| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 366 online users. » 0 Member(s) | 363 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,787
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,490
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,787
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,338
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,748
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,828
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,728
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 39,444
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,114
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,330
|
|
|
| குடும்ப அரசியலும் குரங்குக் கூட்டங்களும் ! |
|
Posted by: ¾õÀ¢Ô¨¼Â¡ý - 04-10-2006, 02:46 PM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- No Replies
|
 |
குடும்ப அரசியலும் குரங்குக் கூட்டங்களும்!
நயனன்
குடும்ப அரசியல், அய்யோ அய்யோ குடும்ப அரசியல் என்று குடும்பம் இருப்பவர்கள், இல்லாதவர்கள், இவர்களோடு சேர்ந்த பல குரங்குக் கூட்டங்கள் என்று பலரும் இன்று கூவக் கேட்கிறோம். தமிழக அரசியல் களத்தில், இலவசங்கள், துரோகங்கள், அட்டூழியங்கள், ஊழல்கள், போட்டிகள், அதிருப்திகள், கூட்டுகள், கீழறுப்புகள், நடிகர்கள், நடிகைகள், தொகுதிகள், சாதிகள், கணக்குகள் என்ற சொற்கள் நிறைந்து கிடக்கும் இந்தத் தருணத்தில், குடும்ப அரசியல் என்ற ஒன்றை சற்று சிந்தித்துப் பார்க்கத் தோன்றுகிறது.
வைகோ அணி மாறியது பலரையும் எரிச்சல் ஏற்படுத்தியது என்றாலும், கீழ்த்தரமான அரசியலுக்கு இவரின் பங்களிப்பு என்று சொல்லி விட்டு விட்டு விடலாம். இதை வைகோவின் அநாகரிகம் என்று கருதும் போது, இதுவா அநாகரீகம், இதை விட அநாகரீகத்தை இதோ காணீர் என்று செவ்விகள் பல கொடுத்தார். அதில், கருணாநிதி பொடாவில் இருந்து விடுதலை ஆக எந்த முயற்சியும் செய்யவில்லை என்று சொன்னதும், நான் உள்ளே இருந்தால் எங்கே எனது புகழ் வளர்ந்து விடுமோ என்று அஞ்சி சிறையில் வந்து பார்த்தார் என்று சொன்னதும் வைகோவின் அநாகரீகத்தின் உச்சம். எது எப்படியிருந்தாலும், தற்போது அவரும் அவரின் தலைவியும் குடும்ப அரசியல் என்ற வாதத்தை வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்கள்.
இந்தக் குடும்ப அரசியல் என்ற சங்கதி எதனாலெல்லாம் பெரிதாகப் பேசப்படுகிறது?
1) இசுடாலின், மிசாவுக்குப் பிறகு ஏறத்தாழ 30 வருடங்களாக தி.மு.கவில் முக்கியம் பெற்று வருவது.
2) மாறன் குடும்பம் தொலைக்காட்சி, வானொலி, ஏடுகள் ஆகிய மிடையங்களில் வலுவடைந்து வருவது.
இசுடாலின் மீது சாட்டப்படும் குற்றங்கள் என்ன? என்ற வினாவுக்கு எத்தனை பேரால் சரியான காரணத்தைக் கூற முடியும் என்று தெரியவில்லை. அவரின் மீதும் கருணாநிதியின் மீதும் இராசீவ் காந்தி கொலைச் சதி கூட சுமத்தப் பட்டது. அதனால் தி.மு.க பாதிக்கப் பட்டதும் உண்மை. கருணாநிதியை 6 மாதம் அரசியல் ஓய்வெடுக்க வைக்கும் அளவிற்கு அந்தக் குற்றச்சாட்டு அவரை பாதித்தது. பின்னர்தான் மக்களுக்கு அது "இடுதேள் இட்ட" எதிரணியினரின் சதி என்று புரிந்தது. வேறு ஏதும் சில்லறைக் காரணங்கள் இருக்குமானால் அக்காரணங்களினால் அவர் இன்றைய அரசியலில் இருக்கும் அனைவரையும் விட தாழ்ந்தவர் என்று கருதிவிடலாகாது.
அவரும் இரு முறை மேயராகப் பணி புரிந்திருக்கிறார். அதிகம் பேசாமல் ஓரளவு திறமையான நிர்வாகி, செயல்திறன் என்றும் சொல்லப்படுகிறார்.
முக்கியமாக இந்தியா குடியரசான 1950ல் இருந்து இன்றைக்கு சுமார் 56 ஆண்டுகளில் தமிழகத்தை ஆட்சி செய்த, தலைவர்களின் குடும்பங்களை நினைத்துப் பார்க்கவேண்டியது அவசியமாகிறது.
எட்டாண்டுகள் தமிழகத்தை ஆண்ட காமராசருக்குக் குடும்பம் கிடையாது. 2 ஆண்டுகள் ஆண்ட பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு சொந்தப் பிள்ளைகள் கிடையாது; தத்துப் பிள்ளைகள்தான். 13 ஆண்டுகள் ஆண்ட எம்சியாருக்கு குடும்பம் இருந்தாலும் பிள்ளை குட்டிகள் கிடையாது. சில மாதங்கள் ஆண்ட சானகி அம்மாள் எம்சியாரின் மனைவி. இது வரை 10 ஆண்டுகள் ஆண்டுவிட்ட செயலலிதாவிற்கு பிள்ளைகள் கிடையாது.
ஆக, 56 ஆண்டுகளில் 33 ஆண்டுகளை பிள்ளை குட்டியில்லாதவர்கள்தான் ஆண்டிருக்கிறார்கள் (60%). பேராயக் கட்சி (காங்கிரசு) ஆட்சியில் இருந்து அகற்றப் பட்ட பின்னர்(1967) இதோடு 39 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த 39 ஆண்டுகளில் சுமார் 26 ஆண்டுகள் (அதாவது 79%) தமிழகத்தை பிள்ளை குட்டி இல்லாதவர்களே ஆண்டிருக்கிறார்கள். அதனாலேயே, பிள்ளைகுட்டி இருக்கிற கருணாநிதியும் அவர் பிள்ளை இசுடாலினும் குடும்ப அரசியல் என்ற தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள் என்று, சொன்னால் அதை அவ்வளவு எளிதாக மறுத்து விடமுடியாது.
இந்த 39 ஆண்டுகளில் தமிழகத்தை ஆண்ட 6 முதலமைச்சர்களில் நால்வருக்கு பிள்ளைகுட்டிக் கிடையாது. பன்னீர் செல்வத்துக்கு பிள்ளைகுட்டிகள் உண்டா என்பது எனக்குத் தெரியாது.
தோன்றும் வினாக்களில், பிள்ளை குட்டி இல்லாத எம்சியார், சானகி அம்மாள், செயலலிதா ஆட்சி செய்த 23/24 ஆண்டுகளில் தமிழகம் சந்தித்த சீரழிவுகளை விட, பிள்ளை குட்டி இருக்கின்ற கருணாநிதி இசுடாலினால் எந்த அளவிற்கு சீரழிவுகள் அதிகமாகின?/அதிகமாகிவிடும்?, என்ற வினா ஒன்று!
அல்லது, கருணாநிதி இசுடாலின் குடும்பம் வராமல், விவேகத்திலும், வீராவேசத்திலும், போர்த்தந்திரத்திலும்), கண்ணியம், மற்றும் நேர்மைக்குப் பேர்போன வைகோ வந்தால் இந்தத் தமிழ் நாடு என்ன நிலையை எய்தி விடும்?
கருணாநிதியின் பிள்ளை இசுடாலின் வரக்கூடும் என்பதால் குடும்ப அரசியல் என்று சொல்லப்படுகையில், பிள்ளை குட்டி இல்லாவிடிலும், "எம்சியார் எம்சியாருக்குப் பின்னால் சானகி அம்மாள் - அவருக்குப் பின்னால் செயலலிதா" என்று எண்ணிப் பார்க்கையில், எத்தனை பேருக்கு இது ஒரு குடும்பம் என்று தோன்றாமலிருக்கும்? சானகி அம்மாள், எம்சியாரின் மனைவி! செயலலிதா, எம்சியார் மறைந்ததும் உடன் கட்டை ஏறப் போகிறேன் என்று அந்தப் பிண வாகனத்தில் ஏறினார் என்பது இந்தியா முழுக்க அறிந்த உண்மை.
39 ஆண்டுகளில் 24 ஆண்டுகளை இம்மூவரும் ஆண்டிருப்பது குடும்ப அரசியல் இல்லை என்று எத்தனை பேர் மறந்து விட்டிருக்கிறார்கள் அல்லது மறக்கடிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று எண்ணிப் பார்த்தால் இசுடாலின் மற்றும் கருணாநிதி மேல் சாட்டப்படும் கோயபல்சு குற்றச்சாட்டின் நோக்கம் என்னவென்று புரியும்!
10 ஆண்டுகள் ஆட்சிசெய்த செயலலிதாஉடன் எந்தக் குடும்பம் இருக்கிறது? சசிகலாவும் சசிகலாவின் குடும்பமும் ஒன்றுக்குள் ஒன்றாக இருந்து போயசு தோட்டத்திலேயும் அய்தராபாத் தோட்டத்திலேயும் வாழ்ந்து, அவர்களின் வாரிசுகள் அரசியலில் ஆதிக்கம் செலுத்தவில்லையா? அது குடும்ப அரசியலா இல்லையா? சசிகலா, நடராசன், இளவரசி, தினகரன், சுதாகரன் இன்னும் எத்தனையோ பேரைக் கொண்ட அந்தக் குடும்பம் செயலலிதா அரசியலில் பங்கேற்கவில்லை என்று எத்தனை பேரால் சொல்லமுடியும்?
கருணாநிதியின் பிள்ளைகள் இசுடாலின் அழகிரி இருவரும் மோதிக் கொண்டு அசிங்கப் படுத்தியது உண்மைதான். கருணாநிதியாலேயே தீர்க்க முடியாத அப்பிரச்சினையை செயலலிதாதான் தீர்த்து வைத்து புண்ணியம் கட்டிக் கொண்டார். குடும்ப அரசியலால் தமிழ்நாட்டில் பிரச்சினை என்றால் எனக்குத் தெரிந்த வரை இசுடாலின் அழகிரி பிரச்சினைதான். அதைத்தான் அம்மையார் தீர்த்து வைத்து விட்டாரே, அப்புறம் என்ன பெரிய பாதிப்பு வந்து விடப் போகிறது தமிழகத்திற்கு இனிமேல்?
வைகோ போன்ற அறிவாளிகளுக்கும், அதை விடச் சிறந்த அறிவாளியான செயலலிதா அம்மையாருக்கும், இவர்களை வளர்த்து விடுவதே தம் பிறவிப் பயன் என்று 30/40 ஆண்டுகளாக சேவை செய்து வரும் பத்திரிக்கைகளும், குடும்ப அரசியல் என்றால் என்ன என்பதற்கான அகராதி போடும் முன்னர் இவையெல்லாம் சிந்திப்பார்களா என்றால், மாட்டார்கள்!
பிள்ளை குட்டி இருக்கிறது, அவர்களும் அரசியலில் ஈடுபடுகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக தி.மு.கவையும் கருணாநிதியையும் சாடுவதானால், அது வெறும் பேதைத்தனம் மற்றும் கல்லாமை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. அதற்கு மாறாக, இசுடாலினால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட தீமைகள் என்ன என்று எவரேனும் சிந்திக்க முற்பட்டு, அத்தீமைகளின் அளவை மற்றோர் ஆட்சியோடு/அரசியலோடு ஒப்பிட்டு விளக்கினார்கள் என்றால் அது அறிவார்ந்த செயல். இல்லையென்றால் ஊத்தை வாய்களின் உளறல் என்ற வகையிலேயே அது தெரிகிறது.
அடுத்ததாக, மிடையங்களில் ஆதிக்கம்!; தேர்தல் காலத்தில் வானொலியில், பின்னர் தொலைக்காட்சியில் (தூரதரிசனத்தில்) அரசியல் கட்சிகளுக்கு ஒரு அரைமணி நேரம் அல்லது கால் மணிநேரம் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒதுக்கப் படும். 1984 தேர்தலின் போது, தி.மு.கவிற்கு ஒதுக்கப்பட்ட அந்த நேரத்தில் கருணாநிதி பேசமாட்டேன் என்று புறக்கணித்தார். காரணம், அப்போதிருந்த பேராயம் + அ.தி.மு.க செல்வாக்கினால், தொலைக்காட்சி, கருணாநிதியின் பேச்சை, தணிக்கை செய்துதான் போடுவோம் என்று சொல்லியதால்.
சனநாயக நாட்டில், பெரிய கட்சியொன்றின் தலைவரின் பேச்சுக்குக் கூட தணிக்கை விதிக்கும் அளவிற்கு சார்புத்தன்மைகொண்டு தூரதரிசனம் இயங்கியது சனநாயகத்தைக் காட்டுவதாக இல்லாமல் காழ்ப்புணர்ச்சியைக் கொட்டுவதாகவே தெரிந்தது. சன் தொலைக்காட்சி, தூரதரிசனத்தை அடுத்த தொலைக்காட்சி ஓடையாகத் தோன்ற, முழுமையான தனியார் தமிழ் ஓடையாக வெளிவர, இன்று ஒரு அசுர பலத்துடன் வளர்ந்து நிற்கத் தூண்டுகோலாக இருந்தது, அன்றைய தணிக்கையும், தூரதரிசனத்தில் மிகுந்து கிடந்த, அன்றைய நடுவணரசை ஆளும் கட்சியாக இருந்த பேராயம் மற்றும் இங்கே செல்வாக்கு பெற்றிருந்த எம்சியார் கட்சியும் இவர்கள் தி.மு.கவிற்கு எதிராக செய்த பிரச்சாரங்களும்தான் பெருமளவு காரணம் என்பது மிகையல்ல. அரசு மிடையங்கள் தவறாகப் பயன்படுத்தப் பட்டதற்கு பல சான்றுகள் உண்டு!
1976ல் திமுக ஆட்சியில் இருந்து அகற்றப் பட்ட, தொலைக்காட்சிகள் இல்லாத அந்தக் கால கட்டத்தில், வானொலியைத் திறந்தாலே, எம்சியாரும், இந்திராகாந்தியும், வானொலியும், மேலும் இவர்களின் கைத்தடிகளும் கோவணத்தில் ஊழல், வெற்றிலை சீவலில் ஊழல், சுண்ணாம்பில் ஊழல், கொட்டைப் பாக்கில் ஊழல், கொத்தரங்காயில் ஊழல் என்று செய்திகளாக இல்லை, கொக்கரிப்பாகவும் காழ்ப்புணர்ச்சியுடனும் கூவியது, அந்தக் கால கட்டத்தில் வயதுக்கு வந்திருந்த அத்தனை பேருக்கும் இன்னும் நினைவில் இருக்கும்.
ஆனால், அதில் பல பேர் கூட, சன் தொலைக்காட்சியில் செயலலிதா கைது செய்யப்பட்டு, அவரின் செருப்பைக் காட்டினார்கள், சேலை துணிமணி அலமாரியைக் காட்டினார்கள், நகைக் கடையைக் காட்டினார்கள்!, இதெல்லாம் காட்டலாமா? இது மாபெரும் தவறு என்றெல்லாம் அங்கலாய்ப்பதும், இதுவும் குடும்ப அரசியல் என்று சொல்வதும் இவர்களின் சிந்தனைக் குறைவைக் காட்டுவதாக இருக்கிறது.
பட்டவனுக்குத்தான் அதன் வலிதெரியும். ஆகவே, வானொலி, தொலைக்காட்சிகளுக்கு பதிலடியாகத் தோன்றியவைதான் சன் குழுமத்தின் தொலைக்காட்சி நிறுவனம் என்பதை மறந்து விடக் கூடாது.
அன்றைக்கு வானொலி, தூரதரிசனம் கொடுத்த தி.மு.க எதிர்ப்பு போல் இன்று எந்த மிடையமும் செய்யுமானால் அவர்களுக்கு அதை விட வலுவான, சொல்லப்போனால் அசுர பலத்துடன் சன் தொலைக்காட்சி கொடுக்கக் கூடிய வல்லமையை பெற்றுள்ளது என்பது அங்கைநெல்லி.
ஒருவேளை சன் தொலைக்காட்சி தவறுகள் செய்யுமானால், அது வலுவாகக் கண்டிக்கப் படக்கூடியதே. ஆனால், அந்தக் கண்டிப்பை செய்யும் திமுகவின் எதிரணிக்கு முழு யோக்கியதை இருப்பதாக எண்ணி ஏமாந்து விடக் கூடாது.
அடுத்ததாக ஏடுகள்!; இன்று சன் தொலைக்காட்சியும், அது சார்ந்த ஏடுகளும் தமிழகத்தின் மிடையக் குழுமங்களைப் பற்றி போர்முனையில் நிற்பது போன்ற பதிலடிகளைக் கொடுத்து வருகின்றன.
தமிழகத்தில் இருக்கும் ஏடுகள் எத்தகையன?
ஒரு ஆங்கில நாளேடு! தமிழ் நாட்டில் ஆங்கிலச் சேவையும் சிங்களச் சேவையும் செய்து வருகிறது. அந்த ஏட்டுக்காரர்களைப் பிடித்து உள்ளே போட அதிமுக அரசு உத்தரவிட்டது சட்டமன்றத்தில். ஆனால், எங்களையா பிடிக்கப் பார்க்கிறாய்? என்று ஓடி ஒளிந்து கொண்டு, எங்களைப் பிடித்தால் இந்தியாவே அலறும் என்று சவால் விட்டு சட்டத்தின் பிடியில் மாட்டாமலேயே தப்பித்து சாதித்தார்கள். ஆனால் இவர்கள் சட்டத்தைப் பற்றி நிறைய பேசுவார்கள். இது அவர்களின் ஆங்கிலச் சேவைக்குக் கிடைத்த பலன். இவர்களால் இந்தியாவையே குலுக்க முடியும்!
ஆயினும் தமிழ்நாட்டில் ஏடு நடத்தும் இவர்களுக்கு, சந்திரிகா அம்மையார், சிங்களத்தீவினில், அவர் பதவி காலாவதியாகிப் போகும் முன்னர், அவசர அவசரமாக இந்த ஏட்டுக்காரர்களைக் கொழும்பு அழைத்து விருது கொடுத்தது எதற்காக? சற்று யோசித்துப் பார்க்க வெண்டும்!!
தினமும் மலரும் இதழ்! தென் தமிழ்நாட்டில் பெரிய மூளைச் சலவையையே செய்து முடித்திருக்கிறது. கருணாநிதியையும் அவர் குடும்பத்தை மட்டுமல்ல, திராவிடம், தமிழ் என்ற சொற்கள் உணர்வற்றுப் போக என்ன வெல்லாம் எழுத முடியுமோ அவ்வளவையும் எழுதுவது இந்த இதழ்!
தந்தி, மணி எல்லாம் ஏறத்தாழ ஒரே வகைதான். குமுத விழியாளும், விகடகவியாரும் தமிழகத்திற்கு இழைத்திருப்பவை அளவிடற்கரியன என்று யாரும் சொன்னால் நான் மறுக்க மாட்டேன்! இன்னொரு வார இதழ்க்காரர், என்று கொழும்பு போய் விருது வாங்கி வரப் போகிறாரோ தெரியவில்லை.
செயலலிதா ஆட்சியிலே பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக நடந்த வன்முறை எத்தனை? எத்தனை முறை இவர்கள் தாக்கப் பட்டிருக்கிறார்கள். பத்திரிக்கை முதலாளிகளும் சரி, பத்திரிக்கைச் செய்தியாளர்களும் சரி. கைதுகள், அடி உதைகள், சிறையீடுகள், உச்சமாக பொடாவில் கூட கோபால் போடப்பட்டார். அத்தனையும் மறந்து பெரும்பான்மையான ஏடுகள் அ.தி.மு.க சார்புத் தன்மையை எடுக்கின்றன என்றால் அதற்கென்ன காரணம் இருக்க முடியும்?
சன் தொலைக்காட்சி, சூரியன் வானொலி, தினகரன், தமிழ்முரசு, குங்குமம் முரசொலி என்ற இவற்றை தமிழகத்தில் இல்லாமல் செய்து விட்டால், மீதி இருக்கக் கூடிய தொலைக்காட்சிகள், ஏடுகள் போன்றவற்றில் எத்தனை நடுநிலையானவை? அல்லது எத்தனை பேர் திமுகவிற்கு ஆதரவாக இருப்பார்கள்?
சன் குழுமத்தின் மேல் எனக்கும் பலருக்கும் தீரா எரிச்சல் உண்டு. ஏனெனில் நல்ல தமிழ், தூய தமிழ்ப் புழக்கம் என்பது அதில் இல்லை. இன்றைய தமிழ்முரசு இதழ் கூட கொட்டை எழுத்தில் "யாருக்கு சான்சு" என்று வாய் கிழிய ஆங்கிலத்தைத் தமிழில் சொல்கிறது. சன் குழுமத்திற்கு மூத்த ஏடுகள் இட்ட வழியேதான் சன் குழுமம் போய்க்கொண்டிருக்கிறது என்பதில் அய்யமில்லை.
ஆனால், அதனால் மட்டுமே குடும்ப அரசியலைக் கண்டிக்க ஏனைய மிடைய அரசியலுக்கும் செயலலிதா வைகோ போன்றவர்களுக்கும் எந்த ஒரு அருகதையும் இருப்பதாக நினைக்க முடியவில்லை.
ஆக, கருணாநிதி குடும்ப அரசியலை விளம்பரப் படுத்துவதால் உண்மையில் என்ன ஆதாயம் என்று பார்த்தால், எம்சியார் குடும்பம் மற்றும் சசிகலா நடராசன் குடும்ப அரசியல் அந்த விளம்பரத்தில் திட்டமிட்டு மறைக்கப் படுகிறது என்பதுதான் உண்மை!
1977 முதல் இன்றுவரை எம்சியார்-குடும்பமும், சசிகலா நடராசன் குடும்பமும்தான் அரசியல் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்பது புள்ளிவிவரங்களைப் பார்த்தாலே தெரிகிறது. எம்சியார் குடும்பமும், சசிகலா குடும்பமும் அரசியல் நடத்தவில்லை என்று எத்தனை பேரால் சொல்ல ஏலும்?
நெடுஞ்செழியனிடம் இருந்து தந்திரமாகக் கட்சியைக் கைப்பற்றினார் கருனாநிதி என்று ஒரு வாதம் உண்டு. நெடுஞ்செழியனின் அரசியலைப் பார்த்தவர்களுக்கு அவரால் திமுகவை நடத்தியிருக்க முடியுமா என்ற அய்யமும் உண்டு.
அந்த நெடுஞ்செழியன், தன்னை உதிர்ந்த உரோமம் என்று சொன்ன செயலலிதாவையே "தன்மானத்தோடு" திரும்பச் சென்று ஒட்டிக் கொண்டார் அன்று.
பொய்க்குற்றச்சாட்டின்பேரில் பொடா என்ற கடுஞ்சிறை தள்ளிய செயலலிதாவையே "தன்மானத்தோடு" திரும்பச் சென்று ஒட்டிக் கொண்டார் வைகோ இன்று.
தன்னை கொ.ப.செ ஆக ஆக்கி, சட்டமன்ற உறுப்பினராக ஆக்கிய போதும் அடங்கா அகத்தால் இராசேந்தரும் குடும்ப அரசியல் என்று பேசி செயலலிதாவோடு போனார். நடுத்தெருவில் நிற்கிறார்.
நடுத்தெரு கூச்சல் பேர்வழிகளான வைகோ, இராசேந்தர் போன்றவர்களை நம்பி திமுகவை விடாத கருணாநிதி அறிவாளியாகத்தான் தெரிகிறார்!
நன்றி - கீற்று
|
|
|
| புதுமுக அறிமுகம் ! |
|
Posted by: ஜித்தன் - 04-10-2006, 01:30 PM - Forum: அறிமுகம்
- Replies (33)
|
 |
புதுமுக அறிமுகம் !
அனைவருடனும் உறவாடி கொள்வதில் மகிழ்ச்சி
<span style='font-size:14pt;line-height:100%'>தமிழிழ் மாற்றப்பட்டுள்ளது-யாழ்பிரியா</span>
|
|
|
| தளபதிகள் தலைமைப்பீடத்தைச் சந்திக்கின்ற போதுதான் அடுத்த கட்டம |
|
Posted by: SANKILIYAN - 04-10-2006, 10:56 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
தளபதிகள் தலைமைப்பீடத்தைச் சந்திக்கின்ற போதுதான் அடுத்த கட்டம் குறித்த தீர்மானத்தை எடுக்கமுடியும்: அரசியல்துறை பொறுப்பாளர்
கிழக்குத் தளபதிகள் தலைமைப்பீடத்தைச் சந்திக்கின்ற போதுதான் அடுத்த கட்டம் குறித்த தீர்மானத்தை எடுக்கமுடியும் என்று அரசியல்துறை பொறுப்பாளர் தெரிவித்திருக்கின்றார். இன்று இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டார். தளபதிகளின் போக்குவரத்து தொடர்பாகவோ, கள நிலவரம் தொடர்பாகவோ சாதகமான வெளிப்பாடுகள் எவையும் அரசினால் காட்டப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
சந்திப்பின் நிறைவில் தமிழீழ அரசில்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய நேர்காணல்:-
கேள்வி:- இணைத் தலைமை நாடுகளின் து}துவர்களின் கிளிநொச்சி பயணத்தின் நோக்கம் என்ன?
பதில்:- உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளின் து}துவர்களை சந்தித்து தற்போதைய கள, அரசியல் நிலவரம் தொடர்பாக கலந்துரையாடியிருக்கின்றோம். முக்கியமாக nஐனீவாப் பேச்சுக்குப் பின்னர் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலைமைகள் பற்றி தெளிவாக எடுத்து விளக்கியிருக்கியுள்ளோம்.
அடுத்த கட்ட பேச்சுக்கு செல்ல முடியாத சூழலை அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது என்பதை சுட்டிக்காட்டினோம். nஐனீவாவில் இடம்பெறப் போகின்ற பேச்சுக்கு முன்னால் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் எந்த முயற்சிகளும் எடுக்காத தன்மைகள் தொடர்பாகவும் இன்றைய சந்திப்பில் எடுத்து விளக்கியுள்ளோம். இன்றைய சந்திப்பு சர்வதேச சமூகத்திற்கு எமது நிலைப்பாட்டை எடுத்து விளக்கக்கூடிய நல்ல சந்திப்பாக அமைந்தது.
கேள்வி:- பேச்சுக்கு செல்ல வேண்டுமென்று அழுத்தம் எதுவும் பிரயோகிக்கப்பட்டதா?
பதில்:- சர்வதேச சமூகம் குறிப்பாக இணைத் தலைமை நாடுகள் பேச்சுக்களில் கலந்து கொள்ளுமாறு வலியுறுத்தினார்கள். ஆனால், இலங்;கை அரசாங்கம் எவ்வாறான தடைகள், தடங்கல்கள் என்பவற்றை ஏற்படுத்தியுள்ளது என்பதை விளக்கினோம். குறிப்பாக nஐனீவா உடன்பாட்டுக்குப் பின்னர் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. போராளிகள், மக்கள் உயிரிழந்த சம்பவங்கள், அதன் தொடர்ச்சியாக திருகோணமலையில் மக்கள் பேரவைத் தலைவர் விக்கினேஸ்வரன் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு என்பவற்றை எல்லாம் சுட்டிக்காட்டியுள்ளோம்.
முக்கியமாக பேச்சுக்குச் செல்ல முதல் எமது தென்தமிழீழத் தளபதிகள் வருகை தந்து எமது தலைமைப்பீடத்தை சந்திக்க வேண்டியுள்ளது. தலைமைப்பீடம் கூடி சில முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. இச்சந்திப்புக்குப் பின்னர் தான் உறுதியான முடிவுகளை எடுக்கக் கூடியாத இருக்கும்.
நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக போராளிகளின் போக்குவரத்திற்கு இருந்த நடைமுறைகளை மாற்றி புதிய கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் விதித்து ஒரு பாரிய நெருக்கடியை ஏற்படுத்த முனைகின்றார்கள். இச்செயற்பாடுகள் யுத்த நிறுத்த செய்ற்பாட்டை இல்லாதொழிக்கின்ற சூழலை உருவாக்கி வருகின்றது என்பதை இன்றைய இணைத்தலைமை நாடுகளின் து}துவர்களின் சந்திப்பில் தெரியப்படுத்தியிருந்தோம்.
கேள்வி:- பேச்சு நடைபெறுவதற்கு குறுகிய நாட்களே இருக்கின்ற நிலையில் அரசாங்கம் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் பேச்சுக்கு செல்ல முடியுமென நம்புகின்றீர்களா?
இன்றுவரை அந்த நம்பிக்கை ஏற்படுத்தப்படவில்லை. எமது தளபதிகளின் போக்குவரத்து தொடர்பாகவோ, கள நிலவரம் தொடர்பாகவோ சாதகமான வெளிப்பாடுகள் எவையும் அரசினால் காட்டப்படவில்லை. அண்மையில் சிறிலங்காவினுடைய சனாதிபதி ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்படுமென வாக்குறுதி அளித்திருக்கின்றார். இதில் எவ்வளவு உண்மை இருக்கின்றது என்பதை நம்பமுடியாதுள்ளது.
சர்வதேச அரங்கில் நின்றுகொண்டு ஒரு உறுதிப்பாட்டை தெரிவித்து விட்டு அதன் பின்னர் நடந்துகொண்ட இலங்கை அரசாங்கத்தின் முறைகளும் வெளிப்பாடுகளும் அனைவரும் அறிந்ததே. முக்கியமாக எமது தளபதிகள் எமது தலைமைப் பீடத்தைச் சந்திக்கின்ற போதுதான் அடுத்த கட்டம் குறித்த தீர்மானத்தை எடுக்கமுடியும்.
கேள்வி:- போக்குவரத்து ஒழுங்குகளை அரசு செய்யாவிட்டால் தங்களின் கடற்படையின் உதவியோடு பயணம் செய்வீர்கள் என கூறியிருக்கின்;றீர்கள். இது தொடர்பாக இணைத் தலைமை நாடுகளிடம் ஏதாவது தெரிவித்தீர்களா?
பதில்:- யுத்த நிறுத்த உடன்படிக்கை தோற்றம் பெறுவதற்கு முன்னால் தரை, கடல் என பெருமளவு பகுதி எமது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்தது. இப்பகுதிகளில் சுதந்திரமான நடமாட்டங்கள் இருந்தது. தென்தமிழீழத்திற்கு நாம் பயணம் செய்கின்ற போது இலங்கைப் படைகளால் தடுக்க முடியாத சூழல் இருந்தது. அவ்வாறு தடுக்கப்பட்டால் அத்தடைகளை உடைத்துக் கொண்டு பயணங்கள் செய்வது வழமை.
தொடர்சியாக நாம் செய்த பயணங்களுக்கு தற்போது இடையுூறு ஏற்பட்டு தற்போது தடுக்கும் நிலைமை வந்துள்ளது. யுத்த நிறுத்த உடன்பாட்டு காலப்பகுதியில் தான் ஒரு நடைமுறை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவால் கொண்டுவரப்பட்டது. எமது கடற்படைக் கலங்களில் எமது தளபதிகள், போராளிகள் போக்குவரத்துச் செய்வதெனவும் எமது போராளிகளின் தரைவழிப் போக்குவரத்தும், எமது அவசரப் பயணங்களுக்கு தளபதிகளின் பயணங்களுக்கும் வான் வழிப் பயணங்களும் ஏற்கனவே நடைமுறையில் இருந்தது.
இவையெல்லாவற்றையும் தற்போது நிராகரித்து பழைய சூழலுக்கே தள்ளுகின்ற நிலையினை உருவாக்குவதிலேயே அரசும் படைகளும் ஈடுபட்டு வருகின்றன. முற்;றுமுழுதாகவே தற்போதுள்ள அமைதி முயற்சிகளை சீர்குலைத்து பழைய நிலைக்கே எங்களை தள்ளுகின்ற நிகழ்வாகத்தான் அரசின் செயற்பாடுகளை பார்க்க முடியும்.
கேள்வி:- இணைத் தலைமை நாடுகள் சிறிலங்கா கடற்படைக் கலம் மூழ்கடிக்கப்பட்டது தொடர்பாக இன்றைய சந்திப்பில் கண்டனம் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளனரே?
பதில்:- இணைத் தலைமை நாடுகள் பொதுவாக இரண்டு தரப்புக்கும் தான் தமது கண்டனத்தை தெரிவிப்பதாகத் தெரிவித்தனர். திருகோணமலையில் விக்கினேஸ்வரன் ஐயா படுகொலை செய்யப்பட்டது, போராளிகள் படுகொலை செய்யப்பட்டதிலிருந்து இரண்டு தரப்புக்கும் தான் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இரண்டு தரப்பும் வன்முறைகளை நிறுத்த வேண்டும். படுகொலைகள், தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு நிகழ்ந்;தால் அவற்றைக் கண்டிப்பதாகவும் தெரிவித்திருந்தார்கள்.
கேள்வி:- கண்காணிப்புக் குழுவிற்கு தாங்கள் அனுப்பிய கடிதத்திற்கு பதில் ஏதாவது கிடைத்துள்ளதா?
பதில்:- எந்தவிதமான பதில்களும் கிடைக்கவில்லை.
கேள்வி:- கனடா அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சட்டம் ஒன்றை கொண்டுவரப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அரசிற்கு எதுவித அழுத்தத்தையும் கொடுக்காது விடுதலைப் புலிகள் மீது கனடா அரசு அழுத்தத்தை கொடுக்க முயல்வதன் நோக்கம் என்ன?
பதில்:- இவ்வாறான அறிவித்தல்கள் என்பது சமாதான முயற்சிகளை முற்றாக பலவீனப்படுத்துகின்ற முயற்சியாகத் தான் அமையும். அப்படியான செய்திகள் தான் வந்துகொண்டிருக்கின்றன இதன் உண்மைத் தன்மை குறித்து எமக்குத் தெரியவில்லை. ஆனால், உண்மையிலேயே சிறிலங்கா அரசாங்கமும் சிங்கள இனவாதிகளும், சிங்களப் படைகளும் மீண்டும் தமிழ் மக்கள் மீது பாரியளவில் இனப்படுகொலைகளைச் செய்வதற்கு து}ண்டுவதற்கான நடவடிக்கைகளாகத் தான் இவ் அறிவிப்புக்கள் அமையும்.
ஏனெனில் இச்சமாதான முயற்சிகளை குழப்புவதற்கு யார் காரணமாக இருக்கின்றார்கள் என்பதை எல்லோரும் அறிவார்கள். அமைதி முயற்சிக்கால நான்கரை ஆண்டுகளில் சிறிலங்கா அரசு எவ்வாறு நடந்துகொண்டுள்ளது என்பதை எல்லோரும் அறிவார்கள். யுத்த நிறுத்த உடன்பாட்டை அமுலாக்கம் செய்வதற்கும் மக்களின் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதற்கும் முட்டுக்கட்டைகளை அரசு போட்டு நெருக்கடி நிலைமைகளை உருவாக்கி இயல்பு நிலைகளை சீர்குலைத்து பாரிய நெருக்கடிகளை உருவாக்கியது யார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
இவையெல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு தலைப்பட்சமாக, இலங்கை அரசுக்கு ஆதரவாக தீர்மானங்களை கனடா அரசு எடுப்பது இனப்படுகொலையில் ஈடுபடுகின்ற சிங்கள இனவாதிகளுக்கும் சிங்கள பயங்கரவாத அரசுக்கும் ஊக்கம் கொடுப்பதாகவே அமையும். இது எமது தமிழ் மக்களின் உணர்வுகளை மோசமாக பாதிக்கும் என்றுதான் நினைக்கின்றேன். கனடாவில் கூட மூன்றரை இலட்சம் வரையான தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள். எல்;லோருடைய மனங்களையும் புண்படுத்துகின்ற செயலாகத் தான் இது அமையும். ஒரு தலைப்பட்சமான முடிவுகளை எடுக்காதிருப்பதுதான் அமைதி முயற்சிகளின் முன்னேற்றத்திற்கும் வழிகோலும்.
|
|
|
| யாழில் கிளைமோர் தாக்குதல் - நான்கு படையினர் பலி |
|
Posted by: மின்னல் - 04-10-2006, 10:10 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
யாழில் கிளைமோர் தாக்குதல் - நான்கு படையினர் பலி
- பாண்டியன் - Monday, 10 April 2006 16:51
யாழ். தென்மராட்சியின் மிருசுவில் பகுதியில் இன்று நடைபெற்ற கிளைமோர் கண்ணிவெ டித் தாக்குதலில் சிறீலங்கா இராணுவத்தினர் நால்வர் கொல்லப்பட்டதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக படைத்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏ-9 வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இராணுவ ஊர்தி ஒன்றை இலக்கு வைத்தே இந்த கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் அந்த ஊர்தியில் பயணித்த படையினரில் நால்வர் கொல்லப்பட்டும், இருவர் படுகாயமடைந்துள்ளதாக சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா விமானப்படைக்குச் சொந்தமான இரு உலங்கு வானு}ர்திகளில் படுகாயமடைந்த படையினர் பாலாலி இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி: சங்கதி
http://www.sankathi.com/index.php?option=c...=2528&Itemid=26
|
|
|
| வைகோவிற்கு பகிரங்க கேள்விகள் ! |
|
Posted by: ¾õÀ¢Ô¨¼Â¡ý - 04-10-2006, 09:36 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (94)
|
 |
வைகோவிற்கு பகிரங்க கேள்விகள் !
அரசியல் அரங்கில் தாங்கள் தற்போது எடுத்து வைக்கும் விதண்டா வாதங்கள் தாங்கள் இன்னும் ஒரு தலைவராக பக்குவப்படவில்லையோ என எண்ண வைக்கிறது.
உங்களது கட்சியும், கூட்டணியும் வெற்றி பெறவேண்டும் என்பதில் எந்த தவறுமில்லை. அது இயல்பானதே. சமீப காலங்களாக மேடைகளில் உண்மை நிலையை மறைக்கும் விதமாக முழங்குகிறீர்கள். அதன் தொடர்ச்சியாக தான் இந்த கேள்விகள்.
//வல்லரசான அமெரிக்காவில் கூட இயற்கைப் பேரழிவு பாதித்தபோது நிவாரண பணிகளை உடனடியாக மேற்கொள்ள முடியவில்லை. ஆறு மாத காலத்திற்குப் பின்பே சுனாமி நிவாரணப் பணிகளை அவர்களால் தீவிரப்படுத்த முடிந்தது.
ஆனால் தமிழ்நாட்டில் சுனாமி பாதித்த பகுதிகளில் மறு நாளே நிவாரணப் பணிகளை முதல்வர் தீவிரப்படுத்தி எந்த ஒரு முதல் அமைச்சரும் செய்ய முடியாத சிறப்பான ஆட்சியை செய்துள்ளார்.// என உங்களது மனம் கவர்ந்த தலைவியை குளிர்விக்க முழக்கமிடுகிறீர்கள்.
நீங்கள் அடிக்கடி மனசாட்சி என முழக்கமிடுவீர்களே அந்த மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் இது உண்மையா? சுனாமி நேரத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றில் கலந்துகொண்டவன் என்ற முறையில் கேட்கிறேன்.
மூன்று நாட்களுக்கும் மேலாக அழுகிய மனித உடல்கள் தமிழக கடற்கரைகளில் அவலமாக கிடந்து நாய்கள் கடித்து குதறியது. அரசின் மீட்பு பணிகள் கூட 3 நாட்களுக்கு பிறகு தான் நடந்தன என்பது கண்கூடான உண்மை. அதற்கு முன்னரே மக்களும் அவர்களது தலைவர்களுமே மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதும் நாடறிந்தது. மதத்தலைவர்கள் முதல் மக்கள் வரை கண்ணீர் விட்டு கதறிய வேளை அரசு என்ன செய்தது?
அ.தி.மு.க கரைவேட்டிகளிடம் அதிகாரத்தை கொடுத்து அரசு அதிகாரிகளை கட்டுப்பாட்டில் வைத்து தனக்கு வேண்டியவர்களுக்கு 500 ரூபாய் நோட்டுகள், அரிசி, பருப்பு என வழங்கி அரசியல் பார்த்தது அதிமுக அரசு. பாதிக்கப்பட்ட மக்கள் உடனடி உதவிக்காக பல கிலோமீட்டர் தொலைவு அலைக்கழிக்கப்பட்டனர். மன்னர் மாளிகையில் பிறந்த முதலமைச்சர் செல்வி ஹெலிகாப்டரில் பறந்தவாறு ஆறுதல் (!) வழங்கினார். பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல அரசியல் தலைவர்கள் நேரடியாக தரைவழியாக ஆறுதல் சொல்ல வந்ததை பார்த்து தங்கத்தாரகை (!) பாதிக்கப்பட்ட மக்களை தேர்வு செய்த மையங்களில் பார்த்தார்.
அறிவிக்கப்பட்ட மறுவாழ்வு திட்டங்களை முறைப்படி செயல்படுத்த மக்கள் அமைப்புகள், அரசியல் தலைவர்கள் அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்குழுக்களை உருவாக்க பலர் அறிவுறுத்தினர். அதை சற்றும் பொருட்படுத்தாமல் மறுபடியும் அ.தி.மு.க கரைவேட்டிகள் சொன்ன ஆட்களுக்குத் தான் நிவாரணம். கணிசமான தொகையை அ.தி.மு.க கட்சியின் கரைவேட்டிகள் கொள்ளையிட்டனர். அதன் பங்கு போயஸ் தோட்டம் முதல் மன்னார்குடி கும்பல் வரை போனதும் மறைக்கமுடியாத உண்மை.
கடற்கரை பகுதிகளின் நீண்டகால திட்டமிடலுக்காக தமிழ்நாட்டிற்கு மட்டும் உலக வங்கி கொடுத்த தொகை $434 மில்லியன். தமிழ்நாட்டு, பாண்டிச்சேரி வாழ் கடற்கரை மக்களின் கல்வி மற்றும் பயிற்சிக்காக $2.5 மில்லியன் வழங்கியது. ஆசிய வளர்ச்சி வங்கி (உலக வங்கி கிளை) $143.75 மில்லியன் தொகை மறுவாழ்வு திட்டங்களுக்காக போக்குவரத்து கட்டுமானங்கள், கிராம சீரமைப்பு, வாழ்வாதாரங்களை மீட்கும் திட்டங்களுக்கு தமிழ்நாட்டிற்கு வழங்கியது. ஜப்பான் நிதியிலிருந்து $2.5 மில்லியன் தொகை வழங்கப்பட்டது. இது தவிர மத்திய அரசு நிதி மற்ரும் பொதுமக்கள் கொடுத்த நிதி ஏராளம். இந்த பணத்தின் கணக்கு அல்லது அது சார்ந்த திட்டங்கள் எங்கே? வெளிப்படையான தன்மையே ஒரு நல்லாட்சிக்கு அடிப்படை (ட்ரன்ச்பரன்cய் இச் தெ பசிச் ஒf கோட் கொவெர்னன்cஎ). அதனால் இந்த தகவல்களை உங்களால் ஆதாரத்துடன் விளக்கமுடியுமா? வீரச்சவடால்களை கேட்டு தமிழ்மக்கள் வாழ்வு புண்ணாகியது மட்டுமே மிச்சம்.
( கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமியால் கோடிமுனை பகுதியில் பாதிக்கப்பட்ட மகக்ளுக்காக குளச்சல் களிமார் பகுதியில் உப்பளத்தை நிரப்பி வீடுகட்ட சரிசெய்யப்படுகிற நிலம். படம் எடுக்கப்பட்டது டிசம்பர் 29, 2005ல். இதில் வைகோ சொன்ன படி அரசு வேகமான நடவடிக்கை எடுத்து கட்டிய வீடு எங்கே? வீடு கட்ட பணம் கொடுப்பதும் அரசு அல்ல, காரித்தாஸ் மற்றும் கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள்)
மக்கள் அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும் திரட்டிய உள்நாட்டு வெளி நாட்டு நிதியில் தான் அதிகமான புனரமைப்புகள் நடந்தன. இன்றும் நடைபெறுகிறது. மக்கள் இன்னும் தகரம், ஓலைக்கிற்று கொட்டகைகளிலும், வெலையில்லாமலும், மனதிடம் பாதிக்கப்பட்ட நிலையிலும் வாடும் அவலம் இன்றும் கடற்கரை கிராமங்களில் நிதர்சனம். கடந்த டிசம்பரில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீண்டும் ஆய்வு செய்ததில் நான் கண்ட உண்மையும் இதுவே. மக்களின் கண்ணீரை வார்த்தை பசப்புரைகளால் மறைத்துவிட முனைகிறீர்களா?
மக்கள் பசியில், வறுமையில், வேலையில்லாமல், பேரழிவுகளால் செத்துக்கொண்டிருக்கையில் ஹெலிகாப்டரில், குளிர்சாதன மேடைகளில் வலம் வருவது தான் முதல்வரின் சிக்கனமும், மக்கள் பணம் மீதுள்ள அக்கறையா? ரோம் பற்றி எரிந்தவேளை பிடில் வாசித்த சார் மன்னன் வரலாறு நீங்கள் மறந்திருக்கலாம்.
மக்கள் வாழ்விற்கு செல்ல வேண்டிய வரிப்பணம், உலக வங்கி கடன், மத்திய அரசு நிதி முதல்வர் செல்லும் வழியெங்கும் அலங்காரம் செய்யவும், அவருக்கு பிடித்தமான பச்சை நிறத்தில் கழிப்பறை கட்டவும் என வீணடிப்பது தான் உங்கள் பார்வையில் நல்லாட்சியா?
அய்யாவும், அண்ணாவும் தந்த வழியில் நடப்பதாக முழங்கும் நீங்கள் எங்காவது அய்யாவோ, அண்ணாவோ, மக்கள் தலைவர் காமராசரோ இப்படிப்பட்டவைகளை ஏற்றதாக படித்ததோ பார்த்ததோ உண்டா?
மக்கள் வாழ்வு மீது அக்கறை இருந்தால் கிராமப்புற வளர்ச்சி, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், கலாச்சாரம், போக்குவரத்து இவற்றில் கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை புள்ளிவிவர கணக்குடன் வெளியிடுங்களேன். அதில் தமிழகம் வாங்கிய கடன் தொகை, நிவாரண நிதி, மத்திய அரசு நிதி இவற்றையும் அது செலவிடப்பட்ட விதத்தையும் வெளியிடும் தைரியமும், நேர்மையும், யாருக்கும் வணங்காத தன்மையும் உங்களுக்கு உண்டா?
மக்களை ஏமாற்ற உணர்ச்சிகளை வீரச்சவடால்களில் குழைத்து சொல்லெறியும் உங்களுக்கு அரசியலில் நீடிக்க, கட்சியை தக்க வைக்க இதெல்லாம் தேவைப்படுகிறது. என்ன செய்வது, தமிழ்மக்களும் உணர்ச்சி வசப்படும் மக்கள், உங்கள் பேச்சில் மயங்கி விடலாம் என கனவு காண்கிறீர்கள். கனவு பலிக்குமா தேர்தல் பதில் சொல்லும்.
கேள்விகள் தொடரும்...
<b>நன்றி</b> - திரு/ http://aalamaram.blogspot.com/2006/04/blog...og-post_08.html
|
|
|
| இணைத் தலைமை நாடுகளின் து}துவர்கள் - விடுதலைப்புலிகள் கிளிநொச |
|
Posted by: SANKILIYAN - 04-10-2006, 09:31 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
இணைத் தலைமை நாடுகளின் து}துவர்கள் - விடுதலைப்புலிகள் கிளிநொச்சியில் சந்திப்பு!
இணைத் தலைமை நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான சந்திப்பு கிளிநொச்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. காலை 10:15 மணிக்கு சமாதான செயலகத்தில் ஆரம்பமாகியிருக்கும் சந்திப்பு தொடர்ந்து இடம்பெறுகின்றது.
தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், காவல்துறைப் பாறுப்பாளர் திரு பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருக்கின்றனர்.
இணைத்தலைமை நாடுகளின் சார்பில் நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் நெதர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளின் து}துவர்கள் கலந்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
|
|
|
| மாமனிதர் வ.விக்கினேஸ்வரனுக்கு கிளிநொச்சியில் இறுதி வணக்கம்! |
|
Posted by: SANKILIYAN - 04-10-2006, 09:24 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
மாமனிதர் வ.விக்கினேஸ்வரனுக்கு கிளிநொச்சியில் இறுதி வணக்கம்!
(கிளிநொச்சி)
மாமனிதர் வ.விக்கினேஸ்வரனின் இறுதி வணக்க நகழ்வு கிளிநொச்சியில் துயரவெள்ளம் பெருக்கெடுக்க இடம் பெற்றிருக்கின்றது. கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வை அடுத்து அவரது புகழுடல் முல்லைத்தீவக்கு இறுதி வணக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படுகின்றது.
கிளிநொச்சி தேசிய எழுச்சிச் செயலணியின் செயலாளர் திரு த.பிரபாகரன் தலைமையில் பண்பாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் அலையெனத் திரண்டிருந்தனர்
பாண்ட் வாத்திய இசையுடன் அணிவகுப்பு மரியாதையுடன் பண்பாட்டு மண்டபத்துக்கு புகழுடல் எடுத்துவரப்பட்டது.
பொதுச் சுடரினை தளபதிகளான கேணல் ஜெயம், கேணல் தீபன் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
ஈகச்சுடரினை மாமனிதர் விக்கினேஸ்வரனின் துணைவியார் ஏற்றி மலர் மாலை அணிவித்தார்.
அஞ்சலி உரைகளை முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன், கவிஞர் புதுவை இரத்தினதுரை, சமாதான செயலகத்தைச் சேர்ந்த இளந்திரையன், தமிழ் மக்கள் பேரவை செயலாளர் கௌரி முகுந்தன், தீவக தேசிய எழுச்சிப் பேரவைத் தலைவர் கணேசலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவனேசன் ஆகியோர் நிகழ்த்தினர்.
இணைத் தலைமை நாடுகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலங்து கொண்டிருந்த அரசியல்துறைப் பொறுப்பாளர் இறுதி நேரத்தில் பண்பாட்டு மண்டபத்துக்கு வருகை தந்து மலர் வளையம் சாத்தி, இறுதி வணக்கத்தை செலுத்தினார்.
பெருந்திரளான மக்கள் திரண்டு கண்ணீர் மல்க, அழுகின்ற பேரோசை வானைத் தொட இறுதி மலர் வணக்கம் செலுத்தினர்.
|
|
|
| கலர் (டிவி) கனவுகள் |
|
Posted by: Birundan - 04-10-2006, 07:29 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (11)
|
 |
<img src='http://img142.imageshack.us/img142/7909/mugamoodi20dmk4gx.jpg' border='0' alt='user posted image'>
ஏழை மக்களுக்கு கலர் டி.வி. வழங்க ரூ. 1060 கோடிதான் செலவாகும். கலர் டி.வி. கொடுத்தே தீருவோம். கருணாநிதி சபதம்.
போடுங்க போடுங்க.. உங்கப்பன் வீட்டுதா எங்கப்பன் வீட்டுதா.. நீங்கள் உழைத்து சம்பாதித்ததா, நான் உழைத்து சம்பாதித்ததா.. அரசு கஜானாதானே.. நல்லா போடலாம்
ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் தந்து பொழுதுபோக்குக்காக, பொது அறிவை பரப்ப, பகுத்தறிவு பாடம் கற்றுத்தர டி.வியை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் அறிவித்திருக்கிறேன்.
காலேஜ் பசங்க உபயோகப்படுத்த ஆரம்பிச்சப்புறம் எப்படி மாமாங்கிற வார்த்தையோட அர்த்தமே கேவலமா ஆச்சோ, அது மாதிரியே திராவிட "கட்சி"ங்க உபயோகப்படுத்த ஆரம்பிச்சப்புறம் பகுத்தறிவுங்கற வார்த்தையோட அர்த்தமும் கேவலமாயிடுச்சி... டிவியால பொது அறிவு வளருதுன்னு சொன்னா "வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்" பாட்டுக்கு டான்ஸ் ஆடுற குட்டி பாப்பா கூட கேவலமா சிரிக்கும். தமிழ்நாட்டுல தூர்தர்சன எவ்வளவு பேர் பாக்குறாங்க அதோட ப்ரோக்ராம் என்னன்னு எல்லாம் யாருக்கும் தெரியாது.. ஆனா "பெரும்பான்மை" பார்க்கிற சன் டிவியின் 24 மணிநேர நிகழ்ச்சி நிரல் இங்கே இருக்கு.... இதில் பொது அறிவை வளர்க்கும் நிகழ்ச்சிகள் எவ்வளவு, பகுத்தறிவு பாடம் கற்றுத்தரும் நிகழ்ச்சிகள் எவ்வளவு என்பது "கடவுளுக்கே" வெளிச்சம்.
தமிழகத்திலே மொத்தம் 156 லட்சம் குடும்பங்கள் உள்ளன. இவர்களில் 53 லட்சம் குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளன.
முப்பது ஆண்டு திராவிட கட்சிகளின் சாதனைன்னு கேட்டா சொல்ல ரொம்ப முக்கியமான புள்ளிவிவரங்கண்ணா.
முதல்கட்டமாக இவர்கள் அனைவருக்கும் கலர் டி.வி வழங்க வேண்டும் என்றால் 53 லட்சம் டி.விக்கள் தேவை.
கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில வையின்னு வறுமைக்கோட்டுக்கு கீழ இருக்கறவங்களுக்கு "முதல்கட்டமா" டி.வி வழங்கணும்னு எப்படிங்கண்ணா தோணுச்சி.. அது சரிதான்.. கும்பி காஞ்ச மக்களுக்கு செவிக்கும் கண்ணுக்கும் சிறிது ஈயவும்னு அய்யன் சொல்லியிருக்காருல்ல.. செய்ய வேண்டியதுதான்... ஆனா சமையல் குறிப்பு ஸ்பெஷல் போடும்போது வினோதினிய வச்சி மைக்ரோவேவ்ல எலிக்கறி சமைப்பது எப்படின்னு சொல்லி கொடுக்க மட்டும் மறக்காதீங்க.. விவசாயம் பொய்ச்சா, இந்த மாதிரி ஒரு அய்ட்டம் செய்யலாம்னே தெரியாம கெரகம் பச்சை எலிய அப்படியே சாப்பிடுறாங்களாம்...
30 ஆயிரம் கோடி தமிழக பட்ஜெட்டில் இது சாதாரண தொகைதான். முடியாதது அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
எங்க ஊர் கிழவி பொட்டிக்கடையாண்ட உக்காந்துகிட்டு என்ன சொல்லும்னா "ஏண்டா வெட்டி பயலுவளா, இப்படி பீடி குடிச்சே காச கரியாக்குறீங்களேடா"ன்னும்.. அதுக்கு நம்ம பயலுவ எல்லாம், "கெழவி, மாச சம்பாத்தியாம் 1000 ரூவா வாங்குறோம்.. அதுல 20 ரூவா பீடிக்கட்டுல என்ன பெரிசா ஆயிடப்போவுது"ன்னு சொல்லுவாங்க. "அட கருமாந்திரம் புடிச்ச பசங்களா... சந்தனம் மீந்துச்சின்னா ***யில தடவ சொல்லுதா.. அத உருப்படியா எதுக்காச்சும் செலவு பண்ணுங்கடான்னும்... இந்த மாதிரி கிழவிங்க எல்லாம் இப்ப இல்ல...
இதை 2 ஆண்டில் வழங்குவோம். ரூ.2 ஆயிரத்தில் டி.வி.வழங்க மொத்தம் 1060 கோடி செலவாகும்.
2 ஆயிரத்தில் டி.வியா? சரி.. சரி... நான் கூட கலர் டிவின்ன உடனே கலர்ல தெரியிற டிவின்னு நினைச்சேன்.. தேர் திருவிழாவுல கிடைக்கிற டிவிக்கு கலர் அடிச்சி கொடுக்கிறாங்க போல... இல்ல உண்மையிலேயே 4 இன்ச் கலர் டிவி எதுவும் 2 ஆயிரத்துக்கு கிடைக்கிதா? இதுல மந்திரி/எம்.எல்.ஏ கமிசனே டிவிக்கு 2 ஆயிரம் ஆயிடுமேப்பா..
அதாவது ஆண்டுக்கு ரூ.530 கோடிதான். இது ஒரு பெரிய தொகையே அல்ல.
அப்படியே வீட்டுக்கு ஒரு டூ-வீலரோ காரோ வாங்கி கொடுக்கலாம்.. 30 ஆயிரம் கோடி தமிழக பட்ஜெட்டில் இது ஒரு பெரிய தொகையே அல்ல. அப்படியே கார் நிறுத்த ஒரு வீடு கட்டி கொடுக்கலாம். 30 ஆயிரம் கோடி தமிழக பட்ஜெட்டில் இது ஒரு பெரிய தொகையே அல்ல. அப்படியே எல்லாருக்கும் மூணு வேளை சோறும் போடலாம். 30 ஆயிரம் கோடி தமிழக பட்ஜெட்டில் இது ஒரு பெரிய தொகையே அல்ல. அப்படியே அன்ன சத்திரம் கட்டி சீட்டு விளையாட கொஞ்சம் பணமும் கொடுக்கலாம். 30 ஆயிரம் கோடி தமிழக பட்ஜெட்டில் இது ஒரு பெரிய தொகையே அல்ல. அப்படியே கோட்டையை இடித்து விட்டு அரண்மனை கட்டி, கார்களுக்கு பதிலாக ரத கஜ துராதிகளை நியமித்துக்கொள்ளலாம். 30 ஆயிரம் கோடி தமிழக பட்ஜெட்டில் இது ஒரு பெரிய தொகையே அல்ல....
ச(ப்)பதம் நன்றி :: தமிழ்முரசு
|
|
|
| பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம் |
|
Posted by: ¾õÀ¢Ô¨¼Â¡ý - 04-10-2006, 05:57 AM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (9)
|
 |
<b>தமிழ்த் தொன்மை மாயைகளை உடைத்த முதல் சிந்தனையாளர் </b>
இன்குலாப்
தமிழ்ச் சிந்தனைகள், வரலாற்று அடிப்படையில் இன்னும் முழுமையாகத் தொகுக்கப்படவில்லை. பிற துறைகளில் காணப்படும் வரலாற்று வறட்சிக்குத் தமிழ்ச் சிந்தனை மரபும் தப்பியதாகத் தெரியவில்லை. ஆளும் வர்க்கங்களின் கருத்துகளே தமிழ்ச் சிந்தனையின் ஆதியும் அந்தமாய் காட்டப்படும் போக்கு, இன்றும் அதிகாரத்தில் இருக்கிறது. இந்தப் பழமைப் பிடிப்பு, காலமாற்றங்களை மறுதலிக்கும் ஒரு நோய் மனோபாவத்தை உண்டாக்கி வருகிறது.
சாதியொழிந்த விடுதலை பெற்ற மானுடம் என்ற கோட்டில் அம்பேத்கரும் பெரியாரும் கைகோர்த்தே செல்லுவதை நாம் பார்க்க முடியும். இப்படி மானுட விடுதலையை முன்னிறுத்திய இந்தச் சிந்தனையாளர்கள் மீது விமர்சனம் என்ற பெயரில், அவதூறுகளும் கண்டனங்களும் எழுவது புதிதல்ல. இத்தகைய அவதூறுகளுக்கு பதிலுரையாக பெரியாரியத்தின் பகுத்தறிவு, தன்மானம், பெண் விடுதலை, சமத்துவம், தமிழர் விடுதலை முதலிய பன்முகப் பார்வைகளின் தொகுப்பு நோக்காக "பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்' என்ற நூலை சுப. வீரபாண்டியன் எழுதியுள்ளார்.
"இந்திய விடுதலையும் பகத்சிங்கும்' நூலுக்குப் பிறகு சுபவீயின் ஆய்வு முயற்சியுடன் கூடிய நூலாக இந்நூல் அமைந்திருக்கிறது. அய்ந்து இயல்களாக இயங்கும் இந்நூலில் 2, 3, 4 இயல்களில் பெரியாரியத்தின் தேசியப் பார்வை, பல்வேறு தரவுகளுடனும் தர்க்கங்களுடனும் விளக்கப்படுகிறது. "தேசிய இனச் சிக்கலும் தமிழ்த் தேசியம்' என்ற முதல் இயலும், "தமிழ்த் தேசியம் இன்றைய சூழலில்' என்ற இறுதி இயலும், நூல் நுதலும் பொருளுக்கான முன்னுரைகளாகவும், முடிவுரைகளாகவும் அமைந்திருக்கின்றன. முதல் இயலில், தமிழ்த் தேசியம் என்ற கருத்தாக்கம் எவ்வாறு வளர்ச்சி பெற்று வந்தது என்பதை இலக்கியத்தரவுகளிலிருந்து கட்டமைக்கிறார். இக்கட்டமைப்பு, மரபுவழிப்பட்ட புலவர்களின் பார்வையை ஒத்தே தொடக்கத்தில் செல்கிறது.
சமண பவுத்தர்களை தமிழறியாதவர்கள் என்று சைவக் குரவர்கள் சொல்வதை சுபவீ சுட்டிச் செல்கிறார். இந்தக் கூற்றின் மீது வரலாற்று வகைப்பட்ட திறனாய்வைச் செய்திருக்க வேண்டும். ஏனெனில், அய்ம்பெருங்காப்பியங்களும், அய்ந்து இலக்கணங்களும் சமண பவுத்தர் தொட்டதனால் தோன்றியவை. அதற்கும் அப்பால், வேள்வியாலும் வேதங்களாலும் அதிகாரத்தில் அமர்ந்து வைதீகத்துக்கு அறைகூவல்களாகவும் விளங்கியவை சமண பவுத்தங்களே. சைவ வைணவத்தின் பெயரால், பார்ப்பனிய அதிகாரம் தன்னைப் பதுக்கிக் கொண்டது தமிழ்ச் சமுதாயம் இன்றளவும் உணராமல் இருக்கிற அறியாமையாகும்.
இந்நூலின் தலைப்பு, இரண்டு வகையான விளக்கங்களைப் பெறுதல் வேண்டும். "பெரியாரின் இடதுசாரித் தமிழ்' என்றும், "பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்' என்றும் அவ்விளக்கங்கள் அமைதல் வேண்டும். இடதுசாரித் தமிழ் என்பது, மொழிவகைப்பட்ட, பண்பாட்டு வகைப்பட்ட அனைத்து மூடத்தனங்களுக்கும் எதிராக நிற்பது. மொழித் தோற்றம் என்பதை தெய்வீகம் சார்ந்ததாக சைவம் உள்ளிட்ட வைதீக நோக்கர்கள் கதை கட்டிய காலத்தில், மொழிக்கு அறிவியல் அடிப்படையில் விளக்கம் சொன்னது சமணம் பவுத்தம்தான். "மொழி முதற்காரணமாம் அணுத்திரள் ஒலி எழுத்து என்பது சமணர் தேற்றம்' அதனால் பெரியாரின் இடதுசாரித் தமிழ் குறித்த தேடுதலுக்குச் சமண பவுத்த சமயங்களின் பங்களிப்புதான் பேரளவுக்கு உதவும்.
எனினும், தமிழ் உணர்வை சைவ மரபில் தேடும் ஆய்வாளர்கள், சமணம் பவுத்தம் தமிழுக்கும், கலைகளுக்கும் எதிராக நின்றன என்ற கூற்றை தமிழ்ச் சிந்தனை மரபில் உடுக்கடித்துப் பதிய வைத்துள்ளனர். சமயம் தவிர்த்த மொழியை முன்னிறுத்திய பெரியாரின் பார்வையை இன்றளவும் தனித்தமிழ் ஆர்வலர்களும், அறிஞர்களும் புறந்தள்ளுவதற்கான கால வித்து இங்குதான் அமைந்திருக்கிறது.
விரிவான இந்த இயலில் வேறொரு செய்தியும் பேசப்பட்டிருக்க வேண்டும். செவ்விலக்கிய தமிழ் மரபுக்கு உழைக்கும் மக்கள் வழங்கிய பங்களிப்பு, இன்னும் விரிவாக ஆராயப்பட வேண்டும். வடமொழியும், தெலுங்கும், உருதும், ஆங்கிலம், பிரெஞ்சும் அதிகார மொழிகளாகக் கோலோச்சிய காலங்களில், பீடத்திலிருந்தோர் எல்லாம் இம்மொழிகளின் அன்பர்களாக நின்றார்கள். பக்தி சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய புலவர்களுக்கு, வடமொழியின் இருப்பும் பயன்பாடும் உறுத்தியதாகத் தெரியவில்லை.
இக்கால கட்டங்களில் எல்லாம், தமிழின் தனித்தன்மையைக் காப்பாற்றி நின்றவர்கள் உழைக்கும் வெகுமக்களே. அவர்கள் "நீரை' "ஜலம்' ஆக்கவில்லை. "சோற்றை' "சாதம்' ஆக்கவில்லை. செவ்விலக்கியங்களாக அவர்கள் எதையும் வழங்கவில்லைதான். இருந்தாலும், முத்தமிழின் இசையை அவர்கள் வயல்களிலும் வாய்க்காலிலும், கடலிலும் கரையிலும், தொட்டிலிலும் கட்டிலிலும் வளர்த்தார்கள். ஒருபோதும் எழுத்தாக்கப்படாத நாடகத்தை, தங்கள் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் கூத்தாக ஆடினார்கள்.
இந்நூலில் மிகச் சரியாக விமர்சிக்கப்படும் ம.பொ. சிவஞானத்தின் வடமொழி ஆதரவு, அவர் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து நின்றதிலோ, தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியதிலோ தோற்றம் கொள்ளவில்லை. பழஞ் சைவ மரபின் புதுக் கொழுந்துதான் சிவஞானம் என்பதைச் சேர்த்துச் சுட்ட வேண்டும். தமிழ்த் தேசியத்தின் தோற்றுவாய்களை சுப. வீரபாண்டியன் பெருமுயற்சி செய்து தொகுத்திருக்கிறார். எனினும், மேற்சொல்லப்பட்ட திறனாய்வுப் பார்வைகள், இன்னும் வாய்க்கவிருக்கும் கருத்துகள், இந்த இயலுக்கு வலுவூட்டும். உ.வே.சா.வின் பதிப்பு முயற்சிகளை நன்றியோடு நினைவுகூறும் சுபவீ, அவரின் வடமொழிச் சார்பையும் சாதியத் தள்ளாட்டத்தையும் தெளிவாகவே அடையாளம் காட்டுகிறார். இத்தகைய அடையாளம் காட்டும் முயற்சிகள்தாம், ஒரு இடதுசாரித் தமிழ்ப் பார்வையை அடைய உதவும்.
மொழி குறித்தும், தேசிய இனத்தின் உரிமை குறித்தும், உலக இடதுசாரிகள் கொண்டிருந்த கருத்துகள் பெரியாரிடம் தீவிரம் கொள்கின்றன. ருஷ்ய மொழியின் தனித்துவத்திலும் தூய்மையிலும் அக்கறை கொண்டவர் லெனின். அது அவரது தாய்மொழி. ஆனால், ருஷ்ய மொழி ருஷ்யா முழுவதுக்கும் ஆட்சி மொழியாக வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டபோது, அதை லெனின் மறுத்தார். “சின்னஞ்சிறு சுவிட்சர்லாந்து ஒரேயொரு ஆட்சி மொழியை கொண்டது அல்ல. ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலியன் ஆகிய மூன்று ஆட்சி மொழிகளைப் பெற்றுள்ளது. இதனால், அதற்கு எந்தக்கேடும் ஏற்பட்டு விடவில்லை; நன்மையே உண்டாகி இருக்கிறது'' ("தேசிய இனப் பிரச்சினைகளும் பாட்டாளி வர்க்க தேசியவாதம்' பக்கம்: 20).
தமிழின் மீது சமஸ்கிருத அதிகாரத்தை எதிர்த்தது போலவே, தமிழின் சைவ, வைணவ சாதிய அதிகாரத்தையும் பெரியார் எதிர்த்தார். தமிழின் தொன்மை என்பதும், வளம் என்பதும் தமிழ் மக்களின் விடுதலைக்கும் முன்னேற்றத்துக்கும் எந்த வகையில் உதவும் என்று கேட்டார். இதுதான் அவரை, மறைமலை அடிகள் போன்ற வலதுசாரித் தேசியவாதிகளில் இருந்து துல்லியமாக அடையாளம் காட்டுகிறது. பெரியாரின் இந்தத் தனித் தன்மையை சுபவீ, எவ்விதத் தயக்கமுமின்றி விளக்குகிறார்:
“முதலாவதாக, தமிழ் முன்னேற்றமடைந்து உலக பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்க வேண்டுமானால், தமிழையும் மதத்தையும் பிரித்துவிட வேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தைக் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்...'' இது தொடர்பான கருத்துகளை இன்னும் நெடிதாகவே மேற்கோள் காட்டி ஏற்கும் சுபவீ, இதைத் தொடர்ந்து கூறுவது மிக மிகச் சரியானதாகும்: "தமிழரின் முன்னேற்றம், தமிழரின் மேம்பாடுபற்றியே காலமெல்லாம் எண்ணிக் கொண்டிருந்த பெரியார், அதற்குத் தடையாக எது வந்தாலும் அது தமிழாகவே இருந்தாலும் எதிர்த்தார் என்பதைத்தான் மேற்காணும் வரிகள் நமக்கு உணர்த்துகின்றன'' (பக்கம்: 138).
பெரியாரின் மனித விடுதலையை அடிப்படையாகக் கொண்ட இத்தகைய பார்வைதான்,பெண் விடுதலை என்ற நோக்கில் திருக்குறளையும் கேள்வி கேட்க வைத்தது. வள்ளுவர் பாராட்டும் கற்பு, கணவனைத் தொழுதெழுதல், பரத்தைமையைக் கண்டித்தல் இவற்றையெல்லாம், எவ்விதத் தயக்கமின்றிப் பெரியார் கேள்வி கேட்டார். திருக்குறளை அவர் பாராட்டினார் என்பது உண்மைதான். ஆனால் நிபந்தனைகள் எதுவுமில்லாமல் பாராட்டவில்லை.
மொழி பற்றிய பெரியாரின் இந்த அணுகுமுறை, பெர்டோல்ட பிரக்ஸ்ட் என்ற ஜெர்மானிய நாடகாசிரியரின் ஒரு கூற்றை எனக்கு நினைவுபடுத்துகிறது: “ஜெர்மானிய மொழியை நாம் சலவை செய்ய வேண்டும்.'' இதை நான் அடிக்கடி மேற்கோள் காட்டுகிறேன். அத்துடன் கூட ஒன்றையும் சேர்த்துச் சொல்கிறேன்: “தமிழ் மொழியையோ வெறும் சலவை செய்தால் போதாது; அதை வெள்ளாவிப் பானையில் வைத்து அவிக்க வேண்டும்.''
பெரியாரின் ஆங்கில ஆதரவு, தமிழன்பர்களால் கண்டனம் செய்யப்படுகிறது. இது குறித்தும் சுபவீ தெளிவான வாதங்களை முன்வைக்கிறார். இதில் சுபவீ, மறைமலை அடிகளின் ஆங்கில நாட்குறிப்பு, தேவநேயப் பாவாணரின் ஆங்கிலம் குறித்த கருத்து (பக்கம்: 142), “தமிழர் தமிழையும் ஆங்கில மொழியையும் அமிழ்தெனக் கற்க ஆங்கிலம் பெறுகவே'' என்று பெருஞ்சித்திரனாரைக் காட்டும் மேற்கோள் ஆகியவை, ஆங்கிலத்தை தன்மைப்படுத்தும் நோக்கிலானவை அல்ல; தமிழுக்குரிய தலைமையை உறுதிப்படுத்த வேண்டும், அதே நேரத்தில் உலகத் தொடர்புகளை மேம்படுத்த ஆங்கிலத்தின் தேவையை மறுதலிக்க முடியாது என்ற நோக்கில்தான்.
இந்நூலின் மிக முதன்மையான பகுதி "பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்' என்பதுதான். இதில் பெரியாரின் தமிழ் குறித்த பார்வை, திராவிடம் - திராவிட நாடு என்று முதலில் கூறினாலும், அது தமிழ்த் தேசியமாகவே உருவான தன்மை, தனித் தமிழ் இயக்கம் கண்ட மறைமலையடிகளோடு பெரியார் முரண்பட்ட நூலை, பெரியாருக்கு முந்தியே தமிழின உணர்வு, சமூக விடுதலை ஆகியவற்றை முன்மொழிந்த அயோத்திதாசப் பண்டிதரின் பங்களிப்பு, அதன் நிறை குறைகள், இப்படி நிறையவே பெரியாரியத்தை வகைப்படுத்திக் கொண்டு வந்தவர், பெரியாரியத்தின் சாரமாகப் பின்வரும் முடிவைக் கண்டடைகிறார்:
"... சமூக மொழித் தேசியவாதத்தை, இடதுசாரித் தன்மையுடன் முன்னெடுத்த பெரியார், சாதி ஒழிப்பு, பெண் விடுதலை ஆகிய இரண்டினையும் தமிழ்த் தேசியத்தின் இரு கூறுகளாகக் காலம் முழுவதும் எடுத்துச் சென்றுள்ளார்.''
இத்துடன் கூட ஒன்றையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். புராண மாயைகளை மட்டுமின்றி, தமிழ்த் தொன்மை குறித்த மாயைகளையும் உடைத்த முதல் சிந்தனையாளர் பெரியார்தான். தமிழ் மாயைகளை மறுத்த பெரியாரை, தமிழ்த் தேசிய மறுப்பாளராகவே சித்தரிக்க முயலும் அ. மார்க்சையும் உரிய வகையில் சுபவீ மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பெரியார் எழுதியதையும் பேசியதையும் போராடியதையும் சுபவீ விரிவாகவே எழுதியுள்ளார். ரவிக்குமாரின் பெரியார் மறுப்பு வாதங்களுக்கு இப்பகுதியும் வலுச்சேர்க்கும். பெரியார், பிற்படுத்தப்பட்டவர்களுக்குத்தான் தலைவர் என்ற வாதத்தை சுபவீ, சரியான தர்க்கத்தினால் மறுக்கிறார்:
“... ஒரு சாதிக்குள்ளேயே பல குழுக்களும் தலைவர்கள் பலரும் இருக்கும்போது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட அனைத்துச் சாதிகளுக்கும் ஒரு தலைவர் என்பது கற்பனை. சாதிகள் அல்லது தொகுப்புகளின் அடிப்படையில் "ஒற்றைத் தலைவர்' ஒரு நாளும் வரமுடியாது. இன்றைக்கும் தங்களின் "சாதிவட்டம்' என்பதுதான் சாதித் தலைவர்களின் பலம் பலவீனம். அவர்கள் ஒரு சாதியை விட்டு ஒரு சாதிச் சங்கத்தை விட்டு வெளியில் வரும் வரை, எல்லாச் சாதியினருக்கும் தலைவராக முடியாது'' (பக்கம்: 168 69).
பெரியார், "பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவர்' என்று முத்திரை குத்தும் தலித்தியச் சிந்தனையாளர்கள், இது குறித்து ஆழ்ந்து ஆராய வேண்டும். பெரியார் செருப்படி பட்டது, ஒரு குறிப்பிட்ட சாதி வெறிகொண்ட பிற்படுத்தப்பட்டோர் மத்தியில்தான் என்ற உண்மையை மறந்துவிடக் கூடாது. முதுகளத்தூர் கலவரத்தின் போது பெரியார் எடுத்த நிலைப்பாடு, கம்யூனிஸ்டுகளால் கூடத் துணிய முடியாதது. வெண்மணி குறித்து "விடுதலை' தலையங்கம் எழுதியதை ஏற்றுக் கொண்டுதான் அவரை விமர்சிக்க வேண்டும்.
பெண்ணியம் குறித்த நிலைப்பாட்டில், ஒட்டுமொத்த தமிழ் மரபுச் சிந்தனையாளர்களுக்கும் எதிராக ஒலித்த ஒரு குரல் பெரியாருடையது மட்டும்தான். பெரியாரை ஆழ்ந்து பயிலும்போது, பெண் விடுதலை குறித்து அவர் வெளியிட்டது வெறும் அதிர்ச்சி மதிப்புச் சார்ந்தது என்பது, நியாயமற்ற குற்றச் சாட்டாகவே நிற்பது புலனாகும். அவருடைய தேடலில் அவர் கண்டடைந்த முடிவுகள் ஆணாதிக்கத்துக்கும், சாதியத்துக்கும் அதிர்ச்சியளிப்பவைதான். கோப்பர் நிகசும், கலிலியோவும் கண்டடைந்த முடிவுகளை அறிவியலாளர்கள் வெறும் அதிர்ச்சி மதிப்புக்குரியவை என்று கூறுவார்களா? எனினும், பழமைவாதிகளுக்கு அவை அதிர்ச்சியளித்தது உண்மைதான். சிந்தனையாளர்களின் ஆய்வு முடிவுகள், எத்தகைய தரவுகளின் பரிசீலனையில் உருவானவை என்பதை நோக்குவதுதான் தன்மையானது. பெரியாரியத்தை வசைபாடும் தோழர்கள், மானுட விடுதலை குறித்த பெரியாரியப் பார்வைக்கு நியாயம் செய்யவில்லை.
உண்மையான பெரியாரியவாதிகளுக்கும் பல செய்திகளைச் சொல்ல வேண்டும். 1967 இல் இருந்து பெரியாரை ஏற்றுக் கொண்டதாகச் சொல்லும் கழகங்கள்தாம் தமிழகத்தை ஆளுகின்றன. இதற்கு முந்திய காங்கிரஸ் ஆட்சியில் நடந்ததைவிடக் கூடுதலாக தலித்துகள் அவமானப்படுத்தப்படுவதும் தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் கழகங்களின் ஆட்சியில்தான். இந்தக் கொடுமைகளைக் கட்டவிழ்த்து விடுவதில் கழக முன்னோடிகளின் பங்கு கணிசமானது. ஆட்சிக்குக் கட்டுப்பட்ட காவல் துறையின் அத்துமீறல்கள், நாகரிக உலகைத் தலைகுனியச் செய்யும். இந்தக் கொடுமைகளை முதன் முதலாக தலித்துகள்தான் எதிர்த்துக் குரல் கொடுக்கிறார்கள், போராடுகிறார்கள். பொதுவுடைமைக் கட்சிகள் அவ்வப்பொழுது கண்டனம் செய்கின்றன.
ஆனால், தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. முதலிய ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்ட கட்சிகள், இந்தக் கொடுமைகளுக்கு எதிரான சமரசமற்ற ஒருபோராட்டத்தை ஏன் முன்னெடுக்கவில்லை? இந்தக் கட்சிகள் அனைத்தும் "பெரியார் சுழி'யோடுதான் தங்கள் வரலாற்றைச் சொல்கின்றன. எனில், சாதியக் கொடுமைகள் தலைவிரித்தாடும்போது, மவுனம் காக்க வேண்டும் என்று பெரியார் கற்பித்தாரா? இந்தக் கழகங்களைச் சேர்ந்தவர்களின் சாதிய ஈடுபாடு, தமிழக வரலாற்றை நாறச் செய்கிறதே! இதற்கு இக்கழகங்களின் தலைவர்கள் என்ன பரிகாரம் செய்யப் போகிறார்கள்?
சோவியத் யூனியனில் கம்யூனிஸ்டு கட்சியின் பெயரால் பல அத்துமீறல்கள் நடந்தன; ஊழல் புரையோடிப் போனது; உரிமைகள் மறுக்கப்பட்டன. இவற்றுக்கெல்லாம் காரணமான கட்சித் தலைவர்கள், லெனினை முன்னிறுத்தியே தங்கள் தவறுகளைத் தொடர்ந்தனர். சினம் கொண்ட இளைஞர்கள் கட்சியை வெறுத்தனர். கட்சி கேடயமாகப் பயன்படுத்தப்பட்ட லெனினை வெறுத்தார்கள். இந்த வெறுப்புணர்ச்சியை வளர்ப்பதில் உலக முதலாளியம் முன்னின்றது என்பது உண்மைதான். ஆனால், அதற்கு கட்சியின் தவறுகள் இடங்கொடுத்தன. சோவியத் யூனியன் சிதறியபோது, லெனினுடைய சிலையும் சேர்ந்தே சிதறியது.
கழகங்களின் ஆட்சிக் காலத்தில் நடைபெறும் சாதியக் கொடுமைகளால், தன்னுணர்வு பெற்ற தலித்துகள் வெறுப்படைந்து போயிருக்கிறார்கள். அந்த வெறுப்பு, பெரியார் எதிர்ப்பாக மாறக்கூடிய எல்லா வாய்ப்புகளும் இருக்கின்றன. இதற்கு, பார்ப்பனியம் தூபம் போடலாம். அதற்கு முன்பு கழகங்கள் தன்நெஞ்சறிவது பொய்க்கக்கூடாது. பெரியாருக்கு நியாயம் செய்வது, இன்று தலித்துகளுக்கு நியாயம் செய்வதுதான்.
ந்ன்றி - தலித் முரசு / ஆகஸ்டு05
|
|
|
|