| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 461 online users. » 0 Member(s) | 458 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 2,995
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,023
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,490
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,246
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,518
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,704
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,247
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,856
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,927
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,178
|
|
|
| சிங்கள இனவெறியில் பற்றி எரிந்த திருமலை |
|
Posted by: Naasamaruppan - 04-22-2006, 05:45 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
இருபத்தொரு பேர் சாவு!
அறுபது பேர்வரை காயம்!
முப்பத்தொரு வர்த்தக நிலையங்கள் எரிப்பு!
சேதமதிப்பீடு பன்னிரண்டரைக் கோடி!
வாகனங்கள், உடைமைகள் சேதம்!
நாற்பத்தொரு வீடுகள் எரிப்பு!
தமிழர் தாயகத்தின் தலை நகர் திருமலையில் சிங்களக் காடையர் கும்பலும், சிங்களக் குண்டர்களும் மேற்கொண்ட இனஅழிப்பு நடவடிக்கையானது தமிழினத்தினைத் திட்டமிட்டு அழிப்பதற்கான ஒரு முயற்சியாகவே கருதவேண்டியுள்ளது.
திருமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவைத்தலைவர் மாமனிதர் வன்னியசிங்கம் விக்னேஸ்வரன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தினால் சோபையிழந்து சோகத்துடன் காணப்பட்ட மக்களுக்குக் கடந்த 12ம் திகதி நடைபெற்ற சம்பவம் திட்டமிட்ட இனஅழிப்பின் ஒரு உச்ச நடவடிக்கையாக நோக்க வேண்டியுள்ளது. ஏனெனில் நடைபெற்ற சம்பவங்கள் ஒவ்வொன்றையும் அவதானிக்கின்ற போது இது தெளிவாகத் தெரிகிறது. சம்பவதினமான ஏப்ரல் 12ம் திகதி திருமலை நகரத்திலுள்ள மரக்கறி சந்தைப் பகுதிகளிலுள்ள தேங்காய்க் கடை ஒன்றுக்குள் இருந்து குண்டு ஒன்று வெடித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் சிறிலங்கா இராணுவச் சிப்பாய் உட்பட ஏழுபேர் பலியாகினர். இதில் தமிழ்ப் பெண்கள் மூவர் அடங்குவர். இதனைத் தொடர்ந்து வன்முறைகள் தமிழ் மக்கள் மீது ஏவிவிடப்பட்டன. ஏற்கனவே தயார் நிலையில் இருந்த சிங்களக் காடையர் கும்பல்கள் வாகனங்களில் வந்து இறக்கப்பட்டதும் வன்முறைகளில் ஈடுபட்டன. தமிழ் மக்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.
தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்டு பின்னர் எரியூட்டப்பட்டன. சிங்கள ரவுடிக் கும்பல் இவ்வாறான மிலேச்சத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது நேர்மை, சட்ட, ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்கின்ற படைத்தரப்பாக சிறிலங்காப் படையினரும் பொலிசாரும் இருந்திருந்தால் இவ்வாறான வன்முறைச் சம்பவங்களை உடனடியாகக் கட்டுப்படுத்தியிருக்கலாம்.
சிங்களக் குண்டர்கள் தாக்குதல் நடத்தும்போது சிறிலங்காப் படையினர் கைகட்டி வேடிக்கை பார்த்துள்ளனர். உண்மையில் இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு இனஅழிப்பு நடவடிக்கை என்பதற்கு நிறையவே ஆதாரங்கள் உள்ளன. திருமலை மரக்கறிக் கடைக்குள் குண்டு வெடித்து வன்முறைகள் ஆரம்பித்த போது தாக்குதல் நடத்தத் தயார் நிலையிலிருந்த சிங்களக் குண்டர்கள் வாகனங்களில் கொண்டு வந்து இறக்கப்பட்டனர்.
பொல்லுகள், தடிகள், மண்வெட்டிகள், கோடரிகள், கத்திகள் போன்ற கூரிய ஆயுதங்களை அவர்கள் தாக்குதலின் போது பயன்படுத்தினர். அந்த ஆயுதங்கள் எவையும் பாவனையில் இருந்த ஆயுதங்களல்ல. அத்துடன் பொல்லுகள், தடிகள்கூட எதிர்பாராத விதமாக தாக்குதலுக்குத் தேடி எடுத்தவையாகத் தோன்றவில்லை. கத்தி, கோடாரி, மண்வெட்டி என்பனவற்றின் பிடிகள் புதிதாகச் சீவி போடப்பட்டிருந்ததுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. பொல்லுகள், தடிகள் என்பனவும் அவ்வாறே வைக்கப்பட்டிருந்தன.
எனவே எதிர்பாராத விதமாக ஒரு தாக்குதலுக்கு வருவதானால் இவ்வாறு ஆயுதங்களை உடனடியாக எடுத்துவர முடியாது என்பது உண்மையான விடயம். அடுத்தது திருமலை நகரப் பகுதியில் முச்சக்கரவண்டிகள் நிறுத்துமிடங்களிலிருந்த சிங்களவர்களுக்குச் சொந்தமான முச்சக்கரவண்டிகள் ஏற்கனவே திட்டமிட்டு அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டு விட்டன.
அது மாத்திரமன்றி வன்முறையில் ஈடுபட்ட கும்பல் தமிழ் மக்களின் பெறுமதி மிக்க சொத்துக்களைச் சூறையாடிக் கொண்டு போயுள்ளனர். சொத்துக்கள் வெளியே கொண்டு செல்லப்பட்ட பின்னரே தமிழர்களுக்குச் சொந்தமான வர்த்த நிலையங்களுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது. திருமலை மரக்கறிச் சந்தையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பைத் தொடர்ந்து பிரதான வீதி, மத்தியவீதி, ஏகாம்பரவீதி ஆகிய வீதிகளில் சிங்களக் குண்டர்கள் வன்முறையில் ஈடுபட்ட அதேவேளை மூன்று மைல் தொலைவிலுள்ள அபயபுரத்திலுள்ள தமிழ் மக்கள் மீதும் வன்முறைகளில் சிங்களக் குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். திருமலையில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது திருமலை நகர இராணுவ அதிகாரி நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.
இவரது கண்காணிப்பின் பேரிலேயே வன்முறையாளர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இரு மணி நேரத்திற்கு இவ்வாறான பேரனர்த்தம் நடைபெற்று நிறைவடைந்த பின்னர்தான் படையினர் வந்து கண்துடைப்பிற்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. அந்த நேரத்தில் கூட வன்முறையாளர்கள் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் எவரையும் சிறிலங்கா படையினர் கைது செய்யவோ அல்லது அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து காயப்படுத்தவோ முயற்சிக்கவில்லை. வேண்டுமென்று தமிழ் மக்கள் மீதான இன அழிப்பைப் பார்த்து சிங்கள படைச்சிப்பாய்கள் ரசித்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வன்முறையினால் 21 அப்பாவித் தமிழ் மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளது. 31 வர்த்தக நிலையங்கள் எரியூட்டப்பட்டுள்ளன. இந்த 31 வர்த்தக நிலையங்களிலிருந்த சொத்துக்களின் ஆரம்பகட்ட மதிப்பீடு பன்னிரெண்டரைக் கோடி ரூபா எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. எனினும் எரியூட்டப்பட்டதன் போது சேதமடைந்த கட்டிடங்களின் பெறுமதி மதிப்பிடப்படவில்லை.
இவை மாத்திரமன்றி பெருமளவிலான வாகனங்கள் எரியூட்டப்பட்டுள்ளன. லொறி, தனியார் வான், உந்துருளிகள் இவற்றில் அடங்கும். இவை மாத்திரமன்றி ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் எரியூட்டப்பட்டதுடன் இரு தொண்டர் நிறுவனங்களும் சிங்களக் காடையர்களால் அடித்து நொருக்கி சேதமாக்கப்பட்டுள்ளன. ஒப்பர்சிலோன். இளைஞர் அபிவிருத்தி அலுவலகம் ஆகிய தொண்டர் நிறுவனங்களே இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை திருமலை நகரப்பகுதியில் ஒரு வீடு மாத்திரமே எரிக்கப்பட்ட அதேவேளை மகிந்தபுரம், நடேசபுரம் பகுதியில் 40 வீடுகள் சிங்களக் காடையர்களால் எரியூட்டப்பட்டன. இச்சம்பவத்தைத் தொடர்ந்து நடேசபுரம், மகிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த மக்கள் அச்சம் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர்.
அன்பு வெளிபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் 70 குடும்பங்களைச் சேர்ந்த 260 பேரும், துவரங்காடு பாரதி வித்தியாலயத்தில் 81 குடும்பங்களைச் சேர்ந்த 209 பேரும் இடம் பெயர்ந்துள்ளனர். அத்துடன் கன்னியா கிராமத்தைச் சேர்ந்த 42 குடும்பங்களைச் சேர்ந்த 207 பேரும், மாங்காயுங்கைச் சேர்ந்த 72 குடும்பங்களைச் சேர்ந்த 198 பேரும், பீடியடிக் கிராமத்தைச் சேர்ந்த 40 குடும்பங்களைச் சேர்ந்த பேரும் 170 பேரும் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர்.
இவர்களுக்கு அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன. எனினும் சித்திரைப் புதுவருடத்திற்கு முதல் நாளும் சித்திரைப் புது வருட தினத்தன்றும் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் காரணமாக மக்களிடையே அச்சமும் பீதியும் அதிகரித்துள்ளன.
இவை ஒருபுறமிருக்க திருமலை மாவட்டத்திலுள்ள வங்கிகள் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படாத வiர் பணிகளை இடைநிறுத்தப் போவதாக அறிவித்ததுடன் வங்கிப் பணிகளை இடை நிறுத்தியுள்ளன. திருமலையிலுள்ள இலங்கை வங்கி, மக்கள் வங்கி, ஹற்றன் நஷனல் வங்கி, கொமர்ஷல் வங்கி, சம்பத் வங்கி, செலான் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி ஆகிய ஏழு வங்கிகளின் நிர்வாகத்தினரே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
சம்பவதினத்தன்று இலங்கை வங்கி சிங்களக் கும்பலால் தாக்கப்பட்ட சம்பவம், மற்றும் வங்கிப் பாதுகாப்பு அதிகாரி தாக்கப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில் இவ்வாறு வங்கிகளின் முகாமையாளர்கள் மற்றும் அதிகாரிகள், பணியாளர்கள் இணைந்து வங்கிப் பணிகளை இடை நிறுத்தியுள்ளனர்.
இதனால் திருமலை மாவட்டத்தில் பொது மக்களுடனான கொடுக்கல் வாங்கல்கள் முடக்கப்பட்டதுடன் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இவை மாத்திரமன்றி திருமலையில் தொடரும் பதட்டம் காரணமாக திருமலை மாவட்டத்தில் கல்வி நடவடிக்கைகளும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சிறிலங்கா அரசு ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி சுமுக நிலையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதாக வெளிப்படுத்தினாலும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் திருமலை மக்களின் வாழ்வியலை மிக வேகமாகப் பாதிப்படையச் செய்துள்ளன.
திருமலை மாவட்டத்தில் தமிழினத்திற்கு எதிரான இனவன்முறைகள் என்பன இன்று நேற்று அல்ல. காலங்காலமாக அரங்கேறி வருகிறன. சிங்களப் பேரினவாதம் திருமலையிலிருந்து தமிழினத்தை பூண்டோடு அழித்து திருமலையை சிங்கள பூமியாக்கும் நடவடிக்கைகள் பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்றுள்ளன.
இதனடிப்படையில் 83ம், 85ம், 86ம், 87ம், 90ம் ஆண்டுகளில் தமிழின அழிப்பு நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளன. திருமலை நகரில் கடந்த 83ம் ஆண்டு யூலை 26ம் நாளன்று திருமலை கடற்படைத் தளத்திலிருந்து சீருடையில் நகருக்குள் நுழைந்த சிறிலங்கா கடற்படையினர் தமிழ் மக்களது வர்த்தக நிலையங்கள், வீடுகள் என்பனவற்றைக் கொழுத்தி சாம்பல் மேடாக்கி விட்டுச்சென்றனர்.
அதன் பின்னர் கடந்த 90ஆம் ஆண்டு திருமலை நகரம் மற்றொரு சோகத்தில் மூழ்கியது. சிங்களப் பேரினவாதிகள் புகுந்து தமிழ் மக்களைப் படுகொலை செய்திருந்தனர். அதன் பின்னர் தமிழ் மக்கள் மீது அரச பயங்கரவாதம் பல்வேறு வன்முறைகளையும் படுகொலைகளையும் செய்தாலும் ஒட்டுமொத்தமாகப் பாரிய இனஅழிப்பு நடவடிக்கை என்றால் அண்மைய சம்பவம்தான்.
இதுவரை காலமும் திருமலை மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகளுடன் ஒப்பிடும்போது கடந்த வாரம் குறுகிய நேரத்துக்குள் இடம்பெற்ற சம்பவம் மிகப் பெரிய உயிரழிவையும், சொத்தழிவையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எதிர்காலத்திலும் சிங்களப் பேரினவாதம் இவ்வாறான தாக்குதலை நடத்தலாம் என்ற அச்சம் தமிழ் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
எனவே எதிர்காலத்தில் திருமலையில் தமிழ் மக்கள் பேரினவாதத்தில் சிக்கிவிடாமல் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதானால் வன்முறைகளுக்கு உடந்தையாகவிருந்த இராணுவ உயர் அதிகாரியும் ஏனைய வன்முறைக் கும்பல்களும் சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டு சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
மாறாக விசாரணைகள் கண்துடைப்பாக நடைபெறுமானால் எதிர்காலத்திலும் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெறாது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை.
அஸ்வதன்
மட்டக்களப்பு ஈழநாதம்
|
|
|
| விரைந்து வருகிறதா நாலாம் கட்ட ஈழப்போர்? |
|
Posted by: Naasamaruppan - 04-22-2006, 05:42 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதிகள் கிளிநொச்சிக்குச் செல்வதற்குரிய போக்குவரத்து வழிமுறைகளுக்கு சிறிலங்கா அரசு இணக்கம் தெரிவிக்காது மறுத்துரைத்திருப்பதன் காரணத்தால் திட்டமிட்டபடி நடைபெறவிருந்த ஜெனீவா பேச்சுக்கள் நடைபெறாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதனடிப்படையில் வடக்குக் கிழக்கில் இடம்பெற்றுவரும் கள நிலவரங்களையும் அவதானிக்கின்றவிடத்து நாலாம் கட்ட ஈழப்போர் நெருங்கி வருவதற்கான சாத்தியங்களே அதிகரித்துள்ளன. முதலில் ஜெனீவாப் பேச்சுக்கள் நடைபெறாத சூழலை உருவாக்குவதும் போரைத் திணிப்பதும் சிறிலங்கா அரசின் பிரதான நோக்கமாகும்.
ஏன் ஜெனீவாப் பேச்சுக்களுக்கான சூழலை அரச தரப்பு சீர் குலைக்கின்றது என்பது குறித்து முதலில் ஆராய வேண்டும். கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற முதல் சுற்று ஜெனீவாப் பேச்சுக்களின் போது விடுதலைப் புலிகள் முன்வைத்த பிரதான விடயம். ஒட்டுக்குழுக்களின் விவகாரம்.
பேச்சுக்களின் பிரதான நோக்கம் போர் நிறுத்தத்தை பலப்படுத்துவதாக அமைந்திருந்ததால் போர் நிறுத்த அமுலாக்கலுக்குத் தடையாகவிருந்த, போர் நிறுத்த உடன்படிக்கைக்கு முரண்பாடாகவிருந்த ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டு இயல்பு நிலை உருவாக்கப்பட வேண்டிய அவசியம் பற்றி விடுதலைப்புலிகள் வலியுறுத்தியிருந்தனர்.
ஆனால் ஜெனீவாவில் அரச தரப்புப் பிரதிநிகள் அதனை ஏற்றுக்கொண்ட போதும் அவர்கள் கொழும்பு திரும்பிய பின்னர் விடுதலைப்புலிகள் ஜெனீவாவில் சுட்டிக்காட்டியிருந்த எந்த ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களை களையவோ அல்லது அவர்களது செயற்பாடுகளை முடக்கவோ முயலவில்லை. மாறாக சிங்களப் பேரினவாத சக்திகள் ஒட்டுக்குழுக்களின் ஆயுதக் களைவு விடயத்தில் கடும் எதிர்ப்புக் காட்டிய அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்டுக் குழுக்களின் செயற்பாடுகள் தீவிரமடைந்தன.
குறிப்பாகக் கருணா கும்பல் மட்டக்களப்பு நகரில் உயர் பாதுகாப்பு மிக்க கோவிந்தன் வீதியில் முகாமிட்டுள்ளது. வெள்ளை வானில் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.
தமிழ் இளைஞர்கள், மாணவர்களைக் கடத்தி கட்டாயப் பயிற்சி அளிக்கின்றனர். ஆட்கொலை, வர்த்தகர்கள், செல்வந்தர்கள் மிரட்டப்பட்டு பணம் கொள்ளையிடப்படுகின்றது. இதேவேளை கோவிந்தன் வீதிக்குச் செல்வதற்கு முன்பாக கருணா குழு வு.ஆ.ஏ.P என்ற மிகப் பெரியதொரு வரவேற்புப் பலகையை நாட்டியுள்ளனர்.
அது மாத்திரமன்றி அண்மையில் கோவிந்தன் வீதியிலுள்ள முகாமை அலுவலகம் என்ற போர்வையில் பகிரங்கமாகத் திறந்து தமது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறான ஒரு நிலையில் கருணா குழு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இயங்குவது உறுதிப்படுத்தப்பட்ட விடயம். இதனைப் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவும் பகிரங்கப்படுத்தியிருந்தது.
ஆனால் அவை எல்லாவற்றையும் மூடிமறைத்த சிறிலங்கா அரசாங்கம் அவ்வாறு எந்த ஒரு ஒட்டுக்குழுவும் இல்லை என்பதை திரும்பத் திரும்பக் கூறிவந்தனர். இந்நிலையில் இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடைபெறுமிடத்து கருணாகுழு உட்பட சகல ஆயுதக் குழுக்களிடமிருந்தும் ஆயுதங்கள் களையப்படாததற்குத் தகுந்த பதில் கூற முடியாத நிலையில் அரசு திண்டாடும் ஒருநிலை உருவாகலாம்.
அது மாத்திரமன்றி மட்டக்களப்பு நகரில் பகிரங்கமாக கருணா குழு பெயர்ப் பலகையை நட்டு தமது செயற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அவ்வாறு எந்த அலுவலகமும் இல்லை என்று ஜெனீவாவில் புலிகளின் முன்னால் கூற முடியாத நிலையில் அரசுக்குள்ள ஒரேவழி இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கு விடுதலைப் புலிகளை கலந்து கொள்ளாமல் செய்வதாகும். இதனடிப்படையில் அரசதரப்பு முதலாவதாக மேற்கொண்ட நடவடிக்கை விடுதலைப்புலிகள் மீதும், தமிழ் மக்கள் மீதும் தாக்குதல் நடத்துவது. இதனடிப்படையில் முதல் சுற்று ஜெனீவாப் பேச்சுக்குப் பின்னர் போராளிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. போராளிகள் வீரச்சாவடைந்த போதும், பொது மக்கள் பலியான போதும் உச்ச பொறுமையில் நின்று சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பிற்கு மாறாக விடுதலைப் புலிகள் செயற்படவில்லை. இத்தகைய சூழலில் திருமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவைத் தலைவர் மாமனிதர் விக்கினேஸ்வரன் மீது இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது.
அது மாத்திரமன்றி திருமலையில் திட்டமிட்டதொரு இன அழிப்பு நடவடிக்கையையும் மேற்கொண்டனர். எனினும் விடுதலைப்புலிகள் ஜெனீவாப் பேச்சுக்களிலிருந்து விலகிச் செல்லாத நிலையில் தான் தென்தமிழீழத்திலிருந்து விடுதலைப் புலிகளின் தளபதிகள். வன்னிக்கு வந்து தலைமைப் பீடத்துடன் கலந்துரையாடுவதற்குரிய வகையில் பயண ஏற்பாடுகளை வழங்காது அரசு இழுத்தடித்து வருகிறது.
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் அவர்களுக்கும். விடுதலைப் புலிகளுக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பின் போது விடுதலைப் புலிகளின் பயண ஏற்பாடு குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
அதற்கமைய சிறிலங்கா கடற்படையினரின் தலையீடு அற்ற படகு மூலம் கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதிகள் வழித்துணையுடன் முல்லைத்தீவிலிருந்து புறப்பட்டு கிழக்கிற்கு வந்து கிழக்கிலிருந்து தளபதிகளை ஏற்றிச் செல்வதாக தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய ஏப்ரல் 15ம் திகதி ஞாயிற்றுக் கிழமை முல்லைத்தீவிலிருந்து போர் நிறுத்த கண்காணிப்புக்குழுப் பிரதிநிதிகளுடன் புறப்பட்டபோது இராணுவம் மற்றும், கடற்படையினரின் தலையீடு காரணமாக விடுதலைப் புலிகள் தமது கடற் பயணத்தை இடைநிறுத்தி கரை திரும்பினர்.
போர் நிறுத்த கண்காணிப்புக்குழு விடுதலைப்புலிகளுக்குத் தெரிவித்தமைக்கு மாறாக படையினர் தலையீடு செய்ததன் காரணமாகவே பயணத்தை விடுதலைப்புலிகள் இடைநிறுத்திக் கொண்டனர். இதனை அடுத்து தோன்றியுள்ள நெருக்கடி நிலையும் தென்தமிழீழ தளபதிகளுடன் தலைமைப்பீடம் கலந்துரையாட முடியாத சூழலில் இரண்டாம் சுற்று ஜெனீவாப்பேச்சு நடைபெறமாட்டாது. இதில் விடுதலைப்புலிகள் உறுதியாக இருப்பதுடன், இது தொடர்பாக தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் ஹான்ஸ் பிறஸ்கருக்குத் தெளிவாக எழுதி அனுப்பியுள்ள கடிதத்தில் விளக்கியுள்ளார்.
ஆனால் விடுதலைப்புலிகள் ஜெனீவாப் பேச்சுவார்த்தையை நிராகரிப்பதற்கான ஒரு தோற்றப்பாட்டை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தி சர்வதே சசமூகத் திடமிருந்து ஆதரவுதேடும் நடவடிக்கைகளிலும் அரசு ஈடுபட்டுள்ளது.
உண்மையில் கிழக்குத் தளபதிகளுடன் தலைமைப்பீடம் கலந்துரையாட வேண்டியது அவசியமானது. ஜெனீவா முதல் சுற்றுக்குப் பின்னர் அங்குள்ள நிலைமை குறித்து கலந்துரையாடி இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கு தயார்படுத்த வேண்டியது முக்கிய விடயம்.
சிறிலங்கா அரச தரப்பு சர்வகட்சி மாநாடு மற்றும், அமைச்சரவை உயர் மாநாடு என பல்வேறு ஆலோசனைகளை நடத்தி பல தீர்மானங்களை எடுப்பது எவ்வாறு முக்கியத்துவம் மிக்கதாக மகிந்தர் கருதுகிறாரோ அதேபோன்று விடுதலைப் புலிகளின் தலைமையும் கிழக்குத் தளபதிகளுடன் கலந்துரையாடுவது முக்கியத்துவம் மிக்கதாக நோக்கப்படுகிறது.
எனவே இவ்விவகாரத்தை சர்வதேச சமூகம் சரியானதொரு கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ள வேண்டும். சிறிலங்கா அரசு ஜெனீவாப் பேச்சுக்கள் இரண்டாவது தடவையாகவும் நடைபெற வேண்டுமென்பதில் அக்கறை கொண்டிருந்தால் விடுதலைப் புலிகளின் போக்குவரத்து வசதிகளை முடக்கவேண்டிய அவசியமில்லை.
தற்போது ஜெனீவா இரண்டாம் சுற்றுப் பேச்சுக்களை மீள ஆரம்பிப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டிய மிகப் பாரிய பொறுப்பு மகிந்த அரசுக்குரியது. விடுதலைப் புலிகள் கோரியபடி கிழக்குத் தளபதிகளை கிளிநொச்சிக்கு அனுப்புவதற்கான பயண ஒழுங்குகளை மேற்கொள்ளுவது என்பது கடினமான விடயமல்ல. கடந்த காலங்களில் இடம்பெற்றது போன்று போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் வழித்துணையுடன் உலங்கு வானூர்தி பயண ஏற்பாடுகளை வழங்கியிருக்கலாம். அல்லது விடுதலைப் புலிகளின் கடல்வழி பயணத்தில் தலையீடை தவிர்த்து ஒத்துளைப்பு வழங்கியிருக்கலாம்.
ஆனால் இரு வழிப் போக்குவரத்தையும் முடக்கியுள்ள அரசு மீளவும் போரை திணித்து விடுவதற்கான சூழலையே உருவாக்கிவருகின்றது. இவை ஒரு புறமிருக்க தமிழர் தாயகப் பிரதேசத்தில் படையினருக்கு எதிரான தாக்குதல்களை பொங்கி எழும் மக்கள் படை தீவிரப்படுத்தியுள்ளது.
ஜெனீவா முதல் சுற்றுப் பேச்சுக்கு முன்னதான கால கட்டத்தில் படையினருக்கு எதிரான நடவடிக்கைகளை பொங்கி எழும் மக்கள் படை தீவிரப்படுத்தியிருந்தது. எனினும் நோர்வேயின் விசேடசமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம்மிற்கும் தேசியத் தலைவர் அவர்களுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து முதலாம் சுற்று ஜெனீவாப் பேச்சுக்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து பொங்கி எழும் மக்கள் படையினர் தமது தாக்குதல்களை இடைநிறுத்தியிருந்தனர்.
ஆனால் ஜெனீவாப் பேச்சுக்கான இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கான ஏது நிலையை உருவாக்காது. தமிழ் மக்கள் மீதும் போராளிகள் மீதும் திட்டமிடப்பட்ட தாக்குதல்களை நடத்தி படுகொலைகளை சிங்களப் பேரினவாத அரசு செய்துவரும் நிலையில் பொங்கி எழும் மக்கள் படை மீண்டும் ஆர்பரித்து சீறி எழுந்துள்ளது. இப்போது படையினருக்கு எதிரான கிளேமோர் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. மறுபுறம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையினர் தாக்குதல் முயற்சிகளிலும் ஈடுபடுகின்றனர். மறுபுறம் பொதுமக்களும் பழி வாங்கப்படுகின்றனர், பொது மக்கள் பழி வாங்கப்படும் நிலையில் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பொங்கியெழும் மக்கள் படையின் தாக்குதல்கள் தீவிரமடையும் என்பதை கள நிலவரங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றன.
எனவே இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கான உகந்த சூழலை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு சிறிலங்கா அரசுக்குரியது. அரசாங்கத் தரப்பிலிருந்து வெளிவரும் கருத்துக்களும், செயற்பாடுகளும் சர்வதேச சமூகம் தெரிவிக்கின்ற பக்க சார்பான கருத்துக்களும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவனவாகத் தெரியவில்லை. போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திட்டதன் நோக்கம் சமாதான வழிமுறைகளில் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் என்பதை அடிப்படையாகக் கொண்டதாகும். அதற்கான பேச்சுக்களே சர்வதேச அரங்கில் நடை பெறுவதற்கான முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்பட்டது.
ஆனால் இன்று நிலைமை தலைகீழாகி விட்டது. சமாதானப் பேச்சுக்கள் என்ற நிலையிலிருந்து இறங்கி போர் நிறுத்த உடன்படிக்கையை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பான பேச்சுக்களை இரு தரப்பும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு ஜெனீவாவில் முதல் சுற்றுப் பேச்சுக்கள் நடைபெற்றன.
ஆனால் அப்பேச்சுக்களில் இணக்கம் காணப்பட்ட விடயங்களை அரசு அமுல்படுத்தாது இழுத்தடித்ததால் இரண்டாம் சுற்றுப் பேச்சுக்களில் முதல் சுற்றுப் பேச்சுக்களில் இணக்கம் காணப்பட்ட விடயங்களை அமுல்படுத்துவது தொடர்பானதும் அமுல்படுத்தாததற்குக் காரணம் என்ன என்பது தொடர்பிலான பேச்சுக்களாகவே அமையவிருந்தது.
இதிலிருந்து ஒரு விடயம் தெளிவாக உணரப்படுகின்றது. போர் நிறுத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்தி வடக்குக் கிழக்கில் இயல்பு சூழலை உருவாக்கி சமாதான பேச்சுக்களை நடத்தி தீர்வு காண்பது என்ற விடயம் சிறிலங்கா அரசும், பேரினவாத சக்திகளும் கொண்டிருக்கின்ற கடும் போக்குத்தனத்தால் அரிதாகவே காணப்படுகின்றது. அதேவேளை அரசு விடுதலைப் புலிகளுக்கான பயணத்திற்கு ஒரு இசைவான அணுகுமுறையை கையாளாதவிடத்து போர் நிறுத்தம் முடிவுக்கு வருவதுடன், மீளவும் நாலாம் கட்ட ஈழப்போர் மூளும் ஆபத்தையே கள நிலவரம் உருவாக்கும்.
பிரவீனா
மட்டக்களப்பு ஈழநாதம்
|
|
|
| Hotmail 2000 mb |
|
Posted by: தமிழரசன் - 04-22-2006, 03:13 AM - Forum: இணையம்
- Replies (1)
|
 |
உங்கள் HOTMAIL MAIL BOX 2000MB ஆக்குவதற்கு -
Options > Upgrade > MSN Upgrade Opportunities > Free Services & Betas > Beta products > Windows Live Mail beta
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|
|
|
| நஞ்சு! |
|
Posted by: வர்ணன் - 04-22-2006, 12:57 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (5)
|
 |
<b>நஞ்சு!
கோடாரி பிடரியில் இறங்குது
இருந்தும் என்ன
கொண்டாடி மகிழ்கிறோம்!
லக்கி என்றும் வாறார்
ராஜாதிராஜானும் வாறார்
வேர்கள் வெறுத்த மரம்-
சுயம்பு இல்லைதான்!
ஆனால் - வசம்பு என்று வரும் - இங்கே!!!
கட்டியணைத்து
உச்சி மோந்து -கடுக்க இடுப்பில்
சுமந்த தாயை - கழுத்தில்
கொழுக்கி போட்டு - குரல் வளை அறுத்து
கொல்ல நினைப்பது - கொடூரம்!
நாய் கூட தன் குட்டிக்காய் போராடும்!
இனத்துக்காய் போராடி இறந்தவன் மேல்
காறியுமிழ்கிறாய் !
நீ அதுவும் இல்லை - அப்போ
எதுதான் நீ?
கவனி - நிலைக்கண்ணாடி இருக்கா?-வீட்டில் ?
உன் முகம் பார் மறுபடியும் ..........
தெரிவது உன் முகமல்ல......
முற்றிலும் - துரோகம்! 8)</b>
|
|
|
| அண்ணோய் வணக்கம் - ! |
|
Posted by: வர்ணன் - 04-21-2006, 11:58 PM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (21)
|
 |
அண்ணோய் வணக்கம் - !
உங்களதான் - மோகன் அண்ணோய் -!
ஏனுங்க இம்புட்டு சட்டதிட்டம் எல்லாம் வச்சிருக்கிங்க - இங்க -!
எவராவது - வந்து - எங்க இனத்துக்கு எதிராய் - பொறுமை கடக்கிற அளவிற்கு- தலைப்பு கூட ஆரம்பிச்சு - அவங்க பாட்டுக்கு ஏதும் பேசி போனால் கண்டுக்கிறீங்க இல்ல - ஏன்?
லக்கி லுக் என்னு வாறாங்க - ராஜாதிராஜானும் வாறாங்க -
இரண்டு பேரும் வேற என்னும் சொல்லுறாங்க -
லக்கி லுக் என்பதை - ஒரு ஆணுக்கு சார்பாய் மொழி பெயர்த்தால் - ராஜாதிராஜானு - வருமோ என்னமோ!
அது ஒரு பொருட்டல்ல திரு .மோகன் அண்ணோய் -
சும்மா கோமாளி கூத்து ஆடுற இவங்களுக்கு - கோவத்தில பதில் சொல்ல போய்-
எங்க விடுதலையை ரொம்ப நேசிக்கிற - தமிழக - உறவுகளுக்கும் - இவர்களுக்கு சொல்லபோன கருத்துக்கள் -நோகடிச்சிடுமோ - நன்றி கெட்டதனமாய் - அவர்கள் நினைக்க கூடுமோ என்று பயப்பிடுறோம் - அண்ணோய்!
இதை ஒரு வழிக்கு கொண்டு வருவீங்களா? முடியுமா?
எது என்னமோ- இப்பிடி - அசட்டையா இருந்ததாலதான் -
ஒரு சூடு சுரணையும் இல்லாம - செத்து போற எங்க இனத்துக்கு - துயர் பகிர்வும் - கண்ணீர் அஞ்சலியும் - செலுத்திகிட்டு இருக்கோம் இன்னமும்! 8)
|
|
|
| குடாநாட்டிலிருந்து வன்னிக்கு பொதுமக்கள் இடம்பெயர்வு |
|
Posted by: கீதா - 04-21-2006, 08:00 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
குடாநாட்டிலிருந்து வன்னிக்கு பொதுமக்கள் இடம்பெயர்வு
யாழ். குடாநாட்டில் இடம்பெற்றுவரும் இராணுவ அச்சுறுத்தல்கள் மற்றும் கொலைகள் காரணமாக பொதுமக்கள் பலர் வன்னிக்கு இடம்பெயரத் தொடங்கியுள்ளனர். வர்த்தக அமைப்புகளுடன் தொடர்புபட்டவர்கள் மற்றும் பல்வேறுபட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகளின் குடும்பங்கள் உட்பட பலர் தமது பாதுகாப்புக் கருதி வன்னிக்கு இடம்பெயருகின்றனர்.
குடாநாட்டில் அடிக்கடி இடம்பெற்றுவரும் இராணுவ சுற்றிவளைப்புக்களால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
கடந்த வாரத்தில் தென்மராட்சி வலிகாமம், யாழ்ப்பாணம், அரியாலைபகுதி, கொக்குவில் பகுதிகளில் திடீர் திடீரென சுற்றி வளைப்பு நடத்திய படையினர் வீடுகள், வளவுகள் ஆகியவற்றை சல்லடை போட்டு தேடுதல் நடத்தியதோடு குடும்ப விபரங்களையும் பதிவு செய்து சென்றுள்ளனர். அத்துடன் சந்தேகத்தில் இளைஞர்களை கைது செய்யும் படையினர் அப்பகுதி பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்த பின்னர் விடுதலை செய்கின்றனர். இதன் காரணமாக இளைஞர்கள் பலர் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளனர்.
இணைப்பு : newstamilnet.com
http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&
|
|
|
| குறும்படப்போட்டி - நல்லூர்ஸ்தான் |
|
Posted by: இளைஞன் - 04-21-2006, 07:03 PM - Forum: குறும்படங்கள்
- Replies (3)
|
 |
நல்லூர்ஸ்தான் மீண்டும் உலகளாவிய ரீதியில் நடாத்தும் குறும்படப்போட்டி பற்றிய அறிவித்தல். ஆர்வமுள்ளவர்கள் உங்கள் குறும்படங்களையும் அனுப்பிவையுங்கள். உங்களுக்கு நெருக்கமான ஊடகங்கள் வாயிலாகவும் இந்த அறிவித்தலை வெளிவரச் செய்யுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். நன்றி.
<img src='http://www.appaal-tamil.com/images/shotfim_nallurs.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| யாழிலிருந்து உடனே வெளியேறுங்கள்: மக்களுக்கு வேண்டுகோள் |
|
Posted by: mayooran - 04-21-2006, 03:44 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (5)
|
 |
எந்த நேரத்திலும் முறிவடையும் போர் நிறுத்தம்- யாழிலிருந்து உடனே வெளியேறுங்கள்: மக்களுக்கு வேண்டுகோள்
[வெள்ளிக்கிழமை, 21 ஏப்ரல் 2006, 20:25 ஈழம்] [யாழ். நிருபர்]
இலங்கையில் எந்த நேரத்திலும் போர் நிறுத்த உடன்பாடு முறிவடையும் சூழலை இராணுவம் உருவாக்கியுள்ளதால் யாழிலிருந்து உடனடியாக விடுதலைப் புலிகளின் பகுதிக்கு இடம்பெயருங்கள் என்று யாழ். மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
யாழ். மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய பொதுச்செயலாளர் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
யாழ்.குடா இராணுவக் கொலைக்களமா?
அன்பார்ந்த எம் உறவுகளே!
யாழ்ப்பாணக் குடாவில் சுமூகமான நிலைவரும்............... சுமூகமான நிலைவரும்............. என நம்பி கொலைச் சதி வியூகத்திற்குள் சிக்குண்டு உயிரிழக்கப் போகின்றீர்களா?
சற்றுச் சிந்தியுங்கள்!
அதற்கான நேரமும் தேவையும் இப்போது எழுந்துள்ளது.
எதிரி எம்மண் மீது புரியும் கொடூரங்களில் இருந்து விடுபட வேண்டாமா?
இளையோரை இலக்கு வைத்து இராணுவப் படுகொலைகள் தொடர்கின்றன.
20 மீற்றர் அகல பயணப்பாதை எப்பொழுதும் மூடப்படலாம். போர் மூளுமாயின் இப்பாதையைக் கடக்க முடியுமா?
புத்தூர் அந்திரான்வெளி ஐந்து இளைஞர்களின் படுகொலையை மறந்து விட்டீர்களா?
இவர்களை இராணுவம் கொன்றது ஏன்?
கைக்குண்டெறிந்தார்களா?
கிளைமோர் வைத்தார்களா?
துப்பாக்கி வைத்திருந்தார்களா?
ஏன் கொன்றார்கள்?
தமிழனை துடைத்தழிக்க வேண்டுமென்ற வெறியிலல்லவா?
அப்பாவி இளைஞர்கள் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டனர். இனியாவது உங்கள் முடிவென்ன?
எதிரியின் சூழ்ச்சி இன்னும் புரியபவில்லையா?
அச்சமும் பீதியும் சூழ்ந்த இராணுவ வேலிக்குள் குடாநாடு கொலைக்களமாக மாறியுள்ளது. இன்றோ நாளையோ என்ன நடக்குமென்ற பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வதை தவிர்த்து பாதுகாப்பானதும் விடுவிக்கப்பட்டதுமான வன்னிப்பகுதியை நோக்கி நகருங்கள்!....
எந்த நேரத்திலும் முறிவடையப் போகும் போர்நிறுத்த உடன்பாடு எனது விடுதலையை, எமது சுபீட்சமான நல்வாழ்வை ஒரு போதும் பெற்றுத்தராது ஜெனீவாவிற்கு விடுதலைப் புலிகள் செல்லக்கூடாது என்பதற்காகவே அரசு பல நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றது.
மீண்டும் போரை தீவிரப்படுத்தி தமிழர்களை கொன்றொழிக்கவே சிங்களப் படையினரும், துணை இராணுவக் குழுக்களும் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.
எனவே வாருங்கள் வழி காட்ட தலைவன் இருக்கிறான். வழி நடத்த தளபதிகள்- பலர் போரிட -அதி நவீன சக்தி மிக்க ஆயுத தளபாடங்கள் உள்ளன. வந்து தோள் கொடுங்கள்.
வரலாறு அழைக்கிறது-
ஒரு வருடத்துக்குள் யாழ்ப்பாண மண்ணை மீட்டெடுத்து சுதந்திரமாய் வாழ்வோம்.
இது இறுதிச் சந்தர்ப்பம்-
தவற விட்டால் பெரும் தவறிளைத்தவராவீர்கள்.
எனவே சிந்தித்து விரைவாகச் செயற்படுங்கள்.! என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
PUTHINAM
|
|
|
| New immigration rules for non-EU doctors in UK |
|
Posted by: narathar - 04-21-2006, 10:02 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- No Replies
|
 |
Overseas NHS doctors 'betrayed'
By Dominic Casciani
BBC News community affairs
Asian doctors: Key role in the NHS
Thousands of trainee doctors from abroad have been "betrayed" by a sudden rule change, say campaigners.
New immigration rules mean most non-EU doctors can no longer complete NHS training without work permits.
Hundreds of doctors are being urged to protest outside the Department of Health on Friday, saying the changes potentially leave thousands jobless.
But the government says it is protecting posts for UK graduates as supply of doctors outstrips demand.
For decades, graduates from overseas medical and dental schools have come to the UK without visa restrictions to complete two years of training in junior NHS posts.
The "visa-free" deal was set up to help the NHS make up numbers and rapidly expand its provision. Historically, this led to doctors from countries including India playing a key part in the NHS's growth - comprising up to 70% of all doctors in some areas of Britain.
But under the new rules, introduced suddenly this month, these doctors and dentists will no longer be able to automatically seek training placements.
EU preference
Hospitals must prove they cannot recruit a junior doctor from Britain or the EU before they can shortlist candidates from other countries.
Ramesh Mehta: "Absolute betrayal"
The change has led to widespread protest by doctors' groups and even lobbying of ministers by the Indian High Commissioner.
The British Association of Physicians of Indian Origin (Bapio) says at least 15,000 doctors may have to leave the UK heavily in debt and without having completed qualifications, despite having been encouraged to come to the UK in the first place.
Many of these are already unemployed because of shortage of available training posts.
"A lot of new, budding doctors enthusiastically seek to complete their training in Britain because of the opportunity to support the NHS - and the knowledge they can then take to their practices in their home countries," said Dr Ramesh Mehta of Bapio.
"They sell their homes, take out loans and leave their families behind to work in Britain. The change in rules is an absolute betrayal. Many will now return home with debt but no diploma, no qualifications."
'Unfair change'
The British Medical Association, the professional association for doctors, accused the government of changing the rules without any regard for welfare. It said at leasy 9,000 doctors in short-term junior and senior house officer grades would be affected.
The spread of medical skills learnt in the UK is a tradition that we have reason to be proud off - it is difficult to see how this can be maintained under the proposed arrangements
Royal College of Physicians
"There is definitely a need for a new system where the number of doctors coming to the country is based on the needs of the NHS, but what the government is doing is unfair on the doctors who are already here," said Dr Jo Hilborne, chairman of the BMA's Junior Doctors Committee.
But a spokesman for the Home Office, responsible for immigration rules, said transitional arrangements drawn up with the Department of Health would apply to some of those affected. Junior doctors and dentists in current training posts would be allowed to complete those placements.
Overseas doctors who had attended British medical schools would not be subject to work permit restrictions for their final two years.
Health minister Lord Warner told the BBC's Today programme the change was necessary as competition for jobs grew.
"What we have done is make sure that we are becoming more self-sufficient in training our own doctors," he said.
"There has been a 70% increase in the number of medical school intakes over the last seven or eight years and we have to find and ensure that there are post graduate specialist training posts."
The Royal College of Physicians said that while it understood the need to limit the arrival of overseas doctors, the government had gone about it the wrong way.
"The college recognises the contribution of [overseas] doctors has often been undervalued and their aspirations undermined," said a spokesman.
"They now hear a message that they are no longer needed or wanted and that their commitment to the NHS has counted for little.
"On completion of their training, many doctors returned home to practice. The spread of medical skills learnt in the UK is a tradition that we have reason to be proud off.
"It is difficult to see how this can be maintained under the proposed arrangements."
http://news.bbc.co.uk/1/hi/health/4928954.stm
|
|
|
|