ஊர்ப்புதினம்

யாழில் தமிழ்மொழி மூன்றாவது இடத்தில் உள்ளதை பார்த்து அதிர்ச்சியுற்றேன் - அமைச்சர் சந்திரசேகரன்

3 months 2 weeks ago
20 Jan, 2025 | 03:23 PM
image
 

யாழில் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்தின் பெயர்ப் பலகையில் தமிழ்மொழிக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டிருந்ததை பார்த்து தான் அதிர்ச்சியுற்றதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை (20) யாழ்ப்பாணம் - பலாலி வீதி, கந்தர் மடம் பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பாடல் காரியாலயத்தை திறந்துவைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில்,

இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் கலாசார மையமானது திருவள்ளுவர் கலாசாரம் மையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

குறித்த நிகழ்வில் நானும் அதிதியாக கலந்துகொண்டவன் என்ற வகையில் பெயர் மாற்றம் தொடர்பில் திரை நீக்கத்தின்போது தான் அவதானித்தேன்.

திருவள்ளுவர் கலாசார மையம் எனப் பெயர் மாற்றியது குற்றமல்ல. யாழ்ப்பாணத்துக்கே உரித்தான பெயர்களான யாழ். கலாசார மையம் அல்லது யாழ். பண்பாட்டு மையம் என்ற பெயர் சூட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. 

பெயர் சூட்டும் நிகழ்வில் திருவள்ளுவர் கலாசார மையம் என காட்சிப்படுத்தப்பட்ட இலத்திரனியல்  திரையில் தமிழுக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டமை கவலை தரும்  விடயமாக இருந்தது. அதனைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன்.

தமிழ் மக்கள் வாழும் பகுதியில் தமிழுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். சிலவேளை தெரியாமல் சில தவறுகள் இடம்பெற்றிருக்கக்கூடும்.

குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் நான் இன்னும் கலந்துரையாடவில்லை. நிச்சயமாக அது தொடர்பில் கலந்துரையாடி இனிவரும் காலங்களில் தவறுகள் இடம்பெறா வண்ணம் செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

யாழில் தமிழ்மொழி மூன்றாவது இடத்தில் உள்ளதை பார்த்து அதிர்ச்சியுற்றேன் - அமைச்சர் சந்திரசேகரன் | Virakesari.lk

ரயில் பயணத்தை கண்காணிக்க மக்களோடு மக்களாக பயணித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க

3 months 2 weeks ago
20 Jan, 2025 | 03:44 PM
image
 

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று திங்கட்கிழமை (20) காலை மொரட்டுவையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி அலுவலக ரயிலில் மக்களோடு மக்களாக பயணித்துள்ளார்.

இந்த பயணத்தின்போது,  பயணிகள் எதிர்நோக்கும் பல பிரச்சனைகள் குறித்து பிமல் ரத்நாயக்க பயணிகளுடன் உரையாடும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இவர் ஊடகங்களுக்கு அறிவிக்காது, ரயில் பயணத்தின்போது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கண்காணிக்க நேரடி கள ஆய்வை முன்னெடுத்துள்ளார்.

இதன்போது, அடிக்கடி இடம்பெறும் ரயில் தாமதங்கள், மின் விசிறிகள் பழுது, ரயில்களில் ஏறுவதில் மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், தண்டவாளங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் சுகாதாரக்கேடு, பாதுகாப்பற்ற பாழடைந்த ரயிலை தொடர்ந்து பயன்படுத்தல் போன்ற பிரச்சினைகளை பொதுமக்களிடம் இருந்து கேட்டறிந்துள்ளார்.

ரயில் பயணத்தை கண்காணிக்க மக்களோடு மக்களாக பயணித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க | Virakesari.lk

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற முன்னாள் ஜனாதிபதி தயார் - நாமல் ராஜபக்ஷ

3 months 2 weeks ago
20 Jan, 2025 | 07:04 PM
image
 

(எம்.மனோசித்ரா)

இலங்கை வரலாற்றில் கடந்த காலங்களில் முன்னாள் நிறைவேற்றதிகார ஜனாதிபதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை இந்த அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துகின்றோம். பாதுகாப்பு மற்றும் அதன் நிமித்தம் வழங்கப்படும் உத்தியோகபூர்வ இல்லம் என்பன வரப்பிரசாதங்கள் அல்ல. அவை உரிமைகளாகும். எவ்வாறிருப்பினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அந்த இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராகவே இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

திங்கட்கிழமை (20) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எம்மை வெளியேறுமாறு கூறினால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளியேற நாம் தயாராகவே உள்ளோம். காரணம் இது எமது சொந்த குடியிருப்பு அல்ல. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இதே நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார். உத்தியோகபூர்வ இல்லம் என்பது முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பினை அடிப்படையாகக் கொண்டு அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ளவையாகும்.

எவ்வாறிருப்பினும் அந்த இல்லத்தை தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு யாருக்காவது விற்க வேண்டிய தேவை இருந்தால், அதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அங்கிருந்து வெளியேற்ற நினைத்தால் அதனை நாம் எதிர்க்கப் போவதில்லை. ஆனால் அதனை உத்தியோகபூர்வமாக எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும்.

காரணம் அந்த உத்தியோகபூர்வ இல்லம் பலவந்தமாக பெற்றுக் கொண்டதல்ல. அரசியலமைப்பு ரீதியாக கிடைக்கப் பெற்றதாகும். இது இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட நியதியுமல்ல. உலகில் எந்தவொரு நாட்டிலும் இந்த நடைமுறையே காணப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மாத்திரமின்றி, சகல முன்னாள் அரச உத்தியோகத்தர்களுக்கும் இது பொறுந்தும்.

முன்னாள் அரச தலைவர்கள் தற்போதைய அரசாங்கத்தில் பழிவாங்கப்படுகின்றனரா இல்லையா என்பது ஜனாதிபதி அநுரவின் உரைகளிலும், செயற்பாடுகளிலும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு என்பது சிறப்புரிமை அல்ல. அது உரிமையாகும். இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னர் பல நிறைவேற்றதிகார ஜனாதிபதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை இந்த அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துகின்றோம்.

எனவே முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எது எவ்வாறிருப்பினும் முன்னாள் ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் பட்சத்தில் அந்த இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு அவர் தயாராகவே இருக்கின்றார் என்றார். 

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற முன்னாள் ஜனாதிபதி தயார் - நாமல் ராஜபக்ஷ | Virakesari.lk

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் ஈடுபட்ட கம்பனிகளின் பெயர் விபரம் வெளியாகியது!

3 months 2 weeks ago

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் ஈடுபட்ட கம்பனிகளின் பெயர் விபரம் வெளியாகியது!

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டுள்ள கம்பனிகளின் பெயர் விபரங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக இலங்கை மத்திய வங்கி இதனை வெளிப்படுத்தியுள்ளது.

21 கம்பனிகள் திருத்தப்பட்டவாறான 1998 ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 83 (இ) பிரிவின் தடைசெய்யப்பட்ட திட்டமொன்றில் ஈடுபட்டுள்ளன என இலங்கை மத்திய வங்கி விசாரணைகளை நடத்தி தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

இதேவேளை வங்கித்தொழில் சட்டத்தின் 83(இ) பிரிவின் கீழ் இலங்கை மத்திய வங்கியினால் தீர்மானிக்கப்பட்டுள்ள கம்பனியொன்றின் பெயரை வெளிப்படுத்தலானது அந்தக் கம்பனி தொடர்பாக வழங்கப்பட்டுள்ள நீதிமன்ற கட்டளையொன்றின் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது



Open photo
 
 

யாழ். வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நபர் உயிரிழப்பு

3 months 2 weeks ago
20 JAN, 2025 | 10:33 AM
image

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த 49 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். 

இவருக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை (18) வல்வெட்டித்துறை பொலிஸார் இந்த நபரை கைது செய்து, பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் தடுத்து வைத்திருந்தனர். 

அந்நிலையில் திடீர் சுகவீனம் ஏற்பட்டதாக கூறி அவரை வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற நிலையில், அவர் உயிரிழந்துள்ளார். 

தொடர்ந்து உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், வைத்திய சாலைக்கு நேரில் சென்று சடலத்தை பார்வையிட்ட பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்க உத்தரவிட்டார்.

அதனையடுத்து, யாழ். போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைகள் நடைபெற்று, சடலத்தின் மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

https://www.virakesari.lk/article/204313

என்னப்பா இது அன்ரவுக்கு வந்த சோதனை...ஒரு பாராளுமன்ற எம்பிகளுக்கே சம்பளமில்லை...இதற்குள் இரண்டாவது வேறை

3 months 2 weeks ago
ரணில் விக்ரமசிங்க தலைமையில் நிறுவப்படவுள்ள மாற்று நாடாளுமன்றம்
Parliament of Sri LankaRanil WickremesingheGovernment Of Sri Lanka
 5 hours ago
 

 

 

 

Join us on our WhatsApp Group
விளம்பரம்
 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் மாற்று நாடாளுமன்றத்தை(நிழல் நாடாளுமன்றம்) நிறுவுவதற்கான முன்மொழிவு குறித்து விவாதங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாற்று நாடாளுமன்றத்திற்கு முன்னர் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஆனால் தற்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளை அழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த மாற்று நாடாளுமன்றத்திற்கு அழைக்க சுமார் 450 முன்னாள் அமைச்சர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

 


 

 

நிழல் அமைச்சரவை

ஆனால் அவர்களில் 225 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

ரணில் விக்ரமசிங்க தலைமையில் நிறுவப்படவுள்ள மாற்று நாடாளுமன்றம் | New Parliamentary Coalition Led By Ranil

 

அதன்படி, உண்மையான நாடாளுமன்றம் கூடும் 8ஆவது நாளில் இந்த மாற்று நாடாளுமன்றமும் கூடும். மேலும் மாற்று நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினர்களிடமிருந்து அரசாங்க அமைச்சகங்களின் எண்ணிக்கைக்கு சமமான அமைச்சர்களைக் கொண்ட நிழல் அமைச்சரவை நியமிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் நாடாளுமன்ற சபாநாயகர், சபைத் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட உள்ளதாகவும், தற்போது நாடாளுமன்றத்தில் செயல்பட்டு வரும் பொது வணிகக் குழு (COP) மற்றும் கணக்குக் குழு (COPA) உள்ளிட்ட பல குழுக்களை உருவாக்க அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.

இந்த மாற்று நாடாளுமன்றத்திற்கு முன்னாள் ஜனாதிபதிகளும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுவார்கள் என்றும், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மூத்த அரச தலைவர்களும் இலங்கையின் மாற்று நாடாளுமன்றத்தில் உரையாற்ற வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அனுரவுக்கு...சீனா நல்ல வைட்டமின் ஊசி போடிருக்கின்மோ...சலுகைகளை அனுபவிக்கும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராக அநுரகுமாரவின் அறிவிப்பு

3 months 2 weeks ago
சலுகைகளை அனுபவிக்கும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராக அநுரகுமாரவின் அறிவிப்பு

 

Untitled.png
 
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களையும் அரசாங்கம் மீளப் பெற்றுக்கொள்ளும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

 

 
 
 

 

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்தின் நிலத்தின் மதிப்பைத் தவிர்த்து மாதாந்த வாடகை ரூ. 4.6 மில்லியன் என்றார். முன்னாள் ஜனாதிபதிகள் குடியிருப்பை காலி செய்யவோ அல்லது வாடகையை தாங்களே செலுத்தவோ முடியுமென ஜனாதிபதி மேலும் கூறினார்.

 

"தற்போதுள்ள சட்டங்களின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு குடியிருப்பு அல்லது அவர்களது சம்பளத்தில் 1/3 பங்கு உரிமை உண்டு. அரசாங்கம் இப்போது இந்த நன்மையை ரூ. 30,000 ரொக்க கொடுப்பனவாக மட்டுப்படுத்தும். இது அவர்களின் சம்பளத்தில் 1/3 ஆகும்” என்று கட்டுகுருந்தவில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி தெரிவித்தார்.

 

கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகை, கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரிமாளிகை தவிர்ந்த அனைத்து அமைச்சு பங்களாக்களும் ஹோட்டல் திட்டங்களுக்காக அல்லது வேறு பொருத்தமான பயன்பாட்டிற்காக மீளப் பயன்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்

கல்முனையில் நீதிமன்றத் தடையை மீறி, திருவள்ளுவர் சிலை

3 months 2 weeks ago
கல்முனையில் நீதிமன்றத் தடையை மீறி, திருவள்ளுவர் சிலை

 

thumbnail.jpg

(பாறுக் ஷிஹான்)

 

 

நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட நிலையில் சர்ச்சைக்கு மத்தியில் 10 அடி உயரமான   திருவள்ளுவர் சிலை கொட்டும் அடை மழைக்கும் மத்தியில்   திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

 

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிட்டங்கி வீதியில் அமைந்துள்ள கல்முனை தமிழர் கலாசார பேரவை வளாகத்தில் குறித்த சிலை பொலிஸாரின் பாதுகாப்பிற்கும் மத்தியில்  இன்று(19) மாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 

 
 

குறித்த  சிலை திரை நீக்கம் செய்யும் நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ  மற்றும் வடக்கு பிரதேச செயலாளர்   ரி.ஜே அதிசயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

மேலும் கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவை உறுப்பினர்கள் உட்பட கல்முனை பிராந்திய இளைஞர் அமைப்புகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

அத்துடன் கல்முனை பகுதியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை  அனுமதியற்ற கட்டுமானம் என குறிப்பிட்டு  எழு நாட்களுக்குள் அகற்ற மாநகர சபை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவையால்   ஞயிற்றுக்கிழமை(19)  கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவை வளாகத்தில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட உள்ளதாகவும் அந்த திறப்பு விழாவுக்கான அழைப்பிதழில் கல்முனை மாநகரசபை ஆணையாளர் ஏ.ரி.எம்.றாபி கௌரவ அதிதியாக கலந்து கொள்ள உள்ளதாகவும் அச்சிடப்பட்டிருந்த நிலையில் கல்முனை மாநகர சபையினால் கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்திப் பேரவை செயலாளருக்கு முகவரியிட்டு   வெள்ளிக்கிழமை(17)  "கல்முனை கல்லடிக்குளப் பிரதேசத்தில் அனுமதியற்ற கட்டுமானம் என்ற தலைப்பில் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

 

அந்த கடிதத்தில் எமது KMC/Eng/App/2023 ஆம் இலக்க 2023.04.25 ஆம் திகதிய மற்றும் KMC/WD/COMP/10 ஆம் இலக்க 2023.09.07 ஆம் திகதிய கடிதங்களுக்கு மேலதிகமாக, தாங்கள் மேற்படி இடத்தில் கட்டுமானம் ஒன்றை மேற்கொண்டுள்ளமையும், சிலை ஒன்றை அமைத்துள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது. மேற்குறித்த கட்டுமானம் மற்றும் சிலை வைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உரிய சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக கல்முனை பிரதேச செயலகத்திலிருந்து காணி தொடர்பான அனுமதிப்பத்திரத்தினையும், கல்முனை மாநகர சபையினூடாக நிர்மாணத்தினை மேற்கொள்வதற்குரிய அனுமதியினையும் பெற்ற பின்னரே குறித்த குறித்த காணிக்குள் நிர்மாண வேலைகளை மேற்கொள்ளுமாறு ஏற்கனவே மேற்குறித்த கடிதங்கள் மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

 

ஆகவே இவ்வறிவுறுத்தல் கிடைக்கப்பெற்று ஏழு (7) நாட்களுக்குள் தங்களால் அனுமதியின்றி செய்யப்பட்ட நிர்மாண வேலைகளை அகற்றி ஆதனத்தினை முன்பிருந்த நிலைக்குக் கொண்டுவருமாறு வேண்டப்படுகின்றீர். தவறும் பட்சத்தில் தங்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்பதனை அறியத்தருகின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சிலை சிலை திரை நீக்கம்- நீதிமன்ற தடையுத்தரவு

 

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் முறைப்பாட்டிற்கமைய கல்முனை நீதிவான் நீதிமன்ற பதில்  நீதிவான்  அஹமட்லெப்பை நாதீர் கல்முனை கல்லடி நில குளத்தில் கல்முனை மாநகர சபையின் அனுமதியின்றி சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை திறப்புவிழா நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து கல்முனை தமிழ் காலாச்சார பேரவை தலைவர் செயலாளர் உப தலைவர் ஆகியோருக்கு 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை பிரிவு 106(1) இன் கீழான தடை உத்தரவு பிறப்பித்திருந்தார்.

 

மேலும் குறித்த சட்டவிரோத கட்டுமான நடவடிக்கையால் பல்லின இனங்கள் வாழும் இப்பிரதேசத்தில் இனமுறுகல் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் குறித்த குறித்த திறப்பு விழாவினை உடனடியாக தடை செய்து கட்டளை வழங்குமாறு விண்ணப்பம் செய்துள்ளபடியால் மேற்குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு குறித்த திறப்புவிழா நடவடிக்கைகளை இன்றிலிருந்து 14 நாட்களுக்கு தடைசெய்கின்ற விதமாக இத்தால் உமக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கப்படுகின்றது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

மேலும்  குறித்த சிலை திறப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக அம்பாறை அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவை அமைந்துள்ள காணி குத்தகை முறையான விதத்தில் இல்லையென்றும் அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள நிர்மாணிப்புக்கள் அனுமதியில்லாத முறையற்ற விதத்தில் அமைந்துள்ளமை தொடர்பில்  விமர்சனங்கள் எழுந்து வண்ணம் இருக்கும் நிலையில் இப்போது இந்த விடயம் பேசுபொருளாக மா

 

 

https://puthiyakural.lk/2025/01/19/thiruvalluvar-statue-in-kalmunai-removed-amid-controversies-pictures-450

இந்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்.கலாசார நிலையத்திற்கு நேற்று(18) 'திருவள்ளுவர் கலாசார மையம்' என பெயர் சூட்டப்பட்டது.

3 months 2 weeks ago
யாழ்ப்பாண கலாசார நிலையம் 'திருவள்ளுவர் கலாசார மையம்' என பெயர் சூட்டப்பட்டதற்கு மோடி வரவேற்பு

 

nyEYDEiA-Narendra-Modi-1200x900.jpg

யாழ்.கலாசார மத்திய நிலையத்திற்கு 'திருவள்ளுவர் கலாசார மையம்' என பெயர் சூட்டப்பட்டதை  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.

 

 

இந்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்.கலாசார நிலையத்திற்கு நேற்று(18) 'திருவள்ளுவர் கலாசார மையம்' என பெயர் சூட்டப்பட்டது.

 

 

இந்திய உதவியின் கீழ் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட தனிச்சிறப்பு மிக்க சின்னமாக திகழும் கலாசார நிலையத்திற்கு திருவள்ளுவர் கலாசார மையம் எனப் பெயர் சூட்டப்பட்டதை வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோடி தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

இதன்மூலம் திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தப்படுவதோடு இந்திய - இலங்கை மக்களிடையிலான கலாசார, மொழி, வரலாற்று, மற்றும் நாகரிக பிணைப்புகளுக்கான சான்றாகவும் இது திகழ்வதாக இந்திய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

 

இதேவேளை யாழ்ப்பாணத்தில் உள்ள கலாசார நிலையத்திற்கு தெய்வப் புலவரான திருவள்ளுவரின்  பெயர் சூட்டப்பட்டமை தொடர்பில் பெருமகிழ்வடைதாக இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர், கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

 

இந்திய - இலங்கை உறவுக்கு சான்றாக அமைந்துள்ள கலாசார மையமானது இந்திய உதவியின் கீழ் முன்னெடுக்கப்பட்ட முக்கியமான ஒரு அபிவிருத்தி திட்டமாகும் என இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

யாழ்.கலாசார மையம், திருவள்ளுவர் கலாசார மையமாக பெயர் மாற்றப்பட்டமை தமிழின்   பெருமையை பரப்புவதற்கான பிரதமர் மோடியின் மற்றுமொரு மைல்கல் என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

 

இது இந்தியா - இலங்கை இடையிலான பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையான கலாசாரம் மற்றும் நாகரிக தொடர்பையும் அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன, மத மனங்களையும் சுத்தப்படுத்துவதான் கிளின் சிறிலங்காவின் நோக்கம் : அமைச்சர் சந்திரசேகர்

3 months 2 weeks ago
19 JAN, 2025 | 07:02 PM
image

(எம்.நியூட்டன்)

'கிளின் சிறிலங்கா' என்பது இன, மத மனங்களையும் சுத்தப்படுத்துவது தான் நோக்கம் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.  

தேசிய தைப்பொங்கல் விழா வெள்ளிக்கிழமை (17) தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்று பின்னர் யூனியன் கல்லுரியில் அரங்க நிகழ்வுகள் நடைபெற்றன. அங்கு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இனங்களுக்கிடையில் ஒற்றுமையை, அன்பை, பாசத்தை ஏற்படுத்துகின்ற நிகழ்வுகள் பேச்சளவில் மாத்திரம் நிகழ்ந்திருக்கிறதே தவிர யதார்த்தபூர்வமாக நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்றார்கள். ஆனால் தை பிறந்தால் வழி பிறந்ததா என்பதை தேடிப் பார்த்தால் எங்கள் நாட்டில் தை பிறந்தால் என்ன நடந்திருக்கும் தாட்டில் மாற்றம் எற்பட்டதா சிறுவர்களுக்கு மகிழ்சி ஏற்படுத்தப்பட்டதா என்று தேடி பார்த்தால் எதுவுமே இல்லை.

இந்த வருட தை பிறப்பு என்பது 75 வருடங்களுக்கு பிறகு நாங்கள் நீங்கள் எல்லோருமே கூட்டிணைந்து புதிய அரசாங்கத்தை உருவாக்கியிருக்கின்ற நிலையில் நடைபெறுகின்றது. முதலில் எங்களுக்கு வழங்கிய ஆணைக்கு தலைவணங்கி நன்றி கூறுகின்றோம்.

நீங்கள் வழங்கிய மாற்றத்துக்கான ஆணையூடாக மாற்றத்தை ஏற்படுத்துவோம். எந்தவிதமான பந்தாக்களும் இல்லாமல் தான் நாங்கள் உங்களிடம் வந்துள்ளோம். 

கிளின் சிறிலங்கா என்பது நாட்டையோ வீட்டையோ கிராமத்தையோ சுத்தப்படுத்துவதல்ல. எங்களுடைய இனம், மத மனங்களை சுத்தப்படுத்துவது தான் முதலாவது விடயமாகின்றது. சிதைந்து போயுள்ள மனங்களை சுத்தப்படுத்துவது தான் கிளின் சிறிலங்காவின் நோக்கம்.

இந்தப் பொங்கலிலிருந்து புதிய பாதையில் பயணிப்போம் என்பது எனது வேண்டுகோளாகும். அரசாங்கம் புதிய பாதையில் பயணிக்கிறது. ஜனாதிபதி புதிய உலகத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார். 

இந்தப் பாதையில் நாங்கள் மாத்திரமல்ல. நீங்களும் பயணிக்க வேண்டும். உங்களைத் தான் நாங்கள் நம்பியிருக்கின்றோம். நீங்கள், நாங்கள் இணைந்து நாசமாக்கப்பட்டுள்ள இந்த நாட்டை முன்னேற்ற வேண்டும். அதற்காக அனைவரும் அணிதிரள வேண்டும் என்றார். 

https://www.virakesari.lk/article/204273

மன்னார் நீதிமன்றத்துக்கு முன் இடம்பெற்ற துப்பாக்கி சூடு - இராணுவ சிப்பாய் உட்பட மூவர் கைது

3 months 2 weeks ago
19 JAN, 2025 | 05:09 PM
image

மன்னார் நீதிமன்றத்துக்கு முன் கடந்த  வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ சிப்பாய் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் நடுக்குடா கடற்கரை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பின்னர், மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பான வழக்கு கடந்த வியாழக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்தது. 

இந்நிலையில் விசாரணைகளுக்காக சென்ற சந்தேக நபர்கள் மூவர் உள்ளடங்கலாக நான்கு பேர் மீது நீதிமன்றத்துக்கு முன் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது இருவர் உயிரிழந்ததுடன், இருவர் படுகாயமடைந்தனர்.

அதனையடுத்து, பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில் சந்தேக நபரான இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என கருதப்படும் இந்த இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டு  பேசாலை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்  செல்லப்பட்டதை தொடர்ந்து,  விசாரணைகள் நடத்தப்பட்டது. 

அதன் பிரகாரம், தொடர்ச்சியாக மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் மன்னார் மற்றும் பேசாலை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/204276

இலங்கையில் ஊடகத்துறையின் முன்னேற்றத்திற்காக ஒரு ஊடக அமைப்பு நிறுவப்பட உள்ளது

3 months 2 weeks ago
இலங்கையில் ஊடகத்துறையின் முன்னேற்றத்திற்காக ஒரு ஊடக அமைப்பு நிறுவப்பட உள்ளது.
 19 January 2025
இலங்கையில் ஊடகத்துறையின் முன்னேற்றத்திற்காக ஒரு ஊடக அமைப்பு நிறுவப்பட உள்ளது.
 

இலங்கையில் ஊடகவியலாளர்களின் ஊடக அறிவை மேம்படுத்தி அவர்களின் தொழிலை மேலும் விரிவுபடுத்தும் வகையில் அவர்களுக்கான ஊடக நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கு தேவையான திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அண்மையில் நாரஹேன்பிட்டியில் உள்ள ஊடக அமைச்சில் இலங்கை ஊடகவியலாளர் சபை உறுப்பினர்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இவ்வாறானதொரு நிறுவனத்தை நிறுவுவதற்கு முன்னைய அரசாங்கங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதிலும் அது இதுவரை சாத்தியமடையவில்லை என்பது இந்த கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் இந்த நிறுவனத்தை ஸ்தாபிப்பதே தமது நோக்கம் எனவும் இலங்கையில் ஊடகத் தொழிலில் ஈடுபடுபவர்ளை சிறந்து ஒரு ஊடகவியலாளர்களாக இந்த தேசத்திற்கு அறிமுகப்படுத்துவதே எமது நோக்கம் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர்களின் சுதந்திரம் அத்துடன் கௌரவம் மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் 50 வருடங்கள் பழமையான 1973 ஆம் ஆண்டின் 5 ஆம்  இலக்க  பத்திரிகைச்  சபைச்  சட்டத்தை  புதிய  தகவல்  தொடர்பு  போக்குகளுக்கு  ஏற்றவாறு  புதுப்பிப்பது  குறித்து  நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஊடகவியலாளர்களுக்கான ஒழுக்க நெறிமுறைகள் நடைமுறையில் இருந்தாலும் அதில் தற்போது சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இலங்கை ஊடகவியலாளர் சபையின் முயற்சியின் கீழ் ஊடகவியலாளர்களின் கல்வித் தரம் நலன் மற்றும் தொழில்சார் திறன்களை மேம்படுத்துவதற்கு பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை எவ்வாறு ஒழுங்கமைக்க வேண்டும் என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக ஊடகவியலாளர்களுக்கான விரிவான கற்கை நெறியை ஆரம்பிக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

பள்ளிக் குழந்தைகள் மற்றும் தொடர்பாடல் பாடத்தில் ஆர்வமுள்ளவர்களை இலக்காகக் கொண்டு நடத்தும் தொடர் சிறப்புப் பட்டறைகளை நல்ல நிறுவனக் கட்டமைப்பின் கீழ் தொடரவும் முடிவு செய்யப்பட்டது.

இக்கலந்துரையாடலில் ஊடகத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் என்.ஏ.கே.எல்.விஜேநாயக்க இலங்கை பத்திரிக்கை ஆணையாளர் நிரோஷன தம்பவிட்ட தற்போதைய தலைவர் பேராசிரியர் டியூடர் வீரசிங்க சிரேஷ்ட ஊடகவியலாளர் அரியநந்த தொம்பகஹவத்த சட்டத்தரணி மஹிஷா முதுகமுவ லெஸ்லி தேவேந்திரதா ஆகியோர் கலந்துகொண்டனர்

https://tamil.news.lk/current-affairs/ilankaiyil-utakatturaiyin-munnerrattirkaka-oru-utaka-amaippu-niruvappata-ullatu

Image

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கைது

3 months 2 weeks ago

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கைது

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கைது

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிப்பாகங்களைப் பயன்படுத்தி வாகனத்தை ஒன்று சேர்த்ததோடு, அதற்காக போலி ஆவணங்களைத் தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதற்கமைய, கைது செய்யப்பட்ட விஜித் விஜயமுனி சொய்சா நாளை (20) பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, இதே போன்று சட்டவிரோதமான முறையில் வேறு வாகனங்களை தயாரித்து பயன்படுத்தியுள்ளாரா என்பது தொடர்பில் வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (19) வாக்குமூலம் வழங்குவதற்காக வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவில் முன்னிலையாகி இருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் சுமார் 5 மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://tamil.adaderana.lk/news.php?nid=198979

மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார்.

3 months 2 weeks ago

மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார்

மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார்

மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக சிறிது காலம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், இன்று (19) காலமானார்.

அவருக்கு வயது 76 ஆகும்.

1949 ஜூன் 26ஆம் திகதி பிறந்த இவர், கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவராவார்.

https://tamil.adaderana.lk/news.php?nid=198988

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை வங்கிகள் ஏன் கருத்தில் கொள்ளவில்லை

3 months 2 weeks ago

 

127773198.jpeg

 
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை வங்கிகள் ஏன் கருத்தில் கொள்ளவில்லை..
 

பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாத வகையில் வங்கிகளால் விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உரிய தினத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு பதிலளிக்க இலங்கை மத்திய வங்கி தவறியுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட வன்னியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் வங்கி பரிவர்த்தனைகளின் போது, காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் வழங்கிய கண்டு கொள்ள முடியாமைக்கான சான்றிதழை ஏற்றுக்கொள்ள வங்கிகள் மறுப்பதை தடுக்க உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட விரிவான அறிக்கையை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மத்திய வங்கி ஆளுநருக்கு அறிவுறுத்தியிருந்தது.

 

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயலாளர் ரஞ்சித் உயன்கொட இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுக்கு அனுப்பிய கடிதத்தில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆய்வு மற்றும் மேற்பார்வைப் பிரிவின் பணிப்பாளருக்கு அறிக்கையை அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது.

எனினும், கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இறுதித் தினமான ஜனவரி 14ஆம் திகதி, மத்திய வங்கியினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு பதிலளிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. காலக்கெடு முடிந்து ஒரு நாள் கழித்து இலங்கை மத்திய வங்கி கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

 

“முல்லைத்தீவு மாவட்ட மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்புப் பயணம் தொடர்பாக” 2025 ஜனவரி 2ஆம் திகதி அனுப்பப்பட்ட கடிதத்தில், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களைப் பாதிக்கும் இந்தப் பிரச்சினையை மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த வருட இறுதியில் முல்லைத்தீவில் மேற்கொண்ட கண்காணிப்பில் அடையாளம் கண்டுள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“கடந்த டிசம்பரில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று முல்லைத்தீவு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டபோது, காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் வழங்கப்பட்ட காணாமற் போனோருக்கான சான்றிதழை வங்கிகள் புறக்கணிக்கின்றமை விசேட அம்சமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனால், அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் வங்கிச் சேவையில் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளது.”

https://newuthayan.com/article/காணாமல்_ஆக்கப்பட்டவர்களின்_உறவினர்களை_வங்கிகள்_ஏன்_கருத்தில்_கொள்ளவில்லை..

குருநகரில் வீசிய காற்றினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர்!

3 months 2 weeks ago

 

280285537.jpg

 
குருநகரில் வீசிய காற்றினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர்!
 

குருநகரில் இன்று காலை வீசிய பலத்த காற்றினால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் தேவாலயத்தை அமைச்சர் சந்திரசேகரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இந்த அனர்த்தத்தால் முப்பதுக்கும் மேற்பட்ட  வீடுகள் பகுதி அளவிலும்  புனித கொலை விலக்கி மாதா ஆலய திருப்பண்ட அறைகள் முற்றாகவும் சேதமடைந்துள்ளன. அத்தோடு சில படகுகளும் பகுதி அளவில் சேதமாக்கப்பட்டுள்ளன.

 

இதன்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கு தயாராக உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

   
212841668.jpg
1609558516.jpg
707612764.jpg
384094797.jpg
286584016.jpg

 

சீனாவை தொடர்ந்து அமெரிக்கா பறக்கிறார் ஜனாதிபதி அநுர

3 months 2 weeks ago

சீனாவை தொடர்ந்து அமெரிக்கா பறக்கிறார் ஜனாதிபதி அநுர anura-us.jpg

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது அடுத்த வெளிநாட்டு விஜயமாக அமெரிக்கா செல்லவுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்தா தெரிவித்தார்.

அதன் பின்னர் ஜனாதிபதி ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வார் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு, பிராந்திய வல்லரசுகளாக இந்தியா மற்றும் சீனாவுக்கு விஜயம் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலகின் அனைத்து நாடுகளுடனும் பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்த விஜயங்கள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

https://akkinikkunchu.com/?p=308530

நாடு முழுவதுமான நெல் களஞ்சியங்கள் துப்பரவு பணிகளில் இராணுவம்

3 months 2 weeks ago

நாடு முழுவதுமான நெல் களஞ்சியங்கள் துப்பரவு பணிகளில் இராணுவம்
நாடு முழுவதுமான நெல் களஞ்சியங்கள் துப்பரவு பணிகளில் இராணுவம்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அனுரகுமார திஸாநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ், நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் ‘தூய இலங்கை’ தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பெரும்போக பருவத்தின் நெல் அறுவடையை கொள்முதல் செய்வதற்கான திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதுடன் நெல் கொள்முதல் செய்த பிறகு, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான 209 நெல் களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

நெல் சந்தைப்படுத்தல் சபைக்குச் சொந்தமான நெல் களஞ்சியசாலைகள் மற்றும் சுற்றியுள்ள நிலம் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதால், அவற்றைப் பயன்படுத்த ஏற்றதாக மாற்றவும், சிறிய பழுதுபார்ப்புகளை மேற்கொள்ளவும் அவற்றைச் சுத்தம் செய்ய வேண்டியுள்ளதுடன் தேசிய நலனுக்காக பாதுகாப்புப் படையினர் ஆதரவு வழங்கும் வகையில், பாதுகாப்புச் செயலாளரின் அறிவுறுத்தல்களின்படி, இலங்கை இராணுவத் தளபதியான லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீயின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் கீழ் 2025 ஜனவரி 18 முதல் 2025 ஜனவரி 27 வரை அனைத்து பாதுகாப்புப் படைத் தலைமையகங்களாலும் நாடு முழுவதும் நெல் களஞ்சியசாலைகளை சுத்தம் செய்யும் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளதுடன் ஒரு தொடக்கமாக, நேற்று (18) இலங்கை இராணுவ படையினர் பல பகுதிகளில் நெல் களஞ்சியசாலைகளை சுத்தம் செய்தல் மற்றும் பழுதுபார்ப்பதில் பங்களித்தனர்.

IMG-20250119-WA0013-400x399.jpgIMG-20250119-WA0011-400x410.jpgIMG-20250119-WA0012-400x406.jpgIMG-20250119-WA0010-400x412.jpgIMG-20250119-WA0006-400x266.jpgIMG-20250119-WA0007-400x266.jpgIMG-20250119-WA0008-400x265.jpgIMG-20250119-WA0009-400x272.jpgIMG-20250119-WA0004-400x273.jpgIMG-20250119-WA0005-400x271.jpgIMG-20250119-WA0002-400x268.jpg

 

https://oruvan.com/நாடு-முழுவதுமான-நெல்-களஞ/

சீனாவின் உதவிகள் கடன்பொறியா? -அனுரகுமார திசநாயக்க மறுப்பு - சீனா இலங்கையை இராணுவமயப்படுத்தவில்லை என்றும் தெரிவிப்பு

3 months 2 weeks ago

 

சீனாவின் உதவிகள் கடன்பொறியா? -அனுரகுமார திசநாயக்க மறுப்பு - சீனா இலங்கையை இராணுவமயப்படுத்தவில்லை என்றும் தெரிவிப்பு

Published By: Rajeeban

19 Jan, 2025 | 10:55 AM
image

by Xinhua writers Ma Zheng, Liu Chen

 

சீனாவின் கடன்பொறி குறித்தும் சீனா இலங்கையை இராணுவமயப்படுத்துவதாகவும் மேற்குலக ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை  கருத்துக்களை நிராகரித்த இலங்க ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க உலகின் தென்பகுதி நாடுகளிற்கு அபிவிருத்தி அவசியம்,வெளிநாட்டு முதலீடுகள் கடன்கள் இல்லாமல் அவற்றை சாதிக்க முடியாது அவ்வாறான உதவிகளை கடன்பொறியாக நாங்கள் கருதுவதில்லை என தெரிவித்துள்ளார்.

சீனாவின் சின்ஹ_வாவிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையும் சீனாவும் இரு தரப்பு உறவுகளில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கின்றன என இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் திசநாயக்க செவ்வாய்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவர் சீனாவிற்கு மேற்கொள்கின்ற முதலாவது விஜயமிது.

2004 இல் நான் முதல்தடவையாக சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டேன்,20 வருடங்களிற்கு பின்னர் திரும்பிவரும் நான் பாரிய மாற்றங்களை பார்க்கின்றேன் என திசநாயக்க தெரிவி;த்தார்.

இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் கடந்த 68 வருடங்களாக நேர்மையான பரஸ்பர உதவி மற்றும் என்றும் நிலைத்திருக்கும் நட்புறவின் மூலம் சீனாவும் இலங்கையும் தங்கள் மூலோபாய ஒத்துழைப்பு கூட்டாண்மையை  ஆழமாக்கியுள்ளன.

இருதலைவர்களிற்கும் இடையில் புதன்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர்  புதியபட்டுப்பாதை திட்ட ஒத்துழைப்பு,விவசாய ஒத்துழைப்பு, சமூக நலம் ஊடகம் உட்பட பல விடயங்;கள்தொடர்பில் இரண்டு நாடுகளும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன.

வறுமை ஒழிப்பு தொழில்நுட்ப முன்னேற்றம் உட்கட்டமைப்பு அபிவிருத்தி உட்பட பல விடயங்களில் இலங்கை தற்போது பல சவால்களை எதிர்கொண்டுள்ளது என தெரிவித்த திசநாயக்க இந்த சவால்களில் இருந்து மீள்வதற்கு சீனா குறிப்பிடத்தக்க அளவில் இலங்கைக்கு உதவமுடியும்என தெரிவித்தார்.

சீன அரசாங்கம் என்பது மக்களை அடிப்படையாக கொண்டது மக்களின் தேவைகள் குறித்து கவனம் செலுத்துகின்றது என்பதை நான் அவதானித்தேன் இலங்கையின் புதிய அரசாங்கமும் மக்களிற்கு சேவையாற்றுவதை நோக்கமாக கொண்டது என இலங்கையின் 56 வயது புதிய ஜனாதிபதி தெரிவித்தார்.

வறுமையை ஒழிப்பதில் சீனாவின் சாதனைகளை பாராட்டிய திசநாயக்க சீனாவின் வறுமை ஒழிப்பு திட்டம் என்பது உலகத்திற்கான முன்மாதிரி ஐக்கிய நாடுகளும் அதனை பாரட்டியுள்ளது சீனாவும் அதிலிருந்து கற்றுக்கொள்வதற்கு நிறைய விடயங்கள் உள்ளன என தெரிவித்தார்.

சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சியின் அருங்காட்சியகம் தன்னைமிகவும் கவர்ந்ததாக தெரிவித்த திசநாயக்கஅது சீனா எப்படி கம்யுனிஸ்ட் கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் சவால்களை எதிர்கொண்டு தற்போது வெற்றியை பெற்றுள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றது என குறிப்பிட்டார்.

இது சீன மக்களிற்கு மாத்திரம் முக்கியமானதில்லை, இது அனைவருக்கும் வளர்ச்சிக்கான புதிய முன்னோக்குகளை வழங்குகின்றது என தெரிவித்தார்.

கடந்த வருடங்களில்புதிய பட்டுப்பாதை திட்ட ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கையும் சீனாவும் நிலையான முன்னேற்றத்தை கண்டுள்ளன.சீனாவின் நிறுவனங்கள் துறைமுகங்கள் பாலங்கள் மருத்துவநிலையங்கள் மின்னிலையங்கள் போன்றவற்றை அமைத்துள்ளன.இதன் மூலம் அவை இலங்கையின் உட்கட்டுமானத்திலும் முதலீட்டு சூழ்நிலையிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் வேலைவாய்ப்பை அதிகரித்துள்ளன.

சீனா இலங்கையின் முக்கிய வர்த்தக சகா, ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு முதலீடுகளிற்கு முக்கியமான நாடு,அபிவிருத்தி உதவிகளை வழங்கும் முக்கியநாடு.

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான புதிய பட்டுப்பாதைதிட்ட ஒத்துழைப்பில்  கொழும்பு துறைமுக நகரமும் அம்பாந்தோட்டை துறைமுகமும் மிகவும் முக்கியமானவை.

இந்த இரண்டுதிட்டங்களும் இலங்கைக்கு நீண்டகால அளவில் பெரும் பொருளாதார நன்மைகளை கொண்டுவரும் இதில் சந்தேகமில்லை என திசநாயக்க தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை துறைமுகம் கொழும்புதுறைமுக நகரம் ஆகியவற்றிற்கு அருகில்கைத்தொழில் பேட்டைகள் உருவாக்கப்படும் என தெரிவித்த திசநாயக்க இதன் மூலம்  அதிகளவு முதலீட்டை பெறமுடியும் இலங்கை மக்களின் வாழ்க்கை தரத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என குறிப்பிட்டார்.

சீனாவின் கடன்பொறி குறித்தும் சீனா இலங்கையை இராணுவமயப்படுத்துவதாகவும் மேற்குலக ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை  கருத்துக்களை நிராகரித்த திசநாயக்க உலகின் தென்பகுதி நாடுகளிற்கு அபிவிருத்தி அவசியம்,வெளிநாட்டு முதலீடுகள் கடன்கள் இல்லாமல் அவற்றை சாதிக்க முடியாது அவ்வாறான உதவிகளை கடன்பொறியாக நாங்கள் கருதுவதில்லை என தெரிவித்தார்.

 

 

https://www.virakesari.lk/article/204210

  •  

 

 

 

 

திக்கம் வடிசாலை தைப்பூசத்தன்று இயங்க ஆரம்பிக்கும் - அமைச்சர் மற்றும் தலைவர்கள் உறுதி!

3 months 2 weeks ago

திக்கம் வடிசாலை தைப்பூசத்தன்று இயங்க ஆரம்பிக்கும் - அமைச்சர் மற்றும் தலைவர்கள் உறுதி!
1554407283.jpg

யாழ்ப்பாணம் - வடமராட்சி திக்கம் வடிசாலை எதிர்வரும் தைப்பூச நாளிலிருந்து இயங்கும் என பனை அபிவிருத்தி சபை தலைவர் சகாதேவன் மற்றும் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் சந்திரசேகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இறுதியாக பனை அபிவிருத்தி சபை தலைவராகவிருந்த பெரும்பானமை இனத்தை சேர்ந்த நபர் பல கோடி ரூபா பணத்தை கையூட்டாக பெற்று தனியார் நிறுவனம் ஒன்றிற்கு 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளதாகவும், அக்குத்தகையையும் அமைச்சரவை பத்திரம் ஊடக  இரத்து செய்யவுள்ளதாகவும், பனை அபிவிருத்தி சபை இவ்வாண்டு முதல் பனை தென்னை வள அபிவிருத்தி சங்கங்களிடம் கையளிக்கப்படும் எனவும் அங்கு இடம் பெற்ற ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அங்கு உரையாற்றி கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் சந்திரசேகரன்  தெரிவித்தார்.

திக்கம் வடிசாலையை மீள இயங்குவது தொடர்பான கலந்துரைடால் திக்கம் வடிசாலையில், பனை தென்னை வள கூட்டுறவு சங்க கொத்தணியின் தலைவர் தலமையில் நேற்றையதினம் (18) இடம்பெற்றது.

இதில், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,  பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம், யாழப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளரும் பதிவாளருமான திரு.திருலிங்கநாதன், யாழ். மாவட்டத்தில் உள்ள ப.தெ.வ.அ.கூ.சங்கங்களின் சமாச தலைவர்கள்,  பொதுமுகாமையாளர், பிரதிநிதிகள், வலிகாமம்,  வடமராட்சி தென்மராட்சி ஆகிய கொத்தணிகளின்  தலைவர்வர்கள், பொதுமுகாமையாளர்கள்,  நிர்வாக உறுப்பினர்கள், அனைத்து பனை தென்னை கூட்டுறவு  சங்களினது தலைவர்கள், பொதுமுகாமையாளர்கள், திக்கம் வரணி வடிசாலை தலைவர் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

 

https://newuthayan.com/article/திக்கம்_வடிசாலை_தைப்பூசத்தன்று_இயங்க_ஆரம்பிக்கும்_-_அமைச்சர்_மற்றும்_தலைவர்கள்_உறுதி!

Checked
Sun, 05/04/2025 - 01:55
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr