Aggregator

'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா?

3 weeks 5 days ago
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா? / அறிமுகம் 01
 
 
சக்கரவர்த்தி அசோகன் செய்த தவறா, இல்லை புத்தரின் போதனைகளை சரியாக கடைப்பிடிக்காத அல்லது பரப்பாத தலைவர்கள் செய்த தவறா நான் அறியேன் ? ஏன் என்றால் புத்தர் 'கடவுளை மையமாகக் கொண்ட சமயங்களில் எது சரியானது, எது தவறானது, என்பதை அறிய அச்சமயவாதிகள் சொல்வதை நாம் செய்ய வேண்டும். ஆனால் மனிதனை மையமாகக் கொண்ட பௌத்த சமயத்தில் எது சரி, எது தவறு என்பதை அறிய நம்மை முழுமையாகப் புரிந்து கொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் வேண்டும். இவ்வாறு நம்மை உணர்ந்து கொள்வதால் எழும் நன்னெறி ஒரு கட்டளையினால் உருவாக்கப்படும் நன்னெறியை விட உறுதியானவையாகவும், பலம் வாய்ந்தவையாகவும் இருக்கும்' என மிக தெளிவாக சொல்கிறார்.
 
அது மட்டும் அல்ல, மற்றவர்களுக்கு உதாரணமாக அவர் நான்கு அடிப்படை பேருண்மைகளையும் தானே கடைப்பிடித்து வாழ்ந்து காட்டினார். இன்று பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் குழப்பங்களுக்கும் அமைதியின்மைக்கும் என்ன காரணம் ?. கட்டாயம் புத்தரின் அந்த புனிதமான நான்கு பேருண்மைகளை சரியாக உணராமையும் கடைப் பிடிக்காததுமே ஆகும்.
 
[1] வாழ்க்கை துன்பமயமானது,
[2] அடக்க முடியாத ஆசையால் துக்கம் ஏற்படுகிறது,
[3] துன்பத்தைக் கடந்து மகிழ்ச்சியை அடையலாம், அதாவது, நாம் தேவையற்ற பேராசையை ஒழிக்கக் கற்றுக் கொண்டு, அமைதியற்ற தேவைகளை ஒழித்து அனுபவத்தால் வாழ்க்கை நமக்குக் கொடுக்கும் பிரச்சனைகளை, அச்சமின்றிப் பொறுமையுடன், வெறுப்பின்றிக் கோபமின்றிப் பொறுத்துக் கொள்வோமானால், நாம் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியுடனும் வாழலாம். அப்போது தான் நாம் உண்மையிலேயே வாழ ஆரம்பிக்கிறோம். என்றும் இதுவே நிர்வாண நிலை என்றும், எனவே உள்ளத்தால் ஏற்படும் துன்பங்களிலிருந்து நாம் இங்கு உண்மையில் விடுதலை பெறுகிறோம் என்கிறார்.
[4] நற்கருத்து, நல்நோக்கம், நற்பேச்சு, நன்னடத்தை, நல்தொழில் வகித்தல், நன்முயற்சி, நன்மனக் கவனம், நன்மன ஒருமைப்பாடு ஆகிய, துக்க நிவாரணத்திற்கான பாதையைக் காட்டும் எட்டுப் பிரிவுகள் அடங்கிய பாதை அல்லது அட்டசீலம் அல்லது எண்வகை வழிகள் ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளன என்றும் புத்தர் நான்கு பேருண்மைகளுக்கு விளக்கம் கொடுக்கிறார்.
 
எனவே நாம் நற்கருத்து, நல்நோக்கம், நற்பேச்சு, நன்னடத்தை, நன்முயற்சிகள் போன்றவற்றை மனதில் பதித்து, மகாவம்சத்தில் புதைந்து, அறிவியல் ரீதியான வரலாற்று சான்றுகளுடனும் ஒத்து போவனவற்றை, எம் அறிவிற்குள் எட்டியவாறு, நடுநிலையாக, பக்கம் சாராமல், அலச உள்ளோம், குறைகள், பிழைகள் இருப்பின் சுட்டிக் கட்டவும். திறந்த மனதோடு வரவேற்கிறோம்.
 
உண்மை முதலில் ஒரு முள் போல வலிக்கும், ஆனால் முடிவில் அது ரோஜா போல பூக்கும் [The truth hurts like a thorn at first; but in the end it blossoms like a rose] என்ற பொன்மொழியை நாம் மறக்கக் கூடாது. திருவள்ளுவரும் குறள் 299 இல், "எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு" என்கிறார். அதாவது, புறத்தில் உள்ள இருளை நீக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு அகத்து இருள் நீக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும் என்கிறார். அந்த அவரின் வழியில் மகாவம்சத்தின் "சத்தியத்தை அறிய, சத்தியத்தை நேசிக்க, சத்தியத்தில் வாழ்வது மனிதனின் முழு கடமை" ["To know the Truth, to love the Truth, and to live the Truth is the whole duty of man."] என்பதை உணர்ந்து எமது இந்த பயணம் குறைந்தது நாற்பது பகுதிகளாக விரைவில் தொடரவுள்ளோம்.
 
இலங்கையில் வாழும் பெரும்பாலோரான சிங்கள புத்த மக்கள், குறிப்பாக பாளி மொழியில், 5 / 6 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாவம்சத்தை மற்றும் அதற்கு நூறு அல்லது நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பாளி மொழியில் எழுதப்பட்ட எழுதப்பட்ட தீபவம்சம் மற்றும் இவைகளுக்கு பின் 13 ஆம் நூற்றாண்டில் பாளி மொழியில் எழுதப்பட்ட சூளவம்சம், முதல் முதல் சிங்கள மொழியில் எழுதப்பட்ட 17 ஆம் நூற்றாண்டு இராசாவலிய முதலியவற்றை ஆதாரமாக வைத்து தமது வரலாற்றை கற்கிறார்கள். அது மட்டும் அல்ல, தாம் தான் இலங்கையின் பூர்வீக குடிகள் என்றும் அரசியல் பேசுகிறார்கள். இந்த நிலையில், இவை நான்கு புத்தகங்களிலும் மிக முக்கியமாக கருதப் படும் மகாவம்சத்தை எடுத்துக்காட்டாக எடுத்து நுணுகி ஆய்வதே எமது நோக்கம்.
 
முதல் முதல் எழுதப்பட்ட தீபவம்சத்தில் முக்கியமான கதாபாத்திரம் தேவநம்பிய தீசன் என்ற கி. மு. 307இலிருந்து கி. மு. 267 வரை அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த ஒரு சிவனை வழிபட்ட அரசனாவான். அவன் காலத்திலேயே, பௌத்த சமயத்தை இலங்கையில் முதல் முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. மற்றது மகிந்தன் அல்லது மகிந்தர் என்ற இந்தியாவின் மகத நாட்டைச் சேர்ந்த புத்த மதகுரு. அத்துடன் ஒப்பற்ற மன்னர் எல்லாளன் என்று அது கூறுகிறது. ஆனால் அதன் பின் தீபவம்சத்தை ஆதாரமாக எழுதப்பட்ட மகாவம்சத்தில், முக்கிய கதாபாத்திரமாக துட்ட கைமுனு கையாளப்படுகிறது. என்றாலும் எல்லாளனை சிறந்த வகையில் குறிப்பிடுகிறது. இவ்வற்றுக்கு முரணாக சிங்கள மொழியில் எழுதப்பட்ட இராசாவலிய எல்லாளன் பொல்லாத ஆட்சி செய்தார் என்று குறிப்பிடுகிறது. எப்படி வரலாறு, புத்த பிக்குகளால் மாற்றி மாற்றி எழுதப் படத்திற்கு இது ஒரு துளி உதாரணமே!
 
 
அன்புடன் உங்கள்,
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
அறிமுகம் 02 தொடரும்
No photo description available. May be an image of outdoors 
 
 

'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா? / அறிமுகம் 01

3 weeks 5 days ago
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா? / அறிமுகம் 01 சக்கரவர்த்தி அசோகன் செய்த தவறா, இல்லை புத்தரின் போதனைகளை சரியாக கடைப்பிடிக்காத அல்லது பரப்பாத தலைவர்கள் செய்த தவறா நான் அறியேன் ? ஏன் என்றால் புத்தர் 'கடவுளை மையமாகக் கொண்ட சமயங்களில் எது சரியானது, எது தவறானது, என்பதை அறிய அச்சமயவாதிகள் சொல்வதை நாம் செய்ய வேண்டும். ஆனால் மனிதனை மையமாகக் கொண்ட பௌத்த சமயத்தில் எது சரி, எது தவறு என்பதை அறிய நம்மை முழுமையாகப் புரிந்து கொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் வேண்டும். இவ்வாறு நம்மை உணர்ந்து கொள்வதால் எழும் நன்னெறி ஒரு கட்டளையினால் உருவாக்கப்படும் நன்னெறியை விட உறுதியானவையாகவும், பலம் வாய்ந்தவையாகவும் இருக்கும்' என மிக தெளிவாக சொல்கிறார். அது மட்டும் அல்ல, மற்றவர்களுக்கு உதாரணமாக அவர் நான்கு அடிப்படை பேருண்மைகளையும் தானே கடைப்பிடித்து வாழ்ந்து காட்டினார். இன்று பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் குழப்பங்களுக்கும் அமைதியின்மைக்கும் என்ன காரணம் ?. கட்டாயம் புத்தரின் அந்த புனிதமான நான்கு பேருண்மைகளை சரியாக உணராமையும் கடைப் பிடிக்காததுமே ஆகும். [1] வாழ்க்கை துன்பமயமானது, [2] அடக்க முடியாத ஆசையால் துக்கம் ஏற்படுகிறது, [3] துன்பத்தைக் கடந்து மகிழ்ச்சியை அடையலாம், அதாவது, நாம் தேவையற்ற பேராசையை ஒழிக்கக் கற்றுக் கொண்டு, அமைதியற்ற தேவைகளை ஒழித்து அனுபவத்தால் வாழ்க்கை நமக்குக் கொடுக்கும் பிரச்சனைகளை, அச்சமின்றிப் பொறுமையுடன், வெறுப்பின்றிக் கோபமின்றிப் பொறுத்துக் கொள்வோமானால், நாம் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியுடனும் வாழலாம். அப்போது தான் நாம் உண்மையிலேயே வாழ ஆரம்பிக்கிறோம். என்றும் இதுவே நிர்வாண நிலை என்றும், எனவே உள்ளத்தால் ஏற்படும் துன்பங்களிலிருந்து நாம் இங்கு உண்மையில் விடுதலை பெறுகிறோம் என்கிறார். [4] நற்கருத்து, நல்நோக்கம், நற்பேச்சு, நன்னடத்தை, நல்தொழில் வகித்தல், நன்முயற்சி, நன்மனக் கவனம், நன்மன ஒருமைப்பாடு ஆகிய, துக்க நிவாரணத்திற்கான பாதையைக் காட்டும் எட்டுப் பிரிவுகள் அடங்கிய பாதை அல்லது அட்டசீலம் அல்லது எண்வகை வழிகள் ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளன என்றும் புத்தர் நான்கு பேருண்மைகளுக்கு விளக்கம் கொடுக்கிறார். எனவே நாம் நற்கருத்து, நல்நோக்கம், நற்பேச்சு, நன்னடத்தை, நன்முயற்சிகள் போன்றவற்றை மனதில் பதித்து, மகாவம்சத்தில் புதைந்து, அறிவியல் ரீதியான வரலாற்று சான்றுகளுடனும் ஒத்து போவனவற்றை, எம் அறிவிற்குள் எட்டியவாறு, நடுநிலையாக, பக்கம் சாராமல், அலச உள்ளோம், குறைகள், பிழைகள் இருப்பின் சுட்டிக் கட்டவும். திறந்த மனதோடு வரவேற்கிறோம். உண்மை முதலில் ஒரு முள் போல வலிக்கும், ஆனால் முடிவில் அது ரோஜா போல பூக்கும் [The truth hurts like a thorn at first; but in the end it blossoms like a rose] என்ற பொன்மொழியை நாம் மறக்கக் கூடாது. திருவள்ளுவரும் குறள் 299 இல், "எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு" என்கிறார். அதாவது, புறத்தில் உள்ள இருளை நீக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு அகத்து இருள் நீக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும் என்கிறார். அந்த அவரின் வழியில் மகாவம்சத்தின் "சத்தியத்தை அறிய, சத்தியத்தை நேசிக்க, சத்தியத்தில் வாழ்வது மனிதனின் முழு கடமை" ["To know the Truth, to love the Truth, and to live the Truth is the whole duty of man."] என்பதை உணர்ந்து எமது இந்த பயணம் குறைந்தது நாற்பது பகுதிகளாக விரைவில் தொடரவுள்ளோம். இலங்கையில் வாழும் பெரும்பாலோரான சிங்கள புத்த மக்கள், குறிப்பாக பாளி மொழியில், 5 / 6 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாவம்சத்தை மற்றும் அதற்கு நூறு அல்லது நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பாளி மொழியில் எழுதப்பட்ட எழுதப்பட்ட தீபவம்சம் மற்றும் இவைகளுக்கு பின் 13 ஆம் நூற்றாண்டில் பாளி மொழியில் எழுதப்பட்ட சூளவம்சம், முதல் முதல் சிங்கள மொழியில் எழுதப்பட்ட 17 ஆம் நூற்றாண்டு இராசாவலிய முதலியவற்றை ஆதாரமாக வைத்து தமது வரலாற்றை கற்கிறார்கள். அது மட்டும் அல்ல, தாம் தான் இலங்கையின் பூர்வீக குடிகள் என்றும் அரசியல் பேசுகிறார்கள். இந்த நிலையில், இவை நான்கு புத்தகங்களிலும் மிக முக்கியமாக கருதப் படும் மகாவம்சத்தை எடுத்துக்காட்டாக எடுத்து நுணுகி ஆய்வதே எமது நோக்கம். முதல் முதல் எழுதப்பட்ட தீபவம்சத்தில் முக்கியமான கதாபாத்திரம் தேவநம்பிய தீசன் என்ற கி. மு. 307இலிருந்து கி. மு. 267 வரை அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த ஒரு சிவனை வழிபட்ட அரசனாவான். அவன் காலத்திலேயே, பௌத்த சமயத்தை இலங்கையில் முதல் முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. மற்றது மகிந்தன் அல்லது மகிந்தர் என்ற இந்தியாவின் மகத நாட்டைச் சேர்ந்த புத்த மதகுரு. அத்துடன் ஒப்பற்ற மன்னர் எல்லாளன் என்று அது கூறுகிறது. ஆனால் அதன் பின் தீபவம்சத்தை ஆதாரமாக எழுதப்பட்ட மகாவம்சத்தில், முக்கிய கதாபாத்திரமாக துட்ட கைமுனு கையாளப்படுகிறது. என்றாலும் எல்லாளனை சிறந்த வகையில் குறிப்பிடுகிறது. இவ்வற்றுக்கு முரணாக சிங்கள மொழியில் எழுதப்பட்ட இராசாவலிய எல்லாளன் பொல்லாத ஆட்சி செய்தார் என்று குறிப்பிடுகிறது. எப்படி வரலாறு, புத்த பிக்குகளால் மாற்றி மாற்றி எழுதப் படத்திற்கு இது ஒரு துளி உதாரணமே! அன்புடன் உங்கள், [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] அறிமுகம் 02 தொடரும்

நாளை முதல் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

3 weeks 5 days ago
ஓம்…உங்கள் அளவுக்கு விளக்கம் இல்லைததான் Sir 🤣 பிகு: வடை செய்தி 2 வருடம் பழையது என உருட்டியது @பையன்26. நானில்லை. நான் அவர் சொன்னதை நம்பினது மட்டுமே. பாருங்கள் பையன் உங்களை விளக்கம் குறைந்த ஆள் என்கிறார் பெருமாள்🤣

நாளை முதல் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

3 weeks 5 days ago
அவருக்கு அதான் @goshan_che க்கு விளங்கிறது போல் எழுதுங்க இல்லாவிட்டால் வந்த செய்தியை மூன்று வருடகங்களுக்கு முந்திய செய்தி என்று பந்தை உருட்ட தொடங்குவார் .😆 விளக்கம் குறைவான ஆள்

யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி

3 weeks 5 days ago
அதே 1% தான். தமிழ் நாட்டில், இரு கட்சிகள் அத்தனை சீட்டையும் வெல்ல வேண்டும் என எனக்கு ஒரு நடக்க முடியாத ஆசை உண்டு - அது இரெண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள். தா.பாவை தவிர, பதவிகளில் இருந்தும் - கறை இல்லாத அரசியல் செய்தவர்கள் என்பதால். பிகு இப்பதானே மற்ற ஐடியில் நன்றி வணக்கம் சொல்லி போனீர்கள்😎 ————- @nedukkalapoovan @பாலபத்ர ஓணாண்டி உங்கள் கவனத்துக்கும்.

யாழில் சர்வதேச தரத்திலான இரு மைதானங்கள் : அமைவிடம் குறித்து அமைச்சர் டக்ளஸ் நேரில் ஆராய்வு!

3 weeks 5 days ago
அதே போல் Wellington Oval, WACA இரெண்டிலும் காற்று வேகமாக அடிப்பதும் - conditions இல் ஒன்றாக விளையாட்டின் அங்கமாக கருதப்படும். Fremantle Doctor பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.

நாளை முதல் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

3 weeks 5 days ago
இல்லை - இது கையிருப்பு சம்பந்தமான பிரச்சனை போல தெரியவில்லை. மாறாக விநியோகம் சம்பந்தமானது. வட் வரி செலுத்துவது தொடர்பான பிரச்சனையில் பெற்றோல் விநியோகஸ்தர் - அரசினை நெருக்க, விநியோகத்தை வைத்து blackmail பண்ணுகிறார்கள். நான் அங்கு நிற்கும் போது இது புகைய தொடங்கியது. பெற்றோல் விநியோகத்தை அத்தியாவசிய சேவை என அறிவித்து அரசாணை வெளி வந்தது. 24 மணி நேரம், கியூ 5 கார் அளவுக்கு நீண்டு பின் அடங்கி விட்டது. இதை நான் ஒரு trade union vs govt. பிணக்காகவே பார்க்கிறேன். ஆளை ஆள் மிரட்டி விட்டு பின் ஒரு compromise ற்கு வர வாய்புள்ளது.

எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி?

3 weeks 5 days ago
ரசிகர்கள் முட்டாள்தனமாக அளவிற்கு மீறிய நிலையில் உள்ளார்கள். இதேபோல் CSK அணி நிர்வாகம் , ஊடகங்கள் , சமூக வலைத்தளங்கள் என பல…..

யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி

3 weeks 5 days ago
எங்கும் எதிலும் என்னை நினைத்து அழைப்பு விடுவதற்கும், காணாவிட்டால் தேடுவதற்கும் தளராமல் கருத்திடுவதற்கு ஊக்கம் தருவது எல்லாவற்றுக்கும் சேர்த்து நன்றி சிறியர்! நன்னிச்சோழனின் மனநிலையே எனதும், அதனால் இதில் ஈடுபட்டு போட்டியாளர்களுக்கு எரிச்சலை கிளப்பாமல் விலகிக்கொள்கிறேன்.

தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்

3 weeks 5 days ago
என்ன சத்தியம் வேணும்? நான் போராட்டத்தை காட்டி கொடுக்கவில்லை… இந்த சத்தியமா? நிச்சயமாக செய்யலாம். அம்மா உயிரோடு இல்லை - ஆனால் மகன் இருக்கிறார் அவர் மேல் செய்யலாம். போராடாமல் விட்டு விட்டு வந்ததை தவிர போராட்டத்தை எதிர்த்து நான் ஒரு துரும்பைத்தானும் போடவில்லை. ஆனால் போராட்டத்துக்கு சமாந்திரமாக என்னால் முடிந்தவரை தமிழர் மீதான அடக்குமுறைகளை ஜனநாயக வழியிலும், ஊடக பரப்பிலும் ஏனைய பண்பாட்டியல் வழியிலும் - வெளிகொணர முயன்றுள்ளேன். நான் மட்டும் இல்லை, இங்கே 99% வர்கள் இப்படிதான். ———- ஆனால் ஒரு news forumமில் சத்தியத்தை வாங்கினால் அதை வைத்து என்னையோ இன்னொருவரையோ நம்பலாம் என நம்பும் அப்பாவியாக நீங்கள் இருப்பது கொஞ்சம் நெருடலாகவே உள்ளது. நீங்கள் இலகுவில் சீமான் போன்றோரின் கவர்ச்சி பேச்சால் எடுபடுபவர் என்பது தெரியும். ஆனால் இவ்வளவு பச்சை தண்ணியாக இருப்பீர்கள் என எதிர்பார்க்கவில்லை.

நாளை முதல் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

3 weeks 5 days ago
ஏன் சம்பவம் நடந்து முடிந்த பின்னர் இப்படித்தான் நடக்கும் என்று முன்னரே தெரியும் என்று எழுதுவதற்காகவா? என்னைப் பொறுத்தவரை 2022 இல் இருந்த நிலை வராது என்றே எண்ணுகிறேன். வழங்களில் பற்றாக்குறை வந்தாலும் QR கோட்டினை மீண்டும் அமுல்படுத்தி நிலமையை சமாளிப்பார்கள்.

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி ஆரம்பம்

3 weeks 5 days ago
அப்பே ரட்ட , அப்பே ஜனதாவ எனக் கூறி நாட்டை கொள்ளையடிக்க வேண்டும் என்கிறீர்களா? அரச உத்தியோகத்தராகி லஞ்சம் பெற வேண்டுமா அல்லது 1,900/= விற்கு கொத்து விற்றக வேண்டுமா?

பெயர் மாற்றங்கள்.

3 weeks 5 days ago
இதுக்குள்ளும் கொள்ளுபாடா ? மோகன் அண்ணையை இந்த திரிக்குள் ஆவது கான்கலாம் என்ற நிலையை மாற்ற குழுவாக நின்று சதிராட்டம் ஆடுதுகள் .

"முக நூலில் மட்டும் சந்தித்த ஒருவருடன் காதல் கொள்ளலாமா?"

3 weeks 5 days ago
அனுபவிக்க துடிக்கும் இளசுகளை பெற்ற அனுபவம் எச்சரித்து தடுக்கப்பார்க்கிறது! "இளங்கன்று பயமறியாது பட்டுத்தான் தெளியும்." அது அரும்பியவுடன் கருகியதால், கண்டிப்பாக இது நிலைத்திருக்கும். இப்போ அப்பாவின் தண்டிப்பை நினைத்து பெருமைப்படுகிறீர்களா அல்லது இன்னும் வில்லன்தானா? எத்தனை பட்டாம்பூச்சிகள் கண்ணெதிரே சிறகடித்துப் பறந்தன அத்தனையும் கனவாகின. பார்த்து ரசிப்பதோடு மறைந்தன இளமையும் காலமுந்தான்.

தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்

3 weeks 5 days ago
இதென்ன லூஸ் தனமான கேள்வி? இந்த கேள்வியே உங்களுக்கு புலிகளின் நடைமுறை பற்றி ஒரு அறுப்பும் தெரியாது என்பதை சொல்லி நிற்கிறது. நான் என்ன பொட்டமானின் அணியிலா இருந்தேன். இந்த ரகசியங்களை எல்லாம் தெரிந்து வைக்க? புலிகள் 1991 க்கு பின் எப்படி தமிழ் நாட்டில் ஒரு பின் தள வலைபின்னலை மீள உருவாக்க கஸ்டப்பட்டனர் என்பது தெரியும். இதை 1998 அளவில் நடுக்கடலில் வைத்து மருந்து, பின்னர் பெற்றோலியம் கைமாற்றும் அளவுக்கு வளர்த்தமையும் இந்த வலையமைப்பை இந்தியா அடிக்கடி உடைப்பதும் கேள்வி பட்டவையே. இதில் பல திக உறுப்பினர், வேல்முருகன் போன்றோர் தொடர்ந்து ரிஸ்க் எடுத்ததும் தெரியும். ஆனால் இந்த வலையமைப்பில் இருந்தோருக்கு கூட இதில் யார் ஈடுபட்டனர் என்ற முழு விபரமும் தெரியாது. அதுதான் புலிகளின் அணுகுமுறை. இந்த ரகசியங்கள் பல அவர்களோடு போய்விட்டன. இப்போ அண்ணன் சீமான 1000 லீட்டர் பெற்றோலை தனது பேண்ட் பக்கெட்டில் வைத்து, ஒரு கையால் பொத்தி கொண்டு போய் வன்னியில் கொடுத்தார் - என்ற ரீதியில் யாரோ உங்களுக்கு கதை சொல்லி இருக்கிறார்கள் என ஊகிக்கிறேன். ஏனைய ரகசிய தகவல்கள் போல் இதையும் எழுதுங்கள் - கேட்டு ரசிப்போம். இது ரொம்ப ஓவர் பையா…. ஈழப்போராட்டம் நடந்த போது நீங்கள் படுக்கையில் உச்சா போகும் வயதினர்…..அதுவும் மிக இள வயதிலேயே டென்மார்க் ஓடி வந்து விட்டீர்கள்…. உண்மை என்வென்றால் போராட்டத்துக்கு துரோகம் செய்யும் இயலுமையோ, வயதோ, வாழ்விடத்திலோ நீங்கள் அப்போ இருக்கவில்லை. அதென்ன “ஈழ ஆதரவு”🤣 - நீங்கள் என்ன தமிழ் நாட்டு காரரரா ஈழ ஆதரவு நிலை எடுக்க? நடந்து முடிந்தது எமது போராட்டம் - அதில் நாம் பங்காளிகள் - ஆதரவு நிலை எடுப்போர் அல்ல.