| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 211 online users. » 0 Member(s) | 208 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,316
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,641
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,069
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,497
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,038
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| தூயாவின் ஏடு தொடக்கல்... |
|
Posted by: தூயா - 11-22-2005, 11:20 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (55)
|
 |
இப்ப தான் ஏடு தொடங்குறேன்...பிழைகளை மன்னித்து பொருத்தருளவும். நன்றி
இனிப்பும் கசப்புமாய் என் காதல்
காதலுக்கு பல எதிரிகள்
இங்குண்டு மற்றவர்களுக்கு?
ஏனோ எனக்கு என்
காதலே எதிரியாய் போனதேன்?
அன்பாய் தான் இருக்கிறான்
அழகாய் தான் எனை ரசிக்கிறான்
நிறைவாய் தான் தருகிறான்
நிறைமதியாய் எனை தாங்குறான்
இருந்தும் எனக்கேனோ
நிம்மதியாய் ஒருநாளும்
உறங்கமுடியவில்லை..
என்னவனின் அன்பு
முகம் இதுவெனில்
அவன் அடுத்த முகம்...
நண்பர்கள் உனக்கெதுக்கு
வேண்டாம் என விட்டுவிட்டேன்
நானிருக்க சுற்றம் ஏன்
அதை கூட விட்டு விட்டேன்
படிப்பெதற்கு, வேலை எதற்கு
நான் உன்னை பார்த்துக்கொள்வேன்
அவன் மேல் உள்ள அன்பில்
அத்தனையும் துறந்துவிட்டேன்
கடைசியில் வந்தது எனை பெற்றவர்கள்
நானா? அவர்களா?
என்னால் எப்படி பதில் சொல்ல முடியும்?
எப்படி தான் சுவாசிக்க முடியும்?
கல்லானானுல் கணவன்
புல்லானாலும் புருஸன்
என வாழவா??
அல்ல
என்க்கென ஒரு மனம்
இருக்கென நான் முதலில்
உணர்ந்து
வேறு பாதை செல்லவா?
இனிக்கும் காதல்
எனக்கு மட்டும்
இனிப்பையும், கசப்பையும் தந்ததேன்?!!!!!!
|
|
|
| பிணவாடை வீசும் அபூர்வ மலர் |
|
Posted by: Vaanampaadi - 11-22-2005, 10:18 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (6)
|
 |
<img src='http://www.maalaimalar.com/images/news/Article/22-11-2005/22flower.jpg' border='0' alt='user posted image'>
<b>பிணவாடை வீசும் அபூர்வ மலர்</b>
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் தாவர இயல் பூங்காவில் உள்ள ஒரு அபூர்வ செடி திடீர் என்று பூத்தது. `டைட்டான் ஆரம்' என்ற இந்த பூ தான் மிக உயரமான மலர். பார்க்க அழகாக இருக்கும். இந்த மலரில் நறுமணம் வீசாது. பிண வாடைதான் வீசும். 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே மலரும் இந்த மலர் இரண்டே நாளில் வாடிவிடும். மூக்கை பிடித்துக்கொண்டு இதை ஏராளமானவர்கள் அதிசயமாக பார்க்கும் காட்சி.
மாலைமலர்
|
|
|
| மூன்று இளைஞருக்கு மேலதிக நீதிவான் புதுவித தண்டனை |
|
Posted by: Vaanampaadi - 11-22-2005, 10:13 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<b>வீதி ஒழுங்கை மீறிய மூன்று இளைஞருக்கு
மேலதிக நீதிவான் புதுவித தண்டனை</b>
வீதியால் சைக்கிளில் சமாந்தரமா கச் சென்றமை, மோட்டார் சைக்கிளில் சமாந்தரமாகச் சென்றமை, ஹெல்மட் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்தி யமை ஆகிய குற்றங்களுக்காக இளை ஞர்கள் மூவருக்கு யாழ்.நீதிமன்ற மேல திக நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேக ரன் நேற்று புதுவிதமான தண்டனையை வழங்கினார்.
மேற்படி குற்றங்களுக்காக இளை ஞர்கள் மூவரை யாழ். பொலீஸார் நேற்று நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.
இவர்களுக்கு மேலதிக நீதிவான் வித்தியாசமான தண்டனை ஒன்றை விதித்தார்.
"சைக்களில் சமாந்தரமாகச் சென்ற இளைஞரை சைக்கிளில் சமாந்தரமாகச் செல்லாதீர்கள்' எனவும்
மோட்டார் சைக்கிளில் சமாந்தரமா கச் சென்ற இளைஞரை "மோட்டார் சைக்கிளில் சமாந்தரமாகச் செல்லாதீர் கள்' எனவும்
"ஹெல்மட்' இன்றி மோட்டார் சைக் கிள் செலுத்தியவரை "ஹெல்மட்' அணி யாமால் மோட்டார் சைக்கிள் செலுத்–தாதீர் எனவும்
அட்டைகளில் எழுதி அவற்றை கழுத்தில் மாட்டிக்கொண்டு நீதிமன்ற வாயிலின் முன்பாக நிற்குமாறு நீதி வான் பணித்தார்.
இதனையடுத்து இளைஞர்கள் மூவ ரும் அந்த வாசகங்களை அட்டை களில் எழுதி கழுத்தில் மாட்டிக்கொண்டு நீதிமன்ற வாயிலின் முன்னால் நின்ற தைக் காணக்கூடியதாக இருந்தது.
இதேவேளை
ஹெல்மட் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்தியதாகத் தெரிவித்து நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்ட மேலும் சிலர் ஆயிரம் தடவைகள் "ஹெல் மட்' இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்த மாட்டேன்' என எழுதிக் கொடுத்த பின் னர் விடுவிக்கப்பட் டனர்.
Uthayan
|
|
|
| மாவீரர் வாரம் |
|
Posted by: inizhaytham - 11-22-2005, 07:14 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (13)
|
 |
இது வெறுமனே
ஒரு வாரத்தின் ஆரம்பமன்று
புது விடியலுக்கான
ஒரு யுகத்தின் அறிகுறி
விண்ணதிரப் பகை முட்டி
விதையாகி வீழ்ந்த எம்
வீரர்களின் விழாக் காலம்.
களம் சென்று சமராடி
காவியமான எம் காவலரின் திருவிழாக் காலம்.
கருவறுக்க வந்த பகை தனை
கதி கலங்க வைத்துக்
கந்தகப் புகையுடன் கலந்து
காப்பரண்களாகிய எம்
கார்த்திகைத் தீபங்களின் ஒளிவிழாக் காலம்
கண்ணீர்த் துளியெடுத்து நெய்யாக்கி
காந்தள் மலரெடுத்துச் சரமாக்கி
கைதொழுவோம், இது அவர்களின்
பெருவிழாக் காலம்.
|
|
|
| அவுஸ்ரேலியா |
|
Posted by: Aravinthan - 11-22-2005, 06:48 AM - Forum: நிகழ்வுகள்
- Replies (37)
|
 |
அவுஸ்ரேலியாவிலும் நியுசிலாந்துவிலும் தீபம் தொலைக்காட்சி பார்க்கலாம். சிகரம் தொலைக்காட்சி உள்ளவர்கள் இலவசமாக தீபம் பார்க்கலாம்.
|
|
|
| தடுமாறும் தமிழோசை?! |
|
Posted by: adithadi - 11-21-2005, 09:40 PM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- No Replies
|
 |
"தமிழோசையில் சொல்வது நடுநிலையானது என்பதும் நம்பகத் தன்மையானது என்பதும் இறந்தகாலமாகிப்போனதை நாம் நன்கு அவதானித்து வருகிறோம்."
அநேகம்மா எல்லோரிடமும் மனதை குடைந்து கொண்டிருக்கும் கேள்வி? தமிழோசை நடுநிலமையில் இருந்து துரோகிகள் பக்கம் சாய்கிறது. இவற்றை நாம் எல்லோரும் BBCயிடம் முறை வேண்டும்.
|
|
|
| தொழிலதிபர் |
|
Posted by: sathiri - 11-21-2005, 09:32 PM - Forum: நகைச்சுவை
- Replies (32)
|
 |
யாள் கள உறுப்பினர்களிலுடன் இது வரை காலமும் கருத்தாடியதில் பலர் பல தொழிலதிபர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது அவர்களது தெழில் மற்றும் கல்வி தகைமை பற்றிய விளம்பர பலகை எப்படி இருக்கும் எண்று ஒரு கற்பனை (கற்பனை தானுங்கோ அடிக்க வர கூடாது)
<span style='font-size:25pt;line-height:100%'>சின்னப்பு </span>
காலியான வெறும் போத்தல் வியாபாரிஇங்கு வெறும் போத்தல்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்று கொள்ளலாம்.உடைந்த போத்தல்களிற்கு தள்ளுபடி உண்டு
இப்படிக்கு நடமாடும் பல்கலை கழகம் S.S.S.S.S(தள்ளாடி)இது படித்து வாங்கினபட்டம் அல்ல அவரது இரசிகர்களால் கொடுக்கபட்டது
டண்
பிரபல நாய் வியாபாரி
இங்கு நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பல ரக நாய்களும் விற்பனைக்கு உண்டு.சொறி குட்டை பிடித்த மற்றும் சொத்தி நாய்களிற்கு விசேட கழிவு உண்டு மேலதிக தகவல்களிற்கு நாயை பிடி இணைய தளம்
யாழ் பல்கலை கழகம் மிருக வைத்தியர்M.B.B.S
<span style='font-size:25pt;line-height:100%'>சுண்டல்</span>
<span style='color:red'><span style='font-size:19pt;line-height:100%'>பழைய பேப்பர் வியாபாரி</span>இங்கு பழைய பத்திரிகைகள் பெற்று கொள்ளலாம் இணைய தளங்களிற்கு சுட்டு போடும் கிழிந்த பேப்பர்கள் இலவசமாக தரப்படும்
யாழ் பல்கலை கழகம் கலை மற்றும் செய்தி பிரிவு B.A
<span style='font-size:25pt;line-height:100%'>முகத்தார் </span>
குறிப்பு பார்ப்பவர்கலியாண பொருத்த குறிப்பு மற்றும் சமையல் குறிப்புகளிற்கு நாடவும்.முக்கியமாக திருமணமாக போகும் ஆண்களிற்கு பயனுற்ற ஆலோசனை வழங்கபடும்
ஒக்ஸ்போட் (பல்கலை கழகம் அல்ல இவர் ஊரில் ஓடி திரிந்த காரின் பெயர்)
<span style='font-size:25pt;line-height:100%'>குளை காட்டான்</span>
பிரபல புகை படப்பிடிப்பாளர்
உங்கள திருமண வைபவங்கள் மற்றும் மங்கல நிகழ்வுகளில் வளர்க்கபடும் ஓம புகை மற்றும் சமையல் புகை என்பவற்றை படம் பிடிக்கவும் மற்றும் நீங்கள் விடும் சிகரற் சுருட்டு புகை களையும் கச்சிதமாக படம் பிடித்து பிறேம் போட்டு தரப்படும்
யாழ் பல்கலை கழகம் கலைப்பிரிவு M.A
<span style='font-size:25pt;line-height:100%'>குருவி</span>(ஒரு கல்லுரியின் முன்பு ஒரு துண்டை விரித்து விட்டு அருகில் விளம்பர பலகையுடன் )
இங்கு காதலிக்கும் ஆண்களிற்கு காதல் கடிதமும் ஆலோசனைகளும் மற்றும் காதலிக்கும் போது உடலில் ஏற்படும் இரசாயன மாற்றம் பற்றிய விஞ்ஞான விழக்கமும் வழங்கபடும்
இலண்டன் ஒக்ஸ்போட் பல்கலை கழகம் B.A
இதுவரை ஆறுபேரின் விபரங்கள் தான் கிடைத்தது மிகுதி தொடரும்[size=18]</span>
|
|
|
| Youth shot in Jaffna |
|
Posted by: வினித் - 11-21-2005, 07:50 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- Replies (2)
|
 |
Youth shot in Jaffna
[TamilNet, November 21, 2005 17:30 GMT]
Mr. Kandasamy Thavakumar, 34, employed in Cholan Vanipam, a Kilnochchi based business network, was shot allegedly by a Sri Lankan Intelligence operative from a hidden location in Thirunelvely, 4 km east of Jaffna town Monday at 5:30 p.m., according to civilian sources. However, Police Officer-In-Charge in Kopay, Mr. Sri Selvam said the youth was wounded when a gun belonging to a policeman riding in a Jeep accidentally went off.
Mr. Thavakumar was wounded by gunshots from a T-56 type of rifle. The incident took place on Adiyapatham veethy when he was seated in a van unloading rice to a shop, sources added.
Thavakumar, who sustained wounds in his chest and face, was rushed to Jaffna Hospital.
Ten days ago, on November 11, a policeman was shot at Thirunelveli Market by unidentified gunmen.
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16384
|
|
|
|