புதிய பதிவுகள்2

யானை தந்தங்களுடன் இராணுவ சிப்பாய் கைது!

2 weeks 2 days ago
யானை தந்தங்களுடன் இராணுவ சிப்பாய் கைது! ஒரு ஜோடி யானை தந்தங்களை வைத்திருந்த ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் மொரகொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் ஹல்மில்லவெவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஆவார். மொரகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, மொரகொட ஹல்மில்லேவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது இந்த ஜோடி தந்தங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைப்பற்றப்பட்ட யானை தந்தங்களுடன் சந்தேக நபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1447160

வெள்ளம் வடிந்தோட தடையாக உள்ள கட்டுமானங்களை அகற்றுமாறு நல்லூர் பிரதேச சபை உத்தரவு

2 weeks 2 days ago
சுமந்திரனுக்கு… நாக்கிலை சனி. அதற்கு வாய்ப்பில்லை ராஜா. 😂 அவருக்கு மாகாணசபை முதல்வர் பதவி எல்லாம் எட்டாக்கனி. இவர் போட்டியிட்டால்…. தமிழரசு கட்சிக்கு விழும் எதிர் வாக்குகள், அனுரவுக்கு போகும். வட மாகாண முதலமைச்சராக ஒரு சிங்கள கட்சியை சேர்ந்தவரை தெரிவு செய்ய வைத்த கேவலத்தையும் சுமந்திரன் போட்டியிடுவதால் ஏற்படும் தீமையாக அமையும். ஏற்கெனவே சுமந்திரனின் செய்கைகளால்…. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தானும் தோற்று….. அனுரவின் கட்சியை சேர்ந்த மூன்று பேரையும், டாக்டர் அர்ச்சுனாவையும் வெல்ல வைத்தது... இந்தத் தேவா*கு தான். 😂 🤣

யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.

2 weeks 2 days ago
ஆழ்ந்த இரங்கல். நான் வாசனாக இருந்த காலத்தில் இவர் கருத்தாளார். குறும்படங்கள் பற்றி இவர் எழுத்துகள் மூலம்தான் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.

விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!

2 weeks 2 days ago
இந்தியன் சுப்ரீம் கோர்ட்டின் நடு நிலைக்கு ஒரு நல்ல உதாரணம் பாபர் மசூதி 426 ஆண்டுகளாக இருந்தது 1992 இல் அதை இந்து காடையர் ராமர் கோவில் மீது கட்டப்பட்டதாக கூறி இடித்தனர். சட்டவிரோதமாக மசூதி இடித்த இடத்தில் 28 வருடம் ஒரு கொட்டாயில் ராமர் பூசை, சட்டவிரோதமாக செய்தனர். நீதி மன்ற தீர்ப்பு பாபர் மசூதி ராமர் ஜென்ம பூமியில் உள்ளது, ராமர் கோவிலை இடித்து கட்டபட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மசூதியில் அடிவாரத்தில் எந்த ராமர் சின்னமோ, கோவிலோ இல்லை. மசூதி 1992 இல் இடிக்கப்பட்டது சட்ட விரோதம், பிழை. ஆனால் 🤣🤣🤣 - 28 வருடமாக சடவிரோதமாக மசூதியை இடித்து, சட்டவிரோதமாக ராமர் பூசை செய்தோர் மனம் புண்படும். எனவே 426 ஆண்டுகளாக மசூதி இருந்த இடத்தில் புதிய ராமர் கோவில் கட்ட வேண்டும். மசூதிக்கு வேறு இடம் ஒதுக்க வேண்டும், இதுதான் பிஜேபி ஆட்சியில் இந்தியன் சுப்ரீம் கோர்ட்டின் நிலை. அமித் ஷா கண்காட்டினால், சீமாந்தான் யேசு என்றே தீர்ப்பு எழுதுவார்கள்🤣.

விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!

2 weeks 2 days ago
இந்த வக்கீல், சீமான் வழக்கில் சுப்ரீம் கோர்ட் பார்த்த மாமா வேலைக்கு நன்றாக வெள்ளை அடிக்கிறார். SKK LegalSupreme Court: False Promise to Marry Not Rape | SKK LegalThe Supreme Court rules that a false promise to marry does not constitute rape in consensual relationships, clarifying legal perspectives on consent and marital intentions in intimate partnerships.👆சுப்ரீம் கோர்டின் அண்மைய வழக்குகளில் சொல்லப்பட்டது இதுதான்👇. கூடி வாழ்தல் (live-in relationship) முறையில் கணவன் மனைவியாக நீண்டகாலம் வாழ்ந்தோர், திருமணம் செய்வதாக கூறி மோசடி மூலம் பாலியல் வன்கொடுமை என புகார் கூறின் (allegation that consent was obtained via false promise to marry) - அதை ஆட்டோமேடிக்காக ரேப் என கருத கூடாது. இதைதான், மிக நியாயமாக சீமான் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சொன்னது. அதாவது என்ன நடந்தது என அறுதியும் உறுதியுமாக பொலிஸ் விசாரிக்க வேண்டும். ஆனால் பொலிஸ் விசாரணையையே அடித்து நூத்து, மைனர் குஞ்சு அபராதம் கட்டினால் போதும் என சாத்தப்பன் நாட்டாமை போல் (ரன் படம்) தீர்ப்பு கூறியது இந்தியன் மாமா மன்னிக்கவும், சுப்ரீம் கோர்ட். பிகு இந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நெற்றியில் மிளிரும் குங்கும பொட்டு சாட்சி சொல்கிறது இவர்கள் எந்த கட்சியின் ஆட்கள் என🤣. நீதிபதிகள் நடுநிலையை நாட்ட மட்டும் அல்ல, காட்டவும் வேண்டும் என்பதுதான் அன்று wig அணியும் முறை வர ஒரு காரணம்.

விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!

2 weeks 2 days ago
காணொளியை முழுமையாக பார்த்தேன். இணைப்பிற்கு நன்றி. இவர்கள் பிணக்குகள் பற்றிய செய்திகளை நான் தொடர்வது இல்லை. அவ்வப்போது மேலோட்டமாக இங்கு பகிரப்படும் சில கருத்துக்களை வாசித்துள்ளேன்.

விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!

2 weeks 2 days ago
இதில் எனக்கும் உடன்பாடே. குறிப்பாக சவுக்கு சீமானை விட மோசமான அங்கிறு தட்டி. குறிப்பான அமவுண்டை கொடுத்தால் அவிச்ச மீன் துடிக்கும் என்பார். இங்கே ரிக்ரொக் ஆய்வுகளை இணைக்கும் பலருக்கு ஜஸ்டீன் அண்ணா கொடுக்கும் அறிவுரைகள் போலத்தான் யூடியூப் வீடியோக்களும். ஆனால் இயற்கை நமக்கு பகுத்தறிவை வெறும் ஒப்பனைக்கான தரவில்லை, அதை நாம் பயன்படுத்தவும் வேண்டும் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். இங்கே, தேவாவை ஸ்டாலின் சந்திப்புக்கு சீமான் கூட்டி போன படம்… அவர் சசிகலா குடும்பத்தோடு, அதிமுகவோடு நெருக்கமாக இருந்த படங்கள் காட்டப்படுகிறன. பல முண்ணனி கட்சி நிர்வாகிகள், இடும்பாவனம் போல உண்மையிலேயே இனமான உணர்வில் திமுகவை எதிர்க்கும் தம்பிகளை எல்லாம் விட்டுவிட்டு, இவரை ஏன் சீமான் ஸ்டாலினிடம் கூட்டி போனார் என்ற கேள்வியை நாம் கேட்காவிடில் நமது பகுத்தறிவை ஷோகேசில்தான் வைக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.

ஜெர்மனி ICU வில்.

2 weeks 2 days ago
பயனுள்ள இணைப்பிற்கு நன்றி ஈழப்பிரியன். ஜேர்மனியின் வீழ்ச்சி பற்றி நிறைய எழுதலாம். நான் உக்ரேன் பற்றிய திரிகளில் ஜேர்மனியின் வீழ்ச்சி ஒரிரு வரிகள் பற்றி எழுதியிருக்கின்றேன். ஏனென்றால் ரஷ்யாவிலிருந்து வந்து கொண்டிருந்த காட்டாறு போன்ற எரிசக்திதான் ஜேர்மனியின் பொருளாதாரத்தை மேலும் மேலும் உயர்த்தியது. அதை விட வியாபார ரீதியில் ரஷ்யாவின் பங்கு மிக மிக முக்கியமாக இருந்தது.

வெள்ளம் வடிந்தோட தடையாக உள்ள கட்டுமானங்களை அகற்றுமாறு நல்லூர் பிரதேச சபை உத்தரவு

2 weeks 2 days ago
நல்லூர் பிரதேச சபை என்பது இலங்கையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு உள்ளூராட்சி சபை ஆகும், இது நல்லூர் பிரதேச மக்களின் தேவைகளைக் கவனித்து, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துகிறது. இது ஒரு வரலாற்று பின்னணியைக் கொண்டுள்ளதுடன், சமீபத்தில் தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இணைந்து அதன் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளன மாகாணசபைத் தேர்தலிலிலும் இவர்கள் கூட்டணி வைத்தால் சுமந்திரனின் கனவு நனவாகலாம்.

ஜெர்மனி ICU வில்.

2 weeks 2 days ago
ஒரு காலத்தில் ஓகோ என்று இருந்த ஜேர்மனி இன்று சேடமிழுக்கிறது. 2017-2025 வரை 1.7 வீத வளர்ச்சி. உலகிலேயே பெயர்போன தரமான வாகனங்களைச் செய்த ஜேர்மனி இன்று வாகனங்களை இறக்குமதி செய்கிறது. குறைந்த விலையில் எரிபொருட்களை ரசியாவிடமிருந்து பெற்றுக் கொண்டிருந்த ஜேர்மனி இன்று அதிகவிலை கொடுத்து எரிபொருட்களை வாங்குவதால் இன்று பல கம்பனிகள் மூடப்படுகின்றன. இதைப்பற்றிய உண்மை பொய் தெரியவில்லை. சிறிய வயதிலிருந்தே ஜேர்மனி மீது ஒரு ஆர்வம் இருந்தது. இங்கிலாந்து மீது வெறுப்பாகவும் இருந்தது. இந்தக் காணொளி பார்த்ததும் ஏதோ கஸ்டமாக உள்ளது. ஜேர்மன் வாழ் உறவுகள் ஊரில் வீடுவாசல் இருந்தால் விற்காமல் வைத்திருங்கள். இன்னொரு குண்டு என்னவென்றால் இளைஞர்களை விட வயோதிபர்களே கூடுதலாக வாழ்கிறார்களாம். இங்கும் கருத்தெழுதுபவர்களைப் @தமிழ் சிறி @குமாரசாமி @வாத்தியார் @panch @Kavi arunasalam இன்னும் பலர் பார்த்தால் சரியாகத் தான் இருக்குமெ எண்ணுகிறேன்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 weeks 2 days ago
Passwords App இல் சேமிக்கவில்லை. கடவுட் சொல்லை மறந்து விட்டேன் என்று கணனி ஊடாக முயற்சி செய்து பார்த்தேன், முன்பு இவ்வாறு முயற்சிக்கும் போது எனது மின்னஞ்சலுக்கு Reset password என்று email வரும். இப்பொழுது வருவதில்லை. வெற்றி பெற வாழ்த்துகள் வெற்றி பெற வாழ்த்துகள்

வெளிநாட்டு தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்தாலோ, பகிர்ந்தாலோ மரண தண்டனை: வட கொரியா குறித்து ஐ.நா. அறிக்கை

2 weeks 2 days ago
எதுக்கும் எங்கடை தமிழ் யூரியூப்பர்மாருக்கு ஒரு சலஞ் விட்டுப்பாப்பம். ஏலுமெண்டால் வடகொரியாவுக்குள்ள் போய் என்ன நடக்குதெண்டு பார்த்து ஒரு வீடியோ போடுங்கோ பாப்பம் எண்டு...🤣 பத்து லச்சம் லைக் வாங்கித்தாறது என்ரை பொறுப்பு 😁

iPhone 17-ன் புதிய அம்சங்கள் என்ன?

2 weeks 2 days ago
ஒவ்வொருக்காலும் புதுமை வேணுமெண்டால் அவங்களும் எங்கை போறது?😂 நானும் தொடர்ந்து சம்சுங்தான் வைச்சிருந்தனான்.கள்ளர் கூட்டத்துக்கு நல்ல ரெலிபோன்.என்னவும் செய்து கொள்ளலாம்.😍

குடியேற்றத்திற்கு எதிராக லண்டனில் மிகப்பெரிய போராட்டம்!

2 weeks 2 days ago
எங்கடை ரமில் றோயல்ஸ்காரர் இனி கொஞ்சம் கவனமாய் திரியுங்கோ. என்னாலை சொல்லக்கூடியது அவ்வளவு தான்.😂 நோர்வேயில கூட பெரிய ஆட்சி மாற்றம் நடந்திருக்காம்.அடுத்த ஆட்சிமாற்றம் ஜேர்மனியிலை எண்டு நினைக்கிறன்.

தினமும் சிரமமின்றி மலம் கழிக்க நிபுணர் சொல்லும் 4 எளிய பரிந்துரை

2 weeks 2 days ago
கடதாசியால் மட்டும் துடைப்பதை விடவும் முதலில் கழுவி பின்பு கடதாசியால் துடைப்பது மனதுக்கு நிம்மதியும் ஆறுதலும் தருகிறதே!

வெள்ளம் வடிந்தோட தடையாக உள்ள கட்டுமானங்களை அகற்றுமாறு நல்லூர் பிரதேச சபை உத்தரவு

2 weeks 2 days ago
நல்லூர் பிரதேச சபை என்பது இலங்கையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு உள்ளூராட்சி சபை ஆகும், இது நல்லூர் பிரதேச மக்களின் தேவைகளைக் கவனித்து, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துகிறது. இது ஒரு வரலாற்று பின்னணியைக் கொண்டுள்ளதுடன், சமீபத்தில் தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இணைந்து அதன் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளன.
Checked
Wed, 10/01/2025 - 16:02
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed