Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243

Full Statistics

Online Users
There are currently 377 online users.
» 0 Member(s) | 374 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,043
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,055
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,518
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,255
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,534
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,775
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,266
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,890
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,938
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,205

 
  நிலவரம், நிகழ்வுகளின் ஆய்வகம்
Posted by: kurukaalapoovan - 04-16-2006, 08:04 PM - Forum: தமிழ்த் தொலைக்காட்சி இணையம் - Replies (7)

இன்றைய (17 சித்திரை 2006) நிகழ்ச்சியில் புலிகளின் பொறுமை பற்றி தமிழ் மக்களுக்கு நல்ல விளக்கம் கொடுக்கப்பட்டது. ரணிலை போலல்லாது மகிந்தவின் அரசோ பிரதமர் மற்றும் ஜனாதிபதி என்று முழு அதிகாரத்தையும் வைத்திருக்கிறார்கள். எனவே சமாதான முயற்சியில் அரச தரப்பு எடுக்கக்கூடிய முடிவுகளை அமுல்படுத்துவதற்கு எந்த அதிகாரப்பற்றாக்குறைகளும் மகிந்தாவிற்கு இருக்காது. ஆகவே பொறுமை காத்து பேச்சுக்களில் பங்கேற்று மகிந்தாவின் இரட்டை வேடத்தை சர்வதேசத்திற்கு அம்பலப்படுத்த வேண்டிய அரசியல் கடமையை புலிகள் தமது போராட்டத்தின் ஒரு அங்கமாக செய்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும் சர்வதேசம் 3ஆம் தரப்பு மத்தியஸ்தம் என்ற தனது பங்கினை செய்யத் தவறினால் யுத்தம் சர்வநிச்சையமாகும். புலிகள் மீதான பக்கச்சார்பான அழுத்தங்கள் நெருக்குதல்கள் யுத்தத்தை தவிர்க்க உதவாது.

சிங்கள அரசியலின் தற்போதைய காய்நகர்த்தல்கள் புலிகளையும் சர்வதேசத்தையும் மோதவைப்பதே. இது போன்ற நகர்வில் திம்புப் பேச்சுவார்தைக் காலகட்டத்தில் வவுனிய படுகொலைகள் மூலம் இந்திய என்ற 3ஆம் தரப்போடு விரிசலை உருவாக்கி வெற்றி கண்டார்கள். பின்னர் இந்திய உடன்பாட்டிற்கு பின்னர் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்த போராளிகளை கடலி கைது செய்து பின்னர் கொழும்பு கொண்டு சொல்ல முயற்சித்து இந்தியாவோடு புலிகள் மோதும் நிலைக்கு இட்டுச் சென்றது.

Print this item

  பொடாவை இன்னும் மறக்கவில்லை
Posted by: sinnakuddy - 04-16-2006, 06:30 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (86)

<img src='http://img445.imageshack.us/img445/17/233lo.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  குடாநாட்டில் விநோத சம்பவங்கள்
Posted by: Subiththiran - 04-16-2006, 06:09 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (8)

குடாநாட்டில் தினமும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதையடுத்து, மக்கள் தமது நகைகளை வங்கிகளில் அடகு வைக்க ஆர்வம் காட்டுவதால் வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
<span style='font-size:25pt;line-height:100%'>வங்கிகள் பவுணுக்கு 11 ஆயிரம் ரூபா வழங்கத் தயாராகவுள்ள போதும் மக்கள் மிகச் சிறிய தொகையையே கடனாகக் கேட்பதால் வங்கி அதிகாரிகள் சிக்கலையெதிர் நோக்குகின்றனர். இப்பிரச்சினையைத் தீர்க்குமுகமாக தற்போது பவுணுக்கு 5 ஆயிரம் ரூபாவுக்கு குறைவாக கோர முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது. </span>

இதேவேளை, வங்கிகளில் நகைகளை அடகு வைத்துப் பணத்தைப் பெறுவோர் அந்தப் பணத்தை சேமிப்புக்கணக்கில் வைப்பிலிட்டு விட்டுச் செல்கின்றனர். குடாநாட்டில் அதிகரித்து வரும் கொள்ளைகளால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.


http://www.thinakkural.com/news/2006/4/16/...ews_page566.htm

Print this item

  நான்காம் ஈழப் போர் தொடங்கும்: கொழும்பு ஊடகம்
Posted by: I.V.Sasi - 04-16-2006, 04:28 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (5)

நான்காம் ஈழப் போர் தொடங்கும்: கொழும்பு ஊடகம்

[ஞாயிற்றுக்கிழமை, 16 ஏப்ரல் 2006, 20:19 ஈழம்] [கொழும்பு நிருபர்]

ஜெனீவா இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் நான்காம் ஈழப் போர் தொடங்கும் என்று இன்று ஞாயிற்றுக்கிழமை (16.04.06) வெளிவந்த கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


அச்செய்தி விவரம்:

விடுதலைப் புலிகள் யுத்தத்திற்குச் சென்றால் அத்தகைய நிலைக்கு முகம் கொடுப்பதற்கு பாதுகாப்பு படையினரை தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் மீண்டும் யுத்தத்தினை தொடங்கினால் அது நான்காவது ஈழப்போரின் தொடக்கமாகக் கருதப்படும். இரண்டாம் சுற்றுப் பேச்சுக்களில் விடுதலைப் புலிகள் கலந்து கொண்டாலும் அதன் இறுதிவரை அவர்கள் இருப்பார்கள் என்பது நிச்சயமற்றது எனச் சில தரப்பினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் ஒப்புக்கொள்ளப்பட்டபடி வடக்கு-கிழக்கிலுள்ள ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களை அரசாங்கம் களையாததைக் காரணமாகச் சுட்டிக்காட்டி விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை மேசையிலிருந்து வெளியேறலாம் என்று கூறப்படுகிறது.

இரண்டாம் சுற்றுப் பேச்சுக்களின் போது ஆயுதக் களைவிற்காக விடுதலைப் புலிகளினால் அரசாங்கத்திற்கு காலக்கெடு விதிக்கப்படக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

அத்தகைய ஒரு காலக்கெடுவை விதித்து அந்த கெடுவுக்குள் வடக்கு-கிழக்கில் இருக்கும் ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களை களையுமாறும் இல்லையேல் தமது இயக்கம் யுத்தத்திற்கு திரும்பும் என்றும் விடுதலைப் புலிகள் அறிவிப்பார்கள் என்றும் தெரிகிறது.

இத்தகைய சிக்கல் மிக்க நிலையே அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் யுத்தத்திற்குத் தயாராக இருப்பதற்கான பின்னணியின் காரணம் என்று இன்றைய கொழும்பு ஊடகத்தின் செய்தி தெரிவித்துள்ளது.

puthinam.com

Print this item

  தமிழீழ காவல்துறையின் முதலாம் அணியின் பயிற்சி நிறைவு நிகழ்வு
Posted by: I.V.Sasi - 04-16-2006, 03:27 PM - Forum: தமிழீழம் - Replies (1)

தமிழீழ காவல்துறையின் முதலாம் அணியின் பயிற்சி நிறைவு நிகழ்வு

[ஞாயிற்றுக்கிழமை, 16 ஏப்ரல் 2006, 16:58 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

தமிழீழ காவல்துறையின் தற்போதைய ஆண்டுக்கான முதலாம் அணியின் பயிற்சி நிறைவு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
<img src='http://img218.imageshack.us/img218/7321/14lg2.jpg' border='0' alt='user posted image'>

தமிழீழக் காவல்துறையின் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கல்லூரிக் கண்காணிப்பாளர் தமிழரசன் தலைமை தாங்கினார்.

பொதுச்சுடரினை அடம்பன் காவல் பணிமனைப் பொறுப்பாளர் அன்ரன் ஜோசப் ஏற்றினார்.

<img src='http://img148.imageshack.us/img148/7729/21sp.jpg' border='0' alt='user posted image'>
தமிழீழத் தேசியக் கொடியை காவல்துறை நடுவப்பணியகக் கண்காணிப்பாளர் மாதவன் ஏற்றினார்.
<img src='http://img148.imageshack.us/img148/1109/30rx1.jpg' border='0' alt='user posted image'>





அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கு மன்னார் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் கண்ணாளன் ஏற்ற, மலர்மாலையினை தமிழீழ காவல்துறையின் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொறுப்பாளர் இயலரசன் அணிவித்தார்.

தமிழீழக் காவல்துறைக் கொடியினை காவல்துறை நிர்வாகப் பொறுப்பாளர் கானகன் ஏற்றினார்.
<img src='http://img218.imageshack.us/img218/3759/41mo.jpg' border='0' alt='user posted image'>





இதைத் தொடர்ந்து பயிற்சியை நிறைவு செய்த அணியினரின் அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பு மரியாதையை தமிழீழக் காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஏற்றுக் கொண்டார்.

தமிழீழக் காவல்துறையின் ஆய்வாளர்கள் கிருபாகரன், இமாக்கிறேர், விஜயகுமார் மற்றும் துணை ஆய்வாளர் கபிலன் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.

தமிழீழக் காவலல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் சிறப்புரையாற்றினார். நிகழ்வின் இறுதியில் கலைநிகழ்வுகள் நடைபெற்றன.

பயிற்சியின் போது நடத்தப்பட்ட போட்டிகளில் பங்குகொண்டு அதிக புள்ளிகளைப் பெற்றோருக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

puthinam.com

Print this item

  அனைவருக்கும் வணக்கம்
Posted by: Sumi - 04-16-2006, 03:08 PM - Forum: அறிமுகம் - Replies (22)

அனைவருக்கும் வணக்கம்.

Print this item

  அப்புமாரே வணக்கம்
Posted by: paravaimuniyamma - 04-16-2006, 09:33 AM - Forum: அறிமுகம் - Replies (13)

அப்புமாரே வணக்கம்

Print this item

  இந்தியா, கொழும்புக்கு கடுமையான தொனியில் `செய்தி'
Posted by: narathar - 04-16-2006, 08:40 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (7)

அமைச்சர் சிறிபால டி சில்வா புதுடில்லிக்கு அவசர பயணம் -திருமலை வன்முறைகளையடுத்து இந்தியா விடுத்த `செய்தி'

[16 - April - 2006] [Font Size - A - A - A]

திருமலை நகரில் புதன்கிழமை இடம் பெற்ற குண்டுத் தாக்குதலையடுத்து, தமிழ் மக்கள் மீது மோசமான முறையில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையை உடனடியாக கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தியிருக்கும் இந்தியா, கொழும்புக்கு கடுமையான தொனியில் `செய்தி' ஒன்றையும் விடுத்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுடன் புதன்கிழமை மாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திருமலை வன்முறைகளையிட்டு கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா குறுகிய கால பயணத்தை புதுடில்லிக்கு அவசரமாக மேற்கொண்டதாக தெரிய வருகிறது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுடனான உரையாடலின் போது நிலைமையை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்குமாறும் நோர்வே அனுசரணையுடனான சமாதான நடவடிக்கைகளை முன்னெடுக்க இந்தியா முழுமையாக ஆதரவு வழங்குமெனவும் தெரிவித்ததாக `ஐ.ஏ.என்.எஸ்.' செய்திகள் தெரிவித்தன.

இதேவேளை, இந்த தொலைபேசி உரையாடல் தொடர்பாக இந்தியா உத்தியோக பூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை. மாறாக அறிக்கையை வெளியிட கொழும்புக்கு அனுமதியளித்திருக்கிறது.

திருகோணமலையில் மோசமான முறையில் வன்முறைகள் வெடித்ததையடுத்தே இந்தியப் பிரதமர் உடனடியாக ஜனாதிபதி மகிந்தவுடன் தொடர்பு கொண்டதாக மன்மோகன் சிங்கின் பேச்சாளர் கூறியுள்ளார்.

இதேவேளை, அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா வியாழக்கிழமை டில்லிக்கு மேற்கொண்ட திடீர் பயணம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெனீவாவில் நடைபெற்ற புலிகளுடனான பேச்சுவார்த்தையின் போது அரசாங்க தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கிச் சென்ற அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் இந்திய விஜயத்தை அவரது உதவியாளர்களும் உறுதிப்படுத்தினர்.

எனினும், அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்திய அதிகாரிகளை சந்தித்து ஏதேனும் பேச்சுவார்த்தைகளை நடத்தினாரா அல்லது திருகோணமலை சம்பவங்கள் பற்றிய விடயங்கள் மற்றும் தற்போது எழுந்துள்ள நெருக்கடி நிலைகள் குறித்து ஆராய்ந்தாரா அல்லது ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் விசேட செய்திகளேதேனும் கொண்டு சென்றாரா என்ற விபரம் தெரியவரவில்லை.

இந்நிலையில், திருகோணமலைச் சம்பவம் பற்றி இந்தியப் பிரதமர் தெரிவித்த கருத்துகளுக்கு விளக்கம் அளிப்பதற்காகவே அவர் இந்தியா சென்றிருக்கலாமென அரசியல் வட்டாரங்களில் ஊகங்கள் தெரிவிக்கப்படும் நிலையில், அமைச்சர் வியாழக்கிழமை இரவு நாடு திரும்பவிருந்தார்.


http://www.thinakkural.com/news/2006/4/16/...ews_page550.htm
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Print this item

  யாழில் கிளைமோர் தாக்குதல்... 1 ராணுவம் பலி....
Posted by: Vaanampaadi - 04-16-2006, 05:52 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - Replies (1)

2 SLA soldiers killed, 3 wounded in Thenmaradchi

[TamilNet, April 16, 2006 05:05 GMT]
Two Sri Lanka Army (SLA) soldiers were killed Sunday morning and three wounded in a Claymore attack in Mattuvil, Thenmaradchi in Jaffna, SLA sources said.
Unidentified attackers targetted a group of SLA soldiers on road patrol west of Kanakampuliyadi junction. The attackers fired gunshots after the Claymore attack, sources said.

Print this item

  கவிஞர் நாவண்ணனுக்கு கண்ணீர் வணக்கம்....!!!
Posted by: Nitharsan - 04-16-2006, 01:37 AM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் - Replies (24)

தமிழீழத்தில் புகழ்பூத்த கவிஞர் நாவண்ணன் நேற்றிரவு காலமானார். புலிகளின் குரல் ஊடாக பெருமளவான படைப்புக்களை வெளிப்படுத்திய அவர், தமிழீழ தேசியத்தலைவர் அவர்களினால், இரண்டு தடவை தங்கப்பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டார். நேற்றிரவு கவிஞர் நாவண்ணன் சாவடைந்தாலும் அவர் தந்து சென்ற படைப்புக்கள் சாகா வரம் பெற்றவை.
[b]புரட்சி கீதம் பாடிய
புரட்சி கவிஞனுக்கு
புரட்சிகர வணக்கங்கள்........

தகவல்:புலிகளின் குரல்

Print this item