| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 453 online users. » 0 Member(s) | 450 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,004
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,028
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,495
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,247
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,524
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,728
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,255
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,876
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,930
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,187
|
|
|
| மீண்டும் சிங்களக் காடையர் வெறியாட்டம் |
|
Posted by: adsharan - 04-21-2006, 08:17 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
திருகோணமலையில் இன்று வெள்ளிக்கிழமை சிங்களக் காடையர்கள் மீண்டும் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் 15க்கும் மேற்பட்ட தமிழர் வீடுகள் தீக்கிரையாகின. இருவரை படுகொலை செய்துள்ளனர்.
திருகோணமலை தெகிவத்த பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்தார்.
திருகோணமலை சிங்களக் குடியேற்றப் பகுதியான தெகிவத்தவில் காலை 8.40 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
தெகிவத்த-கிளிவெட்டி வீதியில் தென்னந்தோப்பு வேலியில் சுற்றுக் காவல் பணியில் ஈடுபடும் படையினரை இலக்கு வைத்து கிளைமோர் கண்ணிவெடி பொருத்தப்பட்டிருந்தது.
இத்தாக்குதலையடுத்து சிங்களக் காடையர்களும் சிறிலங்கா இராணுவத்தினரும் அப்பகுதியில் தமிழர்கள் மீது மீண்டும் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.
இன்றைய வன்முறை வெறியாட்டத்தில் 15க்கும் மேற்;பட்ட தமிழர் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் இரண்டு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் எமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.
ஒருவரைக் கத்தியால் குத்தியும் மற்றொருவரை துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
வன்முறை வெறியாட்டம் கட்டவிழ்த்துவிடப்பட்டதையடுத்து கிளிவெட்டி நோக்கி தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து வருவதாகவும் துரைரட்ணசிங்கம் தெரிவித்தார்.
www.puthanam.com
|
|
|
| வெறி நாய்களிடம் விலகி இருப்போம் அல்லது அடித்து துரத்துவோம் |
|
Posted by: வினித் - 04-20-2006, 08:25 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
படையினர் வன்முறைகளைக்கு முடிவுகட்ட பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வோம்: கஜேந்திரன்
[வெள்ளிக்கிழமை, 21 ஏப்ரல் 2006, 01:42 ஈழம்] [ம.சேரமான்]
யாழ் குடா நாட்டில் சிறிலங்காப்படையின் வன்கொடுமைகளுக்கு முடிவுகட்டி எம் மண்ணில் இருந்து வெளியேற்றும் வரை இளைஞர் யுவதிகளை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சிங்கள படைகளினால் எமது உறவுகள் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் வல்லுறவுகள், அப்பாவி மக்கள் மீதும், மாணர்கள் மீதும் கடற் தொழிலாளர் மீதும் கண்மூடித்தனமாக மேற்கொள்ளப்படும் காரணமற்ற கைதுகள், சித்திரவதைகள்,கொலைகள் ஆகியவற்றுக்கு எதிராக பல போராட்டங்களை நாடாளுமன்றத்திற்குள்ளேயும் நடத்தி நாடாளுமன்ற செயற்பாடுகளையும் முடக்கியிருக்கின்றோம்.
சிறிலங்கா அரசினால் தமிழ் மக்கள் மீது வன்முறைகளை புரிந்த படையினர் இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டதாக இல்லை.
தமிழ்மக்கள் மீது அரச பயங்கரவாதம் தொடர்ச்சியாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
இதனை ஒருபோதும் சிறிலங்கா அரசு நிறுத்தப்போவதில்லை இத்தகைய கொடுமைகளுக்கெல்லாம் முடிவுகட்ட வேண்டும்.
ஆகவே எதிரிக்கு நாம் பதிலடி கொடுக்க வேண்டும். அவ்வாறு பதிலடி கொடுப்பதன் மூலம் தான் எங்கள் நிலத்தில் இருந்து ஆக்கிரமிப்பு படைகளை வெளியேற்ற முடியும்.
இதற்காக இளையர்,யுவதிகள் முன்வர வேண்டும் என்றார் கஜேந்திரன்.
கஜேந்திரன்
|
|
|
| டென்மார்க் விழாவால் விழாது இருப்பீர்! |
|
Posted by: வினித் - 04-20-2006, 06:06 PM - Forum: புலம்
- Replies (6)
|
 |
<b><span style='font-size:25pt;line-height:100%'>டென்மார்க் விழாவால் விழாது இருப்பீர்!</span>
[b]சில வருடங்களுக்கு முன்பு வரை ஐரோப்பிய, கனடா நாடுகளில் வாழுகின்ற மக்கள் வாரம் ஏதாவது ஒரு கலை(?)விழாவை நடத்திக் கொண்டிருந்தார்கள். அநேகமான கலைவிழாக்கள் திரையிசை நடன விழாக்களாக இருந்தன. நாடக விழா என்றால் கூட அதில் திரையிசை நடனங்களே அதிகமாக இடம்பெறும். இப்பொழுது இது போன்ற விழாக்கள் வெகுவாகக் குறைந்து விட்டன. இந்த விழாக்களில் வன்முறைகள் பெருகியது இதற்கு ஒரு முக்கிய காரணம். அத்துடன் எமது தமிழர்கள் தொலைக்காட்சி நாடகங்களில் மூழ்கி அறிவை வளர்த்துக் கொண்டிருப்பதும் ஒரு காரணம். ஆனாலும் ஒரு சில விழாக்கள் அங்கும் இங்கும் நடந்தபடிதான் இருக்கின்றன.
விழாக்கள் அதிகரித்திருந்த அன்றைய நாட்களில் பெருவாரியான தமிழர்களுக்கு அதுவே பொழுது போக்காக இருந்தது. அப்பொழுது புலம்பெயர் தமிழர்களுக்குள் ஊடுருவுவதற்கு சிறிலங்கா அரசு பல வழிகளில் முயன்று கொண்டிருந்தது. இதற்கு தமிழர்களால் நடத்தப்படுகின்ற விழாக்களையும் பயன்படுத்த முற்பட்டது. சிறிலங்காவின் தூதரகங்களின் ஊடாக இதற்கான முயற்சிகள் நடைபெற்றன. கொள்கைப் பிடிப்பின்றி வெறும் பொழுது போக்குக்காகவும் பணம் ஈட்டுவதற்காகவும் விழாக்களை நடத்துகின்றவர்களை அணுகிய சிறிலங்கா தூதரக அதிகாரிகள் விழாக்களுக்கு நிதி உதவி செய்யத் தயாராக இருப்பதாக தூண்டில் போட்டனர். ஒரு சில விழாக்கள் சிறிலங்கா தூதரகத்தின் நிதி உதவியுடன் நடந்தன. இது பல பேர் அறியாத ஒரு உண்மை. ஆனால் விழாக்களின் காலம் முடிவடைகின்ற நேரத்திலேயே சிறிலங்கா தூதரகங்கள் இது போன்ற முயற்சிகளில் இறங்கியதால், அவர்களால் இந்த ஊடுருவல் முயற்சியில் வெற்றி பெற முடியவில்லை.
இன்று சிறிலங்கா அரசின் ஊடுருவல்கள் ரிபிசி வானொலியிலும் சில இணையத் தளங்களிலும் இருப்பதைக் கண்கூடாகக் கண்டு வருகின்றோம்.
ஆனால் இந்த ஊடகங்கள் மூலமும் சிறிலங்கா அரசு எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்ல. முக்கியமாக இளம் தலைமுறை மீது இந்த ஊடகங்களால் சொல்லிக்கொள்ளும்படியான செல்வாக்கு எதையும் செலுத்த முடியவில்லை. ஆகவே இளம்தலைமுறையினர் மீது ஊடுருவும் வகையில் மீண்டும் விழாக்களை பயன்படுத்து முடிவெடுத்திருக்கிறார்களோ என்கின்ற சந்தேகம் வலுக்கின்ற மாதிரியான சம்பவங்கள் நடைபெறத் தொடங்கி உள்ளன.
டென்மார்க்கில் வரும் 29.04.06 அன்று ஒரு திரையிசை நடன விழா நடைபெற உள்ளது. "கலக்கப் போவது யாரு" என்னும் பெயரில் திரையிசை நடனப் போட்டியோடு வேறு சில நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளதாக விளம்பரங்கள் தெரிவிக்கின்றன. இளைஞர்களைக் கவரும் நோக்கில் கவர்ச்சிகரமான பெண்களின் படங்களோடு இந்த நிகழ்ச்சி விளம்பரம் செய்யப் படுகிறது. வெளிநாடுகளில் இருந்து சில நடனக் குழுக்கள் இதில் பங்கு பற்ற உள்ளன. மிகவும் ஆராவரமாக இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஆனால் இந்த விழா தீய சக்திகள் வேறொரு வடிவில் தமிழர்கள் மத்தியில் ஊடுருவுவதற்கான தொடக்க விழா என்பதே உண்மை. இந்த விழாவை நடத்துபவர்களாக அறிவிக்கப்பட்டிருப்பவர்கள் வெளியுலகத்தை பொறுத்தவரை அப்பாவிகள். ஆனால் இந்த "அப்பாவிகளை" இயக்குகின்ற பாவிகள் பலரும் அறிந்தவர்கள். "டென்மார்க் விவகாரங்களின் பின்னணி" என்னும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தவர்களாகிய மதி, வதனன் மற்றும் அவர்களை சார்ந்தவர்களே இந்த விழாவின் பின்னணியில் இருக்கின்றார்கள். இந்த மதி, வதனன் போன்றவர்களின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஏற்கனவே பலமுறை ஆதரங்களுடன் நிரூபிக்கப்பட்ட விடயம் அது.
இந்த விழாவை நடத்துவதாக சொல்லிக் கொள்பவர்கள் சில இணையத் தளங்களை நடத்துகிறார்கள். இந்த இணையத் தளங்கள் பதிந்து கொடுத்தவர்கள் மதி, வதனன் ஆகியோரின் "தமிழ் ஜனநாயக அமைப்பின்" ஒருங்கிணைப்பாளரே. அது மட்டுமன்றி இந்த விழாவிற்கான ஆலோசனைக் கூட்டத்திற்கு மதி சென்று வந்ததாகவும் உறுதிப்படுத்தப்பட்ட டென்மார்க் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் விழா மேடையில் இவர்களோ, அல்லது இவர்களுடைய குடும்பத்தை சேர்ந்தவர்களோ தோன்றுவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. இவைகளை விட வேறு பல ஆதாரங்களும் உண்டு.
இந்த விழாவில் சேர்க்கப்படும் நிதியில் ஒரு பகுதி அன்னை இல்லத்திற்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள். இந்த அன்னை இல்லம் கூட குமாரதுரை குடும்பத்தினரால் பராமரிக்கப்படுவதாக டென்மார்க்கில் பேசிக் கொள்வார்கள். ஆனால் பிரச்சனை அதுவல்ல. பிரச்சனை இந்த விழாவின் பின்னணியில் உள்ளவர்களின் உள்நோக்கம் சம்பந்தமானதே. கலையின் பெயரால் இளைஞர்கள் மத்தியில் ஊடுருவதுதான் இவர்களின் நோக்கம். பல நாடுகளிலும் இருந்த வரும் இளைஞர்களுடன் நட்பை ஏற்படுத்தி, தமது பக்கம் ஈர்த்து, பின்பு விடுதலைக்கு எதிராக அந்த இளைஞர்களை பயன்படுத்துவதே இவர்களின் திட்டம். பொய்யான பெயர்களில் விழாவை நடத்தி, பல பார்வையாளர்களைக் கலந்து கொள்ளச் செய்து, அவர்களை தம்முடைய ஆதரவாளர்களாக பிரச்சாரம் செய்கின்ற திட்டமும் உள்ளது.
இந்த திட்டங்களை உணர்ந்து கொண்ட பல டென்மார்க் தமிழர்கள் இந்த விழாவின் பின்னணியில் இருப்பவர்களை அம்பலப்படுத்த தொடங்கி விட்டார்கள். இதையடுத்து அந்த விழாவை தாங்களே நடத்துவதாக சொல்லிக்கொள்பவர்கள் தமது தீய சக்திகளுடனான தொடர்புகளுக்கான ஆதாரங்களை மறைக்கும் வேலையில் இறங்கியுள்ளனர். விளம்பரங்களிலும் சிறிது மாற்றம் செய்துள்ளனர். அத்துடன் இந்த விழாவிற்கும் மதி, வதனன் ஆகியோருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று சாதிக்கின்றனர். ஆனால் இவைகள் எல்லாம் இவர்களின் குட்டு வெளிப்பட்டுவிட்டதன் வெளிப்பாடே.
ஆகவே இளம் தலைமுறையே! மிகவும் விழிப்பாக இருங்கள்! தீய சக்திகளை இனம் கண்டு கொள்ளுங்கள்! கலையின் பெயராலும், நட்பின் பெயராலும் தவறான பாதைக்கு சென்று விடாதீர்கள்! இது போன்ற கவர்ச்சிகரமான விழாக்களால் விழுந்து விடாமல் இருங்கள்!
</b>
வி. சபேசன் (20.04.06)
|
|
|
| தொடர்ச்சியாக தாக்குதல்கள் இடம்பெறவுள்ளது - படைமுகாம்களிற்கு |
|
Posted by: iruvizhi - 04-20-2006, 03:20 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<b>தொடர்ச்சியாக தாக்குதல்கள் இடம்பெறவுள்ளது - படைமுகாம்களிற்கு அருகே இருக்க வேண்டாம் - மக்கள் படை வேண்டுகோள்</b>
- பாண்டியன் - வுhரசளனயலஇ 20 யுpசடை 2006 19:54
சிங்கள கூலிப்படைக்கு எதிரான எமது தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள தால், சிங்களப் படைகளுக்கு அருகிலோ அல்லது அவர்களது முகாம்களுக்கு அரு கிலோ இருக்க வேண்டாம் என்பதை தயவாக வேண்டுகின்றோம். இவ்வாறு மட்டு - அம்பாறை மாவட்ட பொங்கி எழும் மக்கள் படை வேண்டுகோள் விடுத்துள்ளது.
(தவறு திருத்தப்பட்டுள்ளது)
எடுத்த சபதம் முடிப்போம் என்ற தலைப்பில் மட்டு அம்பாறை மாவட்ட பொங்கியெழும் மக்கள் படையினால் வெளியிடப்பட்ட அறி;க்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அந்த அறிக்கையில் மேலும் தெரிவி;க்கப்பட்டுள்ளதாவது:
எமது அன்பான உறவுகளே,
சமாதானத்தின் பால் நாம் கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச நம்பகத்தன்மையும் சிங்கள இனவாத அரசினது இனவெறித் தனத்தால் எம் மனங்களில் இருந்து அகன்றிருக்கின்றது.
யுத்த நிறுத்தம், சமாதானம் என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு சிங்கள அரசாங்கமும், அவர்களது இராணுவமும் எமது மக்கள் மீது செய்துவருகின்ற கொடுமையான, அரக்கத்தனமான போர் வெறித்தனத்தை இன்னும் பொறுத்துக் கொண்டிருக்க எம்மால் முடியவில்லை.
எமது தமிழ் இனத்தையே அழித்து, ஒழித்து கபட நோக்கத்தோடு சிங்கள அரசாங்கம் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.
இதனை அறிந்துகொள்ளாத அப்பாவித் தமிழ் இளைஞர்களை ஏமாற்றி ஆசை வார்த்தை காட்டி எமது தேசத்துக்கே துரோகம் இழைப்பதற்காக துணை இராணுவக் குழுக்கள் என்ற போர்வைக்குள் வைத்திருக்கின்றார்கள்.
இந்த குழுக்களுக்கும் எம்மால் விடுக்கப்படுகின்ற எச்சரிக்கையும், அறிவித்தலுமாகும்.
நீங்கள் தமிழ்த் தேசத்துரோகிகளாக மாறி உங்கள் சொந்த வாழ்க்கையை ரணமாக்காதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறோம்.
எமது அன்பான மக்களே!
சிங்கள கூலிப்படைக்கு எதிரான எமது தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளதால், சிங்களப் படைகளுக்கு அருகிலோ அல்லது அவர்களது முகாம்களுக்கு அருகிலோ இருக்கவேண்டாம் என்பதை தயவாக வேண்டுகின்றோம்.
தேசத்தின் நன்மை கருதி எம்மால் எடுக்கப்பட்டிருக்கும் இவ் முடிவு தமிழரின் விடுதலைப் போருக்கு வலுச்சேர்க்கும் என நாம் ஆணித்தனமாக நம்புகிறோம்.
விடுதலைப் புலிகளே! உங்களைப் போன்று பொறுமை காக்க எம்மால் முடியாது. அதனால் நாம் வருந்துகின்றோம்.
<b>பொங்கி எழும் மக்கள் படை,
மட்டு அம்பாறை மாவட்டம்.</b>
தகவல்: சங்கதி புள்ளி கோம் www.sankathi.com
|
|
|
| ஜெனீவா பேச்சுக்களில் பங்கேற்பு இல்லை |
|
Posted by: adsharan - 04-20-2006, 08:34 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
ஜெனீவா பேச்சுக்களில் பங்கேற்பு இல்லை: விடுதலைப் புலிகள் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு
[ஜெனீவாவில் எதிர்வரும் 24 ஆம் நாள் நடைபெற உள்ள இரண்டாம் சுற்றுப் பேச்சுக்களில் பங்கேற்கப் போவதில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
கிளிநொச்சியில் இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் ஹன்சன் பௌயருடனான சந்திப்புக்குப் பின்னர் இம்முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் தாயகப் பகுதியில் தமிழர்கள் மீதான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வந்து இயல்பு நிலைமையை ஏற்படுத்தா வரை பேச்சுக்களில் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.puthinam.com
|
|
|
| ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீது வெறுப்பா? |
|
Posted by: Luckyluke - 04-20-2006, 06:59 AM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (91)
|
 |
என்னுடைய Blogல் நான் எழுதியிருந்த கருத்துகள் இவை :
<b>ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீது வெறுப்பா? </b>
நான் பல கருத்துக் களங்களில் கருத்தெழுதி வருபவன்... அதுபோல களங்களில் எல்லாம் சில ஈழத்தமிழர்கள் இந்தியாவுக்கு எதிராக மிக மோசமான கருத்துகளை ஆபாச மொழியில் வைப்பதை பார்க்கும் போது ஈழத்தமிழர்கள் இந்தியாவை எதிரிகளாக நினைக்கிறார்களோ என்று நினைப்பேன்.... எந்த இந்தியனும் ஈழத்தமிழன் மீது வெறுப்பு ஏதும் கொள்ளாத போது அவர்கள் ஏன் இது மாதிரி என்றும் நினைப்பேன்... புலிகள் வேறு, ஈழத்தமிழ் மக்கள் வேறு என்று பிரித்துப் பார்க்கும் பக்குவம் இந்தியர்களுக்கு இருக்கும் அளவுக்கு ஈழத்தமிழர்களுக்கு இந்திய அரசியல் வேறு, மக்கள் வேறு என்று பிரித்துப் பார்க்கத் தெரியாதோ என்றும் நினைப்பேன்...
ஆனால் என் நினைப்புக்கு வேட்டு வைக்கும் வகையிலும் சில மனிதநேயம் கொண்ட ஈழத்தமிழர்களை இணையத்தில் சந்தித்தேன்... அவர்கள் இந்தியா மீதும், தமிழகம் மீதும், தமிழ் மக்கள் மீதும் பெரும் அன்பு கொண்டிருக்கிறார்கள்... ஈழத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் கல்வி கற்று இன்று ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், கனடாவிலும் வசதியாக வாழும் அவர்கள் இந்தியாவுக்கு தங்கள் நன்றி கடனை செலுத்தத் தவறுவதில்லை... தங்களுக்கு வாழ்வு கொடுத்த இந்தியாவை அவர்கள் என்றும் மறக்க மாட்டார்கள் என்றும் புரிந்து கொண்டேன்....
ஆனாலும், சில ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீது வெறுப்பு ஏன்? என்று சிந்தித்துப் பார்த்தபோது அவர்கள் தரப்பு நியாயமும் எனக்கு புரிந்தது... உதாரணத்திற்கு யாழ் எனும் கருத்துக் களத்தில் பல தோழர்கள் இந்தியாவையும், இந்திய அரசியல் வாதிகளையும் மிக மோசமாக அர்ச்சித்து வந்தனர்... அதை கண்ட என் ரத்தம் கொதித்தது... பதிலுக்கு நானும் கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற அடிப்படையில் அவர்கள் தேசியத்தை அவமானப்படுத்தும் வகையில் கருத்துகளை வைத்தேன்... அந்தக் களத்தின் பொறுப்பாளர் திரு. மோகன் அவர்கள் எனக்கு தனிமடல் மூலம் ஏன் இதுபோல செய்கிறீர்கள் என்று கேட்டிருந்தார்... நான் பதில் அனுப்பும் போது இந்திய தேசியம் அவமானப்படுத்தப்படுவது உங்களுக்கு சந்தோசமா? என்று கேட்டிருந்தேன்.... அதற்கு அவர் கொடுத்த பதிலில் 87 - 90ஆம் ஆண்டுகளில் நடந்த சில சம்பவங்களை (அவரே நேரடியாக அனுபவப்பட்டிருக்கிறார்) எடுத்துச் சொன்னார்... குறிப்பாக அவருக்கு மிகவும் தெரிந்த பெண் ஒருவர் இந்திய ராணுவத்தால் மிக மோசமாக சித்திரவதை செய்யப்பட்டதை எடுத்துச் சொன்னார்.... அதனாலேயே பல ஈழத்தமிழர்கள் இந்தியா என்றாலே வெறுக்கின்றனர்... அது போல சம்பவங்களை எப்படி மறக்க முடியும் என்றும் கேட்டிருந்தார்....
அவர் தரப்பில் பார்த்தால் அது நியாயம் தான்... 80 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஜாலியன் வாலாபாக் சம்பவத்தையே நாம் இன்னும் மறக்கவில்லை... வெள்ளையன் என்றாலே நாம் வெறுப்பதற்கு அதுவும் ஒரு காரணம்... 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை அவர்கள் எப்படி மறப்பார்கள்? மறக்கச் சொல்லுவதும் நியாயம் இல்லையே?
இருந்தாலும் கூட அவர்கள் அந்த அநியாயங்களை செய்த இந்திய ராணுவத்தில் எந்த தமிழனும் இருந்திருக்க மாட்டான்... தமிழன் இருந்திருந்தால் அதுபோல செய்திருக்கவும் மாட்டான் என்று இன்னமும் குருட்டுத் தனமாக நம்புகிறார்கள்.... இந்தியாவை எதிர்க்கும் ஈழத்தமிழர்களின் நியாயம் இது....
ஆனாலும் இவர்கள் இன்னமும் இந்தியா ஈழத்துக்கு எதிரானது... இந்திய "ரா" உளவு அமைப்பு அவர்களுக்கு எதிராக 5,000 பேரை பணியில் அமர்த்தி இருக்கிறது என்று சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர்... இப்போதைக்கு இந்தியாவைப் பொறுத்தவரை ஈழப்பிரச்சினையில் நடுநிலை வகிப்பதையே விரும்புகிறது.... சிங்கள ராணுவத்துக்கோ, அல்லது ஈழச் சுதந்திரத்துக்கு போராடும் எந்த ஒரு அமைப்புக்கோ ஆதரவு தருவதில்லை... நாடு மலர்ந்தாலும் மகிழ்ச்சி என்ற நிலையிலேயே (மக்களின் பெருவாரியான நினைப்பும் இது தான்) நம் நாடு இருக்கிறது...
என்னைப் பொறுத்தவரை பாகிஸ்தானுடன் கள்ள தொடர்பு வைத்திருக்கும் இலங்கை அரசை விட விடுதலைப்புலிகளே இந்தியாவுக்கு இப்போதைக்கு நம்பகமானவர்கள்... இலங்கை அரசு எத்தனையோ முறை அமெரிக்க ராணுவத்தளத்தை திரிகோணமலையில் கொண்டு வருவதற்கு முயற்சி எடுத்து, இந்தியாவின் கடும் எதிர்ப்பினால் அது நடக்காமல் போய் வருவதை நாம் அறிவோம்....
சரி... ஈழத்தமிழர்களில் இன்னொரு வகையினரைப் பார்ப்போம்.... 83க்கு பிறகு ஈழத்தில் வாழ முடியாமல் இந்தியாவுக்கு வந்தவர்கள் ஒரு வகை.... 89ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் அங்கு கல்வியை பாதியில் விட்டு வந்தவர்கள் உயர்கல்வி கற்கும் வகையில் தமிழகத்தில் அவர்களுக்கு வசதி செய்து தரப்பட்டது.... வாழ்க்கைப் போராட்டத்தில் இருந்த ஈழ இளைஞர்கள் பலரும் இந்த வசதியைப் பயன்படுத்தி நன்கு கல்வி கற்று ஐரோப்பா, கனடா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு குடிபெயர்ந்து இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள்....
இது போன்றவர்கள் இன்னமும் இந்தியாவை மறக்க முடியாமல் வருடம் ஒரு முறையோ அல்லது இரு முறையோ இங்கு வந்துப் போகிறார்கள்... இவர்களுக்கு ஈழத்தை விட இந்தியாவின் மீதே ஈர்ப்பு அதிகம்... இந்திய மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.... உதாரணமாக அதே யாழ் களத்தில் வசம்பு என்ற புனைப்பெயரில் ஒரு நண்பர் இருக்கிறார்... சுவிட்சர்லாந்தில் வாழும் இந்த நண்பர் இந்தியா மீது பெரும் பற்று கொண்டவர்... இந்தியத் தலைவர்கள் மீதும், தமிழ் கலாச்சாரம் மீதும் அபிமானம் கொண்டவர்... அங்கிருக்கும் இந்தியாவை எதிர்க்கும் ஈழத்தமிழர்களை எதிர்த்தே கருத்துகள் சொல்லுவார்... கிட்டத்தட்ட இந்தியர் போன்றே நடந்து கொள்ளுவார்...
கருத்து.காம் என்ற வெப்சைட்டை நடத்தி வருபவரும் ஒரு ஈழத்தமிழரே... ஆனால் அவர் நடத்தும் கருத்துக் களத்தில் இந்தியப் பிரச்சினைகளும், தமிழக அரசியல், சினிமா என்றே விவாதிக்க இடம் அளித்துள்ளார்... தமிழக ஏழை மக்களுக்கு உதவும் வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்ற ஆவல் கொண்டவர்.... விடுமுறையில் இந்தியா வந்திருக்கும் இவர் தன் விடுமுறையை ஜாலி டூராக எண்ணாமல் இந்திய மக்களைப் பற்றிய Case Study ஆக எடுத்துக் கொண்டு இந்தியா வந்திருக்கிறார்.... அதைப் போலவே கனடாவில் வசிக்கும் மணிவண்ணன் என்ற நண்பரும் கூட (83க்கு முன்னாலேயே ஈழத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்) இந்தியா மீது பெரும் பற்று கொண்டவராக இருக்கிறார்...
இவ்வாறாக இரு வேறு கருத்துக் கொண்ட மக்களாகவே ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள்.... ஒட்டு மொத்தமாக இந்தியாவை அவர்கள் வெறுக்கிறார்கள் என்று கூறுவது தவறு... 87 - 90ஆம் ஆண்டைய சம்பவங்களே ஒரு சிலருக்கு இந்தியா மீது வெறுப்பு வர காரணம்... ஆனால் அவர்களும் கூட தமிழ்நாட்டுத் தமிழர்களை நேசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது...
விரைவில் ஈழம் மலர்ந்தால் இந்தியாவும் அவர்களுக்கு தகுந்த கவுரவம் கொடுக்கும்.... இந்தியா மீது அவர்களுக்கு இருக்கும் கசப்புணர்வும் குறையக்கூடும்.... ஈழம் மலரட்டும்....
|
|
|
|