தமிழகச் செய்திகள்

கச்சத்தீவு மீட்பு வழக்கு; செப்-15 அன்று இறுதி விசாரணை!

2 months 2 weeks ago

New-Project-349.jpg?resize=750%2C375&ssl

கச்சத்தீவு மீட்பு வழக்கு; செப்-15 அன்று இறுதி விசாரணை!

கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது செல்லாது என அறிவிக்க கோரி இந்திய உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை செப்டம்பர் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

கருணாநிதி மறைந்துவிட்டதால் அவருக்கு பதிலாக திமுக பொருளாளர் டிஆர் பாலுவை மனுதாரராக சேர்க்கவும் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (25) அனுமதித்தது.

தமிழ்நாட்டுக்கு சொந்தமானது கச்சத்தீவு. ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் வசம் இருந்தது கச்சத்தீவு. ஆனால் மத்திய அரசு 1974-ம் ஆண்டு இலங்கைக்கு தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவை தாரைவார்த்தது.

கச்சத்தீவு தாரைவார்க்கபட்டதால் தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க உரிமை இருந்த போதும் எல்லை தாண்டிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டை சுமத்தி தற்போதும் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது.

இதனால் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது தமிழ்நாட்டின் நெடுநாள் முழக்கம்.

தமிழ்நாடு சட்டசபையிலும் கச்சத்தீவை மீட்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் கச்சத்தீவு மீட்புக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர்தான் இறுதியாக விசாரிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த போது ஜெயலலிதா காலமானார்.

இதனால் அவரது வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

அதேபோல கருணாநிதி மறைந்த நிலையில் அவருக்கு பதில் திமுக பொருளாளர் டிஆர் பாலு தம்மை மனுதாரராக சேர்க்க கோரியிருந்தார்.

இந்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் நேற்று கச்சத்தீவு வழக்கு விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையின் போது கருணாநிதிக்கு பதில் டிஆர் பாலுவை மனுதாரர்களில் ஒருவராக சேர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் கச்சத்தீவு மீட்பு தொடர்பான இந்த வழக்கின் இறுதி விசாரணை செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

https://athavannews.com/2025/1426497

திடீரென இடிந்து விழுந்த பாரதியார் வீட்டின் மேற்கூரை!

2 months 2 weeks ago

10853066-bharathiyar-1.jpg?resize=750%2C

திடீரென இடிந்து விழுந்த பாரதியார் வீட்டின் மேற்கூரை!

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்த வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் பிறந்த இல்லம், செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இவ்வீட்டில் மகாதேவி என்பவா் காப்பாளராகப் பணியாற்றி வருகிறார். இந்த இல்லம் காலை 9.30 மணிமுதல் பிற்பகல் 1.30 மணிவரையும், பிற்பகல் 2.30 மணிமுதல் மாலை 6 மணிவரையும் பொதுமக்கள் பாா்வைக்கு திறந்து வைக்கப்பட்டிருக்கும். இங்கு பகுதிநேர நூலகமும் செயற்பட்டு வருகிறது. தினமும் சராசரியாக 500-க்கும் மேற்பட்ட நபர்கள் இங்கு வந்து செல்வர். விடுமுறை நாள்களில் பாா்வையாளா்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கும்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு பார்வையாளர்  நேரம் முடிவடைந்தவுடன், வீட்டின் உள்பகுதி கதவுகளை அடைத்த காப்பாளர் மகாதேவி, பின்னர் வெளிப்புறம் உள்ள கதவை மூடிய சிறிது நேரத்தில் திடீரென பாரதியார்  வீட்டின் முன்பக்க மேல்மாடியின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

இதனால் தரை தளத்தின் மேற்கூரையும் இடிந்து, அதிலிருந்து கற்கள் மரக் கட்டைகள் விழுந்தன. இதன் காரணமாக பாரதியார்  வீட்டின் வரவேற்பு அறையில் இருந்த மேஜை, நாற்காலி, புகைப்படங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன. அதிர்ச்சியடைந்த காப்பாளர் மகாதேவி, உடனடியாக மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலருக்கும், வருவாய்த் துறைக்கும் தகவல் அளித்தார்.

இதனையடுத்து எட்டயபுரம் வட்டாட்சியர் சுபா மற்றும் அதிகாரிகள் பாரதியாா் நினைவு வீட்டுக்குச் சென்று பார்வையிட்டதோடு மின்சார சபை ஊழியர்கள் உடனடியாக வந்து, பாரதியாா் வீட்டுக்குச் சென்ற மின் இணைப்பைத் துண்டித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாரதி பிறந்த இல்லத்தை பராமரிக்க திமுக அரசுக்கு மனமில்லையா? என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில், மகாகவி பாரதியார் பிறந்த வீடு, முறையான பராமரிப்பு இல்லாமல் இடிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் மகாகவியின் புரட்சி வேள்வியின் கனலை அந்த இல்லத்தில் இன்னும் உணர முடிகிறது என்றும், அத்தகைய சிறப்பு வாய்ந்த தலத்தைப் பராமரிக்காமல், இன்று இடிந்து விழும் அளவுக்குக் கொண்டு சென்றிருக்கும் திமுக அரசுக்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

https://athavannews.com/2025/1426448

Amit Shah: 2026 இல் தமிழகத்தில் NDA ஆட்சியமைக்கும் - எடப்பாடியின் சந்திப்பும் அமித்ஷாவின் பதிவும்

2 months 2 weeks ago

கட்சியின் முக்கியத் தலைவர்களோடு எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்திருக்கிறார். எடப்பாடி அமித் ஷாவுக்கு பூங்கொத்து கொடுத்த வேகத்திலேயே அமித் ஷாவிடமிருந்து ட்வீட்டும் வந்திருக்கிறது.

அதிமுகவின் பொதுச்செயலாளரான எடப்பாடி உட்பட அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் சிலர் மத்திய அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்திருக்கின்றனர். இந்த சந்திப்புக்குப் பிறகு, '2026 இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்.' என அமித் ஷா ட்வீட் செய்திருக்கிறார்.

அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி

அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி

சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்று காலையில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லிக்குப் பயணம் செய்திருந்தார். எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, தம்பிதுரை போன்ற அதிமுகவின் மூத்தத் தலைவர்களும் எடப்பாடியுடன் இருந்தனர். 'நான் எந்த முக்கிய நபரையும் சந்திக்க வரவில்லை. டெல்லி அதிமுக அலுவலகத்தைப் பார்வையிட வந்தேன்.' என காலையில் டெல்லியில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியிருந்தார்.

அதேநேரத்தில் சில மணி நேரங்களுக்கு முன்பு தன்னுடைய கட்சியின் முக்கியத் தலைவர்களோடு எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்திருக்கிறார். எடப்பாடி அமித் ஷாவுக்கு பூங்கொத்து கொடுத்த வேகத்திலேயே அமித் ஷாவிடமிருந்து, '2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்.' என ட்வீட் வந்திருக்கிறது.

டெல்லியில் நடந்திருக்கும் இந்த முக்கிய நகர்வின் மூலம் 2026 க்காக அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டிருக்கிறதா என சமூக வலைதளங்களில் விவாதங்கள் கிளம்பியிருக்கின்றன.

Amit Shah: 2026 இல் தமிழகத்தில் NDA ஆட்சியமைக்கும் - எடப்பாடியின் சந்திப்பும் அமித்ஷாவின் பதிவும் - Vikatan

சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல்: எச்சரிக்கை விடுத்த எடப்பாடி பழனிசாமி

2 months 2 weeks ago

savukku.jpg?resize=730%2C375&ssl=1

சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல்: எச்சரிக்கை விடுத்த எடப்பாடி பழனிசாமி.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஊடகவியலாளர்  சவுக்கு சங்கரின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் அவரது வீட்டில் கழிவு நீர்  ஊற்றி வீட்டை சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்  குறித்த சம்பவத்திற்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-”ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் வீட்டில் இன்று (24.3.2025) காலை, அவரது தாயார் தனியாக இருந்தபோது, 50 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சில பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர்.

அத்துடன் அவரது  படுக்கையறை, சமையல் அறை, சமையல் பொருட்கள் என்று அனைத்துப் பொருட்களின் மீதும் சாக்கடை நீரைக் கொட்டி உள்ளார்கள்.   இதுபோன்ற கீழ்த்தரமான செயல் மற்றும் தாக்குதல் கண்டனத்திற்குரியது.

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள யாரும் இதை சகித்துக்கொள்ள மாட்டார்கள். உண்மையில் இந்தச் சம்பவம் கொடுமையின் உச்சம். அராஜகத்தின் வெளிப்பாடு. சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்று கூறிக்கொள்ளும் திமுக-வின் மு.க.ஸ்டாலின் மாடல் ஆட்சியில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தேறியதுஇ மனசாட்சி உள்ள அனைவரும் தலைகுனிந்து வெட்கப்பட வேண்டிய ஒரு சம்பவமாகும்.

இக் கொடுமையான செயலை செய்த கும்பலையும், பின்னணியில் உள்ள அனைவரையும் சட்டத்தின் முன்பு நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். சட்டப்படி நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில், அ.தி.மு.க. பதவியேற்றவுடன், தூய்மைப் பணியாளர்கள் போர்வையில் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள், பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்படுவார்கள்” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2025/1426274

இந்தியாவில் 150 அடி உயர தேர் சாய்ந்து விபத்து : 2 பேர் உயிரிழப்பு

2 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3 23 MAR, 2025 | 04:33 PM

image

இந்தியாவில்,  கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 152 அடி உயர தேர் திடீரென சாய்ந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் பெங்களூர், ஹுஸ்கூர் கிராமத்தில் பழமை வாய்ந்த மத்தூரம்மா அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் அம்மனுக்கு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனிடையே திருவிழாவையொட்டி சனிக்கிழமை (22) தேரோட்ட நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றுள்ளது. இதன்போது,  152 அடி உயர தேரில் அம்மன் எழுந்தருளிய நிலையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்துள்ளனர். இந்த தேருடன் சேர்த்து நாகமங்களா மற்றும் ராயசந்திரா சாமி தேர்களும் சென்றுள்ளன.

இந்நிலையில் தேரோட்ட நிகழ்ச்சியின் போது திடீரென லேசான காற்றுடன் மழை பெய்ததால் 152 அடி உயர தேர் பக்தர்களின் மேல் சாய்ந்துள்ளது. இதனால் பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். மேலும் தேரின் அடியில் 11 பக்தர்கள் சிக்கியுள்ளனர். இந்த விபத்தில் வீதியோரம் இருந்த வீடுகளும் சேதமடைந்துள்ளன.

இதையடுத்து தேரோட்டத்தையொட்டி பாதுகாப்புக்காக வந்த பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் தேருக்கு அடியில் சிக்கி காயம் அடைந்த பக்தர்களை மீட்டுள்ளனர். 

தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் , பெங்களூருவைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் காயம் அடைந்த நபர்களை மீட்பு குழுவினர் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

2024 ஆம் ஆண்டு  இதேபோல் மத்தூரம்மா அம்மன் கோவில் தேரோட்டத்தின்போது தேர் சாய்ந்து விழுந்து 2 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/209999

பாம்பு பிடிப்பவர்களே பாம்பு தீண்டி உயிரிழக்க நேரிடுவது ஏன்? அதனை தடுப்பது எப்படி?

2 months 2 weeks ago

பாம்பு பிடி வீரர் மரணங்கள்

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு, கோவையில் ஒரு வீட்டில் பாம்பை பிடிக்கும் போது பாம்பு கடித்து உயிரிழந்த சந்தோஷ்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சேவியர் செல்வகுமார்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 22 மார்ச் 2025, 06:18 GMT

கோவையில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான பாம்புகளை பிடித்துள்ள பாம்பு பிடிக்கும் நபரான சந்தோஷ், பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார். பாம்பு பிடிக்கும் போது உருவாகிற சூழ்நிலையும், அவர்களின் அறியாமையுமே இந்த மரணங்களுக்குக் காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

பாம்பு பிடிப்பதற்கான முறையான பயிற்சி மற்றும் உபகரணங்களை அளித்து, இவர்களை துறையுடன் சேர்த்து ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக வனத்துறையின் தலைவர் சீனிவாச ரெட்டி பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.

பாம்பு பிடிப்பவர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு

கோவையைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 39) என்ற பாம்பு பிடிக்கும் நபர், கடந்த மார்ச் 17 அன்று, தொண்டாமுத்துார் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் நாகப் பாம்பை பிடிக்கும் போது, பாம்பால் கடிபட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டிருந்தார். மார்ச் 19 இரவு அவர் மரணமடைந்துள்ளார். விஷ முறிவுக்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் இதய செயலிழப்பால் உயிரிழந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்துள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் கோவையில் முரளீதரன் என்பவரும், 3 ஆண்டுகளுக்கு முன்பு நிர்மல் என்பவரும் பாம்பு பிடிக்கும் முயற்சியில் உயிரிழந்தனர். கடலுார் மாவட்டம் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த உமர் அலி, கடந்த ஆண்டு ஏப்ரலில் குடியிருப்புப் பகுதியில் பிடித்த பாம்பை வனப்பகுதியில் விடுவதற்காகச் சென்ற போது அந்த பாம்பு கடித்து பலியானார்.

தற்போது கோவையில் மரணமடைந்த சந்தோஷின் நண்பரும், காட்டுயிர் ஆர்வலருமான ராஜன் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''கடந்த 20 ஆண்டுகளில் சந்தோஷ் 7 ஆயிரத்துக்கும் அதிகமான பாம்புகளைப் பிடித்து, காட்டுக்குள் கொண்டு விட்டுள்ளார். ஆனால் அவரது மறைவால் இன்றைக்கு அவர் குடும்பம் நிர்க்கதியில் இருக்கிறது. அவருடைய இரண்டு பெண் குழந்தைகளில் ஒரு குழந்தை மாற்றுத்திறனாளி. அவருடைய குடும்பத்துக்கு தமிழக அரசு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும்.'' என்று கேட்டுக் கொண்டார்.

பாம்பு பிடி வீரர் மரணங்கள்

பட மூலாதாரம், HANDOUT

பாம்பு பிடிப்பதில் பழங்குடிகளுக்கும் மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

உலகிலேயே ஆஸ்திரேலியாவில்தான் பாம்புக்கடி அதிகம் என்றாலும், பாம்புக்கடியால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை இந்தியாவை விட அங்கே மிகவும் குறைவு என்று என்கிறார் மனோஜ். இவர் கிருஷ்ணகிரியில் இயங்கி வரும் உலகளாவிய பாம்புக்கடி கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனரும் முதன்மை விஞ்ஞானியும் ஆவார். பாம்புக்கடி குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடன் (ICMR) இணைந்து ஆராய்ச்சிப் பணிகளைச் செய்து வருகிறார். ஆஸ்திரேலியாவில் அந்த பிரச்னையைக் கையாளும் விதமும், விஷமுறிவு மருந்துகளும் மிகச்சிறப்பாக இருப்பதே இதற்குக் காரணம் என்கிறார் மனோஜ்.

பாரம்பரியமாக பாம்பு பிடிக்கும் பழங்குடிகளுக்கும், மற்றவர்களும் பாம்புகளை அணுகும் முறையில் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக அவர் கூறுகிறார்.

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இருளர் இனப் பழங்குடியினரான மாசி சடையன் மற்றும் வடிவேல் ஆகிய இருவரும் அமெரிக்கா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு, அந்த அரசுகளின் அழைப்பின் பேரில் பாம்பு பிடிப்பதற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள், 'பாம்பு பிடிப்பதில் தனித்துவமானவர்கள்' என்று இந்தியாவின் பாம்பு மனிதன் என்று அழைக்கப்படும் ராமுலஸ் விட்டோகர் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் இருளர் பாம்பு பிடிக்கும் தொழில் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. அதில் இவர்கள் உட்பட 350க்கும் மேற்பட்ட இருளர்கள் உறுப்பினர்களாகவுள்ளனர். அவர்கள் பழையபெருங்களத்தூர், புதுப்பெருங்களத்தூர், சென்னேரி, மாம்பாக்கம், காயார், வெம்பேடு ஆகிய பகுதிகளில் உள்ள காட்டுப் பகுதிகளில் பாம்புகளைப் பிடித்து விஷத்தைச் சேகரித்து, மீண்டும் காட்டுக்குள் விடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாம்பு பிடி வீரர் மரணங்கள்

பட மூலாதாரம்,MAANOJ

படக்குறிப்பு,முனைவர் மனோஜ்

"கடித்த பாம்பை மொபைலில் படமெடுப்பது அவசியம்"

பாம்பு பிடிக்கும் போது, அங்குள்ள சூழ்நிலையையும், பாம்பு கடித்துவிட்டால் அந்த நேரத்தில் நடந்து கொள்ள வேண்டிய முறையையும் உணர்ந்து பழங்குடிகளைப் போன்று விழிப்புணர்வுடன் செயல்பட்டால், உயிரிழப்புகளைத் தடுத்துவிட முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் இந்திய ஊர்வன ஆராய்ச்சி, கல்வி மற்றும் பாதுகாப்பு மையத்தின் நிறுவனரும், ஊர்வனவியலாளருமான ரமேஸ்வரன் மாரியப்பன்.

பாம்பு பிடிக்கும் போது வீடியோ எடுக்கும் ஆர்வத்துடன் பலரும் கூடுவது, பாம்புகளிடம் அச்சத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துவதே பாம்பு பிடிப்பவர்களுக்கு ஆபத்தில் முடிவதாகக் கூறுகிறார் அவர். பிபிசி தமிழிடம் பேசிய ரமேஸ்வரன் மாரியப்பன், ''பாம்பைக் காப்பாற்றவே நாம் வந்துள்ளோம் என்பதையும், நம் உயிரும் முக்கியம் என்பதையும் உணர்ந்து பாம்பு பிடிப்பவர்கள் செயல்பட வேண்டும். சிறிய பாம்பு, பெரிய பாம்பு எதுவாயினும் கடித்து விட்டால் தாமதிக்காமல் மருத்துவமனை செல்ல வேண்டும்.'' என்றார்.

மேலும் "பாம்பு பிடி வீரர் என்ற வார்த்தை தவறு. அவர்களை பாம்பு பிடிப்பவர்கள் அல்லது பாம்புகளை பாதுகாப்பவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வீரர் என்ற வார்த்தைதான், பாம்பைப் பற்றி அடிப்படை அறிவும், அனுபவமும் இல்லாதவர்களையும் பாம்புகளைப் பிடிக்கத் துாண்டி வருகிறது.'' என்றார்.

பாம்பு பிடி வீரர் மரணங்கள்

பட மூலாதாரம்,RAMESWARAN MARIAPPAN

படக்குறிப்பு, இந்திய ஊர்வன ஆராய்ச்சி, கல்வி மற்றும் பாதுகாப்பு மையத்தின் நிறுவனர் ரமேஸ்வரன் மாரியப்பன்.

பாம்பு கடித்துவிட்டால், அது எந்த வகைப் பாம்பு என்று அறிவதற்கு, அதனை உடனே போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறும் விஞ்ஞானி மனோஜ், கட்டு வரியனைத் தவிர மற்ற பாம்புகள் கடித்தால் அந்த இடத்தில் வலி, வீக்கம், நிறம் மாற்றம் ஏற்படும் என்றார். எந்த பாம்பு கடித்தாலும் பதற்றமடைந்தால் ரத்தத்தில் விஷம் வேகமாகப் பரவும் என்பதால், பயம், பதற்றம் இல்லாமல் விரைவாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமென்பதை மீண்டும் அவர் வலியுறுத்துகிறார்.

பாம்பு பிடிக்கும் இடங்களில் இப்போது கூட்டம் எளிதாகச் சேர்ந்து விடுவதால், பாம்பு பிடிப்பவர்கள் செல்வதற்குள் அந்த பாம்பு ஒரு வித அச்சத்துக்கும் கோபத்துக்கும் உள்ளாகியிருக்குமென்பதால், அதைக் கையாள்வதில் மிகமிகக் கவனமாக இருக்க வேண்டுமென்கிறார் ரமேஸ்வரன் மாரியப்பன்.

''கோவை போன்ற மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள பகுதிகளில் ராஜநாகங்கள் அதிகமுள்ளன. அது தீண்டினால் உயிர் பிழைப்பது மிகவும் கடினம். நாகப் பாம்பு கடித்துவிட்டால் ஒரு மணி நேரத்துக்குள் உரிய சிகிச்சையை எடுத்தால் மட்டுமே பிழைக்க முடியும்.'' என்கிறார் விஞ்ஞானி மனோஜ்.

பாம்பு பிடிப்பவர்களுக்கு அரசே காப்பீடு வழங்க கோரிக்கை

கோவையைச் சேர்ந்த அமீன், கடந்த 27 ஆண்டுகளாக பாம்பு பிடித்து வருகிறார். "இதுவரை பிடித்துள்ள பாம்புகளைக் கணக்கில் வைத்துக் கொண்டதும் இல்லை; எதையுமே சமூக ஊடகங்களிலும் பகிர்ந்ததில்லை" என்கிறார். சமூக ஊடகங்களில் பகிர விரும்பி கண்மூடித்தனமான துணிச்சலில் பாம்பு பிடிக்க பலரும் முயற்சி செய்வதைத் தடுக்க வேண்டியது வனத்துறையின் பொறுப்பு என்கிறார் அமீன்.

''நான் ஒரே நாளில் 4 பாம்புகளை பிடித்துள்ளேன். 27 ஆண்டுகளுக்கு முன், முதல்முறை பாம்பு பிடித்த போது இருந்த அதே அச்சத்துடனும், விழிப்புடனும் இப்போதும் பிடிக்கிறேன். எங்களைப் போன்று தொழில் முறையில் பாம்பு பிடிப்பவர்களுக்கு வனத்துறை அடையாள அட்டை, மேலைநாடுகளில் பாம்பு பிடிக்க பயன்படுத்தப்படும் உபகரணம் (TONG) போன்றவற்றை வழங்க வேண்டும். வனத்துறையால் அனுமதிக்கப்பட்டவர் மட்டுமே பாம்பு பிடிக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.'' என்கிறார் அமீன்.

பாம்பு பிடி வீரர் மரணங்கள்

பட மூலாதாரம்,HANDOUT

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில், பாம்புகளைப் பிடிப்பதற்கு அங்குள்ள வனத்துறைகளின் சார்பில், மொபைல் ஆப்கள் உருவாக்கப்பட்டு, அதைக் கொண்டு பாம்பு பிடிப்பவர்களும் பொதுமக்களும் ஒன்றிணைக்கப்படுகின்றனர். அதேபோன்று தமிழகத்திலும் பாம்பு பிடிக்கும் பணியை வனத்துறை ஒருங்கிணைக்கவும் காட்டுயிர் ஆய்வாளர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இது குறித்து தமிழக வனத்துறைத் தலைவரும், முதன்மை தலைமை வனப் பாதுகாவலருமான சீனிவாச ரெட்டியிடம் பிபிசி தமிழ் கேட்ட போது, ''பாம்பு பிடிப்பதை ஒருங்கிணைப்பதற்கான எல்லாப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கேரளாவில் 'சர்ப்பா' என்ற இணையதளம் மற்றும் மொபைல் ஆப் (SARPA) உருவாக்கப்பட்டது போல, இங்கும் ஒரு மொபைல் ஆப் உருவாக்கப்படவுள்ளது. அதேபோன்று பாம்பு பிடிப்பவர்களுக்கு பயிற்சி வழங்கவும். அவர்களுக்குத் தேவையான உபகரணங்களை வழங்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் நிறைவு பெற சற்று கால அவகாசமாகும். அந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது பாம்புகள், மனிதர்கள் என இரு தரப்புக்கும் பாதுகாப்பு கிடைக்கும்'' என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cr529m4p9g2o

தூத்துக்குடியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய விலாங்கு மீனுக்கு 'தமிழிகம்' என பெயர் சூட்டியது ஏன்?

2 months 3 weeks ago

மீன்கள் என்றவுடன் உங்கள் மனதில் தோன்றும் வழக்கமான வரையறை எதற்குள்ளும் பொருந்தி வராதவை விலாங்கு மீன்கள். மெல்லிய, வழுவழுப்பான மற்றும் நீண்ட பாம்பு போன்ற உடலமைப்பைக் கொண்டவை.

அத்தகைய விலாங்கு மீன்களில், ஒரு புதிய இனம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த விலாங்கு மீன் அதிகம் பேசுபொருள் ஆவதற்குக் காரணம் அதன் பெயர். அதற்கு அரியோசோமா தமிழிகம் (Ariosoma tamilicum) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழியை அடையாளப்படுத்தும் விதமாக விலாங்கு மீனுக்கு பெயர் சூட்டியது ஏன்? சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? இந்தப் புதிய வகை விலாங்கு மீன் குறித்து ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICAR) கீழ் செயல்படும் தேசிய மீன் மரபணு வளப் பணியகத்தின் (NBFGR) ஆய்வாளர்கள், இதுவரை அறியப்படாத காங்கிரிடே (Congridae)) என்ற அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்த புதிய வகை விலாங்கு மீனை அடையாளம் கண்டுள்ளனர்.

இந்தப் புதிய விலாங்கு மீன் கண்டுபிடிக்கப்பட்ட காரணத்திற்காக மட்டுமின்றி, அதற்கு தமிழ் கலாசாரத்தை அடையாளப்படுத்தும் வகையில் பெயர் சூட்டியிருப்பதால் பொது மக்கள் மத்தியில் சிறப்புக் கவனம் பெற்றுள்ளது.

அரியோசோமா தமிழிகம் என்ற அறிவியல் பெயரைக் கொண்ட இந்த விலாங்கு மீன், உலகின் பழமையான மொழிகளில் ஒன்றாகக் கருதப்படும் தமிழ் மற்றும் அதன் தொன்மைக்கு மரியாதை செலுத்தும் விதமாகச் சூட்டப்பட்டுள்ளது என்று தேசிய மீன் மரபணு வளப் பணியகத்தின் செயல் இயக்குநர் முனைவர் டி.டி.அஜித் குமார் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தமிழிகம் விலாங்கு மீனை முதலில் கண்டுபிடித்த மீனவர்கள்

தமிழிகம்: தூத்துக்குடியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை விலாங்கு மீனுக்கு தமிழ் மொழியை பெயராகச் சூட்டியது ஏன்?

படக்குறிப்பு,புதிதாதக் கண்டுபிடிக்கப்பட்ட விலாங்கு மீனுக்கு தமிழ்நாட்டின் பெயரைச் சூட்டுமாறு மீனவர்கள் கோரியதாகத் தெரிவித்தார் முனைவர் டி.டி. அஜித் குமார்.

இந்தப் புதிய கடல்வாழ் உயிரினத்தைக் கண்டுபிடிப்பதில் ஆய்வாளர்களைப் போலவே, தூத்துக்குடி மீனவர்களுக்கும் முக்கியப் பங்கு இருப்பதாகத் தெரிவித்தார் தமிழிகம் விலாங்கு மீன் குறித்த ஆய்வுக் கட்டுரையின் முன்னணி ஆசிரியரான முனைவர். கோடீஸ்வரன்.

"தமிழக கடலோரப் பகுதிகளில் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருவதால் மீனவர்களுடன் தொடர்பிலேயே இருப்போம். அவர்களும் புதிதாக, தாங்கள் இதுவரை கண்டிராத தோற்றங்களைக் கொண்ட கடல் உயிரினங்களைக் கண்டால் உடனே எங்களுக்குப் புகைப்படம் எடுத்து அனுப்புவார்கள்.

அதே போலத்தான் தமிழிகம் விலாங்கு மீனும் எங்கள் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டது. மீனவர்களின் வலையில் சிக்கிய இந்த விலாங்கு மீனின் தோற்றம் இதுவரை காணாத வகையில் வித்தியாசமாக இருந்ததால், மீனவர்கள் அதை எங்களிடம் பகிர்ந்தனர்," என்று விவரித்தார் கோடீஸ்வரன்.

"தமிழிகம் விலாங்கு மீன் இனத்தைக் கண்டுபிடிப்பதில் எங்களுக்கு உதவிய மீனவர்கள் அதற்குத் தமிழ்நாட்டின் பெயரை வைக்குமாறு கோரினர். பின்னர் உலகின் பழமையான மொழியான தமிழின் பெயரை அதற்கு வைக்குமாறும் சில மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில், தமிழ் மொழி மற்றும் அதன் கலாசாரத்தை அடையாளப்படுத்தும் விதமாக இந்தப் பெயர் சூட்டப்பட்டது. பின்னர் இது சர்வதேச ஆய்வறிக்கை விமர்சகர்களாலும் அங்கீகரிக்கப்பட்டது," என்று முனைவர் அஜித் குமார் கூறினார்.

தேசிய மீன் மரபணு வளப் பணியகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு, லட்சத்தீவு உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் புதிய கடல்வாழ் உயிரினங்களைக் கண்டுபிடிக்கும் நோக்குடன் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்போது அரியோசோமா இனத்தைச் சேர்ந்த காங்கிரிடே விலாங்கு மீன் இனம் கண்டுபிடிக்கப்பட்டது.

"இந்த விலாங்கு மீனின் தோற்றத்தில் இருந்த தனித்தன்மையைப் வெறும் கண்களால் பார்க்கும்போதே கண்டறிய முடிந்தது. அதை மேலும் ஆய்வு செய்ததில், அதுவொரு புதிய இனம் என்பது உறுதி செய்யப்பட்டது," என்று இந்த ஆய்வுக் குழுவின் முன்னணி ஆய்வாளரான முனைவர். கோடீஸ்வரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இதேபோல், முன்னமே தூத்துக்குடியில் இருந்து, இதே காங்கிரிடே அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொரு விலாங்கு மீன் கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. "அதற்கு தங்கள் ஊரின் பெயரை வைக்குமாறு மீனவர்கள் கேட்டனர். ஆகையால் அந்த விலாங்கு மீனுக்கு அரியோசோமா தூத்துக்குடியன்ஸ் (Ariosoma Thoothukudiense) எனப் பெயர் வைக்கப்பட்டது" என்று கூறினார் கோடீஸ்வரன்.

புதிய கடல்வாழ் உயிரினங்களுக்கான தேடல்

தமிழிகம்: தூத்துக்குடியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை விலாங்கு மீனுக்கு தமிழ் மொழியை பெயராகச் சூட்டியது ஏன்?

படக்குறிப்பு,தூத்துக்குடியன்ஸ் விலாங்கு மீனுக்கும் இந்த தமிழிகம் விலாங்கு மீனுக்கும் இடையே பல வேறுபாடுகள் இருப்பதாகக் கூறுகிறார் முனைவர் கோடீஸ்வரன்

அரியோசோமா தமிழிகத்தின் தோற்றதிலேயே தனித்துவம் தெரிந்தாலும், அது ஒரு தனி இனமா என்பதை உறுதி செய்யப் பல்வேறு பகுப்பாய்வுகளை மேற்கொள்ள வேண்டியிருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

உருவவியல் பகுப்பாய்வு, மரபணு மூலக்கூறு பகுப்பாய்வு, அதன் உடலமைப்பு மற்றும் எலும்புக்கூடு ஆகியவற்றை ரேடியோகிராஃபி மூலம் ஆய்வு செய்வது எனப் பல்வேறு செயல்முறைகளின் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன் விளைவாகவே இந்த விலாங்கு மீன் இதுவரை கண்டிராத ஒரு தனி இனம் என்பதை உறுதி செய்ததாகவும் விவரித்தார் கடல் உயிரின ஆய்வாளர் கோடீஸ்வரன்.

இதன் ஆய்வு முடிவு, சர்வதேச ஆய்விதழான ஸூடாக்ஸாவில் (Zootaxa) ஆய்வுக் கட்டுரையாக வெளியிடப்பட்டன. அதன்படி, இந்த விலாங்கு மீன் பல தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இதில் முன்புற கண் விளிம்பில் ஒரு வெண்மை நிறப் பட்டை மற்றும் கீழ் தாடைக்கு அருகே வயிற்றுப் பகுதியில் கருமை நிறத் திட்டுகள் உள்ளன. கூடுதலாக அதன் மேல் தாடையின் பாதி வரை இருக்கக்கூடிய நீண்ட பற்களைக் கொண்டுள்ளன.

தூத்துக்குடியன்ஸ் விலாங்கு மீனும் தமிழிகம் விலாங்கு மீனும் ஒரே அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்தவையாக இருந்தாலும், இவற்றுக்கு இடையே பல வேறுபாடுகள் உள்ளதாக கோடீஸ்வரன் குறிப்பிட்டார்.

குறிப்பாக, "தமிழிகம் விலாங்கு மீனுக்கு 118 முதல் 123 முதுகெலும்புகள் வரை இருக்கும். ஆனால் தூத்துக்குடியன்ஸுக்கு 160 முதல் 164 முதுகெலும்புகள் வரை இருக்கும்," என்கிறார் அவர்.

முனைவர் அஜித் குமாரின் கூற்றுப்படி, தேசிய மீன் மரபணு வளப் பணியகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு, இதுவரை இந்திய கடல் பகுதிகளில் 14 வகையான விலாங்கு மீன்களைக் கண்டுபிடித்துள்ளனர். அதிகம் அறியப்படாத கடல்வாழ் உயிரினங்கள் மீது கவனம் செலுத்தி வரும் இந்த ஆய்வுக் குழு, இந்திய கடல் பகுதிகளில் வாழும் உயிரினங்களிலேயே அதிகமாக ஆய்வு செய்யப்படாத விலாங்கு மீன்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

விலாங்கு மீன்கள் எண்ணிக்கையில் மிகுதிய இருந்தபோதிலும், "இந்திய மக்கள் அதை ஓர் விருப்ப உணவாகக் கருதாத காரணத்தால், அதன் மீது அதிக கவனம் செலுத்தப்படவில்லை. அதனால், ஆய்வுகளும் அவை குறித்துப் பெரியளவில் நடைபெறவில்லை.

நீளமான, பாம்பு போன்ற உடலமைப்பு, வழுவழுப்பான தோல், அவற்றின் நடத்தைகள், உயிரியல், சூழலியல் முக்கியத்துவம் பற்றி விரிவாக ஆராய வேண்டிய தேவை அதிகமுள்ளது," என்று கூறுகிறார் முனைவர். அஜித் குமார்.

பதுங்கியிருந்து இரையை வேட்டையாடும் விலாங்கு மீன்

மாலத்தீவு கடல் பகுதியில் படம் பிடிக்கப்பட்ட அஞ்சாலை என்றழைக்கப்படும் விலாங்கு மீன் வகை (கோப்புப் படம்)

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,மாலத்தீவு கடல் பகுதியில் படம் பிடிக்கப்பட்ட அஞ்சாலை என்றழைக்கப்படும் விலாங்கு மீன் வகை (கோப்புப் படம்)

மீன்கள் என்றவுடன் உங்கள் மனதில் தோன்றும் வழக்கமான வரையறை எதற்குள்ளும் பொருந்தி வராத, மெல்லிய, நீண்ட பாம்பு போன்ற உடலமைப்பைக் கொண்டவை விலாங்கு மீன்கள்.

இந்த உடலமைப்பு, மிகவும் குறுகலான இடங்களுக்குள் நுழையவும், வழுக்கிக் கொண்டு எளிதில் நழுவிச் செல்லவும் ஏதுவாக இருக்கிறது. விலாங்கு மீன்கள் கடல் வாழ் உயிரினங்களில் மிகவும் ரகசியமானவையாகக் கருதப்படுகின்றன.

இவை பெரும்பாலும் கடலின் ஆழத்தில், பாறை இடுக்குகளில், குகைகளில் வாழும் பழக்கம் கொண்டவை. மீன்களில் பெரும்பாலானவை குழுக்களாகக் கூடி வாழ்பவையாக இருக்கின்றன. ஆனால், விலாங்கு மீன்கள் ஒரே இடத்தில் பல இருந்தாலும், தனித்தனியாக வாழக் கூடியவை என்றும் இனப்பெருக்கத்திற்காக மட்டுமே இவை ஒன்று சேரும் எனவும் குறிப்பிட்டார் கோடீஸ்வரன்.

வேட்டையாடி உயிரினமான விலாங்கு மீன், சிறிய மீன்கள், ஓட்டுமீன்கள், மெல்லுடலிகள் எனப் பல வகையான இரைகளைச் சாப்பிடுகின்றன. அவை பதுங்கியிருந்து தாக்கும் வேட்டை பாணியைக் கொண்டவை. பெரும்பாலும், பாறை இடுக்கு போன்ற தனது மறைவிடத்தில் காத்திருந்து, தனக்கு அருகில் வரும் இரைகளைத் தாக்கி உண்கின்றன.

இருப்பினும், இவற்றின் இனப்பெருக்க நடத்தைகள் ஆய்வாளர்களுக்கு இன்னும் மர்மமாக இருப்பதாகவும், அதுகுறித்து விரிவான ஆய்வுகள் தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டார் முனைவர். கோடீஸ்வரன்.

விலாங்கு மீன்கள் கடலின் ஆழத்தில் வாழ்வதால், அவற்றை ஆய்வு செய்வதில் பல சவால்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியாவில் மட்டுமின்றி உலகளவிலேயே அவை குறித்த ஆய்வுகள் குறைவாக இருப்பதாகத் தெரிவித்தார்.

தமிழிகம்: தூத்துக்குடியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை விலாங்கு மீனுக்கு தமிழ் மொழியை பெயராகச் சூட்டியது ஏன்?

பட மூலாதாரம்,Dr. Kodeeswaran P

படக்குறிப்பு,அரியோசோனா தமிழிகம் என்று பெயரிடப்பட்ட புதிய வகை விலாங்கு மீன்

குறிப்பாக அவற்றின் இனப்பெருக்க செயல்முறை இன்னமும் பல ஆய்வாளர்களுக்கு மர்மமாகவே இருந்து வருகிறது. கடல் பரப்பின் மேற்புறத்தில் முட்டையிடும் மற்ற மீன்களைப் போலன்றி, இவை ஆழ்கடலில் முட்டையிடுகின்றன. "விலாங்கு மீன்கள் ஆழமான கடல் நீரில் இனப்பெருக்கம் செய்வதாகவும் அவற்றின் லார்வாக்கள் கடலின் நடுப்பகுதிக்குச் சென்று, அங்கு வளர்வதாகவும் நம்பப்படுகிறது. ஆனால், அதுகுறித்த தெளிவான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை," என்று கூறினார் கோடீஸ்வரன்.

இந்த நிலையில், அரியோசோமா தமிழிகத்தின் கண்டுபிடிப்பு, இந்திய கடல் பரப்பிலுள்ள பரந்த, பன்முகத் தன்மை கொண்ட விலாங்கு மீன்களின் வாழ்வியலைப் புரிந்துகொள்வதற்கான ஒரு தொடக்கப் புள்ளியாக அமையக்கூடும் என்று வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

ஒப்பீட்டளவில் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்ட உயிரினமாக இருந்தாலும், கடலின் சூழலியல் அமைப்புகளில் வேட்டையாடியாகச் செயல்படும் விலாங்குகள் கடல் சுற்றுச்சூழலின் சமநிலையைப் பேணுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இந்தக் கண்டுபிடிப்பு அதிகம் அறியப்படாத மீன் இனங்கள் வழங்கக்கூடிய பொருளாதார நன்மைகள் குறித்தும் கவனத்தை ஈர்த்துள்ளது. மற்ற உயிரினங்களுடன் ஒப்பிடும்போது விலாங்குகள் மீன்பிடித் தொழிலில் ஒப்பீட்டளவில் குறைவாகப் பயன்படுத்தப்படுவதால், அவற்றைச் சுற்றி நிலையான வணிக மீன்பிடி நடைமுறைகளை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இது உள்ளூர்ப் பொருளாதாரங்கள் மற்றும் பல்லுயிர்ப் பாதுகாப்பு முயற்சிகள் இரண்டுக்கும் பயனளிக்கக்கூடும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

தூத்துக்குடியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய விலாங்கு மீனுக்கு 'தமிழிகம்' என பெயர் சூட்டியது ஏன்? - BBC News தமிழ்

இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டுக்குச் செல்லக்கூடாது -வைகோ

2 months 3 weeks ago

19 Mar, 2025 | 02:15 PM

image

புதுடெல்லி: இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டுக்குச் செல்லக்கூடாது என மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தினார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய வைகோ “கடந்த 40 ஆண்டுகளில் 843 மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்கள். ஜனவரி 25-ம் தேதி முதல் 45 நாட்களில் பல்வேறு தாக்குதல்களை இலங்கை கடற்படை நடத்தி இருக்கிறது.

ஜனவரி 25 அன்று 3 படகுகளில் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்தது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு லட்சக்கணக்காண ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

பிப்ரவரி 2-ம் தேதி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஏராளமான படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்களில் 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அவர்களின் படகையும் பறிமுதல் செய்தது. பிப். 19-ம் தேதிஇ இலங்கை கடற்படை 42 இந்திய மீனவர்களை கைது செய்தது.

இலங்கை கடற்படையின் மனிதநேயமற்ற இத்தகைய நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது மீன்படி தொழிலை அழிக்க இலங்கை கடற்படை விரும்புகிறது. நமது கடற்படை அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறது? நாங்கள் இந்திய அரசுக்கு வரி செலுத்துகிறோம். தமிழக மீனவர்கள் என்ன அனாதைகளா?

நமது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்குச் சென்று அந்நாட்டின் ஆட்சியாளர்களைச் சந்தித்தார். நமது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் அதேபோல் சந்தித்தார். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

தற்போது என்ன காரணத்துக்காக நமது பிரதமர் நரேந்திர மோடி இலங்கை செல்கிறார்? இலங்கை அரசுக்கும் அதன் கடற்படைக்கும் கண்டனம் தெரிவிக்கப் போகிறாரா? இன்றும்கூட ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனர்கள் இந்திய அரசிடம் நீதி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமரை சந்தித்து இது தொடர்பாக பேசி இருக்கிறார். வெளியுறவு அமைச்சரையும் சந்தித்துப் பேசி இருக்கிறார். பலமுறை கடிதம் எழுதி இருக்கிறார். அவை அனைத்துமே குப்பைத் தொட்டியில் போடப்பட்டுவிட்டன .

இதுதான் இந்திய அரசு தமிழக மீனவர்களை இந்திய குடிமக்களை நடத்தும் விதமா? இனிமேலாவது நீங்கள் அங்கே செல்லாதீர்கள் அவர்களை இங்கே வரவழையுங்கள்.

இந்திய கடற்படை ஒருமுறையாவது ஒரு துப்பாக்கிச் சூட்டையாவது நடத்தி இருக்கிறதா? இவ்விஷயத்தில் இந்திய கடற்படையும் இலங்கை கடற்படையும் இணைந்து செயல்படுகிறார்கள். இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. மொத்த தமிழகமும் இந்திய அரசால் கைவிடப்பட்டது போல் உணர்கிறது.” என தெரிவித்தார்.

வைகோவின் உரைக்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் “அவையின் மூத்த உறுப்பினர் வைகோ உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். அவரது கவலையை நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஆனால் அவர் பேசியதில் ஒரே ஒரு வார்த்தை அவர் கோபத்தில் பேசி இருக்கிறார் என கருதுகிறேன்.

அந்த வார்த்தை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏனெனில் அது உண்மையல்ல. நமது மீனவர்களை துன்புறுத்துவதற்காக நமது கடற்படை இலங்கை கடற்படையுடன் இணைந்து செயல்படுமா?

இந்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. 2014ல் பிரதமர் மோடி பதவியேற்ற உடனேயே இலங்கை அரசுடன் பேசினார். இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை உயிருடன் திருப்பி அனுப்ப வேண்டும் என கூறினார். நமது மீனவர்களுக்கு உதவுவதற்கான ஒரு வாய்ப்பையும் நாம் வீணடிக்கவில்லை. நமது மீனவர்களுக்கு எப்போது எல்லாம் பிரச்சினை ஏற்பட்டுள்ளதோ அப்போதெல்லாம் நமது வெளியுறவுத்துறை அமைச்சகமும் பிரதமரும் உதவி இருக்கிறார்கள்.

வைகோவின் கவலைகள் அனைத்தையும் நான் அங்கீகரிக்கிறேன். ஆனால் அந்த ஒரு வார்த்தையை மட்டும் நீக்க வேண்டும் என்று அவைத் தலைவரை கோருகிறேன்.” என குறிப்பிட்டார்.

இதையடுத்து அவையை நடத்தி வந்த துணை தலைவர் ஹரிவன்ஷ் வைகோவின் அந்த குறிப்பிட்ட வார்த்தையை நீக்க உத்தரவிட்டார்.

இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டுக்குச் செல்லக்கூடாது -வைகோ | Virakesari.lk

போராட்டத்தில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது!

2 months 3 weeks ago

newproject-2024-09-24t073344-516-1727143

போராட்டத்தில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது!

பணிக்கு வருகை தராமல்  வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையிலேயே தமிழக அரசு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அத்துடன் மருத்துவ விடுப்பைத் தவிர சாதாரண விடுப்போ, ஏனைய விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது என்றும், காலை 10.15 மணிக்குள் பணிக்கு வராத ஊழியர்களின் விவரங்களை சேகரிக்குமாறும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1425746

பெற்றோர்களின் கடின உழைப்பை புகைப்படங்களாக ஆவணப்படுத்தும் மாணவர்கள்

2 months 3 weeks ago

'இவர்களின் கதைகளை சொல்ல வேண்டும்' - பெற்றோர்களின் கடின உழைப்பை புகைப்படங்களாக ஆவணப்படுத்தும் மாணவர்கள்

கண்டிராத கோணங்கள்

பட மூலாதாரம்,JAYARAJ S

படக்குறிப்பு,பழனியம்மாள் அதிகாலையில் 2 மணிக்கெல்லாம் எழுந்து செங்கல் சூளையில் வேலை செய்ய வேண்டும்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி

  • பதவி, பிபிசி தமிழ்

  • 17 மார்ச் 2025, 05:55 GMT

    புதுப்பிக்கப்பட்டது 39 நிமிடங்களுக்கு முன்னர்

அதிகாலை 2 மணிக்கெல்லாம் ஜெயராஜின் அம்மா பழனியம்மாளுக்கு விடிந்துவிடும். இரவு எத்தனை மணிக்குத் தூங்கினாலும் 2 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்பது, செங்கல் சூளையில் வேலை பார்க்கும் அவருக்கு ஓர் அனிச்சை செயல். தலைப்பாகை அணிந்து சேறும் சகதியுமான ஆடையுடன் நாள் முழுக்க தன் அம்மா வேலை செய்வதை புகைப்படங்களாக ஆவணப்படுத்தியுள்ளார், 12ம் வகுப்பு படிக்கும் ஜெயராஜ்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள சின்னத்தம்பிபாளையம் கிராமத்தை சேர்ந்த ஜெயராஜ், ஈரோடு அரசு மாதிரிப் பள்ளியில் படித்துவருகிறார்.

"நானும் செங்கல் சூளையில் அம்மாவுடன் வேலை செய்திருக்கிறேன். மண்ணைக் குழைத்து, செங்கலை உருவாக்குவது வரை கடுமையான வேலை அது. தலையில் மண்ணை சுமந்து, குழைத்து அதனை செங்கல்லாக உருவாக்க வேண்டும். மதியம் வெயிலில் அதிக வேலைகளை பார்க்க முடியாது என்பதால் அதிகாலையிலேயே அம்மா வேலை பார்ப்பார். அவரை புகைப்படம் எடுப்பதற்காக அதிகாலை 2 மணிக்கு ஒருமுறை எழுந்தேன். ஒரேயொரு புகைப்படம் எடுத்துவிட்டு தூக்கம் வருகிறது என வந்துவிட்டேன். ஆனால், அம்மாவுக்கு அது தினசரி செயல்பாடு."

கண்டிராத கோணங்கள்

பட மூலாதாரம்,SHEIK HASAN K

ஜெயராஜ் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் சுமார் 17 அரசு மாதிரிப் பள்ளிகளில் படிக்கும் 40 மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர் செய்யும் வேலைகளையும் தங்கள் சுற்றத்தில் உழைக்கும் மக்கள் பலரையும் புகைப்படங்களாக பதிவு செய்துள்ளனர். உழைக்கும் மக்களின் வலியை உணர்த்தும் வகையிலான படங்களாக அவை உள்ளன.

துப்புரவு பணி, கட்டுமான தொழில், கல் குவாரி, செருப்பு தைத்தல், மஞ்சள் ஆலை, பனை மரம் ஏறுதல், பேருந்து ஓட்டுநர், தையல் தொழிலாளி என, கடும் உழைப்பை கோரும் வேலைகளைச் செய்யும் தங்கள் பெற்றோர்களை லென்ஸ் வாயிலாக புகைப்படம் எடுத்துள்ளனர். வெட்டுக் காயங்கள், சிமெண்ட், மண் ஊறிய கை, கால்களை பிரதானமாக அவர்களின் புகைப்படங்களில் பார்க்க முடிகிறது. அவர்கள் பெற்றோரின் உழைப்பு அந்த படங்களில் பிரதிபலிக்கிறது.

"செங்கல் சூளையில் வேலை பார்க்கும் போது கால் பாதம் வெடித்துப் புண்ணாகிவிடும். தலைவலி, கால்வலி, மயக்கம், இடுப்பு வலி அடிக்கடி ஏற்படும். கேமரா வழியே புகைப்படம் எடுக்கும் போதுதான் அம்மாவுடைய வலி எனக்குப் புரிகிறது. புகைப்படங்கள் மூலம் அம்மாவின் வலியை மற்றவர்களுக்குக் கடத்த முடியும் என நினைக்கிறேன்." என்கிறார் ஜெயராஜ்.

"அம்மா முதலில் அவரை புகைப்படம் எடுக்க ஒத்துக்கொள்ளவில்லை. நான் எவ்வளவோ கேட்ட பிறகுதான், 'சரி நான் வேலை பார்க்கிறேன், நீ எடுத்துக்கோ'ன்னு சொன்னாங்க. புகைப்படத்தைக் காண்பித்ததும் 'நல்லா இருக்குன்னு' சொன்னாங்க."

அரசு மாதிரி பள்ளிகளில் கல்வி-இணை செயல்பாடுகளாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புகைப்படக் கலை, அரங்கக் கலை, மைமிங், நிகழ்த்துக் கலைகள் என பலவும் கற்றுத்தரப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கலையை கற்பதன் மூலம், நான்கு ஆண்டுகளில் நான்கு வெவ்வேறு கலைகளை அவர்களால் கற்க முடியும் என்பதே இதன் நோக்கம். தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையால் இது செயல்படுத்தப்படுகிறது.

கண்டிராத கோணங்கள்

பட மூலாதாரம்,GOVARTHANAN L S

படக்குறிப்பு,இந்த புகைப்பட கண்காட்சி கடந்த பிப்ரவரி மாதம் 3 நாட்கள் சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது

'அப்பா ஒரு ஹீரோ'

அப்படி புகைப்படக் கலையை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு 6-7 மாதங்களாக பயிற்சியளித்து, 'உழைக்கும் மக்கள்' எனும் தலைப்பில் அவர்கள் எடுத்த புகைப்படங்கள், கடந்த பிப். 14, 15, 16 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. அரசு மாதிரி பள்ளிகள் என்பது உண்டு உறைவிட பள்ளிகளாகும். எனவே, வார விடுமுறையில்தான் மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்வார்கள். அப்போதுதான் இந்த புகைப்படங்களையும் எடுத்துள்ளனர்.

மதுரை அரசு மாதிரிப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்துவரும் கோபிகா லெட்சுமியின் தந்தை முத்துகிருஷ்ணன், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவருடைய ஒரு சிறுநீரகம் செயலிழந்த காரணத்தால் வாரத்துக்கு இரண்டு முறை டயாலிசிஸ் செய்துவருகிறார்.

கண்டிராத கோணங்கள்

பட மூலாதாரம்,GOPIKA LAKSHMI M

படக்குறிப்பு,கோபிகாலெட்சுமியின் தந்தை டயாலிசிஸ் செய்த நிலையிலும் வாகனத்திலேயே சென்று பலசரக்குகளை விற்பனை செய்துவருகிறார்

"அப்பா ஒரு சிறிய நான்கு சக்கர வாகனத்திலேயே பல சரக்கு வியாபாரம் செய்துவருகிறார். அருகிலுள்ள கிராமங்களுக்கு வாகனத்திலேயே சென்று சரக்குகளை விற்பார். டயாலிசிஸ் செய்தும் அப்பா எங்களுக்காக கடினமாக உழைக்கிறார். டயாலிசிஸ் செய்துவிட்டு வீட்டில் ஓய்வெடுப்பதற்கு எங்களுக்கு வசதி இல்லை. இந்த நிலையிலும் அப்பா எப்படி உழைக்கிறார் என்பதை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என நினைத்தேன். நாம் எடுக்கும் படங்கள் நம் வாழ்க்கையின் ஆதாரமாக இருக்க வேண்டும்." என்கிறார் தா. வாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கோபிகாலெட்சுமி.

அவரை பொறுத்தவரை இந்த புகைப்படங்களில் அவருடைய அப்பா 'ஒரு ஹீரோ போன்று இருக்கிறார்."

அறக்கட்டளை மூலமாக இலவசமாக டயாலிசிஸ் செய்யும் முத்துக்கிருஷ்ணனுக்கு, மாதந்தோறும் ரூ.3,000 வரை மாத்திரைகளுக்கு செலவாகிறது.

கண்டிராத கோணங்கள்

பட மூலாதாரம்,MUKESH

படக்குறிப்பு,கல்குவாரியில் டிரில்லிங் வேலை செய்யும் கதிர்வேலுக்கு ஒருநாள் சம்பளம் ரூ.500-600

தொழில்முறையிலான டி.எஸ்.எல்.ஆர் கேமரா மூலம் புகைப்படம் எடுப்பது ஆரம்பத்தில் இந்த மாணவர்களுக்குக் கடினமானதாக இருந்தாலும், தொடர் பயிற்சியின் வாயிலாக இக்கலை சாத்தியமாகியிருக்கிறது. இம்மாணவர்களுக்கு ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள புகைப்படக் கலை பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்துள்ளனர்.

"மாணவர்களை சமூக பொறுப்புள்ளவர்களாக உருவாக்குவதுதான் இதன் நோக்கம். குழந்தைகள் என்ன புகைப்படங்கள் எடுக்கின்றனர் என பார்க்க நினைத்தோம். உழைக்கும் மக்கள் அவர்களை சுற்றியே இருக்கின்றனர், அதை ஆவணப்படுத்தியிருக்கின்றனர். அவர்களை பற்றி தெரிந்து கொள்வதுதான் சமூக மாற்றத்தின் தொடக்கம்." என்கிறார், மாதிரி பள்ளிகளில் கல்வி-இணை செயல்பாடுகளின் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ள முத்தமிழ் கலைவிழி. இவர், நீலம் அறக்கட்டடளை நிறுவனராகவும் உள்ளார்.

கண்டிராத கோணங்கள்

பட மூலாதாரம்,SARAN R

படக்குறிப்பு,இம்மாணவர்களை பொறுத்தவரை இயற்கை காட்சிகளைவிட மற்றவர்களின் உழைப்பை புகைப்படங்களாக பதிவு செய்வதன் மூலம் அக்கலையின் நோக்கம் நிறைவேறுகிறது

கடின உழைப்பும் சொற்ப வருமானமும்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை சேர்ந்த முகேஷ் அம்மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்துவருகிறார். அவருடைய அப்பா கதிர்வேல், திருத்தணியில் உள்ள கல்குவாரி ஒன்றில் வேலை பார்க்கிறார்.

"புகைப்படங்கள் எடுப்பதற்காக அப்பாவுடன் கல்குவாரியிலேயே நான்கு நாட்கள் தங்கியிருந்தேன். அப்போதுதான் அப்பா கல் குவாரியில் எப்படியான வேலைகளை செய்கிறார் என்பதை முதன்முறையாக பார்த்தேன். அப்பா அங்கேயே தங்கி வேலை பார்க்கிறார். வாரத்துக்கு ஒருமுறைதான் வீட்டுக்கு வருவார்." என்கிறார் முகேஷ்.

அதிகாலை 3 மணியிலிருந்து மதியம் 12 மணி வரையும் பின்னர் சிறிது ஓய்வுக்குப் பிறகு மாலை 3 மணியிலிருந்து 7 மணி வரையும் தன் தந்தை கல் குவாரியில் 'டிரில்லிங்' வேலைகளை பார்ப்பதாகக் கூறுகிறார் அவர்.

கண்டிராத கோணங்கள்

பட மூலாதாரம்,MUKESH K

படக்குறிப்பு,தங்களை சுற்றி இருப்பவர்களின், பலராலும் அறியப்படாத அவர்களின் உழைப்பை ஆவணப்படுத்த வேண்டும் என்பதே இந்த மாணவர்களின் நோக்கமாக உள்ளது

"அவர்கள் தங்கும் அறையில் கட்டில், மெத்தையெல்லாம் இல்லை. குவாரியில் உள்ள காலி அட்டைப் பெட்டிகள் மீதுதான் அப்பா படுத்திருப்பார். அப்பாவுக்கு கடும் வெயிலில் வேலை செய்வதால், கடந்தாண்டு சன் ஸ்ட்ரோக் ஏற்பட்டது."

இந்த டிரில்லிங் வேலையில் ஒரு நாளைக்கு 500-600 ரூபாய் கிடைக்கும் எனக்கூறுகிறார் முகேஷ்.

இந்த மாணவ, மாணவிகள் பெரும்பாலானோர், விளிம்புநிலை குழந்தைகள். தினசரி கூலி வேலைகளையே இவர்களின் பெற்றோர்கள் செய்கின்றனர். அவர்களின் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களை பிரதானப்படுத்த வேண்டும் என்பது இந்த புகைப்படங்களின் நோக்கமல்ல, மாறாக, "தங்கள் பெற்றோரின் கடின உழைப்பை சமூகம் அறிய செய்ய வேண்டும் என்பதுதான் நோக்கம்;" என்பது இந்த புகைப்படங்களை பார்க்கும்போது புரிகிறது.

கண்டிராத கோணங்கள்

பட மூலாதாரம்,KEERTHI S

படக்குறிப்பு,சரக்குகளை வாங்க தன் அம்மா முத்துலட்சுமி பேருந்தில் சென்றுவருவதில் உள்ள சிரமங்களை ஆவணப்படுத்தியுள்ளார் கீர்த்தி

தென்காசி மாவட்டம் மாயமான்குறிச்சியை சேர்ந்த கீர்த்தி 11-ம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டின் முன்பு சிறியதாக பெட்டிக் கடை வைத்திருக்கும் தன் அம்மா முத்துலட்சுமி, சரக்குகளை வாங்க பேருந்தில் சென்றுவருவதில் உள்ள சிரமங்களை ஆவணப்படுத்தியுள்ளார்.

"அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லை. அம்மாதான், கடை, வீடு இரண்டையும் கவனிக்கிறார். காலை 4 மணிக்கு எழுந்து இரவு 11 மணி வரை அவருக்கு வேலை இருக்கும். குழந்தைகளை முன்னேற்ற ஒரு பெண் என்னவெல்லாம் செய்கிறார் என்பதை புகைப்படங்கள் வாயிலாக காண்பிக்க வேண்டும் என நினைத்தேன்." என்கிறார் கீர்த்தி.

"அம்மா வேலை செய்வதை கேமரா லென்ஸ் வழியாக பார்க்கும்போது புதிதாக இருந்தது. புரொபஷனல் கேமராவை பிடிப்பது ஆரம்பத்தில் பயமாக இருந்தாலும் பின்னர் பழகிவிட்டது. இரவு நேரத்தில் எப்படி படம் எடுப்பது, ஷட்டர் ஸ்பீடு, அபெர்ச்சர் எப்படி சரிசெய்வது என எல்லாம் தெரியும்."

கண்டிராத கோணங்கள்

பட மூலாதாரம்,SHEIK HASAN K

படக்குறிப்பு,தங்கள் பெற்றோர்களின் கை, கால்களை புகைப்படம் எடுப்பதன் வாயிலாக அவர்களின் கதைகளை சொல்ல முயல்கின்றனர்

இந்த புகைப்பட கண்காட்சியை புகைப்படக் கலைஞர் எம். பழனிக்குமார் ஒருங்கிணைத்துள்ளார்.

"நம் கதைகளை எப்படி ஆவணப்படுத்துவது என்பதை இந்த மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தோம்." என்கிறார் அவரர்.

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி உயிரிழப்போரின் மரணங்களை தொடர்ச்சியாக தன் புகைப்படங்கள் வாயிலாக ஆவணப்படுத்தி வருகிறார் பழனிக்குமார்.

வேலை செய்யும் அம்மாவின் கைகள்

வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்ளும் அம்மாக்களையும் சில மாணவர்கள் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். " வெளியில் சென்று வேலை பார்ப்பது மட்டும் உழைப்பு அல்ல, வீட்டில் காலை முதல் இரவு வரை என் அம்மாவின் கைகள் வேலை செய்துகொண்டேதான் இருக்கிறது" என தன் அம்மாவின் கைகளை மட்டுமே புகைப்படமாக எடுத்துள்ளார் மாணவி ஒருவர்.

"இம்மாணவர்களின் அப்பாவோ அம்மாவோ எப்படிப்பட்ட சூழல்களில் வேலை பார்க்கின்றனர் என்பதை முன்பு பெரும்பாலும் பார்த்திருக்க மாட்டார்கள். அதை நேரடியாக பார்க்கும்போது அந்த உழைப்பை உணருகின்றனர். அடுத்தடுத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகின்றது. புகைப்படக் கலையில் அவர்களின் திறமையை அவர்களின் புகைப்படங்களை பார்த்தாலே புரியும்" என்றார்.

கண்டிராத கோணங்கள்

பட மூலாதாரம்,RASHMITHA T

படக்குறிப்பு,பீடி சுற்றும் தொழில் செய்பவர்களின் வீடு முழுவதும் புகையிலை வாசனையே நிரம்பியிருக்கிறது

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டான் கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ரக்‌ஷ்மிதா, தங்கள் பகுதியில் பீடி சுற்றும் தொழிலாளர்களை புகைப்படங்கள் எடுத்துள்ளார்.

"வீட்டு வாசல் முன்பு அமர்ந்துதான் பீடி சுற்றுவார்கள். அவர்களுடைய வீட்டில் புகையிலை வாசனை அதிகமாக இருக்கும். கொஞ்ச நேரத்துக்கு மேல் அங்கு இருக்க முடியாது. இவர்கள் ஆயிரம் பீடி சுற்றினால்தான் 250 ரூபாய் கிடைக்கும். மிக வேகமாக பீடி சுற்றுபவர்களுக்கே ஆயிரம் பீடி சுற்ற ஐந்து நாட்களாகும். அவர்களுக்கு காசநோய், நுரையீரல் பாதிப்புகள் அதிகமாக ஏற்படும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறையெல்லாம் அவர்களுக்குக் கிடையாது. இவர்கள் என்ன வேலை செய்கின்றனர் என்பது யாருக்கும் தெரியாது. சொல்லப்படாத இவர்களின் கதைகளை சொல்ல வேண்டும்." என்கிறார் ரக்‌ஷ்மிதா.

சமூகத்தில் அதிகம் அறியப்படாத எளிய மக்களின் வாழ்க்கை, அவர்களின் பிள்ளைகளாலேயே புகைப்படங்களாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c70elj406yzo

மது ஊழல் போராட்டம்; அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கைது!

2 months 3 weeks ago

New-Project-236.jpg?resize=750%2C375&ssl

மது ஊழல் போராட்டம்; அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கைது!

தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் அண்ணாமலை, முன்னாள் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் உள்ளிட்ட தமிழக பாஜக தலைவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு மாநில மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (டாஸ்மாக்) மதுபான ஊழலுக்கு எதிராக இன்று (17) திட்டமிட்ட போராட்டத்திற்கு முன்னதாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 11 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம், போராட்ட இடத்தை அடைவதற்கு முன்பே தலைவர்கள் வீட்டுக் காவலில் கைது செய்யப்பட்டனர் அல்லது தடுத்து வைக்கப்பட்டனர்.

தனது தடுப்புக்காவல் குறித்து பேசிய சௌந்தரராஜன்,

அவர்கள் எங்களை வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. எனது 300 காரியகர்த்தாக்கள் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாங்கள் வெளியே செல்வதை அவர்கள் விரும்பவில்லை.

டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் 1,000 கோடி (இந்திய ரூபா) ஊழலை நாங்கள் கண்டிக்கிறோம்.

நான் வெளியேற அனுமதிக்கப்பட வேண்டும், ஆனால் அவர்கள் என்னை அதைச் செய்ய அனுமதிக்கவில்லை” என்றார்.

இந்தக் கைதுகளைக் கண்டித்து, திமுக அரசு பயத்தில் செயல்படுவதாக அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

இது குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள பதிவில் அவர்,

“பயத்தால் நடுங்கும் திமுக அரசு, அதன் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், மாநிலச் செயலாளர் வினோஜ் பி செல்வன் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளை போராட்டத்தில் பங்கேற்க விடாமல் வீட்டுக் காவலில் வைத்துள்ளது.

ஜனநாயக ரீதியாக நாங்கள் போராட்டத்தை அறிவித்ததாலா நீங்கள் இதுபோன்ற கோழைத்தனமான செயல்களில் ஈடுபடுகிறீர்கள்? திகதி அறிவிக்காமல், திடீரென்று ஒரு நாள் போராட்டம் நடத்தினால் உங்களால் என்ன செய்ய முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.

gmnzlumaaaawrbn.jpg?ssl=1

தமிழ்நாடு மாநில மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (டாஸ்மாக்) சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் மதுபான ஊழல் தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் (ED) தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதற்கு பதிலளிக்கும் விதமாக இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதிக விலை நிர்ணயம், கையூட்டு மற்றும் ஊழல் தொடர்பாக மூன்று குற்றப் பத்திரிகைகளை ED பதிவு செய்துள்ளது.

இதில் டாஸ்மாக் நடவடிக்கைகளில் ரூ.1,000 கோடி முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பாக அண்மையில் தமிழ்நாடு முழுவதும் பல சோதனைகளை இந்த நிறுவனம் நடத்தியது.

இந்தக் குற்றச்சாட்டுகளை திமுக அரசு கடுமையாக மறுத்து, அவற்றை அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று நிராகரித்துள்ளது.

பாஜகவின் இந்தப் போராட்டம் சர்ச்சையைத் தூண்டும் முயற்சி என்றும், எதிர்க்கட்சிகள் தலைமையிலான மாநிலங்களை மத்திய அமைப்புகள் குறிவைப்பதாகவும் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

https://athavannews.com/2025/1425494

விடுதலைப் புலிகள் உள்ளிட்ட 45 அமைப்புகளுக்கு தடை; திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட்டது இந்தியா

2 months 3 weeks ago

தமிழீழ விடுதலைப் புலிகள் உள்பட 45 அமைப்புகள் அடங்கிய தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியலை இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, மத்திய அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் திருத்தியமைக்கப்பட்ட 67 அமைப்புகள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 45 பயங்கரவாத அமைப்புகளாகவும், 22 சட்டவிரோத அமைப்புகளாகவும் வகைப்படுத்தப்பட்டு திருத்தி அமைக்கப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி,

  • தமிழீழ விடுதலைப் புலிகள்,

  • பாபர் கால்சா இன்டர்நேஷனல்,

  • காலிஸ்தான் கமாண்டோ படை,

  • காலிஸ்தான் ஜிந்தாபாத் படை,

  • சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு,

  • லஷ்கர் இ தொய்பா,

  • ஜெய்ஷ் இ முகமது,

  • மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி,

  • ஹர்கத் உல் முஹாஜூதின்,

  • அல் உம்ர் முஹாஜூதின்,

  • ஜம்மு காஷ்மீர் இஸ்லாமிய முன்னணி,

  • அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி,

  • சிமி,

  • தமிழ்நாடு விடுதலைப் படை,

  • தமிழ் தேசிய மீட்புப் படை,

  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மக்கள் போர்

உள்பட 45 அமைப்புகள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா, மக்கள் விடுதலை இராணுவம், தேசிய பெண்கள் முன்னணி, தேசிய மனித உரிமைகள் அமைப்பு கூட்டமைப்பு, அகில இந்திய இமாம்கள் கவுன்சில் உள்பட 22 அமைப்புகள் சட்டவிரோத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த அமைப்புகள் இந்தியாவில் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும். இந்த அமைப்புகளுக்கு ஆட்சேர்ப்பது, நிதி திரட்டுவது உள்ளிட்ட உதவி செய்வது கடும் குற்றமாகும்.

அவ்வாறான நபர்களுக்கு எதிராக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/316136

பாஜகவுடன் கூட்டணி சேர பழனிசாமிக்கு அழுத்தம் தரப்படுகிறதா? அதிமுகவில் என்ன நடக்கிறது?

2 months 3 weeks ago

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல், பாஜக, அதிமுக, திமுக, எடப்பாடி பழனிச்சாமி

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சிராஜ்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 16 மார்ச் 2025

"எங்களுக்கு இருக்கும் ஒரே எதிரி திமுகதான். மற்ற கட்சிகள் எங்களுக்கு எதிரி கிடையாது. தேர்தலில் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் இருக்க வேண்டும். அதிமுக கூட்டணி குறித்து தேர்தலுக்கு 6 மாதங்கள் இருக்கும்போது சொல்லப்படும்" என கடந்த மார்ச் 4ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்திருந்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

அவரது இந்தக் கருத்து, தமிழக அரசியலில் கவனம் பெறக் காரணம், சில மாதங்களுக்கு முன்புவரை எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள், 'பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை' என உறுதியாக கூறிவந்தனர்.

கடந்த ஆண்டு(2024) நவம்பரில், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி "திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். அதேசமயம் பாஜக-வோடு கூட்டணி இல்லை என்பதே எங்களின் நிலைப்பாடு. அதில் எந்த மாற்றமும் இல்லை" என்றார்.

தவெக: விஜய் எதிர்பார்ப்பது என்ன? 2026 தேர்தலில் அதிமுக-வுக்கு ஆபத்தா?

செங்கோட்டையன் கலகக் குரலா? அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் அதிமுகவில் மாற்றம் நிகழுமா?

ஜெயலலிதாவின் 27 கிலோ நகை, 1,526 ஏக்கர் சொத்துகளை தமிழ்நாடு அரசு ஏலம் விடுமா?

தொகுதி மறுசீரமைப்பு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 5 முக்கிய தீர்மானங்கள் என்ன?

இந்நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, "வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும். தமிழகத்தில் பாஜகவால் ஜெயலலிதாவின் ஆட்சியை நிச்சயம் தர முடியும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகவும் வர வேண்டும். அது பழனிசாமியுடனா, பழனிசாமி இல்லாமலா என்று தெரியாது." என்றார்.

கடந்த வாரம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "பாஜக தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி, கூட்டணியில் பாஜக இருந்ததால்தான் தோற்றோம் என்றெல்லாம் கூறியவர்கள் இன்று பாஜகவுடன் கூட்டணி வைக்க தவம் கிடக்கிறார்கள்." என கூறியிருந்தார், பிறகு "தான் அதிமுகவை குறிப்பிட்டுப் பேசவில்லை" என விளக்கமும் அளித்தார்.

அதேநேரத்தில், அண்மைக்காலமாக செங்கோட்டையனின் செயல்பாடும் அதிமுகவில் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக, அதிமுக- பாஜக குறித்து வெளியாகும் இத்தகைய கருத்துகளும் அதிமுகவில் நடக்கும் நிகழ்வுகளும் '2026 தேர்தலுக்காக, அதிமுக- பாஜக கூட்டணி மீண்டும் அமையுமா?', 'அதிமுக மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதா' போன்ற கேள்விகளை தமிழக அரசியல் களத்தில் எழுப்பியுள்ளன என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

அதிமுக- பாஜக கூட்டணியும் பிரிவும்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல், பாஜக, அதிமுக, திமுக, எடப்பாடி பழனிச்சாமி

படக்குறிப்பு,தமிழ்நாட்டில் 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக - பாஜக இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டன

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு, 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைந்தது. 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் நீடித்த இந்த கூட்டணியால் இரு தேர்தல்களிலும் வெற்றி பெற முடியவில்லை. இருப்பினும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குள் நுழையும் வாய்ப்பு பாஜகவுக்கு மீண்டும் கிடைத்தது. அக்கட்சிக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்தனர்.

ஆனால், தமிழ்நாட்டில் 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக - பாஜக இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டன. 2023 பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுக்குப் பின், இந்த மோதல் தீவிரம் அடைந்தது.

2023, ஜூன் மாதம், ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சில கருத்துகளைக் கூறியிருந்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை தொடர்புப்படுத்தி அவர் கூறிய கருத்து, அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அண்ணாமலைக்கு எதிராக மாநிலம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து அதிமுக மீதும் அக்கட்சியின் தலைவர்கள் மீதும் அண்ணாமலை விமர்சனங்களை முன்வைத்தார்.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல், பாஜக, அதிமுக, திமுக, எடப்பாடி பழனிச்சாமி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை, அக்கட்சியுடனான உறவை முறித்துக்கொள்வதாக, 2023 செப்டம்பரில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்

இதன் காரணமாக, 'அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை, அக்கட்சியுடனான உறவை முறித்துக்கொள்வதாக,' 2023 செப்டம்பரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

பிறகு, 2024 பிப்ரவரியில் நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறியது குறித்துக் கேட்டபோது, "கூட்டணிக்கான எல்லா கதவுகளும் திறந்தே இருக்கின்றன. இது குறித்து ஆலோசித்து வருகிறோம்" என்று பதிலளித்திருந்தார்.

ஆனாலும், பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதில் உறுதியாக இருந்தது அதிமுக.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக தலைமையில், தனித்தனி கூட்டணிகள் அமைந்தன. தேர்தல் முடிவில் ஒரு தொகுதியில்கூட இவ்விரு அணிகளால் வெற்றி பெற முடியவில்லை.

12 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக கூட்டணி இரண்டாம் இடம் பிடித்திருந்தது. சில தொகுதிகளில், திமுக கூட்டணி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை விட, அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகளின் வேட்பாளர்கள் தனித்தனியே பெற்றிருந்த வாக்குகளின் கூட்டுத்தொகை அதிகமாக இருந்தது.

உதாரணமாக, தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணி சார்பாக களம் கண்ட பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி 4,11,367 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். அதே தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ரா. அசோகன் 2,93,629 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

இங்கு பாமக மற்றும் அதிமுக பெற்ற மொத்த வாக்குகள் 7,04,996. இது, இங்கு போட்டியிட்டு வென்ற திமுக வேட்பாளர் மணி பெற்ற வாக்குகளை விட 2,72,329 வாக்குகள் அதிகம்.

'திமுக தான் ஒரே எதிரி'

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல், பாஜக, அதிமுக, திமுக, எடப்பாடி பழனிச்சாமி

பட மூலாதாரம்,@BABUMURUGAVEL

படக்குறிப்பு,திமுக தான் எங்கள் எதிரி என்ற கருத்தை நாங்கள் பல வருடங்களாகவே கூறி வருகிறோம் என்கிறார் அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல்

"எங்களுக்கு இருக்கும் ஒரே எதிரி திமுகதான். மற்ற கட்சிகள் எங்களுக்கு எதிரி கிடையாது. தேர்தலில் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் இருக்க வேண்டும்." என்ற எடப்பாடி பழனிசாமியின் சமீபத்திய பேச்சு குறித்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக செய்தித்தொடர்பாளருமான பாபு முருகவேலிடம் கேட்டோம்.

"திமுக தான் எங்கள் எதிரி என்ற கருத்தை நாங்கள் பல வருடங்களாகவே கூறி வருகிறோம். எடப்பாடி பழனிசாமி கூறியது போலவே, 2026 தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு ஒரு வெற்றிக் கூட்டணி அமைக்கப்படும். திமுக-வுக்கு எதிரான கட்சிகள் எங்களுடன் சேரலாம்." என்று கூறினார்.

ஆனால், எந்தக் கட்சி சேர்ந்தாலும் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும் என்று உறுதியாகக் கூறும் பாபு முருகவேல், "பாஜக குறித்து இப்போதே எதுவும் கூற முடியாது. ஆனால், போட்டி எப்போதும் போல, அதிமுக Vs திமுக தான். அதில் எந்தவித சந்தேகமுமில்லை" என்று தெரிவித்தார்.

பாஜகவுடன் கூட்டணி அமைக்க, அதிமுக அல்லது எடப்பாடி பழனிசாமிக்கு ஏதேனும் அழுத்தம் கொடுக்கப்படுகிறதா எனக் கேட்டபோது, "அதிமுக-வுக்கு அழுத்தம் கொடுக்குமளவுக்கு இங்கு எந்தக் கட்சியும் இல்லை, கொடுக்கவும் முடியாது. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தலைமையின் முடிவு இருக்குமே தவிர்த்து, வேறு எந்தக் காரணங்களுக்காகவும் எங்களது கட்சியை வளைக்க முடியாது" என்று கூறினார்.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல், பாஜக, அதிமுக, திமுக, எடப்பாடி பழனிச்சாமி

பட மூலாதாரம்,FACEBOOK/SRSEKAR

படக்குறிப்பு,ஆனால், திமுகவை எதிரியாகக் கருதும் எந்தக் கட்சியாக இருந்தாலும் பாஜக கூட்டணியில் இணையலாம் என்கிறார் எஸ்.ஆர்.சேகர்

இதுகுறித்து பாஜகவின் மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் கேட்டபோது, "பாஜக- அதிமுக கூட்டணி அமைந்துவிடக் கூடாது என்பதில் திமுகவும், அதன் ஆதரவு ஊடகங்களும் தெளிவாக உள்ளன. அதனால், இரு கட்சிகளின்ன் தலைவர்களும் பேசுவதை பலவாறாக திரித்து செய்திகள் வெளியிடப்படுகின்றன.

இதையெல்லாம் கடந்து, 2026 சட்டமன்ற தேர்தலுக்கான ஒரு 'மெகா கூட்டணியை' பாரதிய ஜனதா கட்சி அமைக்கும். அதில் அதிமுக இருக்குமா என இப்போதே சொல்ல முடியாது. ஆனால், திமுகவை எதிரியாகக் கருதும் எந்தக் கட்சியாக இருந்தாலும் அதில் இணையலாம்." என்று கூறுகிறார்.

தமிழ்நாட்டின் சக்தி வாய்ந்த கட்சிகள் திமுகவுக்கு எதிராக ஓரணியில் சேரும் என்று கூறிய எஸ்.ஆர்.சேகர், "அதற்கான பணிகளை பாஜக முன்னெடுக்கும். அந்தக் கூட்டணியை பாஜக ஒன்றிணைக்கும்" என்கிறார்.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல், பாஜக, அதிமுக, திமுக, எடப்பாடி பழனிச்சாமி

படக்குறிப்பு,கோப்புப் படம்

அதிமுகவில் செங்கோட்டையன் தனித்து செயல்படுகிறாரா?

கடந்த பிப்.9-ம் தேதி கோவையில் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியதற்காக விவசாய அமைப்புகள் சார்பில் பழனிசாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. விழா அழைப்பிதழில், எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இடம் பெறாததால் அதில் பங்கேற்கவில்லை என அவர் காரணம் கூறியிருந்தார்.

நேற்று முன்தினம் தமிழக பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, சட்டப்பேரவை வளாகத்தில் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக பேரவைத் தலைவர் அப்பாவுவை அவர் சந்தித்தார்.

அவைத் தலைவரை தனியே சந்தித்தது ஏன்? என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, "சபாநாயகரை சட்டமன்ற உறுப்பினர் சந்திப்பது சாதாரணமானது. இன்று கூட ஏழு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை சந்தித்துள்ளார்கள். சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதற்காக சபாநாயகரை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளேன். சுற்றுச்சூழல் துறை அமைச்சரும் அங்கு வருகை தந்தார். அவரிடம் அந்த கடிதம் கொடுக்கப்பட்டது" என்று பதிலளித்தார்.

பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செங்கோட்டையன் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த பழனிசாமி, "அதை அவரிடம் கேளுங்கள். காரணம், அவரைக் கேட்டால்தானே தெரியும்?! என்னை சந்திப்பதை அவர் ஏன் தவிர்த்தார் என்பது குறித்து அவரிடம் சென்று கேளுங்கள். இதெல்லாம் இங்கே கேட்கவேண்டிய கேள்வி இல்லை. தனிப்பட்ட முறையில் இருக்கக் கூடிய பிரச்சினைகளை எல்லாம் இங்கே பேசாதீர்கள்." என்றார்.

அண்மைக்காலமாக செங்கோட்டையனின் செயல்பாடு அதிமுகவில் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

'அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்படும் அழுத்தம்'

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல், பாஜக, அதிமுக, திமுக, எடப்பாடி பழனிச்சாமி

படக்குறிப்பு,அதிமுக- பாஜக கூட்டணி ஏறக்குறைய உறுதியாகிவிட்டது என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் பிரியன்.

இது தொடர்பாக பேசிய மூத்த பத்திரிகையாளர் பிரியன், "பாஜகவுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற அழுத்தம் அதிமுகவுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் உள்ளது என்பது உண்மை. ஆனால், அதைத் தாண்டி தேர்தல் கணக்கு என்று பார்க்கையில் அதிமுக-பாஜக கூட்டணி அமைவதே இரு கட்சிகளுக்கும் சாதகமாக இருக்கும்" என்கிறார்.

கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் இரு கட்சிகளும், தனித்தனியாக பெற்ற வாக்குகளை சுட்டிக்காட்டும் பிரியன், "திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரிந்தால் என்னவாகும் என்பதை அவர்கள் மக்களவைத் தேர்தலில் பார்த்துவிட்டார்கள். குறிப்பாக கொங்கு மண்டலத்தின் தோல்வி, இதை உணர்த்தியிருக்கும். எனவே கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

செங்கோட்டையன் உள்பட அதிமுகவின் பெரும்பாலான முக்கிய தலைவர்களும் அதையே விரும்புகிறார்கள். அவர்களும் அழுத்தம் கொடுக்கிறார்கள், அதனால் தான் 'திமுக மட்டுமே எதிரி' என எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார்." என்கிறார்.

நடிகர் விஜயின் 'தமிழக வெற்றிக் கழகம்' ஒருபுறம், சீமானின் 'நாம் தமிழர்' ஒருபுறம் என இருப்பதால், இவற்றைத் தவிர்த்து பாமக, தேமுதிக போன்ற கட்சிகளை சேர்த்துக்கொண்டு அதிமுக- பாஜக 2026 தேர்தல் கூட்டணி அமையலாம் என்று பிரியன் கூறுகிறார்.

"ஒருவேளை 2026இல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும் கூட, மத்தியில் பாஜக 2029 வரை ஆட்சியில் இருக்கும் என்பதால் அவர்களை அதிமுக பகைத்துக் கொள்ள விரும்பாது. எனவே அதிமுக- பாஜக கூட்டணி அமைய வாய்ப்புகள் அதிகம்" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் பிரியன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c9den22wl9yo

“உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள் என்று நாங்கள் சொல்வதுஇது மொழி வெறுப்பல்ல, தாய்மொழி பாதுகாப்பு...” - பவன் கல்யாணுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி

2 months 3 weeks ago

16 MAR, 2025 | 11:53 AM

image

உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள் என்று நாங்கள் சொல்வது பிறமொழி வெறுப்பல்ல. அது தாய்மொழியை பாதுகாக்கும் முயற்சி” என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னதாக, ஜன சேனா கட்சியின் 12-வது ஆண்டு விழாவில் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் அக்கட்சியின் தலைவரான பவன் கல்யாண் பேசி இருந்தார். அப்போது அவர், “இந்தியாவுக்கு பல மொழிகள் தேவை. அது தேசத்துக்கு சிறப்பு சேர்க்கும். இது தமிழகத்துக்கும் பொருந்தும். இந்தி மொழியை எதிர்க்கும் தமிழகம், தமிழ் திரைப்படங்களை பிற மொழிகளில் டப்பிங் செய்யக் கூடாது. ஆனால், நிதி ஆதாயத்துக்காக தமிழ் படங்கள் பல மொழிகளில் டப் செய்யப்படுகின்றன” எனக் கூறியிருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், “உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள் என்று நாங்கள் சொல்வது பிறமொழி வெறுப்பல்ல. அது எங்களின் தாய்மொழியை, எங்களது கலாச்சார அடையாளத்தை சுயமரியாதையோடு பாதுகாக்கும் முயற்சியாகும். இதை யாரேனும் பவன் கல்யாணுக்கு எடுத்துச் சொல்லவும்” என்று சமூக வலைதளப் பக்கத்தில் கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

பவன் கல்யாணின் கருத்துக்கு திமுக எம்.பி. கனிமொழியும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், “தொழில்நுட்ப வளர்ச்சி எங்களை திரைப்படங்களை மொழி எல்லைகள் கடந்து ரசிக்கும்படி செய்திருக்கிறது” என்று குறிப்பிட்டு, பவன் கல்யாண் கடந்த 2017-ஆம் ஆண்டு தெரிவித்த கருத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார். அந்தப் பதிவில் பவன், “வட இந்திய அரசியல்வாதிகள் நம் கலாச்சார பன்முகத்தன்மையை புரிந்து உரிய மரியாதை கொடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். அன்றைய கருத்தையும், இன்றையும் கருத்தையும் ஒப்பிட்டு பவன் கல்யாணை கனிமொழி விமர்சித்துள்ளார். பவன் கல்யாணின் கருத்துக்கு பலரும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/209354

ஏ.ஆர்.ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதி!

2 months 3 weeks ago

New-Project-195.jpg?resize=750%2C375&ssl

ஏ.ஆர்.ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதி!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று (16) காலை நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

காலை 7:30 மணியளவில் அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டடதாகவும், அங்கு வைத்தியர்கள் ECG மற்றும் எக்கோ கார்டியோகிராம் உள்ளிட்ட பரிசோதனைகளை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்படலாம் என்று வைத்தியசாலைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளருக்கு சிறப்பு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது.

அவரது உடல்நிலை குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://athavannews.com/2025/1425303

‘பரமசிவன் பாத்திமா’: டிரைலரை வெளியிட்ட சீமான், அண்ணாமலை

2 months 4 weeks ago

‘பரமசிவன் பாத்திமா’: டிரைலரை வெளியிட்ட சீமான், அண்ணாமலை

Published:14th Mar, 2025 at 6:20 PM

பரமசிவன் பாத்திமா படம்.

பரமசிவன் பாத்திமா படம்.  

செய்திகள்

‘பரமசிவன் பாத்திமா’ படத்தின் டிரைலரை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், பாஜக தலைவர் அண்ணாமலையும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

Updated:14th Mar, 2025 at 6:20 PM

‘பரமசிவன் பாத்திமா’ படத்தின் டிரைலரை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், பாஜக தலைவர் அண்ணாமலையும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

விமல் நடிப்பில் உருவாகி வரும் படம் பரமசிவன் பாத்திமா. இதில் விமலுக்கு ஜோடியாக சாயா தேவி கண்ணன் நடித்துள்ளார். மேலும் படத்தில் சாயாதேவி, எம்.எஸ்.பாஸ்கர், கூல் சுரேஷ், காதல் சுகுமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

படத்தை லட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கார்வண்ணன் தயாரித்து இயக்கியுள்ளார்.

இவர் ஏற்கெனவே சேரன் நடித்த 'தமிழ்க்குடிமகன்' படத்தை இயக்கி உள்ளார். தீபன் சக்கரவர்த்தி இசையமைக்க எம். சுகுமார் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.

இந்த படத்தின் கதை காதலை மையமாகக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்து படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இந்த நிலையில் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

https://www.dinamani.com/amp/story/cinema/cinema-news/2025/Mar/14/paramasivan-fathima-movie-trailer

டிஸ்கி

#கருடா செளக்கியமா🤣

தமிழ்நாடு பட்ஜெட் 2025: சென்னை அருகே 2000 ஏக்கரில் ஒரு புது நகரம் உருவாக்க திட்டம்

2 months 4 weeks ago

தமிழ்நாடு பட்ஜெட் 2025

பட மூலாதாரம்,TN ASSEMBLY

14 மார்ச் 2025, 03:23 GMT

புதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர்

தமிழ்நாடு அரசின் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

திருக்குறள் மொழிபெயர்ப்புக்கு ரூ.133 கோடி ஒதுக்கீடு முதல் சென்னை அருகே புதிய நகரம் உருவாக்கப்படுவது வரை பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திருக்குறளை மொழிபெயர்க்க ரூ.133 லட்சம் ஒதுக்கீடு

திருக்குறளை 45 புதிய மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.133 லட்சம் ஒதுக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

தமிழ்மொழி வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்துப் பேசிய அவர் "வருங்காலங்களில் தமிழ் புத்தகக் கண்காட்சிகளை தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய பெருநகரங்களான புதுடெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, திருவனந்தபுரம் உள்ளிட்ட இந்திய நகரங்களிலும் சிங்கப்பூர், மலேசியா, துபாய் ஆகிய வெளிநாடுகளிலும் புத்தகக் கண்காட்சி நடத்த ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது" என்று அறிவித்தார்.

ஆண்டுக்கு நூறு புத்தகங்கள் வீதம் வருகின்ற ஐந்து ஆண்டுகளில் 500 தமிழ்ப் புத்தகங்களை மற்ற மொழிகளில் மொழிபெயர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நிதி அமைச்சர் அறிவித்தார்.

இன்றைய முக்கிய செய்திகள், செய்திகள், பட்ஜெட், நிதிநிலை அறிக்கை

பட மூலாதாரம்,THANGAM THENNARASU/X

வெளிநாடு வாழ் இளம் தமிழர்களுக்கு தமிழ் மரபை அறிமுகம் செய்ய ரூ.10 கோடி ஒதுக்கீடு

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் இளைய தலைமுறையினருக்கு தமிழ் மரபை முறையாக அறிமுகம் செய்திடும் வகையில், அயலக தமிழர் நல வாரியம் மூலம் அவர்களுக்கு தமிழ் மொழி மற்றும் நாட்டுப்புறக் கலையைப் பயிற்றுவிக்கும் 100 தமிழ் ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களை வைத்து நேரடி வகுப்புகளை நடத்திட ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உலக தமிழ் ஒலிம்பியாட் போட்டி குறித்து அறிவிப்பு

"தமிழின் பெருமை மற்றும் சிறப்பை உலகத் தமிழ் இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பிற நகரங்களில் உள்ள பள்ளிகளிலும், உலகத் தமிழ் மையங்களிலும் பயிலும் மாணவர்களுக்கு கணினி வழி உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ. 1 கோடி வழங்கப்படும்" என்று தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

தொல்லியல் துறைக்கான நிதி அறிவிப்பு

வரும் நிதி ஆண்டில் தொல்லியல் ஆராய்ச்சி மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ரூ. 7 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும், "தென்கிழக்கு ஆசியா, மத்தியத் தரைக்கடல், அரேபிய தீபகற்பம், ரோமப் பேரரசு பகுதிகளுடன் வைத்துக்கொண்ட கடல் வழி வணிகம் தொடர்பாக ஆழ்கடல் அகழ்வாய்வுகளை தமிழ்நாடு கடற்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் முதல்கட்டமாக இந்த ஆண்டு தொல்லியல் ஆய்வாளர்களின் அறிவுரைப்படி காவிரிப் பூம்பட்டினம் முதல் நாகப்பட்டினம் வரை ஆழ்கடல் அகழ்வாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது" என்று அறிவித்தார்.

ஐம்பொன்னால் ஆன இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட செப்புத் திருமேனிகள் எழும்பூர் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன. அதன் சிறப்பை வெளிநாட்டினரும் ரசிக்கும் வகையில், மரபுசார் கட்டட அமைப்பில் தனியாக காட்சி அரங்கம் ஒன்று எழும்பூர் அருங்காட்சியகத்தில் அமைக்க ரு. 40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்றைய முக்கிய செய்திகள், செய்திகள், பட்ஜெட், நிதிநிலை அறிக்கை

பட மூலாதாரம்,@CMOTAMILNADU

படக்குறிப்பு,மார்ச் 13ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்ட தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்

ஊரக வளர்ச்சி திட்டத்திற்கான அறிவிப்புகள்

  • இந்த நிதியாண்டில் (2025-26) ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்ட ரூ. 3500 கோடி ஒதுக்கீடு

  • முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 6100 கி.மீ கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ. 2100 கோடி ஒதுக்கீடு

  • கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய சாலைகளின் பராமரிப்பு பணிகளுக்காக ரூ. 120 கோடி ஒதுக்கீடு

  • தமிழ்நாட்டின் அனைத்து குக்கிராமங்களும் தன்னிறைவு அடையும் வகையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உருவாக்கப்பட்ட அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி-2இன் கீழ் 2329 கிராம ஊராட்சிகளில் ரூ.1087 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படும்.

நகராட்சி நிர்வாகம்

  • கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ள பணிகளுக்காக ரூ. 2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 6483 கி.மீ. நீளமுள்ள சாலைகளை ரூ.3750 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • சென்னை மாநகராட்சியில் கடும் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் ஒரு பகுதியாக வேளச்சேரி மற்றும் கிண்டியில் வசிக்கும் 7 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் வேளச்சேரி பிரதான சாலை துவங்கி, குருநானக் கல்லூரி சந்திப்பு வரை 3 கி.மீ. நீளத்திற்கு ரூ. 310 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்படும்.

  • ரயில்வேதுறையுடன் இணைந்து கொருக்குப்பேட்டை ரயில்வே மேம்பாலம் ரூ. 70 கோடி மதிப்பில் கட்டப்படும்.

  • சென்னை பெருநகர மாநகராட்சியின் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் உயிரி எரிவாயு நிலையம், இயற்கை உரம் தயாரிக்கும் நிலையம், தானியங்கி பொருள் மீட்பு மையம் மற்றும் 21 மெகாவாட் திறன் கொண்ட திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பணிக்காக ரூ. 3450 கோடி திட்டக் காலத்திற்கான மதிப்பீட்டில் தொடங்கப்படும்.

சமச்சீர் வளர்ச்சி

சென்னை மாநகரத்தின் சமச்சீர் வளர்ச்சியை உறுதிசெய்திட வடசென்னை வளர்ச்சித் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிதியாண்டில் அதற்காக ரூ. 6858 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்திடும் வகையில் ஒருங்கிணைந்த புதிய நகரங்களை உருவாக்குவதின் முதல்கட்டமாக சென்னைக்கு அருகே ஒரு புதிய நகரம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும்.

மகளிர் நலன்

விடியல் பயணம் என்து மகளிர் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அறிமுகம் செய்யப்பட்ட திட்டமாகும். அந்த ஆண்டு அத்திட்டத்திற்கான மானியத் தொகை ரூ. 3600 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நிதியாண்டில் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 37 ஆயிரம் கோடி அளவுக்கு வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், ஈரோடு, கரூர் மற்றும் இராணிப்பேட்டை உள்ளிட்ட 10 இடங்களில் புதிதாக தோழி மகளிர் விடுதிகள் கட்ட ரூ. 77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

'ரூ' தொடர்பாக எழுந்த சர்ச்சை

காணொளியில் நிதிநிலை அறிக்கை குறித்த இலச்சினையில் ரூபாயை குறிக்கும் '₹' என்ற தேசிய சின்னத்திற்குப் பதிலாக தமிழில் 'ரூ' என்று தமிழ்நாடு அரசு பயன்படுத்தி இருந்தது.

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே பள்ளி கல்வித்துறைக்குத் தேவையான நிதியை வழங்க இயலும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்திருந்தார்.

இன்றைய முக்கிய செய்திகள், செய்திகள், பட்ஜெட், நிதிநிலை அறிக்கை

பட மூலாதாரம்,MK STALIN

படக்குறிப்பு,தேசிய இலச்சினை நீக்கப்பட்டு தமிழில் 'ரூ' பயன்படுத்தப்பட்டுள்ளது

இந்த நிலையில், மத்திய மாநில அரசுகளுக்கு இடையே மும்மொழிக் கொள்கை, ஹிந்தி திணிப்பு போன்ற விவகாரங்களில் நீடித்த வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது.

இத்தகைய சூழலில் தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் 'ரூ'வை பயன்படுத்தியது தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cj92rxdxpzeo

சீமான் வீட்டுக் காவலர், பணியாளருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம்!

2 months 4 weeks ago

சென்னை: நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் சம்மன் ஒட்டியபோது போலீஸாருடன் பிரச்சினை செய்ததாக கைதான சீமான் வீட்டுக் காவலர் மற்றும் பணியாளருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில் பதியப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் வீட்டில் வளசரவாக்கம் போலீஸார் சம்மன் ஒட்டினர். இந்த சம்மனை சீமான் வீட்டில் இருந்த பணியாளர் கிழித்தார். இதில் ஏற்பட்ட பிரச்சினையில் போலீஸாருடன் தகராறில் ஈடுபட்டதாக சீமான் வீட்டுப் பணியாளரான சுபாகர் மற்றும் வீட்டின் பாதுகாவலரான அமல்ராஜ் ஆகியோரை கைது செய்த நீலாங்கரை போலீஸார், அமல்ராஜ் வைத்திருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், “இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன் பதியப்பட்டுள்ளது. துப்பாக்கி வைத்திருப்பதற்கு உரிமம் இருப்பதால் தங்களை ஆயுத தடுப்புச் சட்ட பிரிவில் கைது செய்திருப்பது சட்டவிரோதமானது. ஜாமீனில் வெளியே வரக்கூடிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளபோதும் கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை,” என வாதிடப்பட்டது.

காவல் துறை தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் அருள்செல்வம், “சம்மனைக் கிழித்தது தொடர்பாக கேட்கச் சென்ற காவல் ஆய்வாளரை சீமான் வீட்டுப் பாதுகாவலர் உள்ளே செல்ல விடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டார். அவரது வீட்டுப் பணியாளர் சம்மனைக் கிழித்துள்ளார். ஒருவேளை பாதுகாவலர் வைத்திருந்த துப்பாக்கி வெடித்து இருந்தால் அசம்பாவிதம் நிகழ்ந்து இருக்கும். துப்பாக்கி உரிமம் சொந்த பாதுகாப்புக்குத்தான் வழங்கப்படுகிறதே தவிர, அடுத்தவர்களை மிரட்ட துப்பாக்கியை பயன்படுத்த முடியாது,” என்றார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, “துப்பாக்கியை தவறாக பயன்படுத்தியிருந்தால் அதை ரத்து செய்வது தொடர்பாக அரசு முடிவு எடுக்கலாம். இருவர் மீதான குற்றச்சாட்டுக்குள் செல்ல விரும்பவில்லை. அதை அவர்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்ளட்டும். எனவே இருவரும் தினமும் காலை 10.30 மணிக்கு சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்” என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

சீமான் வீட்டுக் காவலர், பணியாளருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம்! | Summons tearing incident: Two people including Seeman domestic worker granted bail - hindutamil.in

'விதிகளை வளைத்து ரூ.300 கோடி முறைகேடு' - உணவுத்துறை மீதான குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்

2 months 4 weeks ago

இந்திய அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டே விலைப் பட்டியல் இறுதி செய்யப்பட்டதாகக் கூறுகிறார், தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி.

படக்குறிப்பு,அமைச்சர் சக்கரபாணி

2 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து நெல் மூட்டைகளைக் கொண்டு செல்வதற்கு போக்குவரத்து ஒப்பந்தம் வழங்கியதில் 300 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சில தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாக ஒப்பந்த விதிகளை வளைத்து முறைகேடு நடைபெற்றதாகக் கூறுகிறார், அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம் வெங்கடேசன்.

இந்திய அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டே விலைப் பட்டியல் இறுதி செய்யப்பட்டதாகக் கூறுகிறார், தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி.

நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களுக்கு நெல் மூட்டைகளை அனுப்புவதில் முறைகேடு நடந்ததா? அமைச்சர் சக்கரபாணி சொல்வது என்ன?

தமிழ்நாட்டில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்கு மாநில அரசுகளுக்கு இந்திய உணவுக் கழகம் (FCI) அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி குறைந்தபட்ச ஆதார விலை மூலம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்கள், அரவைத் தொழிற்சாலைகள் மற்றும் பிற மாவட்டங்களுக்குக் கொண்டு செல்வதற்கு லாரி போக்குவரத்துப் பயன்படுத்தப்படுகிறது.

இதற்காக, இந்திய உணவுக் கழகம் சில வழிமுறைகளைக் கையாண்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில அளவிலான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் இந்திய உணவுக் கழகத்தின் தென்மண்டல செயல் இயக்குநர், மாநில உணவுத் துறை செயலர், போக்குவரத்துத் துறை செயலர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள், நெல் மற்றும் உடைக்கப்படாத தானியங்களை லாரிகள் மூலம் மத்திய, மாநில அரசின் தானியக் கிடங்குகளுக்கும் அங்கிருந்து ரயில் மூலம் மற்ற மாவட்ட குடோன்களுக்கும் அனுப்புவதற்கான போக்குவரத்துப் பணிக்கான ஒப்பந்தத்தை இறுதி செய்கின்றனர்.

மாவட்ட தானியக் கிடங்குகளில் இருந்து அரவைத் தொழிற்சாலைகளுக்கு அரிசி மூட்டைகள் அனுப்பப்படுகின்றன. அங்கு அரிசியாக அரைக்கப்பட்ட பிறகு மீண்டும் மாவட்ட, தாலுகா அளவிலுல் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகின்றன.

இதற்கான நிதியை இந்திய உணவுக் கழகம் (FCI), மாநில உணவு வழங்கல் துறைக்கு வழங்குகிறது.

போக்குவரத்துப் பணிக்கு டெண்டர்

'விதிகளை வளைத்து ரூ.300 கோடி முறைகேடு' - உணவுத்துறை மீதான குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"லாரிகள் மூலம் நெல் மூட்டைகளைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து ஒப்பந்தம் (Tender), கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் கோரப்பட்டது. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்பந்தம் திறக்கப்பட்டது. ஆனால் அதிக விலையை சில நிறுவனங்கள் குறிப்பிட்டதால் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டது" எனக் கூறுகிறார் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன்.

ஒப்பந்தம் 11 மாதங்கள் கழித்து இறுதி செய்யப்பட்டாலும் சில தனியார் நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் விதிமுறைகளை அதிகாரிகள் மாற்றியதாகக் கூறிய அவர், மேலதிக தகவல்களைப் பட்டியலிட்டார்.

"ஒரு மெட்ரிக் டன் நெல்லை லாரிகளில் எடுத்துச் செல்வதற்கு முதல் 8 கி.மீட்டருக்கு அரசு நிர்ணயித்த விலை என்பது 288 ரூபாய். சந்தை நிலவரத்தை ஆராய்ந்து இந்த விலை தீர்மானிக்கப்பட்டது. 38 மாவட்டங்களில் இதே விலையில் டெண்டர் கோரப்பட்டது" எனக் கூறுகிறார், ஜெயராம் வெங்கடேசன்.

ஆனால், "டெண்டரில் பங்கேற்ற மூன்று நிறுவனங்களும் முதல் 8 கி.மீட்டருக்கு 700 ரூபாய்க்கும் அதிகமாக விலையைக் குறிப்பிட்டன. முடிவில் முதல் 8 கி.மீட்டர் தூர பயணத்துக்கு 598 ரூபாய் வழங்குவது என அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்கிறார்.

கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, ஒரு தனியார் நிறுவனத்துக்கு 16 மாவட்டங்களும் இதர 2 நிறுவனங்களுக்கு முறையே 13 மாவட்டங்கள், 8 மாவட்டங்கள் எனவும் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்கு முன்னதாக, 2023-2024 காலகட்டத்தில் உணவு வழங்கல் துறையில் லாரிகளை ஓட்டிக் கொண்டிருந்த சில நிறுவனங்கள், முதல் 8 கி.மீட்டர் தூரத்துக்கு 329 ரூபாயை மட்டுமே அரசிடம் பெற்று வந்ததாகக் கூறுகிறார் ஜெயராம் வெங்கடேசன்.

மேலும், "அதே ரூ.329 விலைக்குக் கொடுத்திருந்தால்கூட அரசுக்கு இழப்பு தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால், அதைவிட கிட்டத்தட்ட இரு மடங்கு கூடுதல் விலையில் கொடுத்திருப்பது ஏன்?" என்றும் அவர் கேள்வியெழுப்புகிறார். இதுதொடர்பான ஆதாரங்களை ஜெயராம் செய்தியாளர் சந்திப்பின்போது முன்வைத்தார்.

'107 சதவீதம் அதிகம்'

தமிழ்நாடு டெண்டர் விதிகள் சட்டத்தின்படி (Tamil Nadu Transparency in Tender Rules, 2000) ஓர் ஒப்பந்தத்தில் 5 சதவீதம் அளவு தொகை கூடவோ, குறையவோ இருக்கலாம்.

படக்குறிப்பு,இந்த ஒப்பந்தத்தை இந்திய உணவுக் கழகத்தின் தென்மண்டல செயல் இயக்குநராக இருந்த அதிகாரி ஒருவர் ஏற்கவில்லை எனவும் அவர் கையெழுத்திடாமல் விடுப்பில் சென்றுவிட்டதாகவும் ஜெயராம் வெங்கடேசன் தெரிவித்தார்.

"லாரி போக்குவரத்துக்கு அதிகாரிகள் நிர்ணயித்த தொகையைவிட (288 ரூபாய்) 107 சதவீதம் அளவு வரை மூன்று தனியார் நிறுவனங்களுக்கும் கூடுதல் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இதேபோன்ற பணிக்கு முதல் 30 கி.மீ தொலைவுக்கு 220 ரூபாயை மட்டுமே தமிழ்நாடு சிமென்ட் கழகம் கொடுக்கிறது," என்று ஜெயராம் வெங்கடேசன் தெரிவித்தார்.

அதோடு, இந்த ஒப்பந்தத்தை இந்திய உணவுக் கழகத்தின் தென்மண்டல செயல் இயக்குநராக இருந்த அதிகாரி ஒருவர் ஏற்கவில்லை எனவும் அவர் கையெழுத்திடாமல் விடுப்பில் சென்றுவிட்டதாகவும் ஜெயராம் வெங்கடேசன் தெரிவித்தார்.

"நெல் கொள்முதல் முதல் அரவைப் பணிகள் வரை ஆறு முறை லாரிகளில் ஏற்றி இறக்கும் வேலைகள் நடக்கின்றன. அந்த வகையில், தற்போது வரை 300 கோடி ரூபாய் வரை அரசுக்குக் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. இதுவே, மொத்த ஒப்பந்த காலத்தைக் கணக்கிட்டால் 900 கோடி ரூபாய் வரை முறைகேடு நடப்பதற்கு வாய்ப்புள்ளது" எனக் கூறுகிறார்.

தமிழ்நாடு டெண்டர் விதிகள் சட்டத்தின்படி (Tamil Nadu Transparency in Tender Rules, 2000) ஓர் ஒப்பந்தத்தில் 5 சதவீதம் அளவு தொகை கூடவோ, குறையவோ இருக்கலாம். இதில், 107 சதவீதம் அளவுக்குக் கூடுதல் தொகை இருப்பதால் ரத்து செய்யும் முடிவை அரசு எடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

"கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 8 கி.மீ. தூர பயணத்திற்கு லாரிக்கு 330 ரூபாயை உணவு வழங்கல் துறை கொடுத்துள்ளது. ஆனால், அதே ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து 8 கி.மீட்டருக்கு 598 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. பொது விநியோகம் போன்ற ஒரு துறையில் இப்படியொரு முறைகேடு நடப்பது வேதனையளிக்கிறது," எனக் குறிப்பிட்டார் ஜெயராம் வெங்கடேசன்.

இதுதொடர்பாக, உணவு வழங்கல் துறையின் உயர் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசின் லஞ்ச ஊழல் கண்காணிப்புத் துறை, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ ஆகியவற்றுக்கு அறப்போர் இயக்கம் புகார் மனுக்களை அனுப்பியுள்ளது.

அமைச்சர் சக்கரபாணியின் விளக்கம்

தி.மு.க அரசு பொறுப்பேற்ற உடன் பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு முறைகேடாக போடப்பட்ட போக்குவரத்து ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

படக்குறிப்பு,அமைச்சர் அர.சக்கரபாணி விரிவான அறிக்கை ஒன்றை மார்ச் 12ஆம் தேதியன்று வெளியிட்டுள்ளார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறையின் அமைச்சர் அர.சக்கரபாணி முற்றிலும் மறுத்துள்ளார். இதுதொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை புதன்கிழமையன்று (மார்ச் 12) அவர் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், "கடந்த அ.தி.மு.க ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் போக்குவரத்து ஒப்பந்தம் வழங்கப்படுவதை இரண்டு ஆண்டுகள் என்பதற்குப் பதிலாக ஐந்து ஆண்டுகளாக இறுதி செய்தது.

அவ்வாறு இறுதி செய்யப்பட்ட போக்குவரத்துக் கட்டணம் மிகவும் அதிகமாக இருந்தது. ஒப்பந்த காலம் ஐந்து ஆண்டுகள் என்ற முடிவை எடுத்ததால், போக்குவரத்துக்கான தொகையை மத்திய அரசு விடுவிக்காமல் இருந்தது," என்று குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, "தி.மு.க அரசு பொறுப்பேற்றவுடன் பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு முறைகேடாகப் போடப்பட்ட போக்குவரத்து ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

இதனால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு 2,000 கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டது. பின்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி போக்குவரத்துக்கான ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது" எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் மாவட்டங்களில் ஆங்காங்கே உள்ளூர் நிலவரத்திற்கு ஏற்ப தற்காலிகமாக போக்குவரத்துக் கட்டண நிர்ணயக் குழு தெரிவித்த கட்டணம் கொடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் சக்கரபாணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும், "39 மண்டலங்களுக்கும் (38 மாவட்டங்களும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக வசதிக்காக 39 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன) தனித்தனியாக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு நிபந்தனைகள் நிறைவு செய்யப்பட்டன. ஒப்பந்ததாரர்களிடம் பலகட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தி, பிற மாநிலங்களின் கட்டண விகிதம் மற்றும் சந்தை நிலவரத்தையொட்டி மாநில அளவிலான குழு கட்டணத்தை இறுதி செய்தது.

அதன் அடிப்படையில் மண்டல அளவில் போக்குவரத்து ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, கடந்த ஆண்டு ஜூன் 15ஆம் தேதி முதல் மண்டலவாரியாக குறைந்த விலைப் புள்ளி அளித்த போக்குவரத்து நிறுவனங்களுக்கு ஆணை வழங்கப்பட்டது" எனத் தெரிவித்துள்ளார்.

கட்டண நிர்ணயத்தில் குளறுபடியா?

'விதிகளை வளைத்து ரூ.300 கோடி முறைகேடு' - உணவுத்துறை மீதான குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மாநிலக் குழு கூட்டத்தில், 8 கி.மீ பயணத்துக்கு 288 ரூபாய் என அதிகாரிகள் விலை நிர்ணயம் செய்தது தொடர்பான குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்துள்ளார்.

"ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் கட்டணப் பட்டியல் பெறப்பட்டதில், குறைந்தபட்சமாக தஞ்சாவூரில் 273 ரூபாயும் அதிகபட்சமாக மதுரையில் 479 ரூபாயும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதை மாநில அளவிலான குழு 360 ரூபாய் எனக் கணக்கிட்டு அதிலிருந்து 20% குறைத்து ஒப்பந்தப் புள்ளியில் குறைந்தபட்ச கட்டணம் பெற வேண்டும் என்ற நோக்கில் 288 ரூபாய் என நிர்ணயம் செய்தது. இதைப் புரிந்து கொள்ளாமல் அறப்போர் இயக்கம் உண்மைக்கு மாறான தகவல்களைத் தெரிவித்துள்ளது" என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

இந்திய உணவுக் கழகத்தின் தென்மண்டல செயல் இயக்குநர் இதை ஏற்காமல் சென்றதாகக் கூறப்படும் புகாருக்கு விளக்கம் அளித்துள்ள அவர், "இந்திய உணவுக் கழகத்தின் செயல் இயக்குநர் விடுப்பிலும் செல்லவில்லை, அவர் சார்பில் வேறு ஒருவர் கையொப்பமிடவும் இல்லை. அவரே ஒவ்வொரு குழு கூட்டத்திலும் கலந்து கொண்டு கையெழுத்திட்டுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

விதிகள் திருத்தப்பட்டதா?

மூன்று தனியார் நிறுவனங்களுக்காக ஒப்பந்த விதிகள் திருத்தப்பட்டதாகக் கூறப்படும் தகவலையும் சக்கரபாணி மறுத்துள்ளார்.

"ஒப்பந்தப் புள்ளியில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல்களின்படி மாநில அளவிலான குழு விதிகளை வகுத்துள்ளது. மேற்படி ஒப்பந்தப் புள்ளியில் 131 ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி, எட்டரை மாதங்களுக்கு மொத்தமாக ரூ.428 கோடி செலவான நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு 992 கோடி ரூபாய் ஊழல் என அறப்போர் கூறுவதைப் பார்க்கும்போது யூகத்தின் அடிப்படையிலேயே புகார் தெரிவிக்கப்பட்டிருப்பது தெளிவாகிறது," என்று பதில் அளித்துள்ளார் அமைச்சர் சக்கரபாணி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cwynwrkln2zo

இந்திய ரூபாவுக்கு (ரூ என்ற) புதிய குறியீடு; இந்தி திணிப்புக்கான ஸ்டாலினின் அதிரடி நடவடிக்கை!

2 months 4 weeks ago

New-Project-176.jpg?resize=750%2C375&ssl

இந்திய ரூபாவுக்கு புதிய குறியீடு; இந்தி திணிப்புக்கான ஸ்டாலினின் அதிரடி நடவடிக்கை!

திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தலைமையிலான தமிழக அரசு, 2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் அதிகாரப்பூர்வ இந்திய ரூபாய் சின்னத்தை (₹) நீக்கி, அதற்கு பதிலாக தமிழ் எழுத்துக்களை (ரூ) மாற்ற முடிவு செய்துள்ளது.

மார்ச் 14 ஆம் திகதி மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள மாநில வரவுசெலவுத் திட்டத்துக்கான ஒரு முன்னோட்டத்தை ஸ்டாலின் எக்ஸில் பகிர்ந்து கொண்டார்.

அதில், “சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சிய‍ை உறுதி செய்திட…” என்று கூறியுள்ளார்.

தேசிய கல்விக் கொள்கைக்கு (NEP) எதிரான எதிர்ப்பை ஒரு மாநிலம் புதிய நிலைக்கு எடுத்துச் சென்று, தேசிய நாணய சின்னத்தை நிராகரிப்பது இதுவே முதல் முறை.

இந்தி திணிப்பு தொடர்பாக மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வரும் நிலையில், மாநில வரவு-செலவுத் திட்டத்தில் இருந்து ₹ சின்னத்தை நீக்கும் முடிவு வந்துள்ளது.

தேசிய கல்விக் கொள்கை 2020 இன் முக்கிய அம்சங்களை, குறிப்பாக மும்மொழி சூத்திரத்தை செயல்படுத்த தமிழகம் மறுத்ததன் விளைவாக, சமக்ர சிக்ஷா அபியான் (SSA) கீழ் மத்திய கல்வி உதவியில் 573 கோடி இந்திய ரூபாவை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

கொள்கை விதிகளின்படி, மாநிலங்கள் SSA நிதியைப் பெற NEP வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.

இதில் 60 சதவீதம் மத்திய அரசால் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது.

மாநிலத்தில் உள்ள திமுக தலைமையிலான அரசாங்கம், NEP மூலம், பாரதிய ஜனதாக் கட்சி (பாஜக) தலைமையிலான மத்திய அரசு தமிழ் பேசும் மக்கள் மீது இந்தி மொழியைக் கற்க கட்டாயப்படுத்த விரும்புகிறது என்று வாதிடுகிறது.

இந்தக் கூற்றுக்களை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நிராகரித்து, ஆளும் கட்சியின் செல்வத்தை “புத்துயிர் பெற” ஆளும் திமுக அரசியல் இலாபம் ஈட்ட முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மார்ச் 5, 2009 அன்று இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட வடிவமைப்புத் திட்டத்தைத் தொடர்ந்து, 2010 ஜூலை 15, அன்று இந்திய ரூபாய் சின்னம் (₹) அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

டி உதய குமார் உருவாக்கிய இந்த வடிவமைப்பின் மேலே உள்ள இணையான கோடுகள் இந்திய மூவர்ணக் கொடியைக் குறிப்பதாகவும், பொருளாதார ஏற்றத்தாழ்வைக் குறைக்கும் நாட்டின் விருப்பத்தைக் குறிக்கும் சமத்துவ அடையாளத்தையும் சித்தரிப்பதாகவும் கூறப்படுகிறது.

புதிய சின்னம் பின்னர் நாணயத்தாள்கள் மற்றும் நாணயங்களில் இணைக்கப்பட்டது, ₹ சின்னம் கொண்ட முதல் நாணயங்கள் ஜூலை 8, 2011 அன்று புழக்கத்தில் வந்தன.

https://athavannews.com/2025/1425045

Checked
Thu, 06/12/2025 - 11:09
தமிழகச் செய்திகள் Latest Topics
Subscribe to தமிழகச் செய்திகள் feed