| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 518 online users. » 0 Member(s) | 516 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,070
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,081
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,551
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,261
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,545
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,900
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,293
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,896
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,950
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,220
|
|
|
| பொங்கியெழும் மக்கள் படை வருத்தம் தெரிவிப்பு |
|
Posted by: I.V.Sasi - 04-11-2006, 08:42 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
<span style='font-size:25pt;line-height:100%'>மனிதநேயப் பணியாளர்களின் சாவிற்கு யாழ். பொங்கியெழும் மக்கள் படை வருத்தம் தெரிவிப்பு</span>
[செவ்வாய்க்கிழமை, 11 ஏப்ரல் 2006, 04:01 ஈழம்] [யாழ். நிருபர்]
<b>மனிதநேயப் பணியாளர்களின் சாவிற்கு யாழ். மாவட்ட பொங்கியெழும் மக்கள் படை வருத்தம் தெரிவித்து அறிக்கையொன்றினை நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் யாழ். மாவட்ட பொங்கியெழும் மக்கள் படை விடுத்துள்ள அறிக்கை:
பொங்கியெழும் மக்கள் படை
யாழ். மாவட்டம்,
10.04.2006
அன்பார்ந்த தமிழீழ உறவுகளே
மனிதநேயப் பணியாளர்களின் சாவிற்கு வருந்துகின்றோம்.
இன்று மாலை யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இராணுவத்தினர் மீது எம்மால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது எதிர்பாராத விதமாக கியூடெக் நிறுவனத்தின் மனிதநேய பணியாளர்கள் இருவர் சிக்குண்டு உயிரிழந்தையிட்டு நாம் மிகுந்த வேதனையடைகின்றோம்.
இவர்களுக்கு எமது அஞ்சலியை தெரிவிப்பதோடு, இறந்தவர்களுடைய குடும்பங்களுக்கு பொங்கியெழும் மக்கள் படை சார்பாக எமது அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம். தவிர்க்க முடியாத சூழலினால் ஏற்பட்ட இழப்பிற்காக வருந்துகின்றோம்.
எமது தாயக நிலத்தில் ஆக்கிரமித்து நிற்கும் சிறிலங்கா இராணுவ முகாங்களுக்கும் அருகில் இருப்பதையோ அல்லது அவர்களுடைய வாகனங்களுக்கும் அருகாகச் செல்வதையோ முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுமாறு நாம் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழ் பேசும் உறவுகள் எமது தாயகப் பூமியில் எங்கு தாக்குதலுக்கு உள்ளானாலும், கொல்லப்பட்டாலும் அதற்கு பொங்கியெழும் மக்கள் படை தனது பதிலடியை கொடுத்தே தீரும்.
துணை இராணுவக் குழுக்களின் ஆயுதங்களைக் களைகின்றோம் அவர்களை முடக்குகின்றோம் ஜெனீவாவில் வாக்குறுதியளித்த இலங்கை இனவாத அரசாங்கம், இன்று தனது புலனாய்வு அமைப்பு மற்றும் இராணுவ இயந்திரத்தை வைத்து இந்த ஆயுதக் குழுக்களை பாதுகாத்து வைப்பதோடு மட்டக்களப்பில் துணை இராணுவக் குழுக்கள் தமது அலுவலகத்தை வெளிப்படையாகவே திறப்பதற்கு சகல வழிகளையும் செய்து கொடுத்துள்ள இந்த அரசாங்கத்திடமிருந்து நாம் நீதியையும், நியாயத்தையும் எதிர்பார்ப்பது முட்டாள் தனமாது.
வரும் நாட்களில் இராணுவத்தினராலோ அவர்களது புலனாய்வு அமைப்பினராலோ அன்றி துணை இராணுவக் குழுக்களாலோ எமது மக்கள் தாக்கப்படுவார்கள் ஆனால் எங்கள் வழியில் சென்று நாம் தொடர்ந்து பதிலடி கொடுப்போம், எமது தாக்குதல்களை தீவிரமாக தொடுப்போம். </b>
பொங்கியெழும் மக்கள் படை
யாழ். மாவட்டம்.
நன்றி:http://www.eelampage.com/?cn=25409
|
|
|
| திருகோணமலையில் கிளைமோரத் தாககுதல் |
|
Posted by: mayooran - 04-11-2006, 08:04 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (6)
|
 |
திருகோணமலையில் கிளைமோரத் தாககுதல்
இன்று 1.15 மணியளவில்திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் கிளைமோரத் தாக்குல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் 12கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். திருகோணமலை கபறன வீதியில ;தம்பலகாமத்திற்கு 9 மைல் தொலைவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி தமிழ்நெற்
|
|
|
| 12 SLN troopers killed in Claymore attack in Trincomalee |
|
Posted by: yarlmohan - 04-11-2006, 07:48 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- Replies (12)
|
 |
12 SLN troopers killed in Claymore attack in Trincomalee
[TamilNet, April 11, 2006 07:23 GMT]
At least 12 Sri Lanka Navy (SLN) troopers were killed in a Claymore attack near Thampalakamam on 9th Mile Post on Trincomalee - Kanthalay Road around 1:50 p.m. Tuesday, according to military sources in Colombo. Eight SLN personnel were seriously wounded in the Claymore attack that targeted an SLN convoy.
Further details are not available at the moment.
|
|
|
| இலவச போன் |
|
Posted by: tamilbiththan - 04-11-2006, 06:21 AM - Forum: இணையம்
- Replies (2)
|
 |
www.globe7.com எனும் தளத்தில் 100 நிமிடங்கள் வரை இலவசமாக தருகிறார்கள் நீங்களும் சென்று பயன் படுத்துங்கள் திரும்ப இலவசமாக மீள் நிரப்புவதற்கு உங்கள் கணக்கினுள் நுழைந்து அவர்கள் தரும் விளம்பரத்துக்கு செல்லுங்கள்
நான் கனடா இலங்கை அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளுக்கு கதைத்தேன் நல்ல தெளிவாக இருக்கிறது முயற்சி செய்து பாருங்கள்
|
|
|
| தமிழன் !! |
|
Posted by: வர்ணன் - 04-11-2006, 12:35 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (10)
|
 |
<b>தமிழன் !!
ஒருவன் உழைப்பில்
ஒன்பது பேர் உண்பான்
தள்ளாடி அவர் விழும்வரை
தந்தை உழைப்பில் வாழ்வான்!
காதோரம்
நரைமுடி தெரிகையில்தான்
வேலை செய்ய நினைப்பான் !
காதலித்த பெண்ணை கூட
கைபிடிக்க சீதனம் கேட்பான்!
வெற்றிலை கடை யாரும்
யாரும் திறந்தால் - தானும்
அதையே செய்வான் - !
பாக்கு விற்க நினைக்கான் - !
செய்தால் இருவருக்கும் நன்மை ..
என்று எண்ணான் - அவன்
அழிந்தால் மட்டும் போதுமென்றே
அசிங்கமாய் ஒரு
சிந்தனை கொள்வான்!
வீதி போட குவித்த - கல்லை அள்ளி
தன் வீட்டுக்கு -வெள்ளம்
வராமல் செய்வான் !
பள்ளம் வருமே - விழுவானே
யாரும் என்றால் .......
எவனாவது செத்து போகட்டும்
எனக்கென்ன என்பான்!
பச்சை குழந்தைக்கு
இவன் இன்ன சாதியென்றே
சொல்லி வளர்ப்பான் !
தன் பிள்ளை கால் முறிந்து
அந்த மனிதரே தூக்கி
வந்தால் - மனிதர் - எல்லாம்
ஒன்றே என்று கதை அழப்பான்!
மறுநாள் - முருங்கை மரமேறும்
வேதாளம் என்றாவான்!
சாவு வீட்டில் நின்று கொண்டு
சத்தமாய் ........
கல்யாண வீடு பற்றி பேசுவான்!
பரீட்சைக்கு முதல் நாள்தான்
மேசைக்கு அடியில் புகுந்து
பாட புத்தகம் தேடுவான்!
புலி கூடாது என்றே
எம்மிடையே வீரம் காட்டுவான்
புலி வீரம் வேற்றினத்தவர் - புகழ்ந்தால்
நானும் புலி என்றே -
தானும் புலி வீரத்தில் பங்கு கொள்வான்!
புரியாது தமிழனை!
தமிழன் - தன்னினத்தவருடனும்
வேற்று நாட்டு நாட்டவர் பாசையில்
பேசி வெட்டி வீராப்பு கொள்பவன்
அது சரியா தெரியலை என்றாலும்!!
[b]</b>
|
|
|
| கணணிதான் கடவுளப்பா! |
|
Posted by: Sujeenthan - 04-10-2006, 11:03 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (4)
|
 |
ஒரு நாளில்
நாலில் ஒரு பங்கை
நான் ஒவ்வொரு நாளும்
கணணிக்கு படையல் செய்கிறேன்
பதிலுக்கு கணணி பாடல்களையும்
பல்சுவைத்தகவல்களையும்
பரந்துபட்ட செய்திகளையும்
பரிசளிக்கின்றது.
என்னவென்று சொல்ல
ஜங்கரனின் அருளை!
பாலும் தெளிதேனும்
பாகும் பருப்பும் அளித்த
ஒளவையாருக்கு ஆனை வடிவில்!
எனக்கு எலி உருவில்.!!
|
|
|
| திமுக குடும்ப அரசியல் படுத்தும்பாடு. |
|
Posted by: Birundan - 04-10-2006, 06:45 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (27)
|
 |
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நடிகர் சரத்குமார் இன்று ஒரு கடிதம் எழுதி அனுப் பினார். அந்த கடிதம் கீழே
அன்புத் தலைவர் கலைஞர் அவர்களுக்கு.
நான் சார்ந்திருக்கும் இயக்கத்தின் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நடிகர் சரத்குமார் எழுதும் கடிதம்.
சில நினைவுகள் மறக்க முடியாதவை. 1997-ஆம் ஆண்டு தமிழ்திரையுலகில் `சூரியவம்சம்' என்கிற மாபெரும் வெற்றியைத் தந்த நான் அரசியல் களத்தில் பிரசாரம் செய்ய இறங்குகிறேன்....
திராவிட முன்னேற்ற கழக கூட்டணி ஆட்சி மலர வேண்டும் என்ற நோக்கோடு த.மா.கா.-தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக களம் இறங்கினேன். எந்த எதிர்பார்ப்போ, வேண்டுகோளோ இன்றி தங்களது கூட்டணி வெற்றி பெற வேண்டும் எனும் ஒரே குறிக்கோளோடு செயல் பட்டேன்.
எந்த ஒரு பிரதிபலனும் பாராமல், இரவு-பகல் பாராமல் எப்படி சூறாவளியாக பிரசாரம் செய்தேன் என்பதை தாங்களும் அறிவீர்கள். தங்களது இயக்க முன்னோடிகளும் அறிவார்கள்.
தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வர உதவினேன் என்கிற ஒரே ஒரு மகிழ்வான உணர்வோடு இருந்தவன், தங்களால் ஈர்க்கப்பட்டு தங்களது இயக்கத்திலும் 1998-ஆம் ஆண்டு அடிப்படை உறுப்பினராக இணைந்தேன். நாடாளுமன்ற தேர்தலில் நெல்லையில் நிறுத்தப்பட்டேன்... இயக்கத்தில் சிலரின் ஒத்துழையாமையினால் தோற்கடிக்கவும்பட்டேன்.
நான் அன்று தங்கள் இயக்கத்தில் இணைந்ததை நான் சார்ந்திருக்கும் சமுதாயம் வரவேற்கவில்லை. காரணம் மெர்க்கண்டைல் வங்கி விவகாரத்தில் தாங்கள் பிரச்சினைக்கு சரிவர தீர்வு காணவில்லை என்ற உண்மை அனைவரையும் பாதித்ததால்.
இருப்பினும் நம் இயக்கத்தின் கொள்கைகளான கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டினை முழு மூச்சாக கொண்டு உண்மை உணர்வோடு மரபு மாறாமல் இயக்கத்திற்காக உழைத்து வந்திருக்கிறேன்.
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இயக்கத்திற்கு நான் ஊறு விளைவித்ததில்லை என்பதனை இவ்வுலகமே அறியும்.இது ஒருபுறம் இருக்க எத்தனையோ சந்தர்ப்பங்களில் தங்களை சார்ந்த சிலரே என்னை அவமானத்திற்கு உள் ளாக்கியிருக்கிறார்கள்.
அதனை தங்களுக்காகவும், இயக்கத்திற்காகவும், என் மனைவி ராதிகா சரத்குமாருக்காகவும் சில காலம் தாங்கிக் கொண்டிருந்தேன். அதையும் மீறி ஒரு கட்டத்தில் தங்களிடம் எனது உண்மையான உணர்வுகளை வெளிகாட்டியிருக்கிறேன்.
அப்பா என்று பாசத்தோடு தங்களிடம் வந்தேன். என்ன என்று கேட்டீர்கள்... சொன்னேன். எனது வேதனைகளுக் கும் நான் பட்ட காயங்களுக்கும் காரணம் தங்களது நெருங்கிய சொந்தங்களே என்பதை தெளிவாக உணர்ந்தீர்கள்.
எனினும் அவர்களை அழைத்து சுப்ரீம் ஸ்டார் தம்பி சரத்குமார் நமக்கு உண்மையானவன், உழைப்பவன், அவனது மனைவி ராதிகா நம் வீட்டுப் பெண் இருவரையும் எக்காரணம் கொண்டும் வேதனைப்படுத்தாதீர்கள் என தங்களால் சொல்ல இயலவில்லை. தங்களது சூழ்நிலை அதற்கு வழி வகுக்கவில்லை என்றே அதனை எடுத்துக் கொள்கிறேன்.
தங்களிடம் சொல்லி விட்டேன் என்பதற்காகவே என்னை எதிரியாக நடத்தத் தொடங்கினார்கள். எனது உண்மையான உழைப்பு கேலிக் கூத்தாக்கப்பட்டது.
நான் தங்களிடம் தெரிவித்த கருத்துக்கள் எல்லாம் தங்களைச் சார்ந்தவர்களுக்கு மாற்றுக் கருத்தாகவே தெரிந்ததால் அதன் பாதிப்பும் தாக்கமும் என் மனைவி ராதிகா சரத்குமாருக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து தாங்கள் மகளாக பாவிக்கும் ராதிகா சரத்குமாரையும் தங்களால் பாதுகாக்க முடியவில்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய செய்தி. நாங்கள் சொல்கின்ற நியாயமான கருத்துக்களும் கோரிக்கைகளும் ஏற்கப்படக் கூடாதென எங்களுக்கெதிராக பலர் செயல்படும் போது இனியும் தங்களை வேதனைக் குள்ளாக்க நான் விரும்பவில்லை.
ஆனால் சுய மரியாதை உணர்வுகளோ, கருத்துச் சுதந்திரமோ இல்லாதவன் மனிதனே அல்ல என்பது என் கருத்து. தங்களது இயக்கத்திலோ தற்போது அவற்றுக்கு வரவேற்பு இல்லை. வாய்மையும் பேசாத, வாயும் பேசாத அடிமைகளே தேவைப்படுகிறார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் இயக்கத்தில் இருந்து விடுவித்துக் கொள்வதுதான் எனக்கு ஒரே வழி.
இதுகாலம் வரை தங்களிடம் கற்ற அரசியல் பாடமும் என்னை வளர்த்த ரசிகர்களும் தாய்மார்களும் நண்பர்களும், கலை உலகத்தோழர்களும் என்னை சார்ந்த சமுதாயமும் தமிழக மக்களும் இனி எனது அரசியல் வாழ்க்கைக்கு துணை நிற்பர்.
தமிழக மக்கள் என்னை அவர்கள் மடியில் விழுந்த பிள்ளையை போல கருதி நான்பட்ட காயங்களுக்கு மருந்திட்டு விட்ட பணிகளை தொடர எனக்கு வழி காட்டுவார்கள் என்ற நம்பிக்கை நிச்சயம் எனக்கு உண்டு. எனவே இன்று முதல் என்னை தங்களது இயக்கத்தில் இருந்து விடுவித்துக் கொள்கிறேன். தாங்கள் செய்யவிருக்கும் தேர்தல் பிரசாரத்துக்கு எனது வாழ்த்துக்கள்.
இக்கடிதத்தையே எனது அடிப்படை உறுப்பினர் பதவிக்கான ராஜினாமாவாகவும் ஏற்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
சாதிமத மொழி பேதமற்ற சமுதாயத்தை உருவாக்க பாடுபடுவோம்.
வணக்கத்து டன்,
ஆர்.சரத்குமார்.
நன்றி>இட்லிவடை
|
|
|
|