![]() |
|
நான்காம் ஈழப் போர் தொடங்கும்: கொழும்பு ஊடகம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: நான்காம் ஈழப் போர் தொடங்கும்: கொழும்பு ஊடகம் (/showthread.php?tid=190) |
நான்காம் ஈழப் போர் தொடங்கும்: கொழும்பு ஊடகம் - I.V.Sasi - 04-16-2006 நான்காம் ஈழப் போர் தொடங்கும்: கொழும்பு ஊடகம் [ஞாயிற்றுக்கிழமை, 16 ஏப்ரல் 2006, 20:19 ஈழம்] [கொழும்பு நிருபர்] ஜெனீவா இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் நான்காம் ஈழப் போர் தொடங்கும் என்று இன்று ஞாயிற்றுக்கிழமை (16.04.06) வெளிவந்த கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: விடுதலைப் புலிகள் யுத்தத்திற்குச் சென்றால் அத்தகைய நிலைக்கு முகம் கொடுப்பதற்கு பாதுகாப்பு படையினரை தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் மீண்டும் யுத்தத்தினை தொடங்கினால் அது நான்காவது ஈழப்போரின் தொடக்கமாகக் கருதப்படும். இரண்டாம் சுற்றுப் பேச்சுக்களில் விடுதலைப் புலிகள் கலந்து கொண்டாலும் அதன் இறுதிவரை அவர்கள் இருப்பார்கள் என்பது நிச்சயமற்றது எனச் சில தரப்பினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர். முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் ஒப்புக்கொள்ளப்பட்டபடி வடக்கு-கிழக்கிலுள்ள ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களை அரசாங்கம் களையாததைக் காரணமாகச் சுட்டிக்காட்டி விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை மேசையிலிருந்து வெளியேறலாம் என்று கூறப்படுகிறது. இரண்டாம் சுற்றுப் பேச்சுக்களின் போது ஆயுதக் களைவிற்காக விடுதலைப் புலிகளினால் அரசாங்கத்திற்கு காலக்கெடு விதிக்கப்படக் கூடும் என்றும் கூறப்படுகிறது. அத்தகைய ஒரு காலக்கெடுவை விதித்து அந்த கெடுவுக்குள் வடக்கு-கிழக்கில் இருக்கும் ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களை களையுமாறும் இல்லையேல் தமது இயக்கம் யுத்தத்திற்கு திரும்பும் என்றும் விடுதலைப் புலிகள் அறிவிப்பார்கள் என்றும் தெரிகிறது. இத்தகைய சிக்கல் மிக்க நிலையே அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் யுத்தத்திற்குத் தயாராக இருப்பதற்கான பின்னணியின் காரணம் என்று இன்றைய கொழும்பு ஊடகத்தின் செய்தி தெரிவித்துள்ளது. puthinam.com - Subiththiran - 04-16-2006 உந்த பேச்சுக்களால் பேரினவாதிகள் தமிழருக்கு ஒன்றும் குடுக்கப் போறதில்லை. ஆனால் உலகநாடுகள்தான் பேசுங்கோ பேசுங்கோ என்று சொல்லிக்கொண்டு இருக்கினம். சென்ற தடவை பேசினதையே அரசாங்கம் இன்று வரைக்கும் அமுல்படுத்தேல்லை. உலகநாடுகள் அதைப்பற்றி ஒன்றும் சொல்லேல்லை. ஆனால் தடை அது இது என்று எங்கடை ஆக்களுக்கு அழுத்தம் குடுக்கினமாம். பார்ப்போம் இவர்களுடைய அழுத்தம் எதுவரைக்கும் என்று :?: . - kurukaalapoovan - 04-16-2006 தமிழ்மொழியில் "போர்" என்ற சொல்லிற்கும் "யுத்தம்" என்ற சொல்லிற்கும் என்ன வித்தியாசம்? பனிப்போர் என்கிறோம். உலகமகா யுத்தம் என்கிறோம். உலகப்போர் என்பது பெரிதாக பாவனையில் இருப்பது போல் தெரியவில்லை. - nallavan - 04-17-2006 போர் தமிழாகவும் யுத்தம் தமிற்றதாகவும் இருப்பதாக நினைக்கிறேன். ஒலிவசதிக்காக தேவையானதைப் பாவிக்கிறோம். - nallavan - 04-17-2006 தமிழற்றதாகவும். - uoorkkruvi - 04-17-2006 நல்லவன் நீங்கள் சொன்னதுதான் என்னுடைய கருத்தும். உதுக்குள்ளை சமர்-சன்டை-தாக்குதல் எண்டு சின்னச்சின்ன போரெல்லாம் கிடக்கு |