Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 282 online users.
» 0 Member(s) | 279 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,298
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,229
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,289
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,626
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,052
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,458
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,473
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,023
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  ,Zit tPukzp [au;...
Posted by: ragupathyragavan - 05-28-2004, 11:49 AM - Forum: கவிதை/பாடல் - Replies (2)

இணுவை வீரமணி ஜயர்...புகழ் பாட நினைக்கிறேன்...உதவவும்

Print this item

  சிறீதேவி உன் வாழ்வில்....
Posted by: kuruvikal - 05-27-2004, 01:10 PM - Forum: சினிமா - No Replies

<img src='http://www.webulagam.com/news/photonews/images/2004/01/17_sridevi.jpg' border='0' alt='user posted image'>

முன்னாள் நடிகையும் இன்னாள் பிரபலமும்


கணவர் விவகாரம்: நடிகை ஸ்ரீதேவிக்கு நீதிமன்றம் மீண்டும் சம்மன்


நான் தான் ஸ்ரீதேவியின் கணவர் என்று கூறி ராமகிருஷ்ண கௌட் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றம் ஸ்ரீதேவிக்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.


இந்த வழக்கில் ஜூலை 7ம் தேதி கண்டிப்பாக ஸ்ரீதேவி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அந்த சம்மனில் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தைச்சேர்ந்த ராமகிருஷ்ண கௌட் என்பவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,

நடிகை ஸ்ரீதேவியை தான் திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும், தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தும் அவர் வரவில்லை என்றும். எனவே ஸ்ரீதேவியை தன்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஸ்ரீதேவி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டார். 3 முறை இது போல சம்மன் அனுப்பியும் ஸ்ரீதேவி வரவில்லை. இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோதும் ஸ்ரீதேவி வரவில்லை. அவர் சார்பில் வழக்கறிஞர் மட்டுமே ஆஜரானார்.

ஆனால், வழக்கறிஞரின் வாதத்தை ஏற்காத நீதிபதி ஜூலை 7ம் தேதி ஸ்ரீதேவி கண்டிப்பாக நீதிமன்றத்திற்கு வர வேண்டும் என்று கூறி மீண்டும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

thatstamil.com

-------------------------

உதையே படமாக்கினா....விதியை வெல்லும் போல..... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Print this item

  new member request....
Posted by: ragupathyragavan - 05-27-2004, 11:58 AM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (27)

விசேட உறுப்பினர் ஆவது எப்படி..?

Print this item

  தேங்காய் எண்ணெயால் பாதகமா..?
Posted by: shanmuhi - 05-26-2004, 09:29 PM - Forum: மருத்துவம் - Replies (31)

<b>தேங்காய் எண்ணெயால்
இதயத்துக்குப் பாதகமில்லை
இந்திய போ~hக்கு நிபுணர் கருத்து </b>

தேங்காய் எண்ணெய் இதயநோய்களுக்கு காரணமான பொருள் என்ற எண்ணம் பரவலாக உள்ளது. மாறாக மனித உடல் முழுமைக்கும் நல்ல போசாக்கு வழங்கும் ஒரு நல்ல உணவுப் பொருள்அது.
இவ்வாறு கூறியிருக்கிறார் போ~hக்குத் துறைவல்லுனரான இந்திய மருத்துவர் டாக்டர் ரி.வர்ஸ்மா. இந்தியாவில் இராமச்சந்திரா மருத்துவக் கல்லு}ரியின் முன்னாள் போ~hக்குத்துறை இணை ஆலோசகரான அவர் நியுூயோர்க் செல்லும் வழியில் கொழும்பில் தரித்திருந்தபோது இந்தக் கருத்தை வெளியிட்டார்.
தேங்காய் எண்ணெய்க்கு எதிரான கருத்து மேற்குலகநாடுகளில் இருந்து தான் வந்தது. தங்கள் நாடுகளில் உற்பத்தியாகும் வேறு உணவு எண்ணெய்களைப் பிரபலமாக்கும் நோக்கத்துடன் அவர்கள் இதைச் செய்திருக்கலாம்.ஆசியாவிலுள்ள நாங்கள் பல நு}ற்றாண்டுகளாக அடிமைப்பட்டிருந்ததால் இன்னமும் அந்த காலனித்துவ மனப்பான்மை யிலிருந்து விடுபடாமலிருக்கிறோம் - என்றார் டாக்டர்வர்ஸ்மா.
இந்தியாவிலும் இலங்கையிலு முள்ள நாம் பல காலமாக தேங்காய் எண்ணெய்யை எதுவித பக்க விளைவுமில்லாமல் சாப்பிட்டு வருகிறோம். மக்கள் சுகமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்து வந்துள்ளார்கள். என்ன நடக்கிறது என்றால், நாங்கள் மேற்குலகினர் போல வாழ்க்கையை மாற்றிக்கொள்ள ஆரம்பித்து இந்தப் பொறிக்குள் சிக்கிக் கொண்டு விட்டோம் - என்று மேலும் கூறினார் டாக்டர்வர்ஸ்மா.

நன்றி : உதயன்

Print this item

  மீண்டும் டிக்சிட்
Posted by: Mathan - 05-26-2004, 05:54 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (27)

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக டி.என்.டிக்சிற் நியமனம்

இந்திய இராணுவம் தமிழீழத்தை ஆக்கிரமித்திருந்த காலப்பகுதியில், சிறீலங்காவுக்கான இந்தியத் தூதுவராகக் கடமையாற்றிய டி.என்.டிக்சிற், புதிய காங்கிரஸ் ஆட்சியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய இராஐhங்க அமைச்சில் மிகவும் அதிகாரம் வாய்ந்த பதவியாகக் கருதப்படும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பில் இதுவரை இருந்த பிரNஐஸ் மிஸ்ரா, காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சி கைமாறியதும் இராஐpனாமாச் செய்ததை அடுத்தே, டி.என்.டிக்சிற் நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஐPவ் காந்தி பிரதமராக இருந்தபோது, இலங்கை இனப்பிரச்சனையில் இந்தியா அதீத நாட்டம் காட்டுவதற்கு அப்போதைய ஐனாதிபதியாக இருந்த Nஐ.ஆர்.ஐயவர்த்தன டி.என்.டிக்சிற் மூலமாகவே தனது திட்டங்களை நிறைவேற்றினார்.

ஈழத்தமிழர்களின் உரிமைக்காகப் போராடும் விடுதலைப் புலிகள் அமைப்பை, ஈழத்தமிழர்களின் ஆதரவைப் பெறாத ஒரு பயங்கரவாத அமைப்பு என்று சர்வதேச அரங்கில் பிரச்சாரம் செய்துவந்த டி.என்.டிக்சிற் இப்போது மீண்டும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டிருப்பது, இலங்கையின் இனப்பிரச்சனையில் இந்தியாவின் கடும்போக்கையே காட்டுகிறது என்று ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

இருப்பினும், இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விளைவுகளை நன்கு அறிந்த டி.என்.டிக்சிற், தற்போதைய இனப்பிரச்சனையில் இந்தியாவின் நேரடித் தலையீட்டை மீண்டும் அதிகரிக்க ஆலொசனை வழங்க வாய்ப்பிருப்பதாக அரசியல் அவதானிகள் கருத்துக் கூறியுள்ளார்கள்.

puthinam

Print this item

  vanakkam vanakkan _/\_
Posted by: ragupathyragavan - 05-26-2004, 12:19 PM - Forum: அறிமுகம் - Replies (28)

தாய்மண் தளத்தில் தமிழ் நண்பர்களுக்கு வணக்கம் வையகம் போற்ற வாழ்க தமிழ்.
நட்புடன்
நண்பன்
இ.இராகவன்

Print this item

  எச்சரிக்கை செய்கிறேன்....!
Posted by: kuruvikal - 05-25-2004, 11:00 PM - Forum: கவிதை/பாடல் - Replies (1)

<img src='http://kuruvikal.yarl.net/archives/images/butterfly.jpg' border='0' alt='user posted image'>

பட்டாம் பூச்சியே...
சின்னவன் என்
சிந்தை குழப்பி
சிறுமையாய் விளையாடவெண்ணும்
பூவோடு
உனக்கென்ன ரகசியம்....!
நாளை
காதல் பட்டாம் பூச்சியாய்
என் மனம் ஆக்கிரமிக்க
உன்னை ஒற்றனாக்கும்
திட்டம் தீட்டலோ....???!

பட்டாம் பூச்சியே
நீ பூச்சியாய் உள்ளவரையே
என் நண்பன்
பூவோடு உறவாடி
ஒற்றனானாய்
நீ என் எதிரி....!

எச்சரிக்கை செய்கிறேன்
அறுத்துக் கொள்
பூவோடு உன்னுறவு....!
வேண்டாம் எனியும்
காதல் பட்டாம் பூச்சிகள் கண்டு
தம் சுயம் தொலைத்து
காதல் பித்துக்களாய் அலையும்
மனித உறவுகள்....!


முதற் பதிவு இங்கே.... http://kuruvikal.yarl.net/archives/000937.html#more

Print this item

  பல்கலைக்கழக மாணவர் வேண்டுகோள்
Posted by: Eelavan - 05-25-2004, 05:35 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (3)

புலிகள் இயக்கம் மீதான தடை நீடிக்கை
இந்தியா மீள்பரிசீலணை செய்ய வேண்டும்
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை

விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை இந்தியாவின் புதிய அரசு மீள்பரிசீலனை செய்ய வேண் டும் என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டிருக்கின்றது.
ஈழத்தமிழர்களினதும், தமிழகத்து மக்களினதும் உணர்வுகளுக்கு மதிப் பளித்து இந்திய அரசு இதனைச் செய்ய வேண்டும் என்று மாணவர் ஒன்றியம் தெரிவித்திருக்கிறது.
இதுதொடர்பாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்ப தாவது:-
ஈழத்தமிழ் மக்களின் சுதந்திர விடு தலையினை தமது இலட்சியமாகக் கொண்டு பல்வேறு உயிர்த்தியாகங்க ளின் மத்தியில் கடந்த இரண்டு தசாப் தங்களாகப் போராடி வருகின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை தமிழ் மக்களிலிருந்து பிரித்து அவர் களைத் தனிமைப்படுத்தி இல்லாதொழிக் கும் பல்வேறு முயற்சிகளில் ஸ்ரீலங்கா அரசானது முனைந்து செயற்பட்டு வரு கின்றது. குறிப்பாக ஓர் இனத்தின் விடுதலைக்காகப் போராடும் ஒரு விடு தலை அமைப்பினைத் பயங்கரவாதி கள் என முத்திரையிட்டு தடைசெய்து ஏனைய நாடுகளையும் தமது பொய்ப் பிரசாரத்தின் மூலம் விடுதலைப் புலி கள் அமைப்பினை தடைசெய்யுமாறு கோரி வந்தது. இதனடிப்படையில் எமது அயல் நாடான இந்தியாவும் தமி ழீழ விடுதலைப் புலிகள் அமைப்பி னையும் தடைசெய்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டின் சமாதான சூழலில் எமது விடு தலைப் போராட்டத்தின் யதார்த்தத் தினைப் புரிந்துகொண்ட பல்வேறு உலக நாடுகள் விடுதலைப் புலிகள் மீதான பார்வையினை மாற்றி வரு கின்றன. குறிப்பாக விடுதலைப் புலி கள் அமைப்பினை உத்தியோகபூர்வ மாகத் தமது நாடுகளுக்கு அழைத்தும் சமாதான நடவடிக்கைகளில் தமிழர் தரப்பு நியாயங்களுக்காகக் குரல் கொடுத்தும் வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில்தான் இந்தி யாவும் எமது விடுதலைப் போராட் டம் தொடர்பான யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையினை நீக்கி எமது சுதந்திரமான இருப்புக்கு வழி சமைக்கும் என ஈழத்தமிழ் மக்களா கிய நாம் மிகுந்த நம்பிக்கையோடு இருந்தோம். இலங்கைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி யின் பின்னால் உள்ள ஏகப்பிரதிநிதி கள் விடுதலைப் புலிகள் என்ற நிலைப் பாடும், தமிழகத்தினை பொறுத்தமட் டில் ஈழத்தமிழர் ஆதரவு கூட்டணியின் வெற்றியும் மேலும் வலுவூட்டின. தமி ழீழ மக்களும் தமிழக மக்களும் ஒரே சாரப்பட கருத்தொற்றுமையினை கொண்டுள்ளார்கள் என்பதனை நடந்து முடிந்த இலங்கை, இந்திய தேர்தல் முடிவுகள் கோடிட்டுக் காட்டுகின்றன.
இந்த சூழ்நிலையில் இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தடையை மேலும் 2 ஆண்டுகள் நீடித் தமை மிகுந்த வேதனையினை ஊட் டுவதோடு அதிருப்தியினையும் உண்டு பண்ணுகிறது. இதனை நாம் வன்மை யாகக் கண்டிக்கின்றோம்.
எனவே, இந்தியாவில் புதிதாக பதவியேற்றுள்ள அரசு ஈழத்தமிழர் களினதும் தமிழகத்து மக்களினதும் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, உண்மை நிலையினை புரிந்துகொண்டு நசுக்கப்படும் ஓர் இனத்திற்காக போரா டும் ஓர் அமைப்பு மீதான தடையினை நீடித்திருப்பது குறித்து, மீள்பரிசீலனை செய்வதோடு ஈழத்தமிழர்களின் சுதந் திரமான சுபீட்சமான வாழ்வுக்கும் தமது ஆதரவினை வழங்குமாறு வேண்டுகின் றோம்.

Print this item

  hi
Posted by: Rajan - 05-24-2004, 10:17 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (11)

[img]=http://www.rt66.com/~ozone/dog.jpg[/img]

Print this item

  காதல் என்ன விலை...??!
Posted by: kuruvikal - 05-24-2004, 01:39 PM - Forum: கவிதை/பாடல் - Replies (4)

<img src='http://kuruvikal.yarl.net/archives/wallpaper-flower.jpg' border='0' alt='user posted image'>

காத்திருந்தேன்
யன்னல் திறப்பாய் என்று
காலங்கள் ஓடியது
காதலும் பெருகியது
ஒரு தலையாய்...!

உன்னைக் காணாமலே
காதலித்தேன் யன்னலை
உனக்காய் வைத்த பூச்செண்டை
யன்னல் ஏற்றது...
அழகாய் பதிலும் சொல்கிறது...!

அட... ஆறறிவு ஜீவனாம் - நீ
சடத்திலும் கேவலம்
உன்னுடன் காதல் என்று - நான்..!

வாறான் வெளிநாட்டு மாப்பிள்ளை
ஓடிப்போ....
காதல் என்ன விலை என்று
டொலரில் காட்டுவான்...
நீயும்
யன்னல் என்ன
உன்னையே திறப்பாய்...!



முதற் பதிவு இங்கே.... http://kuruvikal.yarl.net/archives/2004_05.html

Print this item