Aggregator
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
எனது அறிமுகம்
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல்
ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம்: இலங்கையில் பெட்ரோல் நெருக்கடி ஏற்படும் அபாயம்
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
நடுவானில் வெடித்துச் சிதறிய ஹெலிகொப்டர் – இராணுவ தளபதி உட்பட 10 பேர் பலி !
நடுவானில் வெடித்துச் சிதறிய ஹெலிகொப்டர் – இராணுவ தளபதி உட்பட 10 பேர் பலி !
கென்யாவில் இராணுவ ஹெலிகொப்டர் நடுவானில் வெடித்துச் சிதறிய விபத்தில் இராணுவ தளபதி உட்பட 10 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியிலிருந்து 400 கிலோமீற்றர் தொலைவில் உள்ள எல்கியோ மராக்வேட் என்ற பகுதியிலிருந்து இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று நைரொபி நோக்கி கிளம்பியுள்ளது.
அதில் பிரான்சிஸ் ஒமோண்டி ஒகோலா என்ற கென்யா நாட்டு இராணுவ தளபதி உட்பட 12 பேர் பயணித்துள்ளனர்.
அந்நாட்டு நேரப்படி நேற்று மதியம் 2.20 மணியளவில் அந்த விமானம் கிளம்பியது. ஆனால், கிளம்பிய சற்று நேரத்திலேயே அந்த ஹெலிகொப்டர் நடுவானில் திடீரென வெடித்துச் சிதறியுள்ளது.
இந்த விபத்தில் ஒகோலா உட்பட 10 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதையடுத்து மீட்பு பணிகளை தொடக்கியுள்ள அந்நாட்டு அரசு, விபத்து குறித்து விசாரணை நடத்த விசாரணை ஆணைக்குழு அமைத்துள்ளது.
கென்யா இராணுவத்தின் துணை தலைமை தளபதியாக இருந்த ஒகோலா கடந்த ஏப்ரல் மாதம் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார். அவரது மறைவுக்கு கென்யா நாட்டு ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்த பகுதியில் கடந்த சில மாதங்களாகவே கிளர்ச்சி படைகளின் தாக்குதல்கள் அதிகரித்து வந்துள்ளன. இதனைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஒகோலா அந்தப் பகுதிக்குச் சென்றதாக இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் விபத்தா, அல்லது சதிவேலையா என்பது தொடர்பாகவும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.