| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 332 online users. » 0 Member(s) | 329 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,185
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,179
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,576
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,273
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,568
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,000
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,396
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,069
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,969
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,232
|
|
|
| இயற்பியல், வேதியியல் அறிஞர். ஹன்ஸ் ஆர்ஸ்டட் |
|
Posted by: Rasikai - 03-11-2006, 10:31 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (1)
|
 |
<b>இயற்பியல், வேதியியல் அறிஞர். ஹன்ஸ் ஆர்ஸ்டட் </b>
ஹன்ஸ் கிறிஸ்டியன் ஆர்ஸ்டட் (பிறப்பு: 14, ஆகஸ்ட் 1777 -இறப்பு: 9, மார்ச் 1851) இயற்பியல், வேதியியல் அறிஞர். மின்னியல் மற்றும் காந்தவியல் இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பைக் கண்டறிந்ததன் மூலம் மின்காந்தவியல் என்ற புதிய அறிவியல் பிரிவின் உருவாக்கத்துக்கு வழிவகுத்தவர். முதல் முறையாக செயற்கை முறையில் அலுமினியத்தை உருவாக்கியதன் மூலம் வேதியியலுக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார் ஆர்ஸ்டட்.
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஆர்ஸ்டட், கோபன்ஹேகன் பல்கலைக் கழகத்தில் மருந்தியல் பயின்றவர். 1801-ல் பயண உதவித் தொகை பெற்று ஐரோப்பிய நாடுகளுக்கு 3 ஆண்டு சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஆர்ஸ்டட், ஜெர்மனியில் இருந்தபோது இயற்பியல் அறிஞர் ஜோஹன் ரிட்டரைச் சந்தித்தார். அப்போது ஜோஹன் ரிட்டர், காந்தம் மற்றும் மின்சாரத்துக்கு இடையே தொடர்பு இருக்க வேண்டும் என்ற தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். இயற்கையின் ஒருங்கிணைந்த தன்மையில் நம்பிக்கை கொண்ட ஆர்ஸ்டட், இந்தக் கருத்தின் மீது ஆர்வம் கொண்டார். 1806-ல் டென்மார்க் திரும்பி, கோபன்ஹேகன் பல்கலைக் கழக பேராசிரியராக மின்னோட்டம் மற்றும் ஒலியியல் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டார். அங்கு இயற்பியலுக்கென தனித் துறையை உருவாக்கினார் ஆர்ஸ்டட்.
ஒரு மாலை நேர விரிவுரைக்காக, சோதனையில் ஈடுபட்டிருந்த ஆர்ஸ்டட் மின்சாரத்துக்கும், காந்தத்துக்கும் இடையிலான உறவைத் தற்செயலாகக் கண்டறிந்தார். 3 மாதங்களுக்குப் பின்னர் இது தொடர்பாக விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு, மின்னோட்டமானது வயர் வழியாகச் செல்லும்போது காந்தப் புலத்தை உருவாக்குகிறது என்பதை நிரூபித்தார். காந்தத் தூண்டலுக்கான சிஜிஎஸ் முறை அலகுக்கு இவரது நினைவாக "ஆர்ஸ்டட்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
கோபன்ஹேகனில் உள்ள டென்மார்க் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் ஆர்ஸ்டட் முன்முயற்சியில் உருவானதாகும். இது தவிர புதிதாக அறிவியல் கலைச் சொற்களை உருவாக்கியதன் மூலம் டேனிஷ் மொழிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார் ஆர்ஸ்டட்.
http://www.viduppu.com/tech/index.php?suba...t_from=&ucat=2&
|
|
|
| சூப்பர் கம்ப்யூட்டர் |
|
Posted by: Rasikai - 03-11-2006, 10:28 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (3)
|
 |
<b>வினாடிக்கு 46000 கோடிக்கோடி கணக்குகளைச் செய்யும் சூப்பர் கம்ப்யூட்டர்: </b>
ஜெர்மனி சாதனை
ஐரோப்பாவிலேயே சக்திவாய்ந்த கணினி ஜெர்மனியின் ஜூலிக் நகரில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
நமது வீடுகளில் பயன்படுத்தும் சாதாரண கணினியைவிட இது 15 ஆயிரம் மடங்கு வேகம் உள்ளது. ஐ.பி.எம். நிறுவனம் இதைத் தயாரித்திருக்கிறது. இதனுடைய வேகம் 46 டெராஃபிளாப். புரியவில்லையா, ஒரு வினாடிக்கு 46 டிரில்லியன் செயல்களைச் செய்யும். ஒரு டிரில்லியன் என்பது ஒன்றுக்குப் பிறகு 18 பூஜ்யங்களைச் சேர்த்தால் வரும் தொகை. (46 டெராஃபிளாப்பே புரிகிறது அல்லவா!). அதாவது 46,000 கோடிக்கோடிதான் அது.
பருவ நிலையைக் கணிக்கவும், பங்குச் சந்தை நிலவரத்தைத் தெரிவிக்கவும் இது மிகவும் பயன்படும்.
அறிவியல் ஆய்வுகளைச் செய்யும் ஆராய்ச்சியாளர்களுக்கு இது அற்புதமான கருவி. அவர்கள் போட நினைக்கும் கணக்குகளை நொடியில் போட்டு விடையைத் தரும்.
இந்த கணினியைத் தயாரிக்கும் செலவில் 90%-ஐ ஜெர்மனியின் மத்திய அரசும் 10%-ஐ ஜூலிக் நகரம் அமைந்துள்ள ரைன்-மேற்குபாலியா மாநிலமும் ஏற்றுக்கொண்டுள்ளன.
ஆனால் இதற்கும் தாத்தா அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில், லாரென்ஸ் லிவர்மோர் தேசிய ஆராய்ச்சி நிலையத்தில் இருக்கிறது. அதன் செயல்திறன் விநாடிக்கு 367 டெராஃபிளாப்.
http://www.viduppu.com/tech/index.php?suba...t_from=&ucat=2&
|
|
|
| கவி |
|
Posted by: தாரணி - 03-11-2006, 07:31 PM - Forum: கவிதை/பாடல்
- No Replies
|
 |
நிலாவே நீ ஏன் தேய்கிறாய்
நீயும் என்னைப்போல் யாரையும் காதலிக்கிறாயா!
|
|
|
| ஈழம் - ஈரான் - அமெரிக்கா - ஜெயதேவன் |
|
Posted by: Vasan - 03-11-2006, 06:12 PM - Forum: புலம்
- Replies (2)
|
 |
ஈழம் - ஈரான் - அமெரிக்கா - ஜெயதேவன் (பாகம் 1)
தலைப்பை பார்த்தால் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது மாதிரி தெரியும். ஆனால் உண்மையில் சில முடிச்சுக்கள் இருக்கத்தான் செய்கின்றன.
விடயம் வெகு சுலபம். ஈழத்தில் அமெரிக்கா இராணுவரீதியாக தலையிடுமா? அதை ஈரான் விவாகாரம் தடுத்து நிறுத்துமா? அமெரிக்கா தலையிட்டால் ஈழத்தில் உள்ள தமிழ் மாநிலத்திற்கு ஜெயதேவன் இடைக்கால முதலமைச்சராக வருவாரா? கேள்விகள் இவ்வளவுதான். இனி பதில்களைப் பார்ப்போம்
விடுதலைப்புலிகள் போரை ஆரம்பித்தால், அமெரிக்கா உடனடியாக தன்னுடைய படைகளை அனுப்பி விடுதலைப்புலிகளை அடக்கும் என்று பல சிங்களவர்களும் சில தமிழர்களும் நம்புகின்றார்கள். ஆனால் அமெரிக்காவிற்கு இலங்கைத்தீவில் தலையிடுவதற்கு அவசியமான காரணங்கள் இருக்கின்றதா என்று இவர்களிடம் கேட்டால், சொல்லுகின்ற பதில்கள் திருப்தியாக இல்லை.
அமெரிக்காவும் பல வருடங்களாகவே ஈழப்பிரச்சனையில் தலையிட்டபடி இருக்கின்றது. ஆரம்பத்தில் சிறிலங்கா இராணுவத்தினருக்கு ஆயுத உதவிகளும் பயிற்சிகளும் வழங்கி யுத்தத்தில் மறைமுகமாக பங்கெடுத்த அமெரிக்கா, பின்பு பேச்சுவார்த்தையில் தன்னுடைய மிக நெருங்கிய நட்பு நாடான ஜப்பான் மூலமும், இணைத் தலைமை நாடுகளில் ஒன்று என்னும் பெயரில் நேரடியாகவும் பங்கெடுத்து வருகின்றது. ஆனால் இலங்கையில் அமெரிக்காவிற்கு தேவையானது அப்படி என்னதான் இருக்கின்றது? சிலர் பொருளாதாரக் காரணங்கள் இருக்கின்றது என்று சிறுபிள்ளைத்தனமாக கூறுவார்கள். ஆனால் இலங்கையில் அமெரிக்கா சுரண்டுவதற்கு பாரிய வளங்கள் எதுவும் இல்லை. பாரிய முதலீடுகள் செய்வதற்கு மனித வளமும் இல்லை. ஆயினும் அமெரிக்கா மூக்கை நுளைத்தபடிதான் இருக்கின்றது. இதற்கு காரணம் எதுவென்று எப்படித்தான் தலையை பிய்த்துக்கொண்டு சிந்தித்தாலும், புவியியல்ரீதியான காரணங்களை தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை.
"உலக அரசியலை அறிவதற்கு உலக வரைபடத்தை பார்" என்று யாரோ ஒரு அறிஞன் சொன்னதாக ஞாபகம். உலக வரைபடத்தை பார்ப்பதற்கு முன்பு இன்று அமெரிக்காவிற்கு உள்ள சவால்கள் எதுவென்று பார்ப்போம். பனிப் போர் முடிவுற்ற பிறகு அமெரிக்காவின் எதிரிகள் மாறிவிட்டார்கள். தற்பொழுது அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தலாக கருதுவது இரண்டு விடயங்களை. ஒன்று, அமெரிக்க எதிர்ப்பின் அடிப்படையில் உலகில் பரவி வரும் இஸ்லாமிய தீவிரவாதம். மற்றுது பொருளாதார வல்லரசுகளாக உருவெடுத்து வருகின்ற சீன, இந்திய நாடுகள்.
இதில் அமெரிக்கா இஸ்லாமிய தீவிரவாதத்தை தன்னுடைய படைபலம் கொண்டு நசுக்க முற்படுகிறது. எங்கெல்லாம் இஸ்லாமிய அடிப்படைவாதம் உள்ளதோ, அங்கெல்லாம் தன்னுடைய இராணுவத்தை அனுப்பி ஆக்கிரமித்து வருகின்றது. முதலில் ஆப்கானிஸ்தான், பின்பு ஈராக் என்று வந்து தற்பொழுது ஈரானுக்கு குறி வைத்துள்ளது. அமெரிக்கா தற்பொழுது இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்கும் சாட்டில் காலனித்துத்தின் புதிய வடிவம் ஒன்றை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இனி வரைபடத்தை பார்ப்போம்.
அல் கைதா செயற்படும் நாடுகள்
மற்றைய இஸ்லாமிய தீவிரவாதிகள் செயற்படும் நாடுகள்
தற்பொழுது ஈராக்கையும் ஆப்கானிஸ்தானையும் அமெரிக்கா ஆக்கிரமித்துள்ளது. இந்த இரண்டு நாடுகளுக்கும் நடுவில் அணுவல்லரசாகும் முனைப்புக் கொண்ட நாடாகிய ஈரான் அமைந்துள்ளது. ஈரானுடைய அமைவிடமும் சரி, அது அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டத்தில் இருப்பதாக வரும் செய்திகளும் சரி, அமெரிக்காவை பொறுத்தவரை மிகப் பெரிய அச்சுறுத்தலே. ஈரான் இராணுவரீதியாக வளர்ச்சி பெறும் பட்சத்தில், அது ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நிலை கொண்டுள்ள அமெரிக்கப் படையினருக்கும், அமெரிக்காவின் செல்லப்பிராணியாகிய இஸ்ரேலுக்கும் மிகப் பெரும் ஆபத்தாக முடியும். அந்த வகையில் அமெரிக்கா ஈரான் மீது வெகுவிரைவில் போர் தொடுக்கும் என்று உறுதியாக நம்பலாம். ஈரானை அமெரிக்கா ஆக்கிரமிக்கும் பட்சத்தில் தரைவழியாக இணைந்திருக்கும் தொடர் நாடுகளாகிய ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
இவ்வாறு இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா பலமாக காலூன்றினால், அது உண்மையில் சீனாவினதும் இந்தியவினதும்; எல்லையில் அல்லது மிக அண்மையில் அமெரிக்கா தன்னுடைய படைகளுடன் நிலைகொண்டிருப்பதாக பொருள்படும். அத்துடன் பாகிஸ்தானுக்குள்ளும்; அமெரிக்கா நுளைகின்ற சாத்தியங்களையும் மறுப்பதற்கில்லை. ஒஸாமா பின்லேடனும் மற்றைய தீவிரவாத தலைவர்களும் பாகிஸ்தானுக்குள் மறைந்திருப்பதாக அமெரிக்கா அடிக்கடி கூறுவதையும் நினைவில் கொள்க.
தற்பொழுது இராணுவ வல்லரசுக்களின் காலம் மாறி பொருளாதார வல்லரசுகளின் ஆதிக்கத்திற்குள் உலகம் சென்று கொண்டு இருக்கின்றது. இராணுவ வலமையோடு பொருளாதாரத்திலும் சீனா நாலு கால் பாய்ச்சலில் முன்னேறிக்கொண்டு இருக்கின்றது. தற்பொழுது பொருளாதாரத்தில் ஆறாம் இடத்தில் இருக்கும் சீனா வெகு விரைவில் நான்காம் இடத்திற்கு வந்து விடும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள். இப்படியே போனால் சீனா உலகின் முதன்மை நாடாகி விடும். இதை தடுப்பது அமெரிக்காவின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. ஏற்கனவே சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பசுபிக் சமுத்திரம் அமெரிக்க கடற்டையின் ஆளுகையில் உள்ளது. தற்பொழுது சீனாவின் மேற்குப் பகுதியில் உள்ள நாடுகளையும் ஆக்கிரமித்து வருகின்றது. அந்த வகையில் அமெரிக்காவிற்கு நீண்டகால நோக்கில் சீனாவை கண்காணிப்பதோடு சீனாவிற்குள் பல குழப்பங்களை ஏற்படுத்துவதும் இலகுவாக இருக்கும்.
இதே போன்று இந்தியாவின் வட பகுதியில் நெருக்கமாக காலூன்றும் அமெரிக்கா, தெற்கில் இலங்கையில் தன்னுடைய தளத்தை அமைத்துக் கொள்ள முயற்சிக்கும். ஆனால் இலங்கையில் அமெரிக்கா தன்னுடைய தளங்களை அமைக்க விரும்புவதற்கு இன்னும் ஒரு முக்கிய காரணம் உண்டு.
தற்பொழுது மீண்டும் வரைபடத்தை பாருங்கள். அமெரிக்கா இன்று நிலைகொண்டுள்ள நாடுகளைச் சுற்றி இஸ்லாமிய நாடுகளே உள்ளன. உண்மையில் அமெரிக்கா வெடிகுண்டுகளின் மத்தியிலேயே குந்தியிருக்கின்றது. முகமதுநபிகள் பற்றிய கேலிச்சித்திரத்திற்கு எதிராக அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் கிளர்ச்சி நடைபெற்றுது போன்று, அமெரிக்கப் படைகள் நிலைகொண்டுள்ள இஸ்லாமிய நாடுகளிலும் ஒரு வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்ததும் அனைத்து மக்களும் அமெரிக்கப் படைகளிற்கு எதிராக கிளர்ந்தௌ மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? ஆகவே எவ்வாறான நிலைகளயும் சமாளிக்கும் வண்ணம் அமெரிக்காவிற்கு ஒரு பின்தளம் தேவை. அதுவும் இஸ்லாமிய மக்கள் இல்லாது அல்லது மிகக் குறைவாக வாழுகின்ற ஒரு நாட்டிலே அந்த தளம் அமைய வேண்டும் என்பதே அமெரிக்காவின் எண்ணம். அதுவே பாதுகாப்பானதும் கூட. தற்பொழுது இந்து சமுத்திரத்தில் அமெரிக்காவிற்கு டியோ கர்சியா தீவில் ஒரு தளம் உண்டு. ஆனால் அது ஈராக், ஈரான் போன்ற நாடுகளிற்கு மிகத் தொலைவில் அமைந்துள்ளது. எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்க்கையில் இலங்கைத்தீவு அமெரிக்காவிற்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கின்றது.
ஆகவே ஈழத்திலும் அமெரிக்கா காலூன்றுமா? இதை வைத்து ஜெயதேவன் போன்றவர்கள் காணும் கனவு என்ன?
பாகம் 2இல் தொடரும்
-வி.சபேசன் (01.03.06)
சுட்டது: http://www.webeelam.com/EealmIranUsaJeya.htm
|
|
|
| புத்திசாலியான குழந்தைகள் வளர.... |
|
Posted by: தாரணி - 03-11-2006, 06:12 PM - Forum: மருத்துவம்
- Replies (11)
|
 |
புத்திசாலியான குழந்தைகள் வளர....
<img src='http://img391.imageshack.us/img391/1206/baby20wj.gif' border='0' alt='user posted image'>
ஒரு குழந்தை நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே என்பார்கள். குழந்தை வளர்ப்பு என்பது தனி கலை. ஒவ்வொரு குழந்தையும் தனக்கு என்று ஒரு உலகத்தை வைத்துக் கொள்கிறது. அதை முதலில் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின்
உலகத்துக்குள் சென்று அவர்களின் எண்ணங்களை பாராட்டி, அதே நேரம் அவர்களை நமது நடைமுறை வாழ்க்கைக்கு கொண்டு வருவது ஒவ்வொரு பொற்றோர்களின் கடமை ஆகும்.
குழந்தைகளுக்கே உள்ள பயத்தை போக்குவது முதலில் நம் கடமை. அதற்கான வழிகளை கையாள வேண்டும். இருட்டான நேரத்தில் அவர்கள் பயப்படுவதை தவிர்க்க தேவையான தன்னம்பிக்கை கதைகளை கூற வேண்டும். அப்போது இருட்டு பயத்தில் இருந்து குழந்தை விடுபடும்.
அதன்பிறகு குழந்தைகள் அணியும் உடைகளை பார்த்து அவர்களை பாராட்ட வேண்டும். இந்த பாராட்டால் முக மலர்ச்சி அடையும். குழந்தைக்கு தன்னை அறியாமல் தன்னம்பிக்கை வளரும்.
பள்ளிக்கூடத்தில் பாடம் படிப்பதிலும், வீட்டுப் பாடம் படிப்பதிலும் அனைத்து குழந்தைகளும் சரியாக செய்யும் என்று கூறமுடியாது. அப்போது அவர்களின் குறைகளையும், நிறைகளையும் ஆராய வேண்டும். அவர்களின் நிறைகளை பாராட்டி அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து
கொடுத்து, குறைகளை ஆராய்ந்து அந்த குறைகளுக்கான காரணத்தை அறிந்து அதை போக்க நாம் சில ஆலோசனைகளை கூறவேண்டும். இது அவர்களை உற்சாகப்படுத்தும்.
குழந்தைகள் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும், ''டியூசன்'', அதன்பிறகு வீட்டு பாடம், சாப்பாடு, தூக்கம் என்று ஒரு வட்டத்துக்குள் விட்டுவிடக் கூடாது, ''டியூசன்'' முடிந்ததும் அவர்களுடன் காலாற நடந்து சென்று அவர்களுக்கு பிடித்த விளையாட்டை விளையாடி திருப்தி படுத்த வேண்டும். பின்னர் தூக்கம் வந்த பிறகும் ''படி படி'' என்று கூறாமல் தூங்க வைக்க வேண்டும். தூங்க செல்வதற்கு முன் அன்போடு, வீட்டு பாடம் செய்ய வேண்டியது உள்ளது. ஆகவே காலை 6 மணிக்கு எழுந்து விட்டால் வீட்டு பாடம் செய்து விடலாம் என்ற நம்பிக்கையை அவர்களிடம் ஏற்படுத்தி படுக்க வைக்க வேண்டும். காலை 6 மணிக்கே குழந்தை எழுந்து வீட்டு பாடம் செய்ய அலாரம் வைத்து, அவர்களுடன் நாமும் எழுந்து வீட்டுபாடம் முடிக்கும் வரை அருகில் உட்கார்ந்து இருக்க வேண்டும். குழந்தைகளை படிக்க சொல்லிவிட்டு டி.வி. பார்ப்பது தவறான செயல். அதை பெற்றோர்கள் தவிர்ப்பது அவசியம்.
குழந்தை தவறு செய்து விட்டு வந்து நம் மன்னிப்பை எதிர்பார்த்து நிற்கும் போது, அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளை கூறி ''டேக் இட் ஈஸி'' என்று கூறுங்கள். அவர்களிடம் குற்ற உணர்வு பறந்துவிடும். நாம் தவறு செய்யும் போது ''சாரிடா கண்ணா'' என்று கூறினால்
அவர்களும் அந்த வார்த்தைகளை பின்பற்றுவார்கள். அதே சமயம் குழந்தைகளுக்கு யாராவது ஏதாவது உதவி செய்யும் போது அதற்கு ''நன்றி'' தெரிவிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும்.
பள்ளிகளில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியை எட்டாத போது குழந்தை முகம் வாடி இருக்கும். அப்போது இந்த போட்டிகளில் கலந்துகொள்வது தான் முக்கியம் என்று கூற வேண்டும். அப்போது தோல்வியை கண்டு அவர்கள் பயப்பட மாட்டார்கள். பல போட்டிகளில்
பங்குபெறும் ஆர்வமும் தன்னம்பிக்கையும் வளரும். பள்ளிகளில் நடக்கும் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பை எக்காரணத்தை முன்னிட்டும் தவற விடக் கூடாது. ஏனெனில் குழந்தைகளின் திறமையை உரசி பார்க்கும் இடமே அதுதான். அங்கு கிடைக்கும் ''ரிசலட்''டை வைத்து குழந்தை செல்ல
வேண்டிய பாதையை வகுக்க முடியும்.
இவை அனைத்துடன் சுற்றுப்புற தூய்மை அவசியத்தை விளக்குவதும் நமது கடமை ஆகும். இதையெல்லாம் பெற்றோர் சரி வர கடைபிடித்தால் தன்னம்பிக்கை உள்ள குழந்தை தயார். ஒரு குழந்தை பெரிய அறிவாளியாகவும், திறமைசாலியாகவும் வளர்வது ஒவ்வொரு பெற்றோர்களின்
வளர்ப்பில்தான் உள்ளது.
|
|
|
| வாழ்க்கையின் வெறுமை |
|
Posted by: Selvamuthu - 03-11-2006, 04:32 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (16)
|
 |
[size=18]வாழ்க்கையின் வெறுமை
என் இளமைப்புத்தகத்தின்
இரவுப்பக்கங்கள்
வெறுமையாய் கிடக்கின்றன
இன்னும் எழுதப்படாத
ஓர் கவிதையை எண்ணி....
எனது வானம்...
இருள் மூடிக்கிடக்கிறது
இதுவரை காணாத
அந்தப் பௌர்ணமிக்காக...
மெல்ல மெல்ல
காலத்திருடனிடம்
களவு போகின்றன-என்
நந்தவனப் பூக்களின் நறுமணமும்-நான்
சேர்த்துவைத்த கனவுகளின்
ஒளிநிறமும்....
நிசப்தம் விழுங்கிய
நீண்ட இரவொன்றில்...
நிமிர்ந்து பார்க்கிறேன்
மழை இருள்மூடிய
காரிருள் வானில்
பளிச்செனத் தெரிந்தது
தனிமை மூடிய-எனது
வாழ்க்கையின் வெறுமை.
-ஈழநேசன்-
கள உறவான ஈழநேசனின் கவிதையை
களைகள் களைந்து அவர் கேட்டுக்கொண்டதன்படி இங்கே
களமேற்றியிருக்கிறேன்.
|
|
|
| LTTE could gain from Tamil Nadu realignments |
|
Posted by: narathar - 03-11-2006, 04:00 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- Replies (2)
|
 |
LTTE could gain from Tamil Nadu realignments
MR Narayan Swamy (IANS)
New Delhi, March 11, 2006|13:29 IST
Tamil Nadu's close race for power might prove a mixed bag for Sri Lanka's Tamil Tiger guerrillas, rather than the windfall it could have been for the insurgent group outlawed in India.
The moves by Vaiko's MDMK and T Tirumavalavan's Dalit Panthers of India (DPI) to contest the May assembly elections with Tamil Nadu's ruling AIADMK may provide the Tigers political access to Chief Minister J Jayalalithaa they lacked - if she retains power.
But if India's ruling United Progressive Alliance (UPA) ousts the MDMK for aligning with its foe in Tamil Nadu, it could be a setback for the Liberation Tigers of Tamil Eelam (LTTE) whose cause Vaiko advocated with Prime Minister Manmohan Singh.
At the same time, the Tigers will be aiming at a favourable political climate in Tamil Nadu, something they have lacked since they assassinated former Indian Prime Minister Rajiv Gandhi in 1991.
Some gains are already visible.
The reason Jayalalithaa chose not to meet Sri Lankan President Mahinda Rajapaksa in December was because she was already thinking of roping in the MDMK and others from the DMK-led alliance.
So she did not want to host a Sinhalese political leader.
Again, Jayalalithaa did not put curbs on the pro-LTTE Feb 14 meeting in Tamil Nadu where Vaiko was one of the key speakers, although she would have done so if she did not feel the need for MDMK.
What are the AIADMK's - and Vaiko's - compulsions?
Jayalalithaa does not want to repeat the blunder of May 2004 when her party lost all 39 Lok Sabha seats of Tamil Nadu.
Although the odds are in her favour in the coming polls, she wants to consolidate as many votes as possible. For this, rallying smaller groups on her side is crucial.
The 1991 killing of Rajiv Gandhi cost the LTTE dearly. It lost public support in a state that is separated from Sri Lanka by only a narrow strip of sea and where it once had key bases. Indian authorities shattered layers and layers of the LTTE network in the state built painstakingly over the years.
Although some of the known pro-LTTE Tamil Nadu leaders continued to speak in its favour, their rhetoric fell sharply. Jayalalithaa's jailing of Vaiko for 19 months in 2002-03 for supporting the Tigers was a major blow to the Tigers.
The latest developments have neutralised all that to an extent.
Pro-LTTE political activists from Tamil Nadu have in recent times been visiting LTTE-controlled areas in Sri Lanka. DPI leader Thirumavalavan has met LTTE chief Velupillai Prabhakaran.
The LTTE is upset by the stridently anti-Tigers remarks of US officials. While courting the European Union, whose travel curbs of September have irked it, the LTTE would use Tamil Nadu politicians to fire salvos at Washington - and to put pressure on New Delhi.
But if Vaiko gets thrown out of UPA, it would be a setback. Vaiko not only enjoyed a personal rapport with Prime Minister Singh, the latter had begun to pay attention to what the MDMK leader said on Sri Lanka matters.
In the opinion of one Indian official, if the AIADMK wins the elections and if Vaiko enjoys a close working relationship with the chief minister, the Tigers might slowly start laying support networks in Tamil Nadu in six months or so.
However, that would only happen if Jayalalithaa wins and leans on Vaiko to govern.
In a way, this would be a replay of the 1980s when the LTTE enjoyed close ties with Tamil Nadu politicians and made use of the state to further its interests. Simultaneously it established hideouts and networks without the knowledge of New Delhi and Chennai.
There will only be one difference. The Indian state keeps a close watch on the LTTE although it does not see the Tigers with the same prism it looks at Islamists and Maoists. A recent meeting in New Delhi on threats to India did not even discuss the LTTE.
If and when the LTTE decides to resume its war in Sri Lanka or get out of the Western-brokered peace process, Tamil Nadu's politicians will be expected to speak - in India and abroad - in favour of the Tigers.
http://www.hindustantimes.com/news/7598_16...00500020002.htm
|
|
|
| FUZZY and Neutrosopic Analysis of Periyar’s Views on Untouch |
|
Posted by: ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-11-2006, 09:45 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (1)
|
 |
பெரியாரை உலக மயமாக்குவோம்
கி. வீரமணி
பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24, 2005 FUZZY and Neutrosopic Analysis of Periyar’s Views on Untouchability என்ற நூல் பெரியார் திடலில் வெளியிடப்பட்டது. (நூலின் மொத்தப் பக்கங்கள் 385, விலை 40 அமெரிக்கன் டாலர். வெளியீடு: ஹெக்சிஸ், அரிசோனாலி அமெரிக்கா).
திராவிடர் கழகத்தின் தலைவர் டாக்டர் மானமிகு கி. வீரமணி அவர்கள் இந்த நூலை வெளியிட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சி. மகேந்திரன் அவர்கள் நூலைப் பெற்றுக் கொண்டார்.
இந்தியாவில் இருந்து நம் கணிதப் பேராசிரியர் வசந்தா கந்தசாமி அவர்களும் அமெரிக்காவில் இருந்து புளோரன்டைன் ஸ்மாரன்டேக் என்பவரும் சேர்ந்து எழுதிய புத்தகம் இது. இவ்விழாவில் தமிழர் தளபதி டாக்டர் கி. வீரமணி அவர்களுடைய பேச்சின் சுருக்கத்தை இங்குத் தருகிறோம்.
"அருமை நண்பர்களே! இப்படிப்பட்ட ஓர் ஆய்வு நூல் வரவேண்டும் என்று நினைத்து அய்.அய்.டியினுடைய பேராசிரியர் சகோதரி திருமதி.வசந்தா கந்தசாமி அவர்கள் மிக அடக்கமாகப் பணியாற்றி அமைதியாக, மிக ஆழமாக இந்நூலைத் தயாரித்திருக்கிறார். இந்தக் கணிதச் சூத்திரத்தில் பெரியாருடைய தீண்டாமை ஒழிப்புக் கருத்துகள் எல்லாவற்றையுமே மிக ஆழமாகத் தொகுத்து மிக நுண்ணியமாக வழங்கியிருக்கிறார். உரைநடையை விட இலக்கணத்திற்குட்பட்ட பாட்டு குறைவாக இருந்தாலும் எப்படி நிறைவாக இருக்கிறதோ அதுபோலக் கணிதத்தில் பெரியாரைப் பற்றிய இந்த ஆய்வை நிகழ்த்தியுள்ளார். இதைப்பற்றி விளக்கம் சொன்னபோது சகோதரி வசந்தா சொன்னார்கள்: அமெரிக்காவில் உள்ள தேசிய விஞ்ஞான அமைப்பும் (National Science Foundation) 1865ஆல் நியூயார்க்கில் ஆரம்பிக்கப்பட்ட கார்மல் பல்கலைக் கழகமும் இணைந்து நடத்துகின்ற அறிவியல் துறைகளுக்கான இணையத் தளத்திலே (http://land.archiv.org) இந்தப் பெரியாரின் புத்தகம் இலவசமாக டவுன்லோடு செய்யும்படி ஏற்பாடாகி இருக்கிறது என்று.
அந்த இணையத் தளத்திலே உலக விரிவுவலை என்று சொல்லுகிறோமே உலகம் முழுதும் இருப்பவர்கள் மிகப்பெரிய அளவில் ஏராளமானோர் இதைப் படித்து இருக்கிறார்கள். பெரியார் அவர்கள் உலகமயம் ஆக்கப்படவேண்டும். உலகம் அனைத்தும் பெரியாரின் கருத்துகள் செல்லவேண்டும் என்ற நம் கருத்து இன்று நினைவாகி வருகிறது. பெரியார் அவர்களின் தத்துவம் அடங்கிய இந்தப் புத்தகம் என்பது நமக்கு மிகப்பெரிய தோன்றாத் துணையாக இருப்பது மட்டுமல்ல - இதை உலகம் முழுவதும் எடுத்துச் செல்கிற ஏவுகணையாக இந்த புத்தகம் அமைந்திருக்கிறது என்பதை மிக மகிழ்ச்சியோடு இந்தச் சகோதரியாருக்கும் அவருடைய செல்வங்களுக்கும் அவருடைய வாழ்க்கைத் துணைவருக்கும் நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறேன்.
எனக்கு ஒன்றே ஒன்று தோன்றியது. அதை அடுத்த பதிப்பிலாவது செய்ய வேண்டும். பேராசிரியர் வசந்தா கந்தசாமி இந்த நூலிலே தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவே இல்லை. வெளியே பார்ப்பவர்களுக்கு அவர்களது ஆற்றல் இன்னது என்று தெரிய வேண்டும். சாதாரணமாக இந்த அம்மையாரை என் சகோதரியாரைப் பார்த்தால் நம்பவே மாட்டீர்கள், இவர் பேராசிரியர் அதுவும் அய்.அய்.டி. பேராசிரியர் என்று நம்பவே மாட்டீர்கள். இவரைப் பார்க்கும்போது ஏதோ ஒரு கிராமத்தில் இருந்து வந்து இங்கே உட்கார்ந்திருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. தன் அடையாளத்தை மாற்றிக் கொள்ளாத ஒரு தமிழச்சியாக இவ்வளவு கொடுமைகளை அவர் தாங்கி இருக்கிறார். எதையும் தாங்கும் இதயம், எதையும் தாங்கும் இதயம் என்று சொல்லிக் கொண்டு போய்விடுவது மிகவும் சுலபம். ஆனால் பார்ப்பனக் கொடுமைகளைத் தாங்கும் இதயம் இருக்கிறதே அதற்குத் தனி ஆற்றல் வேண்டும். அதை அன்றாடம் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பாம்பை விட்டுவிடு; பார்ப்பானை அடி என்று குறிப்பிடுவார் தந்தை பெரியார். அதனுடைய தத்துவம் என்ன?
பாம்பு கடித்தவுடனேயே மனிதன் இறந்து போய்விடுவான். கடித்தவுடனே மனிதனைச் சாகடிக்கும் பாம்புக்கு ‘நல்ல பாம்பு' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால் பார்ப்பனீயத்தின் தாக்குதல் இருக்கிறதே, பார்ப்பான் கடித்தால் அது உடனே செத்துபோய்விடுவது அல்ல; அன்றாடம் செத்துச் செத்துப் பிழைக்க வேண்டிய மிகப்பெரிய கொடுமை அது. அந்த அவதியைப் பலபேர் சந்தித்து இருக்கிறார்கள். சிலரால் வெளியே வர முடியும். பலரால் வரமுடியாது. அந்த மாதிரியான ஒரு பார்ப்பன நிர்வாகத்தின் கொடுமைகளைத் தாண்டி இப்படியொரு அருமையான புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார் வசந்தா கந்தசாமி.
á¨Äô ÀÊì¸
http://www.gallup.unm.edu/~smarandache/Periyar.pdf
|
|
|
| திராவிடர்-தமிழர் பிரச்சினை: கழகத்தின் நிலைப்பாடு என்ன? |
|
Posted by: ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-11-2006, 09:10 AM - Forum: தத்துவம் (மெய்யியல்)
- No Replies
|
 |
திராவிடர்-தமிழர் பிரச்சினை: கழகத்தின் நிலைப்பாடு என்ன?
கொளத்தூர் மணி
(‘உழைக்கும் மக்கள் தமிழகம்’ (அக்-நவ.) இதழுக்கு - கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அளித்துள்ள நேர்காணல் இது. பெரியார் வலியுறுத்திய – தனித் தமிழ்நாடு லட்சியம், தமிழ்ப் பெயர் சூட்டல், பார்ப்பனர்களை இயக்கத்தில் சேர்க்காதிருத்தல் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு - தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு இதில் விளக்கப்பட்டுள்ளது)
கேள்வி : தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழகத்திலிருந்து என்ன அளவில் - கோட்பாட்டளவில் வேறுபட்டிருக்கிறது? வேறுபாடு கொண்ட அளவில் த.பெ.தி.க. அந்த இலக்கு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறதா?
பதில் : பெரியார் சாதிய, பாலின, பொருளிய பேதமற்ற, சுரண்டலற்ற பொது உரிமை கொண்ட பொதுவுடைமைச் சமுதாயத்தை இலக்காகக் கொண்டிருந்தார். கடவுள் மறுப்பு - பார்ப்பன எதிர்ப்பை உள்ளடக்கிய கடவுள் மறுப்பு - சாதியொழிப்பை இலக்காகக் கொண்ட பார்ப்பன எதிர்ப்பு - அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்கும் சுரண்டலற்ற விடுதலை - தனித்தமிழ் நாடு - ஆகியவற்றை நோக்கியே தன் பணிகளை ஆற்றினார். பெரியாரது எல்லா கொள்கைகளையும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஏற்றுக் கொள்கிறது. இவற்றில் தனித்தமிழ்நாடு என்பதைத் தவிர பிறவற்றை திராவிடர் கழகம் ஏற்றுக் கொள்கிறது. திராவிடர் கழகம் அதன் தலைவர் வீரமணி அவர்களது ‘வாழ்வியல் சிந்தனைகள்’ என்ற நூலுக்கு இரண்டாம் பாகமும், அவற்றுக்கு பல பதிப்புகளும், அறிமுக விழாக்களும் நடத்தி வருகிறது.
தந்தை பெரியார் திராவிடர் கழகம் பெரியார் இறந்து 30 ஆண்டுகள் கழிந்தும் அவரது முழு படைப்புகளும் மக்களுக்குக் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில், திராவிடர் கழகத் தலைமையால் 20 ஆண்டுகளுக்கு முன்னரே பல பெரியாரியல் பற்றாளர்களாலும் தொகுக்கப்பட்டிருந்தும் வெளியிடப்படாத ‘குடி அரசு’ இதழ்களின் இரண்டு தொகுப்புகளைத் தனக்குள்ள முழு சக்திகளையும் திரட்டி வெளிக் கொண்டு வந்திருக்கிறது. தொடர்ந்தும் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. சமுதாயம் சாதிகளாலும், பொருளியல் ஏற்றத் தாழ்வுகளாலும் மூடநம்பிக்கைகளாலும் குறுக்கும் நெடுக்குமாகப் பிளவுபட்டும், சிதைக்கப்பட்டும் கிடக்கும் நிலையில் ஒற்றை இலக்கு நோக்கிச் செல்வது என்பது இயலுமா என்பது கேள்விக்குரியதே. மேலும் இடஒதுக்கீடு பற்றிய உச்சநீதிமன்ற தீர்ப்பு போன்ற அவ்வப்போது எழும் சிக்கல்களுக்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. எனினும், தந்தை பெரியார் திராவிடர் கழகம் எல்லா செயல் தளங்களிலும் இறுதி இலக்கைக் கருத்தில் கொண்டே இயங்கி வருகிறது.
கேள்வி: இயக்கங்களில் பார்ப்பனர்கள் இணைப்பு குறித்துத் தங்கள் அமைப்பின் நிலைப்பாடு என்ன?
கடந்த கால வரலாற்றுக் குறிப்புகள் பார்ப்பனர்களிடம் நம்மை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்துகின்றன. இது இனவாத அடிப்படையில் அல்ல. இயக்கம் நாம் விரும்புகிற திசை வழியில் செல்ல, தொய்வில்லாமல் செல்ல அது தேவையாயுள்ளது. மேலும், முற்போக்குச் சிந்தனையுடன் சில பார்ப்பனர்கள் நமது கருத்துகளை ஏற்றுக் கொண்டிருப்பார்களேயானாலும் அவர்களை நாம் அமைப்பில் சேர்த்துக் கொண்டால் தான் நம்மோடு இணைந்து பணியாற்றுவார்கள் எனில் அவர்களது பார்ப்பன எதிர்ப்பு உண்மையாகுமா? மேலும் பார்ப்பனர்கள் பிறர் நடத்தும் அமைப்புகளில் போய் இணைகிறார்கள் அல்லது இணைய முயற்சிக்கிறார்களேயன்றி தங்கள் இனத்தவர் இழைத்த அநீதிகளை எதிர்த்து, அவர்களுக்குள்ளாகவே ஓர் அணியைத் திரட்டி தங்கள் இனத்தவரிடம் போராடும் நோக்கோடு வரலாறு நெடுகிலும், எந்த முயற்சியிலும் எந்த ஒரு பார்ப்பனரும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. விழிப்புணர்வு பெற்றுள்ள இன்றைய நிலையில்கூட, அம்மாதிரி முயற்சிக்கான சுவட்டைக்கூட நம்மால் காண முடியவில்லையே!
பெரியார் கூறுகிறார்: “........ தன்னையும் திராவிடன் என்று கூறிக் கொண்டு ஒரு பார்ப்பான் முன் வருவானானால், உடனே, ‘நீ திராவிடனா? திராவிடனுக்கு ஏது பூணூல்? அதை முதலில் கத்தரித்துக் கொள்!’ என்போம். அதற்கும் துணிவானானால், ‘திராவிடரில் ஏது நாலு சாதி? நீ பிராமணன் அல்ல; இந்துவல்ல என்பதை ஒப்புக் கொள்’ என்று கூறுவோம். அதற்கு எந்தப் பார்ப்பானும் உடன்படமாட்டான். அதற்கும் உடன்பட்டு அவன் திராவிடனாக ஒப்புக் கொண்டால், பிறகு நமக்கு அவனைப் பற்றிக் கவலை ஏது? சாதி வேறுபாடுகள், உயர்வு தாழ்வுகள் ஒழிய வேண்டும் என்பது தானே நமது ஆசை. சாதியைக் கைவிட்டு, சாதி ஆசாரத்தைக் கைவிட்டு, ‘அனைவரும் ஒன்றே’ என்ற கொள்கையை ஏற்க முன்வரும் பார்ப்பானை - நாம் ஏன் ஒதுக்கப் போகிறோம். தமிழர் என்று கூறுபவர்கள் இவ்வித நிபந்தனையின் மீது பார்ப்பனர்களைத் தம் கழகத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்களா? இல்லையே! சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற தமிழர் மாநாட்டிற்குத் தன்னை பிராமணன் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவர் தானே வரவேற்புக் கமிட்டித் தலைவர் மற்றும் இரண்டு மூன்று அய்யர்கள் தம் பூணூல் - பூச்சுகளுடனேயே தமிழர் கூட்டத்தில் ‘தாமும் தமிழர்கள்’ என்று கலந்து கொண்டார்களே? அப்படித் தானே நடக்கும்?
... வேற்றுமையில்லாத மனித சமுதாயம் வேண்டுமென்பதுதான் நமது குறிக்கோளே ஒழிய, வேற்றுமை பாராட்டி யாரையேனும் ஒதுக்கி வைக்க வேண்டும் என்பதல்ல நமது குறிக்கோள். இதை நீங்கள் பெரிதும் மாணவ மாணவிகளான நீங்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.
(சிதம்பரத்தில், 29.9.1948-ல் சொற்பொழிவு ‘விடுதலை’ 5.10.1948)
என்ற பெரியாரின் கருத்துகளையும் இவ்வேளையில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
கேள்வி : பார்ப்பனர் இணைப்பு மறுப்புக் குறித்து பெரியார் முன்வைத்த காரணங்களின் அடிப்படையிலேயே கருத்து இருக்கிறதா? விரிவுபட்டுள்ளதா? மாற்றமடைந்துள்ளதா?
அப்படியே தொடர்கிறது.
<b>கேள்வி : பார்ப்பனியத்தையும், சமஸ்கிருதமயமாக்கலையும் எதிர்க்கிற தங்களின் அமைப்பினர் சமஸ்கிருத புராண பெயர்களை மாற்றிக் கொள்ளாமல் இருக்கிறீர்களே?
பார்ப்பனியத்தையும், சமஸ்கிருத மயமாக்கலையும் எதிர்ப்பது என்பது வாழ்வியல், பண்பாட்டுத் தளங்கள் அனைத்திலும் நடக்க வேண்டும் என்று மனமார விரும்புகிறோம். தமிழ்ப் பெயர் சூட்டல் மட்டுமே பார்ப்பனிய, சமஸ்கிருத மயமாக்கத்தை நிறைவேற்றிவிடும் என்று நாம் கருதவில்லை. தமிழாக இல்லாவிட்டாலும்கூட, இராவணன், இந்திரஜித், மண்டோதரி, கவுதமன், சித்தார்த்தன், இரணியன் ஆகிய பெயர்கள் அத்தளத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. வடமொழிப் பெயர்களேயானாலும் பிரபாகரன், திலீபன் என்ற பெயர்கள் தமிழின உணர்ச்சியை உண்டாக்குகின்றன. பெயரில் புராண, சமஸ்கிருத பெயரோடிருந்ததால் பெரியார் ஈ.வெ.இராமசாமியும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும், குத்தூசி குருசாமியும், பட்டுக்கோட்டை அழகிரியும் பார்ப்பனியத்தையும் சமஸ்கிருதமாக்கலையும் எதிர்க்காதவர்கள் என்று கூறிவிட முடியுமா? தொடர்ந்து புழக்கத்தில் சமுதாயத்தில் தங்களை அடையாளப்படுத்திவரும் தங்கள் பெயரை மாற்றிக் கொள்ளாத தோழர்கள் தோழியர்கள்கூட தங்கள் குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயர்களையே சூட்டி வருகின்றனர் என்பதே உள்ள நிலை.
கேள்வி : திராவிடம் என்ற கருத்தியல் தமிழ்த் தேச அரசிலுக்கு முரணானது என்கிற கருத்து நிலவுகிறதே! அது குறித்துத் தங்களின் நிலைப்பாடு என்ன?
தவறு. பெரியாரும் அவரைத் தொடர்ந்து நாங்களும் ‘திராவிடர்’ என்ற அடையாளத்தை சமுதாய விடுதலைத் தளங்களிலும் ‘தமிழர்’ என்ற அடையாளத்தை அரசியல் விடுதலை தளங்களிலும் பயன்படுத்தி வருகிறோம் என்பதே உண்மை.
கேள்வி : பெரியார் முன்வைத்து முதன்மைப்படுத்தி முழங்கிய ‘தமிழ்நாடு தமிழருக்கே!’ எனும் முழக்கம் தங்கள் அமைப்பின் செயல் திட்டத்தில் இடம் பெற்றுள்ளதா?
‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்பது மட்டுமல்ல. பெரியார் கூறிய எல்லா கொள்கைகளையும் நாங்கள் ஏற்றுள்ளோம். எங்கள் எல்லா நகர்வுகளும் அவற்றை உள்ளடக்கியும், அவற்றை நோக்கியுமே உள்ளன. தொடர்ந்தும் இருக்கும்.
கேள்வி : வடநாட்டான் கடை மறியல், தமிழ்நாடு நீங்கலாக இந்திய வரைபடம் எரிப்பு போன்ற வலுவான இந்தியப் பார்ப்பனிய எதிர்ப்புப் போராட்டங்கள் இந்தக் காலத்திற்கும் தேவைக் குரியனவாக இருக்கின்றனவே!
ஒன்றுபட்ட இந்தியா என்பது தங்களுக்கென நாடற்ற பார்ப்பனர்களுக்கும், தங்கள் நாடு போதாமல் பரந்த சந்தையை வளைத்து சுரண்டலையும் பனியாக்களுக்கும் ஆன தேவைகளை நிறைவேற்றுவதுதான். அதை அம்பலப்படுத்துவதும், தகர்ப்பதும் தேவை என்று கருதுகிற அதே வேளை அந்த ‘இந்திய’ முதலாளிகளுடன் பன்னாட்டு முதலாளிகளும் கூட்டுச் சேர்ந்து சுரண்டும் பொறியமைவுகளான உலக வங்கி, உலக மயமாக்கம் ஆகியவற்றையும் அம்பலப்படுத்துவதையும், எதிர்ப்பதுமான தளங்களிலும் எங்களால் முடிந்த அளவு செயலாற்றியே வருகிறோம்</b>.
கேள்வி : திராவிட இயக்கங்கள் தமிழ்த் தேசிய அரசியல் குறித்து அக்கறையில்லாமல் இருப்பதாகக் கூறப்படுகிறதே.
திராவிட இயக்கங்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது தேர்தல் அரசியல் நடத்தும் கட்சிகளை என்றே நாங்கள் புரிந்து கொள்கிறோம். அரசியல் அதிகாரம் பெற முயல்வது கொள்கை நடைமுறைப்படுத்தவே என்றவர்கள் கொள்கை என்பது அதிகார நாற்காலியில் அமர்வது, தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது என்பதாக மாறிப் போயுள்ள நிலையில் நாம் அவர்களிடம் தமிழ்த் தேசிய அரசியல் அக்கறையை எதிர்பார்ப்பதே சரியல்ல.
கேள்வி : பெரியாரின் தாய்மொழி கன்னடம் என்பதால் அவர் தமிழ்த் தேசத்திற்காக ஆற்றிய சமூகப் புரட்சிக்கான சிந்தனைகள், செயல்கள், அனைத்தும் எதிர்மைப் படுத்தப்பட்டும், திரித்தும் கூறப்படுகிறதே!
பெரியாரின் எழுத்துகளையும், பேச்சுகளையும் திரித்தும், தங்கள் வசதிக்கு வெட்டியும், இடம் பொருள் ஏவலைக் கருத்தில் கொள்ளாமலும், தங்களுக்குள் சில மறைமுக ஆசைகளை ஒளித்து வைத்துக் கொண்டு சில தன்னல சக்திகள் செய்யும் இப்புரட்டுகளை எல்லோருமாக சேர்ந்து முறியடிப்போம்.
<b>தாழ்த்தப்பட்டோருக்கெனப் ‘பெரியார் போராடவில்லை’ என சிலர் பெரியாரை மறுத்து இழித்தும், சிலர் அதை ஆதரித்தும் வருகின்றனரே?
“தீண்டாமையை ஒழிக்க வேண்டிய கடன் பிராமணரல்லாதாருக்கு மிகவும் முக்கியமானதொரு கடனாகும். ஏனெனில், தீண்டாதார்களின் முன்னேற்றந்தான் பிராமணரல்லாதார்களின் முன்னேற்றமாகும். தீண்டாதார்களின் துன்பந்தான் பிராமணரல்லாதாரின் துன்பமாகும்.” (‘குடிஅரசு’ 15.11.1925)
“பறையன் பட்டம் போகாமல், உங்களுடைய சூத்திரப் பட்டம் போய்விடும் என்று கருதுகிறீர்களேயானால், நீங்கள் வடிகட்டின முட்டாள்களே ஆவீர்கள்.”
(‘குடிஅரசு’ 11.10.1931)
பார்ப்பனரல்லாதாரை நோக்கிப் பெரியார் பேசிய இவையே அவர் சிந்தனைப் போக்கை வெளிப்படுத்தும்</b>.
தாங்கள் தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்திய கூட்டியக்கச் செயல்பாடுகளில் முனைப்புக் காட்டுவதில்லையே?
ஒவ்வொரு தனிமனிதனும், தான் வளர்ந்த சூழல், தான் சந்தித்த அவலங்கள், தன்னைப் பாதித்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டே தாங்கள் பணியாற்ற வேண்டிய துறையை முடிவு செய்கின்றனர். அவ்வகையில் தாம் சாதியொழிப்பு, பகுத்தறிவு, பெண்ணுரிமை துறைகளில் பணியாற்றுகிறோம்.
சாதியொழிப்பு போலவே பொதுவுடைமை, பெண்ணுரிமை, சுற்றுச்சூழல், மனித உரிமை, தமிழ்த் தேசியம், மொழிக் காப்பு என பல துறைகளைப் பலர் ஏற்கின்றனர். ஒன்றில் முனைப்பாக நிற்கும்போது மற்றவற்றை எதிர்ப்பதாக அல்லது ஏற்றுக் கொள்ளாததாக பொருள் கொள்ள முடியாது. புத்துலகைப் படைக்க அனைத்து தளங்களிலும் நாம் வென்றாக வேண்டும். எங்கள் கொள்கை பரப்பல்களிலும், செயல்பாடுகளிலும், போராட்டங்களிலும் தமிழ்த் தேசிய உணர்வு கலந்தே உள்ளதை நீங்கள் எளிதில் அறியலாம்.
óýÈ¢ - ÒÃ𺢠¦Àâ¡÷ ÓÆì¸õ
|
|
|
|