லாவது திறப்புவிழாவிக்கு மொய் கொடுத்த சனம் றோட்டில் நிக்கினம் 2வது திறப்புவிiழா வ_டு சுரண்டபட்மபின் நடந்ததுபுதிதாகபும் மொய் எழுதப்பட்டது பாவம் அந்த சனம். இப்பொழுது 3வதுதிறப்புவிழா பாவம் சனம் உதபாருஙகோ உhip கரனெ நடத்தி ஒடுறமாதிரி வட்டியும் இல்லாம முதலும் இல்லாம?????????

Print this item