Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 552 online users.
» 0 Member(s) | 550 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,311
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,606
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,638
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,063
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,486
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,037
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  ஆசிய நாடுகளில் பேச்சு என்பது ஒரு சதி முயற்சி:புலிகள் அறிவிப்
Posted by: Vaanampaadi - 12-17-2005, 10:33 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

ஆசிய நாடுகளில் பேச்சு என்பது ஒரு சதி முயற்சி: - நோர்வே நாட்டில் முதல் கட்டப் பேச்சுகளைத் தொடங்கலாம் என்று விடுதலைப் புலிகள் அறிவிப்பு!!

சனிக்கிழமை 17 டிசெம்பர் 2005 ஜோசெப்

இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண ஆசிய நாடுகளில் பேச்சு நடத்தலாம் என்ற சிறிலங்கா அரசாங்கத்தின் யோசனையை தமிழீழ விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளனர். கிளிநொச்சியில் இன்று ஊடகவியலாளர்களிடம் சு.ப. தமிழ்ச்செல்வன் பேசியதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டில் எதுவித மாற்றமும் இல்லை. எங்களுடைய தலைமைப்பீடத்தின் நிலைப்பாடு பற்றி நாங்கள் ஏற்கனவே நோர்வே அனுசரணையாளர் ஊடாகத் தெரிவித்திருக்கிறோம். நாங்கள் பேச்சுக்கு ஒருபோதும் தடையாக இருக்கப் போவதில்லை. அனைத்துக்கும் அடிப்படையாக உள்ள யுத்த நிறுத்த ஒப்பந்தம் சீர்குலைந்து போகும் நிலையில் உள்ளது. ஆகவே யுத்த நிறுத்த உடன்பாட்டை அமலாக்குவதற்கான பேச்சுகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்பதில் நாம் உறுதியான நிலைப்பாடு கொண்டுள்ளோம். இந்தப் பேச்சுகள் ஐரோப்பிய நாடு ஒன்றில் குறிப்பாக அனுசரணையாளராக உள்ள நோர்வே நாட்டில் முதல் கட்டப் பேச்சுகளைத் தொடங்கலாம் என்பது எங்களுடைய கடந்த கால நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆசிய நாடுகள் ஒன்றில்தான் பேச்சுகள் நடைபெற வேண்டும் என்றும் விடுதலைப் புலிகளை ஐரோப்பிய நாடுகள் தடை செய்ய வேண்டும் என்றும் கடுமையான நிலையை மேற்கொள்ள வேண்டும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் கூறி வருவது ஒரு சதி முயற்சிதான். அனுசரணையாளராக நோர்வேயும் கண்காணிப்புக் குழுவில் நோர்டிக் நாடுகளும் அங்கத்துவர்களாக இருக்கின்றனர். ஐரோப்பிய நாடுகளின் ஈடுபாட்டோடும் பங்களிப்போடும்தான் இந்த சமாதான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் ஐரோப்பிய நாடுகளைப் புறந்தள்ளிவிட்டு ஆசிய நாடுகளில் பேச்சுகள் நடாத்த வேண்டும் என்றும் கண்காணிப்பாளர்களாக அனுசரணையாளர்களாக ஐரோப்பிய நாடுகள் பங்கேற்க வேண்டும் என்ற குழப்பான நிலைப்பாட்டை நாம் ஏற்க முடியாது.

நாம் நோர்வே அனுசரணையாளர்களுடன்தான் பேச்சுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். யுத்த நிறுத்த உடன்பாட்டை அமுல்படுத்துவது தொடர்பாக இரு தரப்பு உயர்நிலைக் குழுக்கள் உடனடியாகச் சந்தித்து பேச்சுகள் நடத்த வேண்டும். செயலிழந்து போகிற சீர்குலைந்து போகிற இந்த யுத்த நிறுத்த உடன்பாட்டை வலுப்படுத்துகிற பேச்சுகள் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும்.

பேச்சுவார்த்தை மட்டுமல்ல... ஆக்கப்ப+ர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முழு அளவில் நம்பிக்கை இழந்து போயிருக்கிற மக்களுக்கு ஓரளவேனும் நம்பிக்கை ஏற்படுத்துகிற வகையில் செயற்பாடுகளில் உடனடியாக இறங்குவதன் மூலம்தான் இன்றைய நிலையை ஓரளவேனும் சீர்செய்ய முடியும்.

இந்த அடிப்படையில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பேச்சுகள் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக நோர்வே நாட்டில் முதல் கட்டப் பேச்சுகளைத் தொடங்க வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளோம்.

ஏற்கனவே எங்களுடைய நிலைப்பாட்டை நாம் தெளிவுபடுத்தி இருக்கிறோம். இந்த நிலையில் இப்படியான அறிவிப்புகளை சிறிலங்கா அரசாங்கம் விடுத்துக் கொண்டிருப்பது இதயசுத்தியோடுதான் அவர்கள் அறிவிப்புகளை வெளியிடுகிறார்களா என்ற கேள்வி எழுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திடம் தடை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிவருவதாக செய்திகள் கசிந்து உள்ளன. எனவே சிறிலங்கா அரசாங்கத்தின் ஆசிய நாடுகளில் பேச்சுவார்த்தை என்பது ஒரு சதி முயற்சி. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எங்களது மக்கள் கணிசமான அளவில் ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சர்வதேச சமூகத்துக்கும் எமக்குமான உறவைத் துண்டித்து எம்மைத் தனிமைப்படுத்துகிற ஒரு சதி முயற்சிதான் சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு.

பேச்சுவார்த்தையில் உண்மையான, இதயப்ப+ர்வமான அக்கறை இருந்தால் இப்படியான நிலைப்பாட்டை இவர்கள் அறிவிக்க வேண்டிய தேவையில்லை. ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் இந்தப் பேச்சுகள் நடைபெற்று இருக்கிற நிலையில் ஆசிய நாடுகளில் பேச்சு என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்திருப்பது பேச்சுவார்த்தைகளை இழுத்தடிக்கிற சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்கிற தந்திரோபாயமோ என்ற கேள்வி எமக்கு எழுகிறது.

ஜப்பானிய தூதர் யசூகி அகாசியை கிளிநொச்சிக்கு வரவிடமால் சிறிலங்கா அரசாங்கம் தடுத்தமை ஒரு பாரதூரமான விளைவை ஏற்படுத்தும் என்று நினைக்கிறோம்.

சர்வதேச சமூக ராஜதந்திரிகளை, பிரதிநிதிகளை எமது தாயகப் பிரதேசத்துக்கு வருவதைத் தடை செய்வது என்பது கடந்த காலங்களைத்தான் நினைவ+ட்டுகிறது. எமது தாயகப் பிரதேசத்தின் உண்மை நிலைகளை, நெருக்கடிகளை சர்வதேச சமூகம் அறிய விடாமல் தடுத்து இங்கே ஒரு பாரிய இன அழிப்புப் போரை முன்னெடுக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இப்படியான சிறிலங்கா அரசாங்கத்தின் சதிகளுக்கு அவர்கள் பலியாகி விடக் கூடாது என்பது தமிழ் மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது என்றார் சு.ப. தமிழ்ச்செல்வன்.

Nitharsanam.com

Print this item

  ஹெலிகொப்டர் தாக்குதலுக்கு புலிகள்தான் பொறுப்பு
Posted by: Vaanampaadi - 12-17-2005, 10:22 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - Replies (2)

ஹெலிகொப்டர் தாக்குதலுக்கு புலிகள்தான் பொறுப்பு என கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.....
சென்ற புதன்கிழமை நடத்தப்பட்ட ஹெலிகொப்டர் மீதான தாக்குதல் புலிகளின் கட்டுப்பாட்டுபகுதியில் இருந்தே நடத்தப்பட்டுள்ளது ...... ஆகவே அவர்கள்தான் இச்சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்கவேண்டும் என்றும் இது ஒரு பாரிய யுத்தநிறுத்த மீறல் என்றும் தெரிவித்துள்ளார்கள்....... புலிகளிடமிருந்து உடனடி பதில் இல்லை....

<b>Sri Lanka monitors blame Tigers for helicopter attack </b>

2 hours, 12 minutes ago



COLOMBO (AFP) - Scandinavian ceasefire monitors in Sri Lanka are blaming Tamil Tigers for shooting at an unarmed military helicopter earlier this week and said the attack seriously undermined the fragile truce.


The Norwegian-led Sri Lanka Monitoring Mission (SLMM) called Wednesday's shooting of a Mi-17 transport helicopter flying over the east of the island a "gross violation" of a ceasefire that went into force in February 2002.

The aircraft was en route to pick up 21 passengers, including Italy's deputy minister of foreign affairs, the SLMM said in a statement.

"The SLMM concludes as the small arms fire against the helicopter originated from an area controlled by the LTTE (Liberation Tigers of Tamil Eelam), the LTTE must bear the responsibility for the incident," it said.

"The incident clearly comes under the ceasefire agreement in which the parties are stated responsible for all military activity in the areas under their control, including avoidance of hostile acts."

The monitors appealed to the LTTE "to do all in its power to avoid similar incidents in the future, as such activity can lead to serious consequences jeopardising the ceasefire."

The Mi-17 transport helicopter took four hits from small arms fire in the Arugam Bay area and made an emergency landing at Ampara airfield but there were no casualties, military officials said.

There was no immediate reaction from the Tamil Tigers.

The latest SLMM ruling, which carries no punitive action, came after the Colombo government formally invited the Tigers to resume peace talks, saying it was "amenable" to a key guerrilla demand to hold negotiations abroad.

Government spokesman Nimal Siripala de Silva said Colombo no longer insisted that any future negotiations be conducted within the island.

Direct talks between Colombo and the LTTE have been on hold since April 2003 despite repeated diplomatic efforts to revive the negotiations.

Both sides have sought fresh talks on their shaky truce since August but disagreed over the venue.

An upsurge in violence linked to the island's ethnic conflict that claimed the lives of at least 35 people in the space of a week recently has raised doubts over the truce.

Truce monitors have said that over 200 people were killed in clashes this year. But both the LTTE and the government have committed themselves to upholding the ceasefire.

De Silva said the government felt it was important to have urgent talks with the LTTE either on the truce or even on the broader issue of a peace deal to end three decades of ethnic bloodshed that has claimed over 60,000 lives.

The air force said this month its aircraft were ready to go into action against the Tamil Tigers if the truce broke down.

http://news.yahoo.com/s/afp/20051217/wl_as...HNlYwMlJVRPUCUl

http://www.channelnewsasia.com/stories/afp.../184127/1/.html

http://www.ynetnews.com/articles/0,7340,L-...3185659,00.html

Print this item

  புலத்தில் ஒரு தமிழ் பெண்!
Posted by: Rasikai - 12-17-2005, 05:46 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (9)

இந்த கட்டுரை ஆங்கிலத்தில் உள்ளதால் நான் இங்கு அதன் லிங்கை போடுகிறேன். இதைப்பற்றிய உங்கள் கருத்து என்ன?

http://www.orupaper.com/issue23/pages_K__21.pdf

Print this item

  கொழுக்கட்டை கொழுக்கட்டை
Posted by: RaMa - 12-17-2005, 05:14 AM - Forum: பொழுதுபோக்கு - Replies (13)

[size=13]களஉறவுகளே வணக்கம்.. இந்த கதையை நீங்கள் பாடசாலையில் படித்திருப்பீர்கள். அந்த கருத்தை வைத்து தான் எழுதியுள்ளேன். தாளலயம் என்று ஒரு கூத்து கேள்விபட்டிருப்பீர்கள். அதன் சுருதியுடன் வாசித்தால் மிகவும் நல்லாய் இருக்கும். தாளலயம் என்பது கைகளை சொடுக்கு போட்டுக்கொண்டு எல்லா வார்த்தைகளையும் இரண்டு தரம் கதைப்பது... பிடிக்கும் என்று நினைக்கின்றேன்.

பொன்னன்
தங்கம்மா தங்கம்மா
தங்கமான என் தங்கம்மா
தங்கம்மா:
என்னப்பா என்னப்பா
அடிபடியில் கொஞ்சம் வேலையப்பா

பொன்னன்:
தங்கம்மா தங்கம்மா

தங்கம்மா:
என்னப்பா என்னப்பா

பொன்னன்
எனக்கொரு சமையல் வேலை வந்திருக்கு
என்னவென்று பார்த்து வரேன்

தங்கம்மா:
சரியப்பா சரியப்பா
நேரத்தோடை போட்டு வாங்கோ அப்பா
(பொன்னன் வீட்டை விட்டு போகுதல்)

இந்த சமையல் வேலை செய்து செய்து களைத்துப்போனேன்.
நெருப்பில் நான் காய்ந்து போனேன்
இந்த வேலையையும் மாத்த வேண்டும் ம்ம்ம்ம்
கட்டாயம் இந்த வேலையையும் மாத்தவேண்டும்
என்ன வேலை செய்யிறது
ஆஆஆஆஆஆ
பாடப்போகின்றேன் நான் பாட்டு; பாடப்போகின்றேன்
சங்கீதம் நான் பாடப்போகிறேன்
சங்கடமான சமையலை விட்டு சங்கீதம் நான் பாடப்போகின்றேன்
நான் கடக்கப்போறேன் கடக்கப்போறேன்
இந்த ஆற்றை நானும் கடக்க போறேன்
(ஆறு கடத்தல்)
சங்கடமான சமையலை விட்டு சங்கீதம் நான் பாடப்போகின்றேன்
சங்கதியான சமையலை விட்டு சங்கீதம் பாடப்போகின்றேன்
…………………………………………..
மாமி வீட்டும் வந்திட்டுது.
தாகமாக இருக்கின்றது.
மாமி வீட்டை போகலமே
(மாமி வீட்டுக்கு செல்லுதல்)

கதவை தட்டுதல்

பொன்னன்:
மாமி மருதம் மாமி
என் தங்கத்தை பெத்த தங்க மாமி

மாமி:
ஆரது ஆரது மருமகனோ
வாருங்கோ வாருங்கோ
உட்காருங்கோ இதில் அமருங்கோ
(கதிரையை எடுத்து போடுதல்)
என்ன தம்பி இந்த பக்கம்
என் தங்கம் சுகம் எப்படி?

பொன்னன்:
அவளுக்கு என்ன ராசத்தி
பிடிஞ்ச கொப்பு புளியங்கொம்புல்லோ
சமையல் காரன் நான் அல்லோ

மாமி: ( உள்ளே போய் வருதல்)
மருமகனே சாப்பிடுங்கோ என் மரு மகனே சாப்பிடுங்கோ

பொன்னன்: (சாப்பிட்டபடி)
இது என்ன புதுச் சாப்பாடு
சுவையும் கொஞ்சம் அதிகமல்லோ
என்ரை சமையல் வாழ்க்கையில்
இது போல கண்டதில்லை

மாமி:
இது தம்பி கொழுக்கட்டை
வறுத்த மாவில் பொரித்து எல்லோ

பொன்னன்:
கொழுக்கட்டையோ மாமி இது கொழுக்கட்டையோ
தங்கம் கூட இதை செய்ததில்லை
தங்கத்திற்கு இது தெரியாதோ
ஒரு நாளும் செய்ததில்லை
மாமி:
ஒம் தம்பி ஒம் தம்பி
தங்கத்திற்கு தெரியும் அல்லோ

பொன்னன்:
அப்ப நான் போயிட்டு வாரேன்
இந்த கொழுக்கட்டையை இன்னும் நான் சாப்பிடணும்
ஆசை தீர நிறைய சாப்பிடணும்
இந்த பெயரை மறக்க மாட்டேன் ஆகா நான் மறக்க மாட்டேன்
வாரேன் மாமி போயிற்று வாரேன் மாமி
கொழுக்கட்டை கொழுக்கட்டை
கொழுக்கட்டை கொழுக்கட்டை
ரூசியான கொழுக்கட்டை
ஆற்றை கடக்க போறேன் இந்த ஆற்றை கடக்க போறேன்

(ஆற்றை கடத்தல்)
என்ன பெயர் அது என்ன பெயர்
ஒ ஆற்றுக்கட்டை அது ஆற்றுக்கட்டை
ஆற்றுக்கட்டை அது ஆற்றுக்கட்டை

பொன்னன்:
தங்கம்மா என் தங்கம்மா
போயிருந்தேன் நான் போயிருந்தேன்

தங்கம்மா:
எங்கையப்பா போனீர்கள்
எங்கையப்பா போனீர்கள்

பொன்னன்:
போயிருந்தேன் நான் போயிருந்தேன்
நான் உன்ர அம்மா வீட்டுக்கு
போயிட்டு இப்ப தான் வாரேன்
எனக்கு அவ மெத்த ருசியான
அத்துக்கட்டை செய்து தந்தவா
உடனடியாக நீயும் எனக்கு அந்த அத்துக்கட்டையை செய்து தரணும்
நான் இதிலே இருக்கின்றேன்

தங்கம்:
ஆத்துக்கட்டையோ அது அத்துக்கட்டையோ
ஏன்னங்க அது என்னங்க

பொன்னன்:
உன்ரை அம்மா எனக்கு சொன்னவா
உனக்கு நல்ல தெரியும் என்று
சலிக்கமால் நீயும் செய்து வா
தங்கம்: (தங்கம் யோசித்தல் என்ன ஆத்துக்கட்டை என்று)

பொன்னன
தங்கம்மா (மிக கோபத்துடன்)
எங்க எனக்கு ஆத்துக்கட்டை
தங்கம்:
எனப்பா அது ஆத்துக்கட்டையோ
எனக்கு ஒன்றும் விளங்கலை எனக்கு ஒன்றும் விளங்கலை

பொன்னன்:
அது ஒன்றும் எனக்கு தெரியாது
எனக்கு இப்போ ஆத்துக்கட்டை வேணும எல்லோ
(தங்கத்திற்கு அடித்தல்)
(தங்கம் அழுதல்)

தங்கம்:
எனக்கு அந்ந ஆத்துக்கட்டை என்னவென்றே தெரியாது
இஞ்ச பாருங்கோ கொஞ்சம் இஞ்ச பாருங்கோ
நீங்கள் அடிச்ச அடியிலை
கையெல்லாம் வீங்கிப்போச்சு
கொழுக்கட்டை மாதிரி வீங்கிப்போச்சு

பொன்னன்:
இதைத்தானே அட உதைத்தானே
நான் கேட்டேன் தங்கம்மா இவ்வளவு நேரம்
ஆத்துக்கட்டை அடசீ கொழுக்கட்டை
என்ரை தங்கம் கொழுக்கட்டை
செய்து வந்து விடு

Print this item

  யாழ் களம்!!
Posted by: Rasikai - 12-17-2005, 04:08 AM - Forum: கவிதை/பாடல் - Replies (47)

<b>யாழ் களம்!!
-----------------</b>

<img src='http://img477.imageshack.us/img477/9650/yarllogo3mu.gif' border='0' alt='user posted image'>

<b>இது எங்கள் தாய் களம்...
தமிழால் நாமெல்லாம் உள்ளம் நனைக்க குதிக்கும் குளம்!
ஒரு வகையில் புலம் பெயர்ந்த நமகெல்லாம்..
தமிழை தமிழால் அர்ச்சிக்க வாயில் திறந்த புண்ணிய தலம்!

இங்கே புதினங்கள் இருக்கிறது....
புதிர்களும் உயிர்கிறது....
வாழ்த்துக்களும் பொழிகிறது...
வசைபாடலும் தொடர்கிறது...
அறிவியலும் இருக்கிறது..
அந்நியன் திரை படம் பற்றிய பேச்சும் இருக்கிறது...

தேசத்தின் குரல் எடுத்து பாடும் தேசிய குயில்களும் வாழ்கிறது...
தேசத்தை விற்று பிழைக்கும் ஒரு சிலர் தெரு கூத்தும் இடைக்கிடை நடக்கிறது!
நாவில் நீர் ஊற வழி செய்யும் நள பாக முறையும் இருக்கிறது..
நான்கு இமையும் மூடி சிரிக்க நல்ல நகைச்சுவையும் இருக்கிறது...

ஒரு பொழுது இங்கு உள் நுளைய முடியாமல் போய்விட்டாலே
உள்ளம் தெருவோரம் மகவை தொலைத்த தாயென பதறுகிறது!

இருந்தும்...எம்மை மறந்து...இட்ட அடி பிரள விட்டு...
எம் முகத்தில் நாம் அறைந்து...எமக்குள் மோதி ...
ஏதோ வெற்றி பெற்றதாய்.. எண்ணி இந்த சந்தன மேடையை சிலசமயம்
சாக்கடை ஆக்கி போகிறோம்... சுகம் கொள்கிறோம்- பிறர் மனசை கொல்கிறோம்!
தங்கத்தை காய்ச்சி முதுகில் வைத்தால்..
சருமம் தீய்ந்து போகாதென்று நினைப்போ? தெரியவில்லை!

எது எப்படியோ....
அமெரிக்காவில் இருப்பவருடன் ஒரு செல்ல சண்டை..
லண்டனில் இருப்பவருடன் ஒரு வாதம்..
கனடாவில் வாழ்பவருடன் ஒரு கருத்து பகிர்வு...
கொலண்டில் குடியேறியவருடன் ஒரு கொள்கை விவாதம்..
ஜேர்மனியிலிருந்து வருபவரிடம் ஒரு நெஞ்சம் மகிழும் பாசம்...

ஆகா..
யாழ் களமே..உன் உடலில் பரந்திருப்பது...
வெறும் தந்தி நரம்புகளல்ல...
விதி என்று போனதால் தாய் நிலம் பிரிந்து துயருறும்
ஒவ்வொரு தமிழனதும் விரல்கள்!

உலகம் முழூதும் விரிந்து வாழும் எங்களை..
ஒன்றாய் அணைப்பவளே...
உன் விரல்களை பிடித்து கொண்டு நடை பயிலும் - சுகம்
விஞ்ஞானம் அழியாதவரை எமக்கு வேண்டும்!

கரும்பு காட்டிடையே அலையும்
எறும்பு கூட்டத்தின் வாழ்வென இனிக்கிறது மனசு!

தந்தையின் மார்பு மிதித்தேறி..
தாயின் தோழில் தாவி...பின்..
அவள் மடியில் குதித்துருண்டு சென்று...
உடன் பிறந்தவர்களை அணைக்கும் சுகம்..
உன்னால் கொண்டோம்!

இது வெறும் வரிகளால் நிரப்பும் தளம் அல்ல...
வரலாற்று ஆவணம்!
அவதானமாய் சேகரித்தால்..
அடுத்த சந்ததிக்கும் உதவாமல் போகுமா என்ன?
உரியவர்கள் கவனம் எடுத்தால் உள்ளத்தால் அவர்க்கு ..
நன்றி சொல்வேன்..உங்களுடன் சேர்ந்தே!!!</b>

Print this item

  தமிழர்களிடையே இருவேறு கலாச்சார முறைகளும்
Posted by: Mathuran - 12-17-2005, 02:13 AM - Forum: புலம் - Replies (16)

<b>தமிழர்களிடையே இருவேறு கலாச்சார முறைகளும் குடும்ப முறன்பாடுகளும்</b>


சொர்கமே என்றாலும் அது நம் ஊரை போல வருமா? அடடா இளையராசாவின் காந்தக்குரலில் ஒலிக்க தமிழ் மக்கள் பலர் கேட்டிருப்பர். கேள்ப்பதோடு நிக்காது, ஊர்விட்டு வேறு ஊர் சென்று வாழ்பவர்கள் நிச்சயமாக தமது பளைய நினைவுகளை மீட்டி பார்த்திருப்பர். இதே போலத்தான் பெரும் பாலான புலம்பெயர் தமிழ் மக்களும், புலம் பெயர்ந்து பிற நாடுகளில் வாழ்ந்தாலும், தாம் தவழ்ந்து உறவுகளோடு கூடி வாழ்ந்த அந்த இனிய சுற்றத்தையும் சூழலையும் எண்ணி மனம் வெதும்புவர்.

புலம்பெயர் தமிழ்மக்களின் வாழ் நிலைதனை சரியான முறையில் சொல்லுவதாயின், புலம்பெயர் தமிழர்களை நான்கு பிரிவினராக பிரித்தல் வேண்டும்.

1. முதலாம் பிரிவினர்: புலம் பெயர்நாடுகளிற்கு முதலாம் தலைமுறையாக வந்தவர்கள் ( மேற்படிப்பிற்காவும், தமிழர்மீதான ஆரம்பகால அரசபயங்கரவாதத்தினால் பாதிப்பிற்குள்ளாகி புலம்பெயர்நாடுகளில் தஞ்சம் கோரியவர்களும் அடக்கம்)

2. இரண்டாவது பிரிவினர்: இவர்கள் குறிப்பாக 1990-2005 வரையான காலப்பகுதில் புலம்பெயர்ந்த இளைய தலைமுறையினர்( இவர்கள் பெற்றவர்களைப் பிரிந்து புலம்பெயர்நாடுகளின் தனிமையாகவோ இல்லை உறவினர் கூடவோ வாள்கின்றனர். அத்தோடு இவர்களின் புலம்பெயர்விற்கானா காரணம்: சிங்கள பேரினவாத ஒடுக்குமுறையாளர்களின் கொடுரத்தாக்குதல்களால் பாதிப்பிற்குள்ளாகி உறவுகளை இளந்து புலம் பெயர் நாடுகளில் தஞ்சம்மடைந்து வாழ்கின்றார்கள், இவர்களில் ஒரு குறிப்பிட்ட தொகுதியினர் புலம்பெயர் நாடுகளால் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு. வாழ்வுரிமை நிராகரிக்கப்பட்ட நிலையில் வாழ்கின்றார்கள்.

3. மூன்றாவது பிரிவினர்: இவர்கள் புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற இரண்டாம் தலைமுறையினர். இவர்கள் முதலாம் தலமுறையினரின் பிள்ளைகள். அத்தோடு புலம்பெயர்நாடுகளின் பிறந்து இரண்டு கலச்சாரங்களில் சிக்குண்டு வாழ்கின்றவர்கள். சொல்லப்போனால் இரண்டு படகில் கால் வைத்தவர்களின் நிலைதான் இவர்களின் நிலையும்.

நன்றி.
சோழியனண்ணாவின் நினைவுபடுத்தலோடு

4. நான்காவது பிரிவினர்: உறவினர் என்னும் அடைமொழியுடன் உறவுகளால் தாயகத்திலிருந்து புலம்பெயர் நாடுகளிற்கு அழைக்கப்பட்டவர்கள். ( இவர்களில் கூடுதலானோர் தமது பிள்ளைகளால் வரவழைக்கப் பட்டு அவர்களுக்கு முற்றிலும் அன்னியமான வாழ்கைச்சூழலில் அவதியுறுகின்றவர்கள்)

<b>எனது பார்வையில் தமிழரின் கலாச்சாரம்</b>

தமிழர்களும் ஏனைய இனங்களைப்போல தமது கலை காலாச்சாரத்தின் பால் பற்றுக்கொண்டவர்கள். கலாச்சாரம் என்பதற்கு வரைவிலக்கணம் கொடுக்க நான் ஒரு மேதை அல்ல. இருந்தபோதிலும் எனது பார்வையில் கலாச்சாரம் என்பது மனித நாகரீக வளர்ச்சியில் தோன்றிய புதிய சிந்தனையின் வெளிப்பாடும், ஒவ்வொரு சூழலுக்கேற்ப மனிதனது வாழ்வியலை மேம்படுத்தவல்ல ஒரு சாரம் மனிதனின் வாழ்வாதாரம் ( ஆடல் பாடல் மூலம் இன்னொரு மனிதனுக்கு தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் பாங்கு) இவ்பாங்கானது ஒவ்வொரு சமூகங்களாலும் வெவ்வேறு கோணங்களின் பார்க்கப் படுகின்றது. இந்த அடிப்படையில் தமிழ் மொழி பேசுகின்ற மக்களாகிய நாமும் நமது மொழியின் உதவியோடு ஆடல் பாடல்கள் இன்னும் பல செயல்களினூடாக தமிழ்மக்களின் மேம்பாட்டிற்காக ஒரு சமூகக் கட்டமைப்பை நிறுவி. அக் கட்டமைப்பின் துணையோடு காலம் காலமாக நமது மூதாதயரின் சமூக முன்னேற்ற பாதைக்கான விழுமியங்களின் வளிகாட்டலோடும் பண்படுத்தப்படும் ஒரு சாரம் அதுவே கலாச்சாரம் என எனது பார்வையாய் முன்வைத்து. மேலும் தொடர்கின்றேன்.

<b>எனி புலம்பெயர் நாடுகளில் முதலாம் தலமுறையினரின் வாழ்வும் அவர்கள் எதிர் நோக்கிய/நோக்குகின்ற சவால்களைப்பற்றி கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்</b>.

இன்று நாம் புலம் பெயர்வில பல சிரமங்கள் இருந்தாலும், எப்படியாவது புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற உறவுகள்(அப்பா,அம்மா, அண்ணன்,அக்கா, மாமா மாமி, சித்தப்பா, சித்தி......) நம்மை வரவேற்க இருக்கின்றார்கள் என்கின்ற துணிவு ஒரு தெம்பை நமக்கு தந்ததுண்டு. அதே போல காசு பணம் என பார்த்தால், காலோ என்னும் ஒரு வார்த்தையில் மறுநாளே நம்மை நெருங்கும் வசதிவாய்ப்புக்கள் இன்றுபோல அன்று அவர்களுக்கு இருந்திருக்கவில்லை. எனக்கு ஒரு பெரியவர் சொன்னார் "நான் வெளிநாடு வர வெளிக்கிட்ட போது, கையில அஞ்சு சதம் காசு கூட இல்ல, தெரியுமோ தம்பி. என்ர கூடப்பிறந்த உறவுகளட்டயும் உற்றார் சுற்றத்தட்டையும் குருவி சேர்ப்பதைப்போல சேர்த்து, காணாததற்கு வட்டிக்கு கடன்வாங்கி ஒருவாறு கடலைக் கடந்து வந்தா பின்னால் தீராத சோகம் எம்மை சுழ்ந்ததையா" என கனத்த மனதோடு தனது பழய நினைவினை மீட்டி. இன்றய வாழ் நிலையை சொல்லியும் சொல்லாமல் என்னிடம் விட்டுச்சென்றார். அவரை நினைத்தால் எனக்கு இப்பவும் கண்கலங்குகின்றது. அவரின் இன்றய நிலை அவ்வளவு சங்கடங்களோடு கூடிய சோகம் நிறைந்த கதை. இப்படி பல முதலாம் தலமுறையினர் வாழ்வைழந்து அவலத்துள் வாழ்கின்றார்கள் ஆனானும், பலர் சவால்களை சமாளிக்கும் திறன்படைத்த வெற்றியாளர்களாகவும் திகள்கின்றார்கள். அண்மையில் நான் பிருத்தானியாவிற்கு சென்றிருந்தேன்.

பிருத்தானியாவில் பல தமிழர்களை சந்திக்கும் சந்தர்ப்பம் இல்லாது விடினும். சௌத்கரோவில் இருக்கக்கூடிய பல வியாபார நிறுவனைங்களை பார்த்தேன். அங்கே பல வியாபார நிறுவனங்கள் இருந்த போதிலும் சில நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது அவர்கள் தாம் முன்பு இதுபோன்ற வியாபார நிலையங்களை தொடங்கிய பொழுது தாம் சந்தித்த சவால்களையும். தமது இணைவிடாத முயற்சியின் பயனாக தாம் அது போன்ற நிலையங்களை இன்று நடத்த முடிகின்றதென சொன்னார்கள். அவர்கள் பற்றிய மேலதிக தகவல்களை விடுத்து. நான் நோர்வேயில் வசிப்பவன் ஆகையால். பிருத்தானுயாவிற்கு அண்மையிலே தான் முதல்த்தடவையாக சென்றிருந்தேன். அங்கே என்னை அதிசயிக்க வைத்த விடயம். சௌத்தோல் என்னும் நகரில் கிமாலயா என்னும் திரையரங்கில் இலங்கை இந்தியாவைப்போலவே வண்ணப்படங்கள் வெளியே ஒட்டப்பட்டு. தினமும் இரண்டு அல்லது மூன்றுகாட்சிகள் திரையிடப்படுகின்றன. தமிழ் படத்தினை ஐங்கரன் நிறுவனம் காண்பிக்கின்றது. நான் சில நாட்களே அங்கு தங்கி இருந்தமையால், அதிகம் தமிழர் பற்றி அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் ஒரு வேதனையான செய்தி நமது இளைய தலைமுறை (என் வயதிலும் இரன்டு மூன்று வயது குறைந்தவர்கள்) மிகவும் கவலைக்கு இடமான முறையில் தாய் தந்தயர் இருந்தும் யாரும் அற்றவர்போல், தெருக்களில் கூட்டாக சேர்ந்து குறிக்கோள் அற்றவர்போல் சுற்றுவதைப் பார்க்கயிலே கொஞ்சம் நெருடலாக இருந்தது. இதனைப்பற்றி இளைஞ்னர்கள் பற்றி எழுதும் பொழுது கொஞ்சம் விரிவாக எழுதுகின்றேன்.

நோர்வேயில் இடர்கள் நிறைந்திட்ட போதினிலும், வெற்றி என்னும் கனி பறித்து நின்மதியை தொலைத்துவிட்ட உறவுகளின் நிலை.

நோர்வேயில் பல முதலாம் தலமுறைனரோடு தொடர்புகளை பேணுகின்றவகின்ற என்ற வகையில். அவர்களின் உணர்வுகளையும் இங்கே பகிந்துகொள்ள முயலுகின்றேன். நல்லாச் சிரித்து பேசுகின்ற ஒருவர். எனது கருத்துக்களோடு முறன்படுகின்ற ஒரு ஐபது வயது மதிக்கத்தக்க அனுபவங்கள் நிறைந்த மனிதர். நான் அவரின் உணர்வுகளைக் கிளறும் வண்ணம். ஐயா இப்ப இப்படி சந்தோசாமா எங்களோடு கதைப்பதைபோல எப்போதும் சந்தோசத்தோடா இருப்பீர்கள்? தம்பி மனிதன் எல்லாநேரமும் இருக்க முடியாது, ஆனாலும் சிலநேரங்களில் சந்தோசமா இருக்க வேணுமெண்டு விரும்பினாலும் அது சாத்தியப் படுவதில்லை. ஐயா நீங்கள் நோர்வேக்கு வந்த போது, நீங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் எப்படியானவை? ம்ம் அறிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறீர். ஆள் சின்னவனெண்டாலும் விசயத்தில கண்ணாகத்தான் இருக்கின்றீர். சரி நமது அனுபவத்தையும் நீங்கள் தெரிந்துகொள்ளத்தானே வேணும், என்றவாறு தொடர்ந்தார்.

நாங்கள் நோர்வேக்கு ஒருமாதிரி விமானமூலம் இங்கு வந்து சேர்ந்தோம். வந்தவுடன் எம்மை ஒரு கப்பலில் கொண்டுபோய் இங்கத்தய பொலித்தி( காவல்துரையினர்) விட்டாங்கள். தனிய நான் மட்டுமில்லை என்னோட என்னும் எத்தனையோ அங்கட சனமும் வந்தது. அங்க ஒரெ சந்தொசமாய்த்தான் எல்லாரு இருந்தனாங்கள். வந்தவுடன் இங்கத்தய சாப்பாடுகள் எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை. இரண்டு மூண்டு நாளா இந்த பிரச்சினை தொடர்ந்தது. ஒருநாள் பொரிச்ச கோழி கால் கொண்டுவந்து தந்தாங்கள். எனக்கு அதைப்பார்த்ததும் பாம்பின் தோல் தொன்றியதால் அன்று போராவும் சாப்பிடாமலே படுத்துவிட்டேன். பிறகு நாள் போக போக என்ன கருமாந்திரமெண்டாலும் திண்டுதானே ஆக வேண்டும் என்கின்ற நிலையில், நான் ஒரு மதிரி என்னை பநோர்வேயில் பல முதலாம் தலமுறைனரோடு தொடர்புகளை பேணுகின்றவகின்ற என்ற வகையில். அவர்களின் உணர்வுகளையும் இங்கே பகிந்துகொள்ள முயலுகின்றேன். நல்லாச் சிரித்து பேசுகின்ற ஒருவர். எனது கருத்துக்களோடு முறன்படுகின்ற ஒரு ஐபது வயது மதிக்கத்தக்க அனுபவங்கள் நிறைந்த மனிதர். நான் அவரின் உணர்வுகளைக் கிளறும் வண்ணம். ஐயா இப்ப இப்படி சந்தோசாமா எங்களோடு கதைப்பதைபோல எப்போதும் சந்தோசத்தோடா இருப்பீர்கள்? தம்பி மனிதன் எல்லாநேரமும் இருக்க முடியாது, ஆனாலும் சிலநேரங்களில் சந்தோசமா இருக்க வேணுமெண்டு விரும்பினாலும் அது சாத்தியப் படுவதில்லை. ஐயா நீங்கள் நோர்வேக்கு வந்த போது, நீங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் எப்படியானவை? ம்ம் அறிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறீர். ஆள் சின்னவனெண்டாலும் விசயத்தில கண்ணாகத்தான் இருக்கின்றீர். சரி நமது அனுபவத்தையும் நீங்கள் தெரிந்துகொள்ளத்தானே வேணும், என்றவாறு தொடர்ந்தார்.

நாங்கள் நோர்வேக்கு ஒருமாதிரி விமானமூலம் இங்கு வந்து சேர்ந்தோம். வந்தவுடன் எம்மை ஒரு கப்பலில் கொண்டுபோய் இங்கத்தய பொலித்தி( காவல்துரையினர்) விட்டாங்கள். தனிய நான் மட்டுமில்லை என்னோட என்னும் எத்தனையோ அங்கட சனமும் வந்தது. அங்க ஒரெ சந்தொசமாய்த்தான் எல்லாரு இருந்தனாங்கள். வந்தவுடன் இங்கத்தய சாப்பாடுகள் எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை. இரண்டு மூண்டு நாளா இந்த பிரச்சினை தொடர்ந்தது. ஒருநாள் பொரிச்ச கோழி கால் கொண்டுவந்து தந்தாங்கள். எனக்கு அதைப்பார்த்ததும் பாம்பின் தோல் தொன்றியதால் அன்று போராவும் சாப்பிடாமலே படுத்துவிட்டேன். பிறகு நாள் போக போக என்ன கருமாந்திரமெண்டாலும் திண்டுதானே ஆக வேண்டும் என்கின்ற நிலையில், நான் ஒரு மதிரி என்னை பழக்கப் படுத்திக் கொண்டேன். என்றவழர்....

தொடரும்......

Print this item

  இப்பிடி கத்திக்கொண்டு வாறனே...
Posted by: Snegethy - 12-17-2005, 01:53 AM - Forum: அறிமுகம் - Replies (193)

நான் சினேகிதி வந்திருக்கிறேன்....

Print this item

  வன்னியன் படை காலக்கெடு
Posted by: Vaanampaadi - 12-16-2005, 04:41 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (5)

வெள்ளி 16-12-2005 18:26 மணி தமிழீழம் யாழ் நிருபர்

எதிர்வரும் 24ம் திகதிக்குள் இராணுவ நிலைகளை விட்டு வெளியேறுமாறு வன்னியன் படை காலக்கெடு

யாழ் குடாநாட்டில் மக்கள் குடியிருப்புக்களை அண்டி இருக்கும் இராணுவ நிலைகள் மற்றும் முகாகம்களை விட்டு வெளியேறுமாறு வன்னியன் படை எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் 24ம் திகதிக்கு முன்பு இராணுவ முகாம்களை விட்டு வெளிவேண்டும் என வன்னியன் படை கால கெடு விதித்துள்ளது. அவகாசத்தை மீறும் பட்சத்தில் இராணுவத்தினர் மீது கடும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அதற்கு இராணுவத்தினரை தயாராகுமாறு மேலும் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 24ம் திகதியுடன் போர் நிறுத்த உடன்படிக்கை எழுதப்பட்டு 4 வருடம் பூர்த்தியாகிய நிலையில் தொடர்ந்து உயர் பாதுகாப்பு வலையங்கள் என்ற போர்வையில் மக்கள் குடியிருப்புக்களில் இராணுவத்தினர் தொடர்ந்து இருப்பதை அனுமதிக்க முடியாது என வன்னியன் படையினரால் பிரசுரிக்கப்பட்டுள்ள சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.




Pathivu

Print this item

  பதேர் பாஞ்சாலியும் பெரிய மாமியும்
Posted by: kanapraba - 12-16-2005, 03:09 PM - Forum: சினிமா - Replies (13)

பதேர் பாஞ்சாலியும் பெரிய மாமியும்

போன கிழமை பல்லின மக்களுக்கானதொலைக்காட்சி ஒண்டில அதிகாலை ஒரு மணிக்கு பிரப இயக்குனர் சத்யஜித் ரேயின் "பதேர் பாஞ்சாலி" என்ற படம் போடுவதாகச் செய்தி கிடைச்சது.

பொதுவா இந்த தொலைக்காட்சியை இரவு பத்து மணிக்குப் பின்னால பார்ப்பது அறிஞ்சால் மெல்பனில இருக்கிற என்ர கூட்டாளி தாஸ் கொடுப்புக்குள்ள சிரிப்பான். ஏனெண்டால் பத்து மணிக்கு மேல அவங்கள் போடுற படங்கள் மொழி வித்தியாசமில்லாம வெளிப்படையான பாலியல் காட்சிகளை வாரி இறைக்கும். இந்தமாதிரி விசயத்தில பிரென்சு படம் என்றாலும் சீனப் படம் என்றாலும் அவங்கட கொள்கை ஒண்டு தான்.


இருந்தாலும் அத்தி பூத்தப் போல இப்பிடி " பதேர் பாஞ்சாலி" போலப் படங்களும் வருவதுண்டு.
நீண்ட நாளாத் தமிழ்ப் பலசரக்கு கடையள்ள "மெட்டி ஒலி", " அண்ணாமலை" இத்தியாதி கசற் மலைகளுக்க தேடினாலும் கிடைக்காத இப்பிடியான படங்களைப் பார்க்க இதுதான் சந்தர்ப்பம் எண்டு, படத்தைப் பதிவு பண்ணி அடுத்த நாள் பார்க்க முடிஞ்சுது. சரி இனிப் படம் எப்பிடி எண்டு பார்ப்பம்.

1955 ஆம் ஆண்டு பதேர் பாஞ்சாலி" வங்காள மொழியில் வந்தது. பாட்டு, சண்டை, குழு நடனம் அல்லது குலுக்கல் டான்ஸ் போன்ற சராசரி இந்திய மசாலா சினிமாச் சமையலுக்குத் தேவையான ஒரு ஐட்டமும் இதில கிடையாது ( அடச் சீ, இவ்வளவும் இல்லாமப் ப்டம் பாக்கோணுமோ எண்டு தாஸ் முணுமுணுப்பது போல ஒரு பிரமை). படம் 115 நிமிசம் கறுப்பு வெள்ளையில ஓடுது.
பதேர் பாஞ்சாலி என்பதன் தமிழ் விளக்கம் " சின்னஞ் சிறு வீதியின் பாட்டு" (Song of the Little Road)
சரி, இனி இப்படத்தின் கதையைச் சொல்லுறன்.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலச் சூழலில் ஒரு மிகப் பின் தங்கிய பெங்காலிக்கிராமம்.
அந்தக் கிராமத்தில் வாழும் ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பம், குடும்பத்தலைவன் ஹரிகர் , அவன் மனைவி சர்பஜயா, மூத்த மகள் துர்கா, இளையவன் அபு, இவர்களின் வறுமை வருமானத்திலும் பங்கு போடும் ஹரிகரின் வயதான சகோதரி. இவர்களின் ஆசைகள், நிராசைகள், எதிர்பார்ர்புகள், ஏமாற்றங்கள் தான் கதைக் கருவை ஆக்கிரமிக்கிறது.

தன் கணவன் ஹரிகரின் அப்பாவித்தனத்தால், ஏமாற்றப்பட்டு தம் சொத்தை இழக்கும் இயலாமை,
ஏமாற்றிய குடும்பம் வைத்திருக்கும் தம் காணியில் மகள் துர்கா கொய்யாப்பழம் திருடுவதும், வீட்டுக்காரி வந்து கூச்சலிடும் போது மகளுக்காகப் பரிந்து பேசுவது, பின் அவள் போனதும் துர்க்காவைத் தண்டிப்பது, கணவன் வந்ததும் தம் இயலாமையை நொந்து கொள்வது என்று சர்பஜா பாத்திரத்தில் வரும் கருணா பனர்ஜி ஒரு சராசரி இந்திய அல்லது ஈழத்துக் குடும்பத்தலைவியை நினைவு படுத்துகிறார். குடும்பத்தலைவன் ஹரிகர் இந்தக்குடும்பத்தை விட்டு அடிக்கடி வேலைதேடி நாட் கணக்கில் அலையும் போது தான் ஒருத்தியாக அவள் போராடுவதும் வெகு இயல்பு.


கொய்யாப் பழம் திருடுவது, தாயிடம் எவ்வளவு ஏச்சும், அடியும் வாங்கினாலும் தன் பால்யப் பருவத்துக்கே உரிய ஆசைகளை அடக்க முடியாத துர்க்கா பத்திரம். திருடிய கொய்யாப்பழத்தை அப்படியே தன் முதிய மாமியாரிடம் (அப்பாவின் சகோதரி) கொடுப்பதும், மாமியார் தன் தாயிடம் சண்டை போட்டுக்கொண்டு வேட்டை விட்டுப் போகும் போது கையில் பிடித்துக்கூட்டி வருவது, ரயிலைக் காட்டும் படி கேட்ட தன் தம்பியின் கைபிடித்து நெல் வயல் வெளியே கொண்டு காட்டுவது என்று அவளின் பல பரிமாணங்கள் காட்டப்படுகின்றன.

பிபூதி பூஷன் பானர்ஜி இன் மூலக்கதையும், ரவி ஷங்கரின் இசையும் படத்திற்கு மிகப்பலம்.
செல்வந்த வீட்டில் களவான முத்து மாலையைத் துர்கா தான் திருடினாள் என்று பழிச்சொல் வரும் போது அவளுக்காக நாமும் பரிந்து பேசத் தோன்றுகின்றது. ஆனால் அவள் இறந்த பின்னர் அவள் தம்பி அபு தற்செயலாகக் காணுவதும், பின் யாரும் பார்க்காமல் இருக்க அதை நீரொடையில் வீசுகின்றான்.
அந்தக் காட்சி காட்டப்படும் போது, முத்து மாலை பொத்தென விழுவதும், பின் சிறிய சலசலப்பின் பின் சலனமற்றுத் தோன்றும் நீரோடை ஒரு அழகான கவிதை

.இந்தப் படத்தைப் பார்த்த போது ஒரு விசயம் சிந்தனைக்கு வந்தது. நல்ல படைப்பாளிகள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் பெரும்பாலும் நடைமுறை வாழ்க்கையின் பரிமாணங்களைச் செயற்கை இல்லாமல் அப்படியே தந்திருக்கிறார்கள். தோல்விகண்டவர்கள் பலர் மிதமிஞ்சிய செயற்கையைக் கொடுத்து அடையாளம் இழந்து போனார்கள்.

எல்லாம் இழந்து தனிமரமாக இருக்கும் குடும்பத்தலைவியும், மகன் அபுவும் வேலை தேடி உழைத்த பணத்துடன் வரும் கணவன் வந்ததும் ஊரைவிட்டு போக முடிவெடுக்கும் போது தான் ஒதுங்கி இருந்த அயலவர்கள் உதவுவதுபோல வருகிறார்கள். ஆனாலும் தொடர்ந்து வந்த துன்பச் சறுக்கல்களோடு பெனாரஸ் நகர் நோக்கி புதிய வாழ்க்கை ஒன்றுக்காக அவர்களின் கட்டி வண்டி பயணிக்கின்றது.


விமர்சனத்தின் இறுதிக்கு வரும் முன்னர் இன்னொரு பாத்திரத்தையும் பார்ப்போம்.
அது படத்தில் வரும் வயதான கிழவி (துர்காவின் தகப்பனின் சகோதரி) ஊனமான கண்ணுடன் இடுக்குப் பார்வை பார்த்துக்கொண்டே தன் தம்பி வீட்டில் களவெடுத்துத் தின்பதும், தம்பியின் மனைவியின் வசவுகளைக் கேட்டுப் பழிப்புக்காட்டுவதும், கோபித்துக்கொண்டு அவர்களின் வீட்டை விட்டு வெளியேறி இன்னொரு வீட்டில் அடைக்கலம் போகும் போது " கொஞ்ச நாளைக்குத்தான்" என்று இரஞ்சுவதும் மிக இயல்பு. சண்டி பாலா தேவி என்ற முதுபெரும் நடிகை சிறப்பாகவே அதைச் செய்திருக்கிறார்.

தம்பியின் மனைவி துரத்திய போதும் அவர்களுக்குப் பிள்ளை பிறந்த போது தன் வைராக்கியத்தையும், அவமானத்தையும் மூட்டை கட்டி விட்டு எதுவும் நடக்காதது போல், மீண்டும் வந்து குழந்தையை கொஞ்சுவதும், தன் வாழ்வின் இறுதி நிமிடங்களில் நைந்து போன சேலையைப் போல கேட்பாரற்று காட்டில் இறப்பதும் நம் இதயத்தை ஊசியால் குத்துவது போல...
தமது அந்திம காலத்தில் சொந்தங்களை இறுகப் பற்றி வாழ நினைக்கும் முதுமையும்
அவர்களின் அபிலாசைகளைப் புரிந்துகொள்ளாத சமுதாயமும் ஒரு சக்கரம் போல. அதே நிலை இவர்களுக்கும் இவர்களின் முதுமையின் விளிம்பில் வருவது தவிர்க்க முடியாத உலக நியதி.

இந்தப் படத்தில் வரும் வறட்டு வைராக்கியம் உள்ள அந்தக் கிழவிப் பாத்திரத்தைப் பார்த்த போது என் பெரிய மாமியின் குணாதிசயம் நினைவுக்கு வந்தது.
என்ர அப்பாவின் மூத்த சகோதரியான அவர் நான்கு இளைய சகோதரிகளின் வாழ்வுக்காக அப்புவுடன் சேர்ந்து தன் இளமையில் இருந்தே தோட்ட வேலைகளிலும், வறுமையின் போராட்டத்திலும் பங்கு போட்டவர். தன்ர திருமண வாழ்விலையும் குறுகிய கால அனுபவம் தான் அவவுக்குக் கிடைச்சது. மல்லிகைப் பூ வாசனைய விட அவர் அதிகம் மணந்தது எங்கட தோட்டத்தான் கோடா போட்ட புகையிலையாத் தான் இருக்கும். அவவின்ர வயதில முக்கால்வாசிப் பாகம் ஆச்சியைக் (அவரின் அம்மா)
கவனிப்பதிலேயே கழிந்தது. இப்படியான தொடர்ச்சியான போராட்டமும், வாழ்வின்ர நெருக்கடிகளும் அவரை ஒரு போர்க்குணம் மிக்க மனுசியாக மாற்றி விட்டது.
நான் ஊரில் இருந்த காலத்தில ஆச்சி வீட்டை போக இலேசான பயம் எப்பொழுதும் அடி மனசில இருக்கும். தப்பித் தவறி ஏதாவது என் சிறுவயதுக்கே உரிய குறும்புத்தனங்களைச் செய்தால் போதும், " இனி இஞ்ச ஒருத்தரும் வரத்தேவேல்லை" என்று தொடங்கி வார்த்தைகள் அனல் பறக்கும். தடுக்க வரும் ஆச்சிக்கும் " ஆச்சி நீ சும்மா இரணை" என்று தொடங்கி சரமாரியான சொல் கணைகள் வந்து விழும். என்ர அப்பாவுடன் இடைக்கிடை அவருக்கு வரும் கோபதாபங்களிலும் பலிகடா நாங்கள் தான். ஆக மொத்ததில் என்ர இளமைப் பிராயத்து மன விம்பத்தில ஒரு பயங்கரமான இடம் அவருக்கு இருந்தது.

காலம் எல்லாவற்றையும் மாற்றி விடுகிறது. ஆச்சியும் போய்விட்டா.
கொழும்பில் இருந்த 2 வருசங்களையும் புலம் பெயர்வில் 10 வருசங்களையும் தின்றுவிட்ட காலங்களையும் கடந்து இந்த ஆண்டு ஊருக்குப் போனேன். பெரியமாமி எப்படி இருப்பா, இப்பவும் அப்பிடியா என்று மனதுக்குள்ள நினைச்சுக்கொண்டு ஏஷியா பைக்கை தாவடியை நோக்கி மிதித்தேன்.

ஆச்சி வீடுப் படலையைத் திறந்தேன்.
"
"என்ர அப்பு வந்திட்டானோ" என்று ஒரு குரல் கேட்டது.
எட்டிப் பார்த்தேன். காலம் கொடுத்த பரிசான வில் போன்ற கூன் முதுகுடன் என் பெரியமாமியே தான்.
அவரின் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்து வரவா என்று கேட்பது போல இருந்தது.
என்ர கன்னத்தைத் தடவி ஒரு குழந்தையைப் போல அழகு பார்த்தார்.
என்னை அந்த மண் திண்ணையில் இருத்தி, தளர்ந்த அவரின் நரம்பு விழுந்த கை என்கையைப் இறுகப் பிடித்துக் கொண்டது. என்ர வெளிநாட்டுப் புதினங்களை கேட்கும் பாவனையில் தன் பாவனையை ஏற்படுத்திக்கொண்டார். என் உள் மனதுக்குத் தெரியும் அவர் என்னுடைய புதினங்களை கேட்பதை விட என் அருகாமை தான் அவருக்குத் தேவைப்பட்டது.
" போட்டு வாறன் பெரியம்மா" என்ற போது " ஓமப்பு, நல்லா இரு மேனை"என்று அவரின் உதடும் " போகாதை" என்பது போல அவரின் மனம் சொல்லுவதைக் கண்ணும் வெளிப்படுத்தியது.


முதுமை எவ்வளவு விசித்திரமானது, எட்டாத சொந்தங்களையும், விலகிப் போன பந்தங்களையும் தேடி அது ஒடுகின்றது, கிடைக்காத பட்சத்தில் கழிந்து போன வாழ்வியலின் நினைவுகளை அசை போட்டு அது எஞ்சிய அந்திம காலத்தை அது கழிக்கின்றது.

வாழ்க்கைப் பயணம் என்பது ஒரு பதேர் பாஞ்சாலி, அதாவது எமது எண்ணங்கள் போட்ட சின்னஞ்சிறு பாதையில் வரும் பாட்டு அது.

மேலதிக படங்களுடன்
http://kanapraba.blogspot.com/

Print this item

  உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்
Posted by: அருவி - 12-16-2005, 12:07 PM - Forum: தளமுகவரிகள் - Replies (1)

உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன் அவர்களின் தளம்

http://www.kaasi.info/

http://www.kaasi.info/

http://www.kaasi.info/

Print this item