![]() |
|
நிலவரம், நிகழ்வுகளின் ஆய்வகம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: தமிழ்த் தொலைக்காட்சி இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=18) +--- Thread: நிலவரம், நிகழ்வுகளின் ஆய்வகம் (/showthread.php?tid=187) |
நிலவரம், நிகழ்வுகளின் ஆய்வகம் - kurukaalapoovan - 04-16-2006 இன்றைய (17 சித்திரை 2006) நிகழ்ச்சியில் புலிகளின் பொறுமை பற்றி தமிழ் மக்களுக்கு நல்ல விளக்கம் கொடுக்கப்பட்டது. ரணிலை போலல்லாது மகிந்தவின் அரசோ பிரதமர் மற்றும் ஜனாதிபதி என்று முழு அதிகாரத்தையும் வைத்திருக்கிறார்கள். எனவே சமாதான முயற்சியில் அரச தரப்பு எடுக்கக்கூடிய முடிவுகளை அமுல்படுத்துவதற்கு எந்த அதிகாரப்பற்றாக்குறைகளும் மகிந்தாவிற்கு இருக்காது. ஆகவே பொறுமை காத்து பேச்சுக்களில் பங்கேற்று மகிந்தாவின் இரட்டை வேடத்தை சர்வதேசத்திற்கு அம்பலப்படுத்த வேண்டிய அரசியல் கடமையை புலிகள் தமது போராட்டத்தின் ஒரு அங்கமாக செய்து கொண்டிருக்கிறார்கள். மேலும் சர்வதேசம் 3ஆம் தரப்பு மத்தியஸ்தம் என்ற தனது பங்கினை செய்யத் தவறினால் யுத்தம் சர்வநிச்சையமாகும். புலிகள் மீதான பக்கச்சார்பான அழுத்தங்கள் நெருக்குதல்கள் யுத்தத்தை தவிர்க்க உதவாது. சிங்கள அரசியலின் தற்போதைய காய்நகர்த்தல்கள் புலிகளையும் சர்வதேசத்தையும் மோதவைப்பதே. இது போன்ற நகர்வில் திம்புப் பேச்சுவார்தைக் காலகட்டத்தில் வவுனிய படுகொலைகள் மூலம் இந்திய என்ற 3ஆம் தரப்போடு விரிசலை உருவாக்கி வெற்றி கண்டார்கள். பின்னர் இந்திய உடன்பாட்டிற்கு பின்னர் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்த போராளிகளை கடலி கைது செய்து பின்னர் கொழும்பு கொண்டு சொல்ல முயற்சித்து இந்தியாவோடு புலிகள் மோதும் நிலைக்கு இட்டுச் சென்றது. Re: நிலவரம், நிகழ்வுகளின் ஆய்வகம் - Subiththiran - 04-16-2006 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> சிங்கள அரசியலின் தற்போதைய காய்நகர்த்தல்கள் புலிகளையும் சர்வதேசத்தையும் மோதவைப்பதே. இது போன்ற நகர்வில் திம்புப் பேச்சுவார்தைக் காலகட்டத்தில் வவுனிய படுகொலைகள் மூலம் இந்திய என்ற 3ஆம் தரப்போடு விரிசலை உருவாக்கி வெற்றி கண்டார்கள். பின்னர் இந்திய உடன்பாட்டிற்கு பின்னர் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்த போராளிகளை கடலி கைது செய்து பின்னர் கொழும்பு கொண்டு சொல்ல முயற்சித்து இந்தியாவோடு புலிகள் மோதும் நிலைக்கு இட்டுச் சென்றது.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அதனால் தான் புலிகள் மிகவும் பொறுமயாக இருக்கின்றனர். கனடா தடையும் செய்யுமாம் பேச்சுவார்த்தைக்கு இடமும் கொடுப்பீனமாம். யாருக்கு வேணும் இடம். முதல்ல பேசினதே நடைமுறையில் வரேல்லை. இன்னும் என்னத்தை பேச :roll: - putthan - 04-22-2006 எவ்வளவு காலத்திற்கு தான் பொறுமை காக்கிறது?பொறுமைக்கும் ஒர் எல்லை உண்டு. - mathanarasa - 04-23-2006 putthan Wrote:எவ்வளவு காலத்திற்கு தான் பொறுமை காக்கிறது?பொறுமைக்கும் ஒர் எல்லை உண்டு. அப்படி என்றால் எங்களை யாழ்பாணத்தில் இருந்து மூட்டை கட்டச் சொல்கின்றீர்களா பித்தன். :twisted: - kurukaalapoovan - 04-23-2006 இன்றைய நிலவரத்தில் வெற்றி பெறுமா (இறுதி) சமாதான நகர்வுகள்... இலங்கைத் தீவு பாரிய யுத்தத்தை நோக்கி சறுக்கிக் கொண்டிருக்கிறது. நோர்வையை முன்னிறுத்தி சர்வதேச சக்திகள் தமது இறுதிய முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். இந்தியாவும் தனது பொருளாதார நலன்களிற்காக பாரிய யுத்தத்தை விரும்பவில்லை. புலிகளை பொறுத்தவரை ஜெனிவா-2 இற்கான தேதிகளை பற்றிக் கூட தற்பொழுது பேசமுடியாது. முதலில் -1- சுமூகநிலமை உருவாக்கப்பட வேண்டும். மக்கள் மீதான வன்முறைகள் இனப்படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும். -2- கிழக்கு மாகாண தளபதிகள் வன்னி வந்து மத்திய குழு கூட்டம் முடிய வேண்டும். 1987 சதி அனுபவத்தால் தளபதிகளின் பாதுகாப்பில் மிக அவதானமாக இருக்கிறோம். - paandiyan - 04-24-2006 - yarlmohan - 04-26-2006 கடந்த ஞாயிறு TTN தொலைக்காட்சியில் நடைபெற்ற நிலவரம் ஆய்வு நிகழ்ச்சி ஒளிவடிவில். http://www.yarl.com/media/nilavaram/nilava...varam230406.asf நன்றி: TTN - இராவணன் - 04-26-2006 நன்றி மோகன் அண்ணா. |