Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 259 online users.
» 0 Member(s) | 256 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,316
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,641
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,069
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,497
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,038
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  (Ranil Vs Mahindha)
Posted by: happy - 11-20-2005, 07:23 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - No Replies

ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது இலங்கையில் ஒவ்வொரு முக்கிய அரசியல் கட்சியும் தங்கள் தங்கள் கோரிக்கைள் அடங்கிய பத்திரத்தை முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களிடமும் சமர்ப்பித்து தங்களின் பேரப்பேச்சுக்களைத் தொடங்கினார்கள்,

மகிந்த போட்ட கணக்கு என்னதான் தான் தலைகீழாக நின்றாலும் தமிழ் மக்களின் வாக்கு தனக்கு கிடைக்காது, முஸ்லீம் காங்கிரஸ் ஆரம்பத்திலிருந்தே ஜே.வி.பி, சுதந்திரக் கட்சி கூட்டிலிருந்து விலகியே வந்துள்ளது அதனால் அந்த வழியும் அடைபட்ட வழி, அடுத்து ஆறுமுகன் அண்ணனின் ஆதரவை மட்டும் தனக்கு வைத்துக்கொண்டு; ஒன்றும் புடுங்கி விட முடியாது.
ஒரே வழி ஜே.வி.பி, ஹெல உறுமயவுடனான கூட்டு.... சுருங்கச்சொன்னால் “இனவாதம்”

ஜே.வி.பி, ஹெல உறுமயவுடனான உடன்படிக்கை கைச்சாத்தான பின்னும் முஸ்லீம் காங்கிசின் கோரிக்கைகளைப் பார்த்தாh ;அவை ஜே.வி.பி, ஹெல உறுமய உடன்படிக்கைக்கு மிகப்பெரிய ஆப்பு வைப்பவையாக இருந்தன . அதிலும் முஸ்லீம் காங்கிரசின் தனி அலகு,தனித் தரப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் அபாரம் (ஆயுத சம பலத்தையும் 22 பாராளுமன்ற சீட்டையும் வைத்துக்கொண்டு கேட்டே கொடுக்க முன்வராத சிங்களம் வெறும் 15 சீட்டுக்கு இதை எல்லாம் கொடுப்பார்கள் என கேட்பது என்னவென்று சொல்ல) சமாதானம் ,பேச்சுவார்த்தை போன்றவற்றை வெறுக்கும் மகிந்த கூட்டுக்கு முற்றிலும் ஒத்து வராதவை.


அடுத்து ரணில் போட்ட கணகு சிறுபான்மைக் கட்சிகளின் ஒட்டுமொத்த ஆதரவும் தனக்குத்தான் என்பதாகவிருந்தது, ஆனால் இங்கு இரு வேறுபட்ட கட்சிகளின் கோரிக்கைகள் முரண்படும் பட்சத்தில் அவவிரண்டு கட்சிகளையும் சேர்த்து கொணடு ஒரு கட்சி ஓட்டுக் கேட்க முடியாது என்ற சிறிய அரசியல் அறிவு கூட ரணிலுக்கு இருக்கவில்லை அல்லது அவர் தமிழர்களை இ.வா என நினைத்திருக்க வேண்டும் இங்கு நான் குறிப்பிடுவது முஸ்லீட் காங்கிரஸினதும் தமிழ் மக்களினதும் நிலைப்பாட்டையும் பற்றி .

இங்கு ரணில் போட்ட கணக்கு எல்லாம் சரி ஒன்றைத் தவிர அது தமிழர் நிலைப்பாடு. இன்னும் வெளிப்படையாகச் சொல்வதானால் "மேதகு.வே.பிரபாகரனின்" நிலைப்பாடு

Print this item

  ஏவிஏட்டர் அல்லது வான்வியலாளர்-ஒரு விமர்சனம்
Posted by: siluku - 11-20-2005, 06:53 PM - Forum: சினிமா - Replies (5)

ஏவிஏட்டர் அல்லது வான்வியலாளர்-ஒரு விமர்சனம்

<img src='http://img10.imageshack.us/img10/4049/theaviatorbigposter6ip.jpg' border='0' alt='user posted image'>

இந்த ஆண்டு வெளி வந்த கொலிவூட் படங்களில் குறிப்பிடத்தக்கது.மார்டின் ஸ்கொர்சினால் நெறிப்படுத்தப்பட்ட ,விமானவியலாளரான கார்வார்ட் கெயுசுன் வாழ்க்கை வரலாற்றை அடியோற்றி எடுக்கப் பட்ட காலப் படம்.யார் இந்த கார்வார்ட் கெயுஸ், அமெரிக்காவில் டெக்சாசில் எண்ணை வர்த்தகத்தில் ஈட்டிய வருமானத்தில் ,பல கோலிவூட் படங்களை எடுத்து பின்னர் அமெரிக்க விமானப்படைக்கு தேவயான விமானங்களை வடிவமைத்து, பல வான் பறப்பு சாதனைகளைச் செய்து,விமானச் சேவை நிறுவனத்தை உருவாக்கி ஆரம்பகால கண்டங்களுக் இடயேயான பயணியர் விமான சேவை நிறுவனங்களைத் தொடக்கிய ஒரு கலவை மனிதர்.இவர் அந்தக் காலத்தில் அதாவது 1920 - 1940 காலத்தில் கோலிவூட்டை ஆட்டிப் படைத்த ஒரு எம் ஜீ ஆர்.இவர் பல நடிகைகளை தனது நாயகியாகவும் வைத்திருந்தார்.சில வேளைகளில் அதி கூடிய சுத்தத்தை பேணும் ஒரு மன நோயளராகவும் இருந்தார்.இவ்வாறு ஒரு கலவயான குணா அம்சத்தை உடய மனிதரின் கதை அந்தக்காலத்தை பிரதிபலிப்பதாக மிகவும் தொழில் நுட்ப நேர்தியுடன் எடுக்கப் பட்டுள்ளது.

குறிப்பாக இதில் அமெரிக்க வர்தகர்க்கும் ,அமெரிக்க அரசியலாளர்கள் அதாவது செனட்டர்களுக்குமான தொடர்பு மற்றும் அந்தக் காலத்தில் கொம்யுனிஸிட்டுகள் என்று முத்திரை குத்தப்பட்டு நிகழ்ந்த மக்காத்தி படு கொலைகள் ,அமெரிக்க கொலிவூட்டில் பெண் நடிகைகள் நடத்தப்படும் விதம் எனப் பல விடயங்கள் சொல்லப் பட்டிருப்பது,அமெரிக்காவைப் பற்றிய உண்மைகளை இன்றய நிலயில் எமக்கு அறியவைகின்றது.அமெரிக்க வர்த்தகம்,அரசியல் அனைத்துமே போர்களோடு பின்னிப்பிணைந்தது என்பது இன்றும் நிதர்சனமாகவே இருப்பதை இந்தப் படம் எமக்கு நினைவூட்டுகிறது.

Print this item

  இன்றைய ரஷியா
Posted by: SUNDHAL - 11-20-2005, 06:06 PM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

சோவியத் யூனியனில் இருந்த 15 நாடுகளில் மிகப்பெரியது ரஷியா. உலக அரங்கில் சோவியத் யூனியனுக்கு இருந்த அரசியல், பொருளாதார, ராணுவ முக்கியத்துவம் இப்பொழுது ரஷியாவுக்கு வழங்கப்படுகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரத்து அதிகாரம் (வீட்டோ பவர்) கொண்ட நிரந்தர உறுப்பினராகவும் உள்ளது. பல கட்சிகளைக் கொண்ட தேர்தல் முறையை பின்பற்றுகிறது.

வறுமை, வேலையில்லா திண்டாட்டத்தை முழுமையாக ஒழித்த முதல் சமூகமாக விளங்கியது சோவியத் யூனியன். கல்வியறிவை உலகிலேயே மிக அதிக அளவில் எட்டிய, குழந்தை தொழிலாளர் முறை முற்றிலும் ஒழிந்த நாடாக இருந்தது. பெண்கள் முன்னேற்றம், அறிவியல் வளர்ச்சியில் சிகரங்கள் எட்டப்பட்டன. மக்கள் நலன்களை முதன்மைப்படுத்தி அதற்காக அதிக பணம் செலவிடப்பட்டது. சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு உணவுக்காக குழந்தை விபசாரம் நடைபெறும் நாடாக சீரழிந்தது ரஷியா. பணவீக்கம் வானத்தில் பறக்க பொருளாதாரம் நிலைகுலைந்தது. தற்போது ஓரளவுக்கு நிலைத்தன்மை மீட்கப்பட்டிருந்தாலும் இன்றளவும் அடையாளச் சிக்கலில் இருந்து மீளமுடியாத சமூகமாகவே இருக்கிறது. சோவியத் ஆட்சி முறை கோரி போராட்டங்கள் அதிகரித்துள்ளன. செசன்ய தேசிய இனப் பிரச்சினையும் முக்கிய சிக்கலாக உள்ளது.

பரப்பளவு-1 கோடியே 70 லட்சத்து 75 ஆயிரம் (1,70,75,200) சதுர கிலோமீட்டர்கள்; மக்கள் தொகை 14.34 கோடி (14,34,20,309); தலைநகர்-மாஸ்கோ; மொழி-ரஷியன்; நாணயம்-ரஷியன் ரூபிள்; எழுத்தறிவு-99 சதவீதம்.

ஐரோப்பா, ஆசியா ஆகிய இரு கண்டங்களிலும் அமைந்துள்ளது ரஷியா. அஜார்பைஜான், பெலாரஸ், சீனா, எஸ்தோனியா, ஜார்ஜியா, கஜகஸ்தான், வடகொரியா, லாத்வியா, லித்துவேனியா, மங்கோலியா, நார்வே, போலந்து, உக்ரேன் ஆகிய நாடுகள் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ளன. மேற்கே யூரல் மலைத்தொடர், மத்தியப் பகுதியில் வெர்கொயான்ஸ், கிழக்குப் பகுதியில் கொலிமா மற்றும் காம்செட்கா மலை, தெற்கே ஆல்ப்ஸ் மலைத்தொடரின் பகுதி அமைந்துள்ளன. வடபகுதி பனி மூடிய ஆர்க்டிக் கடற்கரை சமவெளி பகுதியாக அமைந்துள்ளது. கடுங்குளிரான காலநிலை நிலவும் நாடு ரஷியா.

பெட்ரோலியம், பெட்ரோலியப் பொருள்கள், இயற்கை எரிவாயு, மரம் மற்றும் மரத்தாலான பொருள்கள், வேதிப்பொருள்கள், ராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கோதுமை உள்ளிட்ட தானியங்கள், சர்க்கரைக் கிழங்கு, காய்கறிகள், பழங்கள், சூரியகாந்தி பயிராகின்றன. இரும்புத்தாது, நிலக்கரி, கச்சா எண்ணெய், பிளாட்டினம், தாமிரம், துத்தநாகம், காரீயம் ஆகியவை ரஷியாவின் முக்கிய கனிம வளங்கள்.

நிலக்கரி, எண்ணெய், எரிவாயு, வேதிப்பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. எந்திரங்கள், விண்கலங்கள், விமானங்கள், கப்பல் கட்டுதல், தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து சாதனங்கள், டிராக்டர்கள், வேளாண் எந்திரங்கள், கட்டுமான கருவிகள், மின்உற்பத்தி சாதனங்கள், மருத்துவ, அறிவியல் கருவிகள், நுகர்பொருள்கள் தயாராகின்றன.
ThanksBig Grininamani..

Print this item

  பூச்சியம் நாடகம்
Posted by: Mathan - 11-20-2005, 06:00 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (1)

சற்று முன்பு ஐபிசி வானொலியின் பூச்சியம் என்று ஒரு நாடகம் போட்டார்கள். அதன் ஒலிப்பதிவு யாரிடமாவது இருக்கின்றதா? யாராவது கேட்டீர்களா?

Print this item

  நவீனப் புதுக்கவிக் கானா!
Posted by: SUNDHAL - 11-20-2005, 06:00 PM - Forum: நகைச்சுவை - No Replies

பின் நவீனப் புதுக்கவிக் கானா!

கற்பனை: முகில்

கடற்கரை. பொட்டலத்தில் இருந்த கடைசி கடலையையும் சாப்பிட்டு விட்டு, அந்த வெள்ளைக் காகிதத்தைப் பறக்க விட்டு விட்டு, கடலலையை நோக்கி ஓடுகிறான் அந்தச் சிறுவன்.

காகிதம் பறக்கிறது...பறக்கிறது... தரையை அடையப் போகுது.

அந்த வெள்ளைக் காகிதம் மண்ணை முத்தமிடப் போகும் வேளையில் மூன்று கரங்கள் அதைப் பிடிக்கின்றன.

அந்தக் கைகளுக்குச் சொந்தக்காரர்கள் (காங்கிரஸ்காரர்கள் அல்ல) குருதிப்ரியன், மன்மதபிரபு, கானா கதிரு !

கதிரு: இன்னா மாமூ, நாம கை வெச்ச பொருள் மேலேயே கைய வெக்கிரியா?

மன்மதன் : ஹே..நான்தான் முதல்ல பிடிச்சேன். எனக்குத்தான் இந்தப் பேப்பரு.

குருதி : கொத்துச் சிறகில் ஒற்றை இறகாய் பிரிந்து, பறந்து வந்திருந்தால் என் கண்கள் எதிர்ப்புறம் நோக்கியிருக்கும். அதுவல்லவே இது! என் நெஞ்சக் குழியில் குமிழ் பரப்பும் நெருப்பின் ஜுவாலைகளை இட்டு நிரப்ப வேண்டுகிறேன் இக்காகிதம்!

கதிரு : நெருப்போ, பருப்போ மவனே! டாப்பு டோப்பு வாங்கிக்கும். மருவாதியா பேப்பரை வுடுறியா இல்லியா?

மன்மதன் : என்ன மேன், உனக்கு காது குடையறதுக்குத்தான் இந்தப் பேப்பரைக் கேக்கறீயா? அதுக்கு வேற பேப்பர் எடுத்துக்கோ மேன். நான் இதுல காதல் கவிதை எழுதப் போறேன்.

கதிரு : இன்னா கவிதயா... நம்ம கானா முன்னால உங் கவித கவுந்தடிச்சு கதறும்டி! நான் சூப்பரா கானா கட்டப் போறேன் . பிரச்ன பண்ணாம பேப்பரை இங்க தள்ளு.

குருதி : அற்பம் உமிழ்ந்த எச்சில் கரை ஒதுங்கிய பித்தர்களே! என்போல் பின் நவீனத்துவம் உங்களால் படைக்க முடியுமா? என் எழுத்துக்கள் பிரளயங்களின் நிழல் தேடா அணுக்கதிர்கள்!

கதிரு : மவனே நீ பேசறது தமில்தானா ...அத முதல்ல சொல்லு..சும்மா சாமியாடாத!

மன்மதன்: சரி, ஒரு போட்டி வைச்சுக்குவோம். பேப்பரை நடுவுல வைச்சிருவோம். மூணு பேருமே கவிதை சொல்லுவோம் . நல்லா சொல்லுறவங்களுக்கு மத்த ரெண்டு பேருமே பேப்பரை விட்டுக் கொடுத்துரணும். ஓ.கே.வா?

கதிரு : ஆஹாங்...இது மருவாத! நா ரெடி கண்ணு!

குருதி : வெளிச்சம் தேடிக் கழிந்த பறவை, விரகத் தீயில் விழித்தது போல் மாட்டிக் கொண்டேன்.

கதிரு : இப்ப இன்னாங்கிற.. ஒத்துக்கிறேங்கிறியா... ஒத்துக்கலையா?

குருதி : ம்...

மன்மதன் : என் பெயர் மன்மதன் பிரபு . கவிதைகளைச் சுவாசிப்பது, அவள் காலடிகளை மட்டும் வாசிப்பது , கனவுகளில் மூழ்கி யோசிப்பது , காதலைத் திணற திணற நேசிப்பது என் பொழுதுபோக்கு.

கதிரு : நாதான் கானா கதிரு. மச்சான் கானா கட்ட ஆரம்பிச்சேன்னா , சைதாப்பேட்டை சங்கூதும். கண்ணம்மாபேட்டை மோளம் அடிக்கும். கொசப்பேட்டை குத்து டான்ஸ் ஆடும். ஆல் பேட்டைஸ், அய்யா கானாவுக்கு சலாம் போட்டு ஆடும்.

குருதி : மீட்சிகளின் வழி கசிந்த உதிரங்களின் இடுக்குகளில் பிறந்த எனக்கு பெற்றோர் வைத்த பெயர் நகம் போல காலத்தின் சீழ் வடியும் விரல்களிலிருந்து வெட்டப்பட்டு விட்டது. பின் ஆழ்மனம் அலற, என் ஆத்மா உலர எனக்கு நானே வைத்துக் கொண்ட அடையாளம் குருதிப்ரியன் .

கதிரு : அதுக்கு இன்னாபா அர்த்தம்?

மன்மதன் : குருதின்னா இரத்தம். "ப்ரியன்'னா நேசிப்பவன்.

கதிரு : அடப்பாவி அப்படின்னா நீ ரத்தக் காட்டேரியா. உன் பேச்சு ஒரு தினுசா இருக்கையிலே நெனைச்சேன். நீ சாதாரண மனுச சென்மம் இல்லேன்னு.

மன்மதன் : அது அவரு வைச்சுக்கிட்ட புனைப்பெயர்ப்பா!

கதிரு : புனப் பேரோ! பூனைப் பேரோ! யாராவது வெரசா கவித கட்டுங்கப்பா!

மன்மதன் : தலைப்பு: காதல்...

எல்லா ரோஜாக்களும்
என் கன்னங்கள் தேடி
தங்கள் இதழ்கள் உதிர்க்க
காத்திருக்கின்றன...ஆனால்
என் கன்னங்கள் காத்திருப்பது
உன் செவ்விதழ் வழியே
வழியும் காதலைச் சுமக்கத்தான்!

கதிரு : ரோசாப்பூ செவப்புன்னு என்னென்னமோ சொன்ன கண்ணு..ஒரு எழவும் பச்சக்குன்னு நெஞ்சுல பதியல..இப்ப நம்ம கானாவைக் கேளு மாமூ!

வடபழனிக்கு போக டொவல் பி பஸ்சு!
45 பி போகும் ஆழ்வார்பேட்டை லஸ்சு!
ரெண்டு பஸ்சுலயும் நான் எடுக்கமாட்டேன் டிக்கெட்டு!
ஏன்னா -அதுல தான வருது என்னோட "டிக்கெட்டு'!

மன்மதன் : எப்பா ராசா..கவித சொல்லச் சொன்னா, நீ பஸ் ரூட்டைச் சொல்லுற! அய்யா பின் நவீனத்துவம்...நீங்க ஆரம்பிங்க!

குருதி : மீளாக் கனவின் ரெüத்திரத்தில்
தீராப் புரிதலின் பூதாகரத்தில்
தொக்கி நிற்கும் பூக்குட்டிக் கிளையில்
தேங்கித் தவிக்கும் குடைக்கம்பிச் சாரலில்
ஈரமின்றி ஒழுகும் வியர்வைப் பச்சோந்தியின்
உறவற்ற உருவமே காதல்!

கதிரு : அடங்க மாட்டியா நீ! பச்சோந்தி பரதேசின்னு! புரியறாப்ல பேசக்கூடாதுன்னே கௌம்பி வந்திருக்கான்யா இவன் . இப்ப நான் வுடுறேன் கேளு.

இங்க் போட்டா எழுதும் பேனா!
இங்க வந்து நீயா பேசு தானா!
மங்கி கேப் போட்ட உங்கப்பன் வேணாம்!
கடல முட்டாய் தின்னாப் பித்தம் வீணா!
உன்னக் கண்ணடிச்சுக் கூப்பிடுது என் கானா!

குருதி : (மனதிற்குள்) குதறிக் கிழித்து, வார்த்தைகளைப் புதைத்து, அழுகிய மொழியில் அமிலம் ஊற்றும் அறிவிலிகள்.

மன்மதன் : என்னப்பா இது கானான்னு சொல்லி கவித குரல்வளைய நெறிக்கிற! இவர் என்னன்னா அவருக்கே புரியாத மாதிரி, யாருக்கும் புரியக் கூடாதுன்னு, வேற்றுக் கிரக பாஷை பேசுறாரு. என்ன மாதிரி ஜனரஞ்சக தமிழ்ல கவிதை சொல்லப் பழகிக்கோங்கப்பா...இதைக் கேளுங்க . காதல் மென்மையா ஒரு வலியோட , ஒரு புன்னகையோட, ஒரு எதிர்பார்ப்போடா, ஒரு ஏக்கத்தோட எட்டிப் பார்க்கும்.

உன் கூந்தல் உதிர்த்த
ஒற்றைப் பூ..
உன் விரல்கள் இழந்த
பிறை நிலா நகங்கள்
உன் இதழ்கள் உறிஞ்சிய
புரூட்டி பாட்டில்
உன் சுடிதார் இழந்த
ஒரு ஊதா நூல்...
இவைகளிடம் கேள்
அவை சொல்லும் என் காதலின் வாசத்தை!

கதிரு : கலீஜா இருக்குப்பா... காதலு பத்தி சொல்லச் சொன்னா, குப்பத் தொட்டியில என்னலாம் கெடக்கும்னு லிஸ்ட் வுடுற! இன்னாக் கவிதயோ, கண்றாவியோ! எப்பா இரத்தக் காட்டேரி, பேயடிச்சவன் பினாத்துற மாதிரி பேசுவியே, அதைச் சொல்லு.

குருதி : ஒலியில்லா இருள் வெளியில் பிம்பங்களுக்கு புரிவதில்லை நிழல்களின் ஓசை! பிழைத்துப் போங்கள்!

மனப் பிரபஞ்சத்தின் ஊடாக
பிணம் தேடும் ஒற்றை மேகம்!
வலி கீறும் வன்மத்தின் மொட்டுகளில்
சோம்பல் முறிக்கும் தட்டாம் பூச்சி!

சடலத் தீயின் குளிர் ஜுரத்தில்
சருகு பொறுக்கும் ஒவ்வாமை ஓநாய்!
மலர்களின் குரோதப் பின் குறிப்பில்
வெளிறிக் கிடக்கும் பிளாஸ்டிக் -காதல்!

கதிரு : சூப்பரு..இன்னாமா பேசறான்பா! சோக்காக்கீது! அப்டி எதுனா உசரத்துல ஏறிக் கூவிக்கின்னே தொபுக்கடீர்னு நீ குதிச்சேட்டேன்னா, நாடு உருப்பட்டுரும்!

குருதி : சிறகசைத்துச் சிதறும் கழிவுகளின் மேல் முட்டையிட்டு முகம் பார்க்கும் பெட்டைக் கோழி ஜென்மங்கள் என் பேனா பற்றி பேச வேண்டாம்.

கதிரு : (மன்மதனைப் பார்த்து) இன்னாபா சொல்லுறாரு?

மன்மதன் : அதெல்லாம் எனக்கும் புரியல, உன்னை ஏதோ "கப்பு 'அடிக்கிற மாதிரி திட்டுறாருன்னு மட்டும் புரியுது.

கதிரு : ஏய்.. தேனாப் பாயுற எங் கானாவை திட்டுறியா நீ..உன் மூஞ்சியில என் லெஃப்ட் ஹேண்டை வைக்க..ஏய்..

குருதி : சூட்சுமத்தின் எரி குழம்பில் வழியும் திராவகத்தை நக்கிச் செல்லும் கொடுக்கில்லா நாய்ப் பல்லில்..

கதிரு : யாரை பாத்து நாய்ன்னு சொல்லுற..

(கதிரு வீடு கட்டி, தன் பேனாக் கத்தியை உருவ அவர்கள் அங்கிருந்து ஓட ஆரம்பிக்கின்றனர். கேட்பாரற்றுக் கிடக்கும் அந்த வெள்ளைக் காகிதத்தை எடுத்த ஒரு சிறுவன் தன் மேல் விழுந்த பறவை எச்சத்தை துடைத்துப் போட்டுவிட்டுப் போகிறான். அங்கே வரும் குறுந்தாடி வைத்த ஒரு ஓவியர், தன் மாணவனிடம் , அந்தக் காகிதத்தை எடுத்து ஆச்சரியத்துடன்)

ஓவியர்: வாவ்.. வாட் எ மாடர்ன் ஆர்ட் ...இட்ஸ் அமேசிங்

Print this item

  கணிவழிக் கிளிவதை
Posted by: siluku - 11-20-2005, 05:54 PM - Forum: கவிதை/பாடல் - Replies (2)

இணையச் சாளரங்களில்
கணினிச் சொடுக்குகளால்
ஜிமெயில் பிளந்து
மின் துடிப்புகளுக்கிடையில்
கண் துடித்தேன்

வெற்றுகள் கூடி
துக்கம் விசாரிக்க
என் விழியே
என் விழி பார்த்துக் கேட்கிறது

"எங்கே என் கணிக்குயில்?"

வலைப்பூ வனப்பாய்
விழுதுகள் பரப்பி
கிளைத்து வளர்கின்றன
உயிர் இணையத்தில்
பசும் பொல்லா நினைவுகள்

வாலறுந்த கணியெலிபோல்
அவளின் உணர்வுக் கணிக்குள்
எதைச் சொடுக்கவும்
வழியற்று வலிபெற்று நான்

யுனித்தமிழ்ச் சொல்தேடும்
கூகுள் எந்திரம் போல்
கடுவிழியலைந்து தவிக்கிறேன்
கூட்டுக்குள் அடையா ஏக்கங்களோடு
என் மூச்சானவள் மனம் தேடி

மௌனமும் அல்லாத
பேச்சும் அல்லாத
இடைப்பட்ட மொழியில்
வினோதமாய்ப் புதிர்கிறாள்
நாளும் பொழுதும் இவள்

மௌனமெனில்
நம்பிக்கைத் திசையில்
அவளை என் விருப்பம்போல்
நகர்த்திக்கொள்வேன்

பேச்செனில்
இதுதான் இவளென்று
வெள்ளைத்தாள் எழுதி
உறுதியாவது செய்து கொள்வேன்

மௌனமுமல்லாத பேச்சுமல்லாத
இவளின் முட்பூ முத்தம்
உயிரின் உள்ளுதடுகளையும்
கிழிக்கின்றது

அதன் மூர்க்க வாசம்
அணுக்கள் ஒவ்வொன்றையும்
இரண்டிரண்டாய்ப்
பிளந்தெடுத்துக்கொண்டே
ஓய மறுக்கின்றது

கண்ட்ரோல்+ஆல்டர்+டெலீட்டால்
பில்கேட்சின் பிழைகளைச்
சரி செய்வதைப்போல
இவ்வதைகளையும் சரிசெய்ய
நெஞ்சப் பொறிக்குள்ளும்
பொத்தான்கள் இல்லையா?

காணத்துடிக்கும் உயிரோடு
என் உயிருக்கு
இந்த உயிர் மடலும்
விரைந்து போய்ச் சேரட்டும்

திறக்கப்படாத
திறந்தாலும் வாசிக்கப்படாமல்
அழித்தல் பொத்தானால்
தூக்கிலிடப்படும்
அவளின் மின்னஞ்சல்
வருகைப் பெட்டிக்குள்
- புகாரி (buhari@gmail.com) 

http://www.keetru.com/literature/poems/buhari_4.html

Print this item

  13 வயதில் திருமணம் விவாகரத்து பெற்று படிக்கும் மாணவி
Posted by: SUNDHAL - 11-20-2005, 05:41 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (2)

ஆந்திர மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் ஆலூர் கிராமத்தை சேர்ந்த 13 வயது மாணவியை அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.

சிறு வயது என்பதால் அந்த மாணவிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. ஆனால் உறவினர்கள் விடாப்பிடியாக சம்மதிக்க வைத்தனர். திரு மணம் முடிந்த பிறகு மாண விக்கு கணவர் மீது வெறுப்பு ஏற்பட்டது. மேலும் அந்த மாணவிக்கு தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆசையும் ஏற்பட்டது.

விவாகரத்து

இதைத் தொடர்ந்து அந்த மாணவி கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றாள். பின்னர் 8-ம் வகுப்பில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தாள். விவாகரத்து பெற்றதால் அந்த மாணவியிடம் ஊரில் உள்ள உறவினர்கள் யாரும் பேசுவது கிடையாது.

ஆனால் அதைப்பற்றி எல்லாம் மாணவி கவலைப் படுவது இல்லை. தான் உண்டு தன் படிப்பு உண்டு என்றே இருக்கிறாள்.

வறுமை

மாணவியின் பெற்றோர் மிகவும் வறுமையில் வாடுவதால் படிப்பு செல வுக்கு மாணவி மிகவும் கஷ் டப்படுகிறாள். யாராவது தனக்கு உதவி செய்தால் டாக்டர் ஆக ஆசை என்று மாணவி கூறுகிறாள். இதற் காக அரசிடம் இருந்து உதவி கோரப் போவதாகவும் தெரி வித்துள்ளார்
Thanks:Malaimalar.....

Print this item

  ஜனாதிபதி தேர்தல்- தாரகி சிவராம் சொன்னது....
Posted by: Thala - 11-20-2005, 02:16 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<b>ஜனாதிபதி தேர்தல் வியூகத்திற்குள்
பலியாகப்போகும் சமாதானம்</b>

Virakesari - 31 October 2004


--------------------------------------------------------------------------------

இடைக்கால தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தைத் தொட்டாலே மகா பாவம் என சிங்கள தேசத்தில் நாளாந்தம் புதுப்புது பரப்புரைகள் செய்யப்படுகின்றன. பல சிங்கள மேலாண்மைக் கருத்தியலாளர்கள் புலிகளின் தன்னாட்சி அதிகாரசபை வரைவை படிக்காமலேயே அது கிழித்தெறியப்பட வேண்டுமென காரசாரமாக எழுதிவருகின்றனர்.

புலிகள் கேட்பது போல இந்த வரைபின் அடிப்படையில் அமைதிப் பேச்சுக்களை மீண்டும் தொடங்குவதற்குப் பதிலாக தமது மாற்று வரைபொன்றைப் பற்றியும் சமாந்தரமாகப் பேசலாம் என சந்திரிகா அரசு கூறிவருகிறது. ஆனால், சிங்கள தேசத்தில் புலிகளின் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை பற்றிக் கிளப்பப்பட்டு வரும் அனைத்துப் பூச்சாண்டிகளும் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கும் போது தாமாகவே மறைந்துவிடும் என்பதே உண்மை. எமது பிரச்சினையைத் தீர்த்து வைப்பதை விட சிங்கள அரசியல் தலைமைகளுக்கு வரப் போகும் ஜனாதிபதித் தேர்தலில் எப்படி வெல்வது, எப்படி வியூகம் வகுப்பது என்பன பற்றிய கவலைகளும் அக்கறைகளுமே மேலோங்கியுள்ளன. இது விடயத்தில் நாம் அனைவரும் தெளிவாயிருக்க வேண்டும். அதைவிடுத்து நேரத்துக்கு நேரம் வெளியாகும் சந்திரிகா அரசின் அறிக்கைகளையும் ஐக்கிய தேசியக் கட்சியின் பசப்பு வார்த்தைகளையும் கண்டு மயங்கி மீண்டும் இலவு காத்த மடக் கிளிகளாவதை நாம் தவிர்க்க வேண்டும்.
புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை வரைபின் அடிப்படையில் தாம் பேசத் தயார் என ஐக்கிய தேசியக் கட்சி தற்போது கூறத் தலைப்பட்டுள்ளமையும் ஒரு நயவஞ்சக நாடகமே. ஏன்? ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வாக்குகளை மட்டுமே நம்பி வெல்லக்கூடிய வாய்ப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கோ சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கோ தற்போது இல்லை. ஹெல உறுமய, ஜே.வி.பி. எப்படியான நிலைப்பாடு எடுத்தாலும் சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள தேசத்தின் வாக்கு பிரிவது தவிர்க்க முடியாது. இதற்கு முக்கிய காரணம் துரிதமாக உயர்ந்து செல்லும் வாழ்க்கைச்செலவு சந்திரிகா அரசு மீது சிங்கள மக்களிடையே ஏற்படுத்திவரும் வெறுப்பாகும். இதேவேளை சந்திரிகா - ஜே.வி.பி அரசின் மீது உள்ள வெறுப்பால் தன்பக்கம் திரும்பக்கூடிய சிங்கள வாக்குகளை மட்டும் நம்பி ஜனாதிபதித் தேர்தலை வெல்லமுடியாது என்பது ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெளிவாகத்தெரிகிறது.

ஆகவே தற்போது இரு பெரும் சிங்களக் கட்சிகளும் ~பிரேமதாசா சூத்திரத்தின்| மீது நாட்டம் கொள்கின்றன. 1988ம் ஆண்டிலே அப்போது ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக ஜே.வி.பி. யும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுமாக சிங்கள மக்களிடையே பெரும் அரசியல் கிளர்ச்சியொன்றைக் கிளப்பிக் கொண்டிருந்தன. இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதன் மூலம் சிங்கள் தேசத்தை ஐக்கிய தேசியக்கட்சி இந்தியாவிற்கு விற்றுவிட்டது என அவர்கள் பரப்புரை செய்தனர். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பண்டங்களுக்கு ஜே.வி.பி. தடைவிதித்தது. அவற்றை மீறி விற்ற ஒரு சில வர்த்தகர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இப்படியாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக மாபெரும் வெறுப்பலையொன்று வீசிக்கொண்டிருந்த நேரத்தில் தான் பிரேமதாசா அதன் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். பிரிந்த சிங்கள வாக்கின் ஒரு பகுதியோடு பிரிபடாத வடக்குக் கிழக்கு தமிழ் வாக்குகளையும் முஸ்லிம் வாக்குகளையும் இணைத்தால் ஜனாதிபதித் தேர்தலில் வெல்வதற்குத் தேவையான மொத்த வாக்கின் 50 சதவீதத்துக்கு மேல் பெறலாம் என்பது அப்போது பிரேமதாசா போட்ட கணக்கு. இதையே சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலை வெல்வதற்கான பிரேமதாசா சூத்திரம் என அந்நேரத்தில் சில சிங்கள அரசியல் ஆய்வாளர்கள் அழைத்தனர்.

சிங்கள தேசத்தில் எப்படியான எதிர்ப்பலைகள் கிளம்பினாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தென்னிலங்கையில் அடிப்படையில் மாறா வாக்கு வங்கியொன்று இருக்கின்றது. மொத்த வாக்காளர் தொகையில் இது 30-35 சதவீதம் எனக் கருதப்படுகிறது. இதோடு பிளவுபடாத தமிழர் தாயக மற்றும் முஸ்லிம் வாக்குகளை பெற்றால் ஐக்கிய தேசியக் கட்சி சிங்கள தேசத்தில் ஏற்படக்கூடிய தனக்கெதிரான எந்த அலையையும் மேவி ஜனாதிபதித் தேர்தலில் வெல்லலாம் என பிரேமதாசா சூத்திரம் கூறுகிறது.

1988ம் ஆண்டிலே சிங்கள தேசத்தில் வீசிக்கொண்டிருந்த இந்திய வெறுப்பலைக்கு மத்தியில் பிரேமதாசாவும் அவருடைய அரசியல் மதியுரைஞர்களும் இரகசியமாக இந்தியத் தூதரகத்தை அணுகினர். வடக்குக் கிழக்கின் பிரிபடாத தமிழ் வாக்கு மொத்தமாக ஜனாதிபதி வேட்பாளர் பிரேமதாசாவுக்கு விழுவதற்கு அப்போது தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்திருந்த இந்திய இராணுவம் ஆவன செய்யவேண்டுமென அன்றைய இந்தியத் தூதுவர் ஜே.என். தீட்சித்திற்கு சில தூதுகள் அனுப்பப்பட்டன. வடக்குக் கிழக்கில் விழப்போகும் வாக்குகள் பிரேமதாசாவுக்கு வெற்றியை நிச்சயம் பெற்றுக்கொடுக்குமெனவும் இதன் காரணமாக ~அவர் இந்தியாவிற்கு என்றும் நன்றியுடையவராக இருப்பார்| ("ர்ந றழரடன டிந நவநசயெடடல பசயவநகரட வழ ஐனெயை") எனவும் அன்றைய இந்தியத் தூதுவர் ஜே.என். தீட்சித் ஒருமுறை 1988 ஜனாதிபதித் தேர்தலைப்பற்றி காரசாரமாக உரையாடிக்கொண்டிருந்த போது குறிப்பிட்டார். அவர் கூறியது போலவே அந்த ஜனாதிபதித் தேர்தலில் பிரேமதாசாவுக்கு வடக்கு கிழக்கில் அமோகமான வாக்குகள் கிடைத்தன.

இந்தியப் படைகள் பெட்டி பெட்டியாகத் திணித்த இந்த வாக்குகளே அவருடைய வெற்றியைத் தீர்மானித்தன. இது முடிந்த கையோடு கொழும்பில் நான் தற்செயலாக வரதராஜப்பெருமாளைச் சந்திக்க நேர்ந்த போது அவரும் பிரேமதாசாவைப்பற்றி தீட்சித் சொன்ன அதே வசனத்தைச் சொன்னார். தேர்தலில் வெற்றிபெற உதவியதற்குக் கைமாற்றாக பிரேமதாசா மாகாணசபை திறம்பட இயங்க தனக்கு ஆவன செய்வார் என வரதராஜப்பெருமாள் சொன்னார்.

இதையொட்டித்தான் அந்த நேரத்தில் ~நினைத்ததை முடிப்பவர் பிரேமதாசா| ("Pசநஅயனயளய ளை ய பழ பநவவநச") என அவருக்கு பெருமாள் புகழாரம் சூட்டினார். தனது நன்றிக்கடனை நிறைவேற்ற வடகிழக்கு மாகாண சபைக்கு பிரேமதாசா வாரி வழங்கிடுவார் என கனவு கண்டார் பெருமாள். அந்த உற்சாகத்தில் தமிழர் தலைநகர் திருமலையில் சிங்கக் கொடியை ஏற்றி அவர் ~சாதனை| படைத்தார். ஆனால் நடந்ததென்ன? தனது மாகாண சபைக்கு கொடுக்கப்பட்ட எள்ளளவு அதிகாரங்களைக் கூட பிரேமதாசாவின் ஆட்சி கபளீகரம் செய்துவிட்டதென அவர் புலம்பியதும் இனித் தமிழீழம் அமைப்பதைவிட வேறு வழியில்லை என்று பிரகடனம் செய்து இந்தியாவிற்கு ஓடியதும் நாம் யாவரும் அறிந்த வரலாறு. ~ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி| கடந்த பின்னே நீ யாரோ, நான் யாரோ?| என்ற கதையை சிங்கள தேசம் அன்று மீண்டுமொருமுறை அரங்கேற்றியது.

அந்தப் பிரேமதாசா சூத்திரத்தை மீண்டும் தூசுதட்டி கையிலெடுக்க வேண்டிய கட்டாயம் இன்று ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கும் தோன்றியுள்ளது. அது எப்படியென்று பார்ப்போம். ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல வேண்டுமானால் இலங்கையின் மொத்த வாக்குகளில் 50சதவீதத்துக்கு மேலான தொகையை ஒரு வேட்பாளர் பெறவேண்டும். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பார்த்தால் வெற்றி வாய்ப்பு யாருக்கென்பதை நாம் கணக்கிட்டுப் பார்க்கலாம்.

இந்தத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி - ஜே.வி.பி. கூட்டு பெற்ற மொத்த வாக்கு 4,223,970 அதாவது 45.60 சதவீதம். ஐக்கிய தேசியக் கட்சி 3,504,200 அதாவது 37.83 சதவீதம். ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கா வெல்வதென்றால் மேலும் 12.17 சதவீத வாக்குகளைப் பெறவேண்டும். விலைவாசி ஏற்றத்தால் சந்திரிகா அரசு மீது ஏற்பட்டுள்ள வெறுப்பின் காரணமாக சராசரி 5-6 சதவீதமான வாக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் தற்போது சாய்ந்துள்ளது எனக் கொண்டாலும் இன்னும் 6-7 சதவீத வாக்குகளை தேட வேண்டிய கட்டாயம் ரணில் விக்கிரமசிங்கவிற்கு உண்டு. 2004 ஏப்ரல் தேர்தலில் தமிழரசுக்கட்சி பெற்ற மொத்த வாக்கு 633,654 அதாவது 6.84 சதவீதம்.

இது பிரிபடாத மொத்த வாக்காக இருக்கிறது. இதைக் கபளீகரம் செய்யாமல் ஜனாதிபதித் தேர்தலில் வெல்வது கடினம் என ஐக்கிய தேசியக்கட்சி கவலை கொள்கிறது. ஆகவே அது புலிகளை வசப்படுத்தும் நோக்கத்தில் பல வேலைகளைச் செய்யவும் ஆசைவார்த்தை பேசவும் இப்போதே தொடங்கிவிட்டது. ஏதோ ஒருவகையில் புலிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டால் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பின் வாக்கு தனக்கே கிடைக்குமென சிறிலங்கா சுதந்திரக்கட்சி கணக்குப் பண்ணுகிறது. இவையெல்லாம் இறுதியில் ஆற்றைக்கடந்த கதையாகத்தான் இருக்குமென்பதில் யாரும் எந்தச் சந்தேகமும் கொள்ளத்தேவையில்லை.

http://www.tamilnation.org/forum/sivaram/041031.htm

Print this item

  என்னை மறப்பதை மறந்து விடு....
Posted by: kpriyan - 11-20-2005, 12:59 PM - Forum: கவிதை/பாடல் - Replies (1)

[b]
என்னன ஞாபகிக்க ஞாபகித்துக்கொள்
ஒருவேளை.. நீ
என்னை மறக்க -ஞாபகிக்கையில் கூட
நான் உன்னை ஞாபகிக்க மறக்கமாட்டேன்

Print this item

  தமிழ் பெண்கள் கையில் ஆயுதமும் பேனாவும்
Posted by: narathar - 11-20-2005, 12:48 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (6)

நமது சமூகத்தில் நடக்கின்ற ஒடுக்குமுறைகளுக்கு எதிரான சமூகப் போராட்டங்கள் ஒவ்வொன்றிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பெண்கள் பங்கு வகிக்கிறார்கள். பரப்புரைகளில் அகிம்சை வழிப்போராட்டங்களில், வன்முறை வழிப் போராட்டங்களில் என எல்லா முறைகளிலும் அனைத்துத் தளங்களிலும் (வீடு, தோட்டம், தொழிற்சாலை, அலுவலகம், தெரு போர்முனையில்....) பெண்களின் பங்களிப்பு பிரசன்னப்படுகிறது.

இப்போராட்டங்கள், நிலைகளில் பெண்ணுரிமைக்கான சீர்திருத்தக் கோரிக்கைகள், கோசங்கள் முன்வைக்கப்படுகின்றன. சில நிறைவேற்றப்படுகின்றன. ஆனால் பெண், ஆணுக்கு எல்லா நிலைகளிலும், தளங்களிலும் சமமானவள் என்றளவில் அவள் விடுதலை அடையும் சுதந்திரத்தை முழுமையாக உழைப்பிலும் அறிவிலும் அனுபவிக்கும் சமூக வாய்ப்புகள் இன்னும் உருவாகவில்லை.

மேற்கண்ட சமூக ஒடுக்கு முறைகளுக்கும் நிறுவன அதிகாரங்களுக்கும் எதிராக சமத்துவம் வேண்டிப் போராடும் ஆண்கள் கூட, பெண்களின் முழுநிலையிலான சமத்துவக் கோரிக்கைகளை உள்வாங்க முடியாதிருக்கின்றனர். பெண்ணிலைவாதியான ஆண்களாக தம்மை வெளிப்படுத்துவதில் அச்சப்படுகிறார்கள். அந்தளவுக்குப் பெண்கள் மீதான உழைப்புச் சுரண்டல், அதிகாரம், ஆதிக்கம் என்பவற்றை தங்களின் எதார்த்த வாழ்வில் அனுபவிக்கின்றனர். ஆண்கள் தங்களின் குடும்ப, சமூக வளர்ச்சிக்கும் நலன்களுக்கும் இணையான பெண் உரிமைச் சீர்திருத்தங்களை, சமூகப் போராட்டங்களில் வாழ்வியல் அதர்மக் கோட்பாடுகளில் இடைச் செருகுவதற்கு அப்பால், முழுமையான பால்நிலைச் சமத்துவம் நோக்கி நகர முடியாது. சமூகப் போராட்டங்களிலேயே சீர்திருத்தவாதக் கோட்பாடுகளை, கருத்தியல்களைத் தாண்ட முடியாமல் தத்தளிக்கும் ஆண்களிடம் அவர்கள் பால் நிலைச் சமத்துவத்தை பற்றிச் சிந்திக்கவில்லை. பெண்களின் சீர்திருத்த உரிமைகளுக்கும் அப்பால் விடுதலை சமத்துவம் நோக்கி அழைத்துச் செல்லவில்லை எனக் குற்றம் சுமத்த முடியாது.

அடக்கப்பட்ட மக்களின், ஆண்களின் நலன் சார்ந்து வரலாறு பூராக போராடிப் போராடி, பால்நிலைச் சமத்துவத்தைக் காணாத பெண் விடுதலை பெறாத பெண்ணினம், தற்காலத்தில் தன்னிலை உணர்ந்து விட்டது முதல் பெண்ணிலைவாதம் வரை ஆரம்பித்துவிட்டது.

பால்நிலைச் சமத்துவக் கோட்பாடுகளில் ஆழமான பார்வைகளை வெளிப்படுத்தி வருகின்றன. வாழ்நிலைச் சமத்துவக் கோட்பாடுகளுக்கும் பால்நிலைச் சமத்துவக் கோட்பாடுகளுக்கும் இடையில் இருந்துவரும் முரண்பட்ட கருத்தியல்களை, கண்ணோட்டங்களை மேட்டுக்குடிப் பார்வைமுறைகள் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. வாழ்வியல் சமத்துவக் கோட்பாடுகளுக்குள் ஒரு முரணற்ற அறிவியல் பார்வை வளர்க்கப்படுகிறது.

இந்நூலின் முற்பக்க அட்டையில் போடப்பட்டுள்ள காலடிச் சுவடுகளைப்போல், அறிவுநிலை வளர்ச்சியும் அனுபவ முதிர்ச்சியும் பெற்ற பெண்ணிலைவாதிகள் ஆணாதிக்க கருத்தியலுக்கும் நடைமுறைக்கும் எதிராக ஒரு இடையறாத பால்நிலைச் சமத்துவம் கோரும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இதன் ஒரு நிலை வெளிப்பாடுதான் இந்நூல் வெளியீடும் நிகழ்ச்சியுமாகும் என நம்புகிறேன்.

நிறுவன மயப்படுத்தப்பட்ட வன்முறைக்கு எதிராக ஒருகையில் ஆயுதங்களையும் நிறுவன மயப்படுத்தப்பட்ட ஆண் ஆதிக்க ஒடுக்குமுறைக் கருத்தியலுக்கு எதிராக மறுகையில் பேனாவையும் தாங்கி, பால்நிலைச் சமத்துவம் வேண்டி உலகப் பெண்கள், தமிழ்ப் பெண்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இதுதானே நிதர்சனம்!

இந்நூலின் முதல் ஆய்வுக் கட்டுரையானது,

"ஆண்,பெண் என்னும் பால் அடிப்படையில் எழுந்த தொழிற்பாகுபாடு உயிரியல் இலக்கண ரீதியானதா அல்லது பண்பாட்டின் அடிப்படையிலானதா?"

சமூகவியல் நோக்கிலான இவ்விமர்சன ஆய்வை செய்திருப்பவர். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உதவி விரிவுரையாளரான செல்வி உதயகலா அய்யாத்துரை என்பவர்.

இக்கட்டுரை மையப்படுத்தியுள்ள ஐந்து(5) அம்சங்களைக் குறிப்பிட்டார்.

இன, மத, மொழி, நாட்டு,தேச எல்லைகளுக்கு வெளியே பெண்-ஆண் உடல்ரீதியில் உயிரியல் அமைவில் பால்ரீதியில் ஒரே மாதிரி உள்ளனர். பண்பாடுகளின் அடிப்படையில்தான் வேறுபடுகின்றனர்.

பால் அடிப்படையில் அமைந்த தொழிற்பாகுபாடு(Sexual Division of Labour) இரண்டு நிலைகளில் செயற்படுகிறது.

1. உடற்கூறு அடிப்படையில் தொழிற்பாகுபாடு.

2. பண்பாட்டு அடிப்படையில் தொழிற்பாகுபாடு.

பொருளாதார ரீதியில் உற்பத்தித் திறன்மிக்க உழைப்பும், வெளி உழைப்பில் ஆணின் பங்கும் இதில், பணப்பெறுமதியுள்ள உழைப்பு, மூளை உழைப்பு, உடல் உழைப்பு என பிரித்தறியப்படுகிறது.

குடும்பத்தைப் பற்றிய ஆய்வாளர்கள், உளவியல் குறித்த ஆய்வாளர்கள், மானிடவியலாளர்கள், சமூகவியலாளர்களின் கண்ணோட்டங்கள், தர்க்கங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

உலகளவில் 224 சமூகங்களை ஆய்வுக்குட்படுத்திய ஜோர்ஜ் பீற்றர் மேடக் (George peter murdock) இன் தொழிற்பாகுபாட்டிற்கு உயிரியல் வேறுபாடு காரணம் என்ற விளக்கமும், அதே சமூக ஆய்வைக் கொண்டு பிரித்தானிய சமூகவியலாளரான ஆன் ஒக்லி(Ann Oakely) தொழிற்பாகுபாட்டிற்குப் பண்பாட்டு வேறுபாடே பிரதான காரணம் என்ற பார்வையையும் குறிப்பிடத்தக்கவை.

எர்னஸ்ரைன் பிறேடில் (Ernestine Friedl), செறிபி.ஓட்னர் Sherry B.Ortner இயற்கையான தொழிற்பிரிவு சிந்தனைகளும், தொழிற்பாகுபாட்டிற்கும், ஆணாதிக்கத்துக்குமான உறவுகளை விளக்கும் தரவுகளும் உள்ளன.

தொழில்களிலே மிகவும் கடினமான, நுணுக்கமான சிறிது அலட்சியம் கூட அகால மரணத்தை ஏற்படுத்தி விடக்கூடிய யுத்தத் தொழிலில், பெண்களின் சமகால பங்களிப்பைக் காட்டி, தொழிற்பாகுபாட்டிற்குக் காரணம் உடல் ரீதியான வேறுபாடா? பண்பாட்டு வேறுபாடா? என்பதை ஆய்வாளர் நூலின் வாசகர் கைகளில் ஒப்படைத்துள்ளார்.

நூலின் இரண்டாவது ஆய்வுக்கட்டுரை " பால்நிலை அடுக்கமைவு" ஒரு மானிடவியல் நோக்கு என்ற தலைப்பிடப்பட்டுள்ளது. பகீரதி ஜீவேஸ்வராவின் இக்கட்டுரையின் குறிப்பான ஐந்து (5) அம்சங்களைக் கவனித்தால்:

நூலின் மூன்றாவது ஆய்வுக் கட்டுரை, "பண்பாடு, குடும்பம், பெண்ணிலைவாத முரண்பாடுகள்" ஜானகி சங்கரப்பிள்ளையின் இக்கட்டுரையின் முக்கிய அம்சங்களைப் பார்க்கையில்,

சமயம், சட்டம், அரசியல், பொருளாதாரம், ஊடகம் இவற்றின் மரபு மற்றும் நவீனக் கருத்தமைவுகளில் ஆணாதிக்கத்தைக் கோடிட்டு காட்டுகிறது. பண்பாட்டின் பங்கு உச்சநிலையடைந்துள்ளதை வெளிப்படுத்துகிறது.

மேற்கத்திய, கிழக்கத்திய பெண்களின் பொதுப் பிரச்சினைகள், தனித்துவமான பிரச்சினைகள். மேற்கத்திய, கிழக்கத்திய குடும்பங்களின் நிலை, குடும்ப நிறுவனத்தின் பலம்-பலவீனம் பேசப்படுகிறது. பெண்ணிலை வாதத்துக்கு எதிரான தடைகளும் சுட்டப்படுகிறது.

கீழைத்தேச குடும்ப அமைப்பு, மூன்றாம் உலக நாடுகளில் குறிப்பாக, கிராமப் புறம், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெண்களின் பொருளாதார நிலை, சமூகநிலை, பாலியல் நிலை குறித்து விரிவாகத் தொகுத்துக் காட்டப்படுகிறது.

கல்விகற்ற, வேலை செய்யும் பெண்களின் வேலை நேரங்கள், உழைப்பு முறைகள், பட்டியலிடப்பட்ட முறையில் காட்டப்படுகிறது. கலாசாரம் - பண்பாடு என்ற பெயரில் குடும்ப நலன் என்பதூடாகவும் ஆண்களின் நலனே மீண்டும் மீண்டும் பேணிப் பாதுகாக்கப்படுவதை குடும்ப நிறுவனச் செயற்பாடு ஊடாக வெளிப்படுகிறது. கல்வி கற்ற பெண் வேலைக்குச் செல்லும், பணம் சம்பாதிக்கும் பெண்களின் பிரச்சினைகளை கேள்விக்குள்ளாகியுள்ளது.

தீவிர பெண்ணிலைவாதம், சோசலிச பெண்ணிலை வாதம் பற்றிய சிறு குறிப்பும், இருபால் - எதிர்பால் உறவுக்குப் பதிலான ஓரினச்சேர்க்கையை நிராகரிக்கப்படுகிறது. பால்நிலை விழிப்பு, பால்நிலை சமத்துவம் ஏற்பட ஒன்பது வழிமுறைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

http://www.thinakural.com/New%20web%20site...0/Article-9.htm

Print this item